விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.18 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/176 250 181300 1961601 536062 2026-09-03T09:04:12Z Madhumitha kanagavijayan 16802 Agree 1961601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>174. ஆத்மாவின் ராகங்கள் ஆரம்பிச்சாச்சு. சுப்பையாக் கொத்தனார் வானம் தோண்டிக் கட்டு வேலை தொடங்கிவிட்டார்." "பணம்... ?? "வசூலாகி கையிலே இருந்ததோட வேற பணமும் கொஞ்சம் கிடைச்சது..." "கிடைச்சுதுன்னா ... எப்படி?" "மதுரம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாள் உங்கிட்டச் சொன்னா, நீ கோவிச்சுப்பியோன்னுதான் சொல்லத் தயங்கினேன்..." "நீங்க செய்தது எனக்குப் பிடிக்கலை சார் மாந்தோப்பை எழுதி வாங்கினோம். அதுக்கு முன்னாடியே வாசகசாலைக்கும் எங்களுக்கும், ஹரிஜன நிதி, ஆலயப் பிரவேச நிதின்னு மதுரம் நிறையச் செய்தாச்சு. இன்னமும் அவளையே சிரமப்படுத்தினா எப்படி? அது நல்லாவா இருக்கு?" "இதை அவ சிரமமா எடுத்துண்டால்தானே? இது தான் என் சந்தோஷம்! நீங்க ஆசிரம வேலையைத் தொடங்குங்கோன்னு மதுரமே எங்கிட்ட வந்து கெஞ்சினா, நான் என்ன செய்ய முடியும் ராஜா?" "இதுக்குப் பயந்துதான் நான் அவகிட்ட ஆசிரம வேலை பற்றி பணக் கஷ்டத்தைச் சொல்லாமலே வைத்திருந்தேன்." "நான் மட்டும் சொன்னேனா என்ன, ஏன் ஆசிரம வேலை நின்னிருக்கு?ன்னு மதுரமாகவே எங்கிட்ட வந்து கேட்டு உதவறபோது, வாங்கிக்காமல் வேறென்ன செய்ய முடியும்? தவிர நீ நினைக்கிற மாதிரி நாம் இனிமே மதுரத்தை அந்நியமா நினைக்க வேண்டியதில்லை என்று அபிப்ராயப்படுகிறேன் நான். நீ மட்டும் இதுக்கு ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியலே ராஜா?" "..."<noinclude></noinclude> bctzjygzoegx40hbut20kj4bweez2yn பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/179 250 181303 1961602 536065 2026-09-03T09:07:49Z Madhumitha kanagavijayan 16802 Agree 1961602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>நா. பார்த்தசாரதி. 177 சிபாரிசு செய்வதைக் கேட்டு உள்ளுறச் சிரிப்பாயிருந்தாலும் அவருடைய அந்தரங்கமான பாசவுணர்வு அவனை வியக்கச் செய்தது. நிஜமான அன்பு என்பது மனிதர்களை மீண்டும் மீண்டும் குழந்தை களாக்குவதை அவன் கவனித்தான். தன் சொந்த மகளைப் பற்றி அக்கறைப்படுவது போல் பத்தர் மதுரத்திடம் அக்கறை காட்டினார். ஆசிரமம் தொடங்கி நடந்து கொண்டிருந்தாலும், அவன் வாசகசாலையிலேயே தங்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்க வேண்டுமென்றும் அவரே கேட்டுக் கொண்டார். "இதை மதுரமே எங்கிட்டச் சொல்லியாச்சு." "அது எனக்கும் எதியும் தம்பீ. ஆனா, நீங்க அந்த வேண்டுகோளைப் புரிஞ்சுக்கணும்கிறதை நானும் ஞாபகப் படுத்த ஆசைப்படறேன்..." "சரி!இந்த விஷயத்திலே மட்டும் உங்க ரெண்டு பேர் வார்த்தையையும் நான் தட்டலை, இப்பத் திருப்தி தானே உமக்கு?’’ - . . பத்தரின் முகம் மலர்ந்தது அன்றிரவு மதுரத்தைக் கொஞ்ச நேரம் வீணை வாசிக்கச் சொல்லி வேண்டினான் ராஜாராமன். 'அம்மா போனதிலிருந்து நான் வாத்தியத்தைத் தொடலே! நீங்களே ஆசைப்பட்டுக் கேட்கிறபோது நான் மாட்டேங்கப்படாது. இதோ வாசிக்கிறேன்.' வேண்டாம்னு இருந்தர் நான் வற்புறுத்தலே மதுரம். எனக்காக அதை மாத்திக்க வேண்டாம்..." "இல்லே! உங்களுக்கில்லாததுன்னு எதுவும் கிடையாது எங்கிட்ட. நான் இதிலே வாசிக்கறதே உங்களைத்தான். வாசிக்கிற ராகம் எல்லாமே நீங்கதான் எனக்கு..." ஆ.ரா - 12<noinclude></noinclude> r11o89rcig77jsx2dx1u3ydrfcenof6 பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/180 250 181304 1961604 536066 2026-09-03T09:11:33Z Madhumitha kanagavijayan 16802 Agree 1961604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>178. ஆத்மாவின் ராகங்கள் "நீ வாசிக்காட்டாலும் நான் எங்கேயிருந்தாலும் எப்படி இருந்தாலும், எனக்கு உன் குரல் தான் கேட்கிறது மதுரம்! போன தடவை ஜெயில்லே இருந்தப்ப உன்னை நினைச்சு, ஒரு கவி கூடக் கட்டினேன்..." ''நீங்க எங்கிட்ட இதுவரை சொல்லவே இல்லியே! எங்கே, அதை முழுக்கச் சொல்லுங்கோ கேட்கலாம்...'' 'இப்ப எனக்கே சரியா நினைவு இல்லையே! இரு... அதை மறுபடி நெனைச்சுச் சரிபாார்த்துக்கிறேன்...' 'வேடிக்கைதான்! பாட்டு எழுதினவருக்கே அது நினைவில்லையா, என்ன? பாட்டை மறந்தமாதிரி என்னையும் ஒருநாள் மறந்துடப்போlங்க!' "தப்பு! அதுமட்டும் என்னால் முடியவே முடியாது. பாட்டுத்தான் மறந்ததே ஒழிய அர்த்தம் மறக்கலே. பாட்டும் கொஞ்சம் கொஞ்சமா இப்ப நினைவு வந்திடும். மறக்காது..." "யோசிக்சுப் பாருங்கோ..'' "இதோ ஞாபகம் வரது, சொல்றேன் கேளு..." பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக நினைத்து, அவளுக்குச் சொன்னான் அவன். . 'எல்லையிலாத தோர் காட்டிடை - நள் இருள் என்றும் ஒளி என்றும் சொல்ல ஒணாத தோர் மயக்கத்தே-இளஞ் சோகக் குயில்ஒன் றிசைக்கிறது - அதன் சோகம் முழுதும் புரியுதிலை சுவடு முழுதும் தெரியுதிலை தொல்லைப் பழங் காலமுதலாய் - எனைத் தேடி அலையும் குரல் சொல்லைக் குழைத் தாளுங்குரல் - ஒரு சோகம் முதிர்ந்து முதிர்ந்துறிப்<noinclude></noinclude> tqb3zondvl70yx2bx1u45vgvh9oujt1 பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/47 250 465606 1961566 1558727 2026-09-03T04:57:19Z Booradleyp1 1964 1961566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|1em}} {{Css image crop |Image = கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf |Page = 47 |bSize = 400 |cWidth = 300 |cHeight = 250 |oTop = 0 |oLeft = 50 |Location = center |Description = }} <b>பி</b>ரசங்க புஷணம், புலவர் பூலோகநாதர், அன்று பட்டம் சூட்டிக்கொள்ளப்போகும் பார்த்திபன் போலக் காணப்பட்டார். காரணம் உண்டு அவருடைய களிப்புக்கு, அன்று மாலை ஆலமரத்தடியார் கோயில் ஆறுகால் மண்டபத்திலே, அவருடைய சொற்பொழிவு ஏற்பாடாகி இருந்தது! "குறும்புக்காரச்சிறார்கள் இன்று மாலை மட்டும், என்னைக் கண்டால், என்மொழி கேட்டால், மறுதினம் முதற்கொண்டு, மறந்தும், சேட்டை செய்யார். ஊர்ப் பிரமுகர்கள் பலருமன்றோ கூடி இருப்பர், என் புகழை எடுத்துரைப்பர், மாலை அணிவிப்பர், கைகொட்டி மகிழ்விப்பர், மகிழ்வர். இவைகளைக் கண்ட பிறகு காளைகளின் கண்கள் திறக்கும்" என்று புலவர் எண்ணிக்களிப்படைந்தார். அவருடைய சந்தனப்பொட்டு முதற்கொண்டு, சங்கராபரணம் வரையிலே சகலமும், பள்ளிக்கூடச் சிறார்களுக்கு, நகைச்சுவை தருவனவாக இருக்கும். தொல்லை அதிகம், எனவே பிரசங்கபூஷணம், அறியதோர் சொற்பொழிவு செய்து, அதன் மூலம் புகழ் ஈட்டி, ஈட்டிய புகழை<noinclude></noinclude> j6s8rptsml9yg22bgy4kb6pk8mgff40 பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/48 250 465607 1961568 1558731 2026-09-03T04:59:24Z Booradleyp1 1964 1961568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|48|<b>கற்பனைச்சித்திரம்</b>|}}{{rule}}</noinclude> மாணவர் முன் நீட்டி, அவர் தம் சேட்டையினை ஓட்டிவிட இஃதோர் வாய்ப்பு என்று எண்ணினார். எனவே, இறும்பூதெய்தினார், ஆலமரத்தடியார் கோயில் அர்ச்சகர் அருணாசல ஐயருக்கும் அன்று ஆனந்தந்தான். வௌவால் வாழ்ந்து வந்த அக்கோயிலின்மூலம் அவருக்கு வருமானம் எங்கிருந்து கிடைக்கும் ! கோயில் வாசலிலே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக்கிடந்தார். பலவிதமான யோசனைகளுக்குப் பிறகு, அவர் ஊர்மக்களுக்கு ஆலமரத்தடியார் கோயிலிடம் பக்தி சிரத்தை உண்டாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் கோயிலுக்குப் பலரும் வருவார்கள், வருமானம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தார். அவர், இந்தக் கோயில் பாத்யதையை ஒரு துரும்பாக மதித்தகாலம் ஒன்றுண்டு. அப்போது அவருக்குப் பட்டினத்திலே உத்யோகம். கிரகம் செய்த கோளாறினால் அதை இழக்க நேரிட்டது. அதன் பிறகே அவருக்கு ஆலமரத்தடியாருக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற அக்கரை தோன்றிற்று "பார்த்திங்களா, சாமி என்னமோ பட்டணம் பட்டணமுன்னு போனிங்களே, பாருங்க, ஆலமரத்தடியார் அழைச்சிட்டு வந்தாரு, விடுங்களா அந்தப் புண்யம்" என்று கூறுவர் கிராம மக்கள். "இதிலேமட்டும் குறைவில்லை! கோயில் பக்கமோ வருவதில்லை. என்ன செய்வதாம் இந்தக் கோயிலைக் கட்டிக்கொண்டு ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்" என்று அருணாசல ஐயர், விசனத்துடன் கூறுவார். கடைசியிலேதான் யுக்தி தோன்றிற்று, மக்கள் மனதில பக்தி புகுத்தும் வழி கண்டுபிடித்தார். ஆலமரத்தடியார் கோயில் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறவும், பொதுவாகவே பக்தி மார்க்கத்தின் பெருமையை மக்களிடம் பேசவும், ஓர் சொற்பொழிவு ஏற்படுத்த எண்ணினார். சத்கதா காலட்சேபத்துக்குக் கொஞ்சம் பொருட் செலவு பிடிக்கும், எனவே, பிரசங்க பூஷணப் புலவர் பூலோகநாதரை, அன்புடன் அழைத்தார், அரியதோர் சொற்பொழிவு நடத்தும்படி. அவருக்குத்தான் இத்தகைய<noinclude></noinclude> n7jnt5egheudy2ida7lc696hiu975qy பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/49 250 465608 1961569 1558735 2026-09-03T05:01:38Z Booradleyp1 1964 1961569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||<b>பிரசங்க பூஷணம்!</b>|49}}{{rule}}</noinclude>வாய்ப்புக் கிடைக்குமா என்ற தாகமாயிற்றே, ஐயர் வேண்டிக்கொண்டதும், ஆசிரியர் மனமுவந்து இசைந்தார். இசையுமுன் கூறினார், "நானென்ன அவ்வளவு அதிகம் அறிந்தவனா? கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு, கனியிருக்கக் காய் தேடுதல்போல், எவ்வளவோ அறிவாளிகள் இருக்க, என்னை அழைத்தீர், சிறுமதி உடையேன் ஆயினும், சிறுமதியுடையோன் அருளைத் துணைகொண்டு, என் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் ஆன்றோர் மொழிப்படி தொண்டு செய்யச் சித்தமாக இருக்கிறேன்" என்று புலவர் கூறினார், கூறிவிட்டு மிக மகிழ்ச்சி அடைந்தார். ஏன் இருக்காது! ஆறு வாசகங்கள் அவர் பேசினார், அதிலே மூன்று மேற்கோள்கள். #கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு. #கனியிருக்கக் காய் தேடுதல். #என்கடன் பணிசெய்து கிடப்பதே. ஆக மூன்று, ஆறு வாசகங்களிலே. பிரசங்க பூஷணமல்லவா? வெட்டிப்பேச்சா பேசுவார். மேலும் நெட்டுருப் போட்ட அடிகளைக் கொட்டிப் பேசாவிட்டால் ஏட்டைப் பிடித்ததனால் யாதுபயன்! எனவேதான் ஆறிலே மூன்று, ஆன்றோர் மொழியைப் பொழிந்தார். அம்மட்டோ ! சிறுமதியுடையேன் சிறுமதி உடையோன் அருளைத் துணை கொண்டு என்று கூறினார். "அருணாசல ஐயரே ! என்ன எண்ணுகிறீர் என் புலமைபற்றி! அந்த வாசகத்திலே பொதிந்துள்ள அழகு கண்டீரா! சிற்றறிவு படைத்த நான், என்ற பொருள்பட, சிறுமதி உடையேன் என்று கூறினேன். பிறைச் சந்திரனை அணிந்த யெம்மானின் துணைகொள்வேன் என்ற கருத்துக்குச் சிறுமதியுடையோன் என்று சிவனாரைச் சொன்னேன்! ஒரே பதம், இருபொருள் ! அது ஓர் அழகு | சிறுமதி உடையோன் என்பது நித்தாஸ்துதி என்ற இலக்கணச் செறிவு கொண்டது. இத்தனையும் ஒரே<noinclude></noinclude> lckjzkiao4y9sqrrxs0xf9vww1f8uf4 பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/51 250 465610 1961570 1558740 2026-09-03T05:03:59Z Booradleyp1 1964 1961570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||<b>பிரசங்க பூஷணம்</b>|51}}{{rule}}</noinclude>பரே ! என்று கூறுவதோடு அமைதல் ஆகாது, நியாயமுமாகது. ஆகவே சைவ, வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களே என்றுதான் சபையை அழைத்தல் பொருத்தம். ஆம்! அதுபோல் எழுது என்றார், எழுதினான். புலவருக்கு அப்போதுதான் திருப்தி உண்டாயிற்று "தம்பி! பலருக்குத் தெரிவதில்லை இந்தப் பக்குவம். ஒரு பெரிய கூட்டத்திலே, பலமதத்தினர் வந்திருக்கக்கூடுமே, நாம் அனைவரையும் அழைத்தன்றோ பேசல் வேண்டும் என்ற சாதாரண விஷயம்கூடப் புரிவதில்லை, அப்படிப்பட்டவர்களின் அணைப்பிலே இருந்துதான் தமிழ் தேய்கிறது. நான் அத்தகையவனா ! நான் சைவன், என்றாலும், வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களை நாம் அலட்சியம் செய்தல் கூடாது. இந்த நன்னெறியை மட்டும் நாட்டிலே நிலை நாட்டிவிட்டால், பூலோக கைலாசம் இதுவேயாகும் " என்று கூறினார். அன்பரே ! என்ற ஒரே பதத்தினால், இந்த நோக்கம் நிறைவேறுமே, ஏன் அதைவிட்டு, அடுக்கிக்கொண்டிருக்கிறீர், என்று கேட்க வேண்டுமென்று சீடனுக்குத் தோன்றிற்று. ஆனால் அவன் பிரசங்க பூஷணமா, மறுத்துரைக்க. "ஆலமரத்தடியார் கோயிலில், ஆன்றோரும் சான்றோரும் குழுமியுள்ள இக்கூட்டத்தின் கண் அடியேனைப் பேசுமாறு கேட்டது, என் பாக்கியமே அன்றோ. இத்தகைய சபையிலே, நின்று பேசக்கூடிய அறிவாற்றல் எனக்கு உண்டோ எனில், இல்லை என்பேன். ஏதோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்தும் பேசுமாறு அழைத்தனர்" என்று பிரசங்கபூஷணம் கூறிட, ஏடு எழுதி, வேகமாக எழுதி முடித்தான். மேற்கொண்டு, விஷயத்தை விளக்கப் போகுமுன், அதுவரை எழுதிய பிரசங்கத்தைப் படிக்கச்சொல்லிக் கேட்டு இன்புற்றார் புலவர். "இதே போலத்தான், திரு. வி. கலியாண்சுந்தரனார் பேசுகிறார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இத்தகைய<noinclude></noinclude> hvlvetbqoi7iinh45xfvpl0mujh3523 பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/52 250 465611 1961571 1558742 2026-09-03T05:09:28Z Booradleyp1 1964 1961571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|52|<b>கற்பனைச்சித்திரம்</b>|}}{{rule}}</noinclude>சபையிலே நின்று பேசக்கூடிய அறிவாற்றல் உண்டோ எனில், இல்லை என்பேன் என்று கூறினீர், திரு. வி. க. இல்லை, என்று ஒரு முறை மட்டும் கூறார், இல்லை, இல்லை, இல்லை என்று மும்முறை கூறுவார்" என்று சீடன் கூறினான். சிரித்தார் புலவர், எழுது என்றார். "சிலர், எதனைக் கூறும்போதும், மும்முறை கூறுவர். உண்டு, உண்டு, உண்டு என்பர். என்னே, என்னே, என்னே என்பர். இந்த மும்முறைப் பிரயோகம் வீணாக நேரத்தையும் நினைப்பையும் விரயமாக்குவது அன்றோ 'அது நன்றோ' ஒருமுறை உரைத்திடில், சரியன்றோ. என்னிடம் அத்தகைய வழக்கம் கிடையாது எப்போதும் கிடையாது. நிச்சயமாய்க் கிடையாது" என்றார். சீடனுக்கு இதை எழுதும்போது, கஷ்டமாகத் தான் இருந்தது. மும்முறை கூறலை முறையன்று என்று மொழிந்திடு புலவர், அதனையே மும்முறை கூறுகிறாரே, முறையாமோ என்று எண்ணி ஏங்கினான். ஆனால் எங்ஙனம், மனத்திலுற்றதைக் கூறுவான்; தவறு இழைத்தவர் வெறும் தமிழ்ப்புலவரல்லவே ! பிரசங்க பூஷணமாயிற்றே ! "ஒவ்வோர் சொற்பொழிவாளரும், அவையடக்கம் என்ற அவசியமற்ற பகுதியை நீட்டிச் சபையை வாட்டுவர் அடியேனிடம் அந்த நோய் அணுகுவதில்லை, வீணான வார்த்தைகள் எனக்கு வேம்பு. அவை அடக்கம் ஒரு அவசியமற்ற, பயனற்ற, சுவையற்ற, உயிரற்ற, கருத்தற்ற, முறையற்ற, சுவைப்பயனற்ற, பயனுள்ள சுவையற்ற, கருத்துமுறையற்ற, முறையான கருத்தற்ற, உயிர்ச் சுவை அற்ற, கருத்துயிரற்ற, உயிர்க்கருத்தற்ற, காரியம், என்பதை எடுத்துக்கூற நான் அஞ்சப்போவதில்லை. அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்செழுத்தை ஓதினார் யார்க்கும் என்ற ஆன்றோர்மொழி ஈண்டு சிந்திக்கற்பாலது. ஆன்றோர் மொழியைச் சிந்திக்க வேண்டுவது ஏன் எனில், ஆன்றோர் சான்றோராகலின்." என்று, அவையடக்கத்தின் அவசியமற்ற தன்மைபற்றி, அழகுறக் கூறினார் பிரசங்க பூஷணம், சீடர் எழுதினார்.{{nop}}<noinclude></noinclude> k5fh05cfgekr4ho7nwdx7akckua69ug பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/53 250 465612 1961572 1558844 2026-09-03T05:12:05Z Booradleyp1 1964 1961572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||<b>பிரசங்க பூஷணம்!</b>|53}}{{rule}}</noinclude>"தம்பி!" என்று கூறினார் புலவர். சீடர் எழுதப் போந்தார். "எழுதாதே! இது எழுதுவதற்கல்ல, உனக்குக் கூறுகிறேன். ஒரு சொற்பொழிவின் இலட்சண விளக்கத்தைக்கேள். எந்த விஷயத்தைப்பற்றிப் பேசவேண்டுமென்று குறிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விஷயத்தைப் பற்றியே மறந்து, வீணான அவையடக்கம், சபை வணக்கம் கூறிக் காலத்தைக் கொலைசெய்வது இருக்கிறதே, அது கொடிது, மகாகொடிது. அவை அடக்கம் என்ற பகுதியை அதிகமாக வளர்த்தக்கூடாது. என் சொற்பொழிவிலே நீ எப்போதும் கூர்ந்து கவனித்தால் ஒரு முக்கியமான விஷயத்தைக் காணலாம். அதுதான், என் அனுபவத்தின் ஆராய்ச்சியின் விளைவு. என்னவெனில், நான் அனாவசியமாக அவை அடக்கம் கூறிக் காலத்தை வீணாக்கமாட்டேன்" என்று கூறினார். நாவை அடக்கி வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே இந்த சீடன், அவை அடக்கத்தை நீட்டிச் சொல்வது கூடாது, என்ற விஷயத்தையே, பிரசங்க பூஷணம், நீட்டிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிச் சொற்பொழிவுக்கேற்ற விஷயத்துக்கே வராமலிருக்கிறாரே என்று தெரிந்தது, கூறமுடியுமா! கூறுவது, குரு சீட முறைக்கே பங்கமன்றோ! இடையே பேசிவிட்டதால், தொடர்பு மறந்துபோகவே மீண்டும் ஒருமுறை எழுதின வரையிலே படிக்கச்சொல்லிக் கேட்டார் பிரசங்க பூஷணம். "அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகலான் இந்த வாசகத்தை, மணிவாசகம் என்பேன், அணிவாசகம் என்பேன், பணி வாசகமுமாகும், அறநெறியும், அன்புநெறியும் கொண்டவர் அந்தணர், அழகிய தன்மையை உடையவர், அவர்கள் எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டும் தகைமையினர், அவரே அந்தணர். "ஐயகோ! அந்தணர் என்போர், நம்மனோரைக் கெடுப்பவர் என்றோர் சாரார் கூசாது பொய் கூறுகின்ற-<noinclude></noinclude> 5tigicmk1f86zkjrg8bs61s8idfiwfw பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/54 250 465613 1961573 1558846 2026-09-03T05:12:39Z Booradleyp1 1964 1961573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|54|<b>கற்பனைச்சித்திரம்</b>|}}</noinclude>னர். அவர் தம் அறிவு செல்லும் வழி அறவழி ஆகாது. அந்தணர் செய்த குற்றம் என்னை? அவர் நம்மனோருக்கு இழைத்த தீங்குதான் என்னை? என் கண்களுக்குப் புலனாவதில்லை. என் கண்கள் என்றால், எக் கண்கள்? புறத்துலகைக்கண்டு வெறியாட்டமிடும் கண்களா என்பீரேல், இல்லை என்பேன், முக்காலும் இல்லை என்பேன். இக்காலத்து மட்டுமல்ல, அக்காலத்து, அரசர்களையும் அரச அவைகளையும், அறிஞரையும், அவர் தம் அறநெறியினையும், இகத்தையும், பரத்தையும், சேரன் நாட்டையும், சோழன் மண்டலத்தையும், பாண்டியன் பதியையும், குறுநில மன்னர் பலர் வாழ்ந்த பதிகளையும், அடியார்களையும், அடியார்க்கடியார்களையும் கண்டு களிகொண்ட கண்கள்! என் கண்கள், இவ்வளவையும், இன்னும் பலவற்றையும் கண்டவை. ஏடுகளிலே கண்டேன்! இரும்பூதெய்தி நின்றேன். அவ்வளவு கண்ட என் கண்களை, நான் நம்பாதிருக்கமுடியுமா? அவைகளைக்கொண்டே நான் காண்கிறேன், அந்தணரை. அவர் தம் மீது ஆன்றோர்வழி செல்லாத மாபாபிகள் சில பலர், அடாதது கூறுகின்றனர், நெஞ்சம் நோகிறது. கொஞ்சமும் தாங்க முடியவில்லை இக்கொடுமையினை. அந்தணர் குற்றம் ஏதும் செய்திலர், செய்யார், செய்ய வழியும் அறியார். அவர் அந்தணராய்ப் பிறந்ததற்கே அஃதேயன்றோ காரணம்! இதோ, என் நண்பர், வேதசாஸ்திர விற்பன்னர் அருணாசல ஐயர் அவர்கள் இருக்கிறார் இவர் முகத்திலே அந்த வெள்ளைக் கலை உடுத்திய மாது தாண்டவமாடுவது காணலாம். நெஞ்சிலே நாதன் தாள், கொஞ்சமும் வஞ்சம் அறியாதார். ஒன்று கூறுவேன் ! நான் இந்த நன்னிலை பெற்றதற்குக் காரணமே நமது ஐயர் அவர்களின் நற்கருணையும் தவியுமே என்பதை நான் குன்றேறிக் கூவுவேன், அந்தணர் குலத்தைப் பழிக்கும் இழிதகையாளர் செவிகெடக் கூவுவேன். என்னுடைய புலமையைப் போற்றினீர்கள். பதிகத்தைப் பாராட்டினீர்கள் பட்டத்தைச் சூட்டினீர்கள், ஏட்டினைப் படித்தீர்கள், அந்த ஏடு ஏது ? நான் தீட்டியது! எப்படி? திரு அருளால் தீட்டினேன். திரு அருள் கிட்டி-<noinclude></noinclude> kbkm0adc876r95z8qx66awvc5xijk30 பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/55 250 465614 1961575 1558848 2026-09-03T05:17:59Z Booradleyp1 1964 1961575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||<b>பிரசங்க பூஷணம்</b>|55}}{{rule}}</noinclude>னது எங்ஙனம்? இதோ என் நண்பர், என் ஞானாசிரியன், அருணாசல ஐயர் கூட்டிவைத்தார் திரு அருளை என்னைத் தூண்டி, ஊக்குவித்து ஏடு எழுதச் செய்தார், செய்தேன். அன்புமழை பெய்தீர்கள். இதற்குக் காரணம், இவரன்றோ ! இவர் ஓர் அந்தணர் நான் அந்தணர் குலமல்ல ! எனினும், எனக்குக் கைகொடுத்தது அந்தணரே, என் புலமையை நீங்கள் தெரிந்துகொள்ளச் செய்தவரும் அவரே. இப்படிபட்ட அந்தணர் குலத்தை ஏனோ சில பலர் நிந்திக்கிறார்கள். தமது அறிவீனத்தை அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை. சிவ! சிவ! அபசாரம்! அபசாரம்! இம்மை மறுமை இரண்டினுக்கும் இழுக்கு தேடுகிறார்கள் வழுக்கிவிழுந்த சழுக்கர்" என மள மள வென்று பொழிந்தார். சீடர் கை வலிக்க அதனை எழுதினார். அந்தப் பகுதி முடிந்ததும், பிரசங்க பூஷணம், வியர்வையைத் துடைத்துக்கொண்டு, "தம்பீ! எப்போதும் ஒன்று கவனமாகக் கேள், பிராமணர்களைப் புகழ்ந்தே பேசிவிட வேண்டும். ஏன் தெரியுமா? நாம் தமிழர், ஆகவே நாம் என்ன செய்தாலும் எதைப் பேசினாலும், எப்படி நடந்துகொண்டாலும், நமது தமிழ் மக்கள் நம்மைக் கெடுக்கமாட்டார்கள். பிராமணர்களோ, நமது இனமல்ல. ஆரியம் நுழைந்து, நம்மவரை அடுத்துக் கெடுத்திருக்கிறது. இன்னும் அதன் போக்கைத் தடுத்தால், நமக்குத் தொல்லைவிளையும். ஆகையினால் நமது சொற்பொழிவுகளிலே பிராமணர்களைப் புகழ்ந்து பேசியும், பாராட்டியும் ஆதரித்தும் வைத்தால், நமக்கு அவர்களால் தொல்லை வராது. தமிழர் கோபிப்பர், என்ன இந்தப் புலவன் இப்படிப் பிராமணர்களை ஆதரிக்கிறானே, இனப்பற்றே இல்லாமல் என்று கேட்பர். கேட்டால் என்ன! நண்பரே! நான், எந்தப் பிராமணனை ஆதரித்தேன், இன்றையப் படுபாவிகளையா? செச்சே! நான் என்ன மரக்கட்டையா? மண் பொம்மையா, எனக்கு ரோஷம் வராதிருக்க. நான் பாராட்டினது அந்தணர்களை! அன்பு நெறி, அருள்நெறி பூண்டவர்களை ஆதரித்தேன். அது பார்ப்பண குலத்துக்குள்ள பண்பா! என்று கூறினால், தமது தமிழ்த் தோழர்கள், நமது முதுகைத் தட்டிக்-<noinclude></noinclude> letjv0vcybi5o24gbujs6tioovjf0le பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/56 250 465615 1961576 1558849 2026-09-03T05:18:21Z Booradleyp1 1964 1961576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|56|<b>கற்பனைச்சித்திரம்</b>|}}{{rule}}</noinclude>கொடுப்பர். ஆக நமக்கு ஆரியர், திராவிடர் ஆகிய இருவரிடத்திலும் சீரும் செல்வாக்கும் கிடைக்கும் " என்று கூறினார். சீடன் இந்த சீலத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறினான். பிரசங்கத்தைக் கூறலானார், கூறுமுன், மறுபடி ஒருமுறை சீடராகவே படித்துக் காட்டினார், தொடர்பு தெரிவிக்க. புலவர் புதுமுறுக்குடன் கூறத்தொடங்கினார் உடனே திகைத்தார். "தம்பி! ஒரு பச்சை நிறத்தாளைக் கண்டாயோ?" என்று கேட்டார். "இல்லையே! என்ன தாள் ?" என்றார் சீடர். "இன்றைய சொற்பொழிவு அழைப்பிதழ்" என்றார் பிரசங்க பூஷணம். உள்ளே ஓடினார் புத்தகங்களைப் புரட்டினார், துண்டுச் சீட்டுக் காணப்படவில்லை, துயருற்றார். மனைவியைக் கேட்டார், "அந்தக் குப்பையிலே அது எங்கே இருக்கிறதோ யார் கண்டது" என்று துடுக்காகக் கூறினர் அம்மையார். "உன் கண்களுக்கு அது குப்பைதான்! பேதாய்! அது குப்பை! அந்தக் குப்பையிலே கிடக்கும் மாணிக்கமும், மரகதமும், உனக்கென்னடி தெரியும்." என்று கண்டனக் குரலிலே பேசினார் புலவர். அம்மையார், சக்தி ஸ்வரூபமல்லவா! அவ்வளவு இலேசிலேவிடவில்லை. "கோழி குப்பையைக் கிளறியாவது புழுபூச்சியைக் காண்கிறது, நீ இந்தக் குப்பையை கிளறிக்கிளறிக் கண்டது என்ன?” என்று கேட்டார். "பேதாய்! பெண்பேதாய்! பொன்னாசைகொண்ட பெண்பேதாய்! பொன்னும் பொருளும் எதற்கு? காதற்ற ஊசியும் வாராதுகாண் இக்கடைவழிக்கே" என்றார் புலவர் அந்த நேரத்திலே, அவர் காணாமற்போன சீட்டு இருக்கிறதா என்று பட்டினத்தார் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார். "காதற்ற ஊசியும் வரத்தான்காணோம், நீ கத்திக் கத்தி வந்தும்" என்று கடிந்துரைத்தார் சக்தி. பூலோகநாதர் பதில் பேசவில்லை. என்ன பேசுவது என்றே தெரிய-<noinclude></noinclude> ghhakropixq7mwjafjcbsxeo5h3y6sm பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/57 250 465616 1961577 1558854 2026-09-03T05:19:20Z Booradleyp1 1964 1961577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||<b>பிரசங்க பூஷணம்!</b>|57}}{{rule}}</noinclude>வில்லை. ஆனால் மனதிலேமட்டும் "கூறாமற் சன்யாசம் கொள்" என்ற வாசகம் குடியேறிக் குடையலாயிற்று. "குப்பையாம்! கம்பன் கோர்த்த இம்மணிகள் குப்பையாம்" என்று தனக்குள் கூறிக்கொண்டே பிரசங்க பூஷணம், புத்தகங்களின்மீது படிந்திருந்த தூசைத்தட்டிக் கொண்டிருந்தார். "தங்களைக் காண ஐயர் வந்திருக்கிறார்" என்று சீடன் தெரிவித்தான். ஓடோடிச் சென்றார், அருணாசல ஐயர் கூடத்திலே இருக்கக்கண்டு, "மாலை ஆறுமணிக்குத்தானே, இதற்குள்ளாகவா? நான் இன்னும் குறிப்புத் தயாரித்து முடிக்கவில்லையே" என்று கூறினார். "அவசரம் வேண்டாம். நிதானமாகவே தயாரிக்கலாம்" என்றார் ஐயர். அப்போதுதான், பிரசங்க பூஷணத்துக்கு நிம்மதியாயிற்று. பிரசங்கத்திலே இன்னும் குறள், நாலடியார், நன்னெறி, தேவார திருவாசகம், பட்டினத்தார் பாடல், தாயுமானார் பாடல் ஆகியவைகளை எங்கெங்கே புகுத்துவது என்றே தீர்மானிக்கவில்லை பிரசங்கத்துக்குரிய விஷயம் என்ன என்பது மறந்துவிட்டது. எந்த விஷயம் பற்றிப் பேசவேண்டுமெனக் குறிக்கப்பட்டிருந்தது என்பதை அறியத்தான் அந்தப் பச்சைத் துண்டுக் கடிதத்தைத் தேடினார். அந்தப் பாழாய்ப்போன கடிதம் காணவில்லை. இந்த நேரத்திலே ஐயர் வந்தால், பிரசங்க பூஷணம் பயப்படாமலிருப்பாரா! நல்லவேளை, அவசரம் இல்லை என்று கூறிவிட்டார். ஆகவே, அருமையாகத் தயாரித்துவிடலாம் பிரசங்கத்தை என்று மகிழ்ந்தார் "தலைவர் தயாராகத்தானே இருக்கிறார்?" என்று கேட்டார் ஐயரை, "நல்லகேள்வி கேட்டீர்கள். அவர் துடிக்கிறார்." என்றார் ஐயர். "அடடா! நமது ஜெமீன்தாரர் நிரம்பத் தமிழ் அறிவு அன்புபடைத்தவர். கவிதா உள்ளம் அவருக்கு" என்று அன்று தலைமை வகிக்க இருந்த ஆலூர் ஜெமீந்தாரரைப் பாராட்டிப் பேசினார் பிரசங்க பூஷ்ணம், பேசியபோதே அவர் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டிற்று. "அடடா என்ன காரியம் செய்துவிட்டோம். முட்டாள் தனமாக காரியமல்லவா செய்தோம். பிரசங்-<noinclude></noinclude> q40wljrr2qhdch9ppljxrdd7kbefh6x பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/58 250 465617 1961578 1558857 2026-09-03T05:19:41Z Booradleyp1 1964 1961578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|58|கற்பனைச்சித்திரம்|}}{{rule}}</noinclude>கத்தை ஆரம்பிக்கும்போதே ஜெமீந்தாரரின் சீர் சிறப்புப் பற்றியும் குலப்பெருமை குடும்ப கௌரவம் பற்றியும் கொடை நடைபற்றியும் பாராட்டியன்றோ பேசவேண்டும். அவருக்கும், தமிழை அந்த காலத்திலே வளர்த்த மூவேந்தர்களுக்கும் உவமை காட்டி, அவருடைய உள்ளத்தை உருக்கவேண்டாமா? அதை எழுதாமல் வேறு எதை எதையோவன்றோ இதுவரை எழுதியிருந்தோம். இந்தப் பிரசங்கம் கூடாது. இதை மாற்றி எழுதியே ஆகவேண்டும். ஒரு விருத்தம், ஜெமீன்தாரரின் குணாதிசயத்தை புகழ்ந்துபாட வேண்டும் சரி! சரி! நிரம்ப வேலையிருக்கிறது. ஆனால் ஐயர்தான் அவசரம் வேண்டாம் என்று கூறிவிட்டாரே தயார்செய்து விடலாம் என்று எண்ணினார். "நம்ம ஜெமீன்தாரர், இந்த விழாவை ரொம்ப விமரிசையாக நடத்திவிடவேண்டுமென்று முனைந்து நிற்கிறார். நான் சொற்பொழிவுடன் நிறுத்தலாம் என்றேன் அவர், "அது கூடாது. புலவரின் சொற்பொழிவுடன் பாட்டுக் கச்சேரியும், நடனக்கச்சேரியும் நடத்திவிடவேண்டும் என்று கூறினார். பிரசங்க பூஷணத்துக்கு பெரிய ரோஜாப்பூ மாலை போட்டாகவேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார். மல்லிகை மாலைதான் தயார் செய்தேன் என்று சொன்னேன். அவருக்கு மகாகோபம் வந்துவிட்டது. அவருடைய புலமை என்ன, அறிவு என்ன, ஆராய்ச்சி என்ன, அவருக்குக் கேவலம் மல்லிகை மாலையாபோடுவது. அதை உங்கள் கோயில் மாட்டின் கழுத்திலே போடு என்று கோபித்துக் கூறினார். ரோஜா மாலையே வாங்கிவிடுவோம் என்று கூறினேன். சதிர்க் கச்சேரிக்குச் சிந்தாமணி சகோதரிகளையும், பாட்டுக்கச்சேரிக்குப் பழனியப்பனையும் ஏற்பாடு செய்து விட்டாராம். செலவு அவருடையது. நாயனத்துக்கு நல்ல கண்ணு பார்ட்டி, ஏற்பாடாகிவிட்டது. நான் ஏதோ சாமான்யமாக ஒரு சொற்பொழிவு நடத்த நினைத்தேன், அது பெரிய திருவிழாவாக மாறிவிட்டது. இன்னும் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? சதிர் நடத்தப்போகும் சிந்தா-<noinclude></noinclude> 9arsn7jgo0u9ut0vp0s88idv0efuis7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/171 250 626055 1961516 1944192 2026-09-02T13:23:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூபர்|127|உரூபர்ட்டு இளவரசர்}}</noinclude>வகைக் கற்களால் செய்யப்பட்ட இருபக்க முனைக் கருவிகள், செம்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மற்றும் கருவிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட முக்கோணவடிவ வில்லைகள் (Terracotta Cakes), மணிகள், ‘பியான்சு’ மணி வகையில் செய்யப்பட்ட வளையல்கள் முதற்கால மண்ணடுக்குகளில் கிடைத்தன. இவை தவிர வீடுகள் இருந்தமைக்கான சான்றுகளும் கிட்டியுள்ளன. இவ்வீடுகள் கூழாங்கற்கள், செங்கற்கள், சுண்ணாம்புக்கட்டிகள் முதலியவற்றால் கட்டப்பட்டவை. செங்கற்களின் வடிவமைப்பு அரப்பா, மொகஞ்சதாரோ, காலிபங்கன் போன்ற இடங்களில் கிட்டிய செங்கற்களை ஒத்துள்ளன. பொதுவாக வீடுகள் கற்களால் கட்டப்பட்ட மேடைகளின் மீது எழுப்பப்பட்டுள்ளன. இது இங்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைக் காட்டுகிறது. இறந்தவர்களைக் குழிகளில் புதைத்தனர். பிணத்தின் தலைப்பாகம் வடபுறத்தில் வைக்கப்பட்டு அதனுடன் ஈமப்பொருள்கள் முதலியனவும் வைக்கப்பட்டன. இந்நாகரிகம் ஏறக்குறைய கி.மு. 2000-1400 முதல் வழக்கில் இருந்தது. மீண்டும் இங்கு ஏறக்குறைய கி.மு.1000-இல் புதிய குடியேற்றம் ஏற்பட்டது. <b>இரண்டாம் காலம் (கி.மு. 1000-700)</b>: வண்ணம் தீட்டப்பெற்ற சாம்பல் நிற மட்கலன்களைப் பயன்படுத்திய மக்கள் இக்காலத்தில் இங்கு வாழ்ந்தனர். இவ்வண்ணப் பூச்சுப் பெற்ற சாம்பல் நிற ஓடுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், வளையல்கள், அரிய மணிக்கற்கள், எலும்பு முனைகள், தந்தத்தில் செய்யப்பட்ட அஞ்சனம் தீட்டும் குச்சிகள், செம்புக் கருவிகள் ஆகியவை. இக்கால மண்ணடுக்குகளில் கிடைத்தன. சிந்துவெளி மக்கள் கண்ணாடியை அறிந்திலர். ஆனால், இக்காலப் பண்பாட்டு மக்கள் அதனை அறிந்திருந்தனர். இம்மக்களே கண்ணாடியை அறிமுகப்படுத்தியிருக்கக்கூடும். <b>மூன்றாம் காலம் (கி.மு. 600-200)</b>: வடஇந்தியாவில், குறிப்பாக கங்கை வெளிப் பகுதியில் சிறப்புடன் ஒரு வகையான கறுப்பு வண்ணம் தீட்டப்பட்ட மெருகூட்டிய மட்கலன்களைப் (N.B.P.) பயன்படுத்திய மக்கள் இங்குச் சிறு இடைவெளிக்குப் பின் ஏறக்குறைய கி.மு.600-இல் குடியேறியிருக்க இக்கால கட்டத்தில் (கி.மு. 600-200) முத்திரையிடப்பட்ட நாணயங்களும் முத்திரையிடப்படாத நாணயங்களும் இங்குக் கிட்டின. இவை தவிர செம்பு மற்றும் இரும்பினால் ஆன கருவிகளும் மௌரியர் காலத்தைச் சார்ந்த பிராமி எழுத்துடன் கூடிய தந்த முத்திரைகளும் கிடைத்தன. மேலும், மௌரியர் காலத்திற்கே உரித்தான மெருகூட்டிய கல்லால் செய்யப்பட்ட சிறுவில்லை ஒன்றும் அகழாய்வில் கிட்டியது. இச்சிறுவில்லையில் வளமைக் கடவுள் உருவம் (Fertility Cult) ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்ற சிறு வில்லைகள் தட்சசீலத்திலும் பாட்னாவிலும் கிட்டின. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுச் சுண்ணாம்புப் பூச்சுப் பெற்று விளங்கின. சுட்ட செங்கற்களால் எழுப்பப்பட்ட குளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உறைக் கிணறுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. <b>நான்காம் காலம் (கி.மு. 200-கி.பி.500)</b>: இக்கால கட்டத்தில் கங்கர், குசானர், குப்தர் கால மக்கள் இங்கு வாழ்ந்தனர், இக்கால கட்டத்தில் குசானர், குப்தர் காலத்தைச் சார்ந்த செப்புக் காசுகள் ஓர் இடத்தில் புதையலாகக் கிட்டின. சுடுமண் பொம்மைகளும் முத்திரைகளும் இங்குக் கிடைத்தன. <b>ஐந்தாம் காலம் (கி.பி. 500-800)</b>: இக்காலத்தில் மிகிரகுலர் தோரமானர், ஊண அரசர்களின் நாணயங்கள் இங்குக் கிடைத்தன. <b>ஆறாம் காலம்</b>: சிறிது இடைவெளிக்குப் பின் ஆறாம் கால கட்டத்தில் மொகலாயர் காலத்தைச் சேர்ந்த இலகோரிச் (Lakhauri) செங்கற்களும் முகமதியர் கால நாணயங்களும் கிடைத்தன.{{Right|.இரா.}} <section end="உரூபர்"/> <section begin="உரூபர்ட்சுலாந்து"/> {{dhr}} <b>உரூபர்ட்சுலாந்து</b> என்பது கனடா நாட்டில் அட்சன் விரிகுடாவை வளப்படுத்தும் ஆறுகள் பாயும் பகுதியைக் குறிப்பதாகும். உரூபர்ட்டு இளவரசரின் (Rupert, Prince) நினைவாக இப்பகுதிக்கு உரூபாட்சுலாந்து (Rupertsland) எனப் பெயரிடப்பட்டுள்ளது. உரூபர்ட்டு அட்சன் விரிகுடா வணிகக் குழுவின் (Hudson's Bay Company) முதல் ஆளுநராக அமர்த்தப் பெற்றிருந்தார், இப்பகுதிக்கான பட்டயத்தை இங்கிலாந்து நாட்டை ஆண்ட இசுடூவர்ட்டு மரபின் அரசரான இரண்டாம் சார்லசு (Charles II) வழங்கினார். ஆனால் கி.பி. 1870-இல் இவ்வணிகக் குழுவின் ஆதிக்கம் முடிவுற்று, உரூபர்ட்சுலாந்து கனடாவின் பகுதியாக்கப் பெற்றது. கனடா நாட்டின் வடமேற்கு மாநிலத்தை முதலில் உரூபர்ட்சுலாந்து மற்றும் வட மேற்குப்பகுதி என்றே அழைத்தனர். இன்று இதனை வடமேற்குப் பகுதிகள் மாநிலம் (North West Territories) என்று கூறுவர்.{{Right|இரா.அ.}} <section end="உரூபர்ட்சுலாந்து"/> <section begin="உரூபர்ட்டு இளவரசர்"/> {{dhr}} <b>உரூபர்ட்டு இளவரசர் (கி.பி. 1619-1692)</b> பிரேகு (Prague) நகரில் கி.பி. 1619-இல் பிறந்தார், இவர் பொகீமியா நாட்டுப் பட்டத்து அரசராயிருந்த-<noinclude></noinclude> njsf8qi7ni1zdoheb2zqm69jt7ic0wv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/172 250 626056 1961518 1945129 2026-09-02T13:31:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூபாட்டு இளவரசர்|128|உரூபன்சு .......}}</noinclude>ஐந்தாம் பிரடரிக்ருக்கும் (Frederick V) இங்கிலாந்தை ஆண்ட இசுடூவர்ட்டு மரபின் முதல் அரசரான முதலாம் சேம்சு (James I) மன்னரின் மகள் எலிசபெத்துக்கும் பிறந்தவர். இவர் பொகீமியாவில் ஏற்பட்ட போரின்போது உயிருக்கஞ்சி, தம் பெற்றோர்களுடன் தப்பியோடி ஆலந்து (Holland) நாட்டில் குடியேறினார். உரூபர்ட்டு (Rupert, Prince) கி.பி. 1636-இல் இங்கிலாந்து சென்றார். அங்குத் தம் தாய்மாமன் சார்லசு மன்னரால் பாராட்டப்பெற்றார். இங்கிலாந்தில் அரசருக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு உள்நாட்டுப் போரில் முடிவுற்றது. அப்போரில் உரூபர்ட்டு-அரசரால் குதிரைப்படைத் தலைவராக அமர்த்தப்பட்டார். இவருடைய தொடக்க காலப் போர்கள் இவருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தன. இதனால் இவர் அரசரின் அன்புக்கு உரியவரானார். இவர் கி.பி. 1643-இல் பிரிசுட்டல் நகரையும், அடுத்தாண்டில் இலிவர்ப்பூல் நகரையும் கைப்பற்றினார். அரசர் இவருக்குப் பல விருதுகளை வழங்கினார். அவற்றுள் ஒன்று கம்பர்லாந்து கோமான் (Cumberland Duke) என்பது. இவர் மார்சுட்டன் மூர் (Marston Moor) என்னும் போர்க்களத்திலும், நேசபி (Naseby) என்னும் போர்க்களத்திலும் படுதோல்வியுற்றபோது அரசர் கட்சிக்குத் தளர்வு ஏற்பட்டது. இவர் அரசர் பாராளுமன்றத்தில் அரசியல் தீர்வினை ஏற்க வேண்டுமெனத் தூண்டியதோடு, இங்கிலாந்தை விட்டுப் பிரான்சுக்குச் சென்றார். உள்நாட்டுப் போருக்குப் பின்னர் உரூபர்ட்டு மேற்கு இந்தியத் தீவுகளிலும், அசோர்சுத் (Azores) தீவிலும், ஏனைய இடங்களிலும் ஆங்கிலக் கலகக்காரர்களின் கப்பல்களை அரசருடைய கப்பல்கள் தாக்கியபோது. அரசரின் கப்பற்படைத் தளபதியாகப் பணியாற்றினார். உள்நாட்டுப் போரில் தோல்வியுற்ற இசுடூவர்ட்டு மரபினரின் ஆட்சி கி.பி. 1649-இல் விலக்கப்பட்டு, இங்கிலாந்தில் ஆலிவர் கிராம்வென் (Oliver Cromwell) என்பாரின் பொதுநலக் குடியரசு அமைக்கப்பெற்றது. பதினோராண்டுகள் (1649-1660) நடைபெற்ற இவ்வாட்சியின்போது மட்டும் இங்கிலாந்தில் அரசு மரபினர் ஆட்சி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிராம்வெல்லின் வழித் தோன்றல்களால் ஆட்சியைச் சரிவர நடத்த முடியவில்லை. எனவே மீண்டும் இசுடூவர்ட்டு மரபினரின் ஆட்சி அமையப் பெற்றது. வரலாற்றாசிரியர் இதனை மீட்சி (Restoration) என்பர். முதலாம் சார்லசு மன்னர் கழுவேற்றப்பட்டு கி.பி. 1649-இல் கொல்லப்பட்டார். அவர்தம் மகனான இரண்டாம் சார்லசு கி.பி. 1660-இல் மீண்டும் அரசராக்கப் பெற்று இசுடூவர்ட்டு மரபினரின் ஆட்சி தொடர்ந்தது. உரூபர்ட்டு இரண்டாம் சார்லசு மன்னரின் ஆட்சியின்போது கடற்படைத் தலைவராக்கப்பட்டார். பின்னர் கி.பி. 1673-இல் கடற்படை அமைச்சராக்கப்பட்டார். உரூபர்ட்டு இளவரசர் அறிவியலிலும் வேதியியலிலும் ஆர்வம் கொண்டு, புதுமுறை வெடிமருந்தையும் துப்பாக்கிகளை அடைக்கும் புதுமுறைகளையும் கண்டறிந்தார். அரசர் கழகம் (Royal Society) என்னும் இயக்கத்தை இவர் உருவாக்கினார். இவர் கி.பி. 1682-இல் இலண்டனில் காலமானார்.{{Right|இரா.அ.}} <section end="உரூபர்ட்டு இளவரசர்"/> <section begin="உரூபன்சு, சர் பீட்டர் பால்"/> {{dhr}} <b>உரூபன்சு, சர் பீட்டர் பால் (கி.பி. 1577-1640)</b> புகழ் பெற்ற பிளமிய (Flemish) ஓவியர். இவர் தலைசிறந்த கலைஞராகவும் அரசியல் வல்லுநராகயும் அறிஞராகவும் திகழ்ந்தார். உரூபன்சு (Rubens, Peter Paul) வரலாற்று நிகழ்ச்சிகளையும் சமயத் தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயற்கைக் காட்சிகளையும் ஓவியமாகத் தீட்டினார். மேலும், அரசர்கள், தலைசிறந்த அரசியல் அறிஞர்கள், தம் குடும்பத்தினர் போன்றோர் உருவப் படங்களையும் இவர் ஓவியங்களாக வரைந்து புகழ் பெற்றார். இவர்தம் படங்களில் ஒரே படத்தில் பல உருவங்களைக் கொண்டவையே செயலாற்றல் நிறைந்தவை. கற்பனைத் திறனுக்கும் கட்டுக் கோப்பிற்கும் இவர் படங்கள் எடுத்துக்காட்டானவை. அமேசான்களின் போர் (The Battle of Amazons), சிலுவையின் எழுச்சி (Elevation of the Cross), சிலுவையிலிருந்து இறக்கம் (Descent from the Cross), காதல் பூங்கா (Garden of Love) போன்றவை உரூபன்சின் புகழ்பெற்ற படைப்புகளும் சில. உரூபன்சு செருமனி நாட்டில் வெசுட்டுபேலியாவைச் (Westphalin) சேர்ந்த சீகன் (Siegen) என்னும் ஊரில் பிறந்தார். தம் தந்தையார் காலமானதும், இவர் தம் தாயுடன் ஆண்ட்வெர்ப்பு (Antwerp) நகரில் வாழ்ந்தார். உரூபன்சு கி.பி. 1598-இல் ஓவியர் கழகத்தின் உறுப்பினரானார். பின்னர், இத்தாலி சென்று மாண்டுவா கோமகனிடம் பணியில் அமர்ந்து, பல ஓவியங்களைத் தீட்டினார். இவர் உரோமாபுரி, செனோவா (Genova), வெனிசு (Venice) போன்ற நகரங்களுக்குச் சென்று மறுமலர்ச்சிக்கால ஓவியர்களின் கலைச்செல்-<noinclude></noinclude> fh3kuc5xyfm5zewl9uua6jr7fnhwmew பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/173 250 626057 1961520 1945137 2026-09-02T13:38:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூபன்சு....|129|உரூர்}}</noinclude>வங்களின் தனிச்சிறப்புகளைக் கற்றுத் தெளிந்தபின், கி.பி. 1608-இல் ஆண்ட்வெர்ப்பிற்குத் திரும்பினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 173 |bSize = 375 |cWidth = 70 |cHeight = 85 |oTop = 60 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|உரூபன்சு, சர் பீட்டர் பால்}} உரூபன்சு, இசுபெல்லா பிராண்டு (Isabella Brant) என்பவரை மணந்தார். இவர் இளவரசர் ஆல்பாட்டின் (Archduk Albert) அரண்மனை ஓவியராக அமர்த்தப்பட்டார். இக்காலத்தில் திருச்சபைக்கான பல பணிகளையும் இவர் மேற்கொண்டார். இவர் தாம் வாழ்ந்த பெரிய அரண்மனையில் பண்டைக் காலம் முதல் இக்காலம் வரையிலான உயர்ந்த ஓவியங்களைத் தொகுத்துவைத்து அலங்கரித்தார். பிரான்சு மன்னர் 13-ஆம் உலூயியின் தாயாரின் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை ஓவியமாக வரையப் பணிக்கப் பெற்றார். இல்வோவியங்கள் பாரிசிலுள்ள இலக்சம்பர்கு மாளிகையில் உள்ள கலைக்கூடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டன. இவர் இவ்வோவியங்களில் கிரேக்கப் புராணங்களில் வரும் சித்திரங்களையும் இணைத்து வரைந்தார். உரூபன்சு சிறிது காலம் அரசியல் வல்லுநராகவும் பணியாற்றினார். இவர் இசுபெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் பயணம் சென்று, இடைக்கால அமைதியை அவ்விரு நாடுகளுக்குமிடையே நிலைநாட்ட முயன்றார். பன்மொழிப் புலவரான இவருக்கு இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு (Charles I) விருது வழங்கிப் பாராட்டினார். கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் இவருக்கு மரியாதைப் பட்டம் கொடுத்துப் பாராட்டியது. அரசியற்பணி இவருக்கு மனநிறைவு அளிக்கவில்லை. எனவே, தம் இறுதி நாட்களை மீண்டும் ஆண்ட்வெர்ப்பிலேயே கழிக்க எண்ணி அங்குத் திரும்பினார். நோய்வாய்ப்பட்ட நிலையிலும் உரூபன்சு ஓவியங்களைத் தீட்டி வந்தார். இவர் கி.பி. 1640-இல் காலமானார்.{{Right|இரா.அ.}} <section end="உரூபன்சு, சர் பீட்டர் பால்"/> <section begin="உரூபாவதி"/> {{dhr}} <b>உரூபாவதி</b> என்பது தலைமைப் பாத்திரத்தைத் தலைப்பாகக் கொண்ட ஒரு தமிழ் நாடகம். பரிதிமாற் கலைஞர் என்ற வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார் இவற்றியது. இந்நாடகத்தை இவர் கி.பி.1895-இல் வெளியிட்டபோது வீணர் பலர் கண்டனம் தெரிவித்தனர். நாடகத்தமிழ் வளரவேண்டும் என்ற கருத்தில் சாத்திரியார் முதன்முதலாக இயற்றிய நூலான இந்நாடகம் இரட்டைத் தலைப்புடையது. சாத்திரியார் குற்றம் குறை இருக்கக்கூடாது என்று கருதி எழுதிய தம் நாடகத்தில் குறைவந்துவிட்டதே என்று வருந்தி, அதன் இரண்டாம் பதிப்பில் (1902) சில திருத்தங்களைச் செய்து, எம்.எசு. பூரண லிங்கம் பிள்ளையின் முகவுரையுடன் வெளியிட்டுத் தாமே உரூபாவதி வேடமிட்டு நடித்தும் காட்டினார். உயரிய செந்தமிழ்நடை உடையது; கற்றவர் மட்டுமே கண்டு சுவைப்பதற்குரியது.{{Right|பி.தெ.}} <section end="உரூபாவதி"/> <section begin="உரூர்"/> {{dhr}} <b>உரூர்</b> என்பது இரைன் ஆற்றின் துணை ஆறுகளுள் ஒன்று. ஐரோப்பாவில் மேற்குச் செருமனி நாட்டின் மேற்குப் பகுதியில் உரூர் (Ruhr) ஆறு பாய்கிறது. வட இரைன்-வெசுட்டுபேலியா (North Rhine-Westphalia) என்னும் மாநிலத்தில் பாயும் உரூர் ஆற்றின் பெயராலேயே இங்குள்ள புகழ்மிக்க பள்ளத்தாக்கை உரூர்ப் பள்ளத்தாக்கு (Ruhr Valley) என்பர். மேற்குச் செருமனியின் செல்வ வளம் மிக்க ஆலைகளும், நிலக்கரிச் சுரங்கங்களும் உரூர்ப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளமை இதன் சிறப்புக்குக் காரணமாகும். சாயர்லாந்து மேட்டு நிலங்களில் (Sowerland Highlands) உள்ள விண்டர்பர்கு (Winterburg) நகருக்கு வடபால் கடல் மட்டத்தைவிட 600 மீ. உயர்ந்துள்ள மேட்டு நிலங்களிலிருந்து இந்த ஆறு தோன்றுகிறது. இது வடமேற்காகப் பாய்ந்து, ஆழ்ந்த காடுகளைக் கொண்ட பள்ளத்தாக்கின் வழியாக ஓடி, ஆற்றின் நீளத்தின் பாதி அளவில் மேற்குப் பக்கமாகத் திரும்பி உரூர் மாவட்டத்தில் பாய்ந்து, தியூசுபர்கு (Duisburg) என்னுமிடத்தில் இரைன் ஆற்றுடன் இணைகிறது. இது 4558 ச.கி.மீ. பரப்பிற்கு வடிகாலாகப் பயன்படுகிறது. வலப்பக்கத் துணை ஆறாக மோகினேயும் (Mohne) இடப்பக்கத் துணை ஆறுகளாக ஒன் (Honne) இலென் (Lenns) என்பனவும் இதனுடன் இணைகின்றன. உரூர்ப் பள்ளத்தாக்கு அனைத்து வளங்களையும் கொண்ட பகுதியாகும். இங்கு நகர்ப்புறத் தொழிற்-<noinclude> <b>வா. க. 5 - 9</b></noinclude> m90d4m5yygbs306880xohkuls5n0f88 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/174 250 626059 1961523 1945146 2026-09-02T13:45:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருர்க்கிப் பல்கலைக்கழகம்|130|உருர்க்கிப் பல்கலைக்கழகம்}}</noinclude>சாலை வளாகங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் இருப்புப்பாதைகள் வலை பின்னினாற்போல் அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆற்றுப் போக்குவரத்து வசதிகளையும் கால்வாய்ப் போக்குவரத்து வசதிகளையும் பெருமளவில் கொண்டு விளங்குகிறது. படகுப் போக்குவரத்தும் விட்டன் (Witten) என்னும் நகர் வரை செல்கிறது. இந்த ஆற்றுநீர் மிகத் தெளிவானதும் துப்புரவானதுமாகும். எனவே பஞ்சாலைத் தொழிற்சாலைகளுக்குப் பயனளிப்பவை. அதைப்போல் உரூர்ப் பகுதியிலுள்ள கனரகத் தொழிற்சாலைகள் இவ்வாற்றின் பெருமளவு நீரை ஆற்றுப்போக்கின் தாழ்நிலை, இடைநிலைப் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்கின்றன. உரூர்ப் பள்ளத்தாக்கில் மிகுதியான நிலக்கரியும் உருக்கும் கிடைப்பதால் இப்பகுதி செருமனி, பிரான்க நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெருங்காரணம் எனக் கருதப்படுகிறது. உரூர்ப் பள்ளத்தாக்கு உலகிலேயே மிக உயர்ந்தளவு ஒருமைப்படுத்தப்பெற்ற தொழிற்சாலைப் பகுதியாகும். இங்கு இரசாயனம், பஞ்சாலை, நிலக்கரிச் சுரங்கம், உலோகத் தொழில், மின்சக்தி போன்ற தனித்தனித் துறைகள் அனைத்தும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதல் உலகப் போரின் போது செருமனியின் போர்த்தேவைகள் அனைத்தையும் உரூர்ப் பள்ளத்தாக்கே சமாளித்தது. இரண்டாம் உலகப் போரின்போதும் உரூர்ப் பகுதி செருமனியின் போர்த்தளவாட உற்பத்தியின் மையமாக இருந்தது. இதனால், இப்பகுதியில் இருந்த மாநகரங்களும் தொழிற்சாலைகளும் பெரும் சேதமுற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்சல் (Marshall) என்பாரின் பெயரில் அமைக்கப்பட்ட திட்டம் (Marshall Plan) போரினால் அழிவுற்ற ஐரோப்பாவைச் சீர்படுத்தப் பொருளாதார உதவி வழங்கியது. இத்திட்டம் நலித்திருந்த உரூர்ப் பள்ளத்தாக்கை வளப்படுத்தவும் புதுவாழ்வு பொலிந்திடவும் உதவியது. இன்றும் மேற்குச் செருமனியின் முன்னேற்றத்திற்கு உரூர்ப் பள்ளத்தாக்கே அடித்தளமாக அமைந்துள்ளது.{{Right|இரா.அ.}} <section end="உரூர்"/> <section begin="உரூர்க்கிப் பல்கலைக்கழகம்"/>{{dhr}} <b>உரூர்க்கிப் பல்கலைக்கழகம்</b> உத்தரப் பிரதேசமாநிலத்திலுள்ள தொழில் நகரான உரூர்க்கியில் (Roorkee) கங்கை ஆற்றின் கிழக்குக் கரையில் ஏறத்தாழ 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இயற்கைச் சூழல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. பொறியியல் சார்ந்த அனைத்துத் துறைகளையும் ஒரே இடத்தில் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உரூர்க்கிப் பல்கலைக்கழகம் செயற்பட்டு வருகிறது. இது பிற கல்லூரிகளையோ நிறுவனங்களையோ தன்னோடு இணைத்துக் கொள்ளாமல், தனியொரு பல்கலைக்கழகமாக (Unitary University) விளங்குகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்திலேயே உறைவது இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பியல்பாகும். கங்கைக் கால்வாயை வெட்டிய சர் புரோபி காட்லி (Sir Proby Cautley) என்பவரது ஊக்குவிப்பால் கி.பி. 1847-இல் தாமசன் பொறியியற் கல்லூரி (Thomason College of Civil Engineering) நிறுவப்பெற்றது. இதுவே இந்தியாவில் மிகப் பழமையான பொறியியற் கல்லூரியாகும். இக்கல்லூரியே பின்னர் 1947-இல் பெரியதொரு பல்கலைக்கழகமாக வளர்ந்தது, இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தச் டாக்டர் சி.எ. ஆர்ட்டு (C. A. Hart) ஆவர். இன்று (1985) உரூர்க்கிப் பல்கலைக்கழகத்தில் 1500 இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர்களும், 1000 பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களும், 450 ஆசிரியர்களும் உள்ளனர். இளம் பொறியியல் பட்டப் படிப்புக்கு (B.E.) இந்திய நாட்டு அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வு மூலம் ஒவ்வோராண்டும் 365 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். உரூர்க்கிப் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலநடுக்கப் பொறியியல் (Earthquake Engineering), நீர்வள மேம்பாட்டுப் பயிற்சி மையம் (Water Resources Development Training Centre), உயிரறிவியல் மையம் (Centre of Bio-Sciences) ஆகியன உலகப் புகழ் பெற்றவை. பொறியியல், கட்டடக்கலை ஆகிய துறைகளில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இளநிலைப் படிப்பும், அறிவியல், தொழில்நுட்பவியல், பொறியியல், கட்டடக்கலை ஆகிய துறைகளில் 52க்கும் அதிகமான பிரிவுகளில் பட்டமேற்படிப்பும் வழங்கப்படுகின்றன. இவை தவிர, வாழ்வியல் (Humanities) துறையில் பொருளியல், உளவியல், ஆங்கிலம், வரலாறு ஆகிய பிரிவுகளும் உள்ளன. பொறியியல், தொழில்நுட்பவியல், கலை ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வசதியும் இப்பல்கலைக்கழகத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பயிற்று மொழியாகவும் தேர்வு மொழியாகவும் ஆங்கிலமே இருந்து வருகிறது. டி. எசி. (D.SC.), டி. இஞ். (D. Engg) போன்ற மதிப்புப் பட்டங்களை இப்பல்கலைக்கழகம் பொறியியல் சார்ந்த துறைகளில் சிறந்த வல்லுநர்களுக்கு வழங்கி வருகிறது.{{Right|எஸ்.த.}} <section end="உரூர்க்கிப் பல்கலைக்கழகம்"/> {{nop}}<noinclude></noinclude> q2pe2wm6ab4p62nopnzo54k76tqaeaf 1961543 1961523 2026-09-02T15:01:11Z Booradleyp1 1964 1961543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|130|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்}}</noinclude>சாலை வளாகங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் இருப்புப்பாதைகள் வலை பின்னினாற்போல் அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆற்றுப் போக்குவரத்து வசதிகளையும் கால்வாய்ப் போக்குவரத்து வசதிகளையும் பெருமளவில் கொண்டு விளங்குகிறது. படகுப் போக்குவரத்தும் விட்டன் (Witten) என்னும் நகர் வரை செல்கிறது. இந்த ஆற்றுநீர் மிகத் தெளிவானதும் துப்புரவானதுமாகும். எனவே பஞ்சாலைத் தொழிற்சாலைகளுக்குப் பயனளிப்பவை. அதைப்போல் உரூர்ப் பகுதியிலுள்ள கனரகத் தொழிற்சாலைகள் இவ்வாற்றின் பெருமளவு நீரை ஆற்றுப்போக்கின் தாழ்நிலை, இடைநிலைப் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்கின்றன. உரூர்ப் பள்ளத்தாக்கில் மிகுதியான நிலக்கரியும் உருக்கும் கிடைப்பதால் இப்பகுதி செருமனி, பிரான்க நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெருங்காரணம் எனக் கருதப்படுகிறது. உரூர்ப் பள்ளத்தாக்கு உலகிலேயே மிக உயர்ந்தளவு ஒருமைப்படுத்தப்பெற்ற தொழிற்சாலைப் பகுதியாகும். இங்கு இரசாயனம், பஞ்சாலை, நிலக்கரிச் சுரங்கம், உலோகத் தொழில், மின்சக்தி போன்ற தனித்தனித் துறைகள் அனைத்தும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதல் உலகப் போரின் போது செருமனியின் போர்த்தேவைகள் அனைத்தையும் உரூர்ப் பள்ளத்தாக்கே சமாளித்தது. இரண்டாம் உலகப் போரின்போதும் உரூர்ப் பகுதி செருமனியின் போர்த்தளவாட உற்பத்தியின் மையமாக இருந்தது. இதனால், இப்பகுதியில் இருந்த மாநகரங்களும் தொழிற்சாலைகளும் பெரும் சேதமுற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்சல் (Marshall) என்பாரின் பெயரில் அமைக்கப்பட்ட திட்டம் (Marshall Plan) போரினால் அழிவுற்ற ஐரோப்பாவைச் சீர்படுத்தப் பொருளாதார உதவி வழங்கியது. இத்திட்டம் நலித்திருந்த உரூர்ப் பள்ளத்தாக்கை வளப்படுத்தவும் புதுவாழ்வு பொலிந்திடவும் உதவியது. இன்றும் மேற்குச் செருமனியின் முன்னேற்றத்திற்கு உரூர்ப் பள்ளத்தாக்கே அடித்தளமாக அமைந்துள்ளது.{{Right|இரா.அ.}} <section end="உரூர்"/> <section begin="உரூர்க்கிப் பல்கலைக்கழகம்"/>{{dhr}} <b>உரூர்க்கிப் பல்கலைக்கழகம்</b> உத்தரப் பிரதேசமாநிலத்திலுள்ள தொழில் நகரான உரூர்க்கியில் (Roorkee) கங்கை ஆற்றின் கிழக்குக் கரையில் ஏறத்தாழ 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இயற்கைச் சூழல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. பொறியியல் சார்ந்த அனைத்துத் துறைகளையும் ஒரே இடத்தில் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உரூர்க்கிப் பல்கலைக்கழகம் செயற்பட்டு வருகிறது. இது பிற கல்லூரிகளையோ நிறுவனங்களையோ தன்னோடு இணைத்துக் கொள்ளாமல், தனியொரு பல்கலைக்கழகமாக (Unitary University) விளங்குகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்திலேயே உறைவது இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பியல்பாகும். கங்கைக் கால்வாயை வெட்டிய சர் புரோபி காட்லி (Sir Proby Cautley) என்பவரது ஊக்குவிப்பால் கி.பி. 1847-இல் தாமசன் பொறியியற் கல்லூரி (Thomason College of Civil Engineering) நிறுவப்பெற்றது. இதுவே இந்தியாவில் மிகப் பழமையான பொறியியற் கல்லூரியாகும். இக்கல்லூரியே பின்னர் 1947-இல் பெரியதொரு பல்கலைக்கழகமாக வளர்ந்தது, இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தச் டாக்டர் சி.எ. ஆர்ட்டு (C. A. Hart) ஆவர். இன்று (1985) உரூர்க்கிப் பல்கலைக்கழகத்தில் 1500 இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர்களும், 1000 பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களும், 450 ஆசிரியர்களும் உள்ளனர். இளம் பொறியியல் பட்டப் படிப்புக்கு (B.E.) இந்திய நாட்டு அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வு மூலம் ஒவ்வோராண்டும் 365 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். உரூர்க்கிப் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலநடுக்கப் பொறியியல் (Earthquake Engineering), நீர்வள மேம்பாட்டுப் பயிற்சி மையம் (Water Resources Development Training Centre), உயிரறிவியல் மையம் (Centre of Bio-Sciences) ஆகியன உலகப் புகழ் பெற்றவை. பொறியியல், கட்டடக்கலை ஆகிய துறைகளில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இளநிலைப் படிப்பும், அறிவியல், தொழில்நுட்பவியல், பொறியியல், கட்டடக்கலை ஆகிய துறைகளில் 52க்கும் அதிகமான பிரிவுகளில் பட்டமேற்படிப்பும் வழங்கப்படுகின்றன. இவை தவிர, வாழ்வியல் (Humanities) துறையில் பொருளியல், உளவியல், ஆங்கிலம், வரலாறு ஆகிய பிரிவுகளும் உள்ளன. பொறியியல், தொழில்நுட்பவியல், கலை ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வசதியும் இப்பல்கலைக்கழகத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பயிற்று மொழியாகவும் தேர்வு மொழியாகவும் ஆங்கிலமே இருந்து வருகிறது. டி. எசி. (D.SC.), டி. இஞ். (D. Engg) போன்ற மதிப்புப் பட்டங்களை இப்பல்கலைக்கழகம் பொறியியல் சார்ந்த துறைகளில் சிறந்த வல்லுநர்களுக்கு வழங்கி வருகிறது.{{Right|எஸ்.த.}} <section end="உரூர்க்கிப் பல்கலைக்கழகம்"/> {{nop}}<noinclude></noinclude> n98bq87z4zgrlzs7ido8jmzc5yz7geb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/175 250 626060 1961526 1945150 2026-09-02T13:54:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூர்க்கேலா|131|உரூவன்சோரி மலைத்தொடர்}}</noinclude><section begin="உரூர்க்கேலா"/> {{dhr}} <b>உரூர்க்கேலா</b>: இங்கு இரும்பு-உருக்கு ஆலையொன்று இயங்குகிறது. இந்திய அரசின் பொதுத் துறையால் செருமானியரின் பொருளுதவியுடன் இத்தொழிற்சாலை செயற்படுகின்றது. உரூர்க்கேலா (Rourkela) இரும்பு-உருக்குத் தொழிற்சாலையை இந்திய அரசு செருமானிய நிறுவனமான குரூப்-தெமாகு (M/s. Krupp and Demag) என்பதுடன் இணைந்து உருவாக்கியது. இந்திய அரசு உரூ 171 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தது. இத்தொழிற்சாலை 1959, பிப்பிரவரியிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கியது. இத்தொழிற்சாலையில் உருவாரும் ஒருவகைச் சிறப்பு உருக்கு, பேருந்துக் தொழில்களுக்கும் இருப்புப் பாதைகளுக்கும் கப்பல் தொழிலுக்கும் உதவுகிறது. இத்தொழிற்சாலைக்கு வேண்டிய கச்சாப்பொருள்கள் உருர்க்கேலா, கர்கலி-பொக்காரோ (Kargali-Bokaro), சாரியா (Jharia), பிச்மித்திராபூர்-அத்தியாபரி (Birmitrapur-Hathiabari), மந்தோசா அணை (Mandoja Dam) போன்ற இடங்களிலிருந்து கிடைக்கின்றன. உரூர்க்கேலாவில் சிறப்புச் செயற்கை உரத்தொழிற்சாலையும் இயங்கி வருகிறது. உரூர்க்கேலா ஒரிசா மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ளது. இதன் மக்கள்தொகை 3,21,326 (1981). உரூர்க்கேவா உருக்கு நகரியம் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளும் உள்ளூர் குடியிருப்புகளும் அவற்றின் மக்கள்தொகையும் இதனுள் அடங்கும்.{{Right|இரா.அ.}} <section end="உரூர்க்கேலா"/> <section begin="உரூவன்சோரி மலைத் தொடர்"/> {{dhr}} <b>உரூவன்சோரி மலைத் தொடர்</b> கிழக்கு ஆப்பிரிக்காவில் உகாண்டா (Uganda) நாட்டிற்கும் செய்ரே (Zaire) நாட்டிற்கும் எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் உலக நடுக்கோட்டிற்கு வடபால் அதன் அண்மையில் அமைந்துள்ளது. உரூவன் சோரிமலைத்தொடர் (Ruwenzori Range) தென்வடலாக 120 கி.மீ. நீளமும் ஏறத்தாழ 65 கி.மீ. அகலமும் கொண்டது. இதன் வடக்கில் ஆல்பர்ட்டு (Albert) ஏரியும் தெற்கில் எட்வர்டு ஏரியும் அமைந்துள்ளன. உரூவன் சோரி மலைத்தொடரின் மிக உயர்ந்த பகுதிகளில் பனிமூடிய உச்சிகளும் பனிப்பாறைகளும் உள்ளன. இப்பகுதியை ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இவை அனைத்தும் 4200 மீட்டருக்கு மேல் உயர்மானவை. இவற்றை ஆழமான கெவிமலைப்பள்ளங்கள் பிரிக்கின்றன. இசுடான்லி மலைத்திரள் அவற்றுள் மிக உயரமானது. மார்சிரித்தா மலையுச்சி எனப்படும் இச்சிகரம் 5109 மீட்டர் உயரமானது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 175 |bSize = 375 |cWidth = 262 |cHeight = 176 |oTop = 239 |oLeft = 46 |Location = center |Description = }} {{center|உரூவன்சோரி மலைத்தொடர்}} {{nop}}<noinclude> <b>வா.க. 5-9.அ</b></noinclude> 1o3pgb6bf6495b5gydjmn90x3rwqjgv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/176 250 626191 1961527 1945154 2026-09-02T14:03:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரேனசு|132|உரை}}</noinclude>உரூவன்சோரி மலைத்தொடரின் 2700 மீ.க்கு மேல் உயரமான பகுதிகள் பெரும்பாலும் மேகக்கூட்டங்களால் எப்போதும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஈரக் கசிவு மிகுதி; மழையும் ஏறத்தாழ 500 செ.மீ. க்கும் மிகுதியாகப் பொழிகிறது. மிகுதியான மழையினால் பெருக்கெடுத்தோடும் அருவிகள் கெவிப்பள்ளங்களை ஏற்படுத்திக் கொண்டு விரைந்து பாய்கின்றன. மேற்குத் திசையில் ஓடும் ஆறுகள் செம்லிக்கி (Semliki) ஆறு வரை வடிகாலாய் அமைந்து எட்வர்டு, ஆல்பர்ட்டு ஏரிகளை இணைக்கின்றன. கிழக்குத் திசையில் பாயும் ஆறுகள் வேகம் குறைந்தவை. அவற்றுள் பல சார்சு ஏரியில் (Lake George) கலக்கின்றன. பின்னர், கசிங்கா (Kazinga) கால்வாய் மூலமாகவும், எட்வர்டு ஏரி வழியாகவும் நீர் ஓடி செம்லிக்கி ஆற்றில் சேர்கின்றன. உரூவன்சோரி மலைத்தொடரில் பல்வகையான பயிர் பச்சைகளைக் காணலாம். மலைத்தொடரின் தாழ்ந்த சரிவுகளில் முன் காலத்தில் காடுகள் இருந்தன. ஆனால் இப்போது 2300மீ. வரை புற்றரைகள் நிரம்பியுள்ளன. இச்சரிவுகளின் சில பகுதிகளில் வேளாண்மை செய்யப்படுகின்றது. புற்றரைகளுக்கு மேலே ஏறத்தாழ 3300மீ. அளவில் அடர்ந்த காடுகளையும் மூங்கில் புதர்களையும் காணலாம். அதைவிட உயர்ந்த பகுதிகளில் ஒருவகை மரப்புதர்களும், உலோப்லியாசு (Lobelias) என்னும் ஒருவகை மலர்ச் செடிகளும் புற்களும் வளர்ந்துள்ளன. அதற்கும் மேலான உயரத்தில் பனி மூடிய பகுதிகளைக் காணலாம். உரூவன்சோரி மலைத்தொடரைப் பற்றிப் பண்டைய நிலநூல் ஆசிரியரான தாலமி (Ptolemy) குறிப்பிடும்போது, நைல் ஆறு இம்மலைத் தொடரிலிருந்து உற்பத்தியாவதாக எழுதியுள்ளார். இது உண்மையன்று. இத்தொடரை முதன்முதலாகக் கண்டறிந்து ஆய்வு செய்த முதல் ஐரோப்பியர் என்றி மார்ட்டன் இசுடான்லி (Henry Morton Stanley) ஆவார். அவரே இதற்கு உரூவன்சோரி எனப் பெயரிட்டார். உரூவன்சோரி என்னும் பெயருக்கு மழையை உருவாக்குவது என்பது பொருள். உரூவன்சோரி மலைத்தொடரின் கிழக்கு அடிவாரத்தில் செம்பு, கோபால்ட்டு (Gobalt) போன்ற உலோகங்கள் கிடைக்கின்றன.{{Right|இரா.அ.}} <section end="உரூவன்சோரி மலைத் தொடர்"/> <section begin="உரேனசு"/> {{dhr}} <b>உரேனசு</b> கிரேக்கப் புராணங்களால் கடவுள்களின் முதல் தந்தை எனக் குறிக்கப்படுபவர். ஊழிக் காலத்தில் கேயா (Gaea) என்னும் நிலக்கடவுள், உரேனசையும் (Uranus) மலைகளையும் கடல்களையும் தோற்றுவித்தார். உரேனசு என்பதற்குச் சொர்க்கம் (Heaven) என்பது பொருள். இவர் வானுலகத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். உரேனசுக்கும் கேயாவுக்கும் தைட்டன்சு (Titans), சைகிளோப்சு (Cyclopes), எகாடோன்சேர்சு (Hecatoncheires) என்னும் மூவர் பிறந்தனர். உரேனசு தமக்குப் பிறந்த பிள்ளைகளை வெறுத்தார். இதனால், அவரைப் பழிவாங்க கேயா தம் பிள்ளைகளிடம் முறையிட்டாள். தைட்டன்சு என்பவன் மட்டும் தாயின் வேண்டுகோளை ஏற்று உரேனசைப் பழி வாங்கினான். உரேனசின் உடலிலிருந்து கொட்டிய குருதியிலிருந்து மூன்று பெண்கள் தோன்றினர். இவர்கள் பழிக்குப் பழி வாங்கும் (Furies) தெய்வ மகளிர் எனக் கிரேக்கப் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகின்றனர். பண்டைய கிரேக்கத்தில் உரேனசு வழிபடும் கடவுளாகக் கருதப்படவில்லை.{{Right|சு.இரா.}} <section end="உரேனசு"/> <section begin="உரை"/> {{dhr}} <b>உரை</b> என்பதன் பொருள் உருப்பெற்று விளங்குவது என்பதாகும். அதாவது, தெளிவாகப் பலர் விளங்கிக் கொள்ளுதற்கு இயலாமல், நுண்மையாக அமைந்து நிற்கும் சொல், சொற்றொடர்களை யாவர்க்கும் விளங்குமாறு பருமையாக உருப்படுத்தி அமைப்பதாகும். உரை என்பது பாட்டு முதலாகிய எழுவகைச் செய்யுளையும் விளக்கிக் காட்டும் கருவியாகும். நூல் எனப்படுவதாகிய இலக்கணச் செய்யுட்களை (சூத்திரங்கள்) உரை என்னும் கருவியைக் கொண்டே விளங்கிக்கொள்ள இயலும். ஆதலின், உரை என்பது சிறப்பாக இலக்கணச் சூத்திர உரைகளையும், பொதுவாக ஏனைய இலக்கிய உரைகளையும் சுட்டி வழங்கும். தொல்காப்பியம் நூல் என்பதற்கு இலக்கணங் கூறுமிடத்து, ‘உள்நின்றகன்ற உரையொடு பொருந்தி, நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே’ (தொல்-செய்-இளம்-159) என்றும், சூத்திரம் என்பதற்கு இலக்கணங் கூறுமிடத்து, ‘சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங்காலை உரையகத்தடக்கி’ (தொல்-மரபியல்-இளம் 102) என்றும், உரை பற்றி விதி கூறுமிடத்து, ‘சூத்திரத்துட் பொருளன்றியும் யாப்புற, இன்றியமையா தியைபவையெல்லாம், ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே’ (தொல், மர. இளம். 105) என்றும் கூறும். பொதுவாக உரை பாடம், கருத்து, சொல்வகை, சொற்பொருள், தொகுத்துரை, எடுத்துக்காட்டு, வினா, விடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரியவசனம் என 14 வகையாக அமைந்து நடைபெறும் என்பர் (நன்-பாயிரம்-21).{{nop}}<noinclude></noinclude> thjjqk3d69hkznqs0nzivgibp3mfieq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/177 250 626192 1961530 1945156 2026-09-02T14:16:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரை|133|உரைக் கோவை}}</noinclude>அவற்றுள், பாடம் என்பது யாப்பு நெறியானும் எழுத்தியல் முறையானும் புணர்ந்து நிற்கும் தொடர்களைச் செஞ்சொல்லாகப் பிரித்தமைத்தலாகும். சொல்வகை என்பது சொற்களை வகைப்படுத்திக் கூறுதல். இதனைக் கண்ணழித்தல் என்றும் கூறுவர். சொற்பொருள் என்பது பதவுரை, தொகுத்துரை என்பது பொழிப்புரை. சொற்பொருள் விளக்கத்திற்கு வேண்டியவற்றையெல்லாம் விரித்துக் கூறுதல் விசேடமாம். வேற்றுமை உருபு முதலியவற்றை விரித்துச் சொல்லுதல் விரிவு என்பதாகும். தலைப்பாக அமைந்துள்ள அதிகாரத்திற்கு ஏற்பப் பொருள் கூறுதல் அதிகார அமைதியாகும். வினா ஐயம் பற்றியும் மறுப்புப் பற்றியும் எழும். ஐயங்களைந்து ஒன்றை உறுதி செய்து கூறுதல் துணிவு ஆகும். முன்னோர் (ஆசிரியன்மார்) கூறிய விதிகளை அப்படியே எடுத்து இணைத்துரைத்தல் ஆசிரிய வசனமாகும். ஆசிரிய வசனத்தை மேற்கோள் எனவும் கூறுப. இலக்கண நூலுரைகள் பெரும்பான்மையும் காண்டிகையுரை என்றும் அகலவுரை (விருத்தியுரை) என்றும் இருமுறையாக அமைந்துள்ளன. கருத்து, சொற்பொருள், எடுத்துக்காட்டு, வினா, விடை ஆகிய ஐந்து கூறுகளொடு கூடி அமைந்ததைக் காண்டிகை உரை என்பர் (நன்.பா.22). நூல் நுதலிய பொருளையெல்லாம் நன்கு தெளிவுபடுத்த வேண்டியவற்றை விரித்து, மேற்கூறிய 14 வகையானும் விளக்கமுறப் பிற நூற்கருத்துகளையும் ஒப்பிட்டுக் காட்டி, தன் கருத்தையும் கூட்டி ஐயந்திரிபற விரிவாக அமைந்ததை அகலவுரை என்பர் (நன்.பா.23). பொதுவாக உரை எனின் அது அகலவுரையையே குறிக்கும். நல்லாசிரியன்மார் செய்த நூல்களும் செய்யுள்களும் காலத்தை வென்று இறப்பின்றி வழங்கி வருதலான், காலந்தொறும் அவற்றிற்குப் பேரறிஞர் உரை கண்டு கூறிவருகின்றனர். அவ்வுரையாளர் தமக்கு முன்னனயுரையாளர் தம் உரையுள் நிறைகாணுமிடத்து அவ்வுரையை மெய்யுரை, வாயுரை (வாய்மையுரை), நல்லுரை, செவ்வுரை என்றும், குறை காணுமிடத்து வல்லுரை, வலிந்துரை, மயக்குரை, போலியுரை, குற்றுறை (குறுகிய - குற்றமுள்ள உரை), திரிபுரை, கட்டுரை (தாமே கட்டிக் கூறும் உரை), வெற்றுரை, வெள்ளுரை என்றும் கூறுவர். அங்ஙனம் கூறுதல் உரை மரபாகக் காணப்படுகிறது. ஒருவர் கொள்கையினை மற்றொருவர் பொருந்தாதென விளக்கும் உரையை மறுப்புரை என்பர். ஒரு மொழிக்குரிய பண்பாட்டடிப்படையிற் கூறப்படும் உரையை மரபுரை என்ப. முன்னையோர் கூறியவற்றுள் சில ஆராயுங்கால் பொருந்தாதவை எனத் தோன்றினும் அவற்றை அவ்வாறே கொண்டு கூறுதலும் மரபுரையேயாம். பயின்று வாராத சொற்களுக்கும் திரிசொற்களுக்கும் மட்டும் பொருள் கூறி, வேண்டுமிடந்து மட்டும் மேற்கோள் காட்டிக் கருத்துரைகளை ஆங்காங்கே கூட்டி உரைக்கும் உரையைக் குறிப்புரை என்பர். பதவுரையோ பொழிப்புரையோ கூறாமல் பாடற்கருத்தினை எளிய இனிய இயற்சொற்களால் தொகுத்துக் கூறுதலைத் தெளிவுரை என்பர். பல் நூல்களொடு ஒப்பிட்டு நடுவுநிலையொடு நோக்கி ஒன்றன் நிறையையும் குறையையும் தக்க காரணமும் மேற்கோளும் காட்டி விரித்துக் கூறுதலை ஆய்வுரை என்பர்.{{Right|ச.பா.}} <section end="உரை"/> <section begin="உரைக் கோவை"/> {{dhr}} <b>உரைக் கோவை</b> உயர்கல்வியில் பயன்படுத்தப்படும் ஒரு கற்பித்தல் முறை. உரைக்கோவையில் (Symposium) ஒன்றுக்கு மேற்பட்ட அறிஞர்கள் அல்லது துறை வல்லுநர்கள் பேசுவர்; தம் கருத்துகளைப் பிற அறிஞர்களுடன் பங்கிட்டுக் கொள்வர். உரைக்கோவையில் பங்கேற்கும் அறிஞர்கள் அனைவரும் ஒரே பொருளைப் (Subject) பற்றி வெவ்வேறு கோணங்களில் கருத்துரைத்துப் பேசலாம்; அல்லது ஒவ்வோர் அறிஞரும் ஒரே பொருளில் பொதிந்துள்ள வெவ்வேறு கூறு அல்லது தன்மைகளைப் (Aspect) பற்றியும் பேசலாம். கல்வி என்ற தலைப்பில் பள்ளி முன் தொடக்கப் பள்ளிக் கல்வி, தொடக்கப் பள்ளிக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, மேல்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, தொழிற் கல்வி என வெவ்வேறு கோணங்களில் அறிஞர்கள் பேசுவதும், பல்கலைக்கழகக் கல்வி என்னும் தலைப்பில் ஆராய்ச்சி (Research) கற்பித்தல் (Teaching), நிருவாகம் (Administration), நிதி (Finance), மாணவர் சேர்க்கை (Enrolmeat), வேலை வாய்ப்பு (Employment) ஆகிய பவ்வேறு கூறுகள் குறித்து அறிஞர்கள் கருத்துரைப்பதும் உரைக்கோவைக்கு எடுத்துக்காட்டாகும். ஒரு சிக்கலான பொருள் குறித்து வல்லுநர்களின் ஆழ்ந்த கருத்துகளை வெளிக் கொணர்வதும், குறிப்பிட்ட பொருளில் துறையறிவினை மேலோங்கச் செய்வதுமே இதன் தலையாய நோக்கம். உரைக் கோவையில் பங்கேற்பவர் வல்லுநர்கள் மட்டுமே. உரைக் கோவை கேட்கவருவோர் கருத்துரைத்துப் பங்கேற்பதில்லை. அவர்கள் கருத்துகளைச் சேகரிக்க வரும் என்ற வெறும் பார்வையாளர்களே. உரைக்கோவை என்ற கற்பித்தல் முறையால் உயர்கல்வி பயிலும் மாணவர்-<noinclude></noinclude> bzmd2cvfnu0s9mpqfyf2npegiukqaqy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/178 250 626193 1961532 1946123 2026-09-02T14:24:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரை கடிலகம்|134|உரைகள்}}</noinclude>கள் பல்வேறு கோணங்களில் அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு, ஒரு குறிப்பிட்ட பாடத்துறையில் ஆழ்ந்த செயலறிவையும் சிந்தனையையும் பெற இயறுகிறது. பல்கலைக்கழகங்களில் உரைக்கோவை ஒரு கற்றல் முறையாகவும் பயன்படுகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சீர்தூக்கியறியும் சிந்தனைத் திறனையும் ஒரே பொருளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தறியும் பண்பினையும் வளர்க்கும் நோக்கத்துடன் உரைக்கோவை முறையினைப் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்தி வருகின்றன.{{Right|ஜெ. கோ. பி.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Haddan, E. E.,</b> Evolving Instruction, Collier Macmillan, London, 1976.<br> <b>Leonard, J.M.,</b> et. al., General Methods of Effective Teaching, Crowell Company, New York, 1978. <section end="உரைக் கோவை"/> <section begin="உரை கடிலகம்"/> {{dhr}} <b>உரை கடிலகம்</b> என்பது உமறுப்புலவரின் சீறாப்புராணத்தில் உள்ள நபியவதாரப் படலத்திற்கு விளக்க உரை நூலாகும். இதனை எழுதப்பட்ட எழுதியவர் பரங்கிப்பேட்டையைச் சார்ந்த காதிரசனா மரைக்காயார். அவர் உரைகடிலகத்தை கி.பி.1890-இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இந்த உரைநூல் தோன்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நபியவதாரப் படலத்திற்கு வா. குலாம் காதிறு நாவலர் ஓர் உரையைக் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் பயன்படும் நோக்கில் எழுதி வெளியிட்டார். நாவலரின் உரையை மறுக்கும் நோக்கில் உரைகடிலகம் எழுதி வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியர் ஒவ்வொரு பாடலுக்கும் உரை எழுதும்போது இதன் முந்தைய நூலான நாவலரின் உரையைச் சுட்டிக்காட்டியே எழுதியுள்ளார்; இடங்களில் நாவலரின் உரை தவறு என்பதை வலிந்து சுட்டிக்காட்ட வேண்டி, பல செய்யுட்களின் சொற்களைத் தவறாகப் பிரித்துப் பொருள் கூறியுள்ளார். இவ்வாறு அவர் தம் பிழையறியாது பிரித்துப் பொருள் கூறுமிடத்து, முந்தைய உரையாசிரியருக்கு இது தெரியவில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறார். தம் உரையைக் குறைகூறும் நோக்கில் காதிரசனா மரைக்காயர் செய்த தவறுகளை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டும் நோக்கில், குலாம் நாவலர் மீண்டும் அதே படலத்திற்கு ‘உரைகடிலக நிராகரணம்’ என்னும் பெயரில் ஓர் உரை எழுதியுள்ளார், இவ்வுரையில் உரைகடிலக ஆசிரியர் செய்த பிழைகளை விரிவாகக் குலாம்காதிறு நாவலர் சுட்டிக்காட்டியுள்ளார்.{{Right|சி.ந}} <section end="உரை கடிலகம்"/> <section begin="உரைகள்"/> {{dhr}} <b>உரைகள் (அளவை இயல்)</b>: மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகள் புறவுல கோடு தொடர்பு கொண்டு உணர்வுகளைத் தருகின்றன. மனம் இவ்வுணர்வுகளைக் கோவைப்படுத்தி செய்கிறது. இம்முடிவுக்கு ‘அளவையியல் தீர்ப்பு’ என்பது பெயர். ஒரு மலரின் மணம், நிறம், வடிவம், மென்மை ஆகிய புலன் உணர்வுகளை ஒன்று சேர்த்து, அது ஓர் உரோசாமலர் என்று மனம் உறுதி செய்கிறது. மனத்துள் நிகழும் இவ்வுறுதி மொழிவாயிலாகவோ சில குறியீடுகள் வாயிலாகவோ வெளிப்படும்போது உரை (Proposition) தோன்றும். (எ-டு) ‘சில அறிஞர்கள் ஆசிரியர்களாக இருக்கின்றனர்’ என்பது. இது மொழிவாயிலாக வரும் உரை 4 +3=7 என்பது குறியீடுகளால் அமைந்த உரை. உரை சிந்தனையின் அடிப்படை அலகு. ஒரு சிந்தனைத் தொகுதியைப் பகுத்துக் கொண்டே போனால் அது உரையில் முடியும். அதே போல் தொடர்புள்ள உரைகளைத் தொகுத்தால் சிந்தனை முழுமை பெறும். சிந்தனையை அலகிட்டுப் பார்க்கும்போது என்பதைத் தான் அது ஏற்புடையதா இல்லையா தெளிய முடியும். எனவே சிந்தித்த முடிவுகளைச் செம்மையாக வெளியிடவும் வெளியிடப்பட்ட முடிவுகளை ஆய்ந்திடவும் உரைகள் பற்றிய அறிவு இன்றியமையாததாகிறது. <b>உரையும் மொழியும்</b>: உரை மொழிவாயிலாக வாக்கிய வடிவில் வெளியிடப்பட்டாலும் அது மொழியிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. உரை சொற்களைக் குறிப்பதில்லை; சொற்கள் உணர்த்தும் பொருளைக் குறிக்கிறது. ஒரே உரையை வேற்றுமொழி வாக்கியங்களில் கூறும்போது மொழிக்கேற்பச் சொற்களும் சொல்முறையும் வேறுபடும். ஆனால், அவ்வாக்கியங்களின் பொருள் மாறாது. ‘உணவு பசியைப் போக்கும்’ என்பது தமிழில் அமைத்த உரை. இதனைப் பிற மொழிகளில் வெளியிட்டால் சொற்களும் வாக்கிய வடிவும் வேறுபடும். ஆனால், அவ்வாக்கியங்களின் பொருள் வேறுபடாது. வேறுபடாத வாக்கியப் பொருளை உரையென அளவையியல் சுட்டுகிறது. <b>உரையும் வாக்கியமும்</b>: வாக்கியங்கள் பல வகைப்படும். எல்லாவகை வாக்கியங்களுக்கும் உண்மை பொய் என்ற மதிப்பீடு கிடையாது. ‘தேன்மொழி<noinclude></noinclude> jrs8ehkqhj7w7qdwp7jzr94x3tjvejh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/179 250 626194 1961535 1878988 2026-09-02T14:31:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைகள்|135|உரைகள்}}</noinclude>கடைக்குச் சென்றாளா?’, ‘கோபால்! கதவைத்திற’, ‘நீவீர் நீடுவாழ்க!’ என்ற வாக்கியங்கள் சுட்டும் வினா, கட்டளை, வாழ்த்து போன்றவைக்கு உண்மை! பொய் என்ற மதிப்பீடு தரவியலாது. செய்தி வாக்கியம் மட்டுமே உண்மை/பொய் என்ற மதிப்பீட்டைப் பெறும் தகுதியுடையது. ‘செங்கதிர் கடைக்குச் சென்றான்’ என்பது ஒரு செய்தி வாக்கியம். இவ்வாக்யம் உணர்த்தும் பொருள், செங்கதிர் கடைக்குச் சென்றிருந்தால் உண்மை என்றும், செல்லவில்லை என்றால் பொய் என்றும் மதிப்பிடப் பெறும். உண்மை அல்லது பொய் என்ற ஒரு மதிப்பீட்டைப் பெறுகிற செய்தி வாக்கியம் மட்டுமே அளவையியலில் உரையாகும் தகுதியுடையது. உண்மை/பொய் என்ற மதிப்பீடு அளவையியல் உரையின் அடிப்படைப் பண்பு. <b>உரை வகைகள்</b>: அளவையியல் உரைகள் பல வகைப்படும். உரையின் வடிவம், உரையில் இடம் பெறும் பதங்களின் இயல்பும் எண்ணிக்கையும், பதங்களுக்கிடையே உள்ள தொடர்பு, உண்மை/பொய் மதிப்பீட்டு முறை என்பனவற்றை அளவுகோலாக்கி உரையை வகைப்படுத்துகின்றனர். உரையை உண்மையா பொய்யா என்று முடிவு செய்ய இரு வழிகள் உண்டு. உரையின் பொருளைப் பகுத்தாய்ந்து முடிவு செய்வது ஒரு வழி; அனுபவத் தொகுப்போடு பொருத்திப் பார்த்து முடிவு செய்வது மற்றொரு வழி இவ்விரு முறைகளையும் அளவுகோலாக்கி. உரைகளைப் பகுப்புரை, தொகுப்புரை என இரு வகைப்படுத்தலாம். <b>பகுப்புரைகள்</b>: அனுபவத்திற்குச் செல்லாமல் ஆராய்ச்சியால் மட்டுமே மதிப்பீடு பெறுபவை பகுப்புரைகள் (Deductive Logic). உரையின் வடிவம், பொருள் ஆகியவற்றைக்கொண்டு பகுப்புரையின் உண்மை/பொய் மதிப்பீட்டைக் காணலாம். மணமாகாதவர் எவரும் ‘மணந்து கொண்டவர் அல்லர்’ என்ற உரை தனக்குத்தானே உண்மை என்ற மதிப்பீடு பெறுகிறது. அனுபவத் தொகுதியோடு பொருத்திப் பார்த்து மதிப்பீடு செய்யவேண்டிய தேவையில்லை. அதேபோல், ‘மலடியொருத்தி தான் பெற்ற பிள்ளைக்குப் பால் கொடுத்தாள்’ என்ற உரை தனக்குத்தானே பொய் என்ற மதிப்பீட்டைப் பெறுகிறது. இவ்வுரைகளை மதிப்பீடு செய்வதற்குச் சொற்களின் பொருளும் அச்சொற்கள் அமைந்துள்ள வடிவமும் தெரிந்தாலே போதும். இத்தகைய உரைகளைப் பகுப்புரைகள் என்பர். கணக்கியலிலும் அளவையியலிலும் பகுப்புரைகள் மிகுதியாக இடம் பெறுகின்றன. <b>தொகுப்புரைகள்</b>: உலகின் அனுபவத்தைக் கொண்டு உண்மை/பொய் என்ற மதிப்பீடு பெறுபவை தொகுப்புரைகள் (Inductive Logic). ‘கோள்கள் நீள்வட்டத்தில் சுற்றுகின்றன’, ‘காந்தக்கல் இரும்புத் துண்டை ஈர்க்கும்’ என்பன போன்ற உரைகள் உலகியல் அனுபவத்தால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இவ்வுரைகளின் கருத்தும் உலகியல் அனுபவமும் ஒத்திருந்தால் உரை உண்மை என்றும், வேறாயின் உரை பொய் என்றும் கருதப்படும். இத்தகைய உரைகளைத் தொகுப்புரைகள் என்பர். கணக்கியல், அளவையியல் தவிர மற்ற அறிவியல்களில் தொகுப்புரைகள் இடம் பெறுகின்றன. <b>பண்டைய உரைவகைகள்</b>: எழுவாய்-பயனிலைப் பதங்களுக்கிடையே நிலவும் தொடர்பின் தன்மையைக் கொண்டு அரிசுடாட்டில் உரைகளை வகைப்படுத்துகிறார். ஓர் உரை எதைப்பற்றிப் பேசுகிறதோ, அது எழுவாய்; எழுவாயைப் பற்றி அந்த உரை என்ன சொல்கிறதோ அது பயனிலை. எழுவாய் - பயனிலைப் பதங்களின் தொடர்பின் தன்மையைக் கொண்டு பண்டைய அளவையியல் அறிஞர்கள் உரைகளை மூன்று வகைகளாக்கினர். அவை சார்பற்ற உரை, சார்புரை, பிரிநிலை உரை எனப்படும். <b>சார்பற்ற உரை</b>: கட்டுப்பாடு ஏதுமின்றி எழுவாய் - பயனிலை தொடர்பு கொண்டால் அது சார்பற்ற உரை. இருபதங்களுக்கு இடையே உள்ள தொடர்பு வேறொரு பதத்தைச் சார்ந்ததில்லை என்பதால் அவ்வுரை ‘சார்பற்ற உரை’ என்ற பெயர் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, ‘மனிதர்கள் அனைவரும் சிரிக்கத் தெரிந்தவர் ஆவர்’, ‘பெண்கள் எவரும் தேவதைகள் அல்லர்’ என்பனவற்றைக் கூறலாம். இவற்றில் வேறொன்றின் துணையின்றி எழுவாய் பயனிலைப் பதங்கள் தொடர்பு கொள்கின்றன. சார்பற்ற உரையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை எழுவாய், பயனிலை இரண்டு பதங்களும், அவற்றை இணைக்கும் ‘ஆகும்/அல்ல’ என்ற இணைப்புறுப்பும், எழுவாய்ப் பதத்தின் அளவினைக் குறிக்கும் ‘அனைத்தும் சில’ என்ற அளவுக் குறிப்பும் ஆகும். <b>சார்புரை</b>: எழுவாய் - பயனிலைச் சொற்கள் வேறொரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுத் தொடர்பு கொண்டால் அவ்வுரைக்குச் சார்புரை என்பது பெயர். ‘வெப்பப்படுத்தப்பட்டால் பொருள்கள் விரிவடையும்’ என்பது சார்புரை. இவ்வுரையில் ‘பொருள்கள்’ என்ற எழுவாயும், ‘விரிவடையும்’ என்ற பயனிலையும் ‘வெப்பப்படுத்தப்படுதல்’ என்ற கட்டுட்பாட்டால் தொடர்புகொள்கின்றன. ஒரு கட்டுப்பாட்டைச் சார்ந்து இவ்வுரையின் தொடர்பு அமைவதால் இதற்குச் ‘சார்புரை’ என்ற பெயர் வழங்குகிறது.{{nop}}<noinclude></noinclude> tu93posxvtknv40m80gtjg9vh3zl6iy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/180 250 626195 1961536 1878993 2026-09-02T14:38:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைகள்|136|உரைகள்}}</noinclude>சார்புரை இரண்டு பகுதிகளால் ஆனது, அவ்விரு பகுதிகளும் இரு நிகழ்ச்சிகளைக் குறிக்கும். அவை முன்னிகழ்ச்சி, பின்னிகழ்ச்சி எனப்படும். முன்னிகழ்ச்சி முதலில் நிகழும் காரணத்தையும், பின்னிகழ்ச்சி பின்னர் விளையும் காரியத்தையும் சுட்டும். முன்னிகழ்ச்சி சார்புரையின் முற்பகுதியாகவும் பின்னிகழ்ச்சி அதன் பிற்பகுதியாகவும் அமைவது இயல்பு. <b>பிரிநிலை உரை</b>: எழுவாய்த் தொகுதி பல பயனிலைகளாகப் பிரிக்கப்பட்டு ஓர் உரை அமையுமானால், அவ்வுரைக்குப் பிரிநிலை உரை என்பது பெயர். ‘மாணவர்கள் கல்லூரிக்கு வீட்டிலிருந்து வருகின்றனர் அல்லது விடுதியிலிருந்து வருகின்றனர்’ என்பது பிரிநிலை உரை. இவ்வுரையில் ‘கல்லூரி மாணவர்கள்’ என்ற தொகுதி இருபகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இப்பகுதிகளுக்குப் பிரிநிலைகள் என்பது பெயர். எழுவாய் ஒவ்வொரு பிரிநிலையோடும் தொடர்பு கொள்வதால் இதற்குப் பிரிநிலை உரை என்பது பெயர். பிரிநிலை உரை எழுவாயும் அதன் பிரிநிலைகளும் என்று இருபகுதிகளைக் கொண்டது. பிரிநிலைகள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். சரியான பிரிநிலை உரையில் ‘முற்றும் நீக்கி’ களாகவும், ‘மொத்தத்தில் முழுமை’யாகவும் இருக்கவேண்டும். <b>சார்பற்ற உரையின் வகைகள்</b>: சார்பற்ற உரையில் பயன்படுத்தப்படும் எழுவாய்ச் சொல்லின் அளவு, எழுவாய் - பயனிலைச் சொற்களிடைக் காணும் தொடர்பின் தன்மை ஆகியவற்றைக் கொண்டு சார்பற்ற உரைகளை வகைப்படுத்துவர். சார்பற்ற உரைகள் 5 வகைப்படும். அவை உடன்பாட்டு நிறையுரை, எதிர்மறை நிறையுரை, உடன்பாட்டுக் குறையுரை, எதிர்மறைக் குறையுரை, ஒற்றையுரை எனப்படும். <b>நிறையுரையும் குறையுரையும்</b>: எழுவாய்ச் சொல் உரையில் முழுமையாகப் பயன்படுகிறதா குறைவாகப் பயன்படுகிறதா என்பதைக் கொண்டு உரையின் அளவு முடிவு செய்யப்படும். எழுவாய்ச் சொல் உரையில் முழுமையாக இடம்பெற்றால் அது நிறையுரை; முழுமைக்குக் குறைவாகப் பேசப்பட்டால் அது குறையுரை. சான்றாக, ‘மனிதர்கள் அனைவரும் இறப்பவராவர்’, ‘பெண்கள் எவரும் தேவதைகள் அல்லர்’ என்பன நிறையுரைகள். இவ்வுரைகளில் ‘மனிதர்கள்’, ‘பெண்கள்’ என்ற எழுவாய்ச் சொற்கள் முழுமை நிறையளவில் பேசப்படுகின்றன. சில உரைகளில் எழுவாய்ச் சொல் முழுமையாகப் பேசப்பட்டிராது. எடுத்துக்காட்டாக, ‘சில ஆசிரியர்கள் அறிஞர்கள் ஆவர்’, ‘சில வழக்கறிஞர்கள் பொய்யுரைப்போர் அல்லர்’ என்பனவற்றைக் கூறலாம். இவ்வுரைகளில் ‘ஆசிரியர்கள்’ ‘வழக்கறிஞர்கள்’ என்ற எழுவாய்ச் சொற்கள் முழுமைக்குக் குறைவாகவே பேசப்படுகின்றன, ‘அனைத்து ஆசிரியர்கள்’ பற்றியும் ‘அனைத்து வழக்கறிஞர்கள்’ பற்றியும் இவ்வுரைகள் குறிப்பிடவில்லை. எனவே, இத்தகைய உரைகள் குறையுரைகள் எனப்படும். <b>உடன்பாட்டுரையும் எதிர்மறை உரையும்</b>: எழுவாய் பயனிலைச் சொற்களின் தொடர்பு இருவகைப்படும். எழுவாய்ச் சொல் பயனிலைச் சொல்லின் உட்புகல் ஒருவகைத் தொடர்பு; பயனிலைச் சொல்லிருந்து எழுவாய் நீங்கல் மற்றொரு வகை தொடர்பு. இத்தொடர்புகள் முறையே ‘உட்புகல்’ ‘வெளிநீங்கல்’ எனப்படும். உட்புகல் தொடர்பமைந்த உரையை உடன்பாட்டுரை யென்றும் வெளிநீக்கத் தொடர்பமைந்த உரையை எதிர்மறை உரையென்றும் கூறுவர். எடுத்துக்காட்டாக, ‘மனிதர்கள் அனைவரும் இறப்பவர் ஆவர்’, ‘சில ஆசிரியர்கள் அறிஞர்கள் ஆவர்’. என்பனவற்றைக் கூறலாம். இவ்வுரைகளில் பயனிலைச் சொல்லோடு எழுவாய்ச் சொல் முழுமையாகவோ பகுதியாகவோ உட்புகுவதைக் காணலாம். இத்தகைய உரைகள் உடன்பாட்டு உரைகள் எனப்படும் ‘பெண்கள் எவரும் தேவதைகள் அல்லர்’, ‘சில வழக்கறிஞர்கள் பொய் பேசுவோர் அல்லர்’ என்ற உரைகளில் எழுவாய்ச் சொல் முழுமையாகவோ பகுதியாகவோ பயனிலைப் பதத்திலிருந்து வெளிநீக்கம் பெறுவதைக் காணலாம். இதுபோன்ற உரைகள் எதிர்மறை உரைகள் எனப்படும். சார்பற்ற உரை ஒவ்வொன்றுக்கும் அளவு, தன்மை என இரண்டு உண்டு. அவ்விரண்டின் அடிப்படையில் உரைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை உடன்பாட்டு நிறையுரை, எதிர்மறை நிறையுரை, உடன்பாட்டுக் குறையுரை, எதிர்மறைக் குறையுரை எனப்படும். இந்நால்வகை உரைகளுக்கும் வரையறுக்கப்பட்ட வடிவமுண்டு இவ்வடிவத்தில் தான் உரைகள் வெளியிடப்பட வேண்டும். உரைகளும் அவற்றுக்கான வடிவமும் பின்வருமாறு: (குறிப்பு: எ - எழுவாய்; ப- பயனிலை) ::உடன்பாட்டு நிறையுரை : ‘எ’ அனைத்தும் ஆகும். ::எதிர்மறை நிறையுரை: ‘எ’ எதுவும் ‘ப’ ஆகா.{{nop}}<noinclude></noinclude> 529wmk76y4tbdtwhm9xe8eioc7ap2kq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/181 250 626196 1961540 1878998 2026-09-02T14:48:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைகள்|137|உரைகள்}}</noinclude>::உடன்பாட்டுக் குறையுரை : ‘எ’ சில ‘ப’ ஆகும். ::எதிர்மறைக் குறையுரை : ‘எ’ சில ‘ப’ ஆகா. <b>ஒற்றையுரை</b>: தனிப்பட்ட ஒருவரைப் பற்றிப் பேசுகிற உரை ‘ஒற்றையுரை’ எனப்படும். எடுத்துக்காட்டாக, ‘அரிசுடாட்டில் அளவையியலறிஞர் ஆவார்’, ‘காந்தி அடிகள் வன்முறையாளர் அல்லர்’ எனக் கூறலாம். இவ் உரைகள் தனிப்பட்டவர்களைப் பெயர் சுட்டிப் பேசுவதால் இவை ஒற்றையுரைகளாகும். ஒற்றையுரைகள் யாவும் நிறையுரைகளாகக் கருதப்படும். <b>இக்கால உரை வகைகள்</b>: பண்டை அளவையியல் அறிஞர்கள் எழுவாய், பயனிலைச் சொற்களின் அளவுக்கும் அவற்றினிடையே உள்ள தொடர்பின் தன்மைக்கும் முதன்மை தந்து உரைகளை வகைப்படுத்தினர். இக்கால அறிஞர்கள் எழுவாய், பயனிலை என்று கொள்ளாமல், சொற்களின் தன்மை, சொற்களின் தொடர்பு, உரையின் வடிவம் ஆகியவற்றைக் கொண்டு உரைகளை வகைப்படுத்துகின்றனர். <b>தனியுரையும் கூட்டுரையும்</b>: உரைகள் பொதுவாக இருவகைப்படும். அவை தனியுரை, கூட்டுரை எனப்படும். இரண்டு சொற்களும், அவற்றுக்கிடையே எளியய தொடர்பும் இருந்தால் அது தனியுரை எனப்படும். தனியுரைகள் இரண்டும் இரண்டுக்கு மேலும் சேர்ந்தால் அது கூட்டுரை எனப்படும். தனியுரை நான்கு வகைப்படும். அவை எழுவாய் அற்ற உரை, எழுவாய்-பயனிலை உரை, இன-உறுப்பு உரை, தொடர்பு உரை ஆகியன. <b>எழுவாய் அற்ற உரை</b>: விருப்பு, வியப்பு, அச்சம், சினம் போன்ற உணர்வுகள் மேலிடும்போது கருத்துகள் விரைந்து வெளிவரும். அப்போது பயனிலை மட்டுமே குறிப்பிடப்படுகிறது. எழுவாய் இல்லை என்றாலும் குரல் ஒலியும் தொனியும் பொருளைத் தெளிவுபடுத்திவிடும். செய்திகளை வெளிப்படுத்தும் வாக்கியங்கள் எல்லாம் உரைகளே என்னும் இக்கால அளவையியல் கருத்துப்படி எழுவாய் அற்ற இவ்வாக்கியங்களும் உரைகளே. எடுத்துக்காட்டாக, ‘ஐயோ! தீ!’ என்றும் ‘திருடன்! திருடன்!’ என்றும் வெறும் பயனிலையைச் சொல்லிக் கத்துகின்றனர். கேட்கிற பிறரும் பொருளைப் புரிந்து கொள்கின்றனர். ‘கூரையின் மேல்காணப்படுவது தீ ஆகும்’, ‘அதோ ஓடுகிறவன் திருடன் ஆவான்’ என்று எழுவாய் வைத்துச் சொல்லப்படும் உரை அச்சூழ்நிலைக்குப் பொருந்தாது. <b>எழுவாய்-பயனிலை உரை</b>: பயனிலை என்பது ஒன்றின் பண்பை அல்லது குணத்தைக் குறிக்கும். எழுவாய், அதன் குணம் என்ற இரு சொற்கள் ஓர் உரையில் தொடர்பு கொண்டால் அது எழுவாய்-பயனிலை உரை எனப்படும். எடுத்துக்காட்டாக, ‘இந்தத் தாளின் நிறம் வெண்மை’, ‘வணிகர்களுக்கு நேர்மை இல்லை’ எனக் கூறலாம். இவை எழுவாய்- பயனிலை உரைகள். <b>இன-உறுப்பு உரை</b>: ஓர் இனமும் அதன் உறுப்பும் ஆகிய இருசொற்கள் தொடர்புகொள்ள அமைவது இன-உறுப்பு உரை. எடுத்துக்காட்டாக, ‘என் நண்பன் ஒரு மாணவன்’ என்பதைக் குறிப்பிடலாம். ‘மாணவன்’ என்ற இனத்தில் என் நண்பன் ஓர் உறுப்பினன் என்பதை இவ்வுரை காட்டுகிறது. சில இடங்களில் ஓர் இனமும் அதன் உள் இனமும் தொடர்புபடுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, ‘சைவர்கள் அனைவரும் இந்துக்கள்’ இதுவும் இன- உறுப்பு உரையாகும். இவ்வுரையில், ‘இந்துக்கள்’ ஒரு பெரும் இனம்; ‘சைவர்கள்’ ஓர் உள் இனம். இக்காலக் குறியீட்டளவை, உரைகளைக் குறியீடுகள் மூலம் வடிவமைக்கிறது. இனத்தைக் குறிக்க ‘க’, ‘ச’, ‘ட’, ...... என்ற உயிர்மெய் எழுத்துகளையும், உறுப்பைக் குறிக்க ‘அ’, ‘உ’ ..... என்ற உயிர் எழுத்துக்களையும் பயன்படுத்தலாம். ‘∈’ என்ற குறியீடு ‘இதில் ஓர் உறுப்பு’ என்ற பொருள் தரும். இக்குறியீடுகளைப் பயன்படுத்தி, ‘என் நண்பன் ஒரு மாணவன்’ என்ற உரையை வடிவமைத்தால், ‘அ ∈ க’ (‘அ’, ‘க’ வில் ஓர் உறுப்பு) என்றமையும். சிங்கம் (எ-டு) தமிழ் ஓர் இலக்கியமொழி அ ∈ க, சிங்கம் வீட்டு விலங்கன்று அ ∈ க. இங்கு (- -) என்ற குறியீடு ‘அன்று’ என்று பொருள்படும். <b>தொடர்புரைகள்</b>: சொற்களுக்கு முதன்மை தாராமல், சொற்களின் இடம், தொடர்பின் தன்மை, தொடர்பின் போக்கு என்பனவற்றுக்கு முதன்மை தரும் உரைகள் தொடர்புரைகள் ஆகும். இவ்வகை உரைகள் இடம்பெறும் சொற்களின் எண்ணிக்கைக்கேற்ப இருசொல், மூச்சொல், நாற்சொல் தொடர்பெனப் பெயர்பெறும். தொடர்பு ஒரு சொல்லிலிருந்து தொடங்கிப் பிற சொற்களுக்குச் செல்லும். இதனைத் தொடர்பின் போக்கு அல்லது திசை என்பர். எந்தச் சொல்லிலிருந்து தொடர்பு தொடங்குகிறதோ அது தொடர்பு கொள் சொல் என்றும், எந்தச் சொல்லுக்குத் தொடர்பு செல்கிறதோ அது தொடர்புபடு சொல் என்றும் சொல்லப்படும். ‘தேசிய வருவாய் பாதிப்பது வாழ்க்கைத் தரத்தை’ என்பது ஒரு தொடர்புரை. இவ்வுரையில் ‘தேசிய<noinclude></noinclude> pzaxdx5ym8uxsvb0qee63ib2hk3ouh0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/182 250 626198 1961542 1879005 2026-09-02T15:00:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைகள்|138|உரைகள்}}</noinclude>வருவாய்’ என்பது தொடர்பு கொள்சொல்; ‘வாழ்க்கைத்தரம்’ என்பது தொடர்பு-படுசொல்; ‘பாதிப்பது’ என்பது தொடர்புச்சொல். தொடர்புகொள் சொல்லிலிருந்து தொடர்புபடு சொல்லிற்குத் தொடர்பின் திசை செல்கிறது. குறியீட்டு அளவையியலில் தொடர்புரையைப் பின்வருமாறு வடிவமைக்கின்றனர். ‘அ,இ,உ...’ என்ற எழுத்துகள் சொற்களையும் ‘தொ’ என்ற எழுத்து தொடர்பினையும் குறிக்கும். இரண்டு சொற்கள் கொண்ட உரையின் வடிவம் ‘அதொஇ’ என்றும், இரண்டுக்கு மேற்பட்ட சொற்கள் இருப்பின் ‘தொ (அ,இ,உ)’ என்றும் குறிக்கப்படுகிறது. <b>தொடர்புரையின் வகைகள்</b>: பதங்களின் இடம் மாறும் தன்மையைப் பொறுத்துத் தொடர்புரைகளைச் சமச்சீர், அசமச்சீர், ஐயச்சமச்சீர்த் தொடர்புரை என வகைப்படுத்துகின்றனர். சொற்களை இடம் மாற்றினாலும், தொடர்புசெல் திசையை மாற்றினாலும் உரையின் பொருள் மாறாதிருக்குமானால் அது சமச்சீர் தொடர்புரை எனப்படும். இவ்வுரையில் தொடர்பு கொள் சொல் தொடர்புபடு சொல் ஆகிய இரண்டுக்கும் சமமான இடமும் மதிப்பும் உண்டு. எனவே, சொற்கள் இடம் மாறுவதால் உரையின் பொருள் மாறுவதில்லை. ‘இராமன் சகோதரன் இலக்குவன்’ என்பது சமச்சீர் தொடர்புரை. சமச்சீர் தொடர்புரைகளின் மாற்றம் எப்போதும் ஏற்புடைய அனுமானமாக இருக்கும். சொற்களை இடம் மாற்றினாலும், தொடர்பு செல் திசையை மாற்றினாலும் உரையின் பொருள். முற்றிலும் மாறிவிடும் என்றால் அவ்வுரை ‘அசமச்சீர் தொடர்புரை’ எனப்படும். அசமச்சீர் தொடர்புரையில் சொற்களுக்கு இடம் மாறும் தகுதி கிடையாது. எடுத்துக்காட்டு, ‘இராமன் இராவணனை வென்றான்’ என்பது. இது அசமச்சீர் தொடர்புரை. ‘வென்றான்’ என்ற தொடர்பின் திசை இராமனிலிருந்து இராவணனுக்குச் செல்லுமே தவிர, மாறிச் செல்லாது. சில தொடர்புகளைச் சமச்சீர் என்றோ, அசமச்சீர் என்றோ உறுதியாகச் சொல்ல முடியாது. சில தொடர்புகள் சமச்சீராகச் சில இடங்களிலும், அசமச்சீராகச் சில இடங்களிலும் அமையக்கூடும். அவற்றை ‘ஐயச்சமச்சீர்’ என்பர். எடுத்துக்காட்டு, ‘என் நண்பன் ஒரு பெண்ணை விரும்புகின்றான்’ என்பது. இது ஐயச்சமச்சீர் தொடர்புரை. அந்தப் பெண் என் நண்பனை விரும்பலாம் அல்லது விரும்பாமலும் இருக்கலாம். உறுதிப்படுத்த முடியாதென்பதால் இது ஐயச் சமச்சீர் தொடர்பு எனப்படுகிறது. <b>கூட்டுரைகள்</b>: ஒன்றுக்கு மேற்பட்ட தனியுரைகள் ஒன்று சேர்ந்து அமைகிற உரைக்குக் கூட்டுரை என்பது பெயர். எடுத்துக்காட்டு, ‘ஒருவன் நஞ்சுண்டான் எனின் அவன் இறந்து விடுவான்’ என்பது. இக்கூட்டுரையில், ‘ஒருவன் நஞ்சுண்டான்’, ‘அவன் இறந்துவிடுவான்’ என்று இரண்டு தனியுரைகள் சேர்ந்திருப்பதைக் காணலாம். கூட்டுரையில் இடம் பெறும் தனியுரைகளை, ‘க,ச,ஞ...’ என்ற எழுத்துகளால் குறிக்கலாம். தனியுரைகள் சேர்கிற தன்மையைக் கொண்டு ஆறு வகையான கூட்டுரைகளை அமைக்கின்றனர். அவை எதிர்மறை உரை, இணைப்புரை, உட்கிடையுரை, தழுவும் பிரிப்புரை, தழுவாப் பிரிப்புரை, சமநிலை உரை எனப்படும். <b>எதிர்மறை உரை</b>: இவ் உரையும் ஒரு கூட்டுரையே என்பது இக்கால அளவையியல் கருத்து. ஒரு தனியுரை என்பது உடன்பாட்டுரையாக இருக்க வேண்டும். ‘என்பது உண்மையன்று’ என்ற மற்றொரு தனியுரையைச் சேர்ப்பதால் எதிர்மறை உரை கிடைக்கும், ‘மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை’ என்பது சரியான எதிர்மறையுரை அன்று. ‘மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர் என்பதுண்மையன்று’ என்று கூட்டுரையாக அமைப்பதே சரியான எதிர்மறை உரையாகும். ‘என்பது உண்மையன்று’ என்ற எதிர்மறையைக் காட்ட ‘–’ என்ற குறியீட்டைப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, உரை: வல்லரசுகள் படைக்குறைப்பு ஒப்பந்தம் செய்தன. (க) எதிர்மறை உரை: வல்லரசுகள் படைக்குறைப்பு ஒப்பந்தம் செய்தன என்பது உண்மையன்று (–க) உரை: வழக்குரைஞர்கள் உண்மை பேசுவதில்லை (க) எதிர்மறை உரை: வழக்குரைஞர்கள் உண்மை பேசுவர் என்பது உண்மையன்று (–க). <b>இணைப்புரை</b>: ஒன்றுக்கு மேற்பட்ட தனியுரைகள் ஆழ்ந்த அளவையியல் தொடர்பின்றி ‘மற்றும்’, ‘மேலும்’ என்னும் சாதாரண இணைப்புச் சொற்களைக் கொண்டு சேர்க்கப்படும் கூட்டுரையை இணைப்புரை என்பர், ‘மற்றும்’, ‘மேலும்’ என்னும் இணைப்புச் சொற்களுக்கு '<b>.</b>' என்னும் குறியீடு தரப்படுகிறது. குறியீட்டளவையில் ‘க’ ‘ச’ என்பவை தனியுரைகள்; இவ்விரு உரைகளைச் சேர்த்து உண்டாக்கும் இணைப்புரை (க<b>.</b>ச) என அமையும். (எ-டு) சிற்றூர் மக்கள் உழவர்கள். மேலும் அவர்கள் பண்புள்ளவர்கள் (க<b>.</b>ச) அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள். மேலும் அவர்கள் நல்லவர்கள் (க<b>.</b>ச). <b>உட்கிடையுரை</b>: விளைவைக் காட்டும் தனியுரையும் அதற்கான காரணத்தைக் காட்டும் தனியுரையும்<noinclude></noinclude> nvnhvnv1zkyaiubtfcilbjdoge5p6ib பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/183 250 626218 1961544 1879272 2026-09-02T15:17:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைகள்|139|உரைகள்}}</noinclude>சேர்ந்த அமைப்பு உட்கிடை உரை எனப்படும். உட்கிடையுரையின் ஒரு பகுதி மற்றொரு பகுதியில் மறைந்து கிடப்பதால் இது இப்பெயர் பெறுகிறது. எடுத்துக்காட்டு, ‘பொருள்களின் தேவை மிகுந்தால் விலை உயரும்’ என்பது ஒருவழி. கட்டுப்பாட்டுரை என்றும் இதனைக் கூறுவர். ‘எனின்’, ‘என்றால்’, ‘அதனால்’, ‘ஆல்’ போன்ற கட்டுப்பாட்டுச் சொற்கள் உட்கிடை இணைப்பைக் காட்டும். உட்கிடை இணைப்பைக் குறிக்க ‘>’ என்ற குறியீட்டைப் பயன்படுத்துகின்றனர். உட்கிடை உரையில் இடம்பெறும் தனியுரைகள் பொருள் தொடர்பு உடையனவாக இருக்க வேண்டிய தேவை இல்லை. உட்கிடை இணைப்பிருந்தால் போதும், அக்கட்டுரை உட்கிடையுரை எனக் கருதப்படும். குறியீட்டளவையில் உட்கிடை உரை க>ச எனக் குறிக்கப்பெறும். எடுத்துக்காட்டு: நல்லாட்சி நடக்கிறது என்றால் அங்கே மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் (க>ச). உலோகங்கள் வெப்பப்படுத்தப்பட்டால் அவை விரிவடையும் (க>ச). <b>தழுவும் பிரிப்புரை</b>: ஒன்றையொன்று தழுவி நிற்கும் தனியுரைகள் சேர்ந்த கூட்டுரை தழுவும் பிரிப்புரையாகும். இக்கூட்டுரையில் அமையும் தனியுரைகள் அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ‘பேராசிரியர்கள் பயிற்றுவதில் திறமைசாலிகள் அல்லது ஆராய்ச்சித்திறம் உள்ளவர்கள்’ என்பது உரை தழுவும் பிரிப்புரை. பேராசிரியர்களைப்பற்றி இக்கூட்டுரையில் வரும் இரண்டு தனியுரைகளும் உண்மையாகலாம். இரண்டு தனியுரைகளும் முற்றும் நீக்கிகளாக இல்லாமல் ஒன்றையொன்று தழுவும் நிலையில் உள்ளன. எனவே, இக்கூட்டுரை தழுவும் பிரிப்புரை எனப்படுகிறது. தழுவும் பிரிப்புரையில் ‘அல்லது’ என்ற இணைப்புச் சொல் செயற்படுகிறது. ‘அல்லது’ என்ற இணைப்புச் சொல்லுக்குக் குறியீடாக ‘V’ என்பதைக் குறிக்கின்றனர். எனவே, தழுவும் பிரிப்புரையின் குறியீட்டு வடிவம் (கVச) என்பதாகும். (எ-டு) மகாத்மா காந்தி அரசியலறிஞர் அல்லது சீர்திருத்தவாதி (கVச). அவன் கல்வியில்லாதவன் அல்லது பண்பில்லாதவன் (கVச). <b>தழுவாப் பிரிப்புரை</b>: ஒரே சூழ்நிலையில் உண்மையாக இருக்கமுடியாத இரண்டு தனியுரைகள் சேர்ந்த கூட்டுரைக்குத் தழுவாப் பிரிப்புரை என்பது பெயர். இக்கூட்டுரையில் இடம்பெறும் தனியுரைகளுள் குறைந்த அளவு ஒன்றேனும் பொய்யென அமைய வேண்டும். ‘இரண்டும் உண்மையல்ல’, ‘எல்லாம் உண்மையல்ல’ என்னும் தொடர்கள் தழுவாப் பிரிப்புரையின் இணைப்புகளாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, ‘ஒரு குழந்தை ஆணாகவும் இருக்கிறது பெண்ணாகவும் இருக்கிறது என்னும் இரண்டும் உண்மையல்ல’ என்பதைக் குறிப்பிடலாம். இவ்விரு தனியுரைகளும் உண்மையாக இருத்தல் முடியாது. ஏதேனும் ஒன்று பொய்யாக இருக்கும். ‘இரண்டும் உண்மையல்ல’ என்றதொடருக்கு ‘Ʌ’ என்று குறியீடு தரப்படுகிறது. எனவே, இக்கூட்டுரையின் அமைப்பு (கɅச) என்பதாகும். (எ-டு) எண்கள் ஒற்றையாகவும் இரட்டையாகவும் இருக்கமாட்டா (கɅச ). ஒரு பெண் தாயாகவும் மலடியாகவும் இருக்க முடியாது (கɅச). <b>ஒத்தநிலை உரை (இருவழிக் கட்டுப்பாட்டுரை)</b>: இரண்டு தனியுரைகள் அளவையில் ஒத்தநிலை உடையவையாகும். சேர்க்கப்பட்டிருந்தால் அக்கூட்டுரை ஒத்தநிலை உரை எனப்படும். இக்கூட்டுரையில் தனியுரைகளை இணைக்கும் இணைப்புச் சொல்லாக, ‘என்றால் மட்டுமே’, என்ற தொடர் வருகிறது. எடுத்துக்காட்டாக, ‘ஒரு பெண் தன் கணவனை இழந்தால் மட்டுமே விதவையாவாள்’ என்பது ஒத்தநிலையுரை. இத்தனியுரைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று உட்கிடையாக இருப்பதாலும், ஒன்றுக்கு மற்றொன்று கட்டுப்பாடானதாலும் இக்கூட்டுரை இருவழிக் கட்டுப்பாட்டுரை என்றும் பெயர்பெறும். இக்கூட்டுரையில் வரும் ‘என்றால் மட்டுமே’ என்றும் இணைப்புச் சொல்லுக்கு ≡ என்னும் குறியீடு தரப்படுகிறது. எனவே குறியீட்டு அளவையில் இக்கூட்டுரை (க ≡ச) என்ற வடிவம் பெறுகிறது. <b>கட்டுரையின் உண்மை/பொய் மதிப்பீடு</b>: ஒரு கூட்டுரையின் உண்மை/பொய் மதிப்பீடு தனியுரைகளின் உண்மை/பொய் மதிப்பீட்டையும், அத்தனியுரைகளை இணைக்கும் இணைப்புச் சொல்லின் தன்மையையும் கருத்திற்கொண்டு கணிக்கப்படுகிறது. உண்மை/பொய் மதிப்பீடு செய்யப் பின்வரும் நெறிகள் வழிகாட்டுகின்றன. 1. தனியுரையின் உண்மை மதிப்பீட்டுக்கு மாறாக எதிர்மறை உரையின் மதிப்பீடிருக்கும். 2. தனியுரைகளனைத்தும் உண்மையென்றால் மட்டுமே இணைப்புரை உண்மையாகும். 3. முன்னிகழ்ச்சியுரை உண்மையாகவும் பின்னிகழ்ச்சிவுரை பொய்யாகவும் இருக்கும்போது மட்டுமே உட்கிடையுரை பொய்யாகும். 4. பிரிநிலைத் தனியுரைகள் அனைத்தும் பொய்யென்றால் மட்டுமே பிரிப்புரை பொய்யாகும். 5. தனியுரைகளின் உண்மை/பொய் மதிப்பீடு ஒன்று போல் இருந்தால் மட்டுமே ஒத்த நிலை உரை உண்மையாகும்.{{Right|க.நா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Ambrose, A.and Lazerowitz, M.,</b> Fundamental of Symbolic Logic, Holt, Rinehart & Winston Inc., New York, 1962.<noinclude></noinclude> o44l56s7x1i5rhlh1nc3zeaijlda5si பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/184 250 626219 1961545 1946125 2026-09-02T15:24:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைச் சூத்திரம்|140|உரைச் செய்யுள்}}</noinclude><b>Copi, I.,</b> Symbolic Logic, The Macmillian Co., New York, 1967.<br> <b>Lewis C.I. And Langford, C.H.,</b> Symbolic Logic, The Centry Co., New York, 1932.<br> <b>Stebbing, L.S.,</b> A Modern Introduction to Logic, Thomas, Y. Crowel Co., New York, 1930. <section end="உரைகள்"/> <section begin="உரைச் சூத்திரம்"/> {{dhr}} <b>உரைச் சூத்திரம்</b>: உரையாசிரியர்கள் தாம் எடுத்துக்கொண்ட நூற்பொருளைப் புலப்படுத்தற்கு விரித்துக் கூறும் விளக்கங்களுள், பயில்வோருக்கு இன்றியமையாதவை எனக் கருதும் பொருளைப் பயில்வோர் மீண்டும் மீண்டும் நினைவுகூர்தற் பொருட்டு, அமைத்துக் கூறும் எளிய இனிய செய்யுளை உரைச்சூத்திரம் என்பர். உரைச்சூத்திரங்கள் பெரும்பான்மையும் நூற்பா யாப்பிலும் வெண்பா யாப்பிலும் அமைந்திருக்கும்; சிறுபான்மை காரிகை யாப்பிலும் அமைந்திருக்கும். வீரசோழிய உரையாளர் சாதித்தன்மை என்னும் அணியை விளக்குமிடத்து, கருங்காக்கை வெண்குருகு என எடுத்துக்காட்டி உரைக்கருத்தாக, ‘இன்மை இகழா தினத்திற் கொத்த, தன்மையிட்டுரைப்பது சாதித் தன்மை’ என நூற்பா யாப்பில் உரைச் சூத்திரம் செய்தார் (வீர. அலங் 10. உரை). யாப்பருங்கல விருத்தி உரையாளர் விருத்தச் சந்தங்களின் எழுத்து வரையறை பற்றிக் கூறுமிடத்து, ‘ஓரடியுள் எழுத்தெண்ணி அவற்றை நான்கினான் மாற நான்கடிக்கும் எழுத்தாமெனக் கொள்க’ என்று விளக்கி பின் அக்கருத்தினையே, ‘அடியுள் எழுத்தினை நான்கினான் மாற, முடியுமாம் நான்கடிக்கும் எண்’ என வெண்பா யாப்பினால் உரைச்சூத்திரம் செய்தார் (யா.வி. 95 உரை). பிரயோக விவேக நூலாசிரியர் தம் நூலுரையுள் 98 உரைச்சூத்திரங்கள் செய்தமைத்துள்ளார். அவர் பிரதிக்கினை என்பதற்குப் பொருள் கூறுமிடத்து, ‘பிரதிக்கினை மேற்கோளெனப் பெயர் பெறும்’ என நூற்பா யாப்பில் உரைச்சூத்திரம் கூறினார் (பி.வி. 2. உரை).{{Right|ச.பா.}} <section end="உரைச் சூத்திரம்"/> <section begin="உரைச்செய்யுள்"/> {{dhr}} <b>உரைச் செய்யுள்</b> செய்யுள் வகையாகத் தொல்காப்பியம் (செய். 75) கூறும் ஏழனுள் ஒன்று. இது சீரான் அமையும் அடிகளும் பா ஓசையுமின்றி அளவு வரைப்படாமல் செய்யப்படுவதாகும். உரைச்செய்யுள் அறமுதலாய மும்முதற்பொருள் பற்றியும், வீடு பேற்றிற்குரிய நெறிபற்றியும், அகமும் புறமுமாகிய ஒழுகலாறு பற்றியும் வெளிப்படையும் குறிப்புமாக மெய்ப்பாடமைய யாக்கப்படுவதாகும். இது தொடைநயமும் வண்ணமும் அணியும் கொண்டும் அவையின்றியும் அமையும். உரைச் செய்யுளை உரைநடை என்றும் கட்டுரையென்றும் வழங்குவர். தொல்காப்பியம் அடி வரையறை இல்லாத செய்யுள் வகையுள் ஒன்றாக இதனைக் கூறும். உரைச்செய்யுள் நான்கு வகைப்படும் எனத் தொல்காப்பியம் (செய். 165) கூறும், (1) கதை தழுவி வரும் ஏனைய தொடர்நிலைச் செய்யுள் இலக்கியத்துள் கதை நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தற்கு இடையிடையே ஓரிரு சொற்களின் அளவாகவும், சில பல தொடர்கள் அளவாகவும் அமைந்து வருதல் ஒருவகை. இது சிலப்பதிகாரத்துள் இடையிடையே கூறப்பெறும் உரையும், உரைபெறு கட்டுரையும் போல்வதாகும். அவ்வாறு வருவனவற்தைப் ‘பாட்டிடை வைத்த குறிப்பு’ என்பார் தொல்காப்பியர். (2) பாவடிவாக நடவாமல் அறஞ்செயவிரும்பு, ஆறுவது சினம், கண்டொன்று சொல்லேல் என்றாங்குப் பாட்டுத் தொடர்போல வருவதும், அகமும் புறமும் பற்றிய பாக்களுக்குத் திணையும் துறையும் கூறும் குறிப்பாக வருவதும் ஒருவகை. இதனை அவர், ‘பாவின்றெழுந்த கிளவி’ என்பார். (3) இயங்குதிணையும் நிலைத்தினையும் பற்றிவரும் காட்சிப்பொருளும் கருத்துப்பொருளும் உள்பொருளும் இல்பொருளுமாக உள்ள அஃறிணைப் பொருள்களை உவம வேறுபாடாகிய உருவகத்தான் உயர்திணைக்குரிய பண்பும் செயலும் உடையன போல வைத்து, ஒரு பயன் கருதிக் கற்பனை மொழியாகச் செய்யப்படுவது ஒருவகை (பஞ்சதந்திரக்கதை போல்வன). இதனைத் தொல்காப்பியர், ‘பொருளொடு புணராப் பொய்ம்மொழி’ என்பார். (4) ஆடலும் பாடலும் கொண்டு கதை தழுவி வரும் கூத்தின்கண் முன்னரும் பின்னரும் கதையை இயக்குவோன் (விதூடகன்) கூற்றாகத் தோன்றி, எள்ளல், இளமை, பேதைமை, மடமை என்னும் பொருள்களின் அடிப்படையில் கேட்போர் வெண்ணகை கொள்ளுமாறு நகைமொழியாக வருவன ஒருவகை. இதனை அவர், ‘பொருளொடு புணர்ந்த நகைமொழி’ என்பார். இந்நூல் வகை யாவும் பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்ளுதற்குரிய பண்டையிலக்கியங்கள் இக்காலத்து அரியவாயின.{{nop}}<noinclude></noinclude> s62m008zeovn4gas7bgl86nzcz5veka பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/185 250 626221 1961555 1946126 2026-09-03T03:31:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைத்தாம் என்றல்|141|உரைநடை}}</noinclude>இனி, ‘இம்மகள் கண்நல்லவோ கயல்நல்லவோ’ என்றாற்போல உவமம் முதலிய அணிநயம்பட வரும் தொடர்களை உரையென்னும் செய்யுள் என்பார் ஒரு சாரார் (சேனாவரையர், தொல், சொல்.16). யாப்பருங்கல விருந்தியுரையாசிரியர் போல்வார் சூத்திரத்திற்குரிய உரைவிளக்கங்களை ஓரோவிடத்துப் பாவாக அமைத்து, இவற்றை விரித்துரைத்துக் கொள்க என்பார். இவை போல்வன உரையாகிய செய்யுள் என்பது அவர் கருத்தாகத் தெரிகின்றது. திருச்சிற்றம்பலக் கோவையார் பாக்களுள் சிலவற்றை எடுத்து, அவற்றின் பொருள் நுட்பங்களை ஆசிரியப் பாவாலமைத்துக் கூறும் கல்லாடத்தையும், அது போன்ற இலக்கியங்களையும் உரைச்செய்யுளின் ஒருவகை வளர்ச்சியாகக் கருதலாம். இக்காலத்துப் பலதுறையினரால் வெளியிடப்பெறும் விளம்பர உரைகளுள் பல உரைச்செய்யுள் எனக் கொள்ளுவதற்கு ஏற்பனவாக விளங்குகின்றன.{{Right|ச.பா.}} <section end="உரைச்செய்யுள்"/> <section begin="உரைத்தாம் என்றல்"/> {{dhr}} <b>உரைத்தாம் என்றல்</b> நன்னூலார் கூறியுள்ள உத்திகள் முப்பத்திரண்டனுள் (தன். 14) ஒன்று முன்னர் யாதானுமொரு காரணம் பற்றிக் கூறப்பட்டுள்ளதனைப் பின்னருங் கூறவேண்டிய சூழ்நிலை உண்டாகும்போது, இதனை முன்னரே கூறினோம் என்னும் கருத்தில் பின்னர்க் கூறவேண்டிய இடத்தில் கூறாது விடுவது உரைத்தாம் என்னும் உத்தியின்பாற்படும். உரைத்தாம் என்பதற்குக் ‘கூறினோம்’ என்பது பொருள். நன்னூலார் (99) எழுத்துகளுக்கு மாத்திரை கூறும்போது அளபெடை, நெடில், குறில், குறுக்கம் ஆகிய வகையில் அமையும் எழுத்திற்கெல்லாம் அவற்றிற்குரிய மாத்திரையினை ‘மூன்றுயிர் அளபு’ எனத் தொடங்கும் நூற்பாவில் கூறியுள்ளார். அந்த நூற்பாவில் உயிர்மெய் எழுத்திற்குத் தனியாக மாத்திரை இவ்வளவு என்பதைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவ்வாசிரியர் (நன். 89) உயிர்மெய் எழுத்தினை விளக்கும்போது ‘உயிர் அளவாய்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனை உளங்கொண்ட உரையாசிரியர், ‘உயிரளவாய்’ என்றமையால், ஒரு மெய் எழுத்து உயிர்மெய் ஆனபோதும், அதற்கு மாத்திரை அம்மெய்யின்மேல் ஏறி நிற்கும் உயிரெழுத்தின் அளவேயாகும் எனக் கொண்டு உரை கூறியுள்ளார். உயிர்மெய்க்கு அதன்கண் ஏதியுள்ள உயிர் மாத்திரையே அளவாகும் என்னும் செய்தியினை மாத்திரை கூறும் நூற்பாவில் கூறாது விடுத்தமை, ‘உரைத்தாம்’ என்னும் உத்தியின்பாற்படுவதாகும் என்று சங்கர நமச்சிவாயர் முதலிய உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர்.{{Right|அ.மா.ப.}} <section end="உரைத்தாம் என்றல்"/> <section begin="உரைத்தும் என்றல்"/> {{dhr}} <b>உரைத்தும் என்றல்</b>: நன்னூலாசிரியர் பவணந்தியார் (நன்.14) தொகுத்துக் கூறியுள்ள முப்பத்திரண்டு உத்திகளுள் ‘உரைத்தும் என்றல்’ ஒன்றாகும். நூலின் பிற்பகுதியில் விரிவாகச் சொல்லப்படும் ஒன்றினை. ஒரு காரணம் பற்றி முன்னர்க் கூறவேண்டிய சூழ்நிலை உண்டாகுமானால், இதனைப் பின்னர் விரிவாக விளக்குவோம் என்னும் கருத்தில் சுருக்கமாக உரைப்பது என்பது இவ்வுத்தியின் பொருளாகும். நன்னூலார் பெயர், வினை, இடை, உரி என்னும் தமிழ்ச் சொல்வகை நான்கினையும், நூலின் பிற்பாதியாக அமைந்த சொல்லதிகாரத்தில் பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் என்னும் நான்கு இயல்களில் விரிவாகக் கூறுகிறார். முன்னர் அமைந்துள்ள எழுத்ததிகாரப் பதவியலின் தொடக்கத்தில் பதங்களைப் பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படுத்திக் கூறுகிறார். பெயர், வினை, இடை, உரி ஆகிய சொற்களை விரிவாகக் கூறி, அவையே பகாப்பதம், பகுபதம் என்று இருவகைப்படும் என்று கூற வேண்டியவர், அவற்றைப் பின்னர் விரிவாகக் கூறப்போவதனை உளத்திற்கொண்டு, இவ்விடத்தில் ‘பெயர் வினை இடை யுரி நான்கும் பகாப்பதம்’ என்றும் ‘பொருளிடம் காலம் சினை குணம் தொழிலின், வருபெயர் பொழுது கொள் வினை பகுபதமே’ என்றும் (நன். 131, 132) சுருக்கமாகச் சுட்டிக்கூறியுள்ளார். இவ்வாறு கூறியிருப்பது உரைத்தும் என்றல் என்னும் உத்தியின்பாற்படும் என்று சங்கர நமச்சிவாயர் முதலிய உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.{{Right|அ.மா.ப.}} <section end="உரைத்தும் என்றல்"/> <section begin="உரைநடை"/> {{dhr}} <b>உரைநடை</b> என்னும் தொடர்மொழி உரை, நடை என்னும் இருசொற்களால் அமைந்தது. உரை நடந்து செல்லும் நெறியே உரைநடையாகிறது. பல்வேறு சந்தங்களுக்கும் தாள அமைதிக்கும் ஏற்பப் பாவி நடக்கும் பாவிலும் வேறுபடுத்த வேண்டி இதை உரைநடை என்று வழங்கினார்கள் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும். உரை என்னும் சொல் தமிழில் நெடுங்காலமாகவே வழக்கில் இருந்து வருகிறது. உரை என்பதற்கு எழுத்துகள் வரிவடிவாய் அமைந்து, ஒலி வடிவாய் அவற்றின் தன்மையை விளக்க வருதல் என்றே பலரும் பொருள் கொள்கின்றனர். அவர்கள், ‘உரைக்கப்படுவதால் உரையாயிற்று’ என்றனர்; அதாவது, வாயினால் ஒன்றைப் பற்றிப் பொருள் தோன்ற உரைப்பதே உரை எனக் கொண்டனர். எனினும், வெற்றொலியை இச்சொல் குறித்த காலமும் ஒன்று உண்டு. உரை என்பது வெறும் முழக்கத்தையும்<noinclude></noinclude> cy9zwn19fxv8kvarhrnzvirbbyp51y9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/186 250 626222 1961556 1879297 2026-09-03T03:36:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைநடை|142|உரைநடை}}</noinclude>குறிக்க வழங்கியது. மேகங்கள் மலையுச்சியில் சூழ்ந்து இடித்து எழுப்பும் பேரொலியாகிய முழக்கத்தையும் பழங்காலத்தில் உரை என்றே வழங்கினார்கள். ‘குன்றம் குமுறிய உரை’ என்பது பரிபாடல் (8.35) அடி. எனவே, அக்காலத்தில் ஒலியும் முழக்கமும் உரையாகக் கொள்ளப்பட்டன என்பது தெரிகிறது. உரைக்கப்படுவனவெல்லாம் உரையாயின், பாட்டும் வாய்திறந்து உரைக்கப்படுவதுதானே? அதையும் கொள்ளலாமோ? எனின், அவ்வாறு வழக்காறு இன்மையின், அவ்வாறு கொள்ளுதல் பொருத்தமாகாது என்று முடிவு செய்தல் வேண்டும். சிலப்பதிகாரத்தை ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று கூறுவதும் இது பற்றியேயாம், உரை பாட்டினும் வேறுபட்டது என்பதை இத்தொடர் நன்கு விளக்குகிறது. இனி, உரை பாட்டினும் வேறுபட்டதாயினும், அதையும் செய்யுளில் அடக்கலாம் என்பர் சிலர். அவர் தம் கருத்துக்கு ஏற்பவே, ஆசிரியர் தொல்காப்பியரும் உரையினைச் செய்யுளியலுள் அமைத்துள்ளமை நோக்கற்பாலது. செய்யப்படுவனவெல்லாம் செய்யுள். எனவே, பாட்டாகச் செய்யப்படுவன பாட்டுச் செய்யுளாதல் போன்று உரையால் செய்யப்படுவனவெல்லாம் உரைநடைச் செய்யுள் என்று கொள்ளல் பொருந்தும், ‘செய்யுள்’ என்னும் சொல்லுக்குப் பாட்டு, காவியம், உரை என்னும் மூன்று பொருள்களைத் தமிழ் அகராதிகள் குறிக்கின்றன. எனவே, உரையும் ஒருவகைச் செய்யுள் தொகுதி எனக் கொள்ளலாம். உரை என்பது பொருளின் தன்மையை உள்ளவாறு உரைப்பதாகும். இதனை ஒரு சான்றினால் விளக்கலாம். தட்டான் பொன்னுக்கு உரை காணும் வழக்கம் பல கட்டுப்பாடுகளுக்கிடையில், நாட்டில் இன்றும் உள்ளது. பொன் சிறந்ததா இல்லையா என்பதை - அதன் உண்மை நிலை, பண்பு, தரம் முதலியன இன்ன வகையன என்பதை உரைத்துக் காண்பது நாடறிந்த ஒன்று. அதன் தன்மையை உணர்த்தும் கல் ‘உரை கல்’ எனப்படும். எனவே, பொருள்களின் இயல்பை உள்ளது உள்ளவாறே உலகுக்கு உணர்த்துவது உரையாகும். இதைத்தான் ‘அடிப்படை மொழி’ என்பர் ஆய்வாளர். கற்பனை கலவாததாய் - உணர்ச்சியோ பிற உள்ள நெகிழ்ச்சிகளோ காய்தல் உவத்தல் என்ற வேறுபாடுகளோ கலவாதனவாய் ஒரு பொருளின் தன்மையை உரையிட்டு உணரத்தக்க வகையில் காட்டுவதே உரை. ஆனால், பாட்டோ இதற்கு நேர்மாறாக உணர்ச்சி, கற்பனை ஆகியவற்றினிடையே தோய்ந்து, அணிநலம் முதலியன பெற்றுப் பாடுவோன் உள்ளத்தளவு உயர்வோ அன்றித் தாழ்வோ பொருந்தப் பொருளை விளக்குவதாகும். இந்த உண்மையை மேலைநாட்டு அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளார்கள். மொழி, இலக்கியம் இரண்டையும் வரையறுத்த ஆய்வாளர் எண்ணத்தை உணர்த்துவது மொழியென்னும் உணர்வை உணர்த்துவது இலக்கியம் என்றும் கூறுவர். இவ்வாறு எழுத்துக்கு வரிவடிவம் கொடுக்கும் நிலையிலேயே ‘உரை’ உண்டாகியிருக்க வேண்டும். உள்ளத்துத் தோன்றிய எண்ணத்தை மற்றவருக்கு உணர்த்த நினைத்த மனிதன் எண்ணி, எண்ணி, எழுத்தெழுத்தாக உச்சரித்து, சொல்லின் பின் சொல்லாக மெல்ல உரைத்திருப்பான். எனவே, முதலில் தோன்றியது உரை எனக் கொள்ளல் பொருத்தமானது. பாட்டுக்கு அமைந்த இலக்கண வரம்பின்றி, மக்களால் எளிமையாக துளிமறைவு இன்றி எழுதவும் பேசவும் பயன்படும் ஒன்றே உரைநடையாகும். செய்யுளிலிருந்து உரைநடையைப் பிரித்துக்காட்டுவது எளிதாயினும், இன்றும் திட்டமாக இரண்டையும் வரையறுக்க இயலாது. ஏனெனில், உயர்ந்த நடையில் செய்யுள் இலக்கணத்தோடு கலவாமல், நல்ல ஓசை நயத்துடன் எழுதும் உரைநடையை ‘உரைப்பாட்டு’ என்று சொல்வதும் உண்டு. எனவே, செய்யுளிலிருந்து உரைநடையைப் பிரித்துக் காண்பதை விடுத்து, உரைநடை என்பதை உள்ளவாறு விளக்க முற்படுவது ஏற்புடையதாகும். உரைநடை என்பது இலக்கிய மரபு கெடாத நல்ல நடையில், ஆழ்ந்த கருத்தோடு செய்யுட் சந்தச் சேர்க்கை இன்றியே நல்ல ஓசைநயம் உடையதாகி, ஒளிமறைவு இன்றி உள்ளதை உள்ளபடி உரை இட்டுக் காட்டும் வகையிலே தேரிய முறையில், கருத்துக்கும் காரணத்துக்கும் பொருத்தமானதாக (ஒன்றனைப் பற்றியோ ஒருவனைப் பற்றியோ) விளக்கி உரைப்பதாகும். கட்டுக்கடங்காது பேசும் அல்லது எழுதும் எல்லா வசனங்களையும் உரைநடை எனக் கொள்வதாகாது. உரைநடை வாக்கியங்கள் இழுமென் மொழியால்-நல்ல ஒழுகிசை நடையால்-தொடர் நலமுடன் ஓசை உணர்த்தும் நெறியான்-நன்கு வளர்ச்சியுற்ற தெள்ளிய நடையில் தெளிந்து செல்லுவனவாக அமைய வேண்டும். மொழிக்கு இன்றியமையாத பெயர் வினைகளுடன் சேரும் உரிச்சொற்களின் தகுதியும், அளவறிந்து அவற்றைச் சேர்த்து வழங்கும் முறையும் உரைநடையில் வரையறை செய்யப்பெறல் வேண்டும். தேவையற்ற சிலவற்றை விட்டொழித்தலும் உரைநடைக்கு இன்றியமையாதது. எனவே, உரைநடை என்பது செய்யுள் விதிகளுக்கு விலக்காய் நின்று இலக்கிய நலம் கெடா வகையில், மக்கள்<noinclude></noinclude> a4018csv8m7wqi8dzaspqjr1puohisp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/187 250 626224 1961557 1879301 2026-09-03T03:40:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைநடை|143|உரைநடை}}</noinclude>உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை உலகுக்கு எடுத்துக்காட்டப் பயன்படுவது என்று கொள்ளல் பொருந்தும். உலக இலக்கிய வழக்கியல் அகராதி உரைநடை என்பது, பொதுவான சொற்கள் கொண்டு எளிமையில் உரைப்பதென்றும், பாட்டு என்பது அதனினும் வேறுபட்டு எளிமையினும் மாறுபட்டமைவது என்றும் குறிப்பிடுகிறது. இவ்வுரை நடை தமிழ் நாட்டிலும் தொல்காப்பியர் கால முதல் இருந்தது என்றாலும், அது எந்த வகையில் இயங்கிற்று என்பதைக் காண முடியவில்லை. எனினும் மேலை நாடுகளில் மிகவும் பழங்காலத்திலிருந்தே உரைநடை தோன்றி வளர்ந்தது என்பதை அறிஞர் நன்கு காட்டியுள்ளனர். மேலைநாட்டு மொழிகளில் மிக்க பழமை வாய்ந்த கிரேக்க, இலத்தீன் மொழிகளில் கிறித்து பிறப்பதற்கு முன்பிருந்தே உரைநடை வழக்கத்தில் இருந்துள்ளது. கிரேக்க மொழியில் கிமு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே உரைநடை இலக்கியம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இலத்தீன் மொழியிலும் அவ்வாறே மிகவும் பழங்காலத்தில் (கி.மு. 70 அல்லது 60) உரைநடை இலக்கியம் இருந்தது எனக் காட்டுகின்றனர். அக்காலத்தில் உரைநடை கண்டவர் சிசரோ (Cicero) என்பவர். ஆங்கில, செருமனி நாடுகளில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலேதான் உரைநடைகள் தோன்றி வளர்ச்சியுற்றன என்பர். ஆப்பாட்டு என்பார் கி.பி. 887-இல் ஆங்கிலத்தில் உரைநடை எழுதினார். செருமன் மொழியில் கி.பி. 842-இல் முதல் உரைநடை தோன்றிற்று. கதை வாயிலாக உரைநடையைக் காணும் அட்சன் (Hudson) உரைநடையைப் பற்றி மிகுதியாகக் கூறவில்லை என்றாலும், இரண்டொரு கருத்துகளைத் தெளித்துச் சென்றுள்ளார். அவர் உரைநடையையும் நாடகத்தையும் ஒப்பிட்டுக்காட்டி, உரைநடை மிக எளிமையானது என்கிறார்; உரைநடைக் கதை நூல்கள் சிறியனவாயினும் பெரியனவாயினும், அமைப்பு, கதைமாந்தர் நிலை, அவற்றின் பேச்சு முறை, செயலாற்றலின் காலமும் இடமும் கடந்த நிலை, நடைப்போக்கு, வாழ்க்கைக்குத் தேவையான உண்மையை உணர்த்தும் தன்மை ஆகியவற்றை இன்றியமையாது கொண்டவையாக இருக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு உரைநடை நூல்கள் நாடகமாயினும் கதையாயினும் கட்டுரையாயினும் வெறுஞ்சொற்களால் ஆக்கப்பட்டுப் பொருளற்ற முறையிலே செல்லாதனவாக, மக்கள் வாழ்வுக்கு ஏற்ற வகையில் நல்ல பொருள் பொதிந்தனவாக, இனிமையும் எளிமையும் உடையனவாக, செம்மை நடையில் செல்வனவாக அமையவேண்டும் என்ற உண்மையை அட்சன் மட்டுமன்றி, வேறு மேலைநாட்டு அறிஞர் பலரும் வற்புறுத்தியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் இவ்வுரைநடை முன்தோன்ற, நெடுங்காலத்துக்குப் பின் இவ்வுரைநடை போன்றமைந்த நூற்பாக்கள் தோன்றின. பின்னரே பாட்டுத் தோன்றிற்று எனல் பொருந்தும். பொதுவாக நூற்பாக்கள் உண்டான காலம் கிறித்துப் பிறப்பதற்கு ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்பர் ஆய்வாளர். வடமொழி நூற்பாக்களும் ஏறக் குறைய அந்த நூற்றாண்டுகளில்தான் தோன்றியிருக்க வேண்டும். எனவே, உரைநடையை அடுத்து, இந்நூற்பாக்கள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியமும் ஏறக்குறைய இக்காலத்திற்குச் சற்றுமுன்பு தோன்றிய ஒன்று என்பது அறிஞர் பலரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும். இனி, இத்தொல்காப்பியத்தின் செய்யுளியலில் உரையும் பாட்டும் உள்ள நிலைமை காண முடிகிறது. மற்றும், இத்தொல்காப்பியத்தின் வழியே இதற்கு முன்னும் பல இலக்கிய நூல்கள் தோன்றி நிலைத்திருந்தன என்பதையும் உணர முடிகிறது. தமிழ் மொழியின் தொன்மை பல பேரறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பெற்ற ஒன்றானமையால், இந்நாட்டுப் பிறமொழிகளைக் காட்டிலும் தமிழில் பழங்காலத்திலேயே உரையும் நூற்பாவும் பாட்டும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி வளர்ந்து நிலவ, அவற்றைத் தொல்காப்பியர் தொகுத்துக் கூறி இலக்கண வரம்பினை உறுதி செய்தார் எனக் கொள்வது பொருத்தமானதாகும். எனவே, உரைநடை பாட்டினும் முந்தியது என்பது தேற்றம். பொனுமிடோபிர் இக்கால உரைநடை நூல்களை மூவகையாகப் பிரிக்கிறார். அவை அனைத்தும் சிறப்பான உரைநடை இலக்கியங்களாகவே அமைகின்றன. வருணனை உரை, விளக்க உரை, உணர்ச்சி உரை என்னும் மூன்று வகைகளே அவர் காட்ட விரும்புவன. ஒரு செயலையோ ஒரு பொருளையோ ஒரு மனிதனையோ பற்றி ஆசிரியர் விளக்கி உரைப்பதே வருணனை உரை. எவ்வாறு செயல்கள் நிகழ்கின்றன என்ற அறிவியல் ஆய்வுகளைக் கூறுவதும், திறனாய்வு முறைகளைக் காட்டுவதும், பொருளில் உள்ள சிறப்பியல்புகளை விளக்கிக் காட்டுவதும் விளக்க உரையாகும். துன்ப எல்லையிலோ இன்பத்தின் பிடிப்பிலோ மகிழ்ச்சிப் பெருக்கிலோ தம்மை மறந்தும் மீறியும் உரைப்பதே உணர்ச்சியுரை. தமிழ் உரைநடை வளர்ந்தாலும் அதன் வரலாற்றைத் தொடர்ச்சியாக அறிய முடியவில்லை என்பதை எண்ணும் போது சற்றே வருத்தம் உண்டாகிறது.<noinclude></noinclude> huzai8l2k0sn7oxn6pkhewzzb1018rb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/188 250 626225 1961558 1946128 2026-09-03T03:46:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைநடை|144|உரைபெறு கட்டுரை}}</noinclude>எழுதப்பெற்ற, வரையறுத்த, திட்டமான வரலாறு இல்லையாயினும், தமிழில் உரைநடை மிகப் பழங்காலந்தொட்டே தொடர்ந்து வாழ்ந்து வருகிற ஒன்று என்பதைக் காட்டச் சான்றுகள் உள்ளன. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்த உரைநடையைக் காண முடியாவிட்டாலும், அதன் நூற்பாவாலும் உரைகளாலும், அவ்வுரையின் விளக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறும் இன்றில்லாது அழிந்த சில நூற்பெயர்களாலும் (இராம சரிதமும் பாண்டவ சரிதமும் பெருந்தேவனார் பாரதமும் தகடூர் யாத்திரையும் முதலியன என்று தொல் காப்பிய உரையாசிரியர்களால் காட்டப்பெறுவன) உரை தொன்மை வாய்ந்ததே என்பதை உணர முடிகிறது. மேலும், சங்க இலக்கியங்களுள் சில உரைநடையைப் போன்றே தனிச்சொல் பெற்றும் பெறாமலும் அமைந்துள்ளன. கடைச்சங்க காலத்து இறுதி எல்லையில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் உரைநடையைத் தெளிவாகக் காண முடிகிறது. இதனாலேயே தொல்காப்பிய நூற்பாவிற்கு (செய். 228) உரைகாண வந்த நச்சினார்க்கினியர் அதற்குச் சிலப்பதிகாரத்தையே மேற்கோளாகக் காட்டியுள்ளார். ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனப் போற்றப் பெற்ற சிலப்பதிகாரத்தில் உரை நன்கு போற்றப் பெறுகிறது என்றாலும், அடுத்த சில நூற்றாண்டுகளில் தமிழில் உரைநடை வழக்குப் பற்றிய விளக்கம் கிடைக்கவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டினை ஒட்டிய ‘இறையனார் களவியல் உரை’யே சிறந்த உரையாகக் கிடைத்துள்ளது. அது பாட்டின் நடை உடையதாக உள்ளது. அடுத்துத் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களுக்கும், பத்துப்பாட்டு போன்ற இலக்கிய நூல்களுக்கும் உரை கண்ட உரையாசிரியர்கள் தமிழ் உரைநடையினை வளர்த்தார்கள் எனலாம். பின், தொடர்ந்து உரைநடை தமிழில் வளர்ந்ததாயினும் இடையில் பலப்பல வேறுபாடுகளைப் பெற்றது. இடைக்காலத்தில் ‘மணிப்பிரவாளம்’ என்ற வடமொழி பெரிதும் விரவிய உரை எழுதப்பெற்றது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்த உரை அந்த வகையினதே. எனினும் அம்முறை இயற்கைக்கு மாறுபட்டமையின் வழக்கொழிந்தது. பிற்காலத்தில் பல நூல்களுக்கு உரைகளும் பல இலக்கியங்களுக்கு உரைநடை அமைப்பும் உண்டாயின. இடைக்காலக் கல்வெட்டுகளும் உரைநடையை வளர்த்தன. மேலைநாட்டவர் தமிழகத்துக்கு வந்தபோது உரைநடையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. பல உரைநடை நூல்கள் எழுதப்பெற்றன. விவிலிய நூல் உரைநடையில் மொழி பெயர்க்கப் பெற்றது. புதினம், நாட்குறிப்பு, சிறுகதை போன்றவை தோன்றின, சென்ற நூற்றாண்டில் அரசாங்கப் பதிவேடுகளும், நாளிதழ் சிலவும், பிற கடிதப் போக்குவரத்துகளும் தமிழ் உரைநடையில் அமைந்தன. இந்த இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை மிகவும் வளர்ந்துள்ளது. இதழ்கள், மலர்கள் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மிகவும் மலிந்து உரைநடையில் தோன்றின. அவற்றுள் சில, வேற்று மொழிச் சொற்கள் இடையிடை கலக்கப் பெற்றனனாயினும், வழக்கற்றுப் போகும் தன்மையில் உள்ளன. தெள்ளிய, இனிய பொருள் தரும் தமிழ் உரைநடையே - அதன் வழி வரும் உரைநடை நூல்களே - காலத்தை வென்று வாழும் என்பது உறுதி.{{Right|அ.மு.ப.}} <section end="உரைநடை"/> <section begin="உரைபெறு கட்டுரை"/> {{dhr}} <b>உரைபெறு கட்டுரை</b> என்பது சிலப்பதிகாரத்தின் தொடக்கத்தில் அமைந்துள்ள பதிகத்திற்கும் மங்கல வாழ்த்துப் பாடலுக்கும் இடையிலமைந்த ஒரு கட்டுரையாகும். அரும்பத உரையாசிரியர் இதற்கு ‘உரைத்துப் போதுகின்ற கட்டுரை’ என்றும், அடியார்க்கு நல்வார், ‘முற்கூறிய கட்டுரைச் செய்யுள்’ என்றும் பொருள் கூறியுள்ளனர். மேலும், அடியார்க்கு நல்லார், ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள’ என்றமையால் காப்பியங்களுக்குச் சிறுபான்மை இவ்வுறுப்புகளும் சில வரும் எனக் கொள்க’ என்று விளக்கமும் தந்துள்ளார். இதனால், உரை பெறு கட்டுரை பெறுவதும் காப்பிய இலக்கணங்களுள் ஒன்று என்பது புலனாகிறது. ஒரு கட்டுரை பாட்டினாலோ உரையினாலோ அமையலாம். இவ்விரு வகையாலும் அமைந்த கட்டுரைகள் சிலப்பதிகாரத்துள் இடம் பெற்றுள்ளன. மூன்று காண்டங்களின் இறுதியிலும் ஒவ்வொரு கட்டுரை உள்ளது. நூலின் இறுதியில் நூற்கட்டுரை என ஒரு கட்டுரையும் உள்ளது. இவை நான்கும் பாவினால் அமைந்தனவாகும். காண்ட இறுதிக் கட்டுரை அக்காண்டத்துக் கூறப்பட்ட சிறப்புச் செய்திகளையும், நூலிறுதிக் கட்டுரை நூலிற் கூறப்பட்ட சிறப்புச் செய்திகளையும் பொருளாகக் கொண்டுள்ளன. நூலின் தொடக்கத்தில் அமைந்த இக்கட்டுரை உரை நடையால் அமைந்துள்ளதனால் இது ‘உரைபெறு கட்டுரை’ என்று குறிப்பிடப்பட்டது. புகார் நகரக் கோவலன் மதுரையில் கொலையுண்ட பின்னர், கண்ணகி பாண்டியன்பால் வழக்குரைத்து, மதுரை நகரினை எரித்து மலைநாடு சென்ற பின்னர், அதனைக் கேட்ட சேரன் செங்குட்-<noinclude></noinclude> j84tb6tv3jvmjfo33ihbukvom0vqmoo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/189 250 626248 1961559 1946129 2026-09-03T03:51:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரைபெறு கட்டுரை|145|உரையளவை}}</noinclude>டுவன் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்துச் சிலை நிறுவி வழிபாடு செய்ததையும், அவ்விழாவில் கண்ணகித் தெய்வம் தோன்றி வாழ்த்தியதையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. கோவலன் கொலைக்குப் பின்னர்ப் பாண்டிய நாட்டு நிலையும் சோழர், கொங்கர் முதலியவர்களின் நாட்டு நிலையும் எவ்வாறமைந்தன என்பதையும், செங்குட்டுவன் தொடங்கிய பத்தினித் தெய்வ வழிபாட்டின் செல்வாக்குத் தமிழகத்திலும் பிறவிடங்களிலும் எவ்வாறமைந்தது என்பதையும் விளக்கும் குறிப்பினைச் சிலப்பதிகார நூலுள் அறிதற்கான வாய்ப்பின்மையால், அவற்றை உணர்த்தும் குறிப்பாக ‘உரைபெறு கட்டுரை’ அமைந்துள்ளது. நூல், காண்டம் ஆகியவற்றின் இறுதியில் இடம் பெற்ற குறிப்புகளைக் கொண்ட கட்டுரைகள் அவற்றின் இறுதியில் அமைக்கப்பட்டமையால், நூலிற்குப் புறம்பாக அந்நாளில் சேரநாடு தவிர்ந்த தமிழகத்திலும், தமிழகத்தை அடுத்துள்ள நாட்டுப் பகுதிகளிலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறும் இவ்வுரை பெறு கட்டுரை நூலின் முற்பகுதியில் அமைந்துள்ளது. உரைபெறு கட்டுரை, ‘அன்று தொட்டுப் பாண்டிய நாடு’ என்று தொடங்குகிறது. இதில் ‘அன்று’ என்பதிலுள்ள சுட்டு பண்டறி சுட்டாக நின்று, கோவலன் மதுரையில் கொலைப்பட்ட நிகழ்ச்சி நடந்த நாளைக் குறிக்கிறது. ‘குணவாயிற் கோட்டத்து’ என்று தொடங்கும் சிலப்பதிகாரப் பதிகம் நூற்பொருளை விளக்கமுறக் கூறுதலின், நூலுக்குப் புறம்பாகக் கூறப்படும் செய்திகளைக் குறிப்பிடும் உரைபெறு கட்டுரை அதனை அடுத்தும், நூலின் தொடக்கத்திற்கு முன்னும் அமைந்திருப்பது பொருத்தமுடையதாக உள்ளது. உரைபெறு கட்டுரையிற் கூறப்படும் செய்திகள் வருமாறு: கோவலன் கொலைக்குப் பின்னர்ப் பாண்டி நாட்டில் மழை வளம் மாறி, வறுமை மிக்கது. அதனால், நாட்டில் வெப்பு நோயும் குருநோயும் மிகுந்து மக்களைத் துன்புறுத்தின. கொற்கையினைத் தலைநகராகக் கொண்டு பாண்டி நாட்டினை ஆண்ட வெற்றி வேற் செழியன், நாட்டின் துயர் துடைக்கும் முயற்சியாக ஆயிரம் பொற்கொல்லர்களைக் களப்பலி கொடுத்து, சாந்தி வேள்வி செய்ய, நாட்டில் மழை வளம் மலிந்து துன்பம் நீங்கியது. இதனை அறிந்த கயவாகு என்னும் ஈழநாட்டு மன்னன் தன்னாட்டில் பத்தினிக்குக் கோட்டம் எடுத்து, பல முறை ஆடித்திங்களில் விழாவும் சாந்தியும் செய்வித்தான்; அங்கு மழை வளம் சிறக்க நாடு நலம் பெற்றது. அதனைக் கேட்டு, உறையூரிலிருந்து அரசு புரிந்த பெருங்கிள்ளி என்னும் சோழமன்னன், ‘கண்ணகி வரமருளும் வான்பெருந் தெய்வமாவாள்’ என்று கருதி, தன்னாட்டில் பத்தினிக் கோட்டம் அமைத்து அங்குச் சிறப்பொடு பூசனை நடைபெறச் செய்தான். இந்த உரைபெறு கட்டுரை இளங்கோவடிகளுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர் ஒருவர் எழுதியதாகும் என்று கூறப்படுகிறது.{{Right|அ.மா.ப.}} <section end="உரைபெறு கட்டுரை"/> <section begin="உரையளவை"/> {{dhr}} <b>உரையளவை</b> நியாயக் கருத்து முறையின் இயலும் வைசேடிகக் கருத்து முறையின் புலன் கடந்த பொருளியலும் சேர்ந்து விளங்குகிறது. உரையளவை (Verbal Testimony) உண்மையான அறிவு பெறுவதற்குரிய வழியாகுமா என்பது குறித்த சிறந்த ஆய்வு வைசேடிக நூல்களில் காணப்பெறுகிறது. உரையளவை (Sabda Pramana) என்பது சொல் அல்லது உரையைப் பற்றியது; உண்மையான அறிவுடைய ஒருவனது உரையைப் பற்றியது. பொருள் குறித்தோ உரை குறித்தோ சரியான அறிவைப் பெற்றுள்ள ஒருவன், தான் பெற்ற அறிவினை மற்றையோர்க்குத் தெரிவிக்கும் விருப்பத்தால் உரைப்பது உரையாகும். காங்கேசர் என்பார் எச்சொல் அதன் உண்மையான பொருள் உணர்விற்கு வாயிலாக அமைகிறதோ அது உரையளவையாகும் எனக் குறிப்பிடுகிறார். வேத உண்மையையும் அதன் தலைமையையும் உடன்படுகிற வைதிக அறிஞர்கள் காங்கேசர் கருத்தினை ஆதரித்து, உரையளவை நிகழ்வதற்குரிய முக்கிய காரணங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர். 1. எது குறித்து ஒருவன் தன் கருத்தினை வெளியிட விரும்புகிறானோ அது குறித்த சொல் அல்லது உரை பற்றிய சரியான பொருளறிவை அவன் பெற்றிருத்தல் வேண்டும். 2. பொருளறிவு குறித்த அறிவு அவனிடத்தில் அமைந்திருத்தல் வேண்டும். 3. அவனது உரைமூலம் மற்றையோரும் சரியான அறிவு பெற வேண்டும். உரையளவை கேள்விப் புலனால் ஒரு சொல்லின் வாயிலாகவோ உரையின் வாயிலாகவோ அறிவினைத் தருவதாகும். வங்க நாட்டுக் கருத்து முறையைக் கொண்ட மெய்ப் பொருளியலார், கேள்வியினால் மற்றவர் சொல்ல அறிகிற அறிவோடு கேட்டறிந்த அறிவினை வழியளவையின் மூலமாகவும் அறிதல் முடியும் எனக் கருதுகின்றனர். மேலும், அவர்கள் வழியளவையில் அறிவு பெறுதற்குத் துணையாக அமைவது தக்க குறி எனவும் கூறுகின்றனர். ஒரு சொல்பற்றிய அறிவு கேட்கப்பெறுகிற நிலையில் அல்லது அறியப்பெற்ற நிலையில் மட்டும் உரையளவை அதற்குரிய தகுதி பெறுகிறது. ஒரு<noinclude> <b>வா. க. 5 - 10</b></noinclude> ca9xslr4z8m2osrh1v5qk1r2ocegl2s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/190 250 626249 1961560 1946130 2026-09-03T03:57:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரையளவை|146|உரையறி நன்னூல்}}</noinclude>கருத்து அல்லது ஒரு நிகழ்ச்சி பற்றிய உரையளவையின் தோற்றம் சொல்லின் வாயிலாகவோ உரையின் வாயிலாகவோ அமைகிறது. இத்தோற்றத்திற்குரிய பல தொடர்நிலைகள் வருமாறு: 1. ஒலிக்கப் பெற்ற ஒலிகளைக் கேட்டு அறிதல், 2. சொற்களுக்கும் அவற்றிற்குரிய பொருள்களுக்கும் உள்ள தொடர்பினை நினைவில் வைத்தல், 3. சொற்களால் உணர்த்தப்பெறும் கருத்துப் பொருள்களை அறிதல் ஆகியன. கருத்தில் இவ்வாறு தோன்றுவதற்குத் துணையாக அமையும் வெவ்வேறு வகை அறிவு 1. எதிர்நோக்குவதன் அறிவு அல்லது காரணத்தினாலே அச்சொல்லிற்குரிய பொருளை வெளிப்படுத்த இயலாமை, 2. பொருந்தும் தன்மை பற்றிய அறிவு அல்லது சொல்லினால் குறிக்கப்பெறும் பொருள் (சொற்பொருள்) உண்மைப் பொருலோடு முரணாது இருத்தல், 3. சொற்கள் தொடர்ந்து ஒலிக்கப்பெறுவதால் அத்தொடர்ச்சியின் காரணமாக ஏற்படும் அறிவு, 4. கருத்துப்பொருள் பற்றிய அறிவு. ஒருவன் மற்றொருவனுக்குத் தன் பேனாவின் கறுப்பு நிறத்தைத் தெரிவிக்க விரும்பி ‘இப்பேனா கறுப்பு நிறம் உடையது’ என்று உரைக்கிறான். பேனாவைப் பற்றிய அறிவு பெறுவதற்குரியவன் முதலில் பேனாவினை உடையவன் சொல்லுகிற சொற்களை, அச்சொற்களுக்கு உரிய ஒலிகளின் வாயிலாக உணர்தல் வேண்டும். பின்னர், அச்சொற்களுக்கும் அச்சொற்களால் குறிக்கப்பெறும் பொருள்களுக்கும் இடையே அமையும் உறவினை நினைவு கொள்ள வேண்டும். இவ்வாறு நினைவு கூர்தலின் வாயிலாகக் கேட்கிறவன் கேட்கப் பெறும் பொருள் குறித்த அறிவினைப் பெறுகிறான். கேட்கிறவனின் எதிர் நோக்குகிற அறிவு, பொருந்துகிற அறிவு, சொற்கள் பற்றிய அறிவு, கருதிய பொருள் குறித்த அறிவு ஆகியன துணை செய்யச் சொற்கள் கருத்தினைத் தெரிவிக்கின்றன. கேட்கிறவனிடத்துக் கேட்ட ஒலிக்குறிப்புகள் வாயிலாகப் பெற்ற அறிவும், சொல்லுவான் கருதிய அறிவும் ஒருங்கே இயைய இப்பேனா கறுப்புநிறமுடையது என்ற அறிவு உண்டாகிறது. இவ்வறிவு உரையளவையால் வருவதாகும். ஒரு சொல்லிற்கும் அச்சொல்லின் பொருளுக்கும் இடையே இருவகை உறவுகள் இருப்பனவாகக் கருதப்பெறுகின்றன. ஒவ்வொரு தனிச் சொல்லும் ஒவ்வொரு தனிக் கருத்தை உடையது என்பதை விளக்கச் சக்தி, இலட்சணம் என்னும் இருவகை உறவு நிலைகள் ஏற்றுக்கொள்ளப் பெற்றுள்ளன. சக்தி என்பது பல காலமாக மரபு வழிச் சொற்களுக்கு அமைந்த பொருளாகும். இலட்சணம் அல்லது குறிப்புப் பொருள் என்பது மரபுவழி அறியப்பெறும் பொருளோடு மறைமுகமாகத் தொடர்புடைய கருத்துப் பற்றிய குறிப்பாகும். நடுவர் ஒருவர் வழக்குத் தீர்க்க வீற்றிருக்கும் இருக்கையை நினைவில் வைத்து, நடுவரையே நடுவர் இருக்கையெனக் குறிக்கின்றனர். நடுவர் ஓர் இருக்கையினின்று வழக்கு விசாரிப்பது மரபு. காலப்போக்கில் விசாரணைக்கு அமையும் நடுவரை அவர் இருந்து விசாரிக்கிற இருக்கையினால் ‘பெஞ்சு’ எனக் குறிப்பிடும் வழக்கம் வந்துவிட்டது. மரபு வழி அமைந்துள்ள உறவு பற்றிய அறிவு இலக்கணம், உவமம், அகராதி, தகுதி, வழக்கு, சொற்களால் குறிக்கப்பெறும் சூழ்நிலை, எளிய கருத்துரை, தொடர்ச்சி என்னும் எட்டு வகைகளால் கிடைக்கப்பெறுகிறது. இவ்வாறு எழுகின்ற அறிவு தொடக்க நிலையில் வழக்காற்றலால் அறியப்பெறுவதாகும். மேலே குறிக்கப்பெற்ற மற்றைய வழிகள் சார்பு நிலையில் அமைவனவாகும். ஒரு குழந்தை 'அ' என்பவனிடத்து ஒரு செயலைக் காண்கிறது. அச்செயல் 'அ' என்பவன் 'ஆ' என்பவனிடத்துப் பெறுகின்ற ஒலிக் குறிப்பைப் பெற்ற பின்னரே நிகழ்கிறது. செயலுக்கும் செயலுக்குக் காரணமான ஒலிக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய அறிவே குழந்தையின் அறிவிற்கு அடிப்படையாகும். 'அ' என்பவன் ஈடுபடுகிற செயல் குறிப்பிட்ட ஓர் இலட்சியத்தை அடைதற் பொருட்டேயாகும். அடைதலைக் குறித்த உள்ள உறுதி ஆர்வத்தினால் எழுகிறது. இலட்சியத்தைப் பற்றிய அறிவும் அதைப் பெறும் வழியின் அறிவும் உள்ள உறுதிக்கு முன்னரேயுள்ளன என்பதைக் குறிக்கின்றன. அறிவு எங்ஙனம் தோற்றம் பெறுகிறது என்பதைப் பற்றி ஆராயும் போது உறவு பற்றிய அறிவை அறிவதற்கு நேர்கிறது.{{Right|இரா.கோ.}} <section end="உரையளவை"/> <section begin="உரையறி நன்னூல்"/> {{dhr}} <b>உரையறி நன்னூல்</b> என்னும் நூலின் ஆசிரியர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டிப் புலவர் ஆவார். இவர் தந்தை பாவாடை வாத்தியார் என்று அழைக்கப்படும் பசுதேவன். ஆண்டிப்புலவர் வளையறுக்கும் குலத்தில் பிறந்தமையின் இவருக்கு நக்கீரர் என்ற பெயருமுண்டு. இவர் தொண்டை மண்டலச் செஞ்சியையடுத்த ஊற்றங்கால் என்னும் ஊரில் பிறந்தவர். உரையறி நன்னூல் என்பது நன்னூலின் முதலிரண்டு இயல்களுக்கும் பாக்களால் பொருள் கூறும் உரைநூலாகும். இப்பாக்கள் ஆசிரிய விருத்தத்தால் ஆனமையின் இந்நூல் “நன்னூலாசிரிய விருத்தம்” என்றும் வழங்கப்பெறும். ஆசிரியப்பாவாலான நன்-<noinclude></noinclude> rnrd4b53vlmsqucwxqgmgnfqyftmqm2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/191 250 626250 1961561 1946131 2026-09-03T04:03:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரையாசிரியர்|147|உரையாசிரியர்கள்}}</noinclude>னூல் நூற்பாக்களுக்கு எளிய விருத்தத்தால் உரை செய்ய முனைந்திருக்கிறார் இவ்வாசிரியர். இவ்வுரை நூல் இப்பொழுது கிடைத்திலது. மதுரைத் தமிழ்ச் சங்கப் புத்தகசாலையில் சங்கர நமச்சிவாயப் புலவரின் உரையல்லாத வேறோர் உரை உண்டென்றும், அவ்வுரை ஆண்டிப்புலவரின் உரையாகலாம் என்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடான தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் கூறுகிறது. இந்நூல் பற்றி ஆண்டிப்புலவர் இயற்றிய மற்றொரு நூலாகிய ஆசிரிய நிகண்டு தன் பாயிரத்தில் ‘இயம்பிய நிகண்டின் உரையறி நன்னூலினொடு இரண்டுமே செய்து வைத்தார்’ எனக் குறிப்பிடுகிறது.{{Right|சு.இரா.}} <section end="உரையறி நன்னூல்"/> <section begin="உரையாசிரியர்"/> {{dhr}} <b>உரையாசிரியர்</b> : காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]. <section end="உரையாசிரியர்"/> <section begin="உரையாசிரியர்கள்"/> {{dhr}} <b>உரையாசிரியர்கள்</b> எனப்படுவோர் செய்யுளால் ஆன பழந்தமிழ் நூல்களுக்குப் பிற்காலத்தில் உரைநடையில் விளக்கம் எழுதியவர்களாவர். அவர்கள் எழுதிய விளக்கம் உரைகள் எனப்படும். தமிழில் உள்ள இலக்கியம், இலக்கணம், தத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் காலந்தோறும் உரையாசிரியர் பலர் தோன்றியுள்ளனர். தமிழில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிற்கும் 13-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலேயே மிகுதியான உரைகள் தோன்றின. இந்தக் காலப் பகுதியில் தான் மிகச் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பல உரைகள் தோன்றியுள்ளன. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், திருவாய்மொழி போன்ற சிறந்த நூல்களுக்குச் சிறந்த உரைகளை எழுதிய சான்றோர்கள் அனைவரும் இந்தக் காலப் பகுதியில்தான் வாழ்ந்தனர். உரையாசிரியர்கள் தக்க காலங்களில் தோன்றி, பழைய நூல்களுக்கு உரை எழுதாமல் இருந்திருப்பின், பல நூல்கள் விளக்கம் பெறாமலும் மக்களிடையே பரவாமலும் ஒதுங்கி நின்று, காலப் போக்கில் மறைந்திருக்கும். சில நூல்கள் பல நுட்பமான கருத்துக்களையும் புதுமையான விளக்கங்களையும் காலந்தோறும் பெற்று, நாடெங்கும் பரவிப் புகழ் பெறாமல் போயிருக்கும். உரைகளால் பழைய நூல்கள் எழிலும் இனிமையும் பெறுகின்றன என்னும் கருத்தைப் பாரதியார், பாஞ்சாலி சபதத்தின் தொடக்கத்தில் உள்ள கலைமகள் வணக்கப் பாடலில், வேதத் திருவிழியாள் - அதில், மிக்கபல் உரையெனும் கருமையிட்டாள் என்று கூறியுள்ளார். ‘இதற்கு வேதமாகிய கண்ணில் (ஞானநூல்களாகிய கண்ணில்) பலவித வியாக்கியானங்கள், பாடியங்கள் என்னும் கரியமையைப் பூசியவள். மை கண்ணுக்கு நல்லது. அழகுங் கூட’ என அவர் பொருள் விரக்கமும் தந்துள்ளார். <b>உரையாசிரியர்களின் சிறப்பியல்புகள்</b>: உரையாசிரியர்கள் ஏதேனும் ஒரு நூலுக்கு உரை எழுதத் தொடங்குமுன், அதனோடு தொடர்புடைய பல்வேறு நூல்களையுங் கற்றுப் புலமை பெற்றனர். பின்னர்த் தாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட நூலைப் பல ஆண்டுகள் ஆழ்ந்து பயின்றனர்; தம் புலமைத் திறன் முழுவதையும் வெளிப்படுத்தி அந்த நூலுக்குச் சிறந்த உரை எழுதினர். எவ்வெத் துறையில் தமக்குப் பயிற்சியும் புளிமையும் மிருகியாக உள்ளவோ அவ்வத்துறை நூல்களில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, நூலாசிரியரின் உள்ளக் கருத்தைத் தெளிவாக அறிந்த பின்னர் உரை எழுதினர். உரையாசிரியர்களிடம் பல வகையான திறன்கள் உள்ளன. பழந்தமிழ் நூல்களில் உள்ள சொற்களின் பொருளைத் தெளிவாக அறியும் அகராதிப் புலமை, செய்யுளின் அமைப்பையும் போக்கையும் ஆராய உதவும் இலக்கண அறிவு, நூலாசிரியரின் வாழ்க்கையை உணரும் வரலாற்றுக் கல்வி, நூல் தோன்றிய காலத்து மக்களின் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ளும் சமுதாய உணர்வு, பிற நூல்களோடு ஒப்புமை காணும் ஒப்பியல் ஆய்வுத்திறன் ஆகியவை அவர்களிடம் நிரம்பி உள்ளன. உரையாசிரியர்களுள் சிலர் கல்வி புகட்டும் பேராசிரியர்களாய் இருந்தனர்; சிலர் நூலாசிரியர்களாய்ச் சிறந்து விளங்கினர்; சிலர் சமய உண்மைகளை உணர்த்தும் ஞான ஆசிரியர்களாய்த் திகழ்ந்தனர். உரையாசிரியர்கள் உரைநடை எழுதும் ஆற்றலில் சிறந்து விளங்கினர். பயனற்ற சொற்களையும் ஆழமற்ற கருத்துகளையும் ஆராய்ந்து நீக்கிவிட்டு, பொருட்செறிவு மிகுந்த பயனுள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து அமைத்துச் செப்பமான உரைநடையை உருவாக்கினர். நூலாசிரியர்களுக்கு உரிய சிறப்புகள் யாவும் உரையாசிரியர்களுக்கும் உண்டு. நூலாசிரியர்களைப் போலவே உரையாசிரியர்களும் அறிஞர்களால் போற்றப்படுகின்றனர். மூல நூல்களைப் போலவே உரை நூல்களும் ஆர்வத்துடன் கற்கப்படுகின்றன. தொல்காப்பியம், திவாகரம் முதலிய நூல்கள் அவற்றை இயற்றிய ஆசிரியர்களின் பெயர் பெற்றுள்-<noinclude> <b>வா. க. 5-10 அ</b></noinclude> bsj18fugcv0s7uq2hp977epms0vq51x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/192 250 626251 1961562 1879565 2026-09-03T04:30:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரையாசிரியர்கள்|148|உரையாசிரியர்கள்}}</noinclude>ளமை போல, உரையாசிரியர்களின் பெயரை அவர்கள் இயற்றிய உரைகள் பெற்றுள்ளன. இளம் பூரணம், சேனாவரையம், பேராசிரியம், நச்சினார்க்கினியம் என்பன இவ்வகையான் அமைந்த பெயர்களாகும். தமிழில் தோன்றிய முதல் உரையாசிரியர் இறையனார் அகப்பொருள் என்னும் இலக்கண நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் ஆவார். அவர் கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரே பிற்காலத்தில் தோன்றிய எல்லா உரையாசிரியர்களுக்கும் உரை எழுத வழிகாட்டியவர். நக்கீரர் உரைக்குப் பின், பழந்தமிழ் நூல்கள் பலவற்றிற்கு உரைகள் தோன்றின. அந்த நூல்களில் உள்ள அரிய சொற்களின் பொருளையும், பாடல்களின் திரண்ட கருத்தையும் உரையாசிரியர் மேற்கோளாகக் கையாண்டனர். அவ்வுரைகளுக்கு அரும்பதவுரை, குறிப்புரை, பொழிப்புரை, பழையவுரை முதலிய பெயர்கள் வழங்கி வருகின்றன. தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாகக் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் உரை எழுதி, ‘உரையாசிரியர்’ என்ற பெயரைப் பெற்றவர் இளம் பூரணர். அவருக்குப் பின், அந்நூலின் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சேனாவரையர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக உரை எழுதினர். பேராசிரியர் அதன் பொருளதிகாரப் பகுதிக்கு மட்டும் உரை இயற்றினார். திருக்குறளுக்கு, கி.பி. 12, 13 ஆகிய இரு நூற்றாண்டுகளிலும் பத்து உரையாசிரியர்கள் உரை எழுதினர். இவர்கள் இயற்றிய உரைகளுள் பரிதி, மணக்குடவர், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் ஆகிய ஐவர் உரைகள் மட்டுமே இப்போது உள்ளன. ஏனையோர் உரைகள் மறைந்து போய்விட்டன. பத்து உரைகளுள் பத்தாவதாகத் தோன்றிய பரிமேலழகர் உரையே சிறந்து விளங்குகிறது. சிலப்பதிகாரத்திற்கு, கி.பி.12-ஆம் நூற்றாண்டின் அடியார்க்கு நல்வார் தமிழ்க் கலைகளின் நுட்பங்களை எல்லாம் விளக்கி விரிவுரை எழுதியுள்ளார். வைணவ அடியவர்களாகிய ஆழ்வார்கள் பாடியுள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்கு 11,12,13 ஆகிய மூன்று நூற்றாண்டுகளிலும் விளக்கங்கள் பல தோன்றின. அவை வியாக்கியானங்கள் என்னும் பெயரைப் பெற்றன. திருப்பெரும்புதூரில் கி.பி. 1017 -ஆம் ஆண்டில் தோன்றிய இராமாநுசர் வைணவ சமயத்தைத் தமிழகமெங்கும் பரப்பியபோது, அவருக்குச் சீடர்கள் பலர் தோன்றினர். அப்போது திருவரங்கத்தில் வாழ்ந்த சீடர்களுள் சிலர், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரைகளை எழுதினர். பிள்ளான் நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, மணவாள யோகி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகத் திருவாய்மொழி உரையைப் படிப்படியாக வளர்த்து விரிவாக்கினர். அவர்களுள் பெரியவாச்சான் பிள்ளை எல்லா ஆழ்வார்களின் பாடல்களுக்கும் வியாக்கியானங்கள் எழுதி, ‘வியாக்கியான சக்கரவர்த்தி’ என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றார். காலந்தோறும் பலர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூலாகிய நன்னூலுக்கு உரைகளை எழுதியுள்ளனர். அவர்களுள் மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், சிவஞான முனிவர், ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர். ஒரு நூலுக்குப் பலர் உரை எழுதியது மட்டுமன்றி, ஒருவரே பல நூல்களுக்கு உரை எழுதியுமுள்ளார். மதுரையில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் பல நூல்களுக்குச் சிறந்த உரைகளை எழுதினார். அவர் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி ஆகிய பழம்பெரு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். அவரை இலக்கணம், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் வல்லவர் என்றும், மிகுதியான நூல்களுக்கு உரை எழுதிய வித்தகர் என்றும் அறிஞர்கள் போற்றுகிறார்கள். சிவஞானமுனிவர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இலக்கணம், தத்துவம் ஆகியவை பற்றிய பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியுரை, நன்னூல் விருத்தியுரை, சிவஞானபாடியம், சிவஞான போதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் (சுபக்கம்) பொழிப்புரை ஆகியவை இவர் இயற்றியுள்ள உரை நூல்களாகும். இவையேயன்றி, இலக்கண விளக்கச் சூறாவளி, சித்தாந்த மரபு கண்டன கண்டனம், சிவசமய வாதவுரை மறுப்பு, கம்பராமாயண முதற் செய்யுள் சங்கோத்தர விருத்தி ஆகிய மறுப்புரை நூல்களையும் இயற்றினார், பல உரைகளை இயற்றிய அவர் நூலாசிரியராகவும் விளங்கினார். அவருக்குப் பின்னர்க் காலந்தோறும் உரையாசிரியர்கள் பலர் தோன்றித் துறைதோறும் உரைகள் பல இயற்றியுள்ளனர். உரையாசிரியர்கள் செய்யும் நன்மைகளைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். அவை தமிழில் உள்ள இலக்கியங்களை முறையாகக் கற்றுச் சுவைக்க, இலக்கணம் பயின்று மொழித்திறன் பெற உதவுதல்;<noinclude></noinclude> i21w831eu6rb80bk2drcg6obxzlwhby பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/193 250 626252 1961563 1946132 2026-09-03T04:42:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரையிடையிட்ட.......|149|உரையிற்கோடல்}}</noinclude>இலக்கியத் திறனாய்வில் ஈடுபடவும், மொழியியல் சிந்தனையிற் பங்கு கொள்ளவும், தமிழ் அகராதியை உருவாக்கவும் உதவுதல்; பழங்காலத்து நாட்டு நிகழ்ச்சி, அரசியல் நிலை, மக்களின் பழக்க வழக்கங்கள், கலை நுட்பம் ஆகியவை பற்றி அறிவி்த்தல்; தமிழில் தனித்துறையாக வளர்ச்சி பெற்றுப் பரவாத ‘அளவை (தருக்க) இயல்’ பற்றிய கருந்துகளைத் தருதல்; காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள தமிழ் உரைநடையின் வரலாற்றையும் பலவகையான உரைநடைகளின் இயல்புகளையும் அறிந்து கொள்ளத் துணை செய்தல்; பல ஆண்டுகளுக்கு முன் நாட்டில் வழங்கிய பழங்கதை விடுகவி, பழமொழி, மரபுத்தொடர், வட்டார வழக்குச்சொல் ஆகியவற்றைத் திரட்டித் தருதல்; பல்வேறு காலங்களில் தோன்றி ஆங்காங்கே உலவி வந்த தனிப்பாடல்களைத் தருதல்; பிற நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும் இடங்களில் அந்நூல்களில் உள்ள சரியான பாடத்தையும் செய்யுள் வடிவ அமைப்பினையும் அறிந்து கொள்ள உதவுதல்; மறைந்துபோன தமிழ் நூல்களைப் பற்றிய செய்திகளையும், அந்த நூல்களிலிருந்து சில பாடல்களையும் உணர்த்தல் போன்றனவாகும்.{{Right|மு.வை.அ.}} <section end="உரையாசிரியர்கள்"/> <section begin="உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்"/> {{dhr}} <b>உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்</b> என்பது உரைநடையும் பாட்டும் விரவி அமையும் பழந்தமிழ் இலக்கிய வகை ஆகும். இப்பெயரில் அமைந்துள்ள செய்யுள் என்னுஞ் சொல் செய்யுள்களால் ஆகிய நூலினைக் குறிக்கும். இவ்வகை நூலுள் செய்யுள்களின் இடையிடையே அந்நூலின் பொருளோடு தொடர்புடைய உரைநடைப் பகுதிகள் இடம் பெற்று அமையும் பொதுவாக, இவ்வகை நூல்களில் பாடல்கள் மிகுதியாகவும் உரைநடைப் பகுதிகள் குறைவாகவும் இடம்பெறும். இதற்கு மாறாக உரையும் பாட்டும் ஒத்த அளவிலும், உரைநடை மிக்க அளவிலும் கொண்டுள்ள நூல்களும் தமிழில் உள்ளன. சிலப்பதிகாரப் பதிகம், ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், உரைசால் அடிகள் அருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்’ என்னும் பகுதியில் இதனைக் குறிப்பிடுகிறது. அடியார்க்கு நல்லார் இத்தொடர்ப் பொருளினை, ‘உரையிடையிட்டனவும் பாட்டுடையனவுமாகிய செய்யுள்’ என்று விளக்கியுள்ளார். சிலப்பதிகாரத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே உரைநடை இடம் பெற்றுள்ளது. அவ்வுரைநடையும் எதுகை மோனைச் சிறப்போடு, செய்யுளோசை பெற்றுள்ள உரைநடையாகவே உள்ளது. இது பேச்சு வழக்கில் அமைந்த உரைநடை ஆகாது. இதற்குக் ‘குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத் துகைாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்றமைந்தன், கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேரியாற்றங் கரைபோகிய, செங்குட்டுவன்’ என்று வாழ்த்துக் காதையில் இடம் பெறும் உரைநடைப் பகுதியினை எடுத்துக்காட்டாகச் சுட்டுதல் இயலும். பழங்காலத்தில் இருந்து இப்பொழுது அழிந்து விட்டதாகக் கருதப்படும் ‘தகடூர் யாத்திரை’ என்னும் நூலும் பாரத வெண்பா என்னும் நூலும் இவ்வகை இலக்கியமாகும். இதில் உரையும் பாட்டும் ஏறத்தாழ ஒத்த அளவில் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்நூலில் பாட்டுகள் கதை மாந்தர்களின் கூற்றாகவும் உரைநடைப் பகுதிகள் வருணனை, வரலாறு ஆகியவற்றைக் கூறுவனவாகவும் அமைந்துள்ளன. இந்நூலில் செய்யுள் போலவே உரைநடையும் ஒத்த சிறப்பினதாய் நூலுணர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இதில் அமைந்துள்ள உரைநடையில் பேச்சு வழக்குத் தன்மையும் வடசொற் கலப்பும் மிக்குள்ளன.{{Right|அ.மா.ப.}} <section end="உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்"/> <section begin="உரையிற்கோடல்"/> {{dhr}} <b>உரையிற்கோடல்</b>: கருத்துகளைச் சொல்லப் பயன்படுத்தும் முறை உத்தியாகும். தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் கூறப்படுகிற உத்திகள் நூற்பா நுவலப்படும் முறையைக் கூறுவனவாகும். எனினும் அவற்றை உரை சொல்லும் முறைக்கும் பொருந்துவனவாகக் கொள்ளலாம். ஆனால், ஆறுமுகநாவலர் தம் காண்டிகையுரையில் உரைப்போக்கிற்கேற்ப நூற்பாவின் பொருளைத் தெளிவுபடுத்துவதற்காகச் சில உத்திகளை மேற்கொண்டுள்ளார். அவ்வகையில் இவ்வுத்தி உரையாசிரியர்கள் புலமையைக் காட்டுதற்கு ஏதுவாக நிற்கிறது. ‘மொழியாததனை முட்டின்று முடித்தல்’ என்று தொல்காப்பியத்தில் கூறப்பட்ட உத்தியை உரையிற்கோடல் என்று இளம்பூரணர் (தொல். பொருள். 656) தம் உரையில் கூறுவர். எடுத்துச் நூற்பாவில் சொல்லப்படாத கருத்தை முட்டுப்படாமல் உரையால் கூறுதல் என்பது இதன் பொருள். ஆண், பெண் ஆகிய இருபாற்கும் பொதுவாய் வருகிற ஒருவர் என்னும் சொல் உயர்திணைப் பன்மை வாய்பாட்டு வினையைக் கொண்டு முடியும் என்பதனை, ‘ஒருவரென்ப துயரிரு பாற்றாய்ப், பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப’ என்று நன்னூல் கூறுகிறது. உயர்வு கருதி ‘ஆர்’ என்னும் விகுதியை ஈற்றில் பெற்று வரும் இருதிணைப் பொதுப் பெயரும், பால் பகா அஃறிணைப் பெயரும், சில உயர்திணைப் பெய ரும் மேற்கூறப்பட்டது போன்று (நன். ஆறு. காண். 289) பன்மை வாய்பாட்டு வினை முடிவைப் பெறும் இயல்புடையன. (எ-டு) அரசனார் வந்தார், தந்தையார் வந்தார், கீரியார் வந்தார், நம்பியார் வந்தார்,<noinclude></noinclude> nhsot1tmdwq4f2g4bilir17qgw0nq21 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/194 250 626253 1961564 1946133 2026-09-03T04:46:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரொக்கு இந்தியர்|150|உரொடீசிய மனிதன்}}</noinclude>நங்கையார் வந்தார், தொல்காப்பியனார் வந்தார். ஆனால், இக்கருத்து நூற்பாவில் கூறப்படவில்லை. எனவே, இதனை உரையிற்கோடல் என்னும் இவ்வுத்தி கொண்டு ஆறுமுகநாவலர் அந்நூற்பா உரையுள் கூறியுள்ளார்.{{Right|வீ.சே.}} <section end="உரையிற்கோடல்"/> <section begin="உரொக்கு இந்தியர்"/> {{dhr}} <b>உரொக்கு இந்தியர்</b>: வடஅமெரிக்காவில் இன்றளவும் தனித்தன்மையுடன் வாழும் பழங்குடிகளுள் உரொக்கு இந்தியரும் (Yurok Indians) ஓரினத்தவர். இவர்கள் தம்மை ஒலேக்வல் (Olekwol) என்றும் கூறிக் கொள்வர். ஒலேக்வல் என்பதன் பொருள் ‘மனிதர்கள்’ (Persons) என்பதாகும். வேறு சில வட அமெரிக்கப் பழங்குடிகளும் தம்மை ஒலேக்வல் என்று கூறிக் கொள்வர். உரொக்கு இந்தியர்கள் வீட்சுபெக்கன் (Weitspekan) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் கிளாமத்து ஆற்றின் (Klamath River) தாழ் நிலப்பகுதியிலும் கலிபோர்னியக் கடற்கரைப் பகுதியிலும் வாழ்கின்றனர். இவர்கள் வட அமெரிக்க இந்தியப் பழங்குடிகளுள் உயரமான ஓர் இனத்தவர். நல்ல உயரத்தையும் கட்டான உடலையும் கொண்ட இவர்கள் குறைந்த ஆடையே அணிகின்றனர். இவர்கள் தம் உடல் முழுதும் பச்சை குத்தி அழகுபடுத்திக் கொள்கின்றனர்; தலையிலும் இடுப்பிலும் இறகுகளைக் கொண்டு அலங்கரித்துக் கொள்வர்; மர வீடுகள் கட்டுவதில் வல்லவர்கள். காட்டுப் பகுதியில் வாழும் இவர்கள் அங்குக் கிடைக்கும் மரங்களைக் கொண்டே வீடுகளையும் மீன்பிடி படகுகளையும் கட்டிக் கொள்கின்றனர். உரோக்கு இந்தியர்கள் கலைத் தொழிலிலும் வல்லவர்கள். பெண்கள் கூடைத் தொழிலில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் பல்வேறு அளவுகளில் தயாரிக்கும் உடைகளை அண்டைப் பகுதிகளில் வாழும் கரோக்கு (Karok), உப்பா (Hupa) முதலான பழங்குடிகள் விரும்பி வாங்குகின்றனர். இவர்கள் செய்யும் பல்வேறு அழகு மிகுந்த கலைப் பொருள்களுக்குப் பறவைகளின் இறகுகள், மரங்கள், கிளிஞ்சல்கள், எலும்புகள் முதலானவற்றைப் பயன்படுத்துகின்றனர். பளிங்குக் கற்களும் கிளிஞ்சல்களும் இவர்களிடையே நாணயமாகப் பயன்படுத்தப்படுகின்றன. நாணயங்களைக் கொண்டு செல்லும் பணப்பையை அழகிய மான்கொம்பைக் கொண்டு செய்கின்றனர். இவ்வின மக்கள் மீனை மிகுதியாக உண்கின்றனர்; புகைப்பதற்காகப் புகையிலையைப் பயிரிடுகின்றனர். பழங்குடிச் சமுதாயங்களில் பெரும்பாலும் சண்டைகள் மிகுதியாகக் காணப்படும் நிலையில், இம்மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். வெள்ளையர்கள் கி.பி. 1850-இல் இப்பகுதிக்குத் தங்கம் தேட வருதற்குமுன் இவர்கள் சண்டைகளை அறியாதவர்கள். உரொக்கு இந்தியர்களின் சமய நம்பிக்கைகள் சிக்கலானவை. ஆண்டிற்கொருமுறை இவர்கள் நடத்தும் விழாவில் குதிக்கும் நடனம் (Jumping Dance), வெள்ளைமான் நடனம் (White Dear Dance) முதலானவை குறிப்பிடத்தக்கவை. இவ்விழாவில் பெருமளவில் சேர்த்து வைத்திருக்கும் பளிங்குக் கற்களை அனைவரும் கண்டு களிக்கக் காட்சிக்கு வைப்பர்.{{Right|சீ.ப.}} <section end="உரொக்கு இந்தியர்"/> <section begin="உரொடீசிய மனிதன்"/> {{dhr}} <b>உரொடீசிய மனிதன்</b>: இக்கால மனித இனத்தைச் சார்ந்த புதைபடிவங்கள் முதன்முதலாக கி.பி. 1848-இல் இசுபெயின் (Spain) நாட்டில் சிப்ரால்டரில் (Gibraltar) உள்ள ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்டன. புதைபடிவங்கள் ‘நியாண்டர்தால்’ மனிதனுடையவை என்றும், அம்மனிதன் வரலாற்றுக் காலத்திற்கு முந்தியவன் (Pre-historic Man) என்றும் பொதுவாகக் கருதுகின்றனர். நியாண்டர்தால் மனிதன் மூன்றாம் பனியாற்றுக் காலத்தில் (Glacial Period) தோன்றி நான்காம் பனியாற்றுக் காலத்திலும் வாழ்ந்தான். இவன் வாழ்ந்த நாகரிகக் காலம் பழங்கற்காலமாகும். நியாண்டர்தால் மனிதனின் காலத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள உரொடீசியாவில் வாழ்ந்த ஒரு வகை மனிதனே ‘உரொடீசிய மனிதன்’ (Rhodesian Man) என்று கூறப்படுகிறான். வட உரொடீசியாவில் ‘கபூ’ (Kafue) ஆற்றிற்கு அருகிலுள்ள ‘புரோக்கன் மலையின்’ (Broken Hill) ஒரு குகையிலிருந்து மனித எலும்புகளும் கற்கருவிகளும் 1921-இல் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன், மேலும் சில உடைந்த எலும்புகளும் கலந்திருந்தன. அந்த எலும்புகள் அங்கு வாழ்ந்த மனிதன் உணவிற்காக வேட்டையாடிய பிராணிகளின் எலும்புகளாக இருக்கலாமென்று கருதப்பட்டன. இவை அனைத்தும் குகையின் நுழைவாயிலிருந்து சுமார் 120 அடி தூரத்தில் 90 அடி ஆழத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டன. மனித எலும்புகளுடன் கிடைத்த பிராணிகளின் எலும்புகள் ஈயம், துத்தநாகம் ஆகிய தாதுப் பொருள்களால் மூடப்பட்டு நல்ல நிலையில் இருந்தன. அந்த இடத்தில் மனிதனின் முழு மண்டையோட்டின் மேல்தாடையின் பகுதி ஒன்றும், கால் எலும்புகளின் பகுதிகளும், இடுப்பு எலும்பின் பகுதியும், இடுப்படி எலும்பும் (Sacrum) தோண்டியெடுக்கப்பட்டன. அம்மண்டையோட்டில் மிகப் பெரிய அளவுடைய முக எறும்புகளும், தடித்த புருவ விளிம்புகளும் (Brow ridge) உள்ளன. இத்தகைய பெரிய உருவமைப்புக் கொண்ட மண்டையோடு அதுவரையிலும் கண்டெடுக்-<noinclude></noinclude> 77juqz9t3hydeqogpyohcmnzbqgcrvm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/195 250 626254 1961565 1879574 2026-09-03T04:51:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1961565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரொடீசிய மனிதன்|151|உரொடீசிய மனிதன்}}</noinclude>கப்பட்ட மனித மண்டையோடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இம்மண்டையோட்டின் தடித்த மேல்தாடையும், அகன்ற மேலண்ணமும், பக்கவாட்டு மூளையின் அமைப்பும் நியாண்டர்தால் மனிதனை ஒத்திருந்தன. ஆனால், மூக்கமைப்பும் காது அமைப்பும் பெரிதும் வேறுபட்டிருந்தன. மண்டையோட்டுத் துவாரம் சிறிது முன்புறமாக அமைந்திருந்தது. மூளையின் கன அளவு சுமார் 1300 க.செ.மீ.க்குக் குறைவாகும். பெரிய முக அமைப்பைக் கொண்ட அம்மண்டையோட்டில் காணப்பட்ட மூளை அமைப்பு ஆய்வுக்குரியதாயிற்று. இத்தகைய வழக்கத்திற்கு மாறுபட்ட உருவமைப்புடைய உரொடீசிய மனிதனின் மண்டையோட்டையும், அதனுடன் சேர்ந்திருந்த கால் எலும்புகளின் துண்டுகளையும் புற அமைப்பின் அடிப்படையில் இக்கால மனிதனின் மண்டையோடு, கால் எலும்புகள் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்த இயலவில்லை. மேலும், அம்மண்டையோடும் கால் எலும்புப் பகுதிகளும் ஒரே மனிதனுடையவையா என்ற கேள்வியும் எழுந்தது. இதனால், இந்த எலும்புத்துண்டுகள் நிறப்பிரிகைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஓரளவே புதைபடிவமாக்கப்பட்டிருந்த உரொடீசிய மனித எலும்புகளைச் சுத்தம் செய்து பார்த்தபோது, மண்டையோட்டின் (கீழ்த்தாடை இல்லாமல்) இடப்பக்கத்தில் ஒரு பகுதி தவிர மற்றப் பாகங்கள் சேதமடையாமல் மிக நல்ல நிலையில் காணப்பட்டன. உரொடீசிய மனித மண்டையோடு உருவ அமைப்பில் தொன்மை மிக்க மனிதக் குரங்குகளின் மண்டையோட்டைப் போன்று தோற்றமளித்தாலும், தாடைகளின் அமைப்பிலும் காதுப்புறப் பொருத்துவாய்களின் அமைப்பிலும் இக்கால மனித மண்டையோட்டின் அமைப்பை நினைவூட்டியது. இம்மண்டையோட்டில் நியாண்டர்தால் மனித மண்டையோட்டில் காணப்பட்டதை விட மூளைக்குழி அழுந்தியும், புருவ விளிம்புகள் தெளிவாகவும் தடித்தும் காணப்பட்டன. வேறு எந்த மனித மண்டையோட்டிலும் இருந்ததை விட இம்மண்டையோட்டில் மூக்குத் துவாரத்திலிருந்து மேல் வரிசைப் பற்களுக்கிடையில் இருந்த தூரம் மிக அதிகமாகக் காணப்பட்டது. மேலண்ணமும் மிகப் பெரியதாகக் காணப்பட்டது. பொட்டெலும்பின் கூம்பு முனைப்பு இக்கால மனிதனுக்கு இருப்பது போன்றே நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. பின் மண்டை விளிம்பும் தசை இணைப்புகளும் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருப்பினும், பின் மண்டைப் பகுதி நியாண்டர்தால் மனிதனைவிட உயரமான உருவமைப்பைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொல்லுயிரியல் சான்றுகளினால் உரொடீசிய மனிதனின் தொன்மையைப் பற்றிச் சரியாக வரையறுக்க இயலவில்லை. குகையில் கண்டெடுக்கப்பட்ட பிராணிகளின் எலும்புகளிலிருந்து மண்டையோடு புதியதாகத் தோன்றியதால், அது மிகத் தொன்மை வாய்ந்ததாக இருக்காது என்ற கருத்து நிலவியது. உரொடீசிய மனிதனின் மண்டையோட்டை ஒத்த அமைப்பைக் கொண்ட சால்டன்கா மனித (Saldanha Man) மண்டையோடும் ‘சோலோ மனித’ (Solo Man) மண்டையோடும் தென்னாப்பிரிக்காவில் சால்டன்கா வளைகுடாவிலும் (Saldanha Bay) சாவாவிலும் (Java) ஈற்றயலூழிக் (Pleistocene) காலத்திலேயே கிடைத்துள்ளன. அம்மண்டையோடுகள் உரொடீசிய மனிதனின் தொன்மையை வரையறுக்க உதவுகின்றன. கேப்பு நகரப் பல்கலைக்கழக (University of Caps Town) அறிஞர்கள் 1953-இல் மேற்கொண்ட ஆராய்ச்சியின்போது, தென்னாப்பிரிக்காவில் கேப்பு நகருக்கு 80 மைல் வடக்கிலுள்ள சால்டன்கா வளைகுடாவிற்கு அருகிலுள்ள ‘ஒப்பீல்டு’ (Hope field) என்னுமிடத்தில் மண்டையோடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது உரொடீசிய மனித மண்டையோட்டை ஒத்த தோற்றத்தைப் பெற்றிருந்தது. இம்மண்டையோட்டு மூளையின் கனஅளவு சுமார் 1250 க.செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. இம்மண்டையோட்டில் புருவ விளிம்புகள் மிகப் பெரியனவாகக் காணப்பட்டன. இதனுடன் இருந்த கற்கருவிகள், விலங்குகளின் எலும்புகள், புவியியல் சான்றுகள் முதலானவை இம்மண்டையோடு இடைக்கால ஈற்றயலூழிக் காலத்திற்கும் பிற்கால ஈற்றயலூழிக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்பதைக் காட்டுகின்றன. எனவே உரொடீசிய மனிதனையும் சால்டன்கா மனிதனையும் சமகாலத்தவர்களாகக் கருதுகின்றனர். உரொடீசியா மனிதனின் மண்டையோட்டை ஒத்த பதினோரு மண்டையோடுகளும் இரண்டு முன்னங்கால் எலும்புகளும் சாவாவில் (Java) ‘கடாங்கு’ (Ngadong) என்னுமிடத்தில் சோலோ ஆற்றிற்கருகில் கண்டெடுக்கப்பட்டன. இம்மண்டையோடுகளில் முக எலும்புகள் இல்லாதது ஆய்வாளர்களுக்குக் குறைபாடாக அமைந்தது. இவற்றின் புருவ விளிம்புகள் தடித்து வலிமையானவையாக இருந்தன. மண்டையோட்டுத் துவாரம் இக்கால மனிதனுக்கு அமைந்துள்ள நிலையில் காணப்பட்டது. மூளையின் அளவு சுமார் 1150 க.செ.மீ. முதல் 1300 க.செ.மீ. வரை இருந்ததாகக் கணக்கிடப்பட்டது. இவற்றுடன் கிடைத்த முன்-<noinclude></noinclude> 0y1i0yt5caoj5hi6ny7dc730d5fj9zq பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1961525 1961353 2026-09-02T13:49:52Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1961525 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌|சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌]] 676-677 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்‌|சரக்கு மாற்றகம்‌]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌|சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌]] 688-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச்‌ சட்டம்‌|சரக்கேற்றிச்‌ சட்டம்‌]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌|சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌]] 693-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத்‌ சந்திர சட்டர்சி|சரத்‌ சந்திர சட்டர்சி]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌|சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌]] 706-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌|சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌]] 708-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்‌|சருவோதயம்‌]] 709-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்‌|சலந்தர்‌]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத்‌ தொழில்‌|சலவைத்‌ தொழில்‌]] 714-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்‌|சலாதின்‌]] 716-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால்‌ நேரு|சவகர்லால்‌ நேரு]] 718-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்‌|சன்மார்க்கம்‌]] 730-731 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்‌|சனகன்‌]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735 |- ! colspan="5"|<b>சா </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 747-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்‌|சாங்கியம்‌]] 751-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்‌|சாதபூரா மலைத்தொடர்‌]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 772-773 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்‌|சாதவாகனர்கள்‌]] 773-778 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம்‌ முகம்மது|சாதிக்கு, குலாம்‌ முகம்மது]] 784-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்‌)|சாதுநாத்து சர்க்கார் (சர்‌)]] 784-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்‌|சாந்த கவிராயர்‌]] 784-785 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்‌|சாந்துப்புலவர்‌]] 793-794 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌|சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌]] 805-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர்‌ சீன்பால்|சார்த்தர்‌ சீன்பால்]] 819-820 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்‌|சார்பு விகிதம்‌]] 821-823 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்‌|சார்லமென்‌]] 829-830 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர்‌ இயக்கம்‌|சாரணர்‌ இயக்கம்‌]] 831-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய்‌ உடன்படிக்கை|சால்பாய்‌ உடன்படிக்கை]] 841-842 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்‌|சாலர்சங்கு அருங்காட்சியம்‌]] 847-849 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச்‌ சட்டம்‌|சாலியச்‌ சட்டம்‌]] 851-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப்‌ படுகொலை|சாலியன் வாலாபாகுப்‌ படுகொலை]] 851-853 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்‌|சாவா மனிதன்‌]] 854-855 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌|சான்‌]] 860-863 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌–கு–தாரோ|சான்‌–கு–தாரோ]] 866-867 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌, இலிண்டன்|சான்சன்‌, இலிண்டன்]] 867-868 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌ சாமுவேல்‌|சான்சன்‌ சாமுவேல்‌]] 868-870 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌, சார்லசு|சான்சன்‌, சார்லசு]] 870-871 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ சால்வடார்‌|சான்‌ சால்வடார்‌]] 871-872 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ சாலிசுபரி|சான்‌ சாலிசுபரி]] 872-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌சோசே|சான்‌சோசே]] 879-879 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ நாக்சு|சான்‌ நாக்சு]] 879-880 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ பிரான்சிசுகோ|சான்‌ பிரான்சிசுகோ]] 880-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு|சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு]] 881-882 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்|சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்]] 882-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பூர்|சான்பூர்]] 883-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்போர்டு|சான்போர்டு]] 883-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்மரினோ|சான்மரினோ]] 883-884 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ விக்ளிபு|சான்‌ விக்ளிபு]] 884-886 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாய்வு|சான்றாய்வு]] 886-887 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாவணம்|சான்றாவணம்]] 887-887 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாளர்|சான்றாளர்]] 887-888 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்று|சான்று]] 888-889 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுக் கையொப்பம்|சான்றுக் கையொப்பம்]] 889-889 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுப் பொருள்|சான்றுப் பொருள்]] 889-889 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுறுதி அதிகாரி|சான்றுறுதி அதிகாரி]] 889-890 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானா|சானா]] 890-890 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானீ|சானீ]] 890-890 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானூர்|சானூர்]] 890-892 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சி|சி]] 893-893 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தர் லோடி|சிக்கந்தர் லோடி]] 893-894 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தரா|சிக்கந்தரா]] 894-895 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்‌|சிக்கல்‌]] 895-895 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்கள்‌|சிக்கல்கள்‌]] 895-897 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்‌ தீர்வு காணல்‌|சிக்கல்‌ தீர்வு காணல்‌]] 897-899 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்காசா இந்தியர்|சிக்காசா இந்தியர்]] 899-899 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கிம்|சிக்கிம்]] 899-900 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்குராத்து|சிக்குராத்து]] 900-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்பிரீடு அரண்|சிக்பிரீடு அரண்]] 901-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகண்டி|சிகண்டி]] 901-902 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ|சிகாகோ]] 902-904 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ பொருளாதாரப்‌ பள்ளி|சிகாகோ பொருளாதாரப்‌ பள்ளி]] 904-907 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகிரியா|சிகிரியா]] 907-911 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கப்பூர்‌|சிங்கப்பூர்‌]] 911-912 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கமுகன்|சிங்கமுகன்]] 912-913 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கவேள் குன்றம்|சிங்கவேள் குன்றம்]] 913-913 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்களம்|சிங்களம்]] 913-913 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கள மொழி|சிங்கள மொழி]] 913-914 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்காரவேலு முதலியார், ஆ.|சிங்காரவேலு முதலியார், ஆ.]] 914-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கியாங்கு|சிங்கியாங்கு]] 915-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கையாரியர்|சிங்கையாரியர்]] 915-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்தௌ|சிங்தௌ]] 915-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிச்சென் இட்சா|சிச்சென் இட்சா]] 915-916 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசரோ|சிசரோ]] 916-917 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசிலி|சிசிலி]] 917-920 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசுபால்கர்|சிசுபால்கர்]] 920-920 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்சிவிக்கு என்றி|சிட்சிவிக்கு என்றி]] 920-921 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்டகாங்கு|சிட்டகாங்கு]] 921-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்ரா வளைகுடா|சிட்ரா வளைகுடா]] 922-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி|சிட்னி]] 922-923 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி ஆல்செர்னன்|சிட்னி ஆல்செர்னன்]] 923-924 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி சர்‌ பிலிப்பு|சிட்னி சர்‌ பிலிப்பு]] 924-925 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி பல்கலைக்கழகம்‌|சிட்னி பல்கலைக்கழகம்‌]] 925-925 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி வெபு|சிட்னி வெபு]] 925-927 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டுவின்|சிண்டுவின்]] 927-927 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டோ|சிண்டோ]] 927-928 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்சக்தி|சித்சக்தி]] 928-928 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்|சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்]] 928-929 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தர்கள்|சித்தர்கள்]] 929-931 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தர் சிவப்பிரகாசர்|சித்தர் சிவப்பிரகாசர்]] 931-932 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தரஞ்சன்‌ தாசு|சித்தரஞ்சன்‌ தாசு]] 932-933 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தன் வாழ்வு|சித்தன் வாழ்வு]] 933-933 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தன்ன வாசல்|சித்தன்ன வாசல்]] 933-934 omws8crm244ew75y77m1ljtumg03cnw 1961539 1961525 2026-09-02T14:46:20Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1961539 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌|சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌]] 676-677 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்‌|சரக்கு மாற்றகம்‌]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌|சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌]] 688-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச்‌ சட்டம்‌|சரக்கேற்றிச்‌ சட்டம்‌]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌|சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌]] 693-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத்‌ சந்திர சட்டர்சி|சரத்‌ சந்திர சட்டர்சி]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌|சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌]] 706-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌|சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌]] 708-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்‌|சருவோதயம்‌]] 709-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்‌|சலந்தர்‌]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத்‌ தொழில்‌|சலவைத்‌ தொழில்‌]] 714-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்‌|சலாதின்‌]] 716-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால்‌ நேரு|சவகர்லால்‌ நேரு]] 718-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்‌|சன்மார்க்கம்‌]] 730-731 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்‌|சனகன்‌]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735 |- ! colspan="5"|<b>சா </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 747-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்‌|சாங்கியம்‌]] 751-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்‌|சாதபூரா மலைத்தொடர்‌]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 772-773 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்‌|சாதவாகனர்கள்‌]] 773-778 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம்‌ முகம்மது|சாதிக்கு, குலாம்‌ முகம்மது]] 784-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்‌)|சாதுநாத்து சர்க்கார் (சர்‌)]] 784-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்‌|சாந்த கவிராயர்‌]] 784-785 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்‌|சாந்துப்புலவர்‌]] 793-794 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌|சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌]] 805-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர்‌ சீன்பால்|சார்த்தர்‌ சீன்பால்]] 819-820 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்‌|சார்பு விகிதம்‌]] 821-823 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்‌|சார்லமென்‌]] 829-830 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர்‌ இயக்கம்‌|சாரணர்‌ இயக்கம்‌]] 831-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய்‌ உடன்படிக்கை|சால்பாய்‌ உடன்படிக்கை]] 841-842 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்‌|சாலர்சங்கு அருங்காட்சியம்‌]] 847-849 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச்‌ சட்டம்‌|சாலியச்‌ சட்டம்‌]] 851-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப்‌ படுகொலை|சாலியன் வாலாபாகுப்‌ படுகொலை]] 851-853 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்‌|சாவா மனிதன்‌]] 854-855 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌|சான்‌]] 860-863 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌–கு–தாரோ|சான்‌–கு–தாரோ]] 866-867 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌, இலிண்டன்|சான்சன்‌, இலிண்டன்]] 867-868 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌ சாமுவேல்‌|சான்சன்‌ சாமுவேல்‌]] 868-870 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌, சார்லசு|சான்சன்‌, சார்லசு]] 870-871 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ சால்வடார்‌|சான்‌ சால்வடார்‌]] 871-872 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ சாலிசுபரி|சான்‌ சாலிசுபரி]] 872-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌சோசே|சான்‌சோசே]] 879-879 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ நாக்சு|சான்‌ நாக்சு]] 879-880 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ பிரான்சிசுகோ|சான்‌ பிரான்சிசுகோ]] 880-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு|சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு]] 881-882 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்|சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்]] 882-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பூர்|சான்பூர்]] 883-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்போர்டு|சான்போர்டு]] 883-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்மரினோ|சான்மரினோ]] 883-884 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ விக்ளிபு|சான்‌ விக்ளிபு]] 884-886 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாய்வு|சான்றாய்வு]] 886-887 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாவணம்|சான்றாவணம்]] 887-887 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாளர்|சான்றாளர்]] 887-888 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்று|சான்று]] 888-889 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுக் கையொப்பம்|சான்றுக் கையொப்பம்]] 889-889 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுப் பொருள்|சான்றுப் பொருள்]] 889-889 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுறுதி அதிகாரி|சான்றுறுதி அதிகாரி]] 889-890 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானா|சானா]] 890-890 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானீ|சானீ]] 890-890 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானூர்|சானூர்]] 890-892 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சி|சி]] 893-893 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தர் லோடி|சிக்கந்தர் லோடி]] 893-894 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தரா|சிக்கந்தரா]] 894-895 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்‌|சிக்கல்‌]] 895-895 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்கள்‌|சிக்கல்கள்‌]] 895-897 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்‌ தீர்வு காணல்‌|சிக்கல்‌ தீர்வு காணல்‌]] 897-899 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்காசா இந்தியர்|சிக்காசா இந்தியர்]] 899-899 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கிம்|சிக்கிம்]] 899-900 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்குராத்து|சிக்குராத்து]] 900-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்பிரீடு அரண்|சிக்பிரீடு அரண்]] 901-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகண்டி|சிகண்டி]] 901-902 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ|சிகாகோ]] 902-904 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ பொருளாதாரப்‌ பள்ளி|சிகாகோ பொருளாதாரப்‌ பள்ளி]] 904-907 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகிரியா|சிகிரியா]] 907-911 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கப்பூர்‌|சிங்கப்பூர்‌]] 911-912 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கமுகன்|சிங்கமுகன்]] 912-913 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கவேள் குன்றம்|சிங்கவேள் குன்றம்]] 913-913 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்களம்|சிங்களம்]] 913-913 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கள மொழி|சிங்கள மொழி]] 913-914 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்காரவேலு முதலியார், ஆ.|சிங்காரவேலு முதலியார், ஆ.]] 914-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கியாங்கு|சிங்கியாங்கு]] 915-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கையாரியர்|சிங்கையாரியர்]] 915-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்தௌ|சிங்தௌ]] 915-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிச்சென் இட்சா|சிச்சென் இட்சா]] 915-916 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசரோ|சிசரோ]] 916-917 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசிலி|சிசிலி]] 917-920 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசுபால்கர்|சிசுபால்கர்]] 920-920 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்சிவிக்கு என்றி|சிட்சிவிக்கு என்றி]] 920-921 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்டகாங்கு|சிட்டகாங்கு]] 921-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்ரா வளைகுடா|சிட்ரா வளைகுடா]] 922-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி|சிட்னி]] 922-923 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி ஆல்செர்னன்|சிட்னி ஆல்செர்னன்]] 923-924 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி சர்‌ பிலிப்பு|சிட்னி சர்‌ பிலிப்பு]] 924-925 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி பல்கலைக்கழகம்‌|சிட்னி பல்கலைக்கழகம்‌]] 925-925 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி வெபு|சிட்னி வெபு]] 925-927 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டுவின்|சிண்டுவின்]] 927-927 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டோ|சிண்டோ]] 927-928 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்சக்தி|சித்சக்தி]] 928-928 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்|சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்]] 928-929 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தர்கள்|சித்தர்கள்]] 929-931 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தர் சிவப்பிரகாசர்|சித்தர் சிவப்பிரகாசர்]] 931-932 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தரஞ்சன்‌ தாசு|சித்தரஞ்சன்‌ தாசு]] 932-933 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தன் வாழ்வு|சித்தன் வாழ்வு]] 933-933 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தன்ன வாசல்|சித்தன்ன வாசல்]] 933-937 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாந்த சாத்திரம்|சித்தாந்த சாத்திரம்]] 937-938 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாந்தத்‌ தொகை|சித்தாந்தத்‌ தொகை]] 938-938 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தார்|சித்தார்]] 938-939 79jyn14qyqziqck6ty9z0row3fef31v 1961550 1961539 2026-09-02T17:54:46Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1961550 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌|சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌]] 676-677 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்‌|சரக்கு மாற்றகம்‌]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌|சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌]] 688-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச்‌ சட்டம்‌|சரக்கேற்றிச்‌ சட்டம்‌]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌|சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌]] 693-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத்‌ சந்திர சட்டர்சி|சரத்‌ சந்திர சட்டர்சி]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌|சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌]] 706-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌|சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌]] 708-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்‌|சருவோதயம்‌]] 709-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்‌|சலந்தர்‌]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத்‌ தொழில்‌|சலவைத்‌ தொழில்‌]] 714-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்‌|சலாதின்‌]] 716-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால்‌ நேரு|சவகர்லால்‌ நேரு]] 718-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்‌|சன்மார்க்கம்‌]] 730-731 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்‌|சனகன்‌]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735 |- ! colspan="5"|<b>சா </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 747-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்‌|சாங்கியம்‌]] 751-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்‌|சாதபூரா மலைத்தொடர்‌]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 772-773 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்‌|சாதவாகனர்கள்‌]] 773-778 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம்‌ முகம்மது|சாதிக்கு, குலாம்‌ முகம்மது]] 784-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்‌)|சாதுநாத்து சர்க்கார் (சர்‌)]] 784-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்‌|சாந்த கவிராயர்‌]] 784-785 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்‌|சாந்துப்புலவர்‌]] 793-794 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌|சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌]] 805-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர்‌ சீன்பால்|சார்த்தர்‌ சீன்பால்]] 819-820 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்‌|சார்பு விகிதம்‌]] 821-823 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்‌|சார்லமென்‌]] 829-830 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர்‌ இயக்கம்‌|சாரணர்‌ இயக்கம்‌]] 831-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய்‌ உடன்படிக்கை|சால்பாய்‌ உடன்படிக்கை]] 841-842 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்‌|சாலர்சங்கு அருங்காட்சியம்‌]] 847-849 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச்‌ சட்டம்‌|சாலியச்‌ சட்டம்‌]] 851-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப்‌ படுகொலை|சாலியன் வாலாபாகுப்‌ படுகொலை]] 851-853 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்‌|சாவா மனிதன்‌]] 854-855 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌|சான்‌]] 860-863 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌–கு–தாரோ|சான்‌–கு–தாரோ]] 866-867 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌, இலிண்டன்|சான்சன்‌, இலிண்டன்]] 867-868 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌ சாமுவேல்‌|சான்சன்‌ சாமுவேல்‌]] 868-870 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌, சார்லசு|சான்சன்‌, சார்லசு]] 870-871 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ சால்வடார்‌|சான்‌ சால்வடார்‌]] 871-872 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ சாலிசுபரி|சான்‌ சாலிசுபரி]] 872-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌சோசே|சான்‌சோசே]] 879-879 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ நாக்சு|சான்‌ நாக்சு]] 879-880 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ பிரான்சிசுகோ|சான்‌ பிரான்சிசுகோ]] 880-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு|சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு]] 881-882 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்|சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்]] 882-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பூர்|சான்பூர்]] 883-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்போர்டு|சான்போர்டு]] 883-883 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்மரினோ|சான்மரினோ]] 883-884 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ விக்ளிபு|சான்‌ விக்ளிபு]] 884-886 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாய்வு|சான்றாய்வு]] 886-887 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாவணம்|சான்றாவணம்]] 887-887 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாளர்|சான்றாளர்]] 887-888 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்று|சான்று]] 888-889 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுக் கையொப்பம்|சான்றுக் கையொப்பம்]] 889-889 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுப் பொருள்|சான்றுப் பொருள்]] 889-889 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுறுதி அதிகாரி|சான்றுறுதி அதிகாரி]] 889-890 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானா|சானா]] 890-890 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானீ|சானீ]] 890-890 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானூர்|சானூர்]] 890-892 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சி|சி]] 893-893 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தர் லோடி|சிக்கந்தர் லோடி]] 893-894 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தரா|சிக்கந்தரா]] 894-895 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்‌|சிக்கல்‌]] 895-895 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்கள்‌|சிக்கல்கள்‌]] 895-897 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்‌ தீர்வு காணல்‌|சிக்கல்‌ தீர்வு காணல்‌]] 897-899 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்காசா இந்தியர்|சிக்காசா இந்தியர்]] 899-899 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கிம்|சிக்கிம்]] 899-900 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்குராத்து|சிக்குராத்து]] 900-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்பிரீடு அரண்|சிக்பிரீடு அரண்]] 901-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகண்டி|சிகண்டி]] 901-902 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ|சிகாகோ]] 902-904 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ பொருளாதாரப்‌ பள்ளி|சிகாகோ பொருளாதாரப்‌ பள்ளி]] 904-907 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகிரியா|சிகிரியா]] 907-911 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கப்பூர்‌|சிங்கப்பூர்‌]] 911-912 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கமுகன்|சிங்கமுகன்]] 912-913 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கவேள் குன்றம்|சிங்கவேள் குன்றம்]] 913-913 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்களம்|சிங்களம்]] 913-913 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கள மொழி|சிங்கள மொழி]] 913-914 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்காரவேலு முதலியார், ஆ.|சிங்காரவேலு முதலியார், ஆ.]] 914-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கியாங்கு|சிங்கியாங்கு]] 915-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கையாரியர்|சிங்கையாரியர்]] 915-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்தௌ|சிங்தௌ]] 915-915 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிச்சென் இட்சா|சிச்சென் இட்சா]] 915-916 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசரோ|சிசரோ]] 916-917 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசிலி|சிசிலி]] 917-920 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசுபால்கர்|சிசுபால்கர்]] 920-920 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்சிவிக்கு என்றி|சிட்சிவிக்கு என்றி]] 920-921 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்டகாங்கு|சிட்டகாங்கு]] 921-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்ரா வளைகுடா|சிட்ரா வளைகுடா]] 922-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி|சிட்னி]] 922-923 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி ஆல்செர்னன்|சிட்னி ஆல்செர்னன்]] 923-924 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி சர்‌ பிலிப்பு|சிட்னி சர்‌ பிலிப்பு]] 924-925 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி பல்கலைக்கழகம்‌|சிட்னி பல்கலைக்கழகம்‌]] 925-925 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி வெபு|சிட்னி வெபு]] 925-927 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டுவின்|சிண்டுவின்]] 927-927 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டோ|சிண்டோ]] 927-928 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்சக்தி|சித்சக்தி]] 928-928 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்|சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்]] 928-929 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தர்கள்|சித்தர்கள்]] 929-931 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தர் சிவப்பிரகாசர்|சித்தர் சிவப்பிரகாசர்]] 931-932 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தரஞ்சன்‌ தாசு|சித்தரஞ்சன்‌ தாசு]] 932-933 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தன் வாழ்வு|சித்தன் வாழ்வு]] 933-933 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தன்ன வாசல்|சித்தன்ன வாசல்]] 933-937 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாந்த சாத்திரம்|சித்தாந்த சாத்திரம்]] 937-938 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாந்தத்‌ தொகை|சித்தாந்தத்‌ தொகை]] 938-938 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தார்|சித்தார்]] 938-939 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாரல்‌|சித்தாரல்‌]] 939-939 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தி|சித்தி]] 939-940 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தியர்|சித்தியர்]] 940-941 9a8qih1dy9fqdufe57sgjqvddg6n86z பயனர்:Bharathblesson/test 2 645148 1961548 1961088 2026-09-02T15:28:11Z Booradleyp1 1964 /* பட்டியல் */ 1961548 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - செனெக்கா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 |- ! colspan="5"|<b>சே, சை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620 |- ! colspan="5"|<b>சொ, சோ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628- |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726 |- ! colspan="5"|<b>ஞ, ஞா, ட, டா, த</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824 |- |} </div></div></div> </center> ==பட்டியல்== {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவநாதர்|தத்துவநாதர்]] 826-827 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசம்|தத்துவப் பிரகாசம்]] 827-827 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசர்|தத்துவப் பிரகாசர்]] 827-828 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ போதகர்|தத்துவ போதகர்]] 828-828 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவமசி|தத்துவமசி]] 828-829 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவராயர்|தத்துவராயர்]] 829-829 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ வரலாறு|தத்துவ வரலாறு]] 829-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ததீசி|ததீசி]] 833-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திரம்|தந்திரம்]] 833-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திவர்மன்|தந்திவர்மன்]] 833-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்து மாறன்|தந்து மாறன்]] 834-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை உரு|தந்தை உரு]] 834-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைத் தலைமை|தந்தைத் தலைமை]] 834-835 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைமை நிலை ஒப்புகை|தந்தைமை நிலை ஒப்புகை]] 835-836 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தையாட்சிக் குடும்பம்|தந்தையாட்சிக் குடும்பம்]] 836-837 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை வழியினர்|தந்தை வழியினர்]] 837-838 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்தி|தப்தி]] 838-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பிரின் பிரபு|தப்பிரின் பிரபு]] 839-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பெண்ணங்கள்|தப்பெண்ணங்கள்]] 839-840 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்லா பழங்குடிகள்|தப்லா பழங்குடிகள்]] 840-843 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்ளின்|தப்ளின்]] 843-845 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-அக்குபரீ|தபகாத்து-இ-அக்குபரீ]] 845-845 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-நாசரீ|தபகாத்து-இ-நாசரீ]] 845-846 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபோய்|தபோய்]] 846-846 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்|தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்]] 846-846 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபதம்|தம்மபதம்]] 847-847 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபாலர்|தம்மபாலர்]] 847-848 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமயந்தி|தமயந்தி]] 848-849 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமனி மண்டபம்|தமனி மண்டபம்]] 849-849 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாங்கு|தமாங்கு]] 849-849 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு, முதலாம்|தமாசுகசு, முதலாம்]] 849-849 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு (நகர்)|தமாசுகசு (நகர்)]] 849-851 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்|தமிழ்]] 851-851 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை|தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை]] 851-853 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்க்கலை மன்றம், சென்னை|தமிழ்க்கலை மன்றம், சென்னை]] 853-855 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்ச் சங்கங்கள்|தமிழ்ச் சங்கங்கள்]] 855-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்]] 860-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு|தமிழ்நாடு]] 923- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} qljalcexnrx1q64dnoz8c5bshcqg7a7 1961615 1961548 2026-09-03T10:51:49Z Bharathblesson 15164 /* பட்டியல் */ 1961615 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - செனெக்கா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 |- ! colspan="5"|<b>சே, சை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620 |- ! colspan="5"|<b>சொ, சோ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628- |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726 |- ! colspan="5"|<b>ஞ, ஞா, ட, டா, த</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824 |- |} </div></div></div> </center> ==பட்டியல்== {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவநாதர்|தத்துவநாதர்]] 826-827 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசம்|தத்துவப் பிரகாசம்]] 827-827 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசர்|தத்துவப் பிரகாசர்]] 827-828 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ போதகர்|தத்துவ போதகர்]] 828-828 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவமசி|தத்துவமசி]] 828-829 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவராயர்|தத்துவராயர்]] 829-829 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ வரலாறு|தத்துவ வரலாறு]] 829-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ததீசி|ததீசி]] 833-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திரம்|தந்திரம்]] 833-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திவர்மன்|தந்திவர்மன்]] 833-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்து மாறன்|தந்து மாறன்]] 834-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை உரு|தந்தை உரு]] 834-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைத் தலைமை|தந்தைத் தலைமை]] 834-835 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைமை நிலை ஒப்புகை|தந்தைமை நிலை ஒப்புகை]] 835-836 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தையாட்சிக் குடும்பம்|தந்தையாட்சிக் குடும்பம்]] 836-837 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை வழியினர்|தந்தை வழியினர்]] 837-838 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்தி|தப்தி]] 838-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பிரின் பிரபு|தப்பிரின் பிரபு]] 839-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பெண்ணங்கள்|தப்பெண்ணங்கள்]] 839-840 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்லா பழங்குடிகள்|தப்லா பழங்குடிகள்]] 840-843 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்ளின்|தப்ளின்]] 843-845 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-அக்குபரீ|தபகாத்து-இ-அக்குபரீ]] 845-845 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-நாசரீ|தபகாத்து-இ-நாசரீ]] 845-846 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபோய்|தபோய்]] 846-846 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்|தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்]] 846-846 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபதம்|தம்மபதம்]] 847-847 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபாலர்|தம்மபாலர்]] 847-848 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமயந்தி|தமயந்தி]] 848-849 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமனி மண்டபம்|தமனி மண்டபம்]] 849-849 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாங்கு|தமாங்கு]] 849-849 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு, முதலாம்|தமாசுகசு, முதலாம்]] 849-849 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு (நகர்)|தமாசுகசு (நகர்)]] 849-851 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்|தமிழ்]] 851-851 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை|தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை]] 851-853 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்க்கலை மன்றம், சென்னை|தமிழ்க்கலை மன்றம், சென்னை]] 853-855 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்ச் சங்கங்கள்|தமிழ்ச் சங்கங்கள்]] 855-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்]] 860-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு|தமிழ்நாடு]] 923-972 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு மீன்வளம்|தமிழ்நாடு மீன்வளம்]] 972-975 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம்|தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம்]] 975-979 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்|தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]] 979-980 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் நாவலர் சரிதை|தமிழ் நாவலர் சரிதை]] 980-980 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நெறி விளக்கம்|தமிழ்நெறி விளக்கம்]] 980-980 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்ப் பல்கலைக் கழகம்|தமிழ்ப் பல்கலைக் கழகம்]] 980- {{Multicol-break}} {{Multicol-end}} h76fukqvy117kvkwmpo73gj7choer15 அட்டவணை:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf 252 646101 1961594 1943124 2026-09-03T07:26:23Z TVA ARUN 3777 மேம்பாடு 1961594 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=சட்டத்தமிழ் அகராதி |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம் |Address=தஞ்சாவூர் |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:சட்ட அகராதிகள்]] hrftk7b3ozn5a9dy60qq9uqb8qxaynv 1961595 1961594 2026-09-03T07:26:59Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்ப்‌ பல்கலைக்கழக வெளியீடுகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1961595 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=சட்டத்தமிழ் அகராதி |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம் |Address=தஞ்சாவூர் |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:சட்ட அகராதிகள்]] [[பகுப்பு:தமிழ்ப்‌ பல்கலைக்கழக வெளியீடுகள்]] 4xyylq65jmget96fj5u4bio3nbipsp7 1961596 1961595 2026-09-03T07:29:24Z TVA ARUN 3777 மேம்பாடு_விவரக் குறிப்பு சேர்ப்பு 1961596 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=சட்டத்தமிழ் அகராதி |Language=ta |Author=மா. சண்முகசுப்பிரமணியன் , புலமை வேங்கடாசலம் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம் |Address=தஞ்சாவூர் |Year=2013 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:சட்ட அகராதிகள்]] [[பகுப்பு:தமிழ்ப்‌ பல்கலைக்கழக வெளியீடுகள்]] 0ztr1fhd0bifre7utmfz7im4elly893 பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/55 250 650228 1961513 1960606 2026-09-02T12:49:32Z சூலூர் ஆனந்தி 16894 /* மேம்படுத்த வேண்டியவை */ 1961513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /></noinclude>________________ '''Apportion''' '''Apportion''' விகிதப் பகிர்வு செய் To divide and distribute proportionately.விகிதப்படி பகிர்ந்தளி '''Apportionment''' விகிதப் பகிர்வு '''Apportionable''' விகிதப் பகிர்வுறு Capable of being apportioned liable to be apportioned. விகிதப்படி பகிர்ந்தளிப்பதற்குரிய விகிதப்படி பகிர்ந்தளிப்பதற்கு பொறுப்புடைய. '''Appraisal''' மதிப்பிடுதல் An act of estimating or evaluating. மதிப்பீடு செய்தல் '''Appraiser''' பொருள் மதிப்பாளர்; மதிப்பீட்டாளர் A person employed to value goods labour, etc., பொருள்கள், உழைப்பு முதலியவற்றின் விலைமதிப்பைக் கண்டுபிடிக்க நியமிக்கப் பெறுபவர். '''Apportioned'''பகுத்தளிக்கப்பட்ட '''Apprehend''' கைது செய் The act of arresting a person.ஒருவரைக் கைது செய்வது. '''Apprehension''', கைது செய்தல் as to cause reasonable '''(H.M.A.)''தருமான அச்சு ஏற்படுத்தும் வகையில்' '''Apprehension''' கைது செய்தல் Being apprehended or seized in the name of justice or authority. நீதியின் பேராலும் ஆள்வையின் பேராலும் அளைப் பிடித்துக் கைது செய்தல். '''Apprentice''' கைவினை பயில்வோர் Learn of craft. கைவினை பயில்வோர் '''Apprentice-at-law''' வழக்குமுறை பயில்பவர் A graduate student at law learning practice under a legal practitioner. வழக்கறிஞர் ஒருவரிடம் சட்டநடைமுறை பயில்பவர் '''Apprenticeship''' பயிற்சி நிலை Status as an apprentice பயில்வோருக்குரிய தகுநிலை '''Approbate''' ஏற்பு '''Approbate and reprobate''' ஏற்கவும் மறுக்கவும் A person is said to approbate and reprobate when he takes advantage of the beneficial parts of a document or a transaction and rejects the rest. This is not allowed under law. ஓர் ஆவணத்தில் அல்லது காரியத்தில் தனக்குச் சாதகமான பகுதிகளை ஏற்றுக் கொண்டு மற்றவற்றை ஏற்க மறுத்தல். இதனைச் சட்டம் அனுமதிப்பதில்லை. '''Approbation''' ஏற்றுக் கோடல் Approving, formal or authoritative approval. வழக்கப்படி அல்லது ஆள்வையின்படி ஏற்றுக் கொள்ளுதல்.<noinclude></noinclude> d8g7nvy3rcdlnzkxxlozh08shnkoug2 பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/161 250 650332 1961515 1955797 2026-09-02T13:18:41Z Moni JR 16925 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1961515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Moni JR" /></noinclude>________________ '''Due Regard''' சட்டவழி முறை (b) The application of the law as it exists in the fair and regular course of administrative procedure. (ஆ) அமலிலுள்ள சட்டப்படி நேர்மை!யாகவும் ஒழுங்காகவும் நிருவாக நடைமுறை!அமைவது. '''Due Regard''' உரிய மதிப்பு '''Duly''' முறைப்பட '''Dummy''' மாற்று; போலி; பாசாங்கு '''Dummy Candidate''' மாற்று வேட்பாளர் '''Dummy slip''' மாற்றுச் சீட்டு; அடையாளச் சீட்டு '''Duodenitis''' முன்சிறுகுடல் வீக்கம் '''Duodenum''' முன்சிறுகுடல் '''Duplicate Licence''' உரிமப்படி '''Duplication of Proceedings''' நடவடிக்கைகள் இரட்டிப்பாதல் (தீ.தி) '''Dura Mater''' மூளை-முதுகுத்தண்டுச்சூழ்சவ்வு '''Duration''' நிலவுறு காலம் '''Duress''' சிறை வைப்பு; உடற்கட்டாயம் Causing or threatening to cause bodily violence or "imprisonment with a view to] obtain the consent of the other party to the contract. ஒப்பந்தத்திற்கு இசையுமாறு செய்வதற்கு உடல் வருத்தம் விளைவித்தல்; அல்லது சிறைப்படுத்துதல்; அல்லது அவ்வாறு செய்வதாக அச்சுறுத்தல். '''Duty''' வரி, தீர்வை (a) A tax. (அ) வரி (b) It is the correlative of right. (ஆ) உரிமைக்கு மாற்றிணைவானது. '''Duty,on''' அலுவல் கடமையில் '''Duty Allowance''' அலுவற்படி; பணிப்படி '''Duty Chart''' அலுவல் அட்டவணை '''Duty Free''' தீர்வையற்ற '''Dying Declaration''' மரண வாக்குமூலம் Statement made by a dying person as to the injuries which culminated in his death or the circumstances under which the injuries were inflicted. இறக்கும் தறுவாயில் ஒருவர் தமக்கு மரணம் விளைவிக்கும் காயங்கள் ஏற்பட்டதைப் பற்றியோ அத்தகைய காயங்கள் இழைக்கப்பட்ட சூழ்நிலை பற்றியோ கொடுக்கும் வாக்குமூலம்.<noinclude></noinclude> 6m2foxi4h6bnya6eb8kwiohx55r88m0 பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/162 250 650333 1961531 1955798 2026-09-02T14:19:35Z Moni JR 16925 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1961531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Moni JR" /></noinclude>________________ '''Ear Drum''' செவிப்பறை '''Earn''' ஈட்டு To receive as return for work done or services rendered. செய்த வேலைக்கு அல்லது புரிந்த பணிக்குக் கைமாறாக ஊதியம் பெறுதல். '''Earned Leave''' ஈட்டிய விடுப்பு '''Earnest Money''' அச்சாரம், முன்பணம் A nominal sum given by the vendee to the vendor in a contract of sale or the like as a token that the parties are in earnest and" have made up their minds. The vendee will lose his money if he fails to perform his part. ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தரப்பினர்கள் கொண்டுள்ள மன உறுதிக்கு அடையாளமாக வாங்குபவர் விற்பவருக்குப் பெயரளவில் அளிக்கும் தொகை. ஒப்பற் தத்தில் தம் பங்கை நிறைவேற்றத் தவறினால் இத்தொகையை அவர் இழந்துவிடுவார். '''Earning Capacity''' ஈட்டுந் திறன் '''Easement''' வசதியுரிமை,புழக்கவுரிமை An easement is a right which the owner or occupier of a certain property possesses as such for the beneficial enjoyment of that property to do and to continue to do something being done, in or upon, or in respect of, certain other property not his own. (See sec.4, Indian Easements Act) (a) In respect of water (b) In respect of air, (c) In respect of light, (d) Right of way, (e) Right of support, etc. தமக்குச் சொந்தமில்லாத சொத்து ஒன்றில், சொத்தொன்றின் சொந்தக்காரர் அல்லது உடைமையிலுள்ளவர் அதனை அனுபவிப்பதற்கு வசதியாக ஒன்றைச் செய்வதற்கும், தொடர்ந்து அச்செயலைப் புரிவதற்கும், ஏதேனுமொன்று செய்யப்படின் அதைத் தடுப்பதற்கும் உள்ள உரிமை. இதுவே 'வசதியுரிமை' எனப்படும். இதன் வகைகள் வருமாறு: (அ) நீர் வசதியுரிமை. (ஆ) வளி (காற்று) வசதியுரிமை, (3) ஒளி வசதியுரிமை, (ஈ) வழி வசதியுரிமை, (உ) தாங்கு வசதி யுரிமை. '''Easement of Necessity''' இன்றியமையா வசதியுரிமை An easement of necessity is one which is absolutely necessary for the enjoyment of the dominant heritage. அதிகாரமுள்ள சொத்தொன்றை அனுபவிப்பதற்கு இன்றியமையாது வேண்டப்படும் வசதியுரிமை. '''Ectoderm''' புறத்தோல் '''Ectopia Vasical''' இடமகல் நீர்ப்பை '''Edge-Bone''' பிட்ட எலும்பு '''Educational Institution''' கல்வி நிறுவனம் '''Educational Officer''' கல்வி அலுவலர், கல்வி அதிகாரி<noinclude></noinclude> aaqs2zprfxfxr7w9lnsq5rz68t8x4e9 பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/163 250 650334 1961537 1955800 2026-09-02T14:43:36Z Moni JR 16925 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1961537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Moni JR" /></noinclude>________________ '''Educational Qualification''' கல்வித் தகுதி '''Effective''' செயற்பாட்டில் உள்ள; பயனளிக்கும் 1. In operation 1. செயற்பாட்டிலுள்ள 2.Capable of bringing about an effect, productive of result. 2. பயன் விளைவிக்கத்தக்க '''Effective Implementation''' திறம்படச் செல்லாற்றுதல் An implementation which is productive of the desired effect. (See sec. 21(K), Unit Trust of India Act). விரும்பியவிளைவு கிடைக்கும் வகையில் செல்லாற்றுதல். '''Efferent''' நாடிநரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற '''Efferent Nerve''' அகல் நரம்பு '''Efflux of Time''' காலக் கழிவு The lapse or expiry of time. காலம் கழிந்து போதல் '''Either generally or in specified classes of cases''' பொதுவாகவோ, குறித்தவகை நேர்வுகளிலோ '''Either party''' இருவரில் ஒரு தரப்பினா் The one or the other of the two parties. இரு தரப்பினர்களில் எவரேனும் ஒருவர். '''Eject''' வெளித்தள்ளு 1. To evict from property. 1.சொத்திலிருந்து வெளியேற்று 2. To throw out. 2. வெளியே தள்ளு. '''Ejectment''' வெளித்தள்ளல் Action to recover possession of immovable property after evicting another in possession. சொத்தொன்றின் உடைமையிலிருந்து ஒருவரை அப்புறப்படுத்தி, அவ்வுடைமையைத் தாம் பெறுவதற்காக ஒருவர் எடுக்கும் நடவடிக்கை. '''Ejusdem generis, Rule of''' இனங்கொளல் விதி (of the same kind or nature) Where a list of specific items is followed by a general concluding clause, this general clause is deemed to be limited to things of the same kind as those specified. குறிப்பிட்ட காரியங்களைப் பற்றிய பட்டியலுக்கு இறுதியில் பொதுவான சொற்றொடர் வருமாயின், அச்சொற் றொடர் முன்பு கூறப்பட்ட இனத்தில் அடங்குபவற்றையே குறிக்கும் என்று கொள்ளும் விதி. '''Elapse''' கடந்துவிடல் To expire முடிந்துவிடல் '''Elbow''' முழங்கை: கைமூட்டு<noinclude></noinclude> 9y5tbqravazlhxe6bhnzymcr5ewcohn பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/165 250 650336 1961541 1955802 2026-09-02T15:00:12Z Moni JR 16925 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1961541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Moni JR" /></noinclude>________________ '''Election in prospect''' '''Election papers''' '''Election petition''' Petition for enquiry about the validity of elections. '''Election Tribunal''' '''Elector''' (a) One who has the right of choice. (b) A person whose name is in the electoral roll. '''Electoral College''' A body of persons entitled to vote at an election, but not constituted on the basis of a territorial constituency. (See sec.39(1), Representation of the People Act). '''Electoral Constituency''' '''Electoral Registration Officer''' '''Electoral Right''' The right of a person to stand, or not to stand as, or to withdraw from being, a candidate or to vote or refrain from voting at an election.(See sec.171(A)(b) of the | Indian Penal Code). '''Electoral Roll''' An official list of voters at an election. (L.G.P.86). '''Electorate''' The whole body of those entitled to vote at an election. (See sec.10(2)(a); Representation of the People Act) (L.G.P.86). '''Electricity Board''' '''Elementary Education''' '''Eligibility''' '''Eligible''' வரவிருக்கும் தேர்தல் தேர்தல் ஆவணங்கள் தேர்தல் எதிர்ப்புமனு தேர்தல்களின் செல்லுடைமையைப் பற்றி விசாரிக்கும்படி கோரும் மனு. தேர்தல் தீர்ப்பாயம் தேர்ந்தெடுப்பவர் (அ) தேர்ந்தெடுக்கும் வாக்காளர் (ஆ) வாக்காளர் பெற்றவர். வாக்காளர் குழாம் உரிமையுடையவர். பட்டியலில் இடம் நிலவறைத் தொகுதி அடிப்படையிலன்றி. ஒரு தேர்தலில் வாக்குரிமை கொண்டுள்ள குழாம். தேர்தல் தொகுதி தேர்தல் பதிவு அலுவலர், தேர்தல் பதிவு அதிகாரி தேர்தல் உரிமை தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கோ. நிற்காமல் இருப்பதற்கோ வேட்பாளர் நிலையினின்றும் விலகுவதற்கோ வாக் களிப்பதற்கோ அளிக்காமலிருப்பதற்கோ உள்ள உரிமை. வாக்காளர் பட்டியல் ஒரு தேர்தலில் வாக்காளர்களாக உள்ளவர்களின் பட்டியல். வாக்காளர் தொகுதி ஒரு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற வாக்காளர்களின் முழுத்தொகுதி. மின்சார வாரியம், மின் வாரியம் தொடக்கநிலைக் கல்வி எலுமை எலுமையுடைய<noinclude></noinclude> 6f46fyhswip31me32ufbbmh38ro6z17 பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/352 250 650518 1961592 1961504 2026-09-03T07:00:47Z Veerasnmv 16910 1961592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________ '''Private Limited Company''' '''Private Limited Company வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்;வரையறுக்கப்பட்ட தனியார் பங்கமைப்பு''' '''Private nuisance தனித்தொல்லை(தனிமத்தொல்லை)''' A nuisance affecting some particular person or persons as distinguished from the public at large; (See First Schedule, Appendix D, Form No. 14, C.P.C). பொதுமக்களுக்கு அல்லாமல் தனிப்பட்ட நபரை அல்லது நபர்களை பாதிக்கும் தொல்லை.[காண்க:முதல் அட்டவணை,பிற்சேர்க்கை 'டி' படிவம் எண்:14,உ.வி.மு.ச.] '''Private Person தனிநபர்''' A person who does not hold any public office (See sec. 43 and 51 Cr.P.C.) பொதுப்பதவி ஏதும் வகிக்காத ஒரு நபர்.[காண்க:பிரிவுகள் 43,51,கு.வி.மு.ச.] '''Private religious or charitable endowment தனிப்பட்ட சமய அல்லது அறக்கட்டளை''' '''Private right தனிம உரிமை''' A right. which vests in an individual or individuals as such. (See sec. 11, Expla- nation (6), C.P.C). தனிநபர் அல்லது நபர்களுக்கு Private Sector The sphere of private enterprise, (See sec. 2(15), Payment of Bonus Act). Private Transfer An act of parties by which the title to property is conveyed from one person to another. (See sec. 64, C.P.C). Private trust A trust the beneficial interest in which is vested absolutely in one or more indivi- duals; who may be definitely-ascertained. (See preamble, Indian Trusts Act). Private Wrong Privately In a private manner Privies Persons connected together or having mutual interest in the same actiu or thing. 343 Privies வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்; வரையறுக்கப்பட்ட தனியார் பங்கமைப்பு தனித்தொல்லை (தனிமத்தொல்லை) பொது மக்களுக்கு அல்லாமல் தனிப்பட்ட நபரை அல்லது நபர்களைப் பாதிக்கும் தொல்லை.(காண்க: முதல் அட்டவணை, பிற்சேர்க்கை படிவம் எண்.14, உ.வி.மு.ச.] தனிநபர் பொதுப்பதவி ஏதும் வகிக்காத ஒரு நபர் [காண்க: பிரிவுகள் 43, 51, கு.வி.மு.ச.] தனிப்பட்ட சமய அல்லது அறக்கட்டளை தனிம உரிமை தனிநபர் அல்லது நபர்களுக்கு உற்ற உரிமை. (காண்க: பிரிவு 11, விளக்கம் (6), உ.வி.மு.ச.) தனியார் துறை தனியார் தொழிறீ முயற்சித் துறை. [காண்க: பிரிவு 2 (15) மிகை ஊதியம் வழங்கும் சட்டம்] தனிமுறை உரிமை மாற்றம் சொத்தொன்றன் உரிமை மூலமானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தனிமுறையில் மாற்றம் பெறுதல். [காண்க: பிரிவு 64, உ.வி.மு.ச.] தனிப்பொறுப்பமைப்பு குறித்த ஒருவரின் அல்லது பலரின் நலனுக்கென ஏற்படுத்தப்பட்ட பொறுப் படைப்பு. (காண்க: சட்ட முகப்புரை, இந்தியப் பொறுப்புரிமையர்ச் சட்டம்]. தனிமத்தீங்கு தனிமுறையில் தனிப்பட்ட முறையில் இணைவுற்றவர் ஒரு நடவடிக்கையில் அல்லது பொருளில் இணைந்தவர்கள் அல்லது இணையாக நலன் கொண்டவர்கள்.<noinclude></noinclude> bjem2kufxh9obcbd875z1xmzctsnn3u 1961600 1961592 2026-09-03T07:53:13Z Veerasnmv 16910 1961600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________ '''Private Limited Company''' '''Private Limited Company வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்;வரையறுக்கப்பட்ட தனியார் பங்கமைப்பு''' '''Private nuisance தனித்தொல்லை(தனிமத்தொல்லை)''' A nuisance affecting some particular person or persons as distinguished from the public at large; (See First Schedule, Appendix D, Form No. 14, C.P.C). பொதுமக்களுக்கு அல்லாமல் தனிப்பட்ட நபரை அல்லது நபர்களை பாதிக்கும் தொல்லை.[காண்க:முதல் அட்டவணை,பிற்சேர்க்கை 'டி' படிவம் எண்:14,உ.வி.மு.ச.] '''Private Person தனிநபர்''' A person who does not hold any public office (See sec. 43 and 51 Cr.P.C.) பொதுப்பதவி ஏதும் வகிக்காத ஒரு நபர்.[காண்க:பிரிவுகள் 43,51,கு.வி.மு.ச.] '''Private religious or charitable endowment தனிப்பட்ட சமய அல்லது அறக்கட்டளை''' '''Private right தனிம உரிமை''' A right. which vests in an individual or individuals as such. (See sec. 11, Expla- nation (6), C.P.C). தனிநபர் அல்லது நபர்களுக்கு உற்ற உரிமை.[காண்க:பிரிவு 11,விளக்கம்(6),உ.வி.மு.ச.] '''Private Sector தனியார் துறை''' The sphere of private enterprise, (See sec. 2(15), Payment of Bonus Act).தனியார் தொழில் முயற்சித் துறை.[காண்க:பிரிவு 2(15) மிகை ஊதியம் வழங்கும் சட்டம்] '''Private Transfer தனிமுறை உரிமை மாற்றம்''' An act of parties by which the title to property is conveyed from one person to another. (See sec. 64, C.P.C). சுத்தொன்றன் உரிமை மூலமானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தனிமுறையில் மாற்றம் பெறுதல்.[காண்க:பிரிவு Private trust A trust the beneficial interest in which is vested absolutely in one or more indivi- duals; who may be definitely-ascertained. (See preamble, Indian Trusts Act). Private Wrong Privately In a private manner Privies Persons connected together or having mutual interest in the same actiu or thing. 343 Privies வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்; வரையறுக்கப்பட்ட தனியார் பங்கமைப்பு தனித்தொல்லை (தனிமத்தொல்லை) பொது மக்களுக்கு அல்லாமல் தனிப்பட்ட நபரை அல்லது நபர்களைப் பாதிக்கும் தொல்லை.(காண்க: முதல் அட்டவணை, பிற்சேர்க்கை படிவம் எண்.14, உ.வி.மு.ச.] தனிநபர் பொதுப்பதவி ஏதும் வகிக்காத ஒரு நபர் [காண்க: பிரிவுகள் 43, 51, கு.வி.மு.ச.] தனிப்பட்ட சமய அல்லது அறக்கட்டளை தனிம உரிமை தனிநபர் அல்லது நபர்களுக்கு உற்ற உரிமை. (காண்க: பிரிவு 11, விளக்கம் (6), உ.வி.மு.ச.) தனியார் துறை தனியார் தொழிறீ முயற்சித் துறை. [காண்க: பிரிவு 2 (15) மிகை ஊதியம் வழங்கும் சட்டம்] தனிமுறை உரிமை மாற்றம் சொத்தொன்றன் உரிமை மூலமானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தனிமுறையில் மாற்றம் பெறுதல். [காண்க: பிரிவு 64, உ.வி.மு.ச.] தனிப்பொறுப்பமைப்பு குறித்த ஒருவரின் அல்லது பலரின் நலனுக்கென ஏற்படுத்தப்பட்ட பொறுப் படைப்பு. (காண்க: சட்ட முகப்புரை, இந்தியப் பொறுப்புரிமையர்ச் சட்டம்]. தனிமத்தீங்கு தனிமுறையில் தனிப்பட்ட முறையில் இணைவுற்றவர் ஒரு நடவடிக்கையில் அல்லது பொருளில் இணைந்தவர்கள் அல்லது இணையாக நலன் கொண்டவர்கள்.<noinclude></noinclude> db392cjx05e0yqvfwud1sjc0dddgbah 1961603 1961600 2026-09-03T09:11:04Z Veerasnmv 16910 1961603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________ '''Private Limited Company''' '''Private Limited Company வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்;வரையறுக்கப்பட்ட தனியார் பங்கமைப்பு''' '''Private nuisance தனித்தொல்லை(தனிமத்தொல்லை)''' A nuisance affecting some particular person or persons as distinguished from the public at large; (See First Schedule, Appendix D, Form No. 14, C.P.C). பொதுமக்களுக்கு அல்லாமல் தனிப்பட்ட நபரை அல்லது நபர்களை பாதிக்கும் தொல்லை.[காண்க:முதல் அட்டவணை,பிற்சேர்க்கை 'டி' படிவம் எண்:14,உ.வி.மு.ச.] '''Private Person தனிநபர்''' A person who does not hold any public office (See sec. 43 and 51 Cr.P.C.) பொதுப்பதவி ஏதும் வகிக்காத ஒரு நபர்.[காண்க:பிரிவுகள் 43,51,கு.வி.மு.ச.] '''Private religious or charitable endowment தனிப்பட்ட சமய அல்லது அறக்கட்டளை''' '''Private right தனிம உரிமை''' A right. which vests in an individual or individuals as such. (See sec. 11, Expla- nation (6), C.P.C). தனிநபர் அல்லது நபர்களுக்கு உற்ற உரிமை.[காண்க:பிரிவு 11,விளக்கம்(6),உ.வி.மு.ச.] '''Private Sector தனியார் துறை''' The sphere of private enterprise, (See sec. 2(15), Payment of Bonus Act).தனியார் தொழில் முயற்சித் துறை.[காண்க:பிரிவு 2(15) மிகை ஊதியம் வழங்கும் சட்டம்] '''Private Transfer தனிமுறை உரிமை மாற்றம்''' An act of parties by which the title to property is conveyed from one person to another. (See sec. 64, C.P.C). சுத்தொன்றன் உரிமை மூலமானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தனிமுறையில் மாற்றம் பெறுதல்.[காண்க:பிரிவு 64,உ.வி.மு.ச.] '''Private trust தனிப்பொறுப்பமைப்பு''' A trust the beneficial interest in which is vested absolutely in one or more indivi- duals; who may be definitely-ascertained. (See preamble, Indian Trusts Act). குறித்த ஒருவரின் அல்லது பலரின் நலனுக்கென ஏற்படுத்தப்பட்ட பொறுப்படைப்பு.[காண்க:சட்ட முகப்புரை,இந்தியப் பொறுப்புரிமையர்ச் சட்டம்]. '''Private Wrong தனிமத்தீங்கு''' '''Privately தனிமுறையில்''' In a private manner.தனிப்பட்ட முறையில். '''Privies இணைவுற்றவர்''' Persons connected together or having mutual interest in the same action or thing. ஒரு நடவடிக்கையில் அல்லது பொருளில் இணைந்தவர்கள் இணையாக நலன் கொண்டவர்கள்.<noinclude></noinclude> mabbdhvazqbbpd0q8fyv00wz3dlj1gy பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/353 250 650519 1961607 1955985 2026-09-03T09:45:13Z Veerasnmv 16910 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1961607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________ '''Privilege''' '''Privilege சிறப்புரிமை''' A right or immunity granted as a peculiar bene fit or advantage. (See Order XI, rule 19(2), C.P.C). தனிப்பட்ட முறையில் நலனாக அல்லது அனுகூலமாக அளிக்கப்படும் உரிமை அல்லது விலக்களிப்பு.[காண்க:வகுமுறை xl,விதி 19(2) உ.வி.மு.ச.] '''Privilege, Absolute வரம்பற்ற சிறப்புரிமை''' Privilege granted absolutely. நிபந்தனை ஏதுமின்றி அளிக்கப்படும் சிறப்புரிமை. '''Privilege leave உரிமை விடுப்பு''' Privilege, parliamentary. Privilege of the members of the legislature and of the House. சட்டமன்ற சிறப்புரிமை.சட்டமன்ற உறுப்பினர்கட்கும் சட்டமன்ற அவைக்குமுள்ள சிறப்புரிமை. '''Privilege, Qualified வரம்பற்ற சிறப்புரிமை''' Privilege granted subject to certain conditions. குறிப்பட்ட சில நிபந்தனைக்கு உட்பட்டு அளிக்கப்படும் சிறப்புரிமை. '''Privileged communications காப்புடைச் செய்திகள்''' (a) Communications which are Prima facie defamatory and yet are protected from being made a ground of proceedings for defamation on account of certain cir- cumstances under which they are made. (b) Communications which a witness cannot be compelled to divulge in a court of law.(அ)பரிமாறப்படும் செய்திகள் அவதூறாக இருந்தாலும்,குறித்த சூழ்நிலைகளில் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது இயலாது.இத்தகையவை காப்புடைச் செய்திகள் எனப்படும். (ஆ)நீதிமன்றத்தில் சான்றுரைப்போரைக் கட்டாயப்படுத்திக் கூறும்படிச் செய்யக் கூடாத செய்திகள். '''Privilege Occasions சிறப்புரிமைத் தறுவாய்கள்''' '''Privity of Contract ஒப்பந்தப் பிணைப்பு;ஒப்பந்தச் சார்புறவு''' It is the relation subsisting between the parties to a contract. Privity of contract is necessary to enable one person to see another on a contract. ஓர் ஒப்பந்தச் சாராரிடையேயுள்ள உறவு.இந்த் உறவின் அடிப்படையில்தான் ஒருவர் மீது மற்றொருவர் ஒப்பந்த வழக்குத் தொடரமுடியும். '''Privity of Estate சொத்துரிமை உறவு''' Privity of estate is the relation existing between leaser and leasee or joint owners in an estate. ஒரு சொத்தில் குத்தகை அளித்தவர்,குத்தகை எடுத்தவர்,கூட்டுச் சொந்தக்காரர்கள் இவர்களிடையே நிலவும் உறவு. '''Privity of Tenure குத்தகை உரிமை உறவு''' It is the relation subsisting between a land lord or lessor and his immediate tenant and lessee. நிலச் சொந்தக்காரருக்கும் அவரிடமிருந்து நேரடியாகக் குத்தகை பெற்றவருக்கும் இடையே எழும் உறவு.<noinclude></noinclude> f6v2lieroreh996hxbtzimklz1gfvss பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/354 250 650520 1961610 1955986 2026-09-03T10:04:37Z Veerasnmv 16910 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1961610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________ '''Privy''' '''Privy இணைவுற்றவர்''' One who has any part or interest in any action or matter. (See sec. 94 Cr.P.C}. ஒரு செயலில் பங்கு பெற்றவர் அல்லது ஒரு பொருளில் நலனுடையவர்.[காண்க:பிரிவு 94,கு.வி.மு.ச.] '''Privy purse மன்னர்ர் மானியம்''' '''Privy to the Offence குற்ராத்தில் இணைவுற்றவர்''' (See sec. 306. Cr.P.C). [காண்க:பிரிவு 306,சூ.வி.மு.ச.] '''Prize பரிசு''' 1. An honour or reward striven for in a competitive contest; (See sec, 30, Indian Contract Act).ஒரு போட்டியில் ஈடுபட்டு பெற்ற பரிசு.[காண்க: பிரிவு 30,இந்திய ஒப்பந்தச் சட்டம்.] '''Prize court கடல் நிறை தீர்ப்பாயம்''' A tribunal created by a special commission to settle questions of captures at sea in times of war. போர்க்காலத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்த விவகாரங்களைத் தீர்ப்பதற்க்கெனத் தனி ஆணையின்படி நியமிக்கப்பெறும் தீர்ப்பாயம். '''Prize of war கடல் நிறை''' A ship or goods captured at sea or seized in time of war. போர்க் காலத்தில் கடலிலோ,துறைமுகத்திலோ கைப்பற்றப்பட்ட கப்பல் அல்லது பண்டம். Pro Rata In Proportion Pro Tanto To that extent Probability A probability of the existence of a thing or condition is created when there is more evidence in favour of its existence than against it. Probable consequence (See sec. 111, IP.C.) 345 வைாவுற்றவர் Probate ஒரு செயலில் பங்கு பெற்றவர் அல்லது ஒரு பொருளில் நலலுடையவர். (காண்க: பிரிவு 94.கு.வி.மு.ச. மன்னர் மானியம் குற்றத்தில் இணைவுந்தவர் யரிசு (காண்க: பிரிவு 306,ரூ.வி.மு.ச.] ஒரு போட்டியில் ஈடுபட்டு பெற்ற பரிசு. (காண்சு: பிரிவு 30. இத்திய ஒப்பத்தச் சட்டம்] கடல் திறை தீர்ப்பாயம் போர்க்காலத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்த விவகாரங்களைத் தீர்ப்பதற்கெனத் தனி நியமிக்கப்பெறும் தீர்ப்பாயம் கடல் திறை ஆணையின்படி போர்க் காலத்தில் கடலிலோ, துறை முகத்திலோ கைப்பற்றப்பட்ட சுப்பல் அல்லது பண்டம். வீதப்படி; விகிதப்படி விகிதத்தில் அந்த அளவிற்கு அந்த அளவிற்கு நிகழ்தகு நிலை ஒரு பொருள் அல்லது நிலைமை இல்லை என்பதற்கான சான்றுகளைவிட, உள்ளது என்பதற்கான சான்றுகள் மிகுதியாக இருப்பின், அஃது *நிகழ்தகு நிலை எனப்படும். நிகழ்தகு விளைவு Probate A certificate issued under the seal of a court of competent jurisdiction that the will of a certain person has been proved in the court and that administration of his effects has been proved in the court and that administration of his effects has been விருப்புறுதி மெய்ப்பிதழ் (உயில் நிரூபன சான்றிதழ்) ஒருவர் எழுதி வைத்த உயில் பிக்கப்பட்டதென்றும், அதில் கண்டவரும் சொத்தை நிருவகிப்பதற்கான<noinclude></noinclude> b94gwst4owtpzpjv9j464tldkqyhkdb பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/361 250 650526 1961598 1955992 2026-09-03T07:42:25Z Yamini snmv 16936 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1961598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yamini snmv" /></noinclude>________________ '''Proof, Conclusive''' mind of the truth or falsehood of a fact or proposition. (See sec. 51, I.P.C.).மனங்கொள்ள வாழ்கின்ற எதுவும் சான்று றுதி எனப்படும்.[காண்க: பிரிவு 51, இ.த.ச.] '''proof, conclusive அறுதியான சான்றுறுதி;அறுதியான நிரூபணம்''' when one fact is declared by law to be conclusive proof of another, the court shall, on proof of the one fact, regard the other as proved, and shall not allow evidence to be given for the purpose of disproving it. (Sec.4 of the Indian Evidence Act).ஒரு நிகழ்மை மற்றொன்றுக்கு அறுதிச் சான்றெனச் சட்டம் விதித்தால், முதல் நிகழ்மையைப் பொறுத்த சான்றுறுதியின் பேரில் அடுத்த நிகழ்மை மெய்ப்பிக்கப் பட்டதென நீதிமன்றம் ஏற்றல் வேண்டும்; இதைப் பொய்ப்பிப்பதற்கான சான்று எதனையும் நீதிமன்றம் அனுமதிக்காது. [இந்தியச் சான்றியல் சட்டம், பிரிவு 4]. '''proof of service சார்வுக்கான சான்று''' (See order xvi, rule 8C.P.C). {காண்க: வகுமுறை XVI, விதி 8. உ.வி.மு.ச.}. '''proper channel முறைவழீ;''' proper course for anything to move outward;(see order xxvii rule5, C.P.C).ஒன்றை வெளியில் அனுப்புவதற்கு முறையான வழி (காண்க: வகுமுறை XXVII, விதி 5, உ.வி.மு.ச.] "கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர் முறைவழிப் படூஉம்......." -புறநானூறு 192, வரிகள் 8-10 '''proper course முறையான செல்வழி''' '''proper custodian முறையான காப்புடைமையாளர்''' '''proper custody முரையான காப்புடைமை''' (See sec. 90, Explanation, Indian Evidence Act). [காண்க: பிரிவு 90. விளக்கம், இந்தியச் சான்றியல் சட்டம்] '''proper form முறையான படிவம்''' The form in which anything can or ought to be done. (See order xxxiii, rule 4 (1), C.P.C). ஒன்று செய்யப்பட வேண்டிய படிவ அமைப்பு. [காண்க: வகுமுறை XXXIII,விதி 4(1), உ.வி.மு.ச.] '''proper time தக்க காலம்''' The time at which anything can and ought to be done;(See sec.55(1)(d),T.P Act).ஒன்றைச் செய்வதற்கான தக்க நேரம் [காண்க: பிரிவு 55 (1) (டி).சொ.மா. சட்டம்]. '''property சொத்து''' 1.The aggregate of rights of ownership in a thing.சொந்தமான ஒரு பொருளின் மீதமுள்ள உரிமைத் தொகுதி 2.Something that is or may be owned.சொத்திற்கு உரியதான பொருள்.<noinclude></noinclude> 1e2z1dwkak5xg2y0vepo8ouut7uodq8 1961599 1961598 2026-09-03T07:44:10Z Yamini snmv 16936 1961599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yamini snmv" /></noinclude>________________ '''Proof, Conclusive''' mind of the truth or falsehood of a fact or proposition. (See sec. 51, I.P.C.).மனங்கொள்ள வாழ்கின்ற எதுவும் சான்று றுதி எனப்படும்.[காண்க: பிரிவு 51, இ.த.ச.] '''proof, conclusive அறுதியான சான்றுறுதி;அறுதியான நிரூபணம்''' when one fact is declared by law to be conclusive proof of another, the court shall, on proof of the one fact, regard the other as proved, and shall not allow evidence to be given for the purpose of disproving it. (Sec.4 of the Indian Evidence Act).ஒரு நிகழ்மை மற்றொன்றுக்கு அறுதிச் சான்றெனச் சட்டம் விதித்தால், முதல் நிகழ்மையைப் பொறுத்த சான்றுறுதியின் பேரில் அடுத்த நிகழ்மை மெய்ப்பிக்கப் பட்டதென நீதிமன்றம் ஏற்றல் வேண்டும்; இதைப் பொய்ப்பிப்பதற்கான சான்று எதனையும் நீதிமன்றம் அனுமதிக்காது. [இந்தியச் சான்றியல் சட்டம், பிரிவு 4]. '''proof of service சார்வுக்கான சான்று''' (See order xvi, rule 8C.P.C). {காண்க: வகுமுறை XVI, விதி 8. உ.வி.மு.ச.}. '''proper channel முறைவழீ;''' proper course for anything to move outward;(see order xxvii rule5, C.P.C).ஒன்றை வெளியில் அனுப்புவதற்கு முறையான வழி (காண்க: வகுமுறை XXVII, விதி 5, உ.வி.மு.ச.] "கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர் முறைவழிப் படூஉம்......." -புறநானூறு 192, வரிகள் 8-10 '''proper course முறையான செல்வழி''' '''proper custodian முறையான காப்புடைமையாளர்''' '''proper custody முரையான காப்புடைமை''' (See sec. 90, Explanation, Indian Evidence Act). [காண்க: பிரிவு 90. விளக்கம், இந்தியச் சான்றியல் சட்டம்] '''proper form முறையான படிவம்''' The form in which anything can or ought to be done. (See order xxxiii, rule 4 (1), C.P.C). ஒன்று செய்யப்பட வேண்டிய படிவ அமைப்பு. [காண்க: வகுமுறை XXXIII,விதி 4(1), உ.வி.மு.ச.] '''proper time தக்க காலம்''' The time at which anything can and ought to be done;(See sec.55(1)(d),T.P Act).ஒன்றைச் செய்வதற்கான தக்க நேரம் [காண்க: பிரிவு 55 (1) (டி).சொ.மா. சட்டம்]. '''property சொத்து''' 1.The aggregate of rights of ownership in a thing.சொந்தமான ஒரு பொருளின் மீதமுள்ள உரிமைத் தொகுதி 2.Something that is or may be owned.சொத்திற்கு உரியதான பொருள்.<noinclude></noinclude> k7zttulrz8jqq3391k5pfutn1rlembm பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/400 250 650565 1961593 1956031 2026-09-03T07:20:02Z ~2026-47778-56 16992 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1961593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="117.193.16.222" /></noinclude>________________ '''Right in re aliena:''' A right in an encumbrance over a property is right in re aliena. '''மேலமை உரிமை:''' சொத்தொன்றின் மீது அடைமானம், ஒத்திப்போன்ற உரிமை, மேலமை உரிமை எனப்படும். '''Right in re propria:''' Right of ownership in a property is called Right in repropria. '''சொத்தமை உரிமை:''' சொத்தொன்றைப் பொருத்து ஒருவருக்குள்ள அடிப்படை உரிமை 'சொத்தமை உரிமை' எனப்படும். '''Right, Legal:''' A legal right is one which are recognised by the courts of law on the strength of statutes or other rules. '''சட்டமுறை உரிமை:''' இயற்றப்பட்ட சட்டத்தின் அல்லது சட்ட விதிகளின் அடிப்படையில் நீதிமன்றத்தால் ஏற்கப்படும் உரிமை. மேல் முறையீடு உரிமை. '''Right of appeal:''' மேல்முறையீட்டு உரிமை '''Right of disposal:''' (See sec. 25 (2), Sale of Goods Act). '''முடிவுறுத்தும் உரி :''' [காண்க: பிரிவு 25(2), பண்டங்கள் விற்பனைச் சட்டம்]. '''Right of future maintenance:''' (See sec. 6 (dd), T.P.Act). '''எதிர்கால வாழ்க்கைப்பொருளுதவி பெறும் உரிமை:''' [காண்க:பிரிவு 6(டிடி), சொ.மா.சட்டம்]. '''Right of lieu:''' (See secs. 46(2), 47 and 48, Sale of Goods Act). '''பற்றுரிமை:''' (காண்க: பிரிவுகள் 46(2), 47,48, பண்டங்கள் விற்பனைச் சட்டம்]. '''Right of pre-emption:''' (See sec. 8, Limitation Act). '''வாங்கும் முன்னுரிமை:''' (காண்க: பிரிவு 8, காலவரையறைச் சட்டம்]. '''Right of Private defence:''' (See ss. 96, 97 and 98 1.P.C) காண்க Private defence, Right of '''Right of Private defence of body:''' உடற்காப்புரிமை '''Right of Private defence of property:'''பொருட்காப்புரிமை '''Right of redemption:''' (See First Schedule. Appendix D, Form No.4, C.P.C). '''அடைமான மீட்புரிமை:''' (காண்க: முதல் அட்டவணை, பிற்சேர்க்கை டி, படிவம் எண்:4, உ.ந.மு.ச.J. '''Right of Re-entry:''' (See sec. 6(b), T.P.Act) '''உடைமைமீட்புரிமை:''' (காண்க: பிரிவு 6(பி), சொ.மா.சட்டம்]. '''Right of Suit:''' (See sec. 91 (2), C.P.C). '''வழக்கிடு உரிமை:''' (காண்க: பிரிவு 91(2), உ.த.மு.ச.). '''Right of User:''' பயன்படுத்து உரிமை (See sec. 147 (1), Cr.P.C). '''Right of way:''' (See First Schedule, Appendix A, Form No. 25, C.P.C). 391 '''வழிவசதி உரிமை:''' (காண்க: முதல் அட்டவணை, பிற்சேர்க்கை 'எ', படிவம் எண்:25. உ.ந.மு.ச.) .<noinclude></noinclude> dokkiik8gbzx8s3u9slme1l541zj8q3 பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/401 250 650566 1961597 1956032 2026-09-03T07:42:13Z ~2026-47778-56 16992 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1961597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="~2026-47778-56" /></noinclude>________________ # RIGHTS — ENGLISH & TAMIL '''Right, Perfect''' A right recognised by law and enforced by it. '''செயலுறும் உரிமை''' சட்டத்தால் ஏற்கப்பட்டு செல்லுறுத்தப்படும் உரிமை. ''' Right, Personal''' The sum total of a man's personal rights constitutes his status and is termed as personal right. ''' தனிநிலை உரிமை''' நபரொருவரது தனிநிலை உரிமைகளின் அடிப்படையில், அவரது மதிப்புநிலை அமைகின்றது; இவ்வுரிமைகள் தனிநிலை உரிமை எனப்படும். '''Right, Primary''' Normally all rights which have some other source than wrongs are called primary rights. '''முதல்நிலை உரிமை''' பிறர் விளைக்கும் தீங்கு எதனோடும் தொடர்பின்றி ஒருவருக்குள்ள உரிமை, முதல்நிலை உரிமை எனப்படும். '''Right, Principal''' The basic right in a property is called principal right. ''' தலைமையுரிமை''' சொத்தொன்றின் மீதான அடிப்படை உரிமை தலைமையுரிமை எனப்படும். ''' Right, Private''' Right belonging to any particular person or persons. '''தனிம உரிமை''' தனிப்பட்ட நபர் அல்லது நபர்களுக்கான உரிமை. '''Right, Proprietory''' The aggregate of a man's rights in his property (estate) is termed as proprietory right. '''சொத்துநிலை உரிமை''' நபரொருவரின் சொத்தின் மீதான உரிமைகளின் தொகுப்பு சொத்துநிலை உரிமை எனப்படும். '''Right, Public''' Right belonging to the public at large. '''பொதும உரிமை''' பொதுமக்கள் அனைவருக்குமான உரிமை. '''Right, Sanctioning''' A sanctioning is one which arises out of the violation of another right. '''தீர்வுநிலை உரிமை''' உரிமையொன்று மீறப்பட்டு, அதற்குத் தீர்வாக எழும் உரிமை தீர்வுநிலை உரிமை எனப்படும். '''Right, Vested''' A right is called a vested right when all the facts have occurred which must by law occur in order for the person in question to have the right. '''நிறைவுற்ற உரிமை''' நபரொருவருக்கு ஓர் உரிமை சேர்ந்தடைய வேண்டுமெனில் என்னென்ன காரியங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமோ, அவையனைத்தும் நிகழ்ந்து முடிந்த நிலையில், அது நிறைவுற்ற உரிமையாகும். ''' Right to air''' வளிவசதி உரிமை ''' Right to begin''' (வாதம்) தொடங்கும் உரிமை 12. '''Right to claim''' (See Sec. 46, Indian Contract Act) '''கோருரிமை''' [காண்க: பிரிவு 45, இந்திய ஒப்பந்தச் சட்டம்] **Page 392**<noinclude></noinclude> ni7e8v10bc0u3nt3sohhr6e7eksdzze பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/677 250 650825 1961617 1956291 2026-09-03T11:38:39Z சூலூர் ஆனந்தி 16894 /* மேம்படுத்த வேண்டியவை */ 1961617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /></noinclude> '''UNESCO''' யுனஸ்கோ United Nations Educational, Scientific and cultural organisan. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் '''Unfit person''' தகுதியற்ற நபர் A person not fit for some purpose or something; an unsuitable person (S.121(1), Cr. P.C.). சில நோக்கங்களுக்கும் ; சிலவற்றிற்கும் பயன்படாத நபர்; பொருத்தமற்ற ஒரு நபர் '''Unforeseen''' Not seen before-hand; not expected (S. 464, ill. (f), I.P.C.); (S.17(2), Land Acquisition Act). எதிர்பார்க்க முடியாத; முன்கூட்டியே காணமுடியாத '''Unhealthy precedent''' தவறான முன்னுதாரணம் '''Unicameral legislature''' ஒரே அவையுடைய சட்டமன்றம் '''Unification''' ஒன்றாக இணை '''Unified scale''' ஒற்றுமைப்படுத்தப்பட்ட ஒருங்கிணைத்த சம்பற ஏற்றமுறை '''Uniform increase''' ஒரே சீரான உயர்வு '''Uniform taxation''' சமச்சீர் உயர்வு '''Uniformity''' ஒருசீரிமை; ஒத்திசைவான; ஒரே மாதிரியான '''Unilateral''' ஒருதலையான; ஒருதலைப்பட்சமான '''Unimpeachable''' நாடாளுமன்றத்தில் பெருங்குற்றம் சாட்ட இயவாத: பிழைக்கப்பாற்பட்டு; குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்ட '''Unincorporated''' கூட்டுருவாக்கப் பெறாத '''Uninterrupted service''' இடைமுறிவில்லாப் பணி; இடையறாத / தொடர் பணி '''Uninon council''' ஒன்றிய மன்றம் / ஒன்றியக்குழு '''Union list''' ஒன்றிய அதிகாரப் பட்டியல் / மத்திய அரசு அதிகாரப் பட்டியல் '''Union territory''' ஒன்றிய ஆட்சிப்பரப்பு: ஒன்றிய மண்டலம் ; யூனியன் பிரதேசம்<noinclude></noinclude> 8flom9nldllisycpineyvf1wbwg1hj7 பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/683 250 650830 1961524 1956296 2026-09-02T13:46:23Z சூலூர் ஆனந்தி 16894 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1961524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="சூலூர் ஆனந்தி" /></noinclude> '''Value or amount of the subject matter''' '''Value realised in the sale''' '''Variability of investment''' '''Veracity of evidence''' '''Verbal assault''' '''Verbal discussion''' '''Verbal evidence''' Verbal order Verbal statement '''Verbal warranty''' '''Verbatim report''' '''Verdict''' '''Verification''' '''Verification of antecedents''' '''Verification of stores''' '''Verification sheet''' '''Verified and found correct''' '''Verified copy''' '''Vested interest''' '''Vested remainder''' வழக்குப் பொருளின் மதிப்பு அல்வது தொகை விற்பனையில் விற்றுப் பெற்ற தொகை மதிப்பு முதலீட்டின் மாறுபடும் தன்மை சாட்சியத்தின் வாய்மை வாய்மொழியான தாக்குதல் வாக்குவாதம் / வாய்வழிக் கலந்தாய்வு வாய்மொழி சாட்சியம் வாய்மொழி ஆணை / சொல்லால் கட்டளையிடு வாக்குரை / வாய்மொழி விளக்கம் / சொல்லி விளக்கு வாய்மொழி உத்தரவாதம் சொல்லுக்கு சொல்லால் ஆன அறிக்கை தீர்ப்புரை; ஆய்வுமுடிவு; தீர்ப்பாய முடிவு சரிபார்த்தல்; உண்மையுறுதி வரைவு; ஒப்பாய்வு முந்தைய நிகழ்வுகளை விசாரித்தறிதல் / சரிபார்த்தல்; முன்போக்கினை அறித்து சான்றனித்தல் பண்டங்களைச் சரிபார்த்தல் சரிபார்த்த தாள் சரியெனக் கண்டு சரிபார்க்கப்பட்டபடி / நகல் சேர்ந்தடை உரிமை; மேவிநிற்கும் உரிமை உரிமை இலக்காகப்படுத்தல்; அடைவுறும் எஞ்சுரிமை<noinclude></noinclude> 9zpzfqb2c3exrkcvcqbkpsuj1kpbuje பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/684 250 650831 1961521 1956297 2026-09-02T13:40:16Z சூலூர் ஆனந்தி 16894 /* மேம்படுத்த வேண்டியவை */ 1961521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /></noinclude>________________ '''Vested right''' உரிமை அறுதியுறப் பெறுதல் '''Vested with the government''' அரசிடம் மேவி இருத்தல் வேண்டும்/ உற்றடைதல் வேண்டும் '''Vexatiously''' அலைக்கழிக்கிற தொந்திரவு செய் '''Vicarious liability''' பகராள் கடப்பாடு: கூட்டுப் பொறுப்பு பகரப் பொறுப்புநிலை '''Vicarious pleasure''' பகராள் துய்க்கும் இன்பம் '''Vicious atmosphere''' குற்றமுறுசூழல் / பொல்லாப்புடைய தருணம்/ சமயம்/ தவறான வழிகளில் ஈடுபடுகிற சூழல் '''View of the bifurcation, in''' இரண்டாகப் பிரிக்கும் காரணத்தால் '''Vigilance clearance''' விழிப்புப் பணித்துறை தடைநீக்கம் / அனுமதிக் குறிப்பு '''Vigilantibus non-dormientibus Jura Subveniunt''' தூங்காது இயங்கும் விழிப்புடையோரை சட்டத்தின் உதவி காலப் பெறுநர் '''Voidable contract''' தவிர்தகு ஒப்பந்தம் '''Voidable marriage''' தவிர்தகு திருமணம் '''Volenti non-fit Injuria''' இசைந்தேற்றல் தீங்காகாது '''Voted by legislative assembly''' சட்டமன்றப் பேரவையால் வாக்களிக்கப்பட்ட / அனுமதிக்கப்பட்ட '''Voting by ballot''' வாக்குச் சீட்டு முறைப்படி வாக்களி<noinclude></noinclude> id63xd6kbrhxikk0jmlcxo829xwtcql பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/685 250 650832 1961517 1956298 2026-09-02T13:23:59Z சூலூர் ஆனந்தி 16894 /* மேம்படுத்த வேண்டியவை */ 1961517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /></noinclude>________________ '''Wage administration''' ஊதிய நிருவாகம் '''Wage payment''' கூலி/ஊதியம் வழங்கல் '''Wage regulation''' கூலி ஒழுங்கடைவு / நிர்ணயம் '''Waiting list''' பின்னிருப்போர் / காத்திருப்போர் பட்டியல் '''Waiting list may be renewed''' காத்திருப்பவர் பட்டியல் புதுப்பிக்கப்படலாம் '''Wakf board''' வக்ஃவாரியம் / இசுலாமிய அறக்கட்டளை '''Want of due execution''' முறையான நிறைவேற்றம் தேவை Deficiency in the due performance of all formalities, as signing, sealing etc. necessary to give validity to a legal instrument (S.92, prov. (1), Indian Evidence Act). '''Want of jurisdiction and excess of jurisdiction''' தேவையான அதிகாரவரம்பும் அதிகார வரம்பை மீறுதலும் There is a distinction between "want of jurisdiction" and "excess of jurisdiction" where the officer has no jurisdiction at all his act would be ultra vires but where, on an investigation of the circumstances which would give him jurisdiction, an officer decides or acts in a particular manner, any mistake as to the facts of the deciding factor<noinclude></noinclude> gjcb313t6v1opr75xphtvubw9qhyls5 விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி 4 651247 1961519 1961305 2026-09-02T13:37:33Z Neyakkoo 7836 /* வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் */ - {{ஆயிற்று}} 1961519 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === ==== தொடக்கநிலைப் பயிற்சி ==== * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்) |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || || |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || || |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || || |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || || |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || || |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || || |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || || |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || || |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} ==== ஆய்வுநிலைப் பயிற்சி ==== * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] ==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ==== # [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}} # [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}} # [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] - {{ஆயிற்று}} # [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]] # [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}} # [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]] # [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]] # [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]] # [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]] # [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]] ==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ==== * [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]] * [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]] == பயில்க == ==பயில்வோர்== * [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC) # ===11.08.2026=== *[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC) ===20.08.2026 (நேரடிப் பயிற்சி)=== *[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * செயல்பாடுகள் ** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம் ** ஒப்பமிடும் முறை ** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன ** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) #---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC) #—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC) # --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC) # --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC) ===25.08.2026=== *[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை] * செயல்பாடுகள் ** ஒப்பமிடும் முறை ** படம் செதுக்கல் பயிற்சி ** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன ** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் * பயிற்சிக்குரிய நூல் ** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] ** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}} ** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] ** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]] #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC) #[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC) #[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC) # # # # # # # # # ===01.09.2026=== *[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை] * செயல்பாடுகள் ** புதிய பயனர் கணக்கு உருவாக்கம் ** ஒப்பமிடும் முறை ** படம் செதுக்கல் பயிற்சி ** வருடல் செய்யும் முறை ** பிழைநீக்கப் பயிற்சி ** விக்கிநூல்கள் திட்டத்தில் நூல் உருவாக்கும் முறை - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்] - ஆகியன நிகழ்ந்தன ** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் * பயிற்சிக்குரிய நூல் ** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] ** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}} ** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] ** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]] #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC) #[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:10, 1 செப்டெம்பர் 2026 (UTC) #--[[சிறப்பு:Contributions/&#126;2026-47490-86|&#126;2026-47490-86]] ([[பயனர் பேச்சு:&#126;2026-47490-86|talk]]) 14:13, 1 செப்டெம்பர் 2026 (UTC) # # # # # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == * [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம் * புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] * விக்கிநூல்கள் - நூல் உருவாக்கம் - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்] === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] rkmh6mdn9v1mdhqgtjqk4r3ga25pfxg 1961522 1961519 2026-09-02T13:40:40Z Neyakkoo 7836 /* 01.09.2026 */ வருடல் பணி {{ஆயிற்று}} 1961522 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === ==== தொடக்கநிலைப் பயிற்சி ==== * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்) |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || || |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || || |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || || |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || || |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || || |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || || |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || || |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || || |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} ==== ஆய்வுநிலைப் பயிற்சி ==== * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] ==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ==== # [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}} # [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}} # [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] - {{ஆயிற்று}} # [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]] # [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}} # [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]] # [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]] # [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]] # [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]] # [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]] ==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ==== * [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]] * [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]] == பயில்க == ==பயில்வோர்== * [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC) # ===11.08.2026=== *[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC) ===20.08.2026 (நேரடிப் பயிற்சி)=== *[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * செயல்பாடுகள் ** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம் ** ஒப்பமிடும் முறை ** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன ** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) #---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC) #—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC) # --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC) # --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC) ===25.08.2026=== *[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை] * செயல்பாடுகள் ** ஒப்பமிடும் முறை ** படம் செதுக்கல் பயிற்சி ** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன ** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் * பயிற்சிக்குரிய நூல் ** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] ** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}} ** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] ** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]] #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC) #[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC) #[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC) # # # # # # # # # ===01.09.2026=== *[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை] * செயல்பாடுகள் ** புதிய பயனர் கணக்கு உருவாக்கம் ** ஒப்பமிடும் முறை ** படம் செதுக்கல் பயிற்சி ** வருடல் செய்யும் முறை ** பிழைநீக்கப் பயிற்சி ** விக்கிநூல்கள் திட்டத்தில் நூல் உருவாக்கும் முறை - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்] - ஆகியன நிகழ்ந்தன ** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் * பயிற்சிக்குரிய நூல் ** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] ** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}} ** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}} ** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]] #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC) #[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:10, 1 செப்டெம்பர் 2026 (UTC) #--[[சிறப்பு:Contributions/&#126;2026-47490-86|&#126;2026-47490-86]] ([[பயனர் பேச்சு:&#126;2026-47490-86|talk]]) 14:13, 1 செப்டெம்பர் 2026 (UTC) # # # # # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == * [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம் * புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] * விக்கிநூல்கள் - நூல் உருவாக்கம் - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்] === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] 8nprd7phc7ct18alr47giwss3qethev விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5 4 651574 1961552 1961363 2026-09-03T01:36:01Z Info-farmer 232 /* இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை */ + # [[அட்டவணை:திராவிட நாடு 1953 Jan 14-TVA PRL 0001827-derivative-சிறுகதை-ரொட்டி-தஞ்சைவீழ்ச்சி.pdf]] 1961552 wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026 *'''முடிவு''': 30 செபடம்பர் 2026 ** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.]) * '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' : * [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] === பின்புலம் === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == உரிமமும், மின்வருடல் பணியும் == * இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன. * '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.''' * '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன். == அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் == * தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] * [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]] * [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]] * [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]] == இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் == === இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை === * [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]] # [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1951 march 18-TVA PRL 0003725-derivative-சிறுகதை-மனிதமந்தை.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1953 Jan 14-TVA PRL 0001827-derivative-சிறுகதை-ரொட்டி-தஞ்சைவீழ்ச்சி.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]] # [[அட்டவணை:]] # [[அட்டவணை:]] # [[அட்டவணை:]] === நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை === # [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]] {{tick}} # [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]] {{tick}} # [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்-]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]] {{tick}} #*நூல் வடிவில் ஒரு பத்தி இல்லை. இதழ் வடிவில், முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. # [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]] - இதனை லீலா சுரேஷ் செய்து முடிப்பார். # [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]] {{tick}} #* கண்டெடுக்கப்பட்ட இதழ் வடிவில், ஒரு பக்கம் தெளிவாக இல்லை. # [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1951 feb 04-TVA PRL 0003720-derivative-சிறுகதை-கருப்பண்ணசாமி.pdf|இதழ் வடிவம் - கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!]] # [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]] # [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]] # [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]] # [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]] == உயவுத் துணைகள் == * [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்] [[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]] 0hwnki1gbu3i7u381gqbae5ljt0jscj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/826 250 651690 1961546 1958744 2026-09-02T15:27:23Z Booradleyp1 1964 1961546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவங்கள்|798|தத்துவநாதர்}}</noinclude>ஒரு பழத்தைப் பழம் என எவ்வாறு காண்பது? அகங்கார தத்துவம் எழுச்சியை உண்டாக்க, அப்போது பழத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்ணை அடைகின்றன. ஒளிக்கதிர்கள் கண்ணை அடைவதை மனம் பற்றும். அகங்காரம், மனம் ஆகிய தத்துவங்களின் தொழிற்பாட்டால், சங்கற்ப விகற்பம் செய்யும்போது (அதாவது இதுவோ அதுவோ என்று ஐயப்படும்போது), புத்தி தத்துவம் பழம் என்று நிச்சயிக்கும். புத்தி தத்துவம் பொருளை நிச்சயிப்தற்கு. அது இன்ன பொருள் என்று அறியச் சித்தத்தின் செயற்பாடு தேவைப்படுகிறது. சித்தம் என்பது நினைவுகளின் தொகுப்பு. பார்க்கப் படும்பொருள் என்ன என்பது சித்தத்திடம் கேட்கப்பட, சித்தம் இன்ன பொருள் இப்படியிருக்கும் என்று நினைவிலிருந்து தெரிவிக்க, அப்போது ஆன்மா புத்தி தத்துவத்தில் மூலம் நிச்சயிக்கும். இதுவரை கண்ட இருபத்து நான்கு தத்துவங்களும் ஆன்ம தத்துவங்கள் எனப்படும். இறைவன் சீகண்டருத்திரர் வாயிலாகப் பிரகிருதி மாயையில் இருந்து இவற்றைத் தோற்றுவிப்பர். குண தத்துவத்தில் உள்ள சத்துவ குணம், இராசத குணம், தாமத குணம் ஆகிய மூன்றும் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கிலும் கலந்திருக்கும். உலகம் முக்குண மயம் என்று சொல்லப்படும். எடுத்துக்காட்டாகக் காற்று மென்மையாக வீசும் போது சத்துவ குணத்தோடு அது கலந்து நிற்கிறது எனக் கொள்ள வேண்டும். சண்ட மாருதமாக வீசும்போது இராசத குணத்தோடு அது கலந்து நிற்கிறது எனக் கொள்ள வேண்டும். காற்றே வீசாமல் புழுக்கமாக இருக்கும்போது தாமத குணத்தோடு அது கலந்து நிற்கிறது எனக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தத்துவத்திலும் அவ்வப்போது காணப்படும் குண நிலையை வைத்து இன்ன குணம் மிகுந்திருக்கிறது என அறியலாம். <b>அசுத்த மாயா கருவிகள்</b>: காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என அசுத்த மாயாதத்துவங்கள் ஏழாகும். இவற்றை வித்தியா தத்துவங்கள் என்றும் சொல்லலாம். இறுதியாக உள்ள மாயை, காலம் நியதி முதலிய தத்துவங்களுக்குத் தாயாக விளங்குவதால் அதனைக் காரணமாக வைத்து ஏனையவற்றைக் காரியமாகக் கொண்டு சாத்திரங்கள் விளக்கும். அதனால்தான் அவை காரியத்துள் சேர்க்கப்படாமல் இறுதியில் தனியே வைக்கப்பட்டுள்ளன. <b>காலம்</b>: காலம் கண்ணால் காண இயலாவிடினும் நேற்று, இன்று, நாளை என மூவகையாக உணரப்படுகிறது. இவை இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என்றும் சொல்லப்படுகின்றன. <b>நியதி</b>: நியதித் தத்துவம் அவரவர் செய்த வினையை அவரவரே அனுபவிக்ககும்படி செய்வதோடு எவ்வாறு அனுபவிக்கவேண்டும் என்பதையும் வரையறுக்கும். இன்ன வினைக்கு இன்ன பயன் என்பதை நியதித்தத்துவத்தைக் கொண்டுதான் இறைவனின் திருவருட் சக்தி நிருணயம் செய்கிறது. <b>கலை</b>: முதல் முதல் ஆன்மா எவ்வித இயக்க முமின்றி ஆணவமலத்துன் கிடக்கும்போது இறைவன் ‘கலை’ என்னும் கருவியைப் படைத்து ஆன்மாவுக்கு அளிக்கிறான். அல்கருவி ஆன்மாவின் கிரியா சத்தியை எழுப்புகிறது. கலை என்பதற்கு நீக்குதல், செலுத்துதல் என்னும் இருபொருள்கள் உண்டு. ஆன்மாவின் கிரியா சத்தியை மறைத்திருந்த ஆணவ மலத்தைச் சிறிது நீக்கி அதனைச் செலுத்துதல் ‘கலை’யின் தொழிலாகும். <b>வித்தை</b>: கலையால் கிரியா சக்தி விளங்கப் பெற்ற ஆன்மா வித்தை என்னும் கருவியால் ஞான சக்தி விளங்கப்பெறுகிறது. வித்தை புத்தி தத்துவத்திற்கு உட்கருவியாய் விளங்குகிறது. <b>அராகம்</b>: அராகம் என்றால் விருப்பம் என்று பொருள். ஆன்மாவின் இச்சா சக்தியை அராக தத்துவம் எழுப்புகிறது. மனம் ஆசைப்படும் கருவியாதலால் அராக தத்துவம் மனத்திற்கு உட்கருவியாக விளங்குகிறது. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்ற ஐந்து தத்துவங்களும், ஐந்து சட்டைகளைப் போல் மனிதனுக்கு அமையும் நிலையில் ஆன்மா புருட தத்துவம் என்னும் பெயர் பெறுகிறது. நுகர்வோனாகும் தன்மையில் நுகரப்படும் பொருளாக உள்ளது. வித்தியா தத்துவத்தின் இறுதியில் உள்ள மாயை என்பது. ஆன்மதத்துவங்களை இயக்கும் சிவதத்துவம் உடலில் தசைமடண்லத்தை இயக்கும் நரம்பு மண்டலம் போன்றுள்ளது. இத்தத்துவம் சிவம், சக்தி, சாதாக்கியம், ஈசுரம் ஆகிய அனைத்தையும் இயக்கும்.{{Right|<b>ச.க.</b>}} <section end="தத்துவங்கள்"/> <section begin="தத்துவநாதர்"/> {{dhr}} <b>தத்துவநாதர்</b> என்பவரைச் ‘சீகாழித் தத்துவநாதர்’ எனவும் கூறுவர். இவர், துகளறு போதம் இயற்றிய சீகாழிச் சிற்றம்பல நாடிகளின் மாணவர். மெய்கண்ட சாத்திரம் பதினான்கனுள் ஒன்றாய இருபா இருபதுக்கு ஒரு சிறந்த உரை எழுதியிருக்கிறார். இருபா இருபது உரை எழுதினோன்...... சிற்றம்பல நாடி தாள் பணிவோன் சண்பை நகர<noinclude></noinclude> 9v4i5i9qdyr132lwpwcxlnyxjgfg0zp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/827 250 651691 1961547 1958745 2026-09-02T15:27:50Z Booradleyp1 1964 1961547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவப் பிரகாசம்|799|தத்துவப் பிரகாசர்}}</noinclude>தத்துவநாதன்’ என்னும் பழஞ்செய்யுட் பகுதியிலிருந்து இவ்வுண்மைகள் நன்கு விளங்கும், இவர் காலம் சிற்றம்பல நாடிகள் காலத்தை ஒட்டியதாதலீன் கி.பி.1350-75 ஆகலிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பதினான்கு சாத்திரங்களுள் ஒன்றாய உண்மை நெறி விளக்கம் என்னும் நூலையும் இத்தத்துவநாதரே இயற்றினார் எனச் சிலர் கூறுவர். ஆனால் இதுகாறும் வெளிவந்த பதிப்புகள் எல்லாவற்றிலும் உமாபதி சிவாசாரியாரே சித்தாந்த நூல்கள் எட்டு இயற்றினார் என்றும், அவை ‘சித்தாந்த அட்டகம்’ என்று சுருதப்படுமென்றும், அவ்வட்டகத்துன் ஒன்று உண்மை நெறி விளக்கம் என்றும் காணப்படுகின்றமையை யாவரும் உணர்வர். இத்தத்துவ நாதர் இருபா இருபதுக்கு எழுதிய உரை காலத்தால் மிகவும் பழமையான உரையாகும். இவ்வுரைக்கு முன்னரே இந்நூலுக்கு ஒரு பழைய உரை இருந்திருக்க வேண்டுமென்பது இவர் உரையிலிருந்து தெரிகிறது. தத்துவநாதர் தம் உரையில், முன்னோர் இயற்றிய பல சாத்திர நூல்களிலிருந்து மேற்கோள்கள் பல கொடுத்திருக்கிறார். அந்நூல்களுன் சில இப்போது கிடைக்கவில்லை. அதனால், பழைய நூல்களின் பெயர்கள் சிலவற்றை அறிந்து கொள்ளவும் இவர் உரை துணை செய்கிறது.{{Right|<b>இரா.ச.</b>}} <section end="தத்துவநாதர்"/> <section begin="தத்துவப் பிரகாசம்"/> {{dhr}} <b>தத்துவப் பிரகாசம்</b>: தத்துவப்பிரகாசம் என்னும் நூல் சீகாழித் தத்துவப் பிரகாசரால் இயற்றப் பெற்றது. இந்நூலாசிரியர் சீகாழிச் சிற்றம் பல நாடிகளின் மாணவர்; இவர் காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டு; இந்நூலுக்கு இவர் மாணவரே உரை செய்திருக்கிறார், தத்துவம் என்பது தத்துவம் (பாசம்), ஆன்மா, சிவன் என்னும் மூன்று பொருள்களையும் குறிக்கும். ஆகவே, இம்முப்பொருள்களையும் விளக்கவல்லது இந்நூல் என்பது தெளிவாம்; மேலும் சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றி விளக்கிக் கூறவல்ல சிறந்த நூலாகவும் திகழ்கிறது. இந்நூலில் 338 திருவிருத்தங்கள் உள்ளன. முதல் 304 பாக்கள் எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருந்தங்களாகவும் எஞ்சியவை அறுசீர்க்கழி நெடிலடி விருத்தங்களாகவுமுள்ளன. இறுதியாக நூற் சிறப்புப் பாயிரம் என ஒரு செய்யுளை உரையாசிரியர் பாடிச் சேர்த்திருக்கிறார். முதலாவது பாயிரத்தில் கடவுள் வாழ்த்துச் செய்யுள்களும் அவையடக்கமுமாக எட்டுச் செய்யுள்கள் உள்ளன. இரண்டாவது அளவை எனும் பகுதியில் 9 பாடல்களில் 7 அளவைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பின்னர், பதி இலக்கணம் 19 பாடல்களிலும், பசு இலக்கணம் 5 பாடல்களிலும், பாச இலக்கணம் 16 பாடல்களிலும் கூறப் பெறுகின்றன. பின் பொதுவிதி என சரியையிற்சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம், கிரியையில் சரியை, கிரியையில் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம், யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம், ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என 16 பிரிவுகளைப் பற்றி 111 பாடல்களில் விளக்கியுள்ளார். அக்கினி காரியம், போசனவிதி, நிவேதன விதி, தீக்கை விதி, ஆசாரியின் இலக்கணம், சீடன் கணம், பூசை விதிகள், பல்வகைப் பட்ட தீக்கை முறைகள், அபிடேக விதி, அந்தியேட்டி விதிகள் முதலியன வெல்லாம் கிரியைப் பகுதிகளில் மிகவும் சிறப்பாக விளக்கம் பெற்றுள்ளன. அடுத்து ஞானத்தில் ஞானப் பகுதியில் மேலும் 74 பாடல்களில் பல்வேறு வகையான சமயக் கொள்கைகளையும் அவற்றிற் குரிய மறுப்புகளையும் காணலாம். பின்னர் 30 அவதாரம் சொல்லப் பெறுகிறது. அவற்றில் சிவன் முத்தி நிலையில் இருக்கும் ஆன்மா அந்நிலையில் நின்று வழுகிய காலத்து மீண்டும் அந்நிலைக்குச் செய்யத் தலைப்படுங்கால் முப்பொருள்களின் உண்மை நிலையை உணர்ந்து மேல் நோக்கிச் செல்லும் நெறியில் உள்ள 30 படிமுறைகள் சொல்லப்பெறுகின்றன. சுத்தாவத்தையில் நிகழ்வுறும், பின் நிட்டை வகைகள் கூறப் பெறுகின்றன. ஞானி ஞான நிட்டையிலிருக்கும் நிலையும் கூறப் பெறுகிறது. அவருக்கு வினைப்பயன் ஏறாது. ஆதலின் சிவயோகத்து அழுந்துதலால் பாச நீக்கம் கிட்டும். பாசம் நீங்குவதால் மலம் நீங்கிச் சிவப்பேறு சித்திக்கும். இறுதியாகச் சீவன் முத்தி நிலையும் குருலிங்க சங்கம வழிபாடும் கூறுவதுடன் இந்நூல் முடிகின்றது. இந்நூல் நந்தியருள் நூல், சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், ஆகம நூல்கள் என்பவற்றையே முதனூல்களாகக் கொண்டு அவற்றின் வழி நூலாக விளங்குகின்றது. சந்தான ஆசாரியர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சிறந்த சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் தலையிடத்தை பெறும் தருதி வாய்ந்தவற்றுள் இந்நூலும் ஒன்று என்பது தெளிவு. ‘தன்னை அறிவிக்கும் தற்போதம் மாற்றுவிக்கும் அன்ன அருள் ஆனந்தம் ஆற்றுவிக்கும் மன்னிய சீர்த் தத்துவப்ரகாசனியல் சண்பையார் கோன் உரைத்த தத்துவப்ரகாச நூல் தான்’ என்னும் நூற் சிறப்புப் பாயிரமே இந்நூலின் பெருமையை நன்கு விளக்கவல்லதாயுளது.{{Right|<b>இரா.ச.</b>}} <section end="தத்துவப் பிரகாசம்"/> <section begin="தத்துவப் பிரகாசர்"/> {{dhr}} <b>தத்துவப் பிரகாசர்</b>: இவர் சீர்காழிச் சிற்றம் பல நாடிகளின் மாணவர். தத்துவப் பிரகாசம் என்னும் ஒரு சிறந்த சாத்திர நூல் இயற்றியவர் தத்துவப் பிரகாசர் என்னும் பெயர் வாய்ந்தவர்கள்<noinclude></noinclude> 2td08z839qp1gc5co5l55dzm1az1k54 பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/688 250 652664 1961514 1961166 2026-09-02T13:09:07Z சூலூர் ஆனந்தி 16894 /* மேம்படுத்த வேண்டியவை */ 1961514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /></noinclude> '''Wilful disobedience'''வேண்டுமென்றே கீழ்ப்படியாமை If the disobedience is the result of some compelling circumstances under which it was not possible to comply with the order, it is not wilful disobedience. Niaz Mohammed v. State of Haryana, AIR 1995 SC 30 சில கட்டாய சூழ்நிலைகளின்கீழ் கீழ்ப்படி யாமை என்பது ஏற்பட்டால், அந்த உத் தரவை ஏற்று நடக்க வேண்டுமென்ற அவசிய மில்லை. அது வேண்டுமென்றே கீழ்ப்படி யாமையாகாது.8, 311. (Contempt of Courts Act (70 of 1971), S. 2(b)) '''Window clearance, single'''தடைநீக்கு ஒரு முனை வசதி; ஒற்றைச் சாளர முறை '''Wing, official language''' ஆட்சி மொழிப்பிரிவு / சரகம் '''Wipe out''' துடைத்தெறி/அகற்று '''Wiped out'''காலத்தால் மறைந்து போதல் '''Wiping out the debt''' கடனை இல்லாத்தாக்கு '''With a stroke of pen'''ஒரே வரியில் எளிதாக '''With a view to''' நோக்கில்; நோக்குடன் '''With best compliments from''' ...டம் இருந்து அன்பளிப்பு பாராட்டுதல்கள் உடன் '''With concurrence of''' ஒருங்கிசைவு/ இசைவுடன்/ உடன்பாட்டுடன் '''With due regard to''' உரிய கவனத்துடன் '''With effect from the date he assumes charge of his office''' அவர் பதவிப் பொறுப்பு மேற்கொண்ட தேதியிலிருந்து செயல் விளைவு பெறும் '''With full particulars''' முழுவிவரங்களுடன் '''With intent of''' உள்நோக்கத்துடன் '''With intent to defraud''' மோசடி செய்யும் கருத்துடன் '''With reference to''' பார்வையில் கண்டது தொடர்பாக '''With reference to his application dated...shri...is offered a post of''' அவர் தேதியிட்ட விண்ணப்பம் தொடர்பான பார்வையைக் குறித்து இவருக்கு இப்பதவி அளிக்கப்பட்டுள்ளது<noinclude></noinclude> nqek16xip4rw8roe91cue2rh5v2ijqv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/935 250 652891 1961528 2026-09-02T14:05:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாளமாக நடுவில் ஒரு பள்ளம் உள்ளது. முன் மண்டபத்தின் பக்கச் சுவர்களில் உள்ள மாடங்களில் இரண்டு தீர்த்தங்கரரின் சிற்பங்கள் செதுக்கப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தன்ன வாசல்‌|909|சித்தன்ன வாசல்‌}}</noinclude>யாளமாக நடுவில் ஒரு பள்ளம் உள்ளது. முன் மண்டபத்தின் பக்கச் சுவர்களில் உள்ள மாடங்களில் இரண்டு தீர்த்தங்கரரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு சிற்பம் ஒரு குடையோடு உள்ளது. மற்றொன்று பார்சுவநாதர் சிலையாகும். பார்சுவநாதர் சிற்பம் ஐந்து தலை நாகக் குடையோடு உள்ளது. இக்குடைவரை கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் சீமாற சீ வல்லபன் என்னும் பாண்டிய மன்னன் காலத்தில், இளங் கௌதமன் என்னும் சமணத் துறவியால் புதுப்பிக்கப்பட்டு, முன் மண்டபம் எழுப்பப்பட்டு வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. சித்தன்ன வாசலின் வரலாற்றை கி.பி. 10–ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அறிய இயலவில்லை. எவ்வாறு இவ்வூர் அழிவுற்றது என்பதை அறியத்தக்க சான்றுகளும் இல்லை. இன்று, இக்குடை வரையும் அவற்றிலுள்ள ஓவியங்களும் தேசிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, இந்தியத் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 935 |bSize = 480 |cWidth = 206 |cHeight = 198 |oTop = 247 |oLeft = 24 |Location = center |Description = }} {{center|ஈமச் சின்னங்கள்}} <b>கல்வெட்டுகள்:</b> பழமையான கி.மு. 2–ஆம் நூற்றாண்டுப் பிராமி எழுத்து வடிவிலான கல்வெட்டொன்று குகைத் தளத்தில் உள்ளது. இக்கல்வெட்டு குமுட்டூரில் பிறந்த காபுடி ஈதென் என்னும் சமண முனிவருக்குச் சிடு பொசில் என்ற ஊரைச் சார்ந்த இளையார் என்பவர் தாம் அமைத்துத் தந்த படுக்கையைத் தானமாக அளித்ததைக் குறிப்பிடும். இக்கல்வெட்டு வாசகத்தைப் பலரும் பல விதமாகப் படித்துள்ளதால் சற்றுக் குழப்பம் மிக்குள்ளது. எனினும், மேற்கண்டவாறு பொருள் கொள்ளுவதில் தவறில்லை. இக்குகைத் தளத்தில் கி.பி. 10–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சில கல்வெட்டுகளில் சமண முனிவர்கள் எனக் கருதப்படுவோரின் பெயர்கள் சில வெட்டப்பட்டுள்ளன. அடிவாரத்திலுள்ள அறிவர் கோவிலுக்குத் தென்புறத்திலுள்ள கல்வெட்டு பாண்டிய மன்னன் சீமாற சீ வல்லபன் (கி.பி. 815–862) காலத்தது, இக்கல்வெட்டு பாடல் வடிவில் உள்ளது. மதுரை ஆசிரியரான இளங்கௌதமன் என்னும் சமணத் துறவி, அண்ணல் வாயிலில் உள்ள அறிவர் கோயிலின் முன் மண்டபத்தைக் கட்டுவித்து, மற்றப் பகுதிகளைப் புதுப்பித்தான். மேலும், இக்கோயில் பூசை செய்யும் பூசாரிக்கு, அரைக் காணி நிலமும், மெழுக்குப் புறத்திற்காக மூன்று மாநிலமும் தந்ததை இக்கல்வெட்டுக் குறிக்கிறது. மற்றொரு கல்வெட்டு வள்ளலௌவன் என்பான் கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் கோவிலைப் புதுப்பித்தமை பற்றிக் குறிப்பிடுகிறது. <b>ஓவியங்கள்:</b> அறிவர் கோவிலிலுள்ள ஓவியங்கள் மிகச் சிறப்பானவை. இவை 1935 – ஆம் ஆண்டு தூப்ரே (Jouveau Dubreuil) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. உள்விதானத்திலும், வெளி மண்டபத் தூண்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை பல்லவ மகேந்திரவர்மன் காலத்தில் தீட்டப்பட்டவை என்று முதலில் கருதப்பட்டது. ஆயினும், இப்போது, கி.பி. 9–ஆம் நூற்றாண்டு ஓவியங்கள் எனவும், பாண்டியன் சீ வல்லபன் காலத்தவை எனவும் தீர்மானித்துள்ளனர். இந்த ஓவியங்கள் இரண்டு அடுக்குகளாக உள்ளன. மேலடுக்கு கி.பி. 9–ஆம் நூற்றாண்டையும் கீழடுக்கு சற்று முற்பட்ட காலத்தையும் சார்ந்தனவாகலாம். கீழடுக்கு ஓவியங்களைப் பற்றி மற்ற விவரங்கள் கிடைத்தில. உள் விதானத்திலுள்ள ஓவியம் தாமரைத் தடாகமாகும். தாமரைத் தடாகத்தில் இளஞ் சமணத் துறவிகள் மலர் கொய்யும் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. பல நிலைகளில் தாமரை மலர்கள், இலைகள், துள்ளி விளையாடும் மீன்கள், அன்னங்கள், ஆனந்தக் களிப்பில் இருக்கும் எருமைகள், யானைகள் ஆகியன தீட்டப்பட்டுள்ளன. பூக்குலையோடு உள்ள சமணத் துறவிகள் மலர் கொய்யும் பாவனையில் தீட்டப்பட்டுள்ளனர். இவ்வோவியம், ‘சமவசரண’ என்ற சமண தத்துவ அடிப்படையைக் கொண்டது என்பர். முன் மண்டபத்துத் தூண்களிலுள்ள ஓவியங்களுள் நடன நங்கையர் இருவர் ஓவியங்கள் சிறப்பானவை. நடன முத்திரைகளையும் முகபாவத்தையும் நன்கு வெளிப்படுத்தும் வண்ணம் ஓவியமாகத் தீட்டியுள்ளனர். நடன மங்கையரின் அலங்காரம், ஆடை மடிப்புகள் ஆகியன எல்லாம் நன்கு மனத்தைக் கவரக் கூடியவை. அரச தம்பதியர் உருவமும் மிகச் சிறப்பாகத்<noinclude></noinclude> jti2rumd6iu6goqu156qrp0wjascbqm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/936 250 652892 1961529 2026-09-02T14:12:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 936 |bSize = 480 |cWidth = 312 |cHeight = 248 |oTop = 73 |oLeft = 87 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 936 |bSize = 480 |cWidth = 311 |cHeight = 247 |oTop = 332..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தன்ன வாசல்‌|910|சித்தன்ன வாசல்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 936 |bSize = 480 |cWidth = 312 |cHeight = 248 |oTop = 73 |oLeft = 87 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 936 |bSize = 480 |cWidth = 311 |cHeight = 247 |oTop = 332 |oLeft = 86 |Location = center |Description = }}<noinclude></noinclude> 7czjmm42apohnqi7ja6h0q3ds5h9m7m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/937 250 652893 1961533 2026-09-02T14:28:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தீட்டப்பட்டுள்ளது. இவை பாண்டிய மன்னன், அரசி ஆகியோரது உருவங்களாக இருக்கலாம். இவ்வுருவங்கள் அசந்தாக் கலைப் பாணியிலிருந்து மாறுபட்டுத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தாந்த சாத்திரம்‌|911|சித்தாந்த சாத்திரம்‌}}</noinclude>தீட்டப்பட்டுள்ளது. இவை பாண்டிய மன்னன், அரசி ஆகியோரது உருவங்களாக இருக்கலாம். இவ்வுருவங்கள் அசந்தாக் கலைப் பாணியிலிருந்து மாறுபட்டுத் தென்னிந்தியக் கலைப்பாணியில் தீட்டப்பட்டவையாகும். வண்ணங்கள் ஒட்டுதற்கான பசையின்றி, ஈரமான சுண்ணாம்புக் காரையைப் பயன்படுத்தி, ஈரம் காய்வதற்கு முன் வண்ணங்களைத் தீட்டியுள்ளனர். இவ்வண்ணங்கள் யாவும் தாவர வண்ணங்களே. இங்குத் தீட்டப்பட்ட வண்ணங்களுள் முக்கியமானவை காவி (சிவப்பு) பச்சை, கறுப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகியவை ஆகும். {{Right|<b>பா.ச.</b>}} <section end="சித்தன்ன வாசல்‌"/> <section begin="சித்தாந்த சாத்திரம்"/> {{dhr}} {{larger|<b>சித்தாந்த சாத்திரம்:</b>}} மெய்கண்ட சாத்திரமென்றும் சித்தாந்த சாத்திரமென்றும் வழங்கும் பதினான்கு சாத்திர நூல்களும் மெய்யறிவு கொளுத்தும் நூல்கள். அவையாவன: 1. திருவுந்தியார், 2. திருக்களிற்றுப்பாடியார், 3. சிவஞான போதம், 4. சிவஞான சித்தியார், 5. இருபா இருபஃது, 6. உண்மை விளக்கம், 7. சிவப்பிரகாசம், 8. திருவருட்பயன், 9. வினாவெண்பா, 10. போற்றிப் பற்றொடை 11. கொடிக்கவி, 12. நெஞ்சு விடுதூது, 13. உண்மை நெறி விளக்கம், 14. சங்கற்ப நிராகரணம். மேற்கூறிய சித்தாந்த சாத்திரங்களில் மிகவும் அறியப்படுவதும் சிறப்பானதும் சிவஞான போதமாகும். அது மெய்கண்ட தேவரால் அருளப்பட்டது. அதில் பன்னிரண்டு சூத்திரங்கள் அடங்கியிருக்கின்றன. அவை கடவுள், ஆன்மா, பாசம் ஆகியவற்றைப் பற்றிய சைவ சித்தாந்தக் கொள்கைகளைத் தம்முள் கொண்டுள்ளன. இச்சூத்திரம் ஒவ்வொன்றிற்கும், மெய்கண்டாரே சிறிய மேற்கோள்களும் எடுத்துக்காட்டுகளும் கொடுத்திருக்கிறார். சிவஞான போதத்திற்கு அடுத்தபடியாகச் சிறப்பு வாய்ந்தது சிவஞான சித்தியார். அது இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் முற்பகுதி பரபக்கம், அப்பகுதியில் சித்தாந்தத்திற்கு எதிரான பதினான்கு தத்துவ சாத்திர வாதங்கள் மறுக்கப்பட்டுள்ளன. சித்தியாரின் பிற்பகுதி சுபக்கமெனப்படும். அதில் அளவை தொடர்பான ஒரு பகுதியும், சிவஞான போதத்தின் விரிவாக விளக்குகின்ற பகுதிகளும் சூத்திரத்தை அடங்கியிருக்கின்றன. அத்துவை இயற்றியவர் அருள் நந்தி சிவம். சிவஞான சித்தியாருக்குப் பல உரைகள் இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது சிவஞான தேசிகரும் சேர்ந்து யோகியாரும், சுப்பிரமணிய வகுத்த இருவர் உரையாகும். மேலும் நிரம்பவழகியர், சிவாக்கிரயோகி, மறைஞான தேசிகர், ஞானப் பிரகாசர் ஆகியோர் தனித்தனியே சுபக்கத்திற்கு உரை கண்டுள்ளார்கள். தத்துவப் பிரகாசத் தம்பிரான் சுவாமி என்பார் பரபக்கத்திற்கு உரை எழுதியுள்ளார். இருபா இருபஃது என்பது ஒரு குருவுக்கும், மாணாக்கருக்கும், கடவுள், ஆன்மா, பாசம் ஆகியவற்றைக் குறித்து நடந்த கலந்தாய்வாகும். அந்நூல் அருள் நந்தி சிவத்தால் இயற்றப்பட்டது. திருவியலூரைச் சார்ந்த உய்யவந்த தேவர் திருவுந்தியாரை அருளிச் செய்தார். அந்நூலில் முத்தியை அடையும் வழிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. திருக்களிற்றுப்படியார் என்னும் நூல் திருவுந்தியாருக்கு உரையாகக் கருதப்படுகிறது. அந்நூலை இயற்றியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். உண்மை விளக்கம் எனப்படும் நூல் மற்றொரு ஆய்வு நூலாகும். அந்நூலில் மாயையினின்றும் தோன்றும் தத்து வங்களைப் பற்றியும், சிவபெருமானின் திருநடனத்தைப் பற்றியும், பஞ்சாட்சர உண்மையைக் குறித்தும், முத்தியைக் குறித்தும் பல கருத்துகளை அறியலாம். சித்தாந்த சாத்திரத்தைச் சேர்ந்த மற்றைய நூல்கள் உமாபதி சிவம் என்பவரால் இயற்றப்பட்டன. அவர் தமிழ் நாட்டிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு அருகிலுள்ள கொற்றவன்குடி என்னும் இடத்தில் வாழ்ந்து சைவத் தொண்டுகள் புரிந்து பின் சமாதி அடைந்தார். அவர் நூல்களுள் மிகச் சிறந்தது சிவப்பிரகாசம். இதில் பதி, பசு, பாச உண்மைகளை விரிவாகக் காணலாம். அடுத்தபடியாக, திருவருட் பயன் என்னும் நூல் கடவுள், ஆன்மா, ஆணவம், அருள் முதலிய பல பொருள்களைப் பற்றி விவரிக்கிறது. வினா வெண்பா என்ற நூல் சித்தாந்த சாத்திரத்தின் சில பகுதிகளைத் தெளிவாக்கிக் கூறுகின்றது. போற்றிப் பஃறொடை என்னும் செய்யுள் சிவன் செயல் ஒவ்வொன்றும் ஆன்மாக்களுக்கு நன்மை பயப்பதே என்று கூறுகிறது. கொடிக்கவி என்னும் செய்யுளில் ஆன்மா முத்திநிலையடையும் பொருட்டுப் படிப்படியாக முன்னேறிச் செல்வது கொடியேற்றத்தை ஒத்திருக்கிறது என விளக்கப்பட்டிருக்கிறது. நெஞ்சு விடுதாது மறைஞான சம்பந்தருக்கு அஞ்சலியாகப் பாடப் பெற்றதாகும். அதில் பதிபசு, பாச உண்மைகள் கூறப்படுவதோடு சைவ சமயத்திற்கு மாறான மற்றைய சில மதங்கள் மறுக்கப்பட்டும் உள்ளன. சங்கற்ப நிராகரணம் என்னும் நூல், சைவ சித்தாந்தத்தை ஒட்டிய மார்க்கங்களையும் அதற்கு எதிரான மார்க்கங்களையும் சுருக்கமாகக் கூறி, அவற்றின் கொள்கைகளை மறுக்கிறது. பண்டார சாத்திரங்கள் யாவும் பொதுவாகத் தென் இந்தியாவிலுள்ள சைவ மடங்களிலிருந்து சைவத்தை வளர்த்த சிவனடியார்களால் தோற்றுவிக்கப்பட்டன. அச்சாத்திரங்களில் அத்துறவிகளின் ஆராய்ச்சிகளையும், அவர்களுடைய ஆசாரியர்களின் அறிவுரைகளையும் காணலாம். இப்பண்டார சாத்திரங்கள் பலப் பல. அவற்றுள் சிறந்தன பல<noinclude></noinclude> bzdq3okuldyrm5ean1220wjasjyekjs பக்கம்:அறுவகை இலக்கணம் 1978.pdf/13 250 652894 1961534 2026-09-02T14:30:40Z Vishal mohan.17 16991 Ocr 1961534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Vishal mohan.17" /></noinclude>முதலாவது எழுத்திலக்கணம் உரு ஓசையியல்பு தொகை தமிழ்ப்பெயர் முது'கலை தன்னைச் சுட்டிய பெரியோர் மலர்த்தாட் பிரசஞ் சூடி யான்சொலத் துவக்கும் இருமூன் றிலக்கணத்(து) எழுத்திலக் கணம்முன் இயம்புவன் சிறிதே. 1.மொழி. 5 உயிர்என்று, ஆய்தம்என்று, ஒற்றென்று, உயிர்மெய் 'அலகென்று, கூட்டென்று அறுவகை எழுத்தும் (என்று அன்றிக் 'குறிப்பென்(று) அவைசில உளவே. 1. அளவை 2. ஒலிக்குறிப்பு. இருநிலத்து யாம்உணர் எழுத்தினம் ஏழில் நால்வகை எழுத்தே நவிலும் மற்றைய, மூவிதப் 'பொறிகளின் முதலெனக் கருதி அவ்வா றோதும் அவர்சிலர் உளரே. 1. எழுத்து 2. அலகு, கூட்டு, குறிப்பு என்னும் 2 8 மூவகை எழுத்திற்கும் உயிர், மெய், ஆய்தம், உயிர்மெய் என்னும் நான்குமே முதலாவன எனக் கருதிச் சிலர் நான்கெழுத்துக் களுக்கே இலக்கணம் கூறினர் என்றவாறு, ஆவி ஈரா (று) ஆய்தம் ஒன்(று) உடல் அறுமூன்(று) உயிர்மெய் யாம் இவை இருநூற்(று) ஒருபதிற் றாறு அல குடைமை நால்வகை கூட்டும் குறிப்பும் *குணிக்கரும் விதமே. 1. கணக்கிடுதற் கரியன. எழுத்தெனல் 'வடிவுடன் ஓசையும் உடைத்(து) அவற்று உருவியல் பனைத்தும் உணர்வார் சிற்சிலர்.<noinclude></noinclude> gfccwsgprnyrlv4u1iwy5uzku393f88 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/938 250 652895 1961538 2026-09-02T14:46:02Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருவாவடுதுறைச் சைவ ஆதீனத்தையும், தருமபுரச் சைவ ஆதீனத்தையும் சேர்ந்த பெருந்துறவிகளால் இயற்றப்பட்டன. அவையாவன: அம்பலவாணர் தசகாரியம், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தாந்தத்‌ தொகை|912|சித்தார்}}</noinclude>திருவாவடுதுறைச் சைவ ஆதீனத்தையும், தருமபுரச் சைவ ஆதீனத்தையும் சேர்ந்த பெருந்துறவிகளால் இயற்றப்பட்டன. அவையாவன: அம்பலவாணர் தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாக்கிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை, உபதேச வெண்பா, பஞ்சாக்கரப் பஃறொடை, சித்தாந்த சிகாமணி, உபாய் நிட்டை வெண்பா, நிட்டைவிளக்கம், உபதேசப் பஃறொடை, அதிசயமாலை, தக்கிணாமூர்த்தி தேசிகரியற்றிய தசகாரியம், நமச்சிவாய மாலை ஆகியனவாம். {{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Devasenapathi, V.A.,</b> Saiva Siddhanta, University of Madras, 1974 <b>Naliaswami pillai J.M.,</b> Studies in Saiva Siddhanta, Dharmapuram Adinam, 1962. <b>Siddhalingaiah T.B.,</b> Origin and Development of Saiva Siddhanta upto 14th Century, Madurai Kamaraj University, 1979. <section end="சித்தாந்த சாத்திரம்‌"/> <section begin="சித்தாந்தத் தொகை"/> {{dhr}} {{larger|<b>சித்தாந்தத் தொகை:</b>}} சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்றாகிய சிவஞான சித்தியாரின் பரபக்க உரையினாலும் சமணசமய நூலாகிய நீலகேசி உரையினாலும் அறியக்கூடியதும், இக்காலத்தில் அழிந்துபட்டதுமாகிய ஒரு தமிழ்நூல். சித்தியார்ப் பரபக்க உரையாசிரியர் திருவொற்றியூர் ஞானப் பிரகாசர் ‘முழுதுணர்ந்து’ என்னும் பாடலில் சௌந்திராந்தக மதம் பற்றி விளக்குகையில் (சித்தி.பர. 2–3–1), ‘அருநெறியாற் பாரமிதை ஆறைந்தும் உடன் அடக்கி எனத் தொடங்கும் பாடல் முழுவதையும் மேற்கோள் காட்டி, என்பது சித்தாந்தத் தொகை’ என்று குறிப்பிட்டுள்ளார். நீலகேசிக் காப்பியத்தின் புத்தவாதச் சருக்கத்திலுள்ள ‘உள்ளஞ் செல்லுடம்பு’ (நீல.புத்த. 64) எனத் தொடங்கும் பாடலின் உரையில் அவ்வுரையாசிரியர், ‘மருள்தரு மனம் வாய்மெய்யில் கொலை முதல் வினை பத்தாமே’ என்ற செய்யுளைக் காட்டி என்பது சித்தாந்தத் தொகை என்று காட்டியுள்ளார். இவ்விரு நூல்களிலும், காட்டப்பட்டுள்ள ‘சித்தாந்தத் தொகை’யின் பாடல்கள் பௌத்த சமயக் கோட்பாடுகளை விளக்குவனவாக உள்ளன. அதனால், சித்தாந்தத் தொகை, புத்த சமயக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் ஒரு சமய நூல் என்பது புலனாகிறது. இவ்விரு மேற்கோட் பகுதிகளைத் தவிரப் பிறிதொன்றும் கிடைக்காமையினால் இந்நூலின் ஆசிரியர், காலம் பற்றிய யாதொன்றும் அறியக்கூடவில்லை. ‘தொகை’ என்னும் பெயர் நோக்கி இந்நூல் ஒருவரால் செய்யப்பட்டதா அன்றிப் பலரால் செய்யப்பட்டதா என்ற ஐயமும் அறிஞர்களிடையே தோன்றியுள்ளது. மணிமேகலை இறுதிக் காதையில் நல்வினை பற்றிக் கூறுங்கால் ‘நல்வினை என்பது யாதென வினவில் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலந்தாங்கித் தானந்தலை நின்று’ என்று விளக்கிச் செல்கிறது (மணி. 30;76–73). சொல்லிய பத்தின் தொகுதி என்றதனை விளக்கும் வகையில், ‘மருள்தரு மனம்’ எனத் தொடங்கும் இந்நூலின் பகுதி அமைந்துள்ளது. இதனை நோக்குங்கால் புத்த சமய சாத்திரக் கருத்துக்களைத் தொகுத்துரைக்கும் புத்த சமய சாத்திரத் தமிழ் நூலாக இது அமைந்திருந்தது என்பது புலனாகும். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சித்தாந்தத்‌ தொகை"/> <section begin="சித்தார்"/> {{dhr}} {{larger|<b>சித்தார்</b>}} என்னும் இசைக்கருவி வட இந்தியாவில் உருவாகிய கம்பி வாத்தியமாகும். இக்கருவியை இசையரங்குகளில் தனியாகவும், கூட்டு வாத்தியமாகவும் பயன்படுத்துவர். இது தமிழகத்து வீணையைப் போன்று மீட்டி வாசிக்கப்படும் கருவியாகும். வீணையில் காணப்படாத சிறப்புக் கூறுகள் இதில் காணப்படுகின்றன. காச்சாவா (Kachchaw) எனப்படும் இக்கருவி அமிர்குசுரு என்பவரால் வடிவமைக்கப்பட்டது. மரத்தால் அமைக்கப்படும் கீழ்ப்பகுதிக் குடம் சிறிய வடிவில் வீணையைப் போன்று அமைந்திருக்கும். சத்தார் சப்தகார், சுந்தரி என்ற பெயராலும் இக்கருவி வழங்கப்படும். ஏறக்குறைய மூன்றடி நீளம் கொண்டமையும் இது தமிழகத்தில் பயன்படுத்தப்படும் தம்பூராவைப் போன்று அமைப்பில் காணப்படும். இதன் வாத்திய மெட்டுகள் வீணையில் அமைந்திருப்பதுபோல் மெழுகில் பதிக்கப்பட்டிரா. மூன்று அங்குல இடைவெளியில் மெட்டுகள் அமைந்திருக்கும். இதன்கண் பதினெட்டு முதல் இருபத்து நான்கு மெட்டுகள் அமைந்திருக்கும். இராசத்திற்கும் சுருதிக்கும் ஏற்றாற்போல் மெட்டுகளை நகர்த்தி வைத்து இசைக்கலாம். இக்கருவி ‘ஏகராகமேள வீணை’யை நினைவூட்டும் வண்ணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கருவியின் குடப்பகுதி ஆமையின் முதுகு போன்று காட்சி தரும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 938 |bSize = 480 |cWidth = 90 |cHeight = 131 |oTop = 446 |oLeft = 311 |Location = center |Description = }} {{center|சித்தார்}} {{nop}}<noinclude></noinclude> hp6fkkxrgt6fcyzag3wpn9zrngb5xip பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/939 250 652896 1961549 2026-09-02T17:30:52Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இக்கருவியில் அமைந்துள்ள மெட்டுகள் விணையைப் போல் நேராக இல்லாமல் வளைவாக அமைந்திருக்கும். பித்தளை அல்லது வெள்ளி உலோகத்தினால் இதன் மெட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தாரல்‌|913|சித்தி}}</noinclude>இக்கருவியில் அமைந்துள்ள மெட்டுகள் விணையைப் போல் நேராக இல்லாமல் வளைவாக அமைந்திருக்கும். பித்தளை அல்லது வெள்ளி உலோகத்தினால் இதன் மெட்டுகள் அமைக்கப்படும். மேற்பகுதியில் ஏழு கம்பிகள் அமைந்திருப்பினும் முதல் இரண்டு கம்பிகளிலேயே வாசிக்கப்படும். ஏனையவை சுருதிக்காகப் பயன்படுவன. தொடக்க காலத்து இசைக் கருவியில் மூன்று கம்பிகள் மட்டுமே அமைந்திருந்தன. அனுராகக் கம்பிகள் பதினொன்று அல்லது பன்னிரண்டு அமைந்திருக்கும். வலக் கைவிரலால் மீட்டி இடக் கை விரலால் சுரத் தானங்களை அழுத்தி இக்கருவியில் மீட்டுவர். இதிலிருந்து எழும் ஒலி அழுத்தமாகவும் தொடர்ச்சியாகவும் எழும். இதன் ஒவ்வொரு மெட்டுகளிலிருந்தும் ஆறு விதமான சுரங்களை எழுப்பமுடியும் என்பது இக்கருவியின் சிறப்பாகும். இக்கருவியைத் என்னும் நிற்க வைத்து தம்பூராவை மீட்டுவது மீட்டி வாசிப்பர். திரைப்பாடல்களுக்கு இக்கருவி பெரிதும் பயன்படுகிறது. இக்காரணத்தினால் தென்னிந்தியாவிலும் இக்கருவி செல்வாக்குப் பெற்று வருகிறது. இக்கருவி இந்துத்தான இசைக்கேற்றவாறு அமைந்துள்ளது. பெரும்பாலும் இக்கருவிக்குத் துணையாகத் ‘தபேலா’ என்னும் தோற் கருவியைப் பயன்படுத்துதல் மரபாகும். இக்கருவியை வாசித்துக் கொண்டே பாடுவதும் உண்டு. {{Right|<b>இரா.குரு.</b>}} <section end="சித்தார்"/> <section begin="சித்தாரல்"/> {{dhr}} {{larger|<b>சித்தாரல்</b>}} கேரளாவில் உள்ளதோர் ஊர். இங்குள்ள தீர்த்தங்கரர்கள், இயக்கன் இயக்கி ஆய் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 939 |bSize = 480 |cWidth = 156 |cHeight = 182 |oTop = 390 |oLeft = 42 |Location = center |Description = }} {{center|சித்தாரல்—தீர்த்தங்கரர்}} யோர் சிற்பங்கள் புகழ்பெற்றவை. சித்தாரல் (Chitaral) சிற்பங்களின் அமைப்பு தமிழகக் கழுகு மலையில் உள்ள சமணச் சிற்பங்களின் அமைப்பை ஒத்துள்ளது. இங்குள்ள தீர்த்தங்கரரின் சிற்பங்கள் மூன்று குடைகளின்கீழ் அமர்ந்த நிலையில் உள்ளன. தீர்த்தங்கரரின் இருபக்கமும் கவரி வீசும் சிற்ப உருவங்களும் காணப்படுகின்றன. தீர்த்தங்கரரின் சிற்பங்களுள் பார்சுவநாதரின் சிற்பம் மிக்க அழகு வாய்ந்தது. இங்குள்ள மாடக் குழிச் சிற்பங்களும் புகழ் பெற்றவை. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சித்தாரல்‌"/> <section begin="சித்தி"/> {{dhr}} {{larger|<b>சித்தி</b>}} என்பது ஒரு நிறைவான நிலை ஆகும். இது சீவன் முத்தி நிலையைப் போன்றது. சித்தி பெற்றவன் கடமைகளைச் செய்கிறான்; பலனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; இன்பமும் துன்பமும் சமமாகப் பார்க்கின்றான்; அகங்காரம், மமகாரம் அகப்பற்று, புறப்பற்றுகள் இல்லாமல் செயற்படுகின்றான். இறைவனின் ஒரு கருவியாகத் தன்னை நினைக்கிறான். இவன் ஒரு காட்சியாக விளங்குகிறான். இவன் தன் சூழ்நிலையில் ஏற்படு கின்ற எத்தவித நிகழ்ச்சியிலும் பற்றில்லாமல் வாழ்கிறான். இந்த நிலையைத் தான் சித்தி (Siddhi) நிலை என்று வேதாந்தம் கூறுகிறது. சித்தி அடையப் பெற்றவன் தொடர்ந்து சாதனையில் ஈடுபட வேண்டும். நீண்ட சாதனையினாலோ இறையருளாலோ ஒருவனுக்குச் சித்தி கைகூடுகிறது. தன்னுணர்வு ஏற்படும்பொழுது, ஒளியுணர்வை அடையப் பெறுகின்றான். இந்த ஒளியின் தோற்றம், இறைவன்பால் நம்பிக்கையை மிகுதிப்படுத்துகிறது. சித்த புருடன் ஆன்மிக நிறைவு பெற்றதால், தான் இறைவனுடன் ஒன்றியிருக்கின்ற உணர்வை ஒருபுறம் பெற்திருந்தாலும், மறுபுறம் தனது உடல், உள்ளம் ஆகியவற்றால் ஈடுபடும் செயல்களால் தன்னை நினைவு கூரும் நிலையையும் பெற்றிருக்கிறான். இதனை ஆன்ம சாட்சி என்று கூறுவர். சில நேரங்களில், சித்தபுருடன் புறச் செயல்களில் ஈடுபட விரும்பாது தன்னுள் ஆழ்ந்து விளங்குகிறான். கீதையில் சித்த புருடனைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது கடமையில் பற்றின்றிச் செய்கிறான் என்றும், தன்னை இறைவனது கருவியாக நினைத்துச் செயல் புரிகிறான் என்றும் கூறப்படுகிறது. மலையினின்று விழுந்து செல்லும் ஆறு, மேகங்கள், இருண்டு பெய்யும் மழை, மகிழ்ச்சிமிக்க குழந்தை, உணர்ச்சி மிக்க கவிஞன் ஆகியோரது நிலைக்குப் பிரமத்தின் செயல்கள் ஒத்திருக்கின்றன என்று பெரியோர் கூறுகின்றனர். பதஞ்சலி யோக சூத்திரத்தில், சமாதி நிலையைக் குறிப்பிடும் பொழுது அதனை ஆழ்ந்த துயி-<noinclude> <b>வா.க. 8 – 58</b></noinclude> 8v29slmu039huost8dykboyjzu9w298 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/940 250 652897 1961551 2026-09-02T17:54:54Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லோடு ஒப்பிட்டுக் கூறுகிறார். சமாதி நிலையானது எல்லாவற்றையும் ஒருங்கே உணர்கின்ற நிலை. யோகி தனது யோக அனுபவ முதிர்ச்சியினால் தான் நினைத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தி|914|சித்தியர்‌}}</noinclude>லோடு ஒப்பிட்டுக் கூறுகிறார். சமாதி நிலையானது எல்லாவற்றையும் ஒருங்கே உணர்கின்ற நிலை. யோகி தனது யோக அனுபவ முதிர்ச்சியினால் தான் நினைத்தபோது சமாதிநிலையடைகிறான். இராமகிருட்டிணருக்குத் தொடக்கத்தில் சமாதி நிலை எளிதில் கிடைத்தது. அன்னை காளியுடன் அவர் ஒன்றினார். பிறகு காளியின் ஆணையினால் பக்தி நெறியைப் பரப்பும் பொருட்டுப் பக்தி நெறிக்கு மீண்டார். இந்த நிலையை ‘நிர்பீச சமாதி’ என்பார்கள். இதன் பொருள் விதையற்ற சமாதி என்பதாகும். கருமங்கள் மேலும் மேலும் மிகுதிப்பட்டால் பிறப்பு இறப்புகள் தொடரும். கருமநாசம் என்பது இதன் பொருள். மற்றொரு வகையான சமாதி ‘சகச சமாதி’ எனப்படும். சித்தர்கள் தாம் மேற்கொண்டு விளங்கும் சமாதிநிலையாதாயினும், அந்நிலையில் எளிதில் தாம் இருக்கப் பெறும் போது அதனைச் ‘சகசநிலை’ என்பர். திருவண்ணாமலையில் இரமணர் இந்த நிலையில் தான் இருந்தார். மற்றொரு சமாதி வகையைப் ‘பாவ சமாதி’ என்று குறிப்பிடுகிறார்கள். இது தூய உணர்ச்சிப் பெருக்கில் அமைவது. அன்னையிடம் மாறாத அன்பு கொண்டு பக்தி ஏற்படும் பொழுது கூடுகின்ற சமாதி பாவ சமாதியாகும். காளியைப் பற்றி எவரேனும் குறிப்பிட்டாலோ சிறந்த ஆன்மிக உண்மைகளைப் பற்றிப் பேசினாலோ இராமகிருட்டிணர் தம்மை மறந்து உணர்ச்சி வயப்பட்டுப் பாவசமாதி கூடிவிடுவார். கீதை உணர்த்துவது கரும சமாதி. மனிதனின் செயல்கள் யாவும் பிரமத்திற்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். அரவிந்தர் கரும யோகத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘என்னை மனத்தில் இருத்திப் போர்புரி’ என்றான் கண்ணன், என்று கூறுகிறார். அநித்தியமான வாழ்க்கைக் குழப்பங்களில் ஆழ்ந்துள்ளது மனித மனம். எல்லாம் வல்ல இறைவனை மறவாமலிருக்க பழக வேண்டும். இறைவனை மறவாது கடமைகளை ஆற்றுவதும், இறைவனது கருவியாக மனிதன் பணி புரிதலுமே கரும யோகமாகும். சித்தி முழுமையாகப் பெற்றவன் சித்தன் எனப்படுவான். அவன் உன்னத நிலையில் தொடர்ந்து இருக்கிறான். அவனது சடம் செயலற்று விளங்குகிறது. அது குழந்தையின் நிலையை ஒத்தது. இறையோடு ஒன்றாய உணர்வு தொடர்ந்து நிலை பெறுதலால், தடை படாத ஆனந்தம் ஏற்படுவதால் மகிழ்ந்துபாடி, ஆடிச் சிரித்துத் தன் வாழ்நாளைக் கழிக்கிறான். மதுவை அருந்தியவர் மயக்க நிலையில் இருப்பதைப் போன்று இறை ஆனந்தம் என்ற மதுவை அருந்தி இருக்கின்ற நிலையே ‘பித்தேறிய நிலை’ என்பர். திருமூலர் எழுதிய திருமந்திரத்தினுள் உடம்பாரழியில் உயிராரழிவர் என்றும், தான் உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்ததாகவும், பின்னர் உடம்பினுள்ளே உத்தமனைக் கண்டதாகவும் கூறுகீறார். இராமலிங்க அடிகளும் மூவகைச் சித்திகளைப் பற்றிக் கூறியுள்ளார். உருவ, அருவ, அருவுருவ சித்தி என்று சித்திகளை மூன்று விதமாகக் கூறுகிறார். நந்தனார், ஆண்டாள், மணிவாசகப் பெருமான் ஆகியோர் தமது திருவுருவைக் கரந்தனர். ஞான சம்பந்தர் தம் திருமணத்தில் சோதியில் கலந்தார். அரவிந்தர் மனங்கடந்த ஒளி ஆற்றல் ஒருவன் ஊனுடலினுள் பாய்ந்து உடலிற்கு மாற்றம் விளைக்கும் என்பர். அரவிந்தரது சாதனையான பூரணபோகம் ஞானம், பக்தி, கருமம் ஆகிய மூன்றும் ஒருங்கே முழுமையடைகின்ற யோக முறை. ஆர்வம் மிகுந்த சாதகன் படிப்படியே முன்னேறி உள்பொருளைத் தனது உடைமையாக்குகிறவரை யோகம் பயில்கிறான். அரவிந்தரது சாதனை நாளும் விரிவடைந் தது. அரவிந்தரது பூரண இறையாற்றலை இவ்வுலகிற்கு யோகத்தின் சிறந்த தன்மை கொணர்ந்து மனித சமுதாயம் முழுமையையும் அறிவியல் மயமாக்க முற்பட்டது. {{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Dasgupta S.N.,</b> Yoga Philosophy in Relation to Other Systems of Indian Thought, Calcutta, 1930. <b>Renou, L.,</b> Religions of Ancient India, London, 1953. <b>Zachner, R.C.,</b> Hinduism, London, 1962. <section end="சித்தி"/> <section begin="சித்தியர்"/> {{dhr}} {{larger|<b>சித்தியர்:</b>}} இவர்கள் நாடோடிகள்; தென்கிழக்கு ஐரோப்பாவில் (கி.பி. 600–1000) வாழ்ந்து வந்தனர். கருங்கடலின் அண்மையிலுள்ள தென் உருசியாவிலிருந்து கிழக்கே புறப்பட்டு மத்திய ஆரியாவிலுள்ள அத்ரை (Attri) மலைகளை இவர்கள் முதலில் வந்தடைந்தனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மேலைத் திசை நோக்கிச் சென்று இப்போது அழைக்கப்படுகின்ற பல்கேரியா, உருமேனியா, அங்கேரி, போலத்து, கீழைச் செர்மனி போன்ற இடங்களில் குடியேறினர். இவர்கள் சர்மாசியர் என்று அழைக்கப்படுகின்ற மற்றுமொரு நாடோடி இனத்தவரால் கி.மு. 200–இல் தோற்கடிக்கப்பட்டு, கி.பி. 100–இன் கோத்து (Goths) இனத்தவரால் அழிக்கப்பட்டனர். {{nop}}<noinclude></noinclude> 3yhqxjmm33tsnk3b6xrw80vma0o74mf அட்டவணை:திராவிட நாடு 1953 Jan 14-TVA PRL 0001827-derivative-சிறுகதை-ரொட்டி-தஞ்சைவீழ்ச்சி.pdf 252 652898 1961553 2026-09-03T01:36:32Z Info-farmer 232 # [[அட்டவணை:திராவிட நாடு 1953 Jan 14-TVA PRL 0001827-derivative-சிறுகதை-ரொட்டி-தஞ்சைவீழ்ச்சி.pdf]] 1961553 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title= |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} 5v1lgl8z3shxwgkw58tw4s6di5sdunw 1961554 1961553 2026-09-03T01:36:51Z Info-farmer 232 added [[Category:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1961554 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title= |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]] lm7c697ggxtlyzc6vvxyjv1m1j59pi5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/941 250 652899 1961567 2026-09-03T04:57:54Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சித்தியார் (Scythians) செல்வர்கள்; ஓரளவு, பண்பாடுடையவர்கள். அவர்கள் தங்கள் நகைகளிலும் பயன்படுத்திய கருவிகளிலும் பிராணிகளின் உருவத்தைப் பொறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்திர எழுத்துகள்‌|915|சித்திரகவி}}</noinclude>சித்தியார் (Scythians) செல்வர்கள்; ஓரளவு, பண்பாடுடையவர்கள். அவர்கள் தங்கள் நகைகளிலும் பயன்படுத்திய கருவிகளிலும் பிராணிகளின் உருவத்தைப் பொறித்து அலங்கரித்தனர். ஏனைய ஐரோப்பிய இனத்தவரும் அப்பாணியைப் பின்பற்றினர் சித்தியர் கிரேக்கருடன் வாணிகம் நடத்தினர். எனவே அவர்கள் அணிந்த நகைகளும் பயன்படுத்திய கருவிகளும் கிரேக்கரின் செல்வாக்கினால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். சித்தியர் இறக்கும்போது அவர்கள் அணிந்த நகைகளும், பயன்படுத்திய போர்க் கருவிகளும் சவங்களுடன் புதைக்கப்பட்டன. ஒவ்வொரு தலைவனின் சவக்குழியில் அவன் மனைவிகளுள் ஒருத்தியின் சடலமும், அடித்துக் கொல்லப்பட்ட பல வேலைக்காரர்களின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வந்த சாகர்களும் இவர் இனத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகின்றனர். {{Right|<b>கே.சே.</b>}} <section end="சித்தியர்‌"/> <section begin="சித்திர எழுத்துகள்"/> {{dhr}} {{larger|<b>சித்திர எழுத்துகள்:</b>}} எழுத்து முறை தோன்றுவதற்குமுன் தொன்மையான மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தப் பிறருக்குச் சொல்ல சித்திர எழுத்துகளைப் பயன்படுத்தினர். பண்டைய மக்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள நிலையான எழுத்து முறை ஒன்றைப் பின்பற்றத் தெரிந்திலர். மாறாகச் சித்திரங்கள் வரைந்து அவற்றின் மூலம் எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தினர். எகிப்தியர், இட்டைட்டுகள், கிரிட்டு மக்கள், இந்தியர் போன்றோர் சித்திர எழுத்து முறை (Pictograph) யைப் பின்பற்றினர். மிகப் பழங்கற் காலத்திலேயே சித்திர எழுத்துமுறை தோன்றியிருத்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 941 |bSize = 480 |cWidth = 179 |cHeight = 77 |oTop = 395 |oLeft = 35 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 941 |bSize = 480 |cWidth = 179 |cHeight = 83 |oTop = 485 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|சித்திர எழுத்துகள்}} தல் வேண்டும். இவ்வகைச் சித்திரங்கள் பழங்கற்காலக் குகைகளிலும் பாறைகளிலும் காணப்படுகின்றன. இச்சித்திரங்களில் பொதுவாக மனிதன், கடவுள், விலங்குகள் போன்றவை வரையப்பட்டன. இவ்வகைச் சித்திரங்கள் பாறைச் சுவரின் மேல் வண்ணத்தால் வரையப்பட்டிருந்தால் அவை பாறைச் சித்திரக்கலை (Petrogram) என்றும், பாறை மேல் செதுக்கிச் சித்திர அமைக்கப்பட்டிருந்தால் அவை பாறைச் செதுக்குச் சித்திரம் (Petroglyph) என்றும் கூறப்படுகின்றன. சித்திர எழுத்துகளில் குறிப்பிடத்தக்கவை ஐரோப்பாவில் பழங்கற்கால மனிதன் குகைகளில் வரைந்த சித்திர எழுத்துகளும், ஆப்பிரிக்கப் பழங்கற்காலச் சித்திர எழுத்துகளும் ஆகும். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பழங்கற்காலக் குகைகளில் இவ்வகைச் சித்திரங்கள் பல இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சித்திர எழுத்து முறையை அறிந்து கொள்வது மிகக் கடினம். தொன்மை மனிதன் எந்தச் சூழலில் அதை வரைந்தான் அல்லது எழுதினான் என்பதைக் கொண்டே இவ்வகை எழுத்து முறையை இன்று ஓரளவு அறிய இயலும். எடுத்துக்காட்டாக, பழங்கற்கால மனிதன் வேட்டையாடி விட்டு வெற்றியுடன் திரும்பிய குழவில் அவன் அச்செயல்களை வெளிப்படுத்தும் வகையில் சித்திர எழுத்துகளை எழுதியிருப்பான். எனவே, இவ்வகை எழுத்துகள் குறிப்பிட்ட சூழலில் எழுதப்படும் முறையே ஆகும். இதுபோன்ற சித்திர எழுத்துகளை அம்மனிதனே மறுமுறை காணும்பொழுது அவனுக்குத் தன் பழைய நிகழ்ச்சிகள் மீண்டும் மனத்தில் தோன்றும், சித்திர எழுத்துகள் ஓர் எழுத்துடன் மற்றொரு எழுத்து தொடர்பு கொண்டு விளங்குவதில்லை. இவ்வெழுத்து முறையில் குறிப்பிட்ட குறிகளோ (Symbols) மொழியோ பயன்படுத்தப்படவில்லை. இவ்வெழுத்துமுறை முற்றிலும் வளர்ச்சியடையாத எழுத்து முறையாகும். {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சித்திர எழுத்துகள்"/> <section begin="சித்திரகவி"/> {{dhr}} {{larger|<b>சித்திரகவி:</b>}} செய்யுள் இலக்கணத்தைக் கூறும் சொல்லணியியலில் சித்திரகவி பற்றிய செய்திகள் முழுமையாகக் கூறப்பட்டுள்ளன. இக்கவிகளை மிறைக் கவிகள் என்றும் கூறுவர். சித்திர கவி படிப்பவர்க்கு ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைவதோடு கவிஞனின் தனித் திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. கவிதை முப்பத்தேழு வகைப்படும். <b>வல்லினப் பாட்டு:</b> வல்லின எழுத்துகளே வைத்துப் பாடுவது (மெல்லின இடையின எழுத்துகள் வாரா). <b>மெல்லினப் பாட்டு:</b> மெல்லின எழுத்துகளே வைத்துப் பாடுவது. (வல்லின, இடையின எழுத்துகள் வாரா). {{nop}}<noinclude> <b>வா.க. 8 – 58அ</b></noinclude> 55zv2hcg422gd6i3dfu9d1rf47oi1ib பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/942 250 652900 1961574 2026-09-03T05:12:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>இடையினப் பாட்டு:</b> இடையின எழுத்துகளே வைத்துப் பாடுவது. (வல்லின, மெல்லின எழுத்துகள் வாரா). <b>நிரோட்டியம்:</b> அதரமும் ஆதாரமும் குவியாதும் கூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்திரகவி|916|சித்திரகவி}}</noinclude><b>இடையினப் பாட்டு:</b> இடையின எழுத்துகளே வைத்துப் பாடுவது. (வல்லின, மெல்லின எழுத்துகள் வாரா). <b>நிரோட்டியம்:</b> அதரமும் ஆதாரமும் குவியாதும் கூடாதும் நடப்பது. <b>ஒட்டியம்:</b> அதரமும் ஆதாரமும் குவிந்தும் கூடியும் நடப்பது. அ. இதழ்குவி ஓட்டியம்: இதழ் குவிந்தே நடப்பது. ஆ. இதழ்இயை ஓட்டியம்: ஒட்டியம்: இதழ் கூடியே நடப்பது. இ. இருவகை ஓட்டியம்: அதரமும் ஆதாரமும் குவிந்தும் கூடியுமே நடப்பது. <b>ஒட்டிய நிரோட்டியம்:</b> முதலில் ஒட்டியம், பின்னர் நீரோட்டியம் இரண்டும் ஒரு செய்யுளினகத்தே வருவது. <b>நிரோட்டியல் ஓட்டியம்:</b> முதலில் நிரோட்டியமாகவும் பின்னர் ஒட்டியமாகவும் வருவது. <b>எழுத்து வர்த்தனம்:</b> எழுத்துகளைப் பெருக்கி மொழியாக்கிப் பொருள் கொள்ளுதலாகும். <b>அக்கர வருத்தனம்:</b> ஒவ்வோரெழுத்தாகக் கூட்டிப் பொருள்தரப் பாடுவது. <b>அக்கரச் சுதகம்:</b> ஒவ்வோர் எழுத்தாகக் குறைத்துப் பொருகளைப் பாடுவது. <b>வக்கிரவுத்தி:</b> விளிவினா இரண்டினும் பொருள் திரித்துணர வைப்பது. <b>வினாவுத்தரம்:</b> ஒரு தொடர்ச் சொல்லுக்குப் பல வினாக்கள் வைத்து, விடைகளின் தொகுப்பால் அத்தொடர்ச் சொல் வரவைப்பது. <b>சக்கரபந்தம்:</b> சக்கரத்தில் எழுத்துகள் அமைத்து அவ்வாற்றான் பாடல் நிறைவு பெறச் செய்வது. அ. நாலாரச் சக்கரபந்தம்: நான்கு ஆரங்கள் பொருந்திய சக்கரத்துள் பாடல் அமைப்பது. ஆ. ஆறாரச் சக்கர பந்தம்: ஆறு ஆரங்கள் பொருந்திய சக்கரத்துள் பாடல் அமைப்பது; இ. எட்டாரச் சக்கரபந்தம்; எட்டாரங்கள் பொருந்திய சக்கரத்துள் பாடல் அமைப்பது. <b>பதும பந்தம்:</b> எட்டுக்கோள், பதினாறிதழ் ஒரு பொருட்டுள்ள தாமரையின் படம் எழுதி இதழ்விரி நிலையில் படிக்குமாறு பாடல் அமைப்பது. <b>மகாபதும பந்தம்:</b> பதினாறுகோள், முப்பத்திரண்டிதழ் ஒரு பொகுட்டுள்ள தாமரையில் படம் எழுதி இதழ்விரி நிலையில் படிக்குமாறு பாடல் அமைப்பது. <b>முரச பந்தம்:</b> முரசின் (மிருதங்கத்தின்) படம் வரைந்து கோமூத்ரி இரண்டமைந்த செய்யுளொன்றனை அதில் நிறைப்பதாகும். <b>நாக பந்தம்:</b> பிணைந்த நாகங்களின் படம் வரைந்து அவற்றின் படம் முதல் வால் வரை பாடல் இயையப் பதிப்பது. <b>அ. திரட்டை நாக பந்தம்:</b> இரண்டு நாகங்கள் கூடிய உருவத்தினுள் தொண்ணூற்றாறு அறைகளுள் 118 எழுத்துகள் அமைந்த இரண்டு வெண்பாக்களைப் படம் முதல் வால் வரை இயையப் பதிப்பதாகும். <b>ஆ. அட்டநாகபந்தம்:</b> எட்டுநாகங்கள் கூடிய உருவினுள் அவ்வாறே எட்டு வெண்பாக்களை அமைப்பதாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 942 |bSize = 480 |cWidth = 179 |cHeight = 169 |oTop = 280 |oLeft = 265 |Location = center |Description = }} {{center|எட்டாரச் சக்கரம்}} <b>இரத பந்தம்:</b> தேர் போல 98 அறை கீறி வடிவத்தை அமைத்து மேற்பாதியின் சிகரத்தினின்றும் இருபக்கத்திலும் இடையிலும் பாட்டுடைத் தலைவனின் பெயர் அமைய இரு பாடல்கள் அமைப்பது. <b>மாலை மாற்று:</b> ஒரு பாட்டை ஈற்றெழுத்து முதலாகப் படித்தாலும் அப்பாடலே வருமாறு பாடுவது. <b>காந்துறைச் செய்யுள்:</b> ஒரு பாடலின் ஈற்றெழுத்துத் தொடங்கி ஒவ்வோர் எழுத்து இடையிட்டுப் படித்தால் வேறொரு செய்யுள் வருமாறு பாடுவதாகும். {{nop}}<noinclude></noinclude> 0dol2s0umh20qwa9sgufqk9x7lswp6o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/966 250 652901 1961579 2026-09-03T05:21:39Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோயிலிலிருந்து கிடைத்த படிமங்களும், மதுரை, நெல்லை, திருவிடைமருதூர் செப்புப் படிமங்களும் குறிப்பிடத்தக்கன. செஞ்சிக் கோட்டை, சித்தாமூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|938|தமிழ்நாடு}}</noinclude>கோயிலிலிருந்து கிடைத்த படிமங்களும், மதுரை, நெல்லை, திருவிடைமருதூர் செப்புப் படிமங்களும் குறிப்பிடத்தக்கன. செஞ்சிக் கோட்டை, சித்தாமூர் சுல்தேர், கல்யானைகள் குறிப்பிடத்தக்கன. கிருட்டிண தேவராயரின் காலத்தில்தான் தமிழகத்தில் வைணவம் வளர்ந்தது. இவர் சிதம்பரம் கோயிலின் வடபுறத்துக் கோபுரத்தை எழுப்பியதோடு, ஆலயங்கள் பலலற்றிலும் திருப்பணி செய்தார். மராத்தியர்கள் வல்லம், தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டவும் செப்பனிடவும் செய்தனர். தஞ்சை மாளிகையான மங்கள விலாசம் குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் பதினேழாம் நூற்றாண்டில் அவை சமயம், தத்துவம் சார்ந்தவையாக அமைந்தன. பரணி, கலம்பகம், தூது, மாலை, பிள்ளைத் தமிழ் முதலானவை உருவாயின. காவியங்கள் உருவாகாத காலம் அது. சிவப்பிரகாசரும் குமர குருபரரும் குறிப்பிடத்தக்கவர்கள். ஐரோப்பியர்களின் தமிழ்த் தொண்டும் குறிப்பிடத்தக்கதே. எல்லப்ப நாவலர் திருவருணைக்கலம்பகம், திருவாரூர்க்கோவை ஆகிய சிறந்த நூல்களை இயற்றினார். திருவொற்றியூருக்கு ஒரு புராணம் ஞானப்பிரகாசரால் இயற்றப் பெற்றது. நிரோட்டயமக அந்தாதி என்ற நூலைப் பாடியவர் சிவப்பிரகாசர். குமரகுருபரரின் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், கந்தர்கலிவெண்பா, நீதி நெறி விளக்கம், மீனாட்சி அம்மை குறம், மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், காசிக்கலம்பகம், முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் குறிப்பிடத்தக்கவை. அந்தகக் கவி வீரராகவர், சீதக்காதியால் ஆதரிக்கப் பெற்ற உமறுப்புலவர், சாந்தலிங்க சுவாமிகள், சிதம்பரசுவாமிகள், தத்துவராயர், தாண்டவராய சுவாமிகள், தாயுமான சுவாமிகள், அருணகிரிநாதர், வில்லிபுத்தூரார், காளமேகம், படிக்காசுப் புலவர், சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர், குணங்குடி மசுதான் சாயபு, செய்குத் தம்பிப் பாவலர், திரிகூட ராசப்பர் ஆகியோர்களும் குறிப்பிடத் தக்கவர்கள். சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம், கச்சியப்ப முனிவரின் அமுதாம்பிகை பிள்னைத் தமிழ் ஆகிய குறிப்பிடத்தக்கன. தமிழ் இலக்கிய ஊற்றுத் தோன்றியதைப் போன்று வடமொழியிலும் இலக்கிய ஊற்றுக்கள் தோன்றின. தியாகையர், சியாமா சாத்திரி, முத்துச்சாமி தீட்சிதர் ஆகிய மூவரும் சங்கீத மும்மணிகள். சித்தர்கள் பெயரால் பல நூல்கள் எழுந்ததும் இருக்காலமே. மதுரை, தில்லை, திருவெள்ளறை, செங்கம் பட்டீசுரம், திருவலம்புரி, குடந்தை, திருவரங்கம் ஆகிய இடங்களில் காணப்படும் ஓவியங்கள் இக்காலத்தைச் சேர்ந்தவையாகும். நாடக நூல்களில் ‘பூலோக தேவேந்திர விலாசம்’, ‘அதிரூபாவதி கல்யாணம்’, ‘சங்கர நாராயண கல்யாணம்’, ‘சந்திரசேகர விலாச நாடகம்’, ‘விட்டுணு சகராச விலாசம்’ ஆகியன குறிப்பிடத்தக்கன. மராத்தியர்களின் ஆதரவின் கீழ்த் தோன்றிய தெலுங்குப் படைப்புகள் ‘பஞ்சநாத தலபுராணம்’ ‘இராமாயண யட்சகானம்’ ‘பரமபாகவத சரித்திரம்’ ‘இந்துமதி பரிணயம்’ ஆகியன முக்கியமானவை. வடமொழியில் சம்பு, நாடகம், காவியம் ஆகியன தோன்றின. ‘உந்திரசம்பு’, ‘திரிபுர விசயசம்பு’, ‘குமார சம்பவசம்பு’ ஆகிய சம்பு இளக்கியங்களும், ‘சானகி பரிணயம்’, ‘சீவாருந்தன நாடகம்’, ‘வித்யாபரிணய நாடகம்’ ‘சுபத்திரா பரிணயம்’, முதலிய நாடகங்களும், ‘சிருங்கார மஞ்சரி’, ‘சகேந்திர விலாசகாவியம்’ முதலிய காவியங்களும், ‘சித்தாந்த சந்திரிகா’, ‘ஆச்சாரிய நவநீதம்’ முதலிய தத்துவ நூல்களும் எழுந்தன.{{Right|<b>ந.க.ம.</b>}} <b>தமிழக வரலாறு (கி.பி. 1800 முதல் 1950 வரை)</b>: ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு (English East India Company) கி.பி. 1600-ஆம் ஆண்டில் உருவாகியது. சென்னை புனித சார்சு கோட்டையில் கி.பி. 1675-ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் 16-ஆம் நாள் நிருவாக அமைப்புகள் உறுதிபெற்றன. தமிழக நிலவரங்களைக் வணிகக் குழுவினர் அது முதல் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். மருதுபாண்டியர் கி.பி.1801-ஆம் ஆண்டில், வீழ்ச்சியுற்றபின், ஆங்கிலேயரின் செல்வாக்குத் தமிழகத்தில் வேரூன்றிவிட்டது. கி.பி.1806-இல் நடைபெற்ற ‘வேலூர்க் கலகம்’ சிறிது சலசலப்பை யேற்படுத்தியதெனினும் விரைவில் ஒடுக்கப்பட்டது. நூற்றைம்பது ஆண்டுக் காலத் தமிழக வரலாற்றினைத் (கி.பி.1800-கி.பி.1950) தெளிவாக அறிவதற்கு, இவ்விடைக் காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம். பகுதி 1) கி.பி.1800 முதல் 1914 வரை, பகுதி 2) 1914 முதல் 1930 வரை பகுதி 3) 1930 முதல் 1950) வரை. முதல் உலகப் போரையடுத்து, நாட்டுணர்ச்சி (Nationalism) பெருகி, விடுதலை இவக்கங்கள் தமிழகத்தில் தோன்றின. பதினாறு ஆண்டுகளில் (1930 வரை) இம்முயற்சிகளின் இயல்பு. சிறுகச் சிறுக மாற்றம் பெற்றதைத் காணலாம். தெளிவாகக் பெருவெள்ளமாக ஓடிய நாட்டுணர்ச்சி, 1930-க்குப் பின், காடுமலைகளைக் கடந்து, 1947-ஆம் ஆண்டின் அமைதி பெற்றது. <b>பகுதி: 1 (கி.பி. 1300-1914)</b> கருநாடக நவாபு முகமது அலி கி.பி. 1791-ஆம் ஆண்டு, வணிகக்குழு<noinclude></noinclude> 2eythijfa8sp3dlngmym7sahahq8gue பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/967 250 652902 1961580 2026-09-03T05:34:13Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வுடன் உடன்படிக்கை செய்து பல உரிமைகளை இழந்தான். நான்காம் மைசூர்ப் போர் கி.பி. 1799-ஆம் ஆண்டு தொடங்கியபோது நவாபு உம்தத்துஉல் உமாராவின் உடல்ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|939|தமிழ்நாடு}}</noinclude>வுடன் உடன்படிக்கை செய்து பல உரிமைகளை இழந்தான். நான்காம் மைசூர்ப் போர் கி.பி. 1799-ஆம் ஆண்டு தொடங்கியபோது நவாபு உம்தத்துஉல் உமாராவின் உடல்நலம் சீரழிந்ததால், ஆங்கிலேயர் கருநாடகத்தைத் தம்வயமாக்குவதற்கு ஆயத்தமாயினர் உமாரா கி.பி. 1801-இல் இறந்தபின்னர், அசிம்-உத்-தௌலாவை நவாபாக ஏற்று, முடியையும் ஓய்வூதியத்தையும் வழங்கி, உரிமைகள் யாவற்றையும் பறித்துக்கொண்டனர். தஞ்சையிலும், ருந்த மராட்டிய ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து கி.பி.1855-ஆம் ஆண்டு அப்பகுதியையும் கைப்பற்றினர். தமிழகம் கி.பி.1784-ஆம் ஆண்டு முதல் 1856-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேய வணிகக்குழுவின் ஆட்சியிலிருந்தது. தம் விருப்பம் போல் செயற்படுவதற்குக் குழுவினர் உரிமை பெற்றிருக்கவில்லை. தலைமைப்பீடம் பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபாடுடைய தாகவிருந்ததால், தமிழகப் பொருளாதாரச் சமூக முன்னேற்றங்களைக் கருதிச் செயற்படவில்லை. நாட்டுமக்களின் நலன்கருதி அங்கொன்றும் இங்கொன்றுமாகச்சில அலுவலர்கள் செயற்பட முற்பட்ட போதிலும் ‘சுரண்டல் கொள்கை’யின் விளைவுகளே மிகுதியாக இருந்தன. மேலைநாட்டுத் தொடர்பினால் தமிழகம் நலிந்தது என்ற கருத்தை முழுமையாக ஏற்பதற்கில்லை என்றாலும், மேலைநாட்டுத் தொடர்பு, பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலியது என்ற கருத்தைத் திட்டவட்டமாக மறுக்கலாம். பிற பணித்துறைகளிலும் புதுமைகள் ஏற்பட்டன என்று சொல்வதற்கில்லை. இரிப்பள் பிரபுவின் பெருமுயற்சியால் தலநிருவாக முறையில் தோன்றிய மாறுதல்களை விதிவிலக்காகக் கொள்ளவேண்டும். சமயப் பிரிவுகள் பல இருந்தன. காஞ்சியில் வடகலை தென்கலைப் போராட்டமும், தஞ்சையில் வேதியர் செல்வாக்கும் சமயப் பணியில் இனவாரிப்பாகு பாடுகளும் இருந்தமை தெளிவாகிறது. இராமலிங்க அடிகளாரின் சமரச சுத்த சன்மார்க்கம் நாராயண குருவின் முயற்சிகள், தமிழகத்தின் தென்கோடியில் வைகுண்ட சுவாமிகளின் தொண்டு ஆகிய செய்திகள் சமூக அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புகள் தோன்றிவிட்டன என்பதை விளக்குகின்றன. வேலூர் சென்னை, செஞ்சி, ஆர்க்காடு, நாகப்பட்டினம், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் இசுலாமியரின் செல்வாக்கிருந்தது. தொண்டர்களின் அயராத உழைப்பாலும் அரசின் அரவணைப்பாலும் கிறித்தவம் வளர்ந்தது. கட்டுப்பாடு, உழைப்பு, சமூகத் தொண்டு ஆகியவற்றிற்குக் கிறித்தவச் சமயத் தொண்டர்கள் இலக்கணம் வகுத்தனர். இலக்கியத் துறையில், வடமொழி, தெலுங்கு, அரபி, பாரசீகம், உருது ஆகிய மொழிகளின் தொடர்பு கிடைத்தது. தமிழ்மொழியில் ஒப்பற்ற நூல்கள் தோன்றின. <b>பகுதி-2.</b> (1914-1930) தமிழகம் சென்னை மாகாணம் (Presidency of Madras) என்ற பெயரில் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாகாணமாக விளங்கியது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு உருது ஆகிய மொழிகள் பேசும் மக்கள் பல்வேறு சமயங்களைக் கடைப்பிடித்தொழுகி வாழ்ந்தனர். ஆங்கிலக்கல்வி பரசலிச் முதாயத்தைச் சார்ந்த நிலக்கிழார்கள், வணிகப் பெருமக்கள், ஆட்சிப் பணியாளர், வழக்கறிஞர் ஆகியவர்களிடையே சுதந்திர வேட்கையை வளர்த்தது. சாதிமுறை வலுவாக இருந்தது. ஆங்கில அறிவு பெறுவதில் மேல்சாதியினர் மிகுந்த ஆர்வம் காட்டிய காரணத்தால், அவர்கள் சமுதாயத்தில் மேல்நிலையடைய வாய்ப்பிருந்தது. வங்காள, மகாராட்டிரப் பகுதிகளைப் போலத் தமிழகத்தில் சமுதாய அமைப்பில் வியத்தகு மாறுதல்கள் ஏற்படவில்லை என்பது வரலாற்றுச் சான்றுகள் பறை சாற்றும் உண்மை. சுதந்திரவேட்கை தமிழகத்தில் பரவத் தொடங்கிய பின் கி.பி.1852-ஆம் ஆண்டில் சென்னை வாழ் மக்கள் கழகம் (Madras Native Association) உருப்பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகம் கி.பி.1857-இல் நிறுவப் பெற்று ஆங்கிலக் கவ்வியறிவை மேலும் பேணிவளர்த்தது, சென்னை மகாசன சபையும் (கி.பி. 1884) பிரமஞான சபையும் (கி.பி. 1882) உருவாயின. இவை கி.பி. 1885-இல் இந்தியத் தேசிய காங்கிரசு தோன்றுவதற்கு முன்னோடிகளாக விளங்கின. வங்காளப் பிரிவினைக்குப்பின் (1905) கி.பி.1907-இல் பிபின் சந்திரபாலர் (Bepin Chandra Pal) தென்னகத்திற்கு வந்தார். தீவிர இயக்கம் தமிழகத்தில் செல்வாக்கடைந்தது. அது கடிசேரல அரிசர்வோத்தமராவ், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, கவி சுப்பிரமணியபாரதி, வாஞ்சிநாதன் ஆகியோரை ஈர்த்தது. பிரம ஞான சபையின் தலைவி அன்னிபெசண்டு அம்மையார் கி.பி.1916-ஆம் ஆண்டில் தன்னாட்சி இயக்கத்தைத் (Home-rule Movement) தொடங்கினார். அவ்வியக்கம் தமிழகத்தில் நல்லாதரவு பெற்றதெனினும், சிறுபான்மையினரின் செல்வாக்கை வளர்த்துவிடுமோ என்ற ஐயமும் இருந்துவந்தது. சமூக ஏற்றத்தாழ்வுகளை மறுப்பதற்காக கி.பி.1892-ஆம் ஆண்டிலேயே ஆதிதிராவிடர் அமைப்பு உருவாகியிருந்தது என்றாலும் கி.பி.1917-இல் எழுந்த நீதிக்கட்சியையே (Justice Party) முதல் முயற்சியாகக் கொள்ளவேண்டும். கி.பி.1917-இல் அக்கட்சியினர்<noinclude></noinclude> 4q77p7morxt8z5by3rvg6jc1vh99616 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/943 250 652903 1961581 2026-09-03T05:46:44Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>காதை கரப்பு:</b> புலவன், பழைய செய்யுள் ஒன்று கரந்துறையுமாறு புதுச்செய்யுட் புனைவது. <b>பிரிந்தெதிர் செய்யுள்:</b> செய்யுளின் ஈற்றெழுத்தினி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்திரகவி|917|சித்திரத் தையல்}}</noinclude><b>காதை கரப்பு:</b> புலவன், பழைய செய்யுள் ஒன்று கரந்துறையுமாறு புதுச்செய்யுட் புனைவது. <b>பிரிந்தெதிர் செய்யுள்:</b> செய்யுளின் ஈற்றெழுத்தினின்றும் படித்தால் வேறோர் செய்யுள் வருவது. <b>பிறிதுபடு பாட்டு:</b> ஒரு செய்யுளைத் தொடையும் அடியும் வேறுபட - உரைத்தாலும் சொல்லும் பொருளும் வேறுபடாதது. <b>சருப்பதோபத்திரம்:</b> அறுபத்து நான்கு அறைகீறி எட்டெழுத்து நான்கடிப் பாடல் மேலும் கீழுமாகவும் மாலை மாற்றாகவும் வருமாறு அமைப்பதாகும். <b>கூடசதுர்த்தம்:</b> நாலடியாய ஒரு செய்யுளின் நாலாம் பதம், ஏனைய மூன்று பதத்தையும் மேனின்று கீழும், கீழ்நின்று மேலுமாக எழுதி முடித்த வரி மூன்றின் இடைவரியின் மறைந்து நிற்பது. <b>கோமூத்திரி:</b> நடக்கும் எருதின் மூத்திர ஒழுக்கம் போன்றது. ஒரு செய்யுளை இண்ரடிரண்டடியாக மேலும் ஒன்றிடையிட்டுப் படிக்கவும் அச்செய்யுளே வருமாறு அமைப்பது. <b>சுழிகுளம்:</b> குளத்தினுள் தீர்ச்சுழி போலச் சுற்றிப் பாடினாலும் அதே பாடல் வருமாறு பாடுவது. <b>திரிபங்கி:</b> ஒரு பாடலை முதல் அடியிலிருந்து கடைசி அடிவரை ஒரு பாடலாகவும், இடை அடியும் கடைசி அடியும் சேர்ந்து ஒரு பாடலாகவும், கடைசி அடி மட்டிலும் ஒரு பாடலாகவும் அமைப்பதாகும். <b>எண்ணலங்காரம்:</b> எண்கள் தம் பொருளிலும் பிற பொருளிலும் அமைவதாகப் படுவது. <b>எழுகூற்றிருக்கை:</b> ஒன்று முதல் ஏழாகப் பதினான்கு நிலந்தொறும் மீள எண்ணுமாறமைப்பது. இதில் இரட்டுற மொழிதலும் ஈற்றெழுத்து வேறாதலும் உண்டு. <b>மாத்திரைச் சுருக்கம்:</b> ஒரு சொல்லின் மாத்திரையைச் சுருக்குவதால் வேறு சொல் உருவாகுவதைக் குறிப்பிட்டுப் பாடுவது. <b>மாத்திரைப் பெருக்கம்:</b> மாத்திரை ஏறப்பித்து பொருள் பயக்கும் நிலையைக் குறிப்பிட்டுப் பாடுவது, இதை மாத்திரை வருத்தனம் என்றும் கூறுவார்கள். <b>ஒற்றுப் பெயர்த்தல்:</b> ஓர் ஒற்றைப் பெயர்க்க வேறோர் சொல் வருதலைப் பாடுவது. <b>திரிபாகி:</b> மூன்றெழுத்துச் சொல்லில் முதலெழுத்தும் மூன்றாமெழுத்தும் ஒரு தொல்லாக விரவி வரவைப்பது திரிபாகி எனப்படும். <b>சதுரங்க பந்தம்:</b> நான்கு பக்கமும் மையங்களில் நான்கு நான்காகப் பதினாறு அறையிலும் நடுவான நான்கறையிலும் பெயர் வருமாறு பாடுவது சதுரங்க பந்தம் எனப்படும். <b>கடக பந்தம்:</b> கடகம் வரைந்து சுழலப் பாடல் அமைப்பது. <b>தொனி:</b> பாடல் பொருளன்றி ஒலியால் உலகறி சொற்கள் வருமாறு பாடுவது. இச்சித்திர கவிகளின் மரபைப் பின்பற்றியே இன்று சில புதுக் கவிதைகள் கூட சித்திரகலி அமைப்பில் எழுதப்படுகிறது. {{Right|<b>கி.சே.</b>}} <section end="சித்திரகவி"/> <section begin="சித்திரத் தையல்"/> {{dhr}} {{larger|<b>சித்திரத் தையல்:</b>}} மக்கள் எப்பொழுதும் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வமுடையவர்கள். எந்தத் தேசத்தினராய் இருந்தபோதிலும் ஏதோ ஒரு விதத்தில் தங்களை அலங்கரித்துக்கொள்ளத் தவறமாட்டார்கள். தங்கம் புடமிடப் புடமிடத்தான் ஒளிபெறும். குழந்தை, பேசப் பேசத்தான் மழலை திருந்தும். அதைப் போல், முன்னோர்கள் ஆடை நெசவு செய்யக் கற்றுக் கொண்டபின், நெசவு செய்த துணிகளின் மீது சித்திரத் தையல் செய்து அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தனர். நெசவுத் தொழிலிலும், நெய்த துணிகளின் மீது சித்திர வேலைப்பாடுகள் செய்யும் கலையிலும், இந்தியர்கள் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கினர் என்பதற்கான ஆதாரங்கள் சமீபத்தில் மொகஞ்சதாரோவிலும் அரப்பாவிலும் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. தையல் தொழிலில் கலைப்பண்பு விளக்கமுறத் தோற்றுவதற்கு வாய்ப்பான முறையே சித்திரத் தையல் எனப்படுவதாகும். சித்திரத் தையலைச் சிறப்பாகப் பூத் தையல் என்றும் சொல்லலாம் சித்திரத் தையல் அமைந்த உடை வகைகள் காண்பவருக்குப் பெரும் கவர்ச்சியையும் மன மகிழ்ச்சியையும் உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. சித்திரத் தையல் அமைந்த உடை குழந்தைகளுக்கு மிக்க அழகையும் கவர்ச்சியையும் தருவதாகும். நாடகப் பாத்திரங்களுக்குச் சித்திரத் தையல் அமைந்த உடைகள் எடுப்பான தோற்றத்தைத் தரும். சித்திரத் தையல் ஆதரவற்ற ஏழை மங்கையர்க்குச் சிறந்த வருவாய் தரக்கூடிய நல்லதொரு தொழிலாகும். சித்திரத் தையல் தைப்பதற்கு மிகவும் பொறுமையும் நிதானமும் வேண்டும். பொறுமை என்பது பெண்களுக்குரிய தனிப்பண்பாகும். அதனால் தான் பெண்களே இக்கலையில் மகுந்த ஆர்வமுள்ளவர்களாகத் திகழ்கிறார்கள். பெண்கள் சித்திரத் தையலைக் கற்பதோடு அரசாங்கத்தார் நடத்தும் சித்திரத்தையல் தோவிலும் வெற்றிபெற்று<noinclude></noinclude> hxejy0aqr3ej1onld3kg4tgd8ckqpxv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/968 250 652904 1961582 2026-09-03T05:59:20Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இனவாரிச்சார்பாளர் முறையை (Communal representation) வலியுறுத்தினர். அன்னிபெசண்டு அம்மையார் இம்முறையை எதிர்த்தார். நீதிக்கட்சி கி.பி. 1919 முதல் கி.பி.1926 வர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|940|தமிழ்நாடு}}</noinclude>இனவாரிச்சார்பாளர் முறையை (Communal representation) வலியுறுத்தினர். அன்னிபெசண்டு அம்மையார் இம்முறையை எதிர்த்தார். நீதிக்கட்சி கி.பி. 1919 முதல் கி.பி.1926 வரை செல்வாக்குடன் செயலாற்றியது. தன்னாட்சி இரட்டையாட்சியாக (Dyarchy) மாறியதை அக்கட்சியினர் வரவேற்றனர். நீதிக்கட்சியின் தோற்றம், செயல்படு முறைகள் ஆகியவற்றை விளக்குவதில் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. ‘பிரித்தாளும் கொள்கை’ (Divide and rule) ஆங்கிலேயரின் கைவந்த கலை என்பதை மறுப்பதற்கில்லை. மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கொள்கை கி.பி.1920-21-இல் பரவிவிட்டது. காந்தியடிகளாரும் மாகாணக் காங்கிரசுக் குழுக்கள் அமைப்பதில் இக்கொள்கையைச் செயற்படுத்த ஆதரவு அளித்தார்கள். சென்னை மாகாணத்திலடங்கியிருந்த தெலுங்கு மொழி பேசிய மக்கள் (ஆந்திரர்) தனிமாகாணம் கேட்கத் தலைப்பட்டனர். நீதிக் கட்சியினரின் செல்வாக்கு ஆந்திரப் பகுதிகளில் மிகுதியாகப் பரவவில்லை. அல்லூரி சீதாராமராசர் தலைமையில் ஆந்திரப் பகுதியில் 1922-இல கடும் புரட்சி ஏற்பட்டது. கேரளப் பகுதியில் தோன்றிய மாப்பிள்ளைகள் கலகமும் (1921) சமயக் கருத்து வேறுபாடுகளினடிப்படையில் எழுந்ததென்றே கொள்ளவேண்டும். நீதிக்கட்சி அமைச்சரவைகள் செய்த ஆக்கப் பணிகளில் 1925-இல் ஆந்திரப்பல்கலைக்கழகம், 1929-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை உருப்பெற்றதைக் குறிப்பிடவேண்டும். தேவையான சமூக முன்னேற்றப் பணிகளை நிறைவேற்றத் தவறியதாலும், எளிய மக்களை காக்கத் தவறியதாலும் 1934-ஆம் ஆண்டுத் தேர்தலில், நீதிக்கட்சி தோல்வி கண்டது. பெயரளவில் பின்னும் நிலைத்ததென்றாலும் கி.பி. 1938-க்குப் பின் முழுமையாகப் பெரியார் தோற்றுவித்த தன்மான இயக்கத்தில் (Self-respect Movement) கலந்துவிட்டது. இவ்விடைக்காலத்தில், இந்தியப் பொது நலச் சட்டத்திற்கு முன்னோடியாகத் தமிழகத் தாராளவாதிகள் (Liberals) தன்னாட்சி முன்மொழிவு ஒன்றைத் தயாரித் தளித்தனர். இப்பணியைச் பிறப்பாகக் குறிப்பிடுதல் வேண்டும். <b>பகுதி-3</b> (1930-1950): கி.பி.1930-ஆம் ஆண்டுத் தேர்தல் நடைபெற்றபோது இசுடான்லி மாகாண ஆளுநராகப் பணிபுரிந்தார். அவ்வமயம் சுப்பராயன், அரங்கநாத முதலியார், ஆரோக்கியசாமி முதலியார், சேதுரத்தின அய்யர் ஆகியோரடங்கிய சுயேச்சையாளர் (Independents) அவை ஏற்பட்டது. சுயராச்சியக் கட்சி (Swarajist Party) எதிர்கட்சியாகச் செயற்பட்டது. மாநிலத் தன்னாட்சி (Provincial Autonomy) கி.பி. 1935-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இரு அவைகள் கொண்ட சட்டமன்றமும் (Bicameral Legislature) தோன்றியது. மாநில ஆளுநராக இருந்த எர்சுகின் பிரபுவின் ஆலோசனைப்படி, முதலமைச்சர் தமது ஆட்சிக் குழுவை (Cabinet) அமைத்துக்கொண்டார். பின்னர், கி.பி. 1937-ஆம் ஆண்டுத் தேர்தல்களில் காங்கிரசுக் கட்சி வெற்றி கொண்டமையால், இராசகோபாலாச்சாரியாரின் அமைச்சரவை பதவியேற்றது. இவ்வவை கி.பி.1939-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் வரை செயற்பட்டது. பின்னர் 1939-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1946-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் நாள் வரை தமிழகத்தில் நடைமுறையில் ஆளுநராட்சி இருந்தது. இராசகோபாலாச்சாரியார் அமைக்கச் செயற்பட்ட காலத்தில் மதுவிலக்குச் சட்டம், கோயில் புகும் சட்டம் (Prohibition and Temple entry) ஆகிய சிறந்த சமுதாய நலச்சட்டங்கள் இயற்றப்பெற்றன. இக்கால இடைவெளியில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் பொற்கொல்லர்களின் உள்ளத்தைப் புண்படுத்தும் சட்டம் இயற்றப்பெற்றதையும் அகில இந்திய அரசியல் சூழ்நிலைகளின் எதிரொலிகளாகவே கொள்ளல் வேண்டும். இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தமிழகம் பேராதரவு நல்கியது. கி.பி. 1946-இல் நடைபெற்ற தேர்தலில் ஆந்திரகேசரி பிரகாசத்தின் தலைமையில் மாநில அரசு உருவாயிற்று என்றாலும், கி.பி.1947-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் தன்னாட்சி ஏற்பட்டது எனக் கூறுவது மேலும் பொருத்தமுடையது. தொடர்ந்து, ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும், குமாரசாமிராசா அவர்களும், முதல்வர்களாகத் தொண்டாற்றியபோது போரின் விளைவாகத் தமிழகப் பொருளாதாரம் சீர்குலைந்திருந்தது. தமிழகம் கி.பி.1930-ஆம் ஆண்டு முதல் தேசிய விடுதலை இயக்கத்தில் பெரும் பங்கேற்றது. இராசகோபாலாச்சாரியார் 1930-இல் வேதாரணிய உப்புச் சத்தியாக்கிரகத்திற்குத் தலைமையேற்றார். சர்தார் வேதரத்தினம், ஒமந்தூர் ரெட்டியர், ஒ.வி. அளகேசன், நாமக்கல் கவிஞர் ஆகியோரை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். பின்னர் 1931-ஆம் ஆண்டு காமராசர் மீது கொலைச்சதி வழக்கும், வெடிகுண்டு வழக்கும் தொடரப்பெற்றதாயினும் காமராசர் விடுதலை பெற்றார். அடுத்து 1932-ஆம் ஆண்டு, சட்டமறுப்பு இயக்கத்தில் திருப்பூர் குமரன் உயிர்நீத்தார்<noinclude></noinclude> ms47l7phlfknxahc09idh6ysktqytob பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/944 250 652905 1961583 2026-09-03T06:03:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாடெங்கும் பிற பெண்மணிகளுக்கு இக்கலையைப் போதித்தும் வருகின்றனர். சித்திரத் தையல் தைப்பதற்குத் துணியைத் தேர்ந்தெடுக்கும்போது அது எந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்திரத்‌ தையல்‌|918|சித்திரத்‌ தையல்‌}}</noinclude>நாடெங்கும் பிற பெண்மணிகளுக்கு இக்கலையைப் போதித்தும் வருகின்றனர். சித்திரத் தையல் தைப்பதற்குத் துணியைத் தேர்ந்தெடுக்கும்போது அது எந்த விதமான உடை, அல்லது மேசைவிரிப்பு, தலையணை உறை, படுக்கை உறை என்ற விவரம் தெரிந்து, அதற்கேற்றபடி மெல்லியதாகவோ தடித்ததாகவோ பூச்சித்திரமற்ற வண்ணத் துணியைப் பட்டிலோ பருத்தியிலா தேர்ந்தெடுத்து, ஏற்ற அளவுப்படி வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் வெட்டிய பாகம் பிரியாமல் மடித்து, இழையோட்டல் செய்து கொண்ட பின், பூ வடிவம் வரையும் இடத்தைக் குறித்துத் துணியின் தன்மைக்கு ஏற்ற பூ வடிவத்தைத் துணியில் பதித்தபின், துணியைச் சட்டத்தில் இணைத்துத் தைக்கத் தொடங்க வேண்டும். சித்திரத் தையல் தைப்பதற்கென்றே கடைகளில் பலவித நூல்கள் விற்கப்படுகின்றன. அவை பட்டு நூல்களாகவும், பருத்தி நூல்களாவும் கிடைக்கின்றன. அவைகளில் சாயம் போகாத வண்ண நூல்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி, வடிவங்களுக்கு ஏற்ப வண்ணங்களை உபயோகித்துத் தைக்க வேண்டும். சித்திரத் தையல் தைப்பவர்கள் உட்கார்ந்து தைக்கும்போது இடப்புறமாக வெளிச்சம் வரும்படியான இடத்தில் உட்கார்ந்து தைப்பது நலம். இரவு வேளைகளில் தலைக்குமேல் உயரத்திலிருந்து விளக்கின் வெளிச்சம் வரவேண்டும். முதலில் பூக்களையும் காம்புகளையும் மகரந்தங்களையும் இதழ்களையும் தைக்கக்கூடிய சிலவகைத் தையல்களைத் தைப்பதற்கு வேண்டிய குறிப்புகளை அறிந்து கொள்வது நலம். <b>சங்கிலித் தையல்:</b> சங்கிலியைப்போல் இத்தையல் ஒன்றையொன்று பிணைந்திருப்பதால், இதைச் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 944 |bSize = 480 |cWidth = 180 |cHeight = 152 |oTop = 423 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|சங்கிலித் தையல்}} சங்கிலித் தையல் (Chain Stitch) என்று கூறுவதுதான் பொருந்தும். இத்தையலில் பூக்களின் வடிவங்களையும் பழங்களையும் தாமரை போன்ற பெரிய பூக்களையும் இலைகளையும் தைக்கலாம். பொன்சரிகை நூல்களைக் கொண்டு சித்திரத் தையல் தைக்கும் போது இத்தையல் பெரிதும் பயன்படும். <b>தைக்கும் முறை:</b> இது தைப்பதற்கு எளிமையானது. துணியின் நேர்ப் பகுதியில் நூலைச் செலுத்தி, நூலை இடக்கைக் கட்டைவிரலால் பிடித்துக்கொண்டு சிறிது இடைவெளி விட்டு, அதே துவாரத்தின் வழியாக ஊசியைக் குத்த வேண்டும். மீண்டும் ஊசி நூலை முன் தள்ளி முதலில் விட்ட இடைவெளிக்குள் வரும்படி செய்திடுக. பின்னர் அடுத்த தையலை முதல் தையல்மீது இதுபோல் விழச் செய்து தேவையான நீளத்திற்கு இதே மாதிரி தையல் போடுக. <b>2. காம்புத் தையல்:</b> பூக்களின் காம்புகளைத் தைப்பதால் இதனைக் காம்புத் தையல் (Stem Stitch) என்று {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 944 |bSize = 480 |cWidth = 182 |cHeight = 146 |oTop = 252 |oLeft = 269 |Location = center |Description = }} {{center|காம்புத் தையல்}} கூறுவது பொருத்தமாகும். இத்தையலைப் பச்சை வண்ண நூலைக் கொண்டு தைக்க வேண்டும். <b>தைக்கும் முறை:</b> பூக்களின் காம்பு வடிவம் வரைந்துள்ள கோட்டில் தையல் தொடங்கும் இடத்தைக் குறித்துத் துணியின் பின் பக்கம் வழியாக ஊசியைத் துணியின் முன் பக்கம் கொண்டுவர வேண்டும். படத்தில் 1–ஆம் இலக்கம் வழியாகப் பின்பக்கம் இருந்து முன்பக்கம் கொண்டு வந்த பிறகு, 2–ஆம் இலக்கத்திலுள்ள புள்ளியில் குத்தி, ஊசியை 3–ஆம் இலக்கத்திலுள்ள புள்ளியில் குத்தி, ஊசியைத்தையலின் ஓரமாக இழுக்க வேண்டும். பிறகு 4–ஆம் இலக்கத்திலிருந்து 5–ஆம் இலக்கத்தில் ஊசியைக் குத்தி முன் போல் இழுத்துத் தைக்க வேண்டும். <b>3. ஒண்பட்டுத் (Satin) தையல்:</b> இது அழகிய இலை, மலர்கள், மாதிரிகள் தைக்க உதவும். ஒற்றை<noinclude></noinclude> j6ufzajm095op3pea0rndftbvm6hco3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/969 250 652906 1961584 2026-09-03T06:09:22Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இறுதியாக 1942-ஆம் ஆண்டில் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India) என்னும் போராட்டத்தில் தமிழ் மக்கள் ஆற்றிய தொண்டுகளை மறப்பதற்கில்லை. மாநிலத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|941|தமிழ்நாடு}}</noinclude>இறுதியாக 1942-ஆம் ஆண்டில் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India) என்னும் போராட்டத்தில் தமிழ் மக்கள் ஆற்றிய தொண்டுகளை மறப்பதற்கில்லை. மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்கள் தடியடிகளையும், துப்பாக்கிச் சூடுகளையும் சந்தித்தனர். இந்தியா 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. தமிழகமெங்கும் சிறப்பாக விழாக்கொண்டாடப்பெற்றது. இந்தியா 1950-இல் குடியரசு ஆயிற்று.{{Right|<b>தி.வெ.கு.</b>}} <b>தமிழக வரலாறு (கி.பி.1950-இன்று வரை)</b>: இந்தியா 1947 ஆகசுட்டு 15-ஆம் நாள் ஆங்கிலேயர் ஆட்சியினின்றும் விலகி அரசியல் சுதந்திரம் எய்தியது. எய்தவே சென்னை மாகாணமும் ஏனைய இந்தியப் பிரதேசங்களைப் போலத் தன்னாட்சி நிலையை அடைந்தது. அப்பொழுது அரசியல் நிலையில் தமிழகம் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. அம்மாகாணம் இப்போதுள்ள ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதியையும் கேரளத்தின் வட பகுதியையும் கருநாடகத்தின் சில பகுதிகளையும் தன்னுள்ளடக்கி மிகப் பெரியதொரு பகுதியாக விளங்கிற்று. ‘இந்திய அரசியல் சட்டம்’ 1950 சனவரியிலிருந்து நடைமுறைக்கு வந்த பொழுது, இந்தியப் பிரிவினைக்குப்பின் எஞ்சியிருந்த இந்தியத் துணைக் கண்டத்தை வேறு ஒரு வகையில் அதாவது பகுதிவாரியாகப் பிரித்து அமைத்தது. அவ்வமைப்பின்படி சென்னை மாகாணம் ‘ஏ’ இராச்சியங்களுள் ஒன்றாக அமைக்கப்பட்டது. இப்போதுள்ள தமிழகம் என்னும் அரசியற்பிரிவு, 1956-இல் ஆந்திரப் பிரதேசம் என்னும் இராச்சியம் பிரிக்கப்பட்ட பின்பும், கேரளத்துடனும் கருநாடகத்துடனும் சிற்சில பிரதேசப் பரிமாறல்கள் செய்துகொள்ளப்பட்ட பின்பும் எஞ்சியிருந்த பகுதியாகும். சென்னையில் காங்கிரசு அமைச்சரவை 1947 ஆக்சுட்டில் செயற்பட்டது. ஓமந்தூர் இராமசாமிரெட்டியார் என்பவர் முதலமைச்சராயிருந்தார். அவரது அமைச்சரவை 1949-இல் ஏப்பிரல் வரை நீடித்தது. அவரையடுத்து இராசபாளையத்தைச் சேர்ந்த குமாரசாமி இராசா முதலமைச்சரானார். புது அரசியல் சட்டத்தையொட்டி 1952-இல் எழுந்த பொதுத் தேர்தல் நடந்த வரையில் அவரே ஆட்சி செய்தார். அதன்பிறகு சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியாரின் (இராசாசி) இரண்டாம் அமைச்சரவை அமைந்தது. அப்போது சட்ட சபையில் காங்கிரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் இல்லாமையால் அக்கட்சி ஆட்சியை மேற்கொள்ளத் தயங்கிற்று. ஆயினும், சென்னை மாகாணச் சட்டமேல் இராசாசி சபைக்கு நியமனம் செயப்பட்ட பின் அமைச்சரவை அமைக்க ஒருவாறு ஒருப்பட்டார். இந்தியா குடியரசு முறை அரசியல் அமைப்பினை ஏற்றுக்கொண்ட பிறகு தமிழகத்தில் நிறுவப் பெற்ற முதல் அமைச்சரவை இதுவேயாகும். இராசாகி 1952-இலிருந்து 1954 வரை சென்னை ஆட்சியைத் திறம்பட நடத்தினார். அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராயிருந்தவர் சிரீபிரகாசா என்பவர். சென்னையில் 1935-ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின் சார்பில் 1937-இல் காங்கிரசு மந்திரிசபை அமைக்கப்பட்டபோது முதலமைச்சராயிருந்தவர் இராசாசி. அவரே இப்போதும் (1952-இல்) முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டதால், தாம் முன்பு சென்னையில் செயற்படுத்தியிருந்த சீர்திருத்தங்களைத் திரும்பவும் நடைமுறைக்குக் கொணர்ந்தார். மதுவிலக்கு மறுபடியும் செயற்படத் தொடங்கியது. இந்தி மொழியைப் பரப்பும் துறையில் இராசாசிதம் கொள்கைகைளை நாளடைவில் மாற்றிக்கொண்டு வந்து, இறுதியில் ஆங்கிலமே இந்தியாவிற்குச் சிறந்த அரசியல், உயர் கல்வி கற்பிக்கும் மொழியாக இருக்கத்தக்கது என்னுமளவிற்கு அவர் கருத்துகள் முதிர்ச்சியடைந்து வந்தன. அவர் குலத்தொழில் சார்த்த கல்வித் திட்டம் ஒன்றை 1954-இல் வகுத்தார். மக்களிடம் பெருவாரியாகக் காணப்பட்ட வேலையில்லா நிலைமையைச் சமாளிப்பதற்காகத் சிறந்த திட்டத்தை அவர் கொணர்ந்தார். அதாவது, மாணவர்கள் பொதுக் கல்வி கற்றுக்கொள்வதோடுகூட, குலத்தொழிலையும் அறிந்து வைத்திருத்தல் நலம் என்னும் கருத்தையொட்டி வகுக்கப்பட்ட திட்டம் அது. ஆனால், காங்கிரசுக் கட்சியிலிருந்தவர்களிலேயே பலர் அத்திட்டத்தை எதிர்த்தனர். ‘அவர் வருண ஆசிரம தருமத்தை மறுபடியும் நிலை நாட்ட முற்படுகிறார்’ என்று குற்றஞ்சாட்டினர். அவரைத் தலைமையினின்றும் நீக்கிவிட இடப்பட்ட திட்டத்தின் முடிவாக, அப்போது தமிழ்நாடு காங்கிரசுக் கட்சிக்குழுவின் தலைவராக இருந்த காமராச நாடார் 1954 ஏப்பிரலில் முதலமைச்சர் பதவியை ஏற்றார். காமராசர் நிறுவிய அமைச்சரவை 1954-இலிருந்து 1963 வரை செயற்பட்டது. அக்கால அளவில் அவர் இரண்டு அமைச்சரவைகளை அமைத்தார். இந்தியச் சுதந்திர இயக்கத்திலும் அரசியலிலும் பெரும்பங்கு ஏற்று இந்தியத் தலைமை ஆளுநர் பதவியையும் வகித்துப் புகழ் பெற்ற இராசாசியின் பொது அலுவலர் வாழ்க்கை 1951-இல் முடிவு பெற்றது. அதன் பிறகு அவர் சுதந்திராக் கட்சியைத் தொடங்கி அதன் வாயிலாக மத்திய, மாநில அரசுகள் செய்த குற்றம்<noinclude></noinclude> 56i429lobbz2mu5w4dpxixowh77btmn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/970 250 652907 1961585 2026-09-03T06:19:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களைக் கண்டித்தும், மிதவாதக் கொள்கைளைத் திறம்பட எடுத்துரைத்தும் வந்தார். இராசாசியின் இரண்டாம் அமைச்சரவை செயற்பட்ட காலத்தில் நிகழ்ந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|942|தமிழ்நாடு}}</noinclude>களைக் கண்டித்தும், மிதவாதக் கொள்கைளைத் திறம்பட எடுத்துரைத்தும் வந்தார். இராசாசியின் இரண்டாம் அமைச்சரவை செயற்பட்ட காலத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்ச்சி ஆந்திர மாகாணம் உருவானமையே என்பதில் ஐயமின்று. ஏனைய மாநிலங்களைப் போல, சென்னை மாகாணத்தில் சுதேச அரசுகள் பல இல்லை. புதுக்கோட்டைச் சமசுதானமும் இந்திய ஐக்கியத்தில் இணைக்கப்பட்டுவிட்டது. இது 1948-49 இல் திருச்சி மாவட்டத்தின் தென் பகுதியாக அமைந்து பிறகு தனி மாவட்டமாயிற்று. காங்கிரசுக்காரர்களே மொழிவாரி மாநிலங்களைப் பற்றி 1947-க்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிவெடுத்திருந்தனர். அவர்கள், நாடு சுதந்திரம் அடைந்தபின் அதனை மொழிவாரி மாகாணங்களாகப் பிரித்து மாற்றியமைப்போம் என மக்களுக்குத் தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரசுக் கட்சிக்குழு, ஆந்திரப் பிரதேசக் காங்கிரசுக் குழு முதலிய நிறுவனங்களை அவர்களே ஏற்படுத்தியிருந்தனர். அந்நிலையில் பொதுமக்கள் சுதந்திரத்திற்குப் பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்த்தது தவறோ வியப்போ இல்லை. 1950-இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிற்சேர்க்கையிலேயே இம்மாறுதல்கள் குறிக்கப்படாமை சற்று வியக்கத்தக்கதேயாம். சென்னை மாகாணம் அக்காலத்தில் மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழி பேசுபவர்களும் கலந்து வாழ்ந்த மாகாணமாயிருந்தது. சென்னை அரசியலில் தொடக்கத்திலிருந்தே தமிழர்கள் ஆதிக்கம் மிகுந்திருந்தனர் என ஆந்திரர்கள் நெடுநாளாகவே ஒரு மனத்தாங்கலுக்கு உள்ளாகியிருந்தனர். இரட்டையாட்சிக் காலத்தில் பனகல் பொப்பிலிராசாக்கள், தியாகராச செட்டியார், சுப்பராயலுரெட்டியார் என்று தெலுங்கு பேசுவோர் முதன்மைதான் சென்னை அரசியலில் மிக்குவிளங்கிற்று என்பது வரலாறு. ஆயினும், அவர்களுக்கு அத்தகைய மனத்தாங்கல் இருந்தது உண்மையே. காங்கிரசுக் கட்சியின் மொழிவாரி மாகாணங்கள் பற்றிய வாக்குறுதி இதனைச் சற்று அடக்கி வைத்திருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு தனி ஆந்திர மாகாணம் அமைக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆயினும், 1950 அரசியல் அமைப்புச் சட்டத்தில் மொழிவாரி மாநிலங்களைப் பற்றிய பேச்சு எழவேயில்லை. இது அவர்களுக்கு ஒரு ஏமாற்றமா இருந்தது. ஆயினும் அப்பொழுது இந்தியாவில் பிரதம மந்திரியாக இருந்த சவகர்லால் நேரு சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திரப்பிரதேச மாநிலம் ஒன்றை உருவாக்குவதை விரும்பவில்லை; பற்பல காரணங்களையும் சொல்லி அச்சிக்கலை அணுகாமலே இருந்தார். ஆந்திரர்களோ மாகாணப் பிரிவினையில் உறுதியான கருத்துக் கொண்டிருந்தனர். சுவாமி சீதாராம் என்னும் ஆந்திரர் ஒருவர் 1951-இல் தெலுங்கர்களுக்குத் தனி மாகாணம் வேண்டி இறக்கும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். உண்ணாவிரதம் மேற்கொண்டு, நாட்டின் பொதுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண முற்படுவது காந்தி இந்நாட்டில் நிறுவி வைத்த மரபு. இந்திய விடுதலை காந்திக்கு எந்த அளவுக்கு முக்கியமாகத் தோன்றியதோ அந்த அளவிற்குச் சுவாமி சீதாராமுக்கு தனி ஆந்திர மாநிலம் முக்கியம் என்று தோல்றியது. இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து பொதுச் சிக்கல்களைத் தீர்க்க முயலும் மரபு தவறானது என்று சவகர்லால் நேரு அப்போது கருதினார். முப்பத்தைந்து நாள் உண்ணாவிரதம் இருந்த பிறகு சுவாமி சீதாராம் தமது விரதத்தை முடித்துக் கொண்டார். சென்னை நகரத்தின் நிலையைப் பற்றியும் விவாதம் எழுந்தது. இராசாசி சென்னை தமிழ் நாட்டை விட்டுப் பிரிக்கப்படலாகாது என்று கூறினார். ஆனால், ஆந்திரர் சென்னை நகரம் ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமைய வேண்டும் என்று கருதினர். வேறு சிலர் அந்நகரம் இரு மாநிலங்கட்கும் பொதுத் தலைநகராக இருக்கலாம் என்று கூறினர். சென்னைச் சட்டசபைத் தேர்தல் 1952 சனவரியில் நடைபெற்ற பொழுது காங்கிரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. ஆந்திர மாகாணம் அமைக்கப்படாமையால் தான் இத்தகைய நிலைமை தோன்றிற்று என்று பலரும் கருதினர். சுவாமி சீதாராம் மற்றும் ஒரு வேண்டுகோள் விடுத்துப் பார்த்தார். சவகர்லால் நேரு அவ்வேண்டு கோளை ஏற்றுக்கொள்வதற்கில்லை என்றார். ‘மொழிவாரி மாகாணங்களை அமைப்பதற்கு இது தருணமன்று’ என்று இந்திய அரசின் சார்பில் பாராளுமன்றத்தில் கூறப்பட்டது. தனி ஆந்திர மாநிலம் அமைக்கும் சிக்கலை 1948-லிருந்தே சில அகில இந்தியக் குழுக்கள் ஆய்ந்திருந்தன. அவற்றில் எசு. கேத்தார் குழுவின் அறிக்கை (1948), சே.வி.பி. (சவகர்லால், வல்லபாய் பட்டாபி) குழு அறிக்கை (1948) என்பவற்றைக் குறிப்பிட வேண்டும், இவை அச்சிக்கலை ஆராய்ந்த தோடு நின்றுவிட்டன; உறுதியான முடிவு ஒன்றையும் குறிப்பிடவில்லை. {{nop}}<noinclude></noinclude> 9fdrseidi6jk2z70yt097f1iuauanoz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/945 250 652908 1961586 2026-09-03T06:20:27Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 945 |bSize = 480 |cWidth = 153 |cHeight = 152 |oTop = 60 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|ஒண்பட்டுத் தையல்}} நூலாகக் கோத்துத் தைக்கத் தொடங்க வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்திரத்‌ தையல்‌|919|சித்திரத்‌ தையல்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 945 |bSize = 480 |cWidth = 153 |cHeight = 152 |oTop = 60 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|ஒண்பட்டுத் தையல்}} நூலாகக் கோத்துத் தைக்கத் தொடங்க வேண்டும். இது பார்ப்பதற்கு ஒண்பட்டுத் துணியைப் போல் காணப்படும். சித்திரத் தையலிலேயே ஒண்பட்டுத் தையல் ஒரு சிறந்த தையலாகும். <b>தைக்கும் முறை:</b> பூ வடிவ இதழ் முழுமையும் ஊசியின் மேல் வரும்படி வலப்புறமிருந்து இடப்புறமாகப் படத்தில் காணப்படுவதைப் போல் தைக்க வேண்டும். ஒரு தடவை ஊசியைக் குத்தித் தைத்த பின், அடுத்த தையலுக்கு ஊசியைக் குத்தும்போது நெருக்கமாகக் குத்த வேண்டும். தைத்து முடித்தபின் பின்பக்கமும் முன்பக்கமும் தையல் ஒரேவிதமாகக் காணப்படும். <b>4. சோம்பேறித் தையல்:</b> விரைவில் முடியக்கூடிய சிலவகைத் தையல்களுள் சோம்பேறித் தையலும் (Lazy Daisy) ஒன்றாகும். இது விரைவில் தைத்து முடிக்கக்கூடியதாகவும், தைத்தபின் மிகக் கவர்ச்சி- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 945 |bSize = 480 |cWidth = 196 |cHeight = 120 |oTop = 414 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|சோம்பேறித் தையல்}} யுடன் காணப்படுவதாகவும் இருத்தலால் பலரும் இதை விரும்புகின்றனர். ஏறக்குறைய இதைச் சங்கிலித் தையலைப் போல் தைக்க வேண்டும். <b>தைக்கும் முறை:</b> இத்தையலைச் சங்கிலித் தையலைப் போல ஆரம்பித்து ஊசியைக் கீழ்நோக்ய நூலின் வழியாக இழுக்க, அது ஓர் இதழ் போலவும் இடைவெளிவிட்டும் இருக்கும். ஊசிமுனையைக் கீழ் வாக்கில் மத்திய பகுதியில் பூவின் மத்தியில் கொண்டுபோய் அடுத்தாற் போல இடைவெளி விட்டுக்கொள்ள வேண்டும். சிறிய வேலைகளுக்கு மெல்லிய நூலையும், பெரிய பூ வேலைகளுக்குத் தடித்த நூலையும் உபயோகித்துக்கொள்க. <b>5. சிறுமுடித் தையல்:</b> பூக்களின் மத்தியில் உள்ள மகரந்தப்பைகள் போன்ற புள்ளிகளை இந்தச் சிறு முடித்தையலால் (French Knot) தைக்க வேண்டும். இத்தையல், தைப்பதற்கு எளிதானதும் விரைவில் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 945 |bSize = 480 |cWidth = 174 |cHeight = 140 |oTop = 215 |oLeft = 268 |Location = center |Description = }} {{center|சிறுமுடித் தையல்}} தைக்கக் கூடியதுமாகும். இந்த முடித்தையலை மஞ்சள் அல்லது ஆரஞ்சுப் பழத்தின் வண்ணமுள்ள நூலினாலும், பூவின் வடிவத்தைத் தைத்திருக்கும் வண்ணத்திற்கேற்ப வேறு வண்ணநூலைக் கொண்டும் இதைத் தைக்கலாம். ஒற்றை நூலைக் கொண்டே இதைத் தைக்கலாம். <b>தைக்கும் முறை:</b> ஊசியில் ஒற்றை நூலைக் கோத்து, நுனியை முடியிட்டுக்கொண்டு, தைக்க வேண்டிய இடத்தில் ஊசியை விட்டு வெளியே கொண்டு வரவேண்டும். இடக் கையால் நூலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஊசியைச் சுற்றி, இருமுறை சுற்றிவிட்டு ஊசியை வளைவாக முன் குத்திய இடத்திலேயே குத்தி எடுத்தால் ஒரு சிறு முடிச்சு படத்தில் காணப்பட்டது போல் அமைந்து விடும். <b>புழுத் தையல்:</b> இத்தையல் பார்ப்பதற்கு உரோசா மலரைப்போல் கவர்ச்சியுடன் காணப்படும். இத்தையலைக் குழந்தைகளின் உடைகளில் கை, கழுத்து நெஞ்சுப் பகுதிகளில் அழகுக்காகத் தைக்கலாம்.<noinclude></noinclude> ewpzxjqcvoqyktd86wbxlumdadnvej9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/946 250 652909 1961587 2026-09-03T06:31:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 946 |bSize = 480 |cWidth = 153 |cHeight = 152 |oTop = 60 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|புழுத் தையல்}} பெண்களின் சோளியின் தையல் குறுக்காகவும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்திரத்‌ தையல்‌|920|சித்திரத்‌ தையல்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 946 |bSize = 480 |cWidth = 153 |cHeight = 152 |oTop = 60 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|புழுத் தையல்}} பெண்களின் சோளியின் தையல் குறுக்காகவும் நெடுக்காகவும் கழுத்தைச் சுற்றியும் வரிசையாகத் தைக்கலாம். புழுத்தையலை (Bullion Stitch) இளம் சிவப்பு வண்ண நூலாலும் ஆரஞ்சு வண்ண நூலாலும் தைக்கலாம். இலைகளைப் பச்சை வண்ண நூலினால் தைக்க வேண்டும். <b>தைக்கும் முறை:</b> தையலின் நீள அளவு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுக்கு ஊசியைக் குத்திப் பின் முதலில் குத்திய இடம் வழியாக எடுக்க வேண்டும். நூலை ஊசியின் மீது தையலின் நீளத்திற்குச் சுற்றிக் கொள்ள வேண்டும். இடக் கைப் பெருவிரல் இப்படிச் சுருண்ட நூலைப் பிடித்துக் கொண்டு ஊசியை நூலுடன் இழுக்க வேண்டும். பின்னர், அந்த இடத்தில் ஊசியைப் போட்டுத் திருப்பி நூலை வெளியே எடுத்திடுக. இதற்குச் சிறிய கண்ணுடைய ஊசியை உபயோகிக்க நூல் எளிதாக இடைவெளிகளின் வழியே வரும். <b>இறகுத் தையல்:</b> இத்தையலை ஒற்றையாகவும் இரட்டையாகவும் விருப்பத்திற்கேற்பப் பலவிதமான {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 946 |bSize = 480 |cWidth = 180 |cHeight = 136 |oTop = 442 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|இறகுத் தையல்}} வடிவங்களில் தைக்கலாம். சிறு பிள்ளைகளின் உடைகளின் கழுத்து, கீழ்ஓரம், பெண்களின் உடைகள், மேசைவிரிப்பு, தலையணை உறைகள் முதலியவற்றின் ஓரங்களில் அழகிற்காகத் தைக்கலாம். <b>தைக்கும் முறை:</b> இத்தையல் இடப் புறமாகத் தைப்பவரை நோக்கி இருக்கும். இடப்புறமாகச் சாய்ந்த சிறு தையலை நூலின்மீது போகச்செய்து தைக்கவேண்டும், மத்தியில் இடைவெளி இருக்குமாறு படத்தில் காணப்படுவதுபோல் தையல் விழ வேண்டும். நூலை வலப்புறமாகப் பிடித்துச் சாய்ந்த சிறு தையலை முன்போட்ட தையலுக்கு வலப்புறமாகச் சாய்ந்திருக்குமாறு தைக்கவேண்டும். பிறகு நூலை இடப்புறமாக்கிச் சாய்ந்த தையலை புறம் சாய்ந்திருக்கத் தைக்கவேண்டும். <b>குறுக்குத் தையல்</b> (Cross Stitch): முதலில் இவ்வகைத் தையலைத் தைப்பதற்கு இழைகளை எண்ணக்கூடிய துணிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இத்தையலைத் தைக்கும்போது வடிவங்களைத் துணிக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இதைத் தைப்பதற்கேற்ற வடிவங்கள் எண்ணிக்கை மூலமாகத் துணிகளில் தைப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பதால் அவைகளைத் துணிக்கு மாற்றாமல் தைப்பது எளிதாக இருக்கும். குறுக்குத் தையலைத் தலையணை உறையின் மேலும், மேசைவிரிப்பின் மூலைகளிலும், மேல் அணியும் துண்டுகளின் கரை ஓரங்களிலும், சன்னல், {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 946 |bSize = 480 |cWidth = 174 |cHeight = 150 |oTop = 359 |oLeft = 268 |Location = center |Description = }} {{center|குறுக்குத் தையல்}} திரை, கதவுத்திரை, வானொலிப்பெட்டியின் மேல் மூடும்துணி, மற்றும் நமக்கு விருப்பமான உடைகள் ஆகியவற்றின் மேலும் தகுந்த மாதிரிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தைப்பதற்கு ஏற்ற வண்ண நூல்களைப் பொறுக்கி அமைத்துத் தைத்துவிட்டான் அவை பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியுடன் காணப்-<noinclude></noinclude> rj8kd2bje5fjfvxzut4001iiyent2ot பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/971 250 652910 1961588 2026-09-03T06:36:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொட்டி சிரஇராமுலு என்பவர் 1952 அக்டோபரில் இறக்கும் வரை உண்ணாவிரதம் இருந்து 58 நாள்கள் உண்ணாது இருந்து உயிரிழந்தார். அந்நிகழ்ச்சியைத் தொட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|943|தமிழ்நாடு}}</noinclude>பொட்டி சிரஇராமுலு என்பவர் 1952 அக்டோபரில் இறக்கும் வரை உண்ணாவிரதம் இருந்து 58 நாள்கள் உண்ணாது இருந்து உயிரிழந்தார். அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆந்திராவில் பெருத்த கவகம் நடந்தது. இக்கலகம் இந்திய அரசின் மொழிவாரி மாநிலங்கள் பற்றிய கருத்துகளை மாற்ற உதவிற்று. ஆந்திர மாகாணம் 1953-இல் சென்னையிலிருந்து பிரித்து அமைக்கப்பட்டது. 1956-இல் நியமிக்கப்பட்ட பசல் அலி ஆணைக்குழுவின் பரிந்துரைகளையொட்டி அந்த ஆண்டிலேயே ஆந்திர மாநிலம் ஆந்திரப்பிரதேசம் என்னும் பெயரோடு அமைக்கப்பட்டது. எஞ்சியிருந்த மலபாரும் கருநாடகத்தைச் சேர்ந்த கொள்ளேகாலம் முதலிய இடங்களும் சென்னையிலிருந்து எடுபட்டபின், கன்னியாகுமரி மாவட்டமும் திருத்தணியும் தமிழகத்தோடு இணைக்கப்பட்டு இப்போதைய மாநில எல்லைகள் நிறுவப்பட்டன. காமராசர் 1963-இல் தமிழக முதலமைச்சர் பதவியினின்றும் விலகிக் கொண்டார். இது சவகர்லால் நேருவும் காமராசரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு திட்டத்தின்படி நிகழ்ந்தது. அத்திட்டம் ‘முதிய காங்கிரசு காரர்கள் அரசியற் பதவிகளைத் துறந்து கட்சிக்காக உழைக்க வேண்டும்’ என்னும் கொள்கையின்படி அமைந்தது. அவரையடுத்து மற்றுமோர் காங்கிரசுக்காரரான பக்தவச்சலம் என்பவர் சென்னையில் முதலமைச்சரானார். அவர் அமைச்சுக் காலத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியொன்று தோன்றியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 1950-இலிருந்து 15 ஆண்டுகளுக்குள் ஆங்கிலத்தை அகில இந்திய ஆட்சி மொழி நிலையீனின்றும் நீக்கி அவ்விடத்தில் இந்தி மொழி அமர்த்தப்பட வேண்டும் என்னும் குறிக்கோளைக் கூறிற்று அச்சட்டம் விதித்த தவணை 1965-இல் முடிவுற்றிருந்தது. தமிழக மக்கள் தங்கள் மாநிலத்திற்கு இந்தி தேவையில்லை; அதனை வேண்டுவோர் தனிப்படக் கற்கலாம்; ஆனால், அது எந்த அரசின் ஆணை வலுவினாலும் ஆட்சி மொழியாகத் படலாகாது என்று கருதினர். அதன் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஒன்று 1964-இல் தமிழகம் எங்கும் புயலென உருவெடுத்தது, அப்போது மத்திய அரசு இந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதார் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்கள் வேண்டும் வரை ஆங்கிலமும் இந்தியோடு சேர்ந்து அகில இந்திய இணை ஆட்சி மொழியாக வழங்கும். என்று வாக்குறுதியளித்தது. அவர் அமைச்சுக் காலத்தில் மதுரைப் பல்கலைக் கழகம் தமிழகத்தின் மூன்றாம் பொதுப் பல்கலைக் கழகமாக நிறுவப்பெற்றது. சென்னை மாநிலத்தில் 1967-இல் நிகழ்ந்த பொதுத் தேர்தல் அரசியல் புரட்சியொன்றைப் புகுத்தியது. காங்கிரசுக் கட்சி தோற்றது. பேரறிஞர் சி.என். அண்ணாத்துரையின் தலைமையில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) பெருமளவு வெற்றியடைந்தது. இதற்கிடையே சுதந்திராக் கட்சியை அமைத்து மிதவாதக் கொள்கைகளைப் பரப்பி வந்த இராசாசி தமது ஆதரவைத் தி.மு.க.விற்கு அளித்தார். அண்ணாத்துரை முதலமைச்சராக ஏறத்தாழ ஈராண்டுக் காலம் தான் விளங்கினார். அவர் அக்கால இறுதியில் (1969 பிப்பிரவரியில்) நோய்வாய்ப்பட்டுக் காலமானார். அவர் காலத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. சென்னை மாநிலம் ‘தமிழகம்’ எனப் பெயர் பெற்றது. தமிழக அரசு மத்திய அரசு பரிந்துரை செய்த மும்மொழித் (இந்தி, ஆங்கிலம், பிரதேச மொழி) திட்டத்தை மாற்றித் மாற்றித் ‘தமிழ் மற்றும் ஆங்கிலம்’ என்னும் இருமொழித் திட்டத்தை மேற்கொண்டது. தமிழ் ஆட்சி மொழியாற்று. அண்ணாதுரையை அடுத்து அவர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராயிருந்த கருணாநிதி முதலமைச்சரானார். அவர் அமைச்சுக் காலத்தில் சென்னை நகருக்குக் குடிதண்ணீர் வசதி செய்ய வேண்டிய அவசரக் கட்டம் எய்தியது. தென் ஆர்க்காட்டு மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்குக் குடி தண்ணீர் கொணரும் திட்டம் முற்றுப் பெறவில்லை. ஆயினும், தலை நகரத்தின் வழியே ஓடும் கூவம் என்னும் சிற்றாறு ஓரளவு தூய்மைப்படுத்தப்பட்டது. இது ஒரு சோதனை எனலாம். அவரது அமைச்சரவை 1976-இல் மத்திய அரசால் நீக்கப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது. இதற்கிடையே தி.மு.க.வைச் சேர்ந்த எம்.ஜி. இராமச்சந்திரன் கருணாநிதியோடு கருத்து வேறுபட்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.) என்னும் புதியதொரு கழகத்தைத் தோற்றுவித்து அதற்குத் தலைமை பூண்டார். பின்னர், 1977-இல் நடந்த பொதுத் தேர்தலில் அவர்தம் கட்சி பெரும்பான்மை பலம் பெற்றதாதலின் அவர் தமிழக முதலமைச்சரானார். பின்னர் 1980, 1984 ஆகிய இரு ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் எம்.ஜி. இராமச்சந்திரனது அ.இ.அ.தி.மு.க. கட்சியே வெற்றி கண்டதாதலின் அவரே முதலமைச்சரானார். அவர்தம் முதல் அமைச்சுக் காலத்தில் கருணாநிதி காலத்திற் போலவே அமைச்சு நீக்கம் நிகழ்ந்தது. அப்போதும் குடியரசுத் தலைவர் ஆட்சி சில காலத்திற்கு நடைபெற்றது. 1975-76-இல் இந்திரா காந்தி கொணர்ந்த ‘அவசர நிலை’ ஆட்சியின் விளைவுகள் எல்லா மாநிலங்களிலும் போலத் தமிழகத்திலும் காணப்பட்டன. எம்.ஜி.இராமச்சந்திரன் திடீ-<noinclude></noinclude> 6a7xk6nxwfww6soncv6y76ag9z2vj9s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/947 250 652911 1961589 2026-09-03T06:40:03Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படும். இத்தையல் தைக்கும் வடிவ மாதிரிகள் கடைகளில் வண்ணப்படங்களாகவும் கிடைக்கின்றன. அவற்றை வாங்கித் தைப்பவர்கள் எளிதாக வண்ண நூல்களை அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்திரத்‌ தையல்‌|921|சித்திரத்‌ தையல்‌}}</noinclude>படும். இத்தையல் தைக்கும் வடிவ மாதிரிகள் கடைகளில் வண்ணப்படங்களாகவும் கிடைக்கின்றன. அவற்றை வாங்கித் தைப்பவர்கள் எளிதாக வண்ண நூல்களை அமைத்தும் தைக்கலாம். <b>தைக்கும் முறை:</b> முதலில் தையலைத் துணியின் கீழுள்ள கட்டடத்தின் இடப்புற முனையில் ஆரம்பிக்க வேண்டும். ஊசியை அதன்மேல் வல முனை வழியாகக் கொண்டுவந்து, பிறகு கீழ் வல முனைக்குக் கொண்டு போகவும். இதில் ஒரு குறுக்குக் கோட்டுத் தையல் விழும். இதையே அடுத்தடுத்துச் செய்ய வரிசையாகவும் தொடர்ச்சியாகவும் தையல்கள் அமையும். மேற்கூரிய சித்திரத் தையல்களைத் தைக்கத் தொடங்கும்போதம் நூலின் நுளியில் முடியிடும் போதும், புதிய நூல் கோத்துச் சேர்த்துச் தைக்கத் தொடங்கும்போதும் அமைக்கப்படும் முடிச்சுகள் துணியின் பின் பகுதியில் தெரியாதபடி உறுதியாக அமைக்கவேண்டும். நல்ல தேர்ச்சி பெற்ற ஒருவரின் தையல் முறை, துணியின் பின்பகுதியும் அழகுடன் தோற்றமளிக்கும் வகையில் தைப்பதேயாகும். <b>சித்திரப் பின்னல்</b> முன் காலத்தில் கையாலேயே செய்யப்பட்டது. இப்போது இயந்திரங்களின் உதவியால் விதவிதமான புதிய புதிய மாதிரிகளைச் செய்கிறார்கள். இம்மாதிரி தயாரிக்கும் துணிக்கு ‘இழுக்கும் தன்மை’ அதிகம் உண்டு. பின்னல் என்பது நூலைக் கண்ணியாகச் (Loop) செய்து ஒன்றுக்குள் ஒன்றாகப் பிணைக்கும் கலையாகும். தொடர்ச்சியாக ஒரே நூலைக் கொண்டும் பின்னலாம். நீலவாட்டில் சிறு நூல்களைப் பொருத்திவிட்டு, குறுக்கு வாட்டில் வேறு ஒரு நூலைச் செலுத்தியும் பின்னலாம். நீளவாட்டில் இருக்கும் கண்ணிக்குப்புரிமுடி (Wale–Knot) என்பது பெயர். குறுக்கு வாட்டில் இருப்பவை சொரசொரப்பானவை (Coarses). பின்னலில் இரண்டு வகைகள் உண்டு. அவை (1) பாவு நூற் பின்னல், (2) ஊடை நூற் பின்னல். <b>பாவு நூற் பின்னல்:</b> இதில் பாவு நூல்கள் நெசவின் போது இருப்பது போலச் செங்குத்தாகத் தொங்கலிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வோர் ஊசி உண்டு. இதில் ஒரே சமயத்தில் நிறைய கண்ணிகள் (Loops) செய்யமுடியும். ஆகவே, இந்த வகைப் பின்னல் மூலம் விரைவில் நிறைய துணி நெய்ய முடியும். இது எளிதில் பிரியாது. <b>ஊடைநூல் பின்னல்:</b> இதை எளிதில் கையினாலேயே செய்து விடலாம். ஒரே நூல் துணிமுழுவதும் கண்ணிகள் ஏற்படுத்தும். இது மாதிரி செய்யப்பட்ட துணிக்கு ‘இழுக்கும் தன்மை’ அதிகம். ஆனால், இது எளிதில் பிரியக்கூடும். பின்னலைக் கையால் செய்வதற்குத் தகுந்த ஊசிகள் பயன்படுத்துவார்கள். ஊசிகள் பலவித எண்ணிக்கையில் வரும். பின்னப்படும் துணிக்குத் தகுந்தவாறு ஊசிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஊடை நூல் பின்னல் செய்யப்படும்போது, ஊசிகளில் அமைக்கப்படும் கண்ணிகளைப் பொறுத்துத் துணியில் உண்டாகும் சித்திரங்கள் மாறுபடும். <b>ஓரப்பின்னற் குஞ்ச வேலை:</b> மிக நேர்த்தியான சரிகைகள் (Laces) பின்னப் பயன்படும் முறைக்குக் குஞ்சப் பின்னல் (Tatting) என்பது பெயர். இவ்வகைச் சரிகைகளைத் துணிகளின் ஓரத்தை அழகுபடுத்தவும், இடை இடையே கவர்ச்சியூட்டவும் பயன்படுத்தலாம். குஞ்சப் பின்னல் முறையை முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது என்று இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், தூரக் கிழக்கு நாடுகள் இக்கலையில் கைதேர்ந்தவை யாகும். இதனைச் சிலர் பின்னல் வகைகளுள் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளனர். குஞ்சம் செய்யத் தேவையானவை அடியிழை செருகும் கருவியும் (Shuttle) நூல் உருண்டையும் ஆகும். இம்முறையில் முடிச்சுகள் வெவ்வேறு வகைகளில் போடப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. முடிச்சுகள் முதலில் மேற்புறமாகவும், பிறகு கீழ்புறமாகவும் போடப்படுகின்றன. இங்ஙணம் இருபுறங்களிலும் போடப்பட்ட பின்தான் ஒரு முடிச்சு முழுமையாகிறது. <b>கைகளைப் பயன்படுத்தும் முறை:</b> குஞ்சப் பின்னல் நன்கு அமையக் கை, மற்றும் விரல்களின் அமர்வு (Position) மிகவும் இன்றியமையாதது. <b>இடக்கை:</b> தையல் இயந்திரத்தில் அடியிழை செருகும் கருவியிலிருந்து வரும் நூல், வளையமாக இடக்கை விரல்களைச் சுற்றிப் பிடித்துக் கொள்ளப்படுகிறது. இந்த வளையத்தை நெகிழாமல் இறுக்கமாகப் பிடிக்க இடக்கைக் கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் பயன்படுத்தப்படுகின்றன. இடக்கையின் மற்ற விரல்கள் வளைவைக் குறிக்கவும், அதிகப்படுத்தவும் பயன்படுகின்றன. <b>வலக்கை:</b> இழை செருகும் கருவியைக் கட்டை விரலையும், ஆல்காட்டி விரலையும் கொண்டு பிடித்துக் கொள்ள, அதிலிருந்து வரும் நூற்கண்டு விரலுக்கு மேல் விழுகிறது. சுண்டு விரலை நூலுக்கு அடியில் நீட்டி மடக்குவது எளிதாக இருக்கும். அடிப்படையாக நோக்கின், குஞ்ச வேலை என்பது முடிச்சுகளைக் கொண்டு செய்யப்படும் நுட்பமான<noinclude></noinclude> 2clf47xxbd2idh37dxv39aqz49do4gk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/948 250 652912 1961590 2026-09-03T06:49:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நூல் வேலைப்பாடாகும். இதில் செய்யப்படும் மாதிரிகளுக்கு அழகூட்டும் வண்ணம், இடைஇடையே நெகிழ்வான முடிச்சுகள் போடப்படுகின்றன. <b>சித்திரத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்திரத்‌ தையல்‌|922|சித்திர துர்கம்‌}}</noinclude>நூல் வேலைப்பாடாகும். இதில் செய்யப்படும் மாதிரிகளுக்கு அழகூட்டும் வண்ணம், இடைஇடையே நெகிழ்வான முடிச்சுகள் போடப்படுகின்றன. <b>சித்திரத் துணி</b> என்பது பட்டு நூலால் செய்யப்பட்ட ஒருவகைத் துணியாகும். இத்துணி பார்ப்பதற்கு விலையுயர்ந்த பட்டின் மேல் சித்திரத் தையலைச் செய்தது போன்று காணப்படும். இந்த நெசவிற்குப் பின்னணியாக நடுவில், ஒண்பட்டுப் (Satin) போன்ற நெசவுகளைப் பயன்படுத்தலாம். பாவு நூலுக்கும் ஊடை நூலுக்கும் வெவ்வேறு வண்ண நூல்களை உபயோகிப்பதன் மூலம், பலதரப்பட்ட வண்ணச் சேர்க்கைகளை உண்டு பண்ணலாம். இணைப்புத் தறிகள் (Jacquard Looms) சித்திரத் துணி (Brocade) நெய்வதற்கு ஏற்றவை. இத்தறிகள் அணியின் பின்புறத்திலும் அழகிய வண்ணச் சேர்க்கைகளை ஏற்படுத்தி, துணியின் இருபக்கங்களையும் மேற்பகுதியாக உபயோகிப்பதற்கு ஏற்றதாகச் செய்கின்றன. கையினால் நெய்யும்போது பல வண்ணங்களைக் கொண்ட மாதிரிகளைப் புகுத்தலாம். விசைத்தறியில் நெய்யும் போது ஆறு வண்ணங்களுக்குமேல் புகுத்த முடியாது. பழங்காலத்தில் நெய்யப்பட்ட சித்திரத் துணிகள் வெள்ளி, தங்கம் போன்ற இழைகளைக் கொண்டு நெய்யப்பட்டவை. அவற்றின் அழகும் விலையும் மதிப்பிட முடியாதவை. இல்வகைத் துணிகளை முதலில் நெய்தவர்கள் சீன தேசத்தவர். பெல்சிய நாட்டு மக்கள் இக்கலையைச் சீனர்களிடமிருந்து சுற்றுக் கொண்டனர். பிறகு இது ஐரோப்பிய நாட்டிற்கும் பரவியது. <b>வலைப் பின்னல்</b> என்பது கொக்கி அமைப்புக் கொண்ட ஊசியின் உதவியால் செய்யப்படும் சரிகையாகும். ஓய்வு நேரத்திற்கு ஊதியம் தரக்கூடிய கலையாக வலைப் பின்னல் வேலையை (Crochetting) பெண்கள் செய்து வருகிறார்கள். இப்பின்னல் ஊசி மூலம் சங்கிலிகள் பின்னப்பட்டு ஒன்றுடன் ஒன்று வெவ்வேறு வகையில் இணைக்கப்பட்டு, பல தரப்பட்ட மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட சரிகை, உடைகளிலும் வீட்டை அலங்கரிக்கும் சாதனங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. வலைப் பின்னலில் இருபது வகை தையல்கள் மிகவும் உள்ளன. முக்கியமானவை சங்கிலித் தையலும், ஒற்றை இரட்டை, மூன்று மற்றும் நான்கு அடுக்குப் பின்னலும் ஆகும். <b>செய்முறை:</b> வலைப் பின்னற் சங்கிலியைக் கையாலோ ஊசியினாலோ போடலாம். இந்த ஊசியை வலக்கையில் பென்சில் பிடிப்பது போல் பிடிக்க வேண்டும். நூலை இடக்கை விரல்களில் பின்னல் போடுவதற்குத் தக்கவாறு சுற்றிக் கொள்ள வேண்டும். நூலைக் கண்டு விரலின் கீழும் மேலும் சுற்றி, பின் மோதிர விரலின் மேல் கொண்டு வந்து, நடுவிரலின் கீழ் எடுத்து, பின் ஆள்காட்டி விரலின் மேல் சுற்றி, கடைசியில் பெருவிரலிலும் நடுவிரலிலும் பிடித்துச் சரிகை பின்ன வேண்டும். வலக் கையிலிருக்கும் ஊசியானது, பெருவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடைப்பட்ட நூலில் சரிகையைப் பின்னும். <b>சங்கிலித் தையல்:</b> முதலில் சுருக்கு முடிபோட வேண்டும். வலைப் பின்னற் கொக்கியின் உதவியால், முதலில் போட்ட சங்கிலிக்குள் நூலை விட்டு எடுத்து, மூன்றாம் சங்கிலியை இரண்டாவதிலும் விட்டு எடுத்து, தொடர்ந்து சங்கிலிகள் வேண்டிய நீளத்திற்குப் போட வேண்டும். இப்பின்னல், சங்கிலி கோத்த மாதிரி இருப்பதால் சங்கிலித் தையல் எனப்பட்டது. <b>ஒற்றை வலைப் பின்னல்:</b> இதற்கு முதலில் சங்கிலித் தையலை வேண்டிய நீளத்திற்குப் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர்க் கொக்கியின்மேல் நூல் போட்டு, பின் சங்கிலியில் விட்டு எடுக்க வேண்டும். இப்பொழுது கொக்கியில் இரண்டு சங்கிலிகள் இருக்கும். திரும்பவும் கொக்கியைச் சங்கிலியில் விட்டு எடுக்கும்போது இரண்டு சங்கிலிகளையும் கொக்கியிலிருந்து எடுத்துவிட வேண்டும். இம்முறையைப் பின்பற்றி அடுத்து வரும் ஒவ்வொரு சங்கிலியிலும் இரண்டிரண்டு சங்கிலிகளாக எடுத்துவிட வேண்டும். {{Right|<b>இரா.பி.தே.</b>}} <section end="சித்திரத்‌ தையல்‌"/> <section begin="சித்திரதுர்கம்"/> {{dhr}} {{larger|<b>சித்திரதுர்கம்:</b>}} கருநாடக மாநிலத்தில் சித்திர துர்கம் மாவட்டத்தில் உள்ள நகரம்; இது சித்தல் துக்கம் என்றும் கூறப்படும். சித்திரதுர்கம் (Chitra–durga) பருத்தித் தொழிலுக்குப் புகழ்பெற்ற நகரமாகும். இங்கு ஐதர்அலி கட்டிய பெரிய கோட்டை ஒன்று உள்ளது. சந்திரவள்ளி என்னும் தொல்லியல் புகழ்பெற்ற பகுதி இந்நகரத்தின் மேற்கில் உள்ளது. நகர மக்கள் தொகை 74,580 (1981). சித்திரதுர்கம் மாவட்டம் 10,852 ச.கி.மீ. பரப்பளவுடையது. இம்மாவட்டம் மலைகளைக் கொண்ட வறட்சியான பகுதியாகும். இம்மாவட்டத்தில் பரவும் அகாரி ஆற்றின் (Hagari) குறுக்காக வாணிவிலாச சாகர அணை கட்டப்பட்டுள்ளது. இவ்வணை ஓரளவிற்கு இம்மாவட்டத்தின் வேளாண்மைக்குப் பயன்படுகிறது. இப்பகுதியில் நெல், கரும்பு, பருத்தி போன்றவை பயிராகின்றன. செம்பு, இரும்பு, தங்கம் போன்ற தாதுப் பொருள்கள் சிறிதளவு இங்குக் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தில் சித்திரதுர்கம்,<noinclude></noinclude> ff6dse2f5oi9l6rnsctnvaywhysw5ps பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/972 250 652913 1961591 2026-09-03T06:50:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ரென்று மாரடைப்பால் 1987-ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் இறந்ததை அடுத்து அவர் தம் துணைவியார் திருமதி. ஜானகி இராமச்சந்திரன் ஆட்சி தமிழ் நாட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|944|தமிழ்நாடு மீன்வளம்}}</noinclude>ரென்று மாரடைப்பால் 1987-ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் இறந்ததை அடுத்து அவர் தம் துணைவியார் திருமதி. ஜானகி இராமச்சந்திரன் ஆட்சி தமிழ் நாட்டில் 23 நாட்கள் நீடித்தது. கட்சிக்குன் பிளவு ஏற்பட்டதாலும் சட்டசபைக்குள் பெரும்பான்மை இன்மையாலும் அவர் தம் ஆட்சி நீக்கப்பட்டு மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி 1988 சனவரி முதல் நடைபெற்று வருகின்றது. எம்.ஜி. இராமச்சந்திரனின் பத்தாண்டு முதலமைச்சுப் பதவிக் காலத்தில் பல புதிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழகம், கோவையில்பாரதியார் பல்கலைக்கழகம், வேளாண்மைப் பல்கலைக் கழகங்கன், கிண்டியில் தொழில் நுட்பக் கல்விப் பல்லைக்கழகம், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம், கோடைக் கானலில் மகளிர் பல்கலைக்கழகம் என்பனவாம். காந்திகிராமத்திலுள்ள பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியக்குழுவினால் ஒருபல்கலைக்கழகம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுச் செயலாற்றுகிறது. சாலைகள் நன்கு அமைக்கப்பட்டு உலக வங்கியின் உதவி கொண்டு திருவள்ளுவர் முதலிய பல புதிய பேருந்து கழகங்கள் ஆங்காங்கு அமைக்கப்பட்டன. குடிசை மின்சாரகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டன. நெய்வேலி நிலக்கரியும், சேலம் இரும்பும், தூத்துக்குடி உரத்தொழிலும், துறைமுகமும் தொழில் துறையில் அரசின் கவனத்தால் சீர்பெற்றன. பள்ளி மாணவர்களுக்கும் முதியோருக்கும் மதிய உணவு அளிக்கும் சத்துணவுத் திட்டம் ஒன்று செயற்பட்டு வருகிறது. இவர்தம் சத்துணவுத் திட்டமும் தன்னிறைவுத் திட்டமும் இவருக்கு மேலும் புகழ் சேர்த்தன. தமிழக மாநிலத்தில் இருந்த சில மாவட்டங்கள் ஆட்சி வசதியை முன்னிட்டுப் பிரிக்கப்பட்டன. சேலத்திலிருந்து தர்மபுரி மாவட்டமும் கோவையிலிருந்து பெரியார் மாவட்டமும் தோற்றுவிக்கப் பெற்றன. இராமநாதபுர மாவட்டம், காமராசர் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாக இராமநாதபுர மாவட்டம் பிரிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதி அண்ணா மாவட்டம் எனப்பெயரிடப் பெற்றது. சென்னை நகருக்குக் குடிநீர் கொணரும் சிக்கலை இறுதியாக முடித்து வைக்கும் முறையில் கிருட்டிணா ஆற்றிலிருந்து சென்னைக்கு வாய்க்கால்கள். குழாய்கள் வாயிலாகத் தண்ணீர் கொணரும் திட்டம் ஒன்று ஆந்திரப்பிரதேச அரசின் கூட்டுறவால் உருவாகியுள்ளது. கரூரையும் தூத்துக்குடியையும் திண்டுக்கல், மதுரை, மணியாச்சி வழியாக இணைக்கும் அகல இருப்புப்பாதைத் திட்டம் ஒன்று மத்திய அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப் பெற்று வருகின்றது. இவ்வாறு பற்பல துறைகளில் முன்னேற்றம் இருந்தும் மக்கள் தொகைப் பெருக்க விகிதம் கணிசமாக குறையாமையால் வேலையின்மையும், வறுமையும் நீக்கியயாடில்லை.{{Right|<b>ந.சு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Henry Heras.,</b> South India Under the Vijayanagara Empire. Cosmo, New Delhi, 1980.<br> <b>Mahajan, V.D.,</b> A History of India, Vol. III, S. Chand and Co., Madras, 1980.<br> <b>Mahalingam, T.V.,</b> Reading in South Indian History, B, R. Publishing Corporation, Delhi, 1970.<br> <b>Nilakantasastri K.A.,</b> A History of South India, Oxford University Press, Madras, 1983.<br> <b>Pillay, K.K.,</b> A Social History of the Tamils, University of Madras Madras, 1975.<br> <b>Sethuraman, N.,</b> The Cholas, Raman and Raman, Kumbakonam, 1977.<br> <b>Subramanian, N.,</b> History of Tamilnad (Upto A.D. 1565). Koodal Publishers, Madurai. 1978. <section end="தமிழ்நாடு"/> <section begin="தமிழ்நாடு மீன்வளம்"/> {{dhr}} <b>தமிழ்நாடு மீன்வளம்</b>: மக்களிடையே நிறைந்த அளவில் காணப்படும் புரதச்சத்துப் பற்றாக் குறையை நீக்குவதில் மீன் முக்கிய பங்கு வகிக்கின்றன. மீனில் புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துகள், தாதுப் பொருட்கள் ஆகியவை நிரம்பவுள்ளன. மீனின் புரதம் எளிதில் செரிக்கும் தன்மை யுடையது. மனித நலனுக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமிலங்கள் (Amino acids) அனைத்தும் மீனின் புரதத்தில் உள்ளன. தமிழ்நாட்டில் 1000 கி.மீ. நீளமுள்ள கடற்கரை மற்றும் அறுகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், குளங்கள், உவர்நீர்ப் பரப்புகள், நீர்நிலைகள் போன்ற பலதரப்பட்ட 369 இலட்சம் எக்டேர் பரப்பளவில் உள்ள உள்நாட்டு, கடல் மீன் வளத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அண்மைக் காலம் வரை நமது மாநிலத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் ஆகியவற்றில் இயற்கையாக வளரும் மீன்கள் நீர் குறைந்த காலங்களில் மட்டிலுமே பிடிக்கப்பட்டு, உணவாகப் பயன்படுத்தபட்டாலும், இப்பொழுது புதியதொழில் நுட்ப முறையில் மேற்கண்ட நீர்நிலைகளில் பொருளாதார அடிப்படையில் மிகுந்த வருவாய் ஈட்டித் தரும் மீன் வளர்ப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு ஏறத்தாழ 15 விழுக்காடாகும்.<noinclude></noinclude> 6sfypbd38r32m1pxk49tcffkk6cs6a2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/973 250 652914 1961605 2026-09-03T09:29:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மொத்த கூடல்மீன் ஏற்றுமதியில் ஏறக்குறைய 12 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாட்டின் கடற்பொருள் ஏற்றும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு மீன்வளம்|945|தமிழ்நாடு மீன்வளம்}}</noinclude>மொத்த கூடல்மீன் ஏற்றுமதியில் ஏறக்குறைய 12 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாட்டின் கடற்பொருள் ஏற்றுமதி மூலம் கிடைத்த மொத்த அந்நியச் செலாவணியில் 1985-86-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பங்கு உரூ.60 கோடி ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தி ஏறக்குறைய 30 விழுக்காடு கூடியுள்ளது. மீன் வள மேம்பாட்டுத் திட்டங்கள் மாநில அரசு மீன் துறை, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றால் செயலாக்கப்படுகின்றன. மீன்துறை, மாநிலத்தில் பயனளிக்கக்கூடிய மீன் வள வளர்ச்சி பற்றிய கொள்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை கூறும் பொறுப்பேற்றுள்ளது. தமிழ் நாட்டுமீன் வளர்ச்சிக் கழகம் நாட்டு நீர்த்தேக்கங்களில் மீன்பிடித்து அவற்றை விற்பனை செய்வதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாட்டு முகமைகள் உள்நாட்டு மீன் வளத்தைப் பெருக்குவதில் கவனம் செலுத்துகின்றன. கரையோரங்களில் இரால் மீன்களைப் பிடிப்பதோடு உவர் நீர்ப் பரப்புகளில் இரால் உற்பத்தி செய்யும் முனைப்பாக அரசு பல புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, பல முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன் பயனாக உள்நாட்டுக் கடல் மீன் உற்பத்தி 1950-இல் 81,700 கண்டி (Tonne) யாக இருந்தது 1960-இல் 1,24,300 கண்டியாகவும், 1970-இல் 2,93,800 கண்டியாகவும், 1980-இல் 3,76,680 கண்டியாகவும் உயர்ந்து, 1985-86-இல் 3.85 இலட்சம் கண்டியாக அமைந்துள்ளது. மேலும், 1986-87-இல் 4.60 இலட்சம் கண்டி இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் 2.8 இலட்சம் கண்டி கடல் மீன் உற்பத்தியும், மீதி 1.8 இலட்சம் கண்டி உள்நாட்டு மீன் உற்பத்தியும் ஆகும். மேற்கூறிய உற்பத்தி இலக்குகளை அடையப் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டிதுள்ள உள் நாட்டு நீர் நிலைகளில் தேவையான மீன் குஞ்சுகள் இல்லாத காரணத்தால், அவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பல்வேறு இடங்களில் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமைகள் (Fish Farmers’ Development Agencies) ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய தொழில் நுட்ப அடிப்படை மீன் வளர்ப்பு மூலம் எளிதாக எக்டேர் ஒன்றுக்கு 1000 கிலோ முதல் 3000 கிலோ வரை மீன் உற்பத்தி செய்து உரூ. 5000 முதல் உரூ. 15000 வரை நிகர இலாபம் பெற முடியும். இம்முறை கூட்டு இன மீன் வளர்ப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது. இதன்படி கட்லா, உரோகு, மிர்கால், சாதாக் கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை போன்றனவாகிய ஆறு இனங்கள் கூட்டாக வளர்க்கப்படுகின்றன. உள்நாட்டு நீர் நிலைகளில் தீவிர இருப்புச் செய்யத் தேவையான, தரமான மீன்குஞ்சுகள் கிடைக்காமல் இருப்பது மீன் உற்பத்திக்குத் தடையாக உள்ளது. நீர் நிலைகளில் இருப்புச் செய்ய ஆண்டொன்றுக்கு உரூ.350 மில்லியன் குஞ்சுகள் தேவைப்படுகின்றன ஆனால் உரூ. 47.70 மில்லியன் மீன்குஞ்சுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே காணப்படுகின்ற பெரிய இடைவெளியைக் குறைப்பதற்கு மீன் குஞ்சு உற்பத்தியைப் பெருக்க 1987-88 ஆம் ஆண்டுத் திட்டம் இன்றியமையாதது. இயற்கை நீர் நிலைகளிலிருந்து சுமார் 20 மில்லியன் மீன் குஞ்சுகள் சேகரிக்கப்படுகின்றன. மாறி வரும் பருவ நிலைகள், மற்றும் ஆறுகள், நீர்த் தேக்கங்களின் குறைந்த நீர்ப்போக்குவரத்து ஆகிய காரணங்களினால் மீன் குஞ்சுகள் இம்முறையில் நிறையச் சேகரிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. இத்தகு மாற்று வழியாகத் தூண்டுதல் முறை இனப்பெருக்கம் மூலம் மீன்குஞ்சு உற்பத்தி செய்வதை அதிகரிக்கலாம். சிறிய பொறிப்பகங்களில் மீன் நாற்றங்கால் அமைத்துத் தொடர்ந்து விரிவுபடுத்த 1986-87 -ஆம் ஆண்டு இறுதி வரை 21 எக்டேர் பரப்பளவுள்ள மீன் குஞ்சுப் பண்ணை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 11 எக்டேர் நிலப்பரப்பில் மீன்குஞ்சு வளர்ப்புக் குளங்களும், 10 எக்டேர் சிறிய மீன் குளங்களும், அடங்கும். தேசிய மீன் குஞ்சு உற்பத்தித் திட்டத்தின் கீழ்ப் பவானி சாகர், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 10 எக்டேர் நிலப்பரப்பில் மீன் பண்ணைகள் அமைத்திட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தினால் மீன்குஞ்சு உற்பத்திப் பண்ணையின் பரப்பளவு 41 எக்டேர் ஆக உயரும் என்பதோடு, 100 மில்லியன் மீன் குஞ்சுகள் ஆண்டொன்றுக்குக் கூடுதலாகக் கிடைக்கும் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பண்ணைகளுக்காக 1987-88-ஆம் ஆண்டுத் திட்டத்தில் உரூ. 80.01 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு உவர் நீர்ப்பரப்புகளையும் அவற்றின் பரப்பளவையும் அதிகரிக்க அரசு சில செயல் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கிள்ளையில் உரூ.15.80 இலட்சம் செலவில் 5 எக்டேர் நிலப்பரப்பில் இறால் பண்ணை; உரூ.29 இலட்சம் செலவில் தஞ்சாவூரிலுள்ன தொண்டிக் காடு என்னுமிடத்தில்<noinclude> <b>வா.க. 9-60</b></noinclude> 634zd5uqxx70nlxatx6e0d6yeyd7nvg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/974 250 652915 1961606 2026-09-03T09:36:36Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "50 எக்டேர் பரப்பில் இறால் பண்ணை: இராமநாதபுரம் மாவட்டத்தில் காரங்காடு என்னுமிடத்தில் 12 எக்டேர் பரப்பில் இறால் பண்ணை; தென்னார்க்காடு மாவட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு மீன்வளம்|946|தமிழ்நாடு மீன்வளம்}}</noinclude>50 எக்டேர் பரப்பில் இறால் பண்ணை: இராமநாதபுரம் மாவட்டத்தில் காரங்காடு என்னுமிடத்தில் 12 எக்டேர் பரப்பில் இறால் பண்ணை; தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள நிலங்கரை என்னுமிடத்தில் உரூ.21 இலட்சம் செலவில் இறால் குஞ்சுகள் உற்பத்திப் பண்ணை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரியாங்குண்டு என்னுமிடத்தில் 10 எக்டேர் பரப்பில் இரால் பண்ணை ஒன்று அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டங்களின் செயற்பாடு வெவ்வேறு நிலைகளிலுள்ளன. பகுதிகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய அரபின் 50 விழுக்காடு நிதி உதவியுடன் 200 எக்டேர் பரப்புள்ள உவர் நீர்ப் பரப்பை மேம்பாடு செய்யும் பொருட்டு நுணுக்கமான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. மாநிலத்தில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் காடாதுணியாலான பொறிப்பகம், கண்ணாடிக் குடுவைப் பொறிப்பகம், மற்றும் சீனப் பொறிப்பகம் ஆகியவை நடைமுறையில் உள்ளன. இம்மூன்றுள்ளும் சீனப் பொறிப்பகம் நல்ல பயனுடையதாக உள்ளது. மேலும், இது செம்மையாகச் செயற்படுகின்றதாகவும், பொருளாதார அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. சாத்தனூர் அணையில் பரிசோதனை முறையில் பயன்படுத்தப்பட்ட சீனப் பொறிப்பக முறையில் மீன்குஞ்சுகளின் பிழைப்பு விகிதம் (Survival Rate) 70 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காடாக மாறி உள்ளது. இம்முறை ஊக்கம் ஊட்டுவதாகையால் 3 சீனப் பொறிப்பகங்கள், வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள சாத்தனூர் அணை, கோவை மாவட்டத்திலுள்ள ஆளியாறு (Aliyar) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சிறு மீனவர்களின் வருவாயைப் பெருக்கும் நோக்கத்துடன் புதிய மீன்பிடி கலன்கள், கருவிகன், மேம்பட்ட தொழில் நுட்பத்தைக் கையாளுதல் ஆகியவற்றில் 1982-இல் ஏற்படுத்திய வங்காள விரிகுடாத் திட்டம் ஓர் ஊக்குவிக்கும் கருவியாகச் செயலாற்றுகிறது. இத்திட்டம் தொழில் நுட்ப அடிப்படையிலும், இலாபகரமாகவும் இறால் வளர்த்து ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பயனடைய இயலுமென்பதை மெய்ப்பித்துள்ளது. விசைப் படகுகள் தீவிரமாக மீன்பிடிப்பதால் இயக்கச் செலவு கூடுவதுடன் கடற்கரை நெடுகிலும் இறாலின் அளவு குறைந்துள்ளது. பருவநிலை வேறுபாடுகள், பல்வேறு இறால்கள் கலந்து காணப்படுவது, மீன் சரியான அளவு கிடைக்காததால் ஏற்படும் சிரமங்கள் போன்றவை மீன் பிடிப்பில் காணப்படும் சிக்கல்களாகும். இதனால், உலக முழுவதும் இறால் வளர்ப்பிற்கான தொழில் நுட்பத்தைப் பெரிய அளவில் கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கழிமுகங்கள், உப்பங்கழிகள் போன்ற இறால் வளர்ப்பிற்கு ஏற்றவை எனத் தெரியும் சுமார் 60,000 எக்டேர் பரப்புள்ள மிகப் பெரிய நீர்ப் பரப்புள்ள இம்மாநிலத்தில், இறால் மற்றும் மீன் வளர்ப்பதற்கான தொழில் நுட்பம் விரைவாகக் கிடைத்து வருகிறது. இவ்வகைத் தொழில் நுட்பத்தை மீனவர்களிடையே பரப்பி உவர் நீர்ப்பரப்புகளில் இறால் உற்பத்தி செய்யுமாறு அரசு 9 இடங்களில் இறால் விளக்கப் பண்ணைகளை நிறுவியுள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் இராமநாதபுரத்தில் உவர் நீர் அளவை விரிவாக்கப் பிரிவுகள் செயற்பட்டு வருகின்றன. மீன் வளர்க்கும் தனியார் வருமானத்தைப் பெருக்கும் பொருட்டு அவர்களுக்கு மீன் குஞ்சு உற்பத்திக்கு நிதி ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. பொறிப்பகங்கள், மிதவைக் கூடுகள் அமைத்திடத் தனியாருக்கு உரூ.0.91 இலட்சம் உதவித்தொகை 1987-88-ஆம் ஆண்டில் வழங்கப்பட உள்ளது. இம்முயற்சிகளின் விளைவாகத் தரமுள்ள மீன்குஞ்சுகளின் தேவைக்கும், உற்பத்திக்குமிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு உரூ. 1.30 இலட்சம் செலவில் மேற்கு வங்கத்திலிருந்து 75 இலட்சம் வலைகளை வாங்கவும், தமிழ் நாடு மீன் வளர்ச்சிக் கழகத்திடமிருந்து 2.5 இலட்சம் மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்யவும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீன் குஞ்சு உற்பத்தியைப் பெருக்குவதில் போதுமான மீன் நாற்றங்கால்கள் இல்லாதது பெரும் தடையாக உள்ளது. மீன் நாற்றங்கால்கள் கட்டச் செலவு மிகுதியாகும். ஆகையால், தேவையான இடங்களில் குழைமக் (Plastic Covers) கூடுகளில் மீன் குஞ்சுகள் வளர்க்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்முறை பெரிய அளவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் உற்பத்தியைப் பெருக்கும் முனைப்பின் ஒரு பகுதியாகத தென்னார்க்காடு, மதுரை ஆகிய மாவட்டங்களிலுள்ள பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றைச் சேர்ந்த பெரிய, சிறிய நீர்ப்பாசன நீர்ப் பரப்புகளில் தீவிர மீன் வளர்ப்புக்கும், மீன் பிடிப்பிற்கும் ஏற்ற வகையில் திட்டமொன்று 1984-ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகிறது. இத்திட்டம் தென்னார்க்காடு<noinclude></noinclude> az08pnr33jrafdsinunvutsn2kmosin பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/975 250 652916 1961608 2026-09-03T09:47:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாவட்டத்தில் 20,000 எக்டேரிலும், மதுரை மாவட்டத்தில் 10,000 எக்டேரிலும் தீவிர மீன்குஞ்சு இருப்பு வைத்து அப்பகுதியிலுள்ள மீனவர் கூட்டுறவுச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு மீன்வளம்|947|தமிழ்நாடு மீன்வளர்ப்புக் கழகம்}}</noinclude>மாவட்டத்தில் 20,000 எக்டேரிலும், மதுரை மாவட்டத்தில் 10,000 எக்டேரிலும் தீவிர மீன்குஞ்சு இருப்பு வைத்து அப்பகுதியிலுள்ள மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் உதவியுடன் மீன்பிடித்து, அவற்றை அச்சங்கங்களுக்குப் பலர்ந்தளித்துச் செயற்படுகிறது. மைய அரசு உதவித் திட்டத்தின் கீழ்த் தஞ்சை, திருச்சி, தருமபுரி, தென்னார்க்காடு, செங்கற்பட்டு, பெரியார், காமராசர் மாவட்டங்களில் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமைகள் நிறுவப்பட்டுள்ளன. இம்முகமைகளின் சில்லறைச் செலவினங்கள் நீங்கலாகப் பிற செலவினங்களை மைய அரசும், மாநில அரசும் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றன. இது தவிர தமிழ்நாடு அரசின் முழுச் செலவில் திருநெல்வேலி, வட ஆர்க்காடு, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமைகள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் ஊராட்சித் துறைகளைச் சார்ந்த குளம், குட்டைகளை நீண்ட காலக் குத்தகைக்கு எடுத்து, மீன் வளர்ப்போருக்கு மேல் வரம்பாக 10 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மீன் வளர்ப்போருக்குக் கலப்பின மீன் வளர்ப்பில் பயிற்சியளிக்கப்படுகிறது. குளங்களைச் செப்பனிடவும், தேர்வு செய்த மீன் குஞ்சு வகைகளை வாங்கவும், கடன் மற்றும் மானியமாகப் பொருளுதவி கிடைக்கவும் வகை செய்யப்படுகிறது. மைய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் அரசு, அண்ணா மாவட்டத்தில் முகமை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இம்முகமையை அடிப்படையாகக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலை, வறட்சி இடங்கள் போன்ற பகுதிகளில் மீன் உற்பத்திப் பெருக்க மேம்பாட்டிற்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் மீன் வளம் மட்டுமன்றி, சங்கு, முத்துக் குளித்தல் போன்றவையும் நடைபெறுகின்றன. சங்கு எடுப்பதில் தமிழ்நாடு முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது. திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களில் சங்கு வளம் மிகுதியாக உள்ளது. இதற்கு 1986-87-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு உரூ.48,53 இலட்சமாகும். கடலில் எடுக்கப்பட வேண்டிய சங்குகளின் எண்ணிக்கை 8,00,000. முத்துக் குளித்தல் 1961-இல் நடைபெற்றது. மன்னார்வளை குடாப்பகுதியில் கிடைக்கக்கூடிய இயற்கை முத்துக்களின் அளவைக் குறிக்க இயலாது. மாநில அரசு மத்திய கடல் வள ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து (Central Marine Fisheries Research Institute) 1973-ஆம் ஆண்டில் சப்பானிய செயற்கை முத்து உற்பத்தியைத் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள வேப்பலோடையில் தொடங்கியுள்ளது. இந்த முன்னோடித் திட்டம் 1981-82-ஆம் ஆண்டில் ரூ.4.58 இலட்சம் முதலீட்டில் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் வாணிப நோக்குடன் செயற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மீன் விற்பனை பெரும்பாலும் தனியார் துறையிலேயே நடைபெறுகின்றது. கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள், விற்பனைக் கூடங்கள் போன்றவை நன்கு செயற்படாத காரணத்தினால் தமிழ்நாடு மீன்வள வளர்ச்சிக் கழகம், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, பெரியார் போன்ற மாவட்டங்களில் விற்பனை மையங்கள் அமைத்து, அவற்றின் மூலம் உள்நாட்டில் தரமான மீன் நியாய விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கும்படி செய்துள்ளது. மாநிலத்தின் மீன் பிடித்துறைமுகங்களிலிருந்து (சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம்) பதப்படுத்திய மீன் இனங்கள் (கட்லா, சுறா போன்றவை) இரால் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் 1986-87 நிதி ஆண்டில் மேற்கூறிய விற்பனையின் மூலம் உரூ.5.10 இலட்சம் வருவாய் கிடைத்துள்ளது. கடல் மீன் ஏற்றுமதியின் பெரும்பகுதி சப்பான், அமெரிக்கா, குவையத்து, பிரான்சு, பிரிட்டன், ஆசுத்திரேலியா, சிங்கப்பூர் போன்ற இடங்களுக்குச் செல்லுகின்றன. காண்க: தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம்.{{Right|<b>க.சொ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Dutt and Sandaram,</b> Indian Economy, Sultan Chand & Co., Delhi, 1987.<br> <b>Mamohia, C.B.,</b> Agricultural Problems of India, Kitab Mahal, Allahabad, 1985. <section end="தமிழ்நாடு மீன்வளம்"/> <section begin="தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம்"/> {{dhr}} <b>தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம்</b>: மீன்பிடிப்பு, மீன் ஆராய்ச்சி, மீனவர் மறுவாழ்வு, சமுதாயப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றை மாநில மீன் வளர்ச்சித் துறை செயற்படுத்துகின்றது. வணிக நோக்குடைய மீன்துறையில் திட்டங்களைச் செயற்படுத்தும் நோக்குடன் 1974-இல் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் (Tamil Nadu Fisheries Corporation) நிறுவப்பட்டது. இதற்கு 1986-இல் வரையறுக்கப்பட்ட மூலதனம் உரூ 500 இலட்சமும், செலுத்தப்பட்ட மூலதனம் உரூ 282.57 இலட்சமும் ஆகும். தமிழக அரசு, மீன்<noinclude> <b>வா.க. 9-60 அ</b></noinclude> cpxxxcsi34b7rf155nf0fudyyzub7xn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/976 250 652917 1961609 2026-09-03T10:00:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வளர்ப்புக் கழகத்திற்குத் தொடர்ந்து ஆதரவு தந்து மீன் வளர்ச்சி, மீனவர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயற்படுத்த மானியங்களும், கடன் தொகையு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு மீன்வளர்ப்புக் கழகம்|948|தமிழ்நாடு மீன்வளர்ப்புக் கழகம்}}</noinclude>வளர்ப்புக் கழகத்திற்குத் தொடர்ந்து ஆதரவு தந்து மீன் வளர்ச்சி, மீனவர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயற்படுத்த மானியங்களும், கடன் தொகையும் கொடுத்து உதவுகின்றது. அரசு மீன் துறை 1907 முதல் உள்நாட்டு, கடல்மீன் உற்பத்தியை மேம்படுத்துவதில் செயற்படுகின்றது. தொடக்கத்திலிருந்தே இத்துறை மீன் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி, மீன் வளர்ச்சி போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம், முழு நேர இயக்குநரைத் தலைவராகக் கொண்டு ஒரு அரசாங்க அமைப்புக்குள் செயற்படுகின்றது. இவருடைய பணிகளில் துணையாக இணை இயக்குநர்களும், மாவட்ட அளவில் பல துணை இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கழகம் கீழ்க்கண்ட குறிக்கோள்களை மையமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது: 1. ஆழ்கடல் மீன்பிடிப்பு, நாவாய்கள், சிறிய மீன்பிடி படகுகள், விசைப் படகுகள் முதலியனவற்றை மேம்படுத்துதல்; 2. உள்நாட்டு மீன்வளர்ப்பும், மீன்பிடிப்பும், 3. கொள்முதல், பதனிடுதல் மற்றும் மொத்த சில்லறை விற்பனையை மேற்கொள்ளுதல்; 4. பிராந்தியக் கடலிலும், தூரக்கடலிலும் பலதரப்பட்ட தளவாடங்களைக் கொண்டு மீன்பிடித்தல்; 5. மீன் பிடிப்பு அல்லது மீன் வளர்ப்புப் பணிக்கு ஏற்ற எல்லாவிதமான உதவிகளையும், பணிகளையும் அளித்தல். தஞ்சை, நெல்லை ஆகிய இடங்களில் 1986-87-இல் ஆழ்கடல் மீன் பிடிப்பு தொடரப்பட்டு, அவற்றின் மூலம் நல்ல வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது. மெக்கோ நாவாய்களுடன் 1987-88-ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்திற்கப்பால் உள்ள கடலில் தொடர்ந்து மீன்பிடிப்பு நடைபெறும். கருநாடக மாநில மீன் வளர்ச்சிக் கழக்கத்தின் கூட்டு முயற்சியுடன் மங்களூர்க் கடலுக்கப்பால் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ஆறு பாரசீகப் படகுகள் சென்னை, மண்டபம், மற்றும் கன்னியாகுமரி ஆகிய தமிழ்நாட்டுக் கரையிலிருந்து இயங்கக் கொண்டு வரப்பட்டுள்ளன. <b>மீன்குஞ்சுகள் உற்பத்தியும், உள்நாட்டு நீர்த்தேக்கங்களின் நிருவாகமும்</b>: தமிழ்நாட்டில் 11 நீர் நிலைகளில், தமிழ்நாட்டு மீன் வளர்ச்சிக் கழகம் மீன் வளத்தைப் பெருக்கி அருகிலுள்ள நகரங்களில் தரமான மீன் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறது. இந்நீர் நிலைகளிலுள்ள மீன்பண்ணைகள் ஆண்டுதோறும் சுமார் 9 மில்லியன் தரமான மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்கின்றன. சாத்தனூரில் சீனப் பொறிப்பக முறையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி வெற்றிகரமாக நிறைவேறியது. சோதனை முறையில் மிதக்கும் கூடுகளில் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் தொழில் நுணுக்கம் தேசிய வேளாண்மை வங்கியின் முழு உதவியுடன் சீராக்கப்பட்டது. <b>மீன் பதப்படுத்தும் நிலையம் மற்றும் எரியெண்ணை விற்பனை நிலையம்</b>: மீனவர்கள் கரையிறக்கிய மீனுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகப் பனிக்கட்டி உற்பத்தி, குளிர்பதன நிலையங்கள் முக்கிய பங்கேற்கின்றன. சென்னை, நாகப்பட்டினம் மதுரை, தூத்துக்குடி, மண்டபம் ஆகிய இடங்களில் மீனவர்களின் தேவையை இந்நிலையங்கள் நிறைவு செய்கின்றன. மண்டபத்திலுள்ள பதப்படுத்தும் நிலையமும், எண்ணூரிலுள்ள உறைய வைப்பு நிலையமும் தொடர்ந்து குத்தகை அடிப்படையில் இயங்கி வருகின்றன. <b>மீன்பிடி வலை தயாரிக்கும் தொழிற்கூடம்</b>: மீன் வளத்தை உயர்ந்த பட்ச அளவுக்குப் பெருக்குவதில் தரமான மீன்பிடி வலை இன்றியமையாததாகும். சப்பானிய நிதியுதவி உரூ. 70 இலட்சம், மாநில அரசின் உதவி உரூ.20 இலட்சம் ஆகியவற்றுடன் சென்னையிலுள்ள இராயபுரத்தில் 54 கண்டி (Tonne) மீன்பிடி வலை தயாரிக்கும் திறன் கொண்ட ஒரு மீன்பிடி வலை பின்னும் கூடத்தையும் 1986-இல் கழகம் நிறுவியுள்ளது. இப்பிரிவு 1986 செப்டம்பரில் நடைமுறை உற்பத்தியைத் தொடங்கியது இதுவரை உரூ. 19.2 இலட்சம் மதிப்புள்ள 19 கண்டி எடையுள்ள ‘செயற்கை இழை’ (Nylon) வலைகளை உற்பத்தி செய்துள்ளது. <b>மீன் விற்பனை</b>: மீனவர்கள் பிடித்து வருகின்ற மீனை நல்ல முறையில் விநியோகம் செய்யும் பொருட்டுக் கழகம் நேரடியாக மீன் விற்பனையில் ஒத்துழைப்பைத் தருகிறது. மீனவர்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்வது, நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான மீன் கிடைக்கச் செய்வது ஆகிய இரண்டு குறிக்கோள்களை அடைய மேற்கண்ட வசதிகளைக் கழகம் ஏற்படுத்தியுள்ளது. உள் நாட்டு நீர்த் தேக்கங்களில் பிடிக்கப்படும் மீன், கடல் மீன் உற்பத்தி ஆகியவை தவிர மீனவர்கள் கரையிறக்கிய மீனுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்து மீன் விற்பனைக்குப் போதுமான மீனைக் கொள்முதல் செய்து இருப்பில் கொள்ளவும், கழகம் வெளிச் சந்தையிலும் மீன் கொள்முதல் செய்து இருப்பில் கொள்ளவும், முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டில் சென்னை முதலிய நகரங்களில் நிறுவியுள்ள 39 மீன் விற்பனை நிலையங்களின் வழியாக இக்கழகம் தரமான மீன்களை நியாயமான விலையில் வழங்குவதன் மூலம் பொதுமக்களில் தேவையை நிறைவு செய்கிறது. {{nop}}<noinclude></noinclude> k36c6osskj8f59gau2qvj79xnzlj02c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/977 250 652918 1961611 2026-09-03T10:11:20Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>மீன் வளம் பெருக்குத் திட்டம்</b>: தமிழ்நாட்டில் மீன் வளம் பெருக்கும் திட்டங்களைச் செயற்படுத்த ஏழாவது திட்ட முதலீடான உரூ. 2400 இலட்சத்தில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு மீன்வளர்ப்புக் கழகம்|949|தமிழ்நாடு மீன்வளர்ப்புக் கழகம்}}</noinclude><b>மீன் வளம் பெருக்குத் திட்டம்</b>: தமிழ்நாட்டில் மீன் வளம் பெருக்கும் திட்டங்களைச் செயற்படுத்த ஏழாவது திட்ட முதலீடான உரூ. 2400 இலட்சத்தில் முதலிரண்டு ஆண்டுகளில் பல்வேறு மீன் வளர்ச்சித் திட்டங்களைச் செயலாக்க முயற்சிகள் மேற்கொள்பட்டு, 1987-88-ஆம் ஆண்டுத் திட்டத்தில் உரூ. 671 இலட்சம் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உரூ.59.19 இலட்சம் புதிய திட்டங்களைச் செயலாக்க ஒதுக்கப்பட்டுள்ளது. மீதித் தொகை இப்போது செயற்படுத்தப்படும் திட்டங்களுக்காகும். ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் குறிக்கோளைச் செயற்படுத்தும் முகமாக நாட்டுப் படகுகளை இயந்திர மயமாக்குதல், விசைப் படகுகள், ஆழ்கடல் மீன்பிடி படகுகளை அறிமுகப்படுத்துதல், புதிய மீன்பிடி கருவிகளை அறிமுகப்படுத்துதல், புதிய மீன்பிடி துறைமுகம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது ஆகியவற்றின் மூலம் கடல் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டக் காலத்தில் 1985-87-ஆம் ஆண்டில், 20 கரையேற்றும் படகுகள் வழங்கப்பட்டுள்ளன, இன்னும் 40 கரையேற்றக் கூடிய படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்ப் படகின் 20 விழுக்காடு விலையை அரசு மானியமாக ஏற்றுக்கொள்கின்றது. 20 விழுக்காடு மீனவரால் செலுத்தப்பட வேண்டும். மீதியான 60 விழுக்காடு வங்கிகளிடமிருந்து கடனாக மீனவர் பெற வேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீனவர்களுக்கு விசைப் படகுகள் வழங்கும் திட்டம் நடப்பு ஆண்டில் மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ளது. தொடக்கத்தில் 1987-88-இல் 50 மரத்திலான விசைப் படகுகள் வழங்கத் திட்டமிடப்பட்டு, படகின் விலையை மேற்கூறிய முறைப்படி பெற்றுக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் மொத்தக் கடல் மீன் உற்பத்தியில் ஏறக்குறைய 70 விழுக்காடு மீனைத்தொன்று தொட்டுப் பயன்படுத்தப்படும் 38000 நாட்டுப் படகுகளும், வள்ளங்களும், கட்டுமரங்களும் ஈட்டி உள்ளன. பெரும்பான்மையான மீனவர்களுக்குச் சொந்தமாகப் படகுகள் இல்லை. அவர்கள் படகுதாரர்களிடமிருந்து பிடித்த மீனைப் பங்கிட்டுக் கொள்ளும் முறையில் படகுகளைப் பெறுகின்றனர். இதன்படி படகு உரிமைதாரர்கள் பிடிக்கப்பட்ட மீனில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்வதால் கிடைக்கப் பெற்ற வருவாயில் ஒரு பகுதியே மீனவர்களுக்குக் கிடைக்கின்றது. இக்குறையைப் போக்குவதற்குப் புதிய திட்டம் ஒன்று 1986-88 ஆம் ஆண்டில் செயற்பட உள்ளது. அதன்படி நாட்டுப் படகுதாரர்கள் உரூ. 15000 விலையில் கட்டு மரம் வாங்குவதற்கு நிதியுதவி வழங்குவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. இதில் 20 விழுக்காடு வரை அரசு மானிய உதவித் தொகையாகவும், பயன்பெறும் மீனவர்கள் தங்களின் பங்காக உரூ.3000-ம், மீதியுள்ள உரூ.9000 அரசுடைமை வங்கிகளிடமிருந்து கடனாகவும் பெறப்படும். மேலும் மீனவர்களுக்கு 170 படகுகள் வாங்குவதற்கான மானியமாக உரூ.5.10 இலட்சம் 1987-88-ஆம் ஆண்டில் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இயக்கச் செலவினைக் குறைக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் வழி செய்யும் பல வகையான படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. படகுகள் கட்டுவதற்குத் தேவைப்படும் மரங்கள் கிடைப்பது அரிதாகவும், விலைகூடுதலாகவும் இருப்பதால், மற்றப் பொருள்களாலான கண்ணாடி இழைப் படகுகள், ‘சிமெண்டு’ ப்படகுகளைப் பயன்படுத்த மீனவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். 4 கண்ணாடியிழைப் படகுகளும், 3 இரும்புச் சிமெண்டு (Ferro Cement) படகுகளும் உரூ.25.40 இலட்சம் செலவில் 1987-88 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 20 விழுக்காடு தொகையான உரூ. 508 இலட்சம் மானிய உதவியாக வழங்கவும், இதில் பயன்பெறும் மீனவர்கள் 20 விழுக்காடு செலவுத் தொகையை ஏற்கவும் மீதியான 60 விழுக்காடு வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறவும் வகை செய்யப்பட்டிருக்கிறது. நாட்டுப் படகுகளின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இயந்திரங்களைப் பொருத்தி அவற்றை இயந்திரமயமாக்கும் திட்டம் 6 வது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து செயற்பட்டு வருகிறது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலிரண்டு ஆண்டுகளில் 400 உட்புறம் அல்லது வெளிப்புறம் பொருத்தக் கூடிய இயந்திரங்களை மீன்துறை வழங்கியுள்ளது. இத்திட்டம் நிறைவேற 1987-88-ஆம் ஆண்டில் 200 இயந்திரங்கள் பொருத்தக்கூடிய படகுகள் வாங்குவதற்கு உரூ. 5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழாவது திட்டக்காலத்தில் 1200 நாட்டுப் படகுகளை இயந்திரமயமாக்க அரசு இலக்கு வைத்துள்ளது. இவ்வாறு பலதரப்பட்ட படகுகளை வழங்குதன் மூலம் கடல்மீன் உற்பத்தி வருடத்திற்கு 1000 கண்டி அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்க்கடனாகவும், மானிய அடிப்படையிலும் ஒவ்வொரு ஆண்டும் உரு.8 இலட்சம் மதிப்புள்ள செயற்கை இழை (Nylon) வலையை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. தவணை முறையிலும் வழங்க வகையுள்ளது. 1000 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப் பகுதி கொண்ட தமிழ்நாட்டில் உள்ள 343 மீன் இறங்கு தளங்களில் 4000-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான விசைப் படகுகள் மீன் பிடிப்-<noinclude></noinclude> r25nk2bz8w16n699oy8uisfwqngfz3e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/978 250 652919 1961612 2026-09-03T10:20:37Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இப்படகுகள் மீனை இறக்கவும், எரி பொருள் மற்றும் பனிக்கட்டியை ஏற்றிக் கொள்ளவும், பாதகமான பருவ காலங்களிலும் பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு மீன்வளர்ப்புக் கழகம்|950|தமிழ்நாடு மீன்வளர்ப்புக் கழகம்}}</noinclude>புத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இப்படகுகள் மீனை இறக்கவும், எரி பொருள் மற்றும் பனிக்கட்டியை ஏற்றிக் கொள்ளவும், பாதகமான பருவ காலங்களிலும் பத்திரமாகக் கரையில் வைக்கவும் தங்கு தள வசதிகள் தேவைப்படுகின்றன. இதைத் தவிர விற்பனை மையங்களுக்குச் செல்லும் வகையில் பிடித்த மீனைப் பாதுகாத்திடவும், படகுகளைப் பழுதுபார்க்கவும், மீனை ஏலமிடவும் கரையில் வசதிகள் தேவைப்படுகின்றன. மேற் கூறிய தேவைகளை நிறைவு செய்ய மத்திய அரசின் நிதி உதவியுடன் பல இடங்களில் பெரிய மீன்பிடி துறைமுகங்கள் சிறு தங்குதளங்கள் உரூ.1590.78 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள பரங்கிப்பேட்டை, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பன், மூக்கையூர், கன்னியாகுமரியிலுள்ள குளச்சல், தேங்காபட்டினம் ஆகிய இடங்களில் தங்கு தளங்ளும் சிறிய அளவில் கரையோர வசதிகள் அமைப்பதற்கான வசதிகளும் செய்து தர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டுப் படகுதாரர்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டுத் தஞ்சாவூரிலுள்ள பழையாறு, இராமநாதபுரத்தில் தொண்டி, வாலி நோக்கம், ஏர்வாடி போன்ற இடங்களிலும், கன்னியாகுமரியில் முட்டத்திலும் இணைப்புச் சாலைகள், தங்குதளம், பழுது பார்க்கும் வசதிகள், பதனிடும் கூடங்கள், ஏலமிடும் இடம் வலை பின்னும் கூடம் போன்ற இன்றியமையாத வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கூறிய அடிப்படை வசதிகள் தவிர மீன்பிடி படகுகள் இரவு நேரங்களில் கடலில் மூழ்கியிருக்கும் பவளப் பாறைகளில் மோதிச் சேதமடையாமல் இருக்கவும், பத்திரமாகக் கரைவந்து சேரவும், வழிகாட்டி விளக்குகள் (Lighthouse) ஒரு முக்கியமான கரையோர வசதியாகும். இதுவரை அரசு 55 இடங்களில் வழிகாட்டி விளக்குகள் அமைத்திட உரூ.15.88 இலட்சம் செலவிட உத்தேசித்துள்ளது. சென்னை, கடலூர், மல்லிப்பட்டினம், இராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய 9 இடங்களிலுள்ள அளவை நிலையங்கள், நல்ல மீன் கிடைக்குமிடங்களை அறிந்து மீன் பிடி கருவிகளைச் சரியாகவும், பயனளிக்கும் விதத்திலும் பயன்படுத்த உதவுகின்றன. மேலும், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், மண்டபம், தூத்துக்குடி, குளச்சல் ஆகிய இடங்களில் இயங்கி வரும் மீனவர் பயிற்சி நிலையங்கள் மீன்பிடி படகுகளை இயக்குதல், மற்றும் அவற்றின் பராமரிப்புக்குப் பயிற்சி பெற்ற மீனவர்கள் கிடைக்கச் செய்தல் ஆகிய வாய்ப்புகளை அளிக்கின்றன. <b>மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள்</b>: மீனவர்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்துவதில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ந்து பெரும் பங்கேற்கின்றன. கூட்டுறவுச் சங்கங்கள் மீனவர்களுக்குக் கடன் வழங்குதல், மீன்பிடி சாதனங்களையும், கருவிகளையும் அளித்தல் பிடித்த மீனை விற்பனை செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுகிறது. மீனவர்களின் பொருளாதார வளர்ச்சிக்குக் கடன், உள்ளீடு மற்றும் விற்பனை ஆகியவை இந்தக் கூட்டுறவுகளில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 1986 இல் 601 மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்பட்டன. இச்சங்கங்களுக்கு அரசு, மானியம், மூலதனக் கடன், நடைமுறை மூலதனக்கடன், மேலாண்மை ஆகிய வகைகளில் உதவி புரிகிறது. இச்சங்கங்களின் மூலம் விசைப் படகுகள், சாதாரணப் படகுகள் வழங்க, 1978-79-ஆம் ஆண்டு முதல் தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனம் உதவி புரிந்து வருகிறது. <b>மீனவர் நலத் திட்டங்கள்</b>: மீனவர் கிராமங்களில் வீட்டு வசதி, சாலை, குடிநீர், ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மீன் இறக்கும் மேடைகள், பதனிடும் இடங்கள் போன்ற இன்றியமையாத வசதிகளை வழங்க மாநிலங்களுக்குத் தேசிய கழகத்தின் கீழ் நிதியுதவி வழங்க மைய அரசு முன்வத்துள்ளது. இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான மொத்தச் செலவுத் தொகையை, மாநில அரசு, மத்திய அரசு ஆகிய ஒவ்வொன்றும் 50 விழுக்காடு வீதத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அரசு வற்புறுத்தியுள்ளது. பிடித்து வரும் மீன்களை அருகிலுள்ள பதனிடும் நிலையங்களுக்கு விரைவில் எடுத்துச் செல்ல வசதியான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு போன்ற வசதிகளை கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்று நடத்துகின்றன. கடலரிப் பினைத்தடுக்க உரூ.113 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலரிப்புத் தடுப்புப் பணியைப் பொதுப் பணித் துறையிலிருந்து மீன் துறைக்கு 1986-87 ஆம் ஆண்டில் மாற்றுவது குறித்து அரசு எண்ணி வருகின்றது. மீன் பிடி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் விசைப்படகு, நாட்டுப் படகு மீன்பிடிகாரர்களிடையே இணக்கமான செயற்பாடுகளை உறுதிப்படுத்தவும் 1983-ஆம் ஆண்டு ‘தமிழ்நாடு கடல் மீன்பிடித்தல் ஒழுங்குபடுத்தும் சட்டம்’ செயற்படுத்தப்பட்டது. உள்நாட்டு மீன்பிடிப்பைப் பொறுத்தவரை பெரிய நீர்த்தேக்கங்கள், குளங்கள் ஆகியவற்றின் உரிமம், குத்தகை முறைகளில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும், உள்-<noinclude></noinclude> cyfwvcmh9a3w4102ov4kq78fxtwagsh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/979 250 652920 1961613 2026-09-03T10:39:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ளூர் மீனவர்களுக்கும் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் செயற்பாட்டினை விரிவுபடுத்தும் நோக்குடன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு வேளாண்மைப்...|951|தமிழ்நாடு வேளாண்மைப்...}}</noinclude>ளூர் மீனவர்களுக்கும் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் செயற்பாட்டினை விரிவுபடுத்தும் நோக்குடன் அதிக முன்னேற்றமடைந்த தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து தமிழ்நாடு முத்து தனி நிறுவனம் (Pearl Private Unit), தமிழ்நாடு ஆழ்கடல் தனி நிறுவனம் (Tamil Nadu Marine Plast Ltd.) போன்றவை நிறுவப்பட்டுள்ளன. தென்கடல் உணவு நிறுவனம் (Southern Sea Food Limited) என்ற நிறுவனத்துடன் சேர்ந்து வாணிக அடிப்படையில் ஓர் உவர் நீர் மீன் பண்ணையைத் தஞ்சை மாவட்டத்தில் நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. நாகப்பட்டினத்திற்கு அருகில் வேட்டக்காரன் இருப்பு என்னுமிடத்தில் ஒரு புதிய குஞ்சு பொறிப்பகத்துடன் கூடிய இறால் மீன் பண்ணையை நிறுவ 200 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காண்க: தமிழ்நாடு மீன்வளம்.{{Right|<b>க.சொ.</b>}} <section end="தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம்"/> <section begin="தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்"/> {{dhr}} <b>தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,</b> கோயம்புத்தூரில் 1971-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நோக்கங்கள் முப்படித்தானவை: 1) வேளாண்மையியலிலும் அதனைச் சார்ந்த அறிவியலிலும் கல்வி வழங்குதல், 2) இத்துறைகளில் மேலும் உயர்கல்வி அளித்து ஆராய்ச்சிக்கு வழிகோலுதல், 3) வேளாண்மை சார்ந்த அறிவினைக் கூட்டுறவு முதலான பிற தொடர்புடைய அரசுத் துறைகளுக்கும் விவசாயிகளுக்கும் விரிவாக்கக் கல்வியாக வழங்குதல். இம்மூன்று நோக்கங்களையும் ஒருங்கிணைந்த முறையில் செயற்படுத்த வேண்டி இப்பல்கலைக் கழகத்தின் ஆளுகை (Jurisdiction) தமிழகம் முழுவதையும் கொண்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் கி.பி. 1876-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்ட விவசாயக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வளர்ந்ததாகும். இது 1907-இல் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டுக் கல்லூரியாக வளர்ச்சியடைந்தது. இன்று இப்பல்கலைக் கழகத்தில் ஐந்து உறுப்பு நிறுவனங்கள் (Constituent Institutions) உள்ளன. அவற்றுள் தலையாய நிறுவனம் கோயம்புத்தூரிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஆகும். இங்குத்தான் பல்கலைக்கழக மைய வளாகம் உள்ளது. இந்நிறுவனம் வேளாண்மைக் கல்வி வழங்குவதில் நாட்டில் முன்மாதிரி நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உறுப்பு நிறுவனம் மதுரையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1965-இல் தொடங்கப்பட்ட போது முதலில் மதுரைப் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுப் பின் மாற்றப்பட்டது. மூன்றாம் உறுப்பு நிறுவனம் வேளாண்மைப் பொறியியற் கல்லூரி. இது கோயம்புத்தூரில் 1972-இல் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் இவ்வகைக் கல்லூரி திறக்கப்படுவது இதுவே முதல் முறை, சென்னையிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி நான்காம் உறுப்புக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1976-இல் இணைக்கப்பட்டது தூத்துக்குடியிலுள்ள மீன்வளக் கல்லூரி ஐந்தாம் உறுப்பு நிறுவனமாகும். இப்பல்கலைக்கழகத்தில் பல புலங்கள் இயங்குகின்றன. அவை, வேளாண் பொறியியல், வேளாண்மையியல், மீன்வள அறிவியல், கால்நடை மருத்துவரியல் முதலானவையாகும். கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வேளாண்மைத் தாவரவியல், வேளாண்மைப் பொருளியல், வேளாண் விரிவாக்கப் பணி, உழவியல் (Agronomy), கால்நடை மருத்துவம், உயிர் வேதியியல், உயிரியல், பயிர் உடலியல் (Crop Physiology), பூச்சியியல் (Entomology), பூ வளர்ப்பியல் (Floriculture), உணவும் ஊட்ட உணவும், நூற் புழுவியல் (Nematology), காய்கறியியல், பயிர் நோயியல், பழவியல் (Pomology), விதைத் தொழில்நுட்பம், மண் அறிவியலும் வேதியியலும் நறுமணப் பயிர்கள், தோட்டக் கலையியல் முதலான துறைகள் உள்ளன. இப்பாடங்களில் மாணவர்கள் பயின்று இளம் அறிவியல், முது அறிவியல் பட்டங்களையும் ஆராய்ச்சிப் பட்டங்களையும் பெறலாம். இப்பல்கலைக் கழகத்தில் புகுமுகப் படிப்பு (P.U.C.) இல்லை. தூத்துக்குடியிலுள்ள மீன்வளக் கல்லூரியில் மீன் வளர்ப்பியல், மீன்வளச் சூழலியல், மீன்வள உயிரியல், மீன்வளத் தொழில்நுட்பம், மொழியும் அடிப்படை அறிவியல்களும் முதலான துறைகள் செயற்படுகின்றன. சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல், விலங்கின மரபியல், ஒட்டுண்ணியியல் (Parasitology), கால்நடை அறுவையியல், கோழியிவியல், பால்வள அறிவியல், தடுப்பு மருத்துவம் முதலான பல துறைகளில் சிறப்புக் கல்வி பெற வசதியுண்டு. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் ஆய்வினை மேற்கொள்ளத் தமிழ்நாடு முழுவதும் சற்றேறக்குறைய 60 ஆய்வு மையங்களை ஏற்படுத்திப் பல ஆய்வுகளை நடத்தி வருகிறது. அதோடு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மையம் ஒன்றை நிறுவி விவசாயிகளின் சிக்கல்களை ஆராய்ந்து அவர்களுக்கு உதவுவதோடு போதிய பயிற்சியும் அளித்து வருகிறது. சென்னையிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் சிறந்த கால்நடை மருத்துவமனையும் ஆய்வுக்கூடங்களும் உள்ளன. இவ்வாறே பிற உறுப்பு<noinclude></noinclude> ls81momhtailnfzngrfo9ptq2h8a5kh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/980 250 652921 1961614 2026-09-03T10:51:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிறுவனங்களிலும் ஆய்வுக்குத் தேவையான அளவு சோதனைக் கூடங்கள் உள்ளன. ஒவ்வொர் உறுப்பு நிறுவனத்திலும் சிறந்த நூலகம் உள்ளது.{{Right|<b>சி.ப.</b>}} <section end="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ் நாவலர் சரிதை|952|தமிழ்ப்பல்கலைக் கழகம்}}</noinclude>நிறுவனங்களிலும் ஆய்வுக்குத் தேவையான அளவு சோதனைக் கூடங்கள் உள்ளன. ஒவ்வொர் உறுப்பு நிறுவனத்திலும் சிறந்த நூலகம் உள்ளது.{{Right|<b>சி.ப.</b>}} <section end="தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்"/> <section begin="தமிழ் நாவலர் சரிதை"/> {{dhr}} <b>தமிழ் நாவலர் சரிதை</b>: இந்நூல் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உள்ளிட்ட 51 புலவர்களின் பாடற்றொகுப்பாக விளங்குகிறது. இந்நூலுள் 270 பாடல்கள் உள்ளன. இறையனார் என்ற புலவர் தொடங்கி அந்தகக்கவி வீரராகவ முதலியார் வரை பல்வேறு புலவர்களின் பாடல்கள், அவர்களது வரலாற்றை ஓரளவு அறிந்துகொள்ளும் வகையில் இதில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இந்நூலுக்குத் ‘தமிழ் நாவலர் சரிதை’ என்று பெயரிட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேகப் புலவர் முதலியோரின் பாடல்களும் இந்நூலுள் தொகுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும், முன்னரே புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ள கபிலர், கோவூர்கிழார், ஒளவையார், சாத்தந்தையார் ஆகியோர் பாடல்களும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ‘இந்நூலுள் சொல்லப்படும் புலவர் வரலாறுகள் இக்காலத்துப் பயின்றுவரும் வரலாற்றோடு எவ்வளவோ மாறுபடுகின்றன’ என்று இந்நூலுக்கு முகவுரை எழுதிய திரிகோணமலை த. கனக சுந்தரம்பிள்ளை கூறியிருக்கிறார். இந்நூலாசிரியர் சங்கப்புலவர் இறையனார் தொடங்கி, எந்த குறிப்பிட்ட முறையையும் பின்பற்றாமல் தம் விருப்பத்திற் கிணங்கப் புலவர்களை வரிசைப்படுத்தி இந்நூலில் தொகுத்திருப்பது போல் தோன்றுகிறது. புலவர் பெயர் தெரியாத பாடல்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றன. இந்நூலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை, கி.பி.16-ஆம் நூற்றாண்டு புலவர் பாடல்களை இந்நூலாசிரியர் தொகுத்திருப்பதால் அவரை அக்காலத்திற்குப் பிற்பட்டவர் என்று கூறுவர். காப்புச் செய்யுள் சைவச் சார்புடையதாக இருப்பதாலும இறையனார், முருகவேள் முதலானோர் பாடல்களை முதலில் தொகுத்திருப்பதாலும், இந்நூலாசிரியர் சைவச் சமயத்தைச் சார்ந்தவராயிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இந்நூல் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்களால் செம்பதிப்பாக 1949-ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.{{Right|<b>ச.செ.</b>}} <section end="தமிழ் நாவலர் சரிதை"/> <section begin="தமிழ்நெறி விளக்கம்"/> {{dhr}} <b>தமிழ்நெறி விளக்கம்</b>: அகப்பொருள் இலக்கணமுணர்த்தும் நூல்களுள் இதுவுமொன்று, அகப் பொருள் இலக்கணம் கூறும் 25 நூற்பாக்களே இந்நூலுள் இடம் பெற்றுள. இந்நூல் 25-ஆம் சூத்திர உரையின் பிற்பகுதி கிடைக்கவில்லை. இந்நூலின் காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டென்பர். இந்நூலின் ஆசிரியர் பெயரும் வரலாறும் கிடைக்கவில்லை. குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்புத்தான் முதலில் ‘தமிழ்’ என்ற சொல்லை ‘அகப்பொருள்’ என்ற பொருளில் குறித்ததாகும். அதைப்போன்றே அகப் பொருளைத் ‘தமிழ்நெறி’ என விளக்கும் நிலை இறையனார் அகப்பொருள் போன்ற இலக்கண நூல்களிலும் காணப்படுகிறது. அந்த அடிப்படையில் அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்நூலுக்குத் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்று பெயரிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ‘விளக்கம்’ என்று முடியுமாறு நூலுக்குப் பெயரிடுவது பழைய மரபுகளுள் ஒன்று ஆகும். (எ-டு: இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், நீதிநெறி விளக்கம்). இந்நூல் ஐந்திலக்கணமும் அமைந்த முழுநூலாக விளங்கியிருக்க வேண்டும் என்பதும், இந்நூலையும் உரையையும் ஓராசிரியரே எழுதியிருக்க வேண்டும் என்பதும் இந்நூலைப் பதிப்பித்த டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களின் கருத்தாகும். இந்நூல் பொருளியலை அகம், புறம், அகப்புறம் என மூன்றாகப் பகுத்துக் கூறி, பின் அகப்பொருளின் வகையாகிய முதல், கரு உரி என்னும் மூன்று பொருள்களையும் விளக்குகிறது. இந்நூலில் இடம்பெறும் பெரும்பான்மை நூற்பாக்கள் களவு கற்புத் தொடர்பான செய்திகளையே விளக்கி நிற்கின்றன.{{Right|<b>ச.செ.</b>}} <section end="தமிழ்நெறி விளக்கம்"/> <section begin="தமிழ்ப் பல்கலைக் கழகம்"/> {{dhr}} <b>தமிழ்ப் பல்கலைக் கழகம்</b>: இந்தியத் தமிழரும், அயல்நாட்டுத் தமிழரும், ஆய்வறிஞரும் பயன் பெறும் பொருட்டு 1981-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15-ஆம் நாள் தஞ்சாவூரில், தமிழகத்தின் ஒன்பதாம் பல்கலைக் கழகமாகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தமிழக முதல்வர் டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. மொழிக்கென ஒரு பல்கலைக் கழகம் என்ற புதிய கொள்கை இப்பல்கலைக் கழகம் நிறுவப்பட்ட தன் மூலம் முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது. பிற பல்கலைக்கழகங்களினின்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் பல கோணங்களில் வேறுபட்டுள்ளது. இதற்கு ஏற்பிசைவு (Affiliation) பெற்ற கல்லூரிகள் இல்லை. இது பல்வேறு துறைகளிலும் ஆராய்ச்சிகள் ஆய்வு வழியே கல்வி மேம்பாட்டுக்காகவும், ஆராய்ச்சி ஆகியவற்றிற்காகவும் பாடுபடக்கூடிய உயர்நிலைக் கல்வி மையமாகும். தஞ்சாவூர்-திருச்சி சாலையில் தஞ்சாவூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் வல்லம் அருகில் 1000 ஏக்கர் பரப்பில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வளாகம் அமைந்துள்ளது. இங்கு இந்திய நாடாளுமன்றக் கட்டிட அமைப்பில் நூலகமும், அதனைச் சுற்றி<noinclude></noinclude> t6vbr9onotzqhe7bk5hsso6r909p5wl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/949 250 652922 1961616 2026-09-03T11:20:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாவண்கர், சிக்சசூர், சல்லாகர், அரிகர் போன்ற நகரங்கள் உள்ளன. மாட்டத்தின் மக்கள் தொகை 1,777,499 (1981). {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சித்திர துர்கம்‌"/> <section begin="சித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1961616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்திர வண்ணம்‌|923|சித்திரா பௌர்ணமி}}</noinclude>தாவண்கர், சிக்சசூர், சல்லாகர், அரிகர் போன்ற நகரங்கள் உள்ளன. மாட்டத்தின் மக்கள் தொகை 1,777,499 (1981). {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சித்திர துர்கம்‌"/> <section begin="சித்திர வண்ணம்"/> {{dhr}} {{larger|<b>சித்திர வண்ணம்:</b>}} தொல்காப்பியம் குறிப்பிடும் செய்யுள் உறுப்புகள் முப்பத்து நான்கனுள் வண்ணம் ஒன்றாகும். வண்ணம் என்பது பாவின்சுண் நிகழும் சந்த வேறுபாட்டினைக் குறிக்கும். அவ்வாறமையும் சந்தங்கள் இருபதாகும் என்பது தொல்காப்பியர் கருத்து. ‘வண்ணந்தாமே நாலைந்தென்ப’ என்பது தொல்காப்பியம் (தொல். பொருள். 524) பின்வந்தவர்கள் வண்ணங்கள் நூறாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அவையெல்லாம் தொல்காப்பியர் கூறும் இருபது வண்ணங்களுள் அடங்கு மென்பதும், பிற வண்ணங்கள் இந்த இருபது வண்ணங்ளைப் போன்று அவ்வளவு சிறப்பாகச் சந்த வேற்றுமையினை உண்டாக்கமாட்டா என்பதும் பேராசிரியர் கருத்தாகும். தொல்காப்பியர் கூறும் இருபது வண்ணங்களுள் ஒன்று சித்திரவண்ணம். செய்யுளடியில் நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்பக் கலந்து வருமாறு அமைப்பது சித்திர வண்ணம் எனப்படும். பல வண்ணம் தோன்றுமாறு இயற்றப்படுவதனால் இந்த வண்ணம் சித்திர வண்ணம் எனப்பட்டது. ‘சாரனாட நீவரலாறே’ என்னும் செய்யுளடியில், ஒரு நெடிலும் ஒரு குறிலும் அடுத்தடுத்து ஒத்து நின்று சித்திர இவ்வடியிலமைந்த சந்தம், அமைவதால் வண்ணம் என்னும் வண்ணத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சித்திர வண்ணம்‌"/> <section begin="சித்திரா பௌர்ணமி"/> {{dhr}} {{larger|<b>சித்திரா பௌர்ணமி</b>}} என்பது சித்திரை மாதத்தில் அமையும் நிறைமதி நாளைக் குறிக்கும். மாதங்களில் அமையும் நிறைமதி நாளினைப் பெரும்பாலும் – சமய அடிப்படையில் விழாவாகக் கொண்டாடுவது தமிழர் வாழ்வியலில் காணப்படும் மரபாகும். மழை போல்வன இல்லாமல், பகலின் வெப்பம் தணித்து தென்றலால் இனிமை மிகும் வேனிற் காலப் பௌர்ணமி நாளைத் தமிழ் மக்கள் பண்டு தொட்டே கொண்டாடி வந்துள்ளனர். வேளாண்மை வேலைகள் முடிந்து ஓய்வு கிடைக்கும் சித்திரை மாதப் பூரண நாள் சிறப்பாகச் சித்திரா பௌர்ணமி என்று கொள்ளப் பெற்று, விழா நாளாகக் கொண்டாடப் பெறுகிறது. சித்திரா பௌர்ணமி விழா தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் அவ்வவ்வூர் மக்களால் பொது விழாவாகக் கொண்டாடப்பெறும். அந்த நாள், தமிழ் மக்களின் இல்லங்களில் நோன்பிருந்து, வீட்டு விழாவாகக் கொண்டாடவும் பெறும். சித்திரைமாதம் ஆண்டின் தொடக்க மாதமாகத் தமிழ் மக்களால் கருதப்படுவதால் அப்போது அமையும் நிதை மதி நாள் விழா தனிச்சிறப்பு உடையதாக அமைகிறது. வீடுகளில் சித்திரா பௌர்ணமி விழா சித்திரபுத்திரனை நினைந்து கொண்டாடப்படுவதாக உள்ளது. அவன் சித்திரபுத்திரன் எனவும் குறிப்பிடப்படுவான். அவன் இயமனுக்கு, ஆன்மாக்கள் செய்யும் அற, மறச் செயல்களைக் கணக்கெழுதிக் காட்டுபவன் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நோன்பினை மேற்கொள்பவர்கள் அன்று தம் இல்லங்களைத் தூய்மை செய்து உண்ணா நோன்பிருப்பர். பொன், வெள்ளி, செப்பு போன்றவற்றாலான சித்திரபுத்திரப் படிமங்களில் அவனை எழுந்தருளச் செய்து வழிபடுவார்கள். அப்போது மாங்காய், தேங்காய் போல்வனவற்றைக் கொத்தோடும் குலையோடும் வைத்து வழிபடுவர். பால், நெய், எள்ளுருண்டை, பொங்கல் முதலியா படைக்கப்பெறும், வழிபாட்டிற்குப்பின் பாயசம் வழங்கப்படும். இந்த நோன்பு நாளில், ‘சித்திரபுத்திரன் கதை’ என்ற நூலைப் படித்து முடிப்பதனையும், அதனை மற்றவர்கள் கேட்பதனையும் கடனாகக் கொள்ளப்படுவதனை இன்றும் கிராமப் புறங்களில் காணலாம் இந்நோன்பு நாளில் நோன்பிருப்பவர் உப்பில்லா உணவை உண்பது மரபாகும். முதலில் இந்நோன்பு தொடங்குவோர் ஐந்து அல்லது ஒன்பது கலசங்கள் வைத்து அவற்றில் சித்திர புத்திரனையும், ஏனைய எண் திக்குப் பாலகர்களையும் இருக்கச் செய்து வழிபாடு செய்து, இறுதியில் தானம், ஓமம், அந்தணர் அன்னம் பாலிப்புப் போன்றன நிகழ்த்துவர். சித்திரா பௌர்ணமி விழா, சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியன்று கொண்டாடப்படும். சித்திரை மாதப் பௌர்ணமியன்று சந்திரன் சித்திரை நட்சத்திரத்திலோ, அதனை அடுத்தோ விளங்கும்போது நிகழ்த்தப்படும். சித்திரா பௌர்ணமியன்று, எல்லா நலன்களையும் வளங்களையும் நல்கவல்ல இந்திரனை நோக்கி வழிபாடு செய்வது வழக்கம் என்று தேவிபுராணம் கூறுகிறது என்பர். அன்று இந்திரன் முதலிய தேவர்களை மருக்கொழுந்தினால் வழிபடுவது நல்லது என்றும் அவ்வழிபாட்டு நாள் சனி, ஞாயிறு, வியாழன் ஆகிய நாள்களில் அமைவது சிறப்பானது என்றும் கூறப்படுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் சித்திரா பௌர்ணமிக் காலத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வந்த செய்தியினைச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. சோழர் தலைநகரமான காவிரிப் பூம்பட்டினத்தில் பழங்காலத்தில் இவ்விழா இந்திர விழா என்ற பெயரில் இருபத்தெட்டு நாள்கள் கொண்டாடப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> 0n4pmkv9nvn6rel6r6hp5a8mpekpmcr