விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.14 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/10 250 180990 1957561 1954405 2026-08-07T14:17:54Z Madhumitha kanagavijayan 16802 /* பயில்வோர் */ agree 1957561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />சர்</noinclude>பாதி புரிந்தும் புரியாத நிலையில் கைகள் நடுங்கின. முதல் வரியிலேயே செய்தியைப் புரிந்து கொண்டு விட முடிந்தது என்றாலும், சிறிது நேரம் ஒன்றுமே செய்வதற்கு ஒடவில்லை. 'பிரபல தேசபக்தரும், அறுபத்தேழு வயது நிறைந்தவரும், காந்தியக் கல்வி நிபுணரும், தியாகியுமான, சர்வோதயத் தலைவர் காந்திராமன் மதுரையருகே இன்று முன்னிரவில் தமது சத்திய சேவா கிராம ஆசிரமத்தில் மாரடைப்பினால் காலமானார். இறுதிச் சடங்குகள், நாளை மாலை நடை பெறலாமென்று தெரிகிறது.' - என் கண்களில் நீர் நெகிழ்ந்தது. இருபது வருடங் களுக்கு முன் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்திக்கு எட்டுக் காலமும் நிறையும்படி ஒரு தலைப்பு எழுதிய போது நான் இப்படிக் கண்ணிர் சிந்தியிருக்கிறேன். பத்திரிகைத் துறையில் நான் சம்பாதிக்கவும் புகழடையவும், வாழவும், சேமிக்கவும், சந்தர்ப்பங்கள் இருந்தது போலக் கண்ணிர் விடவும், பெருமிதப்படவும் கூட சந்தர்ப்பங்கள் இருந்தன. பல ஆண்டுகள் பாடுபட்டு பிஸ்மார்க் ஜெர்மனியை ஐக்கியப் படுத்தியது போல் இந்தியாவின் ஐந்நூற்றறுபத்து ஐந்து சமஸ்தானங்களைத் தமது திட சக்தியால் ஒன்றுபடுத்திய சர்தார் படேலின் மரணம், ஜவகர்லால் என்ற ரோஜாக் கனவு அழிந்த செய்தி, லால் பகதூரின் வீர மரணம், இவற்றை வெளியிடுகையில் எல்லாம் நான் ஒரு தேசபக்தியுள்ள இந்தியப் பத்திரிகை யாளன் என்ற முறையில் இதயம் துடித்து நெகிழ்ந் திருக்கிறேன். நவ இந்தியாவை உருவாக்கிய பெரியவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்து அக்கறையோடு பயப்படுகிறவன் நான். தியாகமும், பெருந்தன்மையும், தேசபக்தியும், தீர்மும், தெய்வ நம்பிக்கையும் நிறைந்த ஒரு சகாப்தம் மெல்ல மெல்ல மறைவதையும், பதவியும் தேர்தலும் கட்சிப்பூசல்களும் கலவரங்களுமான ஒரு காலம் எதிரே தெரிவதையும்<noinclude></noinclude> j6kt4242ylwnqeax8qm4wtbssjst9tr பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/13 250 180996 1957559 535900 2026-08-07T14:08:12Z Madhumitha kanagavijayan 16802 agree 1957559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>நா. பார்த்தசாரதி 11 காரணங்களுக்காகப் பதினாயிரம் கட்சிகள் போராடும் போது தேசம் என்கிற சக்தி எவ்வளவு பலவீனமாகி விடுகிறது பார்த்தாயா?" "நீங்கள் இணையற்ற ஒரு சகாப்தத்தைப் பார்த்தீர்கள். இன்னொன்றையும் இப்போது பார்க்கிறீர்கள்..." "கவலையோடு பார்க்கிறேன் என்று சொல்." ★ ★ ★ -கடைசியாக நான் அவரைச் சந்தித்த நினைப்பை மறுபடி எண்ணியபோது இப்படிப் பெருமூச்சோடு அந்த எண்ணம் முடிகிறது. நாயுடு செய்தியை வாங்கிக் கொண்டு போன பின் மானோ மிஷின் இயங்கும் சப்தம் வருகிறது. நைட் ரிப்போர்ட்டரின் குறட்டை ஒலியை அந்த மிஷின் இயங்கும் ஓசை உள்ளடக்கிக் கொண்டு விழுங்கி விடுகிறது. இன்று லிடி எடிஷன் முக்கால் மணி நேரம் தாமதமாக மிஷினில் ஏறும். டெலிவரி வான் வெளியே வந்து நிற்கிறது. ஹார்ன் தொடர்ந்து ஒலிக்க, அதையடுத்து டைம்கீப்பர் உள்ளே வந்து பார்சல் செக்ஷனில் இரைவது கேட்கிறது. நான் என்னுடைய லீவு லெட்டரை எழுதிக் கொண்டிருக்கிறேன். மதுரைக்குப் போக வேண்டும். மாபெரும் தேச பக்தரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டும். பத்திரிகை ஆசிரியன் என்ற முறையைவிட இதில் என் சொந்தக்கடமை பெரிதாயிருந்தது. மிகவும் நெருங்கிய ஆத்மபந்து ஒருவரின் மரணத்துக்குப் போவது போல், நான் இதற்குப் போக வேண்டியவனாயிருந்தேன். பல வருடங்களாக என் வாழ்க்கைக்கு அவர் குருவாகவும், நண்பராகவும் இருந்திருக்கிறார். வக்கீலுக்குப் படித்துவிட்டு, ராஜகோபால் பி.ஏ., பி.எல்., என்று போர்டு மாட்டிக் கொண்டு கோர்ட்டுகளின் படிகளில் நான் ஏறி இறங்கிக் கொண்டிருக்காமல், 'உனக்குப் பத்திரிகைத் துறைதான் பொருத்தமாயிருக்கும். அதன் மூலமாகத் தேசத்துக்கும்,<noinclude></noinclude> soa46zoy6arf08ogncbeysfajok8jw9 பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/109 250 181188 1957594 535996 2026-08-08T04:24:04Z Naren karthik Ragunathan 16828 /* மேம்படுத்த வேண்டியவை */ 1957594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Naren karthik Ragunathan" /></noinclude>நா. பார்த்தசாரதி 107 உட்கார்ந்திருந்தவன், திடீரென்று நினைத்துக் கொண்டு நாற்காலியை மேஜையருகே நெருங்கிப் போட்டுக் கொண்டு பிருகதீஸ்வரனுக்குக் கடிதம் எழுதலானான். அன்று காலை கதர் விற்கப் போனது, மாகாண மகாநாட்டு ஏற்பாடுகள், ஊர்வலப் பொறுப்பு, சத்தியமூர்த்தி மதுரை வரப்போவது, எல்லாவற்றையும் பற்றி அவருக்கு எழுதினான். முடிந்தால் மகாநாட்டின் போது அவரை மதுரை வர வேண்டியிருந்தான் கடிதத்தில். கடிதத்தை உறையிலிட்டுக் கோந்து பாட்டிலைத் தேடி எடுத்து ஒட்டியும் ஆயிற்று. மேலுார் வீட்டு வாடகையை இனிமேல் வாசகசாலை விலாசத்துக்குக் கொண்டு வந்து கொடுக்கவோ, மணி ஆர்டர் செய்யவோ வேண்டும் என்று உரக் கம்பெனிக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டியிருந்தது. அதையும் எழுதி முடித்தபோது ஃபண்டாபீஸ் மணி பன்னிரண்டு அடித்தது. விளக்கை அனைத்துவிட்டுப் படுத்தான் ராஜாராமன். 'நாளைக்குத்தான் மேலுார் போகிறேன் உரக் கம்பெனிக்குக் கடிதம் எதுக்கு?’ மேலுராவது, நாளைக்குப் போகிறதாவது? ஒரு கோபத்தில் பத்தரிடம் அப்படிக் கூறியாயிற்று. நாளையும் அடுத்த சில நாட்களும் மாகாணக் காங்கிரஸ் மகாநாட்டு வேலைகள் நிறைய இருக்கு. நாளும் நெருங்கிவிட்டது. - 'பத்தரிடம் அப்படி ஏன் ஒரு பொய் சொன்னோம்?" என்றெண்ணியபோது, அப்படிப் பொய் சொல்லியிருக்கக் கூடாதென்றே தோன்றியது. ரொம்ப நேரமாகத் துரக்கம் முழுமையாக வரவில்லை. அரைகுறைத் தூக்கமும், நினைவுகளுமாக அவன் தவித்துக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்தான். இலேசாகத் தூக்கம் கண்களைத் தழுவியபோது ஃபண்டாபீஸ் மணி ஒன்றடித்து ஒய்ந்தது. புரண்டு படுத்த ராஜாராமன், பாதங்களில் மிருதுவாக ஏதோ படுவது போல் உணர்ந்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்.<noinclude></noinclude> 40wgjwmzzqau7tdur4ii2x8m9z4254l பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/202 250 181326 1957549 536087 2026-08-07T13:32:23Z Sadiqbasha.18 16804 மெய்பார்க்கப்பட்டது 1957549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>200 ஆத்மாவின் ராகங்கள் மதுரத்தோட வீட்டை யார் இடிச்சுப் புதிதாகக் கட்றாங்க...? மதுரம் எங்கே இருக்கு இப்ப?" 'நீங்க போனப்புறம் என்னென்னமோ நடந்து போச்சு சார்! உள்ளர வாங்க சொல்றேன்." - ராஜாராமனின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவன் ராமையாவோடு கடைக்குள் சென்றான். பட்டறை வேலை செய்யும் ஆட்கள் எல்லாரையும் கடந்து பின்புறம் ஒழுகறைப் பெட்டி, பூஜைப்படங்கள் எல்லாம் வைத்திருந்த அறைக்கு ராஜாராமனை அழைத்துக் கொண்டு போனான் ராமையா. அந்த அறையில் தரை மேல் பாய் விரித்திருந்தது. ஒழுகறைப் பெட்டி, கணக்குப் பிள்ளை மேஜை, தராசு, தங்கம் உறைத்துப் பார்க்கும் கல் எல்லாம் வைத்திருந்த இடங்கள் போகப் பாயில் இரண்டு பேர் தாராளமாக உட்கார்ந்து பேச இடம் இருந்தது அங்கே. 'ரொம்பக் களைப்பாகத் தெரியரிங்க சார்? பையனை காப்பி பலகாரம் வாங்கியாறச் சொல்றேன். முதல்லே சாப்பிட்டுடுங்க. அப்புறம் பேசுவோம், '- என்ற ராமையா விடம் ராஜாராமன் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இட்லி, வடை, சுக்குமல்லிக் காப்பி எல்லாம் வந்தது. ராஜாராமனால் அப்போதிருந்த மன நிலையில் அவற்றை ருசித்துச் சாப்பிட முடியவில்லையானாலும், ராமையாவின் பிரியத்தைக் கெடுக்க மனமில்லாமல் ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி விட்டுக் கை கழுவினான். என்னென்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவன் மனம் தவித்துக் கொண்டிருந்ததால், இட்லி காப்பியில் சுவை காண முடியவில்லை. சிறிது நேரம் தான் சொல்ல வேண்டியவற்றை எப்படித் தொடங்கி எப்படிச் சொல்லுவதென்று தெரியாமல் ராமையா தயங்கினான். பின்பு ராஜாராமன் கேள்வி மேல் கேள்வி போட்டுத் துளைக்கவே தன்னால் சொல்ல முடிந்த படி எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினான் ராமையா.<noinclude></noinclude> knsxfzlb39rvbjb94vfi1iyhfv5d8sp 1957550 1957549 2026-08-07T13:34:15Z Sadiqbasha.18 16804 /* மேம்படுத்த வேண்டியவை */ 1957550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sadiqbasha.18" /></noinclude>200 ஆத்மாவின் ராகங்கள் மதுரத்தோட வீட்டை யார் இடிச்சுப் புதிதாகக் கட்றாங்க...? மதுரம் எங்கே இருக்கு இப்ப?" 'நீங்க போனப்புறம் என்னென்னமோ நடந்து போச்சு சார்! உள்ளர வாங்க சொல்றேன்." - ராஜாராமனின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவன் ராமையாவோடு கடைக்குள் சென்றான். பட்டறை வேலை செய்யும் ஆட்கள் எல்லாரையும் கடந்து பின்புறம் ஒழுகறைப் பெட்டி, பூஜைப்படங்கள் எல்லாம் வைத்திருந்த அறைக்கு ராஜாராமனை அழைத்துக் கொண்டு போனான் ராமையா. அந்த அறையில் தரை மேல் பாய் விரித்திருந்தது. ஒழுகறைப் பெட்டி, கணக்குப் பிள்ளை மேஜை, தராசு, தங்கம் உறைத்துப் பார்க்கும் கல் எல்லாம் வைத்திருந்த இடங்கள் போகப் பாயில் இரண்டு பேர் தாராளமாக உட்கார்ந்து பேச இடம் இருந்தது அங்கே. 'ரொம்பக் களைப்பாகத் தெரியரிங்க சார்? பையனை காப்பி பலகாரம் வாங்கியாறச் சொல்றேன். முதல்லே சாப்பிட்டுடுங்க. அப்புறம் பேசுவோம், '- என்ற ராமையா விடம் ராஜாராமன் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இட்லி, வடை, சுக்குமல்லிக் காப்பி எல்லாம் வந்தது. ராஜாராமனால் அப்போதிருந்த மன நிலையில் அவற்றை ருசித்துச் சாப்பிட முடியவில்லையானாலும், ராமையாவின் பிரியத்தைக் கெடுக்க மனமில்லாமல் ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி விட்டுக் கை கழுவினான். என்னென்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவன் மனம் தவித்துக் கொண்டிருந்ததால், இட்லி காப்பியில் சுவை காண முடியவில்லை. சிறிது நேரம் தான் சொல்ல வேண்டியவற்றை எப்படித் தொடங்கி எப்படிச் சொல்லுவதென்று தெரியாமல் ராமையா தயங்கினான். பின்பு ராஜாராமன் கேள்வி மேல் கேள்வி போட்டுத் துளைக்கவே தன்னால் சொல்ல முடிந்த படி எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினான் ராமையா.<noinclude></noinclude> le40aiz301ilgu74zv6eenmj5afpjbs பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/203 250 181327 1957562 536088 2026-08-07T14:18:55Z Sadiqbasha.18 16804 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்பார்க்கப்பட்டது 1957562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sadiqbasha.18" /></noinclude>நா.பார்த்தசாரதி 201 'நீங்களும் ஜெயிலுக்குப் போயிட்டீங்க. அப்பா திடமாக நடமாடிக்கிட்டிருந்தாலும் இப்படியெல்லாம் ஆகியிருக்காது. கொஞ்ச நாள்லே அவரும் கண்ணை மூடிட்டதனாலே என்னென்னவோ நடந்து போச்சு. இப்ப நெனைக்கறதுக்கே சங்கடமாயிருக்கு. அப்பா இருந்திருந்தா இப்பிடி எல்லாம் நடந்திருக்காது. அவரும் போயிட்டார், நீங்களும் இங்கே இல்லே. பிருகதீஸ்வரன் சார், முத்திருளப்பன் ஐயா, குருசாமி டெயிலர் எல்லாரும் ஆசிரமத்தோட ஆசிரமமாத் தங்கிட்டாங்க. நீங்க ஜெயிலுக்குப் போயிட்டதனாலே மதுரம் மனசு நொந்து போய்க் கச்சேரிக்குப் போறதை ஒவ்வொண்ணா விட்டுடுச்சு. கச்சேரிக்குப் போகவும், பாடவும் அதும் மனசிலே உற்சாகமே இல்லே. பணம் வேணுமேங்கிறதுக்காகப் போன இரண்டொரு கச்சேரியும் நிரக்கலே, மனசு நிறைய வேதனை இருந்தா அந்த வேதனையோட எப்படி நல்லாப் பாட முடியும்? கச்சேரிக்குப் போகறது படிப்படியா நின்னுது. அது போதாதுன்னு அந்தக் கிழவி மங்கம் மாவும் அவ மாமனும் அப்பா போன ஆறுமாசத்துக்குள்ளே அடுத்தடுத்துச் சொல்லி வச்சாப்பல ஒவ்வொருத்தராப் போய்ச் சேர்ந்தாங்க. தனிமை அதைக் கொஞ்சம் கொஞ்சமா உருக்கிடிச்சு. எங்க வீட்டோட வந்து இருக்கச் சொல்லி நான் கெஞ்சினேன். அது கேட்கலே. ஆசிரமத்திலேயே வந்து தங்கச் சொல்லிப் பிருகதீஸ்வன் சார் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாரு, அதையும் அது கேட்கலே. தனியா அத்தினி பெரிய வீட்டுலே ஒண்ணா நம்பர்ச் சந்திலே கிடந்து தானாகவே அங்கே அது வாடின. வேதனையை எங்களாலே தாங்க முடியலே. • ' 'கச்சேரி வருமானம் இல்லாததுனாலே, வீட்டுமேலே வாங்கியிருந்த கடனுக்கு வட்டியும் கொடுக்கப்படலே, வாசகசாலைக்கும் ரெண்டு மூணு மாசமா வாடகை நின்னுபோச்சு. வீட்டுக்காரன் ஏற்கெனவே ரொம்பக் கோபமாயிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் ஜஸ்டிஸ் பார்ட்டி அநுதாபம் உண்டு. வாடகையும் நின்றுபோகவே, வாசக சாலையைக் காலி பண்ணிட்டு வேறு வேலை பாருங்கன்னு வந்து கத்தினான். மதுரம் ஒண்னும் புரியாமே<noinclude></noinclude> gtuff34cjq9xoa2wtg9y8t4e2di80p4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/341 250 627194 1957545 1883693 2026-08-07T13:15:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கால்நடைச் செல்வம்|317|இந்தியக் கால்நடைச் செல்வம்}}</noinclude>பொதுவாகக் கால்நடைகள் ஒரு நாட்டின் வருவாயைப் பெருக்குகின்றன. கால்நடைச் செல்வம் வேளாண்மை உற்பத்தியைவிட நிறைந்த வருவாயைத் தரவல்லது. சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மொத்த வேளாண்மை உற்பத்தியில், 60 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை உற்பத்தி கால்நடைச் செல்வங்களிலிருந்து பெறப்படுகிறது. இக்காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலப் பிற நாட்டு மக்களின் அன்றாட உணவில் பால், இறைச்சி, பால் பண்டங்கள் போன்றவை மிகப் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்நாடுகளின் உணவு உட்கொள்ளும் புழக்கத்தில் முதன்மையிடம் பெற்றிருந்த பருப்பு, தானிய வகைகள் ஆகியவை, இறைச்சி, பால், பால் பண்டங்களின் பெரும்பான்மையான நுகர்வால் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளன. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகள் வேளாண்மையைச் சீர் தூக்கி அமைப்பதற்கு ஏதுவாக வளமான, முன்னோக்கு நிறைந்த கால்நடைசார் (Live-stock Based) தொழில்களை ஏற்படுத்தியுள்ளன. கால்நடைகள் சிறந்த செல்வமாகும். உலகக் கால்நடை எண்ணிக்கையில் 11 விழுக்காடு இந்தியாவில் உள்ளது. இவற்றுள் உத்தரப் பிரதேசத்தில் 15 விழுக்காடும், மத்திய பிரதேசத்தில் 14 விழுக்காடும். பீகாரில் 9.2 விழுக்காடும், ஆந்திரப் பிரதேசத்தில் 7.3 விழுக்காடும், மேற்கு வங்காளத்தில் 6.5 விழுக்காடும் காணப்படுகின்றன. எஞ்சிய 48 விழுக்காடு கால்நடைகள் பிற மாநிலங்களில் உள்ளன. வேளாண்மைப் பயிர் நிலப்பரப்பில் உள்ள கால்நடைகளின் நெருக்கம் (Density) பல மாநிலங்களில் உயர்வாக உள்ளது. மகாராட்டிரம், குசராத்து மாநிலங்களில் 100 எக்டேர் நிலப்பரப்பில் கால்நடைகள் 280 ஆகவும், இமாசலப் பிரதேசத்தில் 279 ஆகவும், அசாமில் 267 ஆகவும், சம்மு காசுமீரில் 244 ஆகவும் காணப்படுகின்றன். கால்நடைகளின் வளர்ச்சிக்கு நிலையான புல்வெளிகள் இன்றியமையாத தேவையாகும். சில ஐரோப்பிய நாடுகளில் மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளின் தேவைக்கு மிஞ்சியே உள்ளன. இதற்கு மாறாக இந்தியாவில் மேய்ச்சல் நிலப்பரப்புக்கும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கும் ஒவ்வாத ஒரு நிலை காணப்படுகிறது. இங்கு மிகச் சிறிய பரப்பையுடைய மேய்ச்சல் நிலங்களில் மிகுதியான கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. இந்தியக் குடி மதிப்புப் (Census) புள்ளிவிவரப்படி 100 மக்களுக்கு 400 கால்நடைகள் உள்ளன. எருமை மாடுகளின் வீதம் 100 மக்களுக்கு 100 எருமை மாடுகள் என்றும், 100 எக்டேர் பயிர்விளை நிலப்பரப்பிற்கு 34 எருமை மாடுகள் என்றும் புள்ளிவிவரம் கூறுகிறது. எருமை மாடுகளின் எண்ணிக்கை மிகுந்துள்ள மாநிலம் பஞ்சாபு ஆகும் (100க்கு 22 என்ற வீதம்). இதற்கு அடுத்ததாக இராசசுத்தாளில் 20%, ஆந்திரப் பிரதேசத்தில் 19%, மத்திய பிரதேசத்தில் 17%, உத்தரப் பிரதேசத்தில் 15% எனக் கணக்கிடப்பட்டுள்ளன. கால்நடைகளை உழைக்கும் இனங்கள் (எருதுகள்), இனவிருத்திக் கால்நடைகள் (Breeding Cattle), ஒன்றுக்கும் பயன்படாதவை என மூவகைப்படுத்தலாம். உத்தரப் பிரதேசம், பீகார், மகாராட்டிரம், குசராத்து, பஞ்சாபு மாநிலங்களில் மிகுதியான அளவு உழைக்கும் எருதுகள் உள்ளன. இந்த மாநிலங்களில் கோதுமை, பருத்தி, கரும்பு அதிகமாகப் பயிரிடப்படுவதால் அவற்றையே எருதுகளுக்கு உணவாகப் பயன்படுத்துகின்றனர். சில மாநிலங்களில் எருதுகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அம்மாநிலங்களில் காணப்படுகின்ற மணல்சாரியான, மலைப்பாங்கான, காடுகள் நிறைந்த நிலங்களில் நெல், சணல், தேயிலை போன்றவை பயிரிடப்படுவதால் மிகுதியான அளவு எருதுகளின் உழைப்பு தேவைப்படுவதில்லை. இந்தியாவில் மொத்தமாக 73.7 மிலியன் உழைக்கும் எருதுகள் உள்ளன. இனவிருத்திப் பசுக்கள் இந்திய வேளாண்மையில் பெரும் பங்கேத்கின்றன, வேளாண்மையில் கால்நடைகள் நிலத்தினை உழுவதற்கும், கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்கும், வேளாண் பொருளை நிலத்திலிருந்து அங்காடிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் பயன்படுகின்றன. இனவிருத்திக் கால்நடைகளில் பால் கொடுக்கும் பசு, எருமை இனங்கள் ஊரகங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவற்றில் 4 விழுக்காடு நகரங்களிலும் 96 விழுக்காடு ஊரசுங்களிலும் காணப்படுகின்றன. பயன்படாத (Unproductive) கால்நடைகளில் மெலிந்த, வயது சென்ற, நோயுற்ற விலங்குகள் உழைக்கவோ இனவிருத்தி செய்யவோ இயலா நிலையில் உள்ளன. மத, பண்பாட்டு அடிப்படையில் அவற்றின் உரிமையாளர்கள் அத்தகைய மிருகங்களைப் பாதுகாத்து வருகின்றனர். அம்மிருகங்களின் எண்ணிக்கை 29 மிலியன் ஆகும். பிறவகைக் கால்நடைகளில் பெரும்பாலும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவை அடங்கும். மொத்த ஆடுகளின் எண்ணிக்கையில் 60 விழுக்காடு செம்மறியாடுகள் இராசசுத்தான், மகாராட்டிரம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் எஞ்சிய 40 விழுக்காடு பிற மாநிலங்களிலும் உள்ளன வெள்ளாடுகளில் 50 விழுக்காட்டுக்கும் கூடு-<noinclude></noinclude> dhq7dk3dr15tmmj3i8cuz2uxs1bwdh2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/342 250 627195 1957546 1883694 2026-08-07T13:19:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கால்நடைச் செல்வம்|318|இந்தியக் கால்நடைச் செல்வம்}}</noinclude>தலாக மத்திய பிரதேசம், கர்நாடகம், குசராத்து, தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் உள்ளன. சாகிவால் (Sahiwal) என்ற சிறந்த இனப்பசுக்கள் பஞ்சாபிலும் கிர் (Gir) குசராத்திலும் உள்ளன. சிறந்த இன எருதுகளில் இசார் (Hissar), ஆன்சி (Hansi) என்பவை பஞ்சாபு, நெல்லூர் ஆகிய வட்டாரங்களிலும் அமிர்தமகல் மைசூரிலும், காசுகீக்கன் குசராத்திலும், காங்கேயம் தமிழகத்திலும் உள்ளன. உயர்ந்த இனத்தைச் சார்ந்த எருமைகளான முத்ரா பஞ்சாபிலும், சபராபடி குசராத்திலும், மேக்சனா சுரபு, பந்தபுரி போன்றவை மகாராட்டிரத்திலும் உள்ளன. பால்பெருக்க இனப்பிரிவைச் சார்த்தவை கிர், சிந்தி, சாகிவால், தார்பார்க்கர் முதலியவையாகும். இவை பெரிய தோற்றத்துடனும் நீண்ட சுருண்ட கொம்புகளுடனும் காணப்படுகின்றன. மைசூர் வகையைச் சார்ந்த மாடுகள் மிகக் குள்ளமான கொம்புகளையுடையவை. அவற்றின் பால் பெருக்கமும் மிகக் குறைவு. மிகச் சிறிய வடிவமுள்ள பொன்வான், ஊசரி போன்ற இனப்பிரிவுகள் இமயமலை அடிவாரத்தில் காணப்படுகின்றன. இவற்றின் பால் பெருக்கமும் மிகக்குறைவு. கால்நடைகளின் இனப்பெருக்கமானது சுற்றுச் சூழ்நிலை, மழை, தட்பவெப்ப நிலை, மண்வளம் போன்ற இயற்கையான இயல்புகளோடு தொடர்பு கொண்டுள்ளது. மழை மிகுந்து காணப்படும் பகுதிகள், கடலோரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் ஆகியவை இனப்பெருக்கத்துக்கு ஏற்றனவாகும். சிறந்த இனப் பிரிவுகள் பம்பாய், தமிழ்நாடு, மைசூர், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் காணப்படுகின்றன. அவற்றின் இனப்பெருக்கமும் விரிவடைந்திருக்கிறது. கால்நடைகளின் எண்ணிக்கையானது கால நிலை, மேய்ச்சல் வசதிகள், உணவு உற்பத்தி போன்றவற்றின் அடிப்படையில் மாறுகின்றது. வேளாண்மையில் நீர்ப்பாசனம், உற்பத்தி நிலச்சேர்க்கை (Land Reclamation) போன்றவை விரிவாக்கப்படும்போது, மேய்ச்சல் நிலங்களின் பரப்புக் குறைவதால், கால்நடைகளின் தரம் குறைகிறது. பொருளாதாரத்தில் கால்நடையின் பங்கு: இந்தியா ஒரு வேளாண்மை நாடாக இருப்பதால், சிறந்த கால் நடைச் செல்வம் நாட்டின் ஊரக வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் துணையாய் உள்ளது. ஒரு நாட்டின் கால்நடை எண்ணிக்கை வேளாண்மை உற்பத்தியைப் பாதிக்கிறது. முன்னேற்றம் அடைந்த நாடுகளில் கால்நடைகளை இறைச்சி, பால் போன்றவற்றிற்காகவே வைத்துப் பாதுகாக்கின்றனர். ஆனால் இந்தியாவில் கால்நடைகள் நிலங்களை உழுவதற்காகவும் வண்டி இழுப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடை எல்லா வகையான வேளாண்மை வேலைகளுக்கும் உறுதுணையாய் உள்ளது. இந்தியாவில் கால்நடைப் பெருக்கம் மிகையாக இருந்தபோதிலும், சிலவகையான இனங்களே தரமாக உள்ளன. எனவே கால்நடையின் தரமும் (Quality) எண்ணிக்கையும் (Quantity) சமமாக இருந்தால்தான் உழவரின் பொருளாதார, சமுதாய நிலையை உயர்த்தமுடியும். கால்நடைகள் வயல்களை உழுதற்கு இன்றியமையாதவையாகும். கால்நடைகளிலிருந்து 23.20 இலட்சம் கண்டி (Tonne) பால் உற்பத்தியாகிறது. பால் உற்பத்தி மூலம் உரூ. 6,200 மிலியன் நாட்டு வருவாயில் சேருகிறது. ஒவ்வொரு கறவைப் பசுவும் ஓர் ஆண்டில் சராசரியாக 220 இலிட்டர் பால் தருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேல் நாடுகளில் ஓர் ஆண்டில் 3000 முதல் 5000 இலிட்டர் வரை ஒவ்வொரு பசுவும் பால் தருகிறது. இந்தியக் கூட்டுறவு அமைப்புகளின் வாயிலாகப் பால் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் பால்வள நிறுவனங்கள் நிறுவப்பட்டு அவற்றின் மூலம் மாவட்டங்களிலும் ஊரகங்களிலும் சேகரிப்பு நிலையங்கள் செயற்படுகின்றன. அவற்றின் அருகில் உள்ள குளிர்பதன நிலையங்களுக்குப் பால் எடுத்துச் செல்லப்பட்டு நுகர்வோரின் தேவைக்கேற்பப் பைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குசராத்து மாநிலத்திலுள்ள ஆனந்து என்கிற இடத்தில் பேரளவில் பால்வள நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுப் பால், பால் பண்டங்கள், கால்நடைகள் முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றிய ஆராய்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தரமான கறவைப் பசுக்கள், கால்நடைத் தீவனங்கள் போன்றவற்றின் மூலம் பால்வளத்தைப் பெருக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கால்நடைகளிலிருந்து இறைச்சி 0.49 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் மதிப்பு உரூ. 1000 மிலியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய 0.9 விழுக்காடு பசுக்களும், 36 விழுக்காடு வெள்ளாடுகளும், 35 விழுக்காடு செம்மறியாடுகளும் ஓர் ஆண்டில் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடைகள் வயலுக்குத் தேவையான உரம் (சாணம்) தருவதன் வாயிலாக நிலத்தின் வளத்தையும் உற்பத்தித் திறனையும் உயர்த்துகின்றன. ஒராண்டுக் கால்நடைச் சாணம் 1200 மிலியன் கண்டி ஆகும். 400 மிலியன் கண்டிச் சாணம் 46 மிலியன் கண்டி நிலக்கரிக்கு ஈடாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும்,<noinclude></noinclude> 6uexiojn4m8uve5niye7fg77uag8lxh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/343 250 627196 1957547 1883695 2026-08-07T13:24:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக்‌ கால்நடைச்‌ செல்வம்‌|319|இந்தியக்‌ கால்நடைச்‌ செல்வம்‌}}</noinclude>எரிவாயு (Bio-gas) உற்பத்தி செய்வதற்கும் சாணம் குறைந்த செலவில் பயன்படுகிறது. கால்நடைகள் வண்டி இழுப்பதற்கு ஊரகங்களில் மிகுதியாகப் பயன்படுகின்றன. உயர் குழுவின் (Royal Commission) அறிக்கையின்படி உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் கால்நடைகள் உணவு, பால் போன்றவற்றிற்காகப் பயன்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அவற்றின் முதன்மைப் பணி வயல்களை உழுவதும், வண்டிகளை இழுப்பதுமேயாகும். கால்நடைகளின் பணிகளைத் துல்லியமாக மதிப்பிட இயலாது. எனினும் இந்தியாவின் கால்நடைப் பணிகளின் மதிப்பு உரூ. 300 கோடி முதல் உரூ. 500 கோடி வரை எனக் கூறப்படுகிறது. கால்நடைகள் பலதரப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. அவற்றில் சிறப்பாகத் தோல், பதனிடப்பட்ட தோல் முதலியவை அடங்கும். உலகின் 32 விழுக்காடு தோல் உற்பத்தி இந்தியாவைச் சார்ந்தது. மொத்தத் தோல் உற்பத்தியில் 16 மிலியன் மாட்டுத் தோல், 5 மிலியன் எருமைத் தோல், 21 மிலியன் வெள்ளாட்டுத் தோல், 16 மிலியன் செம்மறியாட்டுத் தோல் ஆகும். ஏறக்குறைய 36 மிலியன் கிலோ கிராம் ஆட்டு உரோமம் கிடைக்கிறது. அதில் 50 விழுக்காட்டுக்கு மேல் கம்பளி உரோமமாக (Wool) ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் நெய், கொழுப்புப்போன்ற பொருள்களின் உற்பத்தி 0.24 மிலியன் கண்டி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கால்நடைகளின் கொழுப்பு, குளம்புகள், கொம்புகள் போன்றவற்றின் மூலம் உரூ. 6 மிலியன் அயற் செலாவணி கிடைக்கிறது. ஒவ்வோராண்டும் 3.6 மிலியன் கண்டி எலும்பு கிடைக்கிறது. அதன் மதிப்பு ஏறக்குறைய உரூ. 8 கோடியாகும். இந்திய வேளாண்மை வருவாயில் கால்நடைகளிலிருந்து பெறும் வருவாய் 15 விழுக்காடாகும் (1984). கால்நடைகள் எண்ணிக்கையில் மிகுந்து காணப்பட்டாலும், அவற்றின் வருவாய் மிகுதியாக இல்லை. இந்தியாவின் நாட்டு வருவாயில் வேளாண்மைத்துறை வருவாய் 42 விழுக்காடாக (1984) உள்ளது. அதில் மிகக் குறைந்த அளவே கால்நடைகளின் பங்கு எனக் குறிப்பிடப்படுகிறது. தென்மார்க் (Denmark), சுவீடன் (Sweden) போன்ற நாடுகளில் வேளாண்மையில் கால்நடைகளின் பங்கு 80 முதல் 85 விழுக்காடாக (1984) உள்ளது. புதிய வேளாண்மைக் கருவிகளின் மூலம் கால்நடைகளின் பங்கு பெரிதும் குறைந்துள்ளது. சிறிய சிதறுண்ட நிலங்களினால்தான் வேளாண்மைத்துறை மிகுதியான அளவு கால்நடைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய நிலையிலுள்ளது. புள்ளியியல் விவரப்படி இப்போது ஏறக்குறைய 100 மிலியன் கால்நடைகள் உபரியாக (Surplus) உள்ளன. இவற்றிற்காக ஆண்டுதோறும் உரூ. 1,800 கோடி செலவிடப்படுகிறது. 60 விழுக்காடு கால்நடைகளுக்குப் போதுமான உணவே உள்ளது. இதனால் தரக்குறைவான கால்நடைகள் காணப்படுகின்றன. உபரிக் கால்நடைகளின் இறைச்சி, தோல், கொம்பு, எலும்பு போன்றவை பயன்படுத்தப்பட்டால் உரூ. 1000 கோடி அயற் செலாவணி கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வேளாண்மையில் கால்நடையின் பங்கு மிகுதியாக இருந்தாலும் அவற்றின் நிலைமை மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளது. அவற்றிற்கான காரணங்களுள் குறிப்பிடத்தக்கவை: (1) கால்நடைகளுக்குப் போதுமான அளவு உணவு இல்லாமை, (2) மிகவும் மோசமான தரக்குறைவான பாதுகாப்பு, (3) இனவிருத்தி சீரான முறையில் நடைபெறாமை, (4) பெரும்பான்மையான கால்நடைகள் நோயினால் துன்புறுதல். இந்தியாவில் சூலை மாதம் முதல் திசம்பர் மாதம் முடிய உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருப்பதால் கால்நடைகள் யாவும் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கின்றன. இதன் பயனாக இந்திய உழவன் மோசமான கால்நடைகளையே பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஊரகங்களில் தரமான இனவிருத்திக் கால்நடைகள் இல்லாத காரணத்தினால் உழவர்கள் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை சென்று தங்கள் கால்நடைகளுக்கு இனவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலான ஊரகங்களில் இவ்வசதி இன்னும் செய்து தரப்படவில்லை. கால்நடைகளின் தரக் குறைவிற்கு நோயும் ஒரு காரணமாகும். தொற்று நோய்கள் மிக அதிகமாக உள்ளன. கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் தேவைக்கு ஏற்ப மருத்துவ உதவி கிடைப்பதில்லை. மேலும், புதிய மருத்துவ வசதிகள் பெரும்பாலான இடங்களில் கிடைப்பதில்லை. ஊரசுக் கால்நடை மருந்தகங்களில் (Dispensary) நோயைத் தீர்ப்பதற்கான மருந்து வகைகள் சரிவரக் கிடைப்பதில்லை. இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களில் கால்நடை முன்னேற்றத்திற்கென மூன்று வகைத் திட்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்கவும், மிகுதியான கால்நடைகளை வேளாண்மையில் ஈடுபடுத்தவும், உரோமம், தோல் போன்ற<noinclude></noinclude> e14vokv1dv1xdmp97fk4hdm10of66zt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/344 250 627197 1957548 1883696 2026-08-07T13:28:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கால்நடைச் செல்வம்|320|இந்தியக் கால்நடைச் செல்வம்}}</noinclude>{{dhr}} {|border="1" cellpadding="3" cellspacing="0"align="center" !colspan =6|தமிழ்நாட்டில் கால்நடைகள் |- ! கால்நடையின் வகைகள் !! 1977 !! 1982 |- |பசு || 1, 08, 01, 119 || 1, 02, 46, 744 |- |எருமை || 30, 77, 678 || 32, 07, 082 |- |செம்மறியாடு || 52, 89, 242 || 54, 75, 142 |- |வெள்ளாடு || 42, 02, 093 || 51, 10, 526 |- |பன்றி || 6, 78, 123 || 6, 66, 698 |- |பிற இனங்கள் || 97, 988 || 10, 62, 625 |- |மொத்தம் || 2, 41, 46, 243 || 2, 57, 68, 837 |} பண்டங்களின் உற்பத்தி அளவைப் பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்திலும் வேளாண்மைத் துறையில் கால்நடைப் பாதுகாப்பிற்கென்று மிகுந்த அளவு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் கால்நடைப் பால்வளப்பெருக்கத்திற்கு ரூ.670 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கால்நடை விரிவாக்கப் பணிகள், கூட்டுறவு அங்காடிகளின் ஒத்துழைப்போடு செயற்படுத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடைகள் இந்தியாவின் பொருளாதார அமைப்பை மாற்றியமைக்கும்படி அவற்றின் நிலை ஒவ்வொரு திட்டத்திலும் முன்னோக்கிய நிலையை அடைய மிகுதியான பண ஒதுக்கீடு செய்வதற்கு மைய மாநில அரசுகள் முடிவுகள் எடுத்துள்ளன. அதன்படி நாட்டில் தரமான கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களில் கால் நடை முன்னேற்றத்திற்கென மூன்று வகைத் திட்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்கவும், மிகுதியான கால்நடைகளை வேளாண்மையில் ஈடுபடுத்தவும், மயிர், தோல் போன்ற பண்டங்களின் உற்பத்தி அளவைப் பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஐந்தாண்டுத்திட்டத்திலும் வேளாண்மைத் துறையில் கால்நடைப் பாதுகாப்பிற்கென மிகுந்த அளவு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் கால்நடைப் பால்வளப்பெருக்கத்திற்கு உரூ. 670 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கால்நடை விரிவாக்கப் பணிகள் கூட்டுறவு அங்காடிகளின் ஒத்துழைப்போடு செயற் படுத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடைகள் இந்தியாவின் பொருளாதார அமைப்பை மாற்றியமைக்கும்படி அவற்றின் நிலை ஒவ்வொரு திட்டத்திலும் முன்னோக்கிய நிலையை அடைய மிகுதியான பண ஒதுக்கீடு செய்வதற்கு மைய, மாநில அரசுகள் முடிவுகள் எடுத்துள்ளன. தமிழ் நாட்டில் தமிழக அரசு கால்நடைச் செல்வத்தைப் பெருக்குவதற்குப் பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இவை பெரும்பாலும் மாடுகள், செம்மறியாடுகள், பன்றி ஆகிய இனங்களைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டவையாகும். பால் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்துடன், செங்கற்பட்டு, வடார்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களிலுள்ள 125 துணை நிலையங்களில் (Sub-centres) உறை விந்து (Frozen semen) தொழில் நுட்பமுறை மூலம் செயற்கை முறைக் கருத்தரிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான திட்டம் ஒன்று, உரூ. 15.25 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 10 கால்நடை மருந்தகங்களை 1985-86-ஆம் ஆண்டில் உரூ. 19.7 இலட்சம் செலவில் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பால் பெருக்குத் திட்டம் தமிழ்தாட்டில் இப்போது 9 மாவட்டங்களில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைத் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு உரூ. 12.83 கோடி மதிப்பீட்டுச் செலவில் நீடிக்கத் திட்டமிடப்-<noinclude></noinclude> 27uw3y0tiavssw618f5zud36m1p6ykx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/345 250 627254 1957551 1954811 2026-08-07T13:34:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக்‌ கால்நடைச்‌ செல்வம்‌|321|இந்தியக் காவல் பணித்துறை}}</noinclude>பட்டுள்ளது. இது 5 ஆண்டுக் கால அளவில் செயற்படுத்தப்படும். ஒரு நாளைக்கு 10,000 இலிட்டர் பால் குளிர வைக்கக்கூடிய திறன் கொண்ட ஒரு புதிய நிலையம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் உரூ.19 இலட்சம் செலவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நலிந்த பால் நிலையங்களை 1985-86 ஆம் ஆண்டில் புதுப்பித்து அவற்றைப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்புகளாக மாற்ற அரசு உரூ. 4.14 இலட்சம் செலவிடத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 1981-ஆம் ஆண்டுப் பால் உற்பத்தி 1,88,54,51,342 கிலோவாகும். தனி மனித நுகர்வுக்குரிய பால் 107 கிராம் ஆகும். இது 1980-81-ஆம் ஆண்டில் இருந்த 99 கிராம் அளவை விடக்கூடுதலாக உள்ளது. மொத்தப் பால் உற்பத்தியில் 4,07,07,73,236 கிலோ எடையுள்ள பால் பசுக்கள் மூலமும் 87,46,78,206 கிலோ பால் எருமைகள் மூலமும் கிடைக்கிறது. தமிழ் நாட்டில் கோயமுத்தூர் மாவட்டத்தில் மிக அதிகமான பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு மாறாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இறைச்சிக்காக 1981-82-ஆம் ஆண்டில் 22,36,377 கால்நடைகள் விற்பனையாயின. அவற்றின் மொத்த எடை 2,72,02,198 கிலோ கிராம் ஆகும். மொத்த இறைச்சி உற்பத்தியில் 42,52 விழுக்காடு செம்மறியாடு, வெள்ளாடு ஆகியவற்றின் பங்கு எனக் கூறப்படுகிறது. கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக 1981-82-ஆம் ஆண்டில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் 20 புதிய கால்நடை மருந்தகங்களும் 3 புதிய கால்தடை மருத்துவமனைகளும் நிறுவப்பட்டுள்ளன. கூட்டுறவுப் பால் வழங்கும் அமைப்புகள் மூலம் தமிழ்நாட்டின் பால் உற்பத்தி மிகுதியாகப் பெருகியுள்ளது. எனினும் தேவையும் மிகுந்துள்ளதால் தமிழக அரசு தீவிர பால் உற்பத்தி முன்னேற்ற முறைகளையும் திட்டங்களையும் செயற்படுத்தி வருகிறது. {{right|க.சொ.}} <b>துணை நூல்கள்: ::Memoria, C.B.</b>, Agricultural Problems of India, Kilab Mahal, Allahabad, 1984. ::Draft outlines of the Five Year Plans, Publication Division, New Delhi, 4975, 1980. ::Annual Report on Integrated Sample Survey for Estimation of Animal Products, Statistical Bulletin IX, 1981-82, Government of Tamil Nadu, 1984. <section end="இந்தியக் கால்நடைச் செல்வம்"/> <section begin="இந்தியக் காவல் பணித்துறை"/> {{dhr}} <b>இந்தியக் காவல் பணித்துறை:</b> இந்திய ஆட்சிப்பணியைப் போன்று (Indian Administrative services), இந்தியக்காவல் பணித் துறையும் (Indian Police Service) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு (Article) 312(2) இன் படி தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அரசுப் பணிகளுள் (All India Services) ஒன்று ஆகும். இராச்சிய சபையில் (Council of States) கூட்டத்துக்கு வந்திருந்து வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுடைய ஆதரவுடன் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானத்தின்படி, அனைத்திந்திய நீதித்துறைப் பணி (All India Judicial Service) போன்று, இந்திய ஒன்றியத்துக்கும் (Indian Union) மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பணிகளைத் தோற்றுவிப்பதற்கும் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. பாராளுமன்றமே அத்தகைய பணிகளில் அமர்த்தப்படுபவர்களுக்கு உரிய ஆட்சேர்ப்புமுறை (Recruitment), பணி வரையறைகள் (Condition of Service) ஆகியவற்றை ஒழுங்கு செய்யவும் அதிகாரம் உடையது (இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 312 (1)). இந்த அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் காலத்தில் செயற்பட்டு வருகின்ற இந்திய ஆட்சிப் பணியும் (I.A.S.), இந்திய காவற் பணியும் (I.P.S.) மேற்படி 312(1) பிரிவின்படி பாராளுமன்றத்தால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்தியப் பணிகளாகவே கருதப்படுதல் வேண்டும் (பிரிவு 312-(2). ஆகையால் இந்தியக் காவற்பணியும் இந்திய ஆட்சிப் பணியைப் போன்று ஓர் அனைத்திந்திய ஆட்சிப் பணியாக (Class of All India Services) வகைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் இப்போது இந்தியப் பொறியாளர் பணியும் (Indian Service of Engineers), இந்தியக் காட்டுத் துறைப்பணியும் (Indian Forest Service), இந்திய அயல்துறைப்பணியும் (Indian Foreign Service) சேர்க்கப்பட்டுள்ளன. மற்றப் பணி வகைப்பாடுகள் (Class of Services):- (1) முதல் வகுப்பு நடுவண அல்லது ஒன்றிய பணிவகைகள் (Central or Union Services Class I); (2) இரண்டாம் வகுப்பு நடுவண அல்லது ஒன்றிய பணிவகைகள் (Class II); (3) மாகாண அல்லது மாநிலப் பணிகள் (Provincial Service); (4) சிறப்புப் பணியாளர் வகைகள் (The Specialist Services); (5) நடுவண பணிகள் வகுப்பு மூன்று (Class (III); (6) நடுவண பணிகள் வகுப்பு நான்கு (Class IV); (7) நடுவண செயலகப் பணிகள் வகுப்புகள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு (Central Secretariat Services Class I, Class II, Class III, Class IV) முதலியவை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்கள் தங்களுடைய உறுதியான கட்டுப்பாட்டின் கீழ் (எஃகு முறையில் - Steelframe)<noinclude></noinclude> dp0mcynm0zyvf2359so3mwen8h34kwr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/346 250 627409 1957552 1884350 2026-08-07T13:40:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் காவல் பணித்துறை||இந்தியக் காவல் பணித்துறை}}</noinclude>இந்தியப் பேரரசுமுழுவதையும் வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன், மாகாண அரசாங்கங்களிலும் (Provincial Governments) நடுவண அரசாங்கத்திலும் (Central Government) பணி செய்வதற்குத்தக்க கல்வியும் பயிற்சியும் பெற்ற பணியாளர்களைத் திரட்டி வைத்து, அவர்களை மாகாணங்களிலும் நடுவண அரசாங்கத்திலும் பணி செய்யுமாறு அமர்த்திக் கட்டுப்படுத்தினர். விடுதலை பெற்ற இந்திய நாட்டிலும் ஒன்றிய அரசாங்கத்துக்கு மாநிலங்களனைத்திலும் கட்டுப்பாடு இருக்கும் பொருட்டும், மாநில, உள்ளூர் விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடாத திறமையான பணியாளர்களுடைய பணியைப் பெறும் பொருட்டும், மேற்படி அனைத்திந்தியப் பணியாளர் வகை நீடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வகுப்புப் பணியாளர்கள் நடுவண, மாநில அரசாங்களுக்கிடையே அடிக்கடி மாற்றிக் கொள்ளப்படுவதால் இரண்டுக்குமிடையே ஓர் இணக்கமான இணைப்பு (liason) ஏற்பட வழி உண்டாகிறது. இந்த வகுப்புப் பணியாளர்கள் மிகப்பரந்த அளவிலான விண்ணப்பதாரர்களிடையே இருந்து திரட்டப்பட்டு, அவர்களுக்கு உயர் ஊதியமும், நிலையும் கொடுக்கப்படுவதால், அவர்கள் மாநிலப் பணியாளர்களைவிடத் திறமை மிக்கவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் உயிர் நாடியான பதவிகளிலிருப்பதால், மாநிலப் பணியாளர்களைப் போலன்றி, அச்சமின்றித் தங்களுடைய ஆலோசனைகளை அல்லது கருத்துகளை வழங்க இயலும். சில மாநிலங்களில் மிக உயரிய பதவிகளிலமர்த்தப்படுவதற்குப் போதிய தகுதியுடைய பணியாளர்கள் கிடைக்காத போது, அனைத்திந்தியப் பணி வகுப்பிலிருந்தே ஆட்கள் அமர்த்தப்படுகின்றனர். குடியரசுத் தலைவருடைய நேர்முக ஆட்சி மாநிலங்களில் நடைமுறையிலிருக்கும்பொழுது, அவருடைய ஆட்சிக் கொள்கைகளைச் செயற்படுத்துவோர் அனைத்திந்தியப் பணியாளர்களேயாவர். ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்கழகம் தனது நிலவரி அதிகாரங்களைக் கையாளும் பொருட்டும் காவற்பணிகளை நிறைவேற்றும் பொருட்டும் ஆங்கில அதிகாரிகளை அமர்த்தி, அவர்கள் வணிகக் கழகத்தார் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கிணங்கப் பணி செய்தல் வேண்டுமென்று அவர்கள் இருதரப்பாரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ‘ஒப்பந்தப் பணிமுறையே’ (Covenanted Service) பிற்காலத்தில் இந்தியக் குடிமையியல் பணியும் (Indian Civil Service) இந்தியக் காவற் பணித்துறையும் அடங்கிய அனைத்திந்திய அரசுப் பணியாக அமைக்கப்பட்டது. இந்தியக் காவற் பணியாளர்களும், இந்திய ஆட்சிப் பணியாளர்களைப் போலவே போட்டித் தேர்வுகளின் வாயிலாகத் தகுதி அடிப்படையில் (Competitive Examination, Merit System) தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். காவற்றுறையில் (Police Department) கீழ் நிலைப்பணியாளர் மேல்நிலை இந்தியக் காவற் பணிக்குப் போட்டித்தேர்வு எழுத உடன்பாடு கொடுக்கப்படுவதில்லை. போட்டித் தேர்வுமுறை கி.பி. 1854-ஆம் ஆண்டு போட்டித் கொண்டுவரப்பட்டது. போட்டித் தேர்வுகளில் (1) ஆங்கிலக் கட்டுரை (மொத்தம் 150 மதிப்பெண்கள்), (2) பொது ஆங்கிலம் (150), (3) பொது அறிவு (150) ஆகிய மூன்றும் எல்லாவகை மாணவர்களுக்கும் கட்டாயத் தாள்கள் ஆகும். காவற் பணித்துறையில் சேர விரும்புவோர் மேற்படி 3 கட்டாயப்பாடங்களோடு, ஒன்றிய பொதுப் பணிக்கழகம் (Union Public Service Commission) விதித்துள்ள 23 விருப்பப் பாடங்களுள் இரண்டு எடுத்து, அவற்றில் தேர்வுகள் எழுதுதல் வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும். விருப்பப் பாடங்கள் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் பாடங்களின் பட்டியலிலிருந்தே விதிக்கப்படுகின்றன. தேர்வுகள் ஒன்றியப் பொதுப்பணிக் கழகத்தால் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெற்றோருக்கு நேர்முகத் தேர்வும் (Viva Voce) அக்கழகத்தால் நடத்தப்படுகிறது. காவற்றுறையில் சேர விரும்புவோருக்கு நேரடித் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த மதிப்பு எண்கள் 300. நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரர், கூறப்படும் கருத்தை அல்லது பொருளை நன்கு உணரும் திறமுடையவரா என்பதுதான் ஆராயப்படுகிறது. இதில் விண்ணப்பதாரர் பெறும் மதிப்பு எண்கள் அவர் எழுத்துத் தேர்வுகளில் பெறும் மதிப்பு எண்களோடு சேர்க்கப் படுகின்றன. நேர்முகத் தேர்வில் தேர்வாளர்களுடைய (Examiners) விருப்பு வெறுப்புகள் வெளிப்பட வாய்ப்பு உண்டு. இந்தப் பணித்துறைக்கு வேண்டுவன தலைமைப் பண்புகள் (Leadership Traits), காலமும் இடமுமறிந்து செயலாற்றும் திறன் (Force), உறுதிப்பாடு (Forcefulness) முதவியவை. ஆகவே நேரடித்தேர்வில் இவை விண்ணப்பதாரிடம் இருக்கின்றனவா என்று ஆராய்கின்றனர். இதில் வெற்றி பெற்றோர் பயிற்சிக்காக இராசசுத்தானில் ஆபுமலையிலுள்ள காவற்றுறை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்படுகின்றனர். பயிற்சிக் காலத்தில் இவர்கள் குற்றங்களைக் கண்டுபிடித்தலிலும் தடுத்தலிலும் பயிற்சி பெறுகின்றனர். தங்களுடைய பணிக்குப் பின்னணியாக உள்ள அரசியல், ஆட்சி, பொருளாதார, சமூகச் சூழ்நிலைகளையும் கற்கின்றனர். படைத் தலைவர் ஒருவரே காவலர் கல்லூரிக்குத் தலைவராக இருப்பார். குற்ற இயல் சட்டம், அச்சட்டமுறை (Procedure), உடற் பயிற்சி, குதிரை ஏற்றம், சுடுதல் முதலியவற்றில் இவர்கள் பயிற்சி பெற்று, சிறிது காலம் முசோரியிலுள்ள<noinclude></noinclude> srtf0cjet7szj9bifkmgtjtcdm6hz2g 1957558 1957552 2026-08-07T13:58:39Z Booradleyp1 1964 1957558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் காவல் பணித்துறை|322|இந்தியக் காவல் பணித்துறை}}</noinclude>இந்தியப் பேரரசுமுழுவதையும் வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன், மாகாண அரசாங்கங்களிலும் (Provincial Governments) நடுவண அரசாங்கத்திலும் (Central Government) பணி செய்வதற்குத்தக்க கல்வியும் பயிற்சியும் பெற்ற பணியாளர்களைத் திரட்டி வைத்து, அவர்களை மாகாணங்களிலும் நடுவண அரசாங்கத்திலும் பணி செய்யுமாறு அமர்த்திக் கட்டுப்படுத்தினர். விடுதலை பெற்ற இந்திய நாட்டிலும் ஒன்றிய அரசாங்கத்துக்கு மாநிலங்களனைத்திலும் கட்டுப்பாடு இருக்கும் பொருட்டும், மாநில, உள்ளூர் விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடாத திறமையான பணியாளர்களுடைய பணியைப் பெறும் பொருட்டும், மேற்படி அனைத்திந்தியப் பணியாளர் வகை நீடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வகுப்புப் பணியாளர்கள் நடுவண, மாநில அரசாங்களுக்கிடையே அடிக்கடி மாற்றிக் கொள்ளப்படுவதால் இரண்டுக்குமிடையே ஓர் இணக்கமான இணைப்பு (liason) ஏற்பட வழி உண்டாகிறது. இந்த வகுப்புப் பணியாளர்கள் மிகப்பரந்த அளவிலான விண்ணப்பதாரர்களிடையே இருந்து திரட்டப்பட்டு, அவர்களுக்கு உயர் ஊதியமும், நிலையும் கொடுக்கப்படுவதால், அவர்கள் மாநிலப் பணியாளர்களைவிடத் திறமை மிக்கவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் உயிர் நாடியான பதவிகளிலிருப்பதால், மாநிலப் பணியாளர்களைப் போலன்றி, அச்சமின்றித் தங்களுடைய ஆலோசனைகளை அல்லது கருத்துகளை வழங்க இயலும். சில மாநிலங்களில் மிக உயரிய பதவிகளிலமர்த்தப்படுவதற்குப் போதிய தகுதியுடைய பணியாளர்கள் கிடைக்காத போது, அனைத்திந்தியப் பணி வகுப்பிலிருந்தே ஆட்கள் அமர்த்தப்படுகின்றனர். குடியரசுத் தலைவருடைய நேர்முக ஆட்சி மாநிலங்களில் நடைமுறையிலிருக்கும்பொழுது, அவருடைய ஆட்சிக் கொள்கைகளைச் செயற்படுத்துவோர் அனைத்திந்தியப் பணியாளர்களேயாவர். ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்கழகம் தனது நிலவரி அதிகாரங்களைக் கையாளும் பொருட்டும் காவற்பணிகளை நிறைவேற்றும் பொருட்டும் ஆங்கில அதிகாரிகளை அமர்த்தி, அவர்கள் வணிகக் கழகத்தார் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கிணங்கப் பணி செய்தல் வேண்டுமென்று அவர்கள் இருதரப்பாரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ‘ஒப்பந்தப் பணிமுறையே’ (Covenanted Service) பிற்காலத்தில் இந்தியக் குடிமையியல் பணியும் (Indian Civil Service) இந்தியக் காவற் பணித்துறையும் அடங்கிய அனைத்திந்திய அரசுப் பணியாக அமைக்கப்பட்டது. இந்தியக் காவற் பணியாளர்களும், இந்திய ஆட்சிப் பணியாளர்களைப் போலவே போட்டித் தேர்வுகளின் வாயிலாகத் தகுதி அடிப்படையில் (Competitive Examination, Merit System) தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். காவற்றுறையில் (Police Department) கீழ் நிலைப்பணியாளர் மேல்நிலை இந்தியக் காவற் பணிக்குப் போட்டித்தேர்வு எழுத உடன்பாடு கொடுக்கப்படுவதில்லை. போட்டித் தேர்வுமுறை கி.பி. 1854-ஆம் ஆண்டு போட்டித் கொண்டுவரப்பட்டது. போட்டித் தேர்வுகளில் (1) ஆங்கிலக் கட்டுரை (மொத்தம் 150 மதிப்பெண்கள்), (2) பொது ஆங்கிலம் (150), (3) பொது அறிவு (150) ஆகிய மூன்றும் எல்லாவகை மாணவர்களுக்கும் கட்டாயத் தாள்கள் ஆகும். காவற் பணித்துறையில் சேர விரும்புவோர் மேற்படி 3 கட்டாயப்பாடங்களோடு, ஒன்றிய பொதுப் பணிக்கழகம் (Union Public Service Commission) விதித்துள்ள 23 விருப்பப் பாடங்களுள் இரண்டு எடுத்து, அவற்றில் தேர்வுகள் எழுதுதல் வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும். விருப்பப் பாடங்கள் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் பாடங்களின் பட்டியலிலிருந்தே விதிக்கப்படுகின்றன. தேர்வுகள் ஒன்றியப் பொதுப்பணிக் கழகத்தால் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெற்றோருக்கு நேர்முகத் தேர்வும் (Viva Voce) அக்கழகத்தால் நடத்தப்படுகிறது. காவற்றுறையில் சேர விரும்புவோருக்கு நேரடித் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த மதிப்பு எண்கள் 300. நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரர், கூறப்படும் கருத்தை அல்லது பொருளை நன்கு உணரும் திறமுடையவரா என்பதுதான் ஆராயப்படுகிறது. இதில் விண்ணப்பதாரர் பெறும் மதிப்பு எண்கள் அவர் எழுத்துத் தேர்வுகளில் பெறும் மதிப்பு எண்களோடு சேர்க்கப் படுகின்றன. நேர்முகத் தேர்வில் தேர்வாளர்களுடைய (Examiners) விருப்பு வெறுப்புகள் வெளிப்பட வாய்ப்பு உண்டு. இந்தப் பணித்துறைக்கு வேண்டுவன தலைமைப் பண்புகள் (Leadership Traits), காலமும் இடமுமறிந்து செயலாற்றும் திறன் (Force), உறுதிப்பாடு (Forcefulness) முதவியவை. ஆகவே நேரடித்தேர்வில் இவை விண்ணப்பதாரிடம் இருக்கின்றனவா என்று ஆராய்கின்றனர். இதில் வெற்றி பெற்றோர் பயிற்சிக்காக இராசசுத்தானில் ஆபுமலையிலுள்ள காவற்றுறை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்படுகின்றனர். பயிற்சிக் காலத்தில் இவர்கள் குற்றங்களைக் கண்டுபிடித்தலிலும் தடுத்தலிலும் பயிற்சி பெறுகின்றனர். தங்களுடைய பணிக்குப் பின்னணியாக உள்ள அரசியல், ஆட்சி, பொருளாதார, சமூகச் சூழ்நிலைகளையும் கற்கின்றனர். படைத் தலைவர் ஒருவரே காவலர் கல்லூரிக்குத் தலைவராக இருப்பார். குற்ற இயல் சட்டம், அச்சட்டமுறை (Procedure), உடற் பயிற்சி, குதிரை ஏற்றம், சுடுதல் முதலியவற்றில் இவர்கள் பயிற்சி பெற்று, சிறிது காலம் முசோரியிலுள்ள<noinclude></noinclude> 8ixirvksn9c8ikujp6k0kectqfafwcw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/347 250 627411 1957553 1954812 2026-08-07T13:44:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக்‌ கிராமிய நடனங்கள்‌|323|இந்தியக்‌ கிராமிய நடனங்கள்‌}}</noinclude>இந்திய ஆட்சிப் பணியாளர் கல்லூரியிலும் பயின்று, பின்னர், மாவட்டங்களில் காவற்றுறையின் தலைமைக் காவலர் (Head Constable), ஆய்வாளர் (Inspector) முதலிய சிறு பதவிகளில் குறுகிய காலங்கள் பணி செய்யுமாறு அமர்த்தப்படுகின்றனர். பயிற்சிக் காலமுடிவில் இவர்கள் துணைக் காவல் மேலாளராக அமர்த்தப் படுகின்றனர். இவர்களுடைய பணிக்காலம், விடுப்பு, ஊதியங்கள், பணி உயர்வுகள், ஓய்வுமுறை, ஓய்வு ஊதியம் முதலியவையெல்லாம் இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்குரிய விதிகளின்படியே வரையறை செய்யப்பட்டுள்ளன. இவர்களுடைய பணி விதிகளும் சுட்டுப்பாடு பற்றிய விதிகளும் 1955-ஆம் ஆண்டின் அனைத்திந்தியப் பணிகள் கட்டுப்பாடும் மேல்முறையீடும் பற்றிய விதிகளில் (All-India Services (Discipline and Appeal) Rules, 1955) கூறப்பட்டுள்ளன. காவற்றுறையின் கீழ்நிலைப் பணியாளர்கள் உயர் அலுவலரால் தேர்ந்தெடுக்கப்பட்டும், மேல்நிலை அலுவலாளர்கள் பதவி உயர்வு முறை மூலமும் (Promotion System) நேரடித் தேர்வு மூலமும் பணியில் அமர்த்தப்படுகின்றனர். <section end="இந்தியக் காவல் பணித்துறை"/> <section begin="இந்தியக் கிராமிய நடனங்கள்"/> {{dhr}} <b>இந்தியக் கிராமிய நடனங்கள்:</b> இந்தியாவில் பல்வேறு மொழிபேசும் மக்களிடையே பல வகையான நடனங்கள் பழங்காலம் முதற்கொண்டே இருந்து வருகின்றன. இத்தகைய நடனங்களுள் சில மரபுவழி நடனங்களாகவும் வேறுசில சிற்றூர் மக்களிடையே தோன்றி வளர்ந்த நடனங்களாகவும் இருக்கின்றன. இந்த நடனங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களால் குறிக்கப்பட்டு வெவ்வேறு முறைகளில் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் தொன்றுதொட்டுத் ‘தெருக்கூத்து’ என்ற நாட்டிய நாடகம் புகழ்பெற்ற கலையாக இருந்து வருகிறது. தெருக்கூத்து சிற்றூர் மக்களால் அவர்களுக்காகவே நிகழ்த்தப்படுகிறது. இது பண்டிகை நாள்களிலும் கோவில் திருவிழாக் காலங்களிலும் நடத்தப்படுகிறது. பண்டைக் காலத்தில் ஊர் மக்களின் பொழுதுபோக்காகத் தொடங்கிய இந்நிகழ்ச்சி பிற்காலத்தில் ஒரு கலையாக வளர்ந்துள்ளது. கூத்து நிகழ்த்துவோர் பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்; ஊர்விட்டு ஊர் சென்று கூத்து நிகழ்ச்சிகளை நடத்தினர். தெருக்கூத்து இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஊர்ப் பொது இடத்திலோ தெருவின் தொடக்கத்திலோ அறுவடை செய்து நெல்லைக் குவிக்கும் திடலிலோ கூத்து நடைபெறும். பழங்காலத்தில் மேடை எதுவுமின்றித் தரையிலேயே கூத்து நிகழ்த்தப்பட்டது. இக்காலத்தில் சில இடங்களில் கூரை போடப்பட்ட தனியிடம் நிகழ்ச்சிக்காக அமைக்கப்படுகிறது. மேடை போடப்படுவதில்லை. அரங்கமைப்பு எதுவும் இல்லை. வெளிச்சத்திற்காக ஒளிவிட்டு எரியும் தீப்பந்தங்கள் இரு பக்கங்களிலும் பிடிக்கப்பட்டன. இக்காலத்தில் மின் விளக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன. நிகழ்ச்சியில் இசையும் உரையாடல்களும் இடம்பெறுகின்றன. நடனம் எளிமையாக இருக்கிறது. எத்தகைய கதையாக இருப்பினும் அதில் கட்டியங்காரனும் கோமாளியும் இருப்பர். கதை பெரும்பாலும் மகாபாரதம், இராமாயணம், பாகவதம் போன்ற புராணங்களினின்று எடுக்கப்பட்டதாக இருக்கும். இக்கதைகள் முடிவில் நல்லவர் வாழ்வதையும் தீயவர் அழிவதையும் எடுத்துரைப்பதால் பெரும்பாலும் இத்தகைய பகுதிகளே தெருக்கூத்துக் கதைகளாக அமைகின்றன. நடனத்திற்கான பின்னணி இசை ஒரு குழுவினரால் இசைக்கப்படுகிறது. இக்குழுவில் நாதசுரத்தைப் போன்றதும் சிறிய அமைப்புள்ளதுமான முகவீணை என்னும் இசைக்கருவியும், துத்தி எனப்படும் இசைக் கருளியும், மிருதங்கமும், சாவரா எனப்படும் தாளமும் இடம்பெறுகின்றன. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஓர் இசை மெட்டு, குழுவினரால் இசைக்கப்படுகிறது. இதனையடுத்து இறைவணக்கப்பாடலும் இறுதியில் குரு வணக்கப் பாடலும் பாடப்படுகின்றன. தெருக்கூத்தின் இப்பகுதி சில வேளைகளில் ஒரு மணிநேரம் வரையில் நீடிக்கும். இதற்குப்பின் கட்டியங்காரன் வந்து கதையின் சுருக்கத்தைக் கோமாளியுடன் உரையாடும் முறையில் அவையினருக்கு எடுத்துரைக்கிறான். கதையில் வரும் ஒவ்வொரு நாடக மாந்தரும் வெளியில் வருவதற்குமுன் ஒரு திரைச்சீலையின் பின்னே நிற்கிறார். திரைச்சீலை ஒரு வெள்ளைத் துணி, இதை இருவர் திரைபோல் பிடித்துக் கொண்டு நிற்பர். இயட்சகானம், கதகளி, குறவஞ்சி நாடகம் ஆகியவற்றில் திரை விலகுவது போல் தெருக்கூத்திலும் திரைவிலகுகிறது. கட்டியங்காரன் நாடகமாந்தரை அறிமுகம் செய்தபின், ஒவ்வொருவரும் அரங்கினுள் நுழையும் பொழுது தம் வருகையை நீண்ட பாடல், எளிமையான அபிநயம், நிருத்தம் ஆகியவற்றின் மூலம் தெரிவிக்கிறார். இவர் பாடும் ஒவ்வொரு வரியையும் அரங்கில் இருக்கும் மற்றகலைஞர்களும் இசைக்குழுவினரும் திரும்பவும் பாடுகின்றனர். கலைஞர்கள் அரங்கினுள் நுழைந்தவுடன் வட்டமாகச் சுற்றிய வண்ணம் பாடி அபிநயங்கள் செய்கிறார்கள். இதுவே தெருக்கூத்தின் தனி இயல்பு ஆகும். இடையிடையே கலைஞர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காகவும் அவையினரை மகிழ்விப்பதற்காகவும் கோமாளி அரங்கில் வந்து நகைச்சுவையான<noinclude></noinclude> qeiiykylgo625snnmm4v8n1b0kwt88q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/348 250 627419 1957554 1884361 2026-08-07T13:49:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக்‌ கிராமிய நடனங்கள்‌|324|இந்தியக்‌ கிராமிய நடனங்கள்‌}}</noinclude>பாடலைப் பாடியும் ஆடியும் உரையாடலை நிகழ்த்தியும் சிரிப்பை உண்டாக்குகிறான். கதை இயல்பிற்கு ஏற்ப நாடகமாந்தர் ஒப்பனை செய்து கொள்கின்றனர். ஒப்பனைப்பொருள் அரிதாரம் என்னும் வண்ணப்பொடியாகும். தீயவர்களுக்கு முகத்தில் சிவந்த நிறமும் வீமன் வேடத்திற்கு நீலமும் கறுப்பும் கலந்த நிறமும் கண்ணனுக்கு நீலம் அல்லது பச்சை நிறமும் பூசப்படுகின்றன. வண்ணக் காகிதம், சரிகைத்துணி ஆகியவற்றாலான மகுடம் அணிகலன்கள் யாவும் பளிச்சிடுகின்றன. உடைகளும் அவ்வாறே சரிகைத் துணியால் தைக்கப்பட்டுப் பளிச்சிடுகின்றன. வெல்வெட்டுத்துணியையும் சரிகை வேலைப்பாடு நிறைந்த குட்டையான பாவாடையையும் கால்சட்டையையும் அணிகின்றனர். நரசிம்ம அவதாரம் போன்ற வேடங்களில் நடிகர்கள் முகமூடி அணிகின்றனர். தெருக்கூத்தும் பாடல்களில் சில கர்நாடக இராகப் பாடல்களும் கலந்திருக்கின்றன. நாட்டை, தேவகாந்தாரி, செஞ்சுருட்டி, சகானா போன்ற இராகங்களைத் தெருக்கூத்துப் பாடல்களில் கேட்கலாம். கலைஞர்கள் தத்தம் பாடல்களைத் தாமே பாடவேண்டும். பின்னணிப் பாடகரோ குரல் கொடுப்பவரோ இல்லை. இசைக்குழுவினர் அரங்கத்தினுள் ஓர் இருக்கையின் மீது அமர்ந்திருப்பர். கதையில் முக்கியமான கட்டங்களில் வெடிகளை வெடித்தும் கந்தகத்தை ஒரு தட்டில் வைத்து அதை நெருப்புடன் ஊதியும் அவையினரிடையே அச்சம் உண்டாக்குவர். அண்மையில் தமிழக அரசு தெருக்கூத்துப் பற்றிக் கணக்கெடுப்புச் செய்தது. அக்கணக்கெடுப்பால் தெருக்கூத்துக் கலைஞர்கள் தம் மரபுத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களை நாடிச் சென்று விட்டனர் என்பது தெரிய வந்தது. தமிழக அரசின் சங்கீத நாடகமன்றம் 1961-ஆம் ஆண்டு முதல் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. வடார்க்காடு மாவட்டத்தில் புரிசை என்னும் ஊரைச்சேர்ந்த இராகவன் தம்பிரான், நடேசத் தம்பிரான், இராசா தம்பிரான் ஆகியோர் சிறந்த தெருக்கூத்துக் கலைஞர்களாவர். துள்ளல் என்பது கேரள நாட்டுக் கிராமிய நடனங்களுள் ஒன்றாகும். சாக்கைக் கூத்து என்னும், பண்டைத் தமிழகத்து ஆடல் வகையினின்று தோன்றியதே கேரளத்துச் சாக்கியார் கூத்து ஆகும். சாக்கியார் கூத்து சில மாறுதல்களுக்கு உட்பட்டுக் கிராமிய நடனமாகச் சிற்றூர் மக்களுக்கு ஏற்ப எளிமையான உருவில் துள்ளல் என்னும் பெயரில் ஆடப்படுகிறது. கேரளத்தில் மூன்று வகைகளான துள்ளல் நடனங்கள் உள்ளன. ஓட்டந்துள்ளல் நகைச்சுவை பொருந்திய பாடல்களுக்கு ஏற்ப விரைவாக ஆடப்படும் கிராமிய நடனமாகும். துள்ளல் கலைஞரின் முகம் பச்சை நிறத்தில் ஒப்பனை செய்யப்பட்டிருக்கும். அவர் தலையில் பெரிய மகுடமும் உடலில் பளபளக்கும் குட்டையான சட்டையும் கால்களில் பெரிய சலங்கைகளும் சுருக்கம் மிகுதியாக வைத்துத் தைக்கப்பட்ட குட்டைப் பாவாடையும் அணிந்திருப்பார். ஓட்டந்துள்ளலில் முழவு, சாலரா ஆகியவை தாளக் கருவிகளாக இடம் பெறும். கதைப்பகுதிக்கு ஏற்றவாறு பாடலும் அதற்கேற்ப நடனமும் அமைந்துள்ளன. ‘சீதங்கன் துள்ளல்’ என்னும் வகையிலான நடனத்தில் நடனக்கலைஞருக்கு, ஓட்டந்துள்ளல் கலைஞர்களைப்போல் பளிச்சிடும் ஒப்பனை செய்யப்படுவதில்லை. இவர் தென்னைக் குருத்தோலையினாலான மகுடம் அணிகிறார். குருத்தோலையால் செய்யப்படும் குட்டைப் பாவாடையும் அணிகிறார். நடனமும் ஓட்டந்துள்ளலைப்போல் விரைவாக இருப்பதில்லை. ‘பறயந்துள்ளல்’ என்பது மென்மையான நடனத்தைக் கொண்ட கிராமியக் கலையாகும். இதில் அபிநயங்களும் இடம் பெறுகின்றன. கலைஞர் தலையில் அலங்கார மகுடமும் இடையில் சிவப்புத்துணியும் அணிகிறார். கரித்தூளை உடல் முழுவதும் பூசி ஒப்பனை செய்கின்றார். துள்ளல் நடனத்தைத் தனிக்கலையாக அமைத்தவர் கேரளநாட்டுக் கலைஞரான குஞ்சன் நம்பியார் என்பவராவார். இவர் இளமையில் கோவில்களில் சாக்கியார் கூத்து என்னும் இசை நடனத்திற்கு முழவு இசைத்துக்கொண்டிருந்தார். இவர் திருவாங்கூர் மன்னரின் ஆதரவில் ஓட்டந்துள்ளலை ஒரு கிராமிய நடனக்கலையாக அமைத்தார், துள்ளல் கேரளத்தின் அழகிய கிராமிய நடனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. பண்டைத் தமிழ் நாட்டில் பொம்மலாட்டம் என்னும் நடன நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன. இவை தோற்பாவைக் கூத்து என வழங்கப்பட்டு வந்தன. இக்காலத்தில் தமிழ்நாட்டுப் பொம்மலாட்டக் குழுவினர் அரிச்சந்திரன் நாடகம், சீதா கலியாணம், பிரகலாதன் போன்ற நாடகங்களை நடத்துகின்றனர். பொம்மலாட்டத்தில் பரதநாட்டியத்தின் சில கூறுகள் அமைந்துள்ளன. பொம்மலாட்டத்தில் மரம், தோல், துணி ஆகியவற்றினால் செய்யப்பட்ட பொம்மைகள், நிறப் பூச்சு, உடையலங்காரம் ஆகியவை செய்யப்பட்டுக் கதைப்பாத்திரங்களாகத் தோற்றமளிக்கின்றன. திரையின் பின் நின்று இந்தப் பொம்மைகளைக் கறுப்புக் கயிறு-<noinclude></noinclude> 6z4mi8k7s37pl0njm62edcttrdy8k0k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/349 250 627424 1957556 1884366 2026-08-07T13:53:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கிராமிய நடனங்கள்|325|இந்தியக் கிராமிய நடனங்கள்}}</noinclude>களால் பிணைத்து, அசைத்துக் கதைக்கு ஏற்ப நடனம் ஆட அல்லது நடிக்க வைக்கின்றனர். இவ்வாறு ஆட்டுவிப்பதற்குத் தனிப்பட்ட திறமையும் பயிற்சியும் வேண்டும். பொம்மலாட்டத்தின் பாடல்கள் கருநாடக இசையில் அமைந்துள்ளன. பொம்மலாட்டம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. இக்கலை கி.மு. 300-இல் கிரேக்க நாட்டில் விளங்கி வந்ததாகத் தெரிகிறது. ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இக்கலை சிறந்திருந்தது. அக்பரின் அரசவையில் பொம்மலாட்டம் நிகழ்த்தப்பட்டது. வட இந்தியப் பொம்மலாட்டதில் பெரும்பாலும் வரலாற்றுக் கதைகள் இடம் பெறுகின்றன. கருநாடக மாநிலத்தில் பண்டைக் காலத்திலிருந்தே இயட்ச கான நடனத்தையொட்டிப் பொம்மலாட்டா என்னும் நிகழ்ச்கியும் நடத்தப்பட்டு வந்தது. பொய்க்கால் குதிரையாட்டம் என்பது தமிழ் நாட்டுக்கே உரிய கிராமிய நடனமாகும். இது புரவியாட்டம் எனவும் கூறப்படும். இந்த நடனத்தில் குதிரையின் கால்கள் தவிர மற்ற உறுப்புகள் மரம், காகிதம் போன்ற பொருள்களினால் செய்யப்படுகின்றன. இந்தக் குதிரைகள் வண்ணம் பூசப்பெற்று முதுகில் மட்டும் ஒரு பெரிய துளை அமைக்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில் நடனக் கலைஞர் நின்று நடனமாடுவர். நடனக்கலைஞர்களின் இடுப்புக்கு மேற்பட்ட பகுதி மட்டுமே வெளியில் தெரியும். குதிரையின் வயிற்றுப் பகுதியிலிருந்து கீழே வண்ணத்துணிகள் சுற்றிக் கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருக்கும். இதனால் நடனக் கலைஞரின் கால்கள் அவையினருக்குத் தெரிவதில்லை. இக்காலத்தில் பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு நாதசுரம், முழவு போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. இந்த நடனக் கலை தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. கரகம் என்னும் கிராமிய நடனம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இறைவழிபாட்டுடன் தொடர்புடைய நடனமாக ஆடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் கரக நடனக் கலைஞர்கள் மண்ணாலாகிய பானைகளைத் தம் தலை மீது வைத்து நடனமாடுகின்றனர். இந்தப் பானைகளில் நீர் நிறைந்திருக்கும். குடம் வேப்பிலைகள் செருகப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திருவிழா நடக்கும் காலங்களில் இக்குடத்தைத் தலை மீது வைத்து ஆடுவர். கருநாடக மாநிலத்தில் உலோகத்தாலான கரகங்களைத் தலைமீது வைத்துக்கொண்டு ஆடுகின்றனர். பெரும்பாலும் ஐயனார், மாரியம்மன், கங்கையம்மன் போன்ற கிராமத்தேவதைகளின் விழாக்களில் கரகம் எடுத்து ஆடுகின்றனர். கரக நடனத்திற்கு நாதசுரம். தவுல், முழவு, சாலரா, போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. இதனை நையாண்டிமேளம் என்று குறிப்பிடுவர். கரகம் என்னும் சொல் கமண்டலம் அல்லது இறைவழிபாட்டிற்காக எடுக்கப்படும் பூங்குடம் என்னும் பொருள்படும், தொற்றுநோய்கள் வராமலிருப்பதற்காகவும் மழைபெய்வதற்காகவும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகவும் கரக ஆட்டம் நடைபெறுகிறது. கரக ஆட்டத்தினைப் போன்ற மற்றொரு இறை வழிபாட்டு நடனம் காவடி என்று குறிப்பிடப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்டு மயில் பீலிகளால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளைத் தம் தோள்கள் மீது சுமந்து ஆடுவர். காவடியாட்டத்திற்கு நாதசுரம், மேளம், சாலரா ஆகிய இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. காவடியாட்டத்திற்கென இயற்றப்பட்ட இசைப் பாடல்கள் காவடிச் சிந்து என்னும் யாப்பு வகையினைச் சேர்ந்தனவாகும். முருகனை வழிபடும் முறையாகக் காவடியாட்டம் நடைபெறுகிறது. வேண்டுதல்களை நிறைவேற்றும் பொழுதும் காவடி எடுக்கின்றனர். குசராத்து மாநிலத்தில் கரூபா, கரிகி, இராசம், இரசதம், திப்பினி, பதார் நிருத்தியம், தங்கி நிருத்தியம் போன்ற கிராமிய நடனங்கள் ஆடப்படுகின்றன. பெரும்பாலான கிராமிய நடனங்களில் நடனக்கலைஞர்கள் வட்டமாக நின்று ஆடுகின்றனர். இராசம், இராசகம் போன்ற நடனங்களை ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுகின்றனர். பெண்கள் ஆடும் நடனங்களில் கோலாட்டம் பயன்படுத்தப்படுகிறது. பிருந்தாவனத்தில் கண்ணன் கோபிகைகளுடன் ஆடிய இராச நடனமும் ஆடப்படுகிறது. இம்முறையில் ஆடப்படும் நடனம் கட்சு, சௌராட்டிரம் ஆசிய இடங்களில் மிகுதியாக ஆடப்படுகிறது. பண்டைக் காலத்தில் குசராத்துக் கிராமிய நடனங்களில் சிவனை வழிபடும் பாடல்கள் அமைந்திருந்தன. செயதேவர் கீதகோவிந்தத்தை இயற்றிய காலத்திற்குப் பின்னர், விட்டுணு வழிபாட்டுப் பாடல்களும் கிருட்டிணன் வாழ்க்கைக் கதைகளும் நடனங்களில் இடம் பெற்றன. இராச நடனங்கள் உழவர்களின் நடனமாகச் சரத்து முழுநிலவு நாள், வசந்த பஞ்சமி, நவராத்திரி ஆகிய காலங்களில் ஆடப்படுகின்றன. கரூபா என்னும் நடனத்தில் பெண்கள் பங்கு கொள்கின்றனர். இந்த நடனத்தில் சிறு துளைகள் இடப்பட்ட ஒரு குடத்தினுள் விளக்கு வைக்கப்பட்டிருக்கும். இக்குடத்தைத் தன் தலைமீது வைத்துக் கொண்டு ஒரு பெண் நடுவில் நின்று ஆடுவாள். இவளைச் சுற்றி நடனக் கலைஞர்கள் வண்ண உடையணிந்து ஆடுவர். இந்த நடனம் நவராத்திரி விழா-<noinclude></noinclude> s1ysnzxm9crc8gieffz9zpphq014mft பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/350 250 627427 1957557 1884370 2026-08-07T13:57:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கிராமிய நடனங்கள்|326|இந்தியக் கிராமிய நடனங்கள்}}</noinclude>வினையொட்டி நடைபெறுகிறது. தயாராமர், பிரேமானந்தர் போன்ற இசைப்புலவர்களின் பாடல்கள் இதில் பாடப்படுகின்றன. நடனம் இரவில் தொடங்கப்பட்டு நீண்ட நேரம்வரையில் நடைபெறுகிறது. குழல், முழவு போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. தங்கி (Dangi) நடனத்தில் ஆண்களும் பெண்களும் கைகோத்து ஆடுகின்றனர். இந்த நடனத்தில் நடனமாடுவோருள் சிலர் தம் தோள்கள் மீது மற்றவர் நின்று கோபுரம் போன்ற அமைப்பை ஏற்படுத்துவர். கோண்டு (Gond) எனப்படும் பழங்குடியினரும் இத்தகைய விரைவு நடனங்களை ஆடுகின்றனர். சைலா, இரினா போன்ற நடனங்களில் ஆண்களும் பெண்களும் தனித்தனியே நடனம் ஆடிக் கோபுரங்களை அமைக்கின்றனர். பசுதர் (Bastar) என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ‘கசுகர்’ என்னும் அறுவடை நடனமாடுகின்றனர். இதில் இனம் பெண்களும் ஆண்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். ஆண்கள் நீண்ட வெண்ணிற அங்கியை அணிகின்றனர். இந்த நடனத்தில் இளம் பெண்களும் ஆண்களும் சந்தித்துத் தமக்கு ஏற்ற துணைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இதன்பின் அவர்களின் திருமணம் நடைபெறுகிறது. இராசசுத்தானத்தில் கெர், கெருர் ஆகிய நடனங்கள் பில்லர்களால் ஆடப்படுகின்றன. ஆண்களும் பெண்களும் பங்குகொள்ளும் இரைகாசோரியா போன்ற நடனங்கள் விழாக்காலங்களில் நடைபெறுகின்றன. கௌரி எனப்படும் வழிபாட்டு நடனமும் பில்லர்களால் ஆடப்படுகிறது. மினா, கரசியர், கமர் போன்ற பழங்குடியினர் பல்வேறு வகையான நடனங்களை ஆடுகின்றனர். நடனம் ஆடுபவர்கள் மடிப்புகள் நிறைந்த பெரிய ‘காக்ரா’ எனப்படும் பாவாடையும் நீண்ட கை வைத்துத் தைத்த இரவிக்கையும் வண்ண மேலாடையும் அணிகின்றனர் பொன் அணிகலன்களும் வெள்ளியாலான அணிகலன்களும் அணிகின்றனர். போதுலா எனப்படும் நெற்றிச்சுட்டியை நடனம் ஆடுபவர்களும் மற்ற எல்லாப் பெண்களும் அணிகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள பழங்குடியினரின் நடனங்கள் புகழ் பெற்று விளங்குகின்றன. நீண்ட கம்புகளின் மீது ஏறி நின்று ஆடும் குச்சி நடனம் சிறுவர்களால் ஆடப்படுகிறது. வாள், ஈட்டி, கத்தி போன்ற படைக்கலன்களுடன் ஆடப்படும் சைலா எனப்படும் நடனம் இங்குப் புகழ் பெற்றதாகும். இந்த நடனம் ஓலிப்பண்டிகையின் (Holi) போது ஆடப்படுகிறது. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு ஒரு நடனக்குழுவினர் சென்றதும் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரால் வரவேற்கப்பட்டு அவர்கள் விருந்தாளிகளாக நடத்தப்படுகின்றனர். இந்த நடனக்குழுவினர் கிருதா என்னும் குழு நடனத்தை ஆடுகின்றனர். இதுவும் ஒரு விரைவு நடனமாகும். இத்தகைய நடனக்குழுவினர் பல ஊர்களில் இருக்கின்றனர். இந்த நடனத்தில் ஆண்களும் பெண்களும் பங்கு கொள்கின்றனர். வங்கத்துக் கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் இளம் பெண்கள் மாலை நேரங்களில் ‘தூசு பரபு’ (Tusu Parab) எனப்படும் பாடல்களைப் பாடுகின்றனர். தைத்திருநாள் இங்கு மகர சங்கராந்தி என்று குறிப்பிடப்படுகிறது. அந்த நாளன்று பெண்கள் நீராடிப் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். இத்தகைய வழிபாடுகள் ஆற்றங்கரையில் நடைபெறுகின்றன. ஆண்கள் ‘பதூரிய சைலா’ எனப்படும் பாடல்களைப் பாடி ஆடுகின்றனர். அறுவடைக் காலங்களில் பாதுரா போன்ற நடனங்கள் ஆடப்படுகின்றன. வேனிற்காலத்தில் சூமர் (Jhumar) என்னும் நடனம் ஆடப்படுகிறது. சூமர் நடனம் மேற்கு வங்காளத்தில் புகழ்பெற்ற கிராமிய நடனமாகும். இதற்கான பாடல்கள் கண்ணன் இராதையின் கதைகளின் அடிப்படையில் பக்திச் சுவை நிரம்பியனவாக இருக்கும். மணிபுரியில் ‘இலை கரோபா’ என்னும் திருவிழா நடனமும் இரத யாத்திரை நடனமும் புகழ்பெற்றவை. இவை பிருந்தாவனத்தில் கண்ணன் கோபிகைகளுடன் ஆடிய நடனத்தையொட்டிய இராசலீலை என்னும் நடனங்களாக அமைந்துள்ளன. இந்த இராசலீலை நடனங்கள் அழகும் மென்மையும் கொண்டு காண்போரை ஈர்ப்பனவாக உள்ளன. இத்தகைய நடனங்கள் தேசிய நிகழ்ச்சிகளில் சிலவேளைகளில் நிகழ்த்தப்படுகின்றன. விரைவும் விறுவிறுப்பும் மிக்க ‘பாங்கரா’ நடனம் பஞ்சாபின் புகழ்பெற்ற கிராமிய நடனமாகும். இந்த நடனம் பெரும்பாலும் ஆண்களால் ஆடப்படுகிறது. பாங்கரா பெரும் குழுவினரால் ஆடப்படுகிறது. இது உழவர்களால் ஆடப்படும் அறுவடை நடனமாகும். இந்த நடனப் பாடலில் பலே பலே, ஓய் ஓய், ஊ ஊ போன்ற ஒலிச்சொற்கள் நிறைந்திருக்கும். பாங்கரா நடனம் ஆடுபவர் வண்ண வேட்டியும் தீண்ட அங்கியும் அதன்மீது இடுப்புச் சட்டையும் பலவண்ணங்களில் அமைந்த தலைப்பாகையும் அணிகின்றனர், தோலக்கு எனப்படும் தாளக்கருவியும் சஞ்சு எனப்படும் சாலராவும் மட்டுமே இந்த நடனத்தின்போது இசைக்கப்படும் இசைக் கருவிகளாகும். பாங்கரா வைத்தவி, சுமேர் கர்த்தி, கித்தா ஆகிய கிராமிய நடனங்களும் பஞ்சாபில் ஆடப்படுகின்றன. கித்தா என்னும் நடனம் ஆண்களும் பெண்களும் கைகோத்து ஆடப்படு-<noinclude></noinclude> nmuqned8nbwvc2ct872ttl1u1okd4z8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/351 250 627561 1957586 1955187 2026-08-08T03:31:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு|327|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு}}</noinclude>வதாகும். இந்த நடனத்தின் இறுதியில் ஆண்களும் பெண்களும் இருவர் இருவராக எதிர் எதிராகக் கைகோத்து ஆடுகின்றனர். இது ‘கிகலி’ என்று வழங்கப்படுகிறது. இத்தகைய கிகலி நடனமுறை வட இந்தியாவின் பல்வேறு கிராமிய நடனங்களில் காணப்படுகிறது. அரியானாவில் தமல், கோரியா, பாகு, கூகா, சூமர் போன்ற கிராமிய நடனங்கள் ஆடப்படுகின்றன. கோரியா என்னும் நடனம் திருமணக் காலத்தில் கிராமியப் பெண்களால் ஆடப்படுகிறது. வட இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் பங்குனி மாதத் தொடக்கத்தில் ஒலிப் பண்டிகையையொட்டிய பல்வேறு களிப்பு மிக்க நடனங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய ஒலி நடனங்களில் ஆண்களும் பெண்களும் சிறுவரும் எல்லா வயதினரும் வேறுபாடின்றி வண்ணப்பொடிகளைத் தூவியும் வண்ண நீரை ஒருவர் மீது மற்றவர் தெளித்தும் ஆடுகின்றனர். ஒலிப்பண்டிகை நடனம் வசந்தத்தின் வருகையைக் கொண்டாடும் முறையிலும் இராசலீலை முறையிலும் அமைந்துள்ளது. {{right|எஸ்.கோ.}} <b>துணை நூல்: ::Subhedar, S.</b>, The Critque of Indian Theatre, Unique Publication, New Delhi, 1981. <section end="இந்தியக் கிராமிய நடனங்கள்"/> <section begin="இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு"/> {{dhr}} <b>இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு:</b> அனைத்துலக இசுலாமிய சமயத் தலைவர் துருக்கிச் கல்தானின் உரிமைகளைக் காக்க, இந்திய இசுலாமியர்களைக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தொடங்கிய இயக்கமே கிலாபத்து இயக்கம் (Khilafat Movement). இது ஓர் இசுலாமிய இயக்கமானபோதிலும், மற்றச் சமூகத்தினரும் தங்கள் நல்லாதரவை நல்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இவ்வியக்கத்தில் ஈடுபட்டனர். முதல் உலகப் போரின் போது (1914-18) இந்திய அரசப் பேராளரும் (Viceroy), இங்கிலாந்து நாட்டுத் தலைமை அமைச்சர் இலாயிடு சார்சும் (Lloyd George) இந்திய இசுலாமிய மக்களைப் போரில் ஈடுபடச் செய்யக் கீழ்க்கண்ட வாக்குறுதிகளைக் கொடுத்தனர். முதலாவதாக, துருக்கி சுல்தான் துருக்கி, திரேசு, மெசபடோமியா, அரேபியா, சிரியா, பாலசுத்தீனம் (Palestine) ஆகிய பகுதிகளின் சமயத் தலைவராக இருப்பார். இரண்டாவதாக, அவரே கலீபாகவும் (Caliph) இருப்பார். அவரின் கிலாபத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் தெளிவாகக் கூறினர். இதனால் இந்திய இசுலாமியர் ஆங்கிலேயரின் உறுதிமொழிகளை நம்பி, தங்கள் இனமக்கள் வாழும் துருக்கிக்கு எதிராகப் போரில் ஈடுபட்டனர். போர் முடிந்தபின் ஆங்கிலேயர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டனர். துருக்கிய நாட்டின் ஆசியப் பகுதிகளைப் பிரிட்டனும் (Britain) பிரான்சும் (France) பங்கு போட்டுக் கொண்டன. இதனால் ஆத்திரமடைந்த இந்திய இசுலாமியர் இவ்வியக்கத்தை வேகப்படுத்தினர். மவுலானா ஆசாது (Maulana Azad), அக்கிம் அச்மல்கான் (Hakeem Ajmalkhan), அசரத் மோகானி (Hasarad Mohani) ஆகியோரின் தலைமையில் 1919-ஆம் ஆண்டு இறுதியில் கிலாபத்துக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் லல்லாட்சியை விரட்டிச் சமயச் சார்பற்ற இந்தியாவை உருவாக்கப் பாடுபட்ட மகாத்மா காந்தி இவ்வியக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். அனைத்து இன மக்களையும் முழு மனத்துடன் தங்கள் ஆதரவை இவ்வியக்கத்திற்கு நல்கும்படி அவர் வேண்டிக் கொண்டார். காந்தியடிகள் கிலாபத்துத் தலைவராக 1919-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். <b>கிலாபத்துத் தூதுக்குழு (Khilafat Deputatiom)</b>: இவ்வியக்கம் தீவிரமடையவே, 1919-ஆம் ஆண்டு திசம்பர் மாத இறுதியில் அமிர்தசரசில் (Amritsar) கிலாபத்துக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில், ஒரு கிலாபத்துத் தூதுக் குழு இந்திய அரசப்பேராளர் செம்சுபோர்டைச் (Lord Chelmsford) சந்தித்துத், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அவரிடம் கொடுக்க முடிவு செய்தது. அதன்படி இசுலாமியர்களும், இந்துக்களும் அடங்கிய ஒரு தூதுக்குழு டாக்டர் அன்சாரி (Dr. Ansari) என்பாரின் தலைமையில் 1920-ஆம் ஆண்டு சனவரி மாதம் பத்தொன்பதாம் நாள் அரசப் பேராளரைச் சந்தித்தது. அவர்கள் அரசப் பேராளரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் இசுலாமியர்களைத் தவிர மகாத்மா காந்தி, பண்டித மோதிலால் நேரு, மதன் மோகன் மாளவியா போன்ற இந்துத் தலைவர்களும் கையெழுத்திட்டிருந்தனர். துருக்கிய கிலாபத்திற்கு எவ்விதக் கெடுதியும் ஏற்படாது என்று போரின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி வேண்டினர். அதற்கு அரசப் பேராளர் இசுலாமியர்கள் மீது இரக்கப்படுவதாகவும், அதே தேரத்தில் இக்குழு வலியுறுத்துமளவிற்குத் துருக்கிச் சுல்தானுக்குச் சிறப்புக் கொடுக்க முடியாது என்றும் கூறிவிட்டார்.{{nop}}<noinclude></noinclude> qhtxm8m9ae9o5lsz2ks5w6xfzueuje0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/352 250 627562 1957587 1955188 2026-08-08T03:46:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு|328|இந்தியக் கிளர்ச்சி}}</noinclude>இதனால் 1920-இல் பம்பாயில் நடந்த கிலாபத்துக் கூட்டத்தில் மற்றொரு தூதுக்குழுவை இங்கிலாந்திற்கு அனுப்ப முடிவு செய்தனர், இதன் விளைவாக, 1920-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மௌலான முகமது அலி (Maulana Mohammad Ali) என்பாரின் தலைமையில் ஒரு கிலாபத்துத் தூதுக்குழு இங்லாந்திற்குச் சென்றது. அங்கு இக்குழுவை இந்திய அமைச்சர் (Secretary of State for India) பிசர் (Fisher) வரவேற்றார். இக்குழு தலைமை அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் இக்குழு தங்கள் கோரிக்கைகளைத் தலைமை அவை (Supreme Council) என்னும் குழுவின் முன்வைக்க அனுமதி கேட்டபோது, முற்றிலுமாக மறுக்கப்பட்டது. மேலும், தலைமை அமைச்சரும் மன நிறைவான மறுமொழி கொடுக்கவில்லை. கொள்கைகளைப் பொறுத்தமட்டில், தோல்வியுற்ற கிறித்தவ நாடுகளை நடத்தும் முறையில்தான் துருக்கியையும் நடத்த முடியுமென்று முடிவாகக் கூறிவிட்டார், கிலாபத்துத் தூதுக்குழுவின் பரிந்துரையான, துருக்கிச் சுல்தான்கள் அனைத்துலகச் சமயக் குருவாக இருக்கவேண்டும்; ஏனைய ஆசியப் பகுதிகள் அவர் தம் ஆதிக்கத்திற்குள் இருக்க வேண்டுமென்ற கோரிக்கை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. துருக்கிய நிலப்பரப்பைப் பொறுத்தவரை சுல்தான்கள் அந்நாட்டின் தலைவர். மற்றப் பகுதிகளுக்கும்-குறிப்பாக ஆசியப் பகுதிகளுக்கும், அவருக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்று தெள்ளத் தெளிவாக அந்நாட்டுத் தலைமை அமைச்சர் கூறிவிட்டார். இவ்வறிக்கை இசுலாமியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. சவுகத் அலி (Sauhat Ali), அரசு உறுதியாக இக்கொள்கையை விடாமலிருந்தால் இசுலாமியர்கள் ஆங்கிலேயர்களுடன் கொண்டுள்ள நட்புறவு துண்டிக்கப்படுமென்று எச்சரித்தும் பலனில்லை. இவ்வியக்கத்தால் இசுவாமிய-இந்துக்களின் ஒற்றுமை இரண்டாண்டுகள் வரை செம்மையாக இருந்தபோதிலும், இரண்டாண்டுகள் கழிந்த பின்னர் அவர்களிடையே வேற்றுமை மிகுதியாகி, தனிநாடே தங்கள் கோரிக்கை என்று முசுலிம் லீகு வலியுறுத்த, அதன் விளைவாக 1947-ஆம் ஆண்டு இந்தியா-பாகிசுத்தான் பிரிந்ததை வரலாறு காட்டும். {{right|சி.சி.}} <b>துணை நூல்: Majumdar,R.C</b>. (Ed), The Struggle for Freedom, History and Culture of the Indian People, Vol IX. Bharatiya Vidya Bhavan, Bombay, 1969. <section end="இந்தியக் கிலாபத்துத் தூதுக்குழு"/>> <section begin="இந்தியக் கிளர்ச்சி"/> {{dhr}} <b>இந்தியக் கிளர்ச்சி (கி.பி. 1857-59):</b> ஆங்கிலேய வணிகக் குழுவின் ஆதிக்கம் இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விரைவாகவும் விரிவாகவும் பெருகலாயிற்று. அவர்கள் மேற்கொண்ட அரசியல், சமூக, நிருவாகச் சீர்திருத்தங்களினால் இந்தியரின் வாழ்வு குழப்பத்திற்கிடமாக அமைந்தது. ஆங்காங்கு இந்தியர்களின் எதிர்ப்புகள் தோன்றியபோதிலும், அவை ஆங்கிலேயரால் அடக்கப்பட்டன. கலகங்கள் கி.பி. 1806-ஆம் ஆண்டில் வேலூரிலும் 1816-இல் பரேலியிலும் 1831-இல் சோடா நாகபுரி, பலாமு, பராசட்டுப் போன்ற இடங்களிலும் தோன்றின. பின்னர், 1849, 1851, 1852, 1855 ஆகிய ஆண்டுகளில் மாப்பிள்ளைமார் கலகங்கள் நிகழ்ந்தன. அவையனைத்தும் உடனுக்குடன் நசுக்கப்பட்டன. ஆனால், கி.பி. 1857-59-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலகம் ஏறக்குறைய வடஇந்தியா முழுமையும் நடைபெற்ற ஆங்கிலப்பேரரசின் மேலாதிக்க அடித்தளத்தினை ஆட்டம் காணவைத்தது. <b>கிளர்ச்சியின் தன்மை:</b> இது தன்னலங் கருதி ஆங்காங்கு நடைபெற்ற எதிர்ப்பு இயக்கமாகும். மேலும், இது எதிரிகளின் ஆற்றலைக் குறைவாக மதிப்பிட்டும் தங்கள் படைபலத்தை உயர்வாக எண்ணிக் கொண்டும் நிகழ்த்திய கிளர்ச்சியாகும். இந்தியர்களிடம் இருந்த ஒற்றுமையின்மை, உயர்ந்த குறிக்கோளின்மை, ஆங்கிலேயரின் அன்றைய போர்த்திறம், அண்மைக் காலச் செய்தித் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்புக் கருவிகள் ஆகியன ஆங்கிலேயரின் வெற்றிக்குப் பெருந்துணை புரிந்தன. இக்கலகம் ‘சிப்பாய்க் கலகம்’ என்றும் சொல்லப்பட்டது. சிப்பாய் என்ற சொல் ஓர் ஆங்கிலோ - இந்தியச் சொல் ஆகும். அது இந்தியப் படைவீரரைக் குறிக்கப் பயன்பட்டது, படையில் மிக உயர்வான பதவியில் அமர்த்தப்பட்ட இந்தியர்கள், சாதாரண பயிற்சி பெறும் எளிய ஆங்கிலச் சிப்பாய் வாங்கும் ஊதியத்திற்கும் குறைவாகவே பெற்றனர். பதவி உயர்வு இந்தியர்களுக்கு மிகுதியாகக் கொடுக்கப்படவில்லை. படைப் பிரிவுகளுக்கு ஆங்கிலேயர் பலர் தலைவர்களாக நியமிக்கப்பட்டபோதிலும், அவர்களுள் மிகச் சிலரே சிறந்த போர் வீரர்களாகத் திகழ்ந்தனர். இங்கிலாந்து மிகத் தொலைவில் இருந்ததாலும், அங்கிருந்து படை வீரர்களை இந்தியாவுக்கு அனுப்ப மிகுதியாகச் செலவுசெய்ய வேண்டி இருந்ததாலும், பொருளாதாரம் அரசியல் சமூகக் காரணங்களினாலும் இந்தியர் பலரைப் போர் வீரராக வைத்திருந்தனர். இந்தியர்களுள் பெரும்பாலோர் இந்துக்களாகவும் சிறுபான்மையினர் முகமதியர்களாகவும் இருந்தனர். இந்துச் சிப்பாய்களுள் பலர் பிராமணர்களாக இருந்தமையால் வேத நெறி-<noinclude></noinclude> aq8uvndrxq9196kdzhhahwd4m0qu3gk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/353 250 627566 1957588 1884696 2026-08-08T03:51:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கிளர்ச்சி|329|இந்தியக் கிளர்ச்சி}}</noinclude>ளைத் தம் குறிக்கோள்களாகக் கொண்டிருந்ததோடு மூடநம்பிக்கைகள் உடையவர்களாகவும் இருந்தனர். ஆயினும், இவர்கள் அனைவரும் வலிமை மிக்கவர்களாகவும் பேராற்றல் உடையவர்களாகவும் உண்மையுடன் நடந்து கொள்பவர்களாகவும் விளங்கினர். இவர்கள் தங்கள் சமயச் சடங்குகளிலும் மூடநம்பிக்கைகளிலும் அதிகப்பற்றுக் கொண்டிருந்தமையால் இராணுவக் கட்டுப்பாட்டினையும் மீறிப் படைத் தலைவர்களை எதிர்க்கத் துணிந்தனர். <b>கிளர்ச்சிக்கான காரணங்கள்: அரசியல்:</b> சதாரா அரசர் இறந்தவுடன் அவருக்கு நேரடி வாரிசு இன்மையால் ஆங்கிலேயர்கள் சதாராவைக் கி.பி. 1848-இல் தங்கள் பேரரசுடன் இணைத்துக் கொண்டனர். இதே காரணத்தால் கி.பி. 1853-இல் நாக்பூரையும் இணைத்தனர். தொடர்ந்து, அதே ஆண்டில் சான்சியையும் பீராரையும் கி.பி. 1856-இல் அயோத்தியையும் இணைத்துக் கொண்டனர். இந்து சமயக் கோட்பாடுகளின்படி அந்நாள்வரை நடைமுறையிலிருந்த தத்து எடுத்துக் கொள்ளும் வழக்கத்திற்குத் தடை விதித்து, ஆங்கிலப் பேரரசு அப்பகுதிகளை இணைத்துக் கொண்டது. இதனால் அப்பகுதிகளில் உள்ளோர் கலகக்காரர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டனர். <b>சமயம்:</b> ஆங்கிலேயர் மேற்கொண்ட சமூகச் சீர்திருத்தங்கள், இந்துக்களைக் கிறித்தவர்களாக்க ஆங்கிலேயர் செய்யும் சூழ்ச்சிகளாகுமென மக்கள் எண்ணினர். உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தல், விதவைக்கு மறுமணம் செய்வித்தல் ஆகியன சட்ட முறையில் ஆக்கப்பட்டன. படைவீரர்கள் கடல் கடந்து பிற நாடுகளுக்கும் சென்று போர் புரிய வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவை அனைத்தையும் இந்து சமயக் கோட்பாடுகளுக்கு எதிரான செயல்களாக இந்தியர் எண்ணினர். <b>புதிய துப்பாக்கி:</b> பழைய அதிக பளுவுள்ள துப்பாக்கியை நீக்கிவிட்டு, புதிய எளிதில் இயக்கக் கூடிய, செயல்திறம் மிக்க என்பீல்டு துப்பாக்கி கிரிமியன் போரில் பயன்படுத்தப்பட்டு நல்ல பலன்களைக் கொடுத்தது. அதனை இந்தியச் சிப்பாய்களுக்கும் கொடுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தத் துப்பாக்கியை இயக்கும்போது. கொழுப்பெண்ணையில் தோய்ந்த தோட்டாக்கள் உள்ள சிறிய உறைகளைப் பல்லால் கடித்துக் கிழித்துப் பின்னர்த் துப்பாக்கியுள் ஏற்ற வேண்டும். அந்த உறையில் உள்ள கொழுப்பு எண்ணெய் பசு, பன்றி ஆகியவற்றின் கொழுப்பில் இருந்து உருவாக்கப்பட்டது என்ற செய்தி படையினரிடையே பரவிற்று. பசுவைப் புனிதமாக மதிக்கும் பிராமணரும் பன்றியைக் கேடுகளின் சின்னமாகக் கருதும் முகமதியரும் புதிய துப்பாக்கியைப் பயன்படுத்துவதனால் பெரிய பாவ காரியத்தை வலிந்து செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தாங்கள் உட்படுத்தப்பட்டுள்ளோம் எனக் கருதினர். ஆங்கிலேயர் மறுத்த போதிலும் பசு, பன்றி ஆகியவற்றின் கொழுப்புப் பற்றிய செய்தி மிக வேகமாகப் படையினரிடையே பரவிற்று. இதனால், உயர் அதிகாரிகள் துப்பாக்கி ஏந்த ஆணைகள் பிறப்பித்த போதிலும், பல்லால் கிழித்து பின்னர்த் தோட்டாக்களை நிரப்பும் வழக்கத்தினைச் செய்ய மறுத்தனர். பெரம்பூர்ப் படைவீரர்கள் கி.பி. 1857-இல் தம் படைப் பிரிவு அதிகாரியின் கட்டளையை மீறித் துப்பாக்கியைப் பயன்படுத்த மறுத்ததால் கைது செய்யப்பட்டனர். அவ்வாறே கி.பி. 1857 மே மாதம் 9-ஆம் நாள் மீரட்டு நகரில் சிப்பாய்கள் கலகம் செய்து கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை பெற்றனர். அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இவை கலகக்காரர்களுக்கு முதலில் ஏற்பட்ட வெற்றியாகும். அவர்கள் தொடர்ந்து மீரட்டிலிருந்து தில்லியை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் ஆங்காங்கு உள்ள படைவீரர்களும் கலகக்காரர்களுடன் இணைந்து கொண்டனர். தில்லியை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டனர். ஆங்கிலேயர் சிலர் கொல்லப்பட்டனர். கலகக்காரர்கள் முகலாயப் பேரரசின் வாரிசான இரண்டாம் பகதூர்சாவை மீண்டும் அரசராக்கித் தில்லி அரியணையில் ஏற்றினர். கான்பூர் என்னுமிடத்தில் பீசுவாவின் வளர்ப்பு மகனான நானா சாகிபு என்பாரின் தலைமையில் கலகம் தோன்றியது. ஆங்கிலேயப் படைகள் தோல்வியுற்றன. ஆங்கிலச் சிப்பாய்களும் அவர்களின் மனைவியர்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இலக்னோநகரமும் கலகக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது. சர் என்றி இலாரன்சு என்பார் முற்றுகையின் போது கொல்லப்பட்டார். இதனால் சினமுற்ற ஆங்கிலேயர் இந்தியரை ஒடுக்கத் திட்டமிட்டனர். தங்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதனை உணர்ந்து அதனை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். அம்பாலா, மீரட்டு ஆகிய நகரங்களில் இருந்த ஆங்கிலேயப் படைகள் பஞ்சாபில் உள்ள சீக்கியப் படைகளுடன் இணைந்து தில்லியைத் தாக்கின. இதன் விளைவால் தில்லி மீண்டும் ஆங்கிலேயர் வசமாயிற்று. பகதூர்சா நாடுகடத்தப்பட்டார். அவர் மைந்தர்கள் கொல்லப்பட்டார்கள். முகலாய வமிசம் முடிவுற்றது.<noinclude> வா. க. 3-4</noinclude> j20kdkphlzrkuwdpynsvpw7tk0jzi8l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/354 250 627569 1957589 1954815 2026-08-08T03:57:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கிறித்தவத் திருமணச்சட்டம்|330|இந்தியக் கிறித்தவத் திருமணச்சட்டம்}}</noinclude>‘சர் என்றி எவ்லாக்கு’ என்பார் கான்பூரைக் கைப்பற்றினார். இலக்னோ நகரம் ‘இங்கிலிசு’ என்பரால் விடுவிக்கப்பட்டது. பிற இடங்களில் தோன்றிய சிறு கலகங்களும் அடக்கப்பட்டன. <b>கலகத்தின் விளைவு:</b> பகதூர் சாவுக்கு ஆதரவு தெரிவித்துப் பல இந்திய அரசர்கள் கிளர்ச்சியில் இறங்கிய போதிலும், ஆங்கிலேயருக்குத் தொடர்ந்து தம் ஆதரவை அளித்த இந்திய அரசர்கள் இருந்தமையால் கிளர்ச்சி தோல்வியில் முடிவுற்றது. ஆங்கிலேயரை எதிர்க்கும் எதிர்ப்புக் கொள்கையினைத் தேசிய அளவில் உயர்ந்த குறிக்கோளாகக் கொள்ளாததாலும் இக்கிளர்ச்சி தோல்வியுற்றது. அயோத்தி, உரோகில்கண்டு, பண்டேல்கண்டு, தோவாப் பகுதி (Doab), மத்தியபிரதேசம், பீகாரில் பெரும்பகுதி, கிழக்குப் பஞ்சாபு ஆகிய பகுதிகளில் உள்ள அரசர்கள், இராசசுத்தான், மகாராட்டிரம் போன்ற பகுதிகளில் உள்ள குறுநிலத் தலைவர்கள் பலரும் கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து கொண்டனர். நருமதை ஆற்றின் தெற்குப் பகுதியில் உள்ள அரசர்கள் கிளர்ச்சிக்காரர்களுடன் சேராமல் ஒதுங்கியிருந்தனர். மேற்கில் சிந்து மாகாணம் அமைதியாக இருந்தது. இராசபுதனத்து அரசர்கள் ஆங்கிலேயருடன் நட்புணர்வுடன் நடந்து கொண்டார்கள், மத்திய, கிழக்கு வங்காளம் கலகத்தினருடன் சேரவில்லை. நேபாளத்தில் உள்ள கூர்க்காக்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவாகத் திறமையாகப் போர் புரிந்தார்கள். பஞ்சாபு மாநிலமும் ஆங்கிலேயருக்கு ஆதரவாகக் கலகத்தினரை ஒடுக்கித் தில்லியைக் கைப்பற்ற உதவிற்று. இவற்றாலும் ஆங்கிலேயர் தம் வசமிருந்த மக்களாலும், செய்தித் தொடர்புக் கருவிகளாலும் இந்தியரின் கிளர்ச்சியினை எளிதாக அடக்க முடிந்தது. விக்டோரியாப்பேரரசியின் பேரரறிக்கை கி.பி. 1858-இல் வெளியிடப்பட்டது. ஆங்கிலப் பேரரசுடன் இந்திய அரசுப் பகுதிகள் இணைக்கப்படமாட்டா என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சி முடிவுக்கு வந்து, அரசியின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. வாரிசு உரிமை, தத்து எடுக்கும் உரிமை ஆகியன மீண்டும் வழங்கப்பட்டன. {{right|தி.வீ.}} <section end="இந்தியக் கிளர்ச்சி"/> <section begin="இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம்"/> {{dhr}} <b>இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம், 1872:</b> இச்சட்டம் கி.பி. 1872-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டம் 1-11-1956 - ஆம் நாள் வரை முன்பு திருவாங்கூர் -கொச்சி, மணிப்பூர், சம்முகாசுமீர் என வழங்கப்பட்டு வந்த மாநிலங்களைத் தவிர்த்து ஏனைய இந்தியா முழுவதும் செல்லத்தக்கது. இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம் (The Indian Christian Marriage Act, 1872) 1886, 1891, 1903, 1911, 1920, 1928, 1951, 1952, 1978-ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டுள்ளது. கிறித்தவ மதத்துக்கு மாறிய இந்தியர்களும் அவ்வாறு மதம் மாறியவர்களின் கிறித்தவ மரபு வழித் தோன்றல்களும் இந்தியக் கிறித்தவர்கள் என்று இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டப்படி திருமணம் செய்து கொள்வதற்கு மணமக்கள் இருவரும் கிறித்தவர்களாயிருக்க வேண்டும்; அல்லது ஒருவராவது கிறித்தவராயிருக்க வேண்டும். இந்தியாவில் இச்சட்டப்படி திருமணம் நடத்திவைப்பதற்குக் கீழ்க்காணும் ஐவருக்குத் தகுதியுள்ளது. (1) கிறித்தவத் திருச்சபை மாவட்டத்தால் ஆணையிடப்பட்டுள்ள மதகுரு. இவர் எந்தத் தேவாலயப் பிரிவைச் சேர்ந்தவராயுள்ளாரோ அந்தத் தேவாலயத்தின் விதிகள், சமயச் சடங்குகள், மரபியல் ஆகியவற்றிற்குட்பட்டுத் திருமணத்தை நடத்த வேண்டும். (2) இசுகாட்லாந்து தேவாலயத்தைச் சார்ந்த எந்த மதகுருவும் (Any Clergyman of the Church of Scotland) அந்தத் தேவாலயத்தின் விதிகள், சமயச் சடங்குகள், மரபியல் ஆகியவற்றின்படி திருமணம் நடத்தி வைக்கலாம். (3) மாநில அரசால் உரிமம் வழங்கப்பட்டுள்ள கிறித்தவ மதகுரு. (4) மாநில அரசு கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணப் பதிவாளராகப் பணியமர்த்தலாம். அவர் முன்னரோ அல்லது அவராலோ திருமணம் நடத்தி வைக்கப்படலாம். (5) இச்சட்டப்படி திருமணச் சான்றிதழ் வழங்குவதற்கு ஒரு கிறித்தவருக்கு மாநில அரசு உரிமம் வழங்கலாம். அவ்வாறு உரிமம் வழங்கப்பட்டவர் இரண்டு கிறித்தவர்களுக்கிடையே திருமணம் நடத்தி வைக்கலாம், மணமக்களுள் ஒருவர் மட்டும் கிறித்தவராயிருந்தால் இவர் திருமணம் நடத்தி வைக்க முடியாது. மேற்கூறிய ஐவருள் முதலிருவர் அவரவர் தேவாலய விதிமுறைகள், மதச் சடங்குகள், மரபியல் படி திருமணத்தை நடத்தவேண்டும். ஏனைய மூவரும் திருமணத்தை நடத்த வேண்டிய விதிமுறைகளைப் பற்றி இச்சட்டமே கூறியுள்ளது. <b>மாநில அரசால் உரிமம் வழங்கப்பட்டுள்ள மத குரு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:</b> திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுள் ஒருவர் தொடர்புடைய மதகுருவிடம் முறைப்படியான தகவலறிவிப்பு (Notice) கொடுக்க வேண்டும். அதில்<noinclude></noinclude> hkwpt3cq9f6i6y0faj9eq38zr60i90h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/355 250 627575 1957590 1884705 2026-08-08T04:01:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம்|331|இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம்}}</noinclude>திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களின் பெயர், குடியிருப்பு, திருமணம் நடக்கவிருக்கும் இடம் போன்ற தகவல்கள் அடங்கியிருக்க வேண்டும். திருமணம் நடக்கவிருக்கும் இடம் ஒரு தேவாலயமாக இருந்தால், அந்தத் தேவாலயத்தில் மேற்படி மதகுரு திருமணம் நடத்திவைக்க அதிகாரமிருந்தால், மேற்படி தகவலறிக்கையானது அந்தத் தேவாலயத்தில் முக்கியமான இடத்தில் ஒட்டப்பட வேண்டும். அந்த மதகுருவுக்கு அந்தத் தேவாலயத்தில் திருமணம் நடத்த அதிகாரம் இல்லாத நிலையில், அந்தத் தேவாலயத்தில் திருமணம் நடத்த அதிகாரமுள்ள மதகுருவுக்கு மேற்குறிப்பிடப்பட்ட அறிவிப்பு அனுப்பிவைக்கப்பட வேண்டும் அல்லது தகவல் அறிக்கை தாக்கல் செய்தவரிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். திருமணம் நடக்கவிருக்கும் இடம் தனிப்பட்டவர் வசிக்கும் இடமாக இருந்தால், அந்த இடம் உள்ள மாவட்டத்துக்கான திருமணப் பதிவாளருக்குத் தகவலறிக்கையை அனுப்பவேண்டும். அதை அந்தப் பதிவாளர் தம் அலுவலகத்தின் முக்கிய இடத்தில் ஒட்ட வேண்டும். திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுள் ஒருவர் உரிமை வயது அடையாதவராக (Minor) இருந்தால் தகவலறிக்கையின் நகல் அந்த மாவட்டத்திலுள்ள முதிய திருமணப் பதிவாளருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். அந்த அறிக்கையின் படிகள் அம்மாவட்டத்திலுள்ள எல்லாத் திருமணப் பதிவாளர்களின் அலுவலகங்களிலும் முக்கியமான இடத்தில் ஒட்டப்பட வேண்டும். பின்பு திருமணம் செய்து கொள்ளவிருப்பவர்களுள் ஒருவர் மேற்குறிப்பிட்ட அதிகாரம் படைத்த மதகுருவின் முன்தோன்றி, மனப்பூர்வமான ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். திருமணம் நடப்பதற்கு எவ்வகைப்பட்ட சட்டப்படியான தடங்கலும் இல்லையென்றும், திருமணம் செய்து கொள்ளவிருப்பவர்களுள் ஒருவரோ இருவருமோ உரிமை வயது அடையாதவர்களாக இருந்தால், அவர்கள் சார்பில் சட்டப்படியான இசைவு பெறப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் கூறவேண்டும். அவ்வாறு இசைவு கொடுக்கக்கூடிய எவரும் இந்தியாவில் இல்லை என்றால் அந்த விவரமும் மேற்கூறிய அறிக்கையில் சொல்லப்பட வேண்டும். இச்சட்டம் 21 வயது நிரம்பாதவர், உரிமை வயது அடையாதவர் (Minor) என்று கூறுகிறது. அவ்வாறு 21 வயது நிரம்பாவிட்டாலும் விதவையாகவோ மனைவியை இழந்தவராகவோ இருந்தால் அவர் உரிமை வயதை அடையாதவராகக் கருதப்பட மாட்டார். தகப்பன், அவர் உயிருடனில்லாவிட்டால் காப்பாளர், அவ்வாறு காப்பாளர் எவரும் இல்லாவிட்டால் தாய், உரிமை வயது அடையாதவர் சார்பில் திருமணத்துக்கு இசைவு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இசைவு தெரிவிக்கத் தகுதியுள்ளவர் எவரேனும் இந்தியாவிலிருந்தால் தான் அவ்வாறு இசைவு தேவை, அவ்வாறு இசைவு தெரிவிக்கக்கூடிய தகுதியுள்ளவர் இருந்தால், திருமணம் நடக்கச் சான்றிதழ் அளிக்கக் கூடாது என்று தடை செய்யும் அதிகாரம் அவருக்குண்டு. அவ்வாறு தடை செய்யக் கோரிக்கை வந்தால் அது குறித்துத் தொடர்புடைய மதகுரு விசாரணை செய்ய வேண்டும். அந்தக் கோரிக்கையை விடுத்தவர் அதைத் திருப்பிப் பெற்றுக் கொண்டாலும், அவருக்குத் திருமணத்தைத் தடை செய்ய அதிகாரம் இல்லை என்று முடிவு எடுத்தாலும், அந்த மதகுரு திருமண நடவடிக்கையைத் தொடரலாம். தடை செய்யக் கோருபவருக்கு அதிகாரம் உண்டு என்றால், அக்கோரிக்கையை அவர் திருப்பிப் பெற்றுக் கொள்ளாத நிலையில் திருமணம் நடக்கக்கூடாது. அவ்வாறு தடை ஏதுமில்லா விட்டால் அந்த மதகுரு ஒரு சான்றிதழ் வழங்க வேண்டும். திருமணம் செய்து கொள்ள விருப்பவர்களுள் எவராவது ஒருவர் உரிமை வயதை அடையாதவராக இருந்து, அந்த உரிமை வயது அடையாதவர் சார்பில் சட்டப்படியான இசைவு பெறவில்லை என்று மதகுரு எண்ணினால், அவருக்கு முதன் முதலில் தகவல் அறிக்கை கிடைத்த தேதியிலிருந்து 14 நாட்கள் கழிவதற்கு முன்னர் அந்த மதகுரு சான்றிதழை வழங்கக் கூடாது. எக்கட்டத்திலும் முதலில் தகவல் அறிக்கை கிடைத்த தேதியிலிருந்து நான்கு நாட்கள் கழிவதற்குள் அச்சான்றிதழை வழங்கக்கூடாது. அச்சான்றிதழில் திருமணம் செய்து கொள்ளவிருப்பவர்களுள் ஒருவர் மதகுருவுக்குத் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது பற்றியும், மதகுருவின் முன்தோன்றி அவர் முழுமனத்துடன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது பற்றியும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு சான்றிதழ் வழங்கிய பின்னர், மேற்கூறிய மதகுரு அவர் விருப்பம் போல் மதச் சடங்குகளைக் கடைபிடித்துத் திருமணத்தை நடத்தி வைக்கலாம். அதற்கு அந்த மதகுருவைத் தவிர்த்து இரண்டு சாட்சிகள் தேவை. அச்சான்றிதழ் வழங்கிய தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் திருமணம் நடைபெறாவிட்டால் அச்சான்றிதழ் செல்லாதது ஆகிவிடும். அவ்வாறு சான்றிதழ் செல்லாததாகிவிட்டால் அத்திருமணத்தை எவரும் நடத்தி வைக்கக் கூடாது. மறுபடியும் தொடக்கக் கட்டத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப் பட்டால் அத்திருமணம் நடைபெறலாம். <b>திருமணப் பதிவாளர் நடத்திவைக்கும் திருமணம் அல்லது அவர் முன்பு நடக்கும் திருமணம்:</b> மாநில அரசினால் பணியமர்த்தப்பட்டுள்ள திருமணப்பதிவாளரிடம் திருமணம் நடத்த விரும்பினால் அவர்<noinclude></noinclude> jzxqb5lywfqjr1x8m4szzrnnjz1rrvb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/356 250 627630 1957591 1884794 2026-08-08T04:06:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம்|332|இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம்}}</noinclude>ஏறத்தாழ உரிமம் பெற்ற மதகுரு தாம் நடத்தி வைக்கும் திருமணத்தில் என்ன நடைமுறைகளைப் பின்பற்றுவாரோ அந்நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் உரிமைவயது அடையாத மணமகன் அல்லது மணமகள் சார்பில் இசைவு தெரிவிக்க வேண்டியவர், போதிய காரணமின்றி இசைவு தெரிவிக்க மறுத்தாலோ மனநோய் உடையவராக இருந்தாலோ நீதிமன்றத்திற்கு முறையீடு செய்து இசைவு வாங்க வகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சான்றிதழ் வழங்கத் திருமணப்பதிவாளர் மறுத்தாலும் நீதிமன்றத்திற்கு முறையீடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளர் திருமணத்தை நடத்தி வைக்கலாம் அல்லது அவர் முன்பு வேறு எவரும் நடத்தி வைக்கலாம். திருமணப் பதிவாளரைத் தவிர இரண்டு நம்பத்தகுந்த சாட்சிகள் தேவை. திருமணம் நடக்க வேண்டிய வகை முறை அல்லது சடங்குகள் பற்றி மணமக்களே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், மணமக்கள் இருவரும் தங்கள் திருமணத்திற்குச் சட்டப்படியான தடையேதுமில்லை என்றும் அவர்கள் ஒருவரையொருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதாகவும் அதற்கு அங்குக் குழுமியிருப்பவர்கள் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்றும் அங்குக் குழுமியிருப்போர் முன்பு வெளிப்படையாகக் கூறவேண்டும். அத்திருமணம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். அதில் மணமக்களும் திருமணப் பதிவாளரும் வேறு எவராவது திருமணத்தை நடத்தி வைத்திருந்தால் அவரும், அவர்களைத் தவிர இரண்டு நம்பத் தகுந்த சாட்சிகளும் கையெழுத்திட வேண்டும். <b>திருமணச் சான்றிதழ் வழங்க உரிமம் வழங்கப்பட்டவர் முன்பு நடக்கும் திருமணம்:</b> மணமக்கள் இருவரும் சிறித்தவர்களாக இருக்க வேண்டும். மணமகன் 21 வயதுக்குக் கீழ்ப்பட்டவனாக இருக்கக் கூடாது. மணமகள் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவளாக இருக்கக்கூடாது. முன் அறிக்கை (Notice) ஏதுமின்றி அம்மணமக்கள் நேராக மேற்கூறிய அதிகாரம் பெற்றவர்முன் சென்று திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் மணமகனுக்கு உயிருடனிருக்கும் வேறுமனைவியும் மணமகளுக்கு உயிருடனிருக்கும் வேறு கணவனும் அப்போது இருக்கக் கூடாது. மேற்கூறிய சான்றிதழ் வழங்க மாநில அரசால் உரிமம் வழங்கப்பட்டவர் மற்றும் குறைந்தது இரண்டு நம்பத்தக்க சாட்சிகள் முன்பாக, மணமகன் மணமகளைப் பார்த்து ஆண்டவன் சன்னிதியில், இயேசு நாதரின் நாமத்தின் பெயரில் சட்டப்படியான மனைவியாக ஏற்றுக்கொள்வதாகக் கூற வேண்டும். அவ்வாறே மணமகளும் மணமகனைப் பார்த்துக் கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்தவுடன் திருமணம் நிறைவுறுகிறது. இவ்வாறான திருமணம் உரோமன் கத்தோலிக்க மதத்தினருக்குப் பொருந்தாது. இச்சட்டத்தின்படி திருமணம் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற வேண்டும். ஆனால் ஆங்கில தேவாலயத்தைச் (Church of England) சேர்ந்த மதகுரு அவரது மேலிடத்திலிருந்து சிறப்பு அனுமதியிருந்தால் மேற்கூறிய காலத்தில் அல்லாது வேறு நேரத்தில் திருமணத்தை நடத்தி வைக்கலாம். உரோமன் கத்தோலிக்க மதகுருவுக்கு மேலிடத்திலிருந்து பொதுவான அல்லது சிறப்பு அனுமதியிருந்தால் அவரும் வேறு நேரத்தில் திருமணம் நடத்தி வைக்கலாம். இசுகாட்லாந்து தேவாலயத்தைச் (Church of Scotland) சேர்ந்த மதகுரு அந்தத் தேவாலயத்தின் விதிமுறைகள், மதச்சடங்குகளின் படி நடத்திவைக்கும் திருமணத்தை எந்த நேரத்திலும் நடத்தி வைக்கலாம். ஆங்கிலத் தேவாலயத்தைச் சேர்ந்த மதகுரு அந்தப் பிரிவைச் சேர்ந்த தேவாலயத்தில தவிர வேறு இடத்தில் திருமணத்தை நடத்தி வைக்கக் கூடாது. ஆனால் மேலிடத்திலிருந்து அவருக்குச் சிறப்பு அனுமதியிருந்தால் வேறு இடத்திலும் அவர் திருமணத்தை நடத்தி வைக்கலாம். திருமணம் நடக்கவிருக்கும் அவ்வாறான வேறு இடத்திலிருந்து 5 கல் தொலைவுக்குள் தேவாலயம் ஏதும் இல்லாவிட்டால் அந்த வேறு இடத்திலும் அந்த மதகுரு திருமணத்தை நடத்தி வைக்கலாம். மேற்கூறிய இச்சட்டத்தின்படியல்லாமல் இந்தியாவில் (கிறித்தவர்களுக்குள் அல்லது மணமக்களுள் ஒருவர் கிறித்தவராயிருந்தாலும்) நடைபெறும் திருமணம் இல்லா நிலையது ஆகும். இச்சட்டத்தின்படி நடைபெறும் திருமணங்கள் குறித்து எவ்வாறு பதிவேடுகள் வைக்கப்பட வேண்டும் என்பது விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தின்படி நடைபெறும் எந்தத் திருமணத்திற்கும் ஆவணச் சாற்றிதழ் கிடைக்கும். சில விதிமுறைகளை மீறுவது தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகுமென்று இச்சட்டம் கூறுகின்றது. எடுத்துக்காட்டாக, வேண்டும் என்றே சட்டத்துக்குப் புறம்பான நேரத்தில் திருமணம் நடத்துவது, சாட்சிகள் இல்லாமல் திருமணம் நடத்துவது போன்ற செய்கைகள் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும். திருமணம் நடத்த அதிகாரம் வழங்கப்பட்டவர், ஆங்கிலேயத் தேவாலயம், இசுகாட்லாந்துத் தேவாலயம், சுத்தோலிக்கத் தேவாலயம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்திராத நிலையில், அந்தத் தேவாலயங்களின் விதிமுறைகளைத் திருமணத்திற்குக் கடைப்பிடிப்பது<noinclude></noinclude> liv93mvren5fa5l4ypuzyjv69nb34ph பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/357 250 627632 1957592 1954816 2026-08-08T04:10:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் குடிமுறைப் பதிவு|333|இந்தியக் குடிமுறைப் பதிவு}}</noinclude>குற்றமாகும். எடுத்துக்காட்டாக, திருமணத்தை நடத்தி வைக்கக் கத்தோலிக்க மதகுருவுக்கு அதிகாரம் உள்ளது. அவர் வேறு தேவாலயத்தின் விதிகளையும் சடங்குகளையும் கடைப்பிடித்துத் திருமணம் நடத்தினால் அது தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். திருமணம் நடைபெறும் இடம், இசைவு, தேவைப்பட்டவர்களின் விவரம் ஆகிய விவரங்கள் குறித்துத் தாக்கல் செய்யும் அறிக்கை, திருமணம் குறித்துக் கொடுக்கும் முதல் அறிவிப்பு, திருமணப்பதிவேடு ஆகியவற்றில் ஏற்படும் தவறுகள் ஒழுங்கற்றவைகளே ஒழியத் திருமணத்தை அத்தவறுகள் எவ்விதத்திலும் பாதிக்கமாட்டா. <section end="இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டம்"/> <section begin="இந்தியக் குடிமுறைப் பதிவு"/> {{dhr}} <b>இந்தியக் குடிமுறைப் பதிவு (Civil Registration System in India): வரலாற்றுப் பின்னணி:</b> இந்தியாவில் இன்றியமையா நிகழ்ச்சிகளைப் பதியும் முறை 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய ஆட்சியாளர்கள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இதன் பிறப்புத் தன்மையை உணர்ந்து இறப்பினைப் பதிவு செய்வதை மிகவும் வலியுறுத்தினர். பொதுநலச் சீர்கேடுகள் மிகுந்திருந்த அக்காலத்தில் இறப்பு வீதம் உயர்ந்திருந்தது. இச்சூழ்நிலையில் நலவாழ்வின் காரணமாக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளுக்கு, நம்பத் தகுந்த இறப்பு மதிப்பீடுகள் தேவைப்பட்டன. அதாவது, எண்ணிக்கையையும் அதற்கான காரணங்களையும் அறியத்தக்க வகையில் மிகத் துல்லியமான, முழுமை மிக்க பதிவு முறை தேவைப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் நல ஆணையர் கி.பி. 1863-ஆம் ஆண்டில் சிற்றூர்களில் ஏற்படும் இறப்புக்கான காரணங்களை அறிய வேண்டியதன் தேவையை எடுத்துரைத்தார். அவர் இறப்பிற்கான காரணங்களை அறியப் போதுமான அறிவைப் பெற்றால் மட்டுமே நல வழிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இயலும் என்பதைத் தெளிவுபடுத்தினார். இக்காலக்கட்டத்தில் பிறப்பினையோ திருமணங்களையோ பதிவு செய்வதற்கான கட்டாயம் ஏற்படவில்லை. இப்பதிவில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததே இதற்குக் காரணம். இருப்பினும், பிறப்பு, திருமணம் சார்ந்த விவரப் பதிவுக்கான வரையறைகள் பதிவுக் குறிப்பில் இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் மைய மாநிலங்களில் மட்டும் பிறப்பைப் பதிவு செய்யும் முறை கி.பி. 1866-ஆம் ஆண்டுக்கு முன்பே இருந்து வந்தது. வங்காளத்தில் கி.பி. 1873-இல் பிறப்பு இறப்புப் பதிவுச் சட்டம் இயற்றப்பட்ட பின், பீகார், ஒரிசா மாநிலங்கள் இதனைப் பின்பற்றின. இப்பதிவு முறை மக்களின் சட்டப்படியான தேவைகளைத் தீர்த்து வைப்பதாக இருந்ததனால் இதன் தேவையை மக்கள் உணரலாயினர். இதுபோன்றே இவ்விவரங்களின் இன்றியமையாமையை அப்போதைய ஆட்சியாளர்களும் உணர வேண்டியதாயிற்று. பின்னர், கி.பி. 1884-இல் இந்திய அரசாங்கம் பிறப்பு இறப்பு, திருமணப் பதிவுச் சட்டத்தை இயற்றியது. ஆனால், இச்சட்டத்தில் எவ்வகைக் கட்டாயமுமில்லாமல் மக்கள் தம் விருப்பமாகப் பதிவு செய்யும் முறைமை இருந்ததால் இச்சட்டம் போதுமான பலனளிக்கவில்லை. நகர்ப் புறங்களில் இப்பதிவு முறை நகராட்சிகளின் துணைச் சட்ட வரன் முறைக்குட்பட்டிருந்தது. ஊரகங்களில் வருவாய் அலுவலர்களாலும் காவற்றுறையினராலும் இந்நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டன. இப்பதிவு முறையின்கீழ் 1903 ஆம் ஆண்டைய மக்கள்தொகையில் 80 விழுக்காடு அளவு வந்தது. இருப்பினும் இம்முறையின் பரப்பும் தரமும் பயனுடையனவாக அமையவில்லை. ஏனெனில் இறப்பு, அதற்கான காரணங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே மிகுதியான சிறப்பிடம் அளித்துத் தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இவை. இப்புள்ளி விவரங்கள் அப்போது நாட்டில் பரவலாக இருந்துவந்த நோய் நிலையையும் கொள்ளை நோய்களையும் ஒழிப்பதன் பொருட்டுத் திரட்டப்பட்டன. பின்னர், 1924-இல் வேளாண்மைக்கான உயர்நிலைக் குழு (Royal Commission on Agriculture) வும் 1928-இல் உழைப்பாளருக்கான உயர்நிலைக் குழுவும் இப்புள்ளி விவரங்களின் தரத்தையும் பயன்களையும் பெருக்கும் பொருட்டுப் பல அறிவுரைகளை வழங்கின. இதன் விளைவாக விவரங்கள் முழுமையாகவும் தரமிக்கனவாகவும் உருவாகும் பொருட்டுப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் உண்டான வளர்ச்சி பின்னர் ஏற்பட்ட இரண்டாம் உலகப் போரின்போது நிலைத்துப் போனதோடு, போருக்குப்பின் இம்முறை முழுவதும் நடைமுறையில் இல்லாமலும் போயிற்று. புகழ்மிக்க ‘போர் குழு’ (Bhore Committee) என்று சொல்லப்பட்ட நலவழிக் கணிப்பு முன்னேற்றக் குழு (Health Survey and Development Committee) 1946-இல் தோற்றுவிக்கப்பட்டு, இதன் சீரமைப்புக்கான பயன் மிகு அறிவுரைகளை வழங்கியது. இந்தியாவில் பிறப்பு இறப்புக் தொடர்பான புள்ளி விவரங்கள் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கங்களுக்காக மட்டுமே திரட்டப்பட்டன. மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களை அறியவேண்டி இவை சேகரிக்கப்படவில்லை. இம்மாற்றத்தை மக்கள்<noinclude></noinclude> 781cl3ycck6ueng8hmwcndteciy5fa4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/358 250 627633 1957593 1954817 2026-08-08T04:21:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் குடிமுறைப் பதிவு|334|இந்தியக் குடியரசு}}</noinclude>தொகைக் கணிப்பின் மூலமே அறியமுடிந்தது. இந்திய மக்கள் தொகையின் வளர்ச்சி வீதம் 1921-ஆம் ஆண்டு வரையில் குறைவாக இருந்ததன் காரணமாக இதன் சிறப்புத்தன்மை உணரப்படவில்லை, பின்னர், 1951-ஆம் ஆண்டு முதல் சமூகப் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களுக்கு மக்கள்தொகைத் தொடர்புடைய விவரங்கள் தேவைப்பட்டன. ஆகவே, இப்புள்ளி விவரமுறை மக்கள்தொகைக் கணிப்பு ஆணையரான தலைமைப் பதிவாளர் (Registrar General) இடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் பிறப்பு இறப்புக்கென 1969 வரையில் சட்டம் இயற்றப்படாமல் இருந்ததனால், இப்புள்ளி விவரங்கள் தரமிக்கவையாக இல்லை. ஆனால், 1969-ஆம் ஆண்டைய பிறப்பு இறப்புப் புதிவுச் சட்டம் இப்பதிவு முறையைக் கட்டாயப்படுத்தியதோடு, பதிவு செய்யத் தவறினால் தண்டனை உண்டென்பதையும் தெளிவுபடுத்தியது. <b>இப்போதைய நிலை:</b> அடிப்படைப் புள்ளி விவர அமைப்பின் முழு அதிகாரமும் தலைமைப் பதிவாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவரே நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட இப்புள்ளி விவரங்களைத் தொகுத்தல், அட்டவணைப்படுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறார். மேலும் அவர் அனைத்து மாநிலங்களுக்கும் நேராட்சிப் (States Union Territories) பகுதிகளுக்குமான விவர முறையை மதிப்பீடு செய்வதோடு, அவற்றின் தரத்தையும் மேம்படுத்துகிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் முதன்மைப் (Chief Registrar) பதிவாளரே இக்குடியுரிமைப் பதிவின் பொறுப்பை ஏற்கிறார். இவ்விவரங்களின் நேரடிப் பதிவை வருவாய், காவல் மற்றும் நலவழித் துறையினர் மேற்கொள்கின்றனர். ஒவ்வோராண்டும் இந்திய அடிப்படைப் புள்ளி விவரம் (Vital Statistics in India) என்ற தலைப்பில் நூல் தொகுதி ஒன்றினைத் தலைமைப் பதிவாளர் வெளியிடுகிறார். இதில் மாநிலங்கள், நேரடி ஆட்சிப் பகுதிகள் ஆகியவற்றுக்கான பிறப்பு இறப்பு எண்ணிக்கை, பிறப்பு வீதம், இறப்பு வீதம், நோயுற்றோர் வயதுப் பயிர்வு, இளங்குழவி இறப்பு வீதம் (Infant Mortality Rate) மற்றும் இறப்புக்கான காரணங்களோடு பிற செய்திகளும் கொடுக்கப்படுகின்றன. <b>பதிவில் எழும் சிக்கல்கள்:</b> சட்டத்தில் இந்நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யாவிடில் தண்டனை வழங்கலாம் என்ற விதி இருப்பினும், இந்திய அடிப்படைப்புள்ளி விவரத் தொகுப்பு மன நிறைவளிப்பதாக இல்லை. ஆகவே, இது அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முழுமை மிக்க ஒரு புள்ளி விவரத்தொகுப்பாக விளங்கவில்லை. இம்முறையில் தொகுக்கப்படும் விவரங்கள் குறைத்துச் சொல்லுதலின் (Under Reporting) விளைவாகத் தரம் குறைந்து காணப்படுகின்றன. இதிலிருந்து கணக்கிடப்படும் வீதங்கள் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதாகவும் இல்லை. மக்கள்தொகைக் கணிப்புத் துறையினால் 1966-இல் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 27 விழுக்காட்டிற்கும் மிகுதியான இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது. ஊர்ப் புறங்களில் மிகுதியான அளவில் இந்நிகழ்ச்சி பதிவு செய்யப்படுவதில்லை எனவும் அறியப்பட்டது. இந்திய மக்கள்தொகையில் பெரும்பாலோர் எழுத்தறிவில்லாமல் இருப்பதோடு பிற்போக்குக் கருத்துகளைப் பெற்றிருப்பதே இதற்குக் காரணமாகச் கூறப்படுகிறது. மேலும், இப்பதிவின் இன்றியமையாத் தன்மையை மக்களும் அலுவலர்களும் முழுமையாக இன்னும் உணரவில்லை, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் ஒரு சிலருக்கு மட்டும் எப்போதாவது சில நேரங்களில் மட்டும் தேவைப்படுவதால் இதன் சிறப்பினை மக்கள் உணராதுள்ளனர். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளி விவரம்]]. <section end="இந்தியக் குடிமுறைப் பதிவு"/> <section begin="இந்தியக் குடியரசு"/> {{dhr}} <b>இந்தியக் குடியரசு</b> ஆசியாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இது தென் ஆசியாவில் வங்காள விரிகுடாவைக் கிழக்கிலும், அரபிக்கடலை மேற்கிலும் இந்தியப் பெருங்கடலைத் தெற்கிலும் கொண்டுள்ளது. வடக்கில் இமயமலையும், சீனா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளும் வடமேற்கில் பாகிசுத்தானமும், வடகிழக்கில் பர்மாவும் இந்தியக் குடியரசின் எல்லைகளாகும். வங்காளதேசம் 1971-இல் உருவாக்கப்பட்டது. இதனை முன்னர்க் கிழக்குப் பாகிசுத்தான் என்றனர். இதன் முப்பக்கமும் இந்தியக் குடியரசுப் பகுதிகளும் தெற்கில் கடலும் சூழ்ந்துள்ளன. இந்தியக் குடியரசின் பரப்பு 32,87,782 ச.கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை 1984-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 74 கோடியாகும். இந்தியாவின் தலைநகர் தில்லி மாநகரம். கல்கத்தா, பம்பாய், சென்னை, பெங்களூர், ஐதராபாது, அகமதாபாது, கான்பூர், புனே, நாகபுரி, இலக்னோ, செயப்பூர் போன்றவை பெரு நகரங்களாகும். இந்தியத் தேசியக் கொடி மூன்று வண்ணங்களைக் கொண்டு, உள்ளே அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது, நீண்ட சதுரமான இக்கொடி மேற்பகுதியில் காவி நிறத்தையும், கீழ்ப்பகுதியில் பச்சை நிறத்தையும், இடைப்பகுதியில் வெள்ளை நிறத்தை-<noinclude></noinclude> 144mvqzss7ho7taajtt3h2ud7u26ygy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/359 250 627639 1957595 1954818 2026-08-08T04:28:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் குடியேற்றங்கள்|335|இந்தியக் குடியேற்றங்கள்}}</noinclude>யும் கொண்டது. நடுவில் அமையும் அசோகச் சக்கரம் நீல நிறத்தாலானது. இந்தியாவின் பணம் உரூபாய் எனப்படுகிறது. ஓர் உரூபாய் 100 காசுகளைக் கொண்டது. இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள மொழிகள் 15 ஆகும். அவை 1. தமிழ் 2. மலையாளம் 3.கன்னடம் 4. தெலுங்கு 5. ஒரியா 6. மராத்தி 7.குசராத்தி 8. வங்காளி 9. அசாமி 10. இந்தி 11. உருது 12. காசுமீரி 13. பஞ்சாபி 14. சிந்தி 15. சமசுகிருதம் என்பனவாம். இந்தியும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாகும், மேற்கூறப்பட்டுள்ள பதினைந்து மொழிகளையும் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியக் குடியரசில் வாழும் மக்களுள் 83 விழுக்காடு இந்துக்கள்; 11 விழுக்காடு இசுலாமியர்; 3 விழுக்காடு கிறித்தவர்; ஏறத்தாழ 2 விழுக்காடு சீக்கியர். இந்தியக் குடியரசு, கூட்டாட்சி முறையைக் கொண்ட நாடு. இதனைப் பாரதம் என்றும் கூறுவர். இந்தியக் குடியரசு இங்கிலாந்துக் கூட்டு நாடுகள் அமைப்பில் (British Common wealth) உள்ள நாடுகளுள் ஒன்று. இந்தியா 23 மாநிலங்களையும் எட்டு நேராட்சிப் பகுதிகளையும் கொண்டுள்ளது. <b>மாநிலங்கள்:</b> 1. தமிழ்நாடு 2. கேரளம் 3. கருநாடகம் 4. ஆந்திரப் பிரதேசம் 5. ஒரிசா 6. மகாராட்டிரம் 7. குசராத்து 8. மத்தியப் பிரதேசம் 9. மேற்கு வங்காளம் 10. அசாம் 11. அரியானா 12. பஞ்சாபு 13. நாகாலாந்து 14. மணிப்பூர் 15. திரிபுரா 16. மேகாலயா 17. பீகார் 18. சம்மு-காசுமீரம் 19. உத்தரப்பிரதேசம் 20. இராசசுத்தான் 21. இமாசலப் பிரதேசம் 22. சிக்கிம் 23. மிசோராம் என்பனவாம். இந்திய ஒன்றியத்தின் நேராட்சிப் பகுதிகள் பின் வருவன: 1. அந்தமான்-நிக்கோபார்த் தீவுகள் 2. அருணாசலப் பிரதேசம் 3. சண்டிகர் 4. தத்ரா-நகர் அவேலி 5. தில்லி 6. கோவா, தாமன், தியூ 7. இலட்சத்தீவுகள் 8. பாண்டிச்சேரி. <section end="இந்தியக் குடியரசு"/> <section begin="இந்தியக் குடியேற்றங்கள்"/> {{dhr}} <b>இந்தியக் குடியேற்றங்கள்</b>: இந்தியக் குடியேற்ற முறை ஓரளவு கிரேக்கக் குடியேற்ற முறைக்கு ஒப்பானதாகும். இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கள் குடியேற்றங்களை அமைத்த போதிலும், அவற்றின்மீது பேரரசுக்குரிய ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை, அத்துடன் அந்நாடுகளின் நாகரிகத்தையோ பண்பாட்டையோ பாதிக்கும் வகையில் அவற்றிற்கு எவ்வித இடையூறும் செய்யாது, தங்கள் பண்பாடு, சமயம், கலை ஆகியவற்றைப் பரப்பினர். இதனால் இந்திய நாட்டுச் சமயமும் கலைப்பண்புகளும் பிற நாடுகளில் பரவி, பிற இனத்தாருடன் ஒன்றுபட, இந்தியப் பண்புகளைச் சிறப்பாகக் கொண்ட ஒரு கலப்பு நாகரிகம் வளர்ந்தது. இதற்கு வணிகர்கள் சிறந்த காரணமானபோதிலும், சமயப் பரப்பாளர்களும் போர்வீரர்களும் அரசியல் அறிஞர்களும் கூடக் காரணமாவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியர்கள் தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். <b>சுமத்திரா (Sumatra):</b> இந்தியர்கள் கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் சுமத்திராவில் குடியேறினர். சுமத்திராவின் வரலாறு இந்தியர்கள் அங்குத் தங்கள் குடியேற்றங்களை அமைத்தபிறகு தான் தொடங்குகிறது. சிரீ விசய அரசு (Sri Vijaya Kingdom) என்ற இந்து அரசு கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட போதிலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அது சிறப்புற்று விளங்கியது. கல்வெட்டுகள் மூலம் சிரீ செயநாசன் (Sri Jayanasan) என்ற பௌத்தனின்கீழ்ச் சிரீவிசயம் பெற்றிருந்த அரசியல் செல்வாக்கை அறிய முடிகிறது. மலாயு (Malayu) என்ற இடத்தையும் பங்கா (Banga) என்ற அண்மையிலுள்ள தீவையும் சிரீ விசய அரசு தன்னுடன் இணைத்துக் கொண்டது. சிரீ விசயத்தின் அரசியல் பெருமை, வணிகச் சிறப்பு, அங்கிருந்த பண்பாடு ஆகியவற்றை அங்குச் சென்ற சீனப் பயணி இட்சிங்கு (Itsing) குறிப்பிடுகிறார். இவ்வரசு இந்திய நாட்டுடன் கப்பல்கள் மூலம் வணிகத்தில் ஈடுபட்டது என்பதையும் இட்சிங்கு தெளிவுபடுத்துகிறார். <b>சாவா (Java):</b> சாவாவில் இந்தியர்களின் குடியேற்றக் காலம்பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மகாபாரதக் காலத்திலேயே அங்கு இந்தியக் குடியேற்றம் ஏற்பட்டது என ஒரு கருத்து நிலவுகிறுது, மற்றொரு கருத்து கலிங்க நாட்டிலிருந்து இருபதாயிரம் குடும்பத்தினர் கலிங்க இளவரசனால் அங்குக் குடியமர்த்தப்பட்டனர் என்பது. இந்தியர்கள் கி.பி. 56-ஆம் ஆண்டு அங்குக் குடியேறினர் என ஒரு கருத்து நிலவுகிறது. வரலாற்று அறிஞர் ஆர்.சி மசும்தார் (R.C. Majundar) கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான் அங்கு இந்தியக் குடியேற்றங்கள் (Indian Colonis) ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அதிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரை இந்தியப்பண்பாடு அங்குச் சிறப்புற்றிருந்தது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். அத்துடன் கி.பி. 132-ஆம் ஆண்டு சாவாவில் தேவவர்மன் என்ற மன்னன்<noinclude></noinclude> 0duknfr1nny6d99twkwypef646uwrke பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/360 250 627642 1957596 1884809 2026-08-08T04:32:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் குடியேற்றங்கள்|336|இந்தியக் குடியேற்றங்கள்}}</noinclude>வாழ்ந்தான் எனச் சீனக் குறிப்புகள் அறிவிக்கின்றன. இதிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியர்கள் அங்குக் குடியேறியிருந்தனர் என்பது நன்கு புலனாகும். பாகியான் (Fahien) என்ற சீனப் பயணி சாவாவில் பிராமணசமயம் சிறப்புற்றிருந்ததையும் புத்த சமயம் மங்கியிருந்ததையும் குறிப்பிடுகிறார். சாவாவின் மேற்குப் பகுதியில் முழுமையாக இந்து அரசு நிலவியதை அங்குக் கிடைத்த வடமொழிக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. பூர்ணவர்மன் என்ற மன்னனைப் பற்றியும் அவை குறிப்பிடுகின்றன. அம்மன்னன் பார்ப்பனர்களுக்குப் பசுக்களைத் தானம் செய்ததையும், அப்பகுதியில் ஒரு கால்வாய் வெட்டியதையும் அவை குறிப்பிடுகின்றன. அவற்றின் காலம் கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறது. சாவாவின் மத்திய பகுதியிலும் பிராமண சமயம் சிறப்புற்றிருந்தது என்பது, கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குரியதாகக் கருதப்படும் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. அதுபோலவே கி.பி. 732-ஆம் ஆண்டில் சஞ்சய மன்னன் என்ற இந்து அரசன் மத்திய சாவாவில் ஆட்சி புரிந்தான் என்பதைப் பற்றி ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. அம்மன்னன் ஒரு சைவன் என்றும், ஒரு சிவலிங்கம் அவனால் நிறுவப்பட்டது என்றும் அக்கல்வெட்டுக் கூறுகிறது. இந்துக் கடவுள்களாகிய பிரமன், சிவன், விட்டுணு ஆகிய தெய்வங்களை அவன் வழிபட்டுள்ளான். மத்திய சாவாவில் இந்திய நாகரிகம் நிலவியதென்பதற்கு இவை தக்க சான்றாகும். <b>போர்னியோ (Borneo):</b> போர்னியோ சாவாவைப்போல் எட்டு மடங்கு பெரியது. வரலாற்றுச் சான்றுகள் மூலம் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்தியர் அங்குக் குடியேறினர் என்பது தெரிய வருகிறது. ஒரு குகையில் (Kombeng) மரத்தாலான கோயிலின் சின்னங்களும் புத்தன், சிவன் ஆகியவர்களின் கற்சிலை உருவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்படுகின்றன. இந்தியப் பண்பாடு அங்கு நன்கு செழித்தோங்கியிருந்தது எனச் சீனக் குறிப்பொன்று கூறுகிறது. இப்பகுதி கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் சாவாவின் ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டுவரப்பட்டது. பாலி (Bali): இத்தீவு சாவாவிற்குக் கிழக்கேயுள்ளது. இப்பகுதியில் இந்தியர்களின் குடியேற்றக்காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என்பதை அங்குக் கிடைக்கும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. சீனக் குறிப்புகள் ஏறக்குறைய கி.பி. 616-ஆம் ஆண்டு சத்திரிய அரசன் அங்கு ஆட்சி புரித்தான் என்பதால், ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பே இத்தீலில் இந்தியப் பண்பாடும் கலையும் பரவியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. மேறும் அங்குக் குடியேறிய இந்தியர்கள் நேராக இந்தியாவிலிருந்து தான் சென்றிருக்க வேண்டுமென்பதையும் அங்குள்ள கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தெளிவுபடுத்துகின்றன. பாலித்தீலின் மக்கள் இன்றும் நான்கு சாதிகளாகப் (Castes) பிரிக்கப்பட்டு இந்துக்களாக வாழ்கிறார்கள். தாங்கள் பின்பற்றும் இந்தியப் பண்பாட்டின் பெருமைகளை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்துக்களின் கடவுள்களான விட்டுணு, சிவன், இந்திரன், கணேசன், நந்தி, கிருட்டிணன் ஆகியோரையும் மகாபாரதக் கதைத் தலைவர்களையும் நன்கு அறிந்து வழிபடுகின்றனர். உயர்குடி மக்கள் (Noble Families) உடன்கட்டை ஏறும் பழக்கத்தை (Sati System) மேற்கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. இத்தீவு கி.பி. 1919-ஆம் ஆண்டு தச்சுக் (Dutch) கிழக்கிந்தியத் தீவுகளுடன் இணைக்கப்பட்டது. <b>மலாயா (Malaya):</b> இந்தியர்கள் தங்கள் குடியேற்றங்களை மலாயாவில் கி.பி. முதல், இரண்டாம் நாற்றாண்டுகளில் ஏற்படுத்தினர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மலாயா வழியாக வாணிகத் தொடர்பு கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தது. இந்தியப் பண்பாடு அங்குச் செழித்தோங்கியிருந்தது. அங்குள்ள மக்களைச் சைவமும் வைணவமும் கி.பி. நான்கு, ஐந்தாம் நூற்றாண்டுகளில் மிகவும் கவர்ந்தன. மன்னர்களும் இச்சமயங்களை ஆதரித்தனர். இச்செய்திகளைக் கல்வெட்டுகளும் பழங்காலச் சின்னங்களும் தெளிவுபடுத்துகின்றன. சோழ மன்னன் முதலாம் இராசேந்திரன் கி.பி. 1025-ஆம் ஆண்டு கடாரத்தின் மீது படையெடுத்து அதனை வென்றான். மலாயா கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சாவாலின் ஆட்சிக்குட்பட்டது. <b>சயாம் (Siam):</b> இந்திய நாகரிகம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே இங்குப் பரவியிருந்தபோதும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்தான் பெருமளவு இந்தியக் குடியேற்றம் ஏற்பட்டது. தென்னிந்திய வணிகக் குழு சயாமில் இருந்ததைக் கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இந்தியப் பண்பாடும் நாகரிகமும் இந்தியக் கலையும் சிறிது சிறிதாக மேனாம் சமவெளியில் பரவின.{{nop}}<noinclude></noinclude> fs1p3emau3id0ramtme535xd6jh3awb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/587 250 641527 1957605 1926940 2026-08-08T07:00:15Z Sridevi Jayakumar 15329 1957605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியரசுக் கொள்கை|559|குடியரசுக் கொள்கை}}</noinclude><section begin="குடியரசுக் கொள்கை"/> {{dhr}} <b>குடியரசுக் கொள்கை</b>: குடியரசு என்பது முடியாட்சிக்கு (Monarchy) நேர்மாறான அரசியலமைப்பை உடையது என்று பொருள்படும். பண்டைக் காலத்திலிருந்தே, பரம்பரையான அல்லது வழிவழியான தாய முறையிலமைந்துள்ள ஒருவர் ஆட்சியை முடியாட்சி என்றும், குடிகளால் நேரடியாககோ மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டுக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருவராலோ, பலராலோ ஆளப்படும் அரசைக் குடியரசு (Republic) என்றும் வகைப்படுத்தினர். குடிகளே ஆளுபவராக உள்ளனர் என்ற கோட்பாட்டை எடுத்துக்காட்டுபவராக, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் அல்லது பலர் இருப்பதால், அவருடைய ஆட்சி முறையைக் குடியரசு என்று கூறினர். குடிகளுக்கு ஆட்சியில் பங்கு இருக்கிற தென்ற குடியாட்சிக் கருத்தும் குடிவரசுக் கொள்கையில் (Republicanism) இருப்பதனால், குடியரசுக் கொள்கை சிறப்புடையதாகப் பண்டைக் காலமுதலே பல அரசியற் சிந்தனையாளர்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது. <b>மாக்கியவெல்லி</b>: இத்தாலியில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியற் சிந்தனையாளர் மாக்கியவெல்லி தம் ‘இளவரசர்’ (The Prince) என்ற நூலிலும் ‘விளக்கங்கள்’ (Discourses) என்ற நூலிலும் அரசுகளின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமுள்ள காரணங்களையும், அரசுகள் அழியாமல் பாதுகாத்தற்கு அரலியலறிஞர்கள் கையாளும் திறமான வழிகளையும் ஆராய்ந்து கூறியுள்ளார். அவர், அரசாங்கங்கள் பெருமளவு வலுக்காட்டாயத்தையும் (Force), சூழ்ச்சித் திறனையுமே (Craft) சார்த்துள்ள காரணத்தால், ஆளுவோர் அரசியல நோக்கங்களுக்காக ஒழுக்கவரம் புகளுக்கப்பாற்பட்ட வழிகளைக் கையாளுதலைப் பற்றிச் சிறிதும் கவலைப் படலாகாது என்றும், அரசாங்கத்தின் செயல் திறங்கள், அரசுகளை வலுவாக ஆக்கும் வழிகள், அவற்றின் அதிகார எல்லையை விரிவாக்குதற்கு ஏற்ற கொள்கைகள், அரசுகளின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லக்கூடிய தவறுகள் முதவியவைகளைப் பற்றியும் அவர் கூறுகிறார். தாமே தலைமை அதிகாரி என்னும் எண்ணமும் தாமே எல்லா மறித்தவரென்ற தன்முனைப்பான போக்கும், தம் சட்ட அதிகாரத்தின் வழியாகத் தேசிய ஒழுக்கத்தையே உருவாக்கக் கூடிய செயலும் இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார். <b>சமப்படுத்துவோர் கருத்து</b>: இங்கிலாத்தில் அரசர் முதலாம் சார்லசுக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையே நடத்த உள்நாட்டுப்போரில் (Civil War கி.பி. 1642-1649) பாராளுமன்றத்தின் பக்கத்திலும், அதற்கு உதவியாக வந்த புதுமாதிரிப்படையிலும் சேர்ந்த தீவிர குடியரசுக் கட்சியாரே சமப்படுத்துவோர் (Levellers) எனப்படுவோர். குடியரசு அமைப்பே நல்லதொரு அரசாங்க அமைப்புக்கு ஏற்றதொரு வழியாகும். வயதுவந்தோருக்கு வாக்குரிமை இருந்தால்தான், மக்களுடைய ஒப்புதலின்பேரில் சட்டங்கள் இயற்றமுடியும். அதன் காரணமாக மக்கள் சட்டத்துக்குக் கட்டுப்படுதற்கு வழி உண்டாகும். சமப்படுத்துவோருடைய கருத்துகளின் போக்கிலேயே இங்கிலாந்தில் கி.பி.17ஆம் நூற்றாண்டில் ஆகிங்டன் (Harrington), சான்மில்ட்டன் (John Milton), சிட்னி (Sidney), முதலிய சிந்தனையானாகள் குடியரசுக் கொள்கையைப் பற்றிச் சில கருத்துகளைக் கூறினர். ஆரிங்டன், குடியரசுக் கொள்கை என்பது இயற்கையின் சட்டத்திலேயே குறிப்பாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதென்றும், மக்களே இறைமை அதிகாரம் உடையவர்களென்ற கொள்கையிலும் குடியரசுக் கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதென்றும் கூறினார். சான்மில்ட்டன் என்ற ஆங்கிலக் கவிஞர் அறிவுச் சுதந்திரத்தை ஆர்வத்துடன் ஆதரித்தார். ஆய்வு முறையும், விவாதமும் உண்மையைக் கண்டறியவும், தவற்றைத் தள்ளிவிடுதற்கும் உதவுகின்றன. மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பது குடியரசு அரசாங்கமே தவிர, முடியாட்சி அன்று, அரசாங்கமென்பது ஒவ்வொருவருடைய உரிமையையும் பாதுகாப்பதற்ருந்தான் இருக்கிறது. அதன் பொருட்டே சட்டமும் அரசாங்க அதிகாரத்துக்கு வரம்புகளை ஏற்படுத்துகிறது. அரசாங்க அதிகாரியின் அதிகாரமானது மக்களுடைய நலலுக்காக மக்களிடமிருந்தே பெறப்படுன்றுதாதையால், கொடுங்கோலனுக்கெதிராக மக்களுடைய நலனைப் பாதுகாக்கும் உரிமை மக்களிடம் இருக்கிறது. இவை மில்ட்டனின் கருந்துகளாகும். அல்செர்னான் சிட்னி (Algeruon Sidney) தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளில் குடியரசு பற்றிய பின்வரும் சில கருத்துகளைக் கூறுகிறார். எல்லா மக்கட்பிரிவினருக்கும் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் இயற்கையான உரிமை இருக்கிறது. தங்களுடைய சுருத்தின்படி தகுதி உடையவர்களை அவர்கள் தங்களுடைய ஆட்சியாளராகத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமை பெற்றுள்ளவர். அரசாங்கம் தன் அதிகாரங்களை எல்லாம் மக்களிடமிருந்தே பெறுகிறது. அது அவர்களுடைய பாதுகாப்புக்காகவும் நலத்துக்காகவுமே இருக்கிறது; இந்நோக்கங்களைப் பொறுந்தமட்டில் அது அவர்களுக்கே பொறுப்புடையது. <b>மாண்டசுக்கியூ கூறிய குடியரசுக் கருத்து</b>: பிரஞ்சு அரசியற்சிந்தனையாளருள் சிறந்த ஒருவராகி மாண்டசுக்கியூ (Montesquicu) தமது சட்டங்களின்<noinclude></noinclude> 7nq83q2ymeygs01khnu1xnkaft7re3k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/588 250 641543 1957606 1926960 2026-08-08T07:00:56Z Sridevi Jayakumar 15329 1957606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியரசுத் தலைவர் ஆட்சி|568|குடியரசுத் தலைவர் ஆட்சி}}</noinclude>இயல்பு’ என்னும் நூலில் உரோமானியக் குடியரசில் தான் குடிமக்கள் பண்பு (Virtus) அல்லது பொது நலக் கருத்து (Public Spirit) என்பது நன்கு வளர்ச்சியடைந்திருந்தது என்றும், உரோமானியக் குடியால் ஒவ்வொருவருடைய தனிவாழ்வு உரிமைகளும் (Private rights), பொது வாழ்வுரிமைகளும் (Public rights) நன்கு வரையதுக்கப்பட்டுப் பழக்கத்துக்கு வந்தன என்றும், ஒவ்வோர் உரோமானியக் குடியரசின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் நன்கு பாதுகாக்கக் கூடியவாறு அரசாங்க அதிகாரங்கள் அரசாங்கத்தில் குவிக்கப்படாமல், மூன்று உறுப்புகளுக்கிடையே பிரிக்கப்பட்டும், அரசாங்கமே தடை: சமன் கோட்பாட்டில் இயங்குமாறு (Principle of Checks and Balances) ....... அமைக்கப்பட்டும் இருந்தல் என்றும் கூறி, பண்டைய உரோமானியக் குடியரசு தான் சிறந்த ஒரு நடியரசின் அமைப்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தது என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார். மனித சுதந்திரம் என்பது ஓர் ஆனின் சிறந்த குடிமைப் பண்பிலிருந்து தோன்றாமல், அரசாங்கத்தைச் சரிவர அளமத்தலின் விளைவாகவே தோன்றுகின்றது என்றும், அரசியலமைப்புகளைச் சரிவர அமைத்தல் என்பது அவற்றை அதிகாரப் பிரிவினைக் கொள்கையினடிப்படையில் அமைத்தலாருமென்றும், ஆகையால் அதிகாரப் பிரிவினைக் கொள்கையினாப் படையில் அரசாங்கங்களை அமைத்தலே குடியாளின் சுதந்திரத்துக்குத் தக்கதொரு பாதுகாப்பு ஆகுமென்றும் அவர் சில முடிபுகளைக் கூறினார்.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Fletcher, F.T.H..</b> Montesquieu and English Politics (1750-1800). London, 1939.<br> <b>Gooch G.P..</b> Politicial Thought in England: From Bacon to Halifax, London, 1946. <section end="குடியரசுக் கொள்கை"/> <section begin="குடியரசுத் தலைவர் ஆட்சி"/> {{dhr}} <b>குடியரசுத் தலைவர் ஆட்சி</b>: இங்கிலாந்தைப் போன்று நாடாகுமன்ற நிருவாக முறையையும், அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போன்று நடுவண் கூட்டாட்சி அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கங்களுக்குரிடையே அதிகாரப் பகிர்வு முறையையும் இணைத்துள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், சாதாரண சூழ்நிலைகளில், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவராக விளங்கும் குடியரசுத் தலைவருக்கு, குறிப்பிட்ட சில நெருக்கடியான சூழ்நிலைகளில், ஒரு மாநில அரசையோ பல மாநிலங்களின் அரசுகலையோ, எல்லா மாநில அரசுகளையுமோ தாமே ஏற்று, தமது நடுவண் அரசு அதிகாரிகளின் வாயிலாக நடத்துவதற்கு, பாகம் 18-இல், பிரிவு 352 முதல் பிரிவு 360 வரை மிக விரிவான அதிகாரங்கள் வழங்கப்படடுள்ளன; அவற்றைக் கையாண்டு குடியரசுத் தலைவர் நடத்தும் நேர்முக ஆட்சியே குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) எனப்படும். <b>தனிப்பட்ட அதிகாரங்கள்</b>: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 352-ஆம் பிரிவின்படி, இந்தியா முழுவதன் பாதுகாப்போ, அதனுடைய எந்த ஒரு நிலப் பகுதியின் பாதுகாப்போ, போர் அல்லது வெளிநாட்டுத் தாக்குதல் அல்லது உள்நாட்டுக்க கலகம் முதலியவற்றால் அழிக்கப்படக் கூடுமென்ற அஞ்சத்தக்க சூழ்நிலை தோன்றுவதாகக் குடியரசுத் தலைவர் கருதுவாராயின், அவர் ஒரு நெருக்கடி நிலைப் பேரறிக்கையை (Proclamation of Emergency) விடுத்தற்கு அதிகாரம் உடையவர்; இப்பேரறிக்கையானது அவரால் வீடுக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக நாடாளுமன்றத்தின் இரு மன்றங்களினாலும் ஒப்புக்கொள்ளப்பட்டால் தான் அது செல்லுபடியாகும். குரயரசுத் தலைவர் ஆட்சியை நிறுவும் பேரழிக்கையானது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப்பெற்றாலும், அது ஆறுமாத காலத்திற்குத்தான் நடைமுறையினிருக்கும் (பிரிவு 356): அப்பேரறிக்கை தொடர்ந்து இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுமாயின், மேலும் 6 மாத காலத்துக்கு நடைமுறையிலிருக்கும். ஆனால், எந்த தெருக்கடி நிலை பேரறிக்கையும் 3 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையிலிருந்தல் இயலாது. நெருக்கடிப் பேரறிக்கை நடைமுறையிலிருக்கும்போது, மாநில அரசின் நிருவாக அதிகாரமானது கையாளப்பட வேண்டி வழிகளை நடுவண் அரசு மாநிலத்துக்கு விடுக்கலாம்; நெருக்கடிக காலத்தில் நாடாளுமன்றம் மாநிலங்களுக்காகச் சட்டங்களைச் செய்யவும், வரிகளை விதிக்கவும் அதிகாரம் உடையது (பிரிவு 35-4) ஏதேனும் ஒரு மாநில அரசு இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெற இயலாதவாறு தடுக்கவல்ல ஒரு சூழ்நிலை அம்மாநிலத்தில் தோன்றியுள்ளதாக அதன் ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவர் செய்தி பெறுவாராயின், அப்போது ஒரு பேரறிக்கையை விடுத்து, மாநில அரசு அதிகாரங்களனைத்தையும் அல்லது ஒரு சிலவற்றை அதன் ஆளுநர் அல்லது வேறெந்த அதிகாரியின் அதிகாரங்களையும் தாமே எடுத்துக் கையாளலாம். மாநிலச் சட்டமன்றம் தன் அதிகாரங்களை நாடாளுமன்றத்தின் ஆணைப்படி கையாளுதல் வேண்டுமென்று கூறலாம். நெருக்கடிக் காலத்தில் அரசியலமைப்பின் எந்தப் பிரிவையும் செயற்படாமல் நிறுத்திவைக்கலாம் (பிரிவு 356, நெருக்கடிக் காலத்தின் அரசியலமைப்பிள் 19-ஆம்<noinclude></noinclude> j5t33c7mid4wqr8qjb1do8wyna5deau பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/589 250 641544 1957607 1926968 2026-08-08T07:02:09Z Sridevi Jayakumar 15329 1957607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியாட்சி|561|குடியாட்சி}}</noinclude>விதியில் கூறப்பட்டுள்ள பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, முதலிய அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்படலாம் (பிரிவு 358). நாடாளுமன்றத்துக்கு மாநிலப் பட்டியலில் கூறப்பட்டுள்ள எந்தப் பொருளையும் பற்றிச் சட்டம் செய்தற்கு நெருக்கடிக் காலத்தில் அதிகாரம் உண்டு. <b>அதிகாரங்களைப் பற்றிய சில கருத்துகள்</b>: வேறெந்தக் கூட்டாட்சி நாட்டிலும் காணப்படாத அளவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரிடம் அதிகாரங்கள் பெருமளவுக்குக் குவிக்கப்பட்டுள்ள காரணத்தால், இந்தியக் கூட்டாட்சி பெயரளவில்தான காணப்படுகிறதே தவிர நடைமுறையில் இல்லை என்றும் உண்மையில் இந்தியா ஓர் ஒற்றை அரசு நாடு தான் என்றும் (Unitary State) கூறுகின்றனர். இக்கருத்து முழுவதும் உண்மை அன்று: குடியரசுத் தலைவருக்களிக்கப்பட்டுள்ள விரித்த அதிகாரங்களெல்லாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில், நெருக்கடி நிலை உள்ள காலத்துக்கு மட்டுமே அவரால் கையாளப்படுவளயாகும். மேலும் இந்தியாவை ஒரு நாடாக இணைத்த ஆங்கிலேயர் நெடுங்காலமாக, 1919-ஆம் ஆண்டு வரையிலேனும், அதை ஒற்றை அரசு நாடாகவே ஆண்டுவந்தனர்; ஆட்சித்துறையில் சில வசதிகளுக்காக அவர்கள் மாகாணங்களுக்குச் சிறிது சிறிதாகக் கூடுதல் அதிகாரங்களை வழங்கி அவற்றைத் தன்னாட்சி உரிமையுடையனவாக ஆக்கி, 1935 இல் ஒரு கூட்டாட்சி முறையை மேல்நிலையிலிருந்து கீழ் நோக்கியவாறு ஏற்படுத்தினர். அதனால் மாகாணங்களின் மீது நடுவண் அரசின் கட்டுப்பாடு உறுதியாக இருக்கும் பொருட்டு நடுவண் அரசிடம் அதிகாரக் குவிப்பை ஏற்படுத்தினர். இந்த முறையைப் பின்பற்றியே இந்திய அரசியலமைப்புச் சட்டமும் வரையப்பட்டது. இந்திய இணையம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் பொருட்டும், இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் ஒரே சீரான வளர்ச்சிசம் முன்னேற்றமும் எல்லாத்துறைகளிலும் இருக்கும் பொருட்டும் இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளையுடைய இந்தியக் கூட்டாட்சி முறை நிறுவப்பட்டது.{{Right|<b>பா.சூ</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Gennings, Ivor,</b> Some Characteristics of the Indian Constitution, Oxford, 1953.<br> <b>Keith. A. B.,</b> A Constitutional History of India. 1600-1935, Methuen, 1938. <section end="குடியரசுத் தலைவர் ஆட்சி"/> <section begin="குடியாட்சி"/> {{dhr}} <b>குடியாட்சி</b>: ஒருசில கோட்பாடுகளையும், ஒரு குறிப்பிட்ட அரசியல் முறையையும் குறிப்பிடுவதுதாள் குடியாட்சி என்ற சொல், இருப்பினும் இதற் இச்சரியான விளக்கம் அளிப்பது எளிதன்று, மக்களின் அதிகாரம் என்ற பதத்திலிருந்து தோன்றியது. தான் குடியாட்சி என்ற சொல் குடியாட்சி என்பது ஒரு நடைமுறைக் கோட்பாடு (Realistic Normativism) கருதப்பட்டால் இருக்கக்கூடியதொன்றை அது சுட்டிக்காட்டுகின்றது என்று கூறலாம். குடியாட்சி (Democracy) என்பது ஒரு கற்பனையன் விலான நெறிமுறை (Utopian Normativism) என்று கருதப்பட்டால் குறைபாடற்ற சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அது குறிப்பிடுகிறது என்று கூறலாம். இப்பதத்திற்கு விளக்கம் அளிக்க முயற்சி எடுத்தவர்களிடையே கருத்தொற்றுமை காண்பதற்கில்லை, கட்சிகளிடையே போட்டி காணப்படும் அமைப்பில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பெரும்பான்மையினர். சிறுபான்மையினருடைய உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுதான் குடியாட்சி என்பது பெரும்பாலோரால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேது ஆட்சி முறைகளுள் ஒன்று நான் குடியாட்சி என்று கூறும்பொழுது பிற ஆட்சி முறைகளிலிருந்து இதனை வேறுபடுத்தும் பண்புகளைச் சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது. எதேச்சாதிகார முறையைத் தவிர்த்துப் பிற எல்லா அரசியல் முறைகளையும் குடியாட்சி என்று குறிப்பிடுவதும் வழக்கமாகி விட்டது. ஆனால் அது பொருத்த மற்றது. குடியாட்சி (Demokratia) என்ற சொல் கி. மு. 5 ஆம் நூற்றாண்டில்தான் முதல் முதலில் பயன்படுத்தப்பட்டது. குடியாட் என்பதை கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் ஓர் அரசியல் கோட்பாடாக மட்டுமே கருதி வத்தனர். குடியாட்சியின் சமூகப் பண்புகளை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் அலெக்கி த தாக்கலில் (Alexis De Tocqueville) என்ற பிரஞ்சு அறிஞர், அதன் பின்பு சமூகக் குடியாட்சி (Social Democracy) என்ற பதம் பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. பொருளாதாரக் குடியாட்சி (Econimoic Democracy) என்ற சொல்லை மார்க்சிசம் கையாண்டது. தொழிற் குடியாட்சி (Industrial Democracy) என்ற சொல்லை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை கூட்டுறவுக் குழுச் சமவுடைமையைச் சரும் சமூகக் குடியாட்சியும் சமநிலைக் குடியாட்சியும் (Socialist Democracy) ஒன்றல்ல. அரசால் செயற்படுத்தப்படும் ஒரு கொள்கையைந்தான் பின்னது குறிப்பிடுகிறது. குடியாட்சிப் பண்புடைய தாகர் சமுதாயத்தை மாற்றும் முறைதான் சமூகக் குடியாட்சி எனப்படும். இதனை ஒரு வாழ்க்கை முறை என்றும் கூறலாம்.{{nop}}<noinclude> <b>வா.க. 7-36</b></noinclude> ln5qdktqyva9phqfamiuiq13gozra9u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/590 250 641545 1957608 1926977 2026-08-08T07:03:15Z Sridevi Jayakumar 15329 1957608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியாட்சி|562|குடியாட்சி}}</noinclude>அரசியலையும் நீதி சமத்துவத்தையும் குறிக்கோளாகக் கொண்டது அரசியற் குடியாட்சி (Political Democracy). தகுதிச் சமநிலையைக் காட்டுவது சமூகக் குடியாட்சி, பொருளாதாரச் சமநிலையைக் காட்டுவது பொருளாதாரக் குடியாட்சி அரசியல் குடியாட்சி இல்லாவிடில் பொருளாதாரக் குடியாட்சியை அடைய முடியாது. ஆனால், மார்க்சியக கோட்பாட்டின்படி பொருளாதாரக் குடியாட்சியானது அரசியல் குடியாட்சியை அகற்றுன்றது. பொருளாதாரக் குடியாட்சியுடன் தொடர்புடையது தான் தொழிற்குடியாட்சி, தொழிற்சாலைகளுக்குள் காணப்படும் குடியாட்சி முறையைக் குறிப்பிடுவது தான் தொழிற்குடியாட்சி. மக்களின் குடியாட்சி (People's Democracy), முற்போக்குக் குடியாட்சி (Progressive Democracy) சோவியத்துக் குடியாட்சி (Soviet Democracy) ஆகியவற்றை வகைப்படுத்துவது எனிதன்று. மக்களின் குடியாட்சி என்ற சொல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்புதான் வழக்கத்திற்கு வந்தது. குடியாட்சி என்பதை ஆட்சிமுறையாகவும் கருதலாம். குடியாட்சி என்ற சொல்லின் பொருளுக்கு எந்த முறையில் செயற்பட்ட ஆட்சிமுறை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஏதென்சு (Athens) நகரத்தில் மட்டுமே காணப்பட்டது. அதீனிய மக்களுக்கிருந்த அதிகாரத்திற்கு இணையாக அதன் பின் எந்த மக்களுக்கும் அதிகாரம் இருந்ததில்லை, இன்றைய குடியாட்சி முறை அதனின்றும். முற்றிலும் மாறுபட்டதாரும். பங்கேற்பிற்குமாறாகப் பிரநி நிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இன்றைய குடியாட்சி, அதிகாரப் பயன்படுத்தலுக்கு மாறாக அதிகார ஒப்படைத்தலைத்தான் இன்று குடியாட்சியில் காணமுடிகிறது, மக்களால் மக்கள் மீது செலுத்தப்படும் ஆட்சி என்று கிரேக்கக் குடியாட்சியை வருணிக்க முடியும். இந்த விளக்கம் இன்றுள்ள மக்களாட்சிகளுக்குப் பொருந்தாது, ஏனென்றால் ஆட்சி புரிவோர் ஆட்சி புரியப்படுவதில்லை. கிரேக்க முறைக் குடியாட்சி இன்றுள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றதன்று. ஆனால், எல்லாக் காலங்களிலுமிருந்த குடியாட்சிகளிலும் குடிமக்கள், சமூக சமத்துவத்துக்கான சமூ உரிமைகளையும், ஆட்சியில் பங்கேற்றுக் கொள்ளுவதற்கு உதவும் அரசியலுரிமைகளையும் பெற்றிருந்தார்கள் என்பது காணப்படுகிறது.{{Right|<b>ஆ.ஜா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Aimond, Gabriel, A. and Coleman, James, S.</b> (Eds) The Politics of the Developing Areas, Print ceton University Press, 1960.<br> <b>Bryce, James,</b> Modern Democracies, 2 Vols, Macmillan, New York, 1921.<br> <b>Clegg. Hagha,</b> A New Approach to Industrial Democracy, Oxford, Blackwell, 1960. <section end="குடியாட்சி"/> <section begin="குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு"/> {{dhr}} <b>குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு</b> என்பது சமநிலைக் கோட்பாட்டின் (Socialism) ஒருவகை (School) ஆகும். பொதுவாகப் புரட்சி வழியிலல்லாமல், சமநிலைக் கோட்பாட்டின் குறிக்கோள்களை அடைவதற்குக் குடியாட்சி முறைகளைச் கூறும் கோட்பாடே குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு (Democratic Socialism) என்று கூறப்படுகிறது. இக்கோட்பாடு அண்மையில், இரண்டாம் உலகப் போருக்குப்பின் சுதந்திரத்துடன் தோன்றிய இந்தியா போன்ற புதிய நாடுகளில் மக்களுடைய ஆதரவைப் பெற்றது. அதற்குக் காரணம், இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் ஏறக்குறைய 200 ஆண்டுகளாக, இருந்து வந்த நடியாட்சிமுறையானது அரசியல் சமத்துவம் (Politicial Equality) என்ற அடிப்படையிலமைந்து, ஓரளவேனும் பொருளியல் சமத்துவமில்லாமல், உண்மையில் செல்வர்களுடைய ஆட்சியாக (Oligarchy) இயங்கியதே ஆகும். குடியாட்சி நிறுவன அமைப்புகளுக்குப் பின்னர் உண்மையில் ஆட்சியில் உரிமை பெற்றிருந்தவர் செல்வர்களாக இருப்பின், அது உண்மையில் குடியாட்சி ஆகாது. ஆகையால், உண்மையான குடியாட்சியிலே பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெரிதும் குறைக்கப்பட்டு, எல்லாக் குடிகளுக்கும் பெருமளவு பொருளாதார சமத்துவம் இருந்தால் தான் குடிகள் யாவரும் ஆட்சியில் சம அரசியல் உரிமையோடு பங்கு கொள்ள இயலும் என்ற கருத்து வேரூன்றிறறு. இக்கருத்தே பல புதிய சுதந்திர நாடுகளிலும், பழைய முதலாளித்துவ முறையைப் பின்பற்றிய நாடுகளிலும் ஆளுவோரால் பின்பற்றப்பட்டுத் தொழில், வாணிகத் துறைகளில் பெருமளவு செயற்படுத்தப்பட்டது. <b>கோட்பாட்டின் கூறுகள்</b>: மக்களுக்கு அரசாங்கத்தில் பங்கு இருத்தல் வேண்டுமென்ற குடியாட்சிக் கொள்கையும், குடியாட்சி உரிமைகளைத் திறமாகக் கையாளுதற்கு உதவியாகச் சமூகத்தில் பெருமளவு ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமளிக்காத பொருளாதார சமத்துவம் இருத்தல் வேண்டுமென்ற சமநிலைக் கொள்கையும் மனித சமூக வரலாற்றின் தொடக்கத்திலேயே காணப்பட்டன. குடியாட்சியின் இயல்பும்,<noinclude></noinclude> 6w19kanqn247ik4odns30q60bjdyzhi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/592 250 641547 1957610 1926982 2026-08-08T07:04:52Z Sridevi Jayakumar 15329 1957610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியாட்சிச்...|564|குடியாட்சிசார்...}}</noinclude>சருவாதிகார முறையில் சமநிலைக் கோட்பாட்டைச் செயற்படுத்தாமல் விடுத்தன. அதனால் புதிய வகைச் சமநிலைக் கோட்பாடுகள் தோன்றின. ஆங்கில நாட்டின் குடியாட்சி மரபுகளின் வழியிலே சமநிலைக் கொள்கையின் குறிக்கோள்களை அடைதற்காகத் தொழிற்கட்சி என்னும் அரசியற் கட்சி கி.பி. 19-ஆம் நூற்றாண்டினிறுதியில் தோன்றிற்று. அது அதிக வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விடுதத்தை உயர்த்தியும், பல தாராள சீர்திருத்தங்களைச் செய்தும், ஓரளவு சமூக, பொருளியல் சமத்துவத்தைத் தோற்றுவித்தது. புரட்சி வாயிலாகவோ, சருவாதிகார ஆட்சியின் வாயிலாவோ சமநிலைக் குறிக்கோள்களை அடையாமல், மக்களுடைய பெரும்பான்மை ஆதரவைச் சுதந்திரத் தேர்தல்கள் வாயிலாகப் பெற்று, ஆட்சியை அமைத்துப் பல பொருளியற் சீர்திருத்தங்களைச் செய்தல் இயலுமென்று அந்நாடு எடுத்துக்காட்டிற்று. <b>இந்தியாவில் குடியாட்சிச் சமநிலைக் கொள்கை</b>: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க இயல்பு. அதில் கூறப்பட்டிருக்கும் மத்திய மாநில அரசாங்கங்கள் ஆங்கிலப் பாராளுமன்றக் குடியாட்சி வகையைச் சார்ந்து இருப்பதே ஆகும். அவைவெல்லாம் குடியாட்சி அரசாங்கத்தின் கூறுகளைப் பெற்றுள்ளன. அவ்வரசியலமைப்பு சமூக, அரசியல் துறைகளில் சம உரிமைகளை வழங்குவதோடு, பொருளியல் துறையில் சமத்துவத்தை நிலை நிறுத்தற்கு ஆவன செய்யுமாறு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு அரசு இயக்க நெறி விதிகளை (Directive Principles of State Policy) வகுத்துள்ளது. மேலும், உருசியாவில் செய்யப்படுதலைப் போல, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி (Planned Economic Development) என்ற அதிகாரத்தை மத்திய அரசாங்கத்துக்கு அளித்துள்ளது. ஆறு ஐந்தாண்டுத் திட்டங்கள் 1951-இலிருந்து கொண்டு வரப்பட்டு மக்களால் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்குப் பொறுப்பாக இயங்கும் மத்திய, மாநில அரசாங்கங்களின் வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்திந்தியக் காங்கிரசுக் கட்சி தான் நடத்திய ஆவடி மாநாட்டிலும் (1955), புலனேசுவர மாநாட்லும் (1964) குடியாட்சிக் சமநிலைக் கொள்கையை நிறைவேற்றுதலே தன் பணி என்று கூறிற்று. இக்கொள்கையின் விளைவாகப் பெருமளவு முதலீடு தேவைப்படுகிற பல களரகத்தொழில்களை அரசாங்கமே முதல் போட்டு நடத்துகிறது; சிலவற்றில் பெருமளவு பங்கை அரசும், மீதியைத் தனியாரும் போடுகின்றனர்; சில தொழில்கனை நடத்துதற்கு அரசாங்கம், மானிய உதவியும், குறைந்த வட்டிக்குக் கடனுதவியும் அளிக்கின்றது. அது ஏழை மாணவருக்கு இலவசக் கல்வி, மருத்துவம், வேலை, உயிர் காப்பீட்டு வசதி முதலியவற்றை அளிக்கிறது. வருமான அளவுக்கேற்பப் படி நிலைகளில் (Slab Systems) வரி விகிதத்தை உயர்த்திப் பொருளாதாரத் துறையில் சமத்துவத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Joad. C.E.M.</b> Introduction to Modern Political Theory, Oxford, 1924.<br> <b>Coker E.W..</b> Recent Political Thought, Appleton, 1934.<br> <b>Laidler ri.W.,</b> Sociol Economic Movements. Routledge & Kegan Paul, 1949. <section end="குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு"/> <section begin="குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு"/> {{dhr}} <b>குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு</b>: பொதுவுடைமைக் கட்சியின் கட்டுப்பாட்டையும் தரத்தையும் காப்பாற்றும் பொருட்டுச் சோவியத்து யூனியனின் மக்கள் தொகையில், ஒரு மிகச் சிறிய பகுதியினரே பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். கட்சியின் வலிமையானதுகட்சி உறுப்பினர்களிடையே காணப்படும் கருத்தொருமைப்பாடு, கட்சிக் கட்டுப்பாடு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அவர்களின் வாழ்க்கை, கட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து பிறழாத உறுப்பினர்களின் வாழ்க்கை ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது. ஆகையால், சோவியத்துக் குடிமக்கள் கட்சி உறுப்பினர்களாக ஆவதற்குக் கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சோவியத்துக் குடிமகன் ஒரு கட்சி உறுப்பினராக வரவேண்டுமெனில் திறமையும் தகுதியும் பெற்றிருந்தல் வேண்டும். உள்ளூர்க்கட்சி நிறுவனம் நடத்தும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். குறைந்தது மூன்று ஆண்டுகளாவது மூன்று கட்சி உறுப்பினர்கள். அவர் உறுப்பினர் ஆவதற்குப் பரிந்துரை செய்து, மாவட்டக் கட்சிக்குழு அவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தால்தான் அவர் உறுப்பினராக முடியும். சோவியத்து அரசியலமைப்பின் 6-ஆம் விதி பொதுவுடைமைக் கட்சிக்கு மிகப் பெரிய பங்கு அளித்திருகிறது. இங்விதி பொதுவுடைமைக் கட்சிக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட உரிமை அளித்திருக்கிறது சோவியத்து அரசாங்கத்தில் பல்வேறு அரசாங்க நிறுவனங்கள். அரசாங்கத்தின் பணிகளைச் செய்வதற்கு வழி வகுக்கப்பட்டிருந்த போதிலும், அவை பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்களின்<noinclude></noinclude> ryceurqmazl9wdopd7h69assvp8y1dt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/594 250 641549 1957613 1926985 2026-08-08T07:06:59Z Sridevi Jayakumar 15329 1957613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியாட்சிசார்.....|566|குடியாத்தம்}}</noinclude><b>John N. Hazard,,</b> The Soviet System of Government, Chicago, 1957. <section end="குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு"/> <section begin="குடியாட்சிசார் அதிகாரப் பரவல்"/> {{dhr}} <b>குடியாட்சிசார் அதிகாரப் பரவல்</b>: மக்களுக்காக, மக்களுடைய பிரதிநிதிகளால் ஆளப்படும் ஆட்சி குடியாட்சி என ஆபிரகாம் லிங்கன் குடியாட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார். குடியாட்சியுடைய நாடுகளில் அரசியலமைப்புச் சட்டம் உயர் அதிகாரம் பெற்று விளங்குகிறது. இவ்வரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சியாக இருந்தால் நடுவண் அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் அதிகாரத்தைப் பிரித்து வழங்குகிறது. ஒற்றையாட்சி அமைப்புடைய அரசாக இருந்தால், நடுவண் அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்குகிறது. குடியாட்சியுடைய நாடுகள், பல்வேறு பணிகளைச் செயற்படுத்துகின்றன. இப்பணிகள் நடுவண் அரசாங்க அதிகார மூலமாகவோ, நடுவண் - மாநில அரசாங்க அதிகார மூலமாகவோ மாநில அதிகார மூலமாகவோ செயற்படுத்தப்படுகின்றன. நடுவண் - மாநில அரசாங்கங்களின் பணிகள், சட்டம் ஒழுங்கு காப்பதும், நாட்டைப் பாதுகாப்பதும் வரி வாங்குவதும், நாணயம் அச்சிட்டு வெளியிடுவதும், வெளி உறவுகளைக் கவனிப்பதுமாக இருந்த காலத்தில், நடுவண் - மாநில அரசாங்கங்கள் தந்தம் அரசாங்க அதிகாரிகள் வழியாக மேற்கூறிய பணிகளைச் செயற்படுத்தி வந்தன. ஆனால், இப்பொழுது எல்லாக் குடியாட்சி நாடுகளும் வேளாண்மை, கால்நடை, கூட்டுறவு, நீர்ப்பாசனம், குடிசைத் தொழில்கள், அடிப்படைக் கல்வி, உள்ளூர்ச் செய்தித் தொடர்பு, சுகாதாரம், மருத்துவ வசதி, உள்ளுர்த் தேவைகள் போன்ற பல்வேறு வளர்ச்சிய பணிகளை நிறைவேற்றுகின்றன. வளர்ச்சிப் பணிகளைத் திறம்படச் செயற்படுத்தப் போதுமான அளவு அதிகாரமும், குறிப்பிட்ட நிதிவசதிகளும் கொண்ட புதியதொரு ஊரக உள்ளாட்சி நிறுவன அமைப்புகளை உருவாக்குவதுதான் குடியாட்சிசார் அதிகாரப்பரவம் (Democratic Decentralisation) எனப்படும். <b>இந்தியாவில் செயற்படும் வகை</b>: இந்தியாவில் பல்வந்தரே மேத்தா, குடியாட்சிசார் பன்முகப்படுத்தல் அடிப்படையில் மூன்று படிநிலை அமைப்பில் புதிய உள்ளாட்சி நிறுவனங்கள் ஏற்படப் பரிந்துரை செய்தார். (காண்க: உள்ளாட்சி முறை), அவரது பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி என்ற மூன்று படிநிலை அமைப்பில் ஊரக உள்ளட்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற உள்ளாட்சி நிறுவனம் பெரிய அளவிலான பகுதியாகவோ சிறிய அளவிலான பகுதியாகவோ இருக்கக் கூடாது. பெரிய பகுதியாக இருந்தால் மக்களின் ஆர்வத்தை வளர்ச்சிப் பணிகளில் அதிக அளவில் ஊக்குவிக்க இயலாது. சிறிய பகுதியாக இருந்தால் தேவையான அளவிற்குத் திறமையான பணியை வருமானக் குறைவினால் செய்ய இயலாது. குடியாட்சி பன்முகப்படுத்தல் அடிப்படையில் அமைத்த ஊரக உள்ளாட்சி நிறுவனங்கள் சிறந்த முறையில் செயற்பட வேண்டுமானால், உள்ளாட்சி நிறுவனங்களுக்குப் போதுமான அதிகாரங்களும் பொறுப்புகளும் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட ஒப்படைக்கப்படவேண்டும். உள்ளாட்சி நிறுவனம் பிரதிநிதிகள் தேர்த்தெடுக்கப்பட்டு நன்கு செயற்பட, உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட இடைவெளிகளில் நடைபெறவேண்டும். மேற்கூறிய குறைபாடுகள் நீக்கப்பட்டால் குடியாட்சிசார் அதிகாரப்பரவல் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்கள் சிறந்த முறையில் செயற்பட முடியும்.{{Right|<b>கே.பா.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Maheshwari, S.R.,</b> Local Government in India, Lakshmi Agarwal, Agra, 1984. <section end="குடியாட்சிசார் அதிகாரப் பரவல்"/> <section begin="குடியாத்தம்"/> {{dhr}} <b>குடியாத்தம்</b> தமிழ் நாட்டில் வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளதொரு நகரம், குடியேற்றம் என்ற சொல் மருவி குடியாத்தமாகியது. இந்நகரம் வாரத்தோறும் நடைபெறும் சந்தைக்கும் கால்நடைச் சந்தைக்கும் சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள மக்களின் முதன்மைத் தொழில் நெசவுத் தொழிலாகும். இவ்வூரிலிருந்து புகையிலை, புவி, தோல், வெல்லம், தீப்பெட்டி முதலியன தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நகர் கி.பி.1885-ஆம் ஆண்டு முதல் நகராட்சிக் கழக நிருவாகத்தின் கீழ் வளர்ந்து வந்துள்ளது. கடந்த எண்பது ஆண்டுகளில், நகராட்சி இந்நகரின் பல முன்னேற்றங்களுக்கான வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இப்பகுதியில் அண்மை மாநிலங்களிலிருந்து மக்கள் குடியேறிய பிறகு இப்பகுதி ஏற்றம் பெற்றதால், இதற்கு ‘குடி ஏற்றம்’ என்று பெயர் அமைந்தது என்று கூறுவாரு முளர், பல்வேறு வகையான மக்கள் இங்குக் குடியேறியிருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பகைமை கொள்ளாது ஒற்றுமையாக இருந்து வத்துள்ளதாக அறியக் கிடக்கிறது. இதைச் சுற்றியுள்ள, ஆத்திரா, கருநாடகம், கேரளம் ஆகிய மூன்று பகுதிகளிலிருந்தும் மக்கள் அக்காலத்தில் இங்குக் குடியேறியிருக்கக் கூடும். என்று நம்பப்படுகிறது. பல மூலப் பொருள்<noinclude></noinclude> 08fxro72ewzjgkp6z1qb7o2488huc5d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/595 250 641550 1957615 1926989 2026-08-08T07:09:08Z Sridevi Jayakumar 15329 1957615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியானவர் கலகங்கள்|567|குடியானவர் கலகங்கள்}}</noinclude>களை வெளியிலிருந்து கொணர்ந்து இங்கு உள்ள மக்கள், பல தொழில்களை நடத்தி வந்துள்ளனர், அத்தகைய தொழில்களில் முக்கியமாகத் தீப்பெட்டித் தொழிற்சாலை குறிப்பிடத்தக்கது. சிவகாசிக்கு அடுத்தபடியாக, சிறப்பான இடத்தை இந்நகரம பெறுகிறது. அரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இத்தொழிற்சாலையால் பயன் பெறுகின்றனர். இந்த நிலையத்தில், 10,000 தொழிலாளர்களுக்கு இயல் வேலை செய்கின்றனர். ஊருக்குக் கிழக்கில் ஒரு சிறப்புப் பெற்ற விநாயகர் கோயிலும் மேற்கில் கரும்புலீசுவரர் கோயிலும் வீளங்குகின்றன, ஒரு காலத்தில் ஒரு கரும்புலி ஒரு குழந்தையைக் கல்விக் கொண்டு ஓடியதாகவும், இக்கோயிலின் அருகே சென்றதும் அதை அங்கேயே போட்டுவிட்டு ஓடி விட்டதாகவும் ஒரு எதை வழங்குகிறது. கரும்புலியின் அச்செயலுக்குக் காரணமான ஈசனைக் கரும்புனீசுவரர் என்று பெயர் கொடுத்து மக்கள் வழிபாடு செய்து வத்ததாகக் கூறப்படுகிறது. இந்தகரம் கௌண்டன்ய மகாநதியின் இருகரைகளிலும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் கங்கை அம்மன் திருவிழா புகழ் பெற்றது. இந்நகரம் பல போட்டைகளைக் கொண்டு விளங்குகிறது. புகைவண்டி நிலையமும் உள்ளது இந்நகரத்தின் அருகில் உள்ள மேல் ஆலந்தூர் என்ற இடத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் ஒன்றைத் தமிழக அரசு நிறுமியுள்ளது, இந்நகரத்தைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் தேங்காய், கரும்பு, நெல் முதலிய பயிர் வகைகள் மிகச் சிறந்த அளவில் பயிரிடப்படுகின்றன. இவ்வூரில் மேல்நிலைப் பள்ளிகளும் ஒரு கல்லூரியும் ஒரு பல்துறைத் தொழில்நுட்பக் கல்லூரியும் உள்ளன. விரைவாக வளர்த்து வரும் வட்டங்களில் குடியாத்தமும் ஒன்று, இந்நகரத்திம் மக்கள்தொகை 74,408 (1981).{{Right|<b>சு.இரா.</b>}} <section end="குடியாத்தம்"/> <section begin="குடியானவர் கலகங்கள்"/> {{dhr}} <b>குடியானவர் கலகங்கள்</b>: சமத்துவத்தைப் பற்றித் தொழிலாளருடைய கோட்பாடு ஒன்றை முதன்முதலில் ஆங்கில வரலாற்றில் தோற்றுவித்த நிகழ்ச்சி 1381-ஆம் ஆண்டின் குடியானவர் கலகம் (Peasants' Revolt) ஆகும். இதைப்போலவே பிரான்சில் கி.பி.1351-இல் குடியானவர் கலகமும், செருமனியில் மார்ட்டின் லூதருடைய மறுப்புச் சீர்திருத்த இயக்கம் நடைபெற்ற காலத்தில் தோன்றிய கி.பி. 1524-25-ஆம் ஆண்டுக் குடியானவர் போரும் பலவித சமூக, அரசியல் கருத்துகளையும் விளைவுகளையும் தோற்றுவித்தன. <b>ஆங்கிலக் குடியானவர் கலகம்</b> இங்கிலாத்தின் வரலாற்றில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கலகமாகும். இரண்டாம் இரிச்சர்டு (Richand II) என்பவர் இங்கிலாந்தின் மன்னராக இருந்தபெழுது ஏற்பட்ட முக்கியமான நிகழ்ச்சி குடியானவர் கலகம் (The Peasants Revolt). இது 1381-இல் நடைபெற்றது. இதற்குப் பல காரணங்கள் இருந்தன பொதுவாக அம்மன்னன் ஆட்சி விரும்பத்தக்கதாக இல்லை. மன்னன் பட்டத்திற்கு வரும்போது பதினோரு வயதினை இருந்ததால், ஒன்பதின்மர் குழு அரசியலை இந்த ஒன்பது உறுப்பினர்களும் ஒற்றுமையாக இயங்கவில்லை. பாராளுமன்றம் தனது உமீமைகளுக்காகப் போராட்டம் நடத்த முற்பட்டது. ஒரு நிலையான கொள்கை அரசியலின் பின்பற்றப்படவில்லை. நாட்டின் செல்வர்கள் சுயநலத்திற்காக மக்கள் துன்புறும்வகையில் சட்டங்களை நிறைவேற்றிவந்தனர், கருங்கொள்ளை நோய் பல தொழிலாளர்களை மாய்த்துவிட்டதால் நாட்டின் உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. லேளாண்மைப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. ஏழை உழவர்கள் உயிர் வாழ்வதற்கே போராட வேண்டியதாயிற்று. பல நெருக்கடிகளுக்கு உள்ளாயிருந்த குடியானவர்கள் மீது மடாலய அதிபர்களும், பிரபுக்களும் தொழிலாளர் சட்டங்களை இரக்கமின்றி நிறைவேற்ற முற்பட்டதால் அவர்கள் நிலை மிகவுள் வருந்தத்தக்கதாயிற்று. சட்டங்களை எதிர்த்துக் குடியானவர்கள் கலகம் செய்து, மடாலயங்களையும் தாக்கலாயினர் நாட்டின் பிரபுக்களும் அவர்களுக்கு உதவி செய்ய முற்பட்ட சட்ட வல்லுநர்களும் தாக்குதல்களுக்கு உட்பட்டனர். பல சட்ட அறிஞர்கள் கொலையுண்டனர். அங்காலத்தில் பிரான்சுகளும் இங்கிலாந்துக்குமிடையே ‘நூறாண்டுப் போர்’ தொடர்ந்து நடைபெற்று வந்தது. பிரான்சு நாட்டில் ஆங்கிலேயப் படையினர் படுதோல்வியடைந்து வந்தனர். போசி திறமையான முறையில் நடத்தப்படாததால் மந்தனின் மனக்கசப்பு மேலும் அதிகரித்தது. போவரத் தொடர்ந்து நடத்த அரசியலாருக்குப் பொருள் தேவைப்பட்டதால் புதிய வரிகள் விதிக்கப்பெற்றன. பாராளுமன்றம் கி.பி 1381-இல் தலைவர் ஒன்றை விதித்தது (Polltax). அதன்படி ஏழை ஒவ்வொருவரும் ஒரு சில்லிங்கும் (Shilling), பணக்காரர் ஒவ்வொரு வரும் 3 பவுன்களும் கொடுக்கவேண்டுமெனவும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த வரி மூலம் 1,60,000 பவுன் வசூலிப்பது என்று பாராளுமன்றம் முடிவு செய்தது, இந்த வரி குடியானவர்களைப் பெரிதும் பாதித்தது. முன்னரே மனம் நொந்து வருந்திக்கொண்டி<noinclude></noinclude> mc96l4r6n2gik8r4yscqaie543dpvoe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/597 250 641559 1957616 1927086 2026-08-08T07:11:14Z Sridevi Jayakumar 15329 1957616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியானவர் கலகங்கள்|569|குடியியல்....}}</noinclude>தலைமை அதிகாரத்தை மறுத்துச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி வந்தனர். இக்கருத்துகளின் விளைவாகச் சமூக சமத்துவக் கருத்துகளும், தனியால் தீர்ப்பதிகாரக் கருத்துகளும் செருமனியக் குடியாவை தொழிலாளரிடையே வேரூன்றவே, கி.பி. 1522-23-ஆம் ஆண்டுகளில் சிறுமானிய வீரர்கள் பெரிய பிரபுக்களுக்கெதிராகக் கலகம் செய்தனர்; அதைத் தொடர்ந்து, சிறு குடியானவ தொழிலாளர் கூட்டங்கள் தென் செருமனியில் உள்ளூர் நில உடைமையாளர் உதவியுடன் பெரிய பிரபுக்களின் வீடுகளைக் கொள்ளையடித்தனர் பெரிய பிரபுக்கள் இக்கலகத்தை ஒடுக்க உறுதி கொண்டனர். குடியானவர்களுடைய மிகையான செயல்களைக் கண்ட உலூதர், அவற்றால் தம் ஆதரவாளர்கள் பலர் பிரிதலை விரும்பாமல், அவர் நடுத்தர வகுப்பாரையும் அரசர்களையும் ஆதரித்துக் ‘கொள்ளைக்கார, கொலைகாரக் குடியானவ கூட்டத்தாருக்கு எதிர்ப்பு’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டு, குடியானவர் கலகங்களைச் கடுமையாக ஒடுக்குமாறு அரசர்களை வெளிப்படையாகத் தூண்டினார். துரிஞ்சியா மாநிலத்தில் குடியானவர் தலைவராகிய தாமசு மன்ட்சர் என்பவர் கொல்லப்பட்டார். மற்ற இடங்களில் குடியானவர்கள் விலங்குகளைப் போன்று ஒடுக்கப்பட்டனர். பிற்கால மார்க்சியக் கோட்பாட்டினர், இந்த கி.பி.1524-25-ஆம் ஆண்டின் செருமனியக் குடியானவர் போரை ஒரு சிறு தொழிலாளர் புரட்சியாகக் கருதுகின்றனர். மற்றும் சிலர் உலூதர் கற்பித்த தனியார் தன்னெறியிலிருந்தும், தனியார் உத்திபிலிருந்துந்தான் செருமானியக் குடியானவரிடையே குருமார் ஆட்சிக்கு எதிர்ப்புத் தோன்றிற்று என்று கூறுகின்றனர். <b>குடியானவர் கலகங்களின் சிறப்புத் தன்மை</b>: இங்கிலாந்தில் தோன்றிய சமூக சமத்துவக் கோட்பாட்டிற்குச் சமய இயம்புடைய ஒரு வடிவம் கொடுக்கப்பட்டது; ‘யாவரும் மனிதரென்ற நிலையில் ஒருவருக்கொருவர் சமமானவர்தாம்’ என்ற கருத்து எளிய சாதாரண வகுப்பு மக்களிடையே ஆழமாக வேருன்றியதற்குக் காரணம், அவர்கள் அக்கருத்தைக் கிறித்தவக் கோட்பாடுகளாகிய சகோதரத்துவம் (Brother- hood), சமத்துவம் ஆகியவைகளோடு ஒப்பிட்டே எண்ணினர். ஒடுக்கப்பட்ட, தாழ்ந்த நிலையிலுள்ள அவர்கள் சமூக சமத்துவக் கருத்தைச் சமய உணர்வோடேயே ஆர்வத்தோடு வரவேற்றனர். இங்கிலாந்தில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் சமயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பிய சான் விக்ளிப்பு (Join Wycliffe) என்பாருக்கும். அவருடைய ஆதரவாளர்களுக்கும். பொகிமியாவில் சமயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பிய சான் அக (John Hass) என்பாருக்கும் அந்தந்த நாடுகளில் தாழ்ந்த வகுப்பாரிடையே தான் வரவேற்பும் ஆதரவும் இருந்தன; மனித சட்டங்களாலும் நிறுவனங்களாலும் விடுக்கப்பட்ட சலுகை உயர்வு தாழ்வுகளும், தரங்களும் இல்லாமல், கிறித்தவர்களெல்லாகும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் வாழுகின்ற ஒரு பொதுவுடைமை அமைப்பையே கிறித்தவ மறை நூல் (Gospel) கூறுகிறதென்ற கருத்து பொகீமியாவில் பல சமயப் பிரிவினரிடையே காணப்பட்டது. ஆகையால், அவர்களுடைய இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக (Mass Movement) முதன் முதலாகத் தோன்றிற்று; அவ்வாறு தோன்றுதற்குக் குடியானவர் கலகமும் உதவி செய்தது. செருமனியில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய குடியானவர் கிளர்ச்சிகளை நடுத்தர வகுப்பார் வெறுத்ததனாலும் உலூதர் தம் சமயர் சீர்திருத்தக் கருத்துகளை உலகியலரசர்களுடைய ஆதரவில்லாமல் செயற்படுத்துதல் இயலாது என்று மிகத் தெளிவாக உணர்ந்ததனாலும், குடியானவர் கிளர்ச்சிகளை நடுத்தர வகுப்பாருடைய ஆதரவோடு ஒழித்துவிடுமாறு உலூதர் அரசர்களைத் தூண்டி, அவர்களை ஆதரித்தார். இவ்வாறு சமயச் சீர்திருத்த இயக்கமானது, முன்பே தோன்றியிருந்த பொருளாதாரக் காரணிகளோடு சேர்ந்து, அரசருடைய அரசாங்கத்துக்கு உள்நாட்டுத் துறைகளிலும், அயல்நாட்டு உறவுகளிலும், வரம்பில்லாத அதிகாரத்தை உருவாக்கி அளித்தது.{{Right|<b>தெ.பா., பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Gooch, G.P.,</b> Political Thought ia England from Bacon to Halifax, London, 1926.<br> <b>Hearashaw, H.J.C.,</b> The Social and Political Ideas of Same Great Thinkers of the Renaissance. and Reformation, London. 1925.<br> <b>Hilton R.H. and Mekisack, May,</b> The English Rising of 1381, London, 1950.<br> <b>Trevelyan, G.M. and Powell E.(Ed.),</b> The Peasants Rising and the Lollards, London, 1899. <section end="குடியானவர் கலகங்கள்"/> <section begin="குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்"/> {{dhr}} <b>குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்</b>: இச்சட்டம் 1955-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. இதனைச் சமூக உரிமைப் பாதுகாப்புச் சட்டம் எனவும் கூறலாம். இது பல்லாண்டு காலமாகத் தாழ்த்தப்பட்ட இனமக்களுக்கு எதிராக மற்ற இனமக்கள் புரிந்து<noinclude></noinclude> 3wtmxsc7ln5b77d0qgw9bdoncxgedr8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/598 250 641560 1957617 1927095 2026-08-08T07:13:35Z Sridevi Jayakumar 15329 1957617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியிருப்புகள்|570|குடியிருப்புகள்}}</noinclude>வந்த கொடுமைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இயற்றப்பட்டது. <b>சட்டக் கூறுகள்</b>: தாழ்த்தப்பட்ட இனமக்கள் பொதுவீதிகளில் நடக்கவும், குடைகள், செருப்புகள், மேலாடைகள் அணிந்து செல்லவும்; பொதுக் கிணறு, குனங்களில் முறையே நீரெடுக்கவும் குளிக்கவும்: ஏனையோரோடு வீடுகட்டிக் கொள்ளவும்: பொது உணவுவிடுதி, கேளிக்கை ஆகிய இடங்களில் கலந்து கொள்ளவும் மற்ற இனமக்களால் விதிக்கப்பட்டிருந்த தடைகள் இச்சட்டத்தால் அகற்றப்படுகின்றன. இத்தகைய தடைகளை எவரும் விடுக்கும்போது அவர் இச்சட்டத்தால் தண்டிக்கப்படுவார். பொது நிறுவனங்கள் கூட இத்தகைய குற்றங்களை இழைக்கும் போது தண்டிக்கப்படுகின்றன. ஒரு பகுதியில் வாழும் மக்கள் ஒன்றுகூடி இச்சட்டத்தில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு குற்றத்தை இழைக்கும்போது அவர்களுக்கு எதிராக அரசாங்கம் ஒரு மொத்தத் தொகையைத் தண்டமாக விதிக்கவும் இச்சட்டம் அனுமதியளிக்கிறது. ஒரு தடவைக்குமேல் இக்குற்றங்களைச் செய்கிறவர்கள் கடுமையான சிறைத் தண்டனையும் கூடுதல் தண்டத் தொகையும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவர். மேலும், பொருள்களைத் தாழ்த்தப்பட்டோருக்கு விற்பனை செய்ய மறுப்பது, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை மறுப்பது, அவர்களைத் துன்புறுத்துவது, அவமானப்படுத்துவது, வார்த்தையாலோ செய்கையாலோ அவர்களுக்குத் தொந்தரவும் இழுக்கும் உண்டுபண்ணுவது போன்றனைகளும் இச்சட்டத்தால் குற்றங்களாகக் கருதப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒருசெயலைச் செய்யும்போது, அது தாழ்த்தப்பட்டோர் என்று கருதித்தான் அந்தச் செயல் செய்யப்பட்டதாக நீதிமன்றம் கருதுதல் வேண்டும் நீதிமன்றம் அவ்வாறு கருதாமல் இருக்க வேண்டுமானால் குற்றம் செய்தவர் தமக்கு அந்த எண்ணம் கிடையாது என்பதை மெய்ப்பிக்க வேண்டும். ஒரு நிறுவனம் அத்தகைய குற்றத்தை இழைக்கும்போது அந்த நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புத்தாரகும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர் சட்டத்தில் எந்த நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என்பதும் அதன் அதிகாரங்கள், வரம்புகள் என்ன என்பதும் தெளிவாக்கப்பட்டிருக்கின்றன.{{Right|<b>ஆர்.தா.</b>}} <section end="குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்"/> <section begin="குடியிருப்புகள்"/> {{dhr}} <b>குடியிருப்புகள்</b>: மனிதனின் அடிப்படையான தேவைகளுள் ஒன்று வீடு, குளிர், மழை, வெயில் முதலிய இடர்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், உடைமைகளையும் பொருள்களையும் வைத்துப் பாதுகாக்கவும், உண்ணவும், உறங்கவும் குடும்ப வாழ்க்கை நடத்தவும் மனிதனுக்கு வீடு தேவைப்படுகிறது. தங்குவதற்கு வீடு என்று ஒன்று இல்லாமற்போனால், அது மனிதனுடைய உடல் நலத்தைப் பாதிக்கும் மனிதனுடைய நல்லுணர்வுகம் சிதைந்து அவன் ஒரு விலங்காக மாறக்கூடும். இந்த விலங்குணர்ச்சி அவனை ஆட்டிப்படைத்து அவனைச் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து சமூாத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்தே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மக்கள் குடியேற்றங்களின் மையம் (U.N. Centre for Human Settlement) மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்குச் சரியான வீட்டு வசதி செய்து தரப்படாவிட்டால், அது சமூகக் கொந்தளிப்புகளை உண்டாக்கும் என்று எச்சரித்திருக்கிறது. ஆனால், இன்று உலகில் எண்ணற்ற மக்கள் தங்குவதற்கு இடமின்றி அவல நிலையில் வாழ்கிறார்களில் ஐ. நா, மன்றம் உலகில் ஐந்து பேர்களில் ஒருவருக்குத் தங்குவதற்கு வீடு இல்லாத நிலை இருப்பதாகக் கூறுகிறது. இந்தியாவில், 1981-ஆம் ஆண்டுக் கணிப்பின்படி 25.3 இலட்சம் மக்கன் வீடில்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் 6.7 இலட்சம் மக்கள் நகர்ப் புறங்களிலும், மீதி 18.6 இலட்சம் மக்கள் கிராமப் புறங்களிலும் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வீடு இல்லாது, வெட்ட வெளியில், நடைபாதைகளில், தண்ணீர்த் தொட்டியின்கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். பி. டி. சின்கா (B. D. Sinha) என்பவர் ஐந்து பேருக்கு ஒரு வீடு என்று கணக்கு வைத்துப் பார்த்தால் 1981-ஆம் ஆண்டுக் கணிப்பின்படி இருந்த மொத்த மக்கள் தொகையான 685 மிலியன் பேருக்கு 137 மிலியன் வீடுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும்; ஆனால், 107 மிலியன் வீடுகளே இருந்தன. சுமார் 30 மிலியன் வீடுகள் கிராமப்புறங்களிலும், நகர்ப் புறங்களிலும் பற்றாக்குறையாக இருந்தன என்கிறார். மிக மோசமான நிலையிலுள்ள வசிப்பதற்குத் தகுதியற்ற வீடுகளை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் வீட்டுப் பற்றாக்குதை 45 மிலியன் வீடுகள் என்ற அளவில் இருக்கும் என்கிறார். ஆனால், தேசிய மாதிரி அளவை நிறுவனம் (National Sample Survey Organization) 1981-ஆம்<noinclude></noinclude> 54ee64pizl0ziri5lgj5os0h7812wta பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/603 250 641576 1957618 1927255 2026-08-08T07:14:56Z Sridevi Jayakumar 15329 1957618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியிருப்புகள்|575|குடியுரிமை}}</noinclude>அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், கல்விக்கூட ஆசியர்கள் முதலியோர் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்துக் கொண்டு குடியிருப்புகள் கட்டிக்கொள்ளுகிறார்கள். இதற்கு மாநில அரசு நிதியுதவி செய்கிறது. இவ்வாறே தொழிற்சாலை ஊழியர்களும் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்துக் கொண்டு குடியிருப்புகள் கட்டிக் கொள்ளுகிறார்கள், அவர்களுடைய பணிக்கு நடுவண் அரசின் தொழிற்சாலை ஊழியர்களுக்கும், சமுதாயத்தில் பொருளாதார முறையில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஆன ஒருங்கிணைத்த சலுகை வீட்டு வசதித் திட்டம், குடியிருப்புகளின் கட்டுமானச் செலவில் 65 லிழுக்காட்டைக் கடனாகவும், 25 விழுக்காட்டை மானியமாகவும் கொடுத்து உதவுகிறது. தொழிற்சாலை முதலாளிகளும் தமது ஊழியர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி (கட்டுமானச் செலவில் 50 விழுக்காட்டைக் கடனாகவும், 25 விழுக்காட்டை மானியமாகவும்) பெற்றுக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கிறார்கள். தனியார் மட்டுமன்றி, அரசு நிறுவனங்களின் நிருவாகத்தினரும். தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கின்றன. இவ்வாறு அரசும், தனிப்பட்டவர்களும், கூட்டுறவுச் சங்கங்களும் நாடெங்கும் குடியிருப்புகளைக்கட்டி, மக்களின் வீட்டு வசதிச் சிக்கல்களுக்குத் தீரிவு காணப் பெரு முயற்சி செய்து வருகின்றன. ஆயினும், வீட்டு வசதிச் சிக்கல் தீராமல் 1985 ஆம் ஆண்டுக் கணக்கின்படி 24 மிலியன் வீடுகள் என்ற அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்குக் காரணம் மக்கள் தொகையின் பெருக்கத்தினால் வளர்ந்து வரும் வீட்டு வசதித் தேவைக்கு இந்த முயற்சிகளால் ஈடு கொடுக்க முடியாமற் போவதேயாகும். மக்கள் தொகை ஆண்டு ஒன்றுக்கு 13.6 மிலியன் அளவுக்குக் கூடும்பொழுது, அந்தக் கூடுதல் தொகைக்குச் சுமார் 24 இலட்சம் வீடுகள் தேவைப்படும் நிலை இருக்கிறது. ஐ.நா. மன்றத்தின் கணக்குப்படி, ஆண்டொன்றுக்கு 1000 பேருக்குப் 10 வீடுகள் என்ற விகிதத்தில் வீடுகள் கட்டி வந்தால்தான் இந்தச் சிக்கலைச் சமாளிக்க முடியும். ஆனால், இந்தியாவிலோ 1000 பேருக்கு ஒரு வீடு என்ற விகிதத்தில்தான் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வேகக் குறைவின் காரணமாகவே வீட்டுவசதிப் பணி, பெருகி வருகிற மக்கள் தொலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் நிற்கிறது. இந்த வேகக் குறைவிற்குச் காரணம் வீட்டு வசதிப் பணிகளுக்கு அரசு குறைவான நிதி ஒதுக்கீடு செய்வதே ஆகும். வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் ஆண்டுதோறும் மொத்தத் தேசிய வருமானத்தில் 3.6. விழுக்காட்டிலிருந்து 7.6 விழுக்காடு வரை வீட்டு வசதிப் பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மொத்தத் தேசிய வருமானத்தில் 1 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடுவரைதான் ஆண்டு தோறும் வீட்டு வசதிப் பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.{{Right|<b>சி.என்.த.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Narayan, K.</b> Housing India's Millions, A Pipe Dream, Mirror, Vol. XXV, No.7, 1986.<br> <b>Rao, C.II. Gopinatha..</b> Shelter for the Homeless. The Hindu, 1985.<br> <b>Saxenn. R.C.,</b> Labour Problems and Social Welfare, 15th ed. K. Nath & Co., Meerut, 1986.<br> <b>Wiebe, Paul D.,</b> Tenants and Trustees: A Study of the Poor in Madras, Macmillan India Ltd.. Delhi, 1981. <section end="குடியிருப்புகள்"/> <section begin="குடியுரிமை"/> {{dhr}} <b>குடியுரிமை</b>: ஒரு நாட்டில் ஒருவருக்கு அரசியலும் சமூக உரிமையும் குறித்த முழுவுரிமை நிலை குடியுரிமை (Citizenship) எனப்படும். இந்திய அரசமைப்புக் குடியுரிமை குறித்து, பிரிவு 5 முதல் 11 வரையிலுள்ள பிரிவுகள் விவரிக்கின்றன. இந்திய அரசமைப்புப்படி, இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, இந்தியாவை வாழ்வுகமாகக் கொண்டவர்களில் கீழ்க்காணும் நிலையில் இருந்தவர்கள் இந்தியக் குடிமக்களாகக் கருதப்பட்டனர். 1) அவர்கள் இந்தியாவில் பிறந்திருக்கும்போதும், 2) அவர்களின் பெற்றோர்களுள் ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்கும் போதும், 3) இச்சட்டம் தொடங்குவதற்கு முன் ஐந்தாண்டுகளுக்குக் குறையில்லாமல் அவர்கள் இந்தியாவில் வாழ்த்திருக்கும்போதும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர். <b>பாகிசுத்தாளிலிருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தவர்கள்</b>: இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த சமயத்தில், அ) இந்திய அரசாங்கச் சட்டம், 1935-இல் விளக்கியுரைத்தபடி, ஒருவர் அல்லது அவர் பெற்றோர்களுள் ஒருவர் அல்லது அவர்தம் பெற்றொரைப் பெற்றோர்களுன் ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்கும்போதும்; ஆ) 1948-ஆம் ஆண்டு சூலை 19-ஆம் நாளுக்கு முன்னர் அத்தகையவர் பாகிசுத்தாலிலிருந்து குடிபெயர்ந்து வந்திருக்கு<noinclude></noinclude> ps11cp9fhtynoruanrh3tmwfng2vrrl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/604 250 641577 1957620 1927264 2026-08-08T07:16:20Z Sridevi Jayakumar 15329 1957620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியுரிமை|576|குடியேற்ற நாட்டு அரசாங்கம்}}</noinclude>மிடத்து, அந்தத் தேதி முதற்கொண்டு இந்தியாவில் தொடர்ந்து வசித்து வந்திருக்கும்போதும்; அல்லது 1948-ஆம் ஆண்டு, சூலை 19-ஆம் நாள் அன்று அல்லது அதற்குப் பின்னர் அத்தகையவர் குடிபெயர்த்து வந்திருக்குமிடத்து, இந்த அரசலமைப்பு தடை முறைக்கு வருவதற்கு முன் இந்தியக் குடியுரிமைப் பதிவு குறித்து இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அலுவலரிடம் அரசாங்கம் குறித்துரைத்த படிவத்தில் விண்ணப்பம் செய்து, இந்தியக் குடியுரிமையைப் பெற்றிருக்கும்போதும், அவர் இந்தியக் குடிமகனாகக் கருதப்படுவார். ஆனால், அவர் குடியுரிமையைப் பதிவு செய்ய விண்ணப்பம் அளிப்பதற்கு முன் குறைந்தது ஆறு திங்களாவது இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும். <b>பாகிசுத்தானிலிருந்து குடிபெயர்ந்தவர்களுக்குள்ள குடியுரிமை</b>: இந்திய அரசலமைப்புச் சட்டம், பிரிவுகள் 5,6 ஆகிவற்றில் எது கண்டிருந்தபோதிலும், ஓருவர் 1947-ஆம் ஆண்டு, மார்ச்சு I-க்குப் பிறகு இந்தியப் பகுதியிலிருந்து பாகிசுத்தான் பகுதிக்குக் குடிபெயர்ந்திருக்கும்போது, அவர் இந்தியக் குடிமானாகக் கருதப்படமாட்டார். ஆனால், இது இந்தியாவிலிருந்து பாகிசுத்தானுக்குச் குடிபெயர்த்து மீண்டும். இந்தியாவிற்கே திரும்பி வந்து நிலையான குடியிருப்பை அமைத்துக்கொள்ள உரிய அதிகாரியிடம் அனுமதி பெற்றிருப்பவர்களுக்கும், பிரிவு 6, கூறு (ஆ) இன்படி 1948-ஆம் ஆண்டு, சூலை 19-ஆம் நாளுக்குப் பின்னர் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்து குடிமக்களாகக் கருதப்பட்டவர்களுக்கும் பொருந்தாது. <b>இந்தியாவிற்கு வெளியில் வாழும் இந்திய வழித் தோன்றல்கள் சிலருக்கான குடியுரிமை</b>: இந்திய அரசலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் அல்லது பின்னர், இந்திய அரசாங்கச் சட்டம், 1935-இல் விளக்கியுரைக்கப்பட்டவாது, ஒருவர் அல்லது அவர்தம் பெற்றோர்களும் ஒருவர் அல்லது அவர்தம் பெற்றோரைப் பயந்த பெற்றோர்களுள் ஒருவர் இந்தியாவில் பிறந்து, இந்தியத் தூதுவர் அல்லது தலப்பாதுகாப்பாளரிடம் (Consular) இந்திய அரசாங்கம் குறித்துரைத்த படிவத்தில் விண்ணப்பித்துப் பதிவு செய்துகொண்டிருக்கும்போது அவரும் இந்தியக் குடிமகனாகவே கருதப்படுவார். <b>அயல்நாட்டுக் குடியுரிமையைத் தன்னிச்சையாகப் பெற்றவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் இயலாது</b>: அயல் நாட்டுக் குடியுரிமையை இந்தியச் குரமகனொருவன் தன்னிச்சையாகப் பெற்றிருக்கும்போது, அவனை அரசலமைப்புச் சட்டம், பிரிவுகள் 5,6 ஆகியவைகளின் கீழ் இந்தியக் குடிமகனாகக் கொள்ளுதல் இயலாது.{{Right|<b>பு.வே.</b>}} <section end="குடியுரிமை"/> <section begin="குடியேற்ற நாட்டு அரசாங்கம்"/> {{dhr}} <b>குடியேற்ற நாட்டு அரசாங்கம்</b>: ஒரு நாடு மற்றொரு நாட்டின் ஆட்சியில் அமைந்து அதைச் சார்ந்திருக்குமானால் அச்சார்பு நாட்டுக்குக் குடியேற்ற நாடு (Colony) என்றும், அதனை ஆளும் நாடு அதைத் தாது அரசியல், பொருளாதாரக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் முறைக்குக் குடியேற்ற நாட்டுக் கோட்பாடு (Colontalism) என்றும், குடியேற்ற நாட்டின்மீது ஆளும்நாடு (அல்லது பேரரசு நாடு - Imperial Power) அமைத்திருக்கும் ஆட்சிமுறைக்குக் குடியேற்ற நாட்டு அரசாங்கம் (Colonial Government) என்றும் பெயர், <b>குடியேற்ற நாடுகள் பற்றிய கோட்பாடுகள்</b>: கொலம்பா கி.பி. 1492-இல் அமெரிக்காவுக்குக் கடல் வழி ஒன்று கண்டுபிடித்ததை ஒட்டித் தங்கம் திரட்டவும், வாணிகம் செய்யவும், மீன்பிடிக்கத் தளங்கள் பெறவும், புதிய வளமான நிலங்களை இலவசமாகப் பெறவும் ஐரோப்பிய நாடுகள் (அதாவது இசுபெரின் போர்ச்சுகல், பிரிட்டன், பிரான்சு, நெதர்லாந்து முதலியவை), அமெரிக்கக் கண்டங்களில் குடியேற்ற நாடுகளை கி.பி. 1760-முதலாக நிறுவின, பிரிட்டன் கி.பி 1783-இலும், இகபெயின் கி.பி. 1824-இலும், போர்ச்சுகம் பிரேசிலில் கி.பி. 1825-லும், பிரான்சு எயிட்டியில் (Haitti) கி.பி. 1825-இலும், தம் குடியேற்ற நாட்டு உரிமைகளைக் கைவிட்டு அவைகளைச் சுதந்திர நாடுகளாக ஒப்புக்கொள்ளும் நிலையை அடைந்தன. அதற்கு ஈடாகப் பிரிட்டன் கி.பி. 1757-இலிருந்து இந்தியாவிலும், திரினிடாடு (Trinidad) தன்னம்பிக்கை நாடு (Cape Colony), மோரிசு இலங்கை, மலாக்கா, ஆசுத்திரேலியா முதலியவற்றிலும், பிரான்சு இந்தோசீனாவிலும், நெதர்லாந்து இந்தோனேசியாலும் தம் குடியேற்றநாட்டு அரசாங்களை நிறுவின. ஆப்பிரிக்கா முழுவதும் ஐரோப்பிய நாடுகளால் பங்கிட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பசிபிக்குப் பெருங்கடல் தீவுகளிலும் ஐரோப்பியர்களால் நிறுவப்பட்ட குடியேற்ற நாட்டு ஆட்சி முறை இரண்டாம் உலகப்போர் முடியும் வரை (1939-1945) இருந்து, பின்னர் மறைந்தது. குடியேற்ற நாடுகள் எல்லாம் இறைமையுடைய சுதந்திர அரசுகளாயின. ஐரோப்பியப் பேரரசுகள் முதலில் தம் குடியேற்ற நாடுகளில் பின்பற்றிய கோட்பாட்டிற்கு வணிகக் கோட்பாடு (Mercantalism) என்று பெயர், அதன்படியே குடியேற்ற நாடுகள் பேரரசுகளால் ஆளப்பட்டன; அதன்படி குடியேற்ற நாட்டின் பொருள்வளம் தாய்நாட்டின் நலத்துக்-<noinclude></noinclude> 5mkahw91pmms1ir7jonkcl1o0frbglx பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1957571 1957473 2026-08-07T16:07:01Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1957571 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌|சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌]] 676-677 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்‌|சரக்கு மாற்றகம்‌]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌|சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌]] 688-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச்‌ சட்டம்‌|சரக்கேற்றிச்‌ சட்டம்‌]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌|சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌]] 693-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத்‌ சந்திர சட்டர்சி|சரத்‌ சந்திர சட்டர்சி]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌|சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌]] 706-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌|சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌]] 708-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்‌|சருவோதயம்‌]] 709-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்‌|சலந்தர்‌]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத்‌ தொழில்‌|சலவைத்‌ தொழில்‌]] 714-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்‌|சலாதின்‌]] 716-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால்‌ நேரு|சவகர்லால்‌ நேரு]] 718-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்‌|சன்மார்க்கம்‌]] 730-731 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்‌|சனகன்‌]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 747-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்‌|சாங்கியம்‌]] 751-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766 ncmhpop858k7xqck0rdm1dc4h54n2py பயனர்:Bharathblesson/test 2 645148 1957642 1957527 2026-08-08T10:05:26Z Bharathblesson 15164 /* பட்டியல் */ 1957642 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - செனெக்கா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 |- ! colspan="5"|<b>சே, சை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620 |- ! colspan="5"|<b>சொ, சோ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628- |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715 |- |} </div></div></div> </center> ==பட்டியல்== #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ 8vapa43r3k5gf9qo5kmfyw5bvgl2o0b பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/127 250 648626 1957578 1952477 2026-08-07T18:24:07Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஓஸ்லோ மாநாடு</b>}}}} {{li|யு|2em}}த்தத்தால் – சீரழிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலத்தை மீண்டும் புனரமைப்பு செய்வதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து நிதி திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நார்வேயின் ஓஸ்லோ நகரில் இதற்கான மாநாடு ஒன்று கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். முதலில் இதில் பங்கேற்பதில் தயக்கம் காட்டிய இந்தியா பிறகு தனது பிரதிநிதியாக அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுவரும் ஆண்டன் பாலசிங்கமும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் இம்மாநாட்டில் முதன் முதலாக நேரிடையாக பேச இருப்பதும் இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் இயக்கமும், இலங்கை அரசும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருப்பதும் இம்மாநாட்டின் முக்கிய அம்சங்களாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் அமுலில் உள்ளதால் விடுதலைப் புலிகளின் மீதான தங்களது விமர்சனத்தோடு மாநாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளன. ஈழத்தில் இலங்கை இராணுவத்தின் தொடர்ந்த தாக்குதலால் கடும் சீரழிவுக்கு உள்ளான தமிழர் பகுதிகளை புனரமைப்பதற்கு சர்வதேச நிதி திரட்டும் இம்முயற்சி ஈழத்தமிழ்களின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியேயாகும். தூதர் மட்டத்தில் இல்லாமல் அதிகார மட்டத்தில் ஒரு பிரதிநிதி இந்த<noinclude>{{nop}}{{rv|125 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''125'''}}}}|{{left|{{larger|'''125'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> k3hk2gu8zay20c57h54s76l36os8yk8 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/118 250 648645 1957565 1952529 2026-08-07T15:38:42Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>அவைகளை நிலைநாட்டும் காஞ்சி பார்ப்பன சங்கர மடங்களின் சடங்குகளுக்குத் தடை வரட்டும்! கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமையைத் திணிக்கும் ஜாதிவெறியர்களின் நடவடிக்கைக்குத் தடை வரட்டும்! ரிசர்வ் பஞ்சாயத்துகளையே அங்கீகரிக்க மறுக்கும் ஜாதி வெறியர்களின் செயலுக்குத் தடை வரட்டும். இவைகளுக்கு வராத தடை, மதமாற்றத்துக்கு மட்டும் ஏன் வரவேண்டும் ? தமிழன், இன - மொழி உரிமைக்குக் குரல் கொடுத்தால் பொடோ சட்டம் பாய்கிறது! இந்து மதத்தின் கீழ் - கீழ் ஜாதிக்காரனாக - இழிமகனாக இருக்க மாட்டேன் என்று சொன்னால் - மதமாற்றத் தடைச் சட்டம் பாய்கிறது! இது தமிழ் நாடா? ஆரியர் நாடா? {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 10.10.2002}}<noinclude>{{nop}}{{rv|116 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''116'''}}}}|{{left|{{larger|'''116'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> k71yfmphfhsygk2vf1jqwsx1quz8bq3 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/128 250 648647 1957579 1952533 2026-08-07T18:31:36Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>மாநாட்டில் பங்கேற்பார் என்று இந்திய அரசு அறிவித்திருந்தாலும் இதுவரை, இந்தியா பின்பற்றி வந்த பாராமுகம் என்ற நிலையிலிருந்து இது ஒரு திருப்பம் என்றே கூறவேண்டும். ஈழத்தில் போர் முடிவுக்கு வந்து அமைதியான சூழல் திரும்ப வேண்டும் என்றே இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தி வந்தன. நார்வே நாட்டின் சீரிய முயற்சியால் முட்டுக்கட்டைகளைக் கடந்து பேச்சு வார்த்தைகள் முன்னேறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதற்கு ஒத்துழைப்புத் தரவேண்டியது இந்தியா உட்பட உலக நாடுகளின் தார்மீகக் கடமையாகும். ஆனாலும் இந்தியாவில் பார்ப்பன அதிகார வர்க்கமும், பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன சக்திகளும் இந்த பேச்சுவார்த்தையை குலைக்கும் நோக்கத்துடனே செயல்பட்டு வருகின்றன. சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனர் இந்தியாவின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தார்; அதை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பார்ப்பனர்களின் வன்மத்தையும், தமிழர் விரோத போக்கையையுமே இது காட்டுகிறது. போரும் கூடாது, சமாதானமும் ஏற்படக் கூடாது. எப்போதும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான 'கிலி'யை பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்றே பார்ப்பனர்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தில் தமிழர் எழுச்சி வராமல் தடுப்பதற்கு இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி மிரட்டலாம் என்பதே பார்ப்பனர்களின் உள்நோக்கம். ஆனாலும் தடைகளைத் தகர்த்து பேச்சுவார்த்தைகள் முன்னேற்ற பாதையில் நடைபோடுகின்றன. ஓஸ்லோ மாநாடு வெற்றிப்பாதையில் இன்னும் ஒரு மைல்கல்லைக் கடந்துள்ளது என்றே கூறவேண்டும். பார்ப்பனர்கள், எதிர்பார்ப்புகள் இதில் தோல்வி அடையவே செய்யும். {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 28.11.2002}}<noinclude>{{nop}}{{rv|126 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''126'''}}}}|{{left|{{larger|'''126'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> j8s06xvda62t5ki3ksauw1j56h5ks5y பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/129 250 648648 1957580 1952537 2026-08-07T18:36:52Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனித உரிமை மீறல்கள்</b>}}}} {{li|"கா|2em}}வல் துறையுடன் நேரடியாக மோதினார்கள்; எனவே, காவல் துறை அதிகாரிகள் தற்காப்புக்காக சுட்டுக் கொல்ல வேண்டி நேரிட்டது" என்று, காவல் துறையினரால் வழக்கமாகக் கூறப்படும் கதைகள் - கட்டமைக்கப்பட்டவை என்றே, கடந்த கால நிகழ்வுகள் மெய்ப்பித்துள்ளன. வழக்கு, குற்றப் பத்திரிக்கை, விசாரணை - தீர்ப்பு என்று சட்ட ரீதியாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மறுக்கப்பட்டு வருகிறது; காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளை, நீதிமன்றங்களும் கண்டித்தே வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் – கடந்த சில நாட்களாக - குற்றம் சாட்டப்பட்டவர்களை, காவல்துறையினர் சுட்டுக் கொல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இது பல்வேறு நியாயமான சந்தேகங்களை எழுப்பியுள்ளன. காவல் துறையினரால் - சுட்டுக் கொல்லப்பட்ட வியாசர்பாடியைச் சார்ந்த சுரேஷ் என்பவரின் தாயார் தயாநிதி தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளார். அதே போல், மயிலாப்பூர் போலீசாரால் வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காக்கா ரமேஷ், போலீசாருடன் மோதியதால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியிருக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்தக் கோரி, நொச்சிக்குப்பம் பகுதியைச் சார்ந்த ரமேஷின் தாயார் மனித உரிமை ஆணையத்திடம் புகார்<noinclude>{{nop}}{{rv|127 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''127'''}}}}|{{left|{{larger|'''127'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0dviiwo2u6v9umhnpq0hvhfxad2imve பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/130 250 648652 1957581 1952543 2026-08-07T18:39:56Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>செய்துள்ளார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான சம்பந்தம் இதுபற்றி விளக்கம் கேட்டு, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி பகுதியில் நக்சலைட்டுகள் ரகசியமாக பயிற்சி நடத்துகிறார்கள் என்று கூறி, காவல்துறை நடத்திய தேடுதலின் போது, சிவா என்ற இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஏற்கனவே - சில ஆண்டுகளுக்கு முன் இதே போல் காவல் துறையினரால் ரவீந்திரன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு சாட்சியாக இருந்தவர் தற்போது சுடப்பட்டு இறந்த 'சிவா' தான் என்று செய்திகள் வருகின்றன. அதேபோல் சென்னையை அடுத்த நீலாங்கரையில் - "3 கொள்ளையர்கள்" சுட்டு கொல்லப்பட்டுள்ளனர், தொடர்ந்து அடுத்தடுத்து, போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் பற்றி, மனித உரிமை அமைப்புகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. மனித உரிமை அமைப்புகள் - இதுபற்றி நேரடி விசாரணை நடத்தி உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்! எந்த வன்முறைகளுக்கும் இடமில்லாத - தமிழ்நாட்டை, தமிழக அரசே, தீவிரவாதிகளின் மாநிலம் போல் சித்தரிக்க முயலுகிறது; காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள தங்கு தடையற்ற அதிகாரங்களால் தமிழ்நாட்டில் - மக்களாட்சி முடிந்து போய் - காவல்துறை ஆட்சி வந்துவிட்டதாகவே தெரிகிறது! {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 05.12.2002}}<noinclude>{{nop}}{{rv|128 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''128'''}}}}|{{left|{{larger|'''128'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> augspdfbt3gwtr0fokq2w4w8tejhsx4 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/119 250 648659 1957566 1952558 2026-08-07T15:43:27Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரி பதில் கூறுவாரா ?</b>}}}} {{li|த|2em}}மிழ்நாடு அரசின் மதமாற்றத்தடைச் சட்டத்தை ஆதரித்து, காஞ்சி சங்கராச்சாரி வெளிப்படையாக களத்தில் இறங்கியிருக்கிறார்; கடற்கரையில் சட்டத்தை ஆதரித்து, அவர் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்தச் சட்டத்துக்குப் பின்னணியில் இருப்பது சங்கராச்சாரிகளும், சங்பரிவாரங்களும்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 'இந்துக்கள்' - என்று அழைக்கப்படுகிற மக்கள் இறக்கும் வரை 'இந்து'வாகவே வாழ வேண்டும் என்று வலியுறுத்தும், சங்கராச்சாரிக்கும், சங்பரிவாரங்களுக்கும், சில கேள்விகளை முன் வைக்கிறோம். பார்ப்பனரல்லாதவர்களை 'சூத்திரர்கள்' என்று கூறி - அவர்கள் ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் ஆக முடியாது என்று தடுப்பது ஏன்? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று, திமுக ஆட்சியில் 1971ஆம் ஆண்டு, சட்டமன்றம் மூலம் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் ? பிற்படுத்தப்பட்டோருக்கு - மத்திய அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற மண்டல் பரிந்துரையை அமுலாக்கியபோது, அதை சங்கராச்சாரிகளும், சங்பரிவாரங்களும் எதிர்த்தது ஏன்? பிற்படுத்தப்பட்டோரும் இவர்களின் வாதப்படி 'இந்து'க்கள்தானே? கடற்கரை கூட்டத்துக்கு 'தலித்' மக்களை அழைக்கும் சங்கராச்சாரி, அந்த மக்கள் மீது திணிக்கப்படும் தீண்டாமைக்<noinclude>{{nop}}{{rv|117 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''117'''}}}}|{{left|{{larger|'''117'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gcb0fa24op8gj8svzibk6vwbyimaxec பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/120 250 648679 1957567 1952650 2026-08-07T15:51:42Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>கொடுமைகளைக் கண்டிக்காதது ஏன்? அவர்களை 'தலித்' என்று அழைக்கக்கூடாது; 'அரிஜன்' என்றே அழைக்க வேண்டும் என்று, அவமதிப்பது ஏன்? இவர் கூறுவது போல் 'தலித்' மக்கள் 'ஆண்டவனின் புதல்வர்கள்' (அரிஜன் என்பதன் பொருள்) என்றால், அவர்கள் தானே, சங்கரமடத்தின் தலைவர்களாக இருக்க வேண்டும்? ஆண்டவனின் சொத்துக்கள் எல்லாம், 'ஆண்டவனின் பிள்ளை'களுக்குத்தானே சேர வேண்டும். மடங்களையும் - கோயில் சொத்துக்களையும் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாரா? "அர்ச்சகர் பதவி - பார்ப்பனர்களின் ஏகபோக உரிமை அல்ல" என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பைப் பற்றி, சங்கராச்சாரி வாய்திறக்காதது ஏன்? அரியானாவில், செத்த மாட்டை விலைக்கு வாங்கி, தொழிலுக்காக, தோலை உரித்த, 5 தலித் இளைஞர்களை இந்து மதவெறிக்கும்பல் அடித்துக் கொன்ற கொடுமையைக் கண்டிக்காதது ஏன்? "ஆண்டவன் புத்திரர்களை" இப்படி அடித்துக் கொலை செய்யலாமா? பார்ப்பனர்கள் மட்டும் தங்களை "பிராமணர்கள்" என்று தனிமைப்படுத்திக் கொள்வதற்காக, பூணூல் போட்டுக் கொண்டு, அதன் மூலம் ஏனைய மக்களை "சூத்திரர்கள்" என்று பிரகடனப்படுத்துகிறார்களே; அதை அங்கீகரிப்பது ஏன்? சங்கரமடம் நடத்தும் அறக்கட்டளை அமைப்புகள் அனைத்தும் "பிராமணர்களுக்கு" மட்டுமே நடத்துவது ஏன்? அப்படியானால், சங்கரமடம், பார்ப்பனர்களுக்கான மடம்தானா ? அயோத்தியில் ராமன் கோயில் கட்டும் பிரச்சனையில் நீதிமன்றமோ, அரசோ தலையிடக்கூடாது என்று கூறும் சங்பரிவாரங்களும், சங்கராச்சாரிகளும், மதமாற்றத்தில் மட்டும், அரசாங்கத்தின் தலையீட்டைக் கோருவது ஏன்? இந்து மதக் கடவுள்களால் தனது மதத்தவர்களை தக்கவைத்துக் கொள்ள முடியாது; அந்த சக்தி அவர்களுக்குக் கிடையாது. அரசாங்கத்தின் சட்டத்தால்தான் முடியும் என்று சங்கராச்சாரிகளே நம்புகிறார்களா? சங்பரிவாரங்களும் சங்கரமடமும், பதில் சொல்வார்களா ? {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 31.10.2002}}<noinclude>{{nop}}{{rv|118 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''118'''}}}}|{{left|{{larger|'''118'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> o1yubr03pwmqeewrkekzpc5o77k4c59 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/121 250 648680 1957568 1952655 2026-08-07T15:56:14Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>கலைஞர் மீது பாயும் பார்ப்பனர்களைக் கேட்கிறோம்!</b>}}}} {{li|"ந|2em}}ம்முடைய தமிழ் இலக்கண, இலக்கியங்களாகட்டும்; அல்லது சங்க காலப் பழைய ஆதாரங்களில் ஆகட்டும்; அல்லது ஆரிய பாஷை, ஆரிய நாகரீகம் பழக்க வழக்கங்களைக் கொண்ட வேதம், சாஸ்திரம், புராணம், சரித்திரம் முதலிய எவைகளிலாவது, இந்து அல்லது இந்து மதம் என்ற வார்த்தை இருக்கிறதா? - இது 27.08.1927இல். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் எழுப்பிய கேள்வி. சுமார் 75 ஆண்டு காலம் ஓடிய பிறகும், இந்தக் கேள்விக்கு இன்னும் எவரும் விடை கூற முடியவில்லை. அப்படியானால், 'இந்து' என்ற சொல் எங்கே இருக்கிறது? அது பாரசீக மொழியில் - 'திருடன்' என்ற அர்த்தத்தோடு பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று, தமிழ், வடமொழி இரண்டிலும் புலமை பெற்றிருந்த சுவாமி சிவானந்த சரசுவதி 'ஞான சூரியன்' நூலில் குறிப்பிடுகிறார்! இதே கருத்தை, சென்னையில் நடந்த மதமாற்றத் தடைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் பேசிய கலைஞரும் சுட்டிக் காட்டினார். உடனே சங்பார் பார்ப்பனர்களும், சங்கராச்சாரிகளும் கலைஞருக்கு எதிராகப் பூணூலை இழுத்துப் பிடித்துக் கொண்டு, அலறத் துவங்கிவிட்டனர். கலைஞர் தனது கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஒரு ஆதாரத்தை முன் வைத்தார். பழம்பெரும் தேசிய தலைவரும், உ.பி. பார்ப்பனருமான கமலாபதி திரிபாதி 1970இல் எழுதிய 'விஸ்வ இந்திகோஷ்'<noinclude>{{nop}}{{rv|119 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''119'''}}}}|{{left|{{larger|'''119'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7nkfjwnit1wh7266npo5s4pphq56ma5 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/122 250 648681 1957569 1952657 2026-08-07T16:02:48Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>எனும் நூலில் - இந்து என்று ஒரு மதமே கிடையாது என்றும், பாரசீக மொழியில் திருடர், குரூரமானவர் என்ற அர்த்தத்தில் அச்சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் விளக்கம் தந்திருப்பதை, கலைஞர் சுட்டிக் காட்டினார். இத்தனைக்கும் இந்த நூல் மத்திய அரசின் கல்வி அமைச்சரக உதவியுடன் "வாரணாசி நாகரி பிரச்சாரணி" என்ற பார்ப்பனிய அமைப்பால் வெளியிடப்பட்டதாகும்! நாணயமுள்ளவர் எவரும், இந்த வாதத்துக்கு பதில் சொல்லி விட்டு, பிறகு, கலைஞரைத் தாக்குவதற்கு முன் வர வேண்டும். இந்தப் பார்ப்பனர்களின் வசை மாறிப் பட்டியலில் - தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் பார்ப்பன ஜெயலலிதாவும், இப்போது தன்னை இணைத்துக் கொண்டு விட்டார். "திமுக-வினருடைய தலைவர் இந்துக்களைத் திருடன் என்று கூறுவார்; தீ மிதிப்பது தவறு என்று கூறுவார் இவர்களின் தலைவன் இப்படி எல்லாம் உளறிக் கொட்டுகிறார்"- என்று சட்டமன்றத்திலே பேசுகிறார்! இந்து மதத்தையும், தீ மிதிக்கும் மூடநம்பிக்கைகளையும் விமர்சிப்பதே உளறலாம்! பெரியார், அம்பேத்கர், அண்ணா போன்ற தலைவர்கள் பேசியவை எல்லாம் கூட, இவரது பார்வையில் உளறல்தான் போலிருக்கிறது! 'இந்து'வைத் 'திருடன்' என்று அகராதிகள் கூறுகிற விளக்கத்தைக் கேட்டுத் துடிக்கும் பார்ப்பனர்களைக் கேட்கிறோம்; மனுஸ்மிருதிகளில் - பார்ப்பனரல்லாத மக்களை 'சூத்திரன்' என்று இழிவுபடுத்தி எழுதப்பட்டிருக்கிறதே! அதற்கு என்ன பதிலை தரப் போகிறீர்கள்? "விலைக்கு வாங்கப்பட்டவன்; போரில் பிடித்து வரப்பட்டவன்; பிராமணனின் வைப்பாட்டி மகன்" என்று சூத்திரனுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளதே; அதைத் தடை செய்யத் தயாரா? "பெண்களுக்கும் சூத்திரனுக்கும் கல்வியைத் தராதே" என்று மனுஸ்மிருதி கூறுகிறதே; அந்த மனுஸ்மிருதிப்படி, ஜெயலலிதாவே ஒரு பெண் என்ற முறையில் இன்று முதலமைச்சராக வந்திருக்க முடியாதே! கலைஞர் மீது பாயும் பார்ப்பனர்களும் - பார்ப்பன முதல்வரும், சூத்திரர் என்ற சொல்லை - பார்ப்பன மத் அகராதிகளிலிருந்து முதலில் அகற்றட்டும்! அதற்குத் தயாரா? ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பையும், தன்மானத்தையும், சுரண்டித் திருடுவதை சாஸ்திர ரீதியாக புனிதப்படுத்தும் ஒரு மதத்தை 'திருடர் மதம்' என்று கூறாமல், வேறு எப்படி அழைக்க முடியும்? {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 07.11.2002}}<noinclude>{{nop}}{{rv|120 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''120'''}}}}|{{left|{{larger|'''120'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 4errj6cismp4nx5zwv4354wd9t3n6l7 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/123 250 648682 1957570 1952660 2026-08-07T16:06:52Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>கல்வியா? கோயிலா?</b>}}}} {{li|மு|2em}}தலமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் 9ஆம் தேதி - அவசர அவசரமாக ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்து அறநிலையத் துறையின் கீழ் வராத - 100 கோயில்களுக்கு, தலா ரூ.25,000/- வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். இதில் 50 கோயில்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதியில் உள்ளவைகளாம்! மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கே நிதி ஆதாரம் இல்லை என்று கை விரிக்கும் ஜெயலலிதா, யாரும் எவ்விதக் கோரிக்கையும் முன்வைத்துப் போராடாமலே, அவசர அவசரமாக நிதி ஒதுக்கீடு செய்வது ஏன்? தலித் மக்களிடம் - இந்து மதத்தைப் பரப்ப, காஞ்சி சங்கராச்சாரி துவங்கியிருக்கும் சுற்றுப் பயணத்துக்குப் பெருமை சேர்ப்பது போல் - அவர் பயணம் துவக்கும் நேரத்திலேயே இந்த உத்தரவும் வந்துள்ளது. ஆட்சியாருடைய ஆணையை ஏற்று, எந்த வழியில் செயல்படுகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்! மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்த ஜெயலலிதா, அதற்கு வலிமை சேர்க்க எடுத்துள்ள தொடர் நடவடிக்கையாகவும் இதைக் கருத வேண்டியிருக்கிறது. தலித்துகள் மதம் மாறவே கூடாது; அவர்கள் 'இந்து'வாகவே இருக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் விருப்பம் என்பதையும், தலித் பகுதியில் உள்ள இந்துக் கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார். இதே நாளில், மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களுக்கு ரூ.7,000/- படிப்பு உதவித் தொகையை வட்டியில்லாக் கடனாக தமிழக அரசு<noinclude>{{nop}}{{rv|121 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''121'''}}}}|{{left|{{larger|'''121'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> osjghi8y0yc5r2s67aktgzk8y9a4ecy பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/124 250 648683 1957575 1952661 2026-08-07T17:59:19Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>வழங்கி வந்தது. 1971ஆம் ஆண்டு முதல் அமுலில் இருக்கும் இத்திட்டத்தை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி நிறுத்தி விட்டார். இதனால் விடுதிகளில் தங்கிப் படிக்கும் தலித் மாணவர்கள் பல மாதங்களாக விடுதிக் கட்டணம் கட்ட முடியவில்லை. விடுதி நிர்வாகமும் திணறி நிற்கிறது. அதனைத் தொடர்ந்து, பாக்கியுள்ள கட்டணத்தைக் கட்டினால்தான் தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்து விட்டன. சில கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் படித்ததற்கான சான்றிதழ்களை (Transfer Certificate) தரமுடியாது என்றும் கூறி விட்டன. இதனால் பட்ட மேற்படிப்பில் தலித் மாணவர்கள் சேர முடியாத நிலை. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, பார்ப்பனியம் கல்வி பெறும் உரிமையை வரலாற்றுக் காலம் முதல் தடுத்தது; பெரியார் துவக்கிய சமூக நீதிப் போரின் மய்யமே கல்விதான்; உயர் நிலைப் பள்ளிப் படிப்பு வரை – கல்வியை இலவசமாக்கி, இந்தியாவுக்கே வழிகாட்டியது தமிழ்நாடு தான்! பின்பு பட்டப்படிப்பு வரை இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கான உதவித் தொகை, வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டங்கள், மாணவர் விடுதிகள், இடஒதுக்கீடுகள் என்று எல்லாவற்றிலும் முன்னணியில் நின்ற பெருமை தமிழகத்துக்கு உண்டு! இப்போது தலித் மாணவர்களின் கல்விக் கடனை நிறுத்தி விட்டு, அந்தச் சமூக மக்களுக்கு, கோயிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை, வன்மையாகக் கண்டிக்கிறோம்! இந்த ஆட்சியின் கொள்கை பார்ப்பன - இந்து தர்மத்தின் கொள்கைதான் என்பதை, முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உறுதி செய்து வருகின்றன! {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 14.11.2002}}<noinclude>{{nop}}{{rv|122 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''122'''}}}}|{{left|{{larger|'''122'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2nfj3db279m366jw957yhp3vfati8iw பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/125 250 648684 1957576 1952671 2026-08-07T18:03:12Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>இந்து அடையாளங்களைத் தவிர்ப்போம்!</b>}}}} {{li|இ|2em}}ந்து மதம் என்ற பெயரில் ஒரு மதமே இல்லை என்றாலும், ஆரியர்களின் வேத மதத்தை, இப்போது இந்து மதமாக்கி, அதைப் பெரும்பாலான மக்களின் மதமாக்குவதில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இப்போது முதல்வர் ஜெயலலிதா, சங்பரிவாரங்களின் கோரிக்கையை ஏற்று மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள்; திராவிடர்கள் - இந்துக்களா என்ற கேள்வி மீண்டும் எழுந்து விட்டது. இந்துப் பெயரை தலித்துகள் சூட்டக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், சென்னையில் சமூகநீதி ஊர்திப் பயணத்தைத் துவக்கி வைத்து தெரிவித்துள்ள கருத்து வரவேற்றுப், பின்பற்றப்பட வேண்டியதாகும். இந்து சமூகத்தில் ஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டுமானால் - அவர் ஜாதியவாதியாக இருந்தே தீர வேண்டும்; பெரியாரும். அம்பேத்கரும் கூறியது போல் - இந்து சமூகம் என்பது, ஜாதிய சமூகம்தான்! ஜாதியத்தை உறுதிப்படுத்துகிற அடையாளங்களே, இந்துக்களின் வாழ்க்கை முறையாக பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் - 'இந்து' என்ற பார்ப்பன அடையாளத்தை ஏற்க மறுக்கும் ஒவ்வொருவரும், இந்து சடங்குகளையும் புறந்தள்ள வேண்டியது அவசியமாகும். இதன்படி - இந்து மதத்தை அடையாளப்படுத்தும் பெயர்களைக் குழந்தைகளுக்கு<noinclude>{{nop}}{{rv|123 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''123'''}}}}|{{left|{{larger|'''123'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> tpptbv9w64rqid5rbtpxkacy1a57qwr பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/126 250 648685 1957577 1952678 2026-08-07T18:20:15Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>சூட்டுவதை நிறுத்த வேண்டும். ஏற்கனவே அத்தகைய பெயரைத் தாங்கியுள்ளவர்கள் - தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பெயர் மாற்றம் செய்து, அதை ஒரு இயக்கமாகவே நடத்தலாம். இரண்டாவதாக - தீபாவளி, வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற இந்துப் பண்டிகைகள் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். மூன்றாவதாக - இந்துக் கடவுளர் படங்களை வீடுகளில் மாட்டுவதையோ, இந்துக் கோயிலுக்குப் போய், வழிபாடு செய்வதையோ நிறுத்த வேண்டும். வீட்டில் நடக்கும் திருமணம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் - இந்து சடங்கு முறைகளையோ, வழிபாட்டு முறைகளையோ பின்பற்றாது இருத்தல் வேண்டும். குறிப்பாக – பார்ப்பன வேத சடங்குகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக - வாழ்வியலில் ஜாதி மறுப்பாளராகவும், குடும்பத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோராகவும் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்நாள் முழுதும் - இந்துப் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற டாக்டர் அம்பேத்கரை – தங்களின் ஆதரவாளராக சித்தரிக்க, இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. இந்தச் சூழ்ச்சிகளையும் முறியடித்தாக வேண்டும். சில ஊர்களில் அம்பேத்கர் விழாக்களில் இந்து மதச் சடங்குகள் புகுத்தப்படும் முயற்சிகளையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.11.2002}}<noinclude>{{nop}}{{rv|124 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''124'''}}}}|{{left|{{larger|'''124'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> grt9a8fj8do6mxdk8m027uq28o4ur5j பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/131 250 648758 1957582 1952868 2026-08-07T18:43:09Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>நாகப்பாவின் துயரமான முடிவு</b>}}}} {{li|106|2em}} நாட்கள் - வீரப்பன் பிடியிலிருந்த நாகப்பா, நிச்சயமாக உயிருடன் திரும்பி வருவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் நாகப்பா, பிணமாகி விட்டார். வீரப்பனால், கடத்தப்பட்ட எவருமே இதுவரை கொல்லப்பட்டது இல்லை. நாகப்பாவைத் தான் கொல்லவில்லை என்றும், தமிழக அதிரடிப் படையும், முதல்வர் ஜெயலலிதாவுமே இதற்கு பொறுப்பு என்றும், வீரப்பன் இறுதியாக அனுப்பிய கேசட்டில் கூறியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் இதை மறுக்கிறார். கொன்றது வீரப்பன்தான் என்கிறார். விசாரணைகளுக்குப் பிறகுதான், உண்மைகள் தெரியும். ஆனாலும், நாகப்பாவுக்கு இப்படி ஒரு துயரமான முடிவு நேர்ந்ததற்கு தமிழ்நாடு அரசுக்கும், கருநாடக அரசுக்கும், கருநாடகத்தைச் சார்ந்த முன்னாள் அதிரடிப்படை அதிகாரிகளுக்கும். பார்ப்பன ஏடுகளுக்கும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. வீரப்பன் தொடர்ந்து அனுப்பிய கேசட்டுகளில் தூதர்களை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தும், கருநாடக அரசு, இதில் அக்கறை காட்டவே இல்லை. வீரப்பன் அனுப்பிய அனைத்து கேசட்டுகளிலும், கொளத்தூர் மணியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பது கருநாடக முதல்வருக்கு தெரியும். ஆனாலும் கொளத்தூர் மணியை, பிணையில் விடுவிக்கும் முயற்சிகளில், கருநாடக அரசு மிகவும் காலம் கடத்தியது. இறுதியாக வீரப்பன் 12 நாள் கெடு விதித்த பிறகுதான், கருநாடக அரசு செயல்படவே துவங்கியது. நாகப்பா குடும்பத்தினர், தமது கணவரைக் காப்பாற்றுமாறு, மண்டியிட்டனர். தமிழக முதல்வரைச் சந்தித்தனர். பிரதமரைச் சந்தித்தனர். நாகப்பா ஆதரவாளர்கள், கொளத்தூர் மணியை<noinclude>{{nop}}{{rv|129 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''129'''}}}}|{{left|{{larger|'''129'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> eq41mwxf88lie8w4qbxs0a19oogdto9 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/132 250 648759 1957609 1952871 2026-08-08T07:04:22Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>விடுவித்து தூது அனுப்பக் கோரி பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இப்பிரச்சனையில் எந்த ஒத்துழைப்பும் தராததோடு தூதரை அனுப்பி, நாகப்பாவை மீட்கும் அணுகுமுறைக்கு, தமது அரசின் ஆதரவே கிடையாது என்று கூறிவிட்டார். அதே நேரத்தில் - ராஜ்குமாரை மீட்கச் சென்ற தூதுக் குழுவில் கொளத்தூர் மணியோடு இடம் பெற்றிருந்த பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாரன் ஆகியோர் மீதும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டார் ஜெயலலிதா! தி.மு.க. அரசு எழுத்து மூலம் தந்த உறுதிமொழிகளைத் தமது அரசு ஏற்காது என்று, அதிகாரிகள் மூலம் அறிவித்தார். நாகப்பாவை மீட்க தூதுவரை அனுப்ப மறுத்ததோடு, ஏற்கனவே அரசு உறுதிமொழி பெற்று தூதுவர்களாக சென்றவர்கள் மீதும் நடவடிக்கைளை முடுக்கிவிட்டார். இது மட்டுமல்ல; கொளத்தூர் மணி பிணையில் வெளியே வந்து, நாகப்பாவை மீட்கும் நிலை வந்து விடக்கூடாது என்று தொடர்ந்து தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அதில் ஒன்று தான், முன்னாள் காவல்துறை பார்ப்பன அதிகாரி தினகர் எழுதிய வீரப்பன் பற்றிய நூல்; தூது முயற்சிகளைக் கொச்சைப்படுத்துவதே அந்நூலின் நோக்கமாகும். கருநாடகத்திலிருந்து பிணையில் விடுதலையாகி, தமிழ்நாட்டுக்குள் வந்தால், தமிழக போலீஸ் உடனே கொளத்தூர் மணியைக் கைது செய்யும் என்று அதிகாரிகள் மூலம் ஜெயலலிதா அறிவித்தார். ஆக, நாகப்பாவை மீட்கும் முயற்சிகள் எதுவும் தொடங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்கான திட்டமிட்ட சதிகள் பல்வேறு முனைகளில் நடந்தன. கொளத்தூர் மணி மீதான, கடைசி இரு வழக்குகளில் பிணை மனுக்கள் தாக்கல் செய்த நாளில், 'இந்து' பார்ப்பன ஏடு, நாகப்பாவைக் காரணம் காட்டி, கொளத்தூர் மணிக்கு பிணை வழங்கக் கூடாது என்று தலையங்கம் எழுதியது. நாகப்பாவை சுட்டது, தமிழ்நாடு அதிரடிப் படையா அல்லது வீரப்பனா என்ற வாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்; நாகப்பாவை மீட்கும் முயற்சிகளுக்கு தடை போட்டு, முரட்டுத்தனமான அணுகுமுறையால், ஒரு உயிரைப் பலி வாங்குவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? இதுதான் முக்கியமான கேள்வி! நாகப்பா இறந்திருக்கலாம்; ஆனால் இந்தக் கேள்விகள் வரலாற்றில் உயிர் பெற்றே நிற்கும். எதிரிகளுக்குக் கூட வரக்கூடாத ஒரு கொடூரமான மரணத்தைச் சந்தித்து நிலைகுலைந்து நிற்கும் நாகப்பாவின் குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நாம் ஆறுதல்தான் கூறமுடியும்; வேறு என்ன செய்வது? {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 12.12.2002}}<noinclude>{{nop}}{{rv|130 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''130'''}}}}|{{left|{{larger|'''130'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> nj4ze5oug8y40c7mw0h5xzqllkq96eg பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/133 250 648760 1957614 1952872 2026-08-08T07:08:16Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரி கல்லூரிகள் மீது சட்டம் பாயாதா?</b>}}}} {{li|கா|2em}}ஞ்சி சங்கராச்சாரி நடத்தும் நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் விடுதியில் - பார்ப்பன மாணவர்களும், பார்ப்பன ரல்லாத மாணவர்களும் - சேர்ந்து சாப்பிட அனுமதிப்பதில்லை; தனித்தனியாக உணவு பரிமாறப் படுகிறது என்ற செய்தி வெளியானவுடன் - ஓராண்டுக்கு முன்பே தந்தை பெரியார் திராவிடர் கழகம், காஞ்சி சங்கர மடத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த போராட்டத்தில் 300 கழகத் தோழர்கள் கைது செய்யப் பட்டனர். அதே பிரச்சனைக்காக, கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. காஞ்சிபுரம் மடத்தில் நடக்கும் இந்த சட்ட விரோதமான வர்ணாஸ்ரமக் கொடுமைகள் மீது, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது, வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். காஞ்சிபுரம் சங்கர மடம் நடத்தும் பொறியியல் கல்லூரியிலும் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற பாடப்பிரிவுகளிலும், தலித் மாணவர்களோ, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களோ, முஸ்லீம், கிறித்தவ மதப் பிரிவைச் சார்ந்தவர்களையோ சேர்ப்பதில்லை என்ற தகவலும் இப்போது வெளியாகி இருக்கிறது. {{nop}}<noinclude>{{nop}}{{rv|131 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''131'''}}}}|{{left|{{larger|'''131'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fkl20soenwwb1x4a87vcr8wxbzjw1mo பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/134 250 648761 1957619 1952875 2026-08-08T07:15:06Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> பார்ப்பன தர்மத்தைப் பரப்பி வரும் சங்கராச்சாரி மடம், வேதக் கல்லூரிகளை நடத்துவதோடு இல்லாமல், பொறியியல் கல்லூரிகளையும் கலைக் கல்லூரிகளையும் நடத்த முன்வந்திருப்பதே, பார்ப்பன தர்மத்துக்கு எதிரானதுதான்! தமிழ்நாட்டில் காந்தியார் சுற்றுப் பயணம் வந்த போது – பார்ப்பனர்கள் அவரிடம், அப்போது முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) மீது புகார் கூறி மனு தந்தனர். தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகளில் - பார்ப்பனர்களுக்கு உரிய இடங்களை முதலமைச்சர் ஒதுக்கவில்லை என்பது புகார். அப்போது காந்தியார் கேட்ட கேள்வி இதுதான்; "வேதம் ஓத வேண்டிய பிராமணர்கள் ஏன் பொறியியல் கல்லூரிக்குப் போக வேண்டும்? இது பிராமணருக்குரிய கடமை அல்லவே?" காந்தியார் அன்று கேட்ட கேள்வி, பார்ப்பனர்களைக் குடைந்தது. இப்போது பொறியியல் கல்லூரிகளை சங்கராச்சாரிகளே நடத்த முன்வந்து விட்டார்கள்; நடத்தட்டும். அதிலே சட்ட விரோதமாக ஏன் பாகுபாடு காட்ட வேண்டும்? பல்கலைக் கழக மான்யக் குழு, கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் போது, விதிக்கும் நிபந்தனைகளும், அரசியல் சட்ட நெறிமுறைகளும் பகிரங்கமாக மீறப்படும் போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா? இட ஒதுக்கீடுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டிய தமிழ்நாட்டின் கல்வி அமைச்சகம், இதில் தலையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? முதலமைச்சரும், மத்திய மனித வளத்துறை அமைச்சரும் தமது சீடர்களாக இருப்பதால், சங்கராச்சாரி, தலை - கால் தெரியாமல் ஆடுகிறார் போலும்! சங்கராச்சாரியின் இந்தச் சமூகநீதிக்கு எதிரான வர்ணாஸ்ரம வெறியைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் வெடிக்க வேண்டும்! {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 19.12.2002}}<noinclude>{{nop}}{{rv|132 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''132'''}}}}|{{left|{{larger|'''132'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> jb3rxmmc9zbiq1xdgcfau99cofm33ui பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/135 250 648762 1957622 1952876 2026-08-08T07:30:49Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>வேண்டாம், தூக்குத் தண்டனை</b>}}}} {{li|ஓ|2em}}ராண்டு காலத்துக்குள் விசாரணையை முடித்து - மூன்று பேருக்கு தூக்குத் தண்டனையைத் தந்திருக்கிறது 'பொடோ'வுக்கான சிறப்பு நீதிமன்றம்! 'பொடோ' சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கே தூக்குத் தண்டனையில் முடிந்திருக்கிறது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சவுகத் உசேன் குரு என்பவரின் மனைவியான அப்சான் குருவுக்கு நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது. 'கணவரின் சதித்திட்டம், இவருக்குத் தெரியும்; அதை அரசுக்குத் தெரிவிக்காதது குற்றம்' என்று நீதிபதி கூறியிருக்கிறார்; இப்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அந்தப் பெண், சம்பவம் நடந்த போது நிறைமாத கர்ப்பிணி. தொலை பேசியில் நடந்த உரையாடலை - இந்த வழக்கில் - ஒரு முக்கிய சாட்சி ஆவணமாக, காவல்துறை காட்டியது 'பொடோ' சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் - இதில் பின்பற்றப்படவில்லை என்பதால், இதை சாட்சியாக ஏற்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், 'பொடோ' நீதிமன்றம் டெல்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து விட்டது. போலீசார் தயாரித்த சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளையும், சாட்சி ஆவணங்கள் முறைகேடாக திருத்தப்பட்டதையும் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டிய பிறகும் 'இவை எல்லாம் புலனாய்வுத் துறையின் இப்போதைய வழக்கமான நடவடிக்கைகள்தான்' என்று நீதிபதி கூறிவிட்டார். சாட்சிகளின் குறுக்கு விசாரணைக்கும் அனுமதிக்கப்படவில்லை.<noinclude>{{nop}}{{rv|133 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''133'''}}}}|{{left|{{larger|'''133'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> k2s0bq6mtrrw4a8shez9blul43knbos 1957623 1957622 2026-08-08T07:31:57Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>வேண்டாம், தூக்குத் தண்டனை</b>}}}} {{li|ஓ|2em}}ராண்டு காலத்துக்குள் விசாரணையை முடித்து - மூன்று பேருக்கு தூக்குத் தண்டனையைத் தந்திருக்கிறது 'பொடோ'வுக்கான சிறப்பு நீதிமன்றம்! 'பொடோ' சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கே தூக்குத் தண்டனையில் முடிந்திருக்கிறது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சவுகத் உசேன் குரு என்பவரின் மனைவியான அப்சான் குருவுக்கு நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது. 'கணவரின் சதித்திட்டம், இவருக்குத் தெரியும்; அதை அரசுக்குத் தெரிவிக்காதது குற்றம்' என்று நீதிபதி கூறியிருக்கிறார்; இப்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அந்தப் பெண், சம்பவம் நடந்த போது நிறைமாத கர்ப்பிணி. தொலை பேசியில் நடந்த உரையாடலை - இந்த வழக்கில் - ஒரு முக்கிய சாட்சி ஆவணமாக, காவல்துறை காட்டியது 'பொடோ' சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் - இதில் பின்பற்றப்படவில்லை என்பதால், இதை சாட்சியாக ஏற்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், 'பொடோ' நீதிமன்றம் டெல்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து விட்டது. போலீசார் தயாரித்த சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளையும், சாட்சி ஆவணங்கள் முறைகேடாக திருத்தப்பட்டதையும் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டிய பிறகும் 'இவை எல்லாம் புலனாய்வுத் துறையின் இப்போதைய வழக்கமான நடவடிக்கைகள்தான்' என்று நீதிபதி கூறிவிட்டார். சாட்சிகளின் குறுக்கு விசாரணைக்கும் அனுமதிக்கப்படவில்லை.<noinclude>{{nop}}{{rv|133 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''133'''}}}}|{{left|{{larger|'''133'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bynk5lecmvpu1zofefurcc5piyjhkuw பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/136 250 648776 1957624 1952898 2026-08-08T07:37:07Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> நாடாளுமன்றத்தின் முன் திடீர்தாக்குதல் நடத்த வந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். அதற்குத் திட்டம் தீட்டினார்கள் என்பதே இப்போது தொடரப்பட்ட வழக்கு! இத்தகைய வன்முறைகள் - தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை; ஆனால், உலகில் 111 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்து விட்டபோது, இந்தியாவில் இந்தத் தண்டனையை அமுல்படுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி! போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சலீமை (பம்பாய் குண்டு வெடிப்பு உட்படப் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்), அந்த நாடு இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறது. காரணம் - மரண தண்டனையை அமுல்படுத்தும் நாட்டுக்கு, தேடப்படும் குற்றவாளியை அனுப்பக்கூடாது என்பது அய்ரோப்பிய நாடுகளின் சட்டம். தூக்குத் தண்டனை தரமாட்டோம் என்று அந்த நாட்டுக்கு உறுதி தருகிறார் உள்துறை அமைச்சர் அத்வானி. அவர் உறுதிமொழி வெளிவந்த அடுத்த சில வாரங்களிலேயே - மூவருக்கு தூக்குத் தண்டனை இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞரே தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடுகிறார்! தமிழ்நாட்டிலும் கோவையில் நடந்த ஒரு கொலை வழக்கில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'ரத்தத்துக்கு ரத்தம்', 'பழிக்குப்பழி' என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்படுவதுதான் தூக்குத் தண்டனை; திருத்தப்படவேண்டிய குற்றவாளிகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக்கட்ட தீர்ப்பு வழங்குவது நாகரீக சமுதாயத்துக்கு உகந்தது அல்ல என்பதே பெரும்பாலான உலக நாடுகளின் கருத்து; எனவே தான் மனித உரிமையாளர்கள் குரலில் நம்மையும் இணைத்துக் கொண்டு, வலியுறுத்துகிறோம்; "வேண்டாம், தூக்குத் தண்டனை!" {{r|-''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 26.12.2002}}<noinclude>{{nop}}{{rv|134 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''134'''}}}}|{{left|{{larger|'''134'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7fhospsebwkvov0pu3xaibo9fcwysti 1957625 1957624 2026-08-08T07:38:18Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> நாடாளுமன்றத்தின் முன் திடீர்தாக்குதல் நடத்த வந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். அதற்குத் திட்டம் தீட்டினார்கள் என்பதே இப்போது தொடரப்பட்ட வழக்கு! இத்தகைய வன்முறைகள் - தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை; ஆனால், உலகில் 111 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்து விட்டபோது, இந்தியாவில் இந்தத் தண்டனையை அமுல்படுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி! போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சலீமை (பம்பாய் குண்டு வெடிப்பு உட்படப் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்), அந்த நாடு இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறது. காரணம் - மரண தண்டனையை அமுல்படுத்தும் நாட்டுக்கு, தேடப்படும் குற்றவாளியை அனுப்பக்கூடாது என்பது அய்ரோப்பிய நாடுகளின் சட்டம். தூக்குத் தண்டனை தரமாட்டோம் என்று அந்த நாட்டுக்கு உறுதி தருகிறார் உள்துறை அமைச்சர் அத்வானி. அவர் உறுதிமொழி வெளிவந்த அடுத்த சில வாரங்களிலேயே - மூவருக்கு தூக்குத் தண்டனை இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞரே தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடுகிறார்! தமிழ்நாட்டிலும் கோவையில் நடந்த ஒரு கொலை வழக்கில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'ரத்தத்துக்கு ரத்தம்', 'பழிக்குப்பழி' என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்படுவதுதான் தூக்குத் தண்டனை; திருத்தப்படவேண்டிய குற்றவாளிகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக்கட்ட தீர்ப்பு வழங்குவது நாகரீக சமுதாயத்துக்கு உகந்தது அல்ல என்பதே பெரும்பாலான உலக நாடுகளின் கருத்து; எனவே தான் மனித உரிமையாளர்கள் குரலில் நம்மையும் இணைத்துக் கொண்டு, வலியுறுத்துகிறோம்; "வேண்டாம், தூக்குத் தண்டனை!" {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 26.12.2002}}<noinclude>{{nop}}{{rv|134 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''134'''}}}}|{{left|{{larger|'''134'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> g5z2eaag1ly4oomu2yd8ykbq7d5fgh5 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/137 250 649486 1957626 1953675 2026-08-08T07:42:12Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> {{center|{{x-larger|<b>'இந்து'க்களைப் புண்படுத்துவது யார்?</b>}}}} {{li|அ|2em}}ர்ச்சகர்களாவது பார்ப்பனர்களின் ஏக போக உரிமையல்ல என்று, அண்மையில் உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் முடக்கப்பட்டுள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைத் தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும் என்று, கோவையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி கூடிய - 'தந்தை பெரியார் திராவிடர் கழக'க் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் இந்தச் சட்டத்தை அமுல்படுத்தா விட்டால் கருவறை துழைவுப் போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்துக்கள் மனதைப் புண்படுத்துவது குற்றம் என்றும் - இந்துக்களாக இருப்பவர்கள், மதம் மாறுவது குற்றம் என்றும், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா, வலியுறுத்தி வருகிறார். 'இந்து'க்களைப் புண்படுத்தி விட்டதாக -கலைஞர் மீது கிரிமினல் வழக்குப் போடப் போவதாகவும் மிரட்டி வருகிறார். யாரை, யார் புண்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்வி! கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழையும் உரிமை பார்ப்பனர் களைத் தவிர, மற்ற சமூகத்தினருக்கு இல்லை; அப்படி நுழைந்து விட்டால் 'சாமி'யே தீட்டாகிவிடும் என்று, கூறுகிறார்களே இது பார்ப்பனரல்லாத சமுதாயத்தினரைப் புண்படுத்துவது அல்லவா? {{nop}}<noinclude>{{nop}}{{rv|135 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''135'''}}}}|{{left|{{larger|'''135'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> n06bn7ihvq4ef6u6r73wlq0b5ugwhc1 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/138 250 649510 1957627 1953744 2026-08-08T07:52:04Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்துவதைக் கூட - காஞ்சி சங்கராச்சாரிகள் எதிர்க்கிறார்களே இது தமிழர்களை அவமதிப்பது - புண்படுத்துவது அல்லவா? 'தலித்' சமூகத்தினர் - முதலில் தூய்மையாக வாழ வேண்டும்; அதன் பிறகு கோயிலுக்கு வரட்டும் என்று சங்கராச்சாரி கூறுவது 'தலித்' சமூகத்தினரை அவமதிப்பது அல்லவா? தூய்மையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை, ஒரு சமூகத்துக்கு மட்டும் அறிவுரையாகக் கூறுவது, அந்த சமூகத்தையே இழிவுபடுத்துவது ஆகாதா? ஆண்களை விட, மதச்சடங்குகளிலும், வழிபாடுகளிலும், தீவிர உணர்வுடன் இருப்பவர்கள் பொதுவாகப் பெண்கள்தான். அந்தப் பெண்கள், அர்ச்சகர்களாக முடியாது என்றும், கோயில் சடங்குகளில் பங்கேற்கக் கூடாது என்றும் கூறுவது - சமூகத்தின் சரிபகுதி மக்களை அவமதிப்பது அல்லவா? 'இந்து மதம்' என்று சொல்லப்படுகிற - வேத பார்ப்பன மதத்தின் - இந்தக் கொள்கைகளை, இந்த நாட்டின் மக்கள் மீது திணித்து, அவர்களை ஜாதி கட்டமைப்புக்குள் அடைத்து இழிவுபடுத்துவதை, எதிர்ப்பது, எப்படி, "இந்துக்களைப் புண்படுத்துவதாகும்? பார்ப்பன மேலாதிக்கத்தை வலியுறுத்தும் இந்து தர்மங்களின்" மீதான எதிர்ப்புகளை – அதற்கு பலிகடாவாக்கப்பட்டுள்ள மக்களின் மீதான எதிர்ப்புகளாக சித்தரிக்க முயலுகிறது, பார்ப்பனர்கள் கூட்டம், அந்த பார்ப்பன கருத்துக்கு வலிமை சேர்க்க முயலுகிறது. ஜெயலலிதாவின் கட்சியும் ஆட்சியும்! இதுதான் உண்மை! இந்துக்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை - சமுதாய - பொருளாதார உரிமைகளுக்கான சட்டங்களை எதிர்த்துக் கொண்டு, அவர்களை சூத்திரர்களாகவும், 'பஞ்சமர்களாகவும் இன்றளவும் இழிவுபடுத்துகிறவர்கள்தான் - இந்துக்கள்' என்று சொல்லப்படுகிற மக்களின் உண்மையான எதிரிகள் இந்த உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் தான் இந்த மக்களின் உண்மையான தோழர்கள். இந்துக்களின் நண்பர்களாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளத் துடிக்கும் ஜெயலலிதா ஆட்சி, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை, அமுல்படுத்தி, அனைத்து இந்துக்களும் ஆண்டவன் முன் சமமானவர்கள் என்று காட்டட்டுமே செய்வாரார்! {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 02.01.2003}}<noinclude>{{nop}}{{rv|136 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''136'''}}}}|{{left|{{larger|'''136'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> rxuvlm8qvu99inbxghkwxyqy5kutq9f பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/139 250 649511 1957629 1953745 2026-08-08T07:59:25Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>தேசிய கலாச்சாரம்</b>}}}} {{li|கு|2em}}ஜராத் மாநிலத் தேர்தலில் - பாரதீய ஜனதா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து - இந்துத்துவா முழக்கங்கள் இடம் பெற்றுள்ளன. வாஜ்பாய், அத்வானி, வெங்கையா நாயுடு என்று ஒருவர் மாற்றி ஒருவராக இந்துத்துவாவுக்கு புதிய புதிய விளக்கங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவா என்பது என்ன? இந்தச் சொற்றொடரை முதலில் அறிமுகப்படுத்திய சவர்க்கார் - கிறித்தவ, முஸ்லீம் மதங்களைத் தவிர ஏனைய சைவம், வைணவம், சமணம், சீக்கியம், புத்தம் ஆகியவற்றை எல்லாம் உள்ளடக்கி, ஒரே மதமாக்கும் நோக்கத்தோடு - 'இந்துத்துவா' என்ற பெயரை சூட்டினார். இந்த மதங்கள் எல்லாமுமே 'இந்து' என்று கூறினால், அதை ஏற்க மாட்டார்கள் என்ற நோக்கத்தோடு, தந்திரமாக இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டது; 'கலாச்சார தேசியம்' என்ற சொல்லையும், இப்போது சங்பரிவாரங்கள் பேசி வருகின்றன. இந்தியாவின் கலாச்சாரம் இந்துத்துவா என்றும், எனவே இந்துத்துவா வாழ்க்கை முறைதான் கலாச்சார தேசியம் என்றும் கூறுகிறார்கள்! இந்தியா முழுமைக்கும் - ஒரே கலாச்சாரம் நிலவுகிறதா? மிசோராம், நாகலாந்தில் வாழும் மக்களும், தமிழ்நாட்டு மக்களும் ஒரே கலாச்சாரம் கொண்டவர்களா? கேரளாவில் வாழ்வோரும், ம.பி. மாநிலத்தில் வாழ்வோரும் ஒரே கலாச்சாரம் கொண்டவர்களா? இந்தியா என்பதே பல்வேறு கலாச்சாரங்களையும், இனங்களையும் கொண்ட ஒரு நாடு!<noinclude>{{nop}}{{rv|137 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''137'''}}}}|{{left|{{larger|'''137'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 77fbvhrqnlcwt4k5u789z6rm7jz2tpq பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/140 250 649512 1957630 1953746 2026-08-08T08:04:36Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இதிலே இந்துக்கள் என்றால் - அனைவரும் தேசியவாதியாக இருக்க வேண்டும். இந்து ஒன்றுதான் பொதுவானதாக இருக்கிறது. பார்ப்பனர்கள் புகுத்திய ஜாதி அமைப்பு, இந்தியாவின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்க வில்லை. உலக மதமான கிறித்தவம் கூட, இந்தியாவில் ஜாதியமயமாகி நிற்கிறது. இஸ்லாம் மட்டுமே - ஜாதியை உள்ளே விடவில்லை! இந்த நிலையில் இந்துத்துவா - கலாச்சாரம் தேசியம் என்று பேசுவது எல்லாம் - ஜாதியைப் பாதுகாக்கும் கலாச்சாரம் அல்லாமல் வேறு என்ன? தேசியக் கலாச்சாரம் பேசும் - சங்பரிவாரங்கள், அந்தக் கலாச்சாரம் என்ன என்பதை வரையறுக்கத் தயாரா? 'இந்துத்துவா' பேசும் இவர்கள், அதற்கான உள்ளடக்கம் என்ன என்பதை விவரிக்கத் தயாரா? பார்ப்பன தர்மத்தை ஏற்றுக் கொண்டு - ஒடுக்கப்பட்ட மக்கள் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும், வாழ்ந்து கொண்டு, தங்களுக்குள் திணிக்கப்பட்டுள்ள பல்வேறு ஜாதிப்பிரிவுகளை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்பது தானே தேசிய கலாச்சாரம்? இதை மானமுள்ளவர்களால் ஏற்க முடியுமா? தேசிய கலாச்சாரம் பேசும் சங்பரிவாரங்களே! நீங்கள் கூறும் கலாச்சாரத்தில் பார்ப்பன - சூத்திர பேதங்கள் சிடையாது. தீண்டாமை கிடையாது; ஜாதிகள் கிடையாது என்று அறிவிக்கத் தயாரா? {{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 09.01.2003}}<noinclude>{{nop}}{{rv|138 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''138'''}}}}|{{left|{{larger|'''138'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> i8w6tmxeh4a6yhpewq77qikjpo36cy0 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/141 250 649513 1957631 1953748 2026-08-08T08:09:31Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>யார் "பிரிவினைவாதி"?</b>}}}} {{li|யா|2em}}ர் "பயங்கரவாதி"? குஜராத் தேர்தலில் - வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினரின் மதவெறி மிரட்டல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. "இரண்டே ஆண்டுகளில் இந்தியாவை இந்து தேசமாக்குவோம்; எதிர்ப்பவர்களுக்கு மரணதண்டனை விதிப்போம்" என்று விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் தொகாடியா, வெறிக் கூச்சலிடுகிறார். தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள அசோக சின்னம் – புத்த மதத்தின் சின்னம் என்றும், அது எப்படி இடம் பெறலாம் என்றும் அத்வானி கேட்கிறார். புத்த மதத்தையும் - சட்டப்படி இந்துக்களாக்கி அவர்களையும் உள்ளடக்கியதுதான் இந்துத்துவா' கோட்பாடு என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டு, மற்றொரு புறத்தில், அதற்கு நேர் மாறாக புத்த மார்க்கத்தை விமர்சிக்கிறார்கள். என்ன காரணம்? இந்தியாவின் பூர்வீகக் குடிகளான திராவிடர்களின் மார்க்கம் 'புத்தம்' தான் என்பதை எடுத்துக்கூறி, டாக்டர் அம்பேத்கர், பல லட்சம் மக்களோடு புத்த மார்க்கத்தைத் தழுவினார்; எனவே திராவிடர்கள் மீதான வெறுப்புதான் அத்வானிகளை அப்படிப் பேசவைத்திருக்கிறது. சட்டத்துக்கு தொடர்ந்து சவால் விட்டு வரும் மராட்டிய சிவசேனைத் தலைவரான பார்ப்பனர் பால்தாக்கரே "மகாராஷ்டிரா ராணுவ ஆதார மய்யம்” என்ற பெயரில் - இந்து தற்கொலைப் படை ஒன்றைத் துவக்கியிருக்கிறார். தானே மாவட்டத்தில் உள்ள வகத் என்ற கிராமத்தில், 30 சிவசேனையினரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி தந்து வருகிறார்கள். முன்னாள் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஜெயந்த் கிட்டாலே<noinclude>{{nop}}{{rv|139 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''139'''}}}}|{{left|{{larger|'''139'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> je6lo06ck2bjot1rpgpxuka58md35qe விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி 4 651247 1957583 1957476 2026-08-08T00:21:22Z Neyakkoo 7836 /* 04.08.2026 */ பரப்புரை 1957583 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] == பயில்க == ==பயில்வோர்== ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] t077nghbv75fo7bvb3ckyulnluq0xo2 1957584 1957583 2026-08-08T00:22:39Z Neyakkoo 7836 /* 04.08.2026 */ 1957584 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] == பயில்க == ==பயில்வோர்== ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) # # ===11.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] f4dc235sigh5lmbso5ox1htumpaykfl 1957585 1957584 2026-08-08T00:23:57Z Neyakkoo 7836 /* பயில்வோர் */ # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 1957585 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] == பயில்க == ==பயில்வோர்== * [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) # # ===11.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] daarlxawczhi16ey3gf3v1k87wrwdao பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/759 250 651363 1957555 2026-08-07T13:52:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உருசியர்கள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், சாசேவன் பழங்குடியினர் குளிர் காலத்தில் வாழும் முகான் (Mughan) பகுதிகளைக் கைப்பற்றின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாசேவன்‌ பழங்குடி|733|சாசேவன்‌ பழங்குடி}}</noinclude>உருசியர்கள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், சாசேவன் பழங்குடியினர் குளிர் காலத்தில் வாழும் முகான் (Mughan) பகுதிகளைக் கைப்பற்றினர். அதன் பின்னர் இவர்களிடமிருந்து 1923–ஆம் ஆண்டளவில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அதனால் இவர்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழாமல் அடிக்கடி வன்செயல்களில் ஈடுபடலாயினர். இவர்களின் கொள்ளையடிக்கும் செயல்கள் உருசிய, ஈரான் எல்லைப் பகுதிகளில் வாழும் பிற மக்களுக்கும் இப்பகுதிகளில் நடைபெற்ற வாணிகத்திற்கும் இடையூறாய் அமைந்தன. இவர்களின் செயல்களினால் ஈரானுக்கும் உருசியாவிற்கும் அடிக்கடி பூசல்கள் ஏற்பட்டன. ஈரானின் எல்லைப் பகுதியில் வாழும் இவர்கள் தம் வாழுமிடத்தால் மட்டுமன்றி இவர்கள் கட்டும் கூடாரங்களின் அமைப்பினாலும் பிற நாடோடிக் குழுக்களிடமிருந்து வேறுபடுகின்றனர். ஈரானின் பெரும்பாலான நாடோடிக் குழுவினர் அரேபிய பெதோவு (Bedou) குடியினரைப் போன்று ஆட்டுத் தோவினைக் கொண்டு செவ்வக வடிவில் கூடாரங்களை அமைத்து வாழ்கின்றனர். ஆனால் சாசேவன் பழங்குடிகள் அரை வட்ட வடிவிலான கூடாரங்களைக் கட்டி வாழ்கின்றனர். ஒவ்வொரு கூடாரத்திற்கும் வலுவான மூன்று கம்பங்களை முக்கோணமாக நட்டு அதன் மேல் ஆட்டுத் தோலாலான விரிப்பை இட்டு மூடுகின்றனர். சந்தையிலிருந்து பெறப்படும் இக்கம்பங்கள் 20ஆண்டுக் காலம் நிலைத்திருக்கின்றன. ஒவ்வொரு கூடாரத்திலும் சராசரியாக ஏழு அல்லது எட்டுப் பேர் கொண்ட குடும்பம் வாழ்கிறது. பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாகும். மணமான மக்கள் தங்கும் பொருட்டு அமைக்கும் தனியறை தவிரக் கூடாரத்தில் வேறு பிரிவுகள் இல்லை. இந்த அறையும் ஓராண்டுக் காலத்திற்கே வைத்துள்ளனர். இவர்களது முதன்மையான உணவு ரொட்டி. கம்பளி, கால்நடைகள், மிகுதியாக உள்ள பால் முதலானவற்றை விற்றுத் தமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்கின்றனர். கால்நடைகளை மேய்த்தல், பால் கறத்தல், கால்நடைகளின் உரோமத்தை நீக்குதல், கால்நடைகளைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்றல் முதலானவை ஆண்களின் தொழில்களாகும். கூடாரங்களை அமைத்தலும் ஆண்களின் பணியாகும். பெண்களும் குழந்தைகளும் நீர் கொண்டு வருதல், வீட்டு வேலைகளைச் செய்தல் முதலானவற்றைக் கவனிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பெண்கள் ரொட்டி தயாரித்தல், வெண்ணெய் பதப்படுத்தல், கம்பளி நெய்தல் முத லானவற்றைச் செய்தாக வேண்டும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 759 |bSize = 480 |cWidth = 195 |cHeight = 289 |oTop = 69 |oLeft = 265 |Location = center |Description = }} {{center|ஆட்டு மந்தை}} சாசேவன் நாடோடிகள் இன்று 30 குழுக்களாக உள்ளனர். 50 குடும்பங்களிலிருந்து 1000 குடும்பங்களைக் கொண்ட ஒவ்வொரு குழுவும் ஒரு தலைவனைக் கொண்டுள்ளது. கால்நடை வளர்த்தலில் நான்கைந்து குடும்பங்கள் ஒன்று சேர்ந்து உதவிக்கொள்கின்றன. இவர்கள் பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களாக இருபபர். கோடைக் காலத்திலும் குளிர் காலத்திலும் கால்நடைகளை மேய்ப்பதற்கு ஒரு குழுவிலுள்ள ஒவ்வொரு 25 குடும்பங்களுக்கும் ஒரு மினியிடம் (திரெக் – Tirehs) உண்டு. சமயச் சடங்குகளின் போதும் பிறசமுதாய நிகழ்ச்சிகளின் போதும் ஒரு குழுவைச் சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகின்றனர். சமுதாய நிகழ்ச்சிகள் இவர்களின் குழுத் தலைவனால் நடத்தப்படுகின்றன. இவர் ‘தாடித் தலைவன்’ (Grey Beard) என்றும் கூறப்படுவார். இந்த தலைமைப் பதவியைப் பெறுவதற்கு அவரோ அவர் மகனோ கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும். அவரே அரசு அதிகாரிகளிடம் சென்று தங்கள் குழுவினரின் நலன்களுக்காகச் செயலாற்ற வேண்டும் அதுமட்டுமன்றி அவர் மிகுந்த செவ்வராகவும் இருக்க வேண்டும்.<noinclude></noinclude> 2ls61a0rc4nziyd8woaocp9r2uk2v8x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/760 250 651364 1957560 2026-08-07T14:15:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெளியார் வரும்போதெல்லாம் அவருக்கு விருந்து கொடுக்கவும் முதன்மையான நிகழ்ச்சிகளின்போது தம் குழுவினருக்குச் சிறுப்பாக விருந்தளிக்கவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாசேவன்‌ பழங்குடி|734|சாஞ்சசு சார்சு}}</noinclude>வெளியார் வரும்போதெல்லாம் அவருக்கு விருந்து கொடுக்கவும் முதன்மையான நிகழ்ச்சிகளின்போது தம் குழுவினருக்குச் சிறுப்பாக விருந்தளிக்கவும் வேண்டும். நவம்பர் முதல் மே வரையிலான குளிர் காலத்தை இவர்கள் முகான் புல்வெளிப் பகுதிகளில் கழிக்கின்றனர். இது கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரமான பகுதி அன்று. கோடைக் காலங்களில் சபலான் (Sabalan) மேட்டுநிலத் தொடர் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். இவர்கள் 100–இலிருந்து 150 மைல் வரையில் இடம் பெயர்வது மூலம் பருவ மாற்றத்தின் கடுமையான காலநிலையிலிருந்து ஒதுங்கி வாழ்கின்றனர். இவர்களைப் போன்றே கால்நடைகளுக்கும் பலவகையான கூடாரங்கள் கட்டி, கடுமையான காலநிலையிலிருந்து அவற்றைக் காப்பாற்றுகின்றனர். பிப்பிரவரி மூதல் ஏப்பிரல் வரையிலான காலத்தில் வணிகர்கள் ஆட்டு மந்தைகள் உள்ள இடத்திற்கு அருகில் கூடாரம் அமைத்து ஆட்டுப் பாலைக் கறக்கும் இடத்திலேயே பெறுகின்றனர். பின் அங்கேயே அதனைப் பாலாடைக் கட்டிகளாகச் செய்து விற்பலைக்குக் கொண்டு செல்கின்றனர். கடுமையான குளிர் காலத்திற்குப் பின்னர் மார்ச்சு அல்லது ஏப்பிரலில் ஆட்டு உரோமங்களை வெட்டி விற்பனை செய்கின்றனர். ஈரானின் பெரும்பகுதி மக்களுக்குச் சாசேவன் மக்கள் வளர்க்கும் ஆடுகளே இறைச்சியைத் தருகின்றன. ஆடுகளை வணிகர்கள் மந்தையுள்ள இடங்களிலேயே விலைக்குப் பெற்றுக்கொள்கின்றனர். ஈரானின் புத்தாண்டு நாளான மார்ச்சு 21–ஆம் நாளன்றுதான் இவர்களுக்கு இளவேனிற் காலம் தொடங்குகிறது. இக்காலங்களில் ஆட்டு மந்தைகளைப் பல இடங்களில் இவர்கள் மேய்க்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு குடும்பமும் மூன்று அல்லது நான்கு ஒட்டகங்களைக் கொண்டுள்ளது. இவைதாம் ஒரு குடும்பத்தின் அனைத்துப் பொருள்களையும் ஓர் இடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்ல உதவுகின்றன. சாசேவன் மக்கள் 1923இலிருந்து பல மாற்றங்களைப் பெற வேண்டியவராயினர். குறிப்பாக, 1930 க்குப் பிறகு அரசு நாடோடித் தொழிலையும் கூடாரம் அமைத்து வாழ்தலையும் தடை செய்தது. அதற்கு மாறாக நிலையான வீடுகட்டி வேளாண்மை மேற்கொள்ள வற்புறுத்தியது. சோவியத்து அரசும் ஈரானிய அரசும் கூட்டாக இணைந்து மேற்கொண்டுள்ள நீர்ப்பாசனத் திட்டம் சாசேவன் மக்களை வேளாண் தொழிலில் ஈடுபட ஊக்குவித்துள்ளது. {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சாசேவன்‌ பழங்குடி"/> <section begin="சாஞ்சசு, சார்சு"/> {{dhr}} {{larger|<b>சாஞ்சசு, சார்சு (1906–1972):</b>}} அமெரிக்க நாடுகளில் இசுபானிய மொழி பேசும் அமெரிக்கக் குழந்தைகளுக்குக் (Spanish speaking children) கல்விச் சீர் திருத்தங்களின் இன்றியமையாமை குறித்துப் பேசியவர்களுள் முதன்மையான அமெரிக்க நாட்டுக் கல்வியாளர் இசுபானிய மொழி பேசும் அமெரிக்கக் குழந்தைகளின் கல்விச் சிக்கல்களுக்கும் அவர்களின் கொடிய வறுமைக்குமுள்ள தொடர்பினைச் சார்சு சாஞ்சசு (George Sanchez) அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 760 |bSize = 480 |cWidth = 111 |cHeight = 147 |oTop = 188 |oLeft = 298 |Location = center |Description = }} {{center|சார்சு சாஞ்சசு}} சார்சு சாஞ்சசு, இசுபானிய மொழி பேசும் சமுதாயத்தினர் உறையும் இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் இருமொழிவழிக் கல்வி (Bilingual Education) வசதி வருவதற்காக வாதாடினார். இசுபானிய மொழி பேசும் ஆசிரியர்களைப் பணியமர்த்தியும், பல்வேறு பாடங்களை இசுபானிய மொழியிலேயே கற்பித்தும் பள்ளிகளில் இருமொழி வழிக் கல்வி முறை ஏற்படுத்த முனைந்தார். அதற்காக மெக்சிகோ நாட்டு அமெரிக்கர்களின் (Mexican Americans) ஆராய்ச்சிகளின் பங்கினை எடுத்து விளக்கினார். கல்விச் சீர்திருத்தம் குறித்துச் சார்சு சாஞ்சசு பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியபோதிலும், இவர் சீர்திருத்தங்கள் 1960–ஆம் ஆண்டுகளில் யாராலும் ஏற்கப்படாமல் இருந்து வந்தன. அப்போது, ‘சிக்கானோ இயக்கம்’ (Chicano movement) மட்டும் இசுபானிய மொழி பேசும் சமுதாயத்திலுள்ள அமெரிக்கக் குழந்தைகளுக்கு இருமொழிவழிக் கல்வி குறித்து மிகுதியாகப் பேசி வந்தது. வடக்கு மெக்சிகோவிலுள்ள (North Mexico)<noinclude></noinclude> p2k0dstrabhz9aw7xdh17uswyeqptcd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/761 250 651365 1957563 2026-08-07T14:40:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆல்புகொர்க்கு (Albuquerque) என்னுமிடத்தில் பிறந்த சார்சு சாஞ்சசு 1934–இல் பெர்கிலியில் (Berkeley) உள்ள கலிபோர்னியப் பல்கலைக் கழகத்தில் (California University) கல்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாஞ்சி|735|சாஞ்சி}}</noinclude>ஆல்புகொர்க்கு (Albuquerque) என்னுமிடத்தில் பிறந்த சார்சு சாஞ்சசு 1934–இல் பெர்கிலியில் (Berkeley) உள்ள கலிபோர்னியப் பல்கலைக் கழகத்தில் (California University) கல்வியியவில் அறிஞர் பட்டம் பெற்றார். பின்னர், 1940–இலிருந்து இறக்கும் வரை தெக்சாசுப் பல்கலைக் கழகத்தில் (University of Texas) இலத்தீன்–அமெரிக்கன் கல்விக்குப் (Latin American Education) பேராசிரியராகப் பணியாற்றினார். சார்சு சாஞ்சசு 1940–இல் எழுதிய ‘மறக்கப்பட்ட மக்கள்: புதிய மெக்சிகோவினர் ஓர் ஆய்வு’ (Forgotten People: A Study of New Mexicans) என்னும் நூல் சமுதாய இயல்பு, மொழி ஆகியவற்றைப் பற்றிய உயர்தரமான (Classic) ஆராய்ச்சி நூலாக இன்றும் கருதப்படுகிறது. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="சாஞ்சசு சார்சு"/> <section begin="சாஞ்சி"/> {{dhr}} {{larger|<b>சாஞ்சி</b>}} மத்திய பிரதேசத்தில் இரைசன் (Raisen) மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஊர். போபாலுக்கு வடமேற்கே 45 கி.மீ. தோலைவில் இது அமைந்துள்ளது. இங்குப் பௌத்த கலையின் ஒப்பற்ற சின்னங்கள் பல உள்ளன. இவற்றுள் பல இன்றும் அழியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூரின் அருகில் ஓடும் பேட்வா ஆற்றிற்கு மேற்கில் உள்ள மலை உச்சியில் இச்சின்னங்களுள் யாவற்றையும் பெரும்பாலானவை உள்ளன. இவை அகழ்ந்து, ஆழ்ந்து உலகறியச் செய்த பெருமை சர்சான் மார்சல் என்பவரையே சாரும். இங்கு ஏறக்குறைய 400 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெளத்த சமயத்திற்குப் பேராதரவு தந்த அசோகர் (கி.மு. 273–232) இந்தியாவின் பல பாகங்களிலும் புத்தரின் நினைவுச் சின்னமாகத் தூபிகளைக் கட்டினார். அசோகர் உச்சயினியின் ஆளுநராக இருந்த காலத்தில் சாஞ்சியில், வணிகர் ஒருவரின் மகளை மணம் புரிந்து கொண்டார். இங்கிருந்துதான் அசோகரின் மகன் மகேந்திரன் பௌத்த சமயத்தைப் பரப்ப இலங்கைக்குச் சென்றார். சாஞ்சியில் பல தூபிகள் கட்டப்பட்டன. புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகளும், அவர்களைப் பின்பற்றிய துறவிகளும் இறந்தபின் அவர்களின் சாம்பலை அடக்கம் செய்த இடங்களில் எழுப்பப்படும் அரைக்கோள வடிவ நினைவுச் சின்னங்களே தூபிகள் ஆகும். சாஞ்சியில் குறிப்பிடத்தக்க சின்னங்கள்; ‘பெருந் தூபி’, தூபி (எண் 2), தூபி (எண் 3), சிறு தூபி, விகாரைகள் ஆகியனவாம். <b>பெருந்தூபி:</b> சாஞ்சித் தூபிகளுள் ‘பெருந்தூபி’ எனப்படுவது கலை வரலாற்றில் புகழ்மிக்கது. இது கி.பி. 1818–ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இன்று இதன் விட்டம் சுமார் 36 மீ. (120 அடி); உயரம் 17 மீ. (55 அடி). இதனை அசோகர் கட்டினார். அவர் செங்கற்களைக் கொண்டு சுமாரான அளவில் கட்டிய இத்தூபியின் அளவினை அவருக்கு நூறு ஆண்டுகளுக்குப்பின் வந்த சுங்கர், கண்வர் ஆகியோரின் ஆட்சியின்போது செல்வமிக்க வணிகர்கள் பலர் இணைந்து விரிவுபடுத்தினர். மேலும் அவர்கள் இதன் மீது கற்பலகைகளைப் பரப்பி இதனை அழகு படுத்தினர். இங்ஙனம், சிறிய தூபிகளை விரிவுபடுத் துவது பெருஞ் சமயத் தொண்டாகக் கருதப்பட்டது. அசோகரது செங்கல் தூபிகளின் மீது கற்பரப்பும் மரபும், தூபியின் உச்சியில் சதுர வடிவில் கல்வேலி (அர்மிகம் – Harmika) அமைக்கும் மரபும் சுங்கர்கள் காலத்தில் தான் தொடங்கின. அக்காலத்திலேயே இப்பெருந் தூபியினைச் சுற்றி அழகிய கல்வேலி (வேதிகை) அமைக்கப்பட்டது. இவ்வேலியின் தூண்கள் எட்டுப்பட்டையுடையன; தரைமட்டத்திலிருந்து {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 761 |bSize = 480 |cWidth = 171 |cHeight = 288 |oTop = 272 |oLeft = 275 |Location = center |Description = }} {{center|சாஞ்சிப் பெருந் தூபி}}<noinclude></noinclude> r76uznqzh8aumaac8h6ymnblx7lwb88 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/762 250 651366 1957564 2026-08-07T15:33:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 762 |bSize = 480 |cWidth = 161 |cHeight = 156 |oTop = 102 |oLeft = 47 |Location = center |Description = }} {{center|பெருந்தூபி – சாஞ்சி}} 3 மீ. உயரமுடையன. இவை ஒன்றுக்கொன்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாஞ்சி|736|சாஞ்சி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 762 |bSize = 480 |cWidth = 161 |cHeight = 156 |oTop = 102 |oLeft = 47 |Location = center |Description = }} {{center|பெருந்தூபி – சாஞ்சி}} 3 மீ. உயரமுடையன. இவை ஒன்றுக்கொன்று இரண்டு அடி தூரத்தில் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மூன்று குறுக்குச் சட்டங்களும், உச்சியில் ‘உட்டுனீசம்’ எனப்படும் நீண்ட விட்டமும் இணைக்கின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 762 |bSize = 480 |cWidth = 186 |cHeight = 150 |oTop = 375 |oLeft = 37 |Location = center |Description = }} {{center|குப்தர் கோயில்}} ஆந்திரத்தை ஆண்ட சாதவாகன மன்னர்கள் இவ்வேலியின் நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக நான்கு அழகிய தோரணவாயில்களை அமைத்து, இத்தூபியைப் புகழ்மிக்க கலைப்படைப்பாக உருவாக்கினர். ஒவ்வொரு தோரணவாயிலுக்கும் இரு தூண்களும், தூண்களின்மீது குறுக்காக அமைக்கப்பட்ட மூன்று விட்டங்களும் உள்ளன. இவ்விட்டங்கள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட மூன்று நீண்ட துணிச் சுருள்களைப் போன்று உருவாக்கப்பட்டுள்ளன. இது அக்காலக் கலைஞர்களின் கற்பனைத் திறனை வெளிப்படுத்துகிறது. இவ்விட்டங்களைத் தாங்குவதற்குப் போதிகைகளை அமைப்பதற்குப் பதிலாக, அழகிய பெண்ணுருவங்களைச் செதுக்கியுள்ளனர். இவை கலை அம்சம் மிக்கன. இச்சுருள்களிலும் தூண்களிலும் புத்தரின் வாழ்க்கை வரலாறும், சாதகக்கதை நிகழ்ச்சிகளும், பௌத்தர்களின் புனிதச் சின்னங்கள் பலவும் (குறிப்பாக அசோக மரங்களும், தர்ம சக்கரங்களும்) மிக நுணுக்கமாகவும், அழகாகவும் தந்த வேலைப்பாடுகளைப் போன்று செதுக்கப்பட்டுள்ளன. இவையாவும் அக்காலச் சிற்பக்கலையின் உயர்ந்த நிலையைக் காட்டும். எனவே, இவை உலகக் கலை வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தெற்குத் தோரணவாயிலிலுள்ள கல்வெட்டில் இவற்றை உருவாக்கியவர்கள் விதேச (பெசுநகர்) நாட்டைச் சார்ந்த தந்தச் சிற்பிகள் ஆவர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 762 |bSize = 480 |cWidth = 172 |cHeight = 197 |oTop = 337 |oLeft = 277 |Location = center |Description = }} {{center|கிழக்குத் தோரணவாயிலில் உள்ள சாலபஞ்சிகை<br>– சாதவாகனர் சிற்பம்}} {{nop}}<noinclude></noinclude> p8w29ikaw6ppkafdbejoy29rndm76k4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/763 250 651367 1957572 2026-08-07T16:07:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இப்பெருந்தூபியின் தேற்கு வாயிலுக்கு எதிரே அசோகரின் சாசனத்தூண் ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. சிதையாத நிலையில் இத்தூண் 12மீ. (42 அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாஞ்சி|737|சாஞ்சி}}</noinclude>இப்பெருந்தூபியின் தேற்கு வாயிலுக்கு எதிரே அசோகரின் சாசனத்தூண் ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. சிதையாத நிலையில் இத்தூண் 12மீ. (42 அடி) உயரமாக இருந்தது என அயல்நாட்டார் குறிப்புகள் கூறுகின்றன. இதன் உச்சியில் நான்கு சிங்கங்களின் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இது, இன்று இந்தியக் குடியரசின் சின்னமாக ஏற்கப்பட்டுள்ள சாரநாத்துச் சிங்க அமைப்பினை ஒத்ததாகும். இத்தூணில் காணப்படும் அசோகனது கல்வெட்டு, பௌத்தர்கள் தமக்குள் சமயப்பூசல்களைத் தவிர்க்க வேண்டும் என அம்மன்னன் கட்டளையிட்டதைக் தெரிவிக்கிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 763 |bSize = 480 |cWidth = 186 |cHeight = 137 |oTop = 192 |oLeft = 27 |Location = center |Description = }} {{center|தூபியின் சுற்றுப்பாதை – சாஞ்சி}} இப்பெருந்தூயியைச் சுற்றி, அமைக்கப்பட்ட கல் வேலியில் குப்தப் பேரரசன் இரண்டாம் சந்திரகுப்தனின் கி.பி. 412–ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. பெருந்தூபியைச் சுற்றிச்சில அழகிய கட்டடங்கள் உள்ளன. அவற்றுள் கீழ்க்கண்டவை குறிப்பிடத்தக்கன. 1. பெருந்தூபியின் தெற்குத் தோரண வாயிலுக்கு நேர் எதிரில் உள்ள சைத்திய மண்டபம் (எண் 18). 2. மேற்கூறிய சைத்திய மண்டபத்திற்குக் கிழக்கே அமைந்த புகழ்மிக்க குப்தர்காலக் கோயில் (எண்.17). இது கி.பி. 5–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. 3. பெருந்தூபியின் மேற்குத் தோரணவாயிலுக்கு முன்னே அமைந்த இரு மண்டபங்கள் (எண்: 40, 45). இவற்றைப் பௌத்தப்பெண் துறவிகள் (பிக்குணிகள்) தங்குவதற்கென அசோக மன்னனின் மனைவியான தேவி என்பாள் கட்டினாள். <b>தூபி எண் 3:</b> பெருந்தூபிக்கு வடகிழக்கே 45மீ. தூரத்தில் ஒரு சிறிய தூபி உள்ளது. இதனைத் தொல்பொருள் துறையினர் ‘தூபி எண் 3’ எனக் குறிப்பிடுவர். உருவ அமைப்பில் இது பெருந்தூபியைப் போலிருப்பினும், அளவின் சிறியது, இதன் விட்டம் 15மீ; உயரம் 8மீ. இதன் காலம் கி.மு. 150–கி.மு. 40 ஆகும். பெரிதும் சிதைந்துவிட்ட இத்தூபியை கி.பி. 1851–இல் அகழாய்வு செய்தபொழுது இதனடியிலிருந்து இரண்டு கற்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் காணப்பட்ட குறிப்புகளின்படி, புத்தரின் முதல் மாணவர்களாயிருந்த சாரிபுத்திரர், மகாமுகர்லானர் (Mahamuggurlana) ஆகியோரின் எலும்புகளும் சாம்பலும் அப்பேழைகளில் வைக்கப்பட்டிருந்தன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தூபியை 1912–1917–இல் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை புதுப்பித்தது. மேலும், மேற்கூறிய கற்பேழைகளைப் பெருந்தூபிக்கு அருகே புதைத்து, இத்துறையினர் அதன்மீது 1952–ஆம் ஆண்டில் அழகிய புது விகாரையைக் கட்டியுள்ளனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 763 |bSize = 480 |cWidth = 176 |cHeight = 207 |oTop = 238 |oLeft = 260 |Location = center |Description = }} <b>தூபி எண் 2.</b> சாஞ்சியில் காணத்தக்க தூபிகளுள் இதவும் ஒன்றாகும். இது இங்குள்ள குன்றின் மேற்கே அமைந்த பாறை மீது கட்டப்பட்டுள்ளது. இதன் விட்டம் 14 மீ. உயரம் 8 மீ. இதற்குத் தோரண வாயில்கள் இல்லை. இதனைச் சுற்றியுள்ள கல்வேலி இன்றும் சிதையா நிலையிலுள்ளது. இதுதுள்ள படைப்புச் சிற்பங்கள் அழகுமிக்கன. அவற்றுள் பெண் தேவதைகள், சிங்கங்கள், யானைகள், பாம்புகள், இறக்கையுள்ள சிங்கங்கள், முதலை அல்லது குதிரைத் தலையுடன் கூடிய மனிதர்கள், போதி மரம், தரும சக்கரம் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. {{nop}}<noinclude> <b>வா.க. 8 – 47</b></noinclude> 0xmys4jhudyrjjnegoiyxx3cevmvffh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/764 250 651368 1957573 2026-08-07T16:13:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 764 |bSize = 480 |cWidth = 404 |cHeight = 502 |oTop = 67 |oLeft = 26 |Location = center |Description = }} {{center|வடக்குத் தோரணவாயில்}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாஞ்சி|738|சாஞ்சி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 764 |bSize = 480 |cWidth = 404 |cHeight = 502 |oTop = 67 |oLeft = 26 |Location = center |Description = }} {{center|வடக்குத் தோரணவாயில்}} {{nop}}<noinclude></noinclude> e2r3j0mdf7f4wsu5mi1wsyrwmvm7k7t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/765 250 651369 1957574 2026-08-07T16:16:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 765 |bSize = 480 |cWidth = 432 |cHeight = 479 |oTop = 77 |oLeft = 10 |Location = center |Description = }} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாஞ்சி|739|சாஞ்சி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 765 |bSize = 480 |cWidth = 432 |cHeight = 479 |oTop = 77 |oLeft = 10 |Location = center |Description = }} {{nop}}<noinclude> <b>வா.க. 8 – 47அ</b></noinclude> re28muhptm3vdi1v8ikw97icayobbjb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/731 250 651370 1957597 2026-08-08T05:25:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிரானுக்கு ஜன்ம ஞானத்தை உபதேசித்தருளியதைப் பற்றி விளக்கும் நூலாகும். இந்நூலில் 2055 எளிய பாடல்கள் உள்ளன. இது ஆறு பிரகரணங்களாகப் பிரிக்கப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஞானவாசிட்டம்|703|ஞானவெட்டி}}</noinclude>பிரானுக்கு ஜன்ம ஞானத்தை உபதேசித்தருளியதைப் பற்றி விளக்கும் நூலாகும். இந்நூலில் 2055 எளிய பாடல்கள் உள்ளன. இது ஆறு பிரகரணங்களாகப் பிரிக்கப்பட்டு நாற்பத்து மூன்று கதைகளுடையதாய் அமைத்திருக்கிறது. வசிட்டர் உபதேசத்திற்குப் பிறகு இராமனுடைய திருமணம், இலங்கைப் போர், மன்னனாகி அரசாளுதல் முதலியன நடைபெறுகின்றன. வடமொழியிலிருந்து பாடல்களாக மொழிபெயர்க்கப்பட்டதாதலின் இது வழிநூல். இதன் ஆசிரியர் கவிராச பண்டிதர் மகன் வீரை ஆளவந்தார் என்பவர். வீரை பாண்டி நாட்டிலுள்ள ஊர். இராமன் கல்வி கற்றபின் தீர்த்த யாத்திரை சென்று திரும்பினால் உலகம் நிலையற்றது, எல்லாம் அழியும் என்று அவன் அறிந்துகொண்டான். ஆகவே மனம் தளர்ந்தான். இராமனுக்கு உலக ஆசையினால் இந்நிலை ஏற்படவில்லை. சிறந்த வைராக்கியத்தினால் இந்நிலை ஏற்பட்டது. ஆன்மாவைப் பற்றி உபதேசித்தால், மனத்தெளிவு எய்தி எல்லாச் செயல்களையும் சரியாகச் செய்வான் என்று விசுவாமித்திரர் கருதினார். ஏன், இங்ஙனம் துயருடன் காணப்படுகின்றாய் என்று விசுவாமித்திரர் இராமனைக் கேட்டார். இராமன் கூறிய பதில் மிகவும் வைராக்கியமுடைய தாகவும், கற்போர் உள்ளத்தைத் தூய்மையடையச் செய்வதாகவும், அமுதம்போலவும் அமைந்திருந்தது. பிறகு விசுவாமித்திரரின் வேண்டுகோளுக்கிணங்க வசிட்ட முனிவர் பல கதைகளின்மூலம் இராமனுக்கு ஞானோபதேசம் செய்தார். அறிவுரைகளின் பலன், இராமன் சித்தந் தெளிந்தான்; பிறகு ஆட்சியைத் திறம்பட நடத்தினான். அந்த உபதேசத்தில் அடங்கிய ஒரு கதை: ஓர் அரசனும் அரசியும் யோகம் பயின்று, பிறகு அறிவு நூற் பயிற்சியும் பெற்றனர். அரசிக்கு ஞானமுண்டாயிற்று, ஞானம் கிட்டாத அரசன், மனைவி தடுத்தும் கேளாமல் காட்டிற்குச் சென்று தவம் செய்தான். அரசன் காட்டில் கடுந்தவம் செய்தததால் மிகவும் மெலிந்துவிட்டான். அரசனை, மனைவி முனிவர் வேடத்தில் சென்று பார்த்தாள். ஆகாயத்திலிருந்து தன்னெதிர் இறங்கிய அம்முனிவரை அரசனாகிய தவசி மகிழ்ச்சியோடு வரவேற்றுத் தனக்கு உபதேசம் செய்யுமாறு கேட்டான். முனிவர் எல்லாவற்றையும் விடுக என்றார். உடனே தவசி ‘இந்தக் கமண்டலமும் கோவணமும்தானே’ என்று கூறிக் கமண்டலத்தை உடைத்துக் கோவணத்தைக் கிழித்தார். முனிவர் எல்லாம் விடவில்லையே என்றார் தவசி. உடலைக் குறிப்பிடுகின்றீர்களா என்று கூறி, மலையிலிருந்து உயிர்விடத் துனிந்தார். உடனே முனிவர் தடுத்து, ‘உயிர்போனபின் என்ன பயன் அடைவாய்’ என்று கேட்டார். பிறகு அவனை நிறுத்தி, விடுவது என்பது பொருள்களை உடைத்தும் கிழித்தும் விடுவதன்று. எந்தப் பொருளையும் மனத்தால் நினையாமலிருப்பதே எல்லாவற்றையும் விடுதலாகிய தியாகமாம் என்று கூறினார். பிறகு அரசன் ஞானம் பெற்று, நாட்டிற்குச் சென்று அரசாண்டான். ஞானிகள் எப்படி வாழவேண்டும் என்ற முறையை வசிட்டர் இராமனுக்கு உபதேசித்தார். அந்த அறவுரைகள் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறையாகும். வசிட்டர் இராமனிடம், வெளியில் எல்லாச் செயல்களையும் விளையாட்டாகச் செய்து. மனத்தில் ஒன்றும் செய்யாதவனாக இருக்க வேண்டும் என்று கூறினார். மனத்தில் வைராக்கியம் விளங்கவேண்டும். வெளியே கோபம் மிகுந்தவனாக விளங்கவேண்டும். ஆனால், எல்லோரையும் உறவினராகவே கருதவேண்டும் என்று வசிட்டர் இராமனுக்கு உபதேசம் செய்தார்.{{Right|<b>இரா.கோ.</b>}} <section end="ஞானவாசிட்டம்"/> <section begin="ஞானவெட்டி"/> {{dhr}} <b>ஞானவெட்டி</b> என்னும் நூல் வைத்தியம், யோகம், வேதாந்தம் முதலிய கருத்துகளை உள்ளடக்கியதொன்றாகும். இவ்வுலகும், இவ்வுலகில் இடம் பெறும் உயிர்ப்பொருள்களும், கருத்துகளும், ஞானவொழுக்கங்களும் சிவபெருமானின் தமருக ஒலிவினின்றும் பிறந்தன என்னும் கருத்தைப் பிணஞ்சுடும் வெட்டியான் பாடுவதாக அமைந்தது இந்த நூலாகும். இந்நூல் பாயிரப்பகுதி நீங்கலாக 1899 பாடல்களைக் கொண்டது. ‘ஞானவெட்டி -1500’ என்றும் இந்நூல் வழங்கப்படுவதால் தொடக்கத்து இந்நூலுள் 1500 பாடல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்றும், பின்னர்ப் பல பாடல்கள் இதனுள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும், அவ்வாறு சேர்த்த பின்னரும் 1500 என்றே வழங்கப்பட்டது என்றும் கருத இடமுண்டு, ‘தெய்வத் தன்மை பொருந்திய திருவள்ளுவ நாயனார் திருவாய் மவர்ந்தருளிய ஞானவெட்டி-1500’ என்று பதிப்புகளில் காணப்படுவதால், திருவள்ளுவர் பெயர் கொண்டு வாழ்ந்த பிற்காலப் புலவர்களுள் ஒருவர் இந்நூலை இயற்றினார் எனக் கொள்ளுதல் பொருந்தும். இந்நூல் பெரும்பாலும் விருத்தப்பாக்களால் ஆனது. வெண்பாக்களும் இடையிடையே இடம் பெறுகின்றன. பாடல்தோறும் தலைவனை ‘ஆண்டே’ என விளித்துக் கூறும் போக்குக் காணப்படுகிறது. இந்நூலின் முற்பகுதி ஆறாதார தரிசனை, ஆறாதாரவகை, இந்திரிய விவரம், வசியமுறை, ஆயுள் விருத்தி, பிறவித் துன்பம், கற்ப சாதனை, யோக சாதனை, யோக சித்தி, வாதமுறை பற்றிய கருத்துகளைக் கூறுகிறது. பிறபகுதி கௌரி பாசாண சுண்ணம், பளிங்கு பாசாண பற்பம் சாதிலிங்கப்பற்பம், நாகப்பற்பம், சிங்கப்பற்பம் போன்ற பற்ப வகைகள்<noinclude></noinclude> 1cql1jrvmx8oihqgis72e38szcacu1v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/732 250 651371 1957598 2026-08-08T05:39:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறித்தும், குமரிலேகியம் (வான்குமரி லேகியம் காணும்-மேகாதி மேகம்தான் பயந்தோடியே போங்காணும்), வாலைத் திராவகம் போன்ற மருந்து வகைகள் குறித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஞானாமிருதம்|704|ஞானாமிருதம்}}</noinclude>குறித்தும், குமரிலேகியம் (வான்குமரி லேகியம் காணும்-மேகாதி மேகம்தான் பயந்தோடியே போங்காணும்), வாலைத் திராவகம் போன்ற மருந்து வகைகள் குறித்தும் பேசுகின்றது. சித்தர் கோவையுள் ‘திருவள்ளுவர் ஞானம்’ என்னும் பெயரில் வழங்கும் பகுதி இந்நூலிலிருந்து எடுக்கப்பட்ட 20 பாடல்களைக் கொண்டதாகும். கம்பன் வம்பன்; தேவார திருவாசகம் தியக்கம் தரும்; நைடதம் புனைந்துரை என்று இந்நூல் கூறுகிறது. இந்நூல் கி.பி.18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பர்.{{Right|<b>இரா.செ.</b>}} <section end="ஞானவெட்டி"/> <section begin="ஞானாமிருதம்"/> {{dhr}} <b>ஞானாமிருதம்</b> சைவ சித்தாந்த உண்மைகளைச் செந்தமிழில் விளக்கும் தத்துவநூல். இது, சைவ சித்தாந்தம் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினையும் தமிழில் விளக்கும் நூல்; சைவ சித்தாந்த சாத்திரங்கள் எனப்படும் 14 மெய்கண்ட சாத்திரங்களுக்குக் காலத்தால் முற்பட்ட நூல். திருவாலீசுவரம் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி கி.பி. 13-ஆம் நூற்றாண்டுத் தொடக்கப் பகுதிவரை வாழ்ந்த வாகீச முனிவர் இந்நூலாசிரியர் என்பது விளங்குகிறது. அவர் அக்காலத்துத் தென்னாட்டில் சிறந்திருந்த கோளகி மடத்தைச் சார்ந்தவர் என்பதும் தெரிகிறது. ஞானாமிருதத்தில் இப்போது சரியை, கியை, யோகப் பகுதிகள் கிடைக்கவில்லை. சிவஞான முனிவர் தம் சிவஞான பாடிய உரையில் கிரியா பாதத்திலிருந்து ஒரு செய்யுளை எடுத்துக்காட்டியுள்ளார். ஒரு செய்யுளின் தலைப்பு மட்டும் ஞானாமிருத உரையில் காட்டப்பெற்றுள்ளது. இவ்விரு காரணங்களையும் கொண்டு நோக்கினால் மற்றைப் பகுதி மறைந்து விட்டது என்னும் செய்தி புலனாகும். ஞானப் பகுதியில் 75 அகவல்கள் இப்போது கிடைத்துள்ளன. இந்நூலைப் பாயிரம், சம்மிய ஞானம் (நிலைப் பேற்றறிவு), சம்மிய தரிசனம், பாசபந்தம், தேகாந்தரம், பாச அனாதித்துவம், பாசச்சேத இயல், பதி நிச்சயம், பாச மோசனம் என்னும் ஒன்பது வகைகளாகப் பிரித்து 75 அகவல்களில் ஆசிரியர் விளக்கியுள்ளார். சிவஞான போத உரையில் சிவஞான சுவாமிகள் 15 இடங்களில் இந்நூலை மேற்கோளாகக் காட்டியுள்ளார். பெருந்திரட்டு என்ற நூலில் முப்பது இடங்களில் உரையுடன் அந்நூலாசிரியர் இந்நூலைச் சேர்த்திருக்கிறார் என்பதன் வாயிலாக இதன் பெருமையை ஊகித்து உணரலாம். இந்நூல், 1904-இல் சேத்தூர் ரா. சுப்பிரமணியக் கவிராயர் அவர்களால் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக முதலில் வந்தது. பின்னர், ஒளவை. துரைசாமிப் பிள்ளை உரையோடு 1954-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து வெளியீடாகவும் அம்பைச் சங்கரன் உரையோடு 1984-இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாகவும் வெளியிடப்பட்டது. ஞானாமிருத 28-ஆம் அகவலில், ‘அருள் ஆபரணன் அறத்தின் வேலி, பொருள் மொழி யோகம் கிரியையின் புணர்த்த அருள்மொழி திருமொழி போலவும்’ என்பதனால் ஆசிரியரின் குருநாதர் அருண்மொழித் தேவர் என்னும் இயற்பெயர் பெற்ற பரமானந்த முனிவர் என்பது தெரிகிறது. அப்பாடலில் இடம் பெறும் ‘கோடல் ஆதி’ என்பது அருண் மொழித் தேவரின் ஊர் என்று கருதப்படுகிறது. அவ்வூர் சென்னையை அடுத்துள்ள கோடம்பாக்கம் ஆகுமென்று சிலர் கூறுகின்றனர். வேதாரணியத்தை அடுத்த பகுதியில் அந்த ஊர் உள்ளது என்றும் பிறவாறும் கூறுவாருமுளர். ஞானாமிருத ஆசிரியர் தென் தமிழ்நாடு சென்று சைவ சமய உண்மைகளைப் பரப்பி வந்திருக்கிறார். பிற்காலத்தில் அவர், இயற்பெயராலன்றி ஞானாமிருத ஆசிரியர் என்னும் சிறப்புப் பெயரால் குறிப்பிடப் பெற்றார். ‘ஞானாமிருத ஆசிரியர் சந்தானம்’ என்றே வாகீச முனிவரின் சீடர்கள் தங்களைக் கூறிக்கொள்ளும் ஏற்றம் உருவாகியது. அஞ்ஞானமாகிய கடலிலே ஆகமங்கள் என்னும் மத்தை நாட்டிக் குருநாதனின் உபதேசம் என்னும் கயிற்றால் புத்தி என்னும் கையைக் கொண்டு கடையும்போது ஞானமாகிய அமிருதம் வெளிப்படுவதால் இந்நூலுக்கு ஞானாமிர்தம் என்பது பெயராயிற்று என்று நூற்பெயர்க் காரணம் கூறப்பட்டுள்ளது. இந்நூலை விளக்கும் செய்திகளுட் சில வருமாறு: குடத்தைக் கண்டதும் அதனை உண்டாக்கிய ஒருவன் இருத்தல் வேண்டும்; அதுபோல உலகைக் கண்டதும் அதனை உண்டாக்கிய ஒருவன் இருத்தல் வேண்டும். குயவன் குடத்தை உண்டாக்குவதைப் பார்த்திருப்பதாலேயே, வேறொரு குடத்தைக் காணும் போது அதனை ஒருவன் உண்டாக்கிய ஒருவன் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது. இறைவன் எந்த உலகையும் உண்டாக்குவதைப் பார்க்காதபோது, இந்த உலகை அவன் உண்டாக்கினான் என எப்படிக் கொள்வது என்னும் உலகாயதனின் வினாவிற்குப் பின்வரும் விடை கூறப்பட்டுள்ளது. குடம் உருவமுடையது; சில காலம் சென்றதும் அழிகிறது. அதனால் குயவனைக் காணாதபோதும் அது உண்டாக்கப்பட்ட பொருள் என்பது தெளிவாகிறது. உலகம்<noinclude></noinclude> jwkhyrdg2pke126wnuhzj3b95scg64j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/733 250 651372 1957599 2026-08-08T05:51:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உருவமுடையது; உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் அழிகின்றன. அதனால் அழியாத-நித்தியமாக உள்ள ஒருவன் இருந்தால்தான் அவனைக் காணாவிட்டாலும் அவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஞானியார் அடிகள்|705|ஞானியார் அடிகள்}}</noinclude>உருவமுடையது; உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் அழிகின்றன. அதனால் அழியாத-நித்தியமாக உள்ள ஒருவன் இருந்தால்தான் அவனைக் காணாவிட்டாலும் அவனால் இவ்வுலகம் தோற்றப்பட்டு அழியும் என்பதனை அறிந்துகொள்ள முடியும். அழிகின்ற பொருள்களாக இருப்பதால் அவற்றைத் தோற்றுவிக்க அழியாத ஒருவன் வேண்டும்; அவன் அழியாதவன் ஆதலால், அவனைத் தோற்றுவிக்க யாரும் வேண்டுவதில்லை. அறிவுடைய ஆன்மா ஐம்பொறிகளுக்கு ஏவல் செய்வதால், அதன் அறிவை விளங்கவிடாமல் மறைக்கும் ஒரு பொருள் இருக்கவேண்டும். அதனை இறைவன் உண்டாக்க வேண்டியது இல்லை; அதனால் அதுவும் அநாதி நித்தியப் பொருளாகிறது. அதுவே, ஆணவ மலம் எனப்படுகிறது. உலகத்துச் சடப்பொருள்கள் அனைத்தும் காரியம். அவற்றுக்கு மூலமாகக் காரண நிலையில் ஒரு பொருள் இருக்கவேண்டும். அது பலவாக இருந்தால் அழியும், அதனால் ஒரு பொருளாகத்தான் இருக்க வேண்டும். கடவுள் அதனை உண்டாக்கினார் என்றால், அவரிலிருந்து அது தோன்றியிருக்க வேண்டும் அவர் சித்துப் பொருள். சித்துப் பொருள் சடத்திற்கு மூலமாக முடியாது. அதனால், மூலமாகிய சடப்பொருள் கடவுளால் உண்டாக்கப்படாமல் அதாதி நித்தியமாய் இருக்கவேண்டும். இப்பொருளுக்கு மாயை என்பது பெயர். கடவுள் காரியமாகிய உலகைத் தோற்றுவிக்கிறார். மேற் காற்றடிக்கத் திரண்ட சருகிலை, வாடைக் காற்றில் சிதறிப் போவது போல ஊழ்வினைக்கேற்றவாறு கூடிப்பிரியும் உடன்பிறந்தார், சுற்றத்தார், மனைவி, மக்கள் ஆகியோரிடத்தே வைத்திருக்கும் பாசத்தை அறுத்து அகற்றல் வேண்டும். சிறுவன் ஒரு ருறுந்தடியை தாயின்மேல் வீசினால் நாய் அக்குறுந்தடியின் மீது பாயாது. எறிந்த அச்சிறுவன்மீது பாயும். சுக துக்கங்கள் வரும்போது விருப்பு, அவற்றைச் செய்தார் மீது வெறுப்புக் கொள்ளாமல் அவை ஊழ்வினையால் வருகின்றன என்பதை உணர்தல் வேண்டும்.{{Right|<b>ச.க.</b>}} <section end="ஞானாமிருதம்"/> <section begin="ஞானியார் அடிகள்"/> {{dhr}} <b>ஞானியார் அடிகள்</b>: இவர் தழிழகத்தில் கும்பகோணத்தை அடுத்த திருநாகேச்சுரத்தில், வீரசைவ மரபில், அண்ணாமலை பார்வதி என்பவர்களின் மகனாக கி.பி. 1873-இல் பிறந்தார். இவரது இயற்பெயர் பழவியாண்டி. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 733 |bSize = 375 |cWidth = 103 |cHeight = 135 |oTop = 37 |oLeft = 218 |Location = center |Description = }} {{center|ஞானியார் அடிகள்}} திருப்பாதிரிப்புலியூரில், வீரசைவத் திருமடத்தின் நான்காம் குருமூர்த்தியைக் குருவாகக் கொண்டு போற்றிவந்த அண்ணாமலை-பார்வதி தம்பதியர்தம் மகவைக் குருமூர்த்திகள் பொறுப்பில் மடாலயத்திலேயே விட்டு வந்தனர். இளமைக் காலம் முதலே நான்காம் குருமூர்த்தியின் சீடராக இருந்து, திருமடத்தின் பொறுப்புகளையெல்லாம் கவளித்து வந்து பழனியாண்டிதம் 17-ஆம் அகவையில், திருமடத்தின் 5-ஆம் குருமூர்த்தியாக அருளாட்சிப் பொறுப்பில் அமர்ந்தருளினார். திருமடாலய மரபுப்படி, சிவாசாரிய சுவாமிகள் சிவசண்முக மெய்ஞ்ஞான எனப் பெயர் பெற்றார். இவர்தாம் ஞானியாரடிகள் என தழிழர்களால் போற்றிக் கொண்டாடப்பெறும் சான்றோர் ஆவர். 52 ஆண்டுகள் குருபீடத்தில் அருளாட்சி நடாத்தி, சைவமும் தமிழும் தழைத்தோங்கச் சிவிகையூர்த்து தமிழகம் முழுவதும் சென்று, சொற்பொழிவின் மூலமும், அணுகியிருந்து அறவுரை கூறித்திருத்து வதன் மூலமும், வேற்றுமை பாராட்டாது வந்தோர்க்கெல்லாம் தமிழும் சைவமும் சார்ந்த நூல்களைப் பாடம் சொல்லுதலின் மூலமும், தமிழும் சைவமும் தழைக்கத் தொண்டு புரிந்தார். தழிழ், வடமொழி ஆகியவைகளை மரபு நெறியில் நின்று நல்லாசிரியர்களிடம் பதினேழு ஆண்டுகளும், தெலுங்கு மொழியை நான்கு ஆண்டுகளும் ஆங்கிலத்தை ஏழு ஆண்டுகளும் துறைபோகக் கற்ற அடிகள், பட்டி தொட்டிகளிலெல்லாம் சிவிகையூர்ந்து சென்றே தழிழையும் சைவத்தையும் பரப்பினார்.<noinclude> <b>வா.க. 9-45</b></noinclude> rtpxuajii5vqm823p5s5l0tttdzgbjz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/734 250 651373 1957600 2026-08-08T06:07:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அடிகளின் சொற்பொழிவால் ஈர்க்கப்பெற்ற பாலவநத்தம் சமீன்தார் பாண்டித்துரைத் தேவரிடம் அடிகள் மதுரையில், தழிழ்ச் சங்கம் நிறுவ வேண்டுகோள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஞானியார் அடிகள்|706|ஞானேசுவரர்}}</noinclude>அடிகளின் சொற்பொழிவால் ஈர்க்கப்பெற்ற பாலவநத்தம் சமீன்தார் பாண்டித்துரைத் தேவரிடம் அடிகள் மதுரையில், தழிழ்ச் சங்கம் நிறுவ வேண்டுகோள் விடுத்ததால், 1901-இல் மதுரையில் மதுரைத் தமிழ்சங்கம் நிறுவப்பட்டது. இவர், 1903-இல் தம் திருமடத்துக்கு வந்த, பாண்டித்துரைத் தேவர்தம்மைக் கொண்டு, தம் திருமடத்தில் ‘வாணிவிலாச சபை’ என்ற சபையைத் தோற்றுவித்து வாரந்தோறும் சொற்பொழிவு செய்து வந்தார். தென்னார்க்காடு மாவட்ட நடுவராக இருந்த சே. எம் நல்லசாமிப்பிள்ளை. மறைமலையடிகள் சதாசிவம் பிள்ளை ஆகியவர்களின் துணையுடன் சைவசித்தாந்தக் கொள்கையைப் பரப்பச் சென்னையில் இருந்து பணியாற்றும் நிறுவனமாக, சைவசித்தாந்த மகாசமாசத்தை 1905-இல் தம் திருமடத்திலேயே தொடக்கிவைத்தார். சமாசத்தின் சார்பில் ‘சித்தாந்தம்’ இதழைத் தொடங்கி வைத்தஞானியார் அடிகளே பெரியார் ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ இதழையும் தொடங்கிவைத்தார். கரந்தையில் வாழ்ந்த வழக்கறிஞர் த.வே. உமாமகேசுவரம் பிள்ளையின் துணைக் கொண்டு திருவையாற்றிலுள்ள வடமொழிக் கல்லூரியை வடமொழி தமிழ் என்ற இரு மொழிக் கல்லூரியாக அமையவும், அரசர் கல்லூரி என்ற பெயர் அமையவும் அரும்பாடுபட்டு முடித்த ஞானியார் அடிகள், 1933-இல் தம் 60-ஆம் ஆண்டு நிறைவு விழாப் பேரவையில் உமாமகேசுவரம் பிள்ளைக்குச் ‘செந்தமிழ்ப் புரவலர்’ என்ற பட்டமளித்துச் சிறப்பித்தார். ஆதீனச் சார்பில் தொடக்கப்பள்ளி அமைத்த முதல் சந்நிதானம் ஞானியார் அடிகளே. காலந்தவறாமையும் காரியமாற்றறும் அடிகளின் தனிப்பண்பு. எளிமை என்பது அடிகளின் பிறப்பிலேயே அமைந்த பண்பு. தாமே பல மடங்களுக்குச் சென்று மடாதி பதிகளைச் சத்தித்து வழி ஆக்க வேலைகளுக்கு காணுமாறு தூண்டியதுண்டு. இவர் 1916-இல் மயிலம் 18-ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகளையும் 1925-இல் பேரூச்ச்சாந்தலிங்க அடிகளையும் கண்டு தமிழ்க்கல்லூரி அமைக்கவும் சைவசமயம் தழைக்கவும் வழிவகை காணுமாறு செய்தார். இன்று அங்கெல்லாம் தமிழ்க் கல்லூரிகள் தமிழ்த் தொண்டு புரிகின்றன. ஞானியாரடிகள் நூல் ஏதும் எழுதவில்லை, தம்முடைய குருநாதர் மேல் பாடிய குருதுதி 49 பாட்டுகளும், ஞானதேசிகமாலை 23 பாட்டுகளும், திலகவதி அம்மை துதி 7 பாட்டுகளும் இன்று ஞானியாரடிகள் இயற்றியனவாகக் கிடைக்கின்றன. திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம், திருப்பாதிரிப் புலியூர்த் தோத்திரக்கொத்து, அற்புதத் திருவந்தாதி, அவிநாசிநாதர் தோத்திரக்கொத்து, கந்தர்சட்டிச் சொற்பொழிவுகள், நிட்டானுபூதி சாரம் மூலமும் உரையும் ஆகியவை ஞாவியாரடிகளால் பதிப்புச் செய்யப்பெற்றவை.{{Right|<b>வை.இர.</b>}} <section end="ஞானியார் அடிகள்"/> <section begin="ஞானேசுவரர்"/> {{dhr}} <b>ஞானேசுவரர்</b>: ஞானேசுவரர் என்றும் ஞானதேவர் என்றும் குறிப்பிடப்படுமிவர் மராட்டிய மாநிலத்தில் ‘ஆபேகாவ்’ என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவர் ‘பந்த்’ எனப்படும் அந்தணர் குலத்தவர், தந்தையார் பெயர் விட்டலபந்து. விட்டலபந்து இளமையில் அந்தணர்களின் நெறிப்படி வேதங்கற்று விரக்தி மனங்கொண்டு தலயாத்திரை செய்யலானார். அப்போது ‘உருக்மா’ என்பவளைத் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையிலீடு பட்டார். ஆனால், இல்லறத்தில் தொடர்ந்து வாழவிரும்பாமலும் தம் மனைவியிடமும் கூறாமலும் காசிக்குச் சென்று சிரிபாத சுவாமி என்பவரிடம் துறவு மேற்கொண்டார். இவர் குரு சிரிபாத சுவாமிகள் தலயாத்திரை செய்யும் சமயம், ‘விட்டலபந்து’ திருமணமானவர் என்பதை அறிந்து அவரை மீண்டும் இல்லறத்தில் வாழுமாறு பணித்தார். குருவின் கட்டளையை மேற்கொண்ட விட்டலபந்து தம் மனைவி உருக்மாவுடன் மீண்டும் இல்வாழ்க்கையை மேற்கொண்டார். சன்னியாசம் பெற்ற பந்து மீண்டும் இல்லறத்திலீடுபட்டமையால் ஆபேகாவ். ஆலந்தி போன்ற நகரங்களிலிருந்த அந்தணர்கள் இவரைப் புறக்கணித்தனர். ஊர்க்கட்டுப்பாட்டால் வாழ வழியின்றி வறுமையில் வாடினார். இந்நிலையில் மைந்தராக ஞானதேவர் கி.பி. 1275-இல் பிறந்தார். ஞானதேவர் அவர் உடன்பிறந்தார் ஆகியோருக்குப் பூணூல் அணிவிக்கவும் வேதம் கற்பிக்கவும் ஆலந்தியிலுள்ள அந்தணர்கள் மறுத்தனர். ஞானே சுவரர் தம் வாழ்க்கையை எதிர் நீச்சலிலேயே தொடங்கினார். ஞானேசுவரரும் சகோதரர்களும் இளமைப் பருவத்தில் பிச்சையெடுத்து வாழும் நிலையை அடைந்தனர். இந்த நிலையில் ஞானேசுவரர் தங்களுக்கு மறைநூல் அணிவிக்குமாறு அந்தணர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்போதெழுந்த அறிவுபூர்வமான வாதத்தில் ஞானேசுவரர் வெற்றிபெற்றார். ஒருவன் பிறப்பினால் அல்லது வேத மந்திரங்களின் கருத்துணராமற் கத்துவதனால் மட்டும் உயர்வடைய மாட்டான் என்றும், அவன் உயர்வடைவ<noinclude></noinclude> kih7e5x2q9bb41mklpofjpxw0hgc5sq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/735 250 651374 1957601 2026-08-08T06:25:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தற்கு அவனது செயலே முக்கியம் என்றும் வாதிட்டார். அச்சமயம் ஒரு கழுதையை வேதங் கூறச் செய்தார், உருவத்தில் சிறியவனாயினும், அறிவிலும், பத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஞி|707|ஞூ}}</noinclude>தற்கு அவனது செயலே முக்கியம் என்றும் வாதிட்டார். அச்சமயம் ஒரு கழுதையை வேதங் கூறச் செய்தார், உருவத்தில் சிறியவனாயினும், அறிவிலும், பத்தியிலும் சிறந்தவன் ஞானதேவன் என்று உணரச் செய்தார். இவருடைய காலத்தில் வாழ்ந்த நாமதேவர் என்னும் புலவர், ‘ஞானேசுவரர் கா ஆதி’ என்னும் மராட்டிய மொழிப் பக்தி இலக்கியத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்துப் பாடியுள்ளார். இவர் மக்களின் அறியாமை, மூடவழக்கம் முதலியவற்றை நீக்கப் பாடுபட்டார்; பாண்டுரங்கன்மீது பல அபங்கங்களையும், பதங்களையும் மராட்டிய மொழியில் பாடியுள்ளார். பாவார்த்த தீபிகா (Bhavartha Deepika) என்னும் பெயரில் ‘பகவத் கீதை’க்கு உரையெழுதிப் புகழடைந்தார். இது ‘ஞானேசுவரி’ என்றும் சொல்லப்படுகிறது. மராட்டியர்கள் இதனைப் புனித நூலாகக் கொண்டு பாராயணம் செய்வர். இவர் காலத்தில் தான் (கி.பி.13-ஆம் நூ,) விரிவுரைகள் பாடல் வடிவில் வெளிவந்தன. இதற்கு இவர் எழுதிய விரிவுரையே முதல் வழிகாட்டி நூலாகும். இதனைத் தொடர்ந்து வடமொழி மற்றும் பிறமொழிகளில் பல உரைகள் பாடல் வடிவில் எழுதும் வழக்கம் ஏற்பட்டது. இவர் சித்து வேலைகளைக் காட்டி மக்களை ஏமாற்றுவதைக் கண்டித்தார். இவர் கி.பி.1307-இல் காலமானார்.{{Right|<b>என்.சீ.</b>}} <section end="ஞானேசுவரர்"/> <section begin="ஞி, ஞூ"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|ஞி, ஞூ}} ஞி நி என்ற எழுத்துக்குப் போலியாகவும், ஞூ, நூறு என்பதில் நூவுக்கு மாற்றெழுத்தாகவும் வழங்கி வந்தன. || ... || ... || ... || rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 735 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 60 |oTop = 300 |oLeft = 385 |Location = center |Description = }} |- |ஞா உருவம் இரண்டாம் பல்லவ பரமேச்சுவரவர்மனின் திருவதிகைக் கல்வெட்டில் (கி.பி.8-ஆம் நூற்றாண்டு) காணப்படுகிறது. || ... || ... || ... |- |மற்ற வடிவங்கள் காணப்படவில்லை. || ... || ... || ... |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} {{nop}}<noinclude> <b>வா.க. 9-45அ</b></noinclude> 7kvd0k4hyosvr72h4fghpmv2rfc2jdd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/736 250 651375 1957602 2026-08-08T06:39:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="ஞி, ஞூ"/> <section begin="ட"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|ட}} இவ்வொலி நாவின் நுனி அண்ணத்தின் முனைக்கு முன் உள்ள பகுதியை அழுத்தலால் ஏற்படுகின்றது.|| ... || ... || ... || rowspan=4 |{{Css imag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section end="ஞி, ஞூ"/> <section begin="ட"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|ட}} இவ்வொலி நாவின் நுனி அண்ணத்தின் முனைக்கு முன் உள்ள பகுதியை அழுத்தலால் ஏற்படுகின்றது.|| ... || ... || ... || rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 736 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 160 |oTop = 100 |oLeft = 410 |Location = center |Description = }} |- |இது முதலில் நேரான அரைவட்ட வடிவில் எழுதப்பட்டது. இது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும் முன்னும், பின்பு கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டு வரையும் மாற்றம் இல்லாமல் இருந்தது. ஏறக்குறைய கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சற்றுவளைவு நீங்கிக் கோணமாகத் தென்படுகின்றது. பல்லவ மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டு, பரமேச்சுவரவர்மனின் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுச் செப்பேடு ஆகியவற்றில் இவ்வுருவத்தைக் காணலாம். பின் சோழன் இராசேந்திரனின் கரந்தைந்தைச் செப்பேடுகளில் இதன் கீழ்ப்பகுதி நன்றாக நீண்டு காணப்படுகின்றது. முதல் குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் இன்றைவ உருவத்தை அடைந்தது. || ... || ... || ... |- |வட்டெழுத்தில் இதன் உருவம் தொடக்கத்தில் இதுவே, பிறகு கி.பி.9-ஆம் நூற்றாண்டில் அரைவட்டம் நிலை மாறிற்று. அதுவே கடைசி வரை நின்றது. || ... || ... || ... |- |தமிழ்மொழியில் இவ்வெழுத்து மொழிக்கு முதலில் வருவதில்லை. பிறமொழிகளிலிருந்து அத்தகைய சொற்கன் புகுந்து வழங்கப்படும்பொழுது பெரும்பாலும் இகரம் முதலில் சேர்த்துக்கொள்ளப்படும். (எ-டு). டக்கா இடக்கை. || ... || ... || ... |- |} <section end="ட"/> <section begin="டா"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|டா}} தமிழில் மற்ற எழுத்துக்களுக்குக் கூறப்பட்டதைப் போல் (கா-குறியைப் பார்க்க) நீண்ட கோடு தொடங்கி அதே முறையில் வந்தது. || ... || ... || ... || rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 736 |bSize = 480 |cWidth = 39 |cHeight = 50 |oTop = 400 |oLeft = 410 |Location = center |Description = }} |- |} <section end="டா"/> <section begin="டி-டெள"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|டி-டெள}}இவற்றுள் இரண்டு எழுத்துகள் (டோ, டௌ) நீங்க மற்றவை வழக்கில் இருந்தன; மற்ற எழுத்துகளைப் போலவே வளர்ந்தன. || ... || ... || ... |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} {{nop}}<noinclude></noinclude> 9h778gswzu9n23b8fwdg5nyybknlw6q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/737 250 651376 1957603 2026-08-08T06:50:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="டி-டெள"/> <section begin="ண"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|ண}} ட கரத்திற்கு உரிய முறையில் மூக்கொலியாக வருவது இவ்வொலி, இவ்வொலிக்குரிய தொன்மை எழுத்து வடினம் கி.மு. || ....."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section end="டி-டெள"/> <section begin="ண"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|ண}} ட கரத்திற்கு உரிய முறையில் மூக்கொலியாக வருவது இவ்வொலி, இவ்வொலிக்குரிய தொன்மை எழுத்து வடினம் கி.மு. || ... || ... || ... || rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 737 |bSize = 480 |cWidth = 27 |cHeight = 160 |oTop = 150 |oLeft = 380 |Location = center |Description = }} |- |3-ஆம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 2 அல்லது 3-ஆம் நூற்றாண்டுவரை நிலவி வந்தது. குகைக் கல்வெட்டுகளைப் பார்க்க. வட்டெழுத்தில் இவ்வெழுத்தின் வடிவம் முதலில் அரச்சலூர்க் கல்வெட்டில் காணப்படுகின்றது. || ... || ... || ... |- |தமிழில் இதன் வடிவம் தமிழ்நாட்டிற்கு வடக்கே வழங்கிவந்த உருவமே. இது பல்லவர் மகேந்திரன், பரமேச்சுர வர்மன் ஆகியோர் கல்வெட்டுகளில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் காணப்படுகிறது. || ... || ... || ... |- |செங்கம் நடுகற்களில், அடுத்த வட்டெழுத்து || ... || ... || ... |- |வடிவம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு வரை || ... || ... || ... |- |கி.பி.9-ஆம் நூற்றாண்டிலிருந்து || ... || ... || ... |- |தமிழில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து இது மட்டம் தட்டினாற் போல வளைவும் சுழியுமாக எழுதப்பட்டது. இது, கி.பி.11-ஆம் நூற்றாண்டில் சோழன் இராசேந்திரன் காலத்துக் கரந்தைச் செப்பேடுகளில் காணத்தொடங்கிற்று. இதுவே, இன்று வரை நிலைத்தது || ... || ... || ... |- |} <section end="ண"/> <section begin="ணா-ணெள"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|ணா-ணெள}} டகரத்திற்கு உரிய குறிகள் இதற்கும் பொருத்தும். || ... || ... || ... |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} {{nop}}<noinclude></noinclude> j8g5hh4g31fzop7o8u0aq9rf3d8v8ed பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/766 250 651377 1957604 2026-08-08T06:54:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>சிறு தூபி:</b> மேற்கூறிய குன்றின் அடிவாரத்திலுள்ள ‘சிறுதூபி’ கி.மு. 3–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அக்காலத்துப் பௌத்த துறவிகளான கத்யபன், ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாஞ்சி|740|சாடு}}</noinclude><b>சிறு தூபி:</b> மேற்கூறிய குன்றின் அடிவாரத்திலுள்ள ‘சிறுதூபி’ கி.மு. 3–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அக்காலத்துப் பௌத்த துறவிகளான கத்யபன், மௌத்கல்யபுத்திரன் ஆகியோரின் சாம்பல் இதில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி வேலைப்பாடுகள் மிக்க கல்வேலியும் தோரணவாயில்களும் உள்ளன. <b>விகாரைகள்:</b> பௌத்தத் துறவிகள் தங்கும் விகாரைகள் ஐந்து சாஞ்சியில் உள்ளன. இவை கி.பி. 4–ஆம் நூற்றாண்டு தொடங்கி 12–ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டவை. இவை தொடக்கத்தில் மரத்தால் கட்டப்பட்டுப் பின் அவை அழிந்தபின், கற்களால் கட்டப்பட்டன. இந்தியச் சிற்பக்கலை வரலாற்றில் சாஞ்சியின் சிற்பங்கள் தனித்ததொரு இடத்தைப் பெறுகின்றன. எனவே, இக்கலை மரபு சாஞ்சிக் கலை மரபு என்று அறிஞர்களால் போற்றப்படுகின்றது. இன்று சாஞ்சியின் மேற்கூறிய கட்டடங்கள் யாவற்றையும் இந்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். {{Right|<b>இரா.வே.</b>}} <b>துணை நூல்:</b> <b>Sivaramamurti, C.,</b> The Art of India, India Book House, Bombay, 1977. <section end="சாஞ்சி"/> <section begin="சாட்டுகள்"/> {{dhr}} {{larger|<b>சாட்டுகள்</b>}} வடஇந்தியாவில் வாழும் மக்கள் பிரிவினர்களுள் ஒரு பிரிவினர், பஞ்சாபு. அரியானா, வடக்கு இராசசுத்தான், மேற்கு உத்தரப் பிரதேசம் யமுனா நதிக் கரை, குவாலியர் ஆகிய இடங்களில் சாட்டுகள் (Jats) பெரும்பான்மையினராக உள்ளனர். நல்ல உறுதியான, ஆற்றல் மிகுந்த உடலமைப்பு உடையவர்களாய்ச் சாட்டுகள் விளங்குகின்றனர் இந்தச் சாட்டுகளுள் பெரும்பான்மையானவர்கள் அமைதியான உழவர்கள், அவுரங்கசீபின் காலம்வரை சாட்டுகள் அரசியலில் முதன்மை நிலை ஏதும் பெற்றிருக்கவில்லை. அவுரங்கசீபின் சமயக் கொள்கையின் விளைவால் தங்களுக்கெனத் தனி அரசினை இவர்கள் அமைத்துக் கொண்டனர். முகலாயப் பேரரசின் வீழ்ச்சியில் சாட்டு இனத்தவருக்குப் பெரும் பங்குண்டு. ஆங்கிலேயர் ஆட்சியில் இவர்கள் மீண்டும் வலிமையான, உழவுத் தொழில் செய்யும் பெருமக்களாகவும் நிலக்கிழார்களாகவும் மாறினர். {{Right|<b>ந.க.ம.</b>}} <section end="சாட்டுகள்"/> <section begin="சாடு"/> {{dhr}} {{larger|<b>சாடு</b>}} வடஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குடியரசு நாடு. சாடு (Chad), ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய நாடுகளில் பரப்பளவில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்நாட்டின் தென்மேற்றுெள்ள சாடு என்னும் பெரிய ஏரியின் பெயரால் இந்நாடு இப்பெயர் பெற்றது. இந்நாட்டின் எல்லைகளாக மேற்கில் காமரூனும் நைசீரியாவும் நைசரும் (Niger), கிழக்கில் சூடானும், தெற்கில் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசும், வடக்கில் இலிபியாவும் அமைந்துள்ளன. இந்நாட்டின் தலைநகரம் சமினா (N’Djamena) ஆகும். சாடின் பரப்பளவு 1,284,000 ச.கி.மீ. மக்கள் தொகை 4,561,000 (1981). இந்நாட்டின் தெற்குப் பகுதி, புல்வெளிகள் மிகுந்த பகுதியாகும். மழை மிகுதியாக இங்குப் பெய்கிறது. புல்நிறைந்த சமவெளியை இந்நாட்டின் நடுப்பகுதி பெற்றுள்ளது. வடக்கில் சகாராப் பாலைநிலப் பகுதி பரவியுள்ளது. இப்பகுதியில் பாலைநிலச் சோலைகள் உள்ள பகுதியில் தான் மக்கள் வாழ்கின்றனர். இந்நாட்டில் பல்வேறுபட்ட விலங்கினங்கள் உள்ளன. இவற்றைக் கண்டுகளிக்கவும் வேட்டையாடவும் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்குப் பெருமளவில் வருகை புரிகின்றனர். விலங்கினங்களுள் சிங்கங்கள், யானைகள், சிறுத்தைப் புலி, ஆப்பிரிக்க எருமைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. <b>மக்கள்:</b> நாட்டு மக்களுள் பெரும்பாலோர் வேளாண்மையை மேற்கொண்டவர்களாகவும் நாடோடிகளாகவும் உள்ளனர். பெரும்பான்மையான மக்கள் நாட்டின் தென்பகுதியில் வாழ்கின்றனர். இந்நாட்டின் வடக்கில் வாழும் மக்களுக்கும் தெற்கில் வாழும் மக்களுக்கும் இடையில் வேற்றுமைகள் நிறைந்துள்ளன. இதன் விளைவாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாட்டை ஒரு நிலைபடுத்தும் செயல் கடினமானதாக உள்ளது. வடக்கிலுள்ள மக்கள் கூடாரங்களில் வசித்துக் கால்நடைகளை வளர்த்து வரும் நாடோடி இனத்தவர்கள் ஆவர். தெற்கில் உள்ளோர் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 766 |bSize = 480 |cWidth = 156 |cHeight = 180 |oTop = 395 |oLeft = 272 |Location = center |Description = }}<noinclude></noinclude> cuf1d88rbwasbo3na3n17yb43a8ld9x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/738 250 651378 1957611 2026-08-08T07:06:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end=ணா-ணெள"/> <section begin="த"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|த}} மேல் அண்ணத்தின் துளியை நாக்கு அழுத்தி வரும் ஒலி இது. || ... || ... || ... || rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 7..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section end=ணா-ணெள"/> <section begin="த"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|த}} மேல் அண்ணத்தின் துளியை நாக்கு அழுத்தி வரும் ஒலி இது. || ... || ... || ... || rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 738 |bSize = 480 |cWidth = 27 |cHeight = 240 |oTop = 150 |oLeft = 420 |Location = center |Description = }} |- |முதன்முதலில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இதன் வடிவம் 人 என இருந்தது. இது தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டுகளில் காணப்படும். பிறகு கி.பி. 2 அல்லது 3-ஆம் நூற்றாண்டில் அரச்சலூர்க் கல்வெட்டில் கண்டபடி ஒரு மேல் கீழ்கோட்டில் பிரிந்து வரும் சிறு கோடு ஆக எழுதப்பட்டது. ஏறத்தாழ கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் இதன் வடிவம் மேல் கீழ்கோடு நேராகி வலப்புறக் கோடு வளைந்து வரத் தோன்றியது. இது செங்கம் வட்டத்துச் சோமாசி மாறன் வட்டெழுத்துக் கல்வெட்டில் தோன்றிற்று. இது தமிழுக்கும் வட்டெழுத்துக்கும் பொதுவானது. || ... || ... || ... |- |அடுத்து, தமிழில் இது மேல் கீழ் கோட்டின் அடியிலிருந்து வளைத்து இடப்புறம் வந்து வலப்புறக் கோட்டோடு இணைந்தது. இது, கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து பல்லவர் கல்வெட்டுகளில் கிடைக்கின்றது. இதன் வளர்ச்சி ககர எழுத்தின் வளர்ச்சியைப் போல்வதாகும் (ககர எழுத்துக் குறிப்பைப் பார்க்க). || ... || ... || ... |- |வட்டெழுத்தில் வளப்புறக்கோடு மேல் கீழ்கோட்டின் அடியில் தொடர்ந்து இடப்பட்டது. இருளப்பட்டிக் கல்வெட்டு (செங்கம் வட்டம்) இந்த உருவத்தைக் காட்டுகின்றது. மற்றச் செங்கம் நடுகற் கல்வெட்டுகள் தம் நூற்றாண்டு வரை வளர்ச்சியைக் காட்டுகின்றன. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் பாண்டியன் பராந்தகனின் தளவாய்புரச் செப்பேட்டுக்குப் பிறகு இரு முனையும் கூடும் நிலை வந்தது. பிறகு கி.பி. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து கூடிய நிலையிலேயே காணப்பட்டது. இதனைச் சோழ பாண்டியர் கல்வெட்டுகளில் (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி-14) காணலாம். |- |இசை மரபில் தைவதத்தைக் குறிக்கும் ஒலியாக இந்த எழுத்து வழங்கும். || ... || ... || ... |- |} {{Right|<b>கே.ஜி.கே.</b>}} {{nop}}<noinclude></noinclude> 9b2su284z3n6izbf0s3464mc1iwz8xf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/767 250 651379 1957612 2026-08-08T07:06:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆப்பிரிக்கக் கறுப்பு இமைக்கள் ஆவர். இவர்கள் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டுள்ளனர். இந்நாட்டின் வடக்கு, மத்திய பகுதி மக்கள் இசுலாம் சமயத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாடு|741|சாடு}}</noinclude>ஆப்பிரிக்கக் கறுப்பு இமைக்கள் ஆவர். இவர்கள் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டுள்ளனர். இந்நாட்டின் வடக்கு, மத்திய பகுதி மக்கள் இசுலாம் சமயத்தைச் சார்ந்தவர்கள். நாட்டின் மத்தியில் வாழும் மக்கள் மண்ணால் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். தெற்கில் வாழும் மக்கள் வட்ட வடிவக் கூரை வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் ஆப்பிரிக்காவின் தொன்மைச் சமயத்தைச் சார்ந்தவர்களாவர். சிலர் கிறித்தவர்களாகவும் உள்ளனர். மக்களுள் 30க்கும் மேற்பட்ட இனங்கள் இந்நாட்டில் உள்ளன. ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட மொழிகள் இந்நாட்டில் பேசப்படுகின்றன. சாரா (Sara) என்ற இன மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். மக்கள் தொகையில் 30 விழுக்காட்டை இவ்வினம் பெற்றுத் திகழ்கிறது. அராபிய மொழி வடக்குப் பகுதியில் பொது மொழியாக உள்ளது. இந்நாட்டில் வாழும் முசுலிம்களில் அராபியர், பகுயிர்மீ (Baguirmi) கானீம்போ (Kanembou), தோபோ (Tobou) வாடே (Waday) ஆகிய பிரிவினர் குறிப்பிடத்தக்கவர்கள். நெற்றில் வாழும் சாரா இனமக்கள் நெல், தினைப்பயிர் போன்றவற்றைப் பயிரிடுகின்றனர். மக்கள் தொகையுள் 10 விழுக்காட்டி எரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஆவர். சாட்டின் தெற்குப் பகுதியில் பள்ளிகள் நிறைந்துள்ளன. சாடுப் பல்கலைக் கழகம் 1971–ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. <b>நிலம்:</b> இந்நாடு சமமான நிலப்பகுதியைக் கொண்டது. சாரி (Chari) ஆறும் இலாகோன் (Lagone) ஆறும் இந்நாட்டில் உள்ள முக்கிய ஆறுகள் ஆகும். இவையிரண்டும் சாடு ஏரியில் கலக்கின்றன. இந்நாட்டின் வடக்குப் பகுதியில் தைபெசுடி (Tibesti) மலைகள் உள்ளன. இம்மலைகளுள் எமிகௌசி மலை (Emikousssi) கடல் மட்டத்திலிருந்து 3,415 மீ. உயரமுடையது. சாட்டின் நடுப்பகுதிகளிலும் சில மலைகள் உள்ளன. சாட்டின் வடக்குப் பகுதி பாலைப் பகுதி யாதலால் வேளாண்மை குறைவாக உள்ளது. ஆண்டிற்கு 25 செ.மீ. அளவே இப்பகுதியில் மழை பொழிகிறது. தென்பகுதி ஆண்டிற்கு 100 செ.மீ. மழையைப் பெறுகிறது. சூன் முதல் செப்டம்பர் முடிய மழைக் காலமாகும். <b>பொருளாதாரம்:</b> இந்நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. போக்குவரத்து வசதி குறைந்துள்ளமையால் இந்நாடு பிற நாடுகளுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. இந்நாட்டின் அண்டை நாடுகளான காமரூன், நைசர், நைசீரியா போன்ற நாடுகள் இந்நாட்டின் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க 1964–ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. சாடு ஏரிப் பகுதியில் மீன் வளர்ப்பும் கால்நடை வளர்ப்பும் மிகுந்துள்ளன. பருத்தி இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். இதனுடன், இறைச்சி, தோல், பட்டாணி போன்றவை பிரான்சு நாட்டிற்கு ஏற்றுமதி ஆகின்றன. மீன் வகைகள் காமரூன், நைசீரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நாட்டில் கனீம் (Kanem) என்ற இடத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் இருப்புப் பாதைகள் இல்லை. சாலைகள் மழைக் காலத்தில் போக்குவரத்திற்குப் பயன்படுவதில்லை. இந்நாட்டின் ஆறுகள் சில மாதங்கள் கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன. பன்னாட்டு வான்வழித் தடம் சமினாவில் உள்ளது. இதைத்தவிர 12 சிறிய வான்வழித் தடங்கள் இந்நாட்டில் உள்ளன. <b>வரலாறு:</b> சாடு நாடு பண்டைக் காலத்தில் பல ஆப்பிரிக்கப் பேரரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அவற்றுள் கனிம் பேரரசு குறிப்பிடத்தக்கது. இப்பேரரசு கி.பி. 700–ஆம் ஆண்டுகளில் தன் ஆதிக்கத்தைச் சாடு ஏரிப் பகுதியில் நிலை நாட்டியது. இது ஆசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் வாணிக உறவு கொண்டிருந்தது. புலாலா (Bulala) பகுயிர்மீ என்ற இனமக்களும் சாடில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஐரோப்பிய ஆய்வாளர்கள் கி.பி. 1800–ஆம் ஆண்டுகளில் இந்நாட்டிற்கு வந்தனர். பகுயிர்மீ இனத்தின் கடைசி அரசரான கோரங்கு (Gaorang) என்பவர் பிரான்சுடன் கி.பி. 1897–ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி பிரான்சின் காப்பாட்சி அரசு இந்நாட்டில் ஏற்பட்டது. பிரான்சு 1910–இல் இந்நாட்டை மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ, காபோன் ஆகிய நாடுகளுடன் இணைந்து நிலநடுக்கோட்டு ஆப்பிரிக்கப் பிரெஞ்சுப் பகுதி என்று பெயரிட்டது. சாடு 1958–ஆம் ஆண்டில் பிரான்சிற்கு உட்பட்ட தன்னாட்சிக் குடியரசாக மாறியது. இந்நாடு 1960–இல் முழுச் சுதந்திரம் பெற்றது. இந்நாட்டின் முதல் குடியரசுத் தலைவராகப் பிரங்காய் தோம்பல்பாயே (Francois Tombalbaye) விளங்கினார். சாடில் 1970-இல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் தோம்பல்பாயே 1975–இல் இராணுவத்தினால் கொல்லப்பட்டார். நாடு இராணுவத்தினரின் ஆட்சிக்கு உட்பட்டது. வடக்குப் பகுதியில் வாழ்ந்த முசுலிம்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்தனர். அதனால் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இலிபியா கலகம் செய்த சில முசுலீம் இனத்தவருக்கு இராணுவத் தளவாடங்கள் அளித்தது. இதனைப் பிற கலகக்காரர்கள் விரும்பவில்லை. பிரான்சு சாடு அரசிற்கு இராணுவ உதவி அளித்தது. பிரான்சின் படைகள் 1968 முதல் 1972 முடியவும்<noinclude></noinclude> fziwd6dnc65tbnhghqsdmzvrvp7oduq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/739 250 651380 1957621 2026-08-08T07:28:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="த"/> <section begin="தக்கயாகப்பாணி"/> {{dhr}} <b>தக்கயாகப்பாணி</b>: ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட இந்நூலினை ‘வீரபத்திரப் பரணி’ என்றும் கூறுவர். இது, 815 கண்ணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தக்கயாகப்பரணி|711|தக்கர்}}</noinclude><section end="த"/> <section begin="தக்கயாகப்பாணி"/> {{dhr}} <b>தக்கயாகப்பாணி</b>: ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட இந்நூலினை ‘வீரபத்திரப் பரணி’ என்றும் கூறுவர். இது, 815 கண்ணிகளை உடையது. பரணி என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இந்நூல், போரில் தோல்வியுற்றோருடைய பெயரால் ‘தக்கயாகப் பரணி’ என்றே வழங்கப்பெறுகிறது. இதிற் கூறப்படும் தக்கயாக வரலாறு அதனைக் கூறும் புராண வரலாற்றினும் மாறுபட்டுள்ளது. அவ்வாறே இதில் இடம்பெற்றுள்ள ஆளுடைய பிள்ளை வரலாறும் பெரிய புராணத் தினின்றும் மாறுபட்டுள்ளது. தக்கன் சிவபெருமானை மதியாமல், திருமால் முதலாயினாரை முதலாகக் கொண்டு செய்த வேள்வியைக் காண வந்த தாட்சாயணியையும் மதிக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட சிவபெருமான், வீரபத்திரரைத் தோற்றுவித்து யாகத்தை அழித்து வரக்கட்டளையிட்டார். அவ்வாறே வீரபத்திரர் சென்று, தேவர்களைக் கொடுமைப்படுத்தித் தக்கன் தலையினை வெட்டியாகத்தை அழித்தார். இப்புராண நிகழ்ச்சியினைப் பாடுபொருளாகக் கொண்டு அமைந்தது இந்நூல். விக்கிரம சோழன் முதலான மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராக விளங்கிய ஓட்டக்கூத்தர் இரண்டாம் இராசராச சோழனின் (கி.பி. 12-ஆம் நூ.) வீரத்தையும் புகழையும் இந்நூலில் சிறப்பாக அமைத்துப் பாடியுள்ளார். அதனால், அம்மன்னன் காலத்தில் அவனது விருப்பப்படி இது இயற்றப்பட்டது எனலாம். இந்நூலை இவர் இயற்றியதற்குக் காரணம், வீரசிங்காதன புராணத்திற் காணப்படுவது போல் இந்நூலில் இல்லை. காழியொட்டக்கூத்தன் என்ற இவர்தம் பெயராலும், சீர்காழியில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சட்டை நாதரையும் தோணியப்பரையும் பிரம்புச் சரையும் பிறரையும் சிறப்பித்துப் பாடியுள்ளமையாலும் இவர் சீகாழிப் பதியினர் என்பது புலனாகிறது. பழமையான ‘கலிங்கத்துப் பரணி’ யினின்றும் இது வேறுபட்டுளது. ‘பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி’ இது இயற்றப்பட்டிருக்கிறது. இந்நூல் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடுபாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, கோயில் பாடியது, பேய் முறையீடு, காளிக்குக் கூளி கூறியது, கூழடுதலும் இடுதலும், களங்காட்டல், வாழ்த்து என்னும் 11 பிரிவுகளாக அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்தில் வயிரவக் கடவுள், உமாபர மேசுவரியார், பிள்ளையார், முருகன், ஆளுடைய பிள்ளை முதலானோரை வணங்கிச் சோழனுக்கு வெற்றியுண்டாக இவர் வேண்டுகின்றார். காடுபாடியது என்னும் பகுதியில் பாலை நிலவெம்மை, காளி கோயில் முதலிய செய்திகளோடு வாம் மார்க்கத்தாரின் செயல்கள் முதலியன கூறப்பட்டுள்ளன. கோயில் பாடியது என்னும் பகுதியில், காளிகோயிற் செய்திகள் கூறப்பட்டுள்ளன. காளிதேவி, கலைமகளிடம் முருகக் கடவுள் திருஞான சம்பந்தராக வந்து அமணர்களை வென்று சைவத்தினை நிலைநாட்டிய வரலாற்றினைக் கூறுமாறு வேண்ட, நாமகள், சம்பந்தர் மதுரையை அடைந்தது, அவர் தங்கியிருந்த மடத்திற்கு அமணர்கள் தீயிட்டது, அதனால் பாண்டியன் வெப்பு நோயுடைந்தது, சம்பந்தரால் திருநீறிடப்பெற்று நோய் நீங்கியது, சம்பந்தர் அனல்வாதம், புனல் வாதம் செய்தது. பாண்டியன் கூன் நிமிர்ந்தது. சமணர்கள் கழுவேறப் பணித்தது, சம்பந்தர் தடுத்தது. அவர்கள் தாமே கழுவேறியது முதலிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பரமசிவன் பார்வதி தேவியாரோடு சென்று போர்க்களம் கண்டு அங்கு நிகழ்ந்தவற்றை விளக்கிக் கூறச் சினந்தணிந்த பார்வதி தேவியார் சிவபெருமானிடம், ‘அவர்களைக் காக்கவேண்டும்’ என்று வேண்டியதையும் அவர் மனமிரங்கித் தக்கனுக்கு ஆட்டுக்கிடாய்த் தலையை வைத்து உயிர்பெற்றெழச் செய்து, வானவர்கட்கு வாழ்வளித்து, உரிய தகுதிகளை வழங்கிய செய்திகளையும் களங்காட்டியது என்னும் பகுதி கூறுகின்றது. வாழ்த்துப் பகுதியில் ஒட்டக்கூத்தர், தம்மை ஆதரித்த இராசராசன் புகழைக் கூறி ஈற்றில், உறையூர், காவிரி, அலைமகள், கலைமகள், தமிழ் முதலானோரை வாழ்த்தி நூலினை முடிக்கின்றார். இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுள்ளது. பாடற்பொருளை நன்குணர அவ்வுரை பேருதவியாக அமைகிறது. தக்கயாகப் பரணியினை அதன் பழைய உரையோடு டாக்டர் உ.வே. சாமிநாதையர் சிறப்பாகப் பதிப்பித்துள்ளார்.{{Right|<b>வீ.சொ.</b>}} <section end="தக்கயாகப்பாணி"/> <section begin="தக்கர்"/> {{dhr}} <b>தக்கர்</b>: இந்நகரம் செனிகல் (Senegal) நாட்டின் தலைநகரம். இங்கு 1979-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 978, 553 மிலியன் ஆகும். தக்கர் நகரம் (Da- Kar) வாணிகப் பயன்பாட்டிற்காகப் பிரெஞ்சுக் காரர்களால் கி.பி. 1857-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக இந்நகரத்திற்குப் பல வசதிகள் செய்யப்பட்டன. இந்நகரத்திற்கு கி.பி. 1885-ஆம் ஆண்டு இருப்புப்<noinclude></noinclude> 7yygbo1y1ldt16uqut6h1149oq3m7c4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/740 250 651381 1957628 2026-08-08T07:54:21Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 740 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 115 |oTop = 50 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|தக்கர்}} பாதை ஏற்படுத்திய பின்னரே இது சிறப்புறத் தொடங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தக்கர்|712|தக்கன்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 740 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 115 |oTop = 50 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|தக்கர்}} பாதை ஏற்படுத்திய பின்னரே இது சிறப்புறத் தொடங்கியது. புனித லூயி என்ற பிரெஞ்சுக்காரரால் 1902-ஆம் ஆண்டு இந்நகரம் மேற்கு ஆப்பிரிக்காவின் தலைமையிட மாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது தக்கர், விச்சி (Vichy) என்பவரின் ஆளுகையின்கீழ் இருந்தது. இந்நகரின் சிறப்பை உணர்ந்த தி கால் சார்லசு (De. Galluae Charles) 1940-ஆம் ஆண்டு, செப்டம்பர் 23-ஆம் நாள் ஒரு பெரிய பிரெஞ்சுப் படையுடன் முற்றுகையிட்டார். ஆனால், அம்முற்றுகை பலன் அளிக்கவில்லை. பிறகு 1942-ஆம் ஆண்டு அந்நகரில் நுழைந்தனர். தக்கர் நகரம் 1960-ஆம் ஆண்டு மாலி கூட்டமைப்பின் தலைநகராக்கப்பட்டது. மாலி கூட்டமைப்புக் கலைக்கப்பட்ட பின்னர்த் தக்கர் நகரம் செனிகல் நாட்டின் தலைநகராக்கப்பட்டது. இது நாட்டின் பெரிய நகரமாகவும். முக்கிய துறைமுகமாகவும் இப்போது விளங்கி வருகிறது. இந்நகரம் அட்லாண்டிக்குக் கடற்கரையின் தென்பகுதியில் இருப்பதால் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மிக அருகில் முக்கிய துறைமுகமட்டுமல்லாது, தென்ஆப்பிரிக்க நாடுகளுக்கு வணிகத் தளமாகவும் விளங்குகிறது. அத்துடன் இந்நகரம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு முக்கிய கடல், விமான, இருப்புப் பாதைத் தளமாகவும் விளங்குகின்றது. இந்நகரம் இப்பொழுது உலகத் தொடர்புடைய நகரமாகவும் விளங்குகிறது. தக்கர் நகரில் பல கண்கவர் அரண்மனைகளும் மகுதிகளும் உள்ளன. ‘சுதந்திரத்தலம்’ (Place de Independence) என்ற இடம் ஒரு சுற்றுலா மையமாக விளங்குகிறது. இந்த இடம் இந்நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 740 |bSize = 375 |cWidth = 185 |cHeight = 155 |oTop = 60 |oLeft = 185 |Location = center |Description = }} {{center|தக்கர் நகர வீதி}} இந்நகரில் பல பள்ளிக்கூடங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் உள்ளன. பாசுடியூர் (Pasteur Institute) மருத்துவ நிறுவனம் மிகப்புகழ் பெற்றதாகும். இந்நகரின் பெயரினைக் கொண்ட தக்கர்ப்பல்கலைக் கழகம் ஒரு பெரிய கலைக்கூடமாகத் திகழ்கிறது. இப்பல்கலைக் கழகத்தில் ஆப்பிரிக்கப் பண்பாட்டினைப் படிப்பதற்கென்றே ஒரு பெரிய நிறுவனம் உள்ளது. இது ஆப்பிரிக்க அடிப்படைகளைப் பயிலக்கூடிய நிறுவனம் என்று சொல்லப்படுகிறது. (Institute of Fundamental Afrique Noire-IFAN) தக்கர் துறைமுகத்தில் கப்பல்-சுட்டும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. இத்துறைமுகத்தில் மிகப் பெரிய எண்ணெய்ச் சேமிப்புக் கிடங்குகளும் தானியச் சேமிப்புக் கிடங்குகளும் உள்ளன.{{Right|<b>எஸ்.ஆ.</b>}} <section end="தக்கர்"/> <section begin="தக்கன்"/> {{dhr}} <b>தக்கன்</b>: இவன் திருமாலின்பேரன்; பிரமனின் மகன். பிரமன் நினைத்த அளவிலே பிறந்தவன் என்றும், அவரது கட்டைவிரலிற் பிறந்தவன் என்றும் கூறுவர். இவனது மனைவி ‘தரணி’ யாவள். இவளிடம் பெற்ற ஆயிரம் பிள்ளைகளும் நாரதர் உபதேசத்தால் துறவு பூண்டனர். அதனால் கோபங்கொண்ட இவன், நாரதரை நிலைவின்றித் திரியுமாறும் கலகக்காரனாகுமாறும் சபித்தான். {{nop}}<noinclude></noinclude> 1j98iu74pwhrfbjzcirivx2xel9soml பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/741 250 651382 1957632 2026-08-08T08:13:18Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பின், தக்கன் ‘அசக்கினி’யை மணந்தான். அவளிடம் அறுபது பெண்களைப் பெற்றான். அவர்களுள், பத்துப் பெண்களைத் தருமப் பிரசாபதிக்கும், பதின் மூன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தக்கன்|713|தக்காணம்}}</noinclude>பின், தக்கன் ‘அசக்கினி’யை மணந்தான். அவளிடம் அறுபது பெண்களைப் பெற்றான். அவர்களுள், பத்துப் பெண்களைத் தருமப் பிரசாபதிக்கும், பதின் மூன்று பேர்களைக் காசிப முனிவருக்கும், இருபத்தேழு பேரைச் சந்திரனுக்கும், இரண்டு பேரை பூதா என்பாருக்கும், இரண்டு பேரை ஆங்கிரசு என்பாருக்கும், இரண்டு பேரைக் கிரிசு என்பாருக்கும், நான்கு பேர்களைத் தாட்சயபர் என்பாருக்கும் திருமணம் செய்துகொடுத்தான். சந்திரன் தான் மணந்த இருபத்தேழு பேர்களுள் உரோகினி என்பாளிடம் மட்டும் அன்பு கொண்டொழுகினான், அதனால் மற்றப் பெண்கள் தக்கனிடம் முறையிட, தக்கன், கலைகள் தேயுமாறு சந்திரனைச் சபித்தான். வருந்திய சந்திரன் சிவபெருமானைத் தஞ்சமடைந்து தேய்ந்த கலைகள் வளர வரம் பெற்றான். தக்கன், கடுந்தவம் புரிந்து, சிவபெருமானிடருந்து, பிரமன் முதலானவர்கட்குத் தலைவனாக விளங்கும் பேற்றையும், பார்வதி தன் மகளாகப் பிறக்கவும் சிவன் தன் மருமகனாக வரவும் வேண்டுமென்ற வரத்தையும் பெற்றான், அவ்வாறே உமையம்மையை மகளாகப் பெற்றுத் ‘தாட்சாயணி’ என்ற பெயரிட்டான். சிவபெருமான் அவளை மணந்து கொண்டார். கைலையில் சிவகணங்கள், தக்கனை மதியாத காரணத்தால், சிவன்மீது வெறுப்புக் கொண்டிருந்தான். சிவனை மதியாது வேள்வி செய்தான். ததீசி முனிவர், சிவனை அழைத்து முதன்மை தரவேண்டும் என்று அறிவுரை கூறியும் கேளாமல், திருமால் முதலானோரைக் கொண்டு வேள்வி நடத்தினான். வேள்வி காண வந்தாள் தாட்சாயணி. அவளையும் அவமதித்தான். கோபங்கொண்ட சிவபெருமான், வீரபத்திரரை ஏவினார். வீரபத்திரர் யாகத்தை அழித்தார்; தக்கன் தலையையும் கொய்தார், பிரமனின் வேண்டுகோளின்படி தக்கனுக்கு ஆட்டுத் தலையை வைத்துச் சிவபெருமான் உயிர் தந்தார். பின்னர், தக்கன் சிவபூசை செய்து சிவகணங்கட்குத் தலைவனானான். இவன் பெண்கள் சிவபெருமானை வழிபட்டு நட்சத்திரங்கள் ஆகும் வரம் பெற்றனர். இவனது வேள்வி குறித்துப்பாடப்பட்டது தக்கயாகப் பரணி. இவனது வரலாறு பொதுவாகப் பல நூல்களில் கூறப்பட்டுள்ளது. <b>தக்கன்</b>{{sup|<b>2</b>}}: இவன் முன்பிறவியில், வல்லாள மாமன்னனுடைய தந்தையாகக் ‘கல்யாணன்’ என்னும் பெயரோடு பிறந்தவன். இவன் மகன் ‘பிருகத்பானு’ என்பவன், பின்னர். இவன் பானுதேசத்தை ஆட்சி செய்து வந்த ‘வல்லவன்’ என்பானுக்கும், ‘கமலை’ என்பாளுக்கும் மகனாகப் பிறந்தான், பிறக்கும்போதே தொழுநோயுடன் பிறந்ததால் வருத்தம் அடைந்த வல்லவன், அரசி கமலையுடன் இவனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டான். இவர்களிருவரும் காட்டிற்குச் சென்று கொண்டிருக்கும்போது, எதிரே, ‘முற்கல முனிவர்’ என்னும் தவசீலர் வர, அவரது உடலின் காற்றுப்பட, இவன் தொழுநோய் நீங்கி மன்மதனைப் போல அழகுபெற்றான். பின்னர் இவன், குண்டினபுரத்து மன்னன் ஆயினான். <b>தக்கன்</b>{{sup|<b>3</b>}} அட்ட நாகங்களுள் ஒன்று. <b>தக்கன்</b>{{sup|<b>4</b>}} நவ பிரமாக்களுள் ஒருவன்.{{Right|<b>வீ.சொ.</b>}} <section end="தக்கன்"/> <section begin="தக்காணம்"/> {{dhr}} <b>தக்காணம்</b>: இந்தியாவில் நருமதை ஆற்றிற்குத் தென்பாலுள்ள முந்நீரகம் முழுவதும் பண்டைக் காலத்தில் தட்சிணபதம் (Dakshinapatha) என்ற வடமொழிச் சொல்லால் குறிப்பிடப்பட்டது. அச்சொல் தட்சிணம் (Dakshina) எனச் சுருங்கிப் பின்னர்த் தக்காணம் (Deccan) என மருவியது. பிற்காலத்தில் தக்காணம் என்பது வடக்கே நருமதை நதிக்கும், தெற்கே கிருட்டிணை, துங்கபத்திரை ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியைக் குறிக்கலாயிற்று, இதன் மேற்கில் அரபிக் கடலும், கிழக்கில் வங்கக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இன்றைய மகாராட்டிர மாநிலம், மத்தியபிரதேசத்தின் ஒரு பகுதி, ஒரிசா, கருநாடக, ஆந்திர மாநிலங்கள், கோவா, தாத்திரா, நாகர்வேலி ஆகியவை இதில் அடங்கும். இப்பகுதியில் பல்வேறு அரசுகளும், அரச மரபுகளும் தோன்றித் தங்களுடைய பண்பாட்டை விட்டுச் சென்றுள்ளமையால் இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக விளங்குகின்றது. <b>நிலவியல் அமைப்பு</b>: தக்காணத்தின் வட எல்லையாக உள்ள விந்திய மலைத் தொடரும், நருமதை தபதி ஆறுகளும், சாத்பூரா, மகாதேவ, மைக்கலா மலைத்தொடர்களும் இந்தியாவை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றன. வடக்கிலிருந்து இவ்விரட்டை அரண்களைத் தாண்டி ஆசீர்காரிலும், சபல்பூருக்கும் அருகிலுமுள்ள கணவாய்களின் வழியாகத்தான் நுழையமுடியுமாகையால், பண்டைக் காலத்தில் இந்தியாவின் மீது படையெடுத்துவந்த அயல்நாட்டினர் இப்பகுதிக்குள் நுழையவில்லை. இதன் நடுப்பகுதியிலுள்ள மேட்டு நிலத்தில் மகாராட்டிர கருநாடக, ஆந்திர மாநிலங்கள் அமைந்துள்ளன. மகாராட்டிரம் மேற்குமலைத் தொடரின் மறுபக்கத்தில் அமைந்துள்ளதால் இங்கு மழை மிகக் குறைவாக, ஆண்டிற்கு 508-762 மி.மீ. வரை பெய்-<noinclude></noinclude> a629hx0wqtzz7kwc9oltlxhwxixh8wu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/742 250 651383 1957633 2026-08-08T08:28:04Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 742 |bSize = 375 |cWidth = 117 |cHeight = 148 |oTop = 47 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|தக்காணம்}} கின்றது. எனவே, இப்பகுதியில் நெல்சாகுபடி குறைவெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தக்காணம்|714|தக்காணம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 742 |bSize = 375 |cWidth = 117 |cHeight = 148 |oTop = 47 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|தக்காணம்}} கின்றது. எனவே, இப்பகுதியில் நெல்சாகுபடி குறைவென்றாலும் பருத்தி, சோளம், கம்பு, கேழ்வரகு, எண்ணெய் வித்துகள் ஆகியவை மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. இங்குள்ள முக்கிய நகரங்கள் அகமது நகர். அவுரங்காபாது, கோலாப்பூர், நாகபுரி, புனே, சோலாப்பூர் ஆகியவாம். கருநாடக மேட்டுநிலப்பகுதி 455-இலிருந்து 760 மீ.வரை (1500-2000 அடி) உயரம் உள்ளது. அது தெற்கே செல்லச்செல்ல 915-இலிருந்து 1220 மீ. வரை (3000-4000 அடி) உயர்ந்துகொண்டே செல்கிறது. இங்குள்ள அடர்ந்த காடுகளில் சந்தனம், தேக்கு முதலிய மரங்கள் நிறைந்திருப்பதுடன் காப்பிக் கொட்டையும் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் துங்கா, பத்திரா, பெண்ணையாறு, சித்திராவதி காவிரி முதலிய ஆறுகள் பாய்வதால் இது தீர்வளம் நிறைத்து, நெல், கரும்பு, தேங்காய், பருத்தி ஆகியவை விளைவிக்கப்படுகின்றன. இம்மாநிலம் பட்டு உற்பத்திக்குப் புகழ் பெற்றது. மைசூர், பெங்களூர், தார்வார், ஊப்ளி, பீசப்பூர் ஆகியவை இப்பகுதியிலுள்ள முக்கிய நகரங்களாகும். ஆந்திராவின் மேட்டு நிலப்பகுதியில் தெலுங்கானாவும், கர்நூல், கடப்பை, அனந்தப்பூர், பெல்லாரி மாவட்டங்களும் அடங்கும். இங்கு நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, பருப்பு வகைகள் ஆகியவை பயிரிடப்படுகின்றன. ஐதராபாது இப்பகுதியில் சிறந்த நகரமாகும். தக்காணத்தின் மேற்கிலுள்ள மேற்கு மலைத்தொடர்கள் மிக உயர்ந்து, தொடர்ச்சியாக உள்ளன. இவைதபதி ஆற்றில் தொடங்கி நீலகிரி மலையில் கிழக்கு மலைத்தொடருடன் கூடும். இதன் மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா 2670மீ. (8760 அடி) உயரம் உள்ளது. இங்கிருந்து மேற்குக் கடற்கரையை அடையத் திரிம்பக்கு, தால், பிம்பிரி, போர் அல்லது கண்டலா, அம்பாக் கணவாய்களின் வழியாகத்தான் செல்ல வேண்டும். இம்மலைத் தொடருக்கும் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் கொங்கணமும் கோவாவும் உள்ளன. தபதி ஆற்றிலிருந்து கோவா வரையிலுள்ள இக்கடற்கரைப் பகுதி கொங்கணம் எனப்படும். இது 530 கி.மீ. நீளமும், 48 முதல் 80 கி.மீ. வரை அகலமும் உடையது. இப்பகுதியில் பம்பாய் முக்கிய நகரமும் துறைமுகமுமாகும். பீசப்பூரின் ஒரு பகுதியான கோவா, போர்ச்சுகீசியரின் குடியேற்றமாகவிருந்து 1961-ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. இதன் பரப்பளவு 3282 ச.கி.மீ. ஆகும். இயற்கையெழில் நிறைந்த இது உல்லாசப் பயணிகளைக் கவர்வதாக உள்ளது. நடுத்தக்காண மேட்டுநிலப்பகுதிக்குக் கிழக்கே ஒரிசாவும், கிழக்கு மலைத் தொடரும், ஆந்திரக் கடற்கரையும் அமைந்துள்ளன. ஓரிசாவில் வாழும் மக்கள் திராவிட மொழிகளோடு தொடர்பு இல்லாத ஒரியா (Oriya) மொழியைப் பேசுவதால் அவர்கள் மாறுபட்டுள்ளனர். இங்குப்பைத்திராணி, பிராமணி, மகாநதி முதலிய ஆறுகள் பாய்வதால் இது செழிப்பாக உள்ளது. பண்டைக்காலத்தில் கலிங்கநாடு எனப்பட்ட இப்பகுதியில் புவனேசுவரம், பூரி, கோனாரக்கு ஆகியவை குறிப்பிடத்தக்க இடங்களாகும். கிழக்கு மலைத்தொடரானது மேற்கு மலைத் தொடரைப் போல் அவ்வளவு உயரமாகவோ தொடர்ச்சியாகவோ இல்லை. இதில் ஒரிசா மலைகள், பாசுடர் குன்றுகள், கடப்பா மலைத் தொடர் ஆகியவை அடங்கியுள்ளன. இம்மலைத் தொடருக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையிலுள்ள ஆத்திரக் கடற்கரைப்பகுதி மகாததி, கிருட்டிணா, கோதாவரி முதலிய ஆறுகள் பாய்வதால் மிகவும் செழிப்பாக உள்ளது. இங்குள்ள விசாகப்பட்டினமும் மசூலிப்பட்டினமும் சிறந்த துறைமுகங்களாகும். <b>பேரரசுகள்</b>: தக்காணத்தில் பல அரசுகள் தோன்றி வளர்ந்து வீழ்ச்சியுற்றன. பண்டைக் காலத்தில் இப்பகுதியைச் சாதவாகனப் பேரரசர்கள் கி.மு. 230 முதல் கி.பி. 225 வரை, நாலரை நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்தனர். அப்பேரரசு அழிந்த பொழுது வாகாடகர்கள், ஆபிரர்கள், இக்குவாருகள்,<noinclude></noinclude> iwwql6qh0ilt95c3lgp6qey6cvsnfb9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/743 250 651384 1957634 2026-08-08T08:39:58Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிருகத்துபாலாயனர்கள், போதிகள் ஆகியோர் தங்கள் ஆட்சியை ஏற்படுத்தினர். பின்னர்ச் சாளுக்கியர் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 543 முதல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தக்காணம்|715|தக்குர்}}</noinclude>பிருகத்துபாலாயனர்கள், போதிகள் ஆகியோர் தங்கள் ஆட்சியை ஏற்படுத்தினர். பின்னர்ச் சாளுக்கியர் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 543 முதல் 753 வரை சிறப்பாக ஆட்சி புரிந்தனர். இராட்டிரகூடர்கள் கி.பி. 753 முதல் 973 வரை மானிய கேடத்திலிருந்து ஆட்சி நடத்தினர். சாளுக்கியரில் ஒரு பிரிவினர் கிழக்கு ஆந்திரப் பகுதியில் கீழைச் சாளுக்கியர் என்னும் பெயரில் ஐந்து நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இராட்டிர கூட அரசு மறைந்ததும் மேலைச் சாளுக்கியரின் ஆட்சி கி.பி.973 தொடங்கி 1200 வரை நீடித்தது. அப்பொழுது ஒய்சாளர்கள் (கி.பி. 1006-1346), யாதவர்கள் (கி.பி. 1187-1318), காகதீயர்கள் (கி.பி. 1000-1326) ஆகியோர் ஆட்சி செய்தனர். இப்பகுதியைப் பாமினி சுல்தான்கள் கி.பி. 1347 முதல் 1482 வரை ஆட்சி புரிந்தனர். அதன் பின்னர், இது அகமதுநகர், பீசப்பூர், கோல்கொண்டா, பீடார், பீரார் என்னும் ஐந்து சுல்தானியங்களாகப் பிரிந்தது. அப்பொழுது தெற்கில் விசயநகரப் பேரரசு தோன்றிப் புகழுடன், செல்வச் செழிப்புடன் விளங்கியது. அவுரங்கசீபின் ஆட்சிக் காலத்தில் தக்காணம் முழுதும் மொகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்டு அதனுடைய ஒரு சுபாவாக ஆயிற்று. அப்பொழுது மராட்டிய நாட்டில் சத்திரபதி சிவாசி ஒரு பேரரசை நிறுவினார். மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்த் தக்காணசுபா விடுதலை பெற்று ஐதராபாது நிசாம் மரபினரால் ஆளப்பட்டது. பிறபகுதிகள் ஆங்கிலக் கீழக்கிந்திய வாணிகக் குழுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டன. <b>கலைகள்</b>: பல்வேறு அரசர்களின் ஆட்சியில் இப்பகுதியில் கட்டடக்கலை, சிற்பக்கலை ஓவியக்கலை ஆகியவற்றுடன பிறகலைகளும் சிறந்து விளங்கின. சாதவாகனர்கள் வடமேற்குத் தக்காணத்தில் நாசிக்கு, நானாகாட்டு, அசந்தா, கார்லே, கன்கரி முதலிய இடங்களில் குடைவரைக் கோயில்களை ஏற்படுத்தினர். அவர்கள் கிழக்குத் தக்காணத்தில் பட்டி பொரலு, குடிவாடி, அமராவதி, கண்டசால, நாகார் சுனகொண்டா, கோலி ஆகிய இடங்களில் எண்ணிறந்த புத்தகோயில்களையும் (சைத்தியங்களையும்) மடங்களையும் (விகாரங்களையும்) கட்டிலர். இவற்றில் சிற்பங்களும் ஓவியங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இராட்டிரகூட அரசரான முதலாம் கிருட்டிணன் எல்லோராவிலுள்ள புகழ்மிக்க கைலாச நாதர் கோயிலை ஏற்படுத்தினார். இதற்கு அருகிலுள்ள குடவரைக் கோயில்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பம்பாய்க்கு அருகிலுள்ள எலிபெண்டாத்தீவில் உள்ள குடவரைக் கோயில்களில் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிருட்டிணதேவராயரால் கட்டப்பட்ட கசராகோகோயிலும், விட்டலசுவாமி கோயிலும், விசயநகரப் பேரரசின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன. மைசூரில் சிரவணபெல்கோலாவிலுள்ள கோமதீசுரரின் உருவச்சிலை கங்கர்களின் சிற்பக்கலையை விளக்குகிறது. அளபேடு, பேளூர், சோமநாதபுரம் ஆகியவிடங்களில் ஒய்சாளர்கள் மிக அழகிய சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கற்கோயில்களை அமைத்துள்ளனர். ஒரிசாவிலுள்ள கொனாரக்கில் முதலாம் நரசிம்மனால் கட்டப்பட்டுள்ள சூரியக் கடவுளின் கோயில் உலகப் புகழ் பெற்றதாகும்.{{Right|<b>சி.இரெ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bhandarkar R, G.,</b> - Early History of the Dekkan Down to the Mahomedan Conquest, Asian Education Services, New Delhi. 1979.<br> <b>Chopra, P.N.,</b> and others - History of South India Vol, I-Ancient Periods, S. Chand & Company Ltd,. New Delhi, 1979.<br> <b>Majumdar, R.C.,</b> and others - An advanced History of India, MacMillan and Co., Ltd., London, 1970. <section end="தக்காணம்"/> <section begin="தக்குர்"/> {{dhr}} <b>தக்குர்</b>: மத்திய இந்தியப் பகுதிகளில் வாழும் குற்றவாளிப் பழங்குடிகளுள் ஓரினத்தவரே தக்குர் பழங்குடியினர். இன்று இவர்கள் முன்னாளைய குற்றவாளிப் பழங்குடிகளாகக் (Ex-Criminal Tribe) கருதப்படுகின்றனர். கொலைத் தொழிலையும் திருட்டுத் தொழிலையும் பெரும்பான்மையோர் கைவிட்டு விட்டாலும் இவர்களுள் சில பிரிவினர் இத்தொழிலைக் கைவிடாமல் உள்ளனர். மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் முதலான மாநிலங்களில் இவர்கள் மிகுதியாக உள்ளனர். இவர்கள் தங்களைத் தக்குகள் (Thugs) என்றும், தக்குர் (Thakur) என்றும் கூறிக்கொள்வர். ஒரு பிரிவினர் கோரண்டா அல்லது கோயண்டா (Goranda or Goyanda) என்றும் கூறப்படுவர். தக்குர் இனத்தவர்கள் ஒரு தனி இனமாக இல்லை. இவர்கலின் மூதாதையர்கள் பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், குற்றத் தொழிலை மேற்கொண்ட பல்வேறு இனத்தவர்களும் பின்னர் ஒன்று சேர்ந்தனர் என்றும், இவர்கள் தங்களின் மரபுவழியைப் பற்றிக் கூறுவர். இவர்களுள் ஒரு பிரிவினர் முசமதிய இனத்தவர்களாகவும் மற்-<noinclude></noinclude> b6oaj67fjtuw85nyq6u4t1xgttjaqjq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/744 250 651385 1957635 2026-08-08T08:56:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றொரு பிரிவினர் இந்துக்களாக மாறியவர்களாகவும் காணப்படுகின்றனர். பிரிவைச் சேர்ந்தவர்கள் பாயிசு (Bhais), பர்கோட்டி (Bargote), கச்சுனி (Kachuni), அத்தர் (Hattar)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தக்குர்|716|தக்குர்}}</noinclude>றொரு பிரிவினர் இந்துக்களாக மாறியவர்களாகவும் காணப்படுகின்றனர். பிரிவைச் சேர்ந்தவர்கள் பாயிசு (Bhais), பர்கோட்டி (Bargote), கச்சுனி (Kachuni), அத்தர் (Hattar), கசகு (Garru), தண்டல் (Thandal), இராத்தூர் (Rathur) ஆகிய ஏழு குலத்தவர்களாகப் பாருபடுகின்றனர். இத்துக்களைச் சேர்ந்தோர் கஞ்சார் (Kanjar) என்றும், பெரியாசு (Berias) என்றும் இருவகையாக உள்ளனர். இவர்களைப் பற்றி எல்லோராக் குகைகளிலும் சித்திரிக்கப்பட்டுள்ளதெனக் கூறுவர். அங்குள்ள சில ஓவியங்கள் கழுத்தை நெறித்துக் கொல்லும் செயலையும், சிலர் இறந்தவரை இடுகாட்டில் புதைக்கும் செயலையும் சித்திரிப்பதாக உள்ளமை இவர்களின் செயல்களையே என்று கூறுவர். குற்றவியல் பழங்குடிகளாக வாழ்ந்த இவர்கள் பெரும்பாலும் கொலைக் குற்றங்களைச் செய்துவந்தனர். தேசிய நெடுஞ்சாலைகளில் செல்வோரிடம் பல நுணுக்கங்களைக் கொண்டு வழிமறித்து அவர்களிடமுள்ள பொருள்களைக் கொள்ளையடிப்பதே இவர்களின் முக்கிய தொழில், பெரும்பாலும் பொருள் உள்ளோர் என ஐயப்படும் ஒருவர் சாலையில் செல்லும்போது அழகிய பெண்களை அனுப்பித்தாம் தனியாக சிறு உதவி வந்துவிட்டதாகவும் செய்யவேண்டுமென்றும் கெஞ்சி உரையாடிக்கொண்டு ஒதுக்குப் புறமாக நிற்கும் நேரத்தில், ஆண்கள் அவர்களைக் கழுத்தை நெறித்துக் கொல்வர்; வேறுபல முறைகளிலும் பயணிகளைக் கொன்று கொள்ளையடிப்பர். குற்றச் செயலை மேற்கொள்ளும்போது இவர்கள் தனியாகவோ பலர் ஒன்றுசேர்ந்து குழுவாகவோ செல்வர். புதிய புதிய இடங்களுக்குச் செல்லும்போது பொதுமக்களுடன் பழகவேண்டிய நிலையில் ஆயுதங்கள் அனைத்தையும் மறைவிடங்களில் வைத்துவிட்டு நல்லவர்கள் போல் நடிப்பர். தாங்கள் வேளாண் வணிகர்கள் எனவும், குடியினர் கொண்டு நல்லவர்கள்போல் நடிப்பர். குற்றச்செயல் புரியும் பழங்குடிகளான பதக்குகள் (Badhaks), சான்சியாக்கள் (Sansias), பிற இந்தியக் குற்றவாளிப் பழங்குடிகள், இத்தாலி நாட்டுப் பண்டிட்டி (Banditti) ஆகியோரைப் போன்றே தக்குர் பழங்குடிகளும் மிகவும் சமயப் பற்றுடையவர்கள்; மூட நம்பிக்கை உடையவர்கள்; வழிப்போக்கர்களைக் கொன்று அவர்களிடமுள்ள பொருள்களைக் கொள்ளையடிக்கும் தொழிலைச் தெய்வமே இவர்களுக்குச் கொடுத்ததாக எண்ணுகின்றனர். இதனால், கொலையாளர்களின் ஆவியோ கொலைத் தொழிலின் மூலம் ஏற்படும் பாவமோ இவர்களைச் சேருவதில்லை என நம்புகின்றனர். காளியை இவர்கள் முதன்மையாக வழிபடுகின்றனர். முகமதிய உட்பிரிவினர்கள் பாத்திமாவின் மறு வடிவமே காளி என நம்பிக் காளியை வழிபடுகின்றனர், வழிப்போக்கர்களைக் கழுத்தை நெறித்துக் கொன்று அவர்களிடமிருந்து பொருள்களை வெற்றியுடன் கொள்ளையடித்தபின் ஒவ்வொரு முறையும் ஒருவகைச் சடங்கைச் செய்கின்றனர். இச்சடங்கின் போது ஒருவகை இனிப்பினைக் கடவுளுக்கு இட்டு எஞ்சியதைக் குழுத் தலைவனும் மற்றவர்களும் உண்பர். இந்த இளிப்பினைத் தவதாமல் அனைவரும் வீணாக்காமல் உண்ண வேண்டுமென்பது மரபு வழியிலான நம்பிக்கை. இவர்கள் செய்யும் சடங்குகளுள் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சடங்கு புதுக்கோடரியை வணங்குதலாகும். கொல்பவர்களை அருகில் உடன் புதைக்க வேண்டும் என்ற முறையை இவர்கள் கொண்டிருந்ததால் ஒருவகைக் கோடரியைக் கொல்லனிடம் செய்து அதனைக் காளியிடம் வைத்து சிறப்புச் சடங்கு நடத்தி நல்லநேரத்தில் பயன்படுத்துவர். கொலைச் செயலில் இவர்கள் பயன்படுத்தும் ஒரே கருவி கோடரி மட்டுமேயாகும். மக்களுள் ஒருசிலரைக் கொல்வதோ அவர்களிடமிருந்து கொள்ளையடிப்பதோ தவறு என எண்ணியவர்கள் தக்குர்கள், அத்தகையோரில் பெண்கள், மதகுருமார்கள் முதலானோர் முக்கியமானவர்கள். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மிகக் கொடூரமான செயல்களைச் செய்து வந்த இவர்களை இனங்கண்டு இவர்களைக் குற்றவியல் பழங்குடிகள் (Criminal Tribes) என அறிவித்து இவர்களைக் கடுமையாகத் தண்டிக்கச் சட்டமியற்றப்பட்டது. அதன் பின் இவர்களை நல்வழிப்படுத்த வேண்டி இரட்சணியப் படையினை (Salvation Army) இதில் ஈடுபடுத்தினர். அப்படையினரின் அயராத முயற்சியின் பலனாய் இவர்கள் தங்கள் தொழில்களை மாற்றிக்கொள்ள முற்பட்டனர். இருப்பினும் சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசு இவர்களை மேம்படுத்தக் காவல் படையினரின் நேரடிப் பார்வையில் இருக்கும்படி செய்து கண்காணிக்கத்தக்க பழங்குடிகள் (Notified Tribes) பட்டியலில் சேர்த்தது. அரசின் கடுமையான தண்டனை முறையாலும் பிற தொழில்களில் ஈடுபட்டு வாழமுடியும் என்ற நம்பிக்கை வந்ததாலும் இவர்கள் கொலைத் தொழிலைப் பெருமளவு விட்டுவிட்டனர். அதன்பிறகு இவர்களை அரசு கண்காணிக்கத்தக்க<noinclude></noinclude> 8d9y9xxtuax1nbb9i3uygdyvsanxjwd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/745 250 651386 1957636 2026-08-08T09:08:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பழங்குடிகள் (Denotified Tribes) என அறிவித்தது. அதன்பின்னர் இவர்களின் போக்கு மேம்படவே இவர்களை முன்னாள் குற்றவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தக்கோட்டா இந்தியர்|717|தக்கோட்டா இந்தியர்}}</noinclude>வர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பழங்குடிகள் (Denotified Tribes) என அறிவித்தது. அதன்பின்னர் இவர்களின் போக்கு மேம்படவே இவர்களை முன்னாள் குற்றவாளிப் பழங்குடிகள் (Ex-criminal Tribes) என்று அறிவித்தது. இன்று இவர்கள் கூடை முடைதல், கூலி வேலைசெய்தல், காவலர்களாகப் பணிசெய்தல், வேட்டையாடுதல், காட்டுப் பொருள்களைச் சேகரித்தல் முதலான பல தொழில்களைச் செய்துவருகின்றனர். இருப்பினும் எப்போதாவது ஒருசில வேளைகளில் கொள்ளைத் தொழில்களிலும் ஈடுபடுகின்றனர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="தக்குர்"/> <section begin="தக்கோட்டா இந்தியர்"/> {{dhr}} <b>தக்கோட்டா இந்தியர்,</b> வட அமெரிக்கவில் வாழும் தொன்மையான செவ்விந்திய இனத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் வட அமெரிக்காவில் வாழும் சமவெளி இந்தியர்களுள் இவர்களும் ஒரு பிரிவினர். சமவெளி இந்தியர்கள் (Plains Indians) அனைவரும் ஆறு முக்கியமான மொழிப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுவர். அவற்றுள் முதன்மையானது அல்கான்கியன் (Algonkian) மொழிப் பிரிவாகும். இதற்கடுத்து இரண்டாம் முக்கியப் பிரிவு சியோக்சு (Sioux) என்பதாகும். இதனுள் எட்டுப் பிரிவுகள் உள்ளன. அவற்றுள் ஒன்றே தக்கோட்டா (Dakota) இந்தியர்களின் மொழியாகும். இவர்கள் மொழியில் தக்கோட்டா என்பதன் பொருள் ‘கூட்டாளிகள்’ என்பதாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 745 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 198 |oTop = 230 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|தக்கோட்டா இந்தியர்}} தக்கோட்டா இந்தியர்கள் நெப்ரசுக்கா (Nepraska), மாண்டனா பகுதிகளுக்கும் கனடா நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதிகளில் பரவி வாழ்கின்றனர். இவர்கள் வாழும் பகுதி பொதுவாக வட தக்கோட்டாப் பகுதி, தென் தக்கோட்டாப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்படும். இப்பழங்குடிகள் வாழும் பகுதிகளில் சியோக்சு மொழி பேசாத பழங்குடிகளான செய்யன் (Cheyenne), பாவ்னீ (Pawnee), கொமன்சசு (Comanches) முதலானவர்களும் வாழ்கின்றனர். இப்பழங்குடிகளுக்கும் தக்கோட்டா இந்நியர்களுக்கும் இடைவே அவ்வப்போது மற்றவர்களின் நிலப்பரப்பைக் கைப்பற்றச் சண்டைகள் நடந்தன அமெரிக்க இந்தியர்களின் வரலாற்றைக் காணும்போது தக்கோட்டா இந்தியர்கள் பெரும்பாலும் அவர்கள் நிலப்பரப்பினைப் பெருமளவு இழக்கவில்லை எனலாம். இவர்களுக்கும் சியோக்சு பழங்குடிகளுக்கும் தொடர்ந்து சச்சரவுகள் இருந்து வந்தன. தக்கோட்டா மொழியில் சியோக்சு என்பதற்குப் பாம்பு என்று பொருளுண்டு என்றும், ஆகவே இவ்விருவரும் எதிரிகளாகவே வாழ்ந்து வந்தனர் என்றும் கூறுவர். சியோத்சு மொழிப்பிரிவில் தக்கோட்டாவினர் மிகவும் வலிமையுடனும் செல்வாக்குடனும் திகழ்ந்தனர். ஏழு பிரிவுகளாகப் பிரிந்திருந்த இவர்கள் ஏழு படைகள் எனச் சிறப்பாக மற்றப் பழங்குடியினரால் குறிக்கப்பட்டனர். அரசியல் நிலையில் ஏழு குழுக்களாக இருந்தாலும் இன்றைய சமுதாய அமைப்பில் இவர்கள் பல குழுக்களாகப் (Bands) பிரிந்துள்ளனர். ஒருசில குழுவின மேலும் பல உட்குழுவினராகப் பிரிந்து காணப்படுகின்றனர். சமவெளி இந்தியர்களைப் போன்றே தக்கோட்டா இந்தியர்களும் பொதுவான ஒரு பண்பாட்டைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு உட்குழு வினரும் தனித்தளியான பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்வில் குதிரையும் எருமையும் முதலிடம் பெறுகின்றன. இம்மக்கள் குதிரையின் பயன்பாட்டினை கி.பி.1740 ஆம் ஆண்டளவில் அறிந்தது முதலே இவர்களது வாழ்வில் அது முதன்மையான இடத்தைப் பெற்றது. குறிப்பாக வேட்டையாடுவதிலும், சண்டைகளின் போதும் குதிரையின் பயன் மிகுதியாக உள்ளதை உணர்ந்தனர். தக்கோட்டா இந்தியர்களின் பல குழுக்களுள் தெட்டான் (Teton) எனப்படும் குழுவினரே<noinclude></noinclude> 0crybmere2omc11rq789mlwfpo1tbu4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/746 250 651387 1957637 2026-08-08T09:21:39Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குதிரைகளை மற்றக் குழுவினர்களுக்கு வணிகம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் சேம்சு (James) ஆற்றங்கரையில் நடைபெறும் சந்தையில் குதிரைகள் பெரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தக்கோட்டா இந்தியர்|718|தக்கோலம்}}</noinclude>குதிரைகளை மற்றக் குழுவினர்களுக்கு வணிகம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் சேம்சு (James) ஆற்றங்கரையில் நடைபெறும் சந்தையில் குதிரைகள் பெருமளவில் விற்கப்படுகின்றன. தக்கோட்டா இளைஞர்கள் 5 வயது முதற்கொண்டே குதிரைகளில் செல்லப் பழகிக் கொள்கின்றனர். தக்கோட்டாவினரின் பொருளாதாரம் வேட்டையை முதன்மையாகக் கொண்டது. குதிரைகளைப் பயன்படுத்தியதன் பின்னர் இவர்கள் தேவையான அளவிற்கு வேட்டையாட முடிந்தது. அதனால் வேளாண்மையைக் கைவிட்டனர். காட்டெருமைகளை இவர்கள் விரும்பி வேட்டையாடுகின்றனர். இன்றும் வேட்டையில் பழைய முறைகளைக் கையாளுகின்றனர். காட்டெருமைகளுக்கு முன் மான்வேடமணிந்து அவற்றைக் கவர்ச்சி செய்து குழியில் தள்ளுவதும், எருமைகளைச் சுற்றி நெருப்பிட்டு அவற்றைப் பிடிப்பதும், குதிரைகளில் சென்று துரத்தி அம்பால் குத்தி இறக்கச் செய்வதும் அவர்களின் மரபு முறைகளில் சில, பெரும்பாலும் இறுதியில் குறிப்பிட்ட முறையின் மூலம் வேட்டையாடுகின்றனர். காட்டெருமை வேட்டை மூலம் உணவுத் தேவையை மட்டுமன்றி உடை, கூடாரப் போர்வை, மழைக்காக அணியும் மேற்சட்டை., காலுறை, கயிறு, படகு கட்டும் சட்டங்கள், குழந்தைகள் விளையாடும் கிலுகிலுப்பைகள் முதலான பல்வேறு பொருள்களையும் செய்துகொள்கின்றனர். வேட்டையாடப்பட்ட எருமையைக் கொன்றவர் மட்டுமன்றி ஒரு குழுவைச் சார்ந்த அனைவரும் பகிர்ந்துகொள்கின்றனர். மிகுதியாக உள்ள இறைச்சியை நெடு நாட்களுக்குப் பயன் படுமாறு பதப்படுத்தி வைத்துக்கொள்கின்றனர். தக்கோட்டாவினர் ஒரே குழுவிற்குள் மணந்து கொண்டாலும் இரத்த உறவினர்களை மணந்து கொள்வதில்லை. இன்றைய இளைஞர்கள் வேற்றுக் குழுவினரையும் மணந்துகொள்கின்றனர். செல்வம் மிகுந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணக்க அனுமதிக்கப்படுகின்றனர். இப்பெண்கள் அனைவரும் உடன்பிறந்தவர்களாகவும் இருக்கலாம். இவர்களிடையே செல்வமும் தகுதியும் குதிரையின் எண்ணிக்கையைப் பொறுத்ததாகும். ஒரு குழுவிற்குள் உள்ள ஒருவர் தம் நிலையை உயர்த்திக்கொள்ள இரண்டு முறைகளைக் கையாளுகின்றார். ஒரு முறையின்படி ஒருவர் அவரது குழுவிலிருந்து நான்கைந்து நாட்கள் பிரிந்து தலைமுதல் உச்சங்கால் வரை எருமைத் தோலால் போர்த்திக் கொண்டு இயல்நிலை கடந்த நிலைக்குச் சென்று கனவுகளையும் குறிசொல்லும் முறையையும் செய்து பார்க்கவேண்டும். இவரது கணிப்புகள் உண்மையாகும்போது இவர் அவரது குழுவினுள் போற்றத்தக்க வராகக் கருதப்படுகிறார். இரண்டாம் முறைப்படி. ஒருவர் வீரச் செயல்களைச் செய்து தம் நிலையை உயர்த்திக்கொள்ளலாம். இவர்களிடையே எழும் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் ஞாயிறு நடனம் (Sun Dance) பெரும்பங்கு வகிக்கிறது. அமெரிக்க இந்தியப் பழங்குடிகளுள் பலர் இந்நடனத்தைக் கொண்டுள்ளனர். இதற்கு இப்பெயர் வரக் காரணம் தக்கோட்டாவினர் ஆடும் முறையிலிருந்து தோன்றியதாகவும் இருக்கலாமென்பர் ஒருசில இனக்குழுவியலார். இந்நடனத்தின் போது இவர்கள் வானத்தைப் பார்த்தவாறே ஆடுகின்றனர். ஆண்டிற்கொரு முறை நடைபெறும் இந்நடனத்தின்போது அனைவரும் தவறாமல் கலந்து கொள்கின்றனர். ஒருசில குழுக்களுள் இந்நடனத்தில் பங்குபெற வாராதவர்கள் தண்டிக்கப்படுவர். ஆடுகளத்தின் நடுவில் ஒரு தூண் நடப்பட்டு அதற்குப் பல சடங்குகள் செய்து அதில் ஒரு கயிற்றைக் கட்டி மறுமுனையை ஒரு இரும்புக் கம்பியால் உடலில் கட்டிக் கொள்வர். அவரது சதை கிழியும்வரை ஆடிக்கொண்டேயிருப்பர். இவ்வாறு செய்யும்போது ஏற்படும் வேதனையும் வெளிவரும் இரத்தமும் ஆவிகளை மனநிறைவடையச் செய்யும் என்றும், மக்களிடையே ஒற்றுமை உணர்வு ஏற்படும் என்றும் நம்புகின்றனர். தக்கோட்டா இந்தியர்களின் பண்பாடு மாறி வருகின்றது. அண்டைப் பண்பாடுகளின் தாக்கம் பெருமளவு இவர்களின் வாழ்க்கைப் பாங்கை மாற்றியுள்ளது. தொன்மை அமெரிக்கத் திருச்சபைகள் தக்கோட்டாவினரின் மரபுவழியிலான நம்பிக்கைகளைக் கிறித்தவ நெறிகளுடன் இணைத்து அம்மக்களைக் கிறித்தவ சமயத்தோடு இணைக்க முயன்று வருகின்றன. அமெரிக்க அரசு பழங்குடி மக்களின் நலன்களைக் காப்பாற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. அவர்கள் மொழியிலேயே தொடக்கப் பள்ளிகளை அரசு நடத்துகிறது.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="தக்கோட்டா இந்தியர்"/> <section begin="தக்கோலம்"/> {{dhr}} <b>தக்கோலம்</b> தமிழ் நாட்டில் வடார்க்காடு மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரூர். வரலாற்றுச் சிறப்புடையது இது. காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அரக்கோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் உள்ளது. மலேசியாவிலும் தக்கோலம் என்ற ஓர் ஊரை பண்டைத் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர். அது தலைத் தக்கோலம் என்று கூறப்படுகிறது. இந்நகர் கி.பி.2 ஆம் நூற்றாண்டிளிருந்ததாகத் தாலமி<noinclude></noinclude> luv5cfzrt0ojaxuxdgpnle0bfkwso0x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/747 250 651388 1957638 2026-08-08T09:31:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்ற நிலவியல் ஆய்வாளர் கூறுகின்றார். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இந்தத் தக்கோலம் அதற்கு முன்பிருந்தே சிறப்புப் பெற்று விளங்கியுள்ளது என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தக்கோலம்|719|தகடூர்}}</noinclude>என்ற நிலவியல் ஆய்வாளர் கூறுகின்றார். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இந்தத் தக்கோலம் அதற்கு முன்பிருந்தே சிறப்புப் பெற்று விளங்கியுள்ளது என்று கருதுகின்றனர். பழங்கற்காலக் கருவிகள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. இங்கு கி.பி.-949 இல் நடைபெற்ற ஒரு போருக்குத் தக்கோலப் போர் என்பது பெயர். இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணன் கி.பி. 940-இல் அரசனானான். இவள் சோழ நாட்டைக் கைப்பற்ற கி.பி. 949 இல் சோழநாட்டின் மேல் படையெடுத்தான், அப்பொழுது கங்க மன்னனாக இருந்த இரண்டாம் பூதுகனும் பெரும்படையுடன் இராட்டிரகூட மன்னனுக்கு உதவினான். சோழ நாட்டை ஆண்ட முதலாம் பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தன் இவர்களை எதிர்த்துப் போர் செய்தான். தக்கோலத்தில் இரண்டு படைகளும் மோதிக் கொண்டன. இருபக்கத்திலும் பல்லாயிரம் வீரர்கள் உயிர் துறந்தனர். இந்நிலையில் கங்க மன்னனாகிய இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பொன்று யானையின் மேலிருந்து போர் புரிந்து கொண்டிருந்த அரசகுமாரனாகிய இராசாதித்தன் மார்பில் தைத்தது. இதனால் அரசகுமாரனாகிய இராசாதித்தன் விண்ணுலகை அடைந்தான். இராசாதித்தனை ‘யானை மேற்றுஞ்சிய தேவர்’ என்று குறிப்பிடுவதால் இவன் யானை மேல் வீற்றிருந்தபோது உயிர் துறந்திருக்சு வேண்டும் என்பது தெரிகின்றது. இதனால் இராட்டிரகூட மன்னன் வெற்றியை எய்தினான். தக்கோலத்தில் மூன்று பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளன. திருமாலின் கோயில் ஒன்று இடிபாடுகளுடன் காணப்படுகிறது. இக்கோயிலிலுள்ள கல்வெட்டில் இராசராச திருநாராயண விண்ணகர் என்று இக்கோயிலின் பெயர் குறிக்கப்படுகிறது. இது முதலாம் இராசராசனின் பெயராக இருப்பதால் இவனால் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. பாலீசுவரர் என்ற பெயரில் சிவன் கோயில் ஒன்று மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் இராசேந்திரன், விக்கிரமசோழன், இரண்டாம் இராசேந்திரன் ஆகியோரின் கல்வெட்டுகள் அவை. இரண்டாவது, சிவன் கோயில் இறைவனுக்குத் திருவூறல் மகாதேவர் என்றும், சலநாதீசுவரர் என்றும் இரண்டு பெயர்கள் காணப்படுகின்றன. விசயநகர மன்னர்களின் காலத்தில் இக்கோயில் ‘நந்திதீர்த்தம்’ என்று பெயர் பெற்றுள்ளது. இக்கோயில், வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 15-ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் முதலில் கங்க நாட்டிலிருந்ததாகவும் பிற்காலத்தில் இங்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இராசகேசரியின் கல்வெட்டுகளில் கங்க அரசன் இரண்டாம் பிருதிவிபதி இக்கோயிலுக்கு வழங்கிய தானங்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள பழமையான கல்வெட்டு ஒன்றில் ‘கோவிமலாதிந்தியா’ என்ற பெயர் காணப்படுகின்றது. இவன் பானவமிசத்தைச் சார்ந்த அரசனாக இருக்கலாம். முதலாம் ஆதித்தனின் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. முதலாம் இராசராசனின் காலத்தில் தக்கோலம் சத்திரிய சிகாமணிபுரம் என்றும், முதலாம் இராசாதிராசன் காலத்தில் இரட்டைபாடி கொண்டபுரம் என்றும், முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் வல்லப்புரம், குலோத்துங்க சோழபுரம் என்றும் இவ்வாறு சோழர்கள் காலத்தில் மாறிமாறிப் பெயர் பெற்றுள்ளது. விசயநகர அரசர்களின் காலத்தில் ‘வடமுடி கொண்ட சோழபுரம்’ என்ற பெயர் வழக்கிலிருந்துள்ளது. இக்கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், கும்பஞ்சரம், யாளிவரிகள், கூடு, தேவகோட்டச் சிற்பங்கள் ஆகியன முற்காலச் சோழர்களின் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.{{Right|<b>தி.சு.</b>}} <section end="தக்கோலம்"/> <section begin="தகடூர்"/> {{dhr}} <b>தகடூர்</b>: கடையெழுவள்ளல்களுள் ஒருவலும், சங்கப்புலவர் அவ்வையாருக்கு உண்டாரை நெடுநாள் வாழவைக்கும் அரும் நெல்லிக்கனியை ஈந்தவனுமான அதியமான் நெடுமான் அஞ்சியின் தலைநகர் தகடூர் ஆகும். தகடூர் நாடு எனப்பட்ட இந்நாட்டை அதியன் மரபினர், தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். பதிற்றுப்பத்திலும் இவ்வூர் தகடூர் என்றே குறிப்பிடப்படுகின்றது. இன்றைய தருமபுரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் தருமபுரியே பண்டைய தகடூர் ஆகும். பழங்காலத்தில் இது தகடை, தகட்டூர், தகடாபுரி எனப் பலபெயர்களால் வழங்கப்பட்டது. தகடு என்னும் சொல்லுக்குப் ‘பூவின் புற இதழ்’ என்னுமோர் பொருள் உண்டாகையால் அகவிதழைப் பாதுகாக்கும் புறவிதழ் போன்ற மதிலையுடைய ஊரென்னும் பொருள்பட இதற்குத் தகடூர் என்ற பெயர் இடப்பட்டது என்பர். மற்றும், தகடு என்பது உயரமின்றித் தகடாக அமைந்த மலையைக் குறிக்குமாதலின் அத்தகைய மலையைச் சார்ந்த ஊராதலின் அது இப்பெயர் பெற்றது எனவும் கூறுவர். மலையை அடுத்துள்ள ஊர் ஆகையால் இது முல்லை நில வளத்தைப் பெற்றிருந்ததுடன், வயல்களும் நிறைந்திருந்தது. {{nop}}<noinclude></noinclude> 0almwk6536g5zbsfj8bgpbedvnlf0h7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/748 250 651389 1957639 2026-08-08T09:44:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பதிற்றுப்பத்தில் எட்டாம்பத்தின் பாட்டுடைத் தலைவனான பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் தகடூரை அழித்தான் என்று தெரிகிறது. இவன் பெற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகடூர் யாத்திரை|720|தகர்த்தெறி கொள்கை}}</noinclude>பதிற்றுப்பத்தில் எட்டாம்பத்தின் பாட்டுடைத் தலைவனான பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் தகடூரை அழித்தான் என்று தெரிகிறது. இவன் பெற்றுள்ள ‘தகடூர் எறிந்த’ (பெருஞ் சேரல் இரும்பொறை) என்ற விருதிலிருந்து அது புலப்படும். இவ்வெற்றியினைப் போற்றுவதே ‘தகடூர் யாத்திரை’ என்லும் நூலாகும். குலோத்துங்கச் சோழன் காலத்தில் இவ்வூர் சோழ நாட்டிற்கு உட்பட்டிருந்தது எனத் தெரிகின்றது. பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனுடைய அரசியல் தலைவருள் ஒருவனான வீரசேகரக் காடவராயன் தகடூர்மீது படையெடுத்துச் சென்று அதனை முற்றிலும் அழித்தான் என அறியப்படுகிறது. அதன் பின்னரே இவ்வூர் தருமபுரி எனப் பெயர்பெற்றிருத்தல் வேண்டும்.{{Right|<b>சி.இரெ.</b>}} <section end="தகடூர்"/> <section begin="தகடூர் யாத்திரை"/> {{dhr}} <b>தகடூர் யாத்திரை</b>: அழிந்து போன தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூலின் சில செய்யுட்கள் புறத்திரட்டு நூலினாலும், தொல்காப்பியம், தக்கவாகப் பரணி முதலிய நூல்களின் பழைய உரைகளாலும் அறியப்படுகின்றன. இது, அதியமானுக்குரிய ‘தகடூர்’ மீது சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை படையெடுத்துச் சென்ற வரலாற்றினைக் கூறும் நூல். ‘தகடூர் மாலை’ எனப் புறத்திரட்டுப் பிரதிகளின் சில இடங்களில் இந்நூல் குறிக்கப்பெறும், இதனை இயற்றிய ஆசிரியர் பெயரும் வரலாறும் அறிதற்கு இயலவில்லை. ‘தகடூர்’ என்பது, இக்காலம் தருமபுரி மாவட்டத் தலைநகராகிய தருமபுரி என்னும் நகரினைக் குறிக்கும். இதனைக் கருநாடகப் பகுதியில் உள்ள ஓர் ஊர் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். பதிற்றுப்பத்தில் அரிசில் கிழாரால் சிறப்பிக்கப் பெறும், தகடூர் எறிந்த சேரமான் பெருஞ் சேரலிரும்பொறை, அதியமானுக்கு அண்ணன் ஆவன் என்னும் செய்தி, புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள, ‘காலவெகுளிப் பொறையர்கோன் நும்பியைச் சாலுந் துணையுங் கழறி’ என்னும் வெண்பாவினால் (புறத்திரட்டு: 776) பெறப்படுகிறது. இதனால், தகடூர் யாத்திரையும், பாரதம் போல அண்ணன் தம்பியரிடையே நிகழ்ந்த போர் வரலாற்றினைக் கூறும் நூலாகும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். உரைநடை மிகுந்தும், செய்யுள் எண்ணிக்கையில் குறைந்தும் இந்நூல் அமைந்தது என்னும் செய்தி ‘பாட்டிடை வைத்த குறிப்பினானும்’ என்னும் நூற்பாவிற்குப் பேராசிரியர் ‘பாட்டுவருவது சிறுபான்மையாகலின் அவை, தகடூர் யாத்திரை போல்வன’ என்று குறிப்பிட்டுள்ளமையால் (தொல் பொருள்.485. உரை) புலனாகிறது, மேலும், இவ்வரலாற்று நூலின் நிகழ்ச்சி அது நிகழ்ந்த காலத்தன்றிப் பிற்காலத்தே நூலாக்கப்பட்டது என்ற குறிப்பும் அவ்வுரைப் பகுதியில் காணப்படுகிறது. இந்நூலில் அமைந்த செய்யுள்கள் வெண்பாவும், ஆசிரியப் பாவுமாகும். தொல்காப்பியப் பொருளதிகார நச்சினார்க்கினியர் உசையிலும் (தொல் பொருள்: 63, 67, 68, 72.79 உரை), தக்கயாகப் பரணி உரையிலும் (தக்க. 641 உரை) இந்நூலின் செய்யுள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. யாத்திரை என்னும் வடசொல்லிற்குப் படையெடுத்துச் செல்லல் என்பது பொருள். அரசர்க் குரியனவாகக் கூறப்படும் நட்பாக்கல், பகையாக்கல் போர்மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டல் ஆகிய பண்புகளுள் போர்மேற்சேறல் என்னும் பண்பின் அடிப்படையில் இந்நூல் அமைந்துள்ளது. அவையடக்கம், நீத்தார் பெருமை, ஈகை, செங்கோன்மை, சொல்வன்மை, தூது, நாடு, புல்லறி வாண்மை, நிரைகோடல், நிரைமீட்சி, பகைவயிற் சேறல், பாசறை, வஞ்சினம், படைச் செருக்கு எயில்காத்தல், தானைமறம், குதிரை மறம், மூதின் மறம், இரங்கல் ஆகிய புறத்திரட்டின் புறத்துறை பற்றி அமைத்துள்ன அதிகாரங்களில் நாற்பத்து நான்கு செய்யுள்கள் இந்நூலிலிருந்து இணைக்கப்பட்டுள்ளன. இத்திரட்டு நூலில் இடம் பெறாத மூன்று பாடல்கள் தொல்காப்பிய நச்சினார்க்கினியருரையில் காணப்படுகின்றன.{{Right|<b>வீ.சொ.</b>}} <section end="தகடூர் யாத்திரை"/> <section begin="தகர்த்தெறி கொள்கை"/> {{dhr}} <b>தகர்த்தெறி கொள்கை</b>: உருவ வழிபாட்டிற்கு எதிராக கி.பி.8,9-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய இயக்கமே தகர்த்தெறி கொள்கை இயக்கம் (Iconoclasm) ஆகும். உரோமானியப் பேரரசர்கள் இவ்வியக்கத்தைத் தொடங்குவதற்குமுன் தமாசுவில் காலிபாக்கள் (Khalifs at Damascus) கிறித்தவர்களுக்கு எதிராக இவ்வியக்கத்தைத் தொடங்கியிருந்தனர். உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட சிலர் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் கடவுளின் உருவங்களைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து அதை மந்திரசக்தி கொண்ட மருந்தாக அருந்தினர். இதுபோன்ற மூடப் பழக்கவழக்கங்களால் ஆத்திரமடைந்த மூன்றாம் இலியோ என்னும் உரோமானியப் பேரரசன் (Leo III, A.D.716-741) கோவில்களில் உள்ள கடவுளின் உருவங்களை எல்லாம் தகர்த்தெறியும்படிதன் படைவீரர்களுக்கு உத்தரவிட்டான், தகர்த்தெறி கொள்கைக்கு (Iconoclastic Movement) வித்திட்டவளே இம்மன்னன் தான். அவன் உத்தரவுப்படி நாட்டில் உள்ள கடவுளின் உருவங்கள் எல்லாம் தகர்த் தெறியப்<noinclude></noinclude> ipyz1spg5ctuv6g6gfx19xnd2u05hzd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/749 250 651390 1957640 2026-08-08T09:53:41Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டன. அதனோடு நிற்காது உருவ வழிபாட்டிற்கு ஆதரவளித்த பாதிரிகள், துறவிகள் சன்னியாசிகள் ஆகியோரையெல்லாம் சித்திரவதை செய்து கொன்று குவித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகவமைதல்|721|தகவமைதல்}}</noinclude>பட்டன. அதனோடு நிற்காது உருவ வழிபாட்டிற்கு ஆதரவளித்த பாதிரிகள், துறவிகள் சன்னியாசிகள் ஆகியோரையெல்லாம் சித்திரவதை செய்து கொன்று குவித்தான். அதனால் போப்பாண்டவருக்கும் மன்னனுக்கும் மோதல் ஏற்பட்டது. கடவுள் சம்பந்தமான உருவங்கள், படங்கள், சின்னங்கள் ஆகியவற்றைப் போப்பாண்டவர் வைத்திருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தான். போப்பாண்டவர் மறுக்கவே அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தினான். இச்சமயத்தில் உருவ வழிபாட்டிற்கு ஆதரவளித்தவர் தூய யோவான் தமாசீன் (St. John Dama-scene, A.D.675-749) ஆவர். அவர் எழுதிய நூலின் வாயிலாகச் சடப்பொருள் கடவுளின் ஆவியைத் தாங்கியிருப்பதால், சடப்பொருளினால் ஆன உருவங்களின் மூலம் தெய்விக சக்தியுடன் தொடர்புகொள்ள முடியும் என்று போதித்தார். நான்காம் இலியோசக்கரவர்த்தி (Leo IV-A.D.775-780) உருவ வழிபாட்டினருக்குக் கொடுமை செய்யவில்லை. அதற்குக் காரணம் மகாராணி ஐரென் (Empress Irent) ஆவார். ஆனால் உருவ வழிபாட்டுக்காரர்களைக் கொடுமைப் படுத்துதல் மீண்டும் ஐந்தாம் இலியோ (Leo V.A.D.813-8202) இரண்டாம் மைக்கேல் (Michael II. A.D.820-829), தியோபிலசு (Theophilus,A.D.829-842) ஆகியோர்களின் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்தது. தகர்த்தெறி கொள்கை இயக்கம் பல உயிர்களைப் பலி கொண்டாலும் மூடப்பழக்க வழக்கங்களை முழுமையாக அகற்றியது. அரசு பாதிரியார்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக இயங்க முடிந்தது.{{Right|<b>அ.அ.ரா.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Martin, Edward J.,</b> A History of the Iconoclastic Controversy, New York, 1930. <section end="தகர்த்தெறி கொள்கை"/> <section begin="தகவமைதல்"/> {{dhr}} <b>தகவமைதல்</b>: மனிதர் ஒருவருக்கொருவர் அருகில் வசிப்பதால் மட்டுமே சமூக வாழ்க்கை அமையாது. பலவகைக் குழுக்களைச் சேர்ந்த மனிதர்கள் பேசி ஒருவரோடொருவர் கலந்து உறவாடி, பல செயல்களில் அல்லது பல சமூக இடைவினைச் செயற்பாடுகளில் ஈடுபடும்பொழுதுதான் சமூக வாழ்வு தொடங்குகிறது. இச்சமூக இடைவினைகள் பொதுவாகக் கூட்டுறவு (Co-operation), போட்டி (Competition), சண்டை (Conflict), தகவமைதல் (Accommodation). தன்மயமாதல் (Asimilation) முதலிய வடிவங்களில் நடைபெறுகின்றன. ஒரு நிலையான சூழ்நிலையானது எப்பொழுதும் இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்பாங்குகளைக் கொண்டிருக்கும். குறிப்பிட்ட சூழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை தகவமைதல் (Accommodation) எனப்படும். இது மனிதர்கள் தாங்களாகவே முயற்சி எடுத்துத் தங்களுக்குள்ளாகவே போட்டியையும் சண்டையையும் தவிர்க்கக் கையாளும் வழிமுறையாகும். இம்முறையால் அவர்கள் ஒருவகுக்கொருவர் பழியையும் பகையையும் வளர்த்து அழிந்து போவதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர். மனிதன் எப்பொழுதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க இயலாது. பிறருடன் ஒத்துச் செல்ல இயலாத சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ளுதல் தகவமைதலுக்கு வழிவகுக்கும். இது ஓரளவு நடைமுறைக்கு ஒத்துவருகின்ற வழியாகும். சூழ்நிலைக்கேற்ப இந்த ஏற்பாடு பலன் அளிக்கக்கூடும். சில வேளைகளில் இரு பிரிவினரிடையே போட்டி, சண்டை ஆகியவற்றைத் தவிர்த்துப் பின்னர் இருவருக்கிடையேயும் வேறுபாடுகள் மறைந்து நல்லதொரு புதிய தொடர்பு ஏற்பட வழி வகுக்கலாம். <b>தகவமைதல் முறைகள் (அ)வடிவங்கள்</b>: தகவமைதல் செயற்பாங்கை மனிதனுடைய வாழ்க்கையின். ஒவ்வொரு நிலையிலும் காணலாம். ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறக்கிறான் இருப்பினும் குழ்நிலைக்குத் தகுந்தாற்போய் தன்னை மாற்றிக்கொண்டு செயற்படுகின்றான். அதாவது சமூகத்திலுள்ள வாழ்க்கைமுறை, பொருளாதார வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் மாற்றத்திற்சேற்ப நடக்கிறான். தகவமைதல் தனிமனிதர்களுக்கும், குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டைகள் ஓய்ந்து இணக்கமான தன்மை ஏற்படும் சூழ்நிலையைக் குறிக்கிறது. இவ்வாறான சண்டைக் குழுவினருக்கிடையே ஏற்படும் இச்சமரச இணக்கத்தையே (Compromise) தகவமைதல் எனச் சமூகவியல் அறிஞர்கள் கூறுகின்றனர், ஆனால் பார்க்கு (Pak), சம்னர் (Sumner) முதலிய அறிஞர்கள் தகவமைதலை ‘விரோத மனப்பான்மையுள்ள கூட்டுறவு’ (Antagonistic Co-operation) என்றே கூறுகின்றனர். இவ்வாறு தகவமைதல் பல வேறுபட்ட வழிகளிலும் வடிவங்களிலும் இருப்பினும் பின்வருவன மிகமுக்கிய மானவையாகக் கருதப்படுகின்றன. <b>1) கட்டாயப்படுத்தல்</b>: தனி மனிதர்கள் அல்லது குழுவினர் தங்களுடைய உடல் பலத்தால் அல்லது மற்றச் சக்திகளால் பிறரை வற்புறுத்தும்போது வேறு வழியின்றித் தோல்வியுற்றவர்களிடம் தகவமைதல் ஏற்படுகிறது. கட்டாயப்படுத்தல் (Coercion) இரு வகைகளில் ஏற்படுகிறது. 1) நேரடியாகப் பலத்-<noinclude> <b>வா. க. 9-46</b></noinclude> bchlhuxjzvbwnoa5e53jfzts6axgk7y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/750 250 651391 1957641 2026-08-08T10:03:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தைப் பிரயோகிப்பது. 2) உள்ளத்தில் மறைமுகமாகப் பலத்தைப் பிரயோகிப்பது. ஒரு முதலாளி தன் தொழிலாளியைக் கட்டாயப்படுத்துதல் நேரிடையாகக் கட்டா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகவமைதல்|722|தகவமைதல்}}</noinclude>தைப் பிரயோகிப்பது. 2) உள்ளத்தில் மறைமுகமாகப் பலத்தைப் பிரயோகிப்பது. ஒரு முதலாளி தன் தொழிலாளியைக் கட்டாயப்படுத்துதல் நேரிடையாகக் கட்டாயப்படுத்தும் செயலுக்கு எழுத்துக்காட்டாகும், சிறுபான்மை மாநிலங்களில் பலவந்தமாகக் குறிப்பிட்ட மொழிக் கொள்கையைத் திணித்தல் மறைமுகமாகக் கட்டாயப்படுத்தும் செயலுக்கு எடுத்துக்காட்டாகும். <b>2) சமரச இணக்கம்</b>: சமமான பலம் வாய்ந்த இரு குழுக்கள் ஒருவருக்கொருவர் சில சலுகைகளைப் பெற்றுக்கொண்டும், சிலவற்றை விட்டுக்கொடுத்தும் அமைதிக்காக இணங்கிப்போகும்போது தகவமைதல் ஏற்படுகிறது. சமரச இணக்க (Compromise) முறையில் இரு குழுவினரும் பேசிப் பிணக்கைத் தீர்த்துக்கொள்ள வாய்ப்புண்டு. மேலும், நியாயத்திற்குக் கட்டுப்பட்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க முன்வருகின்றனர். உணர்ச்சி வசப்படாமல் பிறருடைய நிலையில் தன்னை நிறுத்திப் பார்த்து ஒரு சமாதான உடன்பாட்டுக்கு வழிவகுக்கும் முறை இதுவாகும். நிருவாகத்தினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான தகராறுகள் இரு தரப்பினரிடையேயும் ஏற்படுகின்ற நியாய உணர்வு காரணமாகத்தீருவது இதற்கு எடுத்துக்காட்டாகும். <b>3) நடுவர் தீர்ப்புக்கு விடுதலும் இணக்கப்படுத்தலும்</b>: நடுவர் தீர்ப்புக்கு விடுதல் (Arbitration) என்ற முறையில் இரு குழுவினரிடையே சண்டை ஏற்படும்போது மூன்றாமவர் அல்லது குழுவினரின் தலையீட்டால் தகவமைதல் ஏற்படும். மூன்றாம் குழுவினரின் முடிவிற்கு, சண்டையிடும் இரு குழுவினரும் கட்டுப்பட வேண்டும். சண்டையிடும் இரு குழுவினரும் தங்களுக்குள் நல்லதொரு முடிவைக் காணவியலாத நிலையில் ஒரு நடுவரைக் கொண்டு தீர்வு காண்பது நடுவர் தீர்ப்பு எனப்படும். அரசாங்கமோ, பலம் பொருந்திய ஓர் அமைப்போ நடுவரைச் சூழ்நிலைக்குத் தக்கவாறு நியமிக்கக் கூடும். இரு குழுவினரும் அவர் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளலாம். பொதுவாக இம்முறை தொழிற்றுறைத் தகராறுகளில் அதிகமாகக் பயன் படுத்தப்படுகின்றன. இணக்கப்படுத்தல் (Conciliation) என்ற முறையில் மூன்றாம் குழு (நடுவர் குழு) எந்தவித முடிவோ, கட்டாயமோ செய்வதில்லை. சண்டையைத் தவிர்ப்பதற்குக் சில கருத்தேற்றங்களை (Suggestions) மட்டுமே முன்வைக்கிறது. இக்கருத்தேற்றங்களை ஏற்பதும் மறுப்பதும் சண்டையிடும் இரு குழுக்களின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். முறை தொழிலாளிகளின் குறைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கிறது. <b>4) சகிப்புத்தன்மை</b>: இம்முறையில் சாதாரண ஏற்பாடு எதுவும் இல்லை. அடிப்படையான வேறுபாடுகள் தீர்த்து வைக்கப்படுவதில்லை. இங்கு வெளிப்படையான சண்டை தவிர்க்கப்படுகிறது. இதில் இரு குழுவினரும் ஒருவரையொருவர் தங்கள் நிலையைப் புரிந்துகொண்டு ஒருவர் மற்றவரின் நோக்கத்தை அறித்து, வேறுபாடுகளைப் பொறுமையாகப் பொறுத்துச் செல்கின்றனர். பகை உணர்வு கொண்ட இரு சாதி அல்லது மதத்தினரிடையே இன்று வளர்ந்து வரும் ஒருவிதமான சகிப்புத்தன்மை (Tolerance) இதற்கு எடுத்துக்காட்டாகும். <b>5) கருத்து மாற்றம்</b>: எதிர்க் குழுவினரின் கொள்கைகள், கருத்துக்கள் சரியென்று கருதும்போது ஒரு குழுவினர் தங்கல் கொள்கைகளையும் கருத்தையும் மாற்றிக்கொண்டு எதிர்க் குழுவினருடன் சேர்ந்து விடுவது கருத்து மாற்றம் (Conversion) எனப்படும். அரசியல், மதம் ஆகிய துறைகளில் அடிக்கடி ஏற்படுகின்ற மாறுதலை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். <b>6) அறிவார்ந்த விளக்கம்</b>: தன்னை நியாயப்படுத்துவதற்கான சமாதானக் காரணங்களைக் கூறுவது, அறிவார்த்த விளக்கத்தின் (Rationalization) மூலம் தகவமைதல் ஏற்படச்செய்தல் ஆகும். அதாவது தன்னிடமுள்ள உண்மையான குறைகளை ஒத்துக்கொள்வதற்கு மாறாக தன்னுடைய நடத்தைக்கான காரணங்களை விளக்கி நியாயமென நிரூபித்தல் இதுவாகும். தனி மனிதன் மட்டுமன்றி அனைத்துக் குழுவினரும் தங்களுடைய செயலை நியாயமெனக் காட்டவே முயற்சி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக தேசநாடுகள் செருமனியை அழிக்கத் திட்டம் வகுத்ததாலேயேதான் இரண்டாம் உலகப்போரைத் தொடங்க நேரிட்டது எனச் செருமனி தன்னை நியாயப்படுத்துகிறது. அதுபோலவே அமெரிக்காவும் எதேச்சாதிகார (Facism) அரசுகளிடமிருந்து உலகத்தை விடுவிப்பதற்காகவே போரில் பங்குகொண்ட தாகக் காரணம் கூறுகிறது. <b>7) மேல்நிலை, கீழ்நிலை</b>: சமூகத்திலுள்ள மேல்நிலை (Superordination), கீழ்நிலை (Subordination) என்ற அடிப்படையிலே பொதுவாகத் தகவமைதல் அமைகிறது. அனைத்துச் சமூகத்திலுமுள்ள நிலையமைப்புகளில் இதுபோன்ற தகவமைதலே ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், குழந்தைகள் ஆகியோருக்கிடையிலான உறவுகள் இந்த அடிப்படையிலேயே அமைகின்றன. இவ்வாறே சமூகம் அல்லது பொருளாதார உறவுகள் இந்தமேல் நிலை, கீழ்நிலை அடிப்படையிலேயே அமைகின்றன.<noinclude></noinclude> hd8ddokxrvf8w1lv5rq339s4106kk5a