விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.16
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/74
250
181118
1958825
535961
2026-08-20T09:35:55Z
Sruthi Harishkumar
16826
Verified
1958825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi Harishkumar" /></noinclude>72 ஆத்மாவின் ராகங்கள் பத்தர். சிரித்துக் கொண்டே டவராவால் மூடி வைத்திருந்த வெள்ளித் தம்ளரை எடுத்துப் பாலை ஆற்றத் தொடங்கிய அவரிடம்,
"பத்தரே! நான் பால் குடித்துவிட்டு வந்தாச்சு. நீங்க வேறே கொண்டு வந்திருக்கீங்களே?" - என்று மறுத்தான் ராஜாராமன்.
"பரவாயில்லை தம்பீ! ஆயிரமிருந்தாலும் கடைப்பால் வீட்டுப் பால் ஆயிடுங்களா?" - என்று சொல்லிக் கொண்டே பாலை ஆற்றி அவனிடம் கொடுத்தார். கையில் வாங்கிய பால் கள்ளிச் சொட்டாய்ப் பாதாம்கீர் நிறத்துக்கு இருந்தது. பச்சைக் கற்பூரமும் குங்குமப்பூவும் கமகமவென்று மணந்தன. அவன் பாலைக் குடித்தான். பால் அமிர்தமாயிருந்தது.
"ஜெயில்லே கட்டாந் தரையிலும் மொரட்டுத் கித்தான்லியும் படுத்துப் படுத்துச் சங்கடப்பட்டிருக்கீங்க. நீங்க நல்லாத தூங்குங்க தம்பி! சும்மா அலையப்படாது. உடம்பையும் கவனிச்சுக்கணும். உங்களைக் கவனிக்க இப்போ உங்கம்மா கூட இல்லை."
"அது சரி! புறப்பட்டுடாதீங்கள் பத்தரே! நான் உங்க கிட்டப் பேசணும்னேனே?"
"என்ன பேசணும்? எல்லாம் கார்த்தாலே பேசிப்பம்! இப்ப தூங்குங்க தம்பீ"
"இல்லை? அஞ்சு நிமிஷம் இருந்திட்டுப் போங்க. உங்க கில்ட் கடை வருமானம் என்னன்னு எனக்குத் தெரியும் பத்தரே, நீங்க கடனோ உடனோ வாங்கி அதிகமாச் சிரமப்பட்டிருக்கிங்கன்னு தெரியுது. நாற்காலி, மேஜை, அலமாரி எல்லாம் வாசகசாலைக்கு வாங்கிப் போட்டிருக்கீங்க. ரெண்டு மூணு தரம் வேலூர் வந்திருக்கீங்க; கடைசித் தடவை வந்தபோது எங்கிட்டக் கொஞ்சம் பணமும் கொடுத்தீங்க. முத்திருளப்பன் குடும்பத்துக்கு வேற<noinclude></noinclude>
nvwdkuk9urliv6bsvr9c3vw1j9kimyf
1958859
1958825
2026-08-20T09:42:07Z
Sruthi Harishkumar
16826
/* மேம்படுத்த வேண்டியவை */ Verified
1958859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi Harishkumar" /></noinclude>72 ஆத்மாவின் ராகங்கள் பத்தர். சிரித்துக் கொண்டே டவராவால் மூடி வைத்திருந்த வெள்ளித் தம்ளரை எடுத்துப் பாலை ஆற்றத் தொடங்கிய அவரிடம்,
"பத்தரே! நான் பால் குடித்துவிட்டு வந்தாச்சு. நீங்க வேறே கொண்டு வந்திருக்கீங்களே?" - என்று மறுத்தான் ராஜாராமன்.
"பரவாயில்லை தம்பீ! ஆயிரமிருந்தாலும் கடைப்பால் வீட்டுப் பால் ஆயிடுங்களா?" - என்று சொல்லிக் கொண்டே பாலை ஆற்றி அவனிடம் கொடுத்தார். கையில் வாங்கிய பால் கள்ளிச் சொட்டாய்ப் பாதாம்கீர் நிறத்துக்கு இருந்தது. பச்சைக் கற்பூரமும் குங்குமப்பூவும் கமகமவென்று மணந்தன. அவன் பாலைக் குடித்தான். பால் அமிர்தமாயிருந்தது.
"ஜெயில்லே கட்டாந் தரையிலும் மொரட்டுத் கித்தான்லியும் படுத்துப் படுத்துச் சங்கடப்பட்டிருக்கீங்க. நீங்க நல்லாத தூங்குங்க தம்பி! சும்மா அலையப்படாது. உடம்பையும் கவனிச்சுக்கணும். உங்களைக் கவனிக்க இப்போ உங்கம்மா கூட இல்லை."
"அது சரி! புறப்பட்டுடாதீங்கள் பத்தரே! நான் உங்க கிட்டப் பேசணும்னேனே?"
"என்ன பேசணும்? எல்லாம் கார்த்தாலே பேசிப்பம்! இப்ப தூங்குங்க தம்பீ"
"இல்லை? அஞ்சு நிமிஷம் இருந்திட்டுப் போங்க. உங்க கில்ட் கடை வருமானம் என்னன்னு எனக்குத் தெரியும் பத்தரே, நீங்க கடனோ உடனோ வாங்கி அதிகமாச் சிரமப்பட்டிருக்கிங்கன்னு தெரியுது. நாற்காலி, மேஜை, அலமாரி எல்லாம் வாசகசாலைக்கு வாங்கிப் போட்டிருக்கீங்க. ரெண்டு மூணு தரம் வேலூர் வந்திருக்கீங்க; கடைசித் தடவை வந்தபோது எங்கிட்டக் கொஞ்சம் பணமும் கொடுத்தீங்க. முத்திருளப்பன் குடும்பத்துக்கு வேற<noinclude></noinclude>
rn85o5p2nqtoj7cb181d0rj8cqpzv4r
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/75
250
181120
1958920
535962
2026-08-20T09:56:36Z
Sruthi Harishkumar
16826
/* மேம்படுத்த வேண்டியவை */ Verified
1958920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi Harishkumar" /></noinclude>நா. பார்த்தசாரதி 73 மாசா மாசம் குடுத்திருக்கீங்களே. வாசக சாலை வாடகையும் நீங்க தான் குடுத்திருக்கணும். இத்தனை பெரிய செலவு உமக்குத் தாங்காதுங்கிறது எனக்குத் தெரியும்; நீரும் பெரிய குடும்பஸ்தர்...'
"அதுக்கொன்ன இப்ப? சாவகாசமாய்ப் பேசிக்குவமே?"
"வேலூர்லே நான் கேட்டப்பவே இப்படித்தான் பதில் சொல்லித் தட்டிக் கழிச்சீரு? தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதான் பத்தரே! விவரம் சொன்னீர்னா நல்லது.”
பத்தர் சிரித்தார். பதில் சொல்லத் திணறினாற் போலச் சிறிது நேரம் தயங்கினார்.
"நம்ம சிநேகிதம் நீடிக்கணும்னா நீங்க இதைச் சொல்லனும்..."
"தூங்குங்க - தம்பீ? இப்ப இதுக்கென்ன அவசரம்? விடிஞ்சு பேசிக்கப்படாதா?" என்று மழுப்ப முயன்றார். அவன் விடவில்லை.
"நான் நிம்மதியாகத் தூங்கணும்னா நீங்க இதுக்குப் பதில் சொல்லியாகணும் பத்தரே?"
பத்தர் மேலும் சிறிது நேரம் தயங்கினார்.
"இதிலே தயங்கறதுக்கு என்ன இருக்கு?"
"சொன்னா, உங்களுக்குக் கோபம் வருமோன்னுதான் பயமாயிருக்கு தம்பி! மதுரத்துக்கு ஏதாச்சும் தகவல் சொல்லனுமான்னு வேலூர்லே கேட்டப்புவே உங்களுக்கு கோபம் வந்திச்சு?"
"அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் இப்ப சொல்லிக் காட்டரு?"<noinclude></noinclude>
q79r6n61f8o8a9qpsbuqenxu6kdlged
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/76
250
181122
1958939
535963
2026-08-20T10:04:27Z
Sruthi Harishkumar
16826
/* மேம்படுத்த வேண்டியவை */ Verified
1958939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi Harishkumar" /></noinclude>74 ஆத்மாவின் ராகங்கள்
"சம்பந்தம் இருக்கிறதினாலேதான் பயப்பட வேண்டி யிருக்கு. உபகாரம் பண்ண வந்த தேவதை போல் அந்தப் பெண்ணுதான் வலுவிலே வந்து உபகாரம் பண்ணிக் கிட்டிருக்கு. அதுக்கு நீங்க ஒரு தெய்வத்தைப் போல. சதா உங்களையே நெனைச்சு அது உருகிட்டிருக்கு..."
"போதும் நிறுத்தும்! ஒரு தேவடியாளுடைய உபகாரத்திலே நாம இந்தத் தேசத்தைக் காபபாதத வேண்டாம்."
"நீங்க இந்த வார்த்தையைச் சொல்லக்கூடாது, தம்பீ! மத்தவங்க சொல்லலாம்; ஆனா, நீங்க சொல்லக் கூடாது. காந்தியையும், அஹிம்சையையும், சத்தியத்தையும் நம்பறவங்க இப்பிடி உதாசீனமாப் பேசப்படாது. கடவுள் மனிதனைத்தான் படைச்சார்- மனிதனோ ஜாதிகளைப் படைத்து விட்டான்'னு காந்தி நெனைக்கிறாரு. மனிதத்தன்மை உள்ளவங்க, மனிதத் தன்மை இல்லாதவங்கன்னு உலகத்திலேயே ரெண்டு ஜாதிதான் இருக்கு."
அவருடைய வார்த்தைகள் அவன் இதயத்தைத் தாக்கின. இளமைத் துடிப்பிலே பேசிய பேச்சுக்காக வருந்தித் தலைகுனிந்தான் ராஜாராமன். பத்தருக்குப் பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை அவனுக்கு. அவர் காந்தியின் பேரை எடுத்ததும் அவனுக்குத் திட்ட வரவில்லை.
"நீங்க கைதான அன்னிக்கி உங்களைக் கோவில்லே பார்த்துதாம். கோவிலிலேருந்து வெளியிலே வர்ரப்ப உங்களை விலங்கு போட்டுப் போலீஸ்காரங்க இழுத்துட்டுப் போறதையும் பார்த்துதாம். என்னை ஏதோ நகை வேலை செய்யறதுக்காகக் கூப்பிடறாப்ல கூப்பிட்டு, இத்தனையும் சொல்லி அழுதிச்சு. நீங்க கைதானதே அது சொல்லித்தான் எனக்குத் தெரியும். கீழவாசலுக்கு ஓடி வந்தேன்; பார்க்க விடமாட்டேனுட்டாங்க. அப்புறம் தான் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிவந்தேன். அங்கேயும் பேசமுடியலை.<noinclude></noinclude>
mu09tdkji6qs04ng7jcib19ioghhizj
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/110
250
181190
1958760
535997
2026-08-20T09:06:13Z
Naren karthik Ragunathan
16828
/* மேம்படுத்த வேண்டியவை */
1958760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Naren karthik Ragunathan" /></noinclude>108 ஆத்மாவின் ராகங்கள்
மதுரம் கண்களில் நீர் தளும்ப நின்று கொண்டிருந்தாள் - இருளில் மின்னல் அழுது கொண்டு நிற்பது போல.
"இந்தப் பாதங்களைக் கைகளால் பிடிக்க உனக்கு என்ன யோக்கியதை?"
"முதல் முதலாக இந்தப் பாதங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் புஷ்பங்களை அர்ச்சித்தவள் நான்தான்..."
"இருக்கலாம்!ஆனால்- ஜமீன்தார்களைத் திருப்திப் படுத்துகிறவர்களை நான் பார்க்கவே வெட்கப்படுகிறேன்..."
"என்னுடைய கைகளால் நான் இத்தப் பாதங்களைப் பற்ற முடியாமல் போகலாம். ஆனால், மனத்தினால் இடைவிடாமல் நான் இந்தப் பாதங்களைப் பற்றுவதை நீங்கள் தடுக்க முடியாது..."
-இருளில் அவளுடைய விசும்பல் ஒலி ஒரு தேவதை மிகவும் சோகமான ராகத்தை முணுமுணுப்பதுபோல் இருந்தது. சிறிது நேரம் ஒன்றும் பேசாமலிருந்த பின் மெளனமாக அந்தப் புடவைப் பொட்டலத்தை எடுத்து அவள் பக்கமாக நகர்த்தினான் அவன்.
கைகளால் அதை அவன் கொடுக்காமல் தரையில் நகர்த்தியது அவள் மனத்திற்கு வருத்தத்தை அளித்தது. தான் கொடுத்திருந்த மெத்தை, தலையணைகளை உபயோகப் படுத்தாமல், அவன் தரையில் பாயை விரித்துப் படுத்திருப்பதையும் அவள் கவனித்தாள்.
"என் மேல் கோபப்படுங்கோ! வேண்டாம்னு சொல்லலை! ஆனா, அதுக்காக வெறுந் தரையிலே படுத்துக்காதீங்க..."
அவன் பதில் சொல்லாமல் இருக்கவே, அவள் மெத்தையை எடுத்துப் பாயின் மேல் விரித்தாள். தலையணைகளையும் நேரே எடுத்துப் போட்டுவிட்டு ஒதுங்கி நின்றாள்.<noinclude></noinclude>
6l1u33hozjeaqmqyzbfgcuj58vka1ow
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/112
250
181194
1958806
535999
2026-08-20T09:29:27Z
Naren karthik Ragunathan
16828
/* மேம்படுத்த வேண்டியவை */
1958806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Naren karthik Ragunathan" /></noinclude>110 ஆத்மாவின் ராகங்கள் என்று நடுநடுவே நினைவு வரும் போதெல்லாம் காரியங்களின் பரபரப்பில் மூழ்கி அதை மறக்க முயன்றான் அவன்.
அவன் கமிட்டி அலுவலகத்துக்கு வந்து தங்கிவிட்ட மறுநாளைக்கு மறுநாள் இரவு எட்டுமணி சுமாருக்கு ரத்தின வேல் பத்தர் அவனைத் தேடி வந்தார். அவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியாதபடி மிகவும் கவலை யாயிருப்பதாகத் தெரிந்தது. அவர் வந்தபோது அவனும், இன்றும் ஐந்தாறு தேசியத் தொண்டர்களுமாக அமர்ந்து தோரணத்துக்காக வர்ணத் தாள்களைக் கத்தரித்து ஒட்டிக் கொண்டிருந்தார்க ள். அதனால் அவன் அவரைக் கண்டவுடனேயே எழுந்து சென்று பேசமுடியவில்லை. 'வாங்க பத்தரே 'என்று ஒரு வார்த்தை சொல்ல முடிந்தது. பத்தரும் சும்மா உட்காராமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு கொஞ்சம் வேலை செய்தார். ஒரு குறிப்பிட்ட காரியமாக ராஜாராமனை மட்டும் தேடிவந்தது போல் காண்பித்துக் கொள்ளக் கூசியது அவர் மனம். சிறிது நேரம் அவர்களோடு வேலை செய்து விட்டு "உங்கிட்டத் தான் கொஞ்சம் பேசனும் தம்பீ" என்று சொல்லி ராஜாராமனிடம் சைகை காட்டி அவனை வெளியே கூப்பிட்டார் பத்தர்.
ராஜாராமன் பசை அப்பியிருந்த கையைக் கழுவித் துடைத்துக் கொண்டு அவரோடு வெளியே வந்தான்.
"ஏதோ கோவிச்சுக்கிட்டு வந்துட்டீங்க போல் இருக்கு..."
"........"
"பாவம் அது ரொம்ப சங்கடப்படுது! இப்ப நான் திரும்பிப் போயி ரெண்டு வார்த்தை நீங்க நல்லபடியாச் சொன்னீங்கன்னு காதிலே போட்டாத்தான் அது சாப்பிட உட்காரும்..."
அவர் சொல்வதெல்லாம் - அவருடைய வாயிலிருந்து வருவதற்கு முன்பே அவனுக்குப் புரிந்தவைதான்.<noinclude></noinclude>
go22rlmkacoa3j1sg6igvnpsa0ll60l
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/138
250
181246
1958832
536025
2026-08-20T09:37:45Z
Juleemargret
16798
/* மேம்படுத்த வேண்டியவை */
1958832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Juleemargret" /></noinclude>136 ஆத்மாவின் ராகங்கள்
நாற்றங்கள் சுற்றிச் சுற்றி வரும். அது தூக்கத்தைக் கெடுத்தது ,நோய்களை உண்டாக்கியது.
முப்பது கைதிகளின் குறட்டை, உளறல், கனவு அரற்றல், இருமல், செருமல் இவைகளுக்கிடையே இரவு நரகமாகக் கழிந்து கொண்டிருந்தது. முறையான வார்டர்கள் கடுமையில் சிறிதும் குறைந்தவர்களில்லை. கைதிகளிலேயே விசுவாசமுள்ள கைதிகளிலிருந்து பொறுக்கி நியமித்த 'கன்விக்ட் வார்டர் யாராவது வந்தால் சில சமயம்
கருணையாக நடந்து கொள்வது உண்டு. கிரிமினல் கைதிகள் பெரும்பாலோர் கூட இருந்ததனால் அவர்களோடு இருந்த பாவத்துக்காகச் சத்தியாக்கிரகிகளுக்கும், கதவைத் திறக்காமலே சந்து வழியே ஆகாரத்தைக் கொடுக்கும் 'ஸபாலிடரி கன்ஃபைன்மென்ட் முறை கடலூரில் கடைப்பிடிக்கப்பட்டது. சில சத்தியாக்கிரகிகள் 'ஸாலிடரி' - கன்ஃபைன்மென்ட் - முறையை எதிர்க்கவும் செய்தனர். ஆனால் பயன் ஒன்றும் உடனே விளையவில்லை.
முதன் முறை அவனைப் பார்க்க வந்ததைப் போலவே பத்தரோ முத்திருளப்பனோ இரண்டு மாதத்துக்கு ஒரு முறை தவறாமல் கடலூருக்கு வந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருந்தது. தேசத்திற்காக விரும்பி அடைந்த தண்டனை இது என்ற பெருமையோடு கடலூரில் நாட்களை ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிக் கழித்துக் கொண்டிருந்தான் ராஜாராமன். கடலூர் சிறையில் உணவு முறை மிகமிக மோசமாயிருந்ததனால் கடுப்பு அடிக்கடி வந்தது. கல்லைவிடக் கடுமையான உண்டைக் கட்டிகள் வழங்கப்பட்டன. சிறை வைத்தியர் உணவைவிட மோசமான மருந்துகளைக் கொடுத்ததனால் வைத்திய உதவியும் பயனளிக்கவில்லை. ஒவ்வொரு திங்கள் கிழமையும் சிறை மைதானத்தில் நடைபெற்ற கைதிகளின் 'பரேட்'டின் போது ஒவ்வொரு கைதியும் தன் குறைகளை அதிகாரியிடம் கூறலாம் என்றிருந்தாலும், அப்படிக்<noinclude></noinclude>
20463cx8yv1w4v0w8b9vp57v1tgrvtf
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/139
250
181248
1958917
536026
2026-08-20T09:54:56Z
Juleemargret
16798
/* மேம்படுத்த வேண்டியவை */
1958917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Juleemargret" /></noinclude>நா. பார்த்தசாரதி 137
கூறப்பட்ட குறைகளும் அதிகாரிகளால் அலட்சியமே செய்யப்பட்டன.
அவன் கடலூர் சிறைக்கு வந்த சிறிது காலத்திற்குப் பின்பு முத்திருளப்பனும், பத்தரும் அவனைச் சந்திக்க வந்திருந்த ஒரு சமயத்தில்தான், மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை அவர்கள் மூலமாக அவ்வப் போது ஏதாவது தகவல் சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தான் அவன். அவளும் ஏதாவது கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தாள். கடலூர் சிறையில் அவனுடைய உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மார்புக் கூடு பின்னித் தெரிவது போல் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டான் அவன். குளிப்பதற்கும் தண்ணிரை உபயோகப்படுத்துவதற்கும் அதிகக் கடுமையான நிபந்தனைகள் இருந்தன அங்கே. படுக்க விரிப்பு வசதிகள் அறவே இல்லை. முழங்கையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு அப்படியே தூங்க வேண்டியதுதான். மலஜல நாற்றமும், முடைவீச்சும், அழுக்குத் துணிகளின் வாடையுமாக ஒவ்வொரு நாளும் அருவருப்போடு கழிக்க வேண்டியிருந்தது.
வேலூரில் செய்தது போல பாரதி பாடல் வகுப்புக்கள் நடத்தவோ, அடிக்கடி ஒன்று சேர்ந்து, எல்லாரும் ஒருமுகமான மனத்துடன் பிரார்த்தனைக் கீதங்கள் இசைக்கவோ கடலூர் ஜெயிலில் வாய்ப்புக்கள் இல்லை. மன ஆறுதலோ, நிம்மதியோ கிடைக்க முடியாத காராக் கிருக வாசமாகவே இருந்தது அது.
மனத்தில் தனிமை உறுத்திய ஒரு பின்னிரவில் நீண்ட நேரம் தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டுவிட்டுச் சிறிது கண்ணயர்ந்த அவன் ஒரு சுகமான கனவு கண்டான். மதுரம் கனவில் சர்க்கா நூற்றுக் கொண்டே 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' என்று பாடுகிறாள். அவன் அருகே அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான் . நேரம் போவதே தெரியவில்லை.<noinclude></noinclude>
msm393c49p6am6ixgamlaa2kjgv98nb
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/160
250
181284
1958767
536047
2026-08-20T09:14:03Z
~2026-45348-60
16884
Agree
1958767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2409:40F4:201C:C214:8000:0:0:0" /></noinclude>158. ஆத்மாவின் ராகங்கள் டனுப்பிப் பேசினாள். ரத்தினவேல் பத்தரும் கூட இருந்தார்.
அப்போது, 'மங்கம்மா எல்லாம் சொன்னா! நான் சாகறதுக்
குள்ள அந்த வாசகசாலைப் பிள்ளையாண்டானிடம் மது
ரத்தைக் கையைப் பிடிச்சு ஒப்படைச்சுடனும். கலியாணம்னு
நான் வற்புறுத்தலை. எம் பொண்ணை ஒப்படைச்சுக்
'காப்பாத்து அப்பா!'ன்னு சொல்லிட்டாக் கூட அப்புறம்
நிம்மதியா மூச்சை விடுவேன்.'
தனபாக்கியம் இதைத் தன்னைக் கூப்பிட்டு ஏன் சொல்கிறாள் என்று முதலில் பிருகதீஸ்வரன் தயங்கினார்.
'தம்பிக்குத் துணையா கூட இருக்கிறவங்களிலே நீங்க தான் வயசு மூத்தவங்க. அதான் பெரியம்மா உங்களைக் கூப்பிட்டுச் சொல்றாங்க. தப்பா நினைக்காதீங்க ஐயா,"என்று பத்தர் அதை விளக்கினார். அதுதான் சமயமென்று, 'இத்தக் கல்யாணத்தை நான் முடிச்சு வைக்கறேன். ஆனா அதுக்குப் பதிலா நீங்க ஓர் உபகாரம் பண்ணனுமே பெரியம்மா!' என்று சிரித்துக் கொண்டே மாந்தோப்பு நிலத்தைப்பற்றி ஆரம்பித்தார் பிருகதீஸ்வரன். அவள் கூறிய பெருந்தன்மையான பதில் அவரை வியப்பில் ஆழ்த்தியது.
'தாராளமா எடுத்துக்குங்க. சந்தோஷத்தோட பத்திரம் எழுதித் தரச் சொல்றேன்' என்றாள் தனபாக்கியம். ராஜாராமனின் சபதம் நிறைவேற வேண்டியதைப் பற்றியும் பிருகதீஸ்வரன் அவளிடம் கூறினார். அதற்கும் அவள் சம்மதித்தாள். தனபாக்கியத்துக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை அவருக்கு. .
'ஏதோ நீங்க பெரியவங்க வாக்குக் கொடுத்தாச் சரிதான். எங்க சாதித் தொழில்லே விட இஷ்டமில்லே. நானும் அப்படி வாழலே, ஜமீன்தார் கெளரவமா என்னை வச்சிருந்தார். கெளரவம்ாப் பெத்தேன்; வளர்த்தேன். மறுபடி இந்த நரகத்திலே போய் விழுந்துடாமே கெளரவமா ஒருத்தன் கையிலே ஒப்படைச்சுட்டுச் சாகணும். நாகமங்கலம் ஜமீன்தாருக்குப் பொறந்த பொண்ணு ஒண்ணாம் நம்பர்ச்<noinclude></noinclude>
erixlxo5vv8pd466rre64nklkzulybd
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/210
250
181334
1958790
536094
2026-08-20T09:27:04Z
Sadiqbasha.18
16804
/* மேம்படுத்த வேண்டியவை */ மெய்பார்க்கப்பட்டது
1958790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sadiqbasha.18" /></noinclude>208 - ஆத்மாவின் ராகங்கள் நீர் நெகிழத் தெரிவித்தார் பிருகதீஸ்வரன். சில சமயங்களில் தாம் யாத்திரை செய்து கொண்டிருந்த ஊர்களில் வசூல் செய்த தொகையைச் சுவாமி விலாட்சணானந்தர் என்பவர் ஆசிரமத்துக்கு அவ்வப்போது அனுப்பி உதவியதாகவும் தெரிந்தது. அவற்றை எல்லாம் கேட்ட போது பிருகதீஸ்வரனும் நண்பர்களும் ஆசிரமத்தை எவ்வளவு சிரமப்பட்டு நடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்த்து. -
'வ.வே.சு. ஐயரின் ஆசிரமத்தில் இருந்த ஆத்ம பலமும் தாஸரின் சாந்தி நிகேதனத்திலிருப்பது போன்ற கலாசார பலமும், மகாத்மாவின் சபர்மதியில் இருந்த புனிதத் தன்மையும் பொருந்தியதாக இது வளர வேண்டுமென்று ஆசைப்பட்டு இத்தனை நாள் கட்டிக்காத்துவிட்டேன் ராஜா போனமாதம் வடக்கே இருந்து ஒரு குஜராத்தி தேசபக்தர் இங்கே இந்த ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். அவர் என்ன சொன்னார் தெரியமா? எல்லாவிதத்திலும் இதுவும் சபர்மதி ஆசிரமத்தைப் போன்ற சூழ்நிலையிலேயே அமைந்திருக்கிறது. அதே போல் அமைதி, அதே போல் நதிக்கரை, அதேபோல் இயற்கைச் சூழ்நிலை, எல்லாம் வாய்த்திருக்கிறது என்று புகழ்ந்தார் அவர் நாளடைவில் இதை இப்படியே ஒரு சுதேசிப் பல்கலைக் கழகமாக ஆக்கிவிட வேண்டும்' என்று உற்சாகமாகக் கூறினார் பிருகதீஸ்வரன். தினந்தோறும் ஆசிரமத்தில் இப்போது நூறு சர்க்காக்கள் நூற்கப்படுகின்றன என்பதை அறிந்து ராஜாராமன் மகிழ்ந்தான். . -
பரபரப்பான திருப்ப்ரங்குன்றம் மாநாட்டைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். சத்தியாக்கிரகம் என்ற மகா நோன்பு மனிதர்களின் போட்டி பொறாமைகளில் அழிந்து விடக் கூடாது என்று எப்போதும்போல் கவலை தெரிவித்தார் பிருகதீஸ்வரன். 'திருச்செங்கோடு நிகழ்ச்சியால் தான் இவ்வளவும் வந்தது. திருச்செங்கோடு தேர்தல் - என்ற ஒன்று வந்திருக்காவிட்டால் இவ்வளவு நடந்திருக்காது' என்று முத்திருளப்பன் அபிப்பராயப்பட்டார். இந்தக் கருத்து<noinclude></noinclude>
5kl02pgnm6vjpyui4eqf20n5f00bad1
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/235
250
181359
1958674
536119
2026-08-19T12:10:44Z
Anlie Askila Babu
16830
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1958674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Anlie Askila Babu" /></noinclude>நா. பார்த்தசாரதி 233 ராஜாராமனிடம் கூறினார் மகாத்மா. அவன் அப்படியே
செய்வதாகப் பாபுஜியிடம் வாக்களித்தான். ஆசிரமத்தின்
பெயர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர்
பாராட்டினார்.
''கதர் மூலம் பல கோடி மக்களின் உடைத் தேவை நிறைவேறாது என்று விவரம் தெரிந்தவர்கள் கூட நினைப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா ஏராளமான கிராமங்களும், விவசாயிகளும் நிறைந்த நாடு. கிராமங்கள் அழிந்தால் இந்தியாவே அழிந்துவிடும். கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் ஏற்பாடுதான் கதர். இதைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. கதர் ஓர் புனிதமான தேசிய விரதத்தின் சின்னம். நான் சொல்லும் ஏனைய இலட்சியங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் க்தர் அணிவதால் மட்டும் பயனில்லை. அவர்கள் கதரையும், என் இலட்சியங்களையும் சேர்த்தே எரித்து விடலாம்'' - என்று வருத்தப்பட்டார் மகாத்மா.
''சத்தியத்தின் நம்பிக்கை இல்லாதவன், அகிம்சையில் நம்பிக்கை இல்லாதவன், சுயநலத்தைவிட மனமில்லாதவன், பிறர்க்குத் தீங்கு நினைப்பவன், கதர் அணிவதில் அர்த்தமே இல்லை! உங்கள் ஊர் ஆலயம் ஹரிஜனங்களுக்குத் திறக்கப்பட்டது என்று அறிந்த பின்பே நான் மகிழ்ச்சியோடு இங்கே தரிசிக்க வந்தேன், ஹரிஜனங்களுக்கும் ஏழைகளுக்கும். நன்மை உண்டாக்கப் பாடுபட வேண்டும். மதுவிலக்கும், கதரும், கிராமப் புனருத்தாரணமும் எந்த சத்தியாகிரகிக்கு இலட்சியங்களாகவும் விரதங்களாகவும் ஆகியிருக்கின்றனவோ அவனே கதர் அணிய யோக்யதை உள்ளவன்.''
ராஜாராமனுக்கு கங்கையில் மூழ்கி எழுந்ததுபோல் மகாத்மாவைச் சந்தித்து அவர் உரைகளைக் கேட்ட அநுபவம் மெய்சிலிர்க்கச் செய்வதாயிருந்தது. அந்தப் பொக்கை வாய்க் கிழவரின் புன்முறுவலிலும், ஆசியிலும் சகல துக்கங் களையும் மறக்க முடிந்தது. தங்கள் காலத்தின் மகா<noinclude></noinclude>
0qjremgxu0y0pdhtandc9f8docswteb
1958676
1958674
2026-08-19T13:12:29Z
Anlie Askila Babu
16830
1958676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Anlie Askila Babu" /></noinclude> நா. பார்த்தசாரதி 233
ராஜாராமனிடம் கூறினார் மகாத்மா. அவன் அப்படியே
செய்வதாகப் பாபுஜியிடம் வாக்களித்தான். ஆசிரமத்தின்
பெயர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர்
பாராட்டினார்.
''கதர் மூலம் பல கோடி மக்களின் உடைத் தேவை
நிறைவேறாது என்று விவரம் தெரிந்தவர்கள் கூட
நினைப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா
ஏராளமான கிராமங்களும், விவசாயிகளும் நிறைந்த நாடு.
கிராமங்கள் அழிந்தால் இந்தியாவே அழிந்துவிடும்.
கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் ஏற்பாடுதான்
கதர். இதைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. கதர் ஓர்
புனிதமான தேசிய விரதத்தின் சின்னம். நான் சொல்லும்
ஏனைய இலட்சியங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் க்தர்
அணிவதால் மட்டும் பயனில்லை. அவர்கள் கதரையும், என் இலட்சியங்களையும் சேர்த்தே எரித்து விடலாம்'' - என்று
வருத்தப்பட்டார் மகாத்மா.
''சத்தியத்தின் நம்பிக்கை இல்லாதவன், அகிம்சையில்
நம்பிக்கை இல்லாதவன், சுயநலத்தைவிட மனமில்லாதவன்,
பிறர்க்குத் தீங்கு நினைப்பவன், கதர் அணிவதில் அர்த்தமே
இல்லை! உங்கள் ஊர் ஆலயம் ஹரிஜனங்களுக்குத்
திறக்கப்பட்டது என்று அறிந்த பின்பே நான் மகிழ்ச்சியோடு
இங்கே தரிசிக்க வந்தேன், ஹரிஜனங்களுக்கும
ஏழைகளுக்கும் நன்மை உண்டாக்கப் பாடுபட வேண்டும்.
மதுவிலக்கும், கதரும், கிராமப் புனருத்தாரணமும் எந்த
சத்தியாகிரகிக்கு இலட்சியங்களாகவும் விரதங்களாகவும
ஆகியிருக்கின்றனவோ அவனே கதர் அணிய யோக்யதை
உள்ளவன்.''
ராஜாராமனுக்கு கங்கையில் மூழ்கி எழுந்ததுபோல்
மகாத்மாவைச் சந்தித்து அவர் உரைகளைக் கேட்ட அநுபவம்
மெய்சிலிர்க்கச் செய்வதாயிருந்தது. அந்தப் பொக்கை வாய்க்
கிழவரின் புன்முறுவலிலும், ஆசியிலும் சகல துக்கங்
களையும் மறக்க முடிந்தது. தங்கள் காலத்தின் மகா<noinclude></noinclude>
it5s8b6cs9t8sl0n07j74gye898ynmj
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/237
250
181361
1958675
536121
2026-08-19T12:31:19Z
Anlie Askila Babu
16830
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1958675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Anlie Askila Babu" /></noinclude>நா. பார்த்தசாரதி 235 அவர்கள் ஆசிரமத்துக்குத் திரும்பினார்கள். மறுநாளும் அதற்கடுத்த நாளும் ஒரு வேலையும் ஓடாமல் பிரமை பிடித்தது போல் இருந்தான் ராஜாராமன். மனம் தேறி அவன் பழைய நிலைமை அடைய இரண்டு நாள் பிடித்தது. மறுவாரம் ஆசிரமம் நடத்திவந்த பள்ளிக் கூடத்துக்கு அரசாங்க அங்கீகாரமும் 'கிராண்ட்'டும் வாங்குகிற விஷயமாக அவனும், பிருகதீஸ்வரனும் சென்னைக்குப் போக வேண்டியிருந்தது. போகும்போது வழியில் திருச்சியில் இறங்கிப் புதுக்கோட்டை போய்க் குடும்பத்தினரோடு ஒரு நாள் தங்கிப்போக விரும்பினார் பிருகதீஸ்வரன். ராஜாராமனும் அவரோடு புதுக்கோட்டைக்குப் போனான். பிருகதீஸ்வரன் மனைவி, மதுரத்தின் மரணத்துக்காக அவனிடம் துக்கம் கேட்டு அழுதாள். 'மதுரத்தைப் போலத் தங்கமான பெண்ணை நான் பார்த்ததே இல்லை' என்று வியந்து கூறி, மதுரத்தோடு தான் மதுரையில் இருந்த நாட்களை நினைவு கூர்ந்தாள் அவள். தன்னைப் போலவே எல்லாரும் மதுரத்தை நினைவு வைத்துக் கொண்டிருக் கிறார்கள் - எல்லாருடைய நினைவிலுமே அவள் பசுமையாகத் தங்கியிருக்கிறாள் என்பதை அறியும் போதெல்லாம் அவன் மனத்தைத் தவிக்க வைத்தது. அடைய முடியாத - அடையக் கூடாத ஒரு நஷ்டத்தைத் தான் உணர்ந்து அனுபவிப்பது போதாதென்று ஒவ்வொருவராக அதை நினைவுபடுத்தும் போதெல்லாம் அந்த நஷ்டத்தின் கனம் பெரிதாகித் தாங்க முடியாத பாரமாய் அவன் இதயத்தையே அமுக்கியது.
மறுநாள் அவர்கள் புதுக்கோட்டையிலிருந்து சென்னை புறப்பட்டார்கள். சென்னையிலும் சில தேசபக்தர்களையும், மந்திரிகளையும், பிரமுகர்களையும் அவர்கள் சந்தித்தனர். ஆசிரமத்துக்கு அங்கீகாரமும் உதவித் தொகையும் பெற முயலும் முயற்சி வெற்றியடையும் போலிருந்தது. எல்லாருமே உதவி செய்வதாக வாக்களித்தனர். ஆசிரமத்தின் எதிர் காலத்தில் நம்பிக்கையோடு அவர்கள் சென்னை யிலிருந்து திரும்ப முடிந்தது. பொருளாதார ரீதியாக ஆசிரமத்துக்குப் பல சிரமங்கள் இருந்தாலும், அவர்கள்<noinclude></noinclude>
njp1yur4j8exgt4xzj2u8l3hhvgpjxn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/606
250
636512
1958677
1914418
2026-08-19T13:21:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|882|இந்தியா}}</noinclude>in the many) கூட்டுத்தொகையில் உறைந்திருக்கும் தனித்துவத்தையும் (Individual in the Aggregate), கூடி இணைந்துள்ளதில் உறைந்திருக்கும் எளிமையையும் (Simple in the Composite) உணரமாட்டார் என்பது அவருடைய கூற்றாகும்.
‘இயற்கையமைப்பு, சமூக ஏற்பாடு, மொழி, பழக்க வழக்கம், சமயம் போன்ற பல்வேறு வேறுபாடுகளினூடே, இமயம் முதல் குமரிவரை அறிந்துணரத்தக்க ஒருமையுணர்வு இழையோடியிருப்பதை இந்திய வரலாற்றைக் காணும் எவரும் தெரிந்துகொள்ள இயலும்’ என்கிறார் சர் எர்பர்ட்டு இரிசிலி (People of India, p-299). இத்தகைய ஒருமைப்பாடு அண்மைக் காலத்தைய ஒரே மாதிரியான நிருவாக அமைப்பு முறையாலும் பெருகி வளர்ந்துவரும் இக்காலக் கல்வி முறையாலும் பேணிக்காக்கப்பட்டு வந்துள்ள தென்பதை ஐயந்திரிபறக் கூறலாம். இந்தியாவின் அடிப்படை ஒற்றுமையைப் பல கூறுகளில் கண்டறியலாம்.
<b>நிலவியல் ஒருமைப்பாடு:</b> பரதனின் நாடு (பாரத வருடம்) என்னும் ஒரே பெயரில் இந்தியா குறிக்கப்படுவதிலிருந்து, இவ்வடிப்படை ஒற்றுமையின் முதற்கூற்றினை உணரலாம். இதிகாசங்களும் புராணங்களும் பாரதம் என்னும் பெயராலேயே இந்தியாவைக் குறிக்கின்றன. பரதனின் நாடு என்னும் பெயருக்கு ஆழ்ந்த வரலாற்றுப் பின்னணி உண்டு. அது இந்தியாவின் அடிப்படை ஒற்றுமையை வலியுறுத்துகிறது. பரதனின் நாடு என்னும் சொல் நிலவியல் எல்லைகளைக் குறிப்பிடுவதோடு, உலகம் முழுவதையும் ஆண்ட முடியாட்சி அமைப்பையும் குறிப்பிடுவதாகக் கூறுவர். “அடிப்படை ஒருமையை வலியுறுத்தும் இப்பெயரைக் குறித்த உணர்வு, இந்தியாவின் இறைமையியல் வல்லுநர்கள், அரசியல் தத்துவவாதிகள், கவிஞர்கள் போன்றோரிடம் எப்போதும் இருந்துவந்துள்ளது. அதனாற்றான் அவர்கள் இமயம் முதல் குமரிக் கடல்வரை பரந்ததும் பல்லாயிரம் கி.மீ. நீள அகலங்களைக் கொண்டதுமான இந்நாட்டை, உலகப் பேரரசர் ஒருவரின் ஆட்சியின் பாற்பட்டதென்று சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
(இந்தியாவின் சிறப்பு வரலாறு) இமயம் முதல் கன்னியாகுமரி வரையிலும் அட்டாக்கிலிருந்தது கட்டாக்கு வரையிலுமான இந்நாட்டை அரசர்களும் பேரரசர்களும் ஆண்டார்கள் என்று புகழ்ந்து போற்றிப் பாடியுள்ளனர். இடைக்காலத்தில் ஆண்ட மன்னர்களும் இந்தியாவை ஒரே நிலவியல் தொகுதி எனக் கொண்டு இந்தியா முழுவதையும் தம் ஆதிக்கத்தின்கீழ்க் கொணர முயன்றிருக்கிறார்கள். இன்று ‘பாரதமாதா’ நம் தாய்த்திரு நாடு என்னும் நிலவியல் ஒருமைப்பாட்டை அனைவரும் வலியுறுத்துகிறார்கள். வந்தேமாதரகீதம் இந்த உள்ளுணர்வின் அடிப்படையில் அமைந்த ஒருமைப்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறது.
<b>அரசியல் ஒருமைப்பாடு:</b> அரசியலிலும் இந்தியா முழுவதற்குமான ஒருமையுணர்ச்சி வலியுறுத்திக் கூறப்படுவதைக் காணலாம். இந்தியாவை ஆண்ட அரசர்கள் இந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆள விழைந்து, அதனை ஒரே தொகுதி என்றே கருதி வந்துள்ளனர். சக்கரவர்த்தி என்னும் இலட்சியமே இந்தியாவை ஆண்ட பெருமன்னர்களின் குறிக்கோளாக இருந்தது என்பதைப் பல்வேறு காலகட்டங்களிலும் காணலாம். சந்திரகுப்த மௌரியர், அசோகர், சமுத்திரகுப்தர் போன்ற பெருமன்னர்கள் இந்தியா முழுவதிலும் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட முயன்றனர். இந்தியா முழுவதையும் ஆளும் அரசியல் ஆளுமையே இந்துக்கள் பண்டைக் காலத்தில் கொண்டிருந்த அரசியற் கொள்கையாகும். ஆதிராசா, இராசாதிராசா, சாம்ராட்டு, ஏகராசா. விராட்டு, சருவபூமா போன்ற சொற்களை அவர்கள் அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்கள். இச்சொற்களைப் பண்டைய சமசுகிருத இலக்கியங்களில் காணலாம். அதனுடன் இராசசூயம், வாசபேயம், புரைபிசேகம், ஐந்திரம், மகாபிசேகம் போன்ற சடங்குகளையும் வேள்விகளையும் மாறி மாறித் தொடர்ந்து செய்துவந்துள்ளார்கள் என்பது, தொன்மைக்கால இந்துக்கள் இந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆள முயன்றிருக்கிறார்கள் என்னும் கருத்தை நிலைநாட்டுவதாம்.
இடைக்காலத்திலும், அலாவுதீன் கில்சி, அவுரங்கசீபு போன்ற இசுலாமிய மன்னர்கள் இந்தியா முழுவதையும் ஒருகுடைக்கீழ் நிலைநாட்டவே முயன்றார்கள். மொகலாயப் பேரரசர்கள் உருவாக்கிய பேரரசு நிருவாக அமைப்பும், இந்திய ஒருமைபாட்டை வலியுறுத்தி அரசியல் துறையில் இந்த அனுபவத்தை ஏற்படுத்தியது. மொகலாயப் பேரரசர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிருவாக அமைப்பு, ஒரே வகையான சட்டங்கள் பழக்க வழக்கங்கள், பொதுவான நாணய அமைப்பு முறை, ஒரே ஆட்சி மொழியான பாரசீசு மொழி, நன்கு அமைக்கப்பட்ட பரந்த சாலை அமைப்புகள் போன்றவற்றின் மூலம் அரசியல் ஒருமைப்பாட்டை நிலைநாட்டினார்கள். ஆங்கிலேயரும் இந்தியாவின் அரசியல் ஒருமைப்பாட்டை நிலைநாட்டினார்கள். இந்தியா விடுதலை பெற்றபின், சுதேச சமசுத்தானங்களை இந்தியக் குடியரசுடன் இணைத்து, அரசியல் ஒருமைப்பாட்டை முழுமையாக்கியது.{{nop}}<noinclude></noinclude>
cipincwpwraxra3zjojbqladnt43fdc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/607
250
636551
1958678
1914470
2026-08-19T13:26:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|583|இந்தியா}}</noinclude><b>சமய ஒருமைப்பாடு:</b> இந்தியாவில் நிலவிவரும் பல்வேறு சமயங்களினூடேயும் சமய ஒருமைப்பாடு இழையோடியிருப்பதைக் காணவியலும், சிவ வழிபாடு, விட்டுணு வழிபாடு போன்றவற்றில் சிறுசிறு வேறுபாடுகள் இருப்பினும், அவை இரண்டுமே வட நாட்டிலும் தென்னாட்டிலும் பரவியுள்ளன. விட்டுணுவை வழிபாடு செய்தற்கேற்ற தலங்களும், சில வழிபாட்டுத் தலங்களும் நாடு முழுமையும் உள்ளன என்பது வெளிப்படை சைவர்கள் நாடு முழுமையையும் சுட்டும் சோதிலிங்கங்கள் பன்னிரண்டு என்பர். வைணவர்கள் 108 தலங்களை இந்தியா முழுவதிலும் சுட்டுவர். அதனைப் போன்றே சக்தியை வழிபாடு செய்பவர்களும் சக்தி பீடங்கள் நாடு முழுமையும் உள்ளன என்பர். இவ்வழிபாட்டுத் தலங்கள் பனி உறையும் இமயமலையின் உச்சியிலிருந்து கடல் அலைகள் அலம்பும் கன்னியாகுமரிவரை பரவியுள்ளன.
இராமாயணம், மகாபாரதம் போன்ற தொன்மையான இதிகாசங்களைத் தென்னாட்டவர் பக்தி உணர்வோடு ஊன்றிப் படிப்பதைப் போன்று வடநாட்டிலும் பத்தியோடு படிப்பதை இன்றும் காணலாம். இராமன், கிருட்டிணன் போன்றோர் வரலாறுகளை நாடு முழுவதிலும் பல இலட்சம் மக்கள் படித்து இன்புறுகின்றனர். கற்பு நெறியும் பசு (ஆவினம்), வேதங்கள், பகவத் கீதை புராணங்கள் ஆகிய அறநூல்களும் நம்நாட்டு மக்கள் அனைவராலும் போற்றிப் புகழப்படுகின்றன. வேதங்களும் புராணங்களும் இன்றும் நாடு தழுவிய மக்களில் பெரும்பாலோர்க்கு அமைதியான உயர்வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன. ஒருவனே தேவன், ஆத்துமா அழியாதது, மறுபிறப்பு, ஊழ்வினை, வீடுபேறு போன்ற வாழ்க்கை முடிபுகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதோடு, இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அவற்றைப் போற்றி எண்ணுகின்றனர். கண்ணுக்குப் புலப்படாத பரம்பொருள் உண்டென்பதிலும், கொல்லாமை, தானதருமம், பொறையுணர்வு ஆகியவற்றிலும் பெரும்பாலும் ஒத்த கருத்துடையவர்களாகத் திகழ்கிறார்கள்.
சமயச் சடங்குகளும் அவற்றைச் செய்யும் வழிமுறைகளும் நம் நாடுமுழுமையிலும் ஏறத்தாழ ஒருமையை உணர்த்துவன. இவற்றைத் தெற்றெனச் சுட்டிக் காட்டும் அழியாச் சின்னங்களாகத் திருக்கோயில்களும் புனிதத் தலங்களும் நாடு முழுமையும் உருவாக்கப் பெற்றுள்ளன. வடக்கில் பத்திரி-கேதாரமும், தெற்கில் இராமேசுவரமும், கன்னியாகுமரியும், மேற்கில் துவாரகையும், கிழக்கில் செகந்நாதபுரியும் இந்துக்கள் போற்றி வழிபடும் புண்ணியத் தலங்களாகும். இதனாற்றான் காசி இராமேசுவரப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்து நாடு முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு தூய இந்துவும் இத்தகைய தலயாத்திரையை மேற்கொள்ள வேண்டுமென்று இந்து சமயம் சொல்லுகிறது. புண்ணியப் பயணம் செய்வோர் தாய்த்திருநாட்டின் மீது கொண்டிருக்கும் அசையாத நாட்டுப்பற்றை இத்தகைய பயணங்கள் விளக்குகின்றன. அதன் நாடு பற்றிய நுட்பமான அறிவினைப் பெறவும் பண்டைக் காலத்திலேயே மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. வடமொழி நூல்களில் காணப்படும் புனித இடங்களின் பட்டியலைக் காணும்போது நாடு முழுவதிலும் நிலவிவந்த சமய ஒருமைப்பாட்டை நன்கு உணரலாம்.
இந்துக்கள் நாள்தோறும் வழிபாடு செய்யும் போது கங்கை, யமுனை, சிந்து, கோதாவரி, சரசுவதி, நருமதை, காவேரி போன்ற ஆறுகளின் பெயர்களை நினைவிற் கொள்வர். இவ்வாறுகள் வடக்கு தெற்குப் பகுதிகளில் ஓடுவன. இவ்வாறுகளில் குளிப்பதால் வீடுபேறு அடையலாம் என்றும், பாவங்கள் தீரும் என்றும் இந்துக்கள் நம்புகின்றனர். மேற்குறிப்பிட்ட ஆறுகள் இந்தியாவின் விரிந்து பரந்துள்ள பரப்பைக் காட்டுவதுடன், மக்களின் பண்பாடு சமயநெறி போன்றவற்றையும் இந்திய மக்களின் அடிப்படை ஒற்றுமையையும் நினைவூட்டுகின்றன.
<b>பண்பாட்டு ஒருமைப்பாடு:</b> உலகில் வேறெங்கும் காணப்படாத, வியப்பூட்டும் வகையில் வெவ்வேறான மக்களை இணைக்கும் முறையாக இந்திய நாகரிகமும் பண்பாடும் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பண்பாட்டிற்கும் அடிப்படை ஒற்றுமை உள்ளது. மொழி வேறுபாடுகள், பழக்க வழக்க வேறுபாடுகள், அரசியல் ஒற்றுமையின்மை போன்றவற்றினூடே இந்திய இலக்கியங்களும், சிந்தனை முறையும் பண்பாட்டு ஒருமையைப் பதிய வைத்துள்ளன. இலக்கியக் கருத்துகளில் அடிப்படை ஒற்றுமை, தத்துவ ஒருமை, எழுதாச் சட்ட நடைமுறைகள் போன்றவற்றிலும் நாடு முழுமைக்குமான பொதுநோக்கு காணப்படுதல் இந்தியப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்கதாகும். சமூக, பண்பாட்டு ஒருமை நாடு முழுமைக்கும் ஒரே அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகக் கொண்டாட்டங்கள், சமயச்சடங்குகள், திருவிழாக்கள், வாழ்க்கை முறைகள் போன்றனவும் வடநாட்டிலும் தென்னாட்டிலும் ஒன்றுபோல் இருப்பதைக் காணலாம். குடும்பத்தோடு இணைந்து வாழும் புனிதத் தன்மை, சாதிவரன்முறைகள், சம்சுகாரங்கள் எனப்படும் சடங்குகள், ஈமச்சடங்குகள், சமையற்கட்டைத் துப்புரவாக வைத்தல் போன்றவை அனைத்து இன மக்களுக்கும் பொதுவானவை. நாடு முழுமைக்கும் இவை பெரும்பாலும் ஒன்றுபோலவே நடைபெறு-<noinclude></noinclude>
kldmvv2c8jvh5brsh8ebhjxw4t8bh43
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/608
250
636664
1958679
1914585
2026-08-19T13:32:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|584|இந்தியா}}</noinclude>கின்றன. கங்கணக்காப்பு (Rakshabandan), தசரா, தீபாவளி, ஓலி (Holi), சங்கராந்தி எனப்படும் பொங்கல், பிள்ளையார் சதுர்த்தி போன்ற விழாக்கள் நாடெங்கும் கொண்டாடப்படுவதினின்றும் இவ்வடிப்படை ஒருமையை அறியலாம்.
<b>மொழி ஒற்றுமை</b>: கிறித்தவ ஆண்டு தொடங்கும் முன்னர்ப் பிராகிருதமொழி இந்தியாவின் பொது மொழியாய் இருந்தது. அசோகப் பெருமன்னரின் சமயத் தூதர்கள் இம்மொழியைப் பயன்படுத்தி அறநெறிகளை எளிய மக்களுக்குப் போதித்தார்கள். பிற்காலத்தில் பாலி மொழியும் வடமொழியும் அதன் இடத்தைக் கைப்பற்றிக்கொண்டன. சமசுகிருத மொழியைப் புனித மொழிகளில் ஒன்றென இந்திய நாட்டு மக்களுள் பெரும்பாலோர் ஒப்புக்கொள்வர். இந்தி, மராத்தி, குசராத்தி, வங்காளி போன்ற வட இந்திய மொழிகள் சமசுகிருதத்திலிருந்து தோன்றியவை. தென்னாட்டு மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் போன்ற மொழிகளிலும் வடமொழியின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமசுகிருதத்தின் இடத்தை இன்று ஆங்கில மொழி பிடித்துக் கொண்டுள்ளது.
<b>இனவியல் ஒருமை:</b> திராவிடர், ஆரியர், சகர், சித்தியர், ஊணர் போன்றோர் ஒன்றாக இணைந்து, இந்து சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து, தத்தம் தனித்தன்மையை இழந்துவிட்டனர். இந்தியாவில் வாழும் பெரும்பாலான முசுலிம்களும். கிறித்தவர்களும்கூட இந்துக்களின் வழித்தோன்றல்களே; இந்துக்களாயிருந்து பின்னர் இசுலாம், கிறித்தவ மதங்களுக்கு மாறியவர்களே. இவ்வினங்கள் எல்லாம் காலப்போக்கில் இணைந்து இனவியல் ஒருமைப்பாட்டை உருவாக்கியுள்ளன. இதனால் அனைவரும் இந்தியர் என்று கருதப்பெறும்
பொது ஆளுமை உருவாகியுள்ளது.
இந்துக்களிடையே பண்டைக்காலம்முதல் நிலவி வந்த ஒருமைப்பாட்டைப் பன்மையில் ஒருமை அல்லது வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறுவது சாலப்பொருந்தும். இந்துக்கள் அல்லாதாரையும் இந்து ஒருமைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்டவர் என்று கருதமுடியாது. ஞானிகள், சித்தர்கள், தீர்க்கதரிசிகள் போன்றோர் வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் ஒன்றுகூடி இணைந்து நட்புறவுடன் வாழ முயலுகின்றனர். இந்தியாவில் வாழும் இசுலாமியர், இந்து சகோதரர்கள் அறிவியல், தத்துவம், சமயம் போன்றவற்றில் ஆழ்ந்த பரிவு காட்டி வருவதும் கண்கூடு. திருத்தப்பட்டுப் புதுமையாக்கப்பட்டுவரும் இக்கால இந்து சமயம், சமயப் பொறைவுணர்வுடன் மாற்றுச் சமயத்தையும் தம்போல நடத்திச் சமூக மக்களாட்சிக் கருத்துக்கு வழிகாட்டுகிறது.
இந்தியப் பண்பாட்டு ஒருமைக்கு வழிவகுப்பவை பின்வருவன 1. முனிவர்கள், ஞானிகள், சமயப் போதகர்கள், பயணிகள், 2. பேரரசினை நிலைநாட்டிய வெற்றிவீரர்கள், 3. நிருவாக ஒருமைப்பாடு, சமய-மொழி ஒருமைப்பாடு, இக்காலப் போக்குவரத்துச் சாதனங்கள், இந்தியர் அனைவருக்கும் உரிய பொது வரலாறு, தேசிய உணர்வு போல்வன.
<b>வரலாற்றுக்கு முந்திய காலம்:</b> இப்புவி தோன்றிய காலம் முதல் இக்காலம்வரை உள்ள வரலாறு முதற்காற் பேரூழி (Primary) இரண்டாங்காற் பேரூழி (Secondary), கடைப் பேரூழி அல்லது மூன்றாங்காற் பேரூழி (Tertiary) ஆகிய காலக் கட்டங்களைக் கடந்து நாலாங்காற் பேரூழியில் (Quarternary) உள்ளது. நாலாங்காற் பேரூழியின் முதற்கட்டம் முன்னூழி (Pleistocene) என்றும், அதை அடுத்து வருகின்ற கட்டம் அண்மைக்கால ஊழி (Holocene) என்றும் சொல்லப்படுகிறது. நாம் வாழ்ந்து கொண்டிருப்பது அண்மை ஊழிக் காலமாகும். மேற்கூறிய நாலாங்காற் பேரூழியின் முன்னூழிக் காலத்தில்தான் முதன் முதலில் மனிதன் கற்கருவிகள் செய்யத் தொடங்கினான். இக்காலம் முன்னூழி, இடை முன்னூழி பின்முன்னூழி என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இம்முன்னூழிக் காலத்தில் கியூன்சு (Qunz), மின்டல் (Mindel), இரிசு (Riss), ஊர்ம் (Wurm) என நான்கு பனிப்படலக் காலங்களும், மூன்று இடைப்பனிப்படலக் காலங்களும் இருந்தன. இக்காலகட்டத்தில் மத்திய தரைக்கடலுக்குத் தெற்குப் பகுதியில் காணப்படுவதுபோல, இவ்வுலகின் சில இடங்களில் பனிப்படலத்துக்குப் பதிலாக மழைக்காலம் அமைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் இக்காலத்தில் பரவலான இடங்களில் மழைக்காலமும், இமயமலைப் பகுதி போன்ற இடங்களில் பனிப்படலக் காலமும் இருந்திருக்கின்றன.
மனித வரலாற்றை முன்வரலாற்றுக் காலம் (Prehistory), இடைவரலாற்றுக் காலம் (Proto History), வரலாற்றுக் காலம் (History) எனப் பிரித்துள்ளனர். முன்வரலாற்றுக் காலத்தைப் பழங்கற்காலம் (Palaeolithic), நுண்ணிய கற்காலம் (Microlithic) புதிய கற்காலம் (Neolithic) என மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
<b>பழங்கற்காலம்:</b> இக்காலம் முற்பழங்கற்காலம் (Lower Palaeolithic) இடைப்பழங்கற்காலம் (Middle<noinclude></noinclude>
t6che1p1qnjd1qwdqdq9czi5cvn387f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/609
250
637275
1958680
1916003
2026-08-19T13:39:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|585|இந்தியா}}</noinclude>Palaeolithic), பிற்பழங்கற்காலம் (Upper Palaeolithic) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பழங்கற்காலம் இந்தியாவில் கி.மு. 10,000 ஆண்டு வரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
முதன் முதலில் கி.பி. 1863-ஆம் ஆண்டு இராபர்ட் புரூசுபூட்டு (Robert Bruce Foote) என்பவர் இந்தியாவில் பழங்கற்காலக் கருவிகளைக் கண்டு பிடித்தார். ஆனால், அதற்குஉரிய சரியான ஆராய்ச்சியை டி. தெர்ரா, டி.டி. பெடர்சன் (De-Terra & T.T. Paterson) ஆகியோர் தலைமையிலான இயேல்-கேம்பிரிட்சுப் பல்கலைக்கழக (Yele Cambridge University) ஆராய்ச்சிக் குழு 1935-ஆம் ஆண்டில் நடத்தியது. அதைத் தொடர்ந்து பி.பி. இலால் (B.B. Lal), வி.டி. கிருட்டிணசாமி (V.D. Krishnaswamy), எச்.டி. சங்காலியா (H.D. Sankalia). டி. சென் (D.Sen), எப்.இ.சூனர் (F.E. Zeuner) மற்றும் பலர் பல குறிப்பிடத்தக்க வரலாற்றுக்கு முந்திய காலத்து இடங்களைக் கண்டுபிடித்து ஆராய்ச்சி நடத்தினர்.
<b>முற்பழங்கற்காலம்:</b> சிந்து, கேரளம் ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா இந்திய மாநிலங்களிலும், முற்பழங்கற்கால மக்கள் வாழ்த்துள்ளனர். அடர்ந்த காடுகள் உள்ளமையாலும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் கிடைக்காமையாலும் சிந்துவிலும் கேரளத்திலும் முற்பழங்கால மக்கள் வாழ இயலவில்லை.
மேற்குப் பஞ்சாபு சோகான் சமவெளி (பாகிசுத்தான்); கிழக்குப் பஞ்சாபு-சிர்சா சமவெளி, பியாசு-பங்கன்கா சமவெளிகள்; காசுமீர்-பகல்காம்; இராசசுத்தான் - செய்ப்பூர், பண்டி, காம்பிரி, நகரி, சோனிட்டு, பைசோகர்; குசராத்து-சபர்மதி, மாகி, ஆர்சங்கு, கார்சன், சமவெளிகள், கச்சுப்பகுதி, மத்திய பிரதேசம்-நர்மதை, பெட்வா, சோனார், சோன் சமவெளிகள்; பீகார்-சகரதார்பூர், பண்டா, சாசர்ப்பா, சாசுடாட்டு, காவிபகார்; வங்காளம் கன்சாபாதி, தால்கிசோர் சமவெளிகள், சுசுனியா நயாகர்; அசரம் - காரோமலை, உரோன்கிராம் உரோன்கிகிரி, மோல் மிகிர்; ஒரிசா-குளினா, பகமணி, மகாநதி, பேசுடரணி, புர்நபலாங்கு, புவர்னரேகா சமவெளிகள், கமார்பால்; மகாராட்டிரம்-கோதாவரிச் சமவெளி, நிவேசா, நாசிக்கு, தவுளியா, பாடேன், காங்காபூர், கங்கவாடி, சபல்பூர், மூலா; கொங்கணப் பகுதிகள்; ஆந்திரா-கர்னூல், நாகார்ச்சுனகொண்டா, பங்காரு, சத்தியவேடு; கருநாடகம்-நின்கடாகள்ளி, கிப்பனகள்ளி, நந்திகேசுவர், அனகவாடி, பகல்கோட்டு, அலூர், நிட்டூர், தமின்கால்; தமிழ்நாடு - பல்லாவரம், கோர்தலை ஆற்றுப்பகுதி, வடமதுரை, அத்திரம்பாக்கம், திருப்பெரும்புதூர், மஞ்சக்கரணை; அரக்கோணம்-திருப்பதிப் பகுதிகள் ஆகிய இடங்களில் முற்கற்காலப் பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் காணக் கிடைக்கின்றன.
மேற்கண்ட அனைத்து இடங்களிலும், அவ்விடங்களின் புவியியல் அமைப்பிற்கு ஏற்ப இக்காலத்தைச் சார்ந்த தடயங்கள் கிடைக்கின்றன. இக்கால மக்கள் பயன்படுத்திய கூழாங்கற்களால் ஆன ஆயுதங்கள், பெரும்பாலான இடங்களில் ஆற்றுப்படுகையிலேயே காணப்படுகின்றன. மலை அடிவாரங்களில் இம்மக்கள் வாழ்த்திருக்கின்றனர். தமிழ் நாட்டில் கோர்த்தலை ஆற்றுப்படுகையிலுள்ள அத்திரம்பாக்கத்தில் உள்ள மலை அடிவாரத்தில் இக்கால மக்கள் வாழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தண்ணீர், கற்கருவிகள் செய்யப் பயன்படும் கற்கள் ஆகியன கிடைத்தமையால் மக்கள் இவ்விடங்களில் வாழ முடிந்தது. மேலும் இலலித்பூர் போன்ற இடங்களில், பெரிய கற்பாறைகளின் மறைவுகளில் மக்கள் தங்கி வாழ்ந்தனர். இவர்கள் சில சமயங்களில் காடுகளுக்கு அருகிலும் வாழ்ந்தனர். உணவுக்காக வேட்டையாட இக்காடுகள் பெரிதும் உதவியாக இருந்தன. இவர்கள் மலையின் உச்சிப்பகுதி, அடர்ந்த காட்டின் உட்பகுதி ஆகிய இடங்களில் வாழவில்லை, ஏனெனில் தண்ணீரும் உணவுக்கான விலங்குகளும் மலை உச்சியில் கிடைப்பதில்லை. அடர்ந்த காட்டில் அவர்களுக்கு ஆயுதம் செய்யத் தேவையான கற்களும் தண்ணீரும் எளிதில் கிடைப்பதில்லை.
முற்கற்கால மக்கள் பெரும்பாலும் கற்கோடரிகளையே ஆயுதமாகப் பயன்படுத்தினர். இக்கோடரிகள் அவர்களுக்கு வேட்டையாடவும், தோல் உரிக்கவும், மாமிசம், எலும்பு முதலியவற்றை வெட்டவும் நிலத்தைத் தோண்டவும் பயன்பட்டன.
சோகான் சமவெளிகளில் (Sohan Valley) காணப்படும் கல் ஆயுதங்கள்தாம் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தவை. இவை இரண்டிலிருந்து நான்காம் பனிப்படலக் காலம்வரை (Glacial Ages) காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் கருவிகளின் காலத்துக்கு சோகான் காலத்துக்கு முற்காலம், முதல் சோகான், இடைசோகான், பிற்சோகான் காலம் என நான்கு வகைப்படுத்துவர், சோகானுக்கு முற்காலத்தில் ஆயுதங்கள் கரடுமுருடாக இருந்தன. ஆனால், முதல் சோகான் காலத்தில் ஆயுதம் செய்யும் முறையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டு இருந்தது. இடைசோகான் காலத்து ஆயுதங்கள்<noinclude>
வா. க. 3-74</noinclude>
0y9o623rxjsmr0zvxyrym36mssliiho
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/610
250
637285
1958681
1916015
2026-08-19T13:45:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|586|இந்தியா}}</noinclude>தேயாமலும் நேர்த்தியாகவும் உள்ளன. நீள்வட்ட வடிவ அலகுகள், முக்கோண வடிவ அலகுகள் போன்ற கல்லாயுதங்கள் இக்காலத்தில் காணப்படுகின்றன. ஆனால் பிற்காலச் சோகான் ஆயுதங்கள் இக்காலத்திற்கு முற்காலங்களில் மக்கள் பயன்படுத்தியவைபோல இருந்தாலும், அளவில் சிறியனவாக இருக்கின்றன. இச்சோகான் ஆயுதங்கள் சட்லசு நதியின் துணை நதியாகிய சிர்சா நதி சமவெளிப் பகுதியிலும், பியாசு மற்றும் பங்கங்கா சமவெளிப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
முதன்முதலில் பழங்கற்காலக் கோடரிகளைப் புரூசு பூட்டு என்பவர் கி.பி. 1863-ஆம் ஆண்ட சென்னையிலுள்ள பல்லாவரத்தில் கண்டுபிடித்தார். இவை ‘மதராசுக் கைக் கோடலி’ (Madras Hand-axe) என வழங்கப்பட்டன. பிறகு பேட்டர்சனும், கிருட்டிணசாமியும் செங்கற்பட்டு மாவட்டத்தில் ஆராய்ச்சி நடத்தியபோது, அத்திரம்பாக்கத்தில் அபிவில்லியன் (Abbevillion), அச்சூலியன் (Acheulian) என்று வகைப்படுத்தப்பட்ட கல் ஆயுதங்களைக் கண்டுபிடித்தனர், அபிவில்லியன் ஆயுதங்கள் கரடுமுருடாகக் காணப்படுகின்றன. ஆனால் அச்சூலியன் ஆயுதங்கள் சிறிது சீராகவும் செய்முறையில் வளர்ச்சி பெற்றனவாகவும் காணப்படுகின்றன. எனவே மக்கள் அபிவில்லியன் கற்கருவிகள் செய்த பிறகே, அச்சூலியல் வகைக் கற்கருவிகளைச் செய்திருக்க வேண்டும்.
இக்கால மக்கள் உணவு சேகரிப்பவர்களாக இருந்தார்கள்; ஆதலின் ஒரே இடத்தில் தங்கி வசிக்கவில்லை; எவ்வித உடையும் இல்லாமலோ தோல் ஆடையுடனோ திரிந்தனர்; வேட்டையாடுவதே அவர்களது முக்கியத் தொழில்; மாமிசம் அல்லது காடுகளில் கிடைக்கும் செடி, கிழங்கு, கொட்டை, பழங்கள் முதலியவற்றை உண்டு வாழ்ந்தனர். காலப்போக்கில் இம்மக்கள் ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ற வெவ்வேறு கல் ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கினர். புவியியலார் இக்காலம் ஏறக்குறைய கி.மு. 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணித்துள்ளனர்.
<b>இடைப்பழங்கற்காலம் (Middle Palaeolithic):</b> இக்கால மக்கள் முற்பழங்காலத்தைத் தொடர்ந்து வாழ்ந்தவர்கள். இந்தியாவில் கீழ்க்காணும் சில முக்கிய இடங்களில் இப்பண்பாடு காணப்படுகிறது. மகாராட்டிரம் நிவேசா, பாண்டூர், மகேசுவர், விதர்ப்பா, சன்டோலி; கருநாடகம் பகல்கோட்டு, சங்கனகல்லு, பெல்லாரி; ஆந்திரம் கர்னூல், நால் கோண்டா, இராமதிர்தம்பயா, கரிம்நகர்; தமிழ் நாடு - அத்திரம்பாக்கம், வடமதுரை, குடியம்; ஒரிசா - காட்கை, இராம்பா, சகநாத்பூர், பேய்பர்னி; கிழக்கு வங்காளம், அசாம்-கரோமலைகள், பிர்பன் பான்குரா, மிட்டாபூர்; பீகார் - பாட்னா, கயா, பகல்பூர், மாங்குயர், சிசுபன்; உத்தரப்பிரதேசம் - தான்சு, பேலன் சமவெளிகள்; மத்தியபிரதேசம் - நரசிங்பூர், ஒசங்காபாது, மகேசுவர், பீட்வா, சேனார், பீமா, நர்மதை, சின்னா சமவெளிகள்; குசராத்து - பாடர் ஆறு, பாலிதா, துக்வாடா, தெற்குக் கச்சுப் பகுதி; இராசசுத்தான் - சம்பல் பகுதி, சித்தூர், உலுனி (Luni), காம்பிரி; காசுமீர், பஞ்சாபு - பகல்காம், கணேசுபர்.
இடைப்பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் பல மகாராட்டிரத்திலுள்ள விதர்ப்பா பகுதியில் ஆற்றுப்படுகையில் பெருமளவில் கிடைக்கின்றன. கருநாடக மாநிலத்தில் கிடைக்கும் ஆயுதங்கள் ஒரே சீராக இல்லாமல், பெரும்பாலானவை கூர்முனையோடு காணப்படுகின்றன. இம்மாநிலத்திலுள்ள கரருன்கி என்னும் இடத்தில் இனம் காண முடியாத விலங்குகளின் எலும்புப் புதை படிவங்கள் (Fossils) கிடைத்துள்ளன. ஆந்திராவில் காணப்படும் கருவிகள் மகாராட்டிரத்தில் கிடைப்பவற்றை விடப் பெரியவை. இம்மாநிலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம் எல்லேசுவரத்தின் அருகிலுள்ள இராம திருதம்பய ஆகும். இங்கு மட்டும் 10 இடங்களில் 600-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கிடைத்தின்றன. முற்பழங்கற்கால ஆயுதங்கள் கிடைக்கும் தமிழ் நாட்டிலுள்ள அத்திரம்பாக்கம், வடமதுரை, குடியம் ஆகிய இடங்களில் இடைப்பழங்கற்காலக் கருவிகளும் கிடைக்கின்றன. இக்கருவிகள் செய்யும் இடம் ஒன்று நருமதா சமவெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு எண்ணற்ற கற்கருவிகள் பரவலாகக் காணப்படுகின்றன. இராசசுத்தானிலுள்ள சம்பல் ஆற்றுச் சமவெளிப் பகுதியில் இருபக்கமும் (Biface) பட்டை தீட்டப்பட்ட கல் ஆயுதங்களும் கைக்கோடரிகளும் (Hand axe) துளையிடப் பயன்படும் சிறு உளிகளும், தோல் உரிக்கப் பயன்படும் மெல்லிய ஆயுதங்களும் காணப்படுகின்றன.
இடைப்பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் முற்காலத்தைவிட அளவில் சிறியனவாகப் பல வகைகளில் வெவ்வேறு வேலைகளுக்கெனச் செய்யப்பட்டன. இவை படிகக்கல் (Chert), மணிக்கல் (Chalcedony) இரத்தினம் (Agate) போன்ற உயர்வகைக் கற்களால் ஆனவை, மரம். எலும்பு போன்றவற்றை உடைக்கக் கூர்முனைக் கருவிகளும் (Points), சிறிய கற்கோடரிகளும், தோல் உரிக்கவும் இறைச்சியை வெட்டவும் வேட்டையாடவும் எனப் பல வகை ஆயுதங்களும் செய்யப்பட்டன. இது இக்காலத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். இக்-<noinclude></noinclude>
sf8vrzi98tra7q6ym8aytcft9rfbknh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/611
250
637286
1958682
1916017
2026-08-19T13:49:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|587|இந்தியா}}</noinclude>கால மக்களின் வாழ்க்கை முற்பழங்கற்கால மக்களைப் போலவே இருந்தது.
மூலா சமவெளியிலுள்ள மூலநகர் என்னும் இடத்திலும், மேற்கூறிய சில இடங்களிலும் கிடைத்த கரித்தூள்களைக் கரிமம் 14 (Corbon 14) முறையில் பரிசோதித்ததிலிருந்தும், இங்குக் கிடைத்துள்ள சில விலங்குகளின் எலும்புப் புதைப்படிவங்களைப் பரிசோதித்ததிலிருந்தும் இப்பண்பாடு ஏறத்தாழக் கி.மு.50,000 முதல் கி.மு. 20,000 வரை நீடித்திருந்தது என்பது கணிக்கப்பட்டுள்ளது.
<b>பிற்பழங் கற்காலம்:</b> இடைப் பழங்கற்காலத்தைத் தொடர்ந்து பிற்பழங் கற்கால மக்களின் பண்பாட்டின் தடயங்கள் இந்தியாவில் கீழ்க்காணும் இடங்களில் காணப்படுகின்றன. ஆந்திரம் - சித்தூர், கர்னூல், இரேணிகுண்டா, மல்லகுண்டலு, நாகார்ச்சுனகொண்டா; கருநாடகம்-சல்வட்கி, மிரால்பாவி, கிருட்டிணம்மா, மேரால்பாவி; தமிழ்நாடு-சிதம்பரம்; உத்தரப் பிரதேசம் பவுசாலி, இராசுபுட்டூ, பேலன் சமவெளி; மத்திய பிரதேசம் - சோன் சமவெளி, சிதி, அடோல், பிம்பேட்கா; மகாராட்டிரம் - போரிவலி, கண்டில்லி, நிவேசா, தவுனியா; குசராத்து - பவகார் மலைப்பகுதி, விசதி;
இக்கால மக்கள் மிகவும் சிறிய அளவில் கல் ஆயுதங்களைச் செய்து பயன்படுத்தினர், இவை மிக நல்ல முறையில் தோற்றம் அளிக்கின்றன. இவ்வாயுதங்கள் நீளமாகவும், தரமானவையாகவும் காணப்படுகின்றன. இவ்வாயுதங்கள் ஆந்திராவிலுள்ள மல்லகுன்று என்னும் இடத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. மேலும், கருநாடகத்திலுள்ள சல்வட்கி, மிரால்பாவி ஆகிய இடங்களிலும் இவ்வகை ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. குசராத்தில் கற்களால் ஆகிய பெரிய ஈட்டி, அம்பு வடிவ ஆயுதம் போன்றவை கிடைத்துள்ளன.
இக்கால மக்கள் ஆயுதம் செய்யும் முறையில் நன்கு முன்னேற்றம் அடைந்திருந்தனர் என்பது இவ்வாயுதங்களால் தெரியவருகின்றது. கற்களால் மட்டுமன்றி எலும்புகளாலும் ஆயுதங்கள் செய்தனர் என்பதை, ஆந்திரத்திலுள்ள முச்சண்டு சிந்தாமணி என்னும் இடத்திலும் கர்னூலிலுள்ள பில்ல சுர்கம் என்னும் இடத்திலும் கிடைத்துள்ள எறும்புகளால் செய்யப்பட்ட கருவிகள் உறுதிப்படுத்துகின்றன.
இக்கால மக்கள் தொடர்ந்து மலைக் குகைகளில் வசித்தனர் என்பதை மத்திய பிரதேசத்துப் பிம்பேட்காவிலுள்ள குகையில் காணப்படும் ஆயுதங்கள் உறுதிப்படுத்துகின்றன. கல் ஆயுதங்கள் இலேவலாசியன் (Levalloisian) தொழில் நுட்ப முறையில் செய்யப்பட்டனவாகக் காணப்படுகின்றன. நிவேசாவில் இடைப்பழங்கற்கால ஆயுதங்களோடு இக்காலத்திற்குரிய ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. இவை சால்சிடனி என்னும் கல்லில் செய்யப்பட்டவை. பாட்டேன் என்னும் இடத்தில் சாசுபர் மற்றும் சால்டெனியால் செய்யப்பட்ட ஆயுதங்கள் கிடைக்கின்றன.
ஓர் இடத்தில் கிடைக்கும் ஆயுதங்களும் அங்கு நிலவும் பல்வேறு இயல்புகளும் பழங்காலத்தைய அவ்விடத்தின் சுற்றுப்புறச் சூழ்நிலையை அறிய உதவுகின்றன. குசராத்தில் பிற்பழங்கற்கால ஆயுதங்களும், புதைபடிவங்களும் பவகார் மலைப்பகுதியில் காணப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்ததில் இப்பிற்பழங்கற்காலத்தில் இப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியதாகவும், இவ்வறட்சியானது நுண்ணிய கற்கால மக்களின் வருகையின் போது நீங்கியதாகவும் தெரியவருகிறது. இப்பண்பாடு கி.மு. 20,000 முதல் கி.மு. 10,000 ஆண்டுக் காலத்தில் வளர்த்திருந்ததாகக் கரிமம் 14 முறைப்படி ஆராய்ந்ததில் தெரியவருகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 611
|bSize = 450
|cWidth = 188
|cHeight = 71
|oTop = 149
|oLeft = 224
|Location = center
|Description =
}}
{{c|பழங்கற்காலக் கருவிகள்}}
<b>நுண்ணிய கற்காலம் (Microlithic):</b> இது பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். இக்காலத்து மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மிக நுண்ணியதாக இருந்தமையால் இக்காலத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்காலத்து மக்கள் வாழும் நிலத்தின் பரப்பு முற்காலங்களைவிட மிகுதியாக இருந்தது.{{nop}}<noinclude></noinclude>
o7xcywtkbzcoz8l5254ejqedlsz9hx7
1958683
1958682
2026-08-19T13:50:17Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1958683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|இந்தியா|587|இந்தியா}}</noinclude>கால மக்களின் வாழ்க்கை முற்பழங்கற்கால மக்களைப் போலவே இருந்தது.
மூலா சமவெளியிலுள்ள மூலநகர் என்னும் இடத்திலும், மேற்கூறிய சில இடங்களிலும் கிடைத்த கரித்தூள்களைக் கரிமம் 14 (Corbon 14) முறையில் பரிசோதித்ததிலிருந்தும், இங்குக் கிடைத்துள்ள சில விலங்குகளின் எலும்புப் புதைப்படிவங்களைப் பரிசோதித்ததிலிருந்தும் இப்பண்பாடு ஏறத்தாழக் கி.மு.50,000 முதல் கி.மு. 20,000 வரை நீடித்திருந்தது என்பது கணிக்கப்பட்டுள்ளது.
<b>பிற்பழங் கற்காலம்:</b> இடைப் பழங்கற்காலத்தைத் தொடர்ந்து பிற்பழங் கற்கால மக்களின் பண்பாட்டின் தடயங்கள் இந்தியாவில் கீழ்க்காணும் இடங்களில் காணப்படுகின்றன. ஆந்திரம் - சித்தூர், கர்னூல், இரேணிகுண்டா, மல்லகுண்டலு, நாகார்ச்சுனகொண்டா; கருநாடகம்-சல்வட்கி, மிரால்பாவி, கிருட்டிணம்மா, மேரால்பாவி; தமிழ்நாடு-சிதம்பரம்; உத்தரப் பிரதேசம் பவுசாலி, இராசுபுட்டூ, பேலன் சமவெளி; மத்திய பிரதேசம் - சோன் சமவெளி, சிதி, அடோல், பிம்பேட்கா; மகாராட்டிரம் - போரிவலி, கண்டில்லி, நிவேசா, தவுனியா; குசராத்து - பவகார் மலைப்பகுதி, விசதி;
இக்கால மக்கள் மிகவும் சிறிய அளவில் கல் ஆயுதங்களைச் செய்து பயன்படுத்தினர், இவை மிக நல்ல முறையில் தோற்றம் அளிக்கின்றன. இவ்வாயுதங்கள் நீளமாகவும், தரமானவையாகவும் காணப்படுகின்றன. இவ்வாயுதங்கள் ஆந்திராவிலுள்ள மல்லகுன்று என்னும் இடத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. மேலும், கருநாடகத்திலுள்ள சல்வட்கி, மிரால்பாவி ஆகிய இடங்களிலும் இவ்வகை ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. குசராத்தில் கற்களால் ஆகிய பெரிய ஈட்டி, அம்பு வடிவ ஆயுதம் போன்றவை கிடைத்துள்ளன.
இக்கால மக்கள் ஆயுதம் செய்யும் முறையில் நன்கு முன்னேற்றம் அடைந்திருந்தனர் என்பது இவ்வாயுதங்களால் தெரியவருகின்றது. கற்களால் மட்டுமன்றி எலும்புகளாலும் ஆயுதங்கள் செய்தனர் என்பதை, ஆந்திரத்திலுள்ள முச்சண்டு சிந்தாமணி என்னும் இடத்திலும் கர்னூலிலுள்ள பில்ல சுர்கம் என்னும் இடத்திலும் கிடைத்துள்ள எறும்புகளால் செய்யப்பட்ட கருவிகள் உறுதிப்படுத்துகின்றன.
இக்கால மக்கள் தொடர்ந்து மலைக் குகைகளில் வசித்தனர் என்பதை மத்திய பிரதேசத்துப் பிம்பேட்காவிலுள்ள குகையில் காணப்படும் ஆயுதங்கள் உறுதிப்படுத்துகின்றன. கல் ஆயுதங்கள் இலேவலாசியன் (Levalloisian) தொழில் நுட்ப முறையில் செய்யப்பட்டனவாகக் காணப்படுகின்றன. நிவேசாவில் இடைப்பழங்கற்கால ஆயுதங்களோடு இக்காலத்திற்குரிய ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. இவை சால்சிடனி என்னும் கல்லில் செய்யப்பட்டவை. பாட்டேன் என்னும் இடத்தில் சாசுபர் மற்றும் சால்டெனியால் செய்யப்பட்ட ஆயுதங்கள் கிடைக்கின்றன.
ஓர் இடத்தில் கிடைக்கும் ஆயுதங்களும் அங்கு நிலவும் பல்வேறு இயல்புகளும் பழங்காலத்தைய அவ்விடத்தின் சுற்றுப்புறச் சூழ்நிலையை அறிய உதவுகின்றன. குசராத்தில் பிற்பழங்கற்கால ஆயுதங்களும், புதைபடிவங்களும் பவகார் மலைப்பகுதியில் காணப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்ததில் இப்பிற்பழங்கற்காலத்தில் இப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியதாகவும், இவ்வறட்சியானது நுண்ணிய கற்கால மக்களின் வருகையின் போது நீங்கியதாகவும் தெரியவருகிறது. இப்பண்பாடு கி.மு. 20,000 முதல் கி.மு. 10,000 ஆண்டுக் காலத்தில் வளர்த்திருந்ததாகக் கரிமம் 14 முறைப்படி ஆராய்ந்ததில் தெரியவருகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 611
|bSize = 450
|cWidth = 188
|cHeight = 71
|oTop = 149
|oLeft = 224
|Location = center
|Description =
}}
{{c|பழங்கற்காலக் கருவிகள்}}
<b>நுண்ணிய கற்காலம் (Microlithic):</b> இது பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். இக்காலத்து மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மிக நுண்ணியதாக இருந்தமையால் இக்காலத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்காலத்து மக்கள் வாழும் நிலத்தின் பரப்பு முற்காலங்களைவிட மிகுதியாக இருந்தது.{{nop}}<noinclude></noinclude>
1m2e55ksgjqwopqb3aj0tn79uj2g340
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/612
250
637287
1958684
1916018
2026-08-19T13:55:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|588|இந்தியா}}</noinclude>இப்பண்பாடு மேற்கு வங்காளத்தில் - பங்குரா, பீர்பாம், மித்னாபூர்; பீகாரில் - பகல்பூர், மர்வானியா, பிரதாப்பூர்; உத்தரப்பிரதேசத்தில் - இலே கானியா, பகார், கிருங்கருளிபகுதி மற்றும் பேலன் சமவெளி; ஒரிசாவில் - சுன்தர்கார், பூரி, தேன் கார்ல்; ஆந்திரப் பிரதேசத்தில் - நாகார்சுன கொண்டா, சங்கனகல்லு, கிட்டலூர்; கருநாடகம் - பிரமகிரி, சலகல்லி, சிட்லபாடி; தமிழ்நாட்டில் - மெயிஞ்ஞானபுரம் கூத்தம்புளி, குதன்குளி, சாயர்புரம்; கட்டலங்குளம், குளத்தூர், புட்டம்தருவி, நாசரேத்து, மேலும்; மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வட்டத்திலுள்ள திடியன், தெ. கல்லுப்பட்டி, புதுப்பட்டி போன்ற இடங்களிலும் இப்பண்பாட்டுத் தடயங்கள் டாக்டர் கே.வி. இராமனால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மகாராட்டிரம் - நாசிக்கு, எல்லோரா, கார்லே குகைகள், கொங்கனப்பகுதி, குசராத்து - இலிங்கனாசு, மத்தியபிரதேசம் - சம்பல் சமவெளி, இரத்லாம், உச்சயினி, இந்தூர், இராசசுத்தான்-உதயபூர், சித்தூர், ஆசுமீர்.
இக்கால மக்கள் ஆற்றங்கரைகள் மட்டும் அன்றிக் கரைக்குச் சற்றுத் தொலைவிலும், மணற்பாங்கான இடங்களிலும், கடற்பகுதிகளிலும், குகைகளிலும் பாறை மறைவுகளிலும் தங்கள் வாழ்க்கையைக் கழித்தனர். இக்காலத்து மக்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் முற்காலத்தைவிட மிகவும் சிறியவை. இவை வெவ்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் அழகாகச் செய்யப்பட்டுள்ளன. இவ்வாயுதங்கள் படிகக்கல், மணிக்கல், இரத்தினம், போன்ற உயர் வசைக் கற்களால் ஆனவை, மக்கள் பொதுவாக விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் சராய் நகர் ராய் என்னும் இடத்தில் நடத்திய அகழாய்வில் கனிமண்ணால் கட்டப்பட்ட அடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதே இடத்தில் மான், எருமை, காண்டாமிருகம் மீன், ஆமை முதலியவற்றின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது இக்கால மக்கள் இவ்விலங்குகளை உணவாக உட்கொண்டனர் என்பதைப் புலப்படுத்துகிறது. இவை அன்றி, இக்காலத்தில் பசு, குதிரை, ஆடு, நாய், எலி, முதலை, மீன் முதலிய விலங்குகள் வாழ்ந்தனவெனத் தெரிகிறது. மக்கள் மீன் பிடிக்கும் கலையையும் அறிந்திருந்தனர். சில இடங்களில் மக்கள் மட்பாண்டங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. சராய் நகர் ராயில் கூர்முனைக் கொண்ட ஆயுதம், சம பக்கம் கொண்ட அலகு போன்ற ஆயுதம் முதலியன கிடைக்கின்றன.
இக்காலத்தைய பட்டை தீட்டப்பட்ட, பட்டை தீட்டப்படாத கல் ஆயுதங்கள் கருநாடகத்திலும் பீகாரிலும் கிடைக்கின்றன. ஆனால், ஆந்திரத்திலுள்ள நாகார்சுன கொண்டாவில் பட்டை தீட்டப்படாத ஆயுதம் மட்டிலுமே காணப்படுகிறது. இது இந்தியாவிலேயே மிகப் பழமையான நுண்ணிய கற்கால இடமாகும். இத்தகைய ஆயுதங்கள் ஒரிசாவிலும் ஆந்திரத்திலும் கருநாடகத்திலும் வேறு பல இடங்களிலும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஒரு சிறந்த நுண்ணிய கற்காலப் பகுதியாகும். தேரி (Teri) என்னும் செம்மண் மேடுகளில் இவை காணப்படுகின்றன. இங்கு அம்பு வடிவ ஆயுதம், அலகு போன்ற ஆயுதம், சிறிய செதுக்கிகள், முக்கோண வடிவ ஆயுதம் ஆகியன காணப்படுகின்றன. ஆனால், கற்கோடரிகளும் பானை ஓடுகளும் இங்குக் காணப்படவில்லை. குசராத்திலும் இலிங்கனாசு என்னும் இடத்திலும் பானை ஓடுகள் காணப்படவில்லை. ஆனால், இவ்விடத்தில் மனிதன் எலும்புகளும் விலங்குகளின் எலும்புகளும் காணப்படுகின்றன. இதிலிருந்து இங்கு வாழும் மக்கள் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் முதலிய தொழில்களைத் தெரிந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் இவர்கள் குகைகளிலும், இராசசுத்தான் போன்ற இடங்களில் மூங்கிலினால் ஆன வீடுகளிலும் வாழ்ந்துள்ளனர் எனக் கருதப்படுகிறது. வீடுகளின் தரை நன்கு கற்களால் அமைக்கப்பட்டது.
இவர்கள் பொதுவாக இறந்தவர்களைப் புதைத்தனர், பிணத்தின் தலை மேற்குத் திசையில் இருக்கும்படி நீளவாக்கில் படுக்க வைத்துக் கைகளை மார்புக்குமேல் வைத்துப் புதைத்தனர்.
கரிமம் 14 முறைப்படி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதிலிருந்து இந்நாகரிமானது கி.மு. 8000 முதல் கி.மு. 2000 வரை இருந்திருக்கக் கூடும் என உறுதி செய்யப்பட்டுள்ளன.
<b>புதிய கற்காலம் (Neolithic):</b> பழைய கற்காலப் பண்பாட்டினைத் தொடர்ந்து புதிய கற்காலப் பண்பாடு தொடங்கியது. இப்பண்பாட்டு மக்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்திருந்தனர். உணவு சேகரிப்பவர்களாக முற்காலங்களில் இருந்த மனிதர்கள் இக்காலத்தில் விவசாயம் செய்து உணவுத் தானியங்களை உற்பத்தி செய்தனர். இக்காலத்தில் நடந்த இம்மாறுதல் ஒரு விவசாயப் புரட்சி என்றே கருதப்படுகிறது. இம்மக்கள் அறுவடை செய்ய உதவும் ஆயுதம், ஈட்டி, கோடல், கல் ஆயுதம் ஆகியவற்றைச் செய்தனர். இவ்வாயுதங்கள்<noinclude></noinclude>
ozj0yd7e01hwr5hgblbld3eva05eyj9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/613
250
637301
1958685
1916097
2026-08-19T14:00:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|589|இந்தியா}}</noinclude>நன்றாக மெருகு ஏற்றப்பட்டு அழகான தோற்றத்தோடு காணப்படுகின்றன. இக்கால மக்கள் மட்பாண்டங்கள் செய்யும் தொழிலை அறிந்திருந்தனர். பசு, ஆடு, பன்றி, நாய் போன்ற விலங்குகளை வீட்டில் வளர்க்கத் தொடங்கினர். இதிலிருந்து இப்புதிய கற்கால மக்கள் பழைய கற்கால மக்களைப் போல நாடோடியானதும் காட்டு மிராண்டித்தனமானதுமான வாழ்க்கையைவிட்டு ஒரே இடத்தில் தங்கிக் குடும்ப வாழ்க்கையை நடத்தினர் என்பது தெளிவாகிறது.
இப்பண்பாடானது இந்தியா முழுவதும் ஒரே தன்மையானதாக அமையவில்லை. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு வகையாக அமைந்திருந்தது. வட இந்தியப் புதிய கற்கால மக்கள் பர்சோகும், காப்கிரால், மார்தாண்டு, காலிபங்கன், உலோத்தல் ஆகியவிடங்களில் சுடாத செங்கற்களைக் கொண்டு வீடுகளைக் கட்டி வாழ்ந்தனர். சில வேளைகளில் மரங்களையும் பயன்படுத்தினர். தரைகள் நன்றாக மண்ணால் மெழுகப்பட்டும் சில இடங்களில் காவியும் அதன்மேல் பூசப்பட்டுள்ளது. இக்கால மக்களின் மற்றொரு கண்டுபிடிப்பு மட்பாண்டங்கள் செய்ய உதவும் சக்கரம் (Potters Wheel) ஆகும். இதற்கு முன்பு கையினால் மட்டும் மட்பாண்டங்களை மனிதன் செய்து வந்தான். பின்னர்ச் சக்கரத்தைப் பயன்படுத்தி நல்ல தரமான மட்பாண்டங்கள் செய்தான். இக்கால மக்கள் கற்களாலான ஆயுதங்கள் மட்டும் அன்றி, எலும்புகளால் ஆன ஆயுதங்களையும் பயன்படுத்தி வந்தனர்.
இம்மக்கள் இறந்த மனிதர்களின் உடங்களை நீளவாக்கில் படுக்க வைத்தே புதைத்து வந்தனர். சில இடங்களில் இறந்த மனிதனோடு வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடு, நாய் முதலிய விலங்குகளையும் சேர்த்தே புதைத்தனர். இம்முறை காலிபங்கன், உலோத்தல் முதலிய இடங்களில் காணப்படுகிறது.
இக்கற்காலம் கி.மு. 2400 முதல் கி.மு 1400 வரை இங்கு நீடித்திருந்தது.
தென் இந்தியப் புதிய கற்காலம் அல்லூர், கோடேகல், பலவாய், தேர்டல், பிரமகிரி, சங்கனகல்லு, பிக்லிகால், மாசுக்கி, நாகாச்சுனகொண்டா, உத்னூர், டி. நர்சிப்பூர், தெக்கலக் கோட்டை ஆகிய இடங்களில் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. சர். மார்டிமர் வீலர் பிரமகிரியில் அகழாய்வு நடத்தினார். தமிழகத்தில் பையம்பள்ளி, அப்புக் கல்லு முதலிய தர்மபுரி வடார்க்காடு பகுதிகளில் புதிய கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன.
இக்கால மக்கள் பயன்படுத்திய கற்கோடரிகளின் முனை நன்கு கூராக இருந்தது. மக்கள் செம்பு உலோகத்தினால் ஆன ஆயுதங்களையும் பயன்படுத்தினர். பிக்லிகால், சங்கனகல்லு, பிரமதிரி ஆகிய இடங்களில் பெரும்பாலும் கையால் ஆன சாம்பல் நிற மட்பாண்டங்களே பயன்பாட்டில் இருந்தமை தெரிய வருகிறது. மக்கள் விவசாயம் செய்யக் கற்றிருந்தனர். ஆடு மாடுகள் மேய்க்கவும் வீட்டில் வளர்க்கவும் கற்றிருந்தனர். மக்கள் வீடுகளைச் கட்டி வாழ்ந்தனர். பிக்லிகாலில் மக்கள் செவ்வக மற்றும் சதுர வடிவ வீடுகளில் வாழ்ந்தனர். இவ்வீடுகளின் சுவர்கள் மூங்கிற்பாயினால் ஆனவை. இந்த மூங்கில் பாய் மீது களிமண் நன்றாகப் பூசப்பட்டுள்ளது. தரைக் களிமண்ணும் சாணமும் கலந்த கலவையினால் ஆனது.
மேலும், இக்காலத்தில் சுடுமண் பொம்மைகளான காளை, மனித முண்டம் ஆகியவை கிடைக்கின்றன. வட இந்தியாவில் காணப்படுவது போலவே இங்கும் மக்கள் இறந்தவர்களின் உடலைப் புதைத்தே வந்தனர்.
இத்தென்னிந்தியப் புதிய கற்காலம் கரிமம் 14 முறைப்படி ஆராய்ந்ததில் சுமார் கி.மு. 2500 கி.மு 1000 வரை நீடித்திருந்தது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
<b>கிழக்கிந்தியப் புதிய கற்காலம்</b> இமயமலைப் பகுதி, அசாம், சிராந்து மற்றும் பல இடங்களில் நிலவி இருந்தது.
இப்பகுதிகளில் மக்கள் பிடியுள்ள கற்கோடரி, கூழாங்கற்களால் ஆன சுத்தியல் போன்ற ஆயுதம், ஆப்புவடிவ ஆயுதம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். இவை யாவும் நல்ல வடிவில் அமைந்துள்ளன. மற்றும் சிராந்து என்னும் பகுதியில் எலும்பினால் ஆன பல வகை ஆயுதங்கள் வேட்டையாட, தோல் உரிக்க, துணி நெய்ய, தைக்க மற்றும் நிலத்தைத் தோண்டப் பயன்படுத்தப்பட்டன. இம்மக்கள் பீடபூமிப் பகுதியிலும் மலை அடிவாரங்களிலும் வாழ்ந்தனர். ஆனால், சிராத்து என்னும் இடத்தில் மட்டும் இம்மக்கள் சதுப்பு நிலப்பரப்பில் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ளது போல் இங்கும் மக்கள் வட்டமான வீடுகளில் வாழ்ந்தனர். வீட்டின் சுவர் களிமண் பூசப்பட்ட மூங்கில் தட்டியாவானது. கூரை காய்ந்த புல்லினால் வேயப்பட்டுள்ளது. தரை நன்றாகக் களிமண் பூசப்பட்டுள்ளது.
இக்கால மக்கள் சிவப்பு நிறம், நல்ல சாம்பல் நிறம், கறுப்பு-சிவப்பு ஆகிய நிறங்களில் மட்பாண்டங்களைச் செய்தனர். மட்பாண்டங்களும் துளையிடப்பட்ட கிண்ணம், உதடு வைக்கப்பட்ட கிண்ணம், மூக்குவைக்கப்பட்ட சாடி ஆகியன குறிப்பிடத்தக்-<noinclude></noinclude>
iczg6qnsgtsv77ktj6c4ndbjapxcjtb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/614
250
637302
1958686
1916100
2026-08-19T14:07:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|590|இந்தியா}}</noinclude>கன. மட்பாண்டங்களைக் கைகளாலும் சக்கரத்தாலும் செய்தனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 614
|bSize = 450
|cWidth = 189
|cHeight = 93
|oTop = 42
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{c|புதிய கற்காலக் கருவிகள்}}
சிராந்து என்னுமிடத்தில் எரிக்கப்பட்ட நெல் கோதுமை ஆகியன அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டன. அவை இக்கால மக்கள் உழவுத் தொழிலில் கொண்டிருந்த ஈடுபாட்டை உணர்த்துகின்றன. மற்ற இடங்களில் கிடைப்பது போலவே இங்கும் சுடுமண் பொம்மைகளான பறவைகள், விலங்குகள், நாகதேவதை ஆகியன கிடைக்கின்றன.
இக்கிழக்கிந்தியப் புதிய கற்காலம் கி.மு. 2500 முதல் கி.மு. 1650 வரை நீடித்திருந்தது.
<b>வரலாற்றுக்கு முந்திய கால ஓவியங்கள்:</b> முற் பழங்காலத்தையும் இடைப் பழங்கற்காலத்தையும் சார்ந்த ஓவியங்கள் இந்தியாவில் இதுவரை எங்கும் கிடைக்கப் பெறவில்லை. இதற்குப் பிற்காலத்திலிருந்துதான் இந்தியாவில் ஓவியங்கள் காணப்படுகின்றன, வட இந்தியாவில் - பர்சாகும், தால்பான், இமயமலைப் பகுதிகளிலும் மத்திய இந்தியாவில் - ஆதம்கார், மகதேவ், விசைகார் முதலிய இடங்களிலும் தென் இந்தியா - குப்கல்லு, பிக்லிகால் ஆகிய இடங்களிலும் தமிழகத்தில் பல இடங்களிலும் ஓலியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்திய காலங்களில் மனிதன் வேட்டையாடுவதையே முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்ததால் இதுவே பெரும்பாலான ஓலியங்களில் இடம்பெற்றுள்ளது. முதன்முதலில் கார்லே என்பவர் பாறை ஓவியத்தை இந்தியாவில் கண்டு பிடித்தார்.
மனித உருவம் மட்டும் அன்றி யானை, பன்றி, காண்டாமிருகம், எருமை, நாய், மான், புலி, ஆடு முதலிய விலங்குகளும் ஓவியத்தில் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் பெரும்பாலும் கோடுகள் மூலமே வரையப்பட்டுள்ளன.
பெண்கள் நடனமாடும் ஓவியங்கள் மத்திய பிரதேசத்திலுள்ள பீம்பெட்கா என்னும் இடத்தில் காணப்படுகின்றன. இவை யாவும் பிற்பழங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகும்.
நுண்ணிய கற்காலத்தைச் சார்ந்த ஓவியம் ஒன்று விசைகார் என்னும் இடத்தில் காணப்படுகிறது. இதில் ஒரு காண்டாமிருகத்தை ஐந்து பேர் அம்புகளுடன் தாக்குவது போல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதே காலத்தைச் சேர்ந்த மற்றோர் ஓவியம் ஏற்கெனவே கூறிய பீம்பெட்கா என்னும் இடத்தில் காணப்படுகிறது. இந்த ஓவியமானது இறந்த ஒரு குழந்தையைப் புதைக்கும் காட்சியாக அமைந்துள்ளது.
ஒரு மானை வேட்டையாடும் காட்சி புதிய கற்கால இடமான பர்சாகும் என்னும் இடத்தில் பாறையின் மீது தீட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்னார்க்காடு, தருமபுரி மாவட்டங்களில் குதிரை மீது சவாரி செய்யும் காட்சி, கிராம நடனப் பெண்களின் ஓவியங்கள் ஆகியவை அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இரும்புக் காலத்தைச் சார்ந்தனவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு, கருப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன. இவை காய் அல்லது செடி, கொடிகளின் சாற்றில் கலந்தோ அல்லது வண்ணம் கரையக்கூடிய கொழுப்புப் பொருளைப் பயன்படுத்தியோ ஒரு மெல்லிய குச்சி கொண்டு ஓவியங்களாகத் திட்டப்பட்டுள்ளன.
இவ்வோவியங்களைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே, இவ்வாராய்ச்சியின் முடிவுகள் இக்கால ஓவியங்களைப் பற்றிய முழு விவரங்களை அறிய அனைவருக்கும் உதவியாக இருக்கும் என நம்பலாம்.
<b>செம்பு உலோகக் காலம்:</b> இக்காலம் பொதுவாக வட இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்-<noinclude></noinclude>
j5l564du9yqmvzptewnvrfm62tnkxzg
1958687
1958686
2026-08-19T14:07:27Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1958687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|இந்தியா|590|இந்தியா}}</noinclude>கன. மட்பாண்டங்களைக் கைகளாலும் சக்கரத்தாலும் செய்தனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 614
|bSize = 450
|cWidth = 189
|cHeight = 93
|oTop = 42
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{c|புதிய கற்காலக் கருவிகள்}}
சிராந்து என்னுமிடத்தில் எரிக்கப்பட்ட நெல் கோதுமை ஆகியன அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டன. அவை இக்கால மக்கள் உழவுத் தொழிலில் கொண்டிருந்த ஈடுபாட்டை உணர்த்துகின்றன. மற்ற இடங்களில் கிடைப்பது போலவே இங்கும் சுடுமண் பொம்மைகளான பறவைகள், விலங்குகள், நாகதேவதை ஆகியன கிடைக்கின்றன.
இக்கிழக்கிந்தியப் புதிய கற்காலம் கி.மு. 2500 முதல் கி.மு. 1650 வரை நீடித்திருந்தது.
<b>வரலாற்றுக்கு முந்திய கால ஓவியங்கள்:</b> முற் பழங்காலத்தையும் இடைப் பழங்கற்காலத்தையும் சார்ந்த ஓவியங்கள் இந்தியாவில் இதுவரை எங்கும் கிடைக்கப் பெறவில்லை. இதற்குப் பிற்காலத்திலிருந்துதான் இந்தியாவில் ஓவியங்கள் காணப்படுகின்றன, வட இந்தியாவில் - பர்சாகும், தால்பான், இமயமலைப் பகுதிகளிலும் மத்திய இந்தியாவில் - ஆதம்கார், மகதேவ், விசைகார் முதலிய இடங்களிலும் தென் இந்தியா - குப்கல்லு, பிக்லிகால் ஆகிய இடங்களிலும் தமிழகத்தில் பல இடங்களிலும் ஓலியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்திய காலங்களில் மனிதன் வேட்டையாடுவதையே முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்ததால் இதுவே பெரும்பாலான ஓலியங்களில் இடம்பெற்றுள்ளது. முதன்முதலில் கார்லே என்பவர் பாறை ஓவியத்தை இந்தியாவில் கண்டு பிடித்தார்.
மனித உருவம் மட்டும் அன்றி யானை, பன்றி, காண்டாமிருகம், எருமை, நாய், மான், புலி, ஆடு முதலிய விலங்குகளும் ஓவியத்தில் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் பெரும்பாலும் கோடுகள் மூலமே வரையப்பட்டுள்ளன.
பெண்கள் நடனமாடும் ஓவியங்கள் மத்திய பிரதேசத்திலுள்ள பீம்பெட்கா என்னும் இடத்தில் காணப்படுகின்றன. இவை யாவும் பிற்பழங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகும்.
நுண்ணிய கற்காலத்தைச் சார்ந்த ஓவியம் ஒன்று விசைகார் என்னும் இடத்தில் காணப்படுகிறது. இதில் ஒரு காண்டாமிருகத்தை ஐந்து பேர் அம்புகளுடன் தாக்குவது போல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதே காலத்தைச் சேர்ந்த மற்றோர் ஓவியம் ஏற்கெனவே கூறிய பீம்பெட்கா என்னும் இடத்தில் காணப்படுகிறது. இந்த ஓவியமானது இறந்த ஒரு குழந்தையைப் புதைக்கும் காட்சியாக அமைந்துள்ளது.
ஒரு மானை வேட்டையாடும் காட்சி புதிய கற்கால இடமான பர்சாகும் என்னும் இடத்தில் பாறையின் மீது தீட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்னார்க்காடு, தருமபுரி மாவட்டங்களில் குதிரை மீது சவாரி செய்யும் காட்சி, கிராம நடனப் பெண்களின் ஓவியங்கள் ஆகியவை அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இரும்புக் காலத்தைச் சார்ந்தனவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு, கருப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன. இவை காய் அல்லது செடி, கொடிகளின் சாற்றில் கலந்தோ அல்லது வண்ணம் கரையக்கூடிய கொழுப்புப் பொருளைப் பயன்படுத்தியோ ஒரு மெல்லிய குச்சி கொண்டு ஓவியங்களாகத் திட்டப்பட்டுள்ளன.
இவ்வோவியங்களைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே, இவ்வாராய்ச்சியின் முடிவுகள் இக்கால ஓவியங்களைப் பற்றிய முழு விவரங்களை அறிய அனைவருக்கும் உதவியாக இருக்கும் என நம்பலாம்.
<b>செம்பு உலோகக் காலம்:</b> இக்காலம் பொதுவாக வட இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்-<noinclude></noinclude>
ruj6wgqqnuhtbjhdganvw1xah1cgtch
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/615
250
637306
1958688
1916144
2026-08-19T14:15:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|591|இந்தியா}}</noinclude>தைத் தொடர்ந்து வருவதாகும். இக்காலம் புதிய கற்காலத்தோடு சேர்த்து தென் இந்தியாவில் காணப்படுகிறது இக்காலக்கட்டத்தில் முதன்முறையாக மக்கள் செம்பு உலோகத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆகவே, இக்காலம் இப்பெயர் பெற்றது.
செம்பு உலோகக் காலம் இந்தியாவில் பல பகுதிகளில் நிலவிய பண்பாட்டின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளளது.
<b>பானாசு ஆற்றுப் பண்பாடு:</b> இப்பண்பாடு இராசசுத்தானிலுள்ள பானாசு (Panas) என்னும் ஆற்றங்கரையில் தழைத்திருந்ததால் இப்பெயர் பெற்றது. அகார், சிலுண்டு முதலிய சில இடங்களில் இப்பண்பாட்டுத் தடயங்கள் காணப்படுகின்றன. இக்கால மக்கள் சுடாத செங்கற்களால் வீடுகளைக் கட்டி வாழ்ந்தனர். கூரை காய்ந்த புல்லினால் வேயப்பட்டது. தரை சில இடங்களில் சுட்ட களிமண்ணாலும் சில இடங்களில் சுடாத களிமண்ணாலும் அமைக்கப்பட்டது. செம்பினால் கோடரி, கத்தி போன்ற ஆயுதங்களைச் செய்தனர். ஆனால், இவை அரப்பா காலத்தைவிட தரத்தில் சற்றுக் குறைவாகவே இருந்தன. பொதுவாகவே சிவப்பு, கருப்பு-சிவப்பு வகை மட்பாண்டங்களையே இவர்கள் பயன்படுத்தினர். இதன் வெளிப்புறம் வெள்ளைச் சாயத்தால் தீட்டப்பட்டுள்ளது. இப்பண்பாட்டுப் பானையின் கழுத்துப்பகுதியில் பதிந்த ஒரு மெல்லிய கோடு காணப்படும். பெரும்பாலும் சக்கரத்தைக் கொண்டே மட்பாண்டங்களைச் செய்தனர். எனினும் சிலர் கையால் செய்யப்பட்ட மட்பாண்டங்களையும் பயன்படுத்தினர். கரிமம் 14 முறைப்படி இப்பண்பாடு கி.மு. 2000 முதல் கி.மு. 1400 வரை வளர்ந்திருந்ததாக அறியப்படுகிறது.
<b>கயத்தா பண்பாடு:</b> இப்பண்பாடு கலிசிந்து ஆற்றங்கரையில் வளர்த்திருந்தது. இம்மக்கள் பயன்படுத்திய செம்பினால் ஆன பொருள்களும் ஆயுதங்களும் அதிக அளவில் இப்பகுதியில் கிடைக்கின்றன; கல்லாயுதங்களையும் பயன்படுத்தினர். இம்மக்கள் கட்டிய வீடுகள் பற்றிய முழு விவரம் எந்தவோர் அகழாய்விலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. எனினும் சில இடங்களில் மூங்கிலால் வீடு கட்டப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுவதை வைத்து இவர்கள் செவ்வகம் அல்லது வட்ட வடிவமான வீடுகளில் வசித்து இருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இக்கால மக்கள் செம்பினால் செய்யப்பட்ட வளையங்கள், மணிக்கற்கள், மாவுக்கல் (Steatite) போன்ற உயர்வகைக் கற்களைப் பதித்த கழுத்தணிகளைப் பயன்படுத்தினர். இம்மக்கள் மாநிற மற்றும் வண்ணம் தீட்டப்பட்ட சிவப்புநிற மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர். மட்பாண்டங்கள் மேல் சீப்புகள் கொண்டு கோடுகள் வரையப்பட்டுள்ளன. கரிமம் 14 முறை ஆய்விலிருந்து இப்பண்பாடு கி.மு. 2000 முதல் கி.மு. 1800 வரை வளர்ந்திருந்தது எனத் தெரியவருகிறது.
<b>மாளவப் பண்பாடு:</b> பானாசு, கயத்தா பண்பாடுகளை அடுத்து மாளவப் (Malava) பண்பாடு தொடர்ந்தது. இப்பண்பாடு மத்திய பிரதேசத்தில் இரான், நாக்தா, நல்ததோலியிலும், மகாராட்டிரத்தில் இனாம்காவிலும் வடக்கு விந்திய மலைப்பகுதி, தக்காண இலாவாபீடபூமிப் பகுதிகளிலும் காணப்பட்டது. நருமதையின் தென் கரையில் அமைந்துள்ள நவ்ததோலியில் மட்டிலுமே இப்பண்பாடு பற்றிய முழு விவரம் கிடைக்கிறது. இங்கு மக்கள் வாழ்ந்த வீடு மூங்கில் தட்டியினால் ஆனது. தட்டி மீது களிமண் பூசப்பட்டுள்ளது. தரை சுண்ணாம்பு கலந்த கலவையினால் ஆனது. மக்களின் குடியிருப்புகளைச் சுற்றிப் பாதுகாப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டிருந்தன. நல்ததோலியில் இளஞ்சிவப்பு மட்பாண்டங்கள் மீது கருப்பு நிறம் தீட்டப்பட்ட பல்வகை மட்பாண்டங்கள் கிடைக்கின்றன. இவை மாளவ வகை மட்பாண்டங்கள் எனச் சொல்லப்படுகின்றன. இப்பண்பாடு காணப்படும் எல்லா இடங்களிலும் இவ்வகை மட்பாண்டங்கள் கிடைக்கின்றன. இம்மட்பாண்டங்கள் மீது பலவகைக் கோடுகள், மனித விலங்குகளின் உருவங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. இம்மக்கள் கோதுமை, பார்லி, அரிசி, பசு, மான், பன்றி ஆகியவற்றின் இறைச்சியை உணவாக உட்கொண்டனர். செம்பினால் ஆன உலோக ஆயுதங்களோடு கற்களால் ஆன ஆயுதங்களையும் இவர்கள் பயன்படுத்தினர். செம்பு உலோகத்தால் ஆன காண்டாமிருகம், யானை, எருமை, காளை இழுத்துச் செல்லும் ஒரு தேரும் அதன் மீது ஒரு மனிதன் அமர்த்து அதை ஓட்டுவது போல அமைந்த பொம்மைகளும் தபதி ஆற்றுப்படுகையிலுள்ள சவால்டா என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பண்பாடு கி.மு. 1700 முதல் கி.மு. 1400 வரை தழைத்திருந்தது.
<b>சோர்வே பண்பாடு</b> மகாராட்டிரம் மற்றும் தக்காண பீடபூமிப் பகுதிகளில் காணப்படுகிறது. காணப்படும் இடங்கள் தைமாபாத்து, நிவேசா, பிரகாசம், இனாம்கான், சந்தோலி, சோர்வே மற்றும் சில இடங்கள், இப்பண்பாட்டு மக்கள் பெரும்பாலும் பார்லி, கோதுமை, அரிசி ஆகிய தானியங்களை உட்கொண்டனர். மேலும், பல மிருகங்களின் இறைச்சியை உண்டதற்கான சான்றுகளும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மக்கள் மண்-<noinclude></noinclude>
q4wnkbpqiq6o8al6oknurda25jwt4te
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/616
250
637307
1958690
1916145
2026-08-19T14:32:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|592|இந்தியா}}</noinclude>ணால் ஆன மூக்கு வைக்கப்பட்ட சாடி, கிண்ணம் மற்றும் பல மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர். இவை யாவும் நன்றாகச் சுடப்பட்டவை. இவை சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. பொன், செம்பு, தந்தம் ஆகியவற்றால் ஆன வளையல், சலங்கை, காதணி போன்ற அணிகளைப் பயன்படுத்தினர். இவ்வணிகளை அழகுபடுத்தப் படிக்கல், மணிக்கல், இரத்தினம் போன்ற உயர்வகைக் கற்களைப் பயன்படுத்தினர். இக்கால மக்கள் செம்பினால் ஆன கோடரி, உளி, கத்தி, மீன் தூண்டில், அரிவாள் போன்ற ஆயுதங்களோடு மணிக்கல், படிக்கல் போன்ற கற்களால் ஆன ஆயுதங்களையும் பயன்படுத்தினர். இப்பண்பாடு கி.மு. 1400 முதல் கி.மு. 1100 வரை தழைத்திருந்ததாக அறியப்படுகிறது.
கிழக்கித்தியச் செம்பு உலோகக் காலம் பீகார் வங்காளம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன. பீகாரிலுள்ள சிராந்து என்னும் இடத்தில் இக்கால மக்கள் மற்ற இடங்களில் காணப்படுவது போலவே வீடுகள் கட்டி வாழ்ந்தனர். வீடுகளின் கூரை காய்ந்த தழையினால் வேயப்பட்டுள்ளது மக்கள் அரிசி, கோதுமை போன்ற தானியங்களைப் பயிர் செய்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இங்கும் மக்கள் செம்பு உலோகத்தாலும் கற்களாலும் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தினர். மேலும் சுடுமண் பொம்மைகள், நாகதேவதை, மிருகங்கள் பறவைகள் ஆகியனவும் இங்குக் கிடைக்கின்றன. மக்கள் சிவப்பு, கருப்பு-சிவப்பு, கருப்பு, சாம்பல் ஆகிய நிறங்களில் மட்பாண்டங்களைச் சக்கரத்தினால் செய்தனர். இப்பண்பாட்டுத் தடயங்கள் வங்காளத்திலுள்ள பர்த்துவான் என்னுமிடத்திலும் கிடைக்கின்றன. இங்கு மக்கள் கறுப்பு-சிவப்பு, பளபளப்பு மிக்க கருப்பு போன்ற மட்பாண்டங்களைக் கையினாலும், சக்கரத்தினாலும் பல வடிவங்களில் செய்து பயன்படுத்தினர். பீகாரிலும் இங்கும் இறத்தவர்களைத் தாழியிலிட்டுப் புதைத்தனர். இந்தப் பண்பாடு வங்கத்தில் பரத்பூர் என்னுமிடத்திலும் காணப்படுகிறது. இப்பண்பாடு கி.மு. 1600 முதல் கி.மு.800 வரை தழைத்திருந்தது.
<b>சிவப்பு நிற மட்பாண்டப் பண்பாடு</b>, யமுனை, கங்கைச் சமவெளி, சாசகான்பூர், பரேலி, ஈடர்வா, தாடு மீரட்டு, சகரன்பூர், முசாபர்நகர், இராசசுத்தானிலுள்ள பரத்பூர், செய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் சிவப்பு நிறமாகக் காணப்படுகின்றமையால் இப்பண்பாடு இப்பெயர் பெற்றது. சாடிகள், கிண்ணங்கள், தட்டுகள் போன்ற மட்பாண்டங்களை இம்மக்கள் பயன்படுத்தினர். சில இடங்களில் இவற்றின்மீது வண்ணமும் தீட்டப்பட்டுள்ளது. மக்கள் கற்களால் ஆன வீடுகளைக் கட்டி வாழ்ந்ததற்கான தடயங்கள் செய்ப்பூரிலுள்ள சோத்பூர், சண்டிகரிலுள்ள சாரன்குர் ஆகிய இடங்களில் கிடைக்கின்றன. கற்களால் ஆன ஆயுதங்களோடு செம்பினால் ஆன ஈட்டி, உளி ஆகிய பலவகை ஆயுதங்களையும் மக்கள் இக்காலத்தில் பயன்படுத்தினர். இப்பண்பாடு கி.மு. 2600 முதல் கி.மு. 1100 வரை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
<b>பெருங்கற்காலம்:</b> தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடு புதிய கற்காலத்தை அடுத்து வந்தது. இப்பண்பாட்டின் தொடக்கம் கி.மு. 300 என்று கருதப்படுகிறது. இக்கால மக்கள் பண்பாட்டில் முதிர்ச்சி அடைத்தவர்களாய் விளங்கினர். பெருங்கற்கால மக்கள் பெருங்கற்களைப் பயன்படுத்தி இறந்தவர்களைப் புதைத்தனர். எனவே, இப்பண்பாடு இப்பெயர் பெற்றது. கருநாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்பண்பாட்டின் சின்னங்கள் காணக் கிடக்கின்றன. தமிழகத்தில் பரவலாக இப்பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சானூர், கொடுமணல் முதலிய இடங்களிலும் கருநாடகத்தில் பிரமகிரியிலும் பெருங்கற்காலப் பண்பாட்டுப் பகுதிகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
{{right|கே.வி.இரா.}}
<b>சிந்து வெளி நாகரிகம்</b> உலகில் தோன்றிய சிறந்த நாகரிகங்களுள் குறிப்பிடத்தக்க நாகரிகம், சிந்து நதிப்பகுதியில் இந்நாகரிகம் வளர்த்தமையால் சிந்துவெளி நாகரிகம் எனப் பெயர்பெற்றது. இந்நாகரிகத்தின் எஞ்சிய அழிபாடுகள் பெருமளவில் அகழாய்வுகள், கள ஆய்வுகள் மூலம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியின் பல்வேறு பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சிந்து வெளி நாகரிகம் நிலவிய இடங்களுள் குறிப்பிடத்தக்கவை அரப்பா, மொகஞ்சோதாரோ, சான்கோதரரோ, உலோகஞ்சோ- தாரோ, அலிமுராத்து, பாண்டிவாகி, அம்ரி, காலிபங்கள், உலோதல் ஆகிய இடங்களாகும். சிந்து வெளி நாகரிகப் பகுதிகள் இன்றைய ஆப்கானிசுத்தான், பாகிசுத்தான், இந்தியா ஆகிய நாடுகளில் உள்ளன. இந்நாகரிகம் கி.மு. 3250 முதல் 2750 வரை தழைத்தோங்கியிருந்தது. இங்குக் கண்டுபிடித்த கட்டடங்கள் ஒரு பெரும் நகர நாகரிகம் இருந்ததற்கான கூறுகளைக் கொண்டுள்ளன. மொகஞ்சோதாரோவும் அரப்பாவும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரங்களாகும். இங்கு வீடுகள் நேராக ஒரே வரிசையில் கட்டப்பட்டுள்ளன. தெருக்கள் நீளமாகவும் அகலமாகவும் காணப்படுகின்றன. வீடுகள் சிறந்த முறையில் பல அறைகளையும் குளிக்கும் அறைகளையும் சாய்க்-<noinclude></noinclude>
gh8x39upxgr3wak77o2g6y4zwsvfx1d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/617
250
637308
1958689
1916146
2026-08-19T14:31:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|593|இந்தியா}}</noinclude>கடைகளையும் கொண்டு விளங்கின. ஊரின் நடுவில் பொதுக் கிணறுகள் காணப்பட்டன. மொகஞ்சோதாரோவில் பொதுக்குளம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அரப்பாவில் தானியக் கிடங்கு ஒன்றும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இம்மக்கள் பிறநாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இம்மக்கள் பசு, எருது, நாய் ஆகிய விலங்குகளை அறித்திருந்தனர். பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருந்தனர். அகழாய்வில் பல முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துகளை அறிஞர்கள் இதுவரை படித்திலர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 617
|bSize = 450
|cWidth = 266
|cHeight = 107
|oTop = 35
|oLeft = 93
|Location = center
|Description =
}}
{{c|காலிபங்கன்}}
<b>வேதகாலம் முதல் கி.பி. 1206 வரை</b>: இந்திய வரலாறு இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓரளவு தொடங்குகிறது என்று கருதலாம். இதில் ஏறத்தாழக் கி.மு. 2500-இலிருந்து கி.மு. 1500 வரையுள்ள காலப்பகுதியிம் வடமேற்கு இந்தியாவில் சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்தது. அதுவும் கிறித்துவிற்கு முன் பதினைந்து நூற்றாண்டுக் கால அளவில் மறைந்து போயிற்று. அது மறைந்ததற்குத் தலையாய காரணம் மத்திய ஐரோப்பா, மத்திய ஆசியாப் பகுதிகளிலிருந்து பாரசீகம் வடமேற்குக் கணவாய்கள் வழியாக இப்போது பாகிசுத்தான் என்று வழங்கும் நாட்டினுட் புகுந்த ஆரியர்களே என்பது பல அறிஞர்களுடைய கருத்து. இந்த ஆரியர்கள் ஆரியமொழி என்னும் ஒருவகை மொழி பேசியவர்கள். வடமேற்கு இந்தியப் பகுதியை வந்தடைந்த ஆரியர்கள் தொடக்கத்தில் நாடோடிகளாக இருந்தனர். இந்தியாவிற்கு வந்தபின் ஒரே பகுதியில் தொடர்ந்து பல காலம் தங்கும் பழக்கத்தை மேற்கொண்டனர். எனவே, வேளாண்மையும் சிற்றரசாட்சியும் தோன்றி வளரலாயின.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து நிலைத்துக் கொண்ட பிறகுகூட இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். பெரும்பாலான மக்கள் ஓர் இடம் விட்டு மற்றோர் இடம் வந்து தங்கிப் புது வாழ்வு தொடங்குவராயினர், அதனைப் படையெடுப்பு என்பதை விடக் குடியேற்றம் என்று கூறுதலே சிறந்தது. இம்மக்கள் பஞ்சாபு, சிந்துப் பகுதிகளிலிருந்து நாளடைவில் கங்கைச் சமவெளியை வந்தடைத்தனர். இவ்வாறு பல நூற்றாண்டுகள் கழிந்தபின் வட ஆரியர்கள் இந்தியாவின் மத்திய, தென் பகுதிகளுக்கும் குடிபெயர்வாராயினர். ஏறத்தாழக் கி.மு. 500 அளவில் பெரும்பாலும் இந்தியா முழுவதும் இவர்கள் பரவி விட்டனர்.{{nop}}<noinclude></noinclude>
s3gddhzgum02w99h236geb4v3x73ux3
1958691
1958689
2026-08-19T14:34:06Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1958691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|இந்தியா|593|இந்தியா}}</noinclude>கடைகளையும் கொண்டு விளங்கின. ஊரின் நடுவில் பொதுக் கிணறுகள் காணப்பட்டன. மொகஞ்சோதாரோவில் பொதுக்குளம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அரப்பாவில் தானியக் கிடங்கு ஒன்றும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இம்மக்கள் பிறநாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இம்மக்கள் பசு, எருது, நாய் ஆகிய விலங்குகளை அறித்திருந்தனர். பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருந்தனர். அகழாய்வில் பல முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துகளை அறிஞர்கள் இதுவரை படித்திலர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 617
|bSize = 450
|cWidth = 266
|cHeight = 107
|oTop = 35
|oLeft = 93
|Location = center
|Description =
}}
{{c|காலிபங்கன்}}
<b>வேதகாலம் முதல் கி.பி. 1206 வரை</b>: இந்திய வரலாறு இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓரளவு தொடங்குகிறது என்று கருதலாம். இதில் ஏறத்தாழக் கி.மு. 2500-இலிருந்து கி.மு. 1500 வரையுள்ள காலப்பகுதியிம் வடமேற்கு இந்தியாவில் சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்தது. அதுவும் கிறித்துவிற்கு முன் பதினைந்து நூற்றாண்டுக் கால அளவில் மறைந்து போயிற்று. அது மறைந்ததற்குத் தலையாய காரணம் மத்திய ஐரோப்பா, மத்திய ஆசியாப் பகுதிகளிலிருந்து பாரசீகம் வடமேற்குக் கணவாய்கள் வழியாக இப்போது பாகிசுத்தான் என்று வழங்கும் நாட்டினுட் புகுந்த ஆரியர்களே என்பது பல அறிஞர்களுடைய கருத்து. இந்த ஆரியர்கள் ஆரியமொழி என்னும் ஒருவகை மொழி பேசியவர்கள். வடமேற்கு இந்தியப் பகுதியை வந்தடைந்த ஆரியர்கள் தொடக்கத்தில் நாடோடிகளாக இருந்தனர். இந்தியாவிற்கு வந்தபின் ஒரே பகுதியில் தொடர்ந்து பல காலம் தங்கும் பழக்கத்தை மேற்கொண்டனர். எனவே, வேளாண்மையும் சிற்றரசாட்சியும் தோன்றி வளரலாயின.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து நிலைத்துக் கொண்ட பிறகுகூட இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். பெரும்பாலான மக்கள் ஓர் இடம் விட்டு மற்றோர் இடம் வந்து தங்கிப் புது வாழ்வு தொடங்குவராயினர், அதனைப் படையெடுப்பு என்பதை விடக் குடியேற்றம் என்று கூறுதலே சிறந்தது. இம்மக்கள் பஞ்சாபு, சிந்துப் பகுதிகளிலிருந்து நாளடைவில் கங்கைச் சமவெளியை வந்தடைத்தனர். இவ்வாறு பல நூற்றாண்டுகள் கழிந்தபின் வட ஆரியர்கள் இந்தியாவின் மத்திய, தென் பகுதிகளுக்கும் குடிபெயர்வாராயினர். ஏறத்தாழக் கி.மு. 500 அளவில் பெரும்பாலும் இந்தியா முழுவதும் இவர்கள் பரவி விட்டனர்.{{nop}}<noinclude></noinclude>
gkf8ml12kn8ua9tp5u23c2hb77e0fpa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/618
250
637309
1958693
1916147
2026-08-19T14:39:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|594|இந்தியா}}</noinclude>இவர்கள் வருகைக்குப் பின் புகழிழந்து மறைத்து போனதே சிந்துவெளி நாகரிகம் ஆகும். ஆதலால் ஆரியர்க்கு முன்பும் ஆரியர் நாகரிகங்களினின்று வேறுபட்டிருந்த நாகரிகங்கள் இந்தியாவில் இருந்தன என்பது பெறப்படும். இவ்வாறு இந்தியாவில் பரவியிருந்த நாகரிகங்களில் திராவிட நாகரிகம் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கதாகும். அவர்களின் மொழிவேறு; ஓரளவு இனமும் வேறு, ஆயினும், ஆரியர்கள் இந்தியா முழுவதும் பரவிவிட்ட பிறகு இருவகை நாகரிகங்களும் ஓரளவு ஒன்றாலொன்று பாதிக்கப்பட்டதன் விளைவாக ஆரியர் வாழ்க்கை நெறிகளும் கோட்பாடுகளும் பிறராலும் திராவிடர் முதலியோர் நாகரிகங்கள் ஆரியராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன; முற்றிலும் என்று கூற முடியாவிடினும் ஓரளவு அது நிகழ்ந்ததுண்டு. ஆயினும் ஆரியர் நாகரிகத்தின் சிறந்த கூறுகள் யாவை, பிறர் நாகரிகங்களிற் கலந்த கூறுகள் யாவை என்று கூறுதல் இயலும். ஆரியர் மொழியான சமசுகிருதத்தால் மிகக் குறைவாகப் பாதிக்கப்பட்ட மொழி திராவிட மொழியாகிய தமிழ் எனலாம். ஆரியர்களின் குடியேற்ற முயற்சிகள் பல நூற்றாண்டுக் கால அளவில் நிகழ்ந்தன. அதற்கு ஒரு தலையாய காரணம் இந்தியாவிலிருந்த எளிதிற் கடத்தற்கரிய பேராறுகளும், தண்டகாரணியம் போன்ற அடர்த்த காடுகளும் ஆகும்.
ஆரியர்கள் பஞ்சாப் பகுதியில் குடியேறிய காலத்திலேயே இருக்கு வேதத்தின் பெரும் பகுதிகளை இயற்றிவிட்டனர். இயற்கைச் சக்திகளான தீ (அக்னி), நீர் (வருணன்), காற்று (வாயு), மேகம்-இடி-மின்னல்-மழை (இந்திரன்), இறப்பு (எமன்) முதலியவற்றை வழிபடும் பாடல்களே அவர்களின் வேதங்கள் ஆகும். இவற்றைப் பிற்காலத்தில் வேதவியாசர் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்று நான்கு வேதங்களாகப் பாகுபடுத்தினார். ஆரியர்கள் இந்திரன், வருணன், அக்கினி, வாயு, எமன், உருத்திரன், விட்டுணு முதலிய தேவர்களை வணங்கினர். அவர்கள் வேள்விகளை நிகழ்த்தி அத்தேவர்களை மகிழ்வித்து அவர்களிடமிருந்து வரங்கள் பெற்று வாழ்ந்தனர். அதாவது வேள்விகளின் விளைவாக இந்திரன் முதலிய இறையவர் மகிழ்வுற்று மழை பெய்வித்து. மக்கள் வாழ்க்கையை வளம்படச் செய்வர் என்று அவர்கள் நம்பினர். வேதப்பாடல்களில் மிகச் சிறந்த வழிபாட்டுப் பாடல் காயத்திரி என்னும் மந்திரம் ஆகும். இது விசுவாமித்திரர் என்னும் வேதகால முனிவரால் இயற்றப்பட்டது என்பர். வேதகாலத்தில் வசிட்டர், பரத்துவாசர், விசுவாமித்திரர், வாமதேவர், கௌதமர் முதலியோர் புகழ் பெற்ற முனிவர்கள். அவர்கள் வேதத்தை வாய்மொழியாகவே இயற்றியும் கற்பித்தும் பயின்றும் வந்தனர். அவற்றை எழுதாமலேயே காத்து வந்துள்ளனர்.
ஆரியர்களிடையே சநாதன தருமம் என்று ஒரு நெறி உண்டு. அதன் பகுதியாக வருண ஆசிரம தருமங்களும் நிறுவப்பட்டன. அவ்வகையில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சமுதாயத்தை நால்வகையாகப் பாகுபடுத்தி, ஒவ்வொருவருக்கும் உரித்தான தொழில்கள், கடமைகள் முதலியவற்றை ஒதுக்கி வைப்பது வருண தருமம் ஆகும். ஒவ்வொரு வரும் பிரமசாரி (மாணவர்), கிருகசுதர் (இல்லறத்தார்), வானப் பிரசுதர் (முற்றுத்துறக்க முயல்வோர்), சன்னியாசி (முற்றுந்துறத்தோர்) என்று நாவ்வகை நிலைகளில் முறையே நிற்றலே வாழ்க்கைநெறி என்றும் ஆரியர் கொண்டனர். ஆசிரம தருமம் ஆடவர்க்கே உரியது. மகளிர்க்கு பிரமசரியம், வானப்பிரசுதம், சன்னியாசம் என்னும் நிலைகள் கூறப்படவில்லை.
ஆரியர் குடும்ப வாழ்க்கை, பொதுவாழ்க்கை போலவே ஆண்பால் ஆக்கத்திற்கு உட்பட்டிருந்தது. தொடக்கக் காலத்தில் மகளிர்க்கும் வேதமோதும் உரிமையிருந்தது. ஆயினும், ஆண்களோடு சமமான சமூக உரிமைகளுக்கு உரியராக அவர்கள் எப்பொழுதுமே கருதப்பட்டதில்லை. பிற்காலத்தில் சாதிமுறை இறுகிப்போனது போல ஆண் ஆதிக்கமும் அந்தச் சமூகத்தின் ஓர் இயல்பாக இருந்தது. பிரமசரியத்திலிருந்து சன்னியாசம்வரை முன்னேறுதல் ஆசிரம தருமம் எனப்படும்.
வருணங்களில் பிராமணர் வைதிகக் கல்வி கற்றலையும் வேள்வி இயற்றலையும் தொழிலாகக் கொண்டனர்; சத்திரியர் என்போர் அரசர்கள்: அவர்கள் நாட்டையும் அறத்தையும் காத்தல் வேண்டும். வைசியர் கைத்தொழில், வாணிகம் முதலியவற்றில் ஈடுபடுதல் வேண்டும். சூத்திரர் வேளாண்மை செய்தல்வேண்டும். ஆரியர் சமுதாயத்தில் இக்கோட்பாடுகள் நிலவியது போல ஆரியரல்லாத பழங்குடி மக்களிடையே ‘குடிகள்’ என்னும் பிரிவினைகளும், மரம், மலை, ஆறு முதலிய இயற்கை நிலைகளில் வாழ்வதாகக் கருதப்பட்ட தேவதைகளை வழிபடுதலும் வழக்கிலிருந்தன.
ஆரியர்களும் முதல் மூன்று பிரிவினரும் இருபிறப்பாளர் எனவும் நாலாமவர் ஒருபிறப்பாளர் என்றும் கருதப்பட்டனர். தாய் வயிற்றிலிருந்து பிறக்கும் உடற்பிறப்பும் ‘பிரம்மம்’ என்னும் ‘கடவுள்’ உண்மையைக் கற்கும்போது பிறக்கும் அறிவுப் பிறப்பும் ஆகிய இரண்டும் ஒரு பிறப்பாகும். இரண்டாம்<noinclude></noinclude>
ps44335m62jvgefv9tsc14ac0557rwt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/619
250
637372
1958694
1916435
2026-08-19T14:46:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|595|இந்தியா}}</noinclude>பிறப்பின்போது உபநயனம் என்னும் இரண்டாம் (அதாவது அகக்) கண்களைப் பெற்றனர். அதற்கு அடையாளமாகப் பூணூல் (முப்புரிநூல்) அணிந்தனர்.
ஆரியருள் பிராமணருக்குக் கோத்திரம், பிரவரம் என்பன உண்டு; தங்கள் முன்னோரில் சிறந்த வைதிக முனிவர் இன்னார் என்று கருதுதல் அடிப்படையில் கோத்திரம் அமையும். சத்திரியருக்குக் கோத்திரம் என்பது இன்றாயினும் தங்கள் புரோகிதருடைய கோத்திரத்தைத் தாங்கள் மேற்கொள்வர். ஆகவே, இடைக்கால அரசவமிசங்கள் தங்களைப் பாரத்துவாசம் முதலிய கோத்திரத்தினர் என்று கூறிக் கொண்டது, இப்புரோகிதக் கோத்திர மரபை ஒட்டியே என்பது புலனாகும். இதனை அறியாத சிலர் பல்லவர், கடம்பர் முதலிய அரசர்களைப் பிராமண குலத்தவர் என்று கூறினர். ஆரியர் நாகரிகம் இந்தியாவில் பல இடங்களிலும் பரவத் தொடங்கிய போது, ஆரியரல்லாத குடிகளிடையே ஆரியருடைய நாகரிகத்தைத் தாமும் மேற்கொள்ளவேண்டும் என்னும் அவா மிகுந்தது. அதன் பயனாகப் பலர் முப்புரி நூல் அணிந்தனர்; கோத்திரங்களையும் மேற்கொண்டர்.
ஆரியர்கள் கி.மு. ஆறு அல்லது ஐந்து நூற்றாண்டு வரை வேதம் ஒன்றனையே உயர் கல்வியாகப் போற்றினர். வேதத்தின் கிளை நூல்களான பிராமணம், ஆரணியகம் என்பவை கி.மு. 10-இலிருந்து 7 வரையுள்ள நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன. பிறகு பிரமம் என்னும் ஆதிக்கடவுளைப் பற்றிய வினாவகைகள் உபநிடதங்களில் காணப்படுகின்றன. அதுவரை எழுந்த இலக்கியங்கள் அனைத்தும் கடவுளைப் பற்றி ஆராய்தலில் முழுமையாக ஈடுபட்டன. கடவுள் பற்றிய இலக்கியத்தைச் சரிவர உணர்வதற்கு உரிய ஒரு கருவியாகவே உலகியல் அறிவை ஆரியர் கருதினர். இலக்கணம், நீதி, தருக்கம், கணிதம் என்பவை யாவும் இவ்வாறே கருதப்பட்டன. ஆரியர் நாகரிகத்தின் செல்வாக்கால் எழுந்த பிறமொழி, வட்டார இலக்கியங்களும் பெரும்பாலும் இக்கோட்பாட்டினையே கருத்தில் கொண்டிருந்தன.
ஆரியர் கங்கைச் சமவெளிக்கு வந்து குடியேறி நிலைத்துக்கொண்ட பிறகு, தொடக்கத்தில் சிற்றரசுகள் பல தோன்றிப் பிறகு அவை பேரரசுகளாக வளர்ந்தன. கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் ஆரியாவருத்தத்தில், அதாவது ஆரியர் குடியேறியிருந்த வட இந்தியாவில், பதினாறு மகாசனபதங்கள் (பெரிய அரசுகள்) ஆட்சியில் இருந்தன. அவற்றில் மகதம், கோசலம், வத்தியலம், அவந்தி, குரு, பாஞ்சாலம், காசி முதலியவை புகழ்பெற்றவை. கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு வட இந்திய வரலாற்றில் மிகப் புகழ் பெற்று விளங்கியது மகத அரசு ஆகும். அதன் தலைநகரம் பாடலிபுத்திரம். மேற்குறிப்பிடப்பட்டவையன்றி இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் பல ஆரிய பரம்பரை வழக்கத்திற்குப் புறம்பான சிற்றரசுகள் ஆட்சிபுரிந்தன. அவற்றையாண்ட அரசர்கள் அரசப் பரம்பரையினராயினும் சத்திரியரல்லர். அவர்கள் ஆட்சியில் பொதுமக்களுக்கும் ஓரளவு பொறுப்பும் பங்கும் இருந்தன.
கி.மு. ஆறாம் நூற்றாண்டு உலகிலேயே அறிவியல் துறையில் மிகப்பெரிய ஞானிகளைத் தோற்றுவித்த பெருமையுடையது. கிரேக்க நாட்டில் சோலன், சீனத்தில் கன்பூசியசு என்போர் தோன்றியவாறே, வட இந்தியாவிலும் மகாவீரர், புத்தர் ஆகிய பெரியோர்கள் தோன்றினர். எக்காரணத்தாலோ இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்துள்ள பெரும்பான்மை மக்கள் தங்கள் பொது வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் எவ்வகை ஆதார மாறுதல்களையும் விரும்பாமலும் மேற்கொள்ளாமலும் வாழ்ந்து வந்துள்ளனர். சமுதாயத் துறையிலேயேயன்றி அரசியல் துறையிலும் கூட சமூக, அரசியல் நிலையங்கள் முசுலிம், ஐரோப்பிய ஆட்சிகள் ஏற்படும் வரை ஒரே விதமாகவே இருந்து வந்துள்ளன. புத்தர் முதல் இராமானுசர் வரை பல சீர்திருத்தவாதிகள் தோன்றிச் சமய சமுதாய நிலையங்களை மாற்றவோ திருத்தவோ முயன்றனர். எனினும் அவர்களுடைய செல்வாக்குச் சமுதாயத்தை மிகுதியாகப் பாதித்துவிடவில்லை. ஆரியர்கள் தங்கள் ஆட்சித் துறையில் அரசன் என்னும் அரசியல் தலைவனையும் சபா, சமிதி என்னும் பிரதிநிதிக் குழுக்களையும் அரசனுக்கு அறிவுரை கூறும் புரோகிதனையும் அமைத்திருந்தனர். கிராமத் தலைவனைக் கிராமணி என்றும் சேனைத் தலைவனைச் சேனானி என்றும் அழைத்தனர்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கௌதம புத்தர், மகாவீரர் ஆகிய இரு சமயவாதிகள் தோன்றித் தங்கள் சமயக் கருத்துகளைப் பரப்பினர். இவர்கள் இருவருமே அகிம்சைக் கொள்கையைச் சிறப்பாக அறிவுறுத்தினர். புத்தர் கடவுள் உண்மையை வெளிப்படையாகக் கூறவில்லை. மகாவீரரின் பின்வந்தோர் இந்துக் கடவுளரைப் போன்ற, அதே பெயர்களைக் கொண்ட பல தெய்வங்களின் உண்மையை ஏற்றுக் கொண்டனர். இவ்விரு மதத் தலைவர்களும் பீகார் மாநிலத்திலும் இமயமலை அடிவாரத்திலுமுள்ள சிற்றரசுகளைச் சார்ந்த வட்டாரங்களுக்கும் சென்று தங்கள் கருத்துகளைப் பரப்பினர். இவ்விரு மதங்களும் வைதிக பிராமண மதத்தின் அடிப்படைக் குறைபாடுகளாகிய வேள்வி செய்தல், பெண்ணடிமை<noinclude>
வா. க. 3 - 38அ</noinclude>
b5bu4a3ciqqmp0g40zoxu2n0crcwz4d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/620
250
637373
1958696
1916453
2026-08-19T14:56:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|596|இந்தியா}}</noinclude>ஆகியவற்றை எதிர்த்தன. ஆயினும் பிற்காலத்தில் இந்துக்கள் இவ்விரு மதங்களுமே வைதிக சமயத்தின் வழித்தோன்றல்கள் என்று கருதியதோடு, புத்தரை விட்டுணுவின் அவதாரங்களில் ஒருவராகவும் ஏற்று வழிபடலாயினர். இதனால், புத்தமதச் செல்வாக்கு மங்கத் தொடங்கியது.
புத்தசமயம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் பல பகுதிகளிலும் புகழ்பெற்றிருந்தது. ஆனால், அது வட இந்தியாவில் முசுலிம் ஆட்சி தொடங்கியதிலிருந்து இந்நாட்டைவிட்டு ஏறத்தாழ முற்றிலும் அகன்று விட்டது. புத்தமதம் வேறுபட்ட சமய உருவங்களில் பர்மா, சீனா, சப்பான், சிரீலங்கா, திபேத்து முதலிய நாடுகளில் பரவிற்று. கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால அளவில் பௌத்த சமயம் ஈனயானம், மகாயானம் என இரு பகுதிகளாகப் பிரிந்தது. இவற்றில் ஈனயானம் புத்தர் தாமே நிறுவிய எளிய கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டது; மகாயானம் புத்தரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியது. அவர் பல அவதாரங்களை எடுத்ததாகப் புத்த சாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன. அசோகர், கனிசுகர், அர்சர் ஆகிய பேரரசர்கள் புத்தமதத்தைத் தழுவி, அதனைப் பரப்பினர்.
மகா வீரரது சைன சமயம் பௌத்தத்தின் வளர்ச்சிக்கு நேர்மாறான வளர்ச்சியை அடைந்தது. அம்மதமும் பிற்காலத்தில் சுவேதாம்பரம், திகம்பரம் என்று இரு நிலைகளாகப் பிரிந்தது. பௌத்தத்தைப் போலல்லாமல் சைனம் இன்றும் இந்தியாவில் பல இடங்களில் (முக்கியமாக இராசசுத்தானத்தில்) தழைத்திருக்கக் காணலாம். இம்மதம் இந்துமதத்தைப் போல இந்தியத் துணைக் கண்டத்தின் நான்கு எல்லைக்குட்பட்டே நிலைத்து வந்துள்ளது. இவ்விரு சமயங்களும் புராண காலத்திற்குப் பிறகு, பக்திமார்க்கத்தை மேற்கொண்டு புத்துருவேற்று வளர்ந்து வந்த இந்து சமயத்தால் நலிவுற்றன.
கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து கி.மு. 323 வரை (சந்திர குப்த மௌரியரின் அரசாட்சி எய்திய காலம் வரை) வட இந்திய அரசியல் வரலாறு மகதத்தின் வரலாறாகவே அமைந்துள்ளது. பிம்பிசாரர் என்னும் அரசர் மகதத்தில் ஏறத்தாழக் கி.மு.545-இல் அரசக் கட்டிலேறினார். அவர் காலத்திலிருந்து நவநந்தர்களை வென்று, சந்திர குப்த மௌரியரின் முடிசூடிக் கொண்டது வரையில், மகதத்தில் ஒன்பது அரசர்கள் ஆண்டுவந்தனர். இவர்களில் பிம்பிசாரர், அசாதசத்துரு, சிசுநாகர், மகா பத்துமநந்தர் என்போர் குறிப்பிடத்தக்கோர். பிம்பிசாரர் காலத்தில் காசியரசும் இலிச்சாவிக் குடியரசும் மகதத்தோடு இணைந்தன.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் மகாசைரசு என்னும் பாரசீகப் பேரரசர் வடமேற்கு இந்தியாவில் காந்தாரம் என்னும் பகுதியை வென்று தம் பேரரசில் இணைத்தார். அவரைத் தொடர்ந்து வந்து பிற பாரசீகப் பேரரசர்கள் காலத்திலும், இப்பகுதிகள் அவர்கள் பேரரசின் பகுதிகளாகவே இருந்தன. மகாதரையசு என்னும் பேரரசர் ஆட்சியில் (கி.மு. 522-485) பஞ்சாபு, சிந்துப் பகுதிகளும் வெல்லப்பட்டுப் பாரசீகப் பேரரசின் பகுதிகளாயின. இவை அப்பேரரசின் இருபதாம் சத்திராவாக (பெரிய மாகாணம்) ஆக்கப்பட்டன (கி.மு. 516). இம்மாகாணம் இரண்டாம் ஆர்ட்டாயர் சீசு (கி.மு.405-358) என்னும் பேரரசர் காலம்வரை பாரசீகப் பேரரசில் அடங்கியிருந்தது. பிறகு அது தனிநிலை அடைந்தது. பாரசீகரையடுத்துக் கிரேக்கர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து நாடு பிடித்தனர். மாசிடோனியா மன்னரான மகா அலெக்சாந்தர் கி.மு. 326-இல் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து, தட்சசீலத்து மன்னரான அம்பி என்பார் அழைப்பிற்கிணங்கிச் சீலத்தைக் கடந்து போரசு என்னும் அரசரைக் கடும்போரில் வென்றார். அதன் விளைவாக அவ்வாற்றின் கரையிலுள்ள இந்தியா முழுவதும் கிரேக்கர் ஆட்சியில் அடங்கிற்று. அலெக்சாந்தர் இறந்ததும் அவர் இந்தியாவில் வென்ற பகுதிகள் எல்லாம் சிறிது சிறிதாகக் கிரேக்க ஆதிக்கத்தினின்றும் தம்மை விடுத்துக் கொண்டன. சந்திரகுப்தன் என்பார் மகதத்தின் தலைநகரான பாடலிபுத்திரத்தில் அரசாண்டு வந்த நந்தர் என்னும் அரசர் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றித் தமது மௌரிய குல அரசை மகதத்தில் (கி.மு. 325-301) நிறுவினார். அவரே முதலாம் மௌரிய குல மன்னர் ஆவார். அவர் அரசுக் கட்டிலேறுதற்கு மிகவும் உதவியவர் சாணக்கியர் என்னும் கௌடில்யர் ஆவார். இந்த வரலாற்றைக் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த விசாகதத்தர் என்னும் நாடகாசிரியா இயற்றிய முத்திராராட்சசம் என்னும் நாடக நூலிற் காணலாம். இக்கௌடில்யரே அர்த்தசாத்திரம் என்னும் ‘ஆட்சிமுறை’ நூலை வடமொழியில் இயற்றியவர் என்று கருதப்படுகிறார்.
சந்திரகுப்தர் அவைக்களத்தில் கிரேக்கர் தூதராக இருந்த மெகசுதனிசு இயற்றிய ‘இண்டிகா’ என்னும் நூலில் அவர் மகதத்திலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் குறித்து வைத்துள்ளார். இக்குறிப்புகள் அக்கால வடஇந்தியாவைப் பற்றி-முக்கியமாக ஆட்சி முறைகளையும் சமுதாய மரபுகளையும் பற்றி<noinclude></noinclude>
ort9wr1aqnsmcmgqr2wy1e7qccw5o9o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/621
250
637374
1958697
1916463
2026-08-19T14:57:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 621
|bSize = 468
|cWidth = 173
|cHeight = 218
|oTop = 35
|oLeft = 24
|Location = center
|Description =
}}
{{c|அசந்தா-குடைவரைகள்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 621
|bSize = 468
|cWidth = 162
|cHeight = 218
|oTop = 38
|oLeft = 279
|Location = center
|Description =
}}
{{c|யாமல்லபுரக் கடற்கரைக் கோவில்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 621
|bSize = 468
|cWidth = 366
|cHeight = 231
|oTop = 294
|oLeft = 48
|Location = center
|Description =
}}
{{c|தில்லி இரும்புத்தூண்}}{{nop}}<noinclude></noinclude>
7rg3ngl1ji4k4b4f21hs8z1rrookpas
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/622
250
637375
1958724
1916462
2026-08-20T03:58:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 622
|bSize = 468
|cWidth = 188
|cHeight = 386
|oTop = 36
|oLeft = 32
|Location = center
|Description =
}}
{{c|கோமதீசுவரர்சிலை - சரவணபெலகோலா}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 622
|bSize = 468
|cWidth = 180
|cHeight = 401
|oTop = 140
|oLeft = 258
|Location = center
|Description =
}}
{{c|இந்தியத் தேசியசின்னம்}}{{nop}}<noinclude></noinclude>
gl81y4ste2ojw1un45pz68d3z1uup4p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/623
250
637376
1958725
1916466
2026-08-20T03:59:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 623
|bSize = 468
|cWidth = 369
|cHeight = 239
|oTop = 60
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{c|சார்மினார்-ஐதராபாத்து}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 623
|bSize = 468
|cWidth = 183
|cHeight = 161
|oTop = 347
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{c|ஆடல்வல்லான்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 623
|bSize = 468
|cWidth = 156
|cHeight = 176
|oTop = 345
|oLeft = 236
|Location = center
|Description =
}}
{{c|அவேரிக்கோயில்}}{{nop}}<noinclude></noinclude>
c25nctj107lnizxnpf4zl930fjszadj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/624
250
637377
1958726
1916465
2026-08-20T03:59:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 624
|bSize = 468
|cWidth = 158
|cHeight = 195
|oTop = 44
|oLeft = 21
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா புனிதப்பயணம்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 624
|bSize = 468
|cWidth = 165
|cHeight = 200
|oTop = 35
|oLeft = 272
|Location = center
|Description =
}}
{{c|கைலாசநாதர்கோவில்-எல்லோரா}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 624
|bSize = 468
|cWidth = 317
|cHeight = 290
|oTop = 261
|oLeft = 72
|Location = center
|Description =
}}
{{c|புனித கங்கையில் நீராடுதல்}}{{nop}}<noinclude></noinclude>
4q9q9udexefl1utenydb7a8tvtyxeyt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/625
250
637378
1958727
1916469
2026-08-20T04:07:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|597|இந்தியா}}</noinclude>அறிதற்குப் பயன்படுகின்றன. சந்திரகுப்தர் வட இந்தியாவின் பெரும் பகுதியை வென்று தம் ஆட்சியில் கொணர்ந்தார். அவர் சிரியாவை ஆண்ட செலியூகசு நிகேடார் என்பவரை ஆப்கானிசுத்தானத்தில் வென்று, வடமேற்கு இந்தியா முழுவதையும் தம் ஆட்சியின்கீழ்ச் கொணர்ந்தார். அவர் அரசெய்தியதோடு இந்தியா முழுவதிலுமே சத்திரியர் ஆட்சி என்பது முற்றுப்பெற்றுவிட்டது. ஆரியரின் வருண தருமம் தன் ஒரு காலை இழந்து முக்காற்பகுதி மட்டில் செயற்பட்டு வந்தது. சந்திரகுப்தர் ஆட்சி முறையில் பாரசீகரையும், சமய மரபில் சமணரையும் பின்பற்றினார் என்று கருதப்படுகிறார்.
சந்திரகுப்தர் ஆட்சி கி.மு. 301-இல் முடிவுற்றது. அவரை அடுத்து மகதத்தின் மன்னரான பிந்துசாரர் என்பவர் தாம் பெற்ற பேரரசினை மேலும் பல வெற்றிகளால் விரிவுபடுத்தினார். அவரது பேரரசு தெற்கே மைசூர் வரையில் பரவிற்று. அவர் மகனான அசோகர் (கி.மு.273-232) தமது பேரரசினை எதிர்த்த கலிங்கத்தின்மீது போரிட்டுக் கடும் போருக்குப் பின் மீண்டும் தமது ஆட்சியோடு இணைத்துக் கொண்டார். அப்போரில் தாம் கண்ட பெருஞ்சேதத்தால் மனம் மாறி, அகிம்சை மதமான பௌத்தத்தைத் தழுவினார். கலிங்கப் போருக்குப் பின் அவர் எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. அவர் சந்திரகுப்தர் நிறுவிய ஆட்சி முறையினை ஓரளவு மாற்றியமைத்தார். அவர் ‘இனிப் போரிடுவதில்லை’ என்று ஒரு கொள்கையை மேற்கொண்டாராயினும் தனது வலுவான படையினைக் கலைத்துவிடவில்லை. இன்னா செய்யாமையை ஓரளவு ஆட்சியில் புகுத்த வேண்டுமென்று விரும்பினாராயினும் மரண தண்டனையை ஒழித்துவிடவில்லை. ‘அவர் பௌத்த மதத்தில் சேரவில்லை. இந்துவாகவே இருந்தார்’ என்று சிலர் நிறுவ முற்படுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. அவருடைய ஆட்சி அவர் எழுதிய அல்லது எழுதுவித்த பாறை, கல்தூண் ஆணைகள் மூலமே அவரது ஆட்சி வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாணைகளை அசோகர் ‘ஆணைகள்’ என்பர். இவை பெரும்பாலும் தமது பேரரசிற்குட்பட்ட மாகரண ஆட்சித் தலைவர்களுக்கு அசோகர் இட்ட கட்டளைகளே ஆகும். இவ்வாறு அரசியற் கட்டளைகளைப் பாறையில் பொறித்து வைத்தல் என்பது பாரசீகப் பேரரசில் காணப்படும் ஒரு மரபு. அசோகர் இந்தியா முழுவதிலும் பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்புவதற்குத் தரும மகாமாத்திரர் என்னும் சில அதிகாரிகளை நியமித்ததோடு, அந்த மதத்தைச் சிங்கள நாட்டில் பரப்புவதற்குரிய செயல்களையும் மேற்கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தில் மூன்றாம் பெளத்த சங்கம் கூடிற்று. அசோகருக்குப் பிறகு மௌரியர் ஆட்சி வலுக்குன்றியது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 625
|bSize = 468
|cWidth = 188
|cHeight = 177
|oTop = 77
|oLeft = 252
|Location = center
|Description =
}}
{{c|மௌரிய பேரரசு}}
மௌரியர் ஆட்சி கி.மு. 188-இல் முடிவுற்றது. அவ்வமிசத்தின் கடைசி அரசர் பிரசத்ரதர் என்பவர். அவர் படைத் தலைவர்களுள் ஒருவரான புசுயமித்திர சுங்கர் என்பவர் மன்னரைக் கொன்று தாம் மகதத்துப் பட்டமெய்தினார். புசுயமித்திரர் நிகழ்த்திய புரட்சி, பெளத்தர்களது ஆதிக்கத்தை எதிர்த்துச் சில இந்து அரசியற் பேராளர்கள் நிகழ்த்திய புரட்சி என்று கருதப்படும். கங்கர்களைப்பற்றிக் காளிதாசர் தமது மாளவிகாக்னிமித்திரம் என்னும் நாடகத்தில் குறிக்கிறார். கங்கர் ஆட்சிக் காலத்தில் தன் அளவிலும் பெருமையிலும் குன்றத் தொடங்கிய மகதம், குப்தர்கள் ஆட்சிக்காலத்தில்தான் மீண்டும் தனது பழைய புகழை எய்திற்று. கங்கர் குலத்தில் நான்கு மன்னர்கள் மொத்தம் 45 ஆண்டுகள் ஆண்டனர். கடைசி கங்க மன்னரான தேவபூதி என்பாரைக் கண்வ வமிசத்தைச் சேர்ந்த வாசுதேவர் என்பவர் கொன்று ஆட்சி எய்தினார்.
வட இந்திய வரலாறு கி.மு. 2-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடிய ஓர் இருண்ட காலமாகத் தோற்றமளிக்கிறது. இதற்குக் காரணம் அந்தக் காலத்து வரலாற்றினை முற்றிலும் அறிந்துகொள்ளுதற்குப் போதுமான சான்றுகள் இல்லாமையே ஆகலாம். அக்காலத்தில் நிகழ்ந்த அரசியல் பெருநிகழ்ச்சிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. கி.மு. 2-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக் கால அளவில வடமேற்கு இந்தியாவில் ‘இந்திய-கிரேக்க’ அரசர்-<noinclude></noinclude>
a5iueapfdfqg1goz79yair1ssefywxt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/626
250
637382
1958728
1916482
2026-08-20T04:15:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|598|இந்தியா}}</noinclude>கள் ஆட்சி புரிந்த வரலாறு; 2. அவர்கள் ஆட்சி முடிந்ததிலிருந்து ஏறத்தாழக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சிரீகுப்தர் என்பவர் ஆட்சியை நிறுவியது வரையிலான இடைப்பகுதி. இதன் வரலாறு பற்பல சிற்றரசர்களது ஆட்சியைப் பற்றியது; 3. தக்காணத்தில் சாதவாகனர் ஆட்சி.
மத்திய ஆசியாவிலுள்ள பாக்டிரியாவில் சுதந்திர அரசை நிறுவிக் கொண்ட யூடிமோசு என்பவர் கி.மு. 189-இல் இறந்தார். அவரைப் பின்பற்றி ஆண்டவர்களுள் தெமெட்ரியோசு, மினாண்டர் என்போர் குறிப்பிடத்தக்கவர். மினாண்டர் பாக்டிரியப் பேரரசின் இந்தியப் பகுதிகளை ஆண்டவர். அவர் மகதத்தைக் கைப்பற்ற முயன்றார். அபல்லொதோரசு என்னும் ஓர் ‘இந்திய-கிரேக்க’ப் படைத்தலைவர் சிந்துவை நோக்கிப் படையெடுத்து உச்சயினி, தட்சசீலம் முதலிய இடங்களை அப்பேரரசோடு சேர்த்தார். சிறிதுகாலம் பாடலிபுத்திரமும் அதில் அடங்கி இருந்தது. அப்பேரரசின் பெரும் பகுதி இந்தியாவிற்குப் புறம்பேதான் இருந்தது. கி.மு. 160-இலிருந்து 150 வரை மினாண்டர் காந்தாரத்திலிருந்து மதுரா வரையுள்ள பகுதியை ஆண்டார். அவர் சிந்து மன்னன் மகளை மணந்துகொண்டதால் சிந்துப் பகுதியும் அவர் ஆட்சியில் அடங்கிற்று. மினாண்டர் பௌத்த மதத்தைத் தழுவினார். பௌத்த சமய நூலான ‘மிலிந்தபன்னா’ என்னும் நூல் மினாண்டருக்கும் பௌத்த சமயங்களுக்குமிடையே நிலவிய நல்லுறவைக் காட்டுகிறது.
மத்திய ஆசியக் குடிகளுள் ஒரு வகையினரான சாகர்கள் கி.மு. 120-80 கால அளவில் ‘இந்திய-கிரேக்க’ ஆட்சிப் பகுதிகளை வென்று கைப்பற்றி ஆண்டனர். சாகர்கள், யுலேச்சிகள், பகலவர்கள், குசானர்கள் என்போர் அனைவரும் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களே. இவர்கள் எல்லோருமே வடமேற்கு இந்தியாவின் சிற்சில பகுதிகளைச் சில காலமேனும் ஆண்டு வந்துள்ளனர். இவர்கள் யாவரிலும் இந்திய பார்த்திய குலத்தவர்கள் நிறுவிய இரு வமிசங்கள் குறிப்பிடத்தக்கவை. 1. வோனோனசு என்பார் நிறுவிய வமிசம்; 2. கொண்டாபர்னசு என்பார் நிறுவியது.
கொண்டாபர்னசு ஆப்கானிசுத்தானம், காந்தாரம் முதலிய பகுதிகளைக் கி.பி. 19-45 வரை ஆண்டார். இவரைக் கிறித்தவ அப்போசுதலர்களுள் ஒருவரான புனித தோமாசு (St. Thomas) என்பவர் கிறித்தவச் சமயத்திற்கு மாற்றினார். கொண்டாபர்னசின் பின் தோன்றல்கள் வல்லமையற்றவர்களாதலால் அவர்களை நீக்கிவிட்டு அப்பகுதியில் ஆட்சி நிறுவிய குழுவினர் குசானர்கள் ஆவர்.
குசானர்களில் (Kushans) முதன் முதல் இந்தியாவில் அரசை நிறுவியவர் குசுலா கட்பீசசு (Kujulakadphises) என்பவர் ஆவார். குசானர்களின் ஆட்சி விவரங்கள் அவர்கள் வெளியிட்ட எண்ணிறந்த, பல தரப்பட்ட நாணயங்கள் வாயிலாகத் தெரிய வருகின்றன. முதல் கட்பீசசை அடுத்து இரண்டாம் கட்பீசசு ஆண்டார். அவரையடுத்துக் கி.பி. 78-இலிருந்து ஏறத்தாழ 120 வரை ஆண்ட கனிசுகர் (Kaniska) குசான அரசர்களுள் புகழ்பெற்றவர். அவர் அரியணை ஏறிய ஆண்டிலிருந்து தொடங்குவதே சக ஆண்டு என்பது. அவர் ஆட்சி சமயம், ஆட்சி, நகரமைப்பு, நாணய வெளியீடு, சிற்பம் என்னும் பலதுறைகளிலும் புகழ்பெற்றது. அவர் பௌத்த சமயத்தவர். அவர் காலத்தில் நான்காம் பௌத்த சங்கம் கூடிற்று. அவர் கனிசுகபுரம், புருடபுரம் என இரு நகரங்களை நிறுவினார். அவற்றில் பிந்தியதே இன்று பெசாவர் என்று கூறப்படுவது. அவர் பௌத்த சமயத்தில் அக்காலத்தில் ஏற்பட்டிருந்த ஈனயான-மகாயானப் பிரிவினை ஒன்றாக்க முயன்றார். அவர் இம்முயற்சியில் வசுமித்திரர், அசுவகோசர், பார்க்கவர் முதலிய பௌத்த அறிஞர்களை ஈடுபடுத்தினார். அவர்கள் முயற்சியில் ஈனயானம் ஓரளவிற்கு நிலைபெற்றது. கனிசுகர் போற்றிய புகழ்பெற்ற பௌத்தர்களுள் நாகார்ச்சுனர் என்பவரும் ஒருவர். சரகர் என்னும் புகழ்பெற்ற மருத்துவக்கலை வல்லுநரும் இவர் காலத்தில் வாழ்ந்தவரே. இந்திய - கிரேக்க - உரோமானியப் பண்பாட்டுத் தொடர்பால் தோன்றிய காந்தாரக் கலை மரபு கனிசுகரது பேரரசில் மிகுந்த வளர்ச்சியுற்றது.
கனிசுகரையடுத்து அவர் மகன் குவிசாகர் (Huvisaka-ஏறத்தாழக் கி.பி. 120-138) அரசராகி, கனிசுகரைப் போலவே பௌத்தத்தைப் போற்றிக் குசுகபுரம் (Huskapura) என்பதொரு நகரத்தையும் அமைத்தார். வாசுதேவர் என்னும் குசான மன்னர் ஆட்சிக்காலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்) அவர்களது பேரரசு வலுவிலும் பரப்பிலும் பெரிதும் குன்றியது. அவ்வமிசத்தின் ஆட்சி கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் முற்றிலும் முற்றுப் பெற்றது.
குசானர் ஆட்சி முற்றுப் பெற்றதற்கும் குப்தர்கள் ஆட்சி தொடங்குவதற்கும் இடைப்பட்ட ஒரு நூற்றாண்டுக் கால அளவில் வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் அரசியற் குழப்பநிலை நிலவிற்று. அக்காலத்தில் பாரசிவர் என்னும் ஒரு குலத்தோர் பற்றிய செய்தி அறியக் கிடக்கிறது. அவர்களுள் ஏழு அரசர்கள் ஆண்டனர். அவர்கள் தீவிர சைவர்கள். அவர்களுள் கடைசியாக ஆண்டவர் பவநாகர் என்ப-<noinclude></noinclude>
08s4lezthpd6uaamhcoqe6wq2v6n890
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/627
250
637420
1958729
1916649
2026-08-20T04:24:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|599|இந்தியா}}</noinclude>வர். பவநாகர் தம் மகளை வாகாடக மன்னரான முதலாம் பிரவரசேனர் என்பவரின் மகனான கௌதமிபுத்திரருக்கு மணம் புரிவித்தார்.
வடமேற்கு இந்தியாவின் ஒரு பகுதி மத்திய ஆசியக் குடிகளின் ஆதிக்கத்தில் தொடர்ந்து இருந்து வந்தது. இதுபற்றிய செய்தி இருவகை சத்திரியர் ஆட்சிகளைப் பற்றிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. பூமகர் வமிச ஆட்சி ஒன்றும் மேலை சத்திரவர் ஆட்சி ஒன்றும் நடைபெற்றன. சத்திரபர் (சத்திரபவனர்) என்னும் பாரசீகச் சொல் மாநில ஆட்சித் தலைவரின் ஆட்சிப் பெயரைக் குறிக்கும், அவர்கள் கரோத்தி என்னும் எழுத்து முறையைப் போற்றினர். முற்கூறிய வகுப்பினருள் பூமகர் (Bhumaka), நாகபாணர் (Nahapana) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். இவர்களைத் தக்காணத்தில் ஆண்டுவந்த சாதவாகனர்கள் அடிக்கடி படையெடுத்துக் தாக்கினர். நாகபாணரை மகாசத்திரபர் என்று கூறுதலும் உண்டு. அவர் நாசிக்கைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார். அவர் கெளதமிபுத்திர சதகருணி (Gautamiputra Satakarni) என்னும் சாதவாகன மன்னரால் தோல்வியுற்றார். மற்றொரு சத்திரபர் கிளையினரில் உருத்திரதாமர் என்பவர் புகழ்பெற்றவர், அவர் சாதவாகனரையும் இயதேயரையும் வென்றார். அவர் பேரரசில் மாளவம், கத்தியவார், மார்வார், சிந்து, வடகொங்கணம் என்னும் பகுதிகள் அடங்கி இருந்தன. உருத்திரதாமருக்குப் பிறகு 20 அரசர்கள் ஆண்டனராயினும் அவர்கள் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. அவர்கள் ஆதிக்கம் கி.பி. நான்காம் நூற்றாண்டில் சமுத்திரகுப்தர் படையெடுப்பால் முற்றிலும் ஒடுங்கிற்று.
கங்கர், கண்வர் ஆட்சிக்காலத்திற்குப் பிறகும் குப்தப் பேரரசு தோன்றுதற்கு முன்பும் தக்காணத்தில் ஆண்டவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள் சாதவாகனரும் கலிங்கத்தைச் சில காலம் ஆண்ட காரவேலரும் ஆவர். இவர்களுள் காரவேவர் கங்கர் காலத்தைச் சேர்த்தவர். அவர் வரலாறு அத்திகும்பக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் சாதவாகனரை வென்றதாகவும் ஒரு தமிழர்க் கூட்டணியை முறியடித்ததாகவும் பாடலிபுத்திரம் வரை படையெடுத்துச் சென்று வெற்றியோடு திரும்பியதாகவும் அக்கல்வெட்டுக் கூறுகின்றது.
சாதவாகனர் என்பார் ஆந்திரர். அவர்கள் வரலாறு நாணயங்களாலும் புராணங்களில் தரப்படும் மரபுப் பட்டியல்களாலும் கல்வெட்டுகளாலும் அறியப்படுகிறது. அவர்களுள் முதலில் ஆண்டவர் சீமுகர் (Simuka) என்பவர். அவர் ஆட்சி கி.மு. 235-இல் தொடங்கிற்று. சாதவாகனர் மௌரியப் போரசிற்கு அடங்கி அரசு செலுத்தியவர்கள். ஆதலால் அவர்கள் ஆட்சியிலும் பெரும்பாலும் மௌரியருடைய அரசியல் முதலிய பொதுநிலைய பாரம்பரியங்ளும் மரபுகளும் காணப்படும். அவர்களுள் சில அரசர்களின் பெயர்கள் ‘வாசிசுட்டியுபுத்திர’, ‘கௌதமிபுத்திர, என்றிருத்தலால் அவர்கள் மருமக்கட் தாயத்தினரோ என்று சிலர் ஐயுறுகின்றனர்.
சீமுகருக்குப் பின் அவர் சகோதரர் கிருட்டிணரும் அவருக்குப்பின் அவர் மருமானான சாதகருணியும் ஆண்டனர். கௌதமிபுத்திர சாதகருணி ஆட்சிக் காலத்தில் சாதகவாகனர் ஆட்சி உச்சிநிலை எய்தியது அவர் சாதனைகளைப் பற்றி நாசிக்குக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. அவர் சாகர்களை வென்றார். சாதவாகனருள் ஒருவரான புலுமாயி என்பவர் மேலை சத்திரபரான முதலாம் உருத்திரதாசரால் தோற்கடிக்கப்பட்டார். எக்கினசிரீ சாதகருணி என்பவர் சாதவாகனர்களுள் கடைசியில் ஆண்டவர்களுள் ஒருவர். அவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஆண்டார். சாதவாகனர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு தக்காணத்தில், குறிப்பாகக் கிழக்குப் பகுதியில் இச்சுவாகுகள், பிருகதுபாலாயனர்கள், ஆனந்தர்கள், சாலங்காயனர்கள் ஆகியோர் அரசியல் ஆதிக்கம் செலுத்தினர். வடபகுதியில் ஆபிரர்களும் திரைகூடகர்களும் சிறிதுகாலம் ஆண்டனர். பல்லவர்களும் இக்சுவாகுகள், ஆனந்தர்கள் என்போரைப் போலவே சாதவாகனர் வீழ்ச்சிக்குப்பின் அவர்களது பேரரசின் தென் கிழக்குப் பகுதியில் தொடக்கத்தில் சிற்றரசர்களாக ஆண்டனர். அவர்களுள் இக்சுவாகுகள் பௌத்தத்தைப் போற்றினர். நாகார்ச்சுனகொண்டா என்னுமிடத்தில் உள்ள பௌத்தச் சிற்பங்கள் அவர்களால் ஆக்கப்பெற்றவை.
வடமேற்கில் சத்திரபர்கள் ஆட்சியும் சற்றுக் கிழக்கே பாரசிலர் ஆட்சியும் தக்காணத்தில் சாதவாகனர் ஆட்சியும் முடிவுற்றபிறகு, ஒன்றிரண்டு நூற்றாண்டுக்கால அளவில் வட இந்தியாவில் ஓர் அரசியற் குழப்பநிலை நிலவிற்று. அது ஓர் இருண்டகாலம் ஆகும். இந்த இருள் மகதத்தில் குப்தர்கள் ஆட்சி தொடங்கியபோது வட இந்தியாவிலும் மேலைச் சாளுக்கியர் ஆட்சி தொடங்கியபோது தக்காணத்திலும் ஓரளவு நீங்கியது.
குப்தப் பேரரசின் ஆட்சி கல்வெட்டுகள், இலக்கியங்கள், வெளிநாட்டவர் குறிப்புகள் ஆகியவற்றால் விளங்குகிறது. சிரீகுப்தர் என்பவர் அவ்வரசவமிசத்தைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவினார். அவர் ஆட்சியைப் பற்றி ச-சிங்கு என்னும் சீன ஆசிரியர் குறிப்பிடுகிறார்.<noinclude></noinclude>
fj9f80jmsaecmpvzzhq1odij77t1g48
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/628
250
637423
1958730
1916664
2026-08-20T04:31:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|600|இந்தியா}}</noinclude>சிரீகுப்தருக்குப் பிறகு கடோற்கசர் என்பவர் ஆண்டார். முதலாம் சந்திரகுப்தர், கி.பி. 316-320- இல் பட்டமெய்தினார். அவர் ஆட்சிக் காலத்திலேயே மகதம் வலுப்பெற்றுப் பகைவர்களை நாற்புறமும் வென்று ஆட்சி எல்லையைப் பரப்பியது. அவர் இலிச்சாவி இளவரசியான குமாரதேவி என்பவளை மணந்து கி.பி. 330 வரை ஆண்டார்.
சந்திரகுப்தரை அடுத்து அவர் மகன் சமுத்திர குப்தர் பேரரசரானார். அலகாபாத்துக் கல்தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் வெற்றியினைக் குறிப்பிடுகிறது. அக்கல்வெட்டில் சமுத்திரகுப்தரின் தென் நாட்டு வெற்றிகளும் வடநாட்டுவெற்றிகளும் விரிவாகப் பேசப்படுகின்றன. மகேந்திரர், வியாக்கிரராசர், மந்தராசர், மகேந்திரகிரி, சுவாமிதத்தர், நிலராசர், அசுத்திவருமர், உக்கிரசேனர், குபேரர், தனஞ்சயர், தாமனர், விட்டுணுகோபர் ஆகியோர் அவரால் வெல்லப்பட்டவர்கள். அவர்களை வென்று அவர்களுடைய நாடுகளை அவர்களுக்கே திருப்பியளித்துவிட்ட பெருமை அவரைச் சாரும். அவர்கள் திறை செலுத்தவும், அவரைச் சாம்ராட்டு என்று ஏற்றுக்கொள்ளவும் உடன்பட்டனர்.
சமுத்திரகுப்தர் பரிவேள்விசெய்தார். அவர் ஆட்சி பெரும்பாலும் வடஇந்தியா முழுவதும் பரவிற்று. அவர் இசையில் வல்லவர்; வடமொழி இலக்கியத்தைப் பயின்றவர். அவர் ஆட்சியில் நாடு செழித்தது; மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். இந்து சமயம் புத்துயிர் பெற்றது. வடமொழி வளர்ந்தது. பௌத்தமும் பாலியும் அந்த அளவிற்குச் சற்றுத் தாழ்ச்சியடைந்தன. பௌத்தத்திற்கு அசோகர் செய்த தொண்டினைச் சமுத்திரகுப்தர் இந்து மதத்திற்குச் செய்தார்.
சமுத்திரகுப்தரையடுத்து, அவர் இரண்டாம் மகன் சந்திரகுப்தர் பட்டமெய்தினார். அவர் தந்தையையும் விஞ்சும் புகழ்படைத்தார். அவர் ஆட்சிப் பரப்பு மேலும் அகன்றது. அவர் தம் தமையனைக் கொன்று அவர் மனைவியான துருவதேவியையும் கைப்பற்றிக் கொண்டு அரசு கட்டிலேறினார் என்பது ‘தேவி சந்திரகுப்தம்’ என்னும் நாடகத்தால் அறியக்கிடக்கிறது. இரண்டாம் சந்திர குப்தர் கி.பி. 380-இல் பட்டமெய்தி கி.பி. 412 வரை ஆண்டார். அவர் உருத்திரசிம்மர் என்னும் மேலைச்சத்திரப மன்னரை வென்று பரிவேள்வி செய்தார்.அவர் விக்கிரமாதித்தியர் என்னும் பட்டம் பூண்டார். அவர் உச்சயினியைத் தம் பேரரசின் மேற்குத் தலைநகராக அமைத்துக் கொண்டார். அவர் ஆட்சிக் காலத்தில் சீன அறிஞரும் பயணியுமான பாகியான் வட இந்தியாவிற்கு வந்தார். அவர் குப்தர் ஆட்சியின் சீரிய தன்மையைப் பற்றியும் அக்காலத்து இந்தியச் சமுதாய நிலையைப் பற்றியும் குறிப்புகள் எழுதி வைத்துள்ளார். குப்தர்கள் காலத்து நாணயங்களுள் பல பொன்னால் ஆனவை. தில்லியில் குதுப்புமினாரையடுத்து நிறுத்தப் பெற்றிருக்கும் இரும்புத் தூண் குப்தர் காலத்தது. அது இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தது என்று கருதுகின்றனர்.
இரண்டாம் சந்திரகுப்தர் பிறகு குமாரகுப்தர் (கி.பி.415-455), கந்தகுப்தர் (கி.பி.455-467) என்போர் காலத்திலும் குப்தப் பேரரசு வலுக்குன்றாமலேயே இருந்தது. கந்த குப்தர் காலத்திலேயே இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஊணர்களின் தொந்தரவு மிகுந்தது. அவர்களை அடக்கி நிறுத்துவதிலேயே அம்மன்னரின் பெரும்பான்மைப் பொழுது செலவாயிற்று. அவருக்குப் பிறகு புரகுப்தர், நரசிம்ம குப்தர், இரண்டாம் குமாரகுப்தர் ஆகிய மூன்று அரசர்கள் ஆண்டனர். அவர்கள் ஆட்சி கி.பி. 477 வரை நீடித்தது. ஏறத்தாழக் கி.பி. 500-இல் மானவத்தில் குப்தர் ஆட்சி ஊணர் தலைவரான தோரமானர் என்பவரால் நிலைகுலைக்கப்பட்டது. பிறகு மாளவத்தில் ஆண்ட எசோதருமர் காலத்தில் மௌக்கரிகள் என்னும் ஒரு வமிசத்தாரால் குப்தர் ஆட்சி வீழ்ச்சியற்றது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 628
|bSize = 468
|cWidth = 189
|cHeight = 182
|oTop = 315
|oLeft = 251
|Location = center
|Description =
}}
{{c|குப்தப் பேரரசு}}
குப்தர் ஆட்சிக் காலத்தை இந்து வரலாற்றின் பொற்காலம் என்பர். அக்காலத்தில் சமய, இலக்கிய, கலைத் துறைகளில் பெரியதொரு முன்னேற்றம் ஏற்-<noinclude></noinclude>
d3i1v3z1m3baeyq7cpyn134x7ks7p05
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/629
250
637429
1958731
1916705
2026-08-20T04:37:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|601|இந்தியா}}</noinclude>பட்டது. காளிதாசர் என்னும் பெரும்புலவரும் விசாகதத்தர், சூத்ரகர் என்னும் நாடகாசிரியர்களும் இக்காலத்தவர்களே. சற்றுப் பிற்காலத்திலிருந்த பாரவி, தண்டி என்போரும் இம்மரபைப் பின்பற்றி எழுந்தவர்களே. பஞ்சதந்திரம் என்னும் அறவுரை நூல் குப்தர் காலத்தே முழுமைபெற்றது. பல புராணங்களும் எழுதப்பட்டன. அமரசிம்மர் என்பவர் ‘அமரகோசம்’ என்னும் நிகண்டினைத் தொகுத்தார்.
விஞ்ஞான ஆராய்ச்சியும் அக்காலத்தில் உயர் நிலை எய்தியது. வாக்குப்பட்டரது ‘அட்டாங்க சங்கிரகம்’ தலைசிறந்த மருத்துவ நூல். ஆரியபட்டர் வராகமிசிரர் ஆகியோர் கணிதம், வானநூல், சோதிடம் போன்ற துறைகளில் உலகப்புகழ் பெற்றுள்ள நூல்களை இயற்றினர். பெளத்த அறிஞர்களுன் புத்தகோசர், வசுபந்து என்போர் இயற்றிய பௌத்த மரபு நூல்கள் குறிப்பிடத்தக்கன. குப்தர் ஆட்சியும் அவ்வாட்சி தோற்றுவித்த சமுதாய, கலை நிலைமைகளும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிறிது சிறிதாக மறையத் தொடங்கின.
வட இந்திய வரலாற்றில் கி.பி. ஆறாம் நூற்றாண்டும் அதனை அடுத்த சில நூற்றாண்டுகளும் குழப்பம் மிகுந்த நூற்றாண்டுகள் என்று கூறவேண்டும். இக்குழப்பம் முசுலிம் ஆட்சி தில்லியில் சுல்தானியமாக நிலைத்துக் கொள்ளும் வரை நீடித்தது. இவ்விடைக்காலத்தில் வட இந்தியாவில் நான்கு வகை அரசியல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அவை: 1. அர்சர் ஆட்சிக்காலம், 2. இராசபுத்திரது தோற்றுமும் வளர்ச்சியும், 3. அராபியரது சிந்துப் படையெடுப்பு, 4. கோரிமுகம்மதுவின் வெற்றியால் தில்லியில் சுல்தானியம் நிறுவப்பெறும்வரை அங்கு நிலவிய பற்பல சிற்றரசுகள்.
ஏறத்தாழக் கி.பி.500-இல் ஊணர் தலைவரான தோரமானர் மாளவத்தில் தம் ஆட்சியை நிறுவிச் சில காலம் ஆண்டார். அவர் மகன் மிகிரகுலர் என்பவர் மிகக் கொடியவர். யுவான்சுவாங்கு என்னும் சீனப்பயணி அவரது கொடுமையை விவரித்துள்ளார். ஊணர்கள் ஆட்சி அதற்குமேல் நீடிக்கவில்லை. மாளவத்தில் எசோதருமர் ஊணர்களை எதிர்த்துப் போராடி வென்றார். கனோசியை ஆண்ட மெளக்கரிகள் என்னும் அரசர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். எசோதருமர் சாதனைகள் மந்தசோர் கல்வெட்டுக் குறிப்புகளால் விளங்குகின்றன. மௌக்கரிகள் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கன்னோசியிலிருந்து ஆண்டனர். அரிவருமர் என்பவர் அக்குலத்தைத் தோற்றுவித்தார். அவர்களுக்கும் குப்தர்களுக்கும் மண உறவு ஏற்பட்டது. அவர்களுள்
ஈசானவருமர் என்பவர் குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்தவர். அவரையடுத்து வந்த சருவவருமர் ஆட்சியிலும் போரிலும் சிறந்தவர். அவர் காலத்தில் மெளக்கரி ஆட்சி பஞ்சாபிலிருந்து வங்காளம்வரை பரவிற்று. அவ்வமிசத்தைச் சேர்ந்த திருகவருமர் என்பவர் அர்சரின் உடன்பிறந்தாளான இராச்சிய சிரீயை மணந்துகொண்டார். அவர் மகத மன்னர் தேவகுப்தரால் கொல்லப்பட்டார். பிறகு மௌக்கரி அரசும் அரசரது அரசின் ஒரு பகுதியாயிற்று.
சாதவாகனர்கள் சரிவிற்குப் பிறகு கீழைத் தக்காணத்தில் பிருகத்பாலாயனர்கள், சாலங்காயர்கள், ஆனந்தர்கள் முதலியோர் ஆண்டனர். தென்தக்காணத்தில் கடம்பர்கள் வனவாசியிலிருந்தும் மேலைக்கங்கர்கள் தலைக்காட்டிலிருந்தும் ஆண்டனர். அவர்களுள் காகுசுதவருமர் என்பவர் புகழ்பெற்றவர். தாலகுண்டா தூண் கல்வெட்டு அவ்வமிசத்தின் தோற்றத்தைப் பற்றியும் தொடக்கக்கால அரசர்களைப் பற்றியும் கூறுகின்றது.
கங்கர்களும் கடம்பர்களைப் போலவே ஒரு பழங்குடியினர். இவர்களுள் மேலைக்கங்கர் என்று ஒரு பிரிவு தென் மைசூர்ப் பகுதியை ஆண்டது. கீழைக்கங்கர் என்னும் மற்றொரு பிரிவு ஒரிசாவிலிருந்து ஆண்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 629
|bSize = 468
|cWidth = 186
|cHeight = 183
|oTop = 315
|oLeft = 242
|Location = center
|Description =
}}
{{c|அர்சர் பேரரசு}}
கன்னோசியை ஆண்ட அரசரின் ஆட்சி கி.பி. 606-இலிருந்து 647 வரை நீடித்தது. அவர் வர்த்தனர் வமிசத்தைச் சேர்ந்தவர். அவ்வமிசத்தில் அரசு பூண்ட<noinclude>
வா. க. 3 - 76</noinclude>
3abk9btk5r648gjun9cacksrjtg7ae7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/630
250
637430
1958732
1916713
2026-08-20T04:47:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|602|இந்தியா}}</noinclude>முதல்வர் புசுயபூதி என்பவர். அவர் பின்தோன்றலான பிரபாகரவர்த்தனர் கி.பி. 584-605 வரை தானேசுவரிலிருந்து ஆண்டார். அவருக்கு இராச்சியவர்த்தனர், அர்சவர்த்தனர் என்னும் மைந்தர் இருவரும் இராச்சியசிரீ என்னும் மகளும் இருந்தனர். இராச்சியவர்த்தனர் பட்டமெய்தி (கி.பி.605) ஓராண்டே அரசு செலுத்தியபின், மாளவ மன்னரையும் கௌடதேச மன்னரான சசாங்கரையும் எதிர்த்துச் செய்த போரில் மடிந்தார்.
இராச்சிய வர்த்தனருக்குப்பின் அவர் தம்பி அர்சவர்த்தனர் அரசு கட்டிவேறினார். அவர் ஆட்சி நாற்பதாண்டுக் காலம் நடைபெற்றது. அவரது ஆட்சியைப் பற்றிய விவரங்கள், அவர் அவைக்களப் புலவரான பாணபட்டர் இயற்றிய அர்சசரிதம் என்னும் நூலாலும் அவர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்து சென்ற சீனப் பயணியான யுவான் சுவாங்கு என்பாரின் குறிப்புகளாலும் கல்வெட்டுகளாலும் தெரியவருகின்றன. அவர் பட்டமெய்திய போது அவருக்கு வயது பதினாறு. அவர் ஆட்சி தொடங்கியதுமே தானேசுவர், கனோசி ஆகிய இரு பகுதிகளையும் சேர்த்து ஆளத்தொடங்கினார் அவர் ஆட்சியிலும் போரிலும் சிறந்தவர். தூரக்கிழக்கிலிருந்த கௌட மன்னரான சசாங்கரை அவர் வெல்ல முடியவில்லை. அப்போது தக்காணத்தில் ஆண்டு வந்த இரண்டாம் புலிகேசி என்பவரால் நர்மதை ஆற்றங்கரையில் அர்ச வர்த்தனர் தோற்கடிக்கப்பட்டார். ஆனால், அவரது பிற வட இந்தியப்போர் முயற்சிகள் யாவும் வெற்றியில் முடிந்தன.
அர்சர் காலத்தில் யுவான்சுவாங்கு அவரது அவைக்களத்திற்கு வந்தார். அப்பௌத்தப் பெரியாரால் ஈர்க்கப்பட்ட அர்சர் பௌத்தக் கொள்கைகளை மேற்கொண்டார். யுவான்சுவாங்கு நாளந்தாப் பல்கலைக் கழகத்தின் கல்வித் துறைப் பெருமைகளைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். அர்சர் ஆட்சியில் வேளாண்மையும் வாணிகமும் செழித்தோங்கின. அவர் காலத்தில் பௌத்தம் போற்றப்பட்டதாயினும், சாதிக் கட்டுப்பாடும் தீண்டாமைப் பழக்கங்களும் மிகுந்தன. அர்சர் சில நாடகங்களை இயற்றினார். அவை இரத்தினாவளி, பிரியதர்சிகா, நாகானந்தம் என்பவை. அவர் ஆட்சியில் பெருமையோடு விளங்கிய பிற ஆசிரியர்களுள் மதங்கதிவாகரரும் பர்த்தருகரியும் குறிப்பிடத்தக்கோர். அர்சர் கி.பி. 647-ல் இறந்ததும் அவர் ஆட்சி மறைந்தது.
அரசர் காலத்திற்குப்பின் இராசபுத்திர அரசர்கள், குறிப்பாகக் கூர்ச்சரப் பிரதிகாரர்கள் ஆட்சியைக் கைப்பற்றி வட இந்தியாவின் பெரும் பகுதிகளைத் துண்டுபோட்டு ஆண்டனர். கூர்ச்சரப் பிரதிகாரர்களுள் நாகப்பட்டர் என்பவரே முதலாமவர். அவ்வமிசத்தின் வெவ்வேறு கிளைகள், வடமேற்கு இந்தியப்பகுதியில், குறிப்பாகக் குசராத்தில் ஆண்டன. இதற்கிடையே காசுமீரத்தில் கார்க்கோடர் வமிசம் ஆண்டது; அவர்களைத் தொடர்ந்து உத்துபலர் ஆண்டனர். வங்காளத்தில் கௌடர் ஆட்சிக்குப் பிறகு பாலர் ஆட்சி தோன்றி அந்தப் பகுதியில் சிறிது அமைதியை நிலைநாட்டியது. இந்தப் பாலர்கள் ஆட்சி கி.பி. 1197 வரை தொடர்ந்தது. முசுலிம் படையெடுப்பாளரான மகம்மது பின் பத்தியார் என்பவர் இறுதி பாலமன்னரான இந்திரத்துயும்நபாலர் என்பவரை ஆட்சி நீக்கம் செய்தார்.
காசிம் என்னும் அராபியர் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே சிந்துமீது படையெடுத்து அதனைக் கைப்பற்றி முகலிம் ஆட்சியை நிறுவினார். அவர் நிறுவிய ஆட்சி நெடுநாள் நீடிக்கவில்லையாயினும் அது வருங்காலத்தில் முசுலிம் ஆட்சி வட இந்தியாவில் நிலைபெறுவதற்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.
வட இந்தியாவில் மேற்கூறிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தக்காணத்தில் சாளுக்கியர், இராட்டிரகூடர் என்போர் ஆண்டனர். சாளுக்கியர் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு மகாராட்டிரத்திலிருந்து ஆண்டனர். சாதவாகனருக்குப் பிறகு தக்காணத்தில் தோன்றிய பெரிய அரசு சாளுக்கியருடையதே. அவர்கள் மேலைச்சாளுக்கியர் கீழைச் சாளுக்கியர் என்று இரு பிரிவாகப் பிரிந்து, முந்தையோர் வாதாபியிலிருந்தும் பிந்தியோர் வேங்கியிலிருந்தும் ஆண்டனர். மேலைச் சாளுக்கியர்களுள் இரண்டாம் புலிகேசி புகழோடு ஆண்டார். அவர் அர்சரைத் தோற்கடித்தார். ஆனால், அவரை நரசிம்ம பல்லவர் என்னும் பல்லவ மன்னர் தோற்கடித்துக் கொன்றார். சில ஆண்டுகள் பின்வாங்கி இருந்த சாளுக்கியர் ஆட்சி மீண்டும் தலையெடுத்தது. அவர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையறாத பகைமை நீடித்து வந்தது.
இரண்டாம் கீர்த்திவருமர் என்னும் சாளுக்கிய அரசரை நீக்கிவிட்டு, தந்தி துருக்கர் என்னும் இராட்டிரகூடர் தமது ஆட்சியை நிறுவினார். இராட்டிரகூடர் ஆட்சி கி.பி. 973 வரை நடைபெற்றது. இராட்டிரகூடர்களுள் மூன்றாம் கோவிந்தன், முதலாம் அமோக வருசன், மூன்றாம் இந்திரன், மூன்றாம் கிருட்டிணன் என்னும் அரசர்கள் புகழ்பெற்று ஆண்டனர், ஆட்சி இறுதிக்காலத்தில் அவர்கள் சோழப் பேரரசர்களோடு போர்புரிய வேண்டியதாயிற்று. அவர்கள் ஆட்சியை நீக்கி விட்டு, இரண்டாம் தைலர் என்பவர் மீண்டும் மேலைச்சாளுக்கியர் ஆட்சியை நிறுவினார். அச்சாளுக்கியரின் தலைநகரம் கல்யாணி<noinclude></noinclude>
rc10a8zl92e5lq6jntwwdlov1edxh37
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/632
250
637432
1958733
1916717
2026-08-20T04:56:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|604|இந்தியா}}</noinclude>திறமையற்றவர்கள். எனவே, அவர் தன் மகள் இரசியாவை (Raiyya) தன் வாரிசாக அறிவித்தார். ஆனால், பெருங்குடிமக்கள் பெண்ணொருத்தி அரசாள்வதை விரும்பாமல் இல்துத்மிசின் மகனான உரூகன்-உத்-தீன் பிரோசு (Rukn-ud-din Firuz) என்பவரைச் சுல்தான் ஆக்கினர். இவன் திறமைற்றவன். எனவே, அவர்கள் இரசியாவை அரசியாக்கினார். இவருக்குப் பலத்த எதிர்ப்பும் இருந்தது. தன் அபிசீனிய அடிமையான யாகுதிற்கு (Yaqut) இவர் காட்டிய பரிவைப் பலர் எதிர்த்தனர். பெருங்குடி மக்களால் யாகுத்துக் கொல்லப்பட்டார். இரசியா சிறையிடப்பட்டார். இவர்தம் மற்றொரு சகோதரர் சுல்தானாக்கப்பட்டார். இரசியா தப்பி மீண்டும் தம் படையுடன் வந்தபோது சுல்தானால் கி.பி. 1240-ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார். இரசியாவும் அவர் கணவரும் கொல்லப்பட்டனர். போர்த்திறனும் அறிவும் கொண்டவர் இரசியா. இவருக்குப்பின் ஆட்சி செய்த முயுசுதீன் பகராமும் (Muiz-ud-din Bahram) அலாவுதின் மசூதும் (Alauddin Masud) திறமையற்றவர்கள். மங்கோலியர் கி.பி.1241-இலும், 1245 இலும் இந்தியாவின் மீது படையெடுத்தனர். இல்துத்மிசின் இளைய மகனான நாசருதீன் முகமது (Nasir-ud-din Mahmud) கி.பி. 1246-ஆம் ஆண்டு சுல்தானாக்கப்பட்டார்.
நாசருதீன் சமய ஈடுபாடும் நற்குணமும் உடையவர். இவர் கல்வியாளரை ஆதரித்தார்; ஆனால் திறமையற்ற அரசர்; இவரது அமைச்சரான கியாசுதீன் பால்பனே (Ghiyas-ud-din Balban) ஆட்சியை நடத்தி வந்தார். இவர் மங்கோலியரை விரட்டி நாட்டைப் பாதுகாத்தார்; கலகக்காரர்களை அடக்கினார். பால்பனின் பகைவர்கள் இவரை விரட்டிய போதும் மீண்டும் உயர் பதவியில் பால்பன் அமர்த்தப்பட்டார். வாரிசு இன்றி நாசருதீன் இறந்ததால் பால்பன் சுல்தான் ஆனார்.
அடிமையாகத் தம் வாழ்வைத் தொடங்கிய பால்பன் படிப்படியாக முன்னேறிச் சுல்தான் ஆனார். நாசருதீனின் மகளை மணந்தார். அடிமை மரபின் சிறந்த அரசராகப் பால்பன் கருதப்படுகிறார். இவர் இராணுவத்தைச் சீர்திருத்தினார்; இராசபுத்திரர்களை விரட்டினார்; உள்நாட்டுச் சீர்த்திருத்தங்களால் புகழ் பெற்றார்; கோட்டைகளைப் புதுப்பித்தார்; நிலச் சீர்திருத்தங்களைச் செய்தார்; மங்கோலியரின் முன்னேற்றத்தைத் தடுத்தார். வங்காளத்தை ஆண்ட துக்ரில்கான் (Tughril Khan) பால்பன் ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்தார். அதை அடக்கப் பால்பனே நேரில் சென்றார். துக்ரில்கான் கொல்லப்பட்டார். பால்பன் தம் இரண்டாம் மகனை வங்காள ஆளுநர் ஆக்கினார்.
பால்பனின் மூத்தமகன் கி.பி. 1285-இல் ஏற்பட்ட மங்கோலியப் படையெடுப்பின் போது கொல்லப்பட்டதால் பெரும் அதிர்ச்சி அடைந்த அரசர் கி.பி. 1287-ஆம் ஆண்டு இறந்தார். கடவுள் நம்பிக்கை உடையவராகவும் சிறந்த படைத்தலைவராகவும் வீரராகவும் நிருவாகியாகவும் மக்கள் நலம் பேணுவராகவும் பால்பன் இருந்தார். பால்பனுக்குப்பின் சுல்தானான இவர் பேரன் கைகுபாத்து (Kaiqubad) வலிமையற்று விளங்கினான். அதனால் குழப்பம் ஏற்பட்டது. அதன் விளைவாகக் கில்சி பிரபுவினால் கொல்லப்பட்டார். இதனுடன் அடிமை மரபு முடிவுற்றது.
<b>கில்சி மரபு (கி.பி. 1290-1320):</b> கைகுபாத்து கொல்லப்பட்ட பின் கி.பி. 1290 சூன் 13-ஆம் நாள் சலாலுதின் பிரோசு சா (Jalal-ud-din Firuzshah) தம் 70-ஆம் வயதில் சுல்தானாகிக் கில்சி மரபைத் தொடங்கினார். அவர் இரக்க மனம் கொண்டவர். பெருங்குடிமக்கள் கீழறுப்புப் பணிகளில் இறங்கினர். கல்தானின் இராத்தம்பூர்ப் படையெடுப்புத் தோல்வியில் முடிந்தது. மங்கோலியப் படையெடுப்பை எதிர்த்து வெற்றி கண்டார். ஆனால், மதம் மாறிய மங்கோலியரைத் தில்லிக்கருகே வாழ அனுமதித்தார். அவர்கள் புதிய முசல்மான்கள் (New Mussalmans) எனப்பட்டனர். சலாலுதீன் தம் மருமகன் அலாவுதீன் கில்சியால் கி.பி. 1296-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்.
தேவகிரியை ஆண்ட யாதவகுல மன்னரான இராமச்சந்திரனையும் அவன் மகன் சங்கரதேவனையும் தம் மாமன் காலத்திலேயே அலாவுதீன் வென்றார். அலாவுதீன் சலாலுதீனின் மறைவுக்குப்பின் ஏற்பட்ட குழப்பத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு கி.பி. 1296-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் நாள் சுல்தான் ஆனார். தம்மை எதிர்த்தவர்களை அவர் கடுமையாகத் தண்டித்தார்.
அலாவுதீன் மங்கோலியர் படையெப்புகளை முறியடித்தார். ஐந்து முறைகளும் வெற்றி அலாவுதீனுக்கே கிடைத்தது. எல்லைப்புறங்களில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். புதிய முசல்மான்களை ஒடுக்கினார். கூர்சரத்தை ஆண்ட கருணதேவனை வெல்லப் படையெடுத்தார். அவர் மனைவி கமலாதேவியும் மகள் தேவாலதேவியும் தப்பி ஓடினர். கூர்சரம் கொள்ளையடிக்கப்பட்டது. காபூர் (Kafur) என்ற அலியும் கைப்பற்றப்பட்டான். அவனே பின்னர் மாலிக்காபூர் (Malik kapur) என அழைக்கப்பட்டான்.
இராந்தம்பூரைக் கைப்பற்றும் முயற்சியில்<noinclude></noinclude>
qrlsgn0pv8j46k1jmsygvj54bg4ox43
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/633
250
637433
1958734
1916718
2026-08-20T04:57:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 633
|bSize = 468
|cWidth = 234
|cHeight = 276
|oTop = 36
|oLeft = 11
|Location = center
|Description =
}}
{{c|பம்பாய் - அங்காடி}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 633
|bSize = 468
|cWidth = 288
|cHeight = 219
|oTop = 326
|oLeft = 138
|Location = center
|Description =
}}
{{c|கைவினைப்பொருள்கள் விற்பனை அங்காடி}}{{nop}}<noinclude></noinclude>
j3okec1fz0tvvgglh1o52nu8xk1gxl7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/634
250
637434
1958735
1916719
2026-08-20T04:58:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 634
|bSize = 468
|cWidth = 177
|cHeight = 228
|oTop = 39
|oLeft = 272
|Location = center
|Description =
}}
{{c|உழவர் - ஏர் உழுதல்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 634
|bSize = 468
|cWidth = 159
|cHeight = 240
|oTop = 38
|oLeft = 74
|Location = center
|Description =
}}
{{c|இராசசுதான் பெண்கள் குடிநீர் எடுத்தல்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 634
|bSize = 468
|cWidth = 153
|cHeight = 212
|oTop = 318
|oLeft = 288
|Location = center
|Description =
}}
{{c|வேளாண் குடிகள்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 634
|bSize = 468
|cWidth = 159
|cHeight = 206
|oTop = 318
|oLeft = 80
|Location = center
|Description =
}}
{{c|இராசசுதான் தலைநகரம் செய்ப்பூர்}}{{nop}}<noinclude></noinclude>
agx6y5vxmkxof5kngj7acetmfft8brx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/635
250
637435
1958736
1916720
2026-08-20T05:00:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 635
|bSize = 468
|cWidth = 182
|cHeight = 231
|oTop = 30
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{c|இந்திய யானை}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 635
|bSize = 468
|cWidth = 168
|cHeight = 197
|oTop = 63
|oLeft = 260
|Location = center
|Description =
}}
{{c|செங்கற்கள் அறுக்கும் தொழில்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 635
|bSize = 468
|cWidth = 318
|cHeight = 233
|oTop = 293
|oLeft = 63
|Location = center
|Description =
}}
{{c|கல்கத்தா துறைமுகம்}}{{nop}}<noinclude></noinclude>
tqldn4kj3w727se4leb0bt0b1to9mmj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/636
250
637436
1958737
1916721
2026-08-20T05:01:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 636
|bSize = 468
|cWidth = 227
|cHeight = 162
|oTop = 72
|oLeft = 140
|Location = center
|Description =
}}
{{c|இமயமலை}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 636
|bSize = 468
|cWidth = 270
|cHeight = 228
|oTop = 296
|oLeft = 117
|Location = center
|Description =
}}
{{c|பம்பாய்-நகரம்}}{{nop}}<noinclude></noinclude>
p9hrl9qxqxgk9y7bc159mib1dr72dmq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/637
250
637437
1958738
1916722
2026-08-20T05:07:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|605|இந்தியா}}</noinclude>பெரும் சேதம் ஏற்பட்டாலும் இறுதியில் அலாவுதீன் அதைக் கைப்பற்றினார். மேவாரின்மீது படையெடுத்தார். அதன் இராணி பத்மினியின் மீது காமங்கொண்டார். அலாவுதீனிடமிருந்து தப்பப் பத்மினி உயிர்த் தியாகம் செய்தாள். சித்தூர்க்கோட்டையை அலாவுதீன் கைப்பற்றினார். பின்னர், மாளவம் கைப்பற்றப்பட்டது. உச்சயினி, மாண்டு (Mandu), தார், சந்தேரி ஆகியவை பிடிக்கப்பட்டன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 637
|bSize = 468
|cWidth = 188
|cHeight = 180
|oTop = 150
|oLeft = 18
|Location = center
|Description =
}}
{{c|அலாவுதீன் கில்சியின் பேரரசு}}
மாலிக்காபூரின் தலைமையில் கி.பி. 1307-ஆம் ஆண்டு படையொன்று தென்னிந்தியாவின் மீது படையெடுத்தது. தேவகிரி மன்னன் இராமச்சந்திரன் திறை செலுத்த ஒப்புக் கொண்டான்.
தேவலாதேவி அலாவுதீனின் மகனுக்கு மணம் முடிக்கப்பட்டாள். காகதீய மன்னன் பிரதாபருத்ரதேவன் முறியடிக்கப்பட்டான். ஓய்சள (Hoysala) மன்னன் மூன்றாம் வீரபல்லாளன் தாக்கப்பட்டுச் சரணடைந்தார். மாபார் (Mabar) எனப்படும் பாண்டி நாட்டின்மீது காபூர் படையெடுத்தார். அங்கிருந்த கலகச் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டார். மதுரை நகரைத் தாக்கிக் கொள்ளையிட்டார். இராமேசுவரம் வரை படையெடுத்தார். காபூர் எல்லையற்ற செல்வத்துடன் தில்லி திரும்பினார். திறை செலுத்த மறுத்த சங்கரதேவன் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான்.
அலாவுதீன் பல சீர்திருத்தங்களைச் செய்தார். சாகீர் முறையை (Jagir) நீக்கினார். ஒற்றர் படையை தீவிரப்படுத்தினார். பிரபுக்களைக் கண்காணித்தார். மது அருந்துவதைத் தடை செய்தார். அரசாங்க வருமானத்தைப் பெருக்கினார். வணிகர்களைக் கண்காணித்து அளவைகளைச் சரியாகப் பயன்படுத்தச் செய்தார். கலப்படங்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது. அவர் படையைச் சீர்திருத்தினார். அலாவுதீன் 1316-ஆம் ஆண்டு சனவரி 2-ஆம் நாள் காலமானார். அவரது ஆட்சியில் மாலிக்காபூர் பெரும்அதிகாரம் பெற்றிருந்தார்.
அலாவுதீனுக்குப்பின் அவர் தம் இளைய மகனைப் பதவியிலிருத்தினார் காபூர். மற்ற உறவினரைக் கொடுமையாய் நடத்தினார். 35 நாள் ஆட்சிக்குப் பின் காபூர் கொல்லப்பட்டார். அலாவுதீனின் மூன்றாம் மகன் முபாரக்கு குழந்தை சுல்தானின் காவலரானார். ஆனால் அவர் சுல்தானைக் குருடாக்கிவிட்டு கி.பி. 1316 ஏப்பிரலில் குத்புதீன் முபாரக்கு (Qutb-ud-din Mubarak) என்று பட்டம் சூட்டிக்கொண்டார்.
முபாரக்குசா (Mubarak Shah) தம் தந்தையின் கடினமான சட்டங்களை ஒழித்தார். கூர்சரத்திலும் தேவகிரியிலும் ஏற்பட்ட கலகங்கள் ஒடுக்கப்பட்டன. ஆயினும் சுல்தானுக்கு எதிராகக் கலகங்கள் மூண்டன. முபாரக்கு சா கி.பி. 1320-ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இதில் சீரிய பங்கு வகித்த குசுரு என்பார் நாசருதீன் என்னும் பெயருடன் சுல்தான் ஆனார். இவர் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை.
காசி மாலிக்கு (Ghazi Malik) என்பவர் தலைமையில் குசுரு சா கி.பி. 1320 செப்டம்பர் 5-ஆம் நாள் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். பின் பிரபுக்கள் விருப்பத்திற்கேற்பக் கியாசுதீன் துக்ளக்கு (Ghiyas-ud-din Tughluq) என்ற பெயருடன் காசிமாலிக்கு கல்தான் ஆனார்.
<b>துக்ளக்கு மரபு (கி.பி. 1320-1413)</b>: கியாசுதீன் துக்ளக்கு வலிமையும் நற்குணமும் பெற்றவர். பொருளாதாரத்தைச் சீர்திருத்தினார். விவசாயத்தை மேம்படுத்தினார். கோட்டைகளைப் பழுதுபார்த்தார். நீதி, காவல் துறைகள் சீர்திருத்தப்பட்டன. அறிஞர்களை ஆதரித்தார். இராணுவம், அஞ்சல் முறை போன்றவை திருத்தி அமைக்கப்பட்டன. இவர் தம் அவைப்புலவர் அமீர்-குசுரு (Amir Khusru).
வாரங்கலில் (Warangal) ஏற்பட்ட கலகத்தை அடக்கத் தம் மகன் சானா சாவை (Jauna Shah) அனுப்பினார். முதல் முறை தோற்றாலும் இரண்டாம் முறை சானாசா வென்றான். வாரங்கல்<noinclude></noinclude>
rfrrxgjo7ocb9ioqc61joswp93388fm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/638
250
637438
1958739
1916724
2026-08-20T05:14:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|606|இந்தியா}}</noinclude>சுல்தான்பூர் எனப் பெயரிடப்பட்டது. வங்காளத்தில் ஏற்பட்ட கலகம் ஒடுக்கப்பட்டுக் கிழக்குப் பகுதி தில்லியின் ஆட்சிக்குட்பட்டது.
கியாசுதீன் கி.பி. 1325-இல் ஏற்பட்ட விபத்தினால் இறந்தார். முகமது பின் துக்ளக்கு என்னும் பெயருடன் சானா சுல்தான் ஆனார். இவர் சிறந்த கல்விமான். படைத்தலைவர்; ஆனால், செயல் வீரர் அல்லர். நன்மை செய்ய விரும்பித் தீமை செய்யும் இயல்புடையவர். முகமதுபின்துக்ளக்கு (Muhammad bin Tughluq) கி.பி. 1327-இல் தில்லியிலிருந்து தம் தலைநகரைத் தேவகிரிக்கு மாற்றினார்; இதனால், ஏற்பட்ட துன்பத்தை கண்டவுடன் மீண்டும் தில்லிக்கே மாற்றினார். இவர் செய்த நாணயச் சீர்திருத்தம் ஏளனத்திற்குள்ளானது. தங்கம், வெள்ளி நாணயங்களுக்குப் பதிலாகச் செப்பு நாணயங்களை வெளியிட்டார். அதனால், கள்ள நாணயங்கள் பெருகின. பொருளாதாரம் சீர்குலைந்தது. செப்பு நாணயங்களுக்கு ஈடாகத் தங்க, வெள்ளி நாணயங்களைக் கொடுத்துப் பெரும் நட்டத்திற்குள்ளானார். மங்கோலியப் படையெடுப்பைத் தடுக்க மிகுதியான தங்க, வெள்ளி அணிகலன்களைக் காணிக்கையாக அளித்தார். திபேத்து, சீனா போன்ற நாடுகளின்மீது படையெடுத்த முயற்சிகள் பெரும் சேதத்திற்குள்ளாயின. தோவாபு (Doab) பகுதியில் மிகுதியான வரி விதித்தார்; மக்கள் துன்புற்றனர். வங்காளத்தில் ஏற்பட்ட கலகத்தை முகமதுவினால் அடக்க முடியவில்லை. அயோத்தி ஆளுநரின் கலகம் ஒடுக்கப்பட்டது. ஆயினும் பொருளாதார நிலை சீர்கேடுற்றது. தெலிங்கானா, துவாரசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கலகம் ஏற்பட்டது. விசய நகரப் பேரரசின் எழுச்சி சுல்தானின் ஆட்சிக்கு எதிராக விளங்கியது. அலாவுதீன் பாமன் சாவின் (Alauddin Bahman Shab) தலைமையில் கி.பி. 1347-இல் பாமினிப் பேரரசு ஏற்படுத்தப்பட்டது. கலகத்தை அடக்க தட்டா (Thattah) என்ற இடத்திற்குச் சுல்தான் துக்ளக்குச் சென்றபோது கி.பி. 1351 மார்ச்சு மாதம் 20-ஆம் நாள் உயிரிழந்தார்.
முகமதுவின் சாவிற்குப்பின் நாட்டில் குழப்பம் மலிந்தது. அவருக்குப்பின் அவர் சிறிய தந்தையின் மகன் பிரோசு சுல்தானாக்கப்பட்டார். அவர் கி.பி. 1353 நவம்பரில் மேற்கொண்ட இரண்டு வங்காளப் படையெடுப்புகளும் வெற்றி பெறவில்லை. ஆனால், சாசு நகர் (Jajnagar), தெலிங்கானா ஆகிய பகுதிகளில் வாகை சூடினார். நாகர்கோட்டு (Nagarkot), சிந்து பகுதிகளில் வெற்றிபெற்றபோதும், சுல்தானின் திறமையின்மை வெளியாகியது. இவர் ஆட்சியில் மங்கோலியப் படையெடுப்பு நிகழவில்லை.
தீவிர முசுலிம் ஆன பிரோசு இந்துக்களைக் கொடுமைப்படுத்தினார். காலிபை மதித்தார். சாகீர் முறையைக் கொண்டுவந்தார். பல வரிகளை நீக்கினார். குர்-ஆனைப் பின்பற்றினார். வேளாண்மை கைத்தொழில் ஆகியவை வளர்ச்சியுற்றமையால் பொருளாதாரம் முன்னேறியது. பிரோசாபாத்து (Firuzabad) என்னும் நகரை உருவாக்கினார். இன்னும் சிலநகரங்களையும் கட்டடங்களையும் அமைத்தார். நீதி வழங்குவதில் சிறந்து விளங்கினார். பெண்களுக்கு உதவும் நிறுவனத்தை ஏற்படுத்தினார். படை பலம் பெற்று விளங்கியது. அடிமை முறை புகுத்தப்பட்டது.
இவரது மூத்த மகன் இறந்ததால் அதிர்ச்சியுற்ற சுல்தான் தகுதியற்ற இரண்டாம் மசுனான முகமதுகானின் நடத்தையால் நலிவுற்றார். உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. முகமதுகான் ஓடி ஒளிந்தார். பிரோசின் பேரனான துக்ளக்கானைச் சுல்தானாக்கியபின் கி.பி. 1388 செப்டம்பர் 20-ஆம் நாள் அவர் இறந்தார். துக்ளக்கான் கி.பி. 1389-இல் கொல்லப்பட்டார். அவருக்குப்பின் அபுபக்கரும் நாசருதீன் முகமதும் உமாயூனும் ஒருவர் பின் ஒருவராக ஆண்டனர். பின்னர் முகமது-பின்-துக்ளக்கின் பேரனான நசரத்சாவும் பிரோசு சாவின் பேரனான முகமதுசாவும் சுல்தானானார்கள். இச்சூழ்நிலையில் நாடெங்கும் கலகம் ஏற்பட்டது, தைமூர் படையெடுப்பும் இத்துடன் சேர்ந்துகொண்டது. தைமூரின் பேரன் கி.பி. 1398-இல் மூல்தானைக் கைப்பற்றினார். தைமூரும் தில்லி வந்து பெரும் வெற்றி பெற்றார். சுல்தான் முகமது தோற்கடிக்கப்பட்டார். தில்லி சூறையாடப்பட்டது. தைமூர் கி.பி. 1339-இல் நாடு திரும்பினார். பல குழப்பங்களுக்கிடையே முகமது மீண்டும் தில்லி வந்து சேர்ந்தார். முசுமது கி.பி. 1413-பிப்ரவரியில் உயிர் துறந்தார்.
<b>சையதுமரபு (கி.பி. 1414-1451):</b> துக்ளக்கு மரபு வீழ்ச்சியடைந்த பின் பிரபுக்கள் தௌலத்கான் லோடியைத் தில்லிச் சுல்தானாக்கினர். ஆனால், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மூல்தானை ஆண்ட இசார் பிரோசாவிடம் (Hissar Firu Shah) கைதியாக அனுப்பப்பட்டார். பிரோசா சுல்தான் ஆனார். அவரது மரபு சையது மரபு எனப்பட்டது. இவருக்கு எதிராகப் பல கிளர்ச்சி ஏற்பட்டன. அவருக்குப்பின் அவர் மகன் முபாரக்சா சுல்தான் ஆனார். கோக்கர்கள் கலகம் செய்தனர். முபாரகாபாத்து என்ற நகர் உருவாக்கப்படுவதைப் பார்வையிடச் சுல்தான் வந்த போது காலமானார். இவருக்குப்பின் முகமது சுல்தான் ஆனார். இவரது ஆட்சியில் குழப்பம் மலிந்திருந்தது. இவர் கி.பி. 1445-இல் இறந்ததால் இவர் மகனான அலாவுதீன் ஆலம் சா (Alauddin Alam Shah) சுல்தானாக்கப்பட்டார். திறமையும் வீரமும் அற்றவராக இவர் விளங்கினார். சிற்றின்பங்களில்<noinclude></noinclude>
tukqwqkys4stjt8133qia9prujjklkd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/639
250
640345
1958740
1924558
2026-08-20T05:20:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|607|இந்தியா}}</noinclude>மூழ்கிய அலாவுதீன் தில்லியைப் பகலூல்கான் உலோடிக்கு (Buhlul Khan Lodi) விட்டுக்கொடுத்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டார்.
<b>உலோடி மரபு (கி.பி. 1451)</b>: ஆப்கானியரான பகலுல்கான் உலோடி கி.பி. 1451 ஏப்பிரல் 19-ஆம் நாள் தில்லி சுல்தான் ஆனார். அரசு சீர்குலைந்த நிலையிலிருந்தது. இலர் பிரபுக்களின் கொட்டத்தை அடக்கினார். சான்பூரை (Jaunpur) வென்றார். குவாலியர் அரசர் கிராத் சிங்கை (Kiratsingh) வென்றார். இவர் நோயுற்றதால் வாரிசுரிமை பற்றிய சிக்கல் ஏற்பட்டது. இவர் கி.பி. 1489-இல் இறந்தார். இவரது இரண்டாம் மகன் சிக்கந்தர் சா (Sikandar Shah) என்னும் பெயருடன் சுல்தான் ஆனார். அவர் திறமையான அரசர்; வெற்றிவீரர். தோல்பூர், சந்தேரி, திர்குத்து (Tirkut) ஆகிய பகுதிகளின் தலைவர்கள் அடக்கப்பட்டனர். வங்காளத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டார். அவர் கி.பி. 1517-இல் காலமானார். அலர் நல்ல நீதியாளர்; ஏழைகளின் குறைகளைக் கேட்டறிந்தார். அமைதியும் செல்வமும் ஓங்கின. எனினும், சகிப்புத்தன்மையற்றவர்.
அவர் மகன் இப்ராகீம் கி.பி. 1517-இல் அரசரானார். அவர் பிரபுக்களை அடக்கினார். தௌலத்கான் (Daulstkhan) உலோடியும் ஆலம்கானும் பர்பரை (Babar) இந்தியாவின் மீது படையெடுக்குமாறு வேண்டினர். பானிபட்டு, என்னுமிடத்தில் கி.பி. 1526-ஆம் ஆண்டில் நடந்த போரில் பாபர் இப்ரகீமைத்தோற்கடித்து முகலாயப் பேரரசைத் தோற்றுவித்தார்.
வட இந்தியாவில் சிறப்பான அரசுகளாக விளங்கியவை வங்காளம், கான்பூர், மாளவம், குசராத்து, காகமீர் ஆகியன. தென்னிந்தியாவில் பாமினி அரசு சிதைத்து ஐந்து சுல்தானியங்கள் ஏற்பட்டன. அவை பேரார், பீடார், அகமதுநகர், பீசப்பூர், கோல்கொண்டா என்பனவாம்.
இந்து அரசான விசயநகர அரசு தென்னிந்தியாவில் சிறப்புற்று விளங்கியதும் இக்காலத்தின்தான், சிறந்த இராசபுத்திர அரசாக மேவார் விளங்கியது.
கல்தான்களின் ஆட்சியில் இசுலாம் பரவியது; இந்துக்கள் ஒடுக்கப்பட்டனர்; கலை வளர்ச்சியுற்றது; இலக்கியம் ஆதரிக்கப்பட்டது; பக்தி மார்க்கம் ஏற்பட்டது; மாநில மொழிகள் வளர்ச்சி அடைந்தன; கட்டடக்கலை சிறப்புப்பெற்றது; ஆயினும் முசுலிம்களிடையே ஒற்றுமை, ஒழுங்கு, கட்டுப்பாடு ஒரு வருக்கொருவர் நம்பிக்கை காட்டுதல் போன்ற குணங்கள் குறையலாயின. இதுவே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.
{{right|வெ.பா.}}
<b>இந்தியா-வரலாறு (கி.பி. 1526 முதல் 1858 வரை)</b>: இந்தியாவில் மொகலாய வரலாறு கி.பி. 1526-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. தில்லியை ஆண்ட சுல்தான் இப்ராகீம் உலோடியை மொகலாய மன்னர் பாபர் கி.பி. 1526-இல் நடைபெற்ற பானிப்பட்டுப் போரில் தோற்கடித்து இம்மரபினரின் ஆட்சியை நிறுவினார். வரலாற்றில் இப்போர் முதல் பானிப்பட்டுப் போர் எனப்படும். சகிர்-உத்-தீன் முகமது என்னும் முதற்பெயரைக் கொண்ட பாபர் (பாபர் என்பதற்குப் புலி என்பது பொருள்) துருக்கிய மரபினரான தாமர்லேன் (Tamer Lane) என்பாரின் வழித்தோன்றல், தந்தை வழியாகப் பாபர் தம் 11-ஆம் வயதில் பர்க்கானா என்னும் சிறுபகுதியைப் பெற்றிருந்தார். சாமர்கண்டை வென்றபோது பாபர் பர்க்கானாவை இழந்தார். பின்னர் இரண்டையும் இழந்து காபூலின் மன்னரானார். இந்தியாவின் மீது பல முறை படையெடுத்த பாபர் கி.பி. 1526-இல் இப்ராகீம் உலோடியையும் கி.பி. 1527-இல் இராசபுத்திர வீரர் சங்கராம சிங்கையும் வெற்றிகண்டார். இவ்விரு பெரும் வெற்றிகளுடன் மேலும் பல வெற்றிகளைப் பெற்று வங்காளம், பீகார் போன்ற பகுதிகளையும் வென்று, வடக்கில் காபூல் கிழக்கில் வங்காள எல்லை, தெற்கில் குவாலியர் ஆகியவற்றிற்குட்பட்ட பரந்த பேரரசைப் பாபர் நிறுவினார். மேலும், பல பகுதிகளை வெற்றி கொள்ளும் ஆசை பாபரின் மரணத்தால் (கி.பி. 1530) முற்றுப்பெறவில்லை. பாபருக்குப் பின்னர் அவர் மூத்த மகன் உமாயூன் மொகலாயப் பேரரசர் ஆனார்.
உமாயூனின் ஆட்சிக்காலத்தில் செர் சா (Sher Shah) என்னும் ஆப்கானியப் படைத்தலைவர் எழுச்சியுற்று உமாயூனை விரட்டிவிட்டு அரசராக முடிசூட்டிக் கொண்டார். செர்சா வெற்றிவீரரும் திறமை வாய்ந்த நிருவாகியுமாவார். மீண்டும் இந்தியாவில் ஆப்கானியரின் ஆட்சியை நிலைநாட்டும் வாய்ப்பும் இருந்தது. ஆனால், அவர் ஐந்தாண்டுகளே (கி.பி. 1540-45) ஆட்சி செய்தமையால் இவ்வாய்ப்பை அவருக்குப்பின் வந்த ஆப்கானியர்களால் நிறைவேற்ற இயலவில்லை. செர்சாவின் ஆட்சிக்காலத்தில் வடஇந்தியாவின் பெரும்பகுதிகளில் நிருவாக அமைப்பு முறை வலுவாக நிலைநாட்டப்பெற்றது. நிலவரிச் சீர்திருத்தம், பேரரசை மாவட்டங்களாகப் பிரித்து நேராட்சி நடத்தல், சாலைகள் அமைத்தல், அஞ்சல் முறை போன்றவற்றைச் செய்தார். பின்னர் வந்த மொகலாயப் பேரரசர் அக்பருக்கு வழிகாட்டியவர் என்று அவரைப் போற்றினர்.{{nop}}<noinclude></noinclude>
2ywkuiu90dwguj87xwjg4c4mgszn8fh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/641
250
640348
1958742
1924561
2026-08-20T05:32:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|609|இந்தியா}}</noinclude>கான் இத்தகைய கொடுமையைச் செய்யுமாறு அக்பருக்கு வழிகாட்டினான்.
பானிப்பட்டுப் போர்க்களத்தில் மொகலாயப் பேரரசின் அடிக்கல் நாட்டப்பட்டது உண்மைதான் ஆனால், அது கி.பி. 1526-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பானிப்பட்டுப் போரிலன்று; கி.பி. 1556-இல் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட்டுப் போரில்தான், ஈமுவின் தோல்விக்கும் சாவிற்கும் பின்னர்த் தில்லியை ஆண்ட மொகலாயப் பேரரசர்கள் அத்தகைய பேரிடரைக் கி.பி. 1707-ஆம் ஆண்டில் அவுரங்கசீபு சாகும்வரை ஒருபோதும் எதிர்நோக்கவில்லை. இதற்கு முன்னர் வட இந்தியாவை ஆண்ட இரு பேரரசுகளான மௌரியப் பேரரசும் குப்தப் பேரரசும் இந்தியாவில் நிலை நாட்டப்பட்ட பேரரசுகளேயாகும். மௌரிய, குப்த, மொகலாயப் பேரரசுகள் மூன்றிற்கும் ஓரிரு ஒற்றுமைகள் உண்டு. இம்மூன்று பேரரசுகளையும் மூன்று, நான்கு பேரரசர்கள் ஒருவருக்குப்பின் ஒருவராக ஆண்டு, கட்டிக்காத்து விரிவுபடுத்தினர். மௌரியப் பேரரசைச் சந்திரகுப்த மௌரியரும் பிந்துசாரரும் அசோகரும் நிலைநாட்டினர். குப்தப் பேரரசைச் சமுத்திரகுப்தரும் இரண்டாம் சந்திரகுப்தரும் குமாரகுப்தரும் கந்தகுப்தரும் உறுதிப்படுத்தினர். மொகலாயப் பேரரசை அக்பர், சகாங்கீர், சாசகான், அவுரங்கசீபு போன்றவர்கள் கட்டிக்காத்தனர். இம்மூன்று பேரரசுகளும் நல்லதொரு நிருவாக அமைப்பை அவரவர் காலத்தில் நிலைநாட்டியதுடன், கலைக்கும் கட்டடக்கலைக்கும் புத்துணர்ச்சியூட்டி மலரச் செய்தன என்பது வரலாற்று உண்மை.
மொகலாயப் பேரரசு படிப்படியாகப் பெருகி வடக்கில் இமயமலைத் தொடர் முதல் ஏறத்தாழ தெற்கில் கடல்வரையிலும், மேற்கில் இந்துகுசு (Hindukush) மலைத்தொடர் முதல் கிழக்கில் இந்தியாவின் இயற்கை யெல்லை வரை பரந்திருந்தது. ஆப்கானிய அரசர்களைத் தோற்கடித்த பின்னர், அக்பர் ஆக்கிரமிப்புக் கொள்கையை மேற்கொண்டு தம் அதிகாரத்தை வடஇந்தியாவின் பெரும்பாவான பகுதிகள், ஆப்கானிசுத்தானம், பலுசெத்தானம், காண்டகார் போன்ற பகுதிகளில் நிலைநாட்டினார். இவ்வெற்றிகள் கி.பி. 1560-க்கும் கி.பி. 1595-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்டன. மாளவத்தில் (சி.பி. 1560) தொடங்கிக் காண்டகாரில் (கி.பி. 1955) முடிவுற்றன. இவ்வெற்றிகள் கோண்டுவானா (1564), இராசபுதனம் (1569), குசராத்து (1572), வங்காளம் (1576), காசுமீரம் (1586), காபூல் (1581), சிந்துவின் தென்பாகம் (1591), ஒரிசா (1592), பலுச்சிசுத்தானம் (1595), காண்டகார் (1595) போன்றவை அக்பரால் கைப்பற்றப்பட்டன.
வடஇந்தியாவில் மிகப் பரந்த பேரரசினை நிலைநாட்டி வடஇந்தியா முழுவதையும் காபூல், காண்டகார், கசினி (Ghazni), அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியிருந்த சிற்றரசுகள் போன்றவற்றையும் கைக்கொண்ட பின்னர், அக்பர் தம் கவனத்தைத் தக்காணத்தின் மீது திருப்பினார். அகமது நகரின் மீதும் காந்தேசத்தின்மீதும் அவர் படையெடுத்தார். எனினும் அவர் ஓரளவுதான் வெற்றிபெற்றார். பேராரையும் (1596) மேற்கூறிய இரு அரசுகனின் சிறு பகுதிகளையும் (1601) பெற்றார். இவ்வெற்றிகளுடன் தொடர்பான சில நிகழ்ச்சிகளைக் கூறவேண்டும். தக்காணப் படையெடுப்புகளின்போது இடைக்கால வரலாற்றில் புகழ்பெற்ற இரு அரசியார்களைக் குறிப்பிடவேண்டும். இராணி துர்க்காவதியும் சாந்த்பீபியுடே அவ்விரு அரசியராவர்.
இராணி துர்க்காவதி தன் இளம் வயது மகனின் பேராளராக கோண்டுவானாவை ஆண்டாள், அளவற்ற திறனுக்கும் இராணுவப் பயிற்சிக்கும் பெயர் பெற்ற அவ்வரசி மொகலாயப் படையை எதிர்த்துப் போரிட்டும் பயனில்லாமல், தற்கொலை செய்து கொண்டு உயிர்துறந்தாள். எஞ்சிய பெண்கள் தீயில் குதித்து மாண்டனர்.
சாந்த் சுல்தானா என்னும் சாந்த் பீபி அகமது நகர் அரசி; படைக்கலம் தரித்துப் படைவீரர்களுக்கு ஊக்கமூட்டி முற்றுகையிடப்பெற்ற கோட்டையைக் காத்துப் பெருமைபெற்றவள். அவள் மொகலாயப் படைகளின் குண்டுகளால் சேதமடைந்த கோட்டைமதிலைப் பழுதுபார்க்கும்போது அக்பரால் சுட்டுக் கொல்லப்பட்டாள்.
அக்பர் மேவார் மன்னர் இராணா பிரதாபசிம்மனுடன் செய்த போர்களை இராசபுதன நாட்டுப் புறப்பாடல்கள் உயிரோவியங்களாகக் குறித்துள்ளன, சேம்சு தாடு (James Tod) என்பார் தாம் எழுதிய ‘இராசசுத்தான் கதைகளும் தொன்மைகளும்’ (The Annals and Antiquities of Rajasthan) என்னும் நூலில் அவற்றைத் தொகுத்துள்ளார். இந்தியாவில் இசுலாம் சமயம் நுழைவதைத் தடுத்து இந்து சமயத்தைப் பேணிக்காக்கும் பேரரண்களாக இராசபுத்திரர்கள் விளங்கினார்கள். இராசபுத்திரர்களை எதிர்த்தே பெரும்பாலான பட்டாணியத்துருக்கர்கள் போராட வேண்டிய குழ்நிலை ஏற்பட்டது. இராசபுத்திரர்கள் அடிக்கடி தோற்றுப்போனார்கள். எனினும் சுதந்திரம் பெற வாய்ப்புக் கிட்டியபோது அதை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தத் தவறவில்லை. அவர்களுடன் மணவுறவு கொண்டு தம் பக்கம் கவர்ந்துகொள்ள அக்பர் முடிவு செய்தார்.{{nop}}<noinclude>
வா. க. 3 - 39</noinclude>
5hsvi0h7w77851joihqv8f8f0q76hh7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/640
250
640349
1958741
1924562
2026-08-20T05:26:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|608|இந்தியா}}</noinclude><b>செர்சா (Sher Shah):</b> செர்சா தம் திறமையாலும் இராணுவத் தகுதியாலும் பேரரசராக உயர்த்தார். அவர் ஓர் ஆப்கானியர். ஆப்கானியப் பேரரசை மொகலாயரிடமிருந்து பறித்து, மீண்டும் நிலைநாட்டிய பெருமை அவரையே சாரும். செர்சா நிருவாகத் திறமைக்குப் பெயர் பெற்றவர். தம் பேரரசை அவர் ‘சர்க்கார்’களாகவும், ‘பர்க்கானா’க்களாகவும் பிரித்து, நிருவாகத் துறைகளைச் செம்மையாக நிருவகிக்க அதிகாரிகளையும் நீதித்துறை அதிகாரிகளையும் அமர்த்தினார். அவர் நிலத்தை அளந்து ஒவ்வொரு பண்ணையின் அளவையும் நெறிமுறைப்படுத்தினார். நாலில் ஒரு பங்கு நிலவரி வாங்கப்பட்டது. நிலவரியைக் குடியானவர்களே தாம் சாகுபடி செய்த தானியமாகவோ பணமாகவோ நேரிடையாகக் கட்டலாம். குடியானவர்களுக்கு நிலப்பட்டா வழங்கும் முறையை முதன்முதலில் புகுத்தியவர் அவரே. அந்த ஆவணத்தில் குடியானவனின் நிலத்தின் அளவும் அவன் செலுத்த வேண்டிய நிலவரியின் அளவும் குறிக்கப்பட்டிருந்தன.
செர்சா போக்குவரத்துச் சாதனங்களைப் பெருக்கினார். வங்காளத்தையும் பஞ்சாபையும் இணைக்கும் மிக நீண்டசாலையை (Grand Turnk Road) உருவாக்கி, சாலையின் இருமருங்கிலும் மரங்களை நட்டு, இந்து-முசுலிம் வழிப்போக்கர்களுக்குத் தங்கும் விடுதிகளையும் அமைத்தார்.
இந்தியாவில் இந்துக்களும் இசுலாமியர்களும் வாழ்வதால், இவ்விரு இனங்களையும் இணக்கமாகச் செயற்படச்செய்யும் முயற்சிகளை மேற்கொண்டார். நாணயமுறையைச் சீர்திருத்தி மிகுதியான வெள்ளிக் காசுகளை வெளியிட்டார். அவற்றில் இந்தி-பாரசீக எழுத்துகளைப் பொறித்தும் நாணயச் செலாவணியைச் சீர்படுத்தினார். இவரை இந்திய ரூபாயின் தந்தை என்பர். நீதியை நடுநிலை தவறாமல் செயற்படுத்தினார். குடியானவர்களின் உரிமைகள் காக்கப்பட்டன. இவர் கட்டடக்கலைப் பிரியர். இவருடைய கல்லறையை இன்றும் சசாரம் (Sasaram) என்னுமிடத்தில் காணலாம். அது அழகிய கட்டடக்கலைக்கோர் எடுத்துக்காட்டு. இடைக்கால இந்திய வரவாற்றில் இவரை மாபெறும் மன்னர்களுள் ஒருவராகக் கருதலாம். இவர்தம் மகனும், அடுத்து அரியணையேறியவருமான இசுலாம் சா (Islam Shah) பேரரசைக் குலையாமல் காத்தபோதிலும், கி.பி. 1553-ஆம் ஆண்டில் காலமானபோது நாட்டில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. அரச குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்களும் அரண்மனையில் வாழ்ந்த ஆப்கானியப் பிரபுக்களிடையே மூண்ட கொந்தளிப்பும் கசப்புணர்ச்சியும் பேரரசை அலைக்கழித்தன. அரியணையைக் கைப்பற்றப் பலர் போட்டியிட்டுக் கொண்டமையால், பேரரசு அவர்களுக்கிடையே பிரித்துக் கொடுக்கப்படலாயிற்று. இத்தருணத்தில் உமாயூன் ஏதுமிலியாகப் பாரசீக மன்னரின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். இந்தியாவில் நிலவிய சூழ்நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பாரசீக மன்னரின் உறுதுணையுடன் இந்தியாவில் மீண்டும் மொகலாயர் ஆட்சியை நிலைநாட்ட அவர் முயன்றார்; காபூலையும் காண்டகாரையும், பஞ்சாபையும் வென்றார். அப்போது ஆப்கானிய அரசனாயிருந்த சிக்சந்தர் சூர் (Sikander Sur) அவரை எதிர்த்தான்; எனினும் தோல்வியுற்றான். உமாயூன் கி.பி. 1555-இல் மீண்டும் தில்லியைக் கைப்பற்றிக் கொண்டார். ஆனால் உமாயூன் கி.பி. 1556-ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் காலமானார். அப்போது 14 வயதே நிரம்பி இருந்த அவர் மகன் அக்பர் சிக்கந்தர் சூரைவிட வலுவானதொரு பகைவனை எதிர்நோக்க வேண்டியவரானார். ஆப்கானியப் பேரரசர் இசுலாம் சா என்பவரின் இந்துப் படைத் தலைவரும் இசுலாம் சாவிற்குப் பின்னர்ப் பதவியேற்ற முகமது ஆதில்சாவின் தலைமை அமைச்சருமான ஏமச்சந்திரர் என்பாரை அவர் சந்திக்க வேண்டியவரானார். மொகலாய வரலாற்று ஆசிரியர்கள் அவரை ஈமு (Hemu) என்று குறிப்பிடுவர்.
உமாயூன் காலமானதையும் அக்பர் பஞ்சாபில் இல்லை என்னும் செய்தியையும் அறிந்த ஈமு பெரும் படையுடன் முன்னேறிச் சென்று தில்லி, ஆக்ரா என்னும் இரு பகுதிகளையும், மொகலாயப் படையைத் தோற்கடித்துக் கைப்பற்றிக்கொண்டார். தில்லியைக் கைப்பற்றியதும் ஈமு ஆப்கானியப் படைவீரர்களைத் தம் பக்கம் கவர்ந்து கொண்டார். அவர்களின் துணையுடன் அரியணையேறி, நாணயங்களை அச்சடித்து, விக்கிரமாதித்தர் என்னும் வரலாற்றுப் பெயரையும் சூட்டிக் கொண்டார். பின்னர்த், தம்மை எதிர்க்க அனுப்பப்பட்ட மொகலாயரின் படைகளைச் சந்திக்க முன்னேறிச் சென்றார். மீண்டும் ஒருமுறை கி.பி. 1556-ஆம் ஆண்டில் நடைபெற்ற பானிப்பட்டுப் போர்க்களத்தில் தில்லி அரியணையை அக்பர் வென்றதும் ஈமு இழந்ததையும் குறிப்பிடல் வேண்டும். இப்போரை இரண்டாம் பானிப்பட்டுப் போர் என்பர். போர்க்களத்தில் ஈமு கடுமையாகத் தாக்கி வெற்றி பெறும் தருணத்தில் அவருடைய கண்களைத் துளைத்த அம்பொன்றினால் அவர் மூர்ச்சையாகி விட்டார். ஈமுவின் படைவீரர்கள் அவர் இறந்துவிட்டார் என எண்ணிப் போர்க்களத்தை விட்டு அனைத்துத் திக்குகளிலும் சிதறியோடினர். போரில் அக்பர் வெற்றி பெற்றார். அக்பர் ஈமுவைக் குத்திக்கொன்றார்; அவருடைய காப்பானரான பைராம்-<noinclude></noinclude>
pitxq76crnuezee5ibol35vyicfgr9u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/853
250
643890
1958702
1936218
2026-08-19T15:17:26Z
Sridevi Jayakumar
15329
1958702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறிப்புப் பொருள்|825|குறிப்புப் பொருள்}}</noinclude>நடவடிக்கை எடுப்பதைத் தடுக்க வேண்டும் நிலையில், 5) ஒப்பந்தத்தை மீறாமல் தடுக்கும் போது அது சரியாகச் செயற்படுத்த முடியாமத் செய்யும் நிலையில், 6) தொல்லையைத் தடுக்கும் போது அது தொல்லைதான் என்று தெளிவாகத் தெரியாத நிலையில், 7) வாதி அனுமதி அளித்துவிட்ட ஒப்பந்த மீறலைத் தடுக்கும் நிலையில், 8) ஒப்பந்த முறிவு தவிர்த்த மற்றையவற்றில், வாதி வேண்டும்பரிகாரம் வேறு அமைப்பு மூலம் பெற முடியும் என்கின்ற நிலையில், 9) வாதி அல்லது அவர்தம் முகவர் (Agent) நடப்பால் நீதிமன்றத்தின் உதவி அவர்களுக்கு கிடைக்காத நிலையில், 10) வாதிக்குத் தான் தொடுத்துள்ள வழக்கில் தனக்கு ஏதும் அக்கறை (Interest) இல்லாத நிலையில், நீதிமன்றம் உறுத்துக்கட்டனை வழங்காது.{{Right|<b>துரை.பா.</b>}}
<section end="குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்"/>
<section begin="குறிப்புப் பொருள்"/>
{{dhr}}
<b>குறிப்புப் பொருள்</b>: ஒரு சொல்லின் அகராதிப் பொருள், சுட்டுப்பொருள் (Denotative Meaning) குறிப்புப் பொருள் (Connotative Meaning), வருகை நிலை (Ranga of Application) என்னும் மூன்று கூறுகளை உடையது. ஒரு சொல்லின் பொருண்மைக் கூறுகளும் (Semantig Components) எவை அடிப்படையாகவும், எளிதில் புரிந்துகொள்ளக் கூடியனவாகவும்,பொதுவானவையாகவும் அமையப் பெற்றுள்ளனவோ அவையே சுட்டுப்பொருண்மைக் கூறுகள் (Denotative Components) எனப்படும். இக்கூறுகளால் உணர்த்தப்பெறும் பொருளே சுட்டுப்பொருள் எனப்படும், சுட்டுப்பொருளே கருந்துப் பரிமாற்றத்திற்கு அடிப்படையாக அமையும்.
‘சொல்’, ‘கூறு’ என்னும் இரண்டு சொற்களில் அடிப்படைப் பொருண்மை (சொல்லுதல்-10 say) ஒன்றாக அமைந்துள்ளது. இவ்வடிப்படைப் பொருண்மை கட்டுப் பொருண்மை எனப்படும். ‘கூறு’ என்னும் சொல்லில் ‘சொல்லுதல்’ என்றும் கட்டுப் பொருண்மை தவிர, பகுதி பகுதியாகச் சொல்லுதல் என்னும் சிறப்புப் பொருளும் காணப்படுகின்றது. இச்சிறப்புப் பொருண்மையை குறிப்புப் பொருளாகும். குறிப்புப் பொருள் குறிப்புப் பொருண்மைக் கூறுகளால் Connotative Components) உணர்த்தப் பெறும்.
குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்தி நகை, அச்சம், இளிவரல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அச்சொற்களின் சுட்டுப்பொருள் போதுமானதாக அமையவில்லை என ஒருவர் கருதும் நிலையில், அவரால் சொற்களுக்குக் குறிப்புப்பொருள் சேர்க்கப்படுகின்றது. குறிப்புப் பொருள் சொற்களைப் பயன்படுத்துவோரின் வெளிப்பாட்டுத் திறனையும் நடையியல் வேறுபாட்டினையும் வெளிப்படுத்தும் வகையில் அமையும்.
காண் கதை (Visual Art), கேட்புக் கலை (Music) போன்ற பிற கருத்துப் பரிமாற்ற அமைப்புகளிலும் குறிப்புப் பொருள் உண்டு.
கட்டுப்பொருள் எப்பொழுதும் நிலையாகவும், மையக்கூறாகவும் (Central) அமைத்திருக்கக் குறிப்புப் பொருளோ நிலையற்றதாகவும் புறக்கூறாகவும். (Peripheral) அமைந்திருக்கும். குறிப்புப்பொருள் முதல் நிலையில் தனிமனிதனால் அறிமுகம் செய்யப் பெற்றுப் பின்னர். அதனைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அது மொழியில் நிலைபெற்று விடும்.
குறிப்புப் பொருள் காலத்திற்கேற்பவும், சமூகத்திற்கேற்பவும், தனிமனிதருக்கேற்பவும் மாற்றம் பெறுததுண்டு. தமிழில் ‘அன்பளிப்பு’ என்னும் சொல்லுக்குக் காலப்போக்கில் ‘அன்பு இன்றிக் கட்டாயமாகப் பெறுதல்’ என்னும் குறிப்புப் பொருள் சூழல் காரணமாகச் சேர்க்கப்பெற்றுள்ளது.
நடையியல் வேறுபாடுகள், கிளைமொழிச் சொற்கள், கொச்சை வழக்குகள், இடக்கரடக்கல் மங்கலம் போல்வன குறிப்புப் பொருள் தருவன.
அகராதி ஆக்கத்தில் பொருள் 93 சொல்லின் (Polysemantie Word) அடிப்படைப் பொருளையும் ஆக்கப்பொருளையும் (Derived Meaning) வேறுபடுத்துக் குறிப்புப் பொருள் பெரிதும் பயன்படுகின்றது.
குறிப்புப் பொருள் பண்பாட்டின் அடிப்படையிலும், தனிமனித அனுபவங்களுக்கு ஏற்பவும் அமையப்பெறும். குறிப்புப்பொருள் வரன்முறைப் படுத்தப்பட்டதன்று. மேலும், இதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு கிடையாது. எனவே, ஒரு சொல்லுக்குக் குறிப்புப் பொருளை மென்மேலும் சேர்த்துக் கொண்டே செல்லுதல் இயலும்.{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Lehrer, Adrienue,</b> Semantic Fields and Lexical Structure, Amsterdam, North Holland, 1974.<br>
<b>Weiureich, Uriel,</b> Lexicographic Definition in Descriptive Semantics, Problems In Lexicography<noinclude></noinclude>
htvrgfjfn7ao35te259ld9wwusq4z37
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/854
250
643891
1958703
1936220
2026-08-19T15:21:04Z
Sridevi Jayakumar
15329
1958703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறிப்பு வினை|826|குறியிறையார்}}</noinclude>PP.25 44, Indiana University Press, Blooming ton, 1967.<br>
<b>Zugusta, Ladislav,</b> Manual of Lexicography, Mouton and Company, The Hague, 1971.
<section end="குறிப்புப் பொருள்"/>
<section begin="குறிப்புவினை"/>
{{dhr}}
<b>குறிப்புவினை</b>: தமிழ் இலக்கண நூல்கள் வினைச்சொற்களைத் தெரிநிலை வினை, குறிப்புயினை என இரண்டாகப் பகுத்துக் கூறும், தெரிநிலை வினை வினையின் பண்புகளாகிய காலம், தொழில் நிகழ்வு ஆகியவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தும். காலம், தொழில்நிகழ்வு ஆகிய வினைக் கூறுகளைக் குறிப்பாக உணர்த்தும் வினையே குறிப்புவினை (Appellative verb) எனப்படும். குறிப்பு வினைகளில் வினை நிகழ்வுப் பொருண்மையும், காலப்பொருண்மையும் இல்லை என்று கருதி இவற்றைப் பெயர்ச் சொற்களாகக் கொண்டு, குறிப்புவினை என்ற பகுப்புத் தேவையில்லை எனக் கருதும் தமிழ் அறிஞர்களும் உள்ளனர்.
உயர்திணையில் உடைமை (கச்சினன்), நிலம் (நாடன்), ஒப்பு (புலியன்னன்), பண்பு (கரியன் போன்றவற்றின் அடிப்படையிலும் அன்மை (அவன்), இன்மை (இலன்), உண்மை (உளன்), வன்மை (வல்லன்) போன்ற சொல்லடிகளைக் கொண்டும் குறிப்பு வினைகள் தோன்றுமெனவும், அஃறிணையில் இன்று, இல, உடைய, உடைத்து, அன்று, அல்ல என்னும் சொற்களும், பண்புகொள்கிளவியும் (கரிது), பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும் (குறுந்தாட்டு) ஒப்பொடு வருஉம் கிளவியும் (அன்னது) குறிப்பு வினைகளாகச் செயற்படும் எனவும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
குறிப்புவினைகள் மூவிட வேறுபாடு உடையனவாகவும், திணைபால் வேறுபாடு உடையனவாகவும் அமைந்துள்ளன. இலக்கன நூல்கள் பெரும்பான்மையும் குறிப்புவினைகள் அமையும் நிலையினையே சில பெயர் வகைகளுக்கும் கூறியுள்ளன. உரையாசிரியர்கள் சிலர் இத்தகு பெயர்களுக்கும் குறிப்பு வினைகளுக்கும் ஒரே வடிவத்தினை எடுத்துக்காட்டுகளாகக் கொடுத்துன்னமை, குறிப்பு விளைகளுக்கும் பெயர்களுக்குமிடையே மயக்கத்தினை ஏற்படுத்தியது.
அமைப்பு நிலையில் குறிப்புவினையாடி தெரிநிலை வினையடி போன்று ஏவலாகச் செயற்படுதவில்லை; கால உருபுகளை ஏற்பதும் இல்லை. பயன் நிலையின் இது பயனிலையாகச் செயற்படவல்லது. குறிப்பு வினைகளுள் சில வினையெச்சங்களால் தழுவப்பெறும். குறிப்பு வினையடிகள் சிலவற்றிலிருந்து எச்ச வடிவங்களும் ஆக்கம் பெறுதலுண்டு.
குறிப்பு வினைகளைப் பெயரடியிலிருந்து (Nomina1 Stem) தோன்றுவன (கையன்), பெயரடையடியிலிருந்து (Adjectival Stem) தோன்றுவன (இனியது), குறைவினையடியிலிருந்து (Defective Verbal Stem) தோன்றுவன (இல்லை) மூன்றாகப் பகுத்தல் இயலும், இவை அனைத்தும் முற்றுவினைகளாகத் செயற்படும். குறைவினையடியிலிருந்து குறிப்பு வினையெச்சம் (இன்றி), குறிப்புப் பெயரெச்சம் (இல்லா) ஆகியனவும், பெயரடையடியிலிருந்து குறிப்புப் பெயரெச்சமும் (நல்ல) ஆக்கம் பெறும்.
மூவகைக் குறிப்பு வினைகளில் பெயரடையடியிலிருந்து தோன்றிய குறிப்புவினைகள் சில வினையடைகளாலும் (ஆற்ற இனிது), குறைவினையடியிலிருந்து தோன்றிய குறிப்புவினைகள் பல வினையெச்சத்தாலும் (வந்து இலன்) தழுவப் பெறுதலுண்டு.
குறிப்பு வினைகளைப் பெயர்ப் பயனிலைகளாகச் சிலர் கருதுகின்றனர். ‘இது மரம்’, இவன் கரியன் ஆகியவற்றில் காணப்பெறும் ‘மரம்’, ‘கரியன்’ என்னும் பயனிலைச் சொற்களிடையே வேறுபாடு உண்டு.
தெரிநிலை விளைமுற்றுகள் எச்சமாவது போன்று ‘கரியன்’ என்னும் பயனிலை வடிவம் கரிய என எச்சமாக மாற்றம் பெறுகிறது. ஆனால், ‘மரம்’ என்னும் பயனிலை வடிவம் எச்சமாக மாற்றம் பெறுவதில்லை. ‘ஆகும்’ என்னும் ஆக்கவினையின் ஆகிய, என்னும் எச்ச வடிவமே ‘மரம்’ என்பதனை எழுவாயுடன் இணைக்கத் துணைபுரிகிறது.
::{|
|-
|இராமன் வந்தான் || || வந்த இராமன்
|-
|இவன் கரியன் || || கரிய இவன்
|-
|இது மரம் || || மரம் ஆகிய இது
|-
|}
பெயரடி, பெயரடையடியிலிருந்து தோன்றிய குறிப்புவினைகள் அமைப்பு நிலையில் குறைவினையடியிலிருந்து தோன்றிய குறிப்பு வினைகளினின்றும் வேறுபட்டுக் காணப்படுவதாலும், இவற்றிலிருந்து வினையெச்ச வடிவங்கள் ஆக்கம் பெறாமையாலும், குறிப்புவினைகள் அனைத்தையும் உள்ளடக்கும் ஓர் இலக்கணம் அமையப்பெறவில்லை.{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<section end="குறிப்புவினை"/>
<section begin="குறியிறையார்"/>
{{dhr}}
<b>குறியிறையார்</b>: சங்க இலக்கியங்களில் குறியிறையார் பாடியதாக ஒரே ஒரு பாடல் காணப்படுகிறது. குறுந்தொகையில் வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகளை இயற்பழித்துக் கூறுவதாக அமையும பாடல் அது<noinclude></noinclude>
ja5lqxdkqbssafktn75u7vyiz5eh7tj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/855
250
643892
1958704
1936224
2026-08-19T15:23:03Z
Sridevi Jayakumar
15329
1958704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீட்டு அளவையியல்|827|குறியீட்டு அளவையியல்}}</noinclude>(குறு.394). ஏட்டுப் பிரதிகளில் குறையிறையார் என்றும் இவர் பெயர் காணப்படுகிறது.
முன்பெல்லாம் தலைவன் அடிக்கடி வந்து தலைவியுடன் களித்து மகிழ்ந்து விளையாடியிருக்கிறாள். இப்போது அவன் வரைவிடை வைத்துப் பிரித்து சென்றுவிட்ட நிலையில் அவனுடைய பிரிவே தலைவிக்குத் தாங்கமுடியாத துயரத்தைத் தந்துவிடுகிறது; இந்த நிலையினைத் தோழி இவ்வாறு கூறுவதாகக் குறியிறையார் பாடுகிறார்: ‘யானைக் குட்டிகள், குறுகிய கைகனையுடைய குறவர் குழந்தைகளோடு சுற்றிச் சுற்றி ஓடி வந்து மகிழ்ச்சியனித்து விளையாடின; பிற்காலத்தில் அவை வளர்த்த பின்னர்க் குறவர்களின் தினைப்புனங்களை அழித்துத் துயரத்தைத் தந்ததைப்போல முன்னர் நகைத்து விளையாடி மகிழ்ச்சிதந்த தலைவன் இப்போது பிரிவுத் துவரைத் தருகிறான்’.
‘குறியிறைப்புதல்வர்’ என்று இப்பாடலில் வந்துள்ள தொடரைவைத்துக் குறியிறையார் என்று இவர் பெயர் அமையலாயிற்று, ‘நறவு மனிபாக்கம்’, ‘கயந்தலைக் குழலி’, ‘மறுவந்தோடி’ போன்ற நுட்பமான தொடர்களை இவர் தம் பாடலில் தயம் படக்கையாண்டுள்ளார்.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="குறியிறையார்"/>
<section begin="குறியீட்டு அளவையியல்"/>
{{dhr}}
<b>குறியீட்டு அளவையியல்</b>: அரிசுட்டாட்டில் என்னும் தத்துவ அறிஞர் தாம் முதன் முதலில் குறியீடுகளை (Symbols) அளவையியலில் பயன்படுத்தினார். நவீன அளவையியலில் குறியீடுகள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், அதனைக் குறியீட்டு அளவையியல் (Symbolic Logic) அல்லது கணித அளவையியல் (Mathematical Logic) எனலாம். அனைத்துச் சிந்தனைக்கும் ஆராய்ச்சிக்கும் குறியீடுகளே ஊடிழைகளாகவும், பாவு நூல்களாகவும் இருக்கின்றன. அவை சிந்தனைக்கும் அறிவியலுக்கும் உயிர்நாடியாகவும் விளங்குகின்றன எனச் சார்லசு சான்டர்சுபியச்சு கூறுகின்றார். குறியீட்டு அளவையியல் உரை சார் அளவையியல், பயனிலை சார் அளவையியல் என இரு வகைப்படும்.
<b>மொழியின் வரம்பு</b>: சொற்கள் தெளிவும் விளக்கமும் இன்றி உள்ளன. எனவே, சொற்கள் மூலம் எம்மொழியினாலும் சிக்கலான கருத்துகளைத் தெளி வெளியிட இயலவில்லை. அளவையியல், மொழியைச் சிந்தனையின் கருவியாகவும், சாதனமாகவும் கருதுகின்றது. எனினும், அதன் சிறப்பான ஈடுபாடு மொழியில் இல்லை; சிந்தனையில்தான், சில சமயங்களில் ஒரு சொற்றொடர் அமைப்பே பல்வேறு தொடர்புகளை வெளியிடுவதற்குப் பயன்படுகிறது. ‘காந்தி அகிம்சைவாதி ஆவர்’ ‘அனிதாவும் கலாவும் ஒரேவயதினர் ஆவர்’ என்ற உரைகளிலுள்ள, ஆவர் என்ற சொல், இரண்டு இடங்களிலும் வெவ்வேறு பொருளைத் தெரிவிக்கின்றது. முதல் சொற்றொடரில் பயனிலைப் பண்பை எழுவாய் பெற்றுள்ளதையும், இரண்டாம் சொற்றொடரில் சமநிலையையும், குறிப்பிடுகிறது. எனவே, ‘ஆவர்’ என்னும் ஒரே இணைப்பு, சமநிலை, இருப்பு, உள்ளடங்குதல் போன்ற பல தொடர்புகளை உணர்த்துகின்றது.
‘மனிதர்கள் அனைவரும் பகுத்தறிவுடையவர் ஆவர்’, ‘கோட்சே காந்தியைக் கொன்றவன் ஆவான்’ ‘கமலாவின் பேனா நன்றாக இருக்கிறது’ என்பன போன்ற சொற்றொடர்கள் ஒரே இலக்கண அமைப்பில் இருந்தாலும், அவை அடிப்படையில் வேறுபட்ட உறவுகளை வெளியிடுகின்றன. இதுபோன்ற கூற்றுக்களிலிருந்து மொழியின் திருத்தமின்மையை அறியலாம். எனவே, அளவையியலின் கூற்றுகளை அல்லது உரைகளை வெளியிடுவதற்குக் குறியீடுகளே சிறந்த சாதனம்.
<b>பயன்</b>: குறியீட்டு அளவையியல் மொழியின் மூலம் பெறும் பொருளடங்கிய சொற்றொடர்களைக் கொண்டல்லாமய், குறியீடுகளைக் கொண்டே விளக்குவதாகும். அது அனைத்து அனுமானங்களையும் குறியீடுகளாக மாற்றி அவைகளின் ஏற்புடைமையை ஆராய்கின்றது. குறியீடுகளின் மூலம் சிக்கலான அனுமானங்களையும் சுருக்கமாகவும், ஐயத்திற்கு இடமில்லாமல் மிகவும் தெளிவாகவும் முடிகிறது.
கணிதத்தில் குறியீடுகள் அதிக அளவில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. சான்றாக, அ என்னும் குறியீட்டு முறை இல்லாவிடில், இக்கருத்தை வெளியிட அXஅXஅXஅXஅXஅXஅ, என வேண்டும். இதனை மொழியின் மூலமே வெளியிடவேண்டும் என்றால் எவ்வளவு கடினம் என்பது விளங்கும். இக்கருத்தை வலியுறுத்தும் நோக்குடன் பெர்ட்ரண்ட்டு இரசல் ‘மரபுவழி அளவையியல் சிந்தனையை விலங்கிட்டு இருந்தது என்றும், ஆனால் நவீன குறியீட்டு அளவையியல் அதற்கு இறகுகளைக் கொடுத்திருக்கிறது’ என்றும் கூறுகிறார்.
உரைகளின் வடிவத்தைக் குறியீடுகள் தெளிவாக வெளியிடுகின்றன. இவ்வாறு கூறும்போது ஓர் உரைவிலுள்ள ‘மாறிகள்’ யாவை? என்றும், ‘மாறிலிகள்’ யாவை? என்றும் எளிதாக அறியலாம். குறியீடுகள் தேவையற்ற சிந்தனையைக் குறைக்கவும் பயன்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
6pb4r8pd0dwivtbph9mv492pqkkfp60
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/856
250
643893
1958706
1936241
2026-08-19T15:25:59Z
Sridevi Jayakumar
15329
1958706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீட்டு அளவையியல்|828|குறியீட்டு எண்கள்}}</noinclude><b>மாறியும் மாறிலியும்</b>: உரைகளின் அமைப்பைக் குறியீடுகள் மூலம் எழுத உளரசார் அளவையியலில் உள்ள குறியீடுகன் இருவகைப்படும். அவைகளை மாறி எனவும், மாறிலி எனவும் கூறுவர்.
மாறிகள் எனப்படுவது பதிலீட்டுக் குறிகள் ஆகும். (பி.கியூ), (பிɔகி) (பிVகியூ) போன்ற சூத்திரங்களில் வரும் பி, கியூ போன்ற எழுத்துகள் மாறிகள் எனப்படும் இந்த எழுத்துகள் ஒரு கூட்டு உரையில் இருக்கும் தனி உரையையும் அல்லது தனித்து வரும் உரைகளையும் தெரிவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சான்றாக, ‘மல்லிகை மணம் உடையது ஆகும்’ என்னும் உரையை, ‘பி’ எனக் கூறலாம். இது போல ‘மழை பெய்தது, அதனால் சாலை ஈரமாகியது’ என்பதனை (பிறகியூ) எனக் குறிக்கலாம். இங்கு ‘பி’ என்பது ‘மழை பெய்தது’ என்பதையும், ‘நியூ’ சாயை சரமாகியது என்பதனையும் குறிக்கின்றன. ‘அர்ச்சனாவும், அனிதாவும் விருந்திற்கு வந்திருந்தனர்’ என்பதனை (பி.கியூ) எனக் குறிக்கலாம். ‘அர்ச்சனா விருந்திற்கு வந்திருந்தாள்’ என்பதை ‘பி’ எனவும், அனிதா விருந்திற்கு வத்திருந்தான். என்பதை ‘கியூ’ எனவும் குறிக்கலாம். எனவே ‘பி’, ‘கியூ’ ‘ஆர்’, போன்ற எழுத்துகள் எந்தத் தனி உரையினையும் குறிக்கலாம். அதனால் அவற்றின் பொருள், உரைக்கு உரை மாறும் என்பது விளக்குகிறது, இவைகளை ‘மாறி’ எனக் குறிப்பிடலாம். ஆனால் 1.1. ‘ɔ’. ‘V’, ‘a’, ‘~’, போன்ற குறியீடு பொருள் மாறுவதில்லை. இக்குறிகளை ‘மாறிலி’ எனக் குறிப்பிடுவர்.
சாதாரண சொற்றொடர்களைக் குறியீடுகளையுடைய சொற்றொடர்களாக அல்லது சூத்திரங்களாக மாற்ற மாறிலிகளின் பொருள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
மாறிலிகள் அனைத்தும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற சொற்களை மட்டுமே குறிப்பவை எனக் கருதக்கூடாது. மொழியில் பல சொற்கள் அதே கருத்தைத் தெரிவிப்பவையாக இருக்கலாம். அவைகளையும் கருத்திற் கொண்டே மொழிபெயர்க்கவேண்டும். மாறிலிகள் அனைத்துமே எதிர்மறை, உட்சிடை, இணைப்புப் போன்ற உரைகளின் பொருளினைக் குறிப்பவைகளே தவிரச் சொற்கள் அல்ல.{{Right|<b>எஸ்.இல.</b>}}
::{| class="wikitable"
|-
!மாறிலிகள் !! பொருள் !! பொருளுக்கு ஏற்ற சொற்கள்
|-
|~ || எதிர்மறை || இல்லை, அல்ல, கிடையாது, அல்லர்
|-
|ɔ || உட்கிடை அல்லது சார்பு || ஆல், எனின், இன், ஆனால்
|-
|V || விகற்பம் || அல்லது (மூன்றாம் நிலையுடன்)
|-
|ʌ || பிரிவு || அல்லது (மூன்றாம் நிலையில்லாமல்)
|-
| . || இணைப்பு || ஓடு, கூடன், உம்
|-
| - || சர்வசமம் || ஒன்றே, மட்டுமே
|-
|}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Balasubramanian, P.,</b> Symbolic Logic and Its Decision Procedures, University of Madras, Madras, 1980.<br>
<b>Copi M.,</b> Griving Symbolic Logic, Macmillan & Co., New York, 1979.<br>
<b>Stebbing, L.S.,</b> A Modern Introduction to Logic, Methuen & Co. London, 1961.
<section end="குறியீட்டு அளவையியல்"/>
<section begin="குறியீட்டு எண்கள்"/>
{{dhr}}
<b>குறியீட்டு எண்கள்</b> பல்வகைப் பண்டங்களின் விலைகளிலும், பணிகளுக்காகின்ற செலவுகளிலும் ஏற்படுகின்ற மொத்த விளைவைச் சுருக்கிக் கூறும் புள்ளியியல் முறையைக் குறிக்கும். பணத்தின் மதிப்பை அளவிடவும், விலைவாசியிலும் உற்பத்தியிலும், உற்பத்தித் திறனிலும் ஏற்படும் மாற்றங்களைப்-<noinclude></noinclude>
f5l1ra43d5qs1gus10cpphmvkcl5v76
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/862
250
643919
1958708
1936289
2026-08-19T15:27:33Z
Sridevi Jayakumar
15329
1958708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீடுசார் மானிடவியல்|834|குறியீடுசார் மானிடவியல்}}</noinclude>அட்டவணை - 7
::{| class="wikitable"
|-
!ஆண்டு !! நாட்டு வருமானம் குறியீட்டு எண்ணில் !! தனி ஆள் வருமானம் குறியீட்டு எண்ணில்
|-
|1950-51 || 100 || 100
|-
|1955-56 || 119 || 109
|-
|1960-61 || 145 || 120
|-
|1965-66 || 162 || 120
|-
|1968-69 || 182 || 126
|-
|1973-74 || 215 || 133
|-
|1978-79 || 278 || 154
|-
|1984-85 || 341 || 166
|-
|}
{{Right|<b>எம்.தி.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gupta, S.P.,</b> Statistical Methods, Sultan Chand & Sons, New Delhi, 1985.<br>
<b>Murray R. Spiegel,</b> Statistics, I editon, Schaum's Outline Series, Singapore, 1981.
<section end="குறியீட்டு எண்கள்"/>
<section begin="குறியீடுசார் மானிடவியல்"/>
{{dhr}}
<b>குறியீடுசார் மானிடவியல்</b>: ஒரு பண்பாட்டிலுள்ள குறிகளுக்கும் அப்பண்பாட்டின் உறுப்பினர்களுக்குமிடையே உள்ள உறவுகளைப் பற்றி ஆராவும் மானிடவியல் உட்பிரிவே குறியீடுசார் மானிடவியல் (Symbolic Anthropology). ஒவ்வொரு பண்பாட்டிலும் எங்கக் குறிகளும் (Symbols) குறியீடுகளைச் சார்ந்த சைகை முறைகளும் உள்ளன. இவை அவ்வப் பண்பாடுகளோடு ஒன்றிய கூறுகளாளாலும் அம்மக்களின் நடத்தை முறைகளை (Behaviour Patterns) விளக்குந் தன்மையன. இதனாலேயே குறிகளைப் பற்றிய ஆய்வுகள் மூலம், பல்வேறு பண்பாடுகளிலும் குறியீடுகளுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவினைகளையும் (Interactions) அதை எவ்வாறு மக்கள் இனம் பருவத்திலிருந்து கற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது. குறியீடுசார் மானிடவியல் சிலவேளையில் குறியியல்சார் மானிடவியல் (Semiotic Anthropology) என்றும் வழங்கப்பெறும்.
குறிகளைப் பற்றி அறியும் மானிடவியலாரின் ஆர்வம் 100 ஆண்டுகளுக்கும் முன்னர், பழம்பெரும் மானிடவியல் அறிஞர்களான மக்லிமன் (McLeman) தைலர் (Tylor) ஆகியோரின் காலத்திலேயே தோன்றிவிட்டது தொடக்க காலத்திலிருந்தே பலதுறை அறிஞர்கள் குறிகளைப் பற்றி ஆராய்ந்து வந்துள்ளனர். மொழியியலாகும் மானிடவியலாரும் இதில் முதலிடம் பெறுகின்றனர். இருப்பினும் இலக்கியவியல், தத்துவவியல், கலையியல், சமயவியல் முதலானவற்றைப் பற்றி ஆராயும் அறிஞர்களும் இதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
குறிகள், அவைகள் சாரித்துள்ள பண்பாட்டில் ஏதோ ஒன்றைக் குறிப்பதாக அமைந்துள்ளன. இவை உள்ளார்ந்த மனத்தின் வெளிப்பாடாக உள்ளன: உலகளாவிய நிலையில் மனிதர்களின் உளப்பால்கினை வெளிப்படுத்துவதாக உள்ளன; விலங்குகளிடத்தும் மக்களிடையேயும் தொடர்புகொள்ளும் சாதனமாகவும், மொழிபின் ஒரு பகுதியாகவும், பண்பாட்டின் கூறுகளாகவும் உள்ளன. அதனால் வாழ்க்கைப் பாங்கின் ஒரு முதன்மையான கூறாகக் குறிகள் நிகழ்கின்றன. குறியீட்டமர்வு (Symbolism) இலக்கியங்களிலும், கலைப் பொருள்களிலும், சமய வழிபாடுகளிலும், சடங்கு முறைகளிலும் பெருமளவு காணப்படுகிறது. தத்துவவியலாரும் மொழியியலாகும் குறியீடு என்னும் கருத்தாக்கத்தை முறைப்படுத்தும்போது அதனைக் கருத்தியல் (Abstract) அளவில் நிருணயம் செய்கின்றனர். ஆனால், மானிடலியலார் ஒரு பண்பாட்டில் குறிகள் எவ்வாறு சிறப்பிடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு குறியைப் பற்றியும் அம்மக்கள் கொண்-<noinclude></noinclude>
gfeemxcmx8oa1mqks8bcjh2m3k3pfsq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/864
250
643921
1958709
1936291
2026-08-19T15:28:20Z
Sridevi Jayakumar
15329
1958709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறுக்கீடு|836|குறுக்கீடு}}</noinclude>குறியீடுகள் நிகழ்த்தும் செயல்கள் என்னென்ன? அவை தனி மனிதர்களோடும். பல தனிமனிதர்கள் சேர்ந்த குழுவிரோடும் பெறும் பங்சென்ன? அவை சமுதாயத் தேவைகளை நிறைவடையச் செய்யும் பணியில் எவ்வாறு பங்கேற்றுள்ளன என்பவையாகும்.{{Right|<b>பி.சு.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Firth, Raymond,</b> Symbols: Public und Private, George Allen & Uowin Ltd., London, 1975.<br>
<b>Honnigman,J, J.,</b> The Development of Anthropolgical Ideas, The Dorsey Press, Illinois, 1976.<br>
<b>Taylor, B, Robert,</b> Cultural Ways, Allyn and Bacon, Boston, 1980.
<section end="குறியீடுசார் மானிடவியல்"/>
<section begin="குறுக்கீடு"/>
{{dhr}}
<b>குறுக்கீடு</b>: இரு மொழிகளுக்கிடையே தொடர்பு (Contact) ஏற்படும்பொழுது ஒரு மொழியின் கூறுகளின் வருகையால் மற்றைய மொழியின் அமைப்பில் ஏற்படும் மாற்றமே குறுக்கீடு (Interference) எனப்படும். குறுக்கீடு இரு மொழிகளுக்கிடையேலேயும் ஒரு மொழியின் கிளை மொழிகளுக்கிடையேயும் ஒரு கிளைமொழியின் வகைகளுக்கிடையேயும் நடைபெறுதல் இயலும்.
தனி மனிதன் பேச்சின்கண் காணப்பெறும் குறுக்கிட்டிற்கும் மொழியின்கண் காணப்பெறும் குறுக்கீட்டிற்குமிடையே மிகுந்த வேறுபாடு உண்டு. மொழியின் கண் காணப்படும் குறுக்கீடு காலப்போக்கில் நிலைபெற்று மொழியின் உறுப்பாக மாறிவிடும். ஒலியன் நிலை (Phonological Level), உருபன் நிலை (Morphological Level), தொடரியல் நிலை (Syntactical Level) ஆகிய மூன்று நிலைகளிலும் மொழியியங் கூறுகளின் கூறுகள் அன்றி, மொழியியல் அல்லாக் காரணமாகக் குறுக்கீடு நடைபெறுதலுண்டு. ஒருவர் இருமொழியாளராக (Bilingual) இருக்கும் நிலையில் சமுதாயத் தாக்கம் காரணமாகக் குறுக்கீடு பெரிதும் நடைபெறலாம்.
இருமொழிகளை ஒப்பீட்டாய்வதன் வழி இம்மொழிகளில் காணப்பெறும் குறுக்கீட்டின் அளவைக் கண்டறிதல் இயலும், ஒரு மொழி பிற மொழியினின்றும் கடன்வாங்கிய கூறுகளைக் கண்டறிவதினின்றும் குறுக்கீட்டின் அளவைச் கண்டறியும் முறை முற்றிலும் மாறுபட்டது.
குறுக்கீடு ஒலியின் குறுக்கீடு (Phonic Interference) இலக்கணக் குறுக்கீடு (Grammatical Interference) சொல் குறுக்கீடு (Lexical Interference) என மூன்று வகைப்படும்.
<b>ஒலியின் குறுக்கீடு</b>: ஒளியின் குறுக்கீடு மொழியின் ஒலிகளைப் பிறிதோர் மொழியைப் பேசும் ஒருவர் எங்ஙனம் கேட்டு அவற்றை ஒலிக்கின்றார் என்பதனை விவரிக்கும். ஒளியின் குறுக்கீடு மரபு நிலையில் ஒளிப் பதிலீடு (Sound Substitution) எனக் குறிப்பிடப்பெற்றது. இருமொழியாளர் பிறமொழி ஒலிகளைத் தம் மொழியின் ஒலிகளோடு இணைத்துக் கண்டு ஒலிக்கும் நிலையில் ஒளியின் குறுக்கீடு நடைபெறுகிறது. இந்நிலையில், இருமொழியாளயின் முதல் நிலை மொழியின் (Primary Language) ஒலியியல் விதிகளுக்கேற்ப இரண்டாம் நிலை மொழியின் (Secondary Language) ஒலிகள் மாற்றம் பெறுவதுண்டு.
ஒலியின் குறுக்கீடு நான்கு வகைப்படும். ஒலியின் குறை வேறுபடுத்தல் (Uuder diffferentiation of Phonemes) என்பது முதல் வகையாகும், இரண்டாம். நிலை மொழியிலுள்ள இரண்டு ஒலிகள் முதல் நிலை மொழியிலுள்ள ஓர் ஒலிக்குப் பதிலீடு செய்யும் நிலையில் இக்குறுக்கீடு நடைபெறுகிறது. தமிழர் ஒருவர் ஆங்கிலத்திலுள்ள W (Water), V (Cover) ஆகிய இரண்டு ஒலிகளையும் தமிழிலுள்ள வாரத்திற்குப் பதிலீடு செய்தல் ஒலியின் குறைவேறுபடுத்தலுக்குத்தக்க சான்றாகும்.
ஒலியின் மிகைவேறுபடுத்தல் (Over Diferentiation of Phonems) என்னும் இரண்டாம் வகை ஒலியின் குறுக்கீட்டில் இரண்டாம் நிலை மொழியிலுள்ள ஓர் ஒலி முதல்திலை மொழியிலுள்ள இரண்டு ஒலிகளுக்குப் பதிலீடு செய்யப்பெறும். அண்டு முதல்நிலை மொழியின் ஒலியின் வேறுபாடுகள் இரண்டாம்நிலை மொழியில் திணிக்கப்பெறுகின்றன, தமிழர் ஒருவர் ஆங்கிலத்திலுள்ள ‘1’ ஒலிக்குத் தமிழீலுள்ள லகரத்தையும் (Cell) ளகரத்தையும் (Flower) பதலீடு செய்தல், ஒலியின் மிகை வேறுபடுத்தலின் பாற்பட்டதாகும்.
மூன்றாம் வகை ஒலியின் குறுக்கீடு ஒலிவேறுபாட்டு மறுபரிசிலனை (Reinterpretation of Distinctions) எனப்படும். ஈண்டு முதல்நிலை மொழில் கேற்ப இரண்டாம் நிலை மொழியின் ஒலிவேறுபாட்டுக் கூறுகள் மாற்றியமைக்கப்பெறும், இக்குறுக்கீடு இருமொழியாளர் இரண்டாம் நிலைமொழி ஒளியினங்களின் பயின்றுவரும் முதன்மையற்ற சில கூறுகளுக்கு முதலிடம் அளிக்கும் நிலையில் நடைபெறுகிறது.{{nop}}<noinclude></noinclude>
gblma9ikux3ffk5s6nu10c8t5j4bf4y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/865
250
643922
1958710
1936292
2026-08-19T15:28:59Z
Sridevi Jayakumar
15329
1958710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறுக்கீடு|837|குறுக்கீடு}}</noinclude>சுவைசொலுவிச்சு (Schwyzertusch) மொழியில் ஒலி நீட்சி (Length), மயக்கம் (Gemination) போன்றவை மிகைக் கூறுகளாகவே (Redundant Features) கருதப்படுகின்றன, உரோமான்சு (Romansh) மொழியாளர் இக்கூறுகள் தம் மொழியில் சிறப்பிடம் பெறுகின்றமையால் இவற்றிற்கு முதலிடம் தந்து சுவைசொதுவிச்சு மொழி ஒளிகளைத் தம் மொழி ஒலிகளுக்கேற்ப மாற்றியமைத்தல் ஒலி வேறுபாட்டு மறுபரிசீலனைக்குத் தக்க சான்றாகும். சுவைசெர் துலிச்சு மொழியிலுள்ள /Fil.i/ என்னும் சொல் உரொமாள்சு மொழியில் /'Filli/ என இடம்பெறுகிறது.
நேர் ஒலி பதிலீட்டு முறை (Actual Phone Substitation) என்பது நான்காம் வகை ஒளியின் குறுக்கீடாகும். ஈண்டு இரண்டு மொழிகளில் ஒலிகளுக்கிடையே காணப்படும் நுண்ணிய வேறுபாடுகள் கண்டறியப்பெறாமல், இரண்டு மொழிகளிலும் இணையான ஒலிகள் இருப்பதாகக் கருதப்பெற்று, ஒலிகள் பதிலீடு செய்யப்பெறுகின்றன.
உரொமான்சு மொழியிலுள்ள /b/ ஒலியும் சுலை செர்துளிச்சு மொழிலிலுள்ள /B/ ஒலியும் இணையான ஒலிகளாகக் கருதப்பெற்று, ஒலிப்பதிலீடு செய்யப் பெறுகின்றன. /b/ ஒலி எப்போதும் ஒளிப்புடை ஒலியாகவும் /B/ ஒலி சில சூழல்களில் மட்டுமே ஒளிப்புடை ஒலியாகவும் செயற்படுவதால், இவ்வொளிகளுக்கிடையே காளப்பெறும் வேறுபாடு ஒளிப் பதிலீட்டு நிலையில் (/*1 a0 B a/- /1 cbe/) ஓலியின் குறுக்கீடாக அமைகிறது.
<b>இலக்கணக் குறுக்கீடு</b>: ஒரு மொழியின் இலக்கண மையக் கூறுகளான (Grammatical Core), சொல் வகைகள் (Parts of Speech), இலக்கணக் கூறுகள் (Grammatical Categories), செயலிகள் (Functors), தொடர்-தொடர்வகைகள் (Construction and Construction types) ஆகியவை பிறிதோர் மொழியில் வந்து வழங்கும் நிலையில் இலக்கணக் குறுக்கீடு நடைபெறுகிறது.
பிற வகைக் குறுக்கீடுகளைக் காட்டிலும் இலக்கணக் குறுக்கீடு மிகவும் குறைந்த நடைபெறும், இலக்கணக் குறுக்கீட்டின் காரணமாக மொழியின் இலக்கண அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு இலக்கண மாற்றம் (Grammatical Change) நடைபெறுகிறது.
தமிழ்மொழியில் முன்னொட்டுகள் (Prefixes) கிடையாது. ஆனால் வடமொழியிலிருந்து சில எதிர் மறை முன்னொட்டுக்க தமிழில் வந்து வழங்கியமை (அநீதி, அவர்சொல்) இலக்கணக் குறுக்கீட்டிற்குத் தக்க சான்றாகும். ஈண்டு வடமொழியிலுள்ள செயல் வகையினைச் சார்ந்த முன்னொட்டு, இலக்கணக் குறுக்கீட்டின் காரணமாகத் தமிழ் மொழியின் இலக்கண மைய அமைப்பில் இலக்கண மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதனைப் போன்று சொல்வகை நிலையிலும், இலக்கணக் கூறுகள் நிலையிலும், தொடர்நிலையிலும் இலக்கணக் குறுக்கீடு நடைபெறுதலுண்டு.
<b>சொல் குறுக்கீடு</b>: ஒரு மொழியின் சொற்கள் பிறிதோர் மொழியின் சொற்களஞ்சியத்தில் (Lexicon) வந்து வழங்கும் நிலையில் சொல் குறுக்கீடு பெறுகிறது. இக்குறுக்கீடுதான் அனைத்து வகைக் குறிக்கீடுகளிலும் மிகவும் எளிதாக அறியக் கூடியதும் விரைவில் நடைபெறக் கூடியதுமாக அமைந்துள்ளது. தேவை கருதியும் உயர்வு நோக்கம் கருதியும் சொல் குறுக்கீடு நடைபெறுகிறது.
தேவை கருதி ஆங்கில மொழியிலுள்ள தொலைக்காட்சி (Television). ஏவுகணை (Rocket) போன்ற சொற்களும், உயர்வு நோக்கம் காரணமாக (அம்மா) ‘மம்மி’ (அப்பா) ‘டாடி’ போன்ற சொற்களும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் வந்து வழங்குவது சொல் குறுக்கீட்டின் பாற்படும்.
சொல் குறுக்கீட்டினால் புதிய சொல்லாக்கம், சொற்பொருளில் மாற்றம், மொழிபெயர்ப்பு, ஒலி பெயர்ப்பு போல்வன நடைபெறுதலுண்டு. இக்குறுக் தீட்டின் காரணமாக மொழியின் சொற்களஞ்சியத்தில் சொற்களஞ்சிய மாத்தம் (Lexical Change) நடைபெறும்.
மொழித் தொடர்பால் பிறமொழிச் சொற்கள் தரும் பொருள் இழி வழக்கமாக அமையும் நிலையில் அதே வடிவுடையதன்றிப் பொருள் ஒற்றுமையுடைய முதல்மொழிச் சொற்கள் வழங்குவதற்குத் தடை ஏற்படும். இத்தகைய தடை எதிர் குறுக்கீடு (Negative Interference) எனப்படும்.
மலையாளத்தில் மயிர் என்றும் சொல் இழிவழக்காக அமைந்துள்ளமை காரணமாகத் தமிழிலும் அது தடைசெய்யப்பட்டுள்ளமையால் தமிழ், மலையாள இருமொழியாளர் ‘முடி’ என்ற சொல்லையே பயன்படுத்துவது எதிர் குறுக்கீட்டிற்குச் சிறந்த சான்றாகும்.{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Weinreich, U.,</b> Languages in Contact-Finding and Problems, Mouton & Co., 1953.
<section end="குறுக்கீடு"/><noinclude></noinclude>
b3foz6opgo7z1uya0iic7bpo9pfc8lu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/866
250
644053
1958711
1936757
2026-08-19T15:30:46Z
Sridevi Jayakumar
15329
1958711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறுக்கு விசாரணை|838|குறுங்குடி மருதனார்}}</noinclude><section begin="குறுக்கு விசாரணை"/>
{{dhr}}
<b>குறுக்கு விசாரணை</b> காண்க; சான்றாளர்:
<section end="குறுக்கு விசாரணை"/>
<section begin="குறுகியகால நடைமுறை"/>
{{dhr}}
<b>குறுகியகால நடைமுறை</b>: தலைமை நீதித்துறை நடுவர், பெருநகர் நடுவர், உயர்நீதி மன்றத்தால் இதற்கெனச் சிறப்பாக அதிகாரமளிக்கப்பட்டுள்ள முதல் வகுப்பு நடுவர் எவரும், தாம் பொருத்தமெனக் கருதும் விதத்தில், 1) மரண தண்டனையோ ஆயுள்தண்டனையோ இரண்டாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்குச் சிறைத் தண்டனையோ விதிப்பதற்குரியன வல்லாத குற்றங்கள் 2) பொருள்களின் மதிப்பு இருநூறு உரூபாய்க்கு மேற்படாத நிலையில், இந்தியத் தண்டனைச் சட்டம் (45/1860), பிரிவுகள் 379, 380, 381-ஆகியவற்றின் கீழ்த் திருட்டுக்குற்றம் 3)பிரிவு 411-இன்கீழ்த் திருட்டுப் பொருளைப் பெறுதல் அல்லது தொடர்ந்து வைத்திருத்தலாகிய குற்றம்: 4) பிரிவு 414-இன் கீழ்த் திருட்டுப் பொருளை மறைந்து யைப்பதற்கு அல்லது விற்றுவிடுவதற்கு (Disposal) உதவியாயிருக்கும் குற்றம்: (5) பிரிவுகள் 454,456 ஆகியவற்றின் கீழான குற்றங்கள் : (6) பிரிவு 504-இன் கீழ் அமைதிக்குலையைத் தூண்டிவிடும் கருத்துடன் செய்யப்படும் அவமதித்தவாகிய குற்றம்; மற்றும் பிரிவு 506-இன் கீழ் அவமதித்தலாகிய குற்றம்: 7) மேற்சொன்ன குற்றங்களுள் எவையேனும் ஒன்றுக்கு உடந்தையாயிருந்தலாகிய குற்றம்: (8) அத்தகைய முயற்சி குற்றமாக இருக்கும்போது, மேற்சொன்ன குற்றங்களுள் ஏதேனும் ஒன்றைச் செய்ய முயற்சி செய்தலாகிய குற்றம்; (9) எந்தச் செய்கையைப் பொறுத்து 1871-ஆம் ஆண்டு கால்நடை அத்துமீறல் சட்டம் பிரிவு20-இன்படி முறையீடு ஒன்றைச் செய்து கொள்ளலாகுமோ அந்தச் செய்கையினால் உண்டான குற்றங்கள்; 10) இரண்டாம் வகுப்பு நடுவர் ஒருவர், உயர், நீதிமன்றம் அதிகாரம் அளித்ததன்பேரில், அபராதம் மட்டும் விதிப்பதற்குரிய அல்லது அபராதத்துடனோ அபராதம் இல்லாமலோ ஆறு இங்களுக்கு மேற்படாத காலத்துக்குச் சிறைத் தண்டனை விதிப்பதற்குரிய குற்றம்; 11) அத்தகைய செய்கைக்கு உடந்தையாக இருக்கும் குற்றம் அல்லது அதைச் செய்வதற்கான முயற்சி செய்த குற்றம் ஆகியவற்றைக் குறுகிய கால நடைமுறையில் (Summary Trial) விசாரித்து முடிக்கலாம்.
<b>நடைமுறை</b>: இந்நடைமுறை அழைப்பாணை வழக்கு (Summons case) அடிப்படையில் நடைபெறும். நடுவர், மாநில அரசு குறித்துரைக்கும் படிலத்தில் பின்வரும் விவரங்களை நீதிமன்ற மொழியில் பதிவு செய்வார். அவை, (1) வழக்கின் வரிசை எண், (2) குற்றமிழைத்த தேதி, (3) அறிக்கை அல்லது முறை மீட்டின் தேதி, (4) முறையிடுபவர் எவரேனுமிருப்பின் அவரது பெயர். (5) குற்றஞ்சாட்டப்பட்டவர் பெயர், பெற்றோர், உறைவிட விவரம், (6) முறையீடு செய்யப்பட்டுள்ள குற்றம் மெய்ப்பிக்கப்பட்டுள்ள குற்றம் (ஏதேனுமிருப்பின்) பிரிவு 250, உட்பிரிவு (1) கூறுகள் (ii), (iii), (iv) ஆகியவற்றின் கீழ் வரும் சூழ்நிலைகளில் எந்தச் சொத்தைப் பொறுத்துக் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதோ, அந்தச் சொத்தின் மதிப்பு, (7) குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாதுரை, (விசாரணை ஏதேனுமிருப்பின்), (8) முடிபு, (9) தண்டனை அல்லது வேறு அறுதியான கட்டனை, (10) நடைமுறை முடிவடைந்த தேதி ஆகியனவாம்.
<b>தீர்ப்பு</b>: இந்நடைமுறையில் நடுவர், தீர்ப்பினைச் சாட்சியத்தின் சாரத்தோடு முடிபுக்கான காரணங்களைச் சுருக்கமாகக் குறிக்கும் பாங்கில் நீதிமன்ற மொழியில் அமைத்து வெளியிடுவார். இவ்வழங்கம்படும் தண்டனைத் தீர்ப்பு மூன்று திங்களுக்கு உட்பட்டதாக இருக்கும்.{{Right|<b>பு.வே.</b>}}
<section end="குறுகியகால நடைமுறை"/>
<section begin="குறுங்கீரனார்"/>
{{dhr}}
<b>குறுங்கீரனார்</b> என்பவர் சங்க காலப் புலவராவார். இவரது இயற்பெயர் கீரன் என்பதாகும். குறுகிய வடிவம் கொண்டு விளங்கியதால் குறுங்கீரனார் எனப்பட்டாராதல் வேண்டும். உருவத்தை அடையாகக் கொடுத்துப் பெயர் வழங்கும் மரபு சங்க காலத்தில் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, உடலின் குறுமை குறித்துத் தமிழ் வளர்த்த பெருமுனியும் பாண்டியன் ஒருவனும் முறையே குறு முனி என்றும் குறுவழுதி என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளனர். அதுபோலவே, கீரனார் என்னும் இயற்பெயரினரான இவரும் குறுங்கீரனார் ஆயினார். இவரது ஒரே பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது. (குறு. 382). அப்பாடல் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிய தலைவன் வரவில்லை; கார்கால மயர்கள் மரைத் தொடங்கின. தலைவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவன் என்று கூறுவது போலத் தோழி தலைவியைப் பார்க்க, தலைவி தோழியின் மனநிலையை உணர்த்தவளாய், புதிதாகப் பெய்த மழையைக் கார்காலம் என்று நம்பிய கார்காலச் செடிகள் பூக்கத் தொடங்கின: நம் காதலர் ‘பொய் புகலார்’ என்று தன்னம்பிக்கையோடு கூறுகின்றாள்.{{Right|<b>ஆ.கா.</b>}}
<section end="குறுங்கீரனார்"/>
<section begin="குறுங்குடி மருதனார்"/>
{{dhr}}
<b>குறுங்குடி மருதனார்</b> சங்கப் புலவர்களுள் ஒருவர். மருதனார் என்னும் இயற்பெயர் வாய்த்த இப்புலவர் பாண்டிய நாட்டிலுள்ள குறுங்குடி என்னும் ஊரினராதலின் குறுங்குடி மருதனார் என்றழைக்-<noinclude></noinclude>
2ktfqkrgpl4tjgbv7u86763p2frjaea
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1958698
1958615
2026-08-19T15:02:53Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 8 */
1958698
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
cbswnskj8mua0h6qpfwzwdlflqdae8m
1958699
1958698
2026-08-19T15:10:20Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 8 */
1958699
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
daf945flnm095digiuminumn7qovbzf
1958700
1958699
2026-08-19T15:10:30Z
Booradleyp1
1964
/* பட்டியல் */
1958700
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
dhyjpk1r463jxy14xubp9j0u38x804p
1958720
1958700
2026-08-19T18:03:25Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1958720
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்|சாலர்சங்கு அருங்காட்சியம்]] 847-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச் சட்டம்|சாலியச் சட்டம்]] 851-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப் படுகொலை|சாலியன் வாலாபாகுப் படுகொலை]] 851-853
3d0n4lu6v5l0e2dpak90poarquj5n90
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1958712
1958601
2026-08-19T15:30:55Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 6 */
1958712
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784-789
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைப் பாடல்குழந்தைப் பாடல்]] 789-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை முன்னறிவுச் சோதனை|குழந்தை முன்னறிவுச் சோதனை]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மையக் கல்வி|குழந்தை மையக் கல்வி]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மொழி|குழந்தை மொழி]] 793-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழல்|குழல்]] 797-799
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழற்றத்தனார்|குழற்றத்தனார்]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு|குழு]] 799-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அறிவுரை பகர்தல்|குழு அறிவுரை பகர்தல்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அனுபவமும் சமூகமயமாதலும்|குழு அனுபவமும் சமூகமயமாதலும்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இடைவினை|குழு இடைவினை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இயங்கியல்|குழு இயங்கியல்]] 807-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு உள மருத்துவம்|குழு உள மருத்துவம்]] 809-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு ஒழுங்குணர்வு|குழு ஒழுங்குணர்வு]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக்கள்|குழுக்கள்]] 814-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக் கற்பித்தல்|குழுக் கற்பித்தல்]] 816-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுத் தீவுகள்|குழுத் தீவுகள்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும உளவியல்|குழும உளவியல்]] 818-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மணம்|குழு மணம்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும மனநலம்|குழும மனநலம்]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனக் கோட்பாடு|குழு மனக் கோட்பாடு]] 819-821
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனப்பான்மை|குழு மனப்பான்மை]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு வாழ்க்கை|குழு வாழ்க்கை]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குள்ளர்கள்|குள்ளர்கள்]] 824-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பனார்|குளம்பனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பாதாயனார்|குளம்பாதாயனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளித்தலை|குளித்தலை]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுக்கான், கிளைடு|குளுக்கான், கிளைடு]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுசு|குளுசு]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற அறிக்கை|குற்ற அறிக்கை]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற இளைஞர் பள்ளி|குற்ற இளைஞர் பள்ளி]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உடந்தை|குற்ற உடந்தை]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உளவியல்|குற்ற உளவியல்]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சாட்டு|குற்றச்சாட்டு]] 831-832
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சிக்கல்|குற்றச்சிக்கல்]] 832-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றஞ்சாட்டப்பட்டவர்|குற்றஞ்சாட்டப்பட்டவர்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றம்|குற்றம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமன்னிப்பு|குற்றமன்னிப்பு]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமனம்|குற்றமனம்]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற முறையீடு|குற்ற முறையீடு]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமேற்ற சாட்சி|குற்றமேற்ற சாட்சி]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவழக்குத் தொடுப்பு|குற்றவழக்குத் தொடுப்பு]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவாளிப் பழங்குடிகள்|குற்றவாளிப் பழங்குடிகள்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் அரசு வழக்குரைஞர்|குற்றவியல் அரசு வழக்குரைஞர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை|குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் தத்துவம்|குற்றவியல் தத்துவம்]] 839-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் நடைமுறைச் சட்டம்|குற்றவியல் நடைமுறைச் சட்டம்]] 841-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலக் குறவஞ்சி|குற்றாலக் குறவஞ்சி]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலம்|குற்றாலம்]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறட்டி வரதையன்|குறட்டி வரதையன்]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறத்திப்பாட்டு|குறத்திப்பாட்டு]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறம்|குறம்]] 846-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் இளவெயினியார்|குறமகள் இளவெயினியார்]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் குறியெயினி|குறமகள் குறியெயினி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறவஞ்சி|குறவஞ்சி]] 849-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறி கூறல்|குறி கூறல்]] 850-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிஞ்சிப்பாட்டு|குறிஞ்சிப்பாட்டு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்|குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்]] 851-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புப் பொருள்|குறிப்புப் பொருள்]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புவினை|குறிப்புவினை]] 854-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியிறையார்|குறியிறையார்]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு அளவையியல்|குறியீட்டு அளவையியல்]] 855-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு எண்கள்|குறியீட்டு எண்கள்]] 856-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீடுசார் மானிடவியல்|குறியீடுசார் மானிடவியல்]] 862-864
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கீடு|குறுக்கீடு]] 864-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கு விசாரணை|குறுக்கு விசாரணை] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுகியகால நடைமுறை|குறுகியகால நடைமுறை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கீரனார்|குறுங்கீரனார்]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்குடி மருதனார்|குறுங்குடி மருதனார்]] 866-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
l2ym9zpzsz0of9basp69p3qnvsi7lt3
பயனர்:Bharathblesson/test
2
645148
1958701
1958673
2026-08-19T15:13:08Z
Booradleyp1
1964
/* பட்டியல் */
1958701
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|-
|}
</div></div></div>
</center>
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-end}}
gvybe1pxahxjlkaq6ld4v3ugsxpycyg
1958705
1958701
2026-08-19T15:24:15Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 9 */
1958705
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-end}}
29zvgrvo1xtebmsjd16h6cnpdp2miuh
1958707
1958705
2026-08-19T15:26:49Z
Booradleyp1
1964
/* பட்டியல் */
1958707
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
|-
|}
</div></div></div>
</center>
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-end}}
aq0htay7c6k4ho7zwlxn0re0ez9xmcd
1958713
1958707
2026-08-19T15:36:28Z
Booradleyp1
1964
/* பட்டியல் */
1958713
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
|-
|}
</div></div></div>
</center>
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
au8pyrv267vlwkqxg37z74708kdxv69
1958714
1958713
2026-08-19T15:37:56Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 9 */
1958714
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
|-
! colspan="5"|<b>ஞ, ஞா, ட, டா, த</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
o18kc8f1wgsiuta9ph4vwzvv5oq1tk3
1958773
1958714
2026-08-20T09:19:09Z
Bharathblesson
15164
/* பட்டியல் */
1958773
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
|-
! colspan="5"|<b>ஞ, ஞா, ட, டா, த</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-826
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்துவநாதர்|தந்துவநாதர்]] 826-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசம்|தத்துவப் பிரகாசம்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசர்|தத்துவப் பிரகாசர்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ போதகர்|தத்துவ போதகர்]] 828-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவமசி|தத்துவமசி]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவராயர்|தத்துவராயர்]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ வரலாறு|தத்துவ வரலாறு]] 829-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ததீசி|ததீசி]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திரம்|தந்திரம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திவர்மன்|தந்திவர்மன்]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்து மாறன்|தந்து மாறன்]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை உரு|தந்தை உரு]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைத் தலைமை|தந்தைத் தலைமை]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைமை நிலை ஒப்புகை|தந்தைமை நிலை ஒப்புகை]] 835-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
eh0zob4dadqzhymvg4kfae7jyhcq6y3
விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி
4
651247
1958721
1958395
2026-08-20T02:06:19Z
Neyakkoo
7836
/* வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் */ +
1958721
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[File:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
kc3bimkhad3926o63xp6uh54fqr55ro
1958723
1958721
2026-08-20T02:12:52Z
Neyakkoo
7836
/* வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் */ +
1958723
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
5et29sjgim9m6pujo6fmzhjxzethiul
1958748
1958723
2026-08-20T08:05:18Z
Neyakkoo
7836
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ ஒப்பம்
1958748
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
ezlcsk700rn17nf8yrw6o16j331su1p
1958752
1958748
2026-08-20T08:46:19Z
Naren karthik Ragunathan
16828
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */
1958752
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#-[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
a8r7i4hc98j3or16wlpye5fhplsjkfe
1958754
1958752
2026-08-20T08:54:58Z
Madhumitha kanagavijayan
16802
/* பயில்வோர் */ கைஒப்பம் பொடப்பைட்டது
1958754
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#-[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
##--[[பயனர்--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
layr0e1a9x2hrohosl6lez14dx3qhgr
1958755
1958754
2026-08-20T08:57:46Z
Vishali Saravana Kumar
16801
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ agree
1958755
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#-[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
##--[[பயனர்--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)-[[பயனர்
#
#
#
#
#
#
#
#
--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
g52m8bsul0cve9gxbbd1k53sdph8yyp
1958756
1958755
2026-08-20T09:02:38Z
Neyakkoo
7836
/* 11.08.2026 */ correction
1958756
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
3vsk9aaa52nr30688coi10zuccmlmkj
1958757
1958756
2026-08-20T09:04:47Z
Sanjeev Basker
16799
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ sign
1958757
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
i5gwax7tid9lqz44dm9xtr01vgxqaa5
1958759
1958757
2026-08-20T09:05:53Z
Sadiqbasha.18
16804
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ ஒப்பம்
1958759
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
9fwvdm1dh3dv91pbo8wvkqrftllkxpi
1958761
1958759
2026-08-20T09:08:38Z
Dharanipriya J
16876
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ sign
1958761
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
tfbfmkgj7nsya8j3wz9lubkt0ajnaqh
1958762
1958761
2026-08-20T09:09:39Z
Nethrama
16879
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ sign
1958762
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
q7hltlp4pgjdsfqyv0smhlb48mq4yy2
1958763
1958762
2026-08-20T09:11:06Z
Neyakkoo
7836
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */
1958763
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
2papz6upd78jc9mlehsju40dkm151me
1958764
1958763
2026-08-20T09:11:26Z
~2026-45528-39
16883
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ sign
1958764
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
kvmdmak0owpjr2v03uc1sj5nwzrnwwb
1958765
1958764
2026-08-20T09:12:34Z
Juleemargret
16798
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ sign
1958765
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#
#
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
r2peelaoz0low8h5cpc4css7dqfsx9d
1958766
1958765
2026-08-20T09:13:00Z
Farzana Jamesha
16881
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ sign
1958766
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
ll1k7p148e6drrnjhpwqswfyxob5ige
1958768
1958766
2026-08-20T09:15:33Z
Bhavana Balaji
16880
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ sign
1958768
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
5gdrik6w1dfzhgmjyqko9ktwre9sxim
1958769
1958768
2026-08-20T09:17:22Z
Sujibala S
16882
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */
1958769
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
hn1h0drbtogo0jmv9tkxrldhkxufrre
1958770
1958769
2026-08-20T09:17:50Z
Sruthi Harishkumar
16826
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ sign
1958770
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
mx01x9wcww5tf13tim5cs6id20ajsb1
1958771
1958770
2026-08-20T09:18:34Z
Sujibala S
16882
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */
1958771
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
mk796ceqza3w107xo7ka6cio80natv7
1958774
1958771
2026-08-20T09:19:35Z
Sadhana G
16877
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ sign
1958774
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
jqhk7apvandm44pn36qs2etua19ulr2
1958937
1958774
2026-08-20T10:04:10Z
Neyakkoo
7836
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */
1958937
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
ipwhyruwfmvl3zidt2tzptm4k2vvr6o
1958946
1958937
2026-08-20T10:07:26Z
Sakthi Devi.M
16878
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ sign
1958946
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
kb6q628ulb48o8b79sb4l2h56yk2sp3
1958947
1958946
2026-08-20T10:08:14Z
Anlie Askila Babu
16830
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */
1958947
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#—-[[சிறப்பு:Contributions/~2026-45528-39|~2026-45528-39]] ([[பயனர் பேச்சு:~2026-45528-39|talk]]) 09:11, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
===25.08.2026===
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
c4zgga56vn9hv9mbxspt0cupdhhlzcf
1958948
1958947
2026-08-20T10:11:43Z
Neyakkoo
7836
/* 20.08.2026 (நேரடிப் பயிற்சி) */ correction
1958948
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
===25.08.2026===
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
0u8zz4y2vjoog1m990us0eq12hql8g4
1958949
1958948
2026-08-20T10:14:20Z
Neyakkoo
7836
/* வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் */ +
1958949
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள்
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - முடிந்தது
* [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
* [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
* [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
* [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ===
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
===25.08.2026===
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
j41ak00mj75htb4ibc2ou3c4xe8ez8a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/845
250
651681
1958692
2026-08-19T14:36:06Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>சமயக் கொள்கை:</b> இவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தி யூதர்களை யேகோவாவை மட்டும் வழிபடச் செய்தார். சமயப் பொறை மிக்க இவர் தம் மக்களுக்காக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாலமன் தீவினர்|819|சாலமானகா}}</noinclude><b>சமயக் கொள்கை:</b> இவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தி யூதர்களை யேகோவாவை மட்டும் வழிபடச் செய்தார். சமயப் பொறை மிக்க இவர் தம் மக்களுக்காக மட்டுமல்லாது, பிற நாட்டிலிருந்து வந்து அங்குத் தங்கியிருந்த வாணிகர்களின் நலத்திற்காகவும் கடவுளை வழிபட்டார்.
<b>நிகுவாகம்,</b> இவர் சிறந்த நிருவாகியாகத் திகழ்ந்தார். இவருக்கு முன்னர் இசுரேல் பன்னிரண்டு குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதனால், நாட்டில் குடும்புகளுக்கிடையே அடிக்கடி பூசல்கள் தோன்றி ஒற்றுமை ஏற்படாமல் இருந்தது. எனவே, சாலமன் அதனைப் பன்னிரண்டு மாவட்டங்களாகப் பிரித்தார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஆளுநரும், அவர்கள் அனைவருக்கும் ஒரு தலைவரும் நியமிக்கப்பட்டனர். வருவாய்த் துறைக்குத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். வரி பொருளாகவோ கட்டாயப் பணியாகவோ பெறப்பட்டது.
{{Right|<b>செ.இரெ.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Swain, J.E.,</b> A History of World Civilization, Eurasia Publishing House (p) Ltd., New Delhi, 1976.
<section end="சாலமன்"/>
<section begin="சாலமன் தீவினர்"/>
{{dhr}}
{{larger|<b>சாலமன் தீவினர்:</b>}} பசிபிக்குப் பெருங்கடலின் தென்மேற்கே நியூகினியா (New Guinea) விலிருந்து சுமார் 800 கி.மீ. கிழக்கேயுள்ள தீவுக் கூட்டமே சாலமன் தீவுகள், சிதறுண்டு கிடக்கும் இத்தீவுகளின் மொத்தப் பரப்பளவு 39,190 சதுர கி.மீ. இவற்றில் மிகப்பெரிய தீவு போகன்வில்லா (Bougain Ville). சிறந்த நகரங்கள் கிடாவும் (Kieta) ஒனிரா (Honira) வும் ஆகும். உயர்ந்த மலைகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும் இவை வளம் நிறைந்தவை. இரண்டாம் உலகப் போரின்போது இத்தீவுகள் வரலாற்றுச் சிறப்புப் பெற்றன.
<b>மக்கள்:</b> இத்தீவுகளின் மக்கள் தொகை 2,30,000 (1970). இவர்களுள் பெரும்பாலோர் மேலனீசியர்கள் (Malanesians) என்றாலும் சில பாலினீசியர் (Polynesian) களும் உள்ளனர். குள்ளமான இவர்கள் மலாய் மொழியில் பேசுகின்றனர். இவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து குடும்பின் மூத்தோரின் (Tribal Elders) ஆதிக்கத்தில் இருந்துவந்தனர். இப்பகுதியில் கிறித்தவ சமயம் பரவியபின்னர், இவர்களுடைய சமுதாய அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டுக் குடும்பின் மூத்தோரின் செல்வாக்குக் குறைந்தது. இப்பொழுது இம்மக்களில் பெரும்பான்மையினர் கிறித்தவர்கள். கிறித்தவப் பாதிரிமார்கள் பள்ளிகளை ஏற்படுத்தி மக்களுக்குக் கல்வி கற்பித்தனர். இன்றும் இங்குள்ள பெரும்பாலான பள்ளிகளைக் கிறித்தவச் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.
<b>வரலாறு:</b> இசுபானியக் (Spanish) கடற்பயணி ஒருவர் கி.பி. 1568–ஆம் ஆண்டு இத்தீவுகளைக் கண்டுபிடித்து, சாலமன் தீவுகள் (Islas De Saloman) எனப் பெயரிட்டார். இதன் வடபகுதியை கி.பி. 1768–ஆம் ஆண்டு போகன்வில்லா என்ற பிரெஞ்சுக் கடற்பயணி கண்டறிந்தார். கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் கிறித்தவப் பாதிரிகள் இத்தீவுகளில் குடியேறித் தங்கள் சமயத்தைப் பரப்பினர். செருமனியும் இங்கிலாந்தும் ஓர் உடன்படிக்கையின் மூலம் கி.பி. 1885–ஆம் ஆண்டில் முறையே வடபகுதியையும் தென்பகுதியையும் பிரித்துக்கொண்டன. இரண்டாம் உலகப் போரின் பொழுது இங்குக் கடும்போர் நிகழ்ந்ததால் இத்தீவுகள் வரலாற்றுச் சிறப்புப் பெற்றன. சப்பான் 1942-ஆம் ஆண்டு இவற்றைக் கைப்பற்றிக் கொண்டு போர் முடிந்ததும் வெளிவேறியது. பின்னர்த் தென் கிழக்கு, வடமேற்குத் தீவுகள் முறையே இங்கிலாந்து, ஆசுத்திரேலியா ஆசியவற்றின் நிருவாகத்தில் விடப்பட்டன. இம்மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கி 1960–ஆம் ஆண்டிலிருந்து பல அரசியல் சலுகைகளைப் பெற்று, 1976–ஆம் ஆண்டு தன்னாட்சி பெற்றனர். இறுதியில் 1978–ஆம் ஆண்டு முழு விடுதலை அடைந்தனர்.
<b>தொழில்:</b> இம்மக்களின் முக்கிய தொழில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் ஆகும். இங்குத் தென்னை மரங்கள் அதிகம் உள்ளதால் இம்மக்களின் பொருளாதாரம் கொப்பரையைப் பொறுத்தேயுள்ளது. மேலும், வேர்சல் கோகோ, இரப்பர், கரும்பு, நெல், பருத்தி, வாழை, வள்ளிக் கிழங்கு ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். அன்னாசி போன்ற பழ வகைகளும், பனை எண்ணெயும், மர வகைகளும் இங்கு அதிகம். கால் நடைகள் குறிப்பாக மாடுகள், இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
<b>வாணிகம்:</b> இம்மக்கள் கொப்பரை, மரம், கடற் கிளிஞ்சல் ஆகியவற்றை இங்கிலாந்து, சப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தங்களுக்குத் தேவைவசன பொருள்களை ஆசுத்திரேலியா, சப்பான் முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றனர்.
{{Right|<b>சி.இரெ.</b>}}
<section end="சாலமன் தீவினர்"/>
<section begin="சாலமான்கா"/>
{{dhr}}
{{larger|<b>சாலமான்கா</b>}} மேற்கு இசுபெயினில் உள்ள இலியோன் மாகாணத்தின் தலைநகரம்; இரியோ தார்மெசு (Rio Darmez) ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் கலைச்சிறப்பு மிக்க நகரங்களுள் சாலமான்கா (Salamanca) ஒன்றாகும். இது ஐபீரிய மக்களுடைய குடியிருப்புகளுள் ஒன்றாகும். ஆன்னிபால் (Hannibal) என்ற கார்தேசுப்<noinclude>
<b>வா.க. 8 – 52அ</b></noinclude>
pfkxgpc8aqdrgx8hbbx759y1wt3hfbn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/846
250
651682
1958695
2026-08-19T14:48:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 846 |bSize = 480 |cWidth = 192 |cHeight = 157 |oTop = 77 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|சாலமான்கா}} படைத் தலைவரின் தாக்குதலுக்கு கி.மு. 217–இல் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாலமான்கா|820|சாலமிசு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 846
|bSize = 480
|cWidth = 192
|cHeight = 157
|oTop = 77
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|சாலமான்கா}}
படைத் தலைவரின் தாக்குதலுக்கு கி.மு. 217–இல் இது உட்பட்டது. ஆசுடோர்காவிலிருந்து செவில் (Seville) நகருக்குச் செல்லும் வழியில் இது அமைந்திருப்பதால் இங்கு உரோமானிய நகரம் உருவாகியது. பிறகு கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் ஆயரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்தது. பின்னர் மூர்களின் ஆக்கிரமிப்புக்கு இரையாகியது. குறித்தவர்களுக்கும் மூர்களுக்கும் கி.பி. 8–ஆம் நூற்றாண்டு முதல் நடைபெற்ற போராட்டங்களின் அரங்கங்களுள் இது ஒன்றாக இருந்தது. இறுதியில் மூர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கிறித்தவர்கள் இங்கு மீண்டும் கி.பி. 1087–இல் குடியிருப்புகளை நிறுவத் தொடங்கினார்கள். இது 1120 வரை நடைபெற்றது. இலியோன் அரசரான இரண்டாவது பர்டினாண்டு தமது கார்டெசு (Cortes) என்ற பேராளர் சபையை இங்குதான் கூட்டினார். இந்த நகருக்குப் பல சிறப்புரிமைகளை ஒரு பட்டயத்தின் வாயிலாக அளித்தார். பத்தாம் அல்பான்சோ இங்கு ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவினார். ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டபோது இது சிறந்ததொரு கல்விக்கூடமாக விளங்கியது. பன்னாட்டு உறவு பற்றிய சட்டத்தின் அடிப்படைக் கருத்துகளை முதன் முதலில் அளித்த பிரான்சிசுகோ டி விக்டோரியா (விக்டோரியாவைச் சார்ந்த பிரான்சிசுகோ) என்ற சமய நூல் அறிஞரும். இசுபானிய எழுத்தாளரான இலியோனைச் சார்ந்த உலூயியும் (லூயி டி இலியோன்) இந்நகரத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். இங்குச் சமய ஆட்சி கி.பி. 1835–இல் முடிவுற்றது. சமயச் சார்பற்ற ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. தளபதி பிராங்கோ (Franco) 1936 முதல் 1939 வரை நடைபெற்ற இசுபானிய உள்நாட்டுப் போரின்போது தமது உறையுளை இங்குத் தான் ஏற்படுத்திக் கொண்டார். பல அழகான கட்டடங்கள் இங்குள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை கிறித்தவத் தொழுகை இல்லங்களாகும். அவை தவிரச் சமயச் சார்பற்ற கட்டடங்களும் உண்டு. அவற்றுள் பிளாசாமேயர் (Plaza Mayor), ஆந்த்ரே கார்சியா தி குவைனோனெசு (Andres Garcia de Quinones) நகர சபைக் கட்டடம் (Town Hall) உரோமானிய பாலம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இங்கு மாணவர்கள் தங்கிப் படிக்கும் மூன்று பெரிய கல்லூரிகள் உள்ளன. இது சிறந்த சுற்றுலா மையமாக விளங்குகிறது. இது அந்நகரின் பொருளாதாரத்தின் அடிப்படையாகும். விவசாய மையமாகவும் விளங்குகிறது. இங்குத் தொழிற்சாலைகள் மிகக் குறைவு. சாலமான்காவின் பரப்பு 12,336 சதுர கி.மீ. மக்கள் தொகை 368,055.
அமெரிக்காவிலுள்ள மத்திய மெக்சிகோவின் வடபகுதியில் உள்ள ஒரு நகரமும் சாலமான்கா என்ற பெயருடன் விளங்குகிறது. இதன் மக்கள்
தொகை 1980–ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி சுமார் 160,040. பாசியோ (Rajio) பிராந்தியத்தின் மையத்தில் இருப்பதால் மெக்சிகோவின் தானியக் களஞ்சியம் என்று இதைக் குறிப்பிடுகின்றனர். முக்கியமான தொழில் மையமாகவும் இது விளங்குகிறது. பெட்ரோலியச் சுத்திகரிப்புத் தொழிற்சாலை ஒன்று இங்கு இருக்கிறது. நெசவுத் தொழிலும், தோல் பதனிடும் தொழிலும் நடைபெறுகின்றன. போக்குவரத்து மையமாகவும் இது விளங்குகிறது.
{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}}
<section end="சாலமான்கா"/>
<section begin="சாலமிசு"/>
{{dhr}}
{{larger|<b>சாலமிசு</b>}} கிரீசு நாட்டில் ஏதன்சு நகருக்கு மேற்கே சரோனிக்கு வளைகுடாவில் (Saronic Gulf) உள்ள தீவு. இதே பெயரில் நகரம் ஒன்றும் அத்தீவில் உள்ளது. இத்தீவும் இந்நகரமும் பைரேயசு (Piraeus) மாநிலத்தின் ஒரு பகுதியாகும். சாலமிசு (Salamis) நகரம் இத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இது ஒரு துறைமுகப்பட்டினம். இத்தீவின் கிழக்கே இத்தீவிற்கும் பெரு நிலப்பகுதிக்கும் இடையே நீர்ச் சந்தி உள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க கப்பற் சண்டையொன்று பண்டைக் காலத்தில் நடைபெற்றது. பாரசீக மன்னர் செர்க்செசு (Xerxes) கிரீசு நாட்டை வெல்ல முற்பட்டார். நிலம் வழியாக ஒரு படையை அனுப்பினார். நிலப்படை ஏதன்சு நகரைக் கைப்பற்றியது. ஏதன்சு மக்கள் சாலமிசில் புகலிடம் நாடினர். கிரேக்கக் கப்பற்படை சாலமிசு தீவுக்கருகே நிறுத்தப்பட்டது. கப்பற்படைத் தலைவர் தெமிசுடாக்லீசு (Themistocles) ஒரு தேசத்துரோகி போல் நடித்து, செர்க்செசுக்கு ஒரு கடிதம் எழுதினார். சாலமிசில் இருந்து கிரேக்கக் கப்பற்படை தப்பித்துச் செல்லப்போவதாகவும், உடனே அங்குப் பாரசீக கப்பற்படையை அனுப்பினால் அதைக் கைப்பற்றி<noinclude></noinclude>
6fm96a0iq5e2n2k14mep8gcoue8jnyh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/847
250
651683
1958715
2026-08-19T16:13:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விடலாம் என்றும் எழுதினார். செர்க்செசு அதனை உண்மையென நம்பி, தமது படையை அங்கு அனுப்பினார். பாரசீகக் கப்பல்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாலமிசு|821|சாலர்சங்கு அருங்காட்சியம்}}</noinclude>விடலாம் என்றும் எழுதினார். செர்க்செசு அதனை உண்மையென நம்பி, தமது படையை அங்கு அனுப்பினார். பாரசீகக் கப்பல்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் பெரியவை. கிரேக்கக் கப்பல்கள் சிறியவை. எண்ணிக்கையும் குறைவு. சாலமிசுக்கு அருகே நீர்ப் பரப்பு மிகக் குறைவாக இருந்தமையால், பாரசீகக் கப்பல்கள் நகருவது கடினமாயிற்று. கிரேக்கக் கப்பல்கள் எளிதில் அவற்றைத் தாக்கின. பாரசீகக் கப்பற்படை அழிக்கப்பட்டுவிட்டது. இந்நிகழ்ச்சி கி.மு. 480–இல் நடைபெற்றது. இதன் விளைவாக நிலப்படை நாடு திரும்ப நேரிட்டது. கிரீசு அந்நியப் படையெடுப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது. அதன் பிறகு கிரேக்கர்கள் பாரசீகப் பேரரசைத் தாக்க முற்பட்டு, இறுதியில் அதனை வென்றனர்.
2. பண்டைய சைப்ரசு தீவில் இருந்த முக்கியமான நகரம் சாலமிசு. இக்காலப் பாமாகுசுதா (Famagusta) நகருக்கு வடக்கே சைப்ரசின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தது கிரீசுக்கும் திராயுக்கும் (Troy) இடையே பண்டைக் காலத்தில் நடைபெற்ற போருக்குப் பிறகு தியூசெர் (Teucer) என்ற வில் வீரனால் நிறுவப்பட்ட நகரம் என்று கூறப்படுகிறது. அவன் கிரீசில் உள்ள சாலமிசில் இருந்து வந்தவர். பண்டைக் காலத்தில் சாலமிசு நகரம் சிறந்த துறைமுகம் ஒன்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது. அதன் வழியாகத்தான் பினீசியா (Phoenicia), எகிப்து, சைலீசியா (Cilicia) ஆகியவற்றுடன் சைப்ரசு மக்கள் பண்டைக் காலத்தில் தங்களுடைய வாணிபத்தின் பெரும் பகுதியை நடத்தி வந்தனர். கி.மு. 525–இல் அது பாரசீகர்கள் வசமாயிற்று கி.மு. 306–இல் முதலாவது தெமெட்ரீயசு என்பவர் எகிப்து நாட்டு முதலாவது தாலமியை, சாலமிசுக்கருகே தோற்கடித்தார். கி.மு. 115–117–இல் யூதர்கள் கலகம் செய்தனர். அப்போது அந்நகரம் அழிக்கப்பட்டது. அடிக்கடி ஏற்பட்ட பூகம்பங்களும் அதனை அழித்தன. கி.பி. 337 முதல் 361 வரை ஆண்ட இரண்டாம் கான்சுடன்டியசு (Constantius II) அதனைச் சீரமைத்து அதற்குக் கான்சுடன்சியா (Constantia) என்ற பெயரைச் சூட்டினார். கிறித்தவர்கள் ஆட்சியின்போது அது சைப்ரசின் சமயத் தலைமையிடமாகத் திகழ்ந்தது. அராபியர் தலைவரான மூலானியா கி.பி. 648–இல் அதை மீண்டும் அழித்தான். அதன் பிறகு அந்நகரத்தைப் புதுப்பிக்கும் முயற்சி முற்றிலும் கைவிடப்பட்டது. {{Right|<b>தி.ஆ.இரா.</b>}}
<section end="சாலமிசு"/>
<section begin="சாலர்சங்கு அருங்காட்சியகம்"/>
{{dhr}}
{{larger|<b>சாலர்சங்கு அருங்காட்சியகம்,</b>}} 1951–இல் ஐதராபாத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வருங்காட்சியகம் நவாபு மூன்றாம் சாலர்சங்கினால் (Salar Jung) சேகரிக்கப்பட்ட கலைப் பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவர் 1912–1914
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 847
|bSize = 480
|cWidth = 382
|cHeight = 232
|oTop = 322
|oLeft = 39
|Location = center
|Description =
}}
{{center|சாலர்சங்கு அருங்காட்சியகம்}}<noinclude></noinclude>
t0nldkdjij2jj03mep0vgnqnm2f43xb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/848
250
651684
1958716
2026-08-19T16:24:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆண்டுகளில் நிசாமின் முதல் அமைச்சராகப் பணி புரிந்தார். பதவியைத் துறந்து கலைப்பொருள் சேகரிப்பில் முனைந்து ஈடுபட்டு மிகச் சிறந்த கலைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாலர்சங்கு அருங்காட்சியகம்|822|சாலர்சங்கு அருங்காட்சியகம்}}</noinclude>ஆண்டுகளில் நிசாமின் முதல் அமைச்சராகப் பணி புரிந்தார். பதவியைத் துறந்து கலைப்பொருள் சேகரிப்பில் முனைந்து ஈடுபட்டு மிகச் சிறந்த கலைப் பொருள் சேகரிப்பாளர் என்னும் பெருமையை இவர் பெற்றார். இவர் சேகரித்த கலைப்பொருள்கள் பல வகைப்பட்டவை. இவர் இறந்த பிறகு இச்சேகரிப்புகள் அனைத்தும் ஐதராபாதிலுள்ள ‘திவான் தெவ்டி’ (Devan Devdi) என்னும் இவரது அரண்மனையில் சேகரிக்கப்பட்டுச் சாலர்சங்கு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டது. இது 1961–இல் நாட்டுடைமையாக்கப்பட்டது.
இவ்வருங்காட்சியகம் ஏறத்தாழ 70 அறைகளைக் கொண்டது. இருப்பினும் இவ்வருங்காட்சியகத்தின் நிலையான இடமாக அரண்மனை இருக்கவியலாது என்ற கருத்து நிலவியதால், மூசி ஆற்றங்கரையில் அப்சல்கசீசு என்னும் இடத்தின் அருகில், அரண்மனைக்குச் சிறிது தொலைவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடமொன்றில் 1968–ஆம் ஆண்டு இது இடமாற்றம் செய்யப்பட்டது. இப்புதிய கட்டடத்தின் அறைகள் அளவில் பெரியவையாகும். கலைப்பொருள் சேகரிப்புகள், 35 கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இச்சேகரிப்புகள் பெரிதும் அணிசெய் கலைப்பொருள்கள் (Decorative art objects) ஆகும். இவை பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவை. இதில் உள்ள கலைப்பொருள்களும் கைவினைப் பொருள்களும் காண்போர்க்கு வியப்பளிப்பனவாகும். இவற்றை ஓவியங்கள், வெண்கலப் படிமங்கள், மர, தந்தக் கடைசல்கள், பச்சைமணிக்கல் கடைசல்கள், கண்ணாடிப் பொருள்கள், பீங்கான் பொகுங்கள், இருக்கைகள், கையேடுகள், துணிவகைகள், கடிகாரங்கள், விரிப்புகள், சித்திரத் தையல் வேலைகள், கைத் தடிகள், மூக்குப்பொடிக் குப்பிகள், பளிங்குச் சிலைகள், கண்ணாடிச் சர விளக்குகள் இன்னும் பிற கலைப் பொருள்கள் எனப் பட்டியலிட்டுக் காட்டலாம். இத்தகைய வியப்பூட்டும் பல்வகைக் கலைப்பொருள்களே இவ்வருங்காட்சியகத்தை நெஞ்சையள்ளும் அருங்காட்சியகமாகக் காட்டுகின்றன.
இந்த விரிவான சேகரிப்புகளுள் சில கலைப் பொருள்கள் மிகச் சிறந்தவையாகும். பளிங்கினாலான முக்காடிட்ட நரம்பிசைக் கருவி, உள்ளிருந்து வந்து மணியடித்துச் செல்லும் ஓதிய மனித உருவங் கொண்ட தொன்மையான கடிகாரம், சட்டமிடப்பட்ட ஓவியங்களோ என்று எண்ணவைக்கும் சப்பானிய சித்திரத் தையல் வேலைகள், உட்புறங்களில் ஓவியம் தீட்டப்பட்ட சீனந்து மூக்குப்பொடிக் குப்பிகள், பச்சை மணிக்கல்லால் செய்யப்பட்ட விலை மிகுந்த பொருள்கள், நுட்பமான தந்த வேலைப்பாடுகள் முதலிய காட்சிப் பொருள்கள் பார்வையாளர்களது நினைவில் என்றென்றும் நிலைத்து நிற்பவை. இவ்வருங்காட்சியகச் சேகரிப்புகளுள் மிகச் சிறந்த இடத்தை வகிக்கும் சித்திரிக்கப்பட்ட கையெழுத்துச் சுவடிகள் ஒப்பற்ற மதிப்புடையவை. சகாங்கீர், சாசகான், அவுரங்கசிபு ஆகிய பேரரசர்களின் கையெழுத்துக்களைக் கொண்ட கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குரான் ஒன்றுள்ளது. மேலும் ஐதராபாதை ஆட்சி புரிந்தவரும், புகழ் மிக்க சார்மினாரைக் கட்டியவருமான முகம்மது குதுப் சா என்பவரால் இயற்றப்பட்ட கவிதைகளைக் கொண்ட வேலைப்பாடமைந்த நூலொன்றும் இவ்வருங்காட்சியகத்தில் உள்ளது.
இவ்வருங்காட்சியகத்தில் தலையாய இடத்தை வகிக்கும் வேறு கலைப்பொருள்கள் நுண் ஓவியங்கள் (Miniature paintings) ஆகும். இங்கு நுண் ஓவிய அனைத்துக் கலைப்பாணிகளையும் சேர்ந்த ஓவியங்கள் இடம் பெற்றிருப்பினும் தக்காணக் கலைப்பாணியின் நுண் ஓவியங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
பெரியனவும் சிறியனவுமான மேல்நாட்டு எண்ணெய் வண்ண ஓவியங்களைக் கொண்டுள்ள ஒருசில இந்திய அருங்காட்சியகங்களும் சாலர்சங்கு அருங்காட்சியகமும் ஒன்று. மேரி ஆண்ட்டாய்னட்டுக்குச் சொந்தமானதெனக் கருதப்படும் ஒப்பனை மேசை ஒன்று இங்குள்ளது. நெப்போலியன் அவன் தளபதிகள் ஆகியோரின் படங்களைக் கொண்ட ஒரு வட்ட மேசை காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர்வதாகும். பிரிட்டன், செருமனி, பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பீங்கான் பொருள்கள் இங்கு உள்ளன. நச்சுப் பொருள்கள் வைத்தால் நிற மாற்றமடையும் தன்மை கொண்டவை என்று கூறப்படும் சீன நாட்டுப் பீங்கான் பாத்திரங்களும் இவ்வருங்காட்சியகச் சேகரிப்பில் உள்ளன. இப்பாத்திரங்களில் தனித்தன்மையான ஒளிக் கசிவும், இளம் பச்சை நிறமும் காண்போரைக் கவர்கின்றன.
சாலர் சங்கு குடும்பத்தினரின் வாழ்க்கையையும் வாழ்க்கை முறைகளையும் வெளிப்படுத்தும் உடைகள், இருக்கைகள், வெற்றிச் சின்னங்கள், சமையல் பாத்திரங்கள் முதலிய பொருள்களைக் கொண்டது இவ்வருங்காட்சியகத்தீன் முதல் காட்சிக் கூடம். மூன்றாம் சாலர்சங்கு பயன்படுத்திய அழகிய வேலைப்பாடமைந்த ‘கொலுவிருக்கை’ நவாபுகள் காலத்தின் செழிப்பையும் பொலிவையும் நமக்குக் காட்டுகிறது.
துணிகள் காட்சிக்கூடம், சிறந்த வேலைப்பாடமைந்த துணி வகைகளைக் கொண்டிருக்கிறது. ஒரு நெருப்புப் பெட்டிக்குள் வைத்துக் கொள்ளக்கூடிய<noinclude></noinclude>
gzcqa40fhen13jc7nmrb6z8brmbv3qo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/849
250
651685
1958717
2026-08-19T16:37:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மிக மெல்லிய துணியாலான உடைகளை இங்குக் காணலாம். அன்றியும் நவாபு காலத்தைச் சேர்ந்த அரசு உடைகளின் வகைகளும் இங்கு உள்ளன. பாரசீகம், இந்தியா ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாலர்சங்கு அருங்காட்சியகம்|823|சாலிகுண்டம்}}</noinclude>மிக மெல்லிய துணியாலான உடைகளை இங்குக் காணலாம். அன்றியும் நவாபு காலத்தைச் சேர்ந்த அரசு உடைகளின் வகைகளும் இங்கு உள்ளன.
பாரசீகம், இந்தியா முதலிய நாடுகளைச் சேர்ந்த விரிப்புகள் காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. தந்தக் காட்சிக் கூடத்தில் திப்பு சுல்தானுக்குச் சொந்தமான தந்தத்தாலாகிய இரு நாற்காலிகள் உள்ளன. அண்மைக் காலத்தில் திருத்தியமைக்கப்பட்ட உலோகத் தொழில் கலைக் காட்சிக் கூடம், வேலைப்பாடமைந்த தென்னிந்திய வெண்கலப் படிமங்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது. இவற்றினுள் சில சோழர் காலத்தவை. சீனத்து மூக்குப் பொடிக் குப்பிகள் சிறப்பான கைவினைத் தொழில் திறனை உணர்த்தும் வகையில் உள்ளன. இக்குப்பிகளின் உட்புறங்களில் சீரிய முறையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஒளிரும் பல்வகைச் சர விளக்குகள், விளக்குத் தாங்கிகள், குப்பிகள் ஆகியவை கண்ணாடிக் காட்சிக் கூடத்தில் உள்ளன.
பச்சை மணிக்கல் காட்சிக்கூடம் கலர்ச்சி மிக்கதொரு காட்சிக்கூடமாகும். இங்குப் பச்சை மணிக்கல் படிகமணி, ஏனைய மணிகள் கொண்டு செய்யப்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சகாங்கீர், அவுரங்கசீபு ஆகியோரின் வாள்கள், நூர்சகானுக்குச் சொந்தமான மணிகள் பதிக்கப்பட்ட கத்தி ஆகியன இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
மிகப்பல மேல்நாட்டுப் பளிங்குச் சிலைகள் இவ்வருங்காட்சியகத்தின் பளிங்குக் காட்சிக் கூடத்தில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புகழ் வாய்ந்த கிரேக்கச் பிற்பங்களின் மாதிரிகளாகும். பென்சோனி என்பவரால் செதுக்கப்பட்ட முக்காடிட்ட சிற்பம் ஒன்று அனைவரையும் கவரக் கூடியது. இது பளிங்காலானது. முக்காட்டுக்குப் பின்னுள்ள பெண்ணின் அழகைத் தெளிவாக வெளிக்காட்டும். வகையிலும் இதன் மாசுமறுவற்ற பளிங்குப் பரப்பிலும் இதைச் செய்த சிற்பியின் கலைத் திறமை பார்வையாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
இவ்வருங்காட்சியகத்தில் மூன்றாம் சாலர்சங்கு நிறுவிய நூலகம் ஒன்றுள்ளது. அச்சிடப்பட்ட சில நூல்களின் அரிய வெளியீடுகள் இந்நூலகத்தில் காணப்படுகின்றன. இலக்கியம், தத்துவம், கலை, அறிவியல் முதலான அனைத்துத் துறை நூல்களும் இங்குள்ளன.
சேரிக்கப்பட்ட கலைப்பொருள்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட வேதியியல் கூடம் அமைந்துள்ள ஒரு சில அருங்காட்சியகங்களுள் சாலர்சங்கு அருங்காட்சியகமும் ஒன்றாகும். மிகக்குறுகிய காலத்திலேயே சாலர்சங்கு அருங்காட்சியகம் இந்தியாவின் முதன்மையான அருங்காட்சியகங்களுள் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
{{Right|<b>என்.அ.</b>}}
<section end="சாலர்சங்கு அருங்காட்சியகம்"/>
<section begin="சாலிகுண்டம்"/>
{{dhr}}
{{larger|<b>சாலிகுண்டம்</b>}} ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சிரீகாகுளம் மாவட்டத்தில் உள்ளதோர் தொன்மை-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 849
|bSize = 480
|cWidth = 323
|cHeight = 197
|oTop = 366
|oLeft = 84
|Location = center
|Description =
}}
{{center|சாலிகுண்டம்}}<noinclude></noinclude>
642nuaso6gdwvowyg2otj2rypcmaogu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/850
250
651686
1958718
2026-08-19T16:57:06Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யான ஊர். சாலிகுண்டம் வம்சதாரா ஆற்றின் கரையில் பண்டைய கலிங்கப் பட்டணத்திற்கு 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பௌத்தமதத் தொடர்புடைய இவ்வூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாலிசுபரி பிரபு|824|சாலிசுபரி பிரபு}}</noinclude>யான ஊர். சாலிகுண்டம் வம்சதாரா ஆற்றின் கரையில் பண்டைய கலிங்கப் பட்டணத்திற்கு 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பௌத்தமதத் தொடர்புடைய இவ்வூருக்கு கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் யுவான் சுவாங்கு வந்தார். பௌத்தமதம் இப்பகுதியில் வளர இவ்வூர் பெரிதும் உதவி புரிந்தது. இங்கு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இவ்வூரின் தொன்மை வெளிப்படுத்தப்பட்டது. இவ்வூரின் தொன்மையை முதன்முதலில் ஆந்திரப்பிரதேச தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளும் பௌத்தமதத் தொடர்புடைய எச்சங்களும் அறிஞர்கள் இவ்வூரின் தொன்மையை நன்கு அறிய ஆர்வம் ஏற்படச் செய்தன.
இவ்வூரில் நடந்த அகழாய்வுகளில் பௌத்தத் தூபிகள், விகாரங்கள், சைத்தியங்கள் ஆகியவற்றுடன் பௌத்தமதச் சின்னங்களும் வெளிப்பட்டன. அவற்றுடன் கறுப்பு சிவப்பு மட்கலன்கள், அடுக்கிய சுழல் மட்கலன் (Rouletted ware), சுடுமன் பொம்மைகள், சாதவாகனர் கால நாணயங்கள், எழுத்துப் பொறிப்புக் கொண்ட சங்குகள், மாவுக்கல்லால் செய்யப்பட்ட முத்திரை, பூரி-குசானர் நாணயம், மணிகள் போன்றவையும் கிடைத்தன. அடுக்கிய சுழல் மட்கலத்துண்டு ஒன்றில் பாம்மனசா (Bhammanasa) என்ற எழுத்துப் பொறிப்புக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும். சாலிகுண்டம் அகழாய்வில் இவ்வூரில் மூன்று பண்பாட்டுக் காலம் இருத்தன என்பது வரையறுக்கப்பட்டது. முதல் பண்பாடு கி.மு. 2, 3–ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1–ஆம் நூற்றாண்டு வரையிலும் இரண்டாம், பண்பாட்டுக்காலம் கி.பி. 1–ஆம் நூற்றாண்டிலிருந்து 3, 4–ஆம் நூற்றாண்டு வரையிலும், மூன்றாம் பண்பாட்டுக் காலம் கி.பி. 4, 5–ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7, 8–ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆகும் எனத் தொல்லியல் அறிஞர்கள் பகுத்துள்ளனர்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சாலிகுண்டம்"/>
<section begin="சாலிசுபரி பிரபு"/>
{{dhr}}
{{larger|<b>சாலிசுபரி பிரபு:</b>}} சாலிசுபரி பிரபு என்று இங்கிலாந்தின் வரலாற்றில் சொல்லப்படும் இவ்வரசியல் மேதையின் இயற்பெயர் இராபர்ட்டு ஆர்தர் தால்பட்டு காசுகொய்ன் செசில் (Robert Arthur Talbot Gascoync Cecil) என்பதாகும். எலிசபெத்துப் பேரரசியிடம் அமைச்சராய் இருந்த வில்லியம் செசில் (William Cecil) என்ற பர்லி பிரபு (Lord Burleigh) இவர் முன்னோராவார். இராபர்ட்டு செசில் கி.பி. 1830–இல் பிறந்தார். இவர் ஆக்சுபோர்டில் பயின்றார். இவர், தம் 24–ஆம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானார். நாடாளுமன்றத்தில் மக்கள் அவையின் உறுப்பினரான இவர் எதிர்க் கட்சியினரான விக்குக் கட்சியினரையும் அவர் தம் கொள்கைகளையும் கடுமையாகத் தாக்கிப் பேசுவார். இவர் கி.பி. 1868–இல்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 850
|bSize = 480
|cWidth = 92
|cHeight = 110
|oTop = 91
|oLeft = 300
|Location = center
|Description =
}}
{{center|சாலிசுபரி பிரபு}}
மேலவையான பிரபுக்கள் சபையில் உறுப்பினர் பதவி ஏற்றார். இவ்வாண்டில் தான் சாலிசுபரி பிரபு (Marquis of Salisbury) என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. திசுரேலி (Disraeli) தலைமை அமைச்சராய் இருந்தபோது கி.பி. 1874 முதல் 1878 வரையில் இவர் இந்திய அலுவல்களுக்குரிய அமைச்சராய் இருந்தார். பின்னர் இவர் கி.பி. 1880 வரை வெளியுறவு அமைச்சராய் இருந்தார். திசுரேலி கி.பி. 1881–இல் இறந்தார். அதன்பின் சாலிசுபரி பிரபு பழமைப் பற்றாளர் கட்சியின் (Conservative partj) தலைவரானார். கிளாட்சுடன் (Gladstone) அமைச்சரவை கி.பி. 1885–இல் பத விலகியபோது சாலிசுபரி பிரபு தலைமை அமைச்சராகத் தமது முதல் அமைச்சரவையை அமைத்தார். ஆனால் அடுத்த ஆண்டில் நடந்த தேர்தலில் கிளாட்சுடன் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சரவையை அமைத்தார். கிளாட்சுடன் கி.பி. 1886–இல் தோல்வி அடைந்தபோது சாலிசுபரி பிரபு இரண்டாம் முறையாகத் தலைமை அமைச்சரானார். இவர் தோரிக் (Tory) கட்சியினராக இருந்தபோதிலும் முற்போக்குக் கட்சியின் (Liberal party) கொள்கைகளை, நாட்டிற்கு நலம் பயப்பனவாக இருந்தபோது ஏற்றுக் கொள்பவராய் இருந்தார். அக்காலத்தில் இவர் இலவசத் தொடக்கக் கல்வியைக் குழந்தைகளுக்கு வழங்கினார். கிராமப்புறங்களில் சுய நிர்ணய ஆட்சியை ஏற்படுத்தினார். இவரது பதவிக் காலத்தில் தொழிலாளர்களால் சமதருமக் கோட்பாடு (Socialistic Principles) வன்முறை அடிப்படையில் பின்பற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்ட போது இவரால் அதைத் தடுக்க இயலவில்லை.
வல்லரசி விக்டோரியாவின் கடைசிக் காலத்தில் அவரது துணையாய் நின்ற சாலிசுபரி பிரபு உள்நாட்டில் சிறந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வர-<noinclude></noinclude>
5h57diutk20p03unuxwqqi0jocmb0k5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/851
250
651687
1958719
2026-08-19T17:19:22Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வில்லை. ஆனால் இவரது வெளிநாட்டுக் கொள்கைகள் இவருக்கும் பேரரசி விக்டோரியாவுக்கும் பெருமை தேடித் தந்தன. குடியேற்ற ஆதிக்க (Colonial Supremacy) உணர்வு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாலியச் சட்டம்|825|சாலியன்...}}</noinclude>வில்லை. ஆனால் இவரது வெளிநாட்டுக் கொள்கைகள் இவருக்கும் பேரரசி விக்டோரியாவுக்கும் பெருமை தேடித் தந்தன. குடியேற்ற ஆதிக்க (Colonial Supremacy) உணர்வு ஆங்கிலேயரிடம் கிளர்ந்தெழுந்தபோது அதற்குச் செயல் வடிவம் கொடுத்தவர் இவரே எனலாம். ஆப்பிரிக்க நாடுகளில் கனி வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டபின் அங்குத் தமது மூன்றாம் பேரரசை (Third Empire) ஆங்கிலேயர்கள் ஏற்படுத்துவதற்கு இவர் உதவினார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஏற்பட்ட எல்லைத் தகராற்றில் ஆங்கிலேயருக்குச் சாதகமான முடிவு கிடைத்தது. ஐரோப்பியச் சக்திகள் சூடான் பகுதியைக் கைக்கொள்வதில் தீவிரம் காட்டினாலும் முடிவில் இங்கிலாந்தும் எகிப்தும் தம் எண்ணங்களை ஈடேற்றின. போயர் போரின் (1899–1902) இறுதியான முடிவுகள் இங்கிலாந்தின் கைகளை வலுப்படுத்தின. சீனாவில் ஏற்பட்ட பக்சார் கலகத்தை (Buxar Rebellion) அடக்குவதில் பிரிட்டன் பெரும் பங்காற்றியது. அதற்குரிய பொருளாதாரப் பலன்களையும் அது பெற்றது. இவ்விதம் வெளிநாடுகளில் இங்கிலாத்தின் ஆதிக்கத்தை வலுப்பெறச் செய்த சாலிசுபரி பிரபு 1902-இல் தமது பதவியை விட்டு விலகினார்.
{{Right|<b>நா.அ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>அநுமந்தன், கி.ர.</b> பிரிட்டன் வரலாறு, தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1970.
<b>Warner & Martin,</b> The Ground work of British History II, Blackie & son Ltd., London, 1938.
<section end="சாலிசுபரி பிரபு"/>
<section begin="சாலியச் சட்டம்"/>
{{dhr}}
{{larger|<b>சாலியச் சட்டம்:</b>}} இடைக்காலத்தில் செருமனியில் வடகடலுக்கு அருகில் இரைன் (Rhine) ஆற்றுப்பகுதியில் சாலியன் பிராங்குகள் (Salian Franks) வாழ்ந்து வந்தனர். அவர்களும் பிற செருமானியக் குடும்பத்தினரும் பின்பற்றிய சட்டத் தொகுப்பே சாலியச் சட்டம் (Salic Law) எனப்படுகிறது. இது செருமனியின் மிகத் தொன்மையான சட்டத் தொகுப்பாகும். இதல் பழங்காலச் சாலியன் பிராங்குகளின் பழக்க வழக்கங்களைக் காணலாம். பின்னர் அவ்வப்போது வழக்கத்திற்கு வந்தவை, திருத்தி அமைக்கப்பட்டவை, விரிவாக்கப்பட்டவை, புதுப்பிக்கப்பட்டவை ஆகியவையும் இதில் சேர்க்கப்பட்டன. இது முதன் முதல் கி.பி. 500க்கு முன்னர்த் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும், பின்னர்ப் புதுப்பிக்கப்பட்டதில் கி.பி. 800 வரையுள்ள சட்டங்கள் சேர்க்கப்பட்டன. இச்சட்டத் தொகுப்புடன் மல்பர்சியன் இணைப்பு (Malbergian glosses) என்ற பகுதியும் உள்ளது.
<b>பேரரசர் சார்லமேன்:</b> கி.பி. 768–ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிராங்குகளின் மிகச் சிறந்த அரசரான சார்லமேன் அல்லது பேரரசர் சார்லசு இச்சட்டத்தை மாற்றியமைத்து, பிற்சேர்க்கையை நீக்கி, இடைச் செருகல்களைத் தவிர்த்து, சிலவற்றைச் சேர்த்துத் தம்முடைய சட்டத்தை வெளியிட்டார். ஒறுப்புச் சட்டமான (Penal code) இது, குற்றங்களுக்கான ஒறுப்புக் கட்டணம் பற்றிய நீண்டதொரு பட்டியலைக் கொடுக்கின்றது. மற்றும், இதில் வேளாண்மை, தொழில்கள், நிதி, கடன் கொடுத்தல், வட்டி, கல்வி, சமயம், அடிமைமுறை ஆகியன பற்றிய சட்டங்களும் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது அரசகுலப் பெண்களின் வாரிசுரிமை பற்றிய
சட்டமாகும்.
மேற்கு ஐரோப்பாவில் பிராங்குகளின் ஆதிக்கம் ஏற்பட்டிருந்ததால் அங்குச் சாலியச் சட்டம் செல்வாக்குப் பெற்றிருந்தது. பின்னர்த் தோன்றிய சாமாவியன் (Chamavian) முதலிய பிராங்குகளின் சட்டத் தொகுப்புகளுக்கும் இது அடிப்படையாக அமைந்தது. பிற்காலத்தில் செருமனியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களிலும் இதன் செல்வாக்கைக் காணலாம். இத்தாலியில் வாழ்ந்து வந்த பிராங்குகளும் இதனைப் பின்பற்றினர்.
<b>பெண் வாரிசுரிமை:</b> குறிப்பாக இச்சட்டத்தின்படி ஒரு அரசரின் பெண்வழியில் வந்தவர்கள் அரசு கட்டில் ஏறும் உரிமை அற்றவராயினர். பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் பிரான்சில், பெண்களை அரசுரிமையிலிருந்து விலக்க இது பயன்படுத்தப்பட்டது. இது கி.பி. 1593–ஆம் ஆண்டு அந்நாட்டின் அடிப்படைச் சட்டமாக ஆக்கப்பட்டது. இச்சட்டம் இசுபெயின் (Spain) நாட்டிலும் கி.பி. 1713–ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டது. இங்கிலாந்து அரசர்கள் அனோவர் (Hanover) நாடு மீது உரிமை பெற்று இரண்டையும் சேர்த்து ஆண்டு வந்தனர். ஆனால், விக்டோரியா இங்கிலாந்தின் பேரரசியாகப் பதவியேற்றபொழுது அனோவரில் இச்சட்டம் செயற்படுத்தப்பட்டு, இங்கிலாந்திடமிருத்து பிரிக்கப்பட்டுப் பேரரசியாரின் உறவினருக்கு அளிக்கப்பட்டது.
{{Right|<b>சி.இரா.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>David Walker,</b> The Oxford Companion to Law, Clarendon Press, Oxford, 1980.
<section end="சாலியச் சட்டம்"/>
<section begin="சாலியன் வாலாபாகுப் படுகொலை"/>
{{dhr}}
{{larger|<b>சாலியன் வாலாபாகுப் படுகொலை:</b>}} பஞ்சாபின் தலைநகரான அமிர்தசரசில் உள்ள சாலியன் வாலாபாகில் (Jalianwala Bagh) 1919–இல் நிகழ்ந்த படுகொலை இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்கதோர் இடத்தைப் பெற்றுள்ளது. ஆங்கிலப்படைத் தளபதி தையர் (Dyer) என்பான் அமைதியாகக் கூடியிருந்த மக்கள் மீது மிருகத்-<noinclude></noinclude>
352ewgux8mywou4pkee500d3sx1dy9s
அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf
252
651688
1958722
2026-08-20T02:12:18Z
Neyakkoo
7836
இணைப்பு
1958722
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=சுதனும் மதனும் சுனாமியும்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:இரா. அரிகரசுதன்|இரா. அரிகரசுதன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:சிறுவர் இலக்கிய அட்டவணைகள்]]
0dcamihlx6jy9pe4jpqkm0419b5eg95
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/825
250
651689
1958743
2026-08-20T06:46:26Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘தன்மாத்திரை’ என்றால் தன் அளவில் குணங்கள் வெளிப்படாமல் நிற்பது என்பது பொருள். சைவசித்தாந்தத்தில் குணங்களின் தொகுதி பொருள் எனக் கூறப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவங்கள்|797|தத்துவங்கள்}}</noinclude>‘தன்மாத்திரை’ என்றால் தன் அளவில் குணங்கள் வெளிப்படாமல் நிற்பது என்பது பொருள். சைவசித்தாந்தத்தில் குணங்களின் தொகுதி பொருள் எனக் கூறப்படும். தன்மாத்திரைகள் அனைத்தும் குணங்களின் தொகுதி ஆதலால் அவை பொருள்களாகின்றன.
இடம் கொடுத்தலாகிய தொழில் குணத்தையும் வல்லோசை, மெல்லோசை முதலிய ஓசைகளாகிய பண்புகளையும் உள்ளடக்கிப் பொதுமையில் ஓசை மாத்திரையாய்ச் சூக்குமமாய் நிற்பது ஒலித்தன் மாத்திரை ஆகும். ஓசையோடு கூடத் தட்பம், வெப்பம் முதலிய குணங்களை உள்ளடக்கி நிற்பது ஊறுத் தன்மாத்திரை ஆகும். ஓசை, தட்பம், வெப்பம் முதலியவற்றோடு வெண்மை, செம்மை முதலிய குணங்களையும் உள்ளடக்கி நிற்பது ஒளித் தன்மாத்திரை ஆகும்.
ஓசை, தட்பவெப்பம், வெண்மை, முதலியவற்றோடு கூடத் தித்திப்பு, புளிப்பு முதலியவற்றை உள்ளடக்கி நிற்பது சுவைத் தன்மாத்திரை ஆகும். ஓசை, தட்பவெப்பம், வெண்மை, செம்மை, தித்திப்பு, புளிப்பு முதலியவற்றோடு கூட நறுநாற்றம், தீநாற்றம் முதலிய நாற்றங்களை உள்ளடக்கி நிற்பது நாற்றத் தன்மாத்திரை ஆகும்.
<b>ஞானேந்திரியங்கள் (அறிகருவிகள்)</b>: காது, தோல், கண், நாக்கு, மூக்கு ஐந்தும் என்னும் ஞானேந்திரியத் தத்துவங்களாகும். இவை உடலின் கண் உள்ள கருவிகளாகும். இவற்றை அறிகருவிகள் என்று தமிழ் நூலார் கூறுவர். இந்த ஐந்து நாற்றம் கருவிகளும் முறையே ஓசை, ஊறு, ஒளி, சுவை, என்னும் ஐந்தையும் உயிர் அறிவதற்குக் கருவியாகப் பயன்படும்.
காது ஒலியைக் கேட்கிறது. தோல் ஊற்றுணர்வை அறிகிறது. கண் பொருள்களைக் காண்கிறது. நாக்கு சுவையை அறிகிறது. மூக்கு மணத்தை நுகர்கிறது. காது, தோல், கண் முதலிய உடலமைப்புகளை வெளிப்பொறிகள் என்றும், அவை அறிகின்றனவற்றைப் புலன்கள் என்றும் கூறலாம். பொறிகள் தாமே புலன்களை அறியமாட்டா. இப்பொறிகளின் வேறாய் இவற்றைச் செலுத்தி நிற்கும் உள் இந்திரியங்கள் அல்லது புலன்கள் ஐந்து உண்டு. அவற்றை ஞானேந்திரிய தத்துவங்கள் எனச் சொல்வதுண்டு. ஆனால், அவ்விந்திரியங்கள் செயற்பட இப்பொறிகளும் நன்னிலையில் இருக்க வேண்டுமாதலால், இரண்டையும் சேர்த்தே ஞானேந்திரியங்கள் எனக் கொள்ள வேண்டும். மேலும் மனம் சேர்ந்தால் இப்பொறிகள் சிறப்பு வகையாகப் பொருள்களை அறியும். மனம் சேராவிட்டால் பொதுவகையாக அறியும்.
<b>கன்மேந்திரியங்கள் (தொழிற் கருவிகள்)</b>: வாய், கால், கை, எருவாய், கருவாய் ஆகிய ஐந்தும் கன் மேந்திரியம் எனப்படும். இவற்றைத் தொழிற் கருவிகள் எனத் தமிழ் நூலார் கூறுவர். இக்கருவிகல் உயிர் தொழிற்படுவதற்குப் பயன்படும். வாய் பேசும், கால் நடக்கும், கை கொடுக்கும், வாங்கும் கை இந்திரியம் உடலின் பாகங்களிலும் மற்றப் விரவி நிற்கும். கண் இமைத்தல், புருவம் நெறித்தல் முதலியன கை இந்திரியத்தின் தொழிற்பாடாகவே கொள்ளப்படும். எருவாய் கழிவுப் பொருளைக் கழிக்கும். கருவாய் இனப்பெருக்கம் செய்யும்.
நாக்கு சுலை அறிவதால் ஞானேந்திரியமாயிற்று, அதுலே பேசுதலாகிய தொழிலைச் செய்வதால் கன்மேந்திரியமும் ஆயிற்று. நாக்கு வாயாகிய இடைவெளி இல்லாது பேச முடியாதாகையால் அது கன் மேந்திரியமாகக் குறிப்பிடப்படும்போது வாய் என்று சொல்லப்படுகிறது. ஞானேந்திரியங்களாகிய செவி, தோல், கண், நாக்கு, மூக்கு, ஆகியவற்றையும் சோத்திரம், துவக்கு, சட்சு, சிக்குவை, ஆக்கிராணம் என்று வட நூலார் சொல்வர். இவற்றின் புலன்களைச் சத்தம். பரிசம், உரூபம், இரசம், சுந்தம் என்பர். கன்மேந்திரியங்களை வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்றும், அவற்றின் தொழிற்பாடுகளை வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் என்றும் வடமொழியில் சொல்வர்.
<b>அந்தக் கரணம் நான்கு</b>: மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும் அந்தக் கரணத் தத்துவங்களாகும். அந்தர்+கரணம் என்பது அந்தக் கரணம் என்று சேர்ந்து உள்கருவி என்னும் பொருளைத் தரும்.
ஞானேந்திரியம், கன்மேந்திரியம் ஆகியவை உடலின் வெளியே கண்ணால் பார்க்கும்படியாக அமைய, உட்கரணம் கண்ணால் பார்க்க இயலாமலுள்ளது. ஆனால் கருத்தால் உணரும்படியாக மைந்துள்ளது. ஒரு பொருளைப் பாரிக்கும்போது இதுவோ அதுவோ என்னும் ஐயம் எழுகிறது. பார்த்த பொருளைக் கண்டு ‘இன்னது என அறிய முயல்வேன்’ என்னும் ஓர் எழுச்சி தோன்றுகிறது. இந்த எழுச்சி அகங்கார தத்துவம் எனப்படும். ஒருவர் ஒரு செயலைச் செய்ய எண்ணி அப்புறம் செய்யாமல் விட்டுவிட்டாரானால் அவர் அகங்கார தத்துவம் வலிமையாக இல்லை என்பது பொருள். முனைப்போடு செயலாற்றத் துணிவது அகங்கார தத்துவத்தின் தொழிற்பாடாகும்.
{{nop}}<noinclude></noinclude>
cdq1p0wiwyj2d4wzz6s7suuhv2dgvha
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/826
250
651690
1958744
2026-08-20T06:57:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு பழத்தைப் பழம் என எவ்வாறு காண்பது? அகங்கார தத்துவம் எழுச்சியை உண்டாக்க, அப்போது பழத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்ணை அடைகின்றன...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவங்கள்|798|தத்துவநாதர்}}</noinclude>ஒரு பழத்தைப் பழம் என எவ்வாறு காண்பது? அகங்கார தத்துவம் எழுச்சியை உண்டாக்க, அப்போது பழத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்ணை அடைகின்றன. ஒளிக்கதிர்கள் கண்ணை அடைவதை மனம் பற்றும். அகங்காரம், மனம் ஆகிய தத்துவங்களின் தொழிற்பாட்டால், சங்கற்ப விகற்பம் செய்யும்போது (அதாவது இதுவோ அதுவோ என்று ஐயப்படும்போது), புத்தி தத்துவம் பழம் என்று நிச்சயிக்கும். புத்தி தத்துவம் பொருளை நிச்சயிப்தற்கு. அது இன்ன பொருள் என்று அறியச் சித்தத்தின் செயற்பாடு தேவைப்படுகிறது. சித்தம் என்பது நினைவுகளின் தொகுப்பு. பார்க்கப் படும்பொருள் என்ன என்பது சித்தத்திடம் கேட்கப்பட, சித்தம் இன்ன பொருள் இப்படியிருக்கும் என்று நினைவிலிருந்து தெரிவிக்க, அப்போது ஆன்மா புத்தி தத்துவத்தில் மூலம் நிச்சயிக்கும். இதுவரை கண்ட இருபத்து நான்கு தத்துவங்களும் ஆன்ம தத்துவங்கள் எனப்படும். இறைவன் சீகண்டருத்திரர் வாயிலாகப் பிரகிருதி மாயையில் இருந்து இவற்றைத் தோற்றுவிப்பர்.
குண தத்துவத்தில் உள்ள சத்துவ குணம், இராசத குணம், தாமத குணம் ஆகிய மூன்றும் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கிலும் கலந்திருக்கும். உலகம் முக்குண மயம் என்று சொல்லப்படும். எடுத்துக்காட்டாகக் காற்று மென்மையாக வீசும் போது சத்துவ குணத்தோடு அது கலந்து நிற்கிறது எனக் கொள்ள வேண்டும். சண்ட மாருதமாக வீசும்போது இராசத குணத்தோடு அது கலந்து நிற்கிறது எனக் கொள்ள வேண்டும். காற்றே வீசாமல் புழுக்கமாக இருக்கும்போது தாமத குணத்தோடு அது கலந்து நிற்கிறது எனக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தத்துவத்திலும் அவ்வப்போது காணப்படும் குண நிலையை வைத்து இன்ன குணம் மிகுந்திருக்கிறது என அறியலாம்.
<b>அசுத்த மாயா கருவிகள்</b>: காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என அசுத்த மாயாதத்துவங்கள் ஏழாகும். இவற்றை வித்தியா தத்துவங்கள் என்றும் சொல்லலாம். இறுதியாக உள்ள மாயை, காலம் நியதி முதலிய தத்துவங்களுக்குத் தாயாக விளங்குவதால் அதனைக் காரணமாக வைத்து ஏனையவற்றைக் காரியமாகக் கொண்டு சாத்திரங்கள் விளக்கும். அதனால்தான் அவை காரியத்துள் சேர்க்கப்படாமல் இறுதியில் தனியே வைக்கப்பட்டுள்ளன.
<b>காலம்</b>: காலம் கண்ணால் காண இயலாவிடினும் நேற்று, இன்று, நாளை என மூவகையாக உணரப்படுகிறது. இவை இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என்றும் சொல்லப்படுகின்றன.
<b>நியதி</b>: நியதித் தத்துவம் அவரவர் செய்த வினையை அவரவரே அனுபவிக்ககும்படி செய்வதோடு எவ்வாறு அனுபவிக்கவேண்டும் என்பதையும் வரையறுக்கும். இன்ன வினைக்கு இன்ன பயன் என்பதை நியதித்தத்துவத்தைக் கொண்டுதான் இறைவனின் திருவருட் சக்தி நிருணயம் செய்கிறது.
<b>கலை</b>: முதல் முதல் ஆன்மா எவ்வித இயக்க முமின்றி ஆணவமலத்துன் கிடக்கும்போது இறைவன் ‘கலை’ என்னும் கருவியைப் படைத்து ஆன்மாவுக்கு அளிக்கிறான். அல்கருவி ஆன்மாவின் கிரியா சத்தியை எழுப்புகிறது. கலை என்பதற்கு நீக்குதல், செலுத்துதல் என்னும் இருபொருள்கள் உண்டு. ஆன்மாவின் கிரியா சத்தியை மறைத்திருந்த ஆணவ மலத்தைச் சிறிது நீக்கி அதனைச் செலுத்துதல் ‘கலை’யின் தொழிலாகும்.
<b>வித்தை</b>: கலையால் கிரியா சக்தி விளங்கப் பெற்ற ஆன்மா வித்தை என்னும் கருவியால் ஞான சக்தி விளங்கப்பெறுகிறது. வித்தை புத்தி தத்துவத்திற்கு உட்கருவியாய் விளங்குகிறது.
<b>அராகம்</b>: அராகம் என்றால் விருப்பம் என்று பொருள். ஆன்மாவின் இச்சா சக்தியை அராக தத்துவம் எழுப்புகிறது. மனம் ஆசைப்படும் கருவியாதலால் அராக தத்துவம் மனத்திற்கு உட்கருவியாக விளங்குகிறது.
காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்ற ஐந்து தத்துவங்களும், ஐந்து சட்டைகளைப் போல் மனிதனுக்கு அமையும் நிலையில் ஆன்மா புருட தத்துவம் என்னும் பெயர் பெறுகிறது. நுகர்வோனாகும் தன்மையில் நுகரப்படும் பொருளாக உள்ளது. வித்தியா தத்துவத்தின் இறுதியில் உள்ள மாயை என்பது.
ஆன்மதத்துவங்களை இயக்கும் சிவதத்துவம் உடலில் தசைமடண்லத்தை இயக்கும் நரம்பு மண்டலம் போன்றுள்ளது. இத்தத்துவம் சிவம், சக்தி, சாதாக்கியம், ஈசுரம் ஆகிய அனைத்தையும் இயக்கும்.{{Right|<b>ச.க.</b>}}
<section end="தத்துவங்கள்"/>
<section begin="தந்துவநாதர்"/>
{{dhr}}
<b>தந்துவநாதர்</b> என்பவரைச் ‘சீகாழித் தத்துவநாதர்’ எனவும் கூறுவர். இவர், துகளறு போதம் இயற்றிய சீகாழிச் சிற்றம்பல நாடிகளின் மாணவர். மெய்கண்ட சாத்திரம் பதினான்கனுள் ஒன்றாய இருபா இருபதுக்கு ஒரு சிறந்த உரை எழுதியிருக்கிறார். இருபா இருபது உரை எழுதினோன்...... சிற்றம்பல நாடி தாள் பணிவோன் சண்பை நகர<noinclude></noinclude>
dldqouyh72sy7jv2zsg886nfmq57w5n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/827
250
651691
1958745
2026-08-20T07:37:57Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தத்துவநாதன்’ என்னும் பழஞ்செய்யுட் பகுதியிலிருந்து இவ்வுண்மைகள் நன்கு விளங்கும், இவர் காலம் சிற்றம்பல நாடிகள் காலத்தை ஒட்டியதாதலீன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவப் பிரகாசம்|799|தத்துவப் பிரகாசர்}}</noinclude>தத்துவநாதன்’ என்னும் பழஞ்செய்யுட் பகுதியிலிருந்து இவ்வுண்மைகள் நன்கு விளங்கும், இவர் காலம் சிற்றம்பல நாடிகள் காலத்தை ஒட்டியதாதலீன் கி.பி.1350-75 ஆகலிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
பதினான்கு சாத்திரங்களுள் ஒன்றாய உண்மை நெறி விளக்கம் என்னும் நூலையும் இத்தத்துவநாதரே இயற்றினார் எனச் சிலர் கூறுவர். ஆனால் இதுகாறும் வெளிவந்த பதிப்புகள் எல்லாவற்றிலும் உமாபதி சிவாசாரியாரே சித்தாந்த நூல்கள் எட்டு இயற்றினார் என்றும், அவை ‘சித்தாந்த அட்டகம்’ என்று சுருதப்படுமென்றும், அவ்வட்டகத்துன் ஒன்று உண்மை நெறி விளக்கம் என்றும் காணப்படுகின்றமையை யாவரும் உணர்வர்.
இத்தத்துவ நாதர் இருபா இருபதுக்கு எழுதிய உரை காலத்தால் மிகவும் பழமையான உரையாகும். இவ்வுரைக்கு முன்னரே இந்நூலுக்கு ஒரு பழைய உரை இருந்திருக்க வேண்டுமென்பது இவர் உரையிலிருந்து தெரிகிறது. தத்துவநாதர் தம் உரையில், முன்னோர் இயற்றிய பல சாத்திர நூல்களிலிருந்து மேற்கோள்கள் பல கொடுத்திருக்கிறார். அந்நூல்களுன் சில இப்போது கிடைக்கவில்லை. அதனால், பழைய நூல்களின் பெயர்கள் சிலவற்றை அறிந்து கொள்ளவும் இவர் உரை துணை செய்கிறது.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="தந்துவநாதர்"/>
<section begin="தத்துவப் பிரகாசம்"/>
{{dhr}}
<b>தத்துவப் பிரகாசம்</b>: தத்துவப்பிரகாசம் என்னும் நூல் சீகாழித் தத்துவப் பிரகாசரால் இயற்றப் பெற்றது. இந்நூலாசிரியர் சீகாழிச் சிற்றம் பல நாடிகளின் மாணவர்; இவர் காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டு; இந்நூலுக்கு இவர் மாணவரே உரை செய்திருக்கிறார், தத்துவம் என்பது தத்துவம் (பாசம்), ஆன்மா, சிவன் என்னும் மூன்று பொருள்களையும் குறிக்கும். ஆகவே, இம்முப்பொருள்களையும் விளக்கவல்லது இந்நூல் என்பது தெளிவாம்; மேலும் சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றி விளக்கிக் கூறவல்ல சிறந்த நூலாகவும் திகழ்கிறது. இந்நூலில் 338 திருவிருத்தங்கள் உள்ளன. முதல் 304 பாக்கள் எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருந்தங்களாகவும் எஞ்சியவை அறுசீர்க்கழி நெடிலடி விருத்தங்களாகவுமுள்ளன. இறுதியாக நூற் சிறப்புப் பாயிரம் என ஒரு செய்யுளை உரையாசிரியர் பாடிச் சேர்த்திருக்கிறார். முதலாவது பாயிரத்தில் கடவுள் வாழ்த்துச் செய்யுள்களும் அவையடக்கமுமாக எட்டுச் செய்யுள்கள் உள்ளன. இரண்டாவது அளவை எனும் பகுதியில் 9 பாடல்களில் 7 அளவைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பின்னர், பதி இலக்கணம் 19 பாடல்களிலும், பசு இலக்கணம் 5 பாடல்களிலும், பாச இலக்கணம் 16 பாடல்களிலும் கூறப் பெறுகின்றன. பின் பொதுவிதி என சரியையிற்சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம், கிரியையில் சரியை, கிரியையில் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம், யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம், ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என 16 பிரிவுகளைப் பற்றி 111 பாடல்களில் விளக்கியுள்ளார். அக்கினி காரியம், போசனவிதி, நிவேதன விதி, தீக்கை விதி, ஆசாரியின் இலக்கணம், சீடன் கணம், பூசை விதிகள், பல்வகைப் பட்ட தீக்கை முறைகள், அபிடேக விதி, அந்தியேட்டி விதிகள் முதலியன வெல்லாம் கிரியைப் பகுதிகளில் மிகவும் சிறப்பாக விளக்கம் பெற்றுள்ளன. அடுத்து ஞானத்தில் ஞானப் பகுதியில் மேலும் 74 பாடல்களில் பல்வேறு வகையான சமயக் கொள்கைகளையும் அவற்றிற் குரிய மறுப்புகளையும் காணலாம். பின்னர் 30 அவதாரம் சொல்லப் பெறுகிறது. அவற்றில் சிவன் முத்தி நிலையில் இருக்கும் ஆன்மா அந்நிலையில் நின்று வழுகிய காலத்து மீண்டும் அந்நிலைக்குச் செய்யத் தலைப்படுங்கால் முப்பொருள்களின் உண்மை நிலையை உணர்ந்து மேல் நோக்கிச் செல்லும் நெறியில் உள்ள 30 படிமுறைகள் சொல்லப்பெறுகின்றன. சுத்தாவத்தையில் நிகழ்வுறும், பின் நிட்டை வகைகள் கூறப் பெறுகின்றன. ஞானி ஞான நிட்டையிலிருக்கும் நிலையும் கூறப் பெறுகிறது. அவருக்கு வினைப்பயன் ஏறாது. ஆதலின் சிவயோகத்து அழுந்துதலால் பாச நீக்கம் கிட்டும். பாசம் நீங்குவதால் மலம் நீங்கிச் சிவப்பேறு சித்திக்கும். இறுதியாகச் சீவன் முத்தி நிலையும் குருலிங்க சங்கம வழிபாடும் கூறுவதுடன் இந்நூல் முடிகின்றது. இந்நூல் நந்தியருள் நூல், சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், ஆகம நூல்கள் என்பவற்றையே முதனூல்களாகக் கொண்டு அவற்றின் வழி நூலாக விளங்குகின்றது. சந்தான ஆசாரியர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சிறந்த சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் தலையிடத்தை பெறும் தருதி வாய்ந்தவற்றுள் இந்நூலும் ஒன்று என்பது தெளிவு. ‘தன்னை அறிவிக்கும் தற்போதம் மாற்றுவிக்கும் அன்ன அருள் ஆனந்தம் ஆற்றுவிக்கும் மன்னிய சீர்த் தத்துவப்ரகாசனியல் சண்பையார் கோன் உரைத்த தத்துவப்ரகாச நூல் தான்’ என்னும் நூற் சிறப்புப் பாயிரமே இந்நூலின் பெருமையை நன்கு விளக்கவல்லதாயுளது.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="தத்துவப் பிரகாசம்"/>
<section begin="தத்துவப் பிரகாசர்"/>
{{dhr}}
<b>தத்துவப் பிரகாசர்</b>: இவர் சீர்காழிச் சிற்றம் பல நாடிகளின் மாணவர். தத்துவப் பிரகாசம் என்னும் ஒரு சிறந்த சாத்திர நூல் இயற்றியவர் தத்துவப் பிரகாசர் என்னும் பெயர் வாய்ந்தவர்கள்<noinclude></noinclude>
tg937jl3log4w7f0sn7c76rq33or45m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/828
250
651692
1958746
2026-08-20T07:52:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நால்வர் இருந்தனர் என்றும் அவர்களுள் தத்துவப் பிரகாசம் இயற்றியவரைக் காழித் தத்துவப் பிரகாசர் என்று அழைக்கும் மரபுண்டு என்றும் நூல்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவ போதகர்|800|தத்துவமசி}}</noinclude>நால்வர் இருந்தனர் என்றும் அவர்களுள் தத்துவப் பிரகாசம் இயற்றியவரைக் காழித் தத்துவப் பிரகாசர் என்று அழைக்கும் மரபுண்டு என்றும் நூல்கள் வாயிலாய் அறிய முடிகின்றது.
தத்துவப் பிரகாசம் என்னும் நூல் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் விளக்கிக் கூறுகிறது. மேலும், சரியை, சரியையில் சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என்றவாறு ஒவ்வொன்றும் நன் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டு 16 உட்பாதங்களையுடையதாய் 337 திருவிருத்தங்களைக் கொண்டதாய் விளங்குகிறது. பரசமய உட்சமய பேதங்கள் 48 என்பதனையும் சித்தாந்த பேதம் 8 என்பதின் விளக்கங்களையும் இந்நூலில் காணலாம். சரியை, கிரியை, யோக பாதங்களை விளக்கிக் கூறும் தமிழ் நூல்களுள் இது சிறந்த இடத்தைப் பெற்றுளது. யோகப் பிரிவில் 108 ஆசனங்கள் பற்றியும் 108 வகை பிராணாயாமங்கள் பற்றியும் விளக்கங்கள் காணப்படுகின்றன. ‘தத்துவங்கட்கும் ஆன்மாவுக்கும் சிவனுக்கும் தத்துவம் என்ற பெயராதலால் நூலின் பெயர் தத்துவப் பிரகாசம் ஆயிற்று’ என்று இந்நூலின் உரையாசிரியர் குறிப்பிட்டிருப்பது மிகவும் உணரத்தக்கது.
தத்துவப் பிரகாசரின் மாணாக்கரே இந்நூலுக்கு உரை இயற்றியிருக்கிறார் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இந்நூலைத் தவிர ‘துகளறு போதக் கட்டளை’ என்னும் நூலையும் தத்துவப் பிரகாசரே இயற்றினார் என்றும் தெரிகிறது. இவ்வாசிரியர் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதி என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="தத்துவப் பிரகாசர்"/>
<section begin="தத்துவ போதகர்"/>
{{dhr}}
<b>தத்துவ போதகர்</b>: தமிழ் உரைநடையின் தந்தை, கீழ்திசை மொழிகளைக் கற்றறிந்த முதல் ஐரோப்பியர் எனவெல்லாம் பாராட்டப் பெறும் தத்துவ போதகரது இயற்பெயர் இராபர்ட்-டி-நோபிலி (Robert De Nobili) ஆகும். இத்தாலி நாட்டில் கி. பி. 1577ஆம் ஆண்டில் தோன்றியவர். கி.பி. 1596-ஆம் ஆண்டில் குருமடத்தில் சேர்ந்தார். கி.பி. 1603-இல் சேசு சபைக் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். தம் திருமறைப் பணிக்குரிய களமாக இந்தியாவைத் தேர்ந்த கி.பி. 1605-ஆம் ஆண்டு மே 20-ஆம் நாள் கோவாவை அடைந்தார். அங்கிருந்து கொச்சிக்கு வந்து கன்னியாகுமரி வழியாகக் கிழக்குக் கடற்கரையை அடைந்தார். பின்னர் மதுரைக்கு வந்து அதனைத் தம் பணித்தளமாக ஆக்கிக் கொண்டார்.
கிறித்தவ மறைபரப்புப் பணியில் புதிய முறையைக் கொணர முற்பட்டார். சமய வழிபாடு நாட்டுப் பண்பாட்டியலுக்கு ஏற்றதாக அமையவேண்டும் என எண்ணிச் செயற்பட்டார். தமிழக மரபிற்கொப்பக் கிறித்தவ வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்வதே பிறரைத் தம் சமயத்தைத் தழுவச் செய்வதற்குரிய வழி எனக் கண்டார்.
தமக்கென உரிய உடைகளைக் களைந்துவிட்டு கையிலே இந்தியத் துறவியர்போல் தோன்றினார். கோல், கமண்டலம், மார்பிலே ஐம்புரி நூல், தலையிலே குடுமி, காலிலே பாதக் குறடு, நெற்றியிலே சந்தனமும் திருநீறுமாகக் காட்சியளித்தார். இவ்வகை மாற்றத்திற்கு அவர் தம் மேலாண்மையர் முதலில் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் இறுதியாக அவர் போக்கில் அவரை விட்டுவிட்டனர். வீரமாமுனிவர் போன்றோர் தமிழ் மரபிற்கு ஏற்றாற் போன்று தம்மை மாற்றிக் கொள்ள இவரே முன்னோடி.
திருச்சி, தஞ்சை, சேலம், சத்தியமங்கலம் ஆகிய இடங்கட்குச் சென்று பணியாற்றியுள்ளார். இருமுறை ஆட்சியாளரால் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். முதிர்ந்த வயதில் கண்ணொளி குன்றியது. யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் மைலாப்பூருக்கு வந்து எட்டாண்டுகள் வாழ்ந்தார். இவர் கி.பி.1656-இல் மறைந்தார்.
தம் சமயக் கொள்கைகளை விளக்கியுரைத்தல், பிற சமயக் கொள்கைகளை மறுத்துரைத்தல் என்னும் இரு முறைகளை மேற்கொண்டு இவர் நூல்களைப் படைத்துள்ளார். அவற்றுள் ஞானோபதேச காண்டம், ஆத்தும நிருணயம், புனச்சென்ம ஆட்சேபம், தூடண திக்காரம், நித்திய சீவன சல்லாபம், கடவுள் நிருணயம், ஞானோபதேசக் குறிப்பிடம், சின்னக் குறிப்பிடம், பிரசங்கங்கள், மாதா சரித்திரம், சேசுநாதர் சரித்திரம ஆகியவை அச்சில் வந்துள்ளன. ஞானதீபிகை, ஞானசங்சேபம், பேதகப் பரீட்சை, விசுவாச சல்லாபம், உபதேச சல்லாபம், பத்துச்சல்லாபம், சிலுவையின் விசேட சல்லாபம், மந்திர மாலை என்னும் இவர்தம் படைப்புகள் கிடைத்தில. வட மொழியிலும், தெலுங்கிலும் சிறந்த புலமை பெற்று அவற்றிலும் சில நூல்களைப் படைத்திருப்பதாகத் தெரிகிறது.{{Right|<b>சூ.இ.</b>}}
<section end="தத்துவ போதகர்"/>
<section begin="தத்துவமசி"/>
{{dhr}}
<b>தத்துவமசி</b>: சாந்தோக்கிய உபநிடதத்தில் ‘தத்துவமசி’ என்ற பரதத்துவத்தை விளக்கும் ஒரு மகாவாக்கியம் காணப்படுகிறது. உத்தாலக முனிவர் தம் மகன் சுவேதகேதுவிற்கு இதை உபதேசித்தார். ஆதியில், இரண்டற்ற நிலையில் சத்து என்பதே இருந்தது. ‘நான் பலவாக வேண்டும்’ என அது எண்ணிற்று. சத்திலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், அதிலிருந்து உணவும் தோன்றின. இவை பல்<noinclude></noinclude>
nmninygfhcyceolcjxtarevlrsob83d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/829
250
651693
1958747
2026-08-20T08:04:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேறு வகையில் ஒன்று சேர்ந்து நாம, உரூபமான இவ்வுலகைத் தோற்றுவித்தன. மனம், பிராணன், வாக்கு முதல் எல்லாச் சடப்பொருள்களும், உயிர்களும் சத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவராயர்|801|தத்துவ வரலாறு}}</noinclude>வேறு வகையில் ஒன்று சேர்ந்து நாம, உரூபமான இவ்வுலகைத் தோற்றுவித்தன. மனம், பிராணன், வாக்கு முதல் எல்லாச் சடப்பொருள்களும், உயிர்களும் சத்திலிருந்தே தோன்றின, உறங்கும்போது உயிர்கள் அடங்கிச் சத்திற்கே திரும்புகின்றன. இவ்வாறு ஒன்றான பரம்பொருளே பலவற்றின் அடிப்படையாகவும், மூலமாயும் உள்ளது எனக் கூறிய உத்தாலகர், இறுதியில் சுவேதகேதுவை விளித்து, ‘ச ஆத்மா தத்துவமசி (நீ அதுவாக இருக்கிறாய்) என்றார்.
தத்துவமசி என்னும் இச்சொல்லை தத், த்வம், அசி என்று பகுத்து, தத் என்னும் பதம் படைத்தவனான மாயையுடன் கூடிய கடவுளைக் குறிப்பதாகவும், தவம், உடலுடன் கூடிய சீவனைக் குறிப்பதாகவும் ஆதி சங்கரர் விளக்கியுள்ளார். பிரம்மம் சத்தியமானது, உலகம் மாயையானது. சீவன் பிரம்மம் அன்றி வேறல்லன் என்பது சங்கரரின் கூற்று. வியவகார நிலையில் சீவனும் அவனைப் படைத்த கடவுளும் ஒன்றெனக் கருதமுடியாது. சீவன், உபாதிகளை நீக்கினால், தத் அல்லது அந்த என்னும் பதம் மாயையுடன் கூடிய கடவுளின் அடிப்படையான பிரம்மத்தைக் குறிக்கிறது. எவ்வாறு கயிறு பாம்பாகத் தோன்றுகிறதோ அவ்வாறு பிரம்மம் சீவனாகத் தோன்றுகிறது. தூரத்திலுள்ளதைக் குறிக்கும் சொல்லான ‘தத்’ அருகிலுள்ளதைக் குறிக்கும் த்வம் என்ற சொல்லுடன் ஐக்கியப்படுத்தப்பட்டு இரண்டற்ற பரம்பொருளான பிரம்மத்தை விளக்குகிறது என்பது சங்கரரின் கூற்று.
இராமானுசரின் விசிட்டாத் துவைதத்தில், ‘தத்’ என்பது கடவுளைக் குறிக்கும். ‘த்வம்’ என்பது சத்து (உயிர்கள்), சடம் (பிரகிருதி) ஆகியவற்றை உடலாகக் கொண்ட உயிரான கடவுள் எனப் பொருள்படும். கடவுள் ஒன்றே, அவர் அந்தர்யாமியாக உள்ளேயுமிருக்கிறார். வெளியிலுமிருக்கிறார் என இராமானுசர் தத்துவமசி எனும் மகாவாக்கியத்தின் பொருளை, விளக்குகிறார்.
மத்துவர், ‘ச ஆத்மா தத்துவமசி’ என்பதை ச ஆத்மா அதத்துவமசி எனப்பகுந்து கடவுளும் சீவனும் ஒன்றல்ல, வேறு என்று துவைத வாதத்தை விளக்குகிறார்.{{Right|<b>இ.வி.ச.</b>}}
<section end="தத்துவமசி"/>
<section begin="தத்துவராயர்"/>
{{dhr}}
<b>தத்துவராயர்</b>: இவர் கி.பி.15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து வேதாந்த பரமாகத் தமிழில் பலநல்களை இயற்றியவர். வைதிக சைவ பிராமண குலத்தினர். சொருபானந்தர் தத்துவராயர் ஆகிய இருவரும் அம்மான் மருமகன் முறையினர். இருவரும் தக்க குருவை நாடிப் புறப்பட்டனர். பல காலம் முயன்றும் தக்கவர் கிடைக்கவில்லை. ஆதலின், இருவரும் பிரிந்து வெவ்வேறு திசை நோக்கிச் சென்றர். தென்பால் வந்த சொரூபானத் தருக்குத் திருப்பைஞ்ஞீலி அருகிலுள்ள கோவர்த்தம் என்னும் ஊரில் சிவப்பிரகாச சுவாமிகள் என்ற சைவ சித்தாந்தி தக்க குருவாகக் கிடைத்தார். அவரிடம் ஞானோபதேசம் பெற்று அங்கேயே நிட்டையிலிருந்தார். வடக்கே பிரிந்து சென்ற தத்துவராயர் திரும்பித் தெற்கே வந்தார், சொரூபானத்தரைக் கண்டு அவரையே குருவாகக் கொண்டார். தத்துவராயர் பாடுவதில் வல்லவர். ஆதலின், சொரூபானந்தர் தத்துவராயரைக் கொண்டு பல நூல்கள் தமிழுலகுக்குக் கிடைக்க வழி செய்தார். தத்துவராயர் அடங்கன் முறை என்பன 18 நூல்கள் அடங்கியவை. அவை வேதாந்தக் கொள்கையுடையவை. அவை யாவன. 1. திருத்தாலாட்டு. 2. பிள்ளைத் திருநாமம், 3. வெண்பா அந்தாதி, 4. கலித்துறை அந்தாதி, 5. சின்னப் பூ வெண்பா, 6. தசாங்கம், 7. இரட்டை மணிமாலை, 8. மும்மணிக்கோவை, 9. நான்மணி மாலை, 10. கலிப்பா, 11. ஞான விநோதன் கலம்பகம், 12. உலா, 13. சிலேடை யுலா, 14.நெஞ்சு விடுதூது, 15, கலிமடல், 16. அஞ்ஞவதைப் பரணி, 17. மோகவதைப் பரணி, 18. அமிர்த சாரம் என்பனவாம்.
மேலும் சிவப்பிரகாச வெண்பா, தத்துவாமிர்தம் என்னும் இரு நூல்களையும் இயற்றியுள்ளார். தம் குருநாதர் சொரூபானந்தர் மீது 138 தலைப்புகளில் 1140 பாடல்களைக் கொண்ட தத்துவராயர் பாடுதுறை என்னும் நூலையும் பாடியிருக்கிறார். மேலும், ஈசுரகீதை, பிரமகீதை, சசிவன்ன போதம் என்னும் மொழி பெயர்ப்பு நூல்களும் பெருந்திரட்டு, குறுந்திரட்டு என்னும் திரட்டு நூல்களும் தத்துவராயரால் செய்யப்பட்டவை. வேதாந்தக் கொள்கையைப் பரப்ப இவர் நூல்கள் மிகவும் இன்றியமையாதனவாய் இருக்கின்றன. கடைசியாக இவர் சிதம்பரத்திற்கும் விருத்தாசலத்திற்கும் இடையிலுள்ள எறும்பூரில் ஆடி மாதம் சனிக்கிழமை சதய நட்சத்திரத்தில் பிரதமை திதியில் சமாதியானார்.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="தத்துவராயர்"/>
<section begin="தத்துவ வரலாறு"/>
{{dhr}}
<b>தத்துவ வரலாறு</b>: ‘தத்துவம் என்னும் சொல் ‘ஒன்றின் மெய்த்தன்மை’ என்னும் பொருளைத் தரும். அது என்னும் சுட்டுச் சொல் சமயந்தோறும் வேறு வேறு குறிக்கும். பொருளைக் ஆகவே தத்துவம் என்னும் குறியீடு பொருள்களின் தன்மையை ஆராய்ந்து மெய்ம்மையினை நிலை நாட்டும் அறிவுக்கலையைக் குறிக்கும். இச்சொற்கு இணையாக மெய்ப்பொருள், சமயக் கணக்கு என்ற குறியீடுகள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.<noinclude>
<b>வா.க. 9 - 51</b></noinclude>
rbcylnpbnfwbetnq1hp0i5bt5qiaubm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/830
250
651694
1958749
2026-08-20T08:16:14Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்தியாவில் தொன்மையிலிருந்தே தத்துவ நெறி தழைத்திருந்தது. வேதத்தின் முதல் பகுதியில் தத்துவத்தின் கூறுகள் காணப்பட, வேதாந்தமாகிய வேதத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவ வரலாறு|802|தத்துவ வரலாறு}}</noinclude>இந்தியாவில் தொன்மையிலிருந்தே தத்துவ நெறி தழைத்திருந்தது. வேதத்தின் முதல் பகுதியில் தத்துவத்தின் கூறுகள் காணப்பட, வேதாந்தமாகிய வேதத்தின் இறுதிப் பகுதியாகிய உபநிடதங்களில் தத்துவம் செழித்திருந்தது. இந்தியாவில் தத்துவமும் சமயமும் பிரிக்க இயலாத் தொடர்போடு தோன்றி வளர்ந்து வருகிறது எனலாம். கடோப நிடதத்தில்யமனுக்கும் நசிகேதனுக்கும் நடக்கும் உரையாடல், தத்துவத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிக் குறிப்பாகக் கூறுகிறது எனலாம். யமன் நசிகேதனைத் தம் இடத்தில் மூன்று நாள்கள் காக்க வைத்ததால் மூன்று வரங்கள் நசிகேதனுக்குக் கொடுக்கிறார், முதல் வரம் தன் தந்தையின் நலத்துக்காகக் கேட்டு, அடுத்த வரங்களை அழியா உண்மையின் இயல்பை அறிந்துகொள்ளப் பயன்படுத்துகிறான். யமன் நசிகேதனுக்கு அழியா உண்மையை அறிவதற்குப் பதிலாக உலகத்தில் கிடைக்கும் பல்வகை இன்பங்களைப் பெறுமாறு தெரிவிக்கிறாள். நசிகேதன் வைராக்கியத்தோடு உலக இன்பங்களை மறுத்து, அழியா உண்மையை மட்டுமே தனக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறான். தத்துவத்தை அல்லது மெய்ப் பொருளை ஒருவன் அறிய வேண்டுமாயின் நிலையாத இன்பங்களைத் துறத்தல் மூலம் பெற இயலும் என்பதை இந்நிகழ்ச்சிநசிகேதன் மூலம் மக்களுக்கு அறிவிக்கிறது. மேலும் செம்பொருள் மூலம் அழியா வாழ்வு பெறல் (சிரேயசு-the Good), அவ்வப்போது கிடைக்கும் இன்பம் பெறல் (பிரேயசு-the Pleasant) பற்றி உபநிடதத்தில் வரும் செய்தியும் இவ்வுண்மையை நினைவூட்டுகிறது. உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை என்னும் அடிப்படை நூல்களில் இவ்வாறு வளர்ந்த மெய்ப்பொருள், நாயன்மார் காலத்தில் முதன்மை பெறுகிறது, இறைவன் தத்துவங்களாகவும் (மூலப் பொருள்களாகவும்), அவற்றைக் கடந்தவனாகவும், தத்துவங்களை அறிந்த அடியார்களால் தொழப்படுபவளாகவும் திகழ்கின்றான் என்பதைத் ‘தத்துவங்கள் ஆனான் தன்னை’. (609), ‘தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப்பில்லாத் தத்துவன்காண் உத்தமன் காண்’ (481) ‘தத்துவத்து அடியார் தொழும் பெம்மான் திறம்’ (989) எனவரும் அப்பர்பாடல்கள் தெளிவுறுத்தும். இந்திய நாட்டில் தோன்றிய தத்துவ வளர்ச்சியைக் காட்சிப் பொருள் உண்மைநெறி (Realism), கருத்துப் பொருள் உண்மை நெறி (Idealism), ஒருபொருள் உண்மைநெறி (Monism) என மூவகையில் வைத்து விளக்கலாம்
<b>காட்சிப்பொருள் உண்மைநெறி</b>: மக்கள் வாழும் உலகின் தோற்றமும் அமைப்பும் குறித்தும், இவ்வுலகில் வாழும் உயிர்கள் குறித்தும், உலகு, உயிர்கட்கு அப்பால் உள்ள பொருள் பற்றியும் இந்திய நாட்டுத் தத்துவங்கள் ஆய்த்துள்ளன. முதலில் இம்முயற்சியில் ஈடுபட்ட சாங்கிய தத்துவம், மூலப் பகுதி, புருடன் என்னும் இரண்டு பொருள்கள் என்றுமுள்ள தத்துவங்கள் (மெய்ப்பொருள்கள்) என்று கொண்டது. அவற்றை யாரும் உண்டாக்கவில்லை. மூலப்பகுதி (பிரகிருதி) என்னும் விதைத் தத்துவத்திலிருந்து முளைத்தது உளக்கூறு, உடற்கூறுகளையுடைய உலகு என்றும், இவ்விரு கூறுகளும் ஆன்மாக்களை ஆதாரமாகக் கொண்டுள்ளன என்றும் சாங்கியர் நம்பினர். இவ்வாறு உள்ள பிரகிருதியின் தத்துவங்கள் தான் அல்லன் என்னும் மெய்யுணர்வு தவைப்பட்டு, அவற்றின் நீங்கிக்கொள்ளும் பயிற்சி, வீடு பேற்றினைப் பயக்கும் என்றனர் சாங்கியர். பிரகிருதியினின்னும் நீங்கிய புருடனின் நிலைதான் வீடு பேறு, பதஞ்சலிவகுத்த யோகம் சேச்சுரசாங்கியம் எனப்படும். சேச்சுர சாங்கியம்-ஈசுவரன் உளன் என்னும் கொள்கையுடையது.
சேச்சுர சாங்கியம், வைணவம் என்பவை அடுத்தடுத்து வருகின்றன. இக்கொள்கைகளின் படி உலகு, உயிர்கட்கு மேலாக, இறைவன் என்னும் பூரணப் பொருளாகிய தத்துவம் உண்டு. உலகினின்றும் தனித்துக் கொள்வது வீடு பேறு எனச் சாங்கியர் கொண்டனர், தனித்துக்கொண்ட உயிர் இறைவனிடம் கலத்தல்தான் வீடுபேறு என்று வைணவர் துணிந்தனர். இவற்றை அடுத்து, சிந்தாந்த சைவர்கள் உலகு என்பது முப்பத்தாறு தத்துவங்களின் உள்ளடக்கம் என்றனர். உயிர்களின் ஆணவ மலத்தினை அவித்தற்பொருட்டுப் பிரகிருதியாகிய மூல தத்துவத்தினின்றும் (முதற் காரணம்) தன் சக்தியைத் துணைக் காரணமாகவும், தானே நிமித்த காரணனாகவும் நின்று, எண்ண அளவானே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் உயிர்கட்குப் போரின்பத்தினைப் பரம்பொருள் அளிக்கிறான் எனச் சைவ சித்தாந்தம் செப்புகிறது.
சாங்கியரைப் போல முற்கால நியாய வைசேடி கரும் இறைவனைக் கொள்ளாமல் பொருள்களை ஏழாகப் பிரித்து விளக்கினர். இவ்வனம் கூறப்பெற்ற சாங்கியர், யோகர், வைணவர், சைவர் நியாய வைசேடிகர் என்னும் தத்துவ வாதியர் உலகினைப் பொய் என்றோ கற்பனை என்றோ கருதிலர். இவர்கள் கூறிய பொருள்கள் எல்லாம் மெய் என்று கொண்டதாலும், உலகம் உள்பொருளிலிருந்து தோன்றியது என்று கொண்டதாலும் இவர்கள் காட்சிப்பொருள் உண்மை வாதிகள் (Realists) எனப்படுவர். சமணர்களும் இறை உண்மை கொள்ளாத<noinclude></noinclude>
ne97mn9ik0o5nzcmhlcsgqeev26mjpk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/831
250
651695
1958750
2026-08-20T08:26:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளுண்மை வாதிகளே. தேர வாத பௌத்தருள் ஒரு சாரர் புறஉலகினையும், அதன் பகுதிகளாகிய தருமங்களின் இருப்பினையும் உள்பொருளாகக் கொள்வதால் இவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவ வரலாறு|803|தத்துவ வரலாறு}}</noinclude>பொருளுண்மை வாதிகளே. தேர வாத பௌத்தருள் ஒரு சாரர் புறஉலகினையும், அதன் பகுதிகளாகிய தருமங்களின் இருப்பினையும் உள்பொருளாகக் கொள்வதால் இவர்களும் காட்சிப் பொருள் முதல் வாதிகளே.
<b>கருத்துப்பொருள் உண்மை நெறி</b>: பௌத்தர்கள் உலகப் பொருள்களை எல்லாம் தாதுக்கள் அல்லது தருமங்கள் எனப்படும் கூறுகளில் அடக்கி, உருவம், வேதனை, சஞ்சை, சும்சுகாரம், விஞ்ஞானம் என ஐந்து சுந்தங்களாக விளக்குவர். யோகாசாரர்கள் உள்ளத்தின் விரிவுதான் உலகாகக் காட்சியளிக்கிறது என்றும், உள்ளமாகிய விஞ்ஞானக் கந்தமே மெய்ப் பொருள் என்றும் கருதினர். ஆகவே இவர்களைக் கருத்து முதல் வாதிகள் என்பர்.
<b>ஒரு பொருள் உண்மை நெறி</b>: மண்ணினின்றும் தோன்றிய பாண்டங்கள் மண்ணின் வேறாகாதவாறு போல, ஈசுவர தத்துவத்தினின்று தோன்றிய உலகும், அதில் பலவாகக் காட்சி தரும் உயிர்களும் ஈசுவரனின் வேறல்ல என்பர் வேதாந்திகள். அவிச்சை காரணமாக இவுற்றை இரண்டாகவும், இரண்டின் மிக்கதாகவும் காண்கின்றனர். மிக மேலான ஞானம் கிட்டியதும் எல்லாப் பொருளும் ஈசுர சொரூபமே என்னும் பேருண்மை புலப்படும். இவ்வுணர்வு தோன்றுவதுதான் வீடுபேறு. இவ்வகையில் இந்தியாவில் காட்சிப் பொருள் உண்மை நெறி, கருத்துப் பொருள் உண்மை நெறி, ஒருபொருள் உண்மை நெறி என்னும் மூவகையில் தத்துவம் விளக்கம் பெறுகிறது.
மேல்நாட்டில் தத்துவம் ‘ஞானத்தை அறியும் நாட்டம்’ என்னும் வகையில் சாக்ரட்டீசு, பிளேட்டோ, அரிசுடாட்டில் என்னும் தத்துவ மேதைகள் மூலம் தோன்றியது. சாக்ரட்டீசின் கருத்துகள் அவர் மாணவர் பிளேட்டோவின் மூலம் கிடைக்கின்றன. கி.மு.407-இல் சாக்ரட்டீசைப் பிளேட்டோ சந்தித்து, சாக்ரட்டீசைப் பின்பற்றுகிறார். கிரேக்க தத்துவம் கிரேக்க சமயத் தத்துவத்திலிருந்து தோன்றியது என்று தத்துவ வரலாறு (A History of Philosophy) என்னும் அலில் பிராங் தில்லி (Frank Thilly) என்னும் ஆசிரியர் விளக்குகிறார். கிரேக்க சமயத்துக்கும் தத்துவத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கிரேக்க சமயத்தின் இரு பகுதிகள் ஓமர் (Homer) என்னும் கவி விளக்குவது போன்று முதற் பகுதி தெய்வங்கள் மனித நலத்தில் நாட்டமுடையவர்களாகக் காட்டப் பெறுதல், இரண்டாம் பகுதி கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கிரேக்க சமயத்தின் புனர் எழுச்சி ஆகியவை ஆகும்.
சீயசு (Zeus) என்னும் தெய்வம் கிரேக்க தெய்வங்களுள் முதன்மையானதாக வளர்ச்சி பெறுதல் கிரேக்கத் தத்துவத்திற்கும் சமயத்துக்கும் உள்ள உறவின் வெளிப்பாடாக விளங்குகிறது. ஓமர் இலக்கியத்தில் பிற தெய்வங்களைப் போன்று சீயசும் வீதிக்குட்படுவதாக விளக்கப்படுகிறது. சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆசிலசு (Aoshylus) எழுதிய நாடகங்களில் விதி என்பதே சீயசு தெய்வத்தின் எண்ணத்தின் வெளிப்பாடாக வருகிறது. இது இந்தியத் தத்துவத்தில் வினை என்பது தனிப்பட்ட தத்துவமாகச் சிலர் கொள்கைகளில் தோன்றி, சைவம் போன்ற சமயங்களில் கடவுள் உயிருக்கு உதவி செய்யும் வழியாக வளர்ச்சியடைவதற்கு ஒத்து உள்ளது ஓலிம்பிக்குத் தெய்வங்களில் காணப்படும் சமயக் கொள்கையும் தத்துவத்தால் செழிப்புப் பெறுகிறது. ஓர் இலக்கியத்தில் தெய்வங்கள் விதிக்குட்பட்டவை என்னும் கருத்து, முதல் கிரேக்க தத்துவத்தின் தன்மையை நிருணயிக்கிறது. சீயசு என்னும் தெய்வம் பற்றிய கொள்கை, பிளேட்டோ, அரிசுடாட்டில் ஆகியவர்களின் ஒரு தெய்வக் கடவுள் கொள்கைக்கு வழி வகுக்கிறது எனலாம்.
மேலை நாட்டுத் தத்துவத்துக்குக் கிரேக்க தத்துவமும் எபிரேயக் கருத்துகளும் (Hebrew) அடிப்படையாக அமைகின்றன. பழைய ஏற்பாடு எனக் கிறித்தவர்களால் கருதப்படும் எபிரேய பைபிள் (Hebrew Bible) யூத, கிறித்தவ, இசுலாம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் அடிப்படை நூலாக வேதம் போலக் கொள்ளப்படுகிறது. பழைய ஏற்பாடு இந்து சமயத்தவர்களது வேதம் போல உள்ளது. இந்து சமயப் பிரிவான சைவர்க்கு வேதத்தின் வெளிப்பாடு 12 திருமுறைகள், 14 சித்தாந்த சாத்திரங்கள் ஆகிய தமிழ் நூல்களில் காணப்படும் கருத்துகளில் நிறைவடைகிறது எனலாம். இதே போன்ற மற்றொரு இந்து சமயப் பிரிவினரான வைணவர்கட்கு வேதத்தின் வெளிப்பாடு ஆழ்வார்கள், இராமானுசர் போன்ற ஆசாரிவர் அருளிவ நூல்களில் நிறைவுறுகிறது. ஆயினும் சைவர், வைணவர் ஆகிய இருவர்க்கும் வேதம் பொதுவான வெளிப்பாடு. இவ்வகையில் இவ்வேதம் போன்று, பழைய ஏற்பாட்டின் விளக்கமாகவும் நிறைவாகவும் இயேசுவைப் பற்றி விளக்கும் புதிய ஏற்பாடு, அமைகிறது என்பர். இசுலாமியர் இதே பழைய ஏற்பாட்டின் நிறைவாக அமைவது கடவுளின் இறுதித் தூதரான முகமது நபிக்குக் குர் ஆன் மூலம் வெளிப்பட்ட சமய அனுபவம் ஆகும் என்பர். இவ்வகையில் மேல்நாட்டுத் தத்துவத்தில் பழைய ஏற்பாடு யூத, கிறித்தவ, இசுலாம் சமயங்களுக்கும் அடிப்படை நூலாக அமைகிறது. ஆயினும், பழைய ஏற்பாட்டின் விளக்கமாக இம்முச்சமயத்தினரும்<noinclude>
<b>வா. க. 9-51அ</b></noinclude>
sm80s3aekjao3f31txw215n411uxbcf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/832
250
651696
1958751
2026-08-20T08:36:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தங்கள் தங்கள் சமய நூல்களையும் பழைய ஏற்பாட்டுடன் கொள்வர். மேலை நாட்டுத் தத்துவத்தைக் கிரேக்க தத்துவம், இடைக்காலத் தத்துவம், இக்கால தத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவ வரலாறு|804|தத்துவ வரலாறு}}</noinclude>தங்கள் தங்கள் சமய நூல்களையும் பழைய ஏற்பாட்டுடன் கொள்வர்.
மேலை நாட்டுத் தத்துவத்தைக் கிரேக்க தத்துவம், இடைக்காலத் தத்துவம், இக்கால தத்துவம் என மூன்று வகையாக அமைக்கலாம், கிரேக்கத் தத்துவத்தில் சாக்ரட்டீசு, அவர்மாணவர் பிளேட்டோ, அரிகடாட்டில் ஆகியோருடன் பிதகோரசு, எபிகூரசு முதலியவர்களையும் கருதலாம். அறிவுத் துறைகளின் பல்வகைப் பிரிவுகளுக்கும் அரிசுடாட்டில் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இடைக்காலத் தத்துவத்தில் கிறித்தவமதம் தேவாலயக் குருமார்களால் வளர்க்கப்படுகிறது. அச்சுதீன், தீமையின் தோற்றம், மனிதனுடைய சுயாதீனத்தின் தன்மை வரலாற்றின் தத்துவம் ஆகியவை பற்றி விளக்குகிறார். ஆன் செல்ம் (St. Anselm) இறைவன் இருப்புக்கான காரணங்களை ஆய்வு செய்கிறார். இறைவன் இருப்பை அறிவு பூர்வமாக விளக்குவதில் மனிதனின் பகுத்தறிவை எந்த அளவுக்குப் பயன்படுத்தவாம் என்பதில் கிறித்தவக் குருமார்களிடை வேற்றுமை காணப்படுகிறது. தாமசு அக்குவீனசு (St. Thomas Aqvinas) அரிசுடாட்டிலின் தத்துவத்தைப் பின்பற்றிக் கிறித்துவ மதக் கொள்கைகளைப் பகுத்தறிவுக் கேற்ப விளக்குகின்றார்.
இக்காலத்தத்துவம் என்னும் பகுதியில் ஐரோப்பாவில் மறுமலர்ச்சியை ஒட்டி எழுந்த அறிவு வழிக் கொள்கை, அனுபவ வழிக்கொள்கை, இவ்விருகொள்கைகளையும் இணைக்கும் காண்டின் தத்துவ ஆய்வுக் கொள்கை என்பவைகளைக் குறிக்கலாம். ஐரோப்பாவில் இடைக்காலத்தில் ஆணைக்கு எதிராக எழுந்த மறுமலர்ச்சிக் கொள்கை, கிரேக்க தத்துவ வாதிகளான பிளேட்டோ, அரிசுடாட்டில் என்னும் இவர்களின் அடிச் சுவட்டைப் பின்பற்றித் தத்துவத்தைப் பகுத்தறிவுக்கேற்ப விளக்க வேண்டும் என்று வற்புறுத்தியது. பிரான்சிசு பேகன் (Francis Bacon) விஞ்ஞானத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தித் தொகுப்பு வழி முறைக்கு (Inductive Method) அதாவது தனித்தனியே ஆய்ந்த தனியன்களிடமிருந்து பொதுவான உண்மைக்குச் செல்லும் முறைக்குச்சிறப்பு அளித்தார். தேகார்ட்டே (Descartes), இசுபினோசா (Spinoza), இலைபினிட்சு (Leibnitz) என்னும் தத்துவ வாதிகள் அறிவைப் பெறுவதில் முளையின் முக்கிய பகுதியை வற்புறுத்தினர். குழந்தை அறிவுடன் பிறப்பதனாலேயே உண்மைகளை உணர்ந்து கொள்ளமுடிகிறது. என்னும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறைக்கு முன்னுரிமை அளித்தனர். தத்துவத்தில் தெளிவான, மறுக்க இயலாத உண்மைகளை கணக்கில் வற்புறுத்துவது போன்ற உண்மைகளைத் தத்துவத்தில் வற்புறுத்திய தேகார்ட்டே இக்காலத் தத்துவத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். இசுபினோசா தேகார்ட்டேயின் தத்துவப் பகுதிக்கு மேலும் சிறப்புக் கொடுத்து விளக்குகிறார். இலைபீனிட்சு என்னும் தத்துவவாதி பகுப்புக் கணக்கியல் (Calculus) என்னும் கணித இவறுக்கு வித்திட்டுத் தத்துவத்தை விஞ்ஞானத்துடன் இணைத்து விளக்குகிறார். சான் லாக்கு (John Locko) அறிவைப் பெறுவதில் அனுபவத்துக்கு உள்ள தொன்மையை விளக்குகிறார். குழந்தையின் மனம் பிறக்கும்போது ஒன்றும் எழுதாக்கற்பலகை போல உள்ளது. குழந்தை தன் அனுபவத்தின் மூலமாகவே எல்லாவற்றையும் அறிகிறது. சார்சு பார்க்லி (George Berkeley), தாவீது கியூம் (David Hume) ஆகிய இவர்கள் சான் லாக்கு ஆரம்பித்துவைத்த அனுபவ வழிக் கொள்கையின் தவிர்க்க இயலாத தர்க்க முறைகளுக்கு மக்களை அழைத்துச் செல்கிறார்கள். இம்மானுவல் காண்ட்டு இவ்விரு கொள்கைகளில் உள்ள நன்மையான உடன்பாட்டுப் பகுதிகளை இணைத்துப் புதிய தருக்க முறையைத் தத்துவத்தில் தோற்றுவிக்கிறார்.
காண்ட்டின் கொள்கைப்படி அறிவு, அனுபவத்தின் மூலம் தோன்றுகிறது. இவ்வகையில் காண்ட்டு சான்லாக்கின் கொள்கையோடு ஒத்துப்போகிறார். ஆயினும் அறிவின் உண்மைத் தன்மையை அறிவதற்கு அனுபவம் மட்டும் போதாது. அறிவின் உண்மைத் தன்மையை அறிய அனுபவத்திற்கு முற்பட்ட அறிவு முறையே மக்களுக்கு உதவுகிறது. இவ்வகையில் காண்ட்டு அறிவுக்கொள்கை அனுபவக் கொள்கை என்னும் இரண்டின் உடன்பாட்டுக் கூறுகளை இணைத்துத் தருக்க முறை மூலம் ஒரு பெரிய உண்மையை விளக்குகிறார். இது கோபர்நிகசு என்பார் நிகழ்த்திய கண்டுபிடிப்புப் போன்ற பாதிப்பைத் தத்துவத்தில் ஏற்படுத்தியுள்ளது என்பர்.
<b>இந்தியாவில் தத்துவத்தின் இன்றைய நிலை</b>: நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், பூருவ மீமாஞ்சை, உத்தரமீமாஞ்சை என்னும் அறுவகைத் தரிசனங்களுள் சைவம், வைணவம், சங்கரர் விளக்கும் அத்துவிதக் கொள்கை என்பவை இப்போது உயிர்ப்புடன் இருந்து வரும் கொள்கைகளாகும். இரவீந்திர நாததாகூர், அரவிந்தர், டாக்டர் இராதாகிருட்டிணன் முதலியோர் இன்றைய தத்துவ வாதிகளில் சிறந்தவராகக் கருதப்படுகின்றனர். காந்தியடிகள் ‘கடவுள் உண்மை வடிவானவர்’ என்பதை விட, ‘உண்மையே கடவுள் வடிவம்’ என்பதே சிறந்தது என்று விளக்குகிறார். ஏனெனில் கடவுள் என்பதை ஒருவர் மறுக்க இயலும். உண்மை என்பதை தாத்திகவாதி கூட மறுக்க முடியாது. ஆகவே, நாத்திகவாதிக்கும் அடிப்படையாக உள்ள உண்மையே தத்துவத்தின் இருப்பிடம் என்று அவர் கூறுகிறார்.
{{nop}}<noinclude></noinclude>
f5kf6t3k8rn1q13vqeul4sbwt6js5h0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/833
250
651697
1958753
2026-08-20T08:52:33Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>மேல்நாட்டில் தத்துவத்தின் இன்றைய நிலை</b>: காண்ட்டின் தத்துவத்தையொட்டிச் செருமனியில் தோன்றிய எகல் (Hegel) என்னும் ஞானி உள்ளது சிறத்தல் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ததீசி|805|தந்திவர்மன்}}</noinclude><b>மேல்நாட்டில் தத்துவத்தின் இன்றைய நிலை</b>: காண்ட்டின் தத்துவத்தையொட்டிச் செருமனியில் தோன்றிய எகல் (Hegel) என்னும் ஞானி உள்ளது சிறத்தல் என்பதை விளக்கும் கூர்தல் அறத்தை விளக்குகிறார். கருந்து, அதற்கு எதிரான கருத்து, பிறகு இவ்விரு கருத்துகளும் இணைந்து தோன்றும் இசைவான கருத்து என்னும் இவ்வகையில் கருத்துகள் வளர்ச்சியடைகின்றன என்னும் முறையில் எகலின் தத்துவம் அமைகிறது. எகல் ஆன்மிகக் கருத்துக்களுக்குக் கொடுத்த விளக்கத்தைக் காரல் மார்க்சு (Karl Marx) என்னும் அறிஞர், உலகப் பொருளாதார நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தி, உலகின் ஒரு முக்கிய பொருளாதார அமைப்பாக விளங்கும் பொதுவுடைமைக்கு அடிகோலினார்.
இன்றைய மேல்நாட்டுத் தத்துவத்தின் இரு முக்கிய பகுதிகளாக உள்ளவை ‘இருத்தல் கோட்பாடு’, அறிவியல் சார்ந்த புலன் வழி அறிவு ஏற்புக்கொள்கை என்பவை ஆகும். மனிதன் தன் செயல் உரிமையைத் துணிந்து முடிவு செய்யும் திறனால் நிலை நாட்டிக் கொள்ளவேண்டும். மனிதன் வாழ்வு அப்பொழுதுதான் பயனுள்ளதாகும். இத்தனிமனித சுதந்திரத்தை எந்தப் பொது அமைப்பிலும் மறைந்து போகும்படி செய்வதை அனுமதிக்க முடியாது என்று கேர்சுகாடு (Keirke Gard), கைடகர் (Heidegger) சீன் பால் (Jean Paul), சார்ட்ரே (Sartre) ஆகியோர் விளக்கினர். இவ்விளக்கம் தான் தத்துவத்தின் உயிர்நாடி. அனுபவ பூர்வமாக விளக்க இயலாததையெல்லாம் தத்துவக் கொள்கையாகக் கொள்ளக் கூடாது என வற்புறுத்தும் குழுவில் தலைசிறந்தவர் விட்கன் சுட்டீன் (Wittgenstein) ஆவர். ஆனால், இப்போது இவர்களுடைய செல்வாக்குக் குறைந்து கடவுள், மனிதன், உலகம் பற்றிய கருத்துகளை நிரல்பட அறிந்து, அறிந்தவாறு நடப்பதுதான் தத்துவம் என்னும் கொள்கை மீண்டும் மெல்லத் தோன்றத் தொடங்கியுள்ளது எனலாம்.{{Right|<b>ச.க.</b>}}
<section end="தத்துவ வரலாறு"/>
<section begin="ததீசி"/>
{{dhr}}
<b>ததீசி</b>: ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்னும் திருக்குறளின் பிற்பகுதியை விலக்கத்தக்க (72) எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுபவர் இம்முனிவர்.
இவர் தந்தையார் அதர்வமுனிவர். இவர் தாயார் சாந்திதேவியார். தவப்பெருமைமிக்க முனிவர்களுள் ஒருவராக இவர் சொல்லப்படுகின்றார்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையச் செல்லும் போது அவர்கள் வைத்திருந்த படைக்கலங்களை இவரிடம் ஒப்படைத்துச் சென்றனர் என்றும், அவர்கள் நெடுங்காலமாக அப்படைக்கலங்களைத் திரும்பப் பெறுவற்கு வாராமையால், அவற்றைப் பாதுகாப்பாக வைக்கக் கருதி அவற்றையெல்லாம் விழுங்கி முதுகெலும்போடு இணைத்துக் கொண்டார் என்றும், விருத்திராசுரனைக் கொல்வதற்கு வலிமையான படைக்கலம் செய்ய வேண்டி இவரிடம் வந்து இரந்து வேண்டிய இந்திரனுக்குத் தம் முதுகெலும்பை விருப்புடன் வழங்கினார் என்றும், அதனைப் படைக்கலமாக்கி இந்திரன் விருத்திராசுரனை வென்றான் என்றும் ஒரு கதை வழங்குகின்றது. மற்றும் இந்திரன் ஒருகால் இவர்மேல் விடுத்த சக்கரப் படையை மழுங்க வைத்தார் என்பதாகவும், தக்கன் சிவபெருமானை மதியாமல் வேள்வி செய்தபோது அவனுக்கு நல்லுரை கூற அவன் கேளாமையால் ‘சாபம்’ இட்டார் என்பதாகவும் சில கதைகளும் வழங்குகின்றன.{{Right|<b>இரா.இ.</b>}}
<section end="ததீசி"/>
<section begin="தந்திரம்"/>
{{dhr}}
<b>தந்திரம்</b>: தந்திரம் என்ற சொல்லுக்குச் சாத்திரம் என்பது பொருள். ஆகமம் என்ற வழிபாட்டுத் துறைக்கும் இப்பெயர் உண்டு. சிறிய அளவில் இறைவனுடைய உருவத்தை உலோகம், மரம் முதலியவைகளால் செய்து அவைகளைப் பூசிக்கலாம் தந்திரம் கூறுகிறது. இவ்வடிவத்தைப் பூசிப்பதற்குக் கோயில்களைக் கட்ட வேண்டும். இம்முறைகளைத் தந்திரங்கள் வகுத்து உரைக்கின்றன. வடிவங்களைக் கோயில்களில் இயங்கும்படி செய்வதற்குத் தக்க முறையில் தீட்சை பெற வேண்டும். அவர்கள் தாம் தீட்சை பெற்றுப் பூசனை செய்யலாம். இறைவனின் வடிவம் நிலை பெற்ற பிறகு நாடோறும் பூசனை செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாள்களில் தக்க முறையில் உற்சவங்களை நடத்த வேண்டும்.
சாக்தம், சைவம், வைணவம் என்று தந்திரங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முறையே சக்தி, சிவன், விட்டுணு என்ற தெய்வங்களைப் பற்றித் தோன்றியவை. ஒவ்வொன்றிலும் வழிபாட்டு வழிகள் பலவாகக் காணப்படுகின்றன.
வேதங்களை ஓதுவதற்கு உபநயனம் என்ற சம்க காரத்தைப் பெறாத ஆண்களும் பெண்களும் தாங்களே வழி பாட்டைச் செய்வதற்குத் தகுதியற்றவர்கள். ஆண் பெண் என்ற வேறுபாடின்றித் தீட்சை பெற்றுப்பூசனை செய்யலாம் என்று தந்திரங்கள் கூறுகின்றன.{{Right|<b>வி.வ.</b>}}
<section end="தந்திரம்"/>
<section begin="தந்திவர்மன்"/>
{{dhr}}
<b>தந்திவர்மன்: (கி.பி. 796-847)</b> காஞ்சிப் பல்லவர்களுள் ஒருவனான பல்லவமல்லன் என்ற இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731-796) என்பவனின் மகனே தந்திவர்மன். இராட்டிரகூட அரசை நிறுவிய தந்தி துர்க்கனின் மகள் இரேவா என்பவளுக்கும்<noinclude></noinclude>
2x0647qelrt8vmt8ss5pryhlwf3r8xt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/834
250
651698
1958758
2026-08-20T09:04:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இரண்டாம் நந்திவர்மனுக்கும் மகனாகப் பிறந்தவன் தந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மனுக்குப் பிறகு தந்திவர்மன் (கி.பி.796-847) பல்லவ மன்னனானான். ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தந்து மாறன்|806|தந்தைத் தலைமை}}</noinclude>இரண்டாம் நந்திவர்மனுக்கும் மகனாகப் பிறந்தவன் தந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மனுக்குப் பிறகு தந்திவர்மன் (கி.பி.796-847) பல்லவ மன்னனானான். ஆனால், இராட்டிரகூட நாட்டு மன்னன் மூன்றாம் கோவிந்தன் என்பவன், பல்லவ மன்னன் தந்திவாமனைப் போரில் தோற்கடித்து, அவனது தலைநகர் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அதன்பிறகு பல்லவ நாடு இராட்டிரகூட நாட்டிற்குக் கப்பம் கட்டிவந்தது. தந்திவர்மனுக்குப்பிறகு அவன் மகன் மூன்றாம் நந்திவர்மன் பல்லவ மன்னனானான்.{{Right|<b>அ.க.</b>}}
<section end="தந்திவர்மன்"/>
<section begin="தந்து மாறன்"/>
{{dhr}}
<b>தந்து மாறன்</b> என்பான் பாண்டி வேந்தர் ஆணைக்குட்பட்ட தலைவர்களுள் ஒருவன் என்றும், பாண்டிய மன்னர்களின் கீழ்ப் பணியாற்றியவர்களுள் ஒருவன் என்றும் இருவேறுபட்ட செய்திகள் உள. மாறன் என்னும் சிறப்புப் பெயர் பாண்டியர்க்கே உரியதாயினும் அவர்களையடுத்து மிக்க அணுக்கமாய் இருப்பவர்க்கும் உரியதென்பதும் தெளிவாம். மன்னர்களிடம் நெருங்கியிருந்து பணியாற்றியமையால் பெருஞ்சிறப்புப் பெற்ற இவன் மன்னர்களைப் போன்றே கொடைத் திறத்திலும் வீரத்திலும் சிறந்து நின்று பலருக்கும் உதவுகின்ற அருள் உள்ளத்தனாய் விளங்கினான்.
இவனது நீண்ட புகழைச் சங்க வருணரென்னும் நாகரியர் புறநானூறு 360-ஆம் பாடலில் சிறப்பித்துப் பாடுகின்றார். இப்புலவர் பெயரின் பிற்பகுதி ஆய்விற்குரிய ஒன்றாகும். நாகரையர், நாகாரியார் என்று வெவ்வேறு நிலையில் வெவ்வேறு நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆயின் பெயரின் முற்பகுதியில் ‘சங்க வருணர்’ என்றே எல்லா நூல்களும் குறிப்பிடுவதால் ஒரு புலவரையே பலரும் பல்வேறு நிலைகளில் குறிப்பிடுகின்றனர் என்பது போதரும்.
இனி, இத்தந்து மாறனைச் சங்க வருணர் புறநாநூற்றில் சிறப்பித்துப் பேசுவது நோக்குதற்குரியது. சிறு சினத்தையுடையோரும் சான்றோர் சொற்களைக் கேட்போரும் பெருங்கொடை, வழங்குவோரும் நல்லுணவினைப் பிறர்க்குப் படைப்போரும் இன்சொல்லுடையோரும் நற்செயலைச் செய்வோரும் ஆகிய இன்னோரெல்லாம் உலக நிலையாமையை நன்குணர்ந்து நாட்டையாண்டனர். அவரோ மிகச் சிலர். அதனையுணராது ஆண்ட மன்னர் பலராவர். நீயோ எனின், அச்சிலருள் ஒருவனாய் இருத்தல் வேண்டும் எனத் தன் அவாவினை அத்தந்துமாறனுக்கு அறிவுறுத்தும் முகமாய்ச் சொல்லுகின்றார். இப்புலவர் இவனை இவ்வாறு பாராட்டுவதால். இவன் நல்லொழுக்கம் மிக்கவன் என்பதும், சான்றோர் வாக்கில் ஈடுபாடும் மரியாதையும் மிக்கவன் என்பதும் மிருந்த செல்வத்தால் நற்புகழை ஈட்டிக் கொண்டவன் என்பதும் புலனாகின்றன.{{Right|<b>சு.கோ.</b>}}
<section end="தந்து மாறன்"/>
<section begin="தந்தை உரு"/>
{{dhr}}
<b>தந்தை உரு</b>: ஒருவர் வாழ்வில் ஒரு வளர்ப்புத் தந்தை அல்லது தந்தையின் பொறுப்பை ஏந்த மற்றொருவர் உண்மையான தந்தையின் செயல்களைப் பொறுப்பேற்று எடுத்துக்கொள்வதுண்டு. அவ்வாறு எடுத்து கொள்வதைத் ‘தந்தை உரு’ (Father-Figurel/Father Image) என்பர். மற்றும் ஒருவர் தம் தந்தையைப் பின்பற்றித் தம்முடைய நடத்தையை அமைத்துக் கொள்ள எண்ணுவதைப் போலவே. அவர் முக்கியமானவராகக் கருதும் ஒருவரைத் தம் தந்தையின் இடத்தில் மனத்தில் இருத்தி அவருடைய நடத்தையைப் பின்பற்ற முயலுவதுண்டு. இதனையும் தந்தை உரு எனலாம். இது ஒருவர் குறிப்பிட்ட சிலரோடு கொண்டுள்ள அளவுக்கு மீறிய ஈடுபாட்டைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு மாணவர் ஓர் ஆசிரியரையோ ஒரு தொழிலாளி ஒரு மேலாளரையோ தம் தந்தையை ஒத்தவராக மதித்தொழுகலைக் காணலாம். குரங்குகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சில ஆய்வுகளில் குரங்குக் குட்டிகள் கம்பியாலான மிருதுவான பொம்மைகளைத் தம் தாயை ஒத்த உருவமாக ஏற்றுக்கொண்டன. தம் தந்தை இல்லாத நிலையிலோ, தம் தந்தை தம்மால் மதித்துப் பின்பற்றி நடக்கத்தக்க நடத்தையை உடையவராக இல்லாவிட்டாலோ வேறொருவருடைய நடத்தை பின்பற்றி நடக்கத் தக்கவாறு சிறந்திருப்பதாலோ வேறொருவரைத் தம் தந்தை-உருவாகக் கொண்டு செயற்பட ஒருவரைத் தூண்டலாம். இத்தகைய தந்தை உருவை முன்மாதிரியாகக் கொண்டு அதையொத்துத்தம் நடத்தையும் அமைய ஒருவர் தீவிரமாக முயலலாம். இதுகுறித்து ஆராய்ந்து கூறியவர் பிராய்டு என்பவர ஆவார்.{{Right|<b>வே.க.</b>}}
<section end="தந்தை உரு"/>
<section begin="தந்தைத் தலைமை"/>
{{dhr}}
<b>தந்தைத் தலைமை</b>: முன் வரலாற்றுக்கால மனிதர் முதன்முதல் சிறு குழுக்களாகவும், கூட்டமாகவும் சேர்ந்து வாழ முற்பட்டதுமுதல் இன்று வரை மனித சமுதாயம் பல நிலைகளில் படிமலர்ச்சியடைந்துள்ளது. ஒவ்வொரு நிலையிலும் சமுதாய அமைப்பும் (Social System), அதன் உட்கூறாக விளங்கும் குடும்ப முறையும் மாற்றம் பெற்று வளர்ச்சியடைந்துள்ளன. அவ்வகையான வளர்ச்சி நிலைகளுள் ஒன்றே தந்தைத் தலைமை (Patriarchy) முறையாகும். அவ்வகையான சமுதாய அமைப்பில் குடும்பத்தின் அனைத்து அதிகாரமும் தந்தையிடமோ முத்த ஆண் ஒருவரிடமோ இருக்கும்.
பண்பாட்டுப் படிமலர்ச்சி பற்றி கி. பி. 19-ஆம் நூற்றாண்டு மானிடவியலார் மிக பிரிவாக ஆராய்ந்-<noinclude></noinclude>
0sd7k50gc87ew9dit7l816ifxejru4s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/835
250
651699
1958772
2026-08-20T09:18:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் உலூவி என்றி மார்கனும் (Lewis Henry Morgan), என்றி மெய்னியும் (Henry Maine) ஆவர். அவர்களின் படி மலர்ச்சிக் கொள்கைப்படி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தந்தைமை நிலை ஒப்புகை|807|தந்தைமை நிலை ஒப்புகை}}</noinclude>தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் உலூவி என்றி மார்கனும் (Lewis Henry Morgan), என்றி மெய்னியும் (Henry Maine) ஆவர். அவர்களின் படி மலர்ச்சிக் கொள்கைப்படி பண்பாடு பல நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ளது. அதனுள் ஒன்றே தந்தைத் தலைமை. மெய்னியின் கருத்துப்படி தொடக்கக் காலச் சமுதாயங்களில் அனைத்து வகையான தகுதி அல்லது உறவு தந்தைவழி உறவுமுறையிலிருந்தே (Patrilineal Kinship System) தோன்றியது. தந்தைத் தலைமை முறையில் ஒரு குடும்பத்தின் தந்தை அல்லது மூத்த ஆண் அவரது குடும்பத்தினரையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத்தினரையும் (Members of Extended Family) வழிநடத்தும் பொறுப்பைப் பெற்றிருந்தார்.
மார்கன், தம் படிமலர்ச்சிக் கருத்துகளை உருவாக்குவதற்கு எழுத்தறிவில்லாச் சமுதாயங்கள் பலவற்றிடமிருந்து தரவுகளைப் பெற்றார். ஆனால், மெய்னியின் கருத்துகள் தொன்மைக் கிரேக்க, உரோமானிய ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், பிற்கால மானிடவியலார் இக்கருத்துகளை ஐயத்திற்குரியதாக்கினர். இவர்களின் கருத்துப்படி தந்தை வழிச் சமூகத்தில்கூட முழு அதிகாரமும் தந்தையிடமோ தனி ஆண் ஒருவரிடமோ இருப்பது அரிதாக உள்ளது. ஆகவே, கொள்கையளவில் இவ்வகைச் சமுதாய வகையைக் குறிப்பிடும் வழக்குச் சமுதாய அறிவியல் அறிஞர்களிடையே குறைந்துவிட்டது.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="தந்தைத் தலைமை"/>
<section begin="தந்தைமை நிலை ஒப்புகை"/>
{{dhr}}
<b>தந்தைமை நிலை ஒப்புகை</b>: ஒரு குழந்தை தனது முறை மணப்பிறப்புக் குழந்தைதான் எனத் தந்தையினால் விளம்பப்படுவது முகம்மதியச் சட்டத்தில் தந்தைமை நிலை ஒப்புகை (Acknowledgment of Paternity) எனப்படும். இதுமுறையிலா மணப்பிறப்புக் குழந்தையை முறைமணப் பிறப்பாக்கும் செயல் முறையன்று. உண்மையில் முகம்மதியச் சட்டம் அவ்வாறு முறைப்படுத்துதலை ஏற்கவில்லை.
பெரும்பாலான சட்டவியல்களில் தாய்மை நிலை என்பது ஒரு தாய்க்கும் குழத்தைக்குமிடையேயான இயற்கை உறவாகும். தந்தைமை நிலை என்பது ஒரு தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான சட்ட உறவாகும் சட்டப்படி நிகழ்ந்த திருமணங்கள் வாயிலாகப் பிறந்த குழந்தையே முறைமணப்பிறப்புக் குழந்தையாகும். ஒரு குழந்தையின் தந்தைமையை நிலைநாட்ட அக்குழந்தை, பெற்றோர்களிடையேயான ஒரு முறையான அல்லது ஓர் ஒழுங்கற்ற திருமணத்தின் வாயிலாகப் பிறந்த குழந்தை என மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறான ஒரு திருமணம் குறித்த நேரடிச் சான்று இல்லாத நிலையில் அது i) (ஒரு திருமணத்திற்கான தடைகள் ஏதும் இல்லாத) ஒரு தொடர்ச்சியான உடனுறைதல், ii) அவ்வாறான திரு மணத்தில் பிறந்த குழந்தையை, முறை மணப் பிறப்புக் குழந்தையாகத் தந்தையினால் ஒப்புக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக அனுமானிக்கப்படும். முகம்மதிய சட்டத்தின்கீழ்த் திருமணங்களில் சடங்குகள் ஏதும் இல்லையாதலால் திருமணம் குறித்துச் சான்று எப்போதும் இருக்கும் என்று கூறமுடியாது. நேரடிச்சான்று இல்லாத போழ்து மறைமுகச்சான்றே போதும், ஒரு மகனுக்கு ஆதரவான முறை மணப்பிறப்பு ஒப்புகை, ஒருவகையான மறைமுகச் சான்று எனக் கொள்ளலாம்.
சட்டத்தில் இரண்டு வகையான நேர் மரபு வழி உறவுகள் உண்டு. அவை, இயற்கைத் தந்தை மற்றும் தத்தெடுத்த தந்தை. தத்தெடுப்பு முறை உரோமானியச் சட்டத்திலும் இந்துச் சட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், முகம்மதியச் சட்டத்தில். இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், தந்தைமை ஒப்புகை. ஒரு தந்தை, குழந்தைக்கு முறைமணப் பிறப்புத் தகுநிலை அளிக்கும் தனித்தன்மை கொண்டது.
இனி தந்தைமை ஒப்புகை பற்றிய சட்டக் கோட்பாட்டினை நோக்கவேண்டும். ஒரு குழந்தையின் தந்தைமையை அதாவது அக்குழந்தையின் தந்தையிடமிருந்து முறைமணப்பிறப்புக் கால்வழியை ஒரு மணத்தை நிலைநாட்டி, கருவின் போதோ அல்லது பிறப்பின் போதோ மெய்ப்பிக்க இயலா நிலையில் இறங்குரிமைக்காக, அத்தகைய திருமணத்தையும் முறைமணப்பிறப்புக் கால்வழியையும் நிலைநாட்டுவதற்காக ‘ஒப்புகையை’ ஒருமுறையாக முகம்மதியச் சட்டம் ஏற்றுக் கொண்டுள்ளது.
முறை மணப்பிறப்பு விளைவினை ஏற்படுத்தும் முகம்மதியச் சட்டத்தின் தந்தைமை ஒப்புகையானது, குழந்தையின் முறைமணப் பிறப்பானது நன்கு மெய்ப்பிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டதற்குப் பொருந்தாது. இக்கோட்பாடானது, திருமணம் பற்றிய பொருண்மை அல்லது குழந்தையின் மணப்பிறப்பு மெய்ப்பிக்கப்படா வழக்குகளை மட்டுமே குறித்ததாகும்; இல்லையென மெய்ப்பிக்கப்பட்டவற்றிற்கு அன்று. முறைமணப் பிறப்புக் குறித்து உறுதியற்ற வழக்குகளுக்கே இது பொருந்தும். மெய்ப்பிக்கப்பட்டு அல்லது மெய்ப்பிக்கப்படாமல் இருக்கும் தெளிவற்ற, உறுதியற்ற நிலைக்கே இது பொருந்தும்.
ஏற்பளிக்கப்பட்ட குழந்தை மகனாக அல்லது மகளாக தந்தைமை இருக்கலாம். ஒப்புகைக் கோட்பாடு வெறும் சான்றியல் சட்டத்தின் விதி<noinclude></noinclude>
h3eun6zai8c169vh1kxiyo98mxi987v
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/2
250
651700
1958775
2026-08-20T09:20:24Z
Sanjeev Basker
16799
OCR
1958775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>²î ‹ ñî ‹
Þó
£
.ÜKèó
²î¡
æMòƒèœ
ºó
Oîó
¡,ªê
¡¬ù
ªõOf´
«ï£
ê
¡ Ü„
ê
è‹<noinclude></noinclude>
mz459qr2y1mczxp218xfel5gtzi9vaq
1958776
1958775
2026-08-20T09:20:51Z
Sanjeev Basker
16799
OCR
1958776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>சுதனும் மதனும்
அனாழியும்
இரா. அரிகரசுதன்
ஓவியங்கள்
முரளிதரன், சென்னை
வெளியீடு
நோசன் அச்சகம்<noinclude></noinclude>
9gppxwtitfwvw2owrmibeargj927qu1
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/3
250
651701
1958777
2026-08-20T09:21:09Z
Sanjeev Basker
16799
OCR
1958777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>சுதனும் மதனும்
அனாமியும்
சிறுவர் சுதை
முதற்பதிப்பு : டிசம்பர், 2022
ஆசிரியர்
இரா. அரிசுரசுதன்
poetsuthan@gmail.com, +91 94434 83074
ஓவியங்கள்
முரளிதரன், சென்னை
வெளியீடு
நோசன் அச்சகம்
வண்ணமும் வடிவமைப்பும்
அனலி
பயன்படு எழுத்துருகள் : Tam- Tamil004, Tam- Tamil108
தாள் : Art paper Matte, தாள் அளவு : 8.5" x 8.5"
ISBN: 979-888923145-5
உரிமம்: ஆசிரியருக்கு
அனுமதிபெற்று சல்வி விழிப்புணர்வு சமூக நோக்கில்
மற்றையோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.<noinclude></noinclude>
4s7lf5nl3gr7mnos0i5dbkvr6c26cb3
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/4
250
651702
1958778
2026-08-20T09:21:30Z
Sanjeev Basker
16799
OCR
1958778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>الية
As
田
சுதனும் மதனும்
அனாமியும்
ஒரு விடுமுறை நாள்.
மதனைச் சுதன் விருந்துக்குக் கூப்பிட்டிருந்தான்.
பூவரச மரமும் புன்னை மரமும்
நின்றிருந்த சுதனின் வீட்டிற்கு வந்த
மதனை வரவேற்று உபசரித்தார்கள் சுதனின் அம்மா.
03
83<noinclude></noinclude>
oz08ampwnwu00bzx3sl6bc8xfu0t0e8
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/5
250
651703
1958779
2026-08-20T09:21:51Z
Sanjeev Basker
16799
OCR
1958779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>Aon
சுதனின் அம்மாவை மதனும்
அம்மா என்றே அழைப்பான்.
மதனின் அம்மாவைச் சுதனும் அம்மா என்றே
அழைப்பான்.
மத்தியானச் சாப்பாட்டிற்கு நல்ல
சாளை மீன் அவியல், சூரத்துண்டுப் பொரியல்.
மஞ்சத் தண்ணீ மீன்குழம்பு என
வித விதமாப் பரிமாறி வயிறு நிறைய
திங்க வச்சாங்க அம்மா.
சாப்பிட்டப் பிறகு, அதற்கு மேல் பாச்சோறு,
கருப்புக்கட்டி அல்வா, மாவுருண்டை என்று
கடல்கரைக்கே உரித்தான
சிறப்பு இனிப்புப் பண்டங்களும்
திங்கக் கொடுத்தார்கள்.
அதுக்க மேலயும் வீட்ல இருந்தா
அம்மா இன்னும் ஏதாவது
சாப்பிடத் தந்திருவாங்க என்று
இரண்டு பேரும்
அம்மாவிடம் சொல்லிவிட்டுக்
04
கடற்கரைக்கு ஓடினார்கள்.
இரா. அரிகரசுதன்<noinclude></noinclude>
h12vyganbr2rcgogi68opyw5np6yurd
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/6
250
651704
1958780
2026-08-20T09:22:08Z
Sanjeev Basker
16799
OCR
1958780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>சுதனும் மதனும்
அனாழியும்
ह
90
05<noinclude></noinclude>
1hw6j26rjgdzlczzcmdjyak22gyloum
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/7
250
651705
1958781
2026-08-20T09:22:36Z
Sanjeev Basker
16799
OCR
1958781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>06
கடலில் அலைகள்
ஒன்றன் பின் ஒன்றாக
வந்து கொண்டே இருந்தன.
முகத்தில் கச்சம் அடித்தது
இன்பமாக இருந்தது.
சுதனும் மதனும்
அலை நுரையை அள்ளி எறிந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அலைநுரையை அள்ள அவர்கள்
குனிந்தபோது மண்ணில்
ஓடலும் நண்டுகளும்
ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.
சுதன் ஓடலப் பிடித்து
மதனின் உள்ளங்கையில் விட்டான்.
அது குடு குடுவென்று ஓடும் போது,
மதனுக்குக் கூச்சமாக இருந்தது.
சிரித்துக் கொண்டே அதைக்
கீழே போட்டு விட்டான்.
அந்த ஒடலோ
ஈர மணலைத் துளைத்துக் கொண்டு
உள்ளே சென்று விட்டது.
அதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மதனை
மேலும் ஆச்சரியப்பட வைத்தது கடல்.
இரா. அரிகரசுதன்<noinclude></noinclude>
n2drxkkb5pbo5enqdouptquwduyyff8
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/8
250
651706
1958782
2026-08-20T09:22:57Z
Sanjeev Basker
16799
OCR
1958782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>திடீரென்று கடல் தண்ணீர் குறைந்து கடல் உள்வாங்கியது.
அலை அடித்துக் கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் வற்றிப்போய்
பாறையும் மணலும் தெரிய ஆரம்பித்தன.
அங்கங்கே மீன்களும் துள்ளி மினுங்கிக் கொண்டிருந்தன.
அதைப் பார்த்த மதன், 'ஐய்யா.. மீனு' என்ற சத்தமிட்டவாறே
மீன்களைப் பிடிக்க ஓடினான்.
சுதனும் மதனும்
அனாமியும்
ஆனால் சுதனோ மதனைத் தடுத்து நிறுத்திவிட்டான்.
அவனை மீன் பிடிக்க விடவில்லை.
'உள்ளே போகாதே, ஆபத்து.' என்று எச்சரித்தான்.
07<noinclude></noinclude>
8ijn5ryv80id3ax9pvjekghspt46q5t
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/9
250
651707
1958783
2026-08-20T09:23:45Z
Sanjeev Basker
16799
OCR
1958783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>"2004ஆம் ஆண்டு
கன்னியாகுமரியில் சுனாமி வரும்போது இப்படித்தான்,
முதலில் கடல் உள்வாங்கியிருக்கின்றது.
அதப்பார்த்த நிறைய பேர் மகிழ்ச்சியில் ஒன்றும் தெரியாமல்
சிப்பி, சங்கு பொறுக்கவும் துள்ளிக் கொண்டிருந்த மீன்களைப் பிடிக்கவும்
உள்ளப் போயிருக்காங்க.
அந்த சமயம் பார்த்துச் சுனாமி வந்து நிறையப் பேரை
கடல் இழுத்துச் சென்றுவிட்டது.
எங்க அம்மா எனக்கு இதக் கதையா நிறையத் தடவைச்
சொல்லித் தந்திருக்காங்க.
ஓடிவா.உடனே அம்மாக்கிட்ட சொல்லிவிடுவோம்."
என்று மதனை அழைத்துக் கொண்டு
வீட்டிற்கு ஓடினான் சுதன்.
இரா. அரிகரசுதன்
88
08<noinclude></noinclude>
9z7evpb083m2xylcfh2mxlta9t72oea
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/3
250
651708
1958784
2026-08-20T09:24:55Z
Farzana Jamesha
16881
OCR
1958784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Farzana Jamesha" /></noinclude>காதல்
பிறந்த
(கவிதைத்
கவிமணி
கதை
தொகுதி)
9. தேசிக விதாயகம் பிள்ள<noinclude></noinclude>
b33622hvevz32xi0ka8pnkko3py1ncm
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/10
250
651709
1958785
2026-08-20T09:25:17Z
Sanjeev Basker
16799
OCR
1958785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>But
10
சுதனும் மதனும்
அனாமியும்
09
99<noinclude></noinclude>
fl0qjznshkpkfa34g5ryfnii2h1aifc
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/11
250
651710
1958786
2026-08-20T09:25:44Z
Sanjeev Basker
16799
OCR
1958786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>10
இரண்டு பேரும்
மூச்சு வாங்கிக் கொண்டே
போட்டி போட்டுச் சொன்னதைக்
கேட்ட அம்மா.
உடனடியாகத் தொலைக்காட்சிப் பெட்டியை
இயக்கினார்கள்.
எல்லா நிலையங்களும்
சுனாமி எச்சரிக்கைச் செய்திகளை
ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.
கடல்கரைக் கிராமங்களில் வசிப்பவர்களை
உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச்
சென்றுவிடச் சொல்லி தொலைக்காட்சியில்
அறிவிப்புகள் வந்து கொண்டே இருந்தன.
வெளியே வந்த அம்மா. பக்கத்து வீட்டில்
உள்ளவர்களோடு பேசினார்கள்.
அவர்களும் பரபரப்பாக இருந்தார்கள்.
பதட்டத்துடனே பேசினார்கள்.
ஊர் முழுக்க அதற்குள்ளாக
அனைவருக்கும்
தகவல் தெரிந்துவிட்டது.
இரா. அரிகரசுதன்<noinclude></noinclude>
il0tgsumcyiqdxszko1h6wyl35v1oct
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/12
250
651711
1958787
2026-08-20T09:26:05Z
Sanjeev Basker
16799
OCR
1958787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>மீனவர்கள் வள்ளங்களையும்,
கட்டுமரங்களையும்,
மோட்டார் படகுகளையும்
கரையிலிருந்து கிளப்பிக் கடலுக்குள்
கொண்டு நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.
வருத்தம் தோய்ந்த முகத்தோடு
வீட்டிற்குள் நுழைந்த அம்மாவை
மதனும் சுதனும் பாவம்போலப் பார்த்தார்கள்.
மதன் சுதனையும் அம்மாவையும்
அவன் வீட்டிற்கு வந்துவிடுமாறு அழைத்தான்.
பதில் பேசாமல் தயங்கியபடியே நின்ற
அம்மாவின் கையைப் பிடித்து இழுத்துக்
கட்டாயப்படுத்தி ஒத்துக்கொள்ளச் செய்தான்.
முக்கியமான சான்றிதழ்கள்,
நியாயவிலைக்கடை அட்டை,
அடையாள அட்டைகள்,
நிலப் பத்திரங்கள், நகைகள் போன்றவற்றையும்
ஒரே ஒரு மாற்றுத் துணியைச் சுதனுக்கும்
சேர்த்து எடுத்துக் கொண்டு பத்தே நிமிடத்தில் கிளம்பி விட்டார்கள்.
சுதனும் மதனும்
அனாமியும்
11<noinclude></noinclude>
4kracifiuviai9lbgfcqyj6fa08r7h6
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/13
250
651712
1958788
2026-08-20T09:26:29Z
Sanjeev Basker
16799
OCR
1958788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>12
ஊரில் எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்கு
அவர்களைப் போன்றே சென்று கொண்டிருந்தார்கள்.
நாய், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை
அனைவரும் சுதந்திரமாக அவிழ்த்து விட்டிருந்தார்கள்.
அவை தெருக்களில்
அங்கேயும் இங்கேயும் சென்று கொண்டிருந்தன.
பாவம் அவையும்
உயிர் பிழைக்க வேண்டும் அல்லவா!
இரா. அரிகரசுதன்<noinclude></noinclude>
0n3krh7p7yeukf636of35qcxsd8hf9x
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/14
250
651713
1958789
2026-08-20T09:26:50Z
Sanjeev Basker
16799
OCR
1958789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>மதனின் வீட்டில்,
அன்பாக வரவேற்ற
மதனின் அப்பாவும் அம்மாவும்
சுதனின் நெற்றியில் முத்தமிட்டார்கள்.
வந்தவர்களுக்கு காய்ச்சிக்கிழங்கு அவித்துத்
தேயிலை போட்டுக் குடிக்கக் தந்தார்கள்
மதனின் அம்மா.
கூடவே தனியாகப் பயறும் காணமும்
உளுந்தும் அவித்து வெங்கலத் தட்டில்
வைத்துத் திங்கக் கொடுத்தார்கள்.
தேங்காய்த் தூவிய உளுந்தும் காணமும்
என்றால் மதனுக்கு
மிகவும் பிடிக்கும்
கைநிறைய அள்ளித் தின்பான்.
சுதனும் விரும்பித் தின்றான்.
மதன் சுதனின் வீட்டில்
சாப்பிட்ட பாச்சோறைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தான்.
சுதனும் மதனும்
அனாழியும்
13<noinclude></noinclude>
9vim231zxjv1pwqutozen0fftxxhwlf
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/11
250
651714
1958791
2026-08-20T09:27:05Z
Neyakkoo
7836
ocr
1958791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>1. இருளில் ஒளி
இந்தியாவின் தொல் பழங்கால வரலாறு, நாற்பது
ஆண்டுகளுக்கு முன்பு வரை, கற்காலப் பழம்பொருள்
சின்னங்களுக்கு விளக்கம் தருவதில் தொடங்கியது. அடுத்து
ஆரியர் இந்தியாவிற்கு வந்த வரலாற்றைக் கூறும். (கற்காலத்திற்கும்,
ஆரியர் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தைப்பற்றி ஒன்றும்
சொல்ல இயலாது அமைதியாக இருக்கும்.) இதனால், 'வேதகால
நாகரிகத்திற்கு முன்பு இந்திய மண்ணில் நாகரிகத்தின் நறுமணம்
வீசியது இல்லை' என்று வீறுடன் அறிஞர்கள் எழுதியும் பேசியும்
வந்தனர். இந்தியாவின் வரலாறு, கி.மு.1500-க்கு முற்பட்டதன்று
என்று மேனாட்டாசிரியர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறினர்.
ஆனால் கி.பி.1920-க்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற
தொல்பொருள் ஆராய்ச்சி, இந்திய வரலாற்றின் தொடக்கமும்
தொன்மையும், ஈடும் இணையுமற்றன என்பதை உலகம் அறியச்
செய்தது. சிந்துநதி பாயும் பெருவெளியில் செய்யப்பட்ட
இவ்வாராய்ச்சி, இந்திய வரலாற்று வானில் கவ்வி இருந்த
இருளைப் போக்க நல்லதொரு நாகரிகத்தின் ஒளியைத்
தந்துதவியது.
சிந்துவெளி நாகரிகம் மக்களின் வரலாற்றிற்குப் புத்தொளி
தந்து புதியதொரு பொலிவினை அளித்திருக்கிறது. இந்திய
வரலாற்றின் 'இருண்ட காலத்தை' எழில்மிக்க பொற்காலமென
இயம்புகிறது; இந்திய நாகரிகத்தின் அடிப்படைப் பண்புகளாக
விளங்குவன யாவும், சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பியல்புகளே
என்னும் வரலாற்றின் குரலைக்கேட்டு உலகம் வியக்கும் வண்ணம்
செய்துள்ளது. சிந்துவெளி நாகரிகம் இந்தியாவின் தொன்மைக்கு
ஓர் அளவுகோல்; இந்தியப் பண்பாட்டில் சிறப்பிற்கு ஓர் உரைகல்
என்னும் அரிய உண்மையை உலகிற்கு உணர்த்துகிறது.
சிந்துவெளியின் சின்னங்கள்
1920-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில், இரவி சட்லெஜ்
ஆறுகளுக்கிடையில் தோண்டியபொழுது 'அரப்பா' என்னும்
இடம் அகப்பட்டது. 1922 - இல் சிந்து மாநிலத்தில், லர்க்கானா
மாவட்டத்தில் இருந்த எழுபது அடி உயரமுள்ள மண்மேடு ஒன்று
2 * க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
rgvzq21276w2syy2qq5vrhkb9g4yxcs
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/15
250
651715
1958792
2026-08-20T09:27:07Z
Sanjeev Basker
16799
OCR
1958792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>கடற்கரை
என்ன
ஆனதோ
என்று
தொலைக்காட்சிப்
பெட்டியின்
முன்னே
14
பெரியவர்கள்
வருத்தத்தோடு
உட்கார்ந்திருந்தார்கள்.
நிலையத்தில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி
சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கடலையும்
தொடர்ந்து காட்டிக் கொண்டே இருந்தார்கள்.
கடலில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எல்லோரும் கவனமாகப் பார்க்க
ஆரம்பித்தார்கள்.
அதுவரை கவனிக்காமல் இருந்த சுதனும் மதனும்கூட மெதுவாகச்
மதனின் அப்பாவின் இருபக்கங்களிலும்
ஆளுக்கு ஒருவராக ஒட்டிக் கொண்டு இருந்தார்கள்.
சுனாமி எதுக்கு வருது? என்று மதன் கேட்டான்.
மதனின் அப்பா பதில் சொல்ல ஆரம்பித்தார்.
இரா. அரிகரசுதன்<noinclude></noinclude>
qn7llhprtzfrsnt4ykhuu9hcsr87eri
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/16
250
651716
1958793
2026-08-20T09:27:28Z
Sanjeev Basker
16799
OCR
1958793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>Crust
Mantle
Upward Wave
Fault Line
கடலுக்குள் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது உண்டு.
அப்போது நிலம் இரண்டாய்ப் பிளக்கும்.
பிளவின் உள்ளே கடல் நீர் வேகமாக இறங்கும்
பின் முன்னிலும் வேகமாய் வெளியே வரும்.
அப்படி வேகமாக வெளிவருகிற நீர் அலையாகக் கிளம்பும்
அது கரைக்கு வர வர மிக உயரமான அலையாக உருமாறி
ஊருக்குள் புகுந்து விடும்.
கடல்கரை ஓரங்களில் அலையாத்திக் காடுகளும் மணல் திட்டுகளும்
முன்பு அதிகமாக இருந்தன அவை சுனாமி அலைகளின் வேகத்தைத் தடுத்து
மக்களைக் காப்பாற்றி வந்தன.
ஆனால் தற்போது அவற்றைப் பணத்திற்காகவும்
சுதனும் மதனும் வேறுகாரணங்களுக்காகவும் நாம் அழித்து விட்டோம்.
அனாழியும்
அது அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.
15<noinclude></noinclude>
klhud15b48rhzajz4ar5ebpebyz4tjz
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/67
250
651717
1958794
2026-08-20T09:27:42Z
Nethrama
16879
ocr
1958794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethrama" /></noinclude>“ராமகிருஷ்ண விஜயம்”
வாழ்த்து
இனிய தமிழில் செந்தமிழில்
என்றும் தழைத்து வருந் தமிழில்
கனியும் பாலும் தேனும்கற்
கண்டும் அனைய கட்டுரைகள்
புனித கவிகள் கதைக ளெல்லாம்
பொலிய வரும் இப் பத்திரிகை
நனியிவ் வுலகில் வாழவரம்
நங்கை பாக நல்குகவே!<noinclude></noinclude>
dmfu33mlcdvoan1t2vypfxkpoh8zn7b
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/17
250
651718
1958795
2026-08-20T09:27:47Z
Sanjeev Basker
16799
OCR
1958795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>பி.
10/
16
ஆனாலும் சுனாமியை முன்னரே கண்டறிந்து இப்படி
எச்சரிக்கை விடுவதன் மூலம் தற்போது மக்களைக் காக்க முடிகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும்
நாம் எல்லோரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால், அதிக உடைமைகள் சேதம் அடைவதோடு
சேர்ந்து உயிர்ச் சேதமும் அதிகமாகிவிடும்.
மதனின் அப்பா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கடலில்
பனைமரம் உயரத்திற்குப் பெரிய அலை ஒன்று வந்து கொண்டிருந்தது.
அதற்கு அடுத்த அலையோ, இரண்டு பனை மரம் உயரத்தையும்
தாண்டி எழும்பி வந்து கொண்டிருந்தது.
இரா. அரிகரசுதன்<noinclude></noinclude>
mc37t4admvbfpd162p3brm9l78nc7l9
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/41
250
651719
1958796
2026-08-20T09:27:48Z
Vishali Saravana Kumar
16801
ocr
1958796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>தமிழ் கற்போம்
(வெண்பா)
தெய்வம் தொழுவோம்
திருந்தத் தமிழ்கற்போம்
செய் வினையும் நன்றாகச்
செய்திடுவோம்- ஐய மின்றி
எவ்வெவ் வறமும்
இனிது வளர்த்திங்குச்
செவ்வையுற வாழ்வோம்
தினம்.<noinclude></noinclude>
aqvj1erlzidee4rdlo2i8tbqqvr1mo7
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/4
250
651720
1958797
2026-08-20T09:28:01Z
Farzana Jamesha
16881
OCR
1958797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Farzana Jamesha" /></noinclude>பதிப்புரிமை:
முதற் பதிப்பு
ஜூலை 1947.
விலை ரூபாய் இரண்டு, அணா பத்து.
மதறாஸ் ரிப்பன் பிரஸ், ராமச்சந்திரபுரம்<noinclude></noinclude>
8xh8dgvg7xgdshwazy9qahmc51e28se
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/12
250
651721
1958798
2026-08-20T09:28:06Z
Neyakkoo
7836
ocr
1958798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கருத்தைக் கவர்ந்தது. அம்மேட்டின்
மேல் உயர்ந்த புத்த சமயத் தூண் ஒன்று நாட்டப்பெற்று இருந்தது.
அதன் சுற்றுப்புறத்தைத் தோண்டும் வேலையில் டாக்டர் பானர்ஜி
என்னும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஈடுபட்டார். அவர்
அவ்விடத்தை அகழ்ந்தெடுத்தபோது, அதன் கீழிருந்து 1800
ஆண்டுகளுக்கு முற்பட்ட நாணயங்களைக் கண்டெடுத்தார்.
மேன்மேலும் அப்பகுதியினை அகழ்ந்தெடுத்தபோது ஓவிய
எழுத்துக்களையுடைய முத்திரைகளைக் கண்டு வியப்புற்றார்.
மாகஞ்சொதாரோவின் பழமையை இவை சுட்டிக்காட்டின.
இவ்விரு சின்னங்களும் சிந்துநதியின் கரையோரங்களில்
அமைந்துள்ளன; இவற்றிற்கு இடையே சற்றேறக்குறைய முந்நூறு
கல்தொலைவு ஆற்றுவெளி பரந்து இருக்கிறது. இவ்வெளியில்
உள்ள மண் மேடுகளை அகழ்ந்து எடுக்கும் பணியினை இந்தியத்
தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் மேற்கொண்டது.
இவை அல்லாமல், சிந்துவிலும், பலூசித்தானத்திலும் உள்ள
பல சிற்றூர்களில் சற்று ஏறக்குறைய இந்நாகரிகத்தைச் சார்ந்த
சின்னங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிறப்பு
வாய்ந்தனவாகக் கருதப்படுவன (1) குவெட்டா (2) அம்ரி (3) நல்
(4) குள்ளி-மெகி (5) சோபுவெளி ஆகிய இடங்களில் அகழ்ந்து
எடுக்கப்பட்ட பழம்பொருள் சின்னங்களாகும். அவை
ஒவ்வொன்றிலும் தனிச்சிறப்பு வாய்ந்த மண்பாண்டங்கள் பல
கிடைத்துள்ளன. அவற்றின் சிறப்பைக் காண்போம்.
குவெட்டா
குவெட்டாவின் தென்பகுதியில் இருபது இடங்களில்
காணப்பட்ட மண்மேடுகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்
அகழ்ந்தெடுத்துள்ளனர். அவ்விடங்களில் மஞ்சள் நிற
மண்பாண்டங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. அவற்றை நன்கு
ஆராய்ந்து பார்த்த பிக்கட் (Piggott) என்னும் அறிஞர்,
அவ்விடத்தில் மண்பாண்டத் தொழிற்சாலை ஒன்று இருந்திருக்க
வேண்டுமென்று கருதுகிறார். மண்பாண்டங்கள் யாவும் கண்கவர்
நேர்த்தியும் உறுதியும் உடையன; சிறந்த முறையில் நிறம்
பூசப்பெற்றுள்ளன. சிலவற்றில் விலங்குகளின் உருவங்களும்,
பலவற்றில் கீற்று ஓவியங்களும் தீட்டப்பெற்றுள்ளன. இவை
இரானில் கிடைத்துள்ள மண்பாண்டங்களோடு (கி.மு.3000)
ஒப்புமை உடையனவாக உள்ளன.
சிந்து வெளி தரும் ஒளி + 3<noinclude></noinclude>
pjf73bl4p1ojxcc8flkxgks5nwq0cjm
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/18
250
651722
1958799
2026-08-20T09:28:08Z
Sanjeev Basker
16799
OCR
1958799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>கரையைத் தாண்டி ஊருக்குள் நுழைந்திருந்த அலைகள்.
வீடுகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தன.
நின்று கொண்டிருந்த வண்டிகளையும் புரட்டித் தள்ளிக்கொண்டும்
கடலுக்குள் சுருட்டி இழுத்துச் சென்று கொண்டுமிருந்தன அலைகள்.
சுதனும் மதனும்
அனாழியும்
அதைப் பார்த்துப் பயந்துபோன சுதனையும் மதனையும்
இழுத்து அணைத்த சுதனின் அம்மா,
மதனின் நெற்றியில் அன்பாக முத்தமிட்டார்.
கண்களில் கண்ணீர் கட்டி நின்றிருந்தது.
17<noinclude></noinclude>
5chy3ddeyyvegnixb361e2eb51whvuk
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/32
250
651723
1958800
2026-08-20T09:28:17Z
Bhavana Balaji
16880
ocr
1958800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>மலர்கள்
கரும்பினிலு மினிய ரசம்
கருதி வைப்போமே-- அதை
விரும்பிவரும் நண்பருக்கு
விருந்தளிப் போமே!
௪சனருள்
வேண்டிநிதம்
இணையடி
வாசமெழு
போற்றி-- நல்ல
தூபதீபம்
வழங்கி கிற்போமே!
oe<noinclude></noinclude>
7rwy8h821h4g1as5epccsz227k4pvbz
1958818
1958800
2026-08-20T09:32:32Z
Bhavana Balaji
16880
ocr
1958818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>மலர்கள்
கரும்பினிலு மினிய ரசம்
கருதி வைப்போமே
விரும்பிவரும் நண்பருக்கு
விருந்தளிப் போமே!
ஈசனருள் வேண்டிநிதம்
-
- அதை
இணையடி போற்றி - நல்ல
வாசமெழு தூபதீபம்
வழங்கி நிற்போமே!
27<noinclude></noinclude>
39a5o0zm3b9f9ed3rwp1qc7gm6n7y4i
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/5
250
651724
1958801
2026-08-20T09:28:36Z
Farzana Jamesha
16881
OCR
1958801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Farzana Jamesha" /></noinclude>காதல் பி
தொகுதியை
தந்த
எங்கள் கை
தலை
ராமச்சந்திரபுரம்
1-7-47
ரித்தா
க்கம்
அருள் நிலயம்<noinclude></noinclude>
ldq48jkk6n5xxw9n2a6q1hhxlkmo5ec
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/42
250
651725
1958802
2026-08-20T09:28:40Z
Vishali Saravana Kumar
16801
ocr
1958802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>தமிழிசை
வெந்தழல் நீராகும்
வெள்ளெலும்பு பெண்ணாகும்.
வந்தமத வேழம்
வணங்கிடுமே - சந்தமெழப்
பாடுவா ருள்ளுருகிப்
பாடும் தமிழிசைக்கு
நீடுலகி லுண்டோ
நிகர்?<noinclude></noinclude>
c113bl73npym2a01x15xwv8omqtcmxx
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/43
250
651726
1958803
2026-08-20T09:29:13Z
Vishali Saravana Kumar
16801
ocr
1958803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ஒரு தொழிலாளியின்
முறையீடு
பாடு படுபவர்க்கே -இந்தப்
பாரிடம் சொந்தமையா
காடு திருத்தி நல்ல-நாடு
காண்ப தவரல வோ?
மந்திர மோதுவதால்-எங்கும்
வயல்வி ளைவதுண்டோ?
தந்திரப் பேச்சாலே - அரிசி
சாத மாயிடுமோ?<noinclude></noinclude>
3zq27bqwh8jn26v23dsp2cqk4saknff
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/76
250
651727
1958804
2026-08-20T09:29:20Z
Dharanipriya J
16876
Ocr
1958804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharanipriya J" /></noinclude>தாகூர் இரங்கற்பா
கலை வளர்த்த கவியரசன் தாகூரின்
றெம்மையெல்லாம் கைவிட்டு, ஐயோ
மலை விளக்கு மறைந்ததென மறைந்திட்டான்
என்னே இம் மனித வாழ்க்கை.
AROMAN
71<noinclude></noinclude>
n5kctkepk7ojncwmjn7m02zcbpn9z0c
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/33
250
651728
1958805
2026-08-20T09:29:22Z
Bhavana Balaji
16880
ocr
1958805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>எதற்காவேன்?
புல்லும் பசுவிற்காம்
பூண்டும் மருந்திற்காம்
கல்லும் திருக்கோயில்
கட்டுதற்காம் - தொல்லுலகில்
ஏழை எளியேன்
எதற்காவேன் செந்தில்நகர்
வாழும் வடிவேல்
வா.<noinclude></noinclude>
ak2elafewi6c62jvoerzbpq9cux0ekc
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/6
250
651729
1958807
2026-08-20T09:29:31Z
Farzana Jamesha
16881
OCR
1958807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Farzana Jamesha" /></noinclude>முன்னுரை
எனது அருமை நண்பர் கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளையவர்கள்
இயற்றிய பாக்களிற் சில இந்நூலில்
வெளிவருகின்றன. இவைகள் கலைமகள்
முதலிய பத்திரிகைகளுக்குச் சமீப
காலத்தில் உதவப்பட்டன. இவைகளைத்
திரட்டி, ஒரு கவிதை நூலாக வெளியிட
முன்வந்த அருள் - நிலயத்தார்க்குத்
தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.
கவிதையின் இயல்பை வரையறை
செய்வதற்குச் சில நூற்றாண்டுகளாக
நூற்றுக்கணக்கான இலக்கிய ஆராய்ச்
சியாளர்கள் முயன்று வந்திருக்கிறார்
கள். ஆனால், ஒருவரது முயற்சியேனும்
இதுவரையில் முற்றும் திருப்திகரமாய்
முடிந்துள்ளது என்று சொல்வதற்
கில்லை. சிவபெருமான் தன்மையைத்
தான் கவிதையும் கொண்டிருக்கிறது.
அவரது அடியையும் முடியையும்
மாலும் அயனுங் காண முடியவில்லை<noinclude></noinclude>
6hd75875slpd4uqmtqfbl5gz3zpzbkf
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/44
250
651730
1958808
2026-08-20T09:29:49Z
Vishali Saravana Kumar
16801
ocr
1958808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ஒரு தொழிலாளியின் முறையீடு
கட்டும் ஆடையாகது-பரு
காய்த் தனிப்ப துண்டே
சட்டி பானையெலாம்- மண்ணில்
தாமே எழுவதுண்டோ?
உழுது பயிர் செய்வோன்-வயிற்றுக்
குணவு பற்றாமல்
அழுத முதுநிதம்-நிற்ப
தறி யீரோ? ஐயா!
39<noinclude></noinclude>
nupfqtw3bjj9x8ivmkrxalzy90ztw84
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/19
250
651731
1958809
2026-08-20T09:29:50Z
Sanjeev Basker
16799
OCR
1958809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>இப்பக்கத்தில்
கதை குறித்தோ சுனாமி குறித்தோ
எதாவது எழுதியும் வரைந்தும் பாருங்களேன்.
18
இரா. அரிகரசுதன்<noinclude></noinclude>
apea7en17q8bf9id1a8m3xbnh5gnwjv
பக்கம்:ஆட்கொல்லி.pdf/3
250
651732
1958810
2026-08-20T09:29:52Z
Sujibala S
16882
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முன்னுரை ஏதோ ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனபோது அங்கு பிள்ளை வீட்டாருடன் உற்றார் உறவி னர் என்று சொல்லிக்கொண்டு அதிகம் பேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>முன்னுரை
ஏதோ ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப்
போனபோது அங்கு பிள்ளை வீட்டாருடன் உற்றார் உறவி
னர் என்று சொல்லிக்கொண்டு அதிகம் பேர் வந்திருக்க
வில்லை என்று கவனித்தேன். ஏன், என்ன என்று விசாரித்த
போது ஒரு உண்மை தெளிவாயிற்று, அவர்கள் பணக்
காரர்கள்: பணம் சேர்க்கிற காரியத்தில் மும்முரமாக
இருந்த அவர்கள் உற்றார் உறவினர் நண்பர்களை லக்ஷ்யம்
செய்யாதது மட்டுமில்லை. உற்றார் உறவினர் நண்பர்களை
கசக்கியே பணம் சேர்த்தார்கள். ஆகவேதான் ஒரு முக்கிய
மான கட்டத்தில் அவர்களை எல்லாரும் கைவிட்டு விட்டார்
கள் என்று அறிந்துகொண்டேன். "ஆட்கொல்லி" என்று
பணத்தைச் சொல்வதற்கு ஒரு புது அர்த்தம் அங்கு
காணக்கிடப்பது போலப்பட்டது எனக்கு. சாதாரண
மாகப் பணத்திடம் ஈடுபாடுள்ளவனை, அவனுடைய நல்ல
தனங்களைக் கொன்றுவிடும் பணம் என்றுதான் இதற்கு
வியாக்கியானம் செய்வார்கள். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில்
பணம் சுற்றத்தைக் கொன்றுவிட்டது என்பதனாலேயும்
அதற்கு ஆட்கொல்லி என்கிற பெயர் பொருந்தும் என்று
தோன்றிற்று எனக்கு.
என் மனத்தில் பல வருஷங்களாக ஊறிக் கிடந்த
இந்த விஷயத்தை வெளிக்கொணர சென்னை அகில இந்திய
ரேடியோவில் பணியாற்றும் என் நண்பர் டி. என். விசுவ
நாதன் எனக்கு உதவினார். ரேடியோவில் வாராவாரம்
வாசிக்க ஒரு நாவல் வேண்டுமென்று அவர் கேட்டபோது
இதை எழுதித் தந்துவிடுவதாக ஒப்புக்கொண்டேன். நாவலை
சுலபமானதாக, சம்பவங்கள் நிறைந்ததாக, சுலபமாக வாரா<noinclude></noinclude>
ffjox2p7zuib7t3cyaz76ab48byflq5
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/34
250
651733
1958811
2026-08-20T09:30:02Z
Bhavana Balaji
16880
ocr
1958811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>யாது சதம்?
முத்தையா வேலா
முருகா எனவோதும்
சொத்தையே தேடிச்
சுகமடைவீர்.
-
நித்தமிவ்
வீடும் களமும்
விளைநிலமும் தோப்புகளும்
மாடும் சதமாகு
மா.ocr<noinclude></noinclude>
mmly8jgfdc5havlrsoli9fifrp8bjt5
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/20
250
651734
1958812
2026-08-20T09:30:03Z
Sanjeev Basker
16799
OCR
1958812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>சுதனும் மதனும்
சுனாமியும்
வாழ்த்துகிறார்.
நாணற்காடன்
தன்னந்தனியாய் இருக்கும் கரையின் மேல் தனது அலைகளை
அனுப்பி அனுப்பி விளையாடுகிறது கடல்.
கரையை மீற மாட்டேன் என்று யாருக்கோ சத்தியம் செய்து
கொடுத்திருந்த கடல்தான் சுனாமியாக உருமாறி,
கரை மீறி தாண்டவம் ஆடியது.
உள்வாங்கும் கடல் சுனாமியாக மாற்றம் கொள்வதைச்
சுதனும், மதனும் போல் இந்தக் கதையை வாசிக்கும் யாவரும்
உள்வாங்கிக் கொள்வார்கள். அத்துணை எளிமையான கதை.
அறிவியலை, அலையாத்திக் காடுகளை அறிமுகம் செய்து வைக்கும்
அதே வேளையில் சசு மனிதர்கள் மீதான நேசத்தையும் சுற்றுத் தருகிறது
இந்தச் சின்னஞ்சிறு கதை.
கதைக்குத் தகுந்த படங்கள் சிறார்களை வாசிக்கத் தூண்டுவதாகவும்
இருக்கின்றன.
சிறார்கட்கு ஏதேனுமொரு தின்பண்டத்தையும்,
இந்த நூலையும் பரிசாகக் கொடுத்து மகிழ்விக்கலாம்.
வாழ்த்துகள்!<noinclude></noinclude>
3giqdlo03e76rbrmtmdnro335g159zy
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/7
250
651735
1958813
2026-08-20T09:30:07Z
Farzana Jamesha
16881
OCR
1958813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Farzana Jamesha" /></noinclude>யல்லவா? அதுபோலவே கவிதையின்
இயல்பையும் ஆராய்ச்சியாளர் கண்டு
பிடிக்க முடியவில்லை.
ஆனால், இம் முயற்சிகளெல்லாம்
பயன் அற்றனவா? இல்லை; இல்லவே
யில்லை.
கவிதையின் இயல்புகள் மிகப்பல.
இடந்
அவைகளும் காலந்தோறும்
தோறும் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி
வேறுபடுகின்ற
றன. அவற்றுள் ஒரு சில
அம்சங்களையே ஒவ்வோர் ஆராய்ச்சி
யாளரும் அறிய முயல்வது. எனினும்,
தாம் கூறுவதே எல்லா வகையாலும்
முற்றமுடிந்த உண்மையெனத் தாமும்
நம்பி வாசகர்களையும் மயங்கச் செய்து
விடுகிறார்கள். இக் குறையினால் இன்
னோரது நூல்கள் பயனற்றுப் போக
வில்லை. நூற்பொருள்களின் முக்கியத்
துவம் நன்றாக நம் மனத்தில் ஆழ்ந்து
பதிந்துவிடுவதற்கு இவ்வகை நூல்கள்
உதவுகின்றன. அன்றியும் இந்நூல்களை
நாம் கற்குந்தோறும் நமது அறிவு விசா
லம் அடைகிறது. கவிதை அனுபவம்
மேன்மேலும் முதிர்வதற்கு இடமேற்
படுகிறது. ஆகவே, இவ் ஆராய்ச்சி
யுரைகள் பயனுடையனவேயாம்.
ஆனால், ஆராய்ச்சியாளர்க ளெல்
லாரும் உண்மைக் கவிதைபற்றிய ஒரு<noinclude></noinclude>
5un3tv6ds7cn9tfa416h90pkgmupqm5
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/21
250
651736
1958814
2026-08-20T09:30:18Z
Sanjeev Basker
16799
OCR
1958814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>நூலாசிரியர்
தமிழகம், சுனாமி பேரிடர் சூழலில் தவித்து, தாண்டிவந்த பட்டறிவு
அனுபவங்களின் வழியே முகிழ்ந்திருக்கும் இச்சிறுவர் சதை
மனிதச் சமூகத்திற்குப் பயன்படவேண்டும் என்பதுவே
எனது நோக்கம்.
சுனாமி காலக்கட்டத்தில் மீட்பு, ஆற்றுப்படுத்துகை, மறுவாழ்வு,
விழிப்புணர்வு, பேரிடர் கல்வி என என்னளவிலும் நண்பர்களோடும்
சமூக இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு துறைகள்,
பேரிடர் மேலாண் குழுகள் என இணைந்து பணியாற்றிய நிகழ்வுகள்
இரா. அரிகரசுதன் நினைவுகளில் நின்றாடுன்றன.
அதே வேளையில், சுனாமியில் இழந்த உயிர்கள், உடமைகள் என
மனதின் கனமும் அழுத்தமும் இன்னும் நீர்த்தபாடில்லை.
அங்ஙனமே, பேரிடர் காலங்களில் தன்னலமற்று இயங்கிக் கொண்டிருக்கும்
பேருள்ளங்களையும் நாம் சந்தித்தே வருகின்றோம்.
இச்சிறுகதையின் வாயிலாக அவர்களுக்கு எனது
அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்நூலிற்கு ஓவியங்கள் வரைந்து தந்த அன்பு நண்பர்
சென்னையைச் சார்ந்த ஓளியர் முரளிதரன் அவர்களுக்கும்
இக்கதை தோன்ற ஆதாரமாயிருந்த சிறுவர்களுக்கும்
மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
M<noinclude></noinclude>
rydtvugh6h9bs5c6lq7dlw1ui5fk55g
பக்கம்:சுதனும் மதனும் சுனாமியும்.pdf/22
250
651737
1958815
2026-08-20T09:30:49Z
Sanjeev Basker
16799
OCR
1958815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sanjeev Basker" /></noinclude>சுதனும் மதனும்
அனாழியும்
அனலி கலை இலக்கியப் பள்ளி
பேரிடர் விழிப்புணர்வு சிறுகதை
நோசன் அச்சகம்
Price Rs 200.00
ISBN 979-888923145-5
9798889231455<noinclude></noinclude>
foes2xzqkaf8gb1ycdnci2mrdxwmbk8
பக்கம்:ஆட்கொல்லி.pdf/4
250
651738
1958816
2026-08-20T09:30:55Z
Sujibala S
16882
ocr
1958816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>•
if
வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான தொடர் கதையாக
அமைக்க விரும்பவில்லை நான். ரேடியோ மூலமும் கன
மான கருத்துள்ள, ஆழ்ந்து கவனிக்க வேண்டிய. ஊம்
கொட்டாமல் நின்று நிதானித்துச் சிந்திக்கவேண்டிய
நாவல் ஒன்று வெளியிட்டுவிடவேண்டும்
- சமூக சித்திரம்
என்று முன்பு எழுதிய ஒரு லேசான கதைக்குப் பரிகாரமாக
என்று எனக்குத் தோன்றியது. அப்படியே செய்தேன்.
அதற்கு வாய்ப்பளித்த என் நண்பருக்கு என் நன்றி.
தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக
நாவல் கலை தேய்ந்துகொண்டுதான் வரும். அது தவிர்க்க
முடியாத இலக்கிய விதி, தொடர்கதையும் நாவல்தானே
என்று கேட்டது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாத
தால் எழுகிற கேள்வி. தொடர்கதை என்பது இலக்கியத்
தில் ஒரு தனி ராகம்
- நாவல் என்பது தனி ராகம்.
ust-
நாவல்தான் உயர்ந்தது என்று நான் சொல்வகை.
படிக்க முடியாததுதான் உயர்ந்தது என்று நான் சொல்வ
தாக எண்ணிக்கொண்டு கேலி செய்யலாம். சந்தர்ப்ப
விசேஷங்களினால் நல்ல நாவல்கள் சிலவும் தொடர்கதைக
ளாக வெளிவந்ததுண்டு. இருந்தாலும் நாவல்தான் இலக்
கியக் கலையிலே இந்தக் காலத்தில் முதல் பிரிவு, கவிதை
கூட இன்று பின்னர் வருகிற பிரிவு தான் என்கிற திடமான
அபிப்பிராயம் உள்ளவன் நான்.
இந்த நாவலில் உருவாகிற வேங்கடாசலத்தையோ,
ஜர்னகியையோ, மருமானையோ, ஏன், கண்ணப்பனையோ
கூட நான் அனுதாபத்துக்கோ, கோபத்துக்கோ, வெறுப்
புக்கோ உரிய பாத்திரமாக நினைத்துச் சிருஷ்டித்துத் தர
வில்லை.உங்களுக்கோ எனக்கோ பிடிக்கிறது என்பதற்காக
இது இப்படி இல்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
இது இப்படித்தான் என்கிற ஒதுங்கி நிற்க முயலும் ஒரு
சிருஷ்டி தத்துவத்தைக் கடைப்பிடித்துத்தான் நான் இந்த<noinclude></noinclude>
5b0downr3coaceylyc8589ad0pw9euh
பக்கம்:ஆட்கொல்லி.pdf/5
250
651739
1958817
2026-08-20T09:32:02Z
Sujibala S
16882
ocr
1958817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude><noinclude></noinclude>
0dnida97kdbw1rn3rgvcnq5dbzkyl0s
1958819
1958817
2026-08-20T09:33:34Z
Sujibala S
16882
ocr
1958819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>iii
நாவலை எழுதினேன். சில சமயங்களில் மனிதனின் பல
ஹீனம் கலைஞனின் திடத்தை அசைத்துவிடுகிறது. அந்த
மாதிரிச் சந்தர்ப்பங்களில் "இப்படி நேர்ந்துவிட்டதா?
இனிமேலாவது ஜாக்கிரதையாக இருக்க
அடாடா[
.
வேண்டும்" என்று எண்ணிக்கொண்டு மேலே முயற்சி
செய்யவேண்டியது கலைஞனின் கடமை. இந்த மாதிரி பல
ஹீனம் இந்த நாவலைப் பற்றியவரையில் கடைசிக் கட்டத்
தில் ஒரு இடத்தில் வந்துவிட்டதாக எனக்குத் தோன்று
கிறது. வேங்கடாசலத்தின் ஒரு மருமான் கல்யாணத்துக்கு
வந்திருக்கிறான். இன்னொரு மருமான் சமையல்காரனாகப்
பெண் வீட்டார் வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறான்
என்று நான் முடிக்கிற இடம் தொடர்கதை ரஸிகர்களுக்கு
என்று ஏற்பட்ட மெலோட்ராமா (mclodrama). அதிகப்
படுத்திக் கூறல், கோயின்ஸிடென்ஸ் (coincidence) என்
கிற வகையைச் சேர்ந்துவிட்டது. அதை நான் மாற்ற
முயலவில்லை; அப்படித்தான் வந்தது. போகட்டும் என்று
விட்டுவிட்டேன்.
.
இந்த ஒதுங்கி நிற்கிற தத்துவ விஷயத்தில் உலகத்தில்
பெரிய கலைஞர்கள், சிருஷ்டி கர்த்தாக்கள் எல்லோரும்
ஒன்றுதான். அதை விவாதிக்க, விவாதித்து முடிவுகட்ட
இது இடமல்ல; ஓரிரண்டு கோடிகள் மட்டும் காட்டு
கிறேன். ஹாம்லெட்டைப் பற்றிக் கவிஞன் நம்மை அழச்
சொல்கிறானா? அனுதாபப்படச் சொல்கிறானா? கோவலன்-
கண்ணகி முடிவைப் பற்றி எண்ணி நம்மைச் சிலப்பதிகார
ஆசிரியன் கண்ணீர் உகுக்க எங்காவது சொல்லி இருக்கிறானா?
பின்னர் எழுந்த நாடகங்களையும், நடுக்கால, ஐயோ அந்தோ
பரிதாப வியாக்கியானங்களையும் வைத்துக்கொண்டு சொல்
லாதீர்கள்."கடவுள் போல மறைந்து சிருஷ்டிக்குப் பின்
ஒதுங்கி நின்று நகத்தைக் கிள்ளுவதில் ஈடுபட்டிருப்பவன்
கான் கலைஞன்" என்பது முப்பது வருஷங்களுக்கு முன்<noinclude></noinclude>
dq722y6tpaqga0edt6q7p9aac82pzko
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/59
250
651740
1958820
2026-08-20T09:33:38Z
~2026-45528-39
16883
Ocr
1958820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="~2026-45528-39" /></noinclude>-54
மனமெரிந்து
காதல் பிறந்த கதை
அப் பாதகரைச் சபிக்கின்றாள்.
சாபம் பலித்த தென்பது திருவிதாங்கூர் சரித்திரத்
தால் நன்கு விளங்கும். ஸ்ரீ பத்மநாபன் இராணி
யின் குல தெய்வமாம்.
மக்காள்! மக்காள்! வளர்த்த பைங் கிளிகாள்!
வஞ்சி நாடாள வந்த மகிபர்காள்!
பாவியென் மடியும் பக்கமும் இருந்தீர்
இக்கண மன்றோ இறங்கிச் சென்றீர்!
எமனும் இதற்குள் எங்கிருந் திறங்கினன்?
உயிரிழந்தீரோ? உறங்குகின் றீரோ?
ஐம்பொறி கெட்டென் அறிவும் ஓய்ந்திட
ஐவரும் குளத்தில் ஆழ்ந்து போனீரோ?
ஒரு குலைக் காயும் ஒன்றாய் உதிர்ந்ததோ?
வஞ்சனை! வஞ்சனை! மாடம் பிகளும்
எட்டு வீட்டாரும் இயற்றிய வஞ்சனை!
இரக்கம் சிறிதும் இல்லா அரக்கர்!
'கொட்டாரம்' தீக் கொளுத்திய நீசர்!
மாமன் ஆதித்த வர்மனை விஷத்தால்
மாளச் செய்தமா பாதகர்! ஐயோ!
நாடும் இவரால் காடாய் விட்டதே!
புலிசூழ் வனத்தொரு புல்வாய் ஆனேன்.
நாடிருந் தென்ன நகரிருந் தென்ன?
அணிதேர் புரவி ஆளிருந் தென்ன?
உண்மையில் உற்றார் ஒருவரும் இல்லை இன்(று)
எவரும் துணையிலா ஏழையாய் நின்றேன்.
எமன்வாய்த் தவறிய இவ்வொரு மகற்காய்
உயிர்கொண் டிருந்தேன்; உயிர் கொண்டிருந்தேன்.
கொடியர்! கொடியர்! அறவே கொடியர்!<noinclude></noinclude>
0fn0rmx4xpglh2ifmdjuc5jrd4z17mw
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/45
250
651741
1958821
2026-08-20T09:33:59Z
Vishali Saravana Kumar
16801
ocr
1958821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>40
காதல் பிறந்த கதை
ஆடை நெய்திடுவோன்- போர்க்கும்.
ஆடை யில்லாமல்
வாடை கொண்டு நிதம் - கிடந்து
வருந்த லாமோ?ஐயா!
வீடு கட்டுமொரு - கொத்தன்
விடுதி யில் லாமல்
ஆடு மாடுகள் போல்-உலகில்
அலைய லாமோ? ஐயா!
க-நீங்கள்
கோடி கோடியாக-1
குவித்திடும் லாபம்
வாடும் எம் மக்கள்-உண்ணா
வயிற்றுச் சோறலவோ?<noinclude></noinclude>
9aevxoi4gjw2mzkrn86gtpiovyd77d7
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/46
250
651742
1958822
2026-08-20T09:34:51Z
Vishali Saravana Kumar
16801
ocr
1958822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ஒரு தொழிலாளியின் முறையீடு
மனம் திரியாமல்
காலை
மாலை யெப் பொழுதும்
41
குனிந்து வேலை செய்வோர்-கும்பி
கொதிக்க லாமோ? ஐயா!
வாழ
வேண்டுமெனில்
- தொழில்கள்
வளர வேண்டு மையா
ஏழை என்றொருவன்- உலகில்
ரக்கலாகா தையா.<noinclude></noinclude>
ak1559ulxe89m7ntaim9gav2kksup1x
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/51
250
651743
1958823
2026-08-20T09:35:06Z
Madhumitha kanagavijayan
16802
Agree
1958823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>46
காதல் பிறந்த கதை
நந்தாத பரஞான
வமுதுண்டு தெவிட்டெறியும்
நற்பரமா னந்தனருள்
பெறச்சென்ற, நண்பா நீ
வந்தாலே மறுமொழியும்
வகுப்பமெனச் சோதிட நூல்
வல்லாருங் கூறுகின்றார்;
வகையேதும் அறியேனே!''
45
இந்தப் பாட்டைக் கண்டதும் நண்பர் விரைந்து
வந்தார் என்பது சொல்லவும் வேண்டுமோ!<noinclude></noinclude>
apxab3nur5q8u58ctey1vbc8sjbeuyy
1958830
1958823
2026-08-20T09:37:24Z
Madhumitha kanagavijayan
16802
1958830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>46
காதல் பிறந்த கதை
நந்தாத பரஞான
வமுதுண்டு தெவிட்டெறியும்
நற்பரமா னந்தனருள்
பெறச்சென்ற, நண்பா நீ
வந்தாலே மறுமொழியும்
வகுப்பமெனச் சோதிட நூல்
வல்லாருங் கூறுகின்றார்;
வகையேதும் அறியேனே!''
இந்தப் பாட்டைக் கண்டதும் நண்பர் விரைந்து
வந்தார் என்பது சொல்லவும் வேண்டுமோ!<noinclude></noinclude>
5qqx1iodk1wyim9tbg296t4n74vin0r
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/47
250
651744
1958824
2026-08-20T09:35:28Z
Vishali Saravana Kumar
16801
ocr
1958824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ஒத்துழைப்பு
இம்மை வாழ்வுக்கும் - மறுமைக்
கினிய வாழ்வுக்கும்
செம்மை வழிசொல்வோம்- சற்றே
செவி கொடுப் பீரையா.
எத்தனை ஜென்மங்களோ-முன்னம்
எடுத்தெடுத்தலுத்தோம்
எத்தனை ஜென்மங்களோ- இன்னும்
எடுக்கப் போகின்றோம்.
துன்பச் சுழியிலே- விழுந்து
சுழன்று மூலாமல்
இன்ப வாழ்வடையும்- வழியை
எண்ண வேண்டுமையா.<noinclude></noinclude>
40dind8zkt81tu4rvgm0brctnano5jr
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/35
250
651745
1958826
2026-08-20T09:36:29Z
Bhavana Balaji
16880
ocr
1958826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>எழுந்திடு
கா கா கா என்று
காகம் பறக்குது பார்!
கிழக்கு வெளுக்குது பார்
கிரணம் பரவுது பார்!
அப்பா எழுந்திரையா!
அரசே எழுந்திரையா!
கொக் கொக்கோ என்று
கோழி அதோ கூவுதுபார்!<noinclude></noinclude>
hu5efqokg0skc5waytq8x4l6v9keie5
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/48
250
651746
1958827
2026-08-20T09:36:40Z
Vishali Saravana Kumar
16801
ocr
1958827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ஒத்துழைப்பு
ஒருவர் வாழ்ந்திடலும் - உலகில்
ஒருவர் தாழ்ந்திடலும்
அரிய தெய்வத்தின்- செயலென்
றறைதல் வீணேயாம்.
வீடு கட்டி வைத்துத் - தந்தை
வேண்டும் பொருள் வைத்தார்
மக்கள்
கூடி வாழாமல்
குத்திச் சாகின்றார்.
ஈசன் மீதிலே - பழியை
ஏற்ற லேனையா
நாச மாவதற்கு-மூலம்
நாமே தானையா.
வைய மெங்குமே- காணும்
வாழ்வு தாழ்வெல்லாம்
செய்வினைப் பயனாம் - இதிற்
சிறிதும் ஐயமில்லை.
உலகம் முழுவதும் - நோக்கின்
ஓருடம் பேயாம்
அலகில் ஜீவ ரெலாம் - அதன்
அவயவங் களேயாம்.
உடலுறுப்புகள் போல்- உலகில்
ஒத்துழைப்போமேல்
தடையிலாமலே - க்ஷேமம்
தழைத்து வருமையா.
43<noinclude></noinclude>
4caw7k4tkxytffudsu6by1no5o7atjq
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/36
250
651747
1958828
2026-08-20T09:36:53Z
Bhavana Balaji
16880
ocr
1958828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>31
அரசே எழுந்திரு
பூ மலர்ந்த ரோஜா
புதிய மணம் வீசுது பார்!
வந்து வந்து வண்டு
வட்டம் சுழலுது பார்!
கறவைப் பசுவை அதன்
கன்று சுற்றித் துள்ளுது பார்!
பால் குடிக்க வேண்டாமோ?
பழம் தின்ன வேண்டாமோ?
பாடங்க ளெல்லாம்
படித்திட வேண்டாமோ?
சீக்கிரம் பள்ளிக்குச்
சென்றிட வேண்டாமோ?<noinclude></noinclude>
7tc4pro3d5ka17yx8u64jfajk9zoj1t
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/37
250
651748
1958829
2026-08-20T09:37:21Z
Bhavana Balaji
16880
ocr
1958829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>32
காதல் பிறந்த கதை
காலையும் ஆச்சுதையா!
கண் விழித்துப் பாரையா!
அப்பா எழுந்திரையா!
அரசே எழுந்திரையா!<noinclude></noinclude>
9jo94204a39t506qwmcb20n5dc91jqn
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/77
250
651749
1958831
2026-08-20T09:37:42Z
Dharanipriya J
16876
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ Ocr
1958831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharanipriya J" /></noinclude>கஸ்தூரிபாய் இரங்கற்பா
வையம் புகழும் காந்திமகான்
வாழ்க்கைத் துணையாய் வாழ்ந்துநிதம்
செய்யும் தொழில்கள் ஒவ்வொன்றும்
திருந்தச் செய்து கண்கண்ட
தெய்வம் கணவன் என்றுள்ளம்
தெளிந்த தாயே நீயெம்மை
வெய்ய துயரில் வீழ்த்தியின்று
விண்ணா டாளச் சென்றனையே.<noinclude></noinclude>
gz6wnvai9gie8cbvjrosxd3zje7ctak
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/38
250
651750
1958833
2026-08-20T09:37:48Z
Bhavana Balaji
16880
ocr
1958833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>கூண்டுக் கிளி
சிறுவன் :
பாலைக் கொண்டு தருகின்றேன்.
பழமுந் தின்னத் தருகின்றேன்
சோலைக் கோடிப் போகவழி
சுற்றிப் பார்ப்பதேன் கிளியே?
காட்டி லென்றும் இரைதேடிக்
களைத்திடாயோ உனக் கிந்தக்
கூட்டில் வாழும் வாழ்வினிலே
குறைகளே தும் உண்டோ சொல்?
கிளி :
சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியாப் பாலகனோ
எண்ணி வினைகள் செய்யானோ?
பாலும் எனக்குத் தேவையில்லை
பழமும் எனக்குத் தேவையில்லை
சோலை எங்கும் கூவிநிதம்
சுற்றித் திரிதல் போதுமப்பா!<noinclude></noinclude>
eqimkoo8bm38jryh33gwrmpvn6irmfb
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/49
250
651751
1958834
2026-08-20T09:37:49Z
Vishali Saravana Kumar
16801
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "44 காதல் பிறந்த கதை வறுமை அண்டாது - கொடிய வழக்கும் வாராது சிறுமை தருஞ்செயல் - ஏதும் தீண்ட மாட்டாது. எமனை அஞ்சாமல்-தீமை யாது மில்லாமல் அமர வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>44
காதல் பிறந்த கதை
வறுமை அண்டாது - கொடிய
வழக்கும் வாராது
சிறுமை தருஞ்செயல் - ஏதும்
தீண்ட மாட்டாது.
எமனை அஞ்சாமல்-தீமை
யாது மில்லாமல்
அமர வாழ்வுமிந்த - உலகில்
அடைய லாமையா.
உலக க்ஷேமத்தைத் - தரும்
உண்மை யிதுவையா
பல பல வேறு - சொல்லிப்
பயனொன் றில்லையையா.<noinclude></noinclude>
07xy39xedhsattlmwx9cdy7y2fg7e8x
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/53
250
651752
1958835
2026-08-20T09:37:58Z
Madhumitha kanagavijayan
16802
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குமரா எனை யாண்டுகொள் அமரவிளைப் புலவர் சுடலை முத்துப் பிள்ளை அவர்கள் திருச்செந்தூருக்குச் சென்று முருகனை தெரிசிக்கப்போகும் வழியில் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>குமரா எனை
யாண்டுகொள்
அமரவிளைப் புலவர் சுடலை
முத்துப் பிள்ளை அவர்கள்
திருச்செந்தூருக்குச் சென்று
முருகனை தெரிசிக்கப்போகும்
வழியில் நம் கவி மணியை
வீட்டில் சென்று தெரிசித்து
விட்டுச் செல்லலாம் என்று
கருதி கவிமணி இல்லம் சென்
றார். அப்பொழுது கவிமணி
ஆஸ்த்மா வியாதியால் மிக
வும் கஷ்டப்பட்டுக் கொண்
WA
டிருந்தார். சுடலை முத்துப் பிள்ளை முருகன்மேல் ஒரு பாடல்
பாடுமாறு கேட்க கவிமணி பாடியது.
உன்னிடத்தி லன்றி
உலகில் எவரிடம் போய்
என்னுடைய சங்கடத்தை
யானுரைப்பேன்-பன்னிருகை
ஏந்து மெழில் செந்தில்
இறைவா உனையன்றி
ஆந்துணை வேறுண்டோ
வையா.
nan nas<noinclude></noinclude>
k8mdgpya2lobhwnd2um4xodku2q852y
1958837
1958835
2026-08-20T09:38:43Z
Madhumitha kanagavijayan
16802
1958837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>குமரா எனை
யாண்டுகொள்
அமரவிளைப் புலவர் சுடலை
முத்துப் பிள்ளை அவர்கள்
திருச்செந்தூருக்குச் சென்று
முருகனை தெரிசிக்கப்போகும்
வழியில் நம் கவி மணியை
வீட்டில் சென்று தெரிசித்து
விட்டுச் செல்லலாம் என்று
கருதி கவிமணி இல்லம் சென்
றார். அப்பொழுது கவிமணி
ஆஸ்த்மா வியாதியால் மிக
வும் கஷ்டப்பட்டுக் கொண்
டிருந்தார். சுடலை முத்துப் பிள்ளை முருகன்மேல் ஒரு பாடல்
பாடுமாறு கேட்க கவிமணி பாடியது.
உன்னிடத்தி லன்றி
உலகில் எவரிடம் போய்
என்னுடைய சங்கடத்தை
யானுரைப்பேன்-பன்னிருகை
ஏந்து மெழில் செந்தில்
இறைவா உனையன்றி
ஆந்துணை வேறுண்டோ
வையா.
nan nas<noinclude></noinclude>
5d0bkev60jo3yqro5bc9msehceom9hh
1958841
1958837
2026-08-20T09:39:05Z
Madhumitha kanagavijayan
16802
1958841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>குமரா எனை
யாண்டுகொள்
அமரவிளைப் புலவர் சுடலை
முத்துப் பிள்ளை அவர்கள்
திருச்செந்தூருக்குச் சென்று
முருகனை தெரிசிக்கப்போகும்
வழியில் நம் கவி மணியை
வீட்டில் சென்று தெரிசித்து
விட்டுச் செல்லலாம் என்று
கருதி கவிமணி இல்லம் சென்
றார். அப்பொழுது கவிமணி
ஆஸ்த்மா வியாதியால் மிக
வும் கஷ்டப்பட்டுக் கொண்
WA
டிருந்தார். சுடலை முத்துப் பிள்ளை முருகன்மேல் ஒரு பாடல்
பாடுமாறு கேட்க கவிமணி பாடியது.
உன்னிடத்தி லன்றி
உலகில் எவரிடம் போய்
என்னுடைய சங்கடத்தை
யானுரைப்பேன்-பன்னிருகை
ஏந்து மெழில் செந்தில்
இறைவா உனையன்றி
ஆந்துணை வேறுண்டோ
வையா.
nan nas<noinclude></noinclude>
k8mdgpya2lobhwnd2um4xodku2q852y
1958843
1958841
2026-08-20T09:39:31Z
Madhumitha kanagavijayan
16802
1958843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>குமரா எனை
யாண்டுகொள்
அமரவிளைப் புலவர் சுடலை
முத்துப் பிள்ளை அவர்கள்
திருச்செந்தூருக்குச் சென்று
முருகனை தெரிசிக்கப்போகும்
வழியில் நம் கவி மணியை
வீட்டில் சென்று தெரிசித்து
விட்டுச் செல்லலாம் என்று
கருதி கவிமணி இல்லம் சென்
றார். அப்பொழுது கவிமணி
ஆஸ்த்மா வியாதியால் மிக
வும் கஷ்டப்பட்டுக் கொண்
டிருந்தார். சுடலை முத்துப் பிள்ளை முருகன்மேல் ஒரு பாடல்
பாடுமாறு கேட்க கவிமணி பாடியது.
உன்னிடத்தி லன்றி
உலகில் எவரிடம் போய்
என்னுடைய சங்கடத்தை
யானுரைப்பேன்-பன்னிருகை
ஏந்து மெழில் செந்தில்
இறைவா உனையன்றி
ஆந்துணை வேறுண்டோ
வையா.
nan nas<noinclude></noinclude>
5d0bkev60jo3yqro5bc9msehceom9hh
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/39
250
651753
1958836
2026-08-20T09:38:22Z
Bhavana Balaji
16880
ocr
1958836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>போதனை
உள்ள துணர வேண்டு மெனில்
உள்ளந் தெளிய வேண்டுமப்பா
கள்ளங் கபடாகா தப்பா
கருணை பெருக வேண்டுமப்பா
அள்ளி உண்ணும் உணவுக்காய்
அருமை கெட லாகாதப்பா
ள்ளத்தனையும் மரணபயம்
இல்லா திருக்க வேண்டுமப்பா
ஈசுனிசங்கி திரியவருக
கினிய காட்சி யளித்திருநந்திப்பும்
மாவும
தீசடியே கண்டிருப்பர்
ஈச னடியைக். கண்
என்றும் மௌனம் கொண்டிருபி
ஈச னடிகா ணாதவரே
எங்கும் முழங்கி அலைந்திடுவர்.<noinclude></noinclude>
aqhhf5qx4g965xpalt9t0e9iec80ny5
பக்கம்:ஆட்கொல்லி.pdf/6
250
651754
1958838
2026-08-20T09:38:44Z
Sujibala S
16882
ocr
1958838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>iv
ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய வாக்கியம். 'கண்ணீர்த்துளி வர
உள்ளுருக்குதல்" கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து
கொடுக்கால் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு
கோடி. இதுவரையில் இலக்கிய உலகில் மிகப் பெரியவர்
கள் என்று சொல்லக்கூடிய ஒரு நாலைந்து பேர்வழிகளுக்கே
கைவந்த கலை அது.
இந்த ஆட்கொல்லிச் சிந்தனையை வேறு ஒரு கோணத்தி
லிருந்து பார்த்து இன்னும் ஒதுங்கி நின்று, சிந்திக்க
வேண்டும் என்கிற ஆசை எனக்குண்டு. இன்னும் பத்து .
வருஷங்களில் கைகூடலாம் அது. அவசரம் ஒன்று
மில்லையே?
திருவனந்தபுரம்
25-3-57
௧. நா.சுப்ரமண்யம்<noinclude></noinclude>
kw69prl1oggnzl45s27s2wrswszl8ya
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/50
250
651755
1958839
2026-08-20T09:38:53Z
Vishali Saravana Kumar
16801
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மந்தாரை மலர் தேரூரில் தேவியின் நண்பர் ஒருவ ருக்கு இளமையிலேயே திருமணம் ஆனது. வீட்டுக் கவலை அந்த நண் பரைப் பற்றிக் கொண்டது. மனைவி நீண்டநா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>மந்தாரை மலர்
தேரூரில் தேவியின் நண்பர் ஒருவ
ருக்கு இளமையிலேயே திருமணம்
ஆனது. வீட்டுக் கவலை அந்த நண்
பரைப் பற்றிக் கொண்டது. மனைவி
நீண்டநாள்
பூப்பெய்தாக் குறை
வேறு. வாலிபத்
துடிப்பு மனைவியின்
பூப்பை எதிர்பார்த்து
ஏங்கி யேங்கித் தவித்
தது.
ஆள் விரக்தி
யடைந்து மதுரைக்
குப் போய்விட்டார்.
பிறகு
தகவலில்லை.
ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள் அவர் மனைவி பூப்பெய்திய
செய்தி வந்தது. கவிஞர் பின் வரும் கவியை உடனே எழுதித்
தமது நண்பருக்கு அனுப்பினார்.
"மந்தாரை மலர்ந்திருக்க
மதுவுண்ணும் வண்டெங்கே?
மாமுல்லைக் கொடிபடர்
வளருங்கொள் கொம்பெங்கே?
சிந்தாத மணியிருக்க
வொளியெங்கே சென்றதெனத்
தேரூரிற் பலர் கூடித்
தெரிந்து கொளக் கேட்டதற்கு<noinclude></noinclude>
5p97hr2yt74cibbbj42c2gsc1e0tq83
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/40
250
651756
1958840
2026-08-20T09:38:54Z
Bhavana Balaji
16880
ocr
1958840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>போதனை
என்றும் ஈசன் திருவடிகள்
இதய கமலம் சேர்ப்பீரேல்
என்றும் கருணை ததும்பியெழும்
இனிய உரைகள் உரைப்பீரேல்
என்றும் ஏழை எளியவருக்
கியன்ற உதவி புரிவீரேல்
என்றும் என்றும் இவ்வுலகில்
இன்ப வாழ்வு வாழ்வீரே.
“உமர்க்கயாம்” பாடலைத் தழுவி எழுதப்பட்டவை.
35<noinclude></noinclude>
6g2yrjc5hmby776or4t71r0lt7xbqk5
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/78
250
651757
1958842
2026-08-20T09:39:13Z
Dharanipriya J
16876
Ocr
1958842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharanipriya J" /></noinclude>கீர்த்தனங்கள்<noinclude></noinclude>
hlmcm2cr7dzv8jwisceyomonvig67h2
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/79
250
651758
1958844
2026-08-20T09:39:43Z
Dharanipriya J
16876
Ocr
1958844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharanipriya J" /></noinclude>தந்தி முகன்
இராகம் - ஹம்சத்வனி
பல்லவி
வந்தனை செய்வோமே- மலரடி
வாழ்த்தி வணங்கு வோமே
அநுபல்லவி
சிந்தனை செய்யு முன்னம்
வந்தெனக் கருள் செய்யும்
தந்தி முகனைச் சிவ
சங்கரன் மைந்தனை
சரணம்
தாளம் - ஆதி
(வந்தனை)
(வந்தனை)
இன்னமு தொழுகும் இசை-
தமிழிசை
இந்நிலத் தோங்கிடவே
கன்னல் முக்கனி அவல் கடலை மோதகமெலாம்
சந்நிதி முன்படைத்துத் தாழ்ந்து தலைகுனிந்து
(வந்தனை)<noinclude></noinclude>
b8g4013a1p1on8ibetqr5egkudhcmtn
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/52
250
651759
1958845
2026-08-20T09:39:56Z
Madhumitha kanagavijayan
16802
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ""பேஷையா!' தசாவதானி திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் திருவனந்தபுரம் ஹைக் கோர்ட் நீதிபதி பிரம்மஸ்ரீ K. G. சேஷையர் அவர்கள் தலைமையில் தசாவதானம் நட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>"பேஷையா!'
தசாவதானி திரு. ஆறுமுகம்பிள்ளை
அவர்கள் திருவனந்தபுரம் ஹைக்
கோர்ட் நீதிபதி பிரம்மஸ்ரீ K. G.
சேஷையர் அவர்கள் தலைமையில்
தசாவதானம் நடத்திக் காட்டினார்.
சபை வியந்து போற்றியது. தலை
வர் சேஷையர், ''சபாஷ், பேஷ்''
என்று மெச்சி, தேசிக விநாயகம்
பிள்ளையின் அபிப்பிராயத்தைக்
கேட்டார். உடனே ஓர் அரிய கவி
புறப்பட்டது. அன்புப் புலவர் அக்
கணமே எழுந்து நின்று,
66
ஆறுமுகம் பிள்ளை அவதானங் கண்டெளியேன்
வேறுமுக மன்கூற வேண்டுமோ? -தேறுமதிச்
சேஷையா மெச்சித் திருவாய் மலர்ந்து "ஸபாஷ்
பேஷையா " என்ற பிறகு.'
என்று பாடினார்.
சபை இந்த அவதானத்தைக் கண்டு
திகைத்து வியந்தது ! என்ன பொருத்தமான பாட்டு! இப்படி.
அவர் பாடிய பாடல்கள் கணக்கற்றவையாகும்.<noinclude></noinclude>
j2m9qlwg1d7rjwssqx0xlsle9maogvy
பக்கம்:ஆட்கொல்லி.pdf/7
250
651760
1958846
2026-08-20T09:40:08Z
Sujibala S
16882
ocr
1958846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>பொருளடக்கம்
முன்னுரை
i. நல்ல புாட்டி
2. மாமாவும் மருமானும்
3. 93-12-0
4. கொடுக்கல் வாங்கல்
பக்கம்
i
1
11
20
30
5. கிராமத்துச் செய்திகள்
39
6. சீக்குண்டாம் டாக்டருண்டாம்
50
7. அதிருஷ்ட விஷயம்
59
8. உத்தியோகத் தாழ்வு
69
9. புத்திரப் பேறு
79
10. மற்றவர்களைப் போலிருக்க
88
11.பொருளாதாரம்
12. "நீயாவது வந்தாயே!"
99
109<noinclude></noinclude>
1bsl1ezbf7krxrmv190xy3pate3tb3d
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/54
250
651761
1958847
2026-08-20T09:40:16Z
Madhumitha kanagavijayan
16802
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குமரா எனை யாண்டு கொள் தண்டனை போதுமையா தாங்க முடியாதையா கொண்ட பிணி நீங்க அருள் கூரையா- கண்டுனது வாசலில் வந்து வணங்க வலி இல்லை ஐயா ஈசனே செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>குமரா எனை யாண்டு கொள்
தண்டனை போதுமையா
தாங்க முடியாதையா
கொண்ட பிணி நீங்க
அருள் கூரையா- கண்டுனது
வாசலில் வந்து வணங்க
வலி இல்லை ஐயா
ஈசனே செந்திலிறை
வா.
பண்டிதரும் கைவிட்டார்
பத்தியமும் தீர்ந்தது யான்
உண்டமருந் தால் குணமோ
ஒன்றுமில்லை - அண்டர்
அமரா வதி காத்த
அண்ணலே செந்தில்
குமரா எனை
யாண்டு கொள்.
49<noinclude></noinclude>
kk20zdciw0axpis6rn469jesrvl74hf
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/80
250
651762
1958848
2026-08-20T09:40:18Z
Dharanipriya J
16876
Ocr
1958848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharanipriya J" /></noinclude>மாயன் மருகன்
இராகம் - தர்பார்
பல்லவி
தாளம்-ஆதி
ஐயாநீ அருள்செய்ய வேண்டும்—உன்றன்
அடியிணையன்றி வேறொரு துணையறியேன் (ஐயா)
அநுபல்லவி
ஒய்யார மாமயிலில் உல்லாசமாக வரும்
வையாபுரி முருகா மாயன் திருமருகா
சரணம்
வஞ்சவினை மலியும் உலகில் வாழும்
வழியறியாது நிதம் வருந்திடு மெளியேன்
(ஐயா)
அஞ்சிவந் துன்னையே அடைக்கலமாய்ப் புகுந்தேன்
அமரரைச் சிறைதவிர்த் தாண்ட குமரா என் (ஐயா)<noinclude></noinclude>
5ytoh5vskt3vz4dmigba5c8acwgphev
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/55
250
651763
1958849
2026-08-20T09:40:31Z
Madhumitha kanagavijayan
16802
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாய் கண்ட கனவு "நான் என் மகன் உமரை அவன் இறந்த ஒன்பதாம் நாள் இரவு கனவிற் கண்டேன். அப்பொழுது அவன் ஊக்க மும் உற்சாகமு முடையவனாகக் காணப் பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>தாய் கண்ட கனவு
"நான் என் மகன் உமரை அவன்
இறந்த ஒன்பதாம் நாள் இரவு கனவிற்
கண்டேன். அப்பொழுது அவன் ஊக்க
மும் உற்சாகமு முடையவனாகக் காணப்
பட்டான். அவனைக் கண்டவுடன் முன்
வழக்கம்போல் 'கடவுளே உமரைக்
காப்பாற்றுவாய்' என்று பிரார்த்தனை
செய்தேன், ஆனால் அது அப்பொழுது
அவனுக்குப் பிடிக்கவில்லை. கோபம்
கொண்டு பின் வருமாறு கூறினான்.''
தங்க ஒளி தந்தாய் - இன்று
சாம்பலாகி நின்றாய்.
மங்கி மாண்டவரை-
-எண்ணி
வருந்தலேனோ? அம்மா.<noinclude></noinclude>
svcgeb0k7o4wlumptsdiss4squufzlm
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/56
250
651764
1958850
2026-08-20T09:40:46Z
Madhumitha kanagavijayan
16802
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாய் கண்ட கனவு ஆழ்ந்த நரகொன்று - நீயே அமைத்து வைத்துக் கொண்டாய்; வீழ்ந்து வீழ்ந்து நிதம் - அதனில் வெந்து சாகின்றாய். கர்த்தனே என்றன் - மகன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>தாய் கண்ட கனவு
ஆழ்ந்த நரகொன்று - நீயே
அமைத்து வைத்துக் கொண்டாய்;
வீழ்ந்து வீழ்ந்து நிதம் - அதனில்
வெந்து சாகின்றாய்.
கர்த்தனே என்றன் - மகனைக்
காத்தருள்க வென
எத்தனை நாளாய்-நீயும்
இரங்கு கின்றாயம்மா.
பேசா வுயிர்களை - ஈசன்
பேண மாட்டானோ?
ஆசானும் நீயோ - அவனோ
ரறியாப் பாலகனோ?
51<noinclude></noinclude>
f1uku0d7x1s36rkolegidjcyndkf9cn
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/81
250
651765
1958851
2026-08-20T09:40:56Z
Dharanipriya J
16876
Ocr
1958851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharanipriya J" /></noinclude>தெள்ளத் தெளிந்ததையா
இராகம் - கமாஸ்
தாளம் - கண்டசாப்பு
பல்லவி
தெள்ளத் தெளிந்ததையா - உமது
கள்ளத் தனமெல்லாம்
அநுபல்லவி
வள்ளிக் குறத்தியின்
மையலில் சிக்கினால்
எள்ளத்தனை அன்பும்
என்மீ திருக்குமோ?
சரணம்
வேட்டைக் கெனஎழுவீர் கையில்
வேலையும் ஏந்திச் செல்வீர்
காட்டினைச் சுற்றியக்
கள்ளியின் தினைப்புன
IN
மேட்டுக்கே ஒருமானை
விரட்டிப் பின் ஓடுவீர்!
கட்டிச் சிறை யிடுவார்- அந்தக்
காட்டுக் குறவரென்று
தட்டழிந் துள்ளம்
தடுமாறி யல்லவோ
வெட்டை வெளியிலோர்
(தெள்ள)
(தெள்ள)
(தெள்ள
வேங்கை மர மானீர்!
(தெள்ள)<noinclude></noinclude>
o6fipl29ewo1s8bldi773rqpk0nf9r2
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/31
250
651766
1958852
2026-08-20T09:41:00Z
Bhavana Balaji
16880
ocr
1958852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>மலர்கள்
பூமகளின் புன்னகைபோல்
கம்பன்
போமே
சேல
செய்வோமே
لها
மங்கையர்க்கும் ஆடவர்க்கும்
மணமுடிப் போமே - மன்னர்
தங்கமுடி மீதும் நாங்கள்
தங்கி வாழ்வோமே!<noinclude></noinclude>
krq9b2p57y2l5akr9pxmy137rybg52n
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/57
250
651767
1958853
2026-08-20T09:41:07Z
Madhumitha kanagavijayan
16802
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "18 சிதைந்த எண்ணம் (கட்டளைக் கலித்துறை) மூடிக் கவியு மிருட் பகை நீங்கும்; இம் மூதுலகைத் தேடிக் கதிரு முதிக்கும்; கமலஞ் சிரிக்கும்' எனக் கூட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>18
சிதைந்த எண்ணம்
(கட்டளைக் கலித்துறை)
மூடிக் கவியு மிருட் பகை நீங்கும்; இம் மூதுலகைத்
தேடிக் கதிரு முதிக்கும்; கமலஞ் சிரிக்கும்' எனக்
கூடிக் குவியு மலருறை வண்டுளங் கொண்டமைய
ஆடிக் குடைந்து மதவேழம் ஓடை யழித்ததுவே.<noinclude></noinclude>
b0688c0zcj4lnx31qikvcyp7c7sm4im
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/68
250
651768
1958854
2026-08-20T09:41:12Z
Nethrama
16879
ocr
1958854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethrama" /></noinclude>"ராமகிருஷ்ண விஜயம்" வாழ்த்து
அளத்தற் கரிய பலசமய
ஆக மங்கள் அத்தனையும்
களக்கம் அறவே இரவுபகல்
கற்ற பெரியர் யாவருமே
உளத்திற் கண்டு தெளிந்தபொருள்
ஒன்றே என்னும் உண்மையினை
விளக்க வந்த ராமகிருஷ்ண
விஜயம் வாழ்க, வாழ்கவே!
கற்றுத் தேர்ந்த பண்டிதரும்
காணற் கரிய பரம்பொருளை
முற்றி முதிர்ந்த அன்பாலே
முழுதுங் கண்ட மாமுனிவன்
சொற்ற நெறியை மக்களுக்குத்
துலங்கச் செய்து நாடெங்கும்
வெற்றி காணும் ராமகிருஷ்ண
விஜயம் வாழ்க வாழ்கவே!
திருத்தம் உறவே மக்களெல்லாம்
செய்தற் குரிய பணிசெய்து
வருத்தம் இன்றி இருமையும்நல்
வாழ்வை அடையும் வழிகாணப்
பொருத்த மான உண்மைகளைப்
பொறுக்கி இனிய செந்தமிழில்
விரித்துக் கூறும் ராமகிருஷ்ண
விஜயம் வாழ்க வாழ்கவே!
63<noinclude></noinclude>
0wp5yj6phdrsixro68vp66oys3zhxec
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/58
250
651769
1958855
2026-08-20T09:41:29Z
Madhumitha kanagavijayan
16802
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஓர் இராணியின் சாபம் இன்றைக்கு 260 வருடங் களுக்குமுன் திருவிதாங்கூர் இராச்சியத்தை உமை யம்மை இராணி என்றொரு மகாராணி ஆண்டுவந்தார். அவருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>ஓர் இராணியின்
சாபம்
இன்றைக்கு 260 வருடங்
களுக்குமுன் திருவிதாங்கூர்
இராச்சியத்தை
உமை
யம்மை இராணி என்றொரு
மகாராணி ஆண்டுவந்தார்.
அவருக்கு ஆறு ஆண்மக்கள்
இருந்தனர். இராஜத்துரோ
கிகளாகிய
மாடம்பிமார்,
எட்டு வீட்டுப் பிள்ளைமார்
முதலியோர் அவருள் ஐந்து
மக்களைச் சதியாக ஒருகுளத்
துக்கு கொண்டுபோய் தண்
ணீரில் அமிழ்த்திக் கொன்று
விட்டார்கள். ஏக காலத்தில்
ஐந்து குழந்தைகளையும் பிரே
தங்களாகக் கண்ட இராணி<noinclude></noinclude>
s5n2k569s2nlpphmj9rycf5a3d0xvkk
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/30
250
651770
1958856
2026-08-20T09:41:42Z
Bhavana Balaji
16880
ocr
1958856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>வசந்தம்
'பட்டு டுத்து வாருங்கள்;
பணிகள் பூண்டு வாருங்கள்,
பொட்ட ணிந்து சீக்கிரம்
புறப் படுங்க' ளென்குது.
'வாசச் செப்பைத் திறவுங்கள்;
வாரி யெங்கும் வீசுங்கள்
ஈசன் பாத பூசனைக்
கெழுந்தி ருங்க' ளென்குது.
'வாட்ட மெல்லாம் நீங்கவே
வசந்த காலம் வந்தது
மீட்டும் நன்மை காணலாம்
விரைந்தெ ழுங்க' ளென்குது.
25<noinclude></noinclude>
8bdfp9o3mkepbkfob2u85uak5btl554
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/69
250
651771
1958857
2026-08-20T09:41:52Z
Nethrama
16879
ocr
1958857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethrama" /></noinclude>64
காதல் பிறந்த கதை
(வேறு)
வேதா கமங்கள்
விரித்த பொருளையெலாம்
ஓதா துணர்ந்த
-
உரவோனை - மாதா என்(று)
இத்தலத்து மங்கையர்கள்
யாவரையுங் காண்போனை
நித்தமுமென் நெஞ்சே
நினை.
எங்கும் நிறைபொருளாய்
எப்பொருட்கும் மேற்பொருளாய்
தங்கும் தனிப்பொருளின்
தண்ணருளால் - பொங்கு புகழ்
மாதவன் ராமகிருஷ்ணன்
வாய்மலர்ந்த பொன்மொழியெப்
போதுமென் நெஞ்சேநீ
போற்று.<noinclude></noinclude>
1xuyhx6pwfdze4t45bus2gl4t2eppku
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/29
250
651772
1958858
2026-08-20T09:42:06Z
Bhavana Balaji
16880
ocr
1958858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>வசந்தம்
மின்னி மேகம் பரவுது
மெல்ல மெல்லத் துளிக்குது
என்ன சொல்லித் துளிக்குதென்(று)
இயம்பு கின்றேன் கேளம்மா!
'மண்ணில் கொஞ்ச நாட்களாய்
மறைந்து றங்கும் செடிகளே!
கண் மலர்ந்து வாருங்கள்;
காலை யாச்சு ' தென்குது.<noinclude></noinclude>
0zp0ih8ua7wzu9f97ajybj4i9xtgv6x
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/70
250
651773
1958860
2026-08-20T09:42:16Z
Nethrama
16879
ocr
1958860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethrama" /></noinclude>இராமகிருஷ்ண பரம
ஹம்ஸரின்
தேவி பிரார்த்தனை
உன்னரு ளல்லால் - வேறிங்
கொரு துணையுண்டோ?
என்னை ஆண்டிடநீ - உள்ளம்
இரங்க வேண்டுமம்மா.
மாசிலாத அன்பு - நெஞ்சில்
வளர வேண்டுமம்மா;
ஆசை வேரெல்லாம் - அடியோ
டழிய வேண்டுமம்மா.
உலக மாயை யிலே-சிக்கி
உழன்று நையாமல்
அலகிலாத வுன்றன் - அருளால்
ஆள வேண்டுமம்மா.
பொருளும் வேண்டாமம்மா-எனக்குப்
புகழும் வேண்டாமம்மா;
அருளே வேண்டுமம்மா- வேறோர்
ஆசை இல்லையம்மா.<noinclude></noinclude>
s9gvjymxgrvis5ak288vcrj8ickypj1
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/28
250
651774
1958861
2026-08-20T09:42:29Z
Bhavana Balaji
16880
ocr
1958861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>இயற்கை
வானம் கறுத்தால் மழைபெய்யும்
மழை பெய்தால் மண்குளிரும்
மண் குளிர்ந்தால் புல்தழைக்கும்
புல் தழைத்தால் பசுமேயும்
பசு மேய்ந்தால் பால்சுரக்கும்
பால் சுரந்தால் கன்றுகுடிக்கும்
கன்று குடித்து மிஞ்சியதைக்
கறந்து கொண்டு வந்திடலாம்
காப்பியில் விட்டுக் குடித்திடலாம்.<noinclude></noinclude>
gaocd8wyr58gtf8ahhxnvwf7c07m75c
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/27
250
651775
1958862
2026-08-20T09:42:53Z
Bhavana Balaji
16880
ocr
1958862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>22
காதல் பிறந்த கதை
பொன்படை த்த பேரைப்
புகழ்ந்தபுலை நீங்கியினி
இன்படைய நாவேநி
எண்ணுவையேல் - அன்பெழுந்து
செந்தமிழைக் காத்தருளுந்
தெய்வமென இந்நிலத்து
வந்த கலைமகளை
வாழ்த்து.
காலத்துக் கேற்றவுடை
காலத்துக் கேற்றநடை
காலத்துக் கேற்றவணி
கைக்கொண்டு-காலத்தில்
தப்பாது காட்சிதருந்
தாயாங் கலைமகளிங்
கெப்போதும் வாழ்க
இனிது.<noinclude></noinclude>
2upsnfq33ujavafkypf5ocencmfzb9o
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/71
250
651776
1958863
2026-08-20T09:43:11Z
Nethrama
16879
ocr
1958863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethrama" /></noinclude>66
காதல் பிறந்த கதை
கோயில் என்னெஞ்சாய்-என்றும்
குடியிருப்பாயம்மா ;
தாயின் அருளல்லால்- எனக்கோர்
தஞ்சம் வேறுண்டோ?
சித்திகள் பெற்றரிய செயல்கள்
செய்ய வேண்டாமம்மா;
பத்தியொடுன் பாதம் - நிதமும்
பணிதல் போதுமம்மா.
மாசிலாத அன்பை - உன்னை
மறக்க வொண்ணா அன்பை
தாசனாகும் அன்பை - எனக்குத்
தந்தருள்வாயம்மா.
காமம் அண்டாமல்-என்னைக்
காக்க வேண்டு மம்மா;
தீமை சாராமல் - உள்ளம்
தெளிய வேண்டு மம்மா.
ஆன துணையிங்கே - பிள்ளைக்
காரு மில்லையென
நானுரையாமல் - நீயே
நன்கறிவாயம்மா.
ஐம்புலச் சேட்டை - முற்றும்
அடங்க வேண்டு மம்மா;
நம்பியுன் பதமே- உள்ளம்
நாட வேண்டு மம்மா.<noinclude></noinclude>
746fcf99atfwaokekd7vp0yo0nkc1tq
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/26
250
651777
1958864
2026-08-20T09:43:12Z
Bhavana Balaji
16880
ocr
1958864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>கலைமகள் வாழ்த்து
வெள்ளைக் கலையுடுத்து
வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே
வீற்றிருப்பாள்-பிள்ளைமொழி
வெள்ளைக் கவிகண்டு
வெள்ளையென் றெண்ணாமல்
உள்ளத்திற் கொள்வாள்
உவந்து.<noinclude></noinclude>
9d1stcv3fo0skk783fxhcmaqe4sl81z
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/72
250
651778
1958865
2026-08-20T09:43:33Z
Nethrama
16879
ocr
1958865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethrama" /></noinclude>தேவி பிரார்த்தனை
ஏடு கண்டறியேன் - ஏட்டில்
எழுத்தும் கற்றறியேன்;
பாடிப் பாடியுனைப் - போற்றிப்
பணிவ தெப்படியோ?
உண்மை அன்பில்லை-ஞான
ஒளியும் நெஞ்சிலில்லை;
அண்மையாக வந்துன் - பாதம்
அடைவ தெப்படியோ?
மண்ணில் உன்பிள்ளை - தனியே
வாடி நிற்பதை நீ
கண்ணி லெந்நாளும் - தாயே
கண்டறியாயோ?
மருளும் இவ்வுலகில் - ஏழை
வருந்தி வாடாமல்
அருட் பெருங்கடலே - உண்மை
அன்பளிப் பாயம்மா.
67
3<noinclude></noinclude>
iajfnnl18fgh7k5c09s1sa2y14enqph
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/25
250
651779
1958866
2026-08-20T09:43:39Z
Bhavana Balaji
16880
ocr
1958866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>20
காதல் பிறந்த கதை
வாடி வருந்தி மன்னுயி ரெல்லாம்
அடையுந் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன்'
என்று கூறி இரவில் இறங்கினன்
நன்று நாடிய ஞானிசித் தார்த்தனே.<noinclude></noinclude>
fibtp5caatbhll3a62quk814jqwibtx
பக்கம்:ஆட்கொல்லி.pdf/8
250
651780
1958867
2026-08-20T09:43:45Z
Sujibala S
16882
ocr
1958867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>ஆட்கொல்லி
1. நல்ல பாட்டி
என் மாமா வேங்கடாசலத்தின் கதையைச் சொல்லு
கிற சாக்கில் நான் என்னைப்பற்றியேதான் சொல்லப் போகி
றேன். வாழ்க்கையிலே தோல்வியுற்றவனுக்குத் தன்னைப்
பற்றியே பேசிக்கொள்வதைப்போல வேறு இன்பமும்
உண்டா? தன்னைப் பற்றியே பேசிக்கொள்வதற்குச் சாக்கு
ஒன்றுமே தேவையில்லைதான். ஆனால் சாக்கும் இருந்து
விட்டால் நல்லதுதானே?
"இல்லானை இல்லாளும் வேண்டாள் என்கிற பழைய
வாக்கியத்துக்கு உதாரணம் நான். இந்த வாக்கியத்துக்கு',
எப்படிப்பட்ட அர்த்தங்கள் கற்பிக்க முடியும் என்பதை
அனுபவித்துப் பார்த்திருப்பவன்தான் உணர முடியும்.
என் மாமா இல்லாதவர் அல்ல. இருபத்தைந்து வருஷங்
களுக்கும் அதிகமாக மாசம் நூனு ரூபாய்க்குள் சம்பளம்
வாங்கி, எப்படியோ இரண்டு இரண்டரை க்ஷ ரூபாய்
பணம் சேர்த்தவர். பணமே சேர்க்காதவனாகிய<noinclude></noinclude>
f0u7cigw70o97jqqneakke3ffelkupi
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/60
250
651781
1958868
2026-08-20T09:43:46Z
Asifa parveen
16885
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ot Qrretider enund 55 oH 9G Sou Qars soimori! uéese usévact urost ranQeiigri? Boars Gib Cun For QuGsAS apoB @@ur! gun! yonpu) uTaGgsr! Ugo bTUT, UT poe aren, aad Cubscir quitbG 5 Bum der Cur? SCur gertseb glerumis FooGum? TO IHU Qor_se Cubarer, oarnerth FObQs QaMiCumris amscr Shy Goy FOr #Owd. Cogn der Aer SBycr crevamia Garcd Drormiis aid wer 5 Hd 22 OG amr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Asifa parveen" /></noinclude>ot Qrretider enund 55
oH 9G Sou Qars soimori!
uéese usévact urost ranQeiigri?
Boars Gib Cun For QuGsAS apoB
@@ur! gun! yonpu) uTaGgsr!
Ugo bTUT, UT poe aren,
aad Cubscir quitbG 5 Bum der Cur?
SCur gertseb glerumis FooGum?
TO IHU Qor_se Cubarer,
oarnerth FObQs QaMiCumris amscr
Shy Goy FOr #Owd. Cogn der
Aer SBycr crevamia Garcd Drormiis aid
wer 5 Hd 22 OG amr Osd Cw.
Qsrlursb—asorceer,<noinclude></noinclude>
qgk7dd2iax77ncru6pl43pdxe49lhle
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/73
250
651782
1958869
2026-08-20T09:43:51Z
Nethrama
16879
ocr
1958869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethrama" /></noinclude>தமிழ் முனி
எவ்வேடு தேடிநீ எந்நாட்டில் எப்பதியில்
எவ்வீடு நோக்கியின் றேகினையோ- அவ்வான்
அமிழ்த மமிழ்தமென அள்ளியள்ளிச் சங்கத்
தமிழ்தந்த சாமிநா தா.
கண்ணுஞ் சடையாமல் கையுந் தளராமல்
உண்ணப் பசியெழுவ தோராமல்-எண்ணியெண்ணிச்
செந்தமிழ்த் தாய்க்குநீ செய்த திருத்தொண்டுக்
கிந்தநிலத் துண்டோ இணை.<noinclude></noinclude>
odato9y8g87h2gtifvyzy9sjfi9ekjl
பக்கம்:ஆட்கொல்லி.pdf/9
250
651783
1958870
2026-08-20T09:44:05Z
Sujibala S
16882
ocr
1958870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>2
ஆட்கொல்லி
இருந்த பணத்தையும் செலவழித்துவிட்டு, இல்லாளுக்கும்
வேண்டாதவனாக இருக்கும் நான், வேங்கடாசலத்தின்
வாழ்க்கையும் அப்படி ஒன்றும் பிரமாதமான வெற்றி
அல்ல, தோல்விதான் என்று எனக்கே சொல்லிக்கொண்டு
திருப்திப்பட்டுக் கொள்கிறேன்.
வாழ்க்கையில் வெற்றியையும் தோல்வியையும்.
சாதாரண ஜனங்கள் எதை வைத்து மதிப்பிடுகிறார்கள்?
இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி என்று
எண்ணத் தோன்றும். நல்லவன், அறிவாளி, என்று
சொல்லுகிறவனைக்கூடப் பணக்காரனைப் போற்றுவதைப்
போல உலகம் போற்றுவதில்லை. ஏன் இது என்று விசா
ரிக்க நான் தத்துவாசிரியன் அல்ல. உலகத்து உண்மை
இதுதான். ஏற்றுக்கொள்கிறேன். எனக்கும்
சம்பாதிக்க ஆசைதான். ஆனால், செலவழிக்கத்தான்
தெரிந்ததே தவிரச் சம்பாதிக்கத் தெரியவில்லை.
பணம்
என் தகப்பனாரையும் என் மாமாவையும் ஒப்பிட்டுப்
பார்க்கும்போது எனக்கு வாழ்க்கையின் தத்துவமே பிடி
படுவதுபோல இருக்கிறது. என் மாமா, "பணம், பணம்"
என்ற நினைப்பிலேயே மூழ்கிக் கிடந்தார். என் தகப்பனார்
நல்ல உத்தியோகத்தில் இருந்தார். உத்தியோகத்தில்
இருந்தவரையில் என் மாமாவைவிட, அதிகச் சம்பளமும்,
ரிடையரான பின் அதிகப் பென்ஷனும் வாங்கிக்கொண்
டிருந்தார். அப்படி ஒன்றும் பெரிய குடும்பப் பொறுப்பும்
இல்லை அவருக்கு. இருந்தும் அவர் கையில் பணம் சேர
வில்லை. அவர் சேர்த்த பணத்தையும் ஒரே பிள்ளையாகிய
நான் செலவு செய்துவிட்டேன். "ஏண்டா இப்படிச்
செலவு செய்கிறாய்?" என்று அவர் என்னை நேர்முகமாகக்
கேட்டதில்லை. "பணம் ஆயிடுத்தா? இன்னும் பணம்
வேண்டுமா? ஐம்பது அனுப்பட்டுமா, போறுமா? நூறாக<noinclude></noinclude>
jrs762sc7qqiotg27doe366qiew0yhp
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/74
250
651784
1958871
2026-08-20T09:44:09Z
Nethrama
16879
ocr
1958871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethrama" /></noinclude>தமிழ் முனி
69
சித்திரத்திற் பார்ப்போம் சிலைசெய்து கும்பிடுவோம்
புத்தகத்திற் போற்றிப்புகழ்ந்திடுவோம் - இத்தரையில்
சந்தப் பொதிகைத் தமிழ்முனியென் றுன்னைநிதம்
சிந்தையிற் கொண்டு தெளிந்து.<noinclude></noinclude>
6hjocyi0ziouuupdy4dsiy141fj8u3g
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/75
250
651785
1958872
2026-08-20T09:44:32Z
Nethrama
16879
ocr
1958872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethrama" /></noinclude>தாகூர் இரங்கற்பா
அலை வளைத்த புவிமுழுதும் அளந்தபெரும்
புகழுடையான் அரசர் கண்டு
தலை வளைத்து வணங்குமொரு குருதேவன்
சலியாது தரணிமீது
து<noinclude></noinclude>
4latajmtahhrt7cvudhjgf5ue34gvv0
பக்கம்:ஆட்கொல்லி.pdf/10
250
651786
1958873
2026-08-20T09:44:36Z
Sujibala S
16882
ocr
1958873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>தல்ல பாட்டி
8
அனுப்பட்டுமா?" என்று தான் நான் ஏராளமாகச் செலவு
செய்துகொண்டிருந்த நாட்களிலெல்லாம் கேட்பார். பிற
ரிடம் எப்பவாவது, ஏதாவது அதிருப்தியாச் சொல்வார்.
அதுகூட, "அவன் பின்னாடி கஷ்டப்படப் போகிறான்"
என்று வருத்தத்துடன் சொல்வாரே தவிரக் குற்றமாகச்
சொல்ல மாட்டார்.
இப்போது கஷ்டம் நேருகிறபோதெல்லாம் நான் என்
அப்பாவையும், என் மாமாவையும் எண்ணிப் பார்த்துக்
கொள்கிறேன். நினைப்பதற்கு விஷயம் ஏராளமாகவே
இருக்கிறது. இருவரும் இறந்துவிட்டார்கள். என் அப்பா
இறந்து நாலைந்து வருஷங்களாக
ங்களாகின்றன. மாமா இறந்து
இரண்டு வருஷங்களாகின்றன. ஒப்பிட்டுப் பார்க்கும்
போது, என் மாமாவின் வாழ்க்கையும் அப்படி ஒன்றும்
வெற்றிகரமான வாழ்க்கையல்ல என்று எண்ணி நான்
திருப்தியடைகிறேன். என் தகப்பனாரின் வாழ்க்கையைப்
பற்றியோ, சொல்ல வேண்டியதே இல்லை. அவர் பிள்ளை
யைக் கூடச் சரியாக வளர்க்கத் தெரியாதவர். எனக்குத்
தெரிந்து கடைசி இருபது வருஷங்களில் அகப்பட்டவர்க
ளிடமெல்லாம் சற்றுக் கூடவோ குறைத்தோ தன் சுய
சரிதத்தைப் பேசிக்கொண்டே காலம் தள்ளி வந்தார் என்
அப்பா. பாவம்! அவருக்குப் பேச வேறு என்ன இருந்
தது? என் மாமா தன்னைப்பற்றிப் பேசி நான் கேட்ட
தில்லை.
ட
தன்னைப்பற்றிப் பேசிக்கொள்ளாமல் இருப்பதுதான்
வாழ்விலே வெற்றியடைந்தவனுக்கு அடையாளமோ?
எனக்கு எப்படித் தெரியும்?
நான் வெற்றி பெற்றவன் அல்ல.
என் மாமா
பற்றிய என் நினைவுகளை வரிசைப்
படுத்திக் கொள்ள முயலுகிறேன். முதல் முதலில் அந்த<noinclude></noinclude>
sxj4out10h28yuungnsp2emvyoqey6j
பக்கம்:ஆட்கொல்லி.pdf/11
250
651787
1958874
2026-08-20T09:44:57Z
Sujibala S
16882
ocr
1958874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>"
ஆட்கொல்லி
மாமாவைப் பார்த்த சந்தர்ப்பம் எனக்கு ஞாபகமிருக்கிறது
என் ஆறாவது வயதில். அதற்கு முன்னரும் பார்த்திருக்க
வேண்டும்தான். ஆனால் அது என் ஞாபகத்தில் இல்லை.
நாங்கள் அப்போது நாசிங்கன்பேட்டையில் இருங்
தோம். அப்பாவுக்கு எதற்கெடுத்தாலும் எப்பப் பார்த்தா
லும் யாரிடமாவது கோபம் வந்துகொண்டே யிருக்கும்.
அன்று ஏதோ ஒரு கன்றுக்குட்டியைத் துரத்திக்கொண்டு
போய்க் கீழே விழுந்துவிட்டார். நான் சின்னப் பையன்
தானே? அவர் விழுந்ததைப் பார்த்துச் சிரித்துவிட்டேன்.
அவ்வளவுதான். அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
கன்றுக்குட்டியை விட்டு விட்டு, அதைக் கட்ட வைத்
திருந்த தும்பாலேயே என்னை வெளுத்து வாங்கிவிட்டார்.
அந்த ரோஷத்திலே நான் என் "நல்ல" பாட்டியுடன்
மாமாவாத்துக்குக் கிளம்பிவிட்டேன்.
நாள்
“நல்ல பாட்டியாமே, நல்ல பாட்டி?" என்பாள் என்
அப்பாவைப் பெற்ற பாட்டி."நல்ல பாம்பு அவள்! அவ்வ
வளவும் விஷம்." அது என்னவோ எனக்கு இன்னமும்
சொல்லத் தெரியவில்லை. என்னைப்பற்றியவரையில், என்
அம்மாவைப் பெற்ற பாட்டி நல்ல பாட்டியாகவேதான்
இருந்தாள்.அவள் எனக்குத் தெரிந்து அதிக
உயிருடன் இருக்கவில்லை என்பதும் இதற்கொரு காரண
மாக இருக்கலாம். என்னுடைய ஒன்பதாவது வயதில்
எனக்கு அம்மை போட்டியபோது, பாட்டிக்கும் அம்மை
கண்டது. அவள் இறந்துவிட்டாள். அவள் இறந்துவிட்ட
தால்தான் நான் பிழைத்தேன் என்று அப்பாவே சொல்லு
வார். எனக்காகத் தன் உயிரையே கொடுத்த பாட்டியை,
நல்ல பாட்டி என்றுதான் நான் எண்ணுகிறேன். வேறு
எப்படி நினைக்க முடியும்?<noinclude></noinclude>
pdscmi6myo6mn0libxdogia41fb44m9
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/24
250
651788
1958875
2026-08-20T09:44:58Z
Bhavana Balaji
16880
ocr
1958875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>சித்தார்த்தன் துறவு
வெற்றி மேல் வெற்றி வென்று வீர
வெற்றி மாலை மிலைந்திட விருப்பம்
எள்ளள வேனும் என்உளத்து இல்லை.
சிறுமை தந்திடும் தீவினை புரியேன்;
பொறுமை நிதமும் போற்றி ஒழுகுவேன்;
புழுதி நிறைந்த பூமி எனக்குப்
பழுதி லாத பஞ்சணை யாகும்.
பாழிட மான பாலையை நல்ல
வாழிட மாக மதித்து வாழ்வேன்;
ஏழைப் பிராணி எதனொடும் அன்பாய்த்
தோழமை பூண்டு துணைசெய் திடுவேன்;
பணி செய் பள்ளர் பறையர் அணியும்
துணியை அரையிற் சுற்றித் திரிவேன்;
தெருத் தெருவாகத் திரிந்து பெற்ற
பருக்கையை உண்டு பட்டினி போக்குவேன்;-
குன்றும் குகையும் குத்துச் செடியும்
அன்றி வேறெதும் அண்டி ஒதுங்கேன்;
இரவும் பகலும் எவ்வெப் பொழுதும்
பாரில் உயிர்கள் படுந்துய ரெல்லாம்
புகுந்துஎன் உள்ளம் புண்படு கின்றது.
ஆதலின்,
இன்ப வாழ்வை இகழ்ந்து நீக்கினேன்;
துன்ப வாழ்வைத் துணிந்து போற்றினேன்;
நீணில மீது நித்தியா னந்த
வாழ்வை யடையும் வழிஇது என்று
தீவிர மான தியாகத் தாலும்
ஓய்வி லாத உழைப்பி னாலும்
அறியலா மென்னில் அறிந்து வருவேன்;
19<noinclude></noinclude>
4kfkn5t4akegmyf3o7l9xsktgsgf32g
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/23
250
651789
1958876
2026-08-20T09:45:22Z
Bhavana Balaji
16880
ocr
1958876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>18
காதல் பிறந்த கதை
மறைந்து நின்று வாழ்த்தின ரம்மா
இதுவே காலம், இதுவே காலம்,
"
இமைப் பொழுதேனும் இனியான் இங்கிரேன்;
யா துந் தடையிலை ; இறங்கிச் செல்வேன்;
பிரியா நாம் இனிப் பிரிவோ மாயினுங்
குறை யொன் றதனாற் கூறுதற் கில்லை.
இரு நில முழுதும் இன்பம் அடையும்
அறநெறி ஈதென்று அறிந்து வா' என
ஆணை யிடுவதை அழகின் செல்வி நீ
நித்திரை செய்யினும் நின்முகம் நோக்கித்
தெளிவுற யானும் தெரிந்து கொண்டனன்;
இனி யான் உலகில் இயற்றுதற் குரிய
அரும் பெருஞ் செயல்கள் அனைத்தும் அவ்வானில்
உடுக்க ளென்ன ஒளிவிடும் எழுத்தில்
எழுதி யிருப்பதை யின்றிங்கு என் இரு
கண்களாற் கண்டு களிப்படை கின்றேன்;
இறுதி யாக என்னுளங் கொண்ட
உண்மையும் ஈதாம் உறுதியும் ஈதாம்;
பற்பல ஆண்டுகள் பகலும் இரவும்
ஆராய்ந் தாராய்ந் தறிந்ததும் ஈதாம்;
படியில் எனக்குப் பரம்பரை யாய் வரும்
முடிமீது ஆசை முழுவதும் விட்டேன்.
வாழும் மன்னரை வாட்குஇரை யாக்கி,
நீணிலம் பற்றும் நினைப்பும் ஒழித்தேன்;
பூதல மெல்லாம் போர்க்களம் ஆக்கிய
பாதகன் என்றெனைப் பழித்து எவருஞ் சொல,
ஓடி ஒழுகும் உதிரப் பெருக்கில்
தேர்க்கால் புதையத் திசை தொறுஞ் சென்று<noinclude></noinclude>
fq12s0qievzcq2hrq1az99hw5nn3z30
பக்கம்:ஆட்கொல்லி.pdf/12
250
651790
1958877
2026-08-20T09:45:25Z
Sujibala S
16882
ocr
1958877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude><noinclude></noinclude>
0dnida97kdbw1rn3rgvcnq5dbzkyl0s
பக்கம்:ஆட்கொல்லி.pdf/13
250
651791
1958878
2026-08-20T09:45:52Z
Sujibala S
16882
ocr
1958878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>ஆட்கொல்லி
"எல்லோருமே மாமா ஆகிவிடுவார்களா?" என்றாள்
நல்ல பாட்டி. "தெருவோடு போகிறவர்களை மாமா என்று
உறவு சொல்லிக் கூப்பிட்டால் மட்டும் மாமா ஆகிவிடுவார்.
களா? இந்த மாமா உனக்கு எல்லாம் செய்வாரே?"
''என்ன செய்வார்? சொல்லு" என்றேன்.
"கண்ணாலங் கட்டிவைப்பார்......" என்றாள் ரெயிலில்
உடன் இருந்த கிழவி.
"மாமா வீட்டிலே பெண்ணிருக்கா?" என்று கேட்
டேன் நான், என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது.
வில்லை. "போனவுடனே
நல்ல பாட்டி இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல
உனக்குப் பாலும் சோறும்
பிசைந்து போடுவதற்கு ஒரு வெள்ளிப் பேலா வாங்கித்
தருவான் மாமா" என்றாள்.
இப்பொழுது ஞாபகம்
வருகிறது எனக்கு.
என் அப்பாவுக்கு வெள்ளிப் பாத்திரங்களைக் கண்டாலே
பிடிக்காது. அம்மா என்றைக்காவது தப்பித் தவறி
வெள்ளி டம்ளரில் காபி கொண்டு வந்து வைத்தாளானால்,
"அப்பாடி, என்ன வெள்ளி வேண்டியிருக்கு? பெட்டிக்குள்
வைத்துப் பூட்டிக்கொள்ளேன். காபியைச் சூடாக
வெள்ளி டம்ளரில் கொணர்ந்து வைத்துக் கை சுட்டு
விட்டது" என்று காபி, டம்ளர் எல்லாவற்றையும் எடுத்து
வெளியே எறிந்து விடுவார். அவருக்குப் புனா டம்ளரில்
காப்பி சாப்பிடத்தான் பிடிக்கும். அதில் மட்டும் எப்படிக்
காபி கைகூடாமல் இருக்குமோ? எனக்குத் தெரியாது.
சாப்பிடுவதற்கு - அதுவும், பாலும் சோறும் கலந்து
தின்பதற்கு, வெள்ளிக் கிண்ணம் கிடைக்கும்
என்ற
பாட்டியின் பதில் அந்த வயதில் எனக்குப்
பிரமாதமான
திருப்தி அளித்தது என்றே நினைக்கிறேன். சாத்தனூரில்
வண்டி விட்டிறங்கி வீட்டிற்குள் போனதுமே நான்<noinclude></noinclude>
a1flzdjpy1gqxyzq1xph7glu196asr8
பக்கம்:ஆட்கொல்லி.pdf/14
250
651792
1958879
2026-08-20T09:46:14Z
Sujibala S
16882
ocr
1958879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>நல்ல பாட்டி
"வெள்ளிப் பேலா எங்கே?" என்று விசாரிக்க ஆரம்பித்து
விட்டேன் என்றும் நினைக்கிறேன். இரண்டொரு நாளைக்
குள்ளாகவே மாமாவும் எனக்கு வெள்ளிப் "பேலா வாங்கி
வந்துவிட்டார்.
மன்னார்குடியில் இரண்டாங் கிளாஸில் நான் படித்த
வருஷம் பூராவும், அந்த வெள்ளிக் கிண்ணத்தில்தான்
பாட்டி எனக்குச் சோறு எடுத்து வைப்பாள். "என்
கிண்ணம், என் கிண்ணம்" என்றுதான் நான் சொல்லிக்
கொண்டிருப்பேன். ஒரு லீவுக்கு நான் நரசிங்கன்பேட்டை
திரும்பியபோது ''வெள்ளிக் கிண்ணத்தில் சோறு போட்
டால்தான் சாப்பிடுவேன்" என்று பிடிவாதம் பிடித்து,
"அப்பா காதில் விழப்போகிறது" என்று அம்மா
என்னைச் சமாதானம் செய்தது எனக்கு நன்றாக ஞாபகம்
இருக்கிறது. முதல் வருஷத்துக்குப் பிறகு என் அம்மாமி
அந்தக் கிண்ணத்தை எடுத்துத் தன் பெட்டிக்குள் பூட்டி.
வைத்துக் கொண்டுவிட்டாள். பிற்காலத்தில், நான்
இண்டர்மீடியட் வகுப்பில் படிக்கும்போது,மாமி,அந்தக்
கிண்ணத்தை "ராஜாவுடைய வெள்ளிக் கிண்ணம்" என்று
யாரிடமாவது காட்டிக்கொண்டிருப்பாள். காதில் பட்டா
லும் காதில் விழாதமாதிரி இருந்துவிடுவேன்."என்
கிண்ணம்" என்று அதைச் சொந்தம் கொண்டாடிக்
கொண்டு என்ன லாபம்? மாமாவுக்குக் கூடச் சொந்தம்-
இல்லை, அந்தக் கிண்ணம்; மாமிக்குத்தான் சொந்தம்.
சின்ன விஷயம்தான். ஆனால், காற்று எந்தப் பக்கம்
அடிக்கிறது என்பதைச் சிறு துரும்புதானே காட்டும்?
கற்பாறை காட்டுமா?
சாத்தனூரில் மாமா வீட்டுக்குப் போன்வுடனேயே
சந்தேகமும் தோன்றிற்று. 'ஏன்
எனக்கு இன்னொரு
பாட்டி, ரெயிலில் வருகிறபோது, மாமி ரொம்பச்<noinclude></noinclude>
hp8b2dw5i34nzyhmj1hov77ucy9u4o0
பக்கம்:ஆட்கொல்லி.pdf/15
250
651793
1958880
2026-08-20T09:46:41Z
Sujibala S
16882
ocr
1958880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>8
ஆட்கொல்லி
சின்னவள், ஒன்றுமே தெரியாது; என்றாயே........ மாமி
பெரியவளாகத்தானே இருக்கிறாள்?'' என்றேன்.
மாமி உண்மையிலேயே பெரியவளாகத்தான் இருந்
தாள் . வேங்கடாசலம் உருவத்தில் சிறியவர். ஐந்தடி
இரண்டங்குலம் உயரமும், ஒற்றைநாடி சரீரமும் உள்ளவர்.
நல்ல சிவப்பில்லை, நல்ல கறுப்புமில்லை; ஒருவிதமாக மாநிற
மாக இருப்பார். அம்மாமி நல்ல கறுப்பு. உயரம் மாமாவை
விட இரண்டங்குலமாவது அதிகம் இருக்கும்.ஆக்ருதி
யும் பெரிதுதான். இரட்டை நாடி என்றுதான் சொல்ல
வேண்டும்.
நான் நேரடியாகக் கேட்ட கேள்வி என் பாட்டிக்குச்
சிரமமாக இருந்திருக்கவேண்டும். ஆனால், மாமிக்குத் தன்
முக்கியத்தை நான் உணர்ந்து பேசியது போலத் தோன்றி
யது போதும். என்னைத் தன் அரவணைப்பில் அழைத்துக்
கொண்டாள். "ராஜா, ராஜா...." என்று என்னிடம் உகிரா
கத்தான் இருந்தாள் என்று எனக்கு நன்றாக ஞாபகம்
இருக்கிறது. அதற்குக் காரணம், அப்பொழுதுதான்
அவள் முதல் தடவை கர்ப்பமாகியிருந்து "அபார்ஷனாகி"
ஒரு தினுசான துயா மனோபாவம் பெற்றிருந்தாள் என்று
சொல்லலாம். என்னைத் தன் பிள்ளையாகவே எண்ணி,
'எனக்கு எல்லாம் செய்யத் தயாராக இருந்தாள், என்று
கூடச் சொல்லலாம், என்று எனக்கு இப்போது நினைத்துப்
பார்க்கும்போது தோன்றுகிறது.
என் மாமாவைப்பற்றி அந்தச் சந்திப்பிலோ அதற்குப்
பிறகோ தனியாக எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை என்று
தான் சொல்லவேண்டும். ஏற்கெனவே அவர் உருவம்
பற்றிச் சொல்லிவிட்டேன். அவரைப்பற்றிப் பிரத்தியேக
மாக எதுவும் சொல்லவேண்டும் என்று எனக்குத்
தோன்றவில்லை. மாமிதான் அந்தக் குடும்பத்திலே சர்வாதி<noinclude></noinclude>
s5jtjdpx1dpjfzih27sfwndsf0auyr6
பக்கம்:ஆட்கொல்லி.pdf/16
250
651794
1958881
2026-08-20T09:47:03Z
Sujibala S
16882
ocr
1958881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>நல்ல பாட்டி
காரி என்று சொல்லவேண்டும். அந்த ஏகாதிபத்யத்தைத்
துணிந்து எதிர்த்தவள் நல்ல பாட்டி ஒருத்திதான். ஆனால்
நான்
அவர்களிருவருக்கும் சண்டை எதுவும் நடந்து
பார்த்ததாகவும் ஞாபகம் இல்லை. தனித்தனியாக இருவ
ருமே வீட்டு யசமானரிடம் தங்கள் குறைகளைச் சொல்
லிக் கொள்வார்கள். தாய் தன்னிடம் வந்து முறையிடும்
போது,மாமா, "ஜானகி!" என்று கம்பீரமாகக் கூப்பிடு
வார். அதற்குப் பிறகு, தேர் மாதிரி அசைந்து வந்து மாமி,
ஈஸிசேருக்குப் பக்கத்தில் நிற்பாள். மாமா, என்ன சொல்
வாரோ, மாமி என்ன பதில் சொல்வாளோ எனக்குத் தெரி
யாது என் பாட்டிக்கும் தெரியாது என்றுதான் எண்ணு
கிறேன். இருவரும் ரகசியம் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
என் இரண்டாங் கிளாஸ் வாத்தியாருக்கும் பெரிய
கிளாஸ் வாத்தியாரான என் மாமாவுக்கும் இடையே ஏதோ
ஒரு மன வருத்தம் அதிசீக்கிரமே ஏற்பட்டுவிட்டது.என்
வாத்தியார் வந்து ஒரு சமயம் என் மாமாவை இருபத்
தைந்து ரூபாய் கடன் கேட்டது எனக்கு ஞாபகம் இருக்
கிறது. மாமா கொடுத்தாரோ கொடுக்கவில்லையோ - எனக்
குத் தெரியாது. ஆனால், அதற்கு மறுநாள், நான் ஏதோ
ஒரு கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லவில்லை என்று
என்னைப் பெஞ்சியின்மேல் ஏற்றிவிட்டார். என் வாத்தியார்.
மன்னார்குடியில் படித்த அவ்வருஷத்தில் பெரும் பகுதியை
நான் பள்ளிக்கூடத்தில் பெஞ்சியின் மேல் நின்றேதான்
கல்வி பயின்றேன். என் மாமா பணம் தர மறுத்ததற்
காகவா என்னைப் பெஞ்சியின்மேல் நிறுத்திக் களித்தார்
என் வாத்தியார்? அல்லது, கடன் வாங்கிவிட்டோமே,
அந்தப் பாபத்துக்குப் பிராயச்சித்தமாக இவன் பெஞ்சி
மேலே நிற்கட்டும் என்று எண்ணினாரோ அவர்? எனக்
குத் தெரியாது. நான் ஒரு வருஷம் பூராவும் பெஞ்சியின்<noinclude></noinclude>
calkotibonrusg58mkdf80qoaqqr0k4
பக்கம்:ஆட்கொல்லி.pdf/17
250
651795
1958882
2026-08-20T09:47:25Z
Sujibala S
16882
ocr
1958882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>10
ஆட்கொல்லி
மேல் நின்றேன்; காரணம் எதுவுமில்லாமலே என்றுதான்
எனக்கு ஞாபகம் இருக்கிறது.
யாரோ ஏதோ செய்துவிடுகிறார்கள். அதன் விளைவு
கள் எங்கேயோ. எப்படியோ தெரிகின்றன. மனிதன்
கருமம் என்றும், விதி என்றும் ஏதோ சொல்லிக்கொண்டு,
தனக்குத்தானே ஆறுதல் தேடிக்கொண்டு காலம் தள்ளு
கிறான். நாட்களைக் கடத்துகிறான். காரண காரிய பந்தங்கள்
எப்படிப்பட்டன, ஏன் உண்டாகின்றன, அவற்றைப்
போக்க வழியென்ன என்று விசாரிக்கும் தீரம் மிகச்
சிலருக்கே ஏற்படக்கூடும். அப்படித் தீரம் உள்ளவனும்
கூட சிந்தனையுடன் திருப்தி அடைந்துவிடுகிறான். கண்டு
கொண்ட உண்மைகளைக் கடைப்பிடிக்க யாருக்குமே
தெம்பு உண்டாவதில்லை.
என்
என் கால்களில் அப்போது போதிய வலுவிருந்தது.
நான் தினமும் பெஞ்சியின்மேல் நின்றேன். வீட்டிலே
அதைப்பற்றி யாரிடமும் சொன்னதில்லை நான்.
மாமாவுக்குத் தெரியவே தெரியாது அது பற்றி. பெஞ்சியின்
உயரத்திலிருந்து,நின்றுகொண்டு, என் வகுப்பு மாணவர்
களின் தலைக்கு மேலே பார்ப்பதும் நல்லதென்றுதான்
எனக்கு அப்போது தோன்றியிருக்கவேண்டும். அது
எனக்கு மட்டுமே பிரத்தியேகமான ஒரு நோக்கு. அதைப்
பகிர்ந்து கொள்வதற்கு யாரும் வருவதில்லை. இன்று
எனக்குள்ள தனி நோக்கும் அதே போலத்தான் என்று
தோன்றுகிறது எனக்கு. வாழ்வில் வெற்றியையும் தோல்
வியையும் கணிக்க முயலுகிற எனக்கு இந்த நோக்கு மிக
மிக அவசியம் என்றே தோன்றுகிறது.வருஷம் பூராவும்
என்னைப் பெஞ்சியின்மேல் ஏற்றிவைத்த அந்த வாத்தியார்.
வாழ்க என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.<noinclude></noinclude>
ogczsve5502dc700ogmje4qv5xo9t8j
பக்கம்:ஆட்கொல்லி.pdf/18
250
651796
1958883
2026-08-20T09:47:56Z
Sujibala S
16882
ocr
1958883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>2. மாமாவும் மருமானும்
மனிதனுடைய நினைவு என்பதிருக்கிறதே; அதைக்
களஞ்சியமென்று சொல்வதா. கடல் என்று கொள்வதா?
நெல்லைப் போட்டு வைத்திருந்து களஞ்சியத்திலிருந்து.
தேவையுற்றபோது எடுத்துக் கொள்கிறமாதிரித்தான்,
மனிதன் நினைவுகளைச் சேகரித்து வைத்துக்கொண்டு, அவசி
யப்பட அவசியப்பட வெளிக் கொணருகிறான். இந்தக் களஞ்
சிய விஷயத்தில் ஒன்று தான் குறை,எப்போதுமே எதுவுமே
நாம் எதிர்பார்க்கிற வரிசையில் வெளிவராது. நாம் எதிர்
பாராத ஒரு விதியைப் பின்பற்றித்தான் மனிதனுக்கு
நினைவுகள்
ஏற்படுகின்றன. ஒரு விஷயத்தை, ஒரு
முகத்தை, ஒரு பெயரை, ஒரு அல்ப சமாசாரத்தை ஒரு
சமயத்தில் நாம் விரும்பி மனத்துக்குக் கொணர முயலும்
போது, அது குளிக்க இழுத்துக்கொண்டு போகும் நாய்க்
குட்டியைப் போலப் பின்னங்கால்களை ஊன்றிக்கொண்டு
அசைய மறுத்துவிடும். வேண்டாதபோது அநாவசியமாகத்
துருத்திக் குறுக்கிடும். இதெல்லாம் பற்றி யோசித்தால்
நினைவைக் கடல் என்று சொல்வதுதான் பொருந்தும்
என்று கூடத் தோன்றுகிறது. கடலின் அலைகள் ஒரு கணக்
கிலும் அகப்படா.முத்துக் குளிப்பவன் கிளிஞ்சல்களைத்
தவிர வேறு எதையுமே பலதடவைகள் வெளியே கொண்டு
வர மாட்டான். திடீரென்று ஒரு பிடி கிளிஞ்சலில் ஒன்
பது முத்துக்கள் சிதறி விழுவதும் உண்டு.
ஒரு
என் நினைவுகளை ஒழுங்குபடுத்திச் சொல்ல முயல்வது
வியர்த்தமான காரியம் என்றே தோன்றுகிறது.
வரிசையாகத்தான் சொல்லவேண்டும் என்று நான் முயன்
றாலும், எனக்கு ஆதாரமான என் நினைவு அந்த வரிசைக்கு
உட்பட மறுக்கும்போது நான் என்ன செய்ய? நினைவுகள்<noinclude></noinclude>
4dj9a7mbmgycbnvgdqrl7w8c9evbi1l
பக்கம்:ஆட்கொல்லி.pdf/19
250
651797
1958884
2026-08-20T09:48:32Z
Sujibala S
16882
ocr
1958884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>12
ஆட்கொல்லி
என்
முண்டிக்கொண்டு வருகிற வரிசையிலேயே சொல்கிறேன்.
அதுவும் கவர்ச்சியாக இராது என்று யார் சொல்ல முடியும்?
என்: மாமாவுக்கு என்னைத் தவிர இன்னும் ஒரு
மருமானும் உண்டு. அவன் பெயர் கண்ணப்பன்.
அப்பா சர்க்கார் உத்தியோகஸ்தர். இங்கிலீஷ் படித்தவர்.
அவன் அப்பா வெற்றிலை பாக்குக் கடைக்காரர் - தமிழில்
மண்டை
மண்டையாகக் கையெழுத்துப் போடுவதைத்
தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. சொத்து
சுதந்திரமும் இல்லாதவர். அவரைப்பற்றி அதிகமாகத்
தான் கவலைப்பட்டால் தனக்கும் அந்த மாதிரி ஒரு கதி
நேர்ந்துவிடுமோ என்று பயம் போலும் என் மாமாவுக்கு.
மாமா வேங்கடாசலமோ, மாமி ஜானகியோ எனக்குத்
தெரிந்து அந்தக் குடும்பத்தைப்பற்றிப் பேசமாட்டார்கள்.
ஏன்? உறவு முறையில் என் தகப்பனாரும், கண்ணப்பனின்
தகப்பனாரும், மாமாவைப் பற்றியவரையில் ஒன்றுதான்.
என் தகப்பனார் என் மாமாவுக்கு அக்காள் புருஷன்.
கண்ணப்பனின் தகப்பனார் அவர் தங்கை புருஷன்.
-
என் மாமாவுக்குத் தங்கையிடமோ அக்காளிடமோ
அதிகப் பிரியம், குறைந்த பிரியம் என்று சொல்ல
முடியாது. இருவரிடமும் ஒரே மாதிரித்தான் பிரியமும்
பிரியமில்லாமையும்.
இதில் ஜானகி மாமி இட்டதைத்தான் சட்டமாக
மாமா ஏற்றுக்கொண்டார் என்று எனக்குத் தோன்று
கிறது. காரணமே இல்லைதான் இதற்கு. ஆனால் காரணம்
உண்டோ இல்லையோ, உள்ளதைச் சொல்லித்தானே ஆக
வேண்டும்? எனக்குத் தெரிந்தவரையில், என் அப்பா
சர்க்கார் உத்தியோகத்திலிருந்தது ஒன்றுதான் எங்களிடம்
மாமாவும் மாமியும் பிரியமாக இருந்ததற்குக் காரணம்
என்று, இப்போது எண்ணிப் பார்க்கும்போதுகூட எனக்
'<noinclude></noinclude>
gsuheklh5rg8d4az1r18ut5r2c19lwz
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/20
250
651798
1958885
2026-08-20T09:48:46Z
Sadhana G
16877
ocr
1958885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadhana G" /></noinclude>காதல் பிறந்த கதை
15
இருந்த பரிசுகள் யாவும் மீதி
ஒன்றுமே யில்லா துதவப் பட்டன.
அப்பால்,
அங்கயற் கண்ணி அழகின் செல்வி
திங்களைப் பழிக்கும் திருமுக விலாசினி
பங்கய மீதெழாப் பாக்கிய லட்சுமி
யசோதரை என்னும் யௌவன குமாரி
நேரெதி ராக நிமிர்ந்து நோக்கி
வருவது கண்டு மன்னர் மகனும்
திடுக்கிட் டுள்ளம் திகைப்புக் கொண்டனன்.
இதனை, பக்கம் நின்ற பலருங் கண்டனர்.
அவள், "எனக்குப் பரிசெதும் ஈவதற் கில்லையோ?''
என்று கூறி இன்னகை புரிந்தனள்.
"இருந்த பரிசுகள் யாவும் போயின;
ஆயினும்,
.
மா நகர் போற்றும் மங்கையர் மணியே!
இதனைப் பரிசாய் ஏற்றுக் கொள் "எனத்
தன், மார்பிற் கிடந்த மரகத மாலையைக்
கழற்றி யசோதரைக் கன்னியின் அழகிய
திருவரை சுற்றிச் சேர்த்துக் கட்டினன்;
கட்டவே,
கண்களும் கண்களும் கலந்து பேசின.
கண்களும் கண்களும் கலந்து
பேசின பேச்சில் பிறந்தது காதலே.
3<noinclude></noinclude>
jh44b886cn42q4ed5o8m91i8mfmfr0k
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/61
250
651799
1958886
2026-08-20T09:48:50Z
Asifa parveen
16885
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "5ouGurH oy Ham sefiuyid, EGY soap gid Seamope BsrarOsgqb Ban oro uso —woaa Diyos Lory shEs storks urgB@et: undeiens eone Suni aor? ae."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Asifa parveen" /></noinclude>5ouGurH oy
Ham sefiuyid,
EGY soap gid
Seamope BsrarOsgqb
Ban oro uso —woaa Diyos
Lory shEs storks
urgB@et: undeiens
eone Suni aor?
ae.<noinclude></noinclude>
ff3ydx6hwgdedxgjl3lm5zffg3abulm
பக்கம்:ஆட்கொல்லி.pdf/20
250
651800
1958887
2026-08-20T09:48:58Z
Sujibala S
16882
ocr
1958887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>மாமாவும் மருமானும்
13:
குத் தோன்றுகிறது. மாமாவும் சர்க்கார் உத்தியோகம்
தேடிக்கொண்டிருந்தார் அப்போது.
சாதாரணமாக எல்லோருமே வாழ்க்கையை நடை
முறை என்றும், லக்ஷயமென்றும் பிரித்துக்கொண்டு
விடுகிறார்கள். தினசரிநடப்பு என்றும், தருமம் என்றும்
பிரித்துக்கொண்டு விடுகிறார்கள். இந்தப் பிரிவினை இல்லா
விட்டால் வாழ்க்கை சாத்தியமாவதே இல்லை போலும்.
லக்ஷியத்திலிருந்தும், தர்மம் என்று சொல்லப்படுவதி
லிருந்தும் நடைமுறையைப் பிரித்து வைத்து அதற்கேற்ப
நடந்துவிடுவது சௌகரியமாக இருந்தது; சுலபமாக
இருந்தது. சிக்கலான பிரச்னைகளைக்கூட "நடக்கவேண்டி
யது இப்படித்தான். ஆனால், அது லக்ஷியம். நடக்கக்
கூடியது இதுதான்" என்று சுலபமாக்கி நடந்துவிடுகிற
வர்கள்தான் வாழ்க்கையிலே வெற்றி பெறுகிறார்கள்.
என் தந்தை நல்ல உத்தியோகத்தில் இருந்தார்.
பணத்துக்கோ பதவிக்கோ பஞ்சமில்லை. நானே தான்
அதைச் சொல்லுகிறேன் என்றாலும், எனக்குப் படிப்பும்
நன்றாக வந்தது. அம்மாவும் சாப்பாட்டுக்கும் துணிக்கும்
இருக்குமிடத்துக்கும் கஷ்டம் வராமல் சௌகரியமாக
இருந்தாள். நான் ஒரே பிள்ளை. இருந்தும் எனக்குத்தான்
மாமாவும் மாமியும் போட்டி போட்டுக்கொண்டு எல்லாம்
செய்தார்களே தவிர, அந்த மருமானுக்கு எதுவும் செய்த
தில்லை என்றுதான் சொல்லவேண்டும். கண்ணப்பனின்
அப்பா ஜீவனம் வெற்றிலை பாக்குக கடையின் உதவியால்
ஓடிக்கொண்டிருந்தது. மாசத்தில் பத்து இருபது வருவாய்
வந்தாலே சிரமம். என் சித்தி உடுக்கத் துணியில்லாமல்.
இருக்க ஒரு ஓட்டைக் குச்சு வீடு தவிர வேறு எதுவும்
இல்லாமல், பாதி நாள் உண்ணப் போதிய உணரவு இல்லா
மல், இரண்டு வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்<noinclude></noinclude>
avrvxxryujkwg2wwj0ppahfi7uktxy6
பக்கம்:ஆட்கொல்லி.pdf/21
250
651801
1958888
2026-08-20T09:49:24Z
Sujibala S
16882
ocr
1958888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>14
ஆட்கொல்லி
றெடுத்து, நாலு வருஷத்துக்கு ஒன்றைப் பறிகொடுத்துக்
கொண்டு, கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். மீனாச்சி
சித்திக்கும் கண்ணப்ப அண்ணனுக்கும் மாமா
செய்வது
நியாயம்தானா என்று நான் சிறுவனாக இருக்கும்போதே
நினைத்துக்கொள்வேன். ஆனால் அதை வாய்விட்டுச்
சொல்வதில் அசௌகரியங்கள் உண்டு என்பதை நான்
எப்படியோ தெரிந்துகொண்டிருந்தேன். நடைமுறை,
லக்ஷியம் என்கிற பிரிவினை சகவாஸதோஷத்தால் என்னை
யும் ஆட்கொண்டுவிட்டது போலும்,
=
ஏழைமை என்பது என்ன, ஒட்டுவர்கொட்டியா? தன்
தங்கை மகனே தான் என்றாலும்,
அவனைக்
ஏழையானதனால்
செய்தால்.
கொண்டுவந்துவைத்துக்கொண்டு
அவன் தங்கள் மேலே பாரமாக ஏறி உட்கார்ந்துகொண்டு
தங்களையே அமுக்கிவிடுவான் என்று எண்ணினார்களா,
மாமாவும் அம்மாமியும்? அப்படித்தானே தோன்றுகிறது
இப்போது சிந்தித்துப் பார்க்கும்போது?
மனுஷ்யனாகவே சிருஷ்டித்துக் கொண்டதுதான்
இந்த ஏழைமை என்கிற வியாதி. அதைக் கண்டு ஏன்
மனிதன் இப்படிப் பயப்படுகிறான்? கிட்ட நெருங்கினால்
ஒட்டிக்கொள்ளும் என்கிறது மாதிரி,ஒதுஸ்ரி ஓடுகிறானே?
ஏன்? தருமம், நீதி, நியதி என்பவை யெல்லாம் அறிந்து
படித்தவர்கள் கூட இப்படி நகர்ந்தால் வியாதி அதிகரிக்
காமல் என்ன செய்யும்?
ஒருதரம் நான் மன்னார்குடியில் இரண்டாம் வகுப்பில்
பெஞ்சியின்மேல் நின்றுகொண்டிருந்த வருஷம் என்
சின்னம்மா மீனாச்சியும் அவள் மூத்த பிள்ளை கண்ணப்பனும்
அங்கு லந்தார்கள். கண்ணப்பனுடைய சிக்குப் பிடித்த
தலையையும், ஒட்டுப் போட்ட சட்டையையும் பார்த்த
எனக்கு என்னவோ போல இருந்தது. ஆனால் அவன்<noinclude></noinclude>
2vr0ht2y2otqzgnt0rz6g4z0wek45gf
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/13
250
651802
1958889
2026-08-20T09:49:45Z
Sakthi Devi.M
16878
ocr
1958889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sakthi Devi.M" /></noinclude>செமிழ்ஈட்டுச் சிறுவர் சிவமிடாக்
விரல் சேறுகிய தாய் எவ்வம் வாய்மை<noinclude></noinclude>
4rjgeor9gxmxvdekad2tewo0qpd2ai9
பக்கம்:ஆட்கொல்லி.pdf/22
250
651803
1958890
2026-08-20T09:49:52Z
Sujibala S
16882
ocr
1958890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>மாமாவும் மருமானும்
15
வேட்டி மடியை முறுக்கிக்கொண்டே "சுஜன ஜீவனா'
என்று உத்ஸாகமாக ஊதிக்கொண்டிருந்தது பிடித்திருந்
தது. நானும் அதுமாதிரி ஊதப் பார்த்தேன். அதே
சமயம் வேட்டி மடியையும் பிடித்து முறுக்கினால்தான் ஊத
வரும் என்றான் கண்ணப்பன். வேட்டி மடியைப் பிடித்து
நன்றாகவே முறுக்கினேன் - அப்படியும் எனக்கு ஊத
வரவில்லை.
கண்ணப்பன்
எனக்கு நாலு வருஷங்கள் மூத்தவன்.
ஆனாலும் நாலாங்கிளாஸ்தான் படித்துக்கொண்டிருந்தான்.
"அப்பா சம்பளங்கட்ட மாட்டேங்கறார்" என்பான் அவன்.
நானும், "நாலு வருஷத்தில் இரண்டு கிளாசுக்கு மேல்
பாஸ் செய்வதில்லை" என்று அவனுக்கு ஆறுதலாகச்
சத்தியம் செய்தேன்.
"ராஜா, அந்த வண்டி அசட்டோடு பேசாதேயடா!
நீயும் அசடும் அழுக்குமாகிவிடுவாய்" என்றாள் மாமி.
ஆனால் மாமிக்குக் கோலியாடத் தெரியாது; பம்பரம்
சுற்றத் தெரியாது; பலிங் சடுகுடுப் பாட்டுகள் தெரியாதே!
இவ்வளவும் எனக்குக் கற்றுக் கொடுத்தான் கண்ணப்பன்.
நான் கண்ணப்பனுடன் சேர்ந்து அசடானேனோ அழுக்கா
னேனோ எனக்குத் தெரியாது. யாருடனும் கலக்காமல்
ஒருவனாகவே இருந்து மூலையில் உட்கார்ந்துகிடக்கிற
பழக்கம் கண்ணப்பன் வந்ததோடு எனக்குப் போய்
விட்டது. ஆறேழு மாதங்களில் நான் சுற்றுவட்டாரத்துப்
பிள்ளைகளில் யாரையுமே அதுவரை சந்தித்தது கூடக்
கிடையாது. வந்து ஆறேழு நாட்களுக்குள்ளாக அவர்கள்
எல்லோரையுமே; ஒரு பத்துப் பதினைந்து பேர்வழிகளை,
கண்ணப்பன் தான் அறிந்துகொண்டது மட்டுமல்ல.
எனக்கும் அறிமுகம் செய்து வைத்துவிட்டான். அதற்குப்
பிறகும் நான் அசடாகி விடவில்லை யென்றுதான் எண்ணு<noinclude></noinclude>
c9gkdi2lp7016lc3actm1pxnm7bz7j9
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/19
250
651804
1958891
2026-08-20T09:49:54Z
Sadhana G
16877
ocr
1958891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadhana G" /></noinclude>14
காதல் பிறந்த கதை
வரிசையாய் மங்கையர் வந்து வந்து
பரிசுகள் பெற்றுப் பணிந்துசெல் காட்சி
யாவரும் நோக்கி இன்புறற் குரியதாம்.
வந்து கண்ட மங்கையர் உள்ளமோர்
நிலையில் நில்லா தலையச் செய்தது
திருவளர் செல்வன் திருமுகப் பொலிவோ,
அப்பால் யாதோ, அறிபவர் யாரே?
மன்னர் மகனோ மனத்திற் சலனம்
யாது மின்றி இருந்தனன்; அவன்முகம்
சாந்தமும் அமைதியும் தண்ணிய அருளும்
தவழும் காட்சியே தந்த தாயினும்
அவன், கன்னியர்க் கெட்டாக் கனியே யாயினன்.
கூடி நின்றவர் குமரி ஒருத்தியை
''இவள், அழகிற் சிறந்தவள், ஐய மில்லை;
அரசிளங் குமரன் அனபிற் குரியாள்
இவளே யன்றிவே றியாவரு முளரோ?''
என்று புகழுரை இயம்பவே, அதனால்
மங்கை அவளும் மனந்தடு மாறி
நடுக்க முற்றஓர் நவ்வியே போல
அரியா சனத்தின் அருகில் சென்றும்
வழங்கும் பரிசினை வாங்கிடா தோடிச்
சேடிய ரோடு சேர்ந்து நின்றனள்.
அத்தனை ஜோதி, அத்தனை மகிமை,
அத்தனை தெய்வ அருடகலை பொலிந்தது
அரசிளங் குமரன் அழகிய திருமுகம்!
இவ்வா றந்நகர் எழிலுறு மங்கையர்
ஒருவர்பின் னொருவராய் உலகாள் மன்னவன்
மைந்தனைக் கண்டு வணங்கிச் சென்றனர்.<noinclude></noinclude>
ttax7ot94oin5v5jwakvgf5jo0twsx9
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/62
250
651805
1958892
2026-08-20T09:50:17Z
Asifa parveen
16885
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "saGur® arpa! 37 Opps HPs Yoater wasiyo shiys Osohts B2ng52av —2. psd or yGgear wreres srenég urs Bonu nerijaMIed amps giaQuer ours, (Gap) Qsrain_& aarey' Carurom! @wI. Odrdr BaanG9C per aeinQ wound gdjpar tr (G) gaignn veg wmgunIer BS Osrar® Qeinpgs soCurB soar orbgurt@ wb wer a8 aér@per mb arp ase apiigoaGu!"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Asifa parveen" /></noinclude>saGur® arpa! 37
Opps HPs
Yoater wasiyo
shiys Osohts
B2ng52av —2. psd
or yGgear wreres
srenég urs Bonu
nerijaMIed amps giaQuer
ours,
(Gap)
Qsrain_& aarey' Carurom!
@wI. Odrdr BaanG9C per
aeinQ wound gdjpar tr (G)
gaignn veg wmgunIer BS
Osrar® Qeinpgs soCurB
soar orbgurt@ wb
wer a8 aér@per mb
arp ase apiigoaGu!<noinclude></noinclude>
eayog3dl535026do4z41dv2h8fhc299
பக்கம்:ஆட்கொல்லி.pdf/23
250
651806
1958893
2026-08-20T09:50:17Z
Sujibala S
16882
ocr
1958893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>16
ஆட்கொல்லி
கிறேன். ஆனால், தினமும் வேட்டி சட்டையை அழுக்
காக்கிக் கொண்டுதான் வீடு திரும்புவேன்.
"
"காலிலும் கையிலும் இருக்கிற அழுக்கை அலம்பிவிட
ஒரு கட்டி சோப் வேண்டும்" என்பாள் மாமி.
''என்னைச் சொல்றயே....... கண்ணப்பனுக்கு ரெண்டு
கட்டி சோப் வேண்டுமே" என்பேன் நான்.
மாமிக்கு அந்தப் பேச்சுப் பிடிக்காது. கண்ணப்பன்
பேச்சையே அவள் எடுக்க மாட்டாள். ஒருநாள்
'கண்ணப்பன் இன்னும் இரண்டு நாளில் ஊருக்குப் போய்
விட்டானானால் நீ மறுபடியும் கெட்டிக்காரனாகிவிடுவாய்"
என்றாள் மாமி. எவ்வாறு என்பது எனக்குத் தெரிய
வில்லை. அசடு கெட்டிக்காரனாக ஆவது அப்படியெல்லாம்
சுலபமான காரியமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால்,
கண்ணப்பன் ஊருக்குப் போகப்போகிறான் என்ற செய்தி
என் கண்களைக் கலக்கிற்று. "சின்னம்மா போகட்டும்.
கண்ணப்பன் மட்டும் இங்கிருக்கட்டும் மாமி" என்று
சொல்லிப் பார்த்தேன்.
"ரெண்டு பேருமே போகட்டும், சீக்கிரம் போகட்டும்'
என்றாள் மாமி, பல்லைக் கடித்துக்கொண்டு.
"ஏன் மாமி அப்படிச் சொல்றே? கண்ணப்பன் நல்ல
வன் மாமி. பள்ளிக்கூடத்துச் சம்பளத்தை மட்டும் சரி
யாகக் கொடுத்தால் நன்றாகப் படிப்பான் மாமி" என்று
சொல்லிப் பார்த்தேன்.
''உனக்குத் தெரியாத விஷயத்திலெல்லாம்
தலையிடாதே!" என்றாள் மாமி சற்றுக் கடுமையாகவே.
ஆழமாம். உண்மைதான். எனக்கு அப்போதும் தெரிய
வில்லை; இப்போதும் தெரியவில்லைதான். உலகத்தில்
எதையோ வைத்து எதையோ மதிப்பிடுகிறார்கள். முக்கியம்<noinclude></noinclude>
mx0ecftslp097xtlkdy6suztdnty910
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/14
250
651807
1958894
2026-08-20T09:50:29Z
Sakthi Devi.M
16878
ocr
1958894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sakthi Devi.M" /></noinclude>: அறிவின்
செல்வரே!
அமைச்சரே.
நீவிர்
அசிதமா முனிவன் அக்கா ஸூரைத்ததும்
கனாநூல் கற்றவர் கணித்துச் சொன்னதும்
அறிவீ ரென்பதில் ஐயமொன் றில்லை.
என்னுயி
ரனைய
என்மகன்
உலகில்
பகைக்குலம் வேரறப் பறித்துக் களைந்து
மன்னர் மன்னனாய் மணிமுடி சூடித்
தரணி முழுவதும் தனியர சாஞவான் ;
(என்னுள் விருப்பமும் இதுவே யாகும்)
அன்றேல்,
அடியோ
ஆசையை
முற்றத் துறந்த
நாடு
விட்டு
காட்டிற்
பெறுதற்
டகழ்ந்து
முனிவ
நகரும்
நீக்கி
னாகி
வீட்டுக்
சென்று கடுந்தவம் புரிவான் ;
கரிய பெருந்திரு வெல்லாம்
So<noinclude></noinclude>
r7fjg8davb3z78nhw628w4pqfswrdzn
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/18
250
651808
1958895
2026-08-20T09:50:42Z
Sadhana G
16877
ocr
1958895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadhana G" /></noinclude>காதல் பிறந்த கதை
"திக்கெலாம் புகழும் திருவோ லக்க
மண்டபம் அதனில் மகிழ்ச்சி தரும்ஓர்
காட்சி காணக் கருதினன் மன்னவன்.
அதனால்,
"இந்நாட் டுள்ள எழில்மிகு கன்னியர்
அனைவரும் நாளை அரண்மனைக் கேகுமின்;
அழகிய கன்னியர்க் கரசிளங் குமரன்
பரிசுகள் பற்பல பரிவொடு வழங்குவன்;
வனப்பில் மிக்க மங்கையர் மணியிப்
பாரெலாம் புகழும் பரிசினைப் பெறுவள்;
ஈதெம் இறைவன் இட்ட கட்டளை"
என்று மன்னவன் ஏவலர் ஒருநாள்
பட்டண மெங்கும் பறைகள் சாற்றினர்.
அது கேட்டு,
அந்நக ரத்துள அழகிய கன்னியர்
வைகறை எழுந்து மஞ்சன மாடி
ஆடை அணிகள் அழகாய் அணிந்து
கூந்தல் வாரிக் கொண்டை முடித்து
மல்லிகை முல்லை மாலை சூடி
வடிவேல் விழிக்கு மையு மிட்டுத்
திருந்திய நெற்றியில் திலகமும் தொட்டுச்
சிற்றடி சிறந்திடச் செம்பஞ்சும் ஊட்டி
மணவறை ஏறும் மங்கையர் போல
மன்னவர் கோயில் முன்வந்து கூடினர்.
அந்நாள்,
பொற்சிங் காதனம் பொலிவுற அமர்ந்த
அரசிளங் குமரனை அஞ்சன விழிகள்
நிமிர்ந்து நோக்காது நிலத்தையே நோக்க
13<noinclude></noinclude>
hvbxlhqj5zridd3bl45357wrbbilc3i
பக்கம்:ஆட்கொல்லி.pdf/24
250
651809
1958896
2026-08-20T09:50:50Z
Sujibala S
16882
ocr
1958896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>மாமாவும் மருமானும்
17
இல்லாததை யெல்லாம் வைத்து முக்கியமானதையெல்லாம்
மதிப்பிட்டு முடிவு கட்டிவிடுகிறார்கள். ஏன்,எப்படி,எதற்
காக, என்றெல்லாம் என்னால் இன்னமும் கண்டு கொள்ளத்
தான் முடியவில்லை. அன்று சிறு பையனாக இருந்தபோது
மட்டும்தான் என்றில்லை. இப்போதும்கூட என்னால் பல
விஷயங்களைத் தெளிவாகக் கண்டு அறிந்துகொள்ள முடிய
வில்லை. உலகிலே நடப்பதைக் காண்கிறேன். ஆனால்
கண்டதற்குக் காரணங்கள், ஆதாரங்கள் அறிய முடிய
வில்லை. மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள், இது
மனித சுபாவத்தின் அடிப்படை என்பதைத் தவிர எனக்கு
வேறு ஒரு காரணமும் தோன்றவில்லை, உலகில் நடக்கிற
அநீதிகளுக்கெல்லாம்.
பணக்காரனிடம் பணம் சேருகிறது. ஏழையினிடம்
படிப்படியாகப் பணம் குறைகிறது. கண்கூடாக
தினமும் காண்கிற விஷயம்தான். பணக்காரனுக்கு உதவ,
பாங்குகள் முதல், தனி மனிதர்கள் வரையில் எல்லோருமே
தயாராக இருக்கிறார்கள். உறவினர்கள் போட்டி போட்டுக்
கொண்டு, இந்த லாபமில்லாத உதவியை ஒரு ஏழை உற
வினனுக்குச் செய்தால், அந்த ஏழை உறவினன், ஏழைமை
நீங்காவிட்டாலும், அன்புடனும் ஆதரவுடனும் ஒரு கவலை
நீங்கி யிருக்கமாட்டானே? உதவி தேவையாகிற இடத்
திலே, உதவி தேவைப்படுகிற காலத்திலே கிடைக்கக்
கூடாது என்பதுதான் ஈசுவர சிருஷ்டியின் நியதியா?
உடையவர்கள் என்றும் உடையவர்களாகவே இருக்க
வேண்டும் என்பதற்காக மனிதன் தானாக ஏற்படுத்திக்
கொண்ட ஒரு நடைமுறையா இது? - அப்படியும் நடந்து
விடுவதில்லையே?. உள்ளவன் ஒன்றும் இல்லாதவனாகப்
போவதையும்,உடனே அவனை உற்றாரும் உறவினரும்
விட்டு நீங்குவதையும் நாம் சகஜமாக உலகிலே காண்
2<noinclude></noinclude>
hdzeizxsuq3p6tyhknfuq0bvkdawon2
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/15
250
651810
1958897
2026-08-20T09:50:54Z
Sakthi Devi.M
16878
ocr
1958897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sakthi Devi.M" /></noinclude>10
காதல்
இகழ்ந்து
இன்பம்
தவத்தால்
பிறந்த கதை
எய்இடும்
யாதோ?
அந்த
யானெதும்
அறியேன்;
ஆயினும்,
என்மகன்
நோக்கம்
இதுவே
யாகும்;
அரண்மனைச் செல்வம் அனைத்திலும்
சிறிதும் அவன்றன் சிந்தையிலில்லை.
ஆசை
ஆதலின்,
நீணிலம் புரக்கும் நெறியின் மீதவன்
உள்ளம் திரும்ப உபாய மிதுவென
ஆய்ந்து நீவிர் அறைதல் வேண்டும்;.
விரும்பிடில் இந்த
ஆளுவான்
மேதினி
இவனென்.
5,
முழுதுமே
நறிஞர்
அ௮ந்காள்
ஒதிய மொழியும் உண்மை மொழியாய்
நெடுகா ஸிங்கு நிலைத்திடல் வேண்டும்.”
என்று மன்னன் இயம்பினன். அதுகேட்டு)
அமைச்சர் நாயகன். அறமுது கிழவன்
எழுந்து நின்“றெம் இறைவனே :! கேளாய்)
ஈதொரு சிறுகோய், இக்கோய் நீங்கிடக்
காதலைப் போலொரு
கைகண்ட மருந்தும்
மேதினி மீது வேறெதும் இல்லை.
மைந்தன் உள்ளம் மங்கையர் மையலில்
இளைத்து மூழ்கச் செய்திடல் வேண்டும்;
அண்ணலே!
நின்மகன் அறியாச் சிறுவன்
மங்கையர் மதிமுக வனப்பின் தன்மையும்
அவர், கருவிழி யாம்கூர்ங் கணையின் கடுமையும்
அவர்,
அதரத்
இக்காள்
௮.தனால்,
தூறும்
வரையிலும்
அமுதின்
ஈதென
இனிமையும்
அறியான்.<noinclude></noinclude>
s46jeum8t78w14yspe40et74dddtdt7
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/8
250
651811
1958898
2026-08-20T09:50:57Z
Farzana Jamesha
16881
OCR
1958898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Farzana Jamesha" /></noinclude>விஷயத்தில் ஒற்றுமை மனம் உடையரா
யிருக்கிறார்கள்; உண்மையான கவிதை
யைப் படி.த்த அளவிலே ஈம் மனத்திலே
விவரிக்கமுடியாத
ஓர் இன்பம் உண்
டாகி விடுகிறது என்கிருர்கள்.
இக்
லில்
முதலாவதாய்
அமைந்துள்ள
“காதல் பிறந்த கதை' இத் தகுதிவாய்ந்த
உண்மைக்கவிதையாகும். இதை நின்று
புகழ்ச் துவிட்டுப் பின்
நுகர்வோம் என்று
யாது.
கவிபாரதி!
காட்டினிற்
இதைக்
கற்று
கரம் எண்ணரமுடி.
பெண்களுக்கு
கைந்த பழங்கதைகள்
நாயகர் சொல்லும்--௬)வ
நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்--தம்முள்
பன்னியுபசரணை பண்ணுவதுண்டோ?
நீட்டுங்
கதிர்களொடு கிலவுவந்தே--விண்ணை
நின்று
புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகனையச் சோதி கவ்வுங்கால்-- அவை:
முன்னுபசாரவகை மொழிந்திடுமோ?
என்று பாடுகின்றார். இது போலத்தான்
நாமும் உண்மைக் கவிதையனுபவத்தில்
விரைந்து மூழ்கித் தளைக்கன்றோம்.
இதுபோன்ற
கவிதையை
ஒரு
முறை நுகர்ந்து இன்புற்றதோடு நமது
மனம் முற்றும் திருப்தியடைந்து விடுவ
தில்லை. மீண்டும் மீண்டும் அதனை நுகர
வேண்டும் என்னும் அவா நம் மனத்தில்.<noinclude></noinclude>
93do26p48b49sisf0wejalokgy2rexv
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/63
250
651812
1958899
2026-08-20T09:51:04Z
Asifa parveen
16885
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "y. Ga. &. AQUEIUSG! QO AF Oru acrohé s8CpBure, gbucr saCuCure wd gd QurBes werCuGurd—uer pied ar@ wipe Agbug rg womrvrl 460 & amps B2ar 551."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Asifa parveen" /></noinclude>y. Ga. &.
AQUEIUSG! QO AF Oru
acrohé s8CpBure,
gbucr saCuCure
wd gd QurBes
werCuGurd—uer pied
ar@ wipe Agbug
rg womrvrl
460 & amps
B2ar 551.<noinclude></noinclude>
6iw0d23vaf7vrzdbr8zc4szhpsuvuk2
பக்கம்:ஆட்கொல்லி.pdf/25
250
651813
1958900
2026-08-20T09:51:16Z
Sujibala S
16882
ocr
1958900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>18
ஆட்கொல்லி
கிறோம். அப்படியும் உள்ளவர்களுக்கோ, உற்றார் உறவினர்
களுக்கோ அறிவு ஏற்படுவதில்லையே, அது ஏன்?
சின்னம்மா ஒரு காரணமாகத்தான் அண்ணன் வீடு
தேடி வந்திருந்தாள் என்று கண்ணப்பன் கிளம்புகிற
அன்று தான் எனக்குத் தெரிந்தது. அவள் புருஷனுக்குக்
காச் நோய் கண்டிருந்தது. உட்கார்ந்து கடையைக்
கவனிக்க முடியவில்லை. மாதா மாதம் வந்துகொண்டிருந்த
பத்திருப்பதிலும் மண் விழுந்துவிட்டதானால் நாலைந்து
குழந்தை குட்டிகளை வைத்துக்கொண்டு சித்தி என்ன
செய்வாள், பாவம்? புருஷனுக்கு வைத்தியம் செய்து,
இங்கிலீஷ் ஊசி போடவும், கடைக்கு அவசியமாக
இன்னும் கொஞ்சம் முதல் போடவும் ஒரு இருணம்.
ரூபாய் பணம் வேண்டும்; அண்ணன் கொடுக்க மாட்டானா
என்று வந்திருந்தாள். இடுப்பில் சூம்பிய முகமும் பெருத்த
வயிறுமாக ஒரு குழந்தையுடன் அவள் நின்ற காட்சியே
பரிதாபமாக இருந்தது.
எனக்குப் பரிதாபமாக இருந்து என்ன லாபம்?
அன்றும் என்னிடம் பணம் இல்லை. நாற்பது வருஷங்கள்
கழித்து இன்றும் என்னிடம் பணம் இல்லைதான்.
சின்னம்மா மீனாச்சி இறந்துபோய் எத்தனையோ வருஷங்க
ளாகிவிட்டன. அவள் இடுப்பில் வயதுக்கு மீறிய தொந்தி
யுடன் எச்சில் வழிய உட்கார்ந்திருந்த அந்தக் குழந்தையும்
இந்துத் துயரம் நிறைந்த உலகிலே அதிக நாள் தங்கவில்லை;
ஐந்தாவது வயது வருவதற்குள் அதன் வாழ்க்கையும்
முடிந்துவிட்டது. ஆனால், மீனாச்சிகளைப் போன்றவர்
களுக்கும், அவள் குழந்தைகளைப் போன்றவர்களுக்கும்,
இன்னமும் உலகிலே குறைவில்லையே? அவர்கள் துயரத்தை
யும் பணம் கொண்டு துடைக்க என்னால் இன்னமும் முடிய
வில்லையே என்று சில சமயம் நான் நினைப்பதுண்டு. ஆனால்<noinclude></noinclude>
0h3n112p9u7grakyq6tpj9oegvjbmp3
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/16
250
651814
1958901
2026-08-20T09:51:17Z
Sakthi Devi.M
16878
ocr
1958901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sakthi Devi.M" /></noinclude>காதல பிறந்த கதை
மனத்துக்
கனிய
மனை விய
ரோடு
Td
்
தோழர் தோழியர் சூழ்ந்திட அவனை
வாழ வைப்பதே பாண்புறு செயலாம்;
இரும்புத் தொடரையும் எறிந்து செல்லும்
ஆடவர் மனமெனும் மத்த யானை ஓர்
. மங்கை இட்ட. மயிரிழை அதனுக்(கு)
அடங்கி
நின்றிடும்
ஐயமொன்
றில்லை”
என்று கூறி இருந்தனன். இதனை
ஆமென் றனைவரும் ஆமோ இத்தனர்.
்
-
அப்பால்,
அரசர்க் கரசன் அமைச்சரை கோக்க
மைந்தனுக் குரிய மங்கையர் மணியினை
யாமே தேர்தல் இசைவில தாகும்;
காதலன் தன்னிரு கண்களால் கண்டு
தேர்ந்து தெளிவதே சீரிய முறையாம்;
. மங்கைய ராகிய மலர்கள் நிரம்பிய
நந்த வனத்தின் நடுவே அவனை
நிறுத்தி (ஐய, நின்னுளம் விரும்பிய
பருவ மலரைப் பறித்துக் கொள்ளெனில்
அவன், இன்ப மறியா இகாஞன் ஆதலின்
புன்னகை புரிந்து புதுமல ரொன்றும்
தீண்டா தப்பால் சென்றிடில் என் செய்வோம் £??
என்று
கூறினன்.
இவ்வுரை
கேட்ட.
அமைச்சருள் ஓருவன் அறிவிம் சிறந்தோன்
“அம்புவி ஆளும் அரச! கேண்மோ.
தொடுசரம் உடலைத் துகாத்இடும் மட்டுமே
மூடங்குளைச் சீயம் முழங்கித் இரியும்;<noinclude></noinclude>
85f4wz7ld1m8ypbgn05wj1r1livqwzz
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/9
250
651815
1958902
2026-08-20T09:51:29Z
Farzana Jamesha
16881
OCR
1958902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Farzana Jamesha" /></noinclude>வேரூன்றி விடுகிறது. நுகர நுகரத்
தெவிட்டுவதில்லை. என்றும் மாறாத
இளமைத் தன்மையோடு நின்று நம்.
மனத்தைக் கவர்கின்றது. இவ் இயல்
பினையும் கவிஞரும் ஆராய்ச்சியாளரு.
மாகிய ஓர் மேல் நாட்டு ஆசிரியர் வற்
புறுத்தியிருக்கிறார். தே.வி.யின் கவிதை.
களிற் பல இவ் இயல்புடையன என்
பது தமிழ்மக்கள் நன்கு அறிந்ததே.
இவ் வகைக் கவிதைகள் தோன்
றும் முறையைக் குறித்தும் ஆராய்ச்சி
யாளர்கள் ஒரு முகமாய்ப் பேசுகிறார்
கள். உண்மையுள்ளத்தின் அடி நிலத்தி
லிருந்துதான் உண்மைக் கவிதைகள்
தோன்றும். எவ்வாறு உண்மை யுள்
ளத்தை அறிவது? பாரதியின் கவிதை.
யொன்று ஞாபகத்தில் தோன்றுகிறது.
சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல்- பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால்- பிற
வாஞ்சை யுண்டோ? வயதங் ஙனமே இரு
பத்திரண் டாமளவும்- வெள்ளை
பண்மகள் காதலைப் பற்றி நின்றேன், அம்மா!
என்ற கவிதையை அறியாதவர்கள்
இருக்கமாட்டார்கள். இக் கவிதையிற்<noinclude></noinclude>
rjrdw06ldswic54q49uefjsz8vnb6i5
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/64
250
651816
1958903
2026-08-20T09:51:30Z
Asifa parveen
16885
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "4. Ge, A. 59 mentor sOpe Ardsiag HGiAsrev@ Gri: Gerpud dr QIaB& udeorein® arpuBe—cror Bahu seour! Agbus orgel wb wmepgadr sen unis seord x 4. Ca. B®. amps salts. GHGo orgie Spe ards acme Qui paper Lremilés giobr Gar Cur p p84 Cpe —sieptsib Aéogs wOpé Agius org service séggtb apart ar."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Asifa parveen" /></noinclude>4. Ge, A. 59
mentor sOpe Ardsiag
HGiAsrev@ Gri: Gerpud
dr QIaB& udeorein®
arpuBe—cror Bahu
seour! Agbus orgel
wb wmepgadr
sen unis seord
x
4. Ca. B®. amps
salts.
GHGo orgie
Spe ards acme
Qui paper Lremilés giobr Gar
Cur p p84 Cpe —sieptsib
Aéogs wOpé Agius
org service
séggtb apart
ar.<noinclude></noinclude>
e4f4snystafrqct04lngx644q1453gv
பக்கம்:ஆட்கொல்லி.pdf/26
250
651817
1958904
2026-08-20T09:51:47Z
Sujibala S
16882
ocr
1958904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>மாமாவும் மருமானும்
19
அதே சமயம், "என்ன அகம்பாவம் இது? அவர்கள்
துயரத்தையெல்லாம் துடைக்க முன்வர நான் யார்? பணம்
தான் துடைக்குமா?....சரி....என் துயரங்களைத் துடைப்பது
யார்?" என்று சிந்தித்துக் கொள்வேன். சமாதானமடை
வேன். என் அல்ப காரியங்களில் மனத்தைச் செலுத்தி
விடுவேன்.
என் மாமாவிடம் அப்போதும் பணம் இருந்தது.
மேலும் பணம் சேர்ந்துகொண்டிருந்தது. தன் தங்கை
கேட்ட பணம் இருநூறையும் கொடுக்க அவருக்கு மன
மில்லாவிட்டாலும், ஐம்பது அறுபதாவது கொடுத்து
அனுப்பலாம் என்றுதான் அவர் எண்ணினார்.
அவ
"ஐம்பது அறுபது கொடுத்தால் போதாது
ருக்கு" என்று மரியாதையாகத்தான் கணவனின் தங்கை
பற்றிச் சொன்னாள் மாமி.
"அப்படிச் சொன்னால்....... இருநூறையும் கொடு
என்கிறாயா?" என்றார் மாமா.
"அதெப்படி முடியும்? நம்மிடம் இருநூறு இருந்தால்
தாளே அதைப் பிற்காலத்தில் உபயோகப்பட, ஐந்து
வருஷத்தில் நானூறாக்கலாம்?
"பின்னே, என்ன சொல்லுகிறாய்?'
"பத்து ரூபாய் கொடுத்தனுப்புங்கோ. என்னை வந்து
யுத்தி கேக்கறேளே.... கொட்டிக்கிடக்கு என்று பெண்
டாட்டியைக் கையாலாகாதவன் இங்கு அனுப்பினானாம்!
இன்னொரு கையாலாகாதவன் என்னை வந்து யோசனை
கேட்கிறானாம்!" என்றாள் மாமி, கம்பீரமாக
இந்த வார்த்தைகள் பல வருஷங்களுக்குப் பிறகு
எனக்கு இப்போது ஞாபகம் வருகின்றன.
என் மாமியின்
அந்தக் கம்பீரமான வார்த்தைகள் எப்படிப்பட்டவை
என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு அப்போது வயது<noinclude></noinclude>
iyywffs9s9gqq58moivpcj1o2imuqzb
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/65
250
651818
1958905
2026-08-20T09:51:48Z
Asifa parveen
16885
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "60 orga Opis song Shagd sdios 96. y. Gs, A sata anpimat ensBrims cy Bu urdvers Asrovren_urer got SEG SeIveM HOI amps. Fn. IGEGLD woirus@sreomt GGSI WO PH HK STL uri. urges uiTt_Gor urgnb Can 6 pig sab sry. Qdors srni@eis Qe A 5O5 4H 520 utd Csu. wypasmilé Qenéren spe Gedo! aur ipa! arspaCarl!"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Asifa parveen" /></noinclude>60 orga Opis song
Shagd sdios 96. y. Gs, A sata anpimat
ensBrims cy Bu urdvers Asrovren_urer got
SEG SeIveM HOI amps.
Fn. IGEGLD woirus@sreomt
GGSI WO PH HK STL
uri. urges uiTt_Gor
urgnb Can 6 pig sab
sry. Qdors srni@eis
Qe A 5O5 4H 520 utd
Csu. wypasmilé Qenéren spe
Gedo! aur ipa! arspaCarl!<noinclude></noinclude>
i0jaly6j5egqcb4rxkm9ausu0npnzxx
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/10
250
651819
1958906
2026-08-20T09:52:01Z
Farzana Jamesha
16881
OCR
1958906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Farzana Jamesha" /></noinclude>சென்னை
8-5-47
கூறியுள்ளது தே.வி. அவர்களைப்பற்றிய
அளவில் முற்றும் உண்மை, உண்மை.
ஆனால், இருபத்திரண்டு வயதளவுமட்டு
மல்ல; இன்றுவரை அப்படித்தான்.
ஸ்ரீ தே.வி. அவர்கள் நீடூழி வாழ்ந்து
கவிதா உபசரணையில் உயிர் தளிர்த்து
நின்று
தமிழன்னைக்குத் தொண்டு
புரியுமாறு இறைவன் அருள் புரிக.
உண்மைக் கவிதை இன்பத்தை
தமிழ் மக்களுக்கு ஊட்டி இச்சிறு
வெளியீடு நீடுநிலவும் என்று உறுதி
யாய் நம்புகிறேன்.
எஸ். வையாபுரிப் பிள்ளை<noinclude></noinclude>
ehyyuzdi5x7f18uk3efr8r0ya7j2w62
பக்கம்:ஆட்கொல்லி.pdf/27
250
651820
1958907
2026-08-20T09:52:07Z
Sujibala S
16882
ocr
1958907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>20
ஆட்கொல்லி
போதவில்லை. நாளடைவில்தான் நான் அதை அறிந்து
கொண்டேன். "பிற்காலம்" என்று சொல்லும்படியானதற்
கெல்லாம் அஸ்திவாரமாக அமைந்தவை அந்த வார்த்தை
கள் என்பதை நான் பின்னர் பல வருஷங்களுக்குப் பிறகு
தான் புரிந்துகொண்டேன். அப்போதே மாமாவும் மாமி
யும் தங்கள் வாழ்க்கை லக்ஷியத்தைத் தெளிவு செய்து
கொண்டுவிட்டார்கள். அதன்படி நடக்க அவர்கள் இனித்
தயங்கமாட்டார்கள்.
மாமா ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு
போய்த் தன் தங்கையையும் மருமானையும் ரெயிலேற்றி
விட்டு வந்தார். மன்னார்குடியிலிருந்து சிதம்பரத்துக்கு
ஒன்றரை டிக்கட் வாங்கிக் கொடுத்தார்.
''எத்தனை கொடுத்தேள்' என்று மாமாவைக் கேட்
டாள் மாமி.
"டிக்கட் வாங்கிக் கொடுத்தேன்.
பையன் கையில்
வென்ளிப்பணமாக ஒரு ரூபா கொடுத்தேன்'' என்றார்.
மாமா.... சபாஷை எதிர்பார்க்கும் குரலில்.
ஆனால் மாமி "சபாஷ்" சொல்லவில்லை; அதற்கு
அவசியம் இல்லை.
3. 93-12-0
சிருஷ்டி தத்துவம் மிகவும் விசித்திரமானது.
மனிதன் தான் சிருஷ்டித்துக்கொண்டு, சௌகரியம் என்று
ஏற்றுக்கொண்ட ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டுக்
கிடக்கிறானே என்று எண்ணும்போது ஆச்சரியமாகவே
இருக்கிறது. பிராணிகளிலே மனிதன் தான் அறிவுள்ளவன்
என்று- சொல்கிறார்கள். சிந்தித்துப் பார்க்கும்போது
அவன் அப்படி ஒன்றும் அறிவுள்ளவன் மா திரித் தோன்ற
வில்லை.<noinclude></noinclude>
5357cwisk291dsll8iqwba6qrmyq4cu
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/66
250
651821
1958908
2026-08-20T09:52:08Z
Asifa parveen
16885
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "BIDDHO LIToveT Dbmps sb pen Qsus gu cier “Qs Ber p0G ASBISBH Caray oussrs —spo pes Pau 6 eeveqear 9S! Yap Brndae umarvst gr we8as sth uri!"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Asifa parveen" /></noinclude>BIDDHO LIToveT
Dbmps sb pen
Qsus gu cier “Qs
Ber p0G ASBISBH
Caray oussrs —spo pes
Pau 6 eeveqear
9S! Yap Brndae
umarvst gr we8as sth
uri!<noinclude></noinclude>
hipsplsras2llls85aeowik6iwibb5b
பக்கம்:ஆட்கொல்லி.pdf/28
250
651822
1958909
2026-08-20T09:52:30Z
Sujibala S
16882
ocr
1958909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>93-12-0
21
மனிதன் தன்னுடைய தினசரி அலுவல்களில்
சௌகரியத்துக்காகப் பணம் என்ற ஒன்றைப் படைத்துக்
கொண்டான். உண்மையில், அந்தரங்க மதிப்பு எதுவுமில்
லாத, இருக்க முடியாத, பொய்யான அந்த ஒரு தத்துவத்
துக்கு அவன் இன்று பலியாகிவிடுகிறான். நாகரிகம்,
தந்திரம் என்று சொல்லிக்கொண்டு அவன் பணத்துக்கு
அடிமைப்பட்டுக் கிடக்கிறான். எல்லோரும் அடிமைகளாக
இருக்கும்போது நான் மட்டும் சுதந்தரமாக இருந்தால்,
பைத்தியக்காரன் என்று என்னை உலகம் சொல்லாதா
என்று கேட்காமல் கேட்கிறான்.
பணத்தை ஒரு லக்ஷியமாக எண்ணாமல் வாழ்க்கை
நடத்த முயலுகிறவனை உலகம் பைத்தியக்காரன் என்று
தான் மதிக்கிறது. வாழத் தெரியாதவன் என்றும் சொல்லி
விடுகிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்று
சுட்டிக் காட்டுகிறது. சில சமயம் சிந்திக்கும்போது,
இதைக் கலியுகம் என்று சொல்வதற்குப் பதில், பணயுகம்.
பொருளாதாரயுகம் என்று சொல்லலாம் என்று தோன்று
கிறது. அடிமைப்பட்டுக் கிடப்பதில் வருத்தத்துக்குப்
பதில் ஆனந்தத்தையே மனிதன் காணத் தொடங்கி
விட்டால் அதை என்னவென்று சொல்வது?
மன்னார்குடியில் பள்ளிக்கூட வாத்தியான என்
மாமாவுக்கு என்ன சம்பளம் வந்தது? எனக்குத் தெரியாது.
அதற்குப் பிறகு கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில்
ஒரு வருஷம் வாத்தியாராக இருந்தார் மாமா. அப்பொழு
தும் மாமாவுக்கு என்ன சம்பளம் என்று எனக்குத் தெரி
யாது. ஆனால்,நான் மாமா வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த
மூன்றாவது வருஷம் மாமாவுக்குச் சர்க்கார் கவ்வி இலாகா
கிலே
லே வாத்தியார் வேலை கிடைத்துவிட்டது. கைலாஸம்
வைகுந்தம் என்கிற இடத்தில் தனக்கென்று ஒரு நிரந்தர<noinclude></noinclude>
nyi8apas6tx5frqwvnn1e3whw78fdz9
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/17
250
651823
1958910
2026-08-20T09:52:37Z
Sakthi Devi.M
16878
ocr
1958910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sakthi Devi.M" /></noinclude>28
காதல் பிறந்த கதை
மங்கையர்
அழகிய
மதிமுகம் கண்டு
மயங்கா மனிதரிவ் வையகத் தில்லை;
உதய குமரியை ஓத்தஓர் கன் னீயின்
மைவிழி
கண்டு மயங்குவன்
நின்மகன்)
ஐயம் இல்லை: ஆதலின் அடியேன்,
செப்பும் காரியம் செய்வது நலமாம்.
விரைவி லிங்கொரு வீழாக்கொண் டாடுஃ.
Sprays காகவிவ் வியனக ரத்துள
அழகே
கன்னி௰ர்க் கழைப்பு விடுக்க.
அப்பால்,
சாக்கிய காட்டுத் தவிச்சிறப் புடைய
ஆடல் பாடல் அனைத்திலும்.அவர்கள்
கற்ற திறனெலாம் காட்டச் செய்க.
செய்தபின்,
அழகில் இளமையில் ஆடல் பாடலில்
சிறந்தவர் தமக்குச் சிற்சில பரிசுகள்
நின், மைந்தன் கையால் வழங்கிடச் சொல்க.
பரிசுகள் பெறஅவன்
பக்கம் வந்துசெல்
அழக எவளால் அவனது
திருமுகம்
வாட்டம் நீங்க மலர்ச்சி பெறுமோ,
அவளே ஐயகம் அரசிளங் குமரன்
வாழ்க்கைக் குரிய மனைவி யாவாள்.
கரதல் கொண்டவன் காதற் கண்ணால்
கண்டு தெரிந்த காரிகை யோடு
வாம விரும்புதல் வையகத் தியல்பாம்'”
என்று கூறி இருந்தனன். இதுவே
கன்று ஈன்றென ஈவில் றனர் யாவரும்.
அப்பால்,<noinclude></noinclude>
1drmmucm9i5wy5evzna7jpdjr3yu3ka
பக்கம்:ஆட்கொல்லி.pdf/29
250
651824
1958911
2026-08-20T09:52:52Z
Sujibala S
16882
ocr
1958911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>22
ட்கொல்லி
மான ஸ்தானம் கிடைத்துவிட்டமாதிரித்தான் மாமாவும்
அம்மாமியும் மற்றவர்களும் அதுபற்றி ஆனந்தப்பட்டார்
கள். சர்ச்கார் உத்தியோகம் என்கிற சாயுஜ்ய முத்திரை
எம்.ஏ.என்கிற பட்டத்தின் விளைவாகத் தனக்குக் கிட்டிய
பிறகு, யாரும் தனக்கு நிகரில்லை என்று மாமா எண்ணுகிற
மாதிரித்தான் இருந்தது.
"ராஜாவும் மாமா மாதிரி எம்.ஏ.பாஸ் பண்ணிச்
சர்க்கார் உத்தியோகத்துக்கு வந்துவிட வேண்டும்" என்று
என்னை ஆசீர்வதித்தாள் மாமி.
எனக்கும், இதற்கு அந்த நாட்களில் சொல்ல,
ஆக்ஷேபம் ஒன்றும் தோன்றவில்லை. மாமாவுக்குச் சர்க்கார்
வேலை கிடைத்ததற்காகச் சாத்தனூர்க் கோயிலிலும்,
கும்பகோணம் கோயில்கள் இரண்டிலும் நடந்த அபிஷேக
அர்ச்சனை விஷயங்களில் நானும் மனப்பூர்வமாக ஈடுபட்
டேன். உத்தியோக ஆர்டர் வந்த அன்று மாமாவும்
அம்மாமியுமாகச் சேர்ந்து நின்றுகொண்டு ஒரு போட்டோ
எடுத்துக் கொண்டார்கள். அந்தப் போட்டோவில் மாமி
யின் கையைப் பிடித்துக்கொண்டு நானும் நிற்கிறேன்.
ஜிகினா வேலை செய்த ஒரு மூடிய நீலக் கோட்டு, தலையிலே
ஒரு நீலக் குல்லா; அதிலும் ஜரிகை யிருந்தது என்று
எண்ணுகிறேன். நெற்றியிலே வழிந்த எண்ணைக்கு மத்தி
யில் ஒரு சிறிய சாந்துப் பொட்டு. இடுப்பிலே கோணலும்
மாணலுமாகக் கட்டியிருந்த ஒரு பட்டுக்கரை வேட்டி.
போட்டோவில் என்னுடைய இந்தத் தோற்றத்தை
இப்பொழுது நினைத்துப் பார்த்துக்கொண்டால்கூட எனக்
குச் சிரிப்பு வருகிறது. அப்படி இருந்த நான், என் மாமா
வின் கணக்குப்படி, என் மாமியின் பராமரிப்புப்படி
வெற்றி பெற வேண்டியவனின் சின்னங்கள் எல்லாம் பூரண
மாகப் பெற்றிருந்த நான், ஏன், எப்போது,எப்படி, இப்படி<noinclude></noinclude>
r8ccw2d4rpekkdpcwxzp6pwjb61lbgv
பக்கம்:ஆட்கொல்லி.pdf/30
250
651825
1958912
2026-08-20T09:53:12Z
Sujibala S
16882
ocr
1958912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>"
932-120
23
ஆனேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
என் வாழ்விலே எந்தச் சமயத்திலே வெற்றி வேண்டாம்,
என் மாமாவைப் போன்ற வெற்றி பெறுவதைவிட
வெற்றி என்பது இல்லாமலே இருந்துவிடலாம் என்று
என எக்குத் தோன்ற ஆரம்பித்தது என்று சொல்லத் தெரிய
வில்லை.
•
ல
கா
வடம்
அந்தப் போட்டோவில் உள்ள என்னைப்பற்றிமட்டும்
சொன்னால் போதுமா? மாமாவையும், மாமியையும்பற்றிச்
சொல்ல வேண்டாமா? அம்மாமி மாமாவைவிட மூணங்கு
குலம் உயரமாக, இரண்டு சுற்றுப் பருமனாகப் படத்திலே
காட்சி அளிக்கிறாள். ஒரு சாண் அகலம் ஜரிகையுள்ள
பட்டுப்புடவையைப் பொம்மைக்குச் சுற்றுவது போலச்
சுற்றிக்கொண்டிருக்கிறாள். கழுத்திலே பத்து
சங்கிலிகள். கைகளிலே ஆறு ஆறு வளையல்கள். ஐம்ப
தங்குல இடுப்புக்குத் தங்க ஒட்டியாணம். ரதிலே நல்ல
பளிச்சென்று சிவப்புத் தோடு. திருவாரூர் போன பிறகு
தான் வைரத் தோடு வாங்கிக்கொண்டாள் மாமி என்று
எண்ணுகிறேன். கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறாள் மாமி.
மாமா பக்கத்திலே பயந்து ஒடுங்கி நிற்கிறார் அந்தப்
போட்டோவிலே. பயந்து ஓடுங்கி என்று நான் சொல்வது
தவறுதான். அவர் காத்திரமே அவ்வளவுதான். அம்மா
மிக்குப் பக்கத்தில், யார் நின்றாலுமே, பயந்து ஒடுங்கி
நிற்கிறமாதிரித்தான் இருக்கும். சந்தேகம் என்ன? தலை
யில் டர்பனுடன்,மூடிய கோட்டுப் பையில் பேனாவுடன்
நிற்கிற மாமாவைச் சரக்ஷாத் பள்ளிக்கூட உபாத்தியாயரின்
நிரந்தர உருலும் என்று போற்றத்தான் வேண்டும். கையில்
பிரம்பில்லை. ஆனால், மாமா யாரையும் பிரம்பெடுத்து
அடித்ததாக எனக்குத் தெரியாது. வீட்டிலே பயந்த
சுபாவமுள்ள அவர், பள்ளிக்கூடத்திலேயும் அப்படித்தான்.<noinclude></noinclude>
f0uidh4odo27d7vzliw76zytiu5vbx1
பக்கம்:ஆட்கொல்லி.pdf/32
250
651826
1958913
2026-08-20T09:53:39Z
Sujibala S
16882
ocr
1958913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>'
93 12 0
25
கிறது என்று பார்க்கலாமே என்று ஒண்ணரை ரூபாயும்
வரி அரையணாவும் கொடுத்து அந்தப் புஸ்தகத்தை வாங்
கினேன். அதில் இருபது முப்பது லக்ஷாதிபதிகள்
தங்களுக்குப் பணம் எப்படிச் சேர்ந்தது என்பதை விவரித்
திருந்தார்கள். ஒருவன் எல்லோரும் உபயோகித்துவிட்டு
எறிந்துவிடுகிற தகர டப்பாக்களை யெல்லாம் பொறுக்கி
எடுத்து, வேறுவிதமான உருவங்களாகச் செய்து,
லக்ஷாதிபதியானான். ஒருவன் பெண்களுடைய தேவைப்
பொருள்களில் இன்றை உற்பத்தி செய்து லக்ஷாதிபதி
யானான். இப்படியாகப் பல கதைகள் இருந்தன அந்த
நூலில். ஆனால், அவர்களில் ஒருவராவது மாதச் சம்பளம்
தொண்ணூத்திமூணே முக்கால் ரூபாயில் லக்ஷாதிபதி
யாவது எப்படி என்று விவரிக்கவேயில்லை.
உயர
உத்தியோகத்தில் சேர்ந்து பன்னிரண்டு வருஷங்கள்
பூராவும் மாதம் தொண்ணூத்தி மூணேமுக்கால் ரூபாய்
சம்பளத்தில்தான்
சம்பளம்
இருந்தார் மாமா.
வேண்டும் என்று செய்துகொண்ட பிரார்த்தனைகளைக்
கல்வி இலாகா ஏற்றுக்கொள்ளவில்லை. சர்க்கார்தான்
ஏற்றுக்கொள்ளவில்லை யென்றால் சாத்தனூர்க் கோயில்
சிவபெருமானும் அந்தப் பிரார்த்தனைகளுக்குச் செவி
சாய்க்கவில்லை. சிவனிடம் வந்த கோபத்தில் மாமா முருக
பக்தனாகிவிட்டார் - அவ்வளவுதான் லாபம் "வேலும்
மயிலும் துணை" என்று முதல் வரி எழுதாமல் கடிதம்
கூட எழுதமாட்டார். மாதம் ரூ.93-12-0ல் எப்படிக்
குடித்தனம் நடத்துவது? எப்படிப் பணம் மீதம்
பிடிப்பது? எப்படி லக்ஷாதிபதியாவது?
எனக்குத் தெரியாது. மாமாவைத்தான், கேட்க
வேண்டும். ஆனால், மாமாவைக் கேட்டால் என்ன செய்
வார். பாவம். "எனக்குத் தெரியாதப்பா, அதெல்லாம்<noinclude></noinclude>
sldbgjku1th0shrlxfi1nb0ndkaf4uh
பக்கம்:ஆட்கொல்லி.pdf/33
250
651827
1958914
2026-08-20T09:54:01Z
Sujibala S
16882
ocr
1958914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>28
ஆட்கொல்லி
ஒன்றும் எனக்குத் தெரியாது. உண்மையிலேயே உனக்கு
அதுபற்றித் தகவல், உபயோகமான தகவல் ஏதாவது
வேண்டுமானால் : அம்மாமியைக் கேள்'' என்பார்.
அம்மாமி என்ன சொல்வாள்? 'போதுமென்ற மனத்
துடன் பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருந்தால், தானே
கடவுள் கொடுப்பார்" என்பாள்.
போதுமென்ற மனமா?
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதா?
கடவுளா கொடுப்பார்?
செய்பவனைப்போல
மனிதன் தன்னையே ஏமாற்றிக் கொள்வதில் எவ்வளவு
சமர்த்தனாக இருக்கிறான்? தவறு
நியாயமும் தித்வமும் பேசுவதில் தீவிரமுள்ளவன் வேறு
யாரையும் காணமுடியாது. கடவுளும் சாதிக்காத காரியங்
களைச் செய்பவன், கடவுளைக் கூப்பிடுகிற அளவு சாதாரண
வாழ்வு வாழ்கிற எவனும் கூப்பிடுவதில்லை. தர்மம், நியாயம்
என்பவற்றின் பெயரால், உலகில் நடக்கிற அதர்மங்களும்
அநியாயங்களும் கணக்கு வழக்கில் அகப்படா. அப்போது
நான் சின்னப் பையன்தான். இரண்டாவது வகுப்பில்
வருஷம் பூராவுமே பெஞ்சியின்மேல் நின்றேன். படிப்பு
வந்ததோ என்னவோ, காலுக்கு வலுவு ஏற்பட்டது.
அடுத்த வருஷம் நான் படித்த பள்ளிக்கூடம் என் தாத்தா
வுடைய சொந்தப் பள்ளிக்கூடம். ஆகவே ஒருவிதத்
தொந்தரவும் இல்லாமல் என்னை நேரடியாக நாலாவது
வகுப்பில் சேர்த்துக்கொண்டுவிட்டார்கள். சர்க்கார் கல்வி
இலாகாவில் என் மாமாவுக்கு வேலை கிடைத்தவுடன்
நானும் திருவாரூர் சர்க்கார் பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது
வகுப்பில் போய்ச் சேர்ந்தேன். எனக்கு அப்போது வயது
ஒன்பது. மாமாவோ அம்மாமியோ என்னை ஒரு வார்த்தை
கூடக் கடிந்து சொல்லமாட்டார்கள். மாமாவுக்கு எப்பவா<noinclude></noinclude>
ch23anwr0nr1deqd32n977ukmy20v2u
பக்கம்:ஆட்கொல்லி.pdf/34
250
651828
1958915
2026-08-20T09:54:29Z
Sujibala S
16882
ocr
1958915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>.
93-12-0
27"
வது கோபம் விந்தால், 'கழுதை' என்பார் அழுத்தம்
திருத்தமாக. இவ்வளவு நல்லவர்களாக எனக்குக் காட்சி
யளித்த இந்த மாமாவையும் ஏன் ஊரார் அவ்வளவாக
மதிக்கவில்லை - அவர்களைக் கண்டால் ஏன் பயப்படுகிறார்
கள் பலரும் என்பது எனக்குத் திருவாரூரில் இருக்கும்.
போதுதான் தெரியவந்தது.
வயதான ஒரு கிழவர் ஒருநாள் நான் கூடத்தில்
உட்கார்ந்து படித்துக்கொண் டிருக்கும்போது உள்ளே
வந்தார்.காலையில் மணி எட்டே முக்கால் இருக்கும்.
பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிக்கொண்டிருந்தது.
மாமா
கொல்லையிலே கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார்.
மாமி சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தாள்.
"லேவாதேவி வேங்கடாசலத்தின் வீடு இதுதானே?"
என்றார் அந்தக் கிழவர்.
.
எனக்கு லேவாதேவி என்கிற வார்த்தைக்கு அர்த்தம்
தெரியாது. ஆனால், "வேங்கடாசலத்தின் வீடு இதுதான்'
என்றேன்.
"இருக்காரா, உன் அப்பா.......?" என்று கேட்டார்
கிழவர்.
வேங்கடாசலம் என் அப்பா அல்ல என்று சொல்ல
நான் வாயெடுக்குமுன், அம்மாமி கைக் கரண்டியைச்
சமையலறை
வாசற் படியண்டையே வைத்துவிட்டு,
"யாரு........?" என்று கம்பீரமாகக் கேட்டுக்கொண்டு
முன் கூடத்துக்கு வந்தாள்.
"
"ஐயர்வைப் பார்த்துப் பணத்தைத் தந்துவிட்டு வரச்
சொல்லி ராமநாதன் அனுப்பினான்..... என்று தடுமாறி
னார் கிழவர்.
"ராமநாதன் அப்பா ? பணம் பூராவையும்
கொண்டுவந்திருக்கிறாயா?' என்று கேட்டாள் மாமி.<noinclude></noinclude>
lopcda3yc5mxzugj9li2esa4m72rwep
பக்கம்:ஆட்கொல்லி.pdf/35
250
651829
1958916
2026-08-20T09:54:52Z
Sujibala S
16882
ocr
1958916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>28
ஆட்கொல்லி
'நூத்தி மூப்பத்தியெட்டு ரூபாய் கொண்டுவந்தேன்.
அவ்வளவுதான் இருக்கிறது. பதினேழு ரூபாயைத் தள்ளி
விட்டுப் புத்திரத்தைக் காது கிழித்து வாங்கிப் போக
வந்தேன்.........." என்றார், கிழவர்.
"வயசாச்சே தவிர பணத்தாசை விடல்லியே?"
என்றாள் மாமி.
"பதினெட்டு ரூபாய்தானே ........" என்றார் கிழவர்
கெஞ்சுதலாக.
"பதினேழோ பதினெட்டோ? கணக்காப் பாத்துக்
கொடுத்துவிட்டு சீட்டைக் கிழிச்சு வாங்கிக்கொண்டு
போ!" என்றாள் மாமி.
'உங்களுக்குப் பதினேழு பதினெட்டு என்ன பிரமா
தங்கே? மனசு வச்சா வட்டி பூராவுமே தள்ளித்
தாலாமே!" என்றார் கிழவர்.
"ஏது?........இடத்தைத் தந்தால் மடத்தையே பிடுங்
குவே போலே இருக்கே?" என்றாள் மாமி.
"மகாலச்சுமி கணக்கா இருக்கறவங்க........" என்று
ஆரம்பித்தார் கிழவர்.
''உன்னைப் போன்றவர்களுக்குப் பத்தும் இருபதும்
தள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தால் எத்தனை நாளைக்கு
மகாலச்சுமி கணக்கா நான் இருக்க முடியும்?" என்றாள்
மாமி.
கிழவர் பதில் போசவில்லை. மடியிலிருந்த ஒரு தூணி
முடிப்பை யெடுத்துப் பிரித்தார்.
ஓங்க காசு எதுக்கும் நாங்க ஆசைப்படல்லை. எழு
திக் கொடுத்த வட்டி கணக்குப் பண்ணித் தந்துவிட்டு
நோட்டை வாங்கிக்கொண்டு போங்க" என்றாள் மாமி.
இதற்குள் மாமா குளித்துவிட்டு' வந்துவிட்டார்.
"என்ன சொல்றான் கிழவன்? பணத்தைத் தள்னித்<noinclude></noinclude>
etc91jhtsfok5e9fz2xyq8479i9kitl
பக்கம்:ஆட்கொல்லி.pdf/36
250
651830
1958918
2026-08-20T09:55:22Z
Sujibala S
16882
ocr
1958918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>93-12-0
தாணுமாமோ? அதெல்லாம் சரிப்படாது.
29'
பணம் பாக்கி
நின்றால், இதைக் கொடுத்துப்பிட்டு பாக்கி பணத்துக்கு
ஒரு நோட்டு எழுதிக் கொடுத்துப்பிட்டுப் போகட்டும்.
இவங்க பணமும் நமக்கு வேண்டாம். நம்ப பணத்தையும்
அவங்ககிட்ட விடமுடியாது" என்றார் மாமா.
நீங்கள்ளாம் இப்படிச் சொன்னால்..........." என்று.
கிழவர் ஆரம்பிக்கும்போது, புஸ்தகத்தை மூடி வைத்து
விட்டு நான் அங்கே பேச்சைக் கேட்டுக் கொண்டு நிற்ப
தைப் பார்த்துவிட்டான் மாமி.
''பள்ளிக்கூடத்துக்கு நாழியாகிறதே ராஜா! நீ போய்க்
குளித்துவிட்டு வா " என்றாள் மாமி.
நான் அங்கு நிற்பது அவர்கள் பேச்சிற்குத் தடை
யாக இருந்ததென்று எனக்குத் தோன்றிற்று. பத்து
நிமிஷங்களுக்கு முன் லேவாதேவி என்றால் என்ன என்று
தெரியாத எனக்கு இப்போது அதன் முழு அர்த்தமும்
தெரிந்துவிட்டது. வட்டிக்குப் பணம் விட்டுப் பணம்
சேர்ப்பதற்குப் பெயர்தான் லேவாதேவியா? ஏழைகள் எத்
தனையோ பேர் உள்ள நம்மூரில், ஏராளமான வட்டி தருவ
தாகச் சொல்லிக் கடன் வாங்கத் துணிகிறவர்களுக்குக்
குறைவு உண்டா என்ன?
ஆனாலும் தொண்ணூத்தி மூணே முக்கால் ரூபாய்
சம்பளத்தில் மீதம் பிடித்து எப்படிப் பணம் வட்டிக்கு விட
முடிந்தது மாமாவுக்கும் மாமிக்கும்? கிராமத்திலிருந்து
நெல் வந்துவிடும் - போதிய நெல் விளைகிற அளவுக்கு மாமா
வுக்கு நிலம் இருந்தது பிதுரார்ஜ்ஜிதச் சொத்தாக. அவ்
வளவுதான். எப்படித் தைரியமாகப் பணத்தை வட்டிக்கு
விட்டு வாங்கினார் மாமா? ஏது பணம்? வட்டியும் முதலு
மாக வராமல் போய்விட்டால் என்ன பண்ணுவார்? ஏமாந்து
விட்டால் வாயில் விரல் வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட<noinclude></noinclude>
jziw96fdbyan40v366lv5nh59x5lvqd
பக்கம்:ஆட்கொல்லி.pdf/37
250
651831
1958919
2026-08-20T09:55:48Z
Sujibala S
16882
ocr
1958919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>Q
ஆட்கொல்லி
பணம்
வேண்டியதுதானே? அப்படி இருந்தால், மாமா
கொடுக்கச் சம்மதித்தாலும், அம்மாமி சம்மதிக்கமாட்
டாளே? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று எனக்
குத் தோன்றிற்று.
நான் குளித்துவிட்டு வந்ததும் முதல் கேள்வியாகப்
பணம் பூராவையும் கொடுத்தாரா இல்லையா கிழவர்?''
என்று கேட்டேன்.
.
நான்கூட இதையெல்லாம் கவனிக்கத் தொடங்கி
விட்டேனா என்று எண்ணுவதுபோல மாமி என்னைப் பார்த்
தாள். மாமாதான் பதில் சொன்னார்: "ரெண்டு ரூபா
தள்ளிக் கொடுத்தேன்"
நான் பதில் சொல்லவில்லை. மாமாவே தொடர்ந்து
இத்த நிமிஷம் சொன்னார்: "பூராப் பணமும் கொண்டு
அத்திருந்தான் திருட்டுப்பயல். அந்த ரெண்டு ரூபாய்கூடத்
தள்ளித் தந்திருக்கவேண்டியதில்லை" என்று.
4. கொடுக்கல் வாங்கல்
அந்தக் கிழவனார் வந்து போன பிறகு நான் என்
மாமாவினுடைய கொடுக்கல் வாங்கல் வியவகாரங்களில்
என்னையும் அறியாமலேயே கவனம் செலுத்தத் தொடங்
கினேன். மனிதனின் ஆதி காலத்திய கவனங்களும் ஈடு
பாடுகளும்தான் அவனுடைய பின் உள்ளத்தையும்
வாழ்க்கையையும் சமைக்கின்றன என்பது உண்மையானால்
கொடுக்கல் வாங்கல் என்கிற தத்துவம் என் வாழ்க்கையை
ஒரு தினுசாகச் சமைத்திருக்கலேண்டும். பணத்தைப்
பற்றிய சகல விஷயங்களையும் அறிந்துகொண்டு செய
'லாற்ற எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது; இப்போது
நினைத்துப் பார்க்கும்போது நான் அந்தச் சந்தர்ப்பத்
வா<noinclude></noinclude>
337zu8jc50mjrmmdm9ij0g09rd1iug1
பக்கம்:ஆட்கொல்லி.pdf/38
250
651832
1958921
2026-08-20T09:57:06Z
Sujibala S
16882
ocr
1958921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>கொடுக்கல் வாங்கல்
தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே
தோன்றுகிறது.
வேதாந்திகள் சொல்லுகிறார்கள் - ஒரு விஷயத்தைப்
பற்றி அறிந்துகொண்டுவிட்டால், அந்த விஷயத்தை
ஜயித்துவிட்ட மாதிரித்தான் என்று. எனக்குப்" பணத்
தைப் பற்றிச் சகல விஷயங்களையும் அறிந்துகொள்ள என்
இள வயதிலேயே வசதிகள் ஏற்பட்டன என்பது உண்மை
தான் என்றாலும் நான் பணத்தை ஜயித்துவிடவுமில்லை
பணம் இல்லாமையை ஜயித்துவிடவுமில்லை. என் மாமாவின்
காரியங்களால் எனக்கு ஏற்பட்டதெல்லாம் பணத்தி
டம் ஒரு அலக்ஷியம்தான். பணம் என்பது இத்தகைய
சக்திகள் உள்ளதா? இதன் சக்திகளுக்கு நாம் அடிமைப்
பட்டு விடாதிருப்பது அவசியம் என்பதுதான் நான் என்
மாமாவிடமிருந்து கற்றுக்கொண்ட உண்மை. அது நல்ல
படிப்பினை அல்ல என்று எப்படி யார் சொல்ல முடியும்?
2
என் மாமாவே பிற்காலத்தில், எனக்குக் குடியும்
குடித்தனமும் ஏற்பட்டு, பட்டணத்தில் நான் பணத்துக்கு
அல்லல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒருதரம் வந்து,
என்னுடன் நாலைந்து நாட்கள் தங்கினார். "இப்படி இருக்
கிறாயே, ராஜா, கெட்டிக்காரத்தனமாக, செட்டுங்கட்டுமாக
இருந்து பணத்தை ஆளத்தெரிய வேண்டாமா?" என்று
கேட்டார்.
அப்போது நான் சொன்னேன், "மாமா, கொஞ்சம்
யோசித்துப் பதில் சொல்லுங்கள் நீங்களே, பணம் உங்களை
ஆளுகிறதா, நீங்கள் பணத்தை ஆளுகிறீர்களா?' என்று.
மாமா சிறிது நேரம் யோசித்தார். "கெட்டிக்காரத்
தனமான பேச்சுத்தான்'' என்றார்."கெட்டிக்காரத்தனம்
மட்டும் போதாது-வாழ்க்கையைச் சரிவர நடத்துவதற்குப்
பணமும் வேண்டும். பணம் இல்லாது வாழ்கிற வாழ்க்கை<noinclude></noinclude>
sb70m4v0uxq29hprcqy4smgxomdis6b
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/82
250
651833
1958922
2026-08-20T09:57:32Z
Bhavana Balaji
16880
ocr
1958922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>ஆறணி
வேணியன்
இராகம்--ஹம்சநாதம்
தாளம்--ஆதி
பல்லவி
வேறெதும் வேண்டேனே--கும்பிட்டு
வேறெதும் வேண்டேனே
(வேறெ)
அநுபல்லவி
நீறணி மேனியன் நீலகண்டன் கங்கை
ஆறணி வேணியன்--ஆனந்தனைக் காணில்
(வேறெ)
சரணம்
பூசை புரிந்திடவே--௮வன்பதம்
போற்றிப் புகழ்ந்திடவே
ஆசைக் கடலைப் பெருக்கிடவேண்டுவேன்
ஆயுளும் கோடி அதற்காக வேண்டுவேன்
(வேற) .<noinclude></noinclude>
eya5veuqbc3tsj98tc5dy8b9veefqqc
பக்கம்:ஆட்கொல்லி.pdf/39
250
651834
1958923
2026-08-20T09:57:33Z
Sujibala S
16882
ocr
1958923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>82
ஆட்கொல்லி
யைச் சரிக்கட்ட எந்தக் கெட்டிக்காரத்தனமும் போதாது,
போதாது" என்றார்.
எனக்கும் அது தெரிந்தது. அப்போதும் தெரிந்தது,
இப்போதும் தெரிகிறது. ஆனால் பணத்துக்கு அடிமைப்
பட்டுக் கிடப்பதைவிட, பணம் இல்லாமைக்கு அடிமைப்
பட்டுக் கிடப்பது நல்லது என்று எனக்கு தோன்றியது -
நான் என்ன செய்ய?
மாமா அந்தத் தடவை வந்தவாசியிலிருந்து பட்டணத்
துக்கு வந்தது கூட ஏதோ கொடுக்கல் வாங்கல் கணக்கு
களை நேர்செய்யத்தான் என்பது ஞாபகம் வருகிறது
எனக்கு. அவர் கையில் ஒரு விசேஷம் இருந்தது என்று
எல்லோரும் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அவர் ஒரு
காரியத்துக்கென்று ஒருவருக்குப் பணம் கொடுத்தாரர்னால்
பணத்தை வாங்கியவருக்கு அது அந்தக் காரியத்துக்கு
உபயோகப்படாது. உபயோகப்பட்டாலும் காரியம் பலிக்
காது. ஆனால், கடன் கொடுத்த மாமாவுக்கு அது வட்டி
யும் முதலுமாக, ஒன்றுக்கிரண்டாக, உரிய காலத்தில்
திரும்பி விடும். இப்படி ஒரு அதிர்ஷ்டமுள்ள கை. என்
மாமாவினுடையது.
நாள் தவறாமல், பைசா விடாமல்,மாமா கணக்கு
எழுதுவார். மணி மணியான எழுத்துக்களில், நான்
பிறந்த வருஷத்தில் வாங்கிய ஒரு பவுண்டன் பேனாவால்,
எனக்குப் பன்னிரண்டு வயதாகும் போதும் கணக்கு
எழுதினார். எனக்கு இருபத்திநாலு வயதாகும்போதும்
கணக்குகளை அதே பேனாவால் தான் எழுதிக் கொண்டிருந்
தார். பட்டணத்தில் அவர் என்னைத் தேடி வந்து என்
வீட்டில் நாலு நாள் இருந்தபோதும், அதே பேனாவினால்
தான் கணக்கு எழுகினார். எனக்கு அப்போது வயது
முப்பத்திரண்டு. நாலேமுக்கால் ரூபாய்க்கு ஒரு பேனாவை<noinclude></noinclude>
bhde9fk3yn2cykg3rozle817c0xkhdi
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/83
250
651835
1958924
2026-08-20T09:58:03Z
Bhavana Balaji
16880
ocr
1958924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>தில்லையப்பன்
இராகம் -- உதயரவிச்சந்திரிகா
பல்லவி
தாளம்-ஆதி
சொன்னதெல்லாம் மறந்தாரோ-என்னைச்
சோதனை செய்யத் துணிந்தாரோ
அநுபல்லவி
(சொன்ன)
செந்நெற் கழனிசூழும் தில்லைப்பதியாரன்று
கன்னம் குழியமுத்தம் கனிந்து கனிந்தளித்துச்
(சொன்ன)
சரணம்
வருவார் வருவாரென்று நித்தம் - வரும்
வழிமேல் விழியாய் நின்றேன் தோழி
ஒருவாரம் ஒருமாதம் ஒருவருஷமும் போச்சே
ஒருத்தி கிறுக்கி என்றிவ் வூரும் சிரிக்கலாச்சே
(சொன்ன)<noinclude></noinclude>
q4a6zd2oqetbjjfeygtezxz7zucun1u
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/84
250
651836
1958925
2026-08-20T09:58:29Z
Bhavana Balaji
16880
ocr
1958925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>நல்ல சகுனம்
இராகம் - ஷண்முகப்ரியா
பல்லவி
தாளம் - ஆதி
நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி- சென்று
நான் படும்பா டவர்க்குச் சொல்லடி
அநுபல்லவி
அல்லல் அகற்றி அன்பர்க்
கானந்தம் அருள் நேசர்
தில்லைப்பதி நடேசர்
(நல்ல)
திருவுள்ளம் அறிய நீ
(நல்ல)
சரணம்
வண்ணமலர்களேதும் வாசம் தருவதில்லை
பண்ணில் இனிமையில்லை பாலிற் சுவையுமில்லை
கண்ணில் உறக்கமில்லை கருத்தோர் நிலையிலில்லை
எண்ணி அளப்பதேனோ எல்லாம் அறிவாயோடி
புண்ணியம் உண்டடி பொற்றொடியே இன்று (நல்ல)<noinclude></noinclude>
jvlln493f58jjboeb4f3nk7zsrezynk
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/85
250
651837
1958926
2026-08-20T09:58:48Z
Bhavana Balaji
16880
ocr
1958926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>பாதாரவிந்தம்
பணிந்தேன்
இராகம் - மோஹனம்
பல்லவி
தாளம்-ஆதி
பாதார விந்தம் பணிந்தேன்-கடைக்கண் நீ
பாலிக்க வேண்டு மையா
அநுபல்லவி
(பாதார)
'சாதாரி பாடி வெற்றி
தமிழிசைக்கே அளித்த
நாதா லீலாவி னோதா
நங்கை உமையாள் பங்கா (பாதார)
சரணம்
புத்தகக்காடு முழுதும் - அலைந்தலைந்தென்
பொழுதெலாம் போக்கி விட்டேன்
சித்தம் மயங்கி உண்மை
தெளியாது திகைப்புற்றேன்
பத்தர்க் கருளும் ஈசா
பாபவி நாசா உன்
(பாதார)
*திருவிளையாடற்புராணம் விறகு விற்ற படலம் நோக்குக.<noinclude></noinclude>
mghkqnfud9p6596q6s25q7b9ymfcuil
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/86
250
651838
1958927
2026-08-20T09:59:05Z
Bhavana Balaji
16880
ocr
1958927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>எங்கும் நிறைந்தவன்
இராகம் - லலிதாங்கி
பல்லவி
கூறா தறிந் திடாயோ- என்றன்
குறைக ளனைத் தையும் நான்
உன்பா லெடுத்துக்
அநுபல்லவி
தாளம் - ஆதி
(Fn. (W)
தேறா உலக மதில்
சிந்தை கலங்கிக் கண்ணீர்
ஆறாய் ஒழுகி ஓட
அழுது தொழுது நிதம்
(கூறா)
சரணம்
வல்லார்க்கு வல்லவன் நீ - தெய்வ
மறைகளுக் கரியவன் நீ
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுநின்ற நாயகன் நீ
எல்லாம் அறிந்தவன் நீ
எங்கும் நிறைந்தவன் நீ
(கூறா)<noinclude></noinclude>
adt5droyw535istd8n6o177qg52x5x0
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/87
250
651839
1958928
2026-08-20T09:59:51Z
Bhavana Balaji
16880
ocr
1958928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>யாரிவன் அறிவாயோடீ?
இராகம்: கோபிகா திலகம்
தாளம்: சதுச்ரஜாதி திரிபுடை
பல்லவி
யாரிவன் அறிவாயோடி-இவனிடத்தில்
என்ன உறவுனக்கடி
(யாரிவன்)
அநுபல்லவி
ஊருண்டோ பேருண்டோ
உற்றார் பெற்றாருண்டோ
சீருண்டோ சிறப்புண்டோ
தெரிந்தா ரெவருமுண்டோ
(யாரிவன்)
சரணம்
பிச்சை யெடுத்தலைகின்றான்-சுடலையிலே
பேயுட னாடு கின்றான்
நச்சரவைக் கழுத்தில் - தொங்கவிட்டு
நல்லணி பூணுகின்றான்
அச்சந் தரும் புலித்தோல்
ஆடையாய் உடுக்கின்றான்
இச்சகத்தில் பித்தன்
இவனைப் போலெங்கு முண்டோ
(யாரிவன்)<noinclude></noinclude>
k61gdvm7w71wel8q7lwr4mfhmrii7al
பக்கம்:காதல் பிறந்த கதை.pdf/88
250
651840
1958929
2026-08-20T10:00:13Z
Bhavana Balaji
16880
ocr
1958929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bhavana Balaji" /></noinclude>திருவள்ளுவர்
இராகம் - சக்கரவாகம்
பல்லவி
தாளம் - ரூபகம்
ஆதிப் பொது மறையை- அனுதினம்
ஓதிப் பழகு வமே
அநுபல்லவி
ஜாதி மத பேதம் ஏது மிலா நடு
நீதியை எங்கும் நிலை நிறுத்த வந்த
(ஆதி)
சரணம்
தெய்வப் பெரும்புலவன் - தமிழ்நிலம்
செய்தவத்தால்பிறந் தோன்
ஐயந் திரிபற உண்மை யறிந்தவன்
வையம் புகழ்திரு வள்ளுவன் பாடிய
(ஆதி)
பள்ளிச் சிறுவரொடு சிறூரியர்
பண்டிதர் பாமரரும்
உள்ளக் களிப்புடன் ஒன்றாகக் கூடியே
தெள்ளத்தெளிந்த குரலில் தெருவெல்லாம்
()<noinclude></noinclude>
ofa3htmxgg9h4ssu0jt6sl65146bccf
பக்கம்:ஆட்கொல்லி.pdf/2
250
651841
1958930
2026-08-20T10:00:28Z
Sujibala S
16882
ocr
1958930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>அமுதம் - 138,
முதற் பதிப்பு - ஜூலை, 1957
உரிமை பதிவு
3
விலை ரூ. 1-65
1697
நேஷனல் ஆர்ட் பிரஸ், தேனாம்பேட்டை, சென்னை - 18.<noinclude></noinclude>
ah0oqn0ssc8eio8gti7m2qc6d428sy2
பக்கம்:ஆட்கொல்லி.pdf/1
250
651842
1958931
2026-08-20T10:00:59Z
Sujibala S
16882
ocr
1958931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>ஆட்கொல்லி
அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்
தேனும்பேட்டை
::
சென்னை-18.<noinclude></noinclude>
sabnx4o6ru2opqs47oclucbs21i8fs3
பக்கம்:ஆட்கொல்லி.pdf/40
250
651843
1958932
2026-08-20T10:01:45Z
Sujibala S
16882
ocr
1958932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>கொடுக்கல் வாங்கல்
33
விலைக்கு வாங்கி ஒரு ஆயுள் பூராவும் வைத்துக் கொள்வ
தென்பது எல்லோருக்கும் கூடிவருகிற காரியமல்ல. என்
னிடம் பதினெட்டு மாதங்களுக்கு அதிகமாக ஒரு பேனா
வும் நிற்பதில்லை. தொலைந்து போய்விடும். இதைப் பற்றி
யோசிக்கும்பொழுது எனக்கு ஆச்சரியமாகவே இருக்
கிறது. மாமாவின் பவுண்டன் பேனா கைபட்டுப் பட்டு
உடலுக்குள் மசி தெரிகிற அளவுக்குத் தேய்ந்திருந்தது.
நிப்பு முன்னைக்கிப்போது இரட்டைப் பங்கு பட்டை
யடித்தது. ஆனால், அந்தப் பேனாவை விடாமல் வைத்
திருந்தார் மாமா..
"
"இந்தப் பேனாவை எனக்குக் கொடுத்து விடேன்.
மாமா! அப்படியாவது உனக்குள்ள பண்ண அக்கறை
எனக்கு வந்துவிடுமா, பார்க்கிறேன்" என்றேன் நான்
ஒரு நாள்.
தர
"இந்தப் பேனாவையா? எனக்குச் சம்மதம் தான்.
உனக்குக் கொடுத்து விடுகிறேன்" என்றார் மாமா.
மாட்டார் என்று எனக்குத் தெரியும். மேலே என்ன
சொல்லப் போகிறார் என்று கவனித்தேன். ''இவ்வளவு
நாளாக என்னிடம் இருந்துவிட்ட பேனாவைக் கொடுத்து
விட்டேனானால், அம்மாமி என்னைக் கோபித்துக் கொள்ளு
வாளேடா, ராஜா" என்றார் மாமா.
உண்மைதான். அம்மாமி கோபித்துக் கொள்ளுவாள்
தான். அம்மாமிக்கு மாமா மட்டுமல்ல, அந்தப் பவுண்டீன்
பேனாவும் கூடப் பயந்துதான் வாழ்க்கையை நடத்தி
நீடித்து வந்து கொண்டிருந்தது என்பது உண்மைதானே?
மாமாவும் அம்மாமியும் இப்படி ஒருவர் மேல் ஒருவர்
பாரத்தைப் போட்டு விட்டு, தர்மமான முறையிலேயே
பணத்தைச் சேகரித்து வந்தார்கள், ஆரம்ப நாட்களி
லிருந்தே.
3<noinclude></noinclude>
t3dmxwrhr2qbo1zxnvmgnbqtve3p8dh
பக்கம்:ஆட்கொல்லி.pdf/41
250
651844
1958933
2026-08-20T10:02:12Z
Sujibala S
16882
ocr
1958933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>84
ஆட்கொல்லி
கொடுத்து வாங்குவதற்கு மாதச் சம்பளம் தொண்
ணூத்தி மூணே முக்கால் ரூபாயில் எப்படி அவர்களிடம்
பணம் இருந்தது என்று நான் அப்போது யோசிக்காமல்
இல்லை. ஆனால் மர்மம் பல வருஷங்களுக்குப் பிறகு
தான் தெரிந்தது. என் மாமாவுக்கு மாமா ஒருவர்.நரம
லிங்கம் என்று பெயர். அவர் நல்ல பணக்காரர். சொத்து
சுதந்திரங்கள் ஏராளமாக இருந்ததுடன் திருப்தியடைந்து
விடாமல், அந்த மனிதர், ஏலச்சீட்டு, மாதச்சிட்டு என்
றெல்லாம் ஏதேதோ செய்து பணம் புரட்டிக் கொண்
டிருந்தார். அவரிடம் பணம் புரட்டுவதென்பது மிகவும்
சிரமமான காரியம்தான். எனினும் மாமா அவரிடம் ஒரு
மாதம் ஏலச் சீட்டுக்குப் பணம் கட்டி விட்டு, மறு மாதமே
எலப் பணத்தை வாங்கித் தன் கொடுக்கல் வாங்கல்களுக்கு
உபயோகப்படுத்திக் கொண்டார். அரை
வட்டிக்கு
வாங்கி, இங்கு இரண்டு வட்டிக்கு விடுவதில், முதலில்லாத
லாபம் ஒன்றுக்கிரண்டாகக் கிடைத்து வந்தது.
.
எனக்கு ராமலிங்கத்தையும் அவரைச் சேர்ந்தவர்
களையும் நன்றாகவே நினைவிருக்கிறது. கொள்ளைப் பணக்
காரராக இருந்த அவர் நாளடைவில் ஷீணித்துப் போய்,
கடனும் விஷம்போல் ஏறி, மஞ்சள் கடிதாசி நீட்டுகிற
நிலையில் இறந்து போனார். அவர் சாகும்போது என்
மாமாவுக்கு மட்டுமே அவர் ஏழாயிரம் ரூபாய் வரையில் தர
வேண்டும் என்று மாமா கணக்குச் சொன்னார். அந்த
ஏழாயிரத்துக்கு ஈடாகப் பட்டணத்தில் பாதையில்லாத
ஒரு பொட்டைப் பிராந்தியத்தை மாமா ஏலத்தில் எடுத்
தார் ஹைகோர்ட்டில். மொத்தம் ஒன்பதினாயிரம் செல
வில் மாமா கைக்கு வந்த அந்தச் சொத்தை விற்க ஏற்பாடு
செய்யும் போதுதான் பட்டணத்தில் என் வீட்டில் நாலு
கான் தங்கியது.<noinclude></noinclude>
eauwdwxk5h0depue2odjzs6r3cjgn3b
பக்கம்:ஆட்கொல்லி.pdf/42
250
651845
1958934
2026-08-20T10:02:36Z
Sujibala S
16882
ocr
1958934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>கொடுக்கல் வாங்கல்
35
'உன் மாமாவுக்கு ஆனமாதிரி அதே வழியிலே நீயும்
போக நேர்ந்துவிட்டால் என்ன மாமா பண்ணுவது?''
என்று கேட்டேன் நான்.
"எப்படியடா ஆகும் அந்த மாதிரி?" என்றார் மாமா.
"நான், கேவலம், ஒரு ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்ப
தற்காக என்னை என்னபாடு படுத்தியிருக்கிறார் மாமா?
நான் அப்படியெல்லாம் யாரையாவது அவஸ்தை பண்ணி
யது உண்டா? நீயே சொல்லு? நியாயமான, தருமமான
முறையில் நமக்குள்ள பணத்தை நாம் அடைய முற்படு
வதில் தவறில்லை. கடவுளே உன் பக்கம் இருப்பார்.
அநியாயமாக, அதருமமாகப் போாசைப்பட்டால்தான்
ஆபத்து வரும்' என்று தன் தத்துவத்தை விளக்கினார்
-மாமா.
கடவுள் என்பவர் தருமத்துக்கும் கட்டுப்பட்டவர்;
அதருமத்துக்கும் கட்டுப்பட்டவர். நியாயத்துக்கும் கட்டுப்
பட்டவர். அநியாயத்துக்கும் கட்டுப்பட்டவர். மனிதன்
கடவுளைமட்டுமல்ல, தருமத்தையும்,அதருமத்தையும்,
நியாமத்தையும் அநியாயத்தையும், தனக்காகவே உற்பத்தி
செய்து கொள்கிறான். இதை வாய்விட்டு நான் என் மாமா
விடம் சொல்லவில்லை. சொன்னால், என்ன லாபம்? அவர்
ஏற்றுக் கொள்ளமாட்டார். இவ்வளவு எளிய தெளிவான
விஷயத்தை ஏற்றுக் கொண்டாரானால், அவருடைய பணப்
பிரபஞ்சத்தின் அடிப்படையே தகர்ந்துவிடுமே! அவர்
மாமிக்கு அதற்குப் பிறகு என்ன பதில், எப்படிச்
சொல்வது?
மாமா சமயம் ஒன்று வாய்த்தது என்று எனக்குச்
சொல்ல வேண்டியதைத் தொடர்ந்து சொன்னார்: ''நீ
கூடத்தான் ராஜா. எனக்கு ஒரு ஐநூறு ரூபாய் வரையில்
தரவேண்டும். நான் அதைப்பற்றி என்ன செய்கிறேன்?<noinclude></noinclude>
6wt1vxinljnzanyum3gpbx9rl35d5on
பக்கம்:ஆட்கொல்லி.pdf/43
250
651846
1958935
2026-08-20T10:03:06Z
Sujibala S
16882
ocr
1958935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>36
ஆட்கொல்லி
எப்பவாவது ஒரு தரம் ஞாபகப்படுத்துகிறேனே தவிர,
வேறு ஏதாவது ஆர்ப்பாட்டம் செய்கிறேனா? நோட்டு
எழுதித் தா என்று கேட்கிறேனா? நீயே சொல்லு"
பிறகு,
எந்த ஐந்நூறை மாமா சொன்னார் என்று எனக்குக்
தெரியும். நான் என் மாமா வீட்டில் இரண்டாவது
கிளாஸ் முதல் மூன்றாவது பாரம் வரையில் படித்தேன்.
எஸ். எஸ். எல். ஸி பாஸ் செய்தான பிறகு,
கோவையில் போய் அவருடன் இருந்துகொண்டு இண்டர்
மீடியட் வகுப்பு இரண்டு வருஷமும் படித்தேன். இவ்வளவு
வருஷங்களிலும் அவர் எனக்காகச் செலவு செய்தது என்று
நானூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்க்குக் கணக்கெழுதி என்
னிடம் கொடுத்து, என் அப்பாவிடம் கொடுத்துப் பணம்
வாங்கித்தரச் சொன்னார். பொய்க் கணக்கு ஒன்றுமில்லை
அது. மாமாவின் கணக்கு நோட்டுகளிலிருந்து எடுத்த
சரியான செலவுக் கணக்குத்தான். இதில் சாப்பாடு
போட்ட கணக்கெல்லாம் வரவில்லை. பணமாக எனக்குச்
செலவு செய்ததை மட்டுமே கணக்கெடுத்துத் தந்திருந்
தார் மாமா. நியாயமான, தருமமான பட்டியல்தான் அது.
ஆனால் எனக்கு ஞாபகம் இருக்கிறது - அப்பா இந்தப்
பணத்தைத் தர மறுத்துவிட்டார். "யாருக்காக செல்
வழித்தான்? மருமானுக்குச் செலவழித்துவிட்டு பில்
போட்டுத் தருகிறானே. பில்?இல்லாதவன் என்றால் தர
வேண்டியது, நியாயந்தான். கொடுக்கப் போவதில்லை
நான்..." என்று சொல்லிவிட்டார் அப்பா, கண்டிப்பாக.
"
"நான் சம்பாதித்துத் தந்துவிடுகிறேன் மாமா
என்றேன் ஒருதரம், இதுபற்றி என் மாமாவிடம். இப்
போதுகூட ஞாபகம் இருக்கிறது. மாமி சொன்னாள்: 'நீ
சம்பாதிக்கப் போவதுமில்லை. திருப்பித் தரப் போவது
மில்லை. எதற்காக வீண் பேச்சு? உன் மாமா செலவழித்த<noinclude></noinclude>
qltm48zd5yl1mnkmwp03eah0374isb4
பக்கம்:ஆட்கொல்லி.pdf/44
250
651847
1958936
2026-08-20T10:03:32Z
Sujibala S
16882
ocr
1958936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>கொடுக்கல் வாங்கள்
பணத்திலே இது வீண் போனதுதான்
87
போகட்டும்.
என்
கடவுள் புண்ணியத்திலே இது ஒண்ணும் பிரமாதமான
விஷயம் இல்லையே...." என்றாள் மாமி. மாமா ஒன்றும்
பதில் சொல்லவில்லை. நான் சம்பாதிக்க மாட்டேன், தர
மாட்டேன் என்று மாமி சொன்னபோது, எனக்கு ரோஷம்
வந்தது. ஆனால், இப்பொழுது முப்பது வருஷங்களுக்குப்
பிறகு. சிந்தித்துப் பார்க்கிறபோது எனக்கே ஆச்சரிய
மாகத்தான் இருக்கிறது. எப்படித் தெரிந்தது
மாமிக்கு, பண விஷயங்களில் என் பலஹீனம்? நான்
இப்படித்தான் இருப்பேன் என்று அவள் அப்போதே
நிதானப் படுத்திக் கொண்டிருந்தாளே, அது எப்படி?
எதைக் கொண்டு? இப்படியெல்லாம் யோசித்து யோசித்து
நான் மனத்தைக் குழப்பிக் கொள்கிறேனே தவிர, விஷயம்
புரிகிற மாதிரியில்லை.
மாமி மாதிரியே பணத்தில் கெட்டிக்காரியாக, செட்
டுங்கட்டுமாகக் குடும்பம் நடத்துகிறவளாக, ஒரு பெண்
மணி எனக்கு மனைவியாக வாய்த்திருந்தால்....? என்று
நான் என்னையே கேட்டுக் கொள்ளுகிறேன். பதில் சொல்ல
முடியாத கேள்விதான் இது.
அந்தக் காலத்தில் என் மாமாவுக்கு நான் பட்ட கட
னைத் தலையைச் சுற்றித் திருப்பி எறியாமல் இருந்த குற்றம்
தான், நான் இப்போது "தொட்ட தெல்லாம் துலங்க
மாட்டேன்" என்கிறது என்று என் மனைவி அடிக்கடி
சொல்வதுண்டு. என் மனைவி மட்டுமல்ல, மாமாவிடம் கடன்
வாங்கிப் பட்டுப்போன இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த
வாலிபர்கள் இருவர் வந்து என்னுடன் இதுபற்றி இதே
மாதிரி அபிப்பிராயம் சொல்லிப் போவதுண்டு.இந்த
வாலிபர்களில் ஒருவன், என் மாமாவுக்கு மாமா ராமலிங்.
கத்தின் பிள்ளை. அவன் பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும்<noinclude></noinclude>
of1lalgyxwosi9hhcow2o2904wjp47y
பக்கம்:ஆட்கொல்லி.pdf/45
250
651848
1958938
2026-08-20T10:04:16Z
Sujibala S
16882
ocr
1958938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>38
ஆட்கொல்லி
போது அவன் அப்பா ஏராளமான கடனை வைத்துவிட்டு,
மனம் முறிந்து இறந்து போனார். கடனுக்கும் இருந்த
சொத்துக்கும் சரியாகப் போய்விட்டது, என்று கைகழுவி
விட்டு, சாமிநாதன் பி.ஏ. படிப்பையும் பாதியில் நிறுத்தி
விட்டு, உத்தியோகத்திற்குப் போய்விட்டான். அவன்
சொத்தைச் சேர்த்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்த என்
மாமா அவனுக்கு சிறு விஷயங்களிலாவது உதவி செய்
திருக்கலாம். ஒருதரம் அவன் உதவி நாடிக் கேட்டதுண்டு
என்றுகூட எனக்குத் தெரியும். ஆனால் மாமா உதவி
செய்ய இஷ்டப்பட்டிருந்தாலும், அம்மாமி அனுமதித்
திருக்க மாட்டாள்.
உ
இன்னொரு பையன் சொன்னேனே அவன் பெயர்
ராமசாமி. அவன் என் மாமாவினுடைய மைத்துனன்
பிள்ளை. அதாவது என் அம்மாமியினுடைய தம்பி பிள்ளை.
மாமா அம்மாமியின் பண மோகத்தால், மாமா குடும்பத்தார்.
மட்டும்தான் கஷ்டப்பட்டார்கள் என்பதில்லை. அம்மாமி
குடும்பத்தார் பலரும் கஷ்டத்துக்குள்ளானார்கள். அதே
போல அவள் தம்பியும் பல சந்தர்ப்பங்களிலும் குடும்ப நிர்
வாகத்தைச் சமாளிக்க மாட்டாமல் அக்கா தானே என்று
மாமியிடமும் நோட்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் பணம்
வாங்கி வந்தான். எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்
போது நாலாயிரம் ஐயாயிரம் என்றாகிவிட்டது. மைத்துன
னின் நிலங்களில் ஒரு பகுதியை இதற்கு ஈடாக எழுதி
வாங்கிக் கொண்டார் என் மாமா. இன்னும் ஒரு இரண்
டாயிரம் மூவாயிரம் நாளடைவில் கொடுத்துவிட்டு, அது
வும் சிறுகச் சிறுக நூறும் இருநூறுமாகக் கொடுத்து
விட்டு, நிலங்களில் மற்றப் பகுதிகளையும் எழுதி வாங்கிக்
கொண்டுவிட்டார். நல்லவேளையாக இதற்குள் ராமசாமி
படித்துத் தேறி நல்லதோர் உத்தியோகத்தில் அமர்ந்து<noinclude></noinclude>
i4rwul09ry9n89dcqgf5zp1kaumzk3b
பக்கம்:ஆட்கொல்லி.pdf/46
250
651849
1958940
2026-08-20T10:04:39Z
Sujibala S
16882
ocr
1958940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>கிராமத்துச் செய்திகள்
39
விட்டான். பிள்ளையை நம்பி அவன் தகப்பனாரும் பட்ட
ணத்துக்கு அவன் வீட்டோடு வந்துவிட்டார். அந்தப்
பையனும் அடிக்கடி சொல்வான்: "வேங்கடாசலம் விடுகிற
மூச்சுக்காற்றே விஷக்காற்று அங்கு யாரும் அருகில்
இருந்து தப்ப முடியாது" என்று.
பண விஷயங்களில் ஆசை பேராசை என்றில்லாமல்
நிராசையையே இருபது முப்பது வருஷங்களாகப் பயின்று
வந்திருக்கும் என்னால், என் மாமாவைப் பற்றி சிறிது
அநுதாபத்துடனாவது சிந்தித்துப் பார்க்க முடிகிறது. மற்
றவர்களால், அவரால் சிரமப்பட்டவர்களாதலால், அவரிடம்
சிறிதும் அநுதாபம் காட்ட முடியவில்லையென்பதில் ஆச்
சரியம் ஒன்றுமில்லையே? ஆனால் அவர் அநுதாபத்தையோ.
அன்பையோ, எங்கள் பாராட்டுதல்களையோ எதிர்பார்த்து
நிற்கவில்லை. முண்டித் துருத்திக் கொண்டிருக்கும் கற்கள்
மேல் உருளும் ரோடு ரோலர்போல அவர் பணம் ஒன்றே
குறியாகப் போய்க்கொண்டிருந்தார். கொடுக்கல் வாங்கல்
என்பதே நியாயமில்லாதது, தருமமற்றது என்று அவர்
மனத்தில் என்றுமே தோன்றியதில்லை. "அப்படி யிருந்
தால் எனக்கு, நான் கொடுத்த ஒன்பதினாயிரத்துக்கு
தொண்ணூறு ஆபிரம் வருமா?” என்று அவரே கேட்பார்.
ஹைகோர்ட்டில் ஒன்பதினாயிரத்துக்கு ஏலம் எடுத்த
அவர் மாமாவின் சொத்தை ஒரு வருஷத்திற்குள்
தொண்ணூறாயிரத்துக்கு, அதாவது ஒன்றுக்குப் பத்தாக
அவர் விற்றுவிட்டார்.
5. கிராமத்துச் செய்திகள்
ஒன்பதினாயிரம் ரூபாயைத் தொண்ணூறாயிரம்
ரூபாயாகப் பண்ணுகிற வித்தை எல்லோருக்கும் கைவராது
தான். என் மாமா விஷயத்தில் இது எப்படி சரத்திய,<noinclude></noinclude>
73bb7oawr4u603cc90kjhpc63ex1ge9
பக்கம்:ஆட்கொல்லி.pdf/47
250
651850
1958941
2026-08-20T10:05:02Z
Sujibala S
16882
ocr
1958941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>40
ஆட்கொல்லி
மாயிற்று என்று நான் பல தடவைகளில் சிந்தித்துப் பார்த்
ததுண்டு.நடந்தது என்னவோ உண்மையே தவிர. எப்
படி என்பது தெரிந்திருந்தால் நான் தொண்ணூறாயிரம்
இல்லாவிட்டாலும் ஒரு ஒன்பதாயிரமாவது பண்ணியிருக்க
மாட்டேனா?
அதே வித்தை ஏன் என் மாமாவினுடைய மாமாவுக்கு
கைவரவில்லை? ஐயாயிரத்தை ஐம்பதினாயிரம் பண்ணி
விடுகிற உத்தேசத்துடன்தான் பெரியவர் பணத்துக்குக்
கஷ்டம் எவ்வளவோ இருந்தபோதிலும் பட்டணத்துச்
சொத்தை விற்றுவிடாமல் பிடிவாதமாக வைத்திருந்தார்.
மலிவாகத்தான் கிடைத்தது அந்த இடம் அவருக்கு.
இரண்டாயிரம் மூவாயிரம் கடன் கொடுத்துவிட்டு இடத்
தைப் பிடித்துக்கொண்டார். அந்த இடத்துக்கு எங்கிருந்
தும் போகப் பாதை கிடையாது. பிறர் நிலத்தில் கால்
வைத்துத்தான் போய்ச் சேர வேண்டும். அல்லது ஏரோப்
பிளேனிலோ, ஹெலிகாப்டரிலோ போய் இறங்கலாம்.
அந்த வழியாக நகர சபையார் ஒரு பாதை போடப் போகி
றார்கள் என்றும், அந்தப் பாதை அந்த நிலத்தின் வழி
யாகப் போகும் என்றும், அப்படிப் போகும்போது பாதைக்
கான நிலத்தை வாங்க கார்ப்பரேஷன்கார்களே நல்ல
பணம் கொடுப்பார்கள் என்றும், பாதைக்கு இரு மருங்கி
லும் வீடு கட்டுவதற்கும் இடம் இருக்குமாதலால் அந்த
நிலங்களும் நல்ல விலைக்குப் போகும் என்றும், பெரியவர்
கணக்குப்போட்டு வைத்துக் கொண்டிருந்தார். ஆனால்,
அது அவரைப்பற்றியவரையில் பலிக்கவில்லை.
என் மாமாவுக்கும் சுலபத்தில் தானாக எதுவும் பலித்து
விடவில்லை. ஏலத்தில் அதை எடுத்துவிட்டு மாமா அது
பற்றியே சிந்தனையாக நாலைந்து தடவைகள் வெளியூர்களி
லிருந்து பட்டணத்துக்கு வந்தார். பக்கத்து நிலக்காரர்<noinclude></noinclude>
c1jy60sy4i3akhyvbzure7g17ueuekd
பக்கம்:ஆட்கொல்லி.pdf/48
250
651851
1958942
2026-08-20T10:05:24Z
Sujibala S
16882
ocr
1958942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>கிராமத்துச் செய்திகள்
41
களையெல்லாம் பார்த்துப் பேசினார். இரண்டொருத்ரம்
என்னையும் அழைத்துக் கொண்டு போய்ப் பேசினார். ஒரு
பிரஹஸ்பதி தன் நிலத்தின் மூலம் அங்கு போய்ச்சேர
நாலடிப்பாதை தருவதாகவும், அதற்கு ஐயாயிரம் ரூபாய்
தரவேண்டும் என்றும் கேட்டான் என்று எனக்கு ஞாபக
மிருக்கிறது. இன்னொருவன், நிலத்தையே என்னிடம்
விற்றுவிடு, அதற்குப் பன்னிரண்டாயிரம் தருகிறேன் என்
றான். மாமா பொறுமையாகச் சுற்றுவட்டாரத்துச் சொந்
தக்காரர்கள் எல்லோரையும் பார்த்துவிட்டு வந்தார். வெள்
ளைக்காரக் கம்பெனி முதலாளி ஒருவன், ஒரு தொழிற்சாலை
நடத்தத் தனக்கு நிலம் வேண்டும் என்றும், தனக்குச்
சொந்தமான இடத்துடன் அது சேர்ந்திருப்பதால் எடுத்
துக் கொள்ளலாம் என்றும், அறுபதினாயிரம் தருகிறேன்
என்றும் சொன்னான். மாமா சமயம் கிடைத்தது என்று
லக்ஷம் கேட்டார். முடிவில் தொண்ணூறாயிரத்துக்கு
விற்றுவிட்டார்.
இந்த போம்நடந்து முடிந்தபோதும் என் மாமாவுக்கு
மாதம் தெண்ணூற்றிமூணேமுக்கால் ரூபாய்தான் சம்பளம்
என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசி
யம். இதற்குள் திருவாரூரில் தொடங்கி அவர், பத்து
ஊர்களில், சர்க்கார் பள்ளிக்கூடங்களில் வேலை பார்த்து
விட்டார். சைதாப்பேட்டையில் ஒரு வருஷம்,தஞ்
சாவூரில் ஒரு வருஷம், மாயவரத்தில் இரண்டு வருஷங்கள்,
கோவையில் இரண்டு வருஷங்கள், திருச்சிராப்பள்ளியில்
மூன்று வருஷங்கள், வந்தவாசியில் இரண்டு மூன்று
வருஷங்கள் என்று. உத்தியோகம் உயரவில்லை; மாறிற்று.
பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லித்தா வீயுக்கில்லை
என்று அவரை டிரெயினிங் ஸ்கூலுக்கு மாற்றினார்கள்.
அங்கிருந்து, பிறகு டெபுடி இன்ஸ்பெக்டராகப் போட்<noinclude></noinclude>
521igg8vgcsqqykc577p7ymleaqi4oh
பக்கம்:ஆட்கொல்லி.pdf/49
250
651852
1958943
2026-08-20T10:05:47Z
Sujibala S
16882
ocr
1958943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>42
ஆட்கொல்லி
பார்கள். இந்த பேரத்துடன் மாமா லக்ஷாதிபதியாகி
விட்டார். அதற்காக அவர் உத்தியோகத்தை விட்டு
விட்டாரா என்ன? அந்தத் தொண்ணூற்றி மூணேமுக்கால்
ரூபாய் சம்பளத்தையும் பற்றிக்கொண்டு ஏழை உபாத்தி
யாயர்களிடமிருந்து பெறக்கூடிய வாழைக்காய், நெய்
வாழை இலை முதலியவற்றைத் திருப்தியுடனும் நன்றியுட
னும் பெற்றுக்கொண்டு வாழ்ந்துவந்தார்.
கிடைத்த
தொண்ணூற்று மூணேமுக்கால் ரூபாயிலும் நாற்பது
ஐம்பது என்று மீதம்பிடித்து அதையும் வட்டிக்கு விட்டுக்
கொண்டு ஜாம் ஜாமென்று வர
வாழ்ந்துவந்தார்.
பணம் சேர்ந்தது அவருக்கு என்று சொன்னால்,
மிகைப்படுத்திச் சொல்வது ஆகாது. தானாகவே வந்து
சேர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஜன்
மத்தில் அவர் புண்யங்கள் எதுவும் செய்ததில்லை என்று
எனக்கும், அவர் சுபாவமறிந்த மற்றவர்களுக்கும் தாராள
மாகவே தெரியும். பணம் இப்படி வந்து சேர்ந்தது
எதனால்? போன ஜன்மத்துப் புண்யமாகத்தான் இருக்க
வேண்டும். வேறு என்ன? புரியாத காரியம் கண்முன்னே
நடக்கும்போது, நடப்பதைக் காணும்போது, ஜன்மாந்திர
வாசனை யென்றும், கொடுத்து வைத்தான் என்றும் சொல்
வதின் அர்த்தம் புரிகிறமாதிரித்தான்
இருக்கிறது.
அப்படியெல்லாம் நமக்கு நாமே விஷயங்களை விளக்கிக்
கொள்ளாவிட்டால், எதுவுமே சரியாக விளங்காது என்று
தான் சொல்ல வேண்டும். ஏன், மாமா கொடுத்து வைத்
தவர் தான். இல்லாவிட்டால், அவருடைய மாமாவின்
சொத்துக்களும், மைத்துனரின் சொத்துக்களும் தாமாகவே
அவரைத் தேடி வந்து அடைவானேன்?
சாத்தனூரிலே இதுபற்றிப் பலர் பலவிதமாக அர்த்
தப்படுத்திச் சொன்னார்கள். பொறாமை பாதி. இ<noinclude></noinclude>
k5uak9qkqacxkyvljfb8qibmlju76rz
பக்கம்:ஆட்கொல்லி.pdf/50
250
651853
1958944
2026-08-20T10:06:13Z
Sujibala S
16882
ocr
1958944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>கிராமத்துச் செய்திகள்
49
மாதிரி நம்மால் இருக்க முடியவில்லையே என்று ஆற்றாமை
பாதி. ஆனால், மாமா, நாளடைவில் பணக்காரராகி விடுவார்
என்பதில் கிராமத்தில் யாருக்கும் சந்தேகம் இருந்ததாகத்
தெரியவில்லை. ஆனாலும் காவேரிக் கரையில்
இரண்டு
வேலி நஞ்சையுடனும் கீழத் தெருவில் உப்புப் பூத்து
உதிர்ந்த சுவர்களுடன் கூடிய ஒரு வீட்டுடனும்
தொடங்கிய வேங்கடாசலம், இரண்டு மூன்று லக்ஷங்களுக்
கதிபதியாகி விடுவார், பத்துப் பதினைந்து வருஷங்களிலே,
என்று கிராமத்திலும் கூட யாரும் எதிர்பார்த்திருக்க
முடியாது. ஆனால் எங்கள் கிராமத்திலே
விடம் பணம் கடன் வாங்காதவர் யார் என்று விரல்விச்
சொல்ல எனக்கு யாரையுமே தெரியவில்லை.
என்
மாமா
து
பய
நான் மாமாவுடன் கிராமத்துக்குப் போன சந்தர்ப்
பங்கள் எல்லாம் எனக்கு இப்போது ஞாபகத்திலிருக்
கின்றன. முதல் பாரத்தில் மாமா வீட்டிலிருந்து கொண்டு
திருவாரூரில் படித்துக் கொண்டிருக்கும்போது முதல் முத
லாக நான் மாமா அம்மாமியுடன் சாத்தனூர் போனேன்.
பத்தே நாட்கள் தான் கிராமத்திலிருந்தோம். அப்போது
எத்தனையோ பேர்வழிகள் வந்து வந்து மாமாவைப்
பக்தியுடன் பார்த்து விட்டுப் போனார்கள். அந்த நாட்
களில் மாமாவிடம் பணம் அதிகம் சேர்ந்து விடவில்லை.
ஆனால் அவரிடம் சேர்ந்துவிடும் என்கிற நிச்சயத்தில்,
சேர்ந்து விட்டால் பிறகு நம்மை அவர் மறக்காதிருக்க
வேண்டுமே என்கிற நினைப்புடன், பலர் வந்து பார்த்து
விட்டுப் போனார்கள் என்று சொல்ல எனக்குத் தோன்
றிற்று. இப்போது யோசித்துப் பார்க்கும்போது, அது
சர்க்கார் உத்தியோகஸ்தனுக்கு கிராமத்தார் காட்டிய
வெறும் மரியாதை அல்ல, பணத்துக்குக் காட்டிய மதிப்பு
என்றுதான் சொல்ல வேண்டும்.
•<noinclude></noinclude>
mtnmzape7okw1hdj4u0zmz1ozgheqbc
பக்கம்:ஆட்கொல்லி.pdf/51
250
651854
1958945
2026-08-20T10:06:36Z
Sujibala S
16882
ocr
1958945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sujibala S" /></noinclude>44
ஆட்கொல்லி
"வேங்கடாசலம் கெட்டிக்காரன். கை நிறையப்
பணம் சேர்த்து விடுவான் பாரேன்" என்று ஏதோ ஒரு
வியாச்சிபத்தில் சொத்துக்களை யெல்லாம் தோற்றுவிட்டு,
பண்டையப் பெருமையைக் காட்டிய பித்தளைக் குமிழ்கள்
வைத்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டே ரத்தினம் பிள்ளை
தன் மனைவியிடம் சொன்னார்.
நான் உத்திரத்தின்மேல் ஒரு குருவி கூடு கட்டி
யிருந்ததைப் பார்த்துக் கொண்டு நின்றேன். ரத்தினம்
பிள்ளையின் மனைவி, காமரச்சியாச்சிசொன்ன பதில்
எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
"
"இதிலே அவன் கெட்டிக்காரத்தனம் என்னங்க
றேன்? பானை பிடிச்சவ அதிருஷ்டம் தான் வேணும்'
என்றாள்.
"
எ
"அந்தப் பொண்ணுக்கும் தான் என்ன?" என்றார்
ரத்தினம் பிள்ளை.
மாமியைப் "பொண்ணு" என்று அவர் சொன்னது
எனக்குச் சிரிப்பு மூட்டியது. நான் இரைந்தே சிரித்து
விட்டேன்.
காமாச்சி ஆச்சி சொன்னாள்: "பெரியவங்களைப்
பழிக்கக் கூடாதுடா ராசா, பழிக்கக் கூடாது. ஆமாம்.
சொத்துச் சேத்து அத்தனையும் உனக்குத்
உனக்குத் தானே
கொடுக்கப் போறாங்களாம்? அவுங்களுக்குப் புள்ளையா
குட்டியா?'
அவ்வளவு நல்ல மனசு படைச்சவங்களுக்குத்
தானே பிறக்காமலா போவுது" என்றார் ரத்தினம் பிள்ளை.
நான் இந்தப் பேச்சைக் கண்ணும் காதும் வைத்து
என் மாமாவுக்குப் பிரியமானபடிச் சொல்லி வைத்த
தற்கும், எத்தினம் பிள்ளை வந்து என் 'மாமாவைத் தன்
வீட்டின் பேரில் ஐநூறு ரூபாய் இரண்டு வட்டிக்குக் கடன்<noinclude></noinclude>
gp43v16fybviqbdboct2s4z9vxdm3gc