விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.18
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
அட்டவணை பேச்சு:ஆத்மாவின் ராகங்கள்.pdf
253
415395
1962188
1278258
2026-09-07T09:32:01Z
Neechalkaran
713
/* ஏன் ஊதா நிறம்? */ புதிய பகுதி
1962188
wikitext
text/x-wiki
==1000 எண்ணுன்மிகள் (bytes) உள்ள பக்கங்கள் ==
[[பகுப்பு:1000 எண்ணுன்மிகள் பக்க அளவிட்ட அட்டவணைகள்]]
# [[பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/1]] ⇐⇒ 94 எண்ணுன்மிகள்
# [[பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/3]] ⇐⇒ 455 எண்ணுன்மிகள்
மேற்கண்டப் பக்கங்களை முதலில் மேம்படுத்தக் கோருகிறேன். ஏனெனில், இவற்றில் பலவகை விக்கிநுட்பங்கள் தேவைப்படுகின்றன. பிறகு, புதியவர்களும் மற்றப் பக்கங்களைச் செய்வது எளிதாகும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:54, 6 ஏப்ரல் 2021 (UTC)
== ஏன் ஊதா நிறம்? ==
இந்த நூலின் பக்கங்கள் பல ஊதா நிறத்தில் இட்டப்பட்டுள்ளன. ஆனால் அதில் தொழில்நுட்பச் சிக்கலுள்ள பக்கமாகத் தெரியவில்லை. பின் ஏன் ஊதா நிறத்தில் கொண்டு வர வேண்டும்? {{ping|Vishali Saravana Kumar|Sanjeev Basker|Sadiqbasha.18|Naren karthik Ragunathan}} மெய்ப்பு முடிந்தால் மஞ்சள் நிறத்திலும் முடியாவிட்டால் அதே சிவப்பு நிறத்திலும் விடலாமே? -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 09:32, 7 செப்டெம்பர் 2026 (UTC)
kqbdovjue70slrt3447s6xsiydpumpr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/281
250
626707
1962121
1947220
2026-09-06T13:28:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலக நீதி|237|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்}}</noinclude>மேலும், இவ்வமைப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் தோன்றிய நீக்கிரோ தேசிய உணர்வுக்கு ஒரு முன்னோடியாக விளங்கிற்று.{{Right|பா.சூ.}}
<section end="உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்"/>
<section begin="உலகநீதி"/>
{{dhr}}
<b>உலகநீதி</b> உலகியல் நீதிகளைக் கூறும் நூல்: உலகநாத பண்டிதரால் இயற்றப்பட்டது. இவருடைய காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். இது பதின்மூன்று விருத்தப் பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் நெஞ்சை விளித்து நீதிகளைக் கூறுகிறது. ஒவ்வொரு பாடலிலும் கடைசி அடி முருகப் பெருமானின் பெருமையினைக் கூறும்.
நடைமுறை வாழ்க்கையில் கைக்கொள்ளுதற்கு உரிய உயர்ந்த ஒழுக்கங்களை எளிய முறையில் கூறுகிறது. ‘தாழ்வான குலத்துடனே சேரவேண்டாம்’ எனக் குலவேறுபாட்டையும் இந்நூல் கூறுகிறது.
‘சிலுக்கிட்டுத் திரிதல்’, ‘குண்டுணியாய்த் திரிதல்’ போன்ற வட்டார வழக்குகளும் தாரம், மாதா, கோபம், வாத்தியார், துர்ச்சனர் போன்ற வடசொற்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் இறுதியில் இதைக் கற்போரும் கேட்போரும் அடையும் பயன் குறிக்கப்பட்டுள்ளது.{{Right|ந.மா}}
<section end="உலகநீதி"/>
<section begin="உலகப் பண்பாட்டுப் பகுதிகள்"/>
{{dhr}}
<b>உலகப் பண்பாட்டுப் பகுதிகள்</b>: ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சார்ந்த மக்கள் புவிப்பரப்பு. குழ்நிலை, சூழ்நிலையோடு கொண்டுள்ள தொடர்புகள், சமூக வாழ்க்கையமைப்பு, பொருளாதார அமைப்பு, தொழில் நுட்பம் முதலான பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் பொதுவாகக் கொண்டிருப்பர். இவ்வாறு ஒருபடித்தான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மக்கள் பரப்பே பண்பாட்டுப் பகுதி (Culture Area) ஆகும். ஒரு பாட்டுப் பகுதி என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியாகும்.
பண்பாட்டின் வரலாற்றினை ஆய்வு செய்யும் போதும் பண்பாட்டின் வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யும்போதும் குறிப்பிட்ட புலிப்பரப்பில் ஒவ்வொரு பண்பாட்டுக் கூற்றினையும் ஆராய்ந்து, அதன் வளர்ச்சி நிலைகளையும் அதன் பரவலையும் அறிவர். கிளார்க்கு விசுலர் (Clark Wissler) என்னும் மானிடவியலார் வகுத்த பண்பாட்டுப் பகுதி என்னும் கோட்பாடே நாகரிகம் பற்றிய ஆய்வுகளிலும் பண்பாடுகளை வகைப்படுத்தி அறிவதிலும் முதன்மையான அளவுகோலாகக் கையாளப்படுகிறது. பண்பாட்டுப் பரவல் பற்றிய ஆய்விற்கும் இதன் பயன்பாடு மிகுதியாகும்.
உலகப் பண்பாட்டுப் பகுதிகளை ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள், அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள், ஆப்பிரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள் என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம், ஆரியாவின் பண்பாட்டுப் பரப்புகள் வடக்கு ஆசியா, தெற்கு ஆசியா என இரு பிரிவாகப் வடக்கு ஆசியப் பகுதியில் தொன்மைச் சைபீரியா (Palaeo Siberia), சைபீரியா யுரேசியன் வன்பாலை (Eurasian Steppe), மங்கோலியப் பீடபூமி என்னும் மூன்று பிரிவுகள் உள்ளன. தெற்கு ஆசியாவில் தென் மையம், வடசீனா, தென் சீனா, கொரியா சப்பான், இந்தோனேசியா ஆகிய ஐந்து பண்பாட்டுப் பகுதிகள் உள்ளன. அனைத்துப் பகுதிகளும் வேறுபாடுகள் மிகுந்த பரப்புகளாக உள்ளன. காண்க: ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்.
அமெரிக்காவின் பண்பாட்டுப் பகுதிகளை வரையறை செய்யும்போது, வட அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள் என்றும், தென் அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள் என்றும், கரிபியப் (Caribbean) பண்பாட்டுப் பகுதி என்றும் பண்பாட்டு மானிடவியலார் பிரித்துள்ளனர். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இரண்டு பகுதிகளுமே மிகுந்த நிலப்பரப்பையும் வேறுபட்ட இயற்கைப் பிரிவுகளையும் சூழ்நிலைகளையும் கொண்டதால், இடத்திற்கு இடம் மக்களின் பண்பாட்டிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
விசுலர் வட அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியைப் பத்துப் பகுதிகளாகவும், தென் அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியை நான்கு பகுதிகளாகவும், கரிபியப் பகுதியை ஒரே பகுதியாகவும் பிரித்துள்ளார். அவை: 1. சமவெளி, 2. மேட்டு நிலம், 3. கலிபோர்னியா, 4. வடபசிபிக்குக் கடற்கரை, 5. எசுக்கிமோ, 6. மக்கன்சீ, 7, கிழக்குக் காட்டுப் பகுதி, அ. இராக்குவர், ஆ. மைய அல்கான்கின், இ. கிழக்கு அல்கான்கின், 8. தென்கிழக்கு, 9. தென்மேற்கு, 10. நகுவா (வட அமெரிக்கா); 11. சீப்சா, 12, இன்கா, 13. குவானகோ, 14. அமேசான் (தென் அமெரிக்கா): 15. ஆண்டிலசு (கரிபியா) என்பனவாகும்.
விசுலரின் வகைப்பாட்டில் தெளிவு பெறாத குரோபர் (Kroeber) ஏழாண்டுகளுக்குப் பின் வட அமெரிக்காவைப் பத்துப் பண்பாட்டுப் பகுதிகளாகப் பிரித்தார். இது விசுலர் வகைப்பாடு செய்த எண்ணிக் கையிலிருந்து மாறுபடவில்லை. குரோபர் ஒவ்வொரு அவற்றை பகுதியின் பெயரிலும் மாற்றம் செய்து அவற்றை வரிசைப் படுத்தினார்; எனினும், விசுலரின் வகைப்பாடு பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும்<noinclude></noinclude>
3pr7rx73hkyjfaas13761a0y7p4hpy0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/282
250
626708
1962122
1881828
2026-09-06T13:32:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|238|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்}}</noinclude>கருத்திற்கொண்டு, தனித்தனிப் பண்பாட்டுப் பகுதிகளை வகுத்தார். ஆனால், குரோபர் பண்பாட்டிற்கும் சூழ்நிலைக்கும் தொடர்புள்ள நிலையில் பண்பாட்டுப் பகுதிகள் பிரிக்கப்படவேண்டும் என எண்ணினார். எனினும், இந்த அனைத்து வகைப்பாடுகளும் பொதுத் தன்மையாகவே காணப்பெறுவதாக இருக்கின்றன எனக் கருதி, வடஅமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியை 89 துணைப் பிரிவுகளாகப் பிரித்தார். இந்த வகைப்பாடு பயன்பாட்டில் எளிமையாக அமையவில்லை. குரோபரின் வட அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள்: 1. ஆர்க்டிக்கு அல்லது எசுக்கிமோ, 2. வடமேற்கு அல்லது வடபசிபிக்குக் கடற்கரை, 3. கலிபோர்னியா அல்லது கலிபோர்னியா ஆற்றுப் பள்ளத்தாக்கு, 4. மேட்டு நிலம், 5. மெக்கன்சி-யூக்கன், 6. சமவெளி, 7. வடகிழக்கு அல்லது வடக்குக் காட்டுப் பகுதி, 8. தென்கிழக்கு அல்லது தென்காட்டுப் பகுதி, 9. தென்மேற்கு, 10.மெக்சிகோ.
<b>அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகளின் தனிப் பண்புகள்: நடு அமெரிக்கா</b>: மிகப் பெரிய விலங்குகளை வேட்டையாடுதல் நடு அமெரிக்கப் பண்பாட்டின் முதன்மைக் கூறாக விளங்கியது எனத் தொல்லியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. பாலைநிலப் பண்பாடும் இப்பகுதியில் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேம்பட்ட வாழ்க்கையைக் கொண்டிருந்தவர்கள் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டு நிலையான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர்.
நடு அமெரிக்கப் பகுதியில் தோன்றிய புகழ்பெற்ற நாகரிகம் ஆல்மக்கு (Olmec) ஆகும். இதில் (கி.மு. 1500-கி.பி. 300) வழிபாட்டுக் கூடங்கள் சிறப்பிடத்தைப் பெற்றிருந்தன. இந்நாகரிகம் பின்தோன்றிய புகழ்பெற்ற நாகரிகத்திற்கு அடிக்கல்லாக அமைந்தது. மாயா பண்பாடு (கி.மு.1000-கி.பி. 1517) உயர்ந்த நிலையில் இருந்தது. மாயா இந்தியர் இருநூற்றிற்கும் மேற்பட்ட வழிபாட்டு மையங்களை கி.பி.300க்கும் 900க்கும் இடைப்பட்ட காலத்தில் அமைத்து, அவற்றில் 228 அடி உயரம் வரையிலான மிகப் பெரிய பிரமிடுகளைக் கற்களால் கட்டியிருந்தனர். அமெரிக்க இந்தியர்களிலேயே மாயா இந்தியர் பெரிதும் அறிவாற்றல் வாய்ந்தவராக விளங்கினர். இவர்கள் கணிதம், வானவியல், ஆண்டுக்குறியீட்டு முறை போன்ற துறைகளில் மேம்பட்டிருந்தாலும் எழுத்து முறையில் எகிப்தியரைப் போல் வளர்ச்சியடைந்த நிலையை எட்டவில்லை.
சபோடக்கு நாகரிகம் (கி.மு.600-கி.பி.900) இரண்டாவதாகவும் தியோடிகுவாக்கன் நாகரிகம் (கி.மு. 200-கி.பி.600) மூன்றாவது சிறந்த நாகரிகமாகவும் விளங்கின. மத்திய மெக்சிகோ அசுதக்குப் பழங்குடியினர் போர்ப்படைகளை அமைத்து அரசாட்சியை ஏற்படுத்திக் கொண்டனர். வட அமெரிக்காவில் இசுபெயின் ஆதிக்கம் இருந்தும் அசுதக்கு ஆட்சி ஓங்கிய நிலையில் இருந்தது.
மத்திய அமெரிக்கக் குடிகளிடையே தகுதி வழியிலும், வகுப்பு முறையிலும் நுண்மையான பாகுபாடுகள் காணப்பட்டன. மாயா, ஆல்மக்கு, தொல்டக்கு ஆகிய ஆதிக்குடிகள் மத்திய அமெரிக்கக் குடிகளும் குறிப்பிடத்தக்கவர்கள்.
<b>தென்மேற்கு அமெரிக்கா</b>: பெரிய வேட்டையாளர்களே கி.மு. 10000-இல் இப்பகுதியைக் கைக்கொண்டிருந்தனர். அரிசோனாப் பகுதியை இசுபெயின் நாட்டினர் கண்டுபிடித்தபொழுது இங்கு வாழ்ந்த பியூப்லோ இந்தியர்கள் 70 முதல் 80 தனிக் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். இவர்களின் வீடுகள் 2 முதல் 6 அடுக்குகள் கொண்டனவாக இருந்தன. தாய்வழிக் குடும்ப அமைப்பையும் கூட்டுக்குடும்ப முறையையும் கொண்டிருந்தனர். சுனி, ஒப்பி, நவகோ அப்பாச்சி முதலியோர் இப்பகுதியில் வாழும் குறிப்பிடத்தக்க ஆதிக்குடிகளாவர்.
<b>கிழக்குக் காட்டுப் பிரதேசம்</b>: மிசிசிப்பி, புனித இலாரன்சு ஆறுகளுக்கும் மெக்சிகோ வளைகுடாவிற்கும் உட்பட்ட இக்காட்டுப் பகுதியில் முக்கிய ஆதிக்குடிகளாக சாவ்னீ, இராக்குவிசு, பாக்சு ஆகியோர் வாழ்கின்றனர். மிகப் பெரிய விலங்குகளை வேட்டையாடி வந்த இவர்கள் படிப்படியாகத் தோட்டத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். இவர்கள் கி.மு. 1000க்கும் கி.பி. 700க்கும் இடைப்பட்டகாலத்தில் அமைத்த புதைகுழிக் கோயில்களும் மண்மேடுகளும் புகழ் பெற்றவை. இதனால் இக்காலத்தைப் ‘புதைகுழிக் கோயில்கள் காலம்’ என்றே குறித்தனர். கிழக்கிந்தியக் காட்டுப் பிரதேசப் பண்பாட்டில் பெண்களே பயிர்த்தொழில் பணியில் பெரும் பங்கேற்கின்றனர். கால்வழிக் குழுவின் தலைவனே ஆட்சிக் குழுவில் உறுப்பினராகிறான்.
<b>சமவெளி</b>: இப்பகுதியில் குடியேறிய குரோ, பாவ்னீ, ஓமகர், யோவாப் பழங்குடியினர் கி.மு. 10.000 முதல் கி.மு. 4000 வரையில் பெரிய வேட்டையைக் கொண்டிருந்தனர்; பின்னர், சூரியகாந்தி, மக்காச்சோனம், புகையிலை, பீன்சு மற்றும் பல தோட்டப் பயிர்களையும் பயிரிடத் தொடங்கினர். தந்தைவழி முறையையும் கூட்டுக் குடும்ப-<noinclude></noinclude>
izo9neyp8k8286fr270osxvp0m4jplm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/283
250
626710
1962123
1881830
2026-09-06T13:39:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|239|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்}}</noinclude>முறையையும் கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆண்டிற்கு ஒருமுறை காட்டெருமை வேட்டையின் பொழுதோ சூரிய நடனத்தின்பொழுதோ ஒன்றாகக் கூடுவர்.
<b>பெரிய நதிப்படுகை</b>: இப்பண்பாட்டுப் பரப்பு பன்னாக்குப் பழங்குடிகளைக் கொண்டிருக்கிறது.
<b>கலிபோர்னியா</b>: பாலைநிலப் பண்பாட்டைக் கொண்டிருந்த இப்பகுதிப் பழங்குடிகளான விண்டன், போமோ, மைடு, முதலான பழங்குடிகள் கூட்டுக்குடும்ப முறையுடன் வாழ்கின்றனர்.
<b>தாழ் ஆர்க்டிக்கு</b>: அலாசுகா மற்றும் கனடாவின் வடக்குக் காட்டுப்பகுதித் தொடர்ச்சி இப்பகுதியில் அடங்கும். பொக்கிசு, கரிபோ ஆரிய பழங்குடியினர் தம் சிறிய வீடுகளைத் தரைக்குச் சற்றுக் கீழாக அமைக்கின்றனர். மீன்பிடித்தல், வேட்டையாடுதல் ஆகியவற்றை இவர்கள் முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். குளிர்காலத்தில் தொபோக்கன்சிலும் கோடையில் சிறிய படகிலும் சவாரி செய்கின்றனர். இப்பெரும் பகுதியில் அத்தாப்பாசுகன், அல்கோன்கியன் என்னும் இரு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மொழிகளே பேசப்படுகின்றன.
<b>வடமேற்குக் கடற்கரை</b>: சினூக்கு, ஐடா, குவா கியூட்டில் முதலான பழங்குடிகளைக் கொண்ட இப்பண்பாட்டுப் பரப்பு, தாய்வழி மற்றும் கூட்டுக் குடும்ப முறையையும், சொத்து அடிப்படையில் விரிவடைந்த தகுதி முறையையும் கொண்டிருக்கிறது. சேமித்து வைத்துள்ள உணவுப் பொருள்களை மழைக் காலத்தில்லிருந்து நிகழ்ச்சியில் வழங்கி இன்புறுகின்றனர். பெருமளவில் வழங்குவதால் அதிக செல்வாக்குக் கிடைக்கும் என்பதால் இவ்வழங்கு முறை இவர்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது.
<b>ஆர்க்டிக்கு</b>: சைபீரியாவிற்கும் அலாசுகாவிற்கும் இடையே நிலவிய தரைவழிப் பாலத்தினூடே மரங்களற்ற இப்பகுதியில் கி.மு. 6000க்கும் கி.மு. 1000 க்கும் இடைப்பட்ட காலத்தில் வந்தடைந்த மக்கள் வடஅமெரிக்க இந்தியர்களைக் காட்டிலும் சைபீரியர்களையே பெரிதும் ஒத்திருக்கின்றனர்.
வடஅமெரிக்க இந்தியப் பண்பாட்டுப் பரப்புகள் 500 முதல் 1000 மொழிகளைக் கொண்டிருந்தன. பெரும்பாலான மொழிகள் ஏட்டில் பதிவு செய்யப்படாமலேயே மறைந்துவிட்டன. இப்பொழுது பேசப்பமடும் 221 மொழிகளை 8 மொழித் குடும்பங்களாக வகைப்படுத்தியுள்ளனர். அவையாவன: 1.எசுக்கிமோ அலீயட்டு (Eskimo Aleut), 2. நடீனீ (Nadēnē), 3. அல்கான் குயியன் (Algonguian), 4. அசுதக் - தனோவன் (Aztec Tanoan), 5. ஓகன் சியோனன் (Hokan - Sionan), 6. பெனூடியன் (Penutian), 7. கோகுய்டிகான் (Coahuitecan), 8. மாயல் (Mayon).
<b>தென் அமெரிக்க இந்தியர்கள்</b>: காரிப்பு, சிப்சா, இன்கா, அமேசான், சேக்கோ, அரொவ்கான், பிட்டகோனியா, பியூகியன் ஆகிய எட்டுப் பண்பாட்டுப் பரப்புகளைத் தென்அமெரிக்கா கொண்டிருந்தாலும், இப்பகுதிகளில் பழங்குடியினரின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. இதனால் தென்அமெரிக்க இந்தியரைச் சுருக்கமாகக் கீழ்வரும் 4 பண்பாட்டு மரபுகளின் வழி அறியலாம்.
<b>ஆண்டின் நாகரிகம்</b>: உலகில் அதிக எண்ணிக்கையைக் கொண்ட தொல்லியல் படிமப் பகுதிகளில் மத்திய ஆண்டீசுக் கடற்கரைப் பகுதியும் ஒன்றாகத் திகழ்கிறது. ஆண்டீன் நாகரிகத்தில் சிறந்து விளங்கும் இன்கா, சிம்மூ, தியாகுவானாகா ஆகிய இம்முப்பழங்குடிகளும் கி.பி. 1000-இலிருந்து கி.பி. 1532 வரையில் மாறிமாறி ஒருவர் மற்றொருவரைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். இறுதியில் இன்காவின் செல்வாக்கு இசுபெயின் நாட்டினரால் கி.பி. 1532-இல் முறியடிக்கப்பட்டது.
<b>தலைமையுரிமை</b>: தென்அமெரிக்க இந்தியர்களில் குறைந்த எண்ணிக்கையுள்ள பல்வேறு பழங்குடிகள் தலைமையுரிமை (Chiefdoms) அமைப்பை ஏற்றுள்ளன. இசுபெயின் நாட்டின் வரலாற்றுப் பதிவாளர்களும் பின்வந்த ஆராய்ச்சியாளர்களும் இவ்வமைப்பை நன்கு ஆராய்ந்து, நாடு, ஆட்சிமண்டலம், அரசாட்சி எனப் பல்வேறு பெயர்களைச் சூட்டினர். அடிப்படையில் இச்சிறு பழங்குடிகள் கூட்டுச் சமூகமாக அமைந்து, மத்திய தலைமையை அமைத்துச் செயற்படுகின்றனர். இத்தமைமையில் இரு பிரிவுகள் காணப்படுகின்றன. பெரிய ஆண்டில்சு, வெனீசுலா, கிழக்கு பொலிவியா ஆகிய பகுதிகளில் தெய்வத் தன்மையுற்ற ஆளுநர் (Theocratic Chiefdom) தலைமையுரிமையை ஏற்கிறார். சிப்பேகப் (Chibeha) பழங்குடிகளிடையே படைப்பிரிவு ஆளுநர் (Militiaristic Chiefdom) தலைமை நிலையை அடைகிறார்.
<b>வெப்பமண்டலக் காட்டுப்பிரதேச மக்கள்</b>: அமேசான் மற்றும் அதன் கிளை நதிகளின் பகுதிகளிலும், பிரேசிலின் கடற்கரைப் பகுதியிலும், பிராகுவே, பனாமா மற்றும் கொலம்பியன் தாழ்நிலப் பகுதியி-<noinclude></noinclude>
lepbll2qn6sr88xe8rr4wr3oxbjrmyp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/284
250
626711
1962124
1947221
2026-09-06T13:47:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1962124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|240|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்}}</noinclude>லும் வாழ்ந்து வரும் அனைவருமே ஒத்த சூழ்நிலையை ஏற்றிருப்பதால் சமூக, பொருளாதார அமைப்பில் ஒத்துக் காணப்படுகின்றனர். வகுப்புமுறை பெருமளவில் உறவு முறையோடு ஒன்றிக் காணப்படுகிறது. காட்டை எரித்து வேளாண்மை செய்யும் இவர்கள் இப்பொழுது நிலையான சமநிலங்களில் பயிரிடுகின்றனர். இங்குக் காரிபு, அராக்கன், துப்பியன் ஆகிய பழங்குடிகள் குறிப்பிடத்தக்கவர்கள். இப்பகுதியில் பல மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்பிரிக்கப் பண்பாட்டுப் பகுதிகளை 1924-இல் எர்கோயிட்சு (Herskoits) முதன் முதலில் முறைப்படுத்திக் குறிப்பிட்டார். இவருக்குமுன் இரட்சல் (Ratzal), தவுடு (Dowd) ஆகியோர் ஆப்பிரிக்கப் பண்பாட்டு வேறுபாடுகளை வேளாண்மைப் பண்பாடு என்றும், கால்நடை மேய்த்தற் பண்பாடு என்றும் இரு பிரிவாகப் பகுத்துப் பின்னர், உணவுப் பொருள் உற்பத்தியின் அடிப்படையில் பல பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுத்தனர். இவர்களுக்குப்பின் ஏம்பிலி (W.D. Hambly) என்பார். ஆப்பிரிக்காவைச் சமூக, உளவியல் கூறுகளின் அடிப்படையில் பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுத்தார். இவ்வகைப்பாடு முன்னவர்களால் மேற்கொள்ளப்பட்ட வகைப்பாட்டிலிருந்து மிகுதியாக வேறுபடவில்லை.
மேற்கூறிய அனைத்து வகைப்பாடுகளையும் ஒருங்கிணைத்து மறு ஆய்வு செய்து, 1945-இல் எர்கோவிட்சு புதிய பண்பாட்டுப் பகுதிகளை வகுத்தார். இவரது வகைப்பாட்டின்படி, ஆப்பிரிக்கா ஒன்பது பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டது. அவையாவன:
::1. காய்சன் (Khoisan),
:::அ. புசுமன் (Bushmun),
:::ஆ. ஆட்டண்டாட்டு (Hottentot).
::2. கிழக்கு ஆப்பிரிக்கக் கால்நடைப் பகுதி (East African Cattle Area),
::3. கிழக்கு ஆர்னு (East Horn),
::4. காங்கோ (Congo),
::5. கினிக்கடற்கரை (Guinea Coast),
::6. மேற்குச் சூடான் (Western Sudan),
::7. கிழக்குச்சூடான் (Eastern Sudan),
::8. பாலைநிலப் பகுதி (Desert Area),
::9. எகிப்து (Egypt).
மடகாசுகர் தீவு ஒரே பண்பாட்டுப் பகுதி என்று பல காலமாகக் கருதப்பட்டது. இலிண்டன் (R. Linton) ஆய்விற்குப்பின் அது அவ்வாறு கருதப்படவில்லை. இத்தீவின் புவியமைப்பு, கால நிலை, பழங்குடிகளின் வாழ்க்கை முதலானவற்றை நுணுக்கமாகக் கண்ணுற்ற இலிண்டன், இத்தீவினைக் கிழக்குக் கடற்கரை, உள்நாட்டு மேட்டு நிலமும் மேற்குக் கடற்கரையும், தென்முனை ஆகிய மூன்று பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுத்துள்ளார். பொருள்சார் பண்பாட்டின் (Material Culture) அடிப்படையில் நியூசிலாந்து 8 பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து, உலகின் பிற கடற்பகுதிகளான ஆசுத்திரேலியா, தாசுமேனியா, பாலினீயொ, மைக்ரோனீசியா, மெலனீசியா, இந்தோனேசியா, பசிபிக்குப் பகுதிகள் முதலானவற்றைத் தனித்தனிப் பண்பாட்டுப் பகுதிகளாகக் கருதுவது பொருத்தமாகாது என்று ஓசர் (Hojer) கூறுவார். குறிப்பாக, மெலனீசியா, இந்தோனேசியா ஆகியவற்றைப் பல பகுதிகளாகப் பகுக்க வேண்டுவது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.{{Right|ஜெ.பா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Driver, H.E.,</b> The Contribution of A.L. Kroeber to Culture Area, Theory and Practice, Waverly Press, Baltimore, 1962.<br>
<b>Herskovits,M.J.,</b> Cultural Anthropology, Oxford, IBH Publishing Co., New Delhi, 1974.<br>
<b>Wissler, C.,</b> The Americans Indian, McMurtri & New York, 1917.
<section end="உலகப் பண்பாட்டுப் பகுதிகள்"/>
<section begin="உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்"/>
{{dhr}}
<b>உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்</b>: தன் தலைமையகம் பாரிசில் (Paris) உள்ளது. உயர் கல்வி வழங்கும் உலக நாட்டுப் பல்கலைக்கழகங்களின் உயர் நிருவாகிகளிடையே தொடர்புப் பாலமாக உலகப் பல்கலைக்கழகச் சங்கம் (International Association of Universities - IAU) விளங்குகிறது. இச்சங்கம் 1950-இல் தொடங்கப்பெற்றது. ஏறத்தாழ 90 நாடுகளிலுள்ள மொத்தம் 360 பல்கலைக்கழகங்கள் இச்சங்கத்தின் உறுப்பாகச் சேர்ந்துள்ளன.
உலகின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் நிருவாகம் பற்றிய தலையாய செய்திகளை வழங்கக் கூடிய முதன்மையான சங்கமாக இது விளங்குகிறது. இதற்காக இச்சங்கம் பெரும் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்நூலகத்திலிருந்து உலகிலுள்ள பல்கலைக்கழகங்களின் நடைமுறைகளைப் பற்றிய செய்திகளை எளிதில் தெரிந்து கொள்ள இயலும். மேலும், ‘செய்தியறிக்கை’ (Bulletin) என்னும் காலாண்டு இதழ் ஒன்றினையும் இது வெளியிட்டு வரு-<noinclude></noinclude>
7vzkxib8o1rxqlalk81hf7f4ch67771
1962136
1962124
2026-09-06T14:39:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|240|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்}}</noinclude>லும் வாழ்ந்து வரும் அனைவருமே ஒத்த சூழ்நிலையை ஏற்றிருப்பதால் சமூக, பொருளாதார அமைப்பில் ஒத்துக் காணப்படுகின்றனர். வகுப்புமுறை பெருமளவில் உறவு முறையோடு ஒன்றிக் காணப்படுகிறது. காட்டை எரித்து வேளாண்மை செய்யும் இவர்கள் இப்பொழுது நிலையான சமநிலங்களில் பயிரிடுகின்றனர். இங்குக் காரிபு, அராக்கன், துப்பியன் ஆகிய பழங்குடிகள் குறிப்பிடத்தக்கவர்கள். இப்பகுதியில் பல மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்பிரிக்கப் பண்பாட்டுப் பகுதிகளை 1924-இல் எர்கோயிட்சு (Herskoits) முதன் முதலில் முறைப்படுத்திக் குறிப்பிட்டார். இவருக்குமுன் இரட்சல் (Ratzal), தவுடு (Dowd) ஆகியோர் ஆப்பிரிக்கப் பண்பாட்டு வேறுபாடுகளை வேளாண்மைப் பண்பாடு என்றும், கால்நடை மேய்த்தற் பண்பாடு என்றும் இரு பிரிவாகப் பகுத்துப் பின்னர், உணவுப் பொருள் உற்பத்தியின் அடிப்படையில் பல பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுத்தனர். இவர்களுக்குப்பின் ஏம்பிலி (W.D. Hambly) என்பார். ஆப்பிரிக்காவைச் சமூக, உளவியல் கூறுகளின் அடிப்படையில் பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுத்தார். இவ்வகைப்பாடு முன்னவர்களால் மேற்கொள்ளப்பட்ட வகைப்பாட்டிலிருந்து மிகுதியாக வேறுபடவில்லை.
மேற்கூறிய அனைத்து வகைப்பாடுகளையும் ஒருங்கிணைத்து மறு ஆய்வு செய்து, 1945-இல் எர்கோவிட்சு புதிய பண்பாட்டுப் பகுதிகளை வகுத்தார். இவரது வகைப்பாட்டின்படி, ஆப்பிரிக்கா ஒன்பது பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டது. அவையாவன:
::1. காய்சன் (Khoisan),
:::அ. புசுமன் (Bushmun),
:::ஆ. ஆட்டண்டாட்டு (Hottentot).
::2. கிழக்கு ஆப்பிரிக்கக் கால்நடைப் பகுதி (East African Cattle Area),
::3. கிழக்கு ஆர்னு (East Horn),
::4. காங்கோ (Congo),
::5. கினிக்கடற்கரை (Guinea Coast),
::6. மேற்குச் சூடான் (Western Sudan),
::7. கிழக்குச்சூடான் (Eastern Sudan),
::8. பாலைநிலப் பகுதி (Desert Area),
::9. எகிப்து (Egypt).
மடகாசுகர் தீவு ஒரே பண்பாட்டுப் பகுதி என்று பல காலமாகக் கருதப்பட்டது. இலிண்டன் (R. Linton) ஆய்விற்குப்பின் அது அவ்வாறு கருதப்படவில்லை. இத்தீவின் புவியமைப்பு, கால நிலை, பழங்குடிகளின் வாழ்க்கை முதலானவற்றை நுணுக்கமாகக் கண்ணுற்ற இலிண்டன், இத்தீவினைக் கிழக்குக் கடற்கரை, உள்நாட்டு மேட்டு நிலமும் மேற்குக் கடற்கரையும், தென்முனை ஆகிய மூன்று பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுத்துள்ளார். பொருள்சார் பண்பாட்டின் (Material Culture) அடிப்படையில் நியூசிலாந்து 8 பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து, உலகின் பிற கடற்பகுதிகளான ஆசுத்திரேலியா, தாசுமேனியா, பாலினீயொ, மைக்ரோனீசியா, மெலனீசியா, இந்தோனேசியா, பசிபிக்குப் பகுதிகள் முதலானவற்றைத் தனித்தனிப் பண்பாட்டுப் பகுதிகளாகக் கருதுவது பொருத்தமாகாது என்று ஓசர் (Hojer) கூறுவார். குறிப்பாக, மெலனீசியா, இந்தோனேசியா ஆகியவற்றைப் பல பகுதிகளாகப் பகுக்க வேண்டுவது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.{{Right|ஜெ.பா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Driver, H.E.,</b> The Contribution of A.L. Kroeber to Culture Area, Theory and Practice, Waverly Press, Baltimore, 1962.<br>
<b>Herskovits,M.J.,</b> Cultural Anthropology, Oxford, IBH Publishing Co., New Delhi, 1974.<br>
<b>Wissler, C.,</b> The Americans Indian, McMurtri & New York, 1917.
<section end="உலகப் பண்பாட்டுப் பகுதிகள்"/>
<section begin="உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்"/>
{{dhr}}
<b>உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்</b>: தன் தலைமையகம் பாரிசில் (Paris) உள்ளது. உயர் கல்வி வழங்கும் உலக நாட்டுப் பல்கலைக்கழகங்களின் உயர் நிருவாகிகளிடையே தொடர்புப் பாலமாக உலகப் பல்கலைக்கழகச் சங்கம் (International Association of Universities - IAU) விளங்குகிறது. இச்சங்கம் 1950-இல் தொடங்கப்பெற்றது. ஏறத்தாழ 90 நாடுகளிலுள்ள மொத்தம் 360 பல்கலைக்கழகங்கள் இச்சங்கத்தின் உறுப்பாகச் சேர்ந்துள்ளன.
உலகின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் நிருவாகம் பற்றிய தலையாய செய்திகளை வழங்கக் கூடிய முதன்மையான சங்கமாக இது விளங்குகிறது. இதற்காக இச்சங்கம் பெரும் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்நூலகத்திலிருந்து உலகிலுள்ள பல்கலைக்கழகங்களின் நடைமுறைகளைப் பற்றிய செய்திகளை எளிதில் தெரிந்து கொள்ள இயலும். மேலும், ‘செய்தியறிக்கை’ (Bulletin) என்னும் காலாண்டு இதழ் ஒன்றினையும் இது வெளியிட்டு வரு-<noinclude></noinclude>
7o4t5572h44oefvvt8tebx5u251gsjb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/285
250
626712
1962125
1947222
2026-09-06T13:53:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பொதுவுடைமை அமைப்பு|241|உலகப் பொதுவுடைமை அமைப்பு}}</noinclude>கிறது. இவ்விதழில் உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிருவாக முறை, ஆராய்ச்சி, கல்வி, சாதனைகள் ஆகிய செய்திகள் இடம் பெறுகின்றன இச்சங்கம் உலகின் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகளை நடத்துகிறது; பெரும் கல்வி மாநாடுகள் நடத்தத் துணையாக நிற்கிறது. இது அனைத்து நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) ஆண்டு தோறும் வழங்கும் பணக்கொடையுதவியாலும் உறுப்பு நிறுவனங்கள் தரும் நுழைவுக் கட்டணத்தாலும் இயங்கி வருகிறது.
பொதுநல நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சங்கம் (Association of Commonwealth Universities-ACU), அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிடைச் சங்கம் (Inter-American University Association) போன்றவை உலகப் பல்கலைக்கழகச் சங்கத்தின் பணிகளைப் போன்றே, உயர்கல்வியில் பங்காற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.{{Right|எஸ்.த.}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Stone, F.D.,</b> International Developments in Educational Administration University of Iowa. Iowa, 1981.
<section end="உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்"/>
<section begin="உலகப் பொதுவுடைமை அமைப்பு"/>
{{dhr}}
<b>உலகப் பொதுவுடைமை அமைப்பு</b>: முதலாம் உலகத் தொழிலாளர் கழகம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Labour or Trade Unions) ஆகும். இதில் இணைந்த பல்வேறு சங்கங்களுக்கிடையே கொள்கை வேறுபாடுகளிருந்தாலும், கி.பி.19-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களுக் கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய ஒரு காரணியாக இக்கூட்டமைப்பு இருந்தது.
<b>முதலாம் உலகப் பொதுவுடைமை அமைப்பு</b>: இலண்டனில் 28—9—1864-இல் செல்வாக்கு மிக்க பிரிட்டிசு, பிரஞ்சுத் தொழிற்சங்கத் தலைவர்களால் நிறுவப்பட்டது. காரல் மார்க்சு (Karl Marx) அதை அமைப்பதில் பங்கு கொள்ளாவிட்டாலும், அவர் அதனுடைய பொதுக்குழுவின் 32 உறுப்பினருள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல தொழிற் சங்கங்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் இந்த அமைப்போடு இணைக்கப்பட்டிருந்தமையால் அதிகாரக்குவிப்புடைய இவ்வமைப்பு ஒவ்வோராண்டிலும் வெல்வேறு நகரத்தில் கூடிக் கொள்கைகளையும் முறைகளையும் வகுத்தது. இக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு இலண்டனில் இருந்து நிருவாக உறுப்பாகச் செயற்பட்டது. இது தேசியக் கூட்டாட்சிக் கழகங்களுக்குச் செயலாளர்களை அமர்த்திற்று. தொழிலாளர் வேலை நிறுத்தங்களுக்கு நிதி உதவி செய்தற்காக நிதி வசூலிக்க ஏற்பாடு செய்தது.
இந்த முதலாம் உலகப் பொதுவுடைமை அமைப்பில் (First Communist International) ஒன்றுக்கொன்று மாறுபட்ட சமநிலைக் கோட்பாட்டாளர் இருந்தனர். இதில் மார்க்சின் கொள்கையாளர்கள் இருந்தனர்; முதலாளித்துவ முறையைச் சீராக்குதலை மட்டும் ஆதரித்த பிரஞ்சுச் சமநிலைக் கொள்கையாளராகிய பியரி சோசப்பு பிரவுதன் (Pierre Joseph Proudhon) என்பவருடைய ஆதரவாளர்கள் இருந்தனர்; தீவிரப் புரட்சிவாதிகளான ‘பிளாங்குவியக்காரர்கள்’ (Blanquists) இருந்தனர்; இத்தாலிய, இசுபானிய, பிரஞ்சிய, சுவிசுக் கூட்டமைப்புகளினால் ஆதரிக்கப்பட்ட மிக்கேல் பக்குனின் (Michael Bakunin) என்பவரால் உருவாக்கப்பட்ட அரசு வேண்டாக் கொள்கையாளரும் (Anarchists) இருந்தனர்.
அதிகாரக் குவிப்பை ஆதரித்த மார்க்சியச் சமநிலையாளருக்கும் (Marxian Socialists) அரசு வேண்டாக் கொள்கையாளருக்குமிடையே பிளவு ஏற்பட்டது. இவ்வமைப்பின் பல மாநாடுகளில் பக்குனின் கொள்கையினருடைய செல்வாக்கு வளர்ந்தது. சமூகக் குடியாட்சியாளர்கள் (Social Democrats) உலகப் பொதுவுடைமை அமைப்பிலிருந்து விலகினர். அரசு வேண்டாக் கொள்கையினரும் இவ்வமைப்பில் பிடிப்பு இழந்தனர். செருமனி, ஆசுத்திரியா, பிரான்சு, இசுபெயின் ஆகிய நாடுகளில் உலகப் பொதுவுடைமை அமைப்புத் தடைசெய்யப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து அளவில் சுருங்கிய இவ்வமைப்பு கி.பி.1868-இல் பிரான்சு, பெல்சியம், சுவிட்சர்லாந்து ஆசியநாடுகளில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களுக்கு உதவி செய்தது. பின்னர் இவ்வமைப்பு மறைந்தது.
<b>இரண்டாம் உலகப் பொதுவுடைமை அமைப்பு</b> உலகச் சமநிலை அமைப்பு (Socialist International) என்றும் கூறப்படும். இது கி.பி.19-ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டு முதல் முதலாம் உலகப் போர் வரை ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கங்களால் பின்பற்றப்பட்ட கருத்துகள், கொள்கைகள், வழிமுறைகள் முதலியவற்றை ஏற்ற தொழிற்சங்கங்களும் சமநிலைக் கட்சிகளும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும். இது கி.பி.1889-இல் பாரிசில் நிறுவப்பட்டது. இதில் தேசியக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் உறுப்பினராக இருந்தன. இது அமைப்பில் அதிகாரக் குவிப்புடையதோ அமைப்பில் இறுக்கமானதோ<noinclude>
<b>வா.க. 5-16</b></noinclude>
djvknx4hfy77xbupkzvtlk5sy1t0mz4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/286
250
626718
1962126
1881933
2026-09-06T14:02:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பொதுவுடைமை அமைப்பு|242|உலகப் பொதுவுடைமை அமைப்பு}}</noinclude>அன்று. இது தோன்றிய சில காலத்துக்குப் பின்னரே, இதன் செயலகம் பிரசல்சு (Brussels) நகரில் அமைக்கப்பட்டது. இது ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, சப்பான் முதலியவற்றின் சமநிலைக் கட்சிகளின் சார்பாளியாக 1912-இல் இருந்தது. இதில் 9000 பேருக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தது. இதன் தீர்மானங்களுக்கு உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லையாயினும், இதை ஓர் உயர்தரமான ஒழுக்க இயல் அதிகாரியாகக் (Higher Moral Authority) கட்சிகள் கருதின.
இவ்வமைப்பு பாராளுமன்றக் குடியாட்சி முறையை ஆதரித்தது. இம்முறையை எதிர்த்த அரசு வேண்டாதோரை (Anarchist) இது கி.பி. 1896-இல் இலண்டன் மாநாட்டில் நீக்கிற்று. ஆயினும் இது, சமநிலைக் கோட்பாட்டை ஏற்காத மற்றக் கட்சிகளோடு ஒத்துழைத்தலின் வழியாகச் சமநிலைச் குறிக்கோளை அடைதல் இயலாது என்று கூறிய மார்க்சியவாதிகளையும், அவர்கள் ஆதரித்த வருக்கப் போராட்டத்தையும், புரட்சியையும் ஆதரித்தது. அப்போது உருவாகிக் கொண்டிருந்த போரைத் தடுத்தற்கு வேலை நிறுத்த முறையை இது ஆதரிக்கவில்லை. நாடுகளுக்கிடையேயுள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்குக் கட்டாய அதிகாரமுள்ள நீதிமன்றங்களை ஏற்படுத்துதலையும், போர்க் கருவிகளை முதலில் படிப்படியாகக் குறைத்து முடிவில் அறவே ஒழித்தலையும், இரகசிய அரசியல் உறவுகளை நீக்குதலையும், அயல்நாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை பாராளுமன்றப் பொறுப்பு நிறுவப்படுதலையும் இது ஆதரித்தது.
இதில் உருசியத் தலைவர் இலெனினும், உரோசா லக்சம்பர்கும் (Rosa Luxumburg), இன்னும் சிலரும் வரைந்து கொண்டு வந்த தீர்மானம் 1907 இல் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் போரிலீடுபட்ட நாடுகளிலுள்ள சமநிலைக் கட்சிகளைப் போரினால் தோற்றுவிக்கப்பட்ட சமூக, பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்திக் கொண்டு சமூகப்புரட்சிகளைத் தோற்றுவிக்குமாறு தூண்டிற்று.
<b>இரண்டாம் உலகப் பொதுவுடைமை அமைப்பில் பிளவு</b>: இரண்டாம் உலகப்பொதுவுடைமை அமைப்பு முதல் உலகப் போரினால் (1914-1918) மிகவும் பாதிப்புக்குள்ளாயிற்று. போரில் நாடுகள் பல கூட்டாகச் சேர்ந்திருந்தன. போர்நாடுகளில் உள்ள சமநிலைக் கட்சிகள் கொள்கைகளிலும் நோக்கங்களிலும் வேறுபாடின்றி ஒரே தன்மையனவாக இருந்தாலும், அவை இருந்த நாடுகள் போரின் காரணமாகப் பிளவுண்டிருந்த காரணத்தால், அக்கட்சிகளின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பை ஒத்திருந்தது. செருமானிய, உருசிய நாடுகளின் சமநிலைக் கட்சிகளைத் தவிர, மற்ற எல்லா நாடுகளிலுமுள்ள சமநிலைக் கட்சிகளும் தத்தம் நாட்டரசாங்கங்களுடைய போர் முயற்சிகளை ஆதரித்தன. இதனால் இரண்டாம் உலகப் பொதுவுடைமை அமைப்பில் பிளவு உண்டாயிற்று.
இவ்வமைப்பில் உலக நோக்குடையோர் (Internationalists) சிறுபான்மையராக இருந்தனர். இவர்கள் போரை ஆதரித்த பெரும்பாலாரைக் கண்டித்தும், போர் உடனடியாக நிறுத்தப்படுதல் வேண்டுமென்றும், நாடு பிடித்தல், நட்ட ஈடு அளித்தல் முதலியவை இல்லாத அமைதி நிலை ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென்றும் கூறினர். இலெனினுடைய தலைமையில் ஓர் இடதுசாரிக்குழு இவ்வமைப்பில் தோன்றிற்று. பிளவுபட்டுச் செயலற்றுப் போயிருந்த இரண்டாம் உலகப் பொதுவுடைமை அமைப்பை மீண்டும் உயிர்ப்பித்தல் கூடாதென்றும், அப்போது நடந்து கொண்டிருந்த உலகப்போர் ஓர் ஏகாதிபத்தியப் போர் என்றும், அதை வருக்கப்போராக மாற்றுதற்கு முயலுதல் வேண்டுமென்றும் இவ்விடதுசாரிக்குழு கூறிற்று.
இரண்டாம் உலகப்பொதுவுடைமை அமைப்பை மாற்றி அமைக்கும் நோக்கத்தோடு, 1920-இல் தேச நாடுகளிலுள்ள சமநிலைக் கட்சித் தலைவர்கள் அடங்கிய ஓர் ஆணையம் செனிவாவில் இவ்வமைப்பின் மாநாட்டைக் கூட்டிற்று. ஆனால், இம்மாநாட்டிற்கு இந்த அமைப்பில் போருக்கு முந்தியிருந்த உறுப்பினருள் மிகச் சிலரே வந்திருந்தனர். இம்மாநாட்டில் போர்க்கொள்கை பற்றியும், உருசிய போல்சுவிக்குகள் (Russian Bolsheviks) 1917-இல் நடத்திய புரட்சியைப் பற்றியும் சமநிலைக் கொள்கையாளரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதனால், இவ் அமைப்பில் பிளவு தோன்றி மறைந்தது.
இவ் அமைப்பு 1919-இல் கூடியபோது, இதில் இலெனினுடைய நண்பர் திராட்சுகியினால் (Trotsky) வரையப்பட்ட இரண்டாம் பொதுவுடைமைத் திட்ட அறிக்கை (Second Communist Manifesto) ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வறிக்கையில், உலகப் போரினால் மனிதருக்குத் தோன்றிய வறுமைத் துன்பத்தைப் பற்றிச் சமநிலைக் கொள்கையாளரிடையே இருந்து வந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இலெனினின் இளைய நண்பர் நிக்கலாய் புக்காரின் (Nikholai Bukharin) இரண்டாம் பொதுவுடைமைத் திட்ட அறிக்கையின் முடிவுகளைச் சுருக்கிக் கூறினார். ‘போர் நடைபெற்றதனால் தொழிலாளர்களின் அடிமைத்தளை-<noinclude></noinclude>
dlwtiyh9vumcc6a0xswmouqedcsctas
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/287
250
626719
1962127
1881936
2026-09-06T14:09:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பொதுவுடைமை அமைப்பு|243|உலகப் பொதுவுடைமை அமைப்பு}}</noinclude>முறிந்துவிட்டது. ஏகாதிபத்திய அரசுக்கு அவர்கள் அடிமைப்பட்டுக்கிடந்த நிலைமையும் மாறிற்று. சருவாதிகாரமும் பழைய அரசுமுறையும் மாற்றப்பட்டு, உழைப்பாளர்களின் புதிய ஆற்றல் உருவாகுகிறது என்பன அவர் கருத்துகள்.
இலெனினின் பொதுவுடைமைக் கருத்துகள் இவ் அமைப்பில் ஆய்வு செய்யப்பட்டன. ஏகாதிபத்தியந்தான் போரை நடத்துகிறதென்றும், ஏகாதிபத்தியப் போர் நடைபெறுதலினால் சமநிலைப் புரட்சி நடைபெறும் வாய்ப்பு இருக்கிறதென்றும் இலெனின் கூறினார். முதல் உலகப்போர் ஏகாதிபத்திய முறையைப் பரப்புதற்காகத் தேசிய நாடுகளால் தொடங்கப்படும் பல போர்களின் வரிசையில் முதலாவது ஆகும். முதலாளித்துவ முறை மாறித் தோன்றுவதாய விடுதலையைத் தவிர்த்தல் இயலாது. அடுத்தடுத்து வரும் போர்களும் பொருளாதார முடக்கங்களும் முதலாளித்துவத்தின் வலுவை உறிஞ்சிவிடும். இவ்வாறு அவர் மார்க்சின் கருத்துகளை வலியுறுத்தினார். இலெனினும் காட்சுகியும் (Kautsky) 1915-இல் மேற்கு ஐரோப்பா புரட்சிக்கு ஏற்றதாக இருப்பதாகவும், மேற்கு ஐரோப்பாவிலும் புரட்சி ஏற்பட்டால்தான் உருசியப்புரட்சிக்கு அது ஆதரவு அளித்து, அதை நிலை பெறச் செய்யுமென்றும் கூறினர். சமநிலைக் கோட்பாட்டாளர்கள் 1914-இல் உலக அமைப்பிலிருந்து பிரிந்தனர்.
இரண்டாம் உலகப் பொதுவுடைமை இயக்கம் வலுவிழந்து கொண்டு வந்த காலத்தில், உருசியாவில் பொதுவுடைமை அரசாங்கமென்பது கட்சியின் கொள்கையாகவே ஆயிற்று. கட்சி என்பது தொழிலாளரின் முன்னணியாகவும், குடியாட்சி இயல்புடைய அதிகாரக் குவிப்பு என்பது பொதுவுடைமைக் கட்சியின் அமைப்புக் கொள்கையாகவும் ஆயின. எதிர்ப் புரட்சியை விரும்பாதவரெல்லாம் போல்சுவியப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்தமையாலும், அதில் சேர்க்கப்படாத ஏனைய சமநிலை, மார்க்சியக் கட்சியினர் சிறுபான்மையராகித் (Mensheviks) தடை செய்யப்பட்டமையாலும், ஆளும் கட்சியான போல்சுவியக் கட்சி மட்டுமே பெரும்பான்மைக் கட்சியாக 1921-இல் ஆயிற்று. அரசாங்கத்திலும் கட்சியே அதிகார மையமாக ஆயிற்று.
<b>மூன்றாம் உலகப் பொதுவுடைமை அமைப்பு</b>: இலெனின் தம் கருத்துகளை ஏற்ற போல்சுவிக்குகளாகிய தீவிரக் கொள்கையாளர் உருசியாவில் 1917, அக்டோபர், நவம்பர் மாதங்களில் புரட்சியை வெற்றியாக நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதைக் கண்டு, அவர்களை மூன்றாம் உலகப் பொதுவுடைமை அமைப்பில் (1919-இல்) இணைத்து, 1920-இல் தேசியக் கட்சிகளைப் புதிய போல்சுவிக்கு அமைப்பில் சேர்ப்பதற்குரிய கட்டுப்பாடுகளை வகுத்தார். உருசியப் பொதுவுடைமைக் கட்சியே இம்மூன்றாம் உலகப் பொதுவுடைமை அமைப்புக்குத் தலைமை தாங்கிற்று.
இசுட்டாலின் (Stalin) ஆட்சிக்காலத்தில் இந்த மூன்றாம் அமைப்பு உருசியப் பொதுவுடைமைக் கட்சியின் முடிபுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் முத்திரையாக (Rubbar Stamp) ஆயிற்று. இந்த மூன்றாம் அமைப்பு உலகப் புரட்சி என்னும் நோக்கத்தில் தேசிய பொதுவுடைமைக் கட்சிகளின் கழகமாக அமைக்கப்பட்டாலும், அதன் மீது சோவியத்து உருசியா தன் முழுக் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு ஒரு கருவியாக மாறிற்று. உலகப் பொதுவுடைமை இயக்கத்தை உருசியா இதன் வாயிலாகக் கட்டுப்படுத்திற்று. முதல் உலகப்போரின்போது இரண்டாம் உலகப் பொதுவுடைமை அமைப்பில் ஒற்றுமை குலைந்து, 3 பிரிவுகள் தோன்றின. அவை மூன்றாம் உலகப் பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்தன. பெரும்பாலான சமநிலைக்கட்சிகள் இவ்வமைப்பு வலது சாரியாக அமைந்து, தம் தேசிய அரசாங்கங்களின் போர்முயற்சிகளை ஆதரித்தன. அவை தம் பகைவர்களைச் சமநிலை நெறிக்கும் பகைவர்களே என்று கருதின. இந்த வலதுசாரிகளுடைய தேசிய உணர்வை இவ்வமைப்பின் நடுவண் பகுதியினர் (Centre) பழித்துரைத்து, உகை அமைதி என்ற நோக்கத்தைக் கடைப்பிடித்தனர்.
சமநிலைச் கொள்கையாளர்கள் இலெனினின் தலைமையில் தேசியத்தையும் அமைதி நெறியையும் புறக்கணித்து, நாடுகளின் போரை நாடு கடந்த வருக்கப்போராக மாற்றுதற்குக் கொள்கை வகுத்தனர். உள்நாட்டு அமைதியை நிலைநாட்டுதற்காக அன்றி, உள்நாட்டுப்போரைக் கொள்கைப்பரப்புதலின் வாயிலாகக் கொண்டுவரும் பொருட்டும், 1919-இல் நடுவண் போக்குடையவர்கள் (Moderates) ஒரு புதிய உலகப் பொதுவுடைமை அமைப்பை உருவாக்குதல் வேண்டுமென்று முயற்சி செய்தபோது அதைத் தடுத்தற்பொருட்டும், இலெனின் மாசுக்கோவில் 1919-இல் புதிய உலகப்பொதுவுடைமை அமைப்பை அமைத்து, அதன் முதற் கூட்டத்தைக் கூட்டினார். அதில் சில சார்பாளர்களே வந்திருந்தனர்.
இலெனின் மாசுக்கோவில் 1920-இல் கூட்டிய அமைப்பினர் இரண்டாம் கூட்டத்துக்கு 37 நாடுகளிலிருந்து சார்பாளர்கள் வந்திருந்தனர். அதில் இலெனின் தம் 21 குறிப்புகளையும் பொதுவுடைமை<noinclude>
<b>வா. க 5-16 அ</b></noinclude>
1prwx7o7osiv6s5iiism6yp2esxtj23
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/288
250
626720
1962128
1881937
2026-09-06T14:13:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பொதுவுடைமை அமைப்பு|244|உலகப் பொதுவுடைமை அமைப்பு}}</noinclude>அமைப்பில் சேருதற்குரிய கட்டுப்பாடுகளையும் அறிவித்தார். இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் இவ்வமைப்பில் சேர விரும்பும் பொதுவுடைமைக் கட்சிகள், சோவியத்துப் பொதுவுடைமைக் கட்சியை முன் அமைப்பாகக் கொண்டு தம்மை மாற்றிக் கொள்ளுதல் வேண்டுமெனவும், நடுத்தரப்போக்காளரும் அமைதி நாடுவோரும் அவற்றிலிருந்து நீக்கப்படுதல் வேண்டுமெனவும் கூறினார்.
கோமிண்டன் (Comintern) எனப்படும் மூன்றாம். உலகப்பொதுவுடைமை அமைப்பு உருசியப் பொதுவுடைமைக் கட்சியினமைப்பை ஒத்து இருந்தது. இந்த அமைப்பின் மாநாடு கூடாத காலங்களில் ஒரு செயற்குழு செயற்பட்டது. அதைவிட அளவிற்சிறிய தலைமைக் குழு (Presidium) என்னும் அமைப்பு முக்கிய நிருவாகக் குழுவாகச் செயற்பட்டது. படிப்படியாக அதிகாரமெல்லாம் உயர் நிலை அமைப்புகளில் குவித்து வைக்கப்பட்டன. அவற்றின் முடிபுகள் பொதுவுடைமை அமைப்பின் உறுப்புக் கட்சிகளெல்லாவற்றையும் கட்டுப்படுத்தின. இம்மூன்றாம் அமைப்பு சோவியத்தின் முன்முயற்சியால் நிறுவப்பட்டபடியாலும், இதன் தலைமையகம் மாசுக் கோவில் இருந்ததாலும், சோவியத்துக் கட்சிக்கு அதில் அளவுக்கு மீறிய சார்பாண்மை இருந்ததாலும், அவ்வமைப்பின் மீது சோவியத்தின் முழுக்கட்டுப்பாட்டு அதிகாரமும் நிலைநிறுத்தப்பட்டு, அயல்நாட்டுப் பொதுவுடைமையாளரெல்லாம் உருசிய நாட்டிற்குப் பற்றறுதியுடனிருந்தனர்.
<b>மூன்றாம் உலகப் பொதுவுடைமை அமைப்பின் நோக்கம்</b> தேசியக் கிளை அமைப்புகளையுடைய, ஒரே மையத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உலகளாவிய பொதுவுடைமைக் கட்சியை நிறுவுதலாகும். பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர் வகுப்பின் ஒரு பகுதி ஆகும்; அதுவே வகுப்பு உணர்வுமிக்க முற்போக்கு உள்ள, புரட்சி இயல்புடையது. இவற்கையான தேர்வின் வாயிலாகப் பொதுவுடைமைக் கட்சி சிறந்த அறிவுடையவர்களாலும், வகுப்பு உணர்வுடையவர்களாலும், மிகுந்த ஈடுபாடும் எதிர்கால உணர்வுமுடைய தொழிலாளர்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வகுப்பு முழுவதனுடைய நலனைத் தவிரப் பொதுவுடைமைக் கட்சிக்கு வேறு நலன் ஏதும் இல்லை. அது தொழிலாளர் வகுப்பு முழுவதினின்றும் வேறுபட்டது. அது தொழிலாளர் வகுப்பு முழுவதன் முழு வரலாற்றுப் பாதையையும் நன்கு கருத்தில் கொண்டு, அவ்வரலாற்றின் ஒவ்வொரு நிலையிலும் தனித்தனிக் குழுக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இல்லாமல், தொழிலாளர் வகுப்பின் எல்லா நலன்களையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு இருக்கிறது. பொதுவுடைமைக் கட்சியே தொழிலாளர் வகுப்பின் மிக முன்னேற்றமடைந்த பிரிவாகும். இதுவே தொழிலாளரையும் சரியான பாதையில் இயக்குவதற்குப் பயன்படும் அரசியல் நெம்புகோலாக இருக்கிறது.
இலெனின் பொதுவுடைமைக் கட்சிக்குச் செல்வாக்குப் பொதுவுடைமை அரசாங்கத்தோடும். தொழிலாளர் கழகங்களோடும் உள்ள தொடர்பைப் பொறுத்தே அமையுமென்று சுட்டிக்காட்டி, தொழிலாளரின் முன்னணியாகப் பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சியை விவரித்தார்.
<b>பொதுவுடைமையாளரின் செயல்முறை</b>: பொதுவுடைமையாளர்கள் பலவகையான தந்திரங்களையும், சட்டத்துக்கு மாறான முறைகளையும், இரகசியச் செயல்களையும் கையாண்டு தொழிற்சங்கங்களைக் கைப்பற்றுதல் வேண்டும். ஆகையால் தொழிலாளர் முன்னணி என்னும் கட்சி ஊடுருவல், நிலைகுலையச் செய்தல் முதலியவற்றின் வழியாக மக்கள் அமைப்புகளையும், அரசாங்கத்தில் செல்வாக்கு அல்லது கட்டுப்பாட்டு அதிகாரமுடைய பதவிகளையும் கைப்பற்றிப் பின்னர் வெளிப்படையான வல்லந்தத்தினால் அவற்றை நீக்குதல் வேண்டும்.
இத்தகைய முறைகளை இலெனின் மாநாட்டில் விளக்கியபோது, அதற்குச் சில நாட்டின் சார்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் கூறிய எதிர்ப்பு, தொழிலாளர் வகுப்புக்குப் பதிலாகக் கட்சியையே இலெனின் வலுப்படுத்துகிறார் என்பதாகும். இலெனின் விடையாகச் சமூகச் சமநிலை (Socialism) என்பது தொழிலாளரின் ஆட்சியே என்றும், தொழிலாளர்களை ஒரு கட்சி நடத்திச் செல்லுதல் வேண்டுமென்றும், கட்சி என்பது சிறுபான்மையாகத் தானிருத்தல் வேண்டுமென்றும், இச்சிறுபான்மையரும் தொழிலாளர் வகுப்பினுடைய மிகச் சிறந்த பகுதியினரால் அமைக்கப்படுதல் வேண்டுமென்றும், இதுவே பொதுவுடைமைக் கட்சியின் நடைமுறை வடிவமாகுமென்றும் கூறினார். இசுட்டாலினும் 1927-இல் இதே முடிவை வலியுறுத்தினார்.
பொதுவுடைமைக் கட்சிக்கு உலகப் பொதுவுடைமை அமைப்பின் மாநாட்டில் கொடுக்கப்பட்ட மேற்கூறப்பட்ட விளக்கம், அக்கட்சியின்னுடைய 1934-ஆம் ஆண்டுப் பட்டயத்திலும், 1939-ஆம் ஆண்டின் அதனுடைய திருத்தப்பட்ட பட்டயத்திலும் சேர்க்கப்பட்டது. அதுவே 1936-ஆம் ஆண்டின் உருசிய அரசியலமைப்பிலும் சேர்க்கப்பட்டது. அதில்தான் அதற்குச் சட்ட இயல்பான நிலை கொடுக்கப்பட்டது.<noinclude></noinclude>
k3aiyo7ogt8rqfw2qcebk1nzfix853m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/289
250
626721
1962129
1881938
2026-09-06T14:16:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பொதுவுடைமை அமைப்பு|245|உலகப் பொதுவுடைமை அமைப்பு}}</noinclude><b>குடியாட்சி அதிகாரக் குவிப்பு</b>: உலகப் பொதுவுடைமை இயக்கம் 1920-இல் உருவாக்கப்பட்டதும், அது குடியாட்சி இயல்புடைய அதிகாரக் குவிப்பி என்ற கொள்கையை (Democratic Socialism) விளக்கிற்று. உலகப்பொதுவுடைமை அமைப்பில் சேர விரும்பும் ஒவ்வொரு கட்சியும் இக்கொள்கையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
பொதுவுடைமைக் கட்சி குடியாட்சி இயல்புடைய அதிகாரக் குவிப்பு என்ற அடிப்படையில் அமைக்கப்படுதல் வேண்டும். 1. மேல்மட்டக் கட்சிக் குழுக்களெல்லாம் கீழ்நிலைக் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். 2. மேல்நிலைக் குழுக்கள் விடுக்கும் ஆணைகளை எல்லாம் கீழ்நிலைக் குழுக்கள் ஏற்றுக் கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும், 3. ஓர் அதிகாரம் மிகுந்த கட்சி மைய நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு, அதனுடைய அதிகாரம் முழுக்கட்சியின் மாநாடுகளுக் கிடைப்பட்ட காலத்தில் எல்லாக்கட்சி உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.
<b>சமநிலைப் புரட்சி</b>: ஒரு நாட்டில் சமநிலைக் கோட்பாடு வெற்றி பெறுமாயின், சமநிலைப் புரட்சியை வளர்த்தற்கும் உறுதி செய்தற்கும் உகந்த சிறந்த சூழ்நிலைகளை நிலைநாட்டுதலே முக்கிய பிரச்சினை ஆகும். உலகப் பொதுவுடைமை மாநாட்டில் 1920-இல் திராட்சுகி (Trotsky) பேசுகையில், சோவியத்து உருசியாவுக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம் உலக ஏகாதிபத்தியத்துக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.
உலகப்புரட்சி தோன்றும் வாய்ப்பு அண்மையில் இல்லை என மூன்றாம் அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பொதுவுடைமைக் கட்சிகள் உணர்ந்தமையால், 1921-இல் புதிய உலகப் பொதுவுடைமைக் கொள்கை உருவாயிற்று. இக்கொள்கையின்படி, எல்லா உழைப்பாளர் வகுப்பின் ஆதரவையும் பெறுதல் வேண்டுமென்ற நோக்கம் இருந்தது. நடுத்தரப் போக்காளருக்குக் காட்டப்பட்ட எதிர்ப்புக் அணிகள் குறைக்கப்பட்டது. உழைப்பாளர்களின் அமைக்கப்பட்டன. இக்கொள்கையும் 1923-இல் கைவிடப்பட்டது. அப்போது இவ்வமைப்பின் இடதுசாரியின் அதிகாரம் ஓங்கிற்று.
இடதுசாரியினரை இசுட்டாலில் (Stalin) நீக்கினார். பின்னர் நடுத்தரப் போக்குடைய சமநிலை நெறியாளரோடு தொடர்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. அவர் ஒரு நாட்டில் சமநிலைக் கொள்கை (Socialism in one country) என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்தார்.
பின்னர் 1935-ஆம் ஆண்டில் புதிய கொள்கை உருவாயிற்று. செருமனியினுடைய பகைவர்களாகிய மேலைநாடுகளினுடைய ஆதரவைச் சோவியத்து உருசியா பெறுதற்காகப் புரட்சிச் சமநிலைக் கோட்பாடு பரப்பப்படாமலிருத்தல் வேண்டுமென்ற கொள்கை உருவாக்கப்பட்டு, பாசிசத்தின் தோல்வியே பொது முக்கிய நோக்கமென்று கொள்ளப்பட்டது. பொதுவுடைமையர் நடுத்தரச் சமநிலையாளருடனும் தாராளக் குழுக்களுடனும் பாசிசத்துக்கெதிராகச் சேரலாயினர். இச்சூழ்நிலையில் உலகப் பொதுவுடைமை அமைப்பு சோவியத்து அயல் நாட்டுக் கொள்கையின் கருவியாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போரில் 1941-இல் செருமனி உருசியாவைத் தாக்கிய அளவில் உருசியாவின் நேசநாடுகளாகிய மேலை நாடுகளில் பொதுவுடைமையாளர்கள் அவ்வரசாங்கங்களைக் கவிழ்த்தல் கூடுமென்ற அச்சத்தைப் போக்கும் பொருட்டு இசுட்டாலின் 1943-இல் மூன்றாம் உலகப்பொதுவுடைமை அமைப்பைக் கலைத்தார்.
<b>நான்காம் உலகப் பொதுவுடைமை அமைப்பு</b> திராட்சுகியின் கொள்கையாளரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளடங்கியது. இது சோவியத்து ஆதிக்கத்தால் நிறுவப்பெற்ற மூன்றாம் உலகப் பொதுவுடைமை அமைப்புக்கு எதிராக நிறுவப்பட்டது. இசுட்டாலினின் எதிர்ப்பாளரே இதற்கு முயன்றனர். இதில் முதலில் சிலரே ஈடுபட்டு, 1938-இல் பிரான்சில் கூடினர். இதில் திராட்சுகி வகுத்த இடைக்காலத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொழிலாளருக்குக் கூடுதல் சம்பளங்களும் திருந்திய வேலைச் சூழ்நிலைகளும் அளிக்கப்படுதல் வேண்டுமென்பதே இவ்வமைப்பின் குறிக்கோள்களாகும். முதலாளித்துவத்தை ஒழித்துச்சமநிலை நெறியை நிலைநிறுத்துதல் வேண்டுமென்ற அணுகுமுறை கைவிடப்பட்டது. ஆட்சி வகுப்பாரை அகற்றுதலும், மக்களைப் புரட்சிக்கு ஆயத்தப்படுத்துதலும், தனியார் வங்கிகளை ஒழித்தலும், தொழிலாளர் தம் தற்காப்புக்காகக் கழகங்களை அமைத்தலும், குடியானவருக்குத் தனியாகத் திட்டங்களமைத்தலும் இவ்வமைப்பின் நோக்கங்களாகும். இதில் திராட்சுகிக்கும் பிறகு மைக்கேல் பாப்லோ (Michael Paplo), எர்னசுட்டு செர்மெய்ன் (Ernest Gremaine) முதலியோர் தலைவர்களாயினர், இவ்வமைப்பிலும் 1953-இல் பிளவு தோன்றிற்று.{{Right|பா.சூ}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Sabine, G.H.,</b> A History of Political Theory, Oxford & IBH Publishing Company, Calcutta. 1961.<noinclude></noinclude>
n8aadgqb0wym74hoz0r6yvvcigv4gjw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/290
250
626722
1962130
1947223
2026-09-06T14:20:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பொருளாதார மந்தம்|246|உலகப் பொருளாதார மந்தம்}}</noinclude><b>Cole, G.D.H.,</b> Communism and Social Democracy: 1914-1931, London, 1958.<br>
<b>Schapiro, Leonard,</b> The Communist Party of the Soviet Union, New York, 1960.
<section end="உலகப் பொதுவுடைமை அமைப்பு"/>
<section begin="உலகப் பொருளாதார மந்தம்"/>
{{dhr}}
<b>உலகப் பொருளாதார மந்தம்</b> என்பது உலகளவில் 1930-ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட வணிகப் பொருளாதார மந்த நிலையைக் குறிக்கும். இதனைப் பொருளாதாரப் பெருமந்தம் (The Great Depression) எனவும் குறிப்பிடுவர். பேரளவில் பொருளாதார அழிவுகளை உண்டாக்கி, ஆழ்ந்த தாக்கங்களுடன் நீண்டகாலம் நிலவிய இப்பெருமந்தம் 1929-இல் தொடங்கி இரண்டாம் உலகப் போரின் இறுதிவரை நீடித்தது. இதனுடன் ஒப்பிடக் கூடிய பொருளாதாரச் சீர்குலைவு உலகப் பொருளியல் வரலாற்றில் நிகழ்ந்ததில்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அக்காலத்தில் உலக வணிகத்தில் பெரும்பங்கு பெறாத சோவியத்து உருசியாவைத் தவிர, உலக நாடுகள் அனைத்தும் இம் மந்தத்தால் பாதிக்கப்பட்டன. அவற்றுள் மேலைநாடுகள், ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, சப்பான், சீனா ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கனவாகும். இந்நாடுகளின் அரசியலமைப்பில் மாறுதல்களும் பன்னாட்டு உறவுகளில் முறைப்பு நிலையும் (Tension) ஏற்பட்டன. பொருளாதார நடவடிக்கைகள் பன்னாட்டு வாணிகம் ஆகியவற்றின் அடிப்படைக் கூறுகளில் உள்ளார்ந்த நிலை குலைவு உருவாயிற்று. பொருளாதார, வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மக்களிடையே வறுமை, ஏழ்மை, வேலையின்மை, அமைதியின்மை ஆகியவற்றைப் பெருக்கின.
ஐக்கிய அமெரிக்கக் குடியரசில் 1929 அக்டோபர்த் திங்கள் திடீரென இருப்புகள், பங்குகள் ஆகியவற்றின் மதிப்பு (Stock Values) வீழ்ச்சியுறத் தொடங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதாரத்தின் இணை விளைவுகள் (Chain Reactions) பெருமந்தத்தின் தோற்றத்திற்கு முதல் தூண்டுதலாயிருந்தன எனக் கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான இருப்புப் பங்குரிமையாளர்கள் (Stock holders) பேரிழப்புக்குள்ளாயினர். பல வங்கிகள், தொழிற்சாலைகள், கடைகள் முதலியன மூடப்பட்டன. இலட்சக்கணக்கான மக்கள் வேலைகளையிழந்து வறுமைக்குள்ளாயினர், பலர் தங்கள் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைக்கு அறக்கொடைகளையும் அரசின் உதவியையும் நாடினர். உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் உலக வணிகம், பன்னாட்டு இருப்பு அங்காடி, நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் தாக்கங்களை உண்டாக்கின. ஒவ்வொரு நாடும் தத்தம் நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க அக்கறை கொண்டதால் பாதுகாப்பு வரிகளை விதித்து இறக்குமதியைக் கட்டுப்படுத்தின. எனவே, உலக வணிகம் குறிப்பிடத்தக்க அளவு கீழிறங்கியது. பன்னாட்டுச் செலுத்துநிலையில் (Balance of Payments) சிக்கல்கள் ஏற்பட்டன.
உலகப் பொருளாதார மந்தம் பல நாடுகளின் அரசியல் அமைப்புகளை மாற்றியது. சில நாடுகளில் தலைவைர்கள் மாற்றப்பட்டனர், செருமானியப் (German) பொருளாதாரத்தில் காணப்பட்ட ஏழ்மைநிலை வல்லாட்சி (Dictatorship) அமைக்கப்படவும் அடால்பு இட்லர் (Adolf Hitlar) வலிமை பெற்றுத் தம் பேரரசை நிலைநாட்டவும் காரணமாயிருந்தது. இட்லர் செருமனியை உலக அரங்கில் தலைமையிடம் பெறச் செய்ய எடுத்த திட்டங்கள் வெற்றிபெற்றால் நாட்டில் பொருளாதாரச் செழிப்பு உண்டாகும் எனச் செருமானியர் எதிர்பார்த்தனர். அவற்றின் அடிப்படையில் இட்லருக்கு அம்மக்கள் முழு ஆதரவு அளித்தனர். பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே சப்பான் சீனாவின் மேல் படையெடுத்தது. சப்பான் சீனநாட்டின் முன்சூரியாப் (Manchuria) பகுதிகளில் தொழிற்சாலைகளை நிறுவியதுடன் சுரங்கத் தொழில்களையும் வளர்ச்சியடையச் செய்தது. இவற்றால், பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்ட சப்பானியப் பொருளாதாரம் மறுமலர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒருங்கமைந்த பொருளாதாரத் துறைகளையுடைய (Onganised Economic Sector) வளர்ச்சி பெற்ற மேலைநாட்டுப் பண்பாடுகளில் பெருமந்தத்தின் தாக்கம் ஏற்பட்டு, அவற்றால் கலை, இலக்கியம், கேளிக்கை, கல்வி, அறிவியல் ஆகியவை பற்றிய கோட்பாட்டுக் கருத்துகள் மறு உருப்பெற்று, அவை புதுக்கோணங்களில் வளர்ச்சி பெறலாயின.
ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் இருப்பு அங்காடியில் (Stock Exchange) 1929-இல் ஏற்பட்ட தோல்வியே பெருமந்தம் தோன்றுவதற்கான காரணம் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் அதற்கு எதிரான கருத்துக்களும் கூறப்படுகின்றன : (1) முதல் உலகப் போரின் விளைவாக உலகச் சமாதானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு எழுதப்பட்ட சமாதான ஒப்பந்தம் (Peace Settlement) நாடுகளின் பொருளாதார அடித்தள அமைப்பைச் சமன்பாட்டிலிருந்து விலகச் செய்தது. அது பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பெருக்கிப் பெருமந்தத்திற்கு அடி கோலியது. (2) ஐக்கிய அமெரிக்கக் குடியரசில் 1920-ஆம் ஆண்டளவில் நிலவிய பொருள் வளமும் பெருஞ்செழிப்பும் வேளாண்மைத் துறையையும் பிற-<noinclude></noinclude>
n3dbz11qs3bknrdgm19t6ljyf4647kr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/291
250
626881
1962131
1882626
2026-09-06T14:23:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பொருளாதார மந்தம்|247|உலகப் பொருளாதார மந்தம்}}</noinclude>துறைகளையும் நலிவுறச் செய்ததுடன், ஐரோப்பியப் பொருளாதாரத்தையும் பாதித்தது. இவற்றால் ஏற்பட்ட சூழ்நிலையே இருப்பு அங்காடியைத் தாக்கி முதலீட்டாளர் பேரளவில் இழப்புகளை ஏற்க வைத்தது. அதனைத் தொடர்ந்து 1931-இல் பன்னாட்டுப் பணவாக்க நெருக்கடி (international Monetary Crisis) நிகழ்ந்து வங்கிகள் நொடிப்புக்குள்ளாயின. பெருமந்தத்தின் தாக்கங்கள் பொருளாதாரத்தின் எல்லாத் துறைகளையும் பாதித்தன. எனினும் வரலாறு காணாத கடுவீறுடைய மந்தநிலைக்கு ஒரு குறிப்பிட்ட காரணி (Factor) காரணமென அறுதியிட்டுக் கூற இயலாது. பல காரணிகள் முடுக்கிய கூட்டுச் செயல் தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
<b>வேளாண்மை</b>: ஐக்கிய அமெரிக்கக் குடியரசு பொருளாதார வளச்செழிப்பில் உச்ச நிலையடைந்த 1920-ஆம் ஆண்டுக் காலத்தில், விளை பொருள்களின் விலை 40 விழுக்காடு கீழிறங்கியது. அதனால், பாதிக்கப்பட்ட வேளாண்மையினர் தங்கள் சொத்து, வீடு ஆகியவற்றை இழந்து கடன்பட்டனர். ஏற்கனவே பெற்ற நிறுவன, வணிகக் கடன்களையும் தீர்க்க இயலாமலிருந்தனர். தொடர்ந்து வேளாண்மைத் துறையில் விலைச்சரிவு நீடித்ததால் வங்கிகள் பல செயலிழந்து மூடப்பட்டன. குறிப்பாக, 1928 சூலைத் திங்களுக்கும் 1929 சூன் திங்களுக்கும் இடைப்பட்ட ஓராண்டுக் காலத்தில் மட்டும் 500 வங்கிகள் நொடிப்புக்குள்ளாயின. அதே காலத்தில் விளை பொருள்களின் விலை 53 விழுக்காடு கீழிறங்கியது. பெரும்பாலான வேளாண்மையினர் தங்கள் தொழிலைக் கைவிட்டு, பிற தொழில் நாடி நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர், மேற்குப் பகுதியில் குடியேற்றம் பெருகியது. அக்காலத்தில் முந்தைய காலங்களைப் போல பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் வாய்ப்புகளும் ஊக்கமளிப்பதாக இல்லை.
முதல் உலகப் போரின் தொடக்க காலத்தில் (1914) தோன்றிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து ஐரோப்பிய நாடுகள் போர் முடிவுற்றவுடன் மறு மலர்ச்சியடையவில்லை. உலக நாடுகள் அனைத்திலும் குறைந்த வருவாய், விலைச்சரிவு நிலை, வேலையின்மை போன்ற பொருளாதாரச் சிக்கல்கள் நீடித்தன. பின் தங்கிய நாடுகள் பல பன்னாட்டு நிதி உதவிகளைப் பெற்றுப் பொருளாதாரத் தன்னிறைவை அடையத்தக்க கொள்கைகளைப் பின்பற்றினமையால், அவை இறக்குமதியைக் கட்டுப்படுத்தின. போரினால் ஏற்பட்ட இழப்புகளும் காலனி ஆதிக்கத்தின் வீழ்ச்சியும் பேரரசு நாடுகள் புதிய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பின்பற்றத் தூண்டின. செருமனியில் நிலவிய பழிவாங்கும் உணர்வு இட்லரின் இயக்கம் (Hitlarism) வளர உதவியது. பிரிட்டன் தன் பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்குடன் உள்நாட்டு வருமானப் பெருக்கத்தைத் தடை செய்தது. ஏற்றுமதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்றுறை ஊக்குவிக்கப்பட்டுத் தங்கத் திட்டத்தை (Gold Standard) தொடர்ந்து நீடிக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதனால் பொருளாதார மந்தத்தின் கடுமை மேலும் தீவிரமடைந்தது. பிரான்சு தன் நாட்டுச் செலாவணியின் மதிப்பைக் குறைத்ததால் அமெரிக்க நாட்டுக் கலைத்துறை வல்லுநர்கள் பலர் பிரான்சுக்குக் குடிபெயர்ந்தனர். அது பிரான்சு நாட்டுப் பொருளாதாரத்திற்கு வலுவளிக்கவில்லை. பிரான்சு நாட்டுத் தொழிலாளரின் உண்மைக் கூலி கீழிறங்கினமையால் தொழிற்றுறை பல இடையூறுகளுக்குள்ளாயிற்று.
<b>தொழிற்றுறை</b>: குறைந்த வருவாய்ப் போக்கு உலகெங்கிலும் நீடித்தது மட்டுமன்றி, வருமான ஏற்றத்தாழ்வுகளும் பெருகின. தொழிற்றுறையில் சுரங்கம், இரயில்வே, நெசவு ஆகிய தொழில்களைச் சார்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொழில்நுட்ப வளர்ச்சியும் புதுக் கண்டுபிடிப்புகளும் மனித உழைப்பைக் குறைத்தமையால் வேலையின்மை பெருகியது. தொழிற்துறையில் உற்பத்தி 50 விழுக்காடு உயர்ந்தது. ஆனால், தொழிலாளரின் ஊதியம் உயரவில்லை. அதனால் உற்பத்தியான பொருள்களை வாங்கும் திறன் மக்களிடையே இல்லாமற் போயிற்று. நாடுகள் பொதுவாக இன்றியமையாப் பொருள்களை மட்டுமே இறக்குமதி செய்து, பாதுகாப்புக் கொள்கையைப் (Protectionism) பின்பற்றியமையால் பொருள்களின் ஏற்றுமதித் தேவையும் மிகக் குறைவாயிருந்தது. எனவே, தொழிற்றுறை உற்பத்திப் பொருள்களின் அங்காடியிலும் தேக்கம் காணப்பட்டது. வேளாண்மையிலும் தொழிற்றுறையிலும் மிகைத் திறன் மிகுதியாக இருந்தது. தொழில் முனைவோர் இடர்தாங்கலுக்கு அஞ்சினர்.
<b>நிதித்துறை</b>: மேலும் மேலும் பெருகிய வேலையின்மை, குறைந்த வருவாய், அங்காடி விளையிறக்கம், கடன்பெருக்கம் ஆகியவற்றால் மக்களிடையே பணப்புழக்கம் மிகக் குறைந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிகள் பல 1931-இல் நொடிப்பு நிலைக்குள்ளாயின. அதே ஆண்டில் அமெரிக்காவில் 2300 வங்கிகள் மூடப்பட்டன. கூடுதலாக 1456 வங்கிகள் 1932-இல் நொடிப்புக்குள்ளாயின. வங்கி நொடிப்புகளினால் பெருந்திரளான மக்கள் தங்கள் சேமிப்பை இழந்தனர், பிரிட்டன் தங்கத் திட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து பிற நாடுகளும் அக்-<noinclude></noinclude>
imww1gg3ri1gl6gra89uvat30ocw7bj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/292
250
626882
1962132
1882627
2026-09-06T14:27:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பொருளாதார மந்தம்|248|உலகப் பொருளாதார மந்தம்}}</noinclude>கொள்கையைப் பின்பற்றின. மக்கள் பணத்தைக் கையிருப்பாக வைத்திருக்க விரும்பினமையால் வங்கிகளிடமிருந்த வைப்புகள் பணமாக மாற்றப்பட்டன. அவ்வாறு மாற்றுவதற்கு வங்கிகள் தங்கள் சொத்துகளை விற்க வேண்டியதாயிற்று. வங்கிகள் முதலீடு செய்திருந்த இருப்புகள், பங்குகள், கடனுறுதிச் சீட்டுகள் (Bonds) முதலியன முதலீட்டு அங்காடி நொடிப்பினால் மதிப்பிழந்துவிட்டன. வைப்புகளை முழுமையுமாகப் பணமாக மாற்றிக் கொடுக்க இயலாத நிலையில் வங்கிகள் தங்கள் தொழிலை நிறுத்தின.
இச்சூழ்நிலையில் நிதி நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, 1933-இல் ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் பல மாநிலங்களில் வங்கி விடுமுறைகள் அளிக்கப்பட்டன. இவ்வகையான நடவடிக்கைகள் மக்களிடையே கலக்கத்தையும் அச்சத்தையும் ஊட்டின. அதே ஆண்டில் குடியரசுத் தலைவராகப் பணியேற்ற உரூசுவெல்ட்டு (Roosevelt) மார்ச்சுத் திங்களில் நாடு முழுமையிலும் ‘வங்கி விடுமுறை’ இரண்டு வாரங்கள் செயற்படுவதாக அறிவித்து, வங்கித் தொழிலுக்குப் புதிய கோட்பாட்டுக் கொள்கைகளை வகுத்தார். இரண்டு வார வங்கி விடுமுறையோடு பெரும்பாலான நலிவுற்ற வங்கிகள் மூடப்பட்டன. மக்களிடையே காணப்பட்ட அச்சம் தணிந்தது. அமெரிக்காவில் தங்கத் திட்டம் கைவிடப்பட்டு, அமெரிக்கத் தாலரின் (Dollar) மதிப்பு 7 விழுக்காடு கீழிறக்கம் (Devaluation) செய்யப்பட்டது. அமெரிக்கர்கள் 24 காரட்டுத் தங்க நாணயங்களோ தங்கக் கட்டிகளோ தனிப்பட்ட சொத்தாக வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டது. தாலரின் மதிப்பிறக்கத்திற்குப் பின்னர் ஓர் அவுன்சு தங்கத்தின் மதிப்பு $20.67-இலிருந்து $35 ஆக உறுதி செய்யப்பட்டது.
<b>புதிய பொருளாதாரக் கொள்கை</b>: இது பொருளாதார மந்த நிலையை மேற்கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உரூசுவெல்ட்டு எடுத்த புதிய பொருளாதாரக் கோட்பாட்டு அணுகு முறையாகும். இவருக்கு முந்தைய தலைவராகிய ஊவர் (Hoover) மாநில உள்ளாட்சி அரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் பொருளாதார நடவடிக்கைகள் செயற்பட்டு, நிலைமை தானாகவே முன்னேற்றமடையும் எனக் கருதினார். மாநிலங்கள் நிதிவளக் குறைவினால் தேவையான இடர்காப்பு நடவடிக்கைகளில் தலையிடாமலிருந்தன. அதற்கு மாறாக உரூசுவெல்ட்டு பெருமந்தத்தின் துயர்களைத் துடைப்பது மைய அரசின் கடமை என்பதை முழுமையாக ஏற்றுச் செயலாற்றினார். பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, நூறு நாட்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருளாதார ஒழுங்கு முறைச் சட்டங்கள் பலவற்றை இயற்றினார். அவற்றின் முக்கிய கூறுகளாவன : (1) இன்றியமையாத் தேவைகளின்றி வறுமையால் துன்புறும் மக்களுக்கு உடனடித் துயர் தவிர்ப்பு உதவிகளை அளித்தல், (2) பொருளாதார மறுமலர்ச்சிக்குத் தேவையான அகக்கட்டுமான (Infrastructure) வசதிகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குதல், புதிய தொழில்களை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் அளித்தல், (3) நீண்டகாலத் திட்ட அடிப்படையில் மீண்டும் இத்தகைய பெருமந்தம் நிகழாதபடி பொருளாதார நடவக்கைகளைச் சட்ட ஒழுங்கு முறைக்குள் செயற்பட வரையறுத்து நிலைநிறுத்தல்.
மனிதத் துயர் துடைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுப் பல துயர்துடைப்பு மன்றங்கள் நிறுவப்பட்டன அவற்றில் இலட்சக்கணக்கான வேலையற்ற இளைஞர்கள் பணியிலமர்த்தப்பட்டனர். இம்மன்றங்கள் மைய அரசின் நிதி உதவியைப் பெற்றுச் சமூகப் பணியிலும் கட்டடப் பணியிலும் ஈடுபட்டன. உணவு, உடை, உறைவிடமற்றோருக்கு இலவசமாக அவை வழங்கப்பட்டன. தனியார் அற நிலையங்களும் அரசின் உதவிபெற்று இத்தகைய சமூகப் பணியாற்றின. மைய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் பல நெருக்கடிக் காலத் துயர்துடைப்பு நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளை அளிக்கும் நிறுவனங்கள், மக்கள் நலன் பாதுகாக்கும் பன்முக நோக்கு நிறுவனங்கள் போன்றவை நாடெங்கிலும் செயற்பட்டன. இவற்றின் மூலம் அரசு பேரளவில் பணத்தைச் செலவிட்டது. பெருகிய அரசாங்கச் செலவின் மூலம் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீட்புப் பெறும் என்பது அரசின் குறிக்கோளாகும்.
அரசின் நேரடித் தலையீடும் நிதி உதவிகளும் தனியார் துறையில் தொழில்கள் தொடங்க ஊக்குவிப்பாக அமைந்தன. பல புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன. நலிந்த தொழில்கள் வலுப்பெற்றன. முதல் இரண்டு ஆண்டுகளில் உற்பத்திப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு விலையும் ஊதியமும் உயர்த்தப்பட்டன. முற்றுரிமைக்கு எதிரான சட்டங்கள் (Anti Trust Laws) நிறுத்தி வைக்கப்பட்டன. லிலை வரையறையில் போட்டி அனுமதிக்கப்பட்டது. குறைந்த நேர வேலையும் தொழிலாளர் அமைப்புகளும் நாட்டின் தொழில் மறுமலர்ச்சிச் சட்டத்தின் (National Industrial Recovery Act) மூலம் சட்டமுறையாக்கப்பட்டன. சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் (Social Security Act) மூலம் 1935-இல் வேலையற்றோரும் ஓய்வு பெற்றோரும் பண உதவி பெற்றனர். கூட்டுப் பேரமும் (Collective Bargaining) ஊக்குவிக்கப்பட்டதால் தொழிலாளர் வேலைப் பாதுகாப்பு, உயர்ந்த<noinclude></noinclude>
64lw7su41lw9heofee0vj879ye0w95v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/293
250
626883
1962133
1947224
2026-09-06T14:31:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப் பொருளாதார மந்தம்|249|உலகப்போர்}}</noinclude>ஊதியம், பணியிடங்களில் தேவையான வசதிகள் ஆகியவற்றைப் பெற்றனர்.
அமெரிக்க மைய வங்கியின் மூலம் வங்கி வைப்புகளுக்கு மைய அரசு காப்பீடு (Insurance) அளித்தது. பண இருப்பு, அங்காடியின் இருப்புகள், பங்குகள், கடனுறுதிச் சீட்டுகள் ஆகியவற்றில் ஏற்படும் மதிப்பு ஏற்றத்தாழ்களைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும் பிணைய மாற்று ஆணையம் (The Securities Exchange Commission) நிறுவப்பட்டது. குறைந்த விலையில் மின் ஆற்றலை வழங்கவும், பெரு வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர்வழிப் போக்குவரத்து (Navigation), பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவற்றைப் பெருக்கவும், தென்னசிப் பள்ளத்தாக்கு ஆணையம் (The Tennessee Valley Authority) நிறுவப்பட்டது. வாணிகம் பெருகத்தக்கதாக இறக்குமதிப் பொருள்களின்மேல் விதிக்கப்படும் சுங்க வரி குறைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளும் சுங்க வரிகளைக் குறைத்ததனால் அமெரிக்காவின் ஏற்றுமதி பெருகியது. இராணுவ வலிமையை மையமாகச் கொண்டிருந்த செருமனியும் சப்பானும் இரண்டாம் உலகப்போருக்கு (1939 முதல் 1945 வரை) வழிவகுத்தன. இரண்டாம் உலகப் போருக்குத் தேவையான போர்க் கருவிகளை உற்பத்தி செய்யும் நோக்குடன், நாடுகள் தங்கள் பொருளாதார வாணிக நடவடிக்கைகளைப் பெருக்கின. போர்க் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பேரளவில் நிறுவப்பட்டன. அவற்றால் உற்பத்தி பெருக்கமடைந்து, வேலை வாய்ப்புகளும் பெருகின. பணப் புழக்கம் மிகுந்ததால் மந்தநிலை சீரடையத் தொடங்கியது.
போர்ச் சூழ்நிலையில் ஏற்பட்ட நெருக்கடிக்கால நிலைமையைச் சமாளிக்கத் தேவையான அகக்கட்டுமானம், புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் சீரான முறையில் வேரூன்றியிருந்தது. அது நிலைமை மேலும் மோசமாகாமல் அரசு போர்த் தேவைகளில் கவனம் செலுத்தப் பெரிதும் உதவியது. புதிய பொருளாதாரக் கொள்கை பெருமந்தத்திலிருந்து பொருளாதாரத்தை மீட்டது மட்டுமன்றி, மக்கள் அரசிடம் வைத்திருந்த நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளவும் வகை செய்தது. வேலையின்மை 1930-இல் 25 விழுக்காடாயிருந்தது. அது 1933-இல் புதிய பொருளாதாரக் கொள்கை செயற்படத் தொடங்கியவுடன் 18 விழுக்காடாகவும், 1940-இல் 15 விழுக்காடாகவும், போர் தொடங்கிய பின்னர் 1944 இல் 1 விழுக்காடாகவும் குறைந்தது.
புதிய பொருளாதாரக் கொள்கை செயற்பட உரூசுவெல்ட்டு அரசுக்குத் துணையாகப் பின்னணியிலிருந்து பணியாற்றிய பொருளியல் வல்லுநர் சே.எம். தீன்சு (J.M. Keynes) ஆவார். அவரது வேலை, வட்டி, பணம் ஆகியவற்றின் பொதுக் கோட்பாடு (The General Theory of Employment, Interest & Money) & பொருளியலில் தனிப் புரட்சியை உண்டாக்கியது. இன்றும் அவருடைய கருத்துக்கள் கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் சிறப்புற்று விளங்குகின்றன.{{Right|அ.கு.சா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Edwin. G. Dolan,</b> Basic Economics, The Dryden Press, Illinois, 1980.<br>
<b>Rostow, W. W.,</b> The World Economy: History and Prospect, University of Texas Press, U.S.A., 1978.<br>
<b>Richard, T. Gill,</b> Economics : Text with Readings, Good year Publishing Company, Inc., California, 1975.
<section end="உலகப் பொருளாதார மந்தம்"/>
<section begin="உலகப்போர்"/>
{{dhr}}
<b>உலகப்போர்: முதலாம் (1914-1918)</b>: உலகில் உள்ள அனைத்து வல்லரசு நாடுகளும் இப்போரில் பங்கு கொண்டதாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் இப்போர் பரவியதாலும், ஏராளமான பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் முந்தைய போர்களைவிட ஏற்பட்டதாலும், உலகமே அழியக் கூடிய அளவுக்கு நச்சுவாயு போன்ற புதிய போர்க்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாலும், இப்போரை ‘முதல் உலகப் பெரும்போர்’ எனக் குறிப்பிடுகின்றனர்.
இப்போர் 1914 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 28-ஆம் நாளில் தொடங்கப்பட்டு, 1918-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 11-ஆம் நாளன்று முடிவுற்றது, இப்போரில் 27 வல்லரசுகள் பங்கேற்றன. உலக நாடுகளில் பத்தில் ஒன்பது பங்கு மக்கள் போர்க்கொடி உயர்த்தினர் இப்போரில் கி.பி. 1790-ஆம் ஆண்டிலிருந்து 1913-ஆம் ஆண்டுவரை நிகழ்ந்த அனைத்துப் போர்களிலும் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தைப் போன்று இரண்டு மடங்கு உயிர்ச் சேதம் ஏற்பட்டதாகச் கணக்கிடப்பட்டுள்ளது.
செருமனியே இப்போருக்குக் காரணம் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், பல்வேறு நாடுகளுக்கிடையே நிலவிய வேண்டத்தகாத நிகழ்ச்சிகளும் நாளுக்கு நாள் ஆழப்பதிந்துவிட்ட பகைமைக் கருத்துகளும், அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஏற்பட்டுவிட்ட தவிர்க்க முடியா ஏற்றத்-<noinclude></noinclude>
jaxkifyoyap1m1zma5st5y34tewwjqm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/294
250
626884
1962134
1882629
2026-09-06T14:34:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|250|உலகப்போர்}}</noinclude>தாழ்வுகளுமே இப்போரின் தொடக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தன எனலாம்.
<b>காரணங்கள்: செருமனியின் மண்ணாசை</b>: கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ஆட்டோவான் பிசுமார்க்கு என்பவர் ‘குருதியும் இரும்பும்’ (Blood & Iron) என்ற கொள்கையைச் செயற்படுத்திச் செருமனியை ஒரு வல்லரசு நாடாக்கினார். இரண்டாம் வில்லியம் கெய்சர் என்பவர் உலகையே ஆளலாம் என்ற எண்ணம் கொண்டார்; உலக நாடுகளுக்கிடையே முக்கியத்துவத்தைப் பெறுவதற்கும், வளர்ந்து வருகிற மக்கள் தொகையைக் குடியேற்றுவதற்கும் தம் நாட்டிற்குக் குடியேற்றப் பகுதிகள் அயல் நாடுகளில் தேவை என்ற அவசியத்தை உணர்ந்தார். இக்கருத்தை ஈடேற்ற ஒரு கப்பற்படை நிரந்தரமாக அமைக்கப்பட வேண்டும். என எண்ணிப் படைபலத்தைப் பெருக்கி, வடகடலில் எலிகோலாந்து (Heligoland) என்ற இடத்தில் தம் கப்பற்படையையும் தங்க வைத்தார். இத்தகைய ஆக்கிரமிப்புக் கொள்கையே முதலாம் உலகப் பெரும் போருக்கு அடிப்படையாக அமைந்தது.
<b>பல்வேறு உடன்படிக்கைகள்</b>: முதலாம் உலகப் பெரும்போர் தொடங்குவதற்கு முன்னர் ஐரோப்பிய நாடுகள் இரண்டு முகாம்களாகப் பிரித்திருந்தன. செருமனி, ஆசுத்திரியா, இத்தாலி ஆகிய நாடுகள் கி.பி. 1882-இல் ‘முக்கூட்டு உடன்படிக்கையை’யும், கி.பி. 1895-இல் பிரான்சு, உருசியா ஆகிய நாடுகள் ‘இரட்டைக் கூட்டு உடன்படிக்கை’யையும் செய்துகொண்டன. பிரான்சு 1904-இல் பிரிட்டனுடன் ஒரு நேச உடன்பாட்டினைச் செய்து கொண்டது. அது 1907-இல் உருசியாவின் இணைப்புடன் ‘முக்கூட்டாக’ மலர்ந்தது. செருமனித் தலைமையில் அடங்கிய அச்சு நாடுகளும், பிரிட்டன் தலைமையில் அடங்கிய நேச நாடுகளும், இந்த இரு முகாம்களிலும் உறுப்பினர்களாகச் சேர்ந்த நாடுகளும், ஒன்றை ஒன்று பகைமையுடனும் பொறாமையுடனும் பார்க்கத் தலைப்பட்டன. இவ்வாறு போர் கருவாயிற்று.
<b>குடியேற்றப் போட்டி</b>: புவியியல் அறிவு வளர்ந்த உலகில் பல்வேறு கண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கச்சாப் பொருள், கனிப்பொருள் போன்றவற்றைப் பெறுவதற்காகவும், மக்களைக் குடியேற்றி அக்குடியேற்றங்களில் ஆதிக்கத்தை வளர்ப்பதற்காகவும் அனைத்து வல்லரசு நாடுகளும் முனைந்தன. எனவே, குடியேற்றப் போட்டி வல்லரசு நாடுகளுக்கிடையே தவிர்க்க முடியாததாயிற்று. இப்போட்டி மனப்பான்மையும் ஆக்கிரமிப்புத் தன்மையும் முதலாம் போருக்கு ஆணிவேராக அமைந்தன.
<b>வணிகப் போட்டி</b>: தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு ஐரோப்பிய நாடுகளில் ஆக்கப்பொருள்கள் அதிகமாயின செருமனி ஆக்கப் பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்கிற நாடாக விளங்கியது. செருமனியின் பொருள்கள் உலகச் சந்தையில் நன்மதிப்பைப் பெற்றன. செருமனியின் வணிக வளர்ச்சியில் பிரிட்டன் பொறாமையும் கோபமும் கொண்டது. இந்தப் பகைமைக் கருத்தும் இப்போருக்கு ஒரு வித்தாக அமைந்தது.
<b>பால்கன் பிரச்சினை</b>: பெர்லின் மாநாட்டின் தீர்மானத்தின்படி (கி.பி. 1878) பாசுனியா, எர்சிகோவினா என்னும் பகுதிகளைத் தம் நாட்டுடன் இணைத்துக் கொள்ளாமல், ஆளுகிற பொறுப்பினை மட்டும் அங்கேரி நாட்டுக்கு ஆசுத்திரியா வழங்கியது. ஆனால், ஆசுத்திரியா - அங்கேரி 1908-இல் அவற்றைத் தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. உள்ளபடியே இணைத்துக் கொள்ளப்பட்ட அப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் செர்பியா நாட்டில் வாழ்ந்த சிலாவு வமிசத்தைச் சேர்ந்தவர்கள். மக்கள் தொகை கணக்குப்படி அப்பகுதிகள் செர்பியாவுடன் இணைந்திருக்க வேண்டும். இல்லையேல் அண்டை நாடான உருசியாவுடன் இணைந்திருக்க வேண்டும். எனவே, செர்பியாவும் உருசியாவும் சேர்ந்து தகாத முறையில் அப்பகுதிகளை இணைத்துக்கொள்ள, ஆசுத்திரியா - அங்கேரி அரசுக்கு எதிராகப் போருக்குத் தயாராயின. மேலும், ஆகத்திரியா - அங்கேசி அரசு செருமனியுடன் உறவு கொண்டிருப்பதை எந்த நாடும் விரும்பவில்லை.
<b>மொராக்கோப் பிரச்சினை</b>: மொராக்கோவைத் தன்னாட்சிக்கு உட்படுத்த பிரான்சு விரும்பியது. ஆனால், செருமனி நாட்டு இரண்டாம் கெய்சர் வில்லியம் பிரான்சின் தலையீட்டை எதிர்த்ததோடன்றி, மொராக்கோவை ஒரு சுதந்திர நாடாக்க விரும்பினார். மொராக்கோவில் ஏற்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சியைப் பயன்படுத்தி, அங்கு அமைதியை உண்டாக்கும் விதத்தில் தன் செல்வாக்கை நிலைநிறுத்தப் பிரான்சு ஒரு படையை மொராக்கோவின் தலைநகரான பெசுவிற்கு அனுப்பியது. உடனே செருமனியும் தம் படையை மொராக்கோவிற்கு அருகிலுள்ள அகாதீர் துறைமுகத்திற்கு அனுப்பியது. பிரிட்டன் பிரான்சுக்கு ஆதரவாகப் படையை ஏவியதும் செருமனி தன் படையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது பிரான்சு மேலாதிக்கத்தை முழுமையாக<noinclude></noinclude>
tnwfsbhqdxyqpx970jtibht9ozi2jsc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/295
250
626885
1962135
1882630
2026-09-06T14:37:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|251|உலகப்போர்}}</noinclude>மொராக்கோவில் ஏற்படுத்தியது. செருமனி பிரான்சைப் போரில் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது.
<b>உலொரைன் பிரச்சினை</b>: பிரான்சு கி.பி. 1870-1871-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த பிரெஞ்சு-பிரசியாப் போரின்போது, கனிவளம் நிறைந்த அல்சாசு உலொரைன் ஆகிய பகுதிகளை இழந்துவிட்டது. உலோரைன் பகுதியைப் பெற்றுச் செருமனி மிக வேகமாகப் பொருளாதாரத்தில் வளர்ந்தது. இழந்துவிட்ட அந்த இரு இடங்களையும் மீண்டும் பெறத்தக்க தருணத்தைப் பிரான்சு எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது.
<b>இத்தாலியின் பேராசை</b>: முக்கூட்டு உடன்படிக்கைகளில் அங்கம் வகித்த இத்தாலி அதிக நாடுகளைப் போரின் மூலம் கைப்பற்றும் வகையில், 1915-ஆம் ஆண்டு நேச நாடுகளுடன் உறவு கொண்டது. இந்த ஆதிக்கப் பேராசையும் இப்போருக்குக் காரணமாகும்.
<b>உடனடிக் காரணம்</b>: ஆசுத்திரியா நாட்டு இளவரசர் பெர்டினாண்டையும் அவர் துணைவியாரையும் செர்பியாவைச் சேர்ந்த ஒருவன் 1914-ஆம் ஆண்டில் சூன் 28-இல் கொலை செய்தவுடன், மற்றைய காரணங்களை மறைமுகமாகக் கொண்டிருந்த அனைத்து நாடுகளும் போரிலே தீவிரமாக இறங்கின. ஆசுத்திரியா இக்கொலைக் குற்றத்தைக் காரணமாகக் கொண்டு செர்பியாவை அழிக்க எண்ணிப் போரைத் தொடங்கியது. உருசியா செர்பியாவுக்கு ஆதரவாக வந்தது. செருமனி உருசியாவுக்கு எதிராகப் படைகளைக் குவித்தது. பிரான்சு உருசியாவுக்கு ஆதரவு அளித்தது. எனவே செருமனி பிரான்சுக்கு எதிராகப் போரிட நேர்ந்தது. இலண்டன் உடன்படிக்கையில் (கி.பி. 1839) பெல்சியம் நடுநிலைமையைக் கடைப்பிடிக்கும் நாடு என்று அனைத்து ஐரோப்பிய நாடுகளும் முடிவெடுத்த போதிலும், செருமனி அந்த நிபந்தனைகளை முறியடித்துப் பெல்சியத்தின் மீது போர் தொடுத்தது. எனவே பிரிட்டன் செருமனியை எதிர்க்க நேர்ந்தது. தவிர்க்க முடியாத நிலையில் முதலாம் உலகப் பெரும் போர் மூண்டுவிட்டது.
<b>போரின் பண்புகள்</b>: அனைத்து வல்லரசு நாடுகளும் இப்போரில் பங்கு கொண்ட காரணத்தால் உலகப் பரப்பில் எல்லாப் பகுதிகளும்-மக்கள் தொகையில் 93 விழுக்காடு இப்போரில் கலந்து கொண்டன. இப்போர் மிகக் கடுமையானதும் கொடுமையானதும் ஆகும். ஏனெனில், இதில் பீரங்கி வண்டிகளும் வான்படைகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் நச்சு வாயுக்களும் இராட்சதப் பீரங்கிகளும் நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 295
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 97
|oTop = 80
|oLeft = 185
|Location = center
|Description =
}}
{{center|முதல் உலகப் போரில் பிரெஞ்சுப் போர் விமானம்}}
<b>போரின் போக்கு</b>: செருமனியைத் தலைமையாகக் கொண்டு போரில் இறங்கிய நாடுகள் அச்சு நாடுகள் எனவும், பிரிட்டனைத் தலைமையாகக் கொண்டு விளங்கிய நாடுகள் நேச நாடுகள் எனவும் கூறப்படுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 295
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 82
|oTop = 290
|oLeft = 182
|Location = center
|Description =
}}
{{center|ஆங்கிலேயரின் பீரங்கிப்படை வண்டி}}
ஆசுத்திரியா செர்பியாவுடன் போர் என அறிந்தும் செருமனி உடனே பெல்சியத்தைக் கடந்து பிரான்சைத் தாக்கியது. பிரிட்டனும் பிரான்சு செருமனிப் படைகளைத் தடுத்து நிறுத்த முடியாம திணறின. ஆனால் மார்ன் என்ற இடத்தில் நடந்-<noinclude></noinclude>
lzdk1e9dvsd1yd9xpvwgp7ixwn2d727
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/296
250
626886
1962150
1882631
2026-09-07T04:19:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|252|உலகப்போர்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 296
|bSize = 375
|cWidth = 240
|cHeight = 115
|oTop = 50
|oLeft = 73
|Location = center
|Description =
}}
{{center|உருசியப்படைகள் போரிலிருந்து திரும்பிச் செல்லல்}}
போரில் நேச நாடுகள் செருமனியுடன் சம பலத்தோடு சந்தித்தன.
உருசியப் படைகள் ஒரே சமயத்தில் செருமனியையும் ஆசுத்திரியாவையும் தாக்கின. பின்னர், படையெடுத்தபோது, உருசியப் படைகள் கலீசியாவினுள் புகுந்து அங்கேரியையும் பயமுறுத்தின, ஆசுத்திரியா மிக இடர்ப்பட்ட நிலையிலிருந்தபோது, அந்நாட்டிற்கு ஆபத்து நண்பனாகச் செருமனி விரைந்து வந்தது. செருமனியப் படைகள் உருசியப் படைகளைத் தோற்கடித்து ஏராளமான சேதத்தை ஏற்படுத்தியதுடன், ஆசுத்திரியப் பகுதியைவிட்டு உருசியப் படைகளை விரட்டி அடித்தன.
துருக்கி 1914 அக்டோபரில் அச்சு நாடுகளுக்கு ஆதரவாகப் போரில் ஈடுபட்டது. இந்நிகழ்ச்சி மூலம் நேசநாடுகள் உருசியாவுடன் இதுகாறும் பெற்றுவந்த செய்தித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனினும், பிரிட்டன் போரைத் தொடர்ந்து நடத்தி மெசபொடேமியாவைக் கைப்பற்றியதோடு, துருக்கியரின் தொல்லைகளிலிருந்து சூயசுக் கால்வாயையும் விடுவித்துப் பாலத்தீனத்தையும் வென்றது.
மண்ணாசை கொண்ட இத்தாலி 1915-இல் நேச நாடுகளுக்கு ஆதரவாகப் போரில் இறங்கியது. 1916-இல் இத்தாலி கணிசமான வெற்றிகளைப் பெற்றது. அது 1917-இல் பகைவர்களால் நொறுக்கப்பட்டது. இருப்பினும், பிரிட்டன், பிரான்சு ஆகிய நேச நாடுகள் வட இத்தாலியை அழிவினின்று காப்பாற்றின. நேச நாடுகளுக்குப் பக்கபலமாக இத்தாலி ஆசுத்திரியாவைக் கண்காணித்தது.
பல்கேரியா 1915-இல் அச்சு நாடுகளுக்குத் துணையாகவும் 1916-இல் உருமேனியா நேச நாடுகளுக்குத் துணையாகவும் போரில் இறங்கின. உருமேனியா 1916-இல் திரான்சில்வேனியாவை நோக்கிப் படையெடுத்தபோது, அச்சு நாடுகள் உருமேனியாவைக் கடுமையாகச் சேதப்படுத்தியமையால், 1918-இல் உருமேனியா போரிலிருந்தே தன்னை விடுவித்துக் கொண்டது.
நிலத்திலுள்ளவாறே நீரிலும் படைகள் மோதிக் கொண்டன. கடலாதிக்கத்தில் குறைவில்லாத பிரிட்டன், செருமனிக்குத் தக்க பாடத்தைப் புகட்ட எண்ணிச் செருமனிக்குச் சொந்தமான ஒரு போர்க் கப்பலையே அழித்துவிட்டது. பிரிட்டனோடு செருமனியால் ஈடு கொடுத்துக் கடற்போர் செய்ய இயலவில்லை. எனவே பிரிட்டனுக்குப் பதிலடி கொடுக்க வேண்டி, செருமனி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பியது. இந்த நீர் மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டனுக்குப் பெரும் இழப்பு உண்டாக்கின.
முதல் உலகப்பெரும்போர் தொடங்கிய காலத்திலிருந்தே அமெரிக்கா நடுநிலைமையை வகித்து வந்தது, ஆனால், செருமனி நீர் மூழ்கிக் கப்பல்கள் உலூசிதானியா என்ற அமெரிக்கக் கப்பலை 1915-இல் வீழ்த்தியது. இதனால் அமெரிக்கா 1917-இல் வேறு வழியின்றிச் செருமனிக்கு எதிராகப் போரில் இறங்கியது. நேச நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் போரில் இறங்கி, ஐரோப்பியப் பகுதிகளில் படைகளைக் குவித்த பின்னரே, 1918-இலிருந்து முதல் உலகப் பெரும்போர் முடிவடையும் கட்டத்தை அடைந்தது.{{nop}}<noinclude></noinclude>
mlp88eo869wedl1gpcf93mjnefe5gsd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/297
250
626887
1962151
1882632
2026-09-07T04:23:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|253|உலகப்போர்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 297
|bSize = 375
|cWidth = 148
|cHeight = 78
|oTop = 75
|oLeft = 13
|Location = center
|Description =
}}
{{center|செருமனி நீர் மூழ்கிக் கப்பல்}}
உருசியா இப்போரில் பெருந் தோல்வியே அடைந்தது. எனவே உருசிய நாட்டு மக்கள் சார் வமிச ஆட்சி மீது வெறுப்புக் கொண்டு 1917 அக்டோபரில் புரட்சியைத் தொடங்கினர்; சார் மன்னர் ஆட்சியை நீக்கிவிட்டுச் சோவியத்துப் பொது உடைமைக் குடியரசினை ஆட்சியில் அமர்த்தினார்கள். உடனே உருசியா அச்சு நாடுகளுடன் 1918-இல் ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டு, உலகப் பெரும் போரிலிருந்து விலகிக் கொண்டது. இதனால் அச்சு நாடுகளுக்குச் சாதகமான நிலை போரில் உண்டாயிற்று.
உருசியாவின் விலகலால் கிழக்கும் பகுதியில் தொல்லைகள் குறைந்தன. ஆனால், மேற்குப் பகுதியில் போர் மேலும் தீவிரமாகியது, போரில் தொடக்கத்தில் அச்சுநாடுகள் சில வெற்றிகளைப் பெற்றன. எனினும், நாளடைவில் மிகவும் மந்தமான நிலையை அடைந்துவிட்டன. செருமானியப் படைகள் சிறிதுசிறிதாகப் பின்வாங்கத் தொடங்கின; துருக்கிப் படைகளும் பல்கேரியாப் படைகளும் துவண்டன. ஆசுத்திரியா உடன்படிக்கையை நாடியது. இரண்டாம் வில்லியம் கெய்சர் 1918 நவம்பரில் முடி துறந்து, ஆலந்துக்குத் (Holland) தப்பி ஓடினார். எனவே, செருமனி 1918 நவம்பர் 11-ஆம் நாளில் உடன்படிக்கைக்கு இசைந்தது; முதலாம் உலகப் பெரும்போர் முடிவு அடைந்தது.
<b>நேச நாடுகளின் வெற்றிக்குரிய காரணங்கள்</b>: இப்போரின் தொடக்க காலத்தில் நேச நாடுகள் தோல்வியே அடைந்தன. ஆனால் இறுதிக் காலத்தில் பின்வரும் காரணங்களால் வெற்றி பெற்றன. நேச நாடுகள் பொருளாதார வசதி மிகுந்தவை, போருக்கு வேண்டிய பொன்னும் பொருளும் போர்க்கருவிகளும் வீரர்களும் பிரிட்டனிடமிருந்து நேச நாடுகளுக்குக் குறைவில்லாமல் கிடைத்தன. ஆனால் அச்சு நாடுகளுக்கு இத்தகைய வசதிகள் எவையுமில்லை. வசதிகள் பிரிட்டனைப் போன்று வாய்க்கவில்லை.
பிரிட்டனின் கடல் ஆதிக்கம் நேச நாடுகளுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. அச்சு நாடுகளுக்கு இத்தகைய வெற்றியைத் தரும் அளவுக்கு கடல் ஆதிக்கம் கிடையாது. பிரிட்டனின் இருப்பிடம் இயற்கையிலேயே நல்ல பாதுகாப்பைப் பெற்ற இடம். ஆனால், அச்சு நாடுகள் அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய அளவுக்கும், தாக்குதல் நடத்த ஏதுவான அளவுக்கும் அமைந்திருந்தன.
போரின் தொடக்கத்தில் அச்சு நாடுகளில் இடம் பெற்றிருந்த இத்தாலி, உருமேனியா போன்றவை இப்போரிலிருந்து விலகின. ஒரு சில நாடுகள் நேச நாடுகளுடன் உடன்பாடு கொண்டன. செருமனியுடன் உறவு கொண்டிருந்த ஆசுத்திரியா - அங்கேரி போன்ற நாடுகள் நொண்டிக் குதிரைகளாக விளங்கின. அவை தம் தலைமைப்பீடமான செர்பியா நாட்டுக்காக உழைத்தனவே தவிர, இப்போரின் தலைமைப் பீடமான செருமனிக்காக உழைக்கவில்லை. இப்போரை விட்டு 1917-இன் விலகிய உருசியா செருமனிக் கைதிகளை விடுதலை செய்தது. அக்கைதிகள் தம் தாய் நாடு திரும்பிப் புரட்சிக் கருத்துகளையும் சமதர்ம சுதந்திரக் கருத்துகளையும் பரப்பினார்கள்; மீண்டும் செருமானியப்படையில் சேர்ந்து, செருமனியின் ஆதிக்கத்திற்கும் அட்டூழியத்திற்கும் சாவு மணி அடித்தார்கள். போரின் இறுதிக் காலத்தில் நேசநாடுகளுடன் அமெரிக்கா சேர்ந்தது; படைப் பலத்தைப் பெருக்கியது; நேச நாடுகளுக்கு வெற்றி வாய்ப்பையும் தேடித் தந்தது.
<b>போரின் விளைவுகள்</b>: பாரிசு (Paris) உடன்படிக்கையோடு 1919-இல் முதல் உலகப் பெரும் போர் முடிவுற்றது. இப்போரில் பிரிட்டனின் தலைமையில் போரிட்ட நேசநாடுகள் வென்றன. செருமனியின் தலைமையில் போரிட்ட அச்சு நாடுகள் தோற்றன. இப்போரில் தோல்வியுற்ற ஒவ்வொரு நாட்டுடனும் தனித்தனியாக நிபந்தனைகளுடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செருமனியுடன் ‘வெர்சே உடன்படிக்கை’ செய்து கொள்ளப்பட்டது. ஆசுத்திரியாவுடன் ‘புனித செர்மைன் உடன்படிக்கை’யும். அங்கேரியுடன் ‘திரினான் உடன்படிக்கை’யும், பல்கேரியாவுடன் ‘நியூல்லி உடன்படிக்கை’யும், துருக்கியுடன் ‘செவ்ரேசு உடன்படிக்கை’யும் செய்து கொள்ளப்பட்டன. இந்த செவ்ரேசு உடன்படிக்கை 1923-இல் ‘இலாசேல் உடன்படிக்கை’யாக மாற்றியமைக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
s3lm5jwojizrfpk8sbbtfsxpuybb40x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/298
250
626943
1962152
1882886
2026-09-07T04:27:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|254|உலகப்போர்}}</noinclude>அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் 14 அம்சத் திட்டப்படி உடன்படிக்கைகள் வரையறுக்கப்பட்டன. பின்னர், ஒவ்வொரு நாட்டுக்கும் கடல் ஆதிக்கத்தில் சுதந்திரம் தர வேண்டும் எனவும், போருக்குக் காரணமாக இருந்து போரில் தோற்ற நாடுகள் இழப்பீடு தர வேண்டுமெனவும் சிவ குறிப்புகள் உடன்படிக்கைகளின் திருத்தங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. செருமனி குற்றவாளியெனக் கருதப்பட்டு இழப்பீடு தர வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. அது தன் வசமிருந்த அல்சேசு, உலொரைன் போன்ற பகுதிகளை விட்டுக் கொடுத்தது; ‘சார்’ பள்ளத்தாக்கு நிலக்கரிச் சுரங்கத்தையும் 15 ஆண்டுக் காலம்வரை பிரான்சிடம் ஒப்படைத்தது. இத்தாலி ஆசுத்திரியாவிடமிருந்து திரீசுடு, இசுதிரியா, திரண்டினோ, தெற்குத் தைரோல் ஆகிய பகுதிகளைப் பெற்றது. தென்மார்க்கு வடக்கு சுலசுவிக்கு என்ற பகுதியையும், செருமனி மத்திய சுலசுவிக்கு என்ற பகுதியையும் பெற்றன.
செருமனி, ஆசுத்திரியா, உருசியா ஆகிய நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை இணைத்து, வரைபடத்திலிருந்து மறைந்துவிட்ட போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது. பால்டிக்குப் பகுதியில் எசுத்தோனியா, இலாக்டிலியா, இலிதுவேனியா, பின்லாந்து ஆகிய புதிய நாடுகள் உருவாக்கப்பட்டன. ஆசுத்திரியாவின் பரப்பளவைக் குறைத்து அது தனிக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆசுத்திரியாவினின்று அங்கேரி பிரிக்கப்பட்டுத் தனிகுடியரசாக அறிவிக்கப்பட்டது. செக்கோசுலோவாக்கியா, யுகோசுலோவியா ஆகிய குடியரசுகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆசுத்திரியா, உருசியா, பல்கேரியா ஆகிய நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்து உருமேனியாவின் பரப்பு அதிகரிக்கப்பட்டது. துருக்கியின் பரப்பளவு குறைக்கப்பட்ட போதிலும், கான்சுடாண்டிநோபிள் அதனிடமே ஒப்படைக்கப்பட்டது. ஏராளமான உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. செருமனி, உருசியா ஆசுத்திரியா, துருக்கி ஆகிய நாடுகளில் முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டது. இப்போரின் காரணமாக வலிமை வாய்ந்த ஒரு புரட்சி உருசியாவில் வெடித்தது. எதிர்காலப் போரைத் தடுக்கவும் உலக அமைதியைக் காக்கவும் சருவதேச சங்கம் ஒன்று அமைக்கப்பெற்றது.
<b>குறைபாடுகள்</b>: இப்போரினால் பல வல்லரசு நாடுகளில் வளம் குன்றியது. எடுத்துக்காட்டாக, பிரிட்டனுக்கு 12.7 விழுக்காடும், பிரான்சுக்கு 25 விழுக்காடும், இத்தாலிக்கு 20 விழுக்காடும், செருமனிக்கு 26 விழுக்காடும் தத்தம் நாட்டுச் செல்வம் குன்றியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இப்போரின் விளைவாக அமெரிக்க ஐக்கிய நாடு மிக வலிமைபெற்ற வல்லரசானது.
செருமனியோடு செய்துகொண்ட பாரபட்சமான வெர்சே உடன்படிக்கை செருமனியை ஆத்திரமூட்டச் செய்தது, செருமனிக்குச் சொந்தமான நிலப்பகுதிகளும் குடியேற்றப் பகுதிகளும் பிடுங்கப்பட்டன. வெற்றிபெற்ற நாடுகளுக்கு நிறைய நட்டஈடு தர வேண்டியதாகியது. செருமனியின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. செருமனியின் படைப்பலம் குறைக்கப்பட்டது. அந்நாடு எட்டில் ஒரு பங்கு பரப்பளவையும், பத்தில் ஒரு பங்கு மக்கள் தொகையையும் இழந்தது. மூன்றில் இரண்டு பங்கு இரும்புச் சுரங்கத்தையும், நிலக்கரிச் சுரங்கத்தில் பாதியையும், நான்கில் மூன்று பங்கு துத்தநாகச் சுரங்கங்களையும், ஈயக்கனிவளத்தில் பாதியையும் அயல் நாடுகளில் முதலீடு செய்து வைத்த அனைத்துத் தொகையையும் செருமனி இழந்துவிட்டது.
படைக்குறைப்பு என்னும் கொள்கை தோற்றுவிட்ட நாடுகளில் செயற்படுத்தப்பட்டதே தவிர, வென்ற நாடுகளில் இல்லை. இப்போருக்குப்பின் விளைந்த அனைத்து உடன்படிக்கைகளும் குறிப்பாக, ‘வெர்சே உடன்படிக்கை’ பாரபட்சமாக அமைந்த காரணத்தால் சருவதேசச்சங்கத்தால் உலக அமைதியைப் பாதுகாக்க இயலவில்லை. எனவேதான் உடன்படிக்கையின் குறைபாடுகள் கொழுந்துவிட்டு எரிந்து, இரண்டாம் உலகப் பெரும்போருக்கு ஊது குழல்களாக அமைந்துவிட்டன.{{Right|பொன்.சு.}}
<b>இரண்டாம்:(1939-1945) காரணங்கள்: செருமனியின் பாதிப்பு</b>: வெர்சே உடன்படிக்கையின் விளைவாகச் செருமனி பல பகுதிகளை இழந்தது. அது இரண்டாகப் பிரிக்கப்பட்டது. குடியேற்றங்கள் முழுமையாக அதன் பிடியிலிருந்து அகற்றப்பட்டன. இக்காரணங்களால் அதன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அதன் ஆயுதத் தளவாடங்கள் குறைக்கப்பட்டன. செருமனியே போர் தொடங்கியது என்பதால் அது நேச நாடுகளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
<b>பொருளாதாரக் காரணங்கள்</b>: வல்லமை பொருந்திய தன் புதிய கடற்படையின் மூலம் வியத்தகு தொழில் வளர்ச்சியைப் பெற்ற சப்பான் (Japan), தன் உற்பத்திப் பொருள்களை ஏனைய பிற நாடுகளில் விற்று வளம் காண ஏகாதிபத்தியக் கொள்கையினைக் கடைப்பிடிக்க முனைந்தது. அவ்வாறே இத்தாலியும் குடியேற்ற மேலாண்மை வெறியால், குடியேற்ற நாடுகளைக் கொள்ளையிட முனைந்தது.{{nop}}<noinclude></noinclude>
158e1b0wtldwq6ga74zdsfzym9dhdt2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/299
250
626944
1962153
1882887
2026-09-07T04:33:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|255|உலகப்போர்}}</noinclude>சப்பானின் போர் வேட்கையால் ஏனைய ஆசிய நாடுகள் பெருந் துயரத்திற்கு ஆளாயின. சப்பான் 1931-இல் மஞ்சூரியாவைக் (Manchuria) கைப்பற்றி, 1937-இல் சீனாமீது படையெடுத்து அதன் பல்வேறு நகரங்களைத் தன்னாட்சியின்கீழ்க் கொணர்ந்தது.
<b>இத்தாலியின் ஆக்கிரமிப்புகள்</b>: இத்தாலியில் பாசிச ஆட்சி முறையினை (Fascism) ஏற்படுத்திய பின்னர், சருவாதிகாரி முசோலினி (Mussolini) மத்தியதரைக் கடற்பகுதியை இத்தாலியின் மேலாதிக்கத்தின்கீழ்க் கொணர முனைந்தார். அவர் 1936-இல் ஆப்பிரிக்காவில் உள்ள அபிசீனியாவையும் (இன்றைய எத்தியோப்பியா) 1939-இல் அல்பேனியாவையும் (Albania) வென்றார்.
<b>ஐரோப்பிய மக்களாட்சி நாடுகள்</b>: முதல் உலகப் போருக்குப் பின்னர், இங்கிலாந்து ஐரோப்பியச் சிக்கலில் தலையிடாது தனி வணிக மேலாதிக்கத்தில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தது. பிரான்சுடன் உறவினைச் சீரமைத்துக் கொள்ள அந்நாடு விரும்பவில்லை. செருமனி தன்மீது படையெடுத்தால் தான் தோல்வியைத் தழுவ நேரிடும் என்பதை நன்குணர்ந்த பிரான்சு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இராணுவ உதவியினை நாடியபோது உதவி மறுக்கப்பட்டது. அதன் பின்னர், பிரான்சு தன் நிலையினை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் செக்கோசுலோவாக்கியா (Czechoslovakia), பெல்சியம் (Belgium), போலந்து மற்றும் பல சின்னஞ்சிறிய நாடுகளுடன் போர் உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டது.
<b>அச்சுநாடுகளின் அணி</b>: செருமனி 1936-இல் சப்பானுடன் ‘பொதுவுடைமை எதிர்ப்பு ஒப்பந்த’த்தை (Anti-Comintern Pact) ஏற்படுத்திக்கொண்டது. இந்நாடுகள் சோவியத்து உருசியாவின் மேலாதிக்கம் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் வளர்ந்து, பொதுவுடைமைக் கருத்துகள் பரவத் தொடங்கினால் அதனை முறியடிக்கும் நோக்குடன் ஓரணியில் இயங்கிட முடிவு செய்தன. இவ்விரண்டு நாடுகளுடன் 1937-இல் இதே நோக்குடன் இத்தாலியும் இணைந்து கொள்ள, ‘உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு’ (Rome-Berlin-Tokyo Axis) என்னும் அமைப்பு உருவாயிற்று. இம்மூன்று நாடுகளின் போர் வேட்கையும், உலகாளும் குடியேற்ற மேலாண்மை உணர்வும் போர் மூளுவதற்குரிய காரணங்களாகும்.
<b>சருவதேசச்சங்கத்தின் வலுவற்ற தன்மை</b>: முதல் உலகப் போருக்குப் பின்னர், எதிர்காலத்தில் அமைதியை நிலைநாட்டச் சருவதேசச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இச்சங்கத்தின் தோற்றத்திற்குப் பெரிதும் பங்காற்றிய அமெரிக்க ஐக்கிய நாடு, பின்னர்ச் செயற்பாட்டில் முனைந்தபோது, பங்கு பெறாது அமெரிக்கச் சட்டமன்றங்கள் தடை செய்தன. இச்சங்கத்தின் விதிமுறைகளை மீறி அமைதியைக் குலைக்கும் நாடுகளைத் தண்டிக்கத் தனக்கெனச் சக்தி மிக்க படையேதும் இச்சங்கத்திடம் இல்லை. எனவே, அமைதி காக்கும் பணியினைத் திறம்படச் செய்திட இதனால் இயலவில்லை. மஞ்சூரியாவைச் சப்பான் தாக்கியபோதும் அபிசீனியாவை முசோலினி ஆக்கிரமித்த போதும் இட்லரின் (Hitler) போர் வெறியினைக் கண்டிக்கத் தவறியதும் சங்கத்தின் வலுவிழந்த நிலைக்கு நல்ல சான்றுகளாகும். சருவதேசச் சங்கம் வலுப்பெற்று இருந்தபோது. 1933-இல் செருமனி அதிலிருந்து விலகிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் சப்பானும், 1937-இல் இத்தாலியும் விலகிக் கொண்டன.
<b>போருக்கான உடனடிக் காரணம்</b>: இட்லர் 1938-இல் ஆசுத்திரியாவைச் செருமனியுடன் இணைத்துக் கொண்டார். பின்னர், செக்கோசுலோவாகியாவின் (Czechoslovakia) ஒருபகுதியான சுடேட்டன்லாந்தைக் (Sudetanland) கைப்பற்றிக் கொண்டபோது, இங்கிலாந்தின் தலைமை அமைச்சர் நெவில் சேம்பர்லேன் (Naville Chamberlain) இதில் தலையிட்டு மீயூனிச்சு ஒப்பந்தம் (Munich pact, 1938) செய்து கொண்டார். இதன்படி சுடேட்டன்லாந்தை நிருவகிக்கும் பொறுப்பினை இங்கிலாத்திற்குச் செருமனி விட்டுக்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 299
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 152
|oTop = 267
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|சப்பான் ஆதிக்க விரிவு}}<noinclude></noinclude>
44h5adlgt10mpkp9528lld61gzy65bb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/300
250
626945
1962154
1882893
2026-09-07T04:36:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|256|உலகப்போர்}}</noinclude>கொடுத்தது. ஆனால், பின்னர் இட்லர் இவ்வுடன்படிக்கையினை மீறி. 1939-இல் செக்கோசுலோவாக்கியா முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார். போலந்தின் ஆதிக்கத்திலிருந்த தான்சிகுத் (Danzig) துறைமுகத்தைச் செருமனி தானமாகக் கேட்டதற்குப் போலந்து உடன்படவில்லை. எனவே, இட்லர் போலந்தைத் தாக்கினார். போலந்தின் நட்பு நாடுகளான இங்கிலாந்தும் பிரான்சும் செருமனிமீது தாக்குதல் தொடுக்கவே, இரண்டாம் உலகப் போர் 1939 செப்டம்பர் 3-ஆம் நாள் தொடங்கியது.
இட்லர் புதிய முறையில் பிளிட்சுகிரிகு (Blitzkries) என்னும் மின்னல் வேகத் தாக்குதலைத் தொடுத்து, வார்சாவைக் (Warsaw) கடும் குண்டு வீச்சிற்கு ஆளாக்கினார். ஐந்து வாரத்தில் கடும் சேதமுற்ற போலந்து 1939 அக்டோபர் 4 ஆம் நாள் பணிந்து விட்டது. அதே நேரத்தில் உருசியா 1937 செப்டம்பர் 17-ஆம் நாள் கிழக்குப் போலந்தைத் தாக்கி, கர்சான் எல்லைக்கப்பால் உள்ள பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது. மேலும், உருசியா இலிதுவேனியா, எசுத்தோனியா, இலாட்வியா போன்ற பால்டிக்குக் கடல் நாடுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டது. இட்லர் 1940 ஏப்பிரலில் தென்மார்க்கையும் (Denmark), அட்லாண்டிக்குக் கடலில் மேலாதிக்கம் செலுத்த வசதியாக நார்வே (Norway) நாட்டினையும் கைப்பற்றிக் கொண்டார். இப்போர்களில் நடுநிலை வகிப்பதாக அறிவித்திருந்த ஆலந்து (Holland), பெல்சியம் (Belgium) ஆகியவற்றை இட்லர் 1940 ஏப்பிரல் 10-ஆம் நாள் தம் வசப்படுத்திக் கொண்டார்.
இட்லர் பிரான்சைத் தாக்கி ஆமியன்சு (Amiens) நகரைக் கவர்ந்து கொண்டார். அப்போது பிரான்சீன் தென்கிழக்குப் பகுதியை முசோலினியும் தாக்கவே, 1940-இல் பிரான்சு வீழ்ந்தது. அதே ஆண்டில் இட்லர் இங்கிலாந்தை வீழ்த்தும் நோக்குடன் போர் விமானங்களைப் பெருமளவில் அனுப்பி, ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி, இங்கிலாந்தைப் பேரழிவிற்கு ஆளாக்கினார். சர்ச்சில் (Churchill) தலைமையில் ஆங்கிலேயர்கள் எதிர்த் தாக்குதலைத் தொடுத்தனர். முசோலினி சோமாலிலாந்தைச் (Somaliland) கைப்பற்றிக் கொண்டார். ஆனால், ஆங்கிலேயர்கள் விழிப்போடிருந்து வேவல் (Wavell) தலைமையில் எரிட்ரியா, சோமாலிலாந்து ஆகியவற்றைக் கைப்பற்றி, அங்கிருந்த இத்தாலியரை விரட்டி அடித்ததனர். அப்போது போரின் அச்சுறுத்தல்களை நன்கு கவனத்துடன் ஆய்ந்து கொண்டிருந்த அமெரிக்கா, 1941 மார்ச்சுத் திங்களில் அமெரிக்கன் காங்கிரசைக் (American Congress) கூட்டி, அக்கூட்ட முடிவில் அச்சு நாடுகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்த நேச நாடுகளுக்கு உதவ முடிவு செய்தது.
இட்லர் 1939-இல் செய்துகொண்ட உருசியா, செருமனி நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தை மீறி, 1941 சூன் திங்களில் உருசியா மீது போர் தொடுத்தார், அவ்வேளையில் அமெரிக்கா இட்லருக்கெதிராக அனைத்துப் போர்த் தளவாடங்களையும், புத்துலக ஆயுதங்களையும் உருசியாவிற்கும் இங்கிலாந்திற்கும் அனுப்பி உதவியது. இலெனின்கிராடில் நடைபெற்ற கடும் போருக்குப் பின்னர்ச்செருமானியினர் மாபெரும் தோல்வியுற்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 300
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 128
|oTop = 160
|oLeft = 207
|Location = center
|Description =
}}
{{center|பெர்ல் துறைமுகத்தில் அழிக்கப்பட்ட அமெரிக்கக் கப்பல் ஆரிசோனா}}
சப்பான் 1941 திசம்பர் 7-ஆம் நாள் பசிபிக்குப் பெருங்கடலில் அவாய்த் தீவுகளைச் சார்ந்த பெர்ல் துறைமுகத்தைத் (Pearl Harbour) தாக்கி, அங்கிருந்த அமெரிக்கக் கடற்படையைக் குண்டுவீசித் தகர்த்து, ஏறத்தாழ ஏழு போர்க் கப்பல்களையும் 150 போர் விமானங்களையும் அழித்தது. இப்போரில் 2,400 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அமெரிக்கா அச்சு நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது. அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பிராங்கிளின் உஞ்சுவெல்ட்டு (Roosevelt), ஐசனோவர் (Eisenhower) தலைமையில் ஐரோப்பாவில் போர் தொடங்கிடப் பெரும் படையொன்றினை அனுப்பி வைத்தார். மெக் ஆர்தர் (Mac Arthur) தலைமையில் பசிபிக்குப் பெருங்கடல் போர்ப்பகுதிக்கு வலிமை வாய்ந்த மற்று-<noinclude></noinclude>
m6f3pdjzbe6632crrg0ueyyojxm73oj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/301
250
626946
1962155
1882895
2026-09-07T04:41:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|257|உலகப்போர்}}</noinclude>மொரு படையும் புறப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் போரிடும் பணிகளை மவுண்ட்பேட்டன் பிரபு (Lord Mountbatten) ஏற்றுக்கொண்டார்.
மவுண்ட்பேட்டன் பிரபு சப்பானியர்களைப் பர்மாவிலிருந்து விரட்டி அடித்தார். மெக் ஆர்தர் பிலிப்பைன்சுத் தீவுகளைக் கவர்ந்து கொண்டார். ஆப்பிரிக்காவில் 1941-1943 ஆண்டுகளுக்கிடையில் இடை விடாது கடும்போர் நடைபெற்றது. அமெரிக்கா அபிசீனியாவையும், இத்தாலி சோமாலிலாந்தையும் வெற்றிகொண்டன. இங்கிலாந்து இலிபியாவில் (Libya) இருந்து பென்காசி (Benghazi) வரை முன்னேறியது. மாண்ட்கோமரி (General Montgomeri) தலைமையில் அமெரிக்கா இலிபியாவிலிருந்து செருமானியர்களையும் இத்தாலியர்களையும் விரட்டி அடித்தது.
பின்னர், மாண்ட்கோமரி திரிப்போலியைக் (Tripoli) கைப்பற்றிக்கொண்டு துனீசியா (Tunisia) வரை முன்னேறினார். கிரேக்கக் கடலில் இத்தாலியக் கப்பற்படையைப் பிரிட்டன் தோற்கடித்தது. அமெரிக்க பிரிட்டன் கூட்டுப் படையொன்று 1942 நவம்பரில் பிரெஞ்சுக் குடியேற்ற நாடான அல்சீரியாவைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டது. வட ஆப்பிரிக்கா முழுவதையும் 1943 நவம்பரில் அமெரிக்கா-ஆங்கிலக் கூட்டுப்படை கைப்பற்றிக்கொண்டது. அதே ஆண்டில் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து சிசிலித் தீவினைக் (Sicily) கவர்ந்து கொண்டன. இத்தாலி 1943 அக்டோபரில் சரணடைந்தது. இத்தாலியில் மக்கள் புரட்சி வெடித்தது. முசோலினி 1945-இல் தப்பியோடியபோது கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 301
|bSize = 375
|cWidth = 122
|cHeight = 135
|oTop = 275
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|இட்லரின் செருமானியப் படைகள் பாரிசுநகரத்தினுள் நுழைதல்}}
அமெரிக்க-பிரிட்டன் கூட்டுப் படைகள் 1944 சூனில் பிரான்சை விடுவிக்க முயன்று வெற்றி பெற்றன. பல்வேறு போர்முனைகளில் செருமனி முதன்முறையாகத் தோல்வியைத் தழுவியது. அமெரிக்கா மேற்கிலிருந்தும், உருசியா கிழக்கிலிருந்தும் செருமனியைத் தாக்கின. உருசியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் முத்தரப்பு உச்சி மாநாடுகள் மாசுக்கோவிலும் (Moscow) தெக்ரானிலும் (Tehran) கூடின. வின்சுடன் சர்ச்சில் (Winston Churchill), பிராங்கிளின் உரூசுவெல்ட்டு (Franklin Roosevelt), சோசப் இசுட்டாலின் (Joseph Stalin) ஆகிய முப்பெருந் தலைவர்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய பகுதிகளிலிருந்து தங்கள் போர்முனை நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்திச் செருமனியைத் தகர்த்துவிட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் பின்னர், 1944 பிப்பிரவரி 3-ஆம் நாள் கொர்கன் காப்ரன் பகுதியில் முகாமிட்டிருந்த செருமானிய வீரர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். இப்போரில் செருமனி 55,000 படைவீரர்களையும், 500 விசைப்பீரங்கி வண்டிகளையும் (Tanks), 300க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும் இழந்தது. ஏறத்தாழ 18,000 பேர் கைதிகளாயினர்.
அல்பேனியா, பெல்சியம், பல்கேரியா, கிரீசு, உருமேனியா, போலந்து, பிரான்சு, செக்கோசுலோவாகியா, யூகோசுலாவியா ஆகிய நாடுகளில் 1945-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விடுதலை வேட்கையால் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். உருசியாவின் பெரும் படையொன்று 1945-ஏப்பிரல் 20-ஆம் நாள் பெர்லின் நகரின் கிழக்கிலிருந்து தாக்கத் தொடங்கியது. போர்கன், இரியாசா நகரங்களிலிருந்த அமெரிக்கப் படைகள் உருசியாவின் நீண்ட படைப் பிரிவுகளுடன் இணைந்து கொண்டன. அப்போது சிச்வெரின், உரோசுடாக்கு நகரங்களுக்கிடையில் முகாமிட்டிருந்த உருசியப்-பிரிட்டன் படைகள் ஒன்றாக இணைந்துகொள்ள மும்முனைத் தாக்குதலின் கொடுமையிலிருந்து மீள வழி தெரியாது செருமனி திகைத்தது. போரில் தோல்வியைத் தழுவிய இட்லர் தற்கொலை செய்து கொண்டார். உருசியாவின் 756 ஆம் படைப்பிரிவு இட்லரின் தலைமையகமான இரிசுடாக்குக் கட்டிடத்தைத் தகர்த்தது. எஞ்சியிருந்த ஏறத்தாழ 1,34,000 செருமானியர் 1945 மே 2-ஆம் நாள் பணிந்தனர். பெர்லின் போரில் மட்டும் உருசியர்கள் ஏறத்தாழ<noinclude>
<b>வா.க. 5 -17</b></noinclude>
3l29upmg5eyjo8svn9284tvk7p6ja8z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/302
250
626948
1962156
1882898
2026-09-07T04:44:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|258|உலகப்போர்}}</noinclude>4,80,000 செருமானியர்களைக் கைது செய்தனர். செருமனியின் கட்டுப்பாடற்ற பணிதல் ஒப்பந்தம் 1945 மே மாதம் கையெழுத்தானது. அதன் பின்னர்ப் போர் ஓய்ந்தது.
யால்டா உச்சி மாநாட்டின் முடிவிற்கிணங்க (Yalta Conference) உருசியா சப்பான் மீது ஆகசுட்டு 9-ஆம் நாள் போர் செய்ய முடிவு செய்தது. இதற்கு முன்னர், ஆகசுட்டு 6-ஆம் நாள் அமெரிக்கா இரோசிமா (Hiroshima) மீதும், ஆகசுட்டு 9-ஆம் நாள் நாகசாகி (Nagasaki) மீதும் அணுக்குண்டுகளை வீசியது. இதன் காரணமாக இரோசிமாவில் ஏறத்தாழ 3,60,000 மக்களும் நாகசாகியில் ஏறத்தாழ 1,37,000 மக்களும் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் உருசியா மார்சல் ஏ.எம்.வாசிலேசுகி தலைமையில் சப்பானியப் படைப்பிரிவைத் தாக்கி அழித்தது. தான் அழிவின் எல்லைக்குச் சென்று விட்டதை உணர்ந்த சப்பான் ஆகசுட்டு 14-ஆம் நாள் பணிந்தது. இப்பெரும் போரில் ஏறத்தாழ 6,00,000 சப்பானியப் படைவீரர்களை உருசியா சிறைப்படுத்தியது. அதன் பின்னர், சப்பான் நிபந்தனையற்ற முறையில் பணியக்கோரும் ஆவணத்தில் செப்டம்பர் 2-ஆம் நாள் தோக்கியோ விரிகுடாவில் நங்கூரமிட்டிருந்த மிசிரி என்னும் போர்க்கப்பலில் கையெழுத்திட்டது. இத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது.
<b>போரின் விளைவுகள்</b>: இரண்டாம் உலகப் போரில் எழுபது நாடுகளைச் சார்ந்த சற்றேறக் குறைய ஐந்து கோடி மக்கள் உயிர்துறந்தனர். 1½ கோடி உருசியர்கள், 60 இலட்சம் சுவிடீயர்கள் (Swedes), 37,00,000 செருமானியர்கள், 20 இலட்சம் போலந்து நாட்டவர்கள், 16 இலட்சம் யூகோசுலோவியர்கள், 12,00,000 சப்பானியர்கள், பத்து இலட்சம் இத்தாலியர்கள், 6,00,000 ஆங்கிலேயர்கள், 5,00,000 உருமேனியர்கள், 3,00,000 பிரெஞ்சுக்காரர்கள், 2,92,000 அமெரிக்கர்கள் மற்றும் 220 இலட்சம் சீனர்கள் போன்றோர் இறந்தவர்களுள் அடங்குவர். போர் முடிவில் ஐரோப்பாவில் மட்டும் 130 இலட்சம், படை வீரர்களும், ஏறத்தாழ 170 இலட்சம் பொது மக்களும் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் தகவல் தொடர்புகள் பெரும்பாலும் துண்டிக்கப்பட்டன. இப்போரின்போது, அதாவது 1939-ஆம் ஆண்டிலிருந்து 1945 வரை 2½ கோடி ச.கி.மீ. பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் பெரும்பாலான உலக மக்கள் துன்பக் கடலில் மூழ்கினர்.
பாசிச ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விட்ட உலகப் போரினால் உருசியா ஏறத்தாழ 1700 நகரங்களையும் 70,000 கிராமங்களையும் இழந்தது, பிரான்சில் ஏறத்தாழ 10,00,000 வீடுகள் தரைமட்டமாயின. கிரீசில் ஏறக்குறைய 400 சிற்றூர்கள் உருக்குலைந்தன. யூகோசுலாவியாவில் மொத்தக் கால்நடைகளில் மூன்றிலொரு பங்கு மடிந்தன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 302
|bSize = 375
|cWidth = 128
|cHeight = 163
|oTop = 85
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|அழிந்த செருமானிய நகரத்தை இட்லர் பார்வையிடுதல்}}
செருமனியில் நாசிச ஆட்சியும் இத்தாலியில் பாசிச ஆட்சியும் முடிவடைந்தன. செருமனி இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. மேற்குச் செருமனி நேசநாடுகளின் உறுப்பினர்களான அமெரிக்கா ஐக்கிய நாடு, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளின் மேற்பார்வையில் விடப்பட்டது. கிழக்குச் செருமனி உருசியாவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டது. நாடு இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் பெர்லின் மாநகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இத்தாலியில் குடியாட்சி முறை நடைமுறைக்கு வந்தது. இத்தாலி தன் ஆப்பிரிக்கக் குடியேற்றங்களை இழந்தது. காலப்போக்கில் ஐரோப்பிய நாடுகள் தம் குடியேற்ற நாடுகளுக்கு விடுதலை வழங்கின. இந்தியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை, கொரியா முதலானவை போருக்குப் பின்னர் விடுதலை பெற்றன.
இங்கிலாந்தில் 1945-இல் நடைபெற்ற தேர்தலின் வென்று, அட்லியின் (Atlee) தலைமையின்கீழ்த் தொழிற்கட்சி (Labour Party) பதவியைக் கைப்பற்றியது. அக்கட்சி ஏகாதிபத்திய, குடியேற்றக் கொள்கைகளைக் கைவிட்டது. இவ்வமைச்சரவை இங்கிலாந்-<noinclude></noinclude>
q157teoiudz80bxa4uyvh5xkbl2ad7n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/303
250
626950
1962157
1882900
2026-09-07T04:47:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|259|உலகப்போர்}}</noinclude>தின் குடியேற்றங்களுக்கு மட்டுமன்றி, ஏனைய பிற ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றங்களுக்கும் விடுதலை கிடைத்திட முனைப்புடன் பங்காற்றியது.
வல்லரசுகள் என்ற போர்வையில் இங்கிலாந்தும் பிரான்சும் திகழ்ந்தாலும், உலக அரங்கில் அவை தம் தனித் தன்மையினை இழந்தன. ஆனால், அமெரிக்காவும் உருசியாவும் வல்லரசு நாடுகளாகத் தம்மைப் பறைசாற்றிக் கொண்டன. சப்பானின் பொருளாதாரம் பெரிதும் சீர்குலைந்தது. எனினும், சப்பானியரின் வியத்தகு உழைப்பினாலும் அமெரிக்காவின் அரவணைப்பினாலும் அந்நாடு பொருளியலில் தேக்க நிலையினின்றும் மீளத் தொடங்கியது.
உலகில் அமைதியை நிலையாக உருவாக்கவும் நாடுகளிடையே ஒத்த கருத்தினை உருவாக்கவும் சான் பிரான்சிசுகோவில் (San Francisco) 50 நாடுகள் கலந்து கொண்டு, ஐக்கிய நாடுகள் ஒப்பந்த ஆவணத்தில் கையொப்பமிட்டன. இதன் விளைவாக, 1945 அக்டோபர் 24-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் நிறுவனம் (United Nations Organisation) தோற்றுவிக்கப்பட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 303
|bSize = 375
|cWidth = 162
|cHeight = 130
|oTop = 226
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|சான்பிரான்சிசுகோவில் நடந்த ஐக்கிய நாடுகள் முதல் கூட்டம்}}
அமெரிக்க ஐக்கிய நாடு குடியேற்றக் கொள்கையினை கைவிட்டுப் பிலிப்பைன்சுத் தீவுகளுக்குச் சுதந்திரம் வழங்கியது. உருசியாவின் பொதுவுடைமைக் கொள்கை ஏனைய நாடுகளில் பரவாதவாறு தடுக்க, அமெரிக்கா போரில் பாதிக்கப்பட்ட கிரீசு, துருக்கி போன்ற நாடுகளுக்கு ஏறத்தாழ 40 கோடி தாலர் (Dollar) உதவி செய்தது. அதே ஆண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்சல் திட்டத்தின் (Marshall Plan) மூலம் போரில் நலிவுற்ற பதினான்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 1400 கோடி தாலர் அந்நாடுகளின் மறுவாழ்வுப் பணிகளுக்காகக் கொடுத்து உதவியது.
வட அட்லாண்டிக்கு ஒப்பந்த நிறுவணம் (NATO) 1949-இல் உருவாக்கப்பட்டது. இதில் அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா இத்தாலி, இங்கிலாந்து, பிரான்சு, பெல்சியம், இலக்சம்பர்க்கு, நெதர்லாந்து, தென்மார்க்கு, ஐசுலாந்து, நார்வே, போர்ச்சுகல் ஆகிய 12 நாடுகள் சேர்ந்தன. பின்னர், துருக்கியும் கிரீசும் 1952-இலும், மேற்குச் செருமனி 1964-இலும், இசுபெயின் 1982-இதும் இந்த நிறுவனத்தில் சேர்ந்தன. இதன் தலைமை அலுவலகம் பெல்சியத்திலுள்ள பிரசல்சு (Brussels) என்னும் நகரத்திலுள்ளது. இதன் தலைமைப் பொறுப்பினை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.
ஆசிய நாடுகளில் உருசியாவின் பொதுவுடைமைச் செல்வாக்குப் பரவாமல் தடுத்திடத் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஒப்பந்த நிறுவனத்தை (South East Asian Treaty Organisation) அமெரிக்க ஐக்கிய நாடு ஏற்படுத்திக் கொண்டது. சான் பிரான்சிசுகோ அமைதி உடன்படிக்கையில் 1951-இல் சப்பான் கையெழுத்திட்டது. அதன்படி, கொரியாவின் மேலாதிக்க உரிமைகளைச் சப்பான் இழந்தது. ஆமில்டன் துறைமுகம் (Hamilton), கொயில்பார்ட்டு (Quelpart), தாகலெட்டு (Dagelet) ஆகிய பகுதிகளுடன், பர்மோசாவையும் (Farmosa) சப்பான் இழக்க நேர்ந்தது. அது சீனாவின் மீதிருந்த அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்தது.
அல்பேனியா (Albania), எத்தியோப்பியா (Ethiyopia) ஆகிய நாடுகளின் சுதந்திர அரசாங்கங்களை இத்தாலி ஏற்றுக் கொண்டது. இத்தாலியின் படைப்பலம் ஏறத்தாழ 2,50,000 படைவீரர்களைக் கொண்டதாகக் குறைக்கப்பட்டது. உருசியாவிற்கு 10 கோடி தாலர்களை (Dollar) நட்ட ஈட்டுத் தொகையாக அளித்திட இத்தாலி உடன்பட்டது.
போரில் 1943-இலிருந்து சிறப்பாகப் பங்காற்றியவர்கள் பிராங்ளின் உரூசுவெல்ட்டு, வின்சுடன் சர்ச்சில், இசுட்டாலின் போன்றவர்களே இவர்களுடன் துருமன் (Truman), அட்லி, சியாங்கே சேக்கு ஆகியோரும் பெரும்பணியாற்றி, போரில் நேச நாடுகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். போரில் இந்தியாவின் பங்கு கணிசமாகவே இருந்தது.<noinclude>
<b>வா.க. 5-17 அ</b></noinclude>
58dmtvhigacdawinywrezvmj2a1m5f1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/304
250
626951
1962158
1947226
2026-09-07T04:51:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகப்போர்|260|உலகம்}}</noinclude>போரில் இந்தியாவின் படைவீரர்கள் ஆசியப் போர் முனைகளில் நேச நாடுகளின் வெற்றிக்கு உறுதுணையாகப் போராடியதால் இறுதியில் இந்தியச் சுதந்திரத்திற்கு வழி பிறந்தது.
பாசிசுட்டுப் படையெடுப்பாளர்கள் 1941 சூன் 22-ஆம் நாள் முதல் 1945 மே 9-ஆம் நாள் வரை உருசியாவில் 1418 நாட்கள் போரிட்டுப் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளார்கள், போரின் போது 31,850 தொழில் துறைத் திட்ட நிலையங்கள், 98,000 கூட்டுப் பண்ணைகள், 1876 அரசுப் பண்ணைகள். 40,000 மருத்துவமனைகள், 84,000 நடுநிலைத் தொழிற்பயிற்சிப் பள்ளிகள், 43,000 நூலகங்கள், 60,00,000 கட்டடங்கள், 4100 இருப்புப்பாதை நிலையங்கள், 65,000 கி.மீ. நீளமுள்ள இருப்புப்பாதை வழிகள், 13,000 பாலங்கள் போன்றவற்றை தகர்த்து அழித்தனர். 1 கோடி 70 இலட்சம் கால்நடைகள், 2 கோடி பன்றிகள், 70 இலட்சம் குதிரைகள், 2 கோடி 70 இலட்சம் ஆடுகள் போன்ற வீட்டுவிலங்குகளைக் கொன்று குவிந்தனர்.
உருசியா இழந்த சொத்துகளின் மொத்த மதிப்பு 1941-ஆம் ஆண்டின் மதிப்பின் படி, 67,900 கோடி உரூபிள்கனாகும். பாசிச ஆட்சியினர் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ஏற்பட்ட போர்ச் செலவினங்களையும் சேர்த்துக் கொண்டால் போரின் மொத்த இழப்பு உருசியாவிற்கு மட்டும் ஏறத்தாழ 2,56,940 கோடி உரூபிள்களாகும்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொதுவுடைமை ஆதிக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியது. இதன் காரணமாக ஐரோப்பாவின் பாதிப்பகுதிகள் உருசிய மேலாதிக்கத்தின்கீழ் வந்தன. ஆசியாவில் மஞ்சூரியா உருசியவும் வடகொரியாவும் இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அக்குண்டுகள், மிக நுண்ணிய அணுக்கருவிகள் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் அமெரிக்காவிற்கு இணையான முறையில் உருசியா பெரிதும் முன்னேறிவிட்டது. இசுடாலின் 1953-இல் இறந்த பின்பு, உருசியக் குடியரசின் தலைவரான புல்கானின் (Bulganin) நாடுகளிடையே அமைதியான ஒற்றுமையின் சிறப்பினை உணர்ந்து செயற்பட்டார்.
அங்கேரி போர் நட்ட ஈட்டுத் தொகையாக உருசியாவிற்கு 20 கோடி தாலர்களையும், செக்கசுலோவாக்கியா மற்றும் யூகோசுலாவியா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிற்கும் 5 கோடி தாலர்களையும் அளித்தது. அங்கேரி வசமிருந்த திரான்சில்வேனியப் (Transylvenia) பகுதிகள் உருமேனியாவிற்கு அளிக்கப்பட்டன.
பல்கேரியாவின் படைப்பிரிவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. கிரீசுக்குப் போர் நட்ட ஈட்டுத் தொகையாக ஏறத்தாழ 4½ கோடி தாலர்களையும் யூகோசுலாவியாவிற்கு ஏறத்தாழ 2½ கோடி தாலர்களையும் அது அளித்தது.
உருமேனியா உருசியாவிற்கு ஏறத்தாழ 30 கோடி தாலர்களைப் போர் இழப்பீட்டுத் தொகையாக வழங்கியது. ஆசுத்திரியாவும் வியன்னாவும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஆசுத்திரியாவில் தேசிய அரசாங்கம் 1945-இல் உருவாக்கப்பட்டது.
அமெரிக்கா 1949-இல் ஏற்படுத்திக் கொண்ட வட-அட்லாண்டிக்கு ஒப்பந்தத்திற்கு இணையாகவும் எதிராகவும் உருசியா கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன், ‘வார்சா ஒப்பந்தத்தினை’ (The Warsaw Pact) ஏற்படுத்திக் கொண்டது. இதுவும் முழுமையான ஓர் இராணுவ உடன்படிக்கையேயாகும். இவ்வமைப்பில் கிழக்குச் செருமனி போலந்து, உருமேனியா, அங்கேரி ஆகிய நாடுகள் உருசியாவின் தலைமையினை ஏற்றுச் செயற்படத் தொடங்கின. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற போதிலும், அதன் பின்விளைவுகள் இன்றும் தொடர்ந்து உலக மக்களைப் பல்வேறு வழிகளில் பாதிப்புகளை உண்டாக்கி வருவது மறுக்கவியலாத வரலாற்று உண்மையாகும்.
{{Right|எம்.தே.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Chabra, H.K.,</b> Relations of Nations From 1914 to Present Times, Surject Publications, New Delhi, 1914.<br>
<b>Sellman, R.R..</b> The Second World War, Mathuen, 1981.
<section end="உலகப்போர்"/>
<section begin="உலகம்"/>
{{dhr}}
<b>உலகம்</b> என்பது பொதுப் பொருளில் ‘பிரபஞ்சம்’ மற்றும் அதன்கண் உள்ள உயிருள்ள, உயிரற்ற அனைத்துப் பொருள்களையும் குறிக்கும். இப்பொருளில் இது வான்வெளி, அண்டங்கள், கோளங்கள், விண் மீன்கள் முதலியவை அடங்கிய அனைத்துப் படைப்புகளையும் குறிக்கும்.
உலகம் என்பது வேறு சில பொருள்களிலும் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கென்றும் ஒரு தனி உலகம் உண்டு என்று சொல்வதுண்டு. இங்கு உலகம் என்பது ஒருவனுடைய சூழ்நிலையைக் குறிக்கும். குழந்தைக்குத் தாயின் மடியே தனியுலகம், அது மிகச் சிறியது. வயது செல்லச் செல்லக் குழந்தையின்<noinclude></noinclude>
1clh3791q2b5qa4fjumyt2nfsnnaavn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/305
250
626952
1962159
1882902
2026-09-07T04:58:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகம்|261|உலகம்}}</noinclude>உலகம் வளர்கிறது. இப்பொருளில் உலகத்தின் அளவு அவரவர் அறிவு வளர்ச்சியையும் வாழ்க்கையையும் பொறுத்து அமைகிறது.
உலகம் வேறொரு பொருளில் ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்த சான்றோர்களைக் குறிக்கும். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்னும் தொடர் இதனைச் சுட்டுகிறது. இச்சொல் உலக வழக்கினையும் குறிப்பிடும்.
மேலும், இலக்கியம், கலை போன்ற இயக்கங்களைக் குறிப்பிடும் பொழுது உலகம் என்ற சொல் அவற்றோடு இணைந்து வருவதுமுண்டு. இலக்கிய உலகம், அரசியல் உலகம், கலையுலகம், மாணவர் உலகம் முதலியன இவ்வாறே வழங்கப்படுகின்றன.
உலகம் பலவகைப்படும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஐத்தரேய உபநிடதம் மூன்று உலகங்களைச் சுட்டுகின்றது. அவை: நீரும் அதன் மேல் உள்ள சொர்க்கமும் அடங்கிய அம்பாசு (Ambas) என்னும் உலகம், வான்வெளியும் ஒளியுலகமுமாகிய மரீசி உலகம், நிலவுலகாகிய மார என்னும் உலகம் என்பன. பிருகத்தாரணீயக உபநிடதம் காற்று, வெளி, காந்தருவ, சூரிய-சந்திர, நட்சத்திர, இறை, இந்திர, பிரசாபதி, பிரம்ம உலகங்கள் என்று ஒன்பது உலகங்களைக் குறிப்பிடுகிறது. தைத்திரீய உபநிடதம் பூ உலகம், புவருலகம், சுவருவகம், மகருவகம், சனருலகம், தவ உலகம், சத்தியவுலகம் என்னும் ஏழுலகங்களைக் கூறுகிறது.
புராணங்கள் தைத்திரீய உபநிடதம் சொல்கிற ஏழுலகங்களை மேலுலகங்களாகவும், அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசதலம், மகாதலம், பாதலம் ஆகியவற்றைக் கீழுலகங்களாகவும் கூறி, உலகங்கள் பதினான்கு என்று விரிக்கின்றன.
சைவ சமய நூலாகிய சிவஞான பாடியம் மேற்சொன்ன பதினான்கு உலகங்களைச் சற்று வேறுபாட்டுடன் குறிப்பிடுகிறது, பூவுலகம் என்னும் நிலவுலகுக்குக்கீழ்க் காலாக்கினியருத்திர உலகும், கூர்மாண்டராச்சியுட்பட்ட 32 நரக உலகுகளும், ஆடகேசுரர் ஆட்சியுட்பட்ட ஆபாசம், பாதாளம், நிதலம் சுபத்திமான, மாதவுலகுகளும் உள்ளனவென்றும், நிலவுலகுக்கு மேல் வாயுமண்டலம், மேகமண்டலம், சந்திர மண்டலம், ஆதித்த மண்டலம் முதல் துருவ மண்டலம் வரை பரவிய புவருலகமும், இந்திரன் முதலியோர் வாழும் சுவருலகமும், மரீசி முதலிய முனிவர் வாழும் மகருவகமும், தென்புலத்தார் முதலியோர் வைகும் சவருலகமும், சனகன் முதலியோர் வைகும் தவவுலகமும், சத்தியவுலகமும், செங்கண்மாலுலகமும் உருத்திரனுலகமும் முறையே உள்ளன எனக்குறிப்பிடுகிறது.
இராமலிங்க அடிகள் ‘உலகெலாம்’ எனத் தொடங்கும் பெரிய புராணச் செய்யுள். உரையில் தத்துவங்களைப் பலவாறாகப் பகுத்து, அவற்றை ஒவ்வோர் உலகாக விரித்துக் கூறுகிறார்.
வேதாந்த நூல்கள் உணர்வு நிலைகள் பதினான்கையும் உலகங்களாகக் கூறுகின்றன. சான்றாக, கைவல்லியம் என்னும் நூலில் சந்தேகம் தெளிதல் பகுதியில் சுபேட்சை, விசாரணை, தநுமாநசி, சத்துவாபத்தி, அசம்பத்தி, பதார்த்த பாவனை, துரியம் என ஞான பூமிகள் ஏழென்றும், மீகசாக்கிரம், சாக்கிரம், மகாசாக்கிரம், சாக்கிர சொப்பனம், சொப்பனம், சொப்பன சாக்கிரம், சுழுத்தி என அஞ்ஞான பூமிகள் ஏழென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துப் பொருள்களும் அனைத்துயிர்களும் அடங்கிய உலகத்தின் தோற்றத்தைப் பற்றிப் பல வகைகளில் இலக்கியங்கள் விளக்குகின்றன. உண்மைகளுக்கெல்லாம் பேருண்மையாகவும், மையங்களுக்கெல்லாம் நடுவாகவும் உள்ள பிரசாபதி (Parajapati) என்பதிலிருந்து முதலில் பரமேசுதி (Paramesti) என்று சொல்லப்படும் நட்சத்திரக் கூட்டங்களும், அதிலிருந்து சூரியனும் அதன் முறைகளும், அதிலிருந்து நிலவுலகும், நிலவுலகிலிருந்து சந்திரனும் தோன்றின வென்று வேதங்கள் உலகத்தோற்றம் பற்றி ஐந்து நிலைகளில் விளக்குகின்றன.
பிறிதொரு முறையிலும் உலகத் தோற்றத்தை வேதங்கள் விளக்குகின்றன. ஆதித்தி முதலில் அனைத்துமாகத் திகழ்ந்தது. இது பெண் கோட்பாடு இதிலிருந்து தக்சன் என்னும் ஆண் கோட்பாடு எழுகிறது. இரண்டின் இணைப்பால் புருசன் (Purusha) தோன்றுகிறது. இது பிரசாபதி அல்லது விசுவகர்மன் எனப்படுகிறது. இதிலிருந்து உலகக்கருவாகிய இரணியகருப்பமும், இரணிய கருப்பத்திலிருந்து பிரமனும் தோன்ற பிரமா உலகைப் படைக்கிறான்.
அதர்வண வேதம், பிரமனிடத்திலிருந்து உரோகிதம் எனப்படும் உருத்திரனும், அதிலிருந்து ஆண்டவன் எனப்படும் எருதும், அதிலிருந்து காலமும், இறுதியில் காமமாகிய விருப்பமும் தோன்றி உலகமாக மாறுகின்றன என்கிறது.
வேதங்களின் இரண்டாம் பகுதிகளாகிய பிராமண இலக்கியங்களில் பிரசாபதி எண்ணற்ற வேள்விகளைச் செய்து, அனைத்து உலகங்களையும் படைத்ததாகச்<noinclude></noinclude>
9mer33j9q31pwr9sl346pjbtzgdmamy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/306
250
627115
1962160
1947228
2026-09-07T05:02:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உலகம்|262|உலக மக்கள் தொகை}}</noinclude>சொல்லப்பட்டுள்ளது. சுயம்பு, நாராயணன், பிரமன், அல்இருப்பு (Non- Being), நீர் முதலியன பிரசாபதிக்கு இணையாகக் கருதப்படுகின்றன.
உபநிடதங்களின் உண்மைப் பொருளாகிய பிரமத்திலிருந்து உலகம் வேறாகக் கருதப்படாமல் ஒன்றாகவே கருதப்படுகிறது. பிரமம் ‘நான் பலவாகப் பெருருவேனாக’ என்றெண்ணி, இவ்வுலகமாக மாறியது என உபநிடதங்கள் கூறுகின்றன. தைத்திரீய உபநிடதம் பிரமத்திடமிருந்து முதலில் வானவெளியும், பின்னர்க் காற்று, நெருப்பு, நீர், புவி, உணவு முதலியனவும் ஒன்றிலிருந்து ஒன்றாகப் படிமலர்ச்சி பெற்று வந்தன என்றும், உணவிலிருந்து விதையும் மனிதனும் ஏனைய உயிர்களும் வந்தன என்றும் உரைக்கிறது.
புராணங்களிலும் காப்பியங்களிலும் உலகின் தோற்றம் பின் வருமாறு கூறப்படுகிறது. முதலிலி பிரமமும், பின்னர் நீர் அல்லது இருள், இரணியகருப்பம் அல்லது புருடன், பிரசாபதி, தாமரை, பிரமாவின் எண்ணத்தில் தோன்றிய புதல்வர்கள், ஏனைய படைப்புகள் என்று ஒன்றிலிருந்து ஒன்றாக ஏழுநிலைகளில் உலகமாகி நின்றது.
தத்துவ முறைகளில் ஒன்றான உலகாயுதம், கண்ணுக்குப் புலனாகும் நீர், நெருப்பு, காற்று, புவி ஆகியவை பல நிலைகளில் இணைந்து இவ்வுலகமாக மாறியது என்று கூறுகிறது.
சமண, நியாய, வைசேடிகத் தத்துவங்கள் உலகம் அதன் மூலப் பொருள்களான பஞ்சபூதங்கள் எனப்படும் நீர், நெருப்பு, காற்று, வெளி, புவி ஆகியவற்றின் அணுக்கள் தம்முள் இணைந்து காலம், வெளி, மனம், ஆன்மா ஆகியவற்றின் துணையுடன் உலகமாகத் தோன்றியது என்கின்றன.
சாங்கியம் மற்றும் விசிட்டாத்வைதத் தத்துவங்கள் மூலப் பொருளாகிய பிரகிருதி மாயையிலிருந்து முதலில் மகத்து அல்லது புத்தியும், அதிலிருந்து அகங்காரமும், அகங்காரத்தின் ஒரு நிலையாகிய சத்துவ அகங்காரத்திலிருந்து மனம், ஐந்து தொழில் உறுப்புகள் (கன்மேந்திரியங்கள்) ஐந்து புலனுறுப்புகள் (ஞானேந்திரியங்கள்) முதலியனவும்; தாமச அகங்காரத்திலிருந்து ஐந்து தன்மாத்திரைகளும், அவை நான்கு நிலைகளில் ஒன்றுடன் ஏனையவை இணைவதால் ஐம்பெரும் பூதங்களும்; இராசச அலங்காரத்திலிருந்து செயற் கோட்பாடும் தோன்றுகின்றன என்றும், இறுதியில் ஐம்பெரும் பூதங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து உலகமாக மாறுகின்றன என்றும் தெரிவிக்கின்றன.
சைவ சமயத் தத்துவம் மூலப் பொருளாகிய சுத்த மாயையிலிருந்து நாதம், விந்து, சாதாக்கியம், சுத்தவித்தை ஈசுவரன், என்னும் ஐந்தும், சுத்தாசுத்த மாயையிலிருந்து காலம், நியதி, கலை, அராகம், வித்தை என்ற ஐந்தும், இவற்றுடன் புருடனைச் சேர்த்து ஏழு ஆன்மதத்துவங்களும்; பின்னர், அசுத்த மாயையிலிருந்து புத்தியும், புத்தியிலிருந்து அகங்காரமும், அகங்காரத்தின் மூன்று நிலைகளான வைகிருதம், தைசாசம், பூதாதி ஆகியவற்றிலிருந்து மனம், ஐந்து புலனுறுப்புகள், ஐந்து தொழில் உறுப்புகள், ஐந்து தன்மாத்திரைகள் ஆகியவையும் தோன்றுகின்றன. தன் மாத்திரைகள் தம்முள் ஒன்றுக்கொன்று இணைந்து ஐம்பெரும் பூதங்களை உண்டாக்க, அவை பின்னர் உலகமாக மாறுகிறது என்று கூறுகிறது.
உலகம் படைக்கப்படுவதன் நோக்கம் ஆன்மா தன் பழவினைகளின் பயன்களை நுகர்வதற்குரிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அதனை அதன் கட்டுகளிலிருந்து விடுவித்துத் தன் சுயநிலையைப் பெறவைப்பதே என்று கூறுவதில் அனைத்துமே ஒன்றுபட்டுள்ளன.
உலகம் சிறப்புப் பொருளில் மனிதர் வாழும் இந்நிலவுலகத்தையே குறிக்கும். இது உருண்டை வடிவானது. இது கிழக்கு, மேற்கு அரைக் கோளங்களாகவோ வடக்கு, தெற்கு அரைக் கோளங்களாகவோ பிரிக்கப்படும். இது ஆசியா ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசுத்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா என்னும் ஏழுகண்டங்கள் கொண்டது. இந்நிலவுலகின் பரப்பு 510 மிலியன் ச.கி.மீ. இதில் நிலப்பகுதி 149 மிலியன் ச.கி.மீ. ஆகவும், நீர்ப்பகுதி 361 மிலியன் ச.கி.மீ. ஆகவும் உள்ளன. இதன் சுற்றளவு நிலநடுக்கோட்டின் வழியே 40,076 கி.மீ. உம், துருவங்களின் வழியே 40,009 கி.மீ.உம் உள்ளது. இதன் விட்டம் நிலநடுக்கோட்டின் வழி 12,756 கி.மீ.; துருவங்களின் வழி 12,714 கி.மீ. இதன் எடை 5,976×10²⁴ கிராம்கள் (Grams) ஆகும். மக்கள் தொகை சுமார் 360 கோடி; மிக நீளமான ஆறு மிசிசிப்பி மிசௌரி (7,011 1/5 கி.மீ.); மிக உயரமான மலைச் சிகரம் இமயமலையிலுள்ள எவரெசுட்டு (8,708.4 மீ.)
தொல்காப்பியர் உலகத்தைக் காடுறையுலகம் மைவரையுலகம், தீம்புனலுலகம், பெருமணலுலகம் என முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்.{{Right|பி. ஆர். ந.}}
<section end="உலகம்"/>
<section begin="உலக மக்கள்தொகை"/>
{{dhr}}
<b>உலக மக்கள்தொகை</b>: உலகில் மனிதன் 600,000 முதல் 1,600,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினான் எனப்பல வல்லுநர்கள் கருதுகின்றனர். உலக<noinclude></noinclude>
az8265k6a62ogevlgrn0r2wpqqoe91s
பயனர்:Bharathblesson/test
2
645148
1962173
1961877
2026-09-07T07:08:44Z
Bharathblesson
15164
/* பட்டியல் */
1962173
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
|-
! colspan="5"|<b>ஞ, ஞா, ட, டா, த</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-826
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவநாதர்|தத்துவநாதர்]] 826-827
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசம்|தத்துவப் பிரகாசம்]] 827-827
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசர்|தத்துவப் பிரகாசர்]] 827-828
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ போதகர்|தத்துவ போதகர்]] 828-828
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவமசி|தத்துவமசி]] 828-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவராயர்|தத்துவராயர்]] 829-829
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ வரலாறு|தத்துவ வரலாறு]] 829-833
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ததீசி|ததீசி]] 833-833
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திரம்|தந்திரம்]] 833-833
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திவர்மன்|தந்திவர்மன்]] 833-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்து மாறன்|தந்து மாறன்]] 834-834
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை உரு|தந்தை உரு]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைத் தலைமை|தந்தைத் தலைமை]] 834-835
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைமை நிலை ஒப்புகை|தந்தைமை நிலை ஒப்புகை]] 835-836
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தையாட்சிக் குடும்பம்|தந்தையாட்சிக் குடும்பம்]] 836-837
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை வழியினர்|தந்தை வழியினர்]] 837-838
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்தி|தப்தி]] 838-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பிரின் பிரபு|தப்பிரின் பிரபு]] 839-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பெண்ணங்கள்|தப்பெண்ணங்கள்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்லா பழங்குடிகள்|தப்லா பழங்குடிகள்]] 840-843
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்ளின்|தப்ளின்]] 843-845
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-அக்குபரீ|தபகாத்து-இ-அக்குபரீ]] 845-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-நாசரீ|தபகாத்து-இ-நாசரீ]] 845-846
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபோய்|தபோய்]] 846-846
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்|தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்]] 846-846
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபதம்|தம்மபதம்]] 847-847
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபாலர்|தம்மபாலர்]] 847-848
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமயந்தி|தமயந்தி]] 848-849
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமனி மண்டபம்|தமனி மண்டபம்]] 849-849
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாங்கு|தமாங்கு]] 849-849
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு, முதலாம்|தமாசுகசு, முதலாம்]] 849-849
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு (நகர்)|தமாசுகசு (நகர்)]] 849-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்|தமிழ்]] 851-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை|தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை]] 851-853
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்க்கலை மன்றம், சென்னை|தமிழ்க்கலை மன்றம், சென்னை]] 853-855
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்ச் சங்கங்கள்|தமிழ்ச் சங்கங்கள்]] 855-859
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்]] 860-922
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு|தமிழ்நாடு]] 923-972
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு மீன்வளம்|தமிழ்நாடு மீன்வளம்]] 972-975
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம்|தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம்]] 975-979
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்|தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]] 979-980
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் நாவலர் சரிதை|தமிழ் நாவலர் சரிதை]] 980-980
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நெறி விளக்கம்|தமிழ்நெறி விளக்கம்]] 980-980
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்ப் பல்கலைக் கழகம்|தமிழ்ப் பல்கலைக் கழகம்]] 980-985
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் முத்தரையர் கோவை|தமிழ் முத்தரையர் கோவை]] 985-985
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை|தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை]] 985-986
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழகக் கட்சிகள்|தமிழகக் கட்சிகள்]] 986-991
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழகம்|தமிழகம்]] 992-992
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழக மாநிலத் திட்டக் குழு|தமிழக மாநிலத் திட்டக் குழு]] 992-994
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழரசி குறவஞ்சி|தமிழரசி குறவஞ்சி]] 994-994
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழி|தமிழி]] 994-996
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழிசைச் சங்கம்|தமிழிசைச் சங்கம்]] 996-999
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தயர், இரெசினால்டு எட்வர்டு ஆரி|தயர், இரெசினால்டு எட்வர்டு ஆரி]] 999-999
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தயாக்குகள்|தயாக்குகள்]] 999-1002
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தயாசியன் தொழிற்கூடம்|தயாசியன் தொழிற்கூடம்]] 1002-1002
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தயால்பாகுக்கல்வி நிறுவனம்,|தயால்பாகுக்கல்வி நிறுவனம்,]] 1002-1002
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தயானந்த சரசுவதி|தயானந்த சரசுவதி]] 1002-1003
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தயானா|தயானா]] 1003-1004
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தர்க்கீம் ஏமீல்|தர்க்கீம் ஏமீல்]] 1004-1005
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தர்கோ, ஆன் இராபர்ட்டு,|தர்கோ, ஆன் இராபர்ட்டு,]] 1005-1006
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தர்சுடன், எட்கார்,|தர்சுடன், எட்கார்,]] 1006-1007
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தர்பங்கா|தர்பங்கா]] 1007-1008
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தர்ன்வால்டு, இரிச்சர்டு|தர்ன்வால்டு, இரிச்சர்டு]] 1008-1008
{{Multicol-break}}
{{Multicol-end}}
1m25knvpx9uaixjzok8ty0i5vxrm1wt
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5
4
651574
1962161
1962028
2026-09-07T05:37:58Z
Iswaryalenin
9500
/* இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் */
1962161
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் ==
=== இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1951 march 18-TVA PRL 0003725-derivative-சிறுகதை-மனிதமந்தை.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1953 Jan 14-TVA PRL 0001827-derivative-சிறுகதை-ரொட்டி-தஞ்சைவீழ்ச்சி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]] {{tick}}
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]] {{tick}}
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்-]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]] {{tick}}
#*நூல் வடிவில் ஒரு பத்தி இல்லை. இதழ் வடிவில், முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]] - இதனை லீலா சுரேஷ் செய்து முடிப்பார்.
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]] {{tick}}
#* கண்டெடுக்கப்பட்ட இதழ் வடிவில், ஒரு பக்கம் தெளிவாக இல்லை.
# [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1951 feb 04-TVA PRL 0003720-derivative-சிறுகதை-கருப்பண்ணசாமி.pdf|இதழ் வடிவம் - கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!]]
# [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]]
# [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]]
# [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]]
# [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
0hwnki1gbu3i7u381gqbae5ljt0jscj
விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்
4
652602
1962137
1962112
2026-09-07T02:35:17Z
Saranya V R
14232
1962137
wikitext
text/x-wiki
{| class="wikitable"
! !! தலைப்பு !! காலம் !! இதழ் !! குறிப்பு
|-
| 1 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு || தீபாஅருள்
|-
| 2 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 3 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 4 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 5 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 6 || கிருஷ்ண-லீலா || 1945 || || இராதை
|-
| 7 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு || N
|-
| 8 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு || இராதை
|-
| 9 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு || இராதை
|-
| 10 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு || சரண்யா
|-
| 11 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு || சரண்யா
|-
| 12 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு || சரண்யா
|-
| 13 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு || சரண்யா
|-
| 14 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு || சரண்யா
|-
| 15 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு || இராதை
|-
| 16 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு || இராதை
|-
| 17 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு || N
|-
| 18 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு || N
|-
| 19 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு || N
|-
| 20 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு || இராதை
|-
| 21 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு || N
|-
| 22 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு || N
|-
| 23 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு || இராதை
|-
| 24 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு || இராதை
|-
| 25 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு || N
|-
| 26 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு || N
|-
| 27 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு || இராதை
|-
| 28 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு || இராதை
|-
| 29 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு || N
|-
| 30 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு || N
|-
| 31 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு || N
|-
| 32 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 33 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 34 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு || இராதை
|-
| 35 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 36 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 37 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 38 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 39 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 40 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு || N
|-
| 41 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு || N
|-
| 42 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு || N
|-
| 43 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு || N
|-
| 44 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு || N
|-
| 45 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு || இராதை
|-
| 46 || பலி || 29.01.1956 || திராவிடநாடு || N
|-
| 47 || கடவுளின் கவலை || || || N
|-
| 48 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 49 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 50 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 51 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு || இரா. நித்யா
|-
| 52 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி || மு. மைதிலி
|-
| 53 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி || வா. காருண்யா
|-
| 54 || பொங்கல் பரிசு || 14.01.1966 || காஞ்சி || N
|-
| 55 || தவளையும் மனிதனும் || || || N
|}
sn73jlyn5ghzoovl100u2v7i0mgyj5c
1962138
1962137
2026-09-07T02:37:50Z
Saranya V R
14232
1962138
wikitext
text/x-wiki
{| class="wikitable"
! !! தலைப்பு !! காலம் !! இதழ் !! குறிப்பு
|-
| 1 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு || தீபாஅருள்
|-
| 2 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 3 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 4 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 5 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 6 || கிருஷ்ண-லீலா || 1945 || || இராதை
|-
| 7 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு || N
|-
| 8 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு || இராதை
|-
| 9 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு || இராதை
|-
| 10 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு || சரண்யா
|-
| 11 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு || சரண்யா
|-
| 12 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு || சரண்யா
|-
| 13 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு || சரண்யா
|-
| 14 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு || சரண்யா
|-
| 15 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு || இராதை
|-
| 16 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு || இராதை
|-
| 17 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு || N
|-
| 18 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு || N
|-
| 19 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு || N
|-
| 20 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு || இராதை
|-
| 21 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு || N
|-
| 22 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு || N
|-
| 23 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு || இராதை
|-
| 24 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு || இராதை
|-
| 25 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு || N
|-
| 26 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு || N
|-
| 27 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு || இராதை
|-
| 28 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு || இராதை
|-
| 29 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு || N
|-
| 30 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு || N
|-
| 31 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு || N
|-
| 32 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 33 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 34 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு || இராதை
|-
| 35 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 36 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 37 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 38 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 39 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 40 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு || சுபாஷினி
|-
| 41 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு || சுபாஷினி
|-
| 42 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு || சுபாஷினி
|-
| 43 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு || சுபாஷினி
|-
| 44 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு || சுபாஷினி
|-
| 45 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு || இராதை
|-
| 46 || பலி || 29.01.1956 || திராவிடநாடு || N
|-
| 47 || கடவுளின் கவலை || || || N
|-
| 48 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 49 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 50 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 51 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு || இரா. நித்யா
|-
| 52 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி || மு. மைதிலி
|-
| 53 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி || வா. காருண்யா
|-
| 54 || பொங்கல் பரிசு || 14.01.1966 || காஞ்சி || N
|-
| 55 || தவளையும் மனிதனும் || || || N
|}
c6hpjb380lownrb42jam89z2xabyt8h
1962139
1962138
2026-09-07T02:40:11Z
Saranya V R
14232
1962139
wikitext
text/x-wiki
{| class="wikitable"
! !! தலைப்பு !! காலம் !! இதழ் !! குறிப்பு
|-
| 1 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு || தீபாஅருள்
|-
| 2 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 3 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 4 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 5 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு || தீபாஅருள்
|-
| 6 || கிருஷ்ண-லீலா || 1945 || || இராதை
|-
| 7 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு || N
|-
| 8 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு || இராதை
|-
| 9 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு || இராதை
|-
| 10 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு || சரண்யா
|-
| 11 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு || சரண்யா
|-
| 12 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு || சரண்யா
|-
| 13 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு || சரண்யா
|-
| 14 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு || சரண்யா
|-
| 15 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு || இராதை
|-
| 16 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு || இராதை
|-
| 17 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு || N
|-
| 18 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு || N
|-
| 19 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு || N
|-
| 20 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு || இராதை
|-
| 21 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு || N
|-
| 22 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு || N
|-
| 23 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு || இராதை
|-
| 24 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு || இராதை
|-
| 25 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு || N
|-
| 26 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு || N
|-
| 27 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு || இராதை
|-
| 28 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு || இராதை
|-
| 29 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு || N
|-
| 30 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு || N
|-
| 31 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு || N
|-
| 32 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 33 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 34 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு || இராதை
|-
| 35 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 36 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 37 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 38 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 39 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு || ஐஸ்வர்யா லெனின்
|-
| 40 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு || சுபாஷினி
|-
| 41 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு || சுபாஷினி
|-
| 42 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு || சுபாஷினி
|-
| 43 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு || சுபாஷினி
|-
| 44 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு || சுபாஷினி
|-
| 45 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு || இராதை
|-
| 46 || பலி || 29.01.1956 || திராவிடநாடு || இராபியா
|-
| 47 || கடவுளின் கவலை || || || இராபியா
|-
| 48 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு || இராபியா
|-
| 49 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு || இராபியா
|-
| 50 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு || இராபியா
|-
| 51 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு || இரா. நித்யா
|-
| 52 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி || மு. மைதிலி
|-
| 53 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி || வா. காருண்யா
|-
| 54 || பொங்கல் பரிசு || 14.01.1966 || காஞ்சி || N
|-
| 55 || தவளையும் மனிதனும் || || || N
|}
17u7p9ybf75aozz58p9u1rhnct0btfa
பக்கம்:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf/1
250
652626
1962141
1961064
2026-09-07T03:21:36Z
Booradleyp1
1964
1962141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|2|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}}
{{rule}}{{rule}}</noinclude>
{{c|<b>{{box|{{box|padding=13px|{{x-larger|மதுரைக்கு டிக்கட் இல்லை!</b><br> பரதன் }}}}}}}}
“கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலைவரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவள் வேறு, வீட்டிலே உட்கார்ந்துகொண்டு, அது வேண்டும் இது வேண்டும், அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார், என்று இரவிலே ஈட்டியால் குத்தவேண்டும் போலிருக்கு. இந்த வேதனையை நான் படவேண்டுமாம்; இதற்கு வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள். நான் கெட்ட கேட்டுக்குக் கலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காலையிலே மட்டும் இருக்கிறது.
“டே! கழுதே! தடிப்பயலே! முகத்தைப் பார்! அழுமூஞ்சி! வேலை செய்வதென்றால் ஏண்டா இப்படி மூக்கால் அழுகிறாய். முள்ளங்கிப் பத்தைபோல வாங்கவில்லையா பணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! அன்னக்காவடியாக இருக்கும்போதே மண்டைக்கர்வம் இப்படி இருக்கிறது இதுகளுக்கு” காலையிலே நடக்கிறது இந்த அர்ச்சனை. இரவிலேயாவது, எதாவது மனக்கோட்டை கட்டியபடி இப்போது காலந்தள்ளமுடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப் பெற்ற யமன்கள்! கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக் காட்சிதானே இருந்து தீரும். பாஷையிலே வித்யாசம் இருக்கும். ஆனால், தொல்லை, தொல்லைதானே! எந்த உருவிலே இருந்தால் என்ன?
எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார். வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசார கீதம் பாடுவாள். அவள் ஏசும்போதாவது, கோபம் வரும், ஒரு சமயமில்லாவிட்டால் வேறோர் சமயம்.,விறைத்துப் பார்க்கலாம், முணுமுணுக்கலாம், சாக்கிட்டுத் திட்டலாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள், பக்கத்திலே படுத்துக்கொண்டு, உடல் உரசும்போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுகதுக்கத்துக்குப் பாத்யப்பட்டவள். நம்மைக் கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன்; அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவதுபோல, நவரத்னகண்டியல்ல—என்றெல்லாம் தோன்றும். ஆகவே, அவளிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. காலை வேளையிலே எஜமானனைப் பார்த்ததுபோலக் கடுமையாகப் பார்க்கவும் முடியாது. தவறிப் பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்திலே புரளும். பிறகு, நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி, வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து, முன்தொகையாக முத்தம் பெற்று, பெருமூச்சுடன் கிடக்கவேண்டும். காலையிலே, அந்தக் கடின சித்தம் படைத்தோன் அடே கழுதே! என்று ஏசினானே, அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக்கூடியதாகத் தோன்றும், அர்த்த ராத்திரியிலே அவள், “ஆமாம்! நான் கேட்டால் வாங்கித் தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?” என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் கோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்கமுடியாத தொல்லையாக இருக்கும்.
அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்ட பலன் என்ன? நான் ஒரு ஏழை! பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்துகொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்.........”
பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை இருந்தபோது இதுபோலக் கூறிவந்தான். ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்துவிடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது! ஆஸ்ரமத்தை மாற்றிவிடவேண்டிய அவசியமும் பிறந்தது. “என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடிபோடுவதைப் பார்க்கவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோதுகூட அவர்கள் மனச்சாந்தியில்லாமலே இறக்கவேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் என் மனக்குறை ஏற்படும்படி நடந்துகொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்துவிட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒரு கட்டை. என்னமோ அவளைத் தொட்டுத் தாலி கட்டுகிற வேளை, பகவான் கண்திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீரட்டுமே.” கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால்தான் என்பதை மதுரை இதுபோலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது, அவன் கூறியதிலே. ஆனால், அவன் பிரம்மச்சரியத்தை விட்டுக் கிரஹஸ்தாஸ்ரமத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக் காரணம், பெற்றோரின் பெருமூச்சு மட்டுமல்ல, பெரியநாயகியின் புன்சிரிப்புந்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை! அவன்மட்டுதந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரியநாயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதை வெளியே சொல்லத்தான் மாட்டார்கள்!!
“மதுரை! உங்க வீட்டுத் தோட்டத்திலே மருக்கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு”
“ஏன்! சாமி கோயிலுக்கா?”
“அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை”
“எந்த அம்மன் சன்னதி?”
“அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத்தான். கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை”
“திருமலை! ஏது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்டமாட்டேபோலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா, எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டுபோயிடுவே போலிருக்கே”
“ஆமாம்! நாம்ம ராஜா சர்! வைரமாலையும், கை நிறைய வளையலுமா வாங்கித்தரப்போறோம்? என்னமோ பாடம், நம்மைக் கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நம்ப சக்தியானுசாரம் எதுவோ செய்யவேண்டியது தானே. நான் மட்டுந்தானா? நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன், அப்போ நீயும் அப்படித்தான்.”
“நானா? நான்தான் கலியாணமே செய்துகொள்ளப் போறதில்லையே!”
“வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப்பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சிவிட்டுக், கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்தச் சீமையிலேயும் நடப்பதுதான் இது, நீ மட்டும் என்ன?”
திருமலை, மதுரையின் நண்பன், இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்துவந்தான் மதுரைக்கு. ஆனால், வீட்டுக்குப்போனதும், திருமலை, மதுரையாகிவிடுவான். அதாவது சௌபாக்கியம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை “ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்துதானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த ரோதனை இல்லை” என்று கூறுவான்.
“பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்துகொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்-<noinclude></noinclude>
6r8yx49gfoejtvae8xd491hrdocnfc0
1962146
1962141
2026-09-07T03:42:21Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1962146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|2|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}}
{{rule}}{{rule}}</noinclude>
{{c|<b>{{box|{{box|padding=13px|{{x-larger|மதுரைக்கு டிக்கட் இல்லை!</b><br> பரதன் }}}}}}}}
“கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலைவரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவள் வேறு, வீட்டிலே உட்கார்ந்துகொண்டு, அது வேண்டும் இது வேண்டும், அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார், என்று இரவிலே ஈட்டியால் குத்தவேண்டும் போலிருக்கு. இந்த வேதனையை நான் படவேண்டுமாம்; இதற்கு வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள். நான் கெட்ட கேட்டுக்குக் கலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காலையிலே மட்டும் இருக்கிறது.
“டே! கழுதே! தடிப்பயலே! முகத்தைப் பார்! அழுமூஞ்சி! வேலை செய்வதென்றால் ஏண்டா இப்படி மூக்கால் அழுகிறாய். முள்ளங்கிப் பத்தைபோல வாங்கவில்லையா பணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! அன்னக்காவடியாக இருக்கும்போதே மண்டைக்கர்வம் இப்படி இருக்கிறது இதுகளுக்கு” காலையிலே நடக்கிறது இந்த அர்ச்சனை. இரவிலேயாவது, எதாவது மனக்கோட்டை கட்டியபடி இப்போது காலந்தள்ளமுடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப் பெற்ற யமன்கள்! கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக் காட்சிதானே இருந்து தீரும். பாஷையிலே வித்யாசம் இருக்கும். ஆனால், தொல்லை, தொல்லைதானே! எந்த உருவிலே இருந்தால் என்ன?
எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார். வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசார கீதம் பாடுவாள். அவள் ஏசும்போதாவது, கோபம் வரும், ஒரு சமயமில்லாவிட்டால் வேறோர் சமயம்.,விறைத்துப் பார்க்கலாம், முணுமுணுக்கலாம், சாக்கிட்டுத் திட்டலாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள், பக்கத்திலே படுத்துக்கொண்டு, உடல் உரசும்போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுகதுக்கத்துக்குப் பாத்யப்பட்டவள். நம்மைக் கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன்; அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவதுபோல, நவரத்னகண்டியல்ல—என்றெல்லாம் தோன்றும். ஆகவே, அவளிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. காலை வேளையிலே எஜமானனைப் பார்த்ததுபோலக் கடுமையாகப் பார்க்கவும் முடியாது. தவறிப் பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்திலே புரளும். பிறகு, நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி, வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து, முன்தொகையாக முத்தம் பெற்று, பெருமூச்சுடன் கிடக்கவேண்டும். காலையிலே, அந்தக் கடின சித்தம் படைத்தோன் அடே கழுதே! என்று ஏசினானே, அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக்கூடியதாகத் தோன்றும், அர்த்த ராத்திரியிலே அவள், “ஆமாம்! நான் கேட்டால் வாங்கித் தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?” என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் கோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்கமுடியாத தொல்லையாக இருக்கும்.
அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்ட பலன் என்ன? நான் ஒரு ஏழை! பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்துகொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்.........”
பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை இருந்தபோது இதுபோலக் கூறிவந்தான். ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்துவிடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது! ஆஸ்ரமத்தை மாற்றிவிடவேண்டிய அவசியமும் பிறந்தது. “என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடிபோடுவதைப் பார்க்கவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோதுகூட அவர்கள் மனச்சாந்தியில்லாமலே இறக்கவேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் என் மனக்குறை ஏற்படும்படி நடந்துகொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்துவிட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒரு கட்டை. என்னமோ அவளைத் தொட்டுத் தாலி கட்டுகிற வேளை, பகவான் கண்திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீரட்டுமே.” கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால்தான் என்பதை மதுரை இதுபோலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது, அவன் கூறியதிலே. ஆனால், அவன் பிரம்மச்சரியத்தை விட்டுக் கிரஹஸ்தாஸ்ரமத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக் காரணம், பெற்றோரின் பெருமூச்சு மட்டுமல்ல, பெரியநாயகியின் புன்சிரிப்புந்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை! அவன்மட்டுதந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரியநாயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதை வெளியே சொல்லத்தான் மாட்டார்கள்!!
“மதுரை! உங்க வீட்டுத் தோட்டத்திலே மருக்கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு”
“ஏன்! சாமி கோயிலுக்கா?”
“அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை”
“எந்த அம்மன் சன்னதி?”
“அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத்தான். கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை”
“திருமலை! ஏது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்டமாட்டேபோலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா, எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டுபோயிடுவே போலிருக்கே”
“ஆமாம்! நாம்ம ராஜா சர்! வைரமாலையும், கை நிறைய வளையலுமா வாங்கித்தரப்போறோம்? என்னமோ பாடம், நம்மைக் கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நம்ப சக்தியானுசாரம் எதுவோ செய்யவேண்டியது தானே. நான் மட்டுந்தானா? நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன், அப்போ நீயும் அப்படித்தான்.”
“நானா? நான்தான் கலியாணமே செய்துகொள்ளப் போறதில்லையே!”
“வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப்பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சிவிட்டுக், கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்தச் சீமையிலேயும் நடப்பதுதான் இது, நீ மட்டும் என்ன?”
திருமலை, மதுரையின் நண்பன், இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்துவந்தான் மதுரைக்கு. ஆனால், வீட்டுக்குப்போனதும், திருமலை, மதுரையாகிவிடுவான். அதாவது சௌபாக்கியம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை “ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்துதானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த ரோதனை இல்லை” என்று கூறுவான்.
“பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்துகொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்-<noinclude></noinclude>
dmjcpj8trf43nf1bh8iuwpmtugf3ebs
பக்கம்:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf/2
250
652627
1962142
1961065
2026-09-07T03:34:19Z
Booradleyp1
1964
1962142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|4–3–45|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|11}}
{{rule}}{{rule}}</noinclude>டாட்டி என்ன, புலியா கரடியா? இப்படித் தான் சிலபேர், எனக்குக் கலியாணமே வேண்டாம்; கலியாணம் தொல்லை என்று பேசுவார்கள். எதற்கு? கண்டபடி ஆடலாமென்றுதான். கலியாணம் செய்துகொண்டு குடும்பத்தை நடத்தாவிட்டா, கையிலே வருகிற பணத்தைக் கண்டபடி செலவுசெய்துவிட்டு, உடம்பைக் கெடுத்துக் கொண்டு உதவாக்கரையாக வேண்டியதுதானே. இல்லை, நான்தான் கேட்கிறேன். என்னமோ பாவம் காலையிலே போறார் வேலைக்கு, சாயங்காலம் வருகிறார், அப்பான்னு அலுத்து வீட்டுக்கு வந்ததும், தாகத்துக்கு வேணுமான்னு கேட்க ஒரு சம்சாரம் வேண்டாமா? நாலுநாளு நோவுன்னு படுத்தாரு, பக்கக்கிலே இருந்து பிடிக்க எடுக்க ஒருத்தி வேண்டாமா? அதுக பாவம், இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்கு. அதுங்க சாவதற்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டுப் போக வேணாமா? அந்த ஆணுக்கு ஏன் இதெல்லாம் தோணலையாம்? நல்ல மனுஷரு அவரு. அவர் சம்பாரிச்சி அவரே சாப்பிடவேணுமாம், பெண்டாட்டி கூடாது. ஏன்? அவளுக்குச் சோறுபோட வேணுமே” என்று சௌபாக்கியம், மள மளவென்று பேசுவாள். மறுமாலை, திருமலை இந்தத் திவ்யப்பிரபந்தத்தை மதுரைக்குச் சமர்ப்பிப்பான். ஆறணா பத்தணாவாகி, ஒரு ரூபாயுமாகிவிட்டது. ஆறணா கிடைத்தபோது, "திருமலை! உன் வீட்டுக்காரம்மா வாயாடி போலிருக்கு" என்று கூறின மதுரை, ஒரு ரூபாயான சமயத்திலே அதே பிரபந்தத்துக்கு “உன் சம்சாரம் சொல்வதுபோலத்தான் எல்லோரும் சொல்லுவாங்க” என்று சாந்தமாகப் பதில் கூறினான். கூலியும் உயர்ந்தது, அதே சமயத்திலே, பெரியநாயகியின் புன்சிரிப்பும் கிடைத்தது. அவள் அவனுடைய பிரம்மச்சரியத்தைக் கலைக்க அச்சிரிப்பை ஏவவில்லை. அவனைக் கண்டாள், அக்கா அவனைப்பற்றிச் சொன்னதை எண்ணினாள், சிரித்தாள்! அது அவனுடைய விரதத்தைக் குலைத்துவிட்டது. பெரியநாயகி, சௌபாக்கியத்தின் தங்கை!
கிரஹஸ்தாஸ்ரமத்திலே புகுந்தான், மதுரை. பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க வேண்டியதற்கு எவ்வளவு பலமான காரணம் அவனுக்குத் தோன்றிற்றோ, அவ்வளவு காரணம் தோன்றிற்று இந்தப் புது ஆஸ்ரமத்துக்கும்!
வீடுன்னு இருந்தா அதிலே நமக்குன்னு ஒரு சம்சாரம் உலாவுனாத்தான் களையா இருக்கு. ஒண்டிக்கட்டையாக எத்தனை காலந்தான் இருந்தோம், என்ன பலன்! வீட்டுக்குள்ளே நுழைகிறபோதே பெரியநாயகி நம்மைப் பார்த்து, வெந்நீர் வேணுங்களா? என்று கேட்டவுடனே, காலையெல்லாம் பட்ட கஷ்டமத்தனையும் காற்றாப் பறந்து போயிடுது. என்னமோ உழைக்கிறோம், பெரியநாயகி அன்போடு சாப்பாடு போட்டு, காலையிலே செய்த கறியிலே நமக்குன்னு கொஞ்சம் எடுத்துவைத்திருந்து இரவிலே போடுவதும், இன்னும் கொஞ்சம், ஒரே ஒரு பிடி, என்று உபசரிப்பதும், என்னாங்க! எவ்வளவு பாடு உங்களுக்கு? வயிறாரச் சாப்பிடவேண்டாமா? எல்லாம் உடலிலே பலம் இருந்தாத்தானே என்று கனிவாகப் பேசும்போதும், வரவரத் துரும்பாக இளைத்துப் போறிங்க என்று வைத்தியராகும்போதும், தலைவலிக்குத் தைலம் தடவும்போதும், அடடா! அது ஒரு தனி இன்பமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு, எவ்வளவு கஷ்டந்தான் இருக்கட்டும், வீட்டிலே ஒரு மனைவி இருந்தாலே, அது ஒரு சந்தோஷம் தானே!—என்று மதுரை எண்ணிக் களித்தான். பெரிய நாயகி, தாயானதும், அவனுடைய சந்தோஷம் அதிகரித்தது. இரண்டு குழந்தைகளானபோதும் சந்தோஷமாகத் தான் இருந்தது. “அவன் எங்கே? சின்னவனை ஜாக்ரதையாகக் கவனி! ஜலதோஷம்போல இருக்கே” என்று சொல்லுவான் மதுரை, பூரிப்பு தழுவிய பொறுப்புடன். நாலு குழந்தைகளாகிவிட்டன. சந்தோஷம் சஞ்சலத்தைப் பெற்றுவிட்டது.
“அடடா! காச்சுமூச்சுன்னு, ஏன் இதுகள் இப்படிக் காக்காயாக் கத்துதுங்க?”
“குழந்தைகள் இருந்தா அழாமே இருக்குமா?”
“குழந்தைகள்! மகா குழந்தைகள்! கோட்டான்கள் மாதிரி கூவி உயிரை வாங்குதுங்க”
“இந்தப் பாவி வயிற்றிலே வந்து பிறந்துதுங்களே, அதுகள் இப்படித்தான் சீரழியும். அப்பாப்பா! குழந்தைகளை இப்படி அலற அடிக்கக்கூடாது”
கிருஹஸ்தாஸ்ரமத்திலே, விசாரம் குடி புகுந்தது. குடும்பம் வளர்ந்தது! கூலி வளரவில்லை. கோபம் பெருகிற்று மதுரைக்கு. பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தைவிட்டு விலகியது தவறு என்று தோன்றிற்று. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனான பிறகு, பழைய ஆஸ்ரமத்திலே பாசம் வைத்துப் பயன் என்ன?
வைசூரியின் பிரவேசத்தால், மதுரைக்கு மூன்றாம் ஆஸ்ரமம் சித்தியாயிற்று. பெரியநாயகி வைசூரிக்குப் பலியானாள். நாலு குழந்தைகள்! நாரும் நரம்புமாகப் பெற்றோர்கள். இந்நிலையிலே, முதலாளியிடம் சண்டை! வேலை போயிற்று! கிருஹஸ்தாஸ்ரமத்தின் முழு விஷயமும் அவனுடைய உள்ளத்திலே புகுந்தது. உருமாறினான். உள்ளமும் மாறிவிட்டது. வானப்பிரஸ்தம் புகுந்தான் — அதாவது திருமலையிடம், குழந்தைகளை அடைக்கலமாக்கினான்! பெற்றோர்களை ஈசனிடம் ஒப்படைத்தான். கங்காணி கனகசபையின் காலைக் கும்பிட்டுக் கூலி வேலை பெற்று, ரப்பர் காட்டுக்குப் போனான்! பர்மாவிலே, பாடுபட்டான்; குடும்பம் இல்லை, வானப்பிரஸ்தாஸ்ரமம்! அது ஓரளவுக்குத் திருப்தி தந்தது. வேலை செய்வான். கிடைப்பதை உண்பான்! கை, தலையணை, உறக்கத்துக்குப் பதில் ஏக்கம்! இந்நிலையிலே சில ஆண்டுகள் இருந்தான். வானப்பிரஸ்தம், குடும்பத்தை ஏற்று நடத்தவேண்டிய பொறுப்பிலிருந்து விலகிய நிலைமை, அதிகநாள் நீடிக்கவில்லை. மூத்த பையன் முடிச்சவிழ்த்தான், மூன்று மாதம் தண்டனை! இரண்டாவது பையன் இன்ன இடம் போனானென்று தெரியவில்லை, எவனோ ஜாலவித்தைக்காரன் வந்தான் அவனோடு ஓடிவிட்டான். மூன்றாவது பெண்! அது, மூன்றேநாள் ஜுரத்திலே, போய்விட்டது. நாலாவது பையன்; அவன் தோட்டத்துக்கிணற்றிலே தவறி விழுந்துவிட்டான். அடுத்தடுத்துக் கிடைத்தன இத்தபால்கள். வானப்பிரஸ்தத்திலே இருந்த மதுரையின், துக்கம் சம்பூர்ணமாக, அவனுடைய பெற்றோர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்றோர் தபாலும் கிடைத்தது. உடனே, அவன் ரப்பர் தோட்டவேலையையும் விட்டுவிட்டான். அலைந்தான்! அலைந்தான்! ஐயா கொஞ்சம் சோறு என்று கேட்டுப் பார்த்தான்! எச்சில் இலைகளிடம் உறவுகொண்டான்! ஆண்டி சிலரின் நேசம் பெற்றான். காவி அணிந்தான். நீறு பூசினான்! கஞ்சாவுடன் கொஞ்சினான். சன்யாஸ ஆஸ்ரமத்திலே பிரவேசித்தான். வேலைகிடையாது! கூலி கேட்கத் தேவையில்லை! குடும்பம் இல்லை, எனவே பொறுப்பு கிடையாது! கிடைத்தால் புசிப்பது! கிடைக்குமட்டும் பஜிப்பது!! இந்தச் சன்யாச ஆஸ்ரமத்திலே, வானப்பிரஸ்த வாட்டமோ கிருஹஸ்தாஸ்ரமக் கஷ்டமோ இல்லை! அது மட்டுமா! பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தின் தனிமையும் இதிலே இல்லை! சன்யாசி மதுரைக்குச் சன்யாசினி ஒருவளும் கிட்டிவிட்டாள்! அவளுக்கும் "அரோகரா” கூறத் தெரியும் இவன்போலவே!! ஆகவே இவனால்தான் பிழைத்தாக வேண்டுமென்ற நிலை இல்லை அவளுக்கு. ஆனால் அவளுக்கு ஒரு "அவன்" தேவை! சன்யாஸ் ஆஸ்ரமத்திலே, மதுரை சஞ்சலமின்றி இருந்து வந்தான்.
{{***|4|4em|char=✽}}
இந்து மார்க்கத்திலே உள்ள இலட்சிய எழில்கள், சாமான்யமானவையல்ல. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற உன்னதமான கொள்கைகள் என்ன! பிரமச்சரியம், கிருஹஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் எனும், நான்கு ஆஸ்ரமங்களென்ன! இவைகளின் உத்தம உறைவிடமாக விளங்குவது நமது மார்க்கம்.<noinclude></noinclude>
aydwweq21l4gciuzqvknj60elxc2uko
1962144
1962142
2026-09-07T03:41:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1962144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|4–3–45|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|11}}
{{rule}}{{rule}}</noinclude>டாட்டி என்ன, புலியா கரடியா? இப்படித் தான் சிலபேர், எனக்குக் கலியாணமே வேண்டாம்; கலியாணம் தொல்லை என்று பேசுவார்கள். எதற்கு? கண்டபடி ஆடலாமென்றுதான். கலியாணம் செய்துகொண்டு குடும்பத்தை நடத்தாவிட்டா, கையிலே வருகிற பணத்தைக் கண்டபடி செலவுசெய்துவிட்டு, உடம்பைக் கெடுத்துக் கொண்டு உதவாக்கரையாக வேண்டியதுதானே. இல்லை, நான்தான் கேட்கிறேன். என்னமோ பாவம் காலையிலே போறார் வேலைக்கு, சாயங்காலம் வருகிறார், அப்பான்னு அலுத்து வீட்டுக்கு வந்ததும், தாகத்துக்கு வேணுமான்னு கேட்க ஒரு சம்சாரம் வேண்டாமா? நாலுநாளு நோவுன்னு படுத்தாரு, பக்கக்கிலே இருந்து பிடிக்க எடுக்க ஒருத்தி வேண்டாமா? அதுக பாவம், இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்கு. அதுங்க சாவதற்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டுப் போக வேணாமா? அந்த ஆணுக்கு ஏன் இதெல்லாம் தோணலையாம்? நல்ல மனுஷரு அவரு. அவர் சம்பாரிச்சி அவரே சாப்பிடவேணுமாம், பெண்டாட்டி கூடாது. ஏன்? அவளுக்குச் சோறுபோட வேணுமே” என்று சௌபாக்கியம், மள மளவென்று பேசுவாள். மறுமாலை, திருமலை இந்தத் திவ்யப்பிரபந்தத்தை மதுரைக்குச் சமர்ப்பிப்பான். ஆறணா பத்தணாவாகி, ஒரு ரூபாயுமாகிவிட்டது. ஆறணா கிடைத்தபோது, "திருமலை! உன் வீட்டுக்காரம்மா வாயாடி போலிருக்கு" என்று கூறின மதுரை, ஒரு ரூபாயான சமயத்திலே அதே பிரபந்தத்துக்கு “உன் சம்சாரம் சொல்வதுபோலத்தான் எல்லோரும் சொல்லுவாங்க” என்று சாந்தமாகப் பதில் கூறினான். கூலியும் உயர்ந்தது, அதே சமயத்திலே, பெரியநாயகியின் புன்சிரிப்பும் கிடைத்தது. அவள் அவனுடைய பிரம்மச்சரியத்தைக் கலைக்க அச்சிரிப்பை ஏவவில்லை. அவனைக் கண்டாள், அக்கா அவனைப்பற்றிச் சொன்னதை எண்ணினாள், சிரித்தாள்! அது அவனுடைய விரதத்தைக் குலைத்துவிட்டது. பெரியநாயகி, சௌபாக்கியத்தின் தங்கை!
கிரஹஸ்தாஸ்ரமத்திலே புகுந்தான், மதுரை. பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க வேண்டியதற்கு எவ்வளவு பலமான காரணம் அவனுக்குத் தோன்றிற்றோ, அவ்வளவு காரணம் தோன்றிற்று இந்தப் புது ஆஸ்ரமத்துக்கும்!
வீடுன்னு இருந்தா அதிலே நமக்குன்னு ஒரு சம்சாரம் உலாவுனாத்தான் களையா இருக்கு. ஒண்டிக்கட்டையாக எத்தனை காலந்தான் இருந்தோம், என்ன பலன்! வீட்டுக்குள்ளே நுழைகிறபோதே பெரியநாயகி நம்மைப் பார்த்து, வெந்நீர் வேணுங்களா? என்று கேட்டவுடனே, காலையெல்லாம் பட்ட கஷ்டமத்தனையும் காற்றாப் பறந்து போயிடுது. என்னமோ உழைக்கிறோம், பெரியநாயகி அன்போடு சாப்பாடு போட்டு, காலையிலே செய்த கறியிலே நமக்குன்னு கொஞ்சம் எடுத்துவைத்திருந்து இரவிலே போடுவதும், இன்னும் கொஞ்சம், ஒரே ஒரு பிடி, என்று உபசரிப்பதும், என்னாங்க! எவ்வளவு பாடு உங்களுக்கு? வயிறாரச் சாப்பிடவேண்டாமா? எல்லாம் உடலிலே பலம் இருந்தாத்தானே என்று கனிவாகப் பேசும்போதும், வரவரத் துரும்பாக இளைத்துப் போறிங்க என்று வைத்தியராகும்போதும், தலைவலிக்குத் தைலம் தடவும்போதும், அடடா! அது ஒரு தனி இன்பமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு, எவ்வளவு கஷ்டந்தான் இருக்கட்டும், வீட்டிலே ஒரு மனைவி இருந்தாலே, அது ஒரு சந்தோஷம் தானே!—என்று மதுரை எண்ணிக் களித்தான். பெரிய நாயகி, தாயானதும், அவனுடைய சந்தோஷம் அதிகரித்தது. இரண்டு குழந்தைகளானபோதும் சந்தோஷமாகத் தான் இருந்தது. “அவன் எங்கே? சின்னவனை ஜாக்ரதையாகக் கவனி! ஜலதோஷம்போல இருக்கே” என்று சொல்லுவான் மதுரை, பூரிப்பு தழுவிய பொறுப்புடன். நாலு குழந்தைகளாகிவிட்டன. சந்தோஷம் சஞ்சலத்தைப் பெற்றுவிட்டது.
“அடடா! காச்சுமூச்சுன்னு, ஏன் இதுகள் இப்படிக் காக்காயாக் கத்துதுங்க?”
“குழந்தைகள் இருந்தா அழாமே இருக்குமா?”
“குழந்தைகள்! மகா குழந்தைகள்! கோட்டான்கள் மாதிரி கூவி உயிரை வாங்குதுங்க”
“இந்தப் பாவி வயிற்றிலே வந்து பிறந்துதுங்களே, அதுகள் இப்படித்தான் சீரழியும். அப்பாப்பா! குழந்தைகளை இப்படி அலற அடிக்கக்கூடாது”
கிருஹஸ்தாஸ்ரமத்திலே, விசாரம் குடி புகுந்தது. குடும்பம் வளர்ந்தது! கூலி வளரவில்லை. கோபம் பெருகிற்று மதுரைக்கு. பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தைவிட்டு விலகியது தவறு என்று தோன்றிற்று. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனான பிறகு, பழைய ஆஸ்ரமத்திலே பாசம் வைத்துப் பயன் என்ன?
வைசூரியின் பிரவேசத்தால், மதுரைக்கு மூன்றாம் ஆஸ்ரமம் சித்தியாயிற்று. பெரியநாயகி வைசூரிக்குப் பலியானாள். நாலு குழந்தைகள்! நாரும் நரம்புமாகப் பெற்றோர்கள். இந்நிலையிலே, முதலாளியிடம் சண்டை! வேலை போயிற்று! கிருஹஸ்தாஸ்ரமத்தின் முழு விஷயமும் அவனுடைய உள்ளத்திலே புகுந்தது. உருமாறினான். உள்ளமும் மாறிவிட்டது. வானப்பிரஸ்தம் புகுந்தான் — அதாவது திருமலையிடம், குழந்தைகளை அடைக்கலமாக்கினான்! பெற்றோர்களை ஈசனிடம் ஒப்படைத்தான். கங்காணி கனகசபையின் காலைக் கும்பிட்டுக் கூலி வேலை பெற்று, ரப்பர் காட்டுக்குப் போனான்! பர்மாவிலே, பாடுபட்டான்; குடும்பம் இல்லை, வானப்பிரஸ்தாஸ்ரமம்! அது ஓரளவுக்குத் திருப்தி தந்தது. வேலை செய்வான். கிடைப்பதை உண்பான்! கை, தலையணை, உறக்கத்துக்குப் பதில் ஏக்கம்! இந்நிலையிலே சில ஆண்டுகள் இருந்தான். வானப்பிரஸ்தம், குடும்பத்தை ஏற்று நடத்தவேண்டிய பொறுப்பிலிருந்து விலகிய நிலைமை, அதிகநாள் நீடிக்கவில்லை. மூத்த பையன் முடிச்சவிழ்த்தான், மூன்று மாதம் தண்டனை! இரண்டாவது பையன் இன்ன இடம் போனானென்று தெரியவில்லை, எவனோ ஜாலவித்தைக்காரன் வந்தான் அவனோடு ஓடிவிட்டான். மூன்றாவது பெண்! அது, மூன்றேநாள் ஜுரத்திலே, போய்விட்டது. நாலாவது பையன்; அவன் தோட்டத்துக்கிணற்றிலே தவறி விழுந்துவிட்டான். அடுத்தடுத்துக் கிடைத்தன இத்தபால்கள். வானப்பிரஸ்தத்திலே இருந்த மதுரையின், துக்கம் சம்பூர்ணமாக, அவனுடைய பெற்றோர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்றோர் தபாலும் கிடைத்தது. உடனே, அவன் ரப்பர் தோட்டவேலையையும் விட்டுவிட்டான். அலைந்தான்! அலைந்தான்! ஐயா கொஞ்சம் சோறு என்று கேட்டுப் பார்த்தான்! எச்சில் இலைகளிடம் உறவுகொண்டான்! ஆண்டி சிலரின் நேசம் பெற்றான். காவி அணிந்தான். நீறு பூசினான்! கஞ்சாவுடன் கொஞ்சினான். சன்யாஸ ஆஸ்ரமத்திலே பிரவேசித்தான். வேலைகிடையாது! கூலி கேட்கத் தேவையில்லை! குடும்பம் இல்லை, எனவே பொறுப்பு கிடையாது! கிடைத்தால் புசிப்பது! கிடைக்குமட்டும் பஜிப்பது!! இந்தச் சன்யாச ஆஸ்ரமத்திலே, வானப்பிரஸ்த வாட்டமோ கிருஹஸ்தாஸ்ரமக் கஷ்டமோ இல்லை! அது மட்டுமா! பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தின் தனிமையும் இதிலே இல்லை! சன்யாசி மதுரைக்குச் சன்யாசினி ஒருவளும் கிட்டிவிட்டாள்! அவளுக்கும் "அரோகரா” கூறத் தெரியும் இவன்போலவே!! ஆகவே இவனால்தான் பிழைத்தாக வேண்டுமென்ற நிலை இல்லை அவளுக்கு. ஆனால் அவளுக்கு ஒரு "அவன்" தேவை! சன்யாஸ் ஆஸ்ரமத்திலே, மதுரை சஞ்சலமின்றி இருந்து வந்தான்.
{{***|4|4em|char=✽}}
இந்து மார்க்கத்திலே உள்ள இலட்சிய எழில்கள், சாமான்யமானவையல்ல. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற உன்னதமான கொள்கைகள் என்ன! பிரமச்சரியம், கிருஹஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் எனும், நான்கு ஆஸ்ரமங்களென்ன! இவைகளின் உத்தம உறைவிடமாக விளங்குவது நமது மார்க்கம்.<noinclude></noinclude>
gdvhm6r5ebg487amq3hqseelvlyi704
பக்கம்:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf/3
250
652628
1962143
1961063
2026-09-07T03:39:59Z
Booradleyp1
1964
1962143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|12|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}}
{{rule}}{{rule}}</noinclude>
தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக்கூடாது–என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ணா மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவிசேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், “இந்த இலட்சியங்கள் எழிலுள்ளனதான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும் பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்துகொண்டு பசியால் பரதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும்போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்துவங்களின் போதனைகளை உணருவான்” என்று கேட்டார்.
ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, நெருக்கடி, நாட்டுப் பொருளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்துவரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!
"நாலு ஆஸ்ரமங்களின், மேன்மையை நானறியேன் துரைமார்களே! ஆனால் நானும், என்னைப்போல எண்ணற்ற மக்களும், இந்த ஆஸ்ரமங்களின் அவலட்சணத்திலே புரண்டிருக்கிறோம். புனிதமல்ல. இதன் காரணம்! சமுதாயத்திலே புரையோடி இருக்கும் வறுமை! அதுபோக, உமது வேதபுத்தகத்திலே வழி இருந்தால் கூறுங்கள். மார்க்கம் அறிந்த மகானுபாவர்களே! வாழமார்க்கமில்லாத எமக்கு வாழ்வளிக்க, உங்கள் மார்க்கத்திலே மார்க்கமுண்டா கூறுங்கள்! கேட்போம்!" என்று கூறுவான். ஆனால் நீதிபதி,
நிர்மலமான இந்துமார்க்கத்தைப்பற்றி இதோபதேசம் செய்த இடம், இல்லாமையால் இடர்ப்படும், மதுரை செல்லக்கூடிய இடமல்லவே! உயர்நீதிமன்ற அதிபர்களும், அரசியல் அலுவலர்களும், மெருகுகலையாத மோட்டார் ஏறிச்சென்று மேதினியின் நிலையாமை பற்றியும் வாழ்வு பொய்என்பது குறித்தும், வாயுரைசெய்யும் இடம்! மதுரை, எப்படி அங்கே போவான்!! அது தத்துவமுணர்ந்த தனவான்கள், சித்தாந்தமுணர்ந்த சீமான்கள், வறுமையறியாத விவேகிகள், வாட்டமறியாத வேதாந்திகள், செல்லக்கூடியஇடம்! அங்கேபோக, மதுரைக்கு "டிக்கட் கிடைக்காது!
{{c|<b>—————: (◯) :—————</b>}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
oevkhduxio34sobpwziolu6stacpxvi
1962145
1962143
2026-09-07T03:41:30Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1962145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|12|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}}
{{rule}}{{rule}}</noinclude>
தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக்கூடாது–என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ணா மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவிசேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், “இந்த இலட்சியங்கள் எழிலுள்ளனதான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும் பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்துகொண்டு பசியால் பரதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும்போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்துவங்களின் போதனைகளை உணருவான்” என்று கேட்டார்.
ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, நெருக்கடி, நாட்டுப் பொருளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்துவரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!
"நாலு ஆஸ்ரமங்களின், மேன்மையை நானறியேன் துரைமார்களே! ஆனால் நானும், என்னைப்போல எண்ணற்ற மக்களும், இந்த ஆஸ்ரமங்களின் அவலட்சணத்திலே புரண்டிருக்கிறோம். புனிதமல்ல. இதன் காரணம்! சமுதாயத்திலே புரையோடி இருக்கும் வறுமை! அதுபோக, உமது வேதபுத்தகத்திலே வழி இருந்தால் கூறுங்கள். மார்க்கம் அறிந்த மகானுபாவர்களே! வாழமார்க்கமில்லாத எமக்கு வாழ்வளிக்க, உங்கள் மார்க்கத்திலே மார்க்கமுண்டா கூறுங்கள்! கேட்போம்!" என்று கூறுவான். ஆனால் நீதிபதி,
நிர்மலமான இந்துமார்க்கத்தைப்பற்றி இதோபதேசம் செய்த இடம், இல்லாமையால் இடர்ப்படும், மதுரை செல்லக்கூடிய இடமல்லவே! உயர்நீதிமன்ற அதிபர்களும், அரசியல் அலுவலர்களும், மெருகுகலையாத மோட்டார் ஏறிச்சென்று மேதினியின் நிலையாமை பற்றியும் வாழ்வு பொய்என்பது குறித்தும், வாயுரைசெய்யும் இடம்! மதுரை, எப்படி அங்கே போவான்!! அது தத்துவமுணர்ந்த தனவான்கள், சித்தாந்தமுணர்ந்த சீமான்கள், வறுமையறியாத விவேகிகள், வாட்டமறியாத வேதாந்திகள், செல்லக்கூடியஇடம்! அங்கேபோக, மதுரைக்கு "டிக்கட் கிடைக்காது!
{{c|<b>—————: (◯) :—————</b>}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
3jyq6qeazkad1jrt11ghjj1l14lsfoo
1962147
1962145
2026-09-07T03:42:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|12|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}}
{{rule}}{{rule}}</noinclude>
தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக்கூடாது–என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ணா மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவிசேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், “இந்த இலட்சியங்கள் எழிலுள்ளனதான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும் பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்துகொண்டு பசியால் பரதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும்போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்துவங்களின் போதனைகளை உணருவான்” என்று கேட்டார்.
ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, நெருக்கடி, நாட்டுப் பொருளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்துவரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!
"நாலு ஆஸ்ரமங்களின், மேன்மையை நானறியேன் துரைமார்களே! ஆனால் நானும், என்னைப்போல எண்ணற்ற மக்களும், இந்த ஆஸ்ரமங்களின் அவலட்சணத்திலே புரண்டிருக்கிறோம். புனிதமல்ல. இதன் காரணம்! சமுதாயத்திலே புரையோடி இருக்கும் வறுமை! அதுபோக, உமது வேதபுத்தகத்திலே வழி இருந்தால் கூறுங்கள். மார்க்கம் அறிந்த மகானுபாவர்களே! வாழமார்க்கமில்லாத எமக்கு வாழ்வளிக்க, உங்கள் மார்க்கத்திலே மார்க்கமுண்டா கூறுங்கள்! கேட்போம்!" என்று கூறுவான். ஆனால் நீதிபதி,
நிர்மலமான இந்துமார்க்கத்தைப்பற்றி இதோபதேசம் செய்த இடம், இல்லாமையால் இடர்ப்படும், மதுரை செல்லக்கூடிய இடமல்லவே! உயர்நீதிமன்ற அதிபர்களும், அரசியல் அலுவலர்களும், மெருகுகலையாத மோட்டார் ஏறிச்சென்று மேதினியின் நிலையாமை பற்றியும் வாழ்வு பொய்என்பது குறித்தும், வாயுரைசெய்யும் இடம்! மதுரை, எப்படி அங்கே போவான்!! அது தத்துவமுணர்ந்த தனவான்கள், சித்தாந்தமுணர்ந்த சீமான்கள், வறுமையறியாத விவேகிகள், வாட்டமறியாத வேதாந்திகள், செல்லக்கூடியஇடம்! அங்கேபோக, மதுரைக்கு "டிக்கட் கிடைக்காது!
{{c|<b>—————: (◯) :—————</b>}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
t4i6zenyqbtp0ms84kx8ctzr3rim8br
1962148
1962147
2026-09-07T03:44:38Z
Booradleyp1
1964
[[Special:Contributions/Booradleyp1|Booradleyp1]] ([[User talk:Booradleyp1|Talk]]) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் [[Special:Diff/1962147|1962147]] இல்லாது செய்யப்பட்டது
1962148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Booradleyp1" />{{rh|12|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}}
{{rule}}{{rule}}</noinclude>
தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக்கூடாது–என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ணா மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவிசேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், “இந்த இலட்சியங்கள் எழிலுள்ளனதான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும் பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்துகொண்டு பசியால் பரதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும்போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்துவங்களின் போதனைகளை உணருவான்” என்று கேட்டார்.
ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, நெருக்கடி, நாட்டுப் பொருளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்துவரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!
"நாலு ஆஸ்ரமங்களின், மேன்மையை நானறியேன் துரைமார்களே! ஆனால் நானும், என்னைப்போல எண்ணற்ற மக்களும், இந்த ஆஸ்ரமங்களின் அவலட்சணத்திலே புரண்டிருக்கிறோம். புனிதமல்ல. இதன் காரணம்! சமுதாயத்திலே புரையோடி இருக்கும் வறுமை! அதுபோக, உமது வேதபுத்தகத்திலே வழி இருந்தால் கூறுங்கள். மார்க்கம் அறிந்த மகானுபாவர்களே! வாழமார்க்கமில்லாத எமக்கு வாழ்வளிக்க, உங்கள் மார்க்கத்திலே மார்க்கமுண்டா கூறுங்கள்! கேட்போம்!" என்று கூறுவான். ஆனால் நீதிபதி,
நிர்மலமான இந்துமார்க்கத்தைப்பற்றி இதோபதேசம் செய்த இடம், இல்லாமையால் இடர்ப்படும், மதுரை செல்லக்கூடிய இடமல்லவே! உயர்நீதிமன்ற அதிபர்களும், அரசியல் அலுவலர்களும், மெருகுகலையாத மோட்டார் ஏறிச்சென்று மேதினியின் நிலையாமை பற்றியும் வாழ்வு பொய்என்பது குறித்தும், வாயுரைசெய்யும் இடம்! மதுரை, எப்படி அங்கே போவான்!! அது தத்துவமுணர்ந்த தனவான்கள், சித்தாந்தமுணர்ந்த சீமான்கள், வறுமையறியாத விவேகிகள், வாட்டமறியாத வேதாந்திகள், செல்லக்கூடியஇடம்! அங்கேபோக, மதுரைக்கு "டிக்கட் கிடைக்காது!
{{c|<b>—————: (◯) :—————</b>}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
a1c2u9g94qwy653roi26vajmbly6itn
1962149
1962148
2026-09-07T03:44:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1962149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|12|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}}
{{rule}}{{rule}}</noinclude>
தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக்கூடாது–என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ணா மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவிசேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், “இந்த இலட்சியங்கள் எழிலுள்ளனதான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும் பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்துகொண்டு பசியால் பரதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும்போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்துவங்களின் போதனைகளை உணருவான்” என்று கேட்டார்.
ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, நெருக்கடி, நாட்டுப் பொருளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்துவரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!
"நாலு ஆஸ்ரமங்களின், மேன்மையை நானறியேன் துரைமார்களே! ஆனால் நானும், என்னைப்போல எண்ணற்ற மக்களும், இந்த ஆஸ்ரமங்களின் அவலட்சணத்திலே புரண்டிருக்கிறோம். புனிதமல்ல. இதன் காரணம்! சமுதாயத்திலே புரையோடி இருக்கும் வறுமை! அதுபோக, உமது வேதபுத்தகத்திலே வழி இருந்தால் கூறுங்கள். மார்க்கம் அறிந்த மகானுபாவர்களே! வாழமார்க்கமில்லாத எமக்கு வாழ்வளிக்க, உங்கள் மார்க்கத்திலே மார்க்கமுண்டா கூறுங்கள்! கேட்போம்!" என்று கூறுவான். ஆனால் நீதிபதி,
நிர்மலமான இந்துமார்க்கத்தைப்பற்றி இதோபதேசம் செய்த இடம், இல்லாமையால் இடர்ப்படும், மதுரை செல்லக்கூடிய இடமல்லவே! உயர்நீதிமன்ற அதிபர்களும், அரசியல் அலுவலர்களும், மெருகுகலையாத மோட்டார் ஏறிச்சென்று மேதினியின் நிலையாமை பற்றியும் வாழ்வு பொய்என்பது குறித்தும், வாயுரைசெய்யும் இடம்! மதுரை, எப்படி அங்கே போவான்!! அது தத்துவமுணர்ந்த தனவான்கள், சித்தாந்தமுணர்ந்த சீமான்கள், வறுமையறியாத விவேகிகள், வாட்டமறியாத வேதாந்திகள், செல்லக்கூடியஇடம்! அங்கேபோக, மதுரைக்கு "டிக்கட் கிடைக்காது!
{{c|<b>—————: (◯) :—————</b>}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
t4i6zenyqbtp0ms84kx8ctzr3rim8br
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1008
250
652647
1962172
1961077
2026-09-07T07:07:31Z
Bharathblesson
15164
1962172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|தர்ன்வால்டு, இரிச்சர்டு|980|தர்ன்வால்டு, இரிச்சர்டு}}</noinclude>போக்குவரத்து இந்த மாவட்டத்தில் வசதியாக இல்லாவிட்டாலும், வடகிழக்குப் புகைவண்டி நிறுவனப் பணியால் இம்மாவட்டம் பயன்பெற்று வருகிறது. இந்த மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் புசா என்ற நகரும் உள்ளது. இங்கு, பூச்சி மருந்தியலில் ஆய்வு மேற்கொள்ளும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஒன்று செயற்பட்டு வருகின்றது. பீகார்ப் பூகம்பத்திற்குப் (1934) பிறகு, இங்கிருந்து மாற்றப்பட்ட நிலையம் தான் தில்லியில் செயற்பட்டு வரும் இந்திய வேளாண்மை ஆய்வு நிலையமாகும்.
தர்பங்கா கி.பி.16-ஆம நூற்றாண்டிலிருந்து இந்தியச் சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்தது. ஆனால் 1947-இல் நாடு விடுதலை பெற்ற பிறகு, இந்த அரசு இந்திய நாட்டோடு இணைக்கப்பட்டது.{{Right|<b>அ.சு.</b>}}
<section end="தர்பங்கா"/>
<section begin="தர்ன்வால்டு, இரிச்சர்டு"/>
{{dhr}}
<b>தர்ன்வால்டு, இரிச்சர்டு (கி.பி.1869-1954)</b> சிறந்த செருமானிய மானிடவியலறிஞர்; சமுதாய நிறுவனங்களைப் பண்பாட்டிடை நிலையில் ஆய்வு செய்து (Corss-Cultural Study) புகழ்பெற்றவர். இவர் சமுதாயவியலுக்கும் குறிப்பிடத்தக்க பணியைச் செய்துள்ளார். தர்ன்வால்டு (Richard Thurnwald) வியன்னாவில் கி.பி. 1869-இல் பிறந்தார்.
தொடக்கக் காலங்களில் தர்ன்வால்டு, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களைப் பற்றி ஆராய்வதில் ஆர்வங் கொண்டிருந்தார். இதற்காக இவர் பல புதிய களப்பணி ஆய்வுகளை மேற்கொண்டார். முதன்முதலில் சாலமன் தீவுகள், மைக்ரோனீசியா முதலான பகுதிகளில் பல ஆண்டுகள் (1906-1909, 1932) ஆய்வு செய்தார். பின்னர் நியூகினித் தீவுகளில் நான்கு ஆண்டுகளும் (1912-15) பின்னர்க் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஓராண்டும் (1930) ஆய்வு செய்தார்.
பல்வேறு சமுதாயங்களை ஆய்வு செய்ததன் மூலம் தர்ன்வால்டு பண்பாட்டிடை நிலையில் சமுதாய நிறுவனங்களை ஒப்பீட்டு முறையில் ஆராயும் அறிவினைப் பெற்றார். இவரது தொடக்கக் கால இனக்குழுவியல் ஆய்வு (Ethnographic Study) ‘பனரோ சமுதாயம்’ (Banaro Society, 1916) ஆகும். இந்நூல் பனரோ என்னும் நியூகினிப் பழங்குடிகளின் சமுதாய அமைப்பையும் உறவு முறையையும் பற்றியது. பல்வேறு சமுதாயங்களை ஒப்பீட்டு அடிப்படையில் ஆராயும்போது அச்சமுதாயங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் புலப்படும் என்பார். சமுதாயங்களுக்கிடையே நிலவும் இந்த வேறுபாடுகளைக் கண்டறிவதன் மூலம் இவ்வேறுபாடுகள் ஒவ்வொரு சமுதாயத்தில் நிலை பேறுடைமைக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை அறியமுடியும் என நம்பினார்.
சமுதாய அமைப்பு, பொருளாதாரம் ஆகியவற்றோடு ஒரு சமுதாயத்தின் தொழில் நுட்பம் கொண்டுள்ள உறவைக் கண்டுபிடிப்பதிலும் இவர ஆர்வங்கொண்டு பல ஆய்வுகளை மேற்கொண்டார். இவ்வாய்வுகளின் மூலம் ‘மேல்நிலை அடுக்கமைப்பு’ (Super Stratification) என்ற கோட்பாட்டை உருவாக்கினார். சமுதாயத்தில் புதிய கூறுகள் நுழையும் போது ஏற்படும் மாற்றங்கள் காலப்போக்கில் அதன் அடித்தள அமைப்பையும் மாற்றக்கூடியது எனக் கூறினார். இதனடிப்படையில் நிலமானிய முறை (Feudalism), தொடக்கக் காலத்தில் ஏற்பட்ட அரசுமுறை, நகரங்கள், 18,19-ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட குடியேற்ற அரசுகள் முதலானவற்றையும் ஆய்வு செய்து தம் கோட்பாட்டினை விளக்கினார்.
தர்ன்வால்டு பல பதவிகளில் இருந்து பணியாற்றினார் என்றாலும் 1924-முதல் பெர்லின் (Berlin) பல்கலைக்கழகத்தில் மானிடவியல், சமுதாயவியல் ஆகிய துறைகளில் கல்வி கற்பித்தார். புகழ்மிக்க மானிடவியல், சமுதாயவியல் ஆய்விதழ்களின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றினார்.
இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை ‘தொன்மைச் சமுதாயத்தின் பொருளாதாரம்’ (Economics in primitive Society, 1932), கிழக்கு ஆப்பிரிக்காவில கறுப்பர்களும், வெள்ளையர்களும் (Black and White in East Africa, 1935,) ‘மக்கள் அறிவின் அமைப்பும் பொருளும்’ (Structure and Meaning of Popular Knowledge, 1948) ஆகியன. இவற்றுள் இறுதி நூல் செருமனியில் எழுதப்பட்டதன் மொழிபெயர்ப்பு. இவர் பெர்லினில் 1954-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
66xcie7c0xaubiwfsek44tn554yxb8m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/1022
250
653180
1962175
1962079
2026-09-07T07:19:21Z
Desappan sathiyamoorthy
14764
1962175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>கலைச்சொற் பட்டியல்}}<br>{{larger|தமிழ் — ஆங்கிலம்</b>}}}}
{|
|அகமணம் || — || Endogamy
|-
|அகவயப்படுத்துதல் || — || Internalization
|-
|அண்டையம் || — || Neighbourhood
|-
|அதிகப் பற்று || — || Over–draft
|-
|அரசியலமைப்பு || — || Constitution
|-
|அரசு வழக்கறிஞர் || — || Attorney
|-
|அலகு || — || Unit
|-
|அறவியல் || — || Ethics
|-
|ஆதாய ஈவு || — || Dividend
|-
|ஆவியுலகக் கோட்பாடு || — || Animism
|-
|ஆளுமை || — || Personality
|-
|இயல் திட்டவாதம் || — || Teleology
|-
|இயற்றுமுறைச் சட்டம் || — || Legislation
|-
|இரத்த உறவு || — || Consanguinity
|-
|இருத்தல் கொள்கை || — || Existentialism
|-
|இருப்புப் பணம் || — || Liquid cash
|-
|இறுதிநிலை அலகு || — || Marginal unit
|-
|இறுதிநிலைப் பயன்பாடு || — || Marginal Utility
|-
|இறையியல் || — || Theology
|-
|இன்பதுன்ப நடுநிலைக் கோட்பாடு || — || Stoicism
|-
|இனக்குழு ஒப்பாய்வியல் || — || Ethnology
|-
|இனக்குழுவியல் || — || Ethnography
|-
|ஈமப்பேழை || — || Sarcophagus
|-
|உட்குழு மண உறவு || — || Inbreeding
|-
|உயிர்சார் இலக்கணம் || — || Biogrammer
|-
|உரிமையில் பொறுப்பு || — || Civil Liability
|-
|உள்நாட்டுச் சட்டம் || — || Municipal Law
|-
|உள்ளீடு || — || Input
|-
|உளப்பகுப்பாய்வு || — || Psychoanalysis
|-
|ஊழி || — || Epoch
|-
|எடுகோள்/கருத்துகோள் || — || Hypothesis
|-
|ஒருதுணை மணம் || — || Monogamy
|-
|கட்டமைப்புச் சொத்து || — || Corporate Asset
|-
|கண்டி || — || Tonne
|-
|கண்ணிமையரிப்பு நோய் || — || Trachoma
|-
|கவர்ச்சித் தலைமை || — || Charismatic Leadership
|-
|கற்பனை நாடு || — || Utopia
|-
|கற்பனைவாதச் சமத்துவம் || — || Utopian Socialism
|-
|கற்றல் கொள்கை || — || Learning
|-
|கால்வழி || — || Lineage Theory
|-<noinclude>|}</noinclude>
4bzu4gd86zym83tuqt9yz98ypf31cg7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/1023
250
653181
1962176
1962116
2026-09-07T07:20:50Z
Desappan sathiyamoorthy
14764
1962176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh||997|}}
{|</noinclude>|-
|கிளைமொழி || — || Dialect
|-
|குடிஊழிய முறை || — || Jajmani System
|-
|குடியரசுக் கொள்கை || — || Republicanism
|-
|குலக்குறி || — || Totem
|-
|குலம் || — || Clan
|-
|குழுமுறைச் சமத்துவம் || — || Guild Socialism
|-
|குற்றவியல் பொறுப்பு || — || Criminal Liability
|-
|குறியீட்டு இடைவினைக் கோட்பாடு || — || Symbolic Interactionism
|-
|கூட்டரசு முறை || — || Federalism
|-
|கேட்புப் பொறுப்பு || — || Demand Liability
|-
|கேட்பொலியியல் || — || Auditory Phonetics
|-
|கொள்கை வெறி || — || Fanaticism
|-
|சக்கரக் கட்டு || — || Tyre
|-
|சட்ட ஆணையம் || — || Law Commission
|-
|சட்டத் தொழிலர் || — || Legal Practioner
|-
|சட்டப் பேராயம் || — || Bar Council
|-
|சட்டமுறைத் தணிக்கை || — || Statutory Audit
|-
|சமயச்சார்பின்மை || — || Secularism
|-
|சமுதாய உயிரியல் || — || Sociobiology
|-
|சமூக அடுக்கமைப்பு || — || Social Stratification
|-
|சமூக அளவை || — || Sociometry
|-
|சமூக இடைவினை || — || Social Interaction
|-
|சமூக இயக்காற்றல் || — || Social Dynamics
|-
|சமூக இயைபு || — || Sociability
|-
|சமூக ஒழுங்கு || — || Social order
|-
|சமூகக் கட்டுப்பாடு || — || Social control
|-
|சமூகமயமாதல் || — || Socialization
|-
|சாதனை உளவெழுச்சி || — || Achievement Motivation
|-
|சாதாரணப் பங்கு || — || Equity Share
|-
|சிந்தனை வீச்சு || — || Brain Storming
|-
|சீர்திருத்தக் கிறித்தவக் கொள்கை || — || Protestantism
|-
|சூழலியல் || — || Ecology
|-
|செயற்பாட்டுக் கொள்கை || — || Functionalism
|-
|சொற்பொருளியல் || — || Semantics
|-
|தகாப்புணர்ச்சி || — || Incest
|-
|தடையிலா வாணிகம் || — || Laissez–faire
|-
|தன்மயமாதல் || — || Assimilation
|-
|தாராளக் கொள்கை || — || Liberalism
|-
|திரிபுணர்வு || — || Delusion
|-
|தீங்கியல் சட்டம் || — || Law of Torts
|-
|தீவிரவாதம் || — || Radicalism
|-
|தூய்மையாளர் || — || Puritan
|-
|தெய்வீக உரிமைக் கோட்பாடு || — || Divine Right Theory
|-
|தேசியம் || — || Nationalism
|-
|தொல்லுயிரியல் || — || Palaeontology
|-
|தொழிற்சங்கக் கோட்பாடு || — || Syndicalism
|-<noinclude>|}</noinclude>
alqb44p0f3ke58gexgpuxm9kcvgho7a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/1024
250
653182
1962177
1962117
2026-09-07T07:21:13Z
Desappan sathiyamoorthy
14764
1962177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh||998|}}
{|</noinclude>|-
|தொன்மவியல் || — || Mythology
|-
|நடத்தைக்கோட்பாடு || — || Behaviourism
|-
|நடப்பு வைப்பு || — || Current Deposit
|-
|நிகழ்வியல் || — || Phenomenology
|-
|நிலமானிய முறை || — || Feudalism
|-
|நிலப் பெயர்வு || — || Mobility
|-
|நுண் ஓவியங்கள் || — || Miniature Paintings
|-
|நேர்காட்சிக் கொள்கை || — || Positivism
|-
|பகுத்தறிவுவாதம் || — || Rationalism
|-
|பங்குக் கோவை || — || Stock Warrant
|-
|பங்குரிமையாவணம் || — || Share Warrant
|-
|படிநிலை || — || Hierarchy
|-
|படிமலர்ச்சி || — || Evolution
|-
|படைக்கலச் சட்டம் || — || Assize of Arms
|-
|பண்ணைமுறை || — || Manorial system
|-
|பண்பாட்டுப் பேரு || — || Acculturation
|-
|பயன்வழிக் கோட்பாடு || — || Utilitarianism
|-
|பரவற் கொள்கை || — || Diffusionism
|-
|பலகணவர் மணமுறை || — || Polyandry
|-
|பலதுணை மணம் || — || Polygamy
|-
|பலமனைவி மணமுறை || — || Polygyny
|-
|பழங்குடித்தன்மை || — || Tribalism
|-
|பாறைச்சித்திரக்கலை || — || Petrogram
|-
|பாறைச் செதுக்குக் கலை || — || Petroglyph
|-
|பிடியாணை || — || Warrant
|-
|பிடிவாதக் கொள்கை || — || Dogmatism
|-
|புதைபடிவம் || — || Fossil
|-
|புலன்கடந்த பொருளியல் || — || Metaphysics
|-
|புறத்தோற்றச் சோதனை || — || Projective Test
|-
|புறமணம் || — || Exogamy
|-
|பெருங்கற்காலம் || — || Megalithic Period
|-
|பேரூழி || — || Era
|-
|பொதுவுடைமைக் கொள்கை || — || Communism
|-
|பொறுப்பு || — || Liability
|-
|மாற்றுரிமை ஆவணச் சட்டம் || — || Negotiable Instrument Act
|-
|மாறி || — || Variable
|-
|முதலாளித்துவம் || — || Capitalism
|-
|முற்றுரிமை || — || Monopoly
|-
|முன்தீர்ப்பு நெறி || — || Precedent
|-
|வகையியல் || — || Typology
|-
|வட்டாரச் சட்ட அறிக்கை || — || Lex Loci Report
|-
|வழக்காறுகள் || — || Mores
|-
|வாதுரைஞர் || — || Pleader
|-
|வால்லில்லாக் குரங்கு || — || Ape
|-
|விலங்கினப் பண்பியல் || — || Ethology
|-
|வெளியீடு || — || Output
|-
|வைப்பு || — || Deposit
|-<noinclude>|}</noinclude>
k3a6hbmqeh6m3se2u2apwfweh805qyg
1962178
1962177
2026-09-07T07:22:22Z
Desappan sathiyamoorthy
14764
1962178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh||998|}}
{|</noinclude>|-
|தொன்மவியல் || — || Mythology
|-
|நடத்தைக்கோட்பாடு || — || Behaviourism
|-
|நடப்பு வைப்பு || — || Current Deposit
|-
|நிகழ்வியல் || — || Phenomenology
|-
|நிலமானிய முறை || — || Feudalism
|-
|நிலப் பெயர்வு || — || Mobility
|-
|நுண் ஓவியங்கள் || — || Miniature Paintings
|-
|நேர்காட்சிக் கொள்கை || — || Positivism
|-
|பகுத்தறிவுவாதம் || — || Rationalism
|-
|பங்குக் கோவை || — || Stock Warrant
|-
|பங்குரிமையாவணம் || — || Share Warrant
|-
|படிநிலை || — || Hierarchy
|-
|படிமலர்ச்சி || — || Evolution
|-
|படைக்கலச் சட்டம் || — || Assize of Arms
|-
|பண்ணைமுறை || — || Manorial system
|-
|பண்பாட்டுப் பேரு || — || Acculturation
|-
|பயன்வழிக் கோட்பாடு || — || Utilitarianism
|-
|பரவற் கொள்கை || — || Diffusionism
|-
|பலகணவர் மணமுறை || — || Polyandry
|-
|பலதுணை மணம் || — || Polygamy
|-
|பலமனைவி மணமுறை || — || Polygyny
|-
|பழங்குடித்தன்மை || — || Tribalism
|-
|பாறைச்சித்திரக்கலை || — || Petrogram
|-
|பாறைச் செதுக்குக் கலை || — || Petroglyph
|-
|பிடியாணை || — || Warrant
|-
|பிடிவாதக் கொள்கை || — || Dogmatism
|-
|புதைபடிவம் || — || Fossil
|-
|புலன்கடந்த பொருளியல் || — || Metaphysics
|-
|புறத்தோற்றச் சோதனை || — || Projective Test
|-
|புறமணம் || — || Exogamy
|-
|பெருங்கற்காலம் || — || Megalithic Period
|-
|பேரூழி || — || Era
|-
|பொதுவுடைமைக் கொள்கை || — || Communism
|-
|பொறுப்பு || — || Liability
|-
|மாற்றுரிமை ஆவணச் சட்டம் || — || Negotiable Instrument Act
|-
|மாறி || — || Variable
|-
|முதலாளித்துவம் || — || Capitalism
|-
|முற்றுரிமை || — || Monopoly
|-
|முன்தீர்ப்பு நெறி || — || Precedent
|-
|வகையியல் || — || Typology
|-
|வட்டாரச் சட்ட அறிக்கை || — || Lex Loci Report
|-
|வழக்காறுகள் || — || Mores
|-
|வாதுரைஞர் || — || Pleader
|-
|வால்லில்லாக் குரங்கு || — || Ape
|-
|விலங்கினப் பண்பியல் || — || Ethology
|-
|வெளியீடு || — || Output
|-
|வைப்பு || — || Deposit
|}<noinclude></noinclude>
k2g6gbe5w7rxcnuovt0krmf10j9lrxt
பக்கம்:தமிழ் இந்தி ஆங்கில அகராதி.pdf/92
250
653185
1962140
2026-09-07T03:03:59Z
Neyakkoo
7836
வருடல்
1962140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>தனிநபர்
afari_(m)
தனிநபர்
வருமானம்
தாக்குதல்
(m)
a:kramaN
திட்டக்குழு
34
திட்டம்
H (f)
திணிப்பு
qu (m
a:ro:paN
க
திருத்தம்
#fuz (m)
திவால்
Parafera (m)
diva:liya:
தீண்டப்படாதவர் அழ
achhu:t
தீர்மானம்
Stella (m)
prasta:v
vyakti
affa 34 (prativyakti a:y
(m) yo:jna: a:yo:g
yo:jna:
la:gu: karna:
sansho:dhan
planning
commission
plan
imposition
amendment
insolvent
untouchable
resolution
individual
per capita income
attack
(m)
sankalp
தீர்வை
(m)
shulka
duty
துண்டுப்பிரசுரம்
(f
patrika:
gfterch! (f)
pustika:
துணை
34 (m)
upmantri:
pamphlet
deputy minister
அமைச்சர்
துணை விதிகள்
3 Fuy (m)
துப்புரவு
Hகா ()
up niyam
sapha:yi
by-laws
sanitation
துறைமுகம்
dar (m)
bandar
தூதர்
CH (m)
ra:jdu:t
harbour
ambassador
தூதரகம்
(m)
ra:jdu:ta:va:s
embassy
தூதுவன்
(m)
du:t
(m)
sande: shava:hak
messenger
தேக்கம்
(f)
band avastha:
stagnation
தேசபக்தர்
U (m)
de:shabhakta
தேசபக்தி
(0)
de:shabhakti
தேசம்
(m)
ra:ShTra
patriot
patriotism
nation
ச் (m)
de:sh
(f)
kaum
country
தேசியக்கொடி
q (m)
தேசீயகீதம்
(m)
தேசீயம்
(
தேசியமொழி
(f)
தேர்தல்
fiu (m)
gala (m)
ra:ShTny
JhaNDa: pata:ka:
ra: ShTry git
ra:ShTri:yata:
ra:ShTra bha: Sha:
nirva:chan
national flag
national anthem
nationalism
national language
election
chuna:v
77<noinclude></noinclude>
sg14a9vr4nhqu1zz9l8w6tq20zv8cjj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1001
250
653186
1962162
2026-09-07T05:38:42Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நடவடிக்கைகளை தயாக்குகள் பலமுறை கடுமையாக எதிர்த்ததால் அரசின் முயற்சி மறைந்துபோயிற்று, நெற்பயிரைத் தவிர்த்து வெள்ளரிக்காய் பூசணி, மிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தயாக்குகள்|973|தயாக்குகள்}}</noinclude>நடவடிக்கைகளை தயாக்குகள் பலமுறை கடுமையாக எதிர்த்ததால் அரசின் முயற்சி மறைந்துபோயிற்று,
நெற்பயிரைத் தவிர்த்து வெள்ளரிக்காய் பூசணி, மிளகாய், மக்காச்சோளம், வாழை முதலியன விளைவிக்கின்றனர். இரப்பர் இவர்களது முக்கிய பணப்பயிர். இவர்களின் அண்டைய மக்களான மலாய் மக்களும் இரப்பரைப் பெருமளவு பயிரிடுவதால் இவர்கள் பயிரிடும் இரப்பரின் விலை அவ்வப்போது இடைத்தரகர்களால் குறைக்கப்படுகிறது. பணப் பழங்குடித் பயிரை விளைவித்தாலும் இவர்களின் தன்மையில் பெரும்மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை.
காட்டுப்பொருள்கள் சேகரித்தலும் வேட்டையாடுதலும் இவர்களின் முக்கியத் துணைத்தொழில்கள். இவர்கள் சேகரிக்கும் ஒருவகைக் காட்டுக் கொட்டைகளை நறுமணப் பொருள்கள் செய்வதற்கும் பற்பசை செய்வதற்கும் பல நிறுவனங்கள் பெற்றுக்கொள்வதால் இத்தொழில் வருவாய்மிக்கதாக உள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 1001
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 250
|oTop = 190
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|வெடிகுழல் கொண்டு வேட்டையாடுதல்}}
இவர்கள் காட்டுப் பன்றிகளையும் குரங்குகளையும் விரும்பி வேட்டையாடுகின்றனர். இவற்றோடு தேவைப்படும்போது வீட்டில் வளர்க்கும் பன்றிகளையும், கோழிகளையும் கால்நடைகளையும் கொன்று அவற்றின் இறைச்சியை உண்கின்றனர். மீன்களையும் பிடித்து உண்கின்றனர்.
இக்காலத் தயாக்குகள் மரபுத் தொழில்களுடன் அரசு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள சாலையமைத்தல், எண்ணெய் வயல்கள், காட்டு மரங்கள் வெட்டுதல் முதலான தொழில்களில் கூலியாட்களாக வேலை செய்யவும் தொடங்கியுள்ளனர்.
பண்டைக் காலங்களில் தயாக்குகள் தலை வேட்டையாடி (Head Hunting) வந்தனர். இக்கொடிய செயல் பல பழங்குடிகளிடையே இருந்தது போன்று இம்மக்களும் இதனை வீரச்செயல் கருதி செய்துவந்தனர். எதிரிகளின் தலைகளை வெட்டிக் கொண்டு வருவதன்மூலம் தம் குடியினரின் வலிமையும் வளமும் பெருகும் என்ற எண்ணம் இவர்களிடம் நிலவியதே இதற்குக் காரணம். நீண்ட வீடுகளில் இவர்கள் கொய்துவந்த தலைகளின் மண்டையோட்டினை வரிசையாகக் கட்டித் தொங்க வைத்தனர். எந்த வீட்டில் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதோ அக்கால்வழியினரின் ஆண் தன்மை மிகுதி என எண்ணிப் பெருமை கொள்வர். ஆங்கிலேயர்களும் ஆலந்து நாட்டாரும் இந்தப் பழக்கத்தை ஒழிக்கப் பெருமுயற்சி செய்தனர். இரண்டாம் உலகப்போரின் போது பல சப்பானியர்கள் (Japanese) இச்செயலுக்குப் பலியானார்கள். இதற்குப்பின் மேற்குக் கலிமண்டான் பகுதியில் இருந்த சீனர்கள் சிலரும் தலை கொய்யப்பட்டனர். அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் இப்போது இம்முறையை இவர்கள் கைவிட்டு விட்டனர்.
தயாக்குகளின் மரபுவழிச் சட்டமுறைகள் (Customary Laws) மிகவும் விரிவானது. எழுதப்படாத இச்சட்டங்கள் பழங்குடித் தலைவர்களால் நெறிபிறழாமல் செயற்படுத்தப்பட்டன. போர்னியோ தீவை ஆலந்து நாட்டவர்களும் ஆங்கிலேயர்களும் ஆண்டபோது, இவர்களின் மரபுசார் சட்டங்களின் தன்மையைப் புரிந்துகொண்டு பழங்குடித் தலைவர்களை மட்டும் அணுகி ஆட்சி புரிந்துவந்தனர். இன்று இவ்வகைச் சட்டமுறைகள் ஓரளவு செயலிழந்து விட்டன எனலாம். இளைய தலைமுறையினருள் சிலர் கல்வியறிவு பெற்று வருவதும் வெளியாருடன் தொடர்பு<noinclude></noinclude>
ixte9cgezcsm5dgh5xgku9uvcl09aby
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1002
250
653187
1962163
2026-09-07T05:58:04Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டு வருவதும் கூலிகளாக வெளியிடங்களுக்குச் சென்று வருவதும் இதற்குக் காரணங்களாகும். பழங்குடிச் சமய நெறிகளிலிருந்து கிறித்தவ சமயத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தயாசியன் தொழிற்கூடம்|974|தயானந்த சரசுவதி}}</noinclude>கொண்டு வருவதும் கூலிகளாக வெளியிடங்களுக்குச் சென்று வருவதும் இதற்குக் காரணங்களாகும்.
பழங்குடிச் சமய நெறிகளிலிருந்து கிறித்தவ சமயத்திற்கு மாறியதும் இவர்களிடம் ஏற்பட்டுள்ள. மாற்றங்களுக்குக் காரணமெனலாம். கிறித்தவ சமயத்திற்கு மாறிவிட்டாலும் சிலர் இன்னும் ஆளியுலக வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொள்ளுகின்றனர். இவ்வாறே கிறித்தவ சமயப்பரப்பிகள் ஏற்படுத்தியுள்ள மருத்துவ வசதிகள் எளிதில் கிடைத்தாலும் ஒருசில சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதில் தெய்வத் தன்மையுற்றவனின் (Shaman) மருத்துவத்தை நாடுகின்றனர். ஒருசில பழங்குடிகளைப் போலன்றி இவர்கள். புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் எதிர்ப்புக் காட்டவில்லை.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="தயாக்குகள்"/>
<section begin="தயாசியன் தொழிற்கூடம்"/>
{{dhr}}
<b>தயாசியன் தொழிற்கூடம்</b> கற்காலத்தைச் சார்ந்த தொழிற்கூடம். இத்தொழிற்கூடத்தைச் சார்ந்த கற்கருவிகள் இகரேல் நாட்டில் கார்மல் மலைக் (Carmel) குகைகளிலும் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான போண்டிசிவேடு (Bontechevade) மண்டையோடுகளுடனும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பெரும்பாலும் சிம்புக் (Flake) கருவிகளாகும். இச்சிம்புக் கருவிகள் மிகச் சிறிய அளவை உடையவை. இத்தொழிற்கூடக் கருவிகளில் கைக்கோடரி காணப்படவில்லை. தயாசியன் தொழிற்கூடம் (Tayacian Industry) கிளக்கோனியன் தொழிற்கூடத்தின் ஒரு சிறுபகுதி எனக் கூறப்படுகிறது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="தயாசியன் தொழிற்கூடம்"/>
<section begin="தயால்பாகுக்கல்வி நிறுவனம்,"/>
{{dhr}}
<b>தயால்பாகுக்கல்வி நிறுவனம்,</b> உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஆக்கரா நகரையடுத்துத்தயால் பாகு (Dayalbagh) என்னுமிடத்தில் 1981-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்கலைக் கழக நல்கைக்குழுவின் (University Grants Commission) 1981-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி இந்நிறுவனம் பல்கலைக் கழகத் தகுதியைப் (Deemed University) பெற்றது. இதற்கு முன்னர் மூன்று கல்லூரிகளாகச் செயற்பட்டுவந்த இக்கல்லூரிகள் இணைக்கப்பட்டு தயால்பாகு கல்வி நிறுவனமாக (Dayalbagh Educational Institute) உருப்பெற்றது. இப்பல்கலைக் கழகத்தில் இந்தி ஆங்கிலம் இரண்டும் பயிற்று மொழியாகவும் தேர்வு மொழியாகவும் உள்ளன.
இப்பல்கலைக் கழகத்தில் கலை, வணிகவியல், கல்வியியல், பொறியியல் முதலான புலங்கள் உள்ளன. இதன் கண் பல துறைகள் செயற்படுகின்றன. கலை, வணிகவியல் புலங்களில் ஆங்கிலம், சமசுகிருதம், இந்தி, கல்வியியல், பொருளியல், வணிகப் பொருளியல் (Business Economics), வணிக மேலாண்மையியல், மனையியல், உளவியல் சமூகளியல், அரசியல், இசை, ஓவியமும் வண்ணந் தீட்டுதலும் (Drawing and Painting) முதலான துறைகள் உள்ளன. பொறியியல் புலத்தில் பயன் முறை அறிவியல் (Applied Science), தாவரவியல், வேதியியல், பொறியியல், கணிதவியல், இயற்பியல், விலங்கியல் முதலான துறைகள் உள்ளன.
தயால்பாகுப் பல்கலைக் கழகத்தில் புகுமுகப் படிப்பு வழங்கப் படவில்லை. தனிப்பட்ட முறையில் (Private Study) கல்வி பயிலும் வசதி மாணவர்களுக்கு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை, முதுகலைப் பட்டப்படிப்பு வழங்கும் அனைத்துத் துறைகளும் ஆராய்ச்சிப் பட்டங்களையும் வழங்குகின்றன. அனைத்துப் படிப்புகளும் முழுநேரக் கல்வியாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இப்பல்கலைக் கழகத்தில் சிறந்த நூலகமும், ஆய்வுக் கூடங்களும் உள்ளன.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="தயால்பாகுக்கல்வி நிறுவனம்,"/>
<section begin="தயானந்த சரசுவதி"/>
{{dhr}}
<b>தயானந்த சரசுவதி (கி.பி.1824-1883)</b>: இவர் ஆரிய சமாசத்தை கி.பி.1875-இல் நிறுவியவர். மூல்சங்கர் என்பது இவரது இயற்பெயர். இவர் கத்தியவாரிலுள்ள மோர்லி என்ற கிராமத்தில் கி.பி. 1824-பின் பிறந்தார். இவருடைய பெற்றோர் செல்வர்களாகத் திகழ்ந்தனர். இருப்பினும் இவர் செல்வத்தில் நாட்டம் கொள்ளாமல் தமது 22-ஆம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார். இந்தியா முழுவதும் சுற்றினார்; பல இடங்களில் அழிவுரைகளைச் செவி மடுத்தார். பின்னர்க் குருடரான சுவாமி விருசானந்துவின் சீடரானார். இவர், தமது கல்விப் பயிற்சி முடிந்தபிறகு எஞ்சிய நாட்களை மறை தத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுவதிலும் இந்து சமுதாயத்தைச் சீர்திருத்துவதிலும் செலவிட்டார்.
இவர் உருவாக்கிய ஆரிய சமாசம் மறைநெறியை நாட்டுப்பற்றின் மையமாக வைத்து இயங்கியது. இவர் சமசுகிருதம், வேதங்கள் (மறைகள்) ஆகியவற்றை இரு கண்களாகக் கொண்டு அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வுகாணக் கட்டளையிட்டார். இவரது இத்தத்துவம் சமரசத்திற்கு உதவவில்லை. இவரது கொள்கையை விளக்கும் ஆரிய சமாசத்தின் மறைநூலான ‘சத்தியார்த்தப் பிரகாசம்’ (உண்மை விளக்கம்) சமசுகிருதம், மறைநெறி ஆகியவற்றில் இவருக்கிருந்த ஆணித்தரமான நம்பிக்கையை அறியச் செய்கிறது.
கசடறக் கற்ற இவர் மறைகளுக்கு உரை கூறுவதில் தமக்கென ஓர் வழி வகுத்துக் கொண்டார். தமது சீரிய கொள்கையைப் பரப்புவதற்கென்றே கி.பி.1875-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பத்தாம்<noinclude></noinclude>
dy1sdmop7xydo09uhov3qp9yxan88g0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1003
250
653188
1962164
2026-09-07T06:09:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாளில் பம்பாயில் ஆரிய சமாசத்தை இவர் நிறுவினார். இலாகூரில் ஆரிய சமாசத்தின் சட்ட திட்டங்களைக் கி.பி. 1877-இல் வரையறுத்தார். அவை பத்துக் கட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தயானந்த சரசுவதி|975|தயானா}}</noinclude>நாளில் பம்பாயில் ஆரிய சமாசத்தை இவர் நிறுவினார். இலாகூரில் ஆரிய சமாசத்தின் சட்ட திட்டங்களைக் கி.பி. 1877-இல் வரையறுத்தார். அவை பத்துக் கட்டளைகள் என்றழைக்கப்படுகின்றன. அவை: 1) உண்மை அறிவின் காரணகர்த்தா கடவுள். அவர்பெயராலேயே ஒவ்வொன்றும் அறியப்படும். 2) உண்மையே கடவுள்; அது அறிவு வடிவம்; எங்கும் நிறைந்தது; அழிவற்றது; அச்சமற்றது. 3) ஒவ்வோர் ஆரியனும் மறைகளைக் கற்றும், கேட்டும், போதித்தும், பிரச்சாரம் செய்தும் கடமைகளை ஆற்ற வேண்டும். 4) பொய்மையைத் துறந்து வாய்மையை ஏற்கவேண்டும். 5) அனைத்துச் செயல்களும் அறவழிப்பட்டதாக இருக்கவேண்டும். 6) மனித சமூகத்தின் பௌதிக, ஆன்மிக, சமூக நிலைமைகளை உயர்த்துவதற்காக உலகத்தில் நற்பணிகளை ஆற்ற வேண்டும். 7) அவரவர் தகுதிகளைப் போற்றி அன்புடனும், நீதியுடனும் ஒழுகுதல் வேண்டும். 8) அறியாயாமையை அகற்றவேண்டும். 9) தன்னலமற்ற வாழ்க்கை வாழ வேண்டும். 10) சமூக நலன்களுக்காக அனைத்து வேற்றுமைகளையும் களையவேண்டும்.
மேற்கூறிய பத்துக் கட்டளைகளில் சமய நெறி சமூக நலன்களுக்குத் துணை நிற்கவேண்டும் என்பது தெளிவாகிறது. தாம் வகுத்துக்கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் ‘மறைக் காலத்திற்குத் திரும்புங்கள்’ என்ற இலட்சிய முழக்கத்தைத் தயானந்தர் பறை சாற்றினார். இவரது மூழக்கம் ஐரோப்பாவில் மார்ட்டின் லூதர் ‘விவிலிய நூலுக்குத் திரும்புவோம்’ என்ற கத்தோலிக்க சமய பீடத்தின் பாவ மன்னிப்புச் சீட்டுக்களை எதிர்த்துக் கொடுத்த புனித அறைகூவல் போன்றிருந்தது.
சமய, சமூக மிக்கல்களுக்கு மட்டுமல்லாமல் நவீன, பௌதிக, அறிவியல் உண்மைகள்கூட மறைகளில் பொதிந்துள்ளன என்பதாகத் தாயனந்தர் விளக்கிவந்தார். சுவாமி அரவிந்தரும் இக்கொள்கையை ஆதரித்தார்.
பிரம்மஞான சபையின் பெற்றோர்களான மேடம் பிளாவட்சுகி என்ற உருசியப் பெண்மணியும், கர்னல் ஆல்காட்டு என்ற அமெரிக்கரும் ஆரியசமாசத்தின் மறைநெறியில் முதலில் ஈடுபாடு காட்டினர். கி.பி.1878 முதல் 1881 வரை ஆரிய சமாசமும், பிரம்ம ஞான சபையும் இணைந்து செயலாற்றின. ஆரிய சமாசத்தின் விக்கிரக வழிபாடு எதிர்ப்பும், சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரமும் பிரம்ம சமாசத்தைக் கவர்ந்தன.
சுவாமி தயானந்தர் ஏனைய சமயங்களைப் பற்றித் தமது உண்மை விளக்கத்தில் விரிவாக வாதித்துள்ளார். எழுத்து வன்மையாலும், மேடைப் பேச்சு வன்மையாலும் இயக்கத்தைக் கட்டிக்காத்து வளர்த்த ஆற்றலினாலும் தயானந்தர் ஆரிய சமாசத்திற்கு மக்கள் தொடர்பை எளிதாக்கினார். நாட்டுப்பற்று, சுதேசி, விதவை மறுமணம், பெண்கல்வி, அனாதைப் பாதுகாப்பு, நாட்டுக் கல்வி, சமய மாற்றம், மறை நெறிக் கோட்பாடுகள், பண்பாடு ஆகியவை யாவும் தயானந்தர் இயக்கத்தின் சிறப்பு வாய்ந்த சாதனைகளாகும். சாதி வேற்றுமை, தீண்டாமை, புரோகிதத்தின் மேலாண்மைக் கொடுமைகள் அனைத்தையும் சாடத்தயானந்தர் ஆரிய சமாசத்தைக் கருவியாகக் கொண்டார். இவ்விதம் தற்காப்பு முறையாகவும், சமய மாற்றங்களுக்கு உட்பட்டவர்களை மீண்டும் இந்து சமயத்திற்குக் கொணரவும் ‘சுத்தி’ ‘சங்கடனம்’ என்னும் இரு இயக்கங்களை ஆரிய சமாசத்தோடு இணைத்தார்.
தயானந்த சுவாமியின் ஆரிய சமாசம் நாட்டுப் பற்றுள்ள தலைவர்களை உருவாக்கியது. வடக்கில் இலாலாலசபதிராய், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோர் இவர்களுள் தலைசிறந்தவர்கள். ஆரிய சமாசிகள் 1907 முதல் 1910 வரை ஆங்கில அரசின் அடக்கு முறைக்கு ஆளாயினர். அதன் விளைவாக 1911-இல் 24,300 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரியக்கமாக இது மாறியது. ஆரிய சமாசம் தனது சமுதாய, சமய, கல்விப் பணிகளின் மூலம் இந்தியரிடையே தன்னம்பிக்கை, தன்மான உணர்வுகளை ஊட்டியது எனலாம்.{{Right|<b>கே.சே.</b>}}
<section end="தயானந்த சரசுவதி"/>
<section begin="தயானா"/>
{{dhr}}
<b>தயானா,</b> உரோமப் புராணங்களில் வழங்கப் பெறும் தாய்த் தெய்வம். இத்தெய்வம், கடவுள்களின் அரசர் என உரோமானியர்களால் கருதப்படும் உரோமப் பெருந் தெய்வத்திற்கும் (Jupiter) இலட்டோனா (Latona) என்னும் தெய்வத்திற்கும் மகளாகப் பிறந்தாகும்.
தயானாவும் (Diana) அப்பல்லோவும் (Appollo) இரட்டையர்களாகப் பிறந்தவர்கள். தயானா, தெலோசுத் (Delos) தீவில் பிறந்ததால் பண்டைய உரோமானியர்கள் இத்தெய்வத்தைத் தெலீயத் தாய்த் தெய்வம் (Delian Goddess) எனவும், தெலியா (Delia) எனவும் வழங்கிவந்தனர். தயானா தாய்த் தெய்வம் கிரேக்கத் தாய்த் தெய்வமான ஆர்த்திமிசு (Artemis) தெய்வத்தை மிகவும் ஒத்துக் காணப்படுவதாகக் கூறுவர்.
உரோமானியர்கள் இத்தெய்வத்தைச் சந்திரக் கடவுளாகவும், பெண்களின் வாழ்வில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் வணங்கப்படும் தெய்வமாகவும்<noinclude></noinclude>
6oxc11ugufoyda0wnibvkfum65ac8ts
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1004
250
653189
1962165
2026-09-07T06:21:51Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டுள்ளனர். அதனோடு இளம் பருவத்திலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் தயானா தெய்வமாக கருதப்படுகிறாள். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |P..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தர்க்கீம் ஏமில்|976|தர்க்கீம் ஏமில்}}</noinclude>கொண்டுள்ளனர். அதனோடு இளம் பருவத்திலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் தயானா தெய்வமாக கருதப்படுகிறாள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 1004
|bSize = 375
|cWidth = 95
|cHeight = 163
|oTop = 85
|oLeft = 57
|Location = center
|Description =
}}
{{center|தயானா}}
தயானா, திருமணமாகாத கற்புடைய பெண் தெய்வமாதலால் இத்தெய்வத்தை வழிபடும் அனைவரும் கற்புடையவர்களாக இருக்கவேண்டும் என்பது ஒரு நெறியாகக் கருதப்படுகிறது. பல இடங்களில் வரையப்பட்டுள்ள தயானா தெய்வம் வேட்டைக்குச் செல்லும் உடையுடனும், வில்லுடனும், அம்புகளைக் கொண்ட கையுடனும், காட்டு விலங்கொன்றுடனும் காணப்படுகின்றது.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="தயானா"/>
<section begin="தர்க்கீம் ஏமீல்"/>
{{dhr}}
<b>தர்க்கீம் ஏமீல் (கி.பி. 1858-1917),</b> பிரெஞ்சுச் சமூகவியலறிஞராவார். இவர் பிரான்சிலுள்ள எபினால் (Eplnal) என்னுமிடத்தில் கி.பி. 1858-ஆம் ஆண்டு பிறந்தார். பாரிசில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு செருமனி சென்றார். அங்குப் பொருளாதாரம், நாட்டுப்புறவியல், பண்பாட்டு மானிடவியல் முதலியவற்றைத் தர்க்கீம் (Emile Durkheim) கற்றார். தொடக்கக் காலத்தில் மாவட்ட மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் கி.பி. 1887-இல் பார்டோசோ (Bordeauso) பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1902-இல் அப்பல்கலைக் கழகத்திலிருந்து விலகிப் பாரிசுப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கடைசிவரை அங்கேயே பணியாற்றினார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 1004
|bSize = 375
|cWidth = 105
|cHeight = 133
|oTop = 80
|oLeft = 235
|Location = center
|Description =
}}
{{center|தர்க்கீம் ஏமீல்}}
இவர் கி.பி. 1896-இல் சமூகவியல (Annie Sociologique) என்ற இதழை நிறுவி அதன்மூலம் தம்முடைய சமூகவியல் சிந்தனைகளையும், ஆராய்ச்சி உண்மைகளையும் வெளியிட்டு வந்தார். இவருடைய சிந்தனைகளும், ஆராய்ச்சிகளும் குறிப்பாக, சமூகக் கட்டொருமைப்பாட்டைப் பற்றியே அமைந்திருந்தன. இவருடைய பெற்றோர்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். பிரான்சில் யூத இனம் சிறுபான்மை இனமாக இருந்தது. சிறுபான்மை இனம் என்பதால் யூதர்கள் மிகவும் ஒன்றுபட்டு வாழ்ந்து வந்தார்கள். இந்த ஒருமைப்பாடு தர்க்கீமைக் கவர்ந்தது. அதுவே இவரைச் சிந்திக்கவும் ஆராயவும் தூண்டியது. தர்க்கீம் பல சமூகவியல் சிந்தனைகளை வடித்துத் தந்தார். ஆய்வுகளை மேற்கொண்டார். ஆனால் சமூகவியலில் அவர் விளக்கமான நூல் ஏதும் படைக்கவில்லை. ஆயினும் அவர் வடித்துத் தந்த சிந்தனைகள் முறையாக, கோவையாக அமைந்திருந்தன. பிரான்சிலும், அமெரிக்காவிலும் அவருடைய சிந்தனைகளின் அடிப்படையில் பல ஆய்வுகள் நடைபெற்றன, கோட்பாடுகளும் எழுந்தன.
கோம்தேயின் (Auguste Comte) தத்துவக் கருத்துகளைப் பின்பற்றிச் சமூகவியல் முறையில் தத்துவச் சிக்கல்களை அணுகினார். சமூகத்தின் கட்டொருமைப்பாட்டினால்தான் நீதியும் மதமும் தோன்றின என விளக்குகிறார். சமூக நிகழ்வுகளுக்கு முழுக்க முழுக்க சமூகவியல் கண்ணோட்டத்திலேயே விளக்-<noinclude></noinclude>
42hu3p1umb0qto4iwp9bh6knk6f2hym
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/1025
250
653190
1962166
2026-09-07T06:29:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>ஆங்கிலம் — தமிழ்</b>}}}} {| |Acculturation || — || பண்பாட்டுப் பேறு |- |Achievement Motivation || — || சாதனை உளவெழுச்சி |- |Animism || — || ஆவியுலக் கோட்பாடு |- |Ape || — || வால்லில்லா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>ஆங்கிலம் — தமிழ்</b>}}}}
{|
|Acculturation || — || பண்பாட்டுப் பேறு
|-
|Achievement Motivation || — || சாதனை உளவெழுச்சி
|-
|Animism || — || ஆவியுலக் கோட்பாடு
|-
|Ape || — || வால்லில்லாக் குரங்கு
|-
|Assimilation || — || தன்மயமாதல்
|-
|Assize of Arms || — || படைக்கலச் சட்டம்
|-
|Attorney || — || அரசு வழக்கறிஞர்
|-
|Auditory Phonetics || — || கேட்பொலியியல்
|-
|Bar Council || — || சட்டப் பேராயம்
|-
|Behaviourism || — || நடத்தைக் கோட்பாடு
|-
|Biogrammar || — || உயிர்சார் இலக்கணம்
|-
|Brain Storming || — || சிந்தனை வீச்சு
|-
|Capitalism || — || முதலாளித்துவம்
|-
|Charismatic Leadership || — || கவர்ச்சித் தலைமை
|-
|Civil Liability || — || உரிமையியல் பொறுப்பு
|-
|Clan || — || குலம்
|-
|Communism || — || பொதுவுடைமைக் கொள்கை
|-
|Consanguinity || — || இரத்த உறவு
|-
|Constitution || — || அரசியலமைப்பு
|-
|Corporate Asset || — || கட்டமைப்புச் சொத்து
|-
|Criminal Liability || — || குற்றவியல் பொறுப்பு
|-
|Current Deposit || — || நடப்பு வைப்பு
|-
|Delusion || — || திரிபுணர்வு
|-
|Demand Liability || — || கேட்புப் பொறுப்பு
|-
|Deposit || — || வைப்பு
|-
|Dialect || — || கிளைமொழி
|-
|Diffusionism || — || பரவற் கொள்கை
|-
|Dividend || — || ஆதாய ஈவு
|-
|Divine Right Theory || — || தெய்விக உரிமைக் கோட்பாடு
|-
|Dogmatism || — || பிடிவாதக் கொள்கை
|-
|Ecology || — || சூழலியல்
|-
|Endogamy || — || அகமணம்
|-
|Epoch || — || ஊழி
|-
|Equity Share || — || சாதாரணப் பங்கு
|-
|Era || — || பேருழி
|-
|Ethics || — || அறவியல்
|-
|Ethology || — || விலங்கினப் பண்பியல்
|-
|Ethnography || — || இனக்குழுவியல்
|-
|Ethnology || — || இனக்குழு ஒப்பாய்வியல்
|-
|Evolution || — || படிமலர்ச்சி
|-
|Existentialism || — || இருத்தல் கொள்கை
|-
|Exogamy || — || புறமணம்
|-
|Fanaticism || — || கொள்கை வெறி
|-
|Federalism || — || கூட்டரசு முறை
|}<noinclude></noinclude>
8psnm0kkblq1p5o772ep02bct71aw65
1962179
1962166
2026-09-07T07:22:48Z
Desappan sathiyamoorthy
14764
1962179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>ஆங்கிலம் — தமிழ்</b>}}}}
{|
|Acculturation || — || பண்பாட்டுப் பேறு
|-
|Achievement Motivation || — || சாதனை உளவெழுச்சி
|-
|Animism || — || ஆவியுலக் கோட்பாடு
|-
|Ape || — || வால்லில்லாக் குரங்கு
|-
|Assimilation || — || தன்மயமாதல்
|-
|Assize of Arms || — || படைக்கலச் சட்டம்
|-
|Attorney || — || அரசு வழக்கறிஞர்
|-
|Auditory Phonetics || — || கேட்பொலியியல்
|-
|Bar Council || — || சட்டப் பேராயம்
|-
|Behaviourism || — || நடத்தைக் கோட்பாடு
|-
|Biogrammar || — || உயிர்சார் இலக்கணம்
|-
|Brain Storming || — || சிந்தனை வீச்சு
|-
|Capitalism || — || முதலாளித்துவம்
|-
|Charismatic Leadership || — || கவர்ச்சித் தலைமை
|-
|Civil Liability || — || உரிமையியல் பொறுப்பு
|-
|Clan || — || குலம்
|-
|Communism || — || பொதுவுடைமைக் கொள்கை
|-
|Consanguinity || — || இரத்த உறவு
|-
|Constitution || — || அரசியலமைப்பு
|-
|Corporate Asset || — || கட்டமைப்புச் சொத்து
|-
|Criminal Liability || — || குற்றவியல் பொறுப்பு
|-
|Current Deposit || — || நடப்பு வைப்பு
|-
|Delusion || — || திரிபுணர்வு
|-
|Demand Liability || — || கேட்புப் பொறுப்பு
|-
|Deposit || — || வைப்பு
|-
|Dialect || — || கிளைமொழி
|-
|Diffusionism || — || பரவற் கொள்கை
|-
|Dividend || — || ஆதாய ஈவு
|-
|Divine Right Theory || — || தெய்விக உரிமைக் கோட்பாடு
|-
|Dogmatism || — || பிடிவாதக் கொள்கை
|-
|Ecology || — || சூழலியல்
|-
|Endogamy || — || அகமணம்
|-
|Epoch || — || ஊழி
|-
|Equity Share || — || சாதாரணப் பங்கு
|-
|Era || — || பேருழி
|-
|Ethics || — || அறவியல்
|-
|Ethology || — || விலங்கினப் பண்பியல்
|-
|Ethnography || — || இனக்குழுவியல்
|-
|Ethnology || — || இனக்குழு ஒப்பாய்வியல்
|-
|Evolution || — || படிமலர்ச்சி
|-
|Existentialism || — || இருத்தல் கொள்கை
|-
|Exogamy || — || புறமணம்
|-
|Fanaticism || — || கொள்கை வெறி
|-
|Federalism || — || கூட்டரசு முறை
|-<noinclude>|}</noinclude>
e09ovbkr9vsab7ijyfx5qnl231a1tv9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1005
250
653191
1962167
2026-09-07T06:38:04Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கங்கள் தருகிறார். மேலும் இவர், சமூக மெய்ம்மைகள் புலனீடானவை; எனவே, செயல்முறை சார்ந்த அறிவியலான சமூகவியலால் அவற்றைக் கூர்ந்து நோக்கி ஆரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தர்கோ, ஆன் இராபர்ட்டு|977|தர்கோ, ஆன் இராபர்ட்டு}}</noinclude>கங்கள் தருகிறார். மேலும் இவர், சமூக மெய்ம்மைகள் புலனீடானவை; எனவே, செயல்முறை சார்ந்த அறிவியலான சமூகவியலால் அவற்றைக் கூர்ந்து நோக்கி ஆராயமுடியும் என்கிறார்.
இவர் மதத்தைப் பற்றியும் சிந்தித்து அது எவ்வாறு தோன்றியது என விளக்குகிறார். மதத்தின் தோற்றத்திற்குச் சடங்குகளும் சடங்கு வினைமுறைகளுமே காரணமெனச் சொல்லுகிறார். இக்கருத்தை உறுதிப்படுத்த ஆசுத்திரேலியாவில் வாழும் அருண்டாப் பழங்குடியைத் தம்முடைய ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இவர் குலக்குறிக் கொள்கையிலிருந்து (Totemism) தான் சமயம் தோன்றியது எனக் கூறுகிறார். சமயம் என்பது புனிதப் பொருள்கள் தொடர்பான நம்பிக்னசகளும் செயலாறுகளும் ஒருங்கே அமைந்த அமைப்பு முறையாகும் எனக் கூறுகிறார்.
சமூகத்தில் வேலைப்பகிர்வு (The Division of Labour in Society), சமூகவியல் விதிமுறைகள் (The Rules of Sociological Method), சமய வாழ்க்கையின் தொடக்க நிலைகள் (The Elementary Forms of Religious Life), தற்கொலை (Suicide) ஆகியவை இவர் எழுதிய பல நூல்களில் சில. பிரெஞ்சுச் சமூகவியல் கருத்தினத்தைத் தோற்றுவித்த இவர் பாரிசில் 1917-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>பூ.த.</b>}}
<section end="தர்க்கீம் ஏமீல்"/>
<section begin="தர்கோ, ஆன் இராபர்ட்டு,"/>
{{dhr}}
<b>தர்கோ, ஆன் இராபர்ட்டு,</b> என்ற பிரெஞ்சு அரசியலறிஞர், ஒரு சீர்திருத்தக்காரராகவும், பொருளியல் வல்லுநராகவும் விளங்கினார். பிரான்சில் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எல்விடியசு (Helvetius), வால்ட்டேர், பாசுகல் (Pascal), கண்டார்சே (Condorcet) ஆகியோரைப் போன்று இவர் மனித இனத்தின் வரலாறும் ஒரு தனியாளின் வரலாற்றைப் போன்றதே என்று கூறினார். ஆன் இராபர்ட்டு சேக்விசு தர்கோ (Anne Robert Jaguee Turgot), பிரஞ்சு அரசர்களுக்குத் திறமாகப் பணி செய்த ஒரு நார்மானியக் குடும்பத்தில் கி.பி.1727-இவ் பாரிசில் பிறந்தார். திருச்சபையில் பணி செய்யும் பொருட்டு இவர் பாரிசுப் பல்கலைக்கழகத்தில் இறையியல் பாடம் பயின்றார்; பின் அவ்வெண்ணத்தை விடுத்து, அரசாங்கத்தில் நீதிபதியாகப் பணியேற்றார். அரசாங்கப் பணிகளுக்கிடையேயும் இவர் பாரிசிலிருந்த அறிஞர் கூட்டத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, பிரஞ்சு மொழியில் புதிதாக வெளியிடப்பட்ட கலைக் களஞ்சியத்துக்குப் பல அரிய கட்டுரைகளை எழுதி உதவினார். இயற்கைப் பொருளியல் அறிஞராகிய (Physiocrat) பிரான்க்காய் குயிசினே (Francois Qaesnay) என்பவரோடு இவர் நெருங்கிப்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 1005
|bSize = 375
|cWidth = 100
|cHeight = 115
|oTop = 49
|oLeft = 231
|Location = center
|Description =
}}
{{center|தர்கோ}}
பழகி, அவருடைய தடையற்ற வாணிகக் கருத்துகளை (Free Trade) ஏற்றார். இவர் கி.பி.1761 முதல் 1774 வரை இலிமோசசின் (Limoges) ஆட்சியாளராகப் (Intendent) பணிசெய்தபோது, தம் சீர்திருத்தக் கருத்துகளைச் செயற்படுத்த முயன்று, நில அளவை செய்து, நிலவரியைத் துல்லியமாக ஆக்கி, குடியானவர்கள் அரசாங்கத்துக்குக் கட்டாயப் பணி செய்தற்கு ஈடாக, சிறு பணவரி செலுத்தவும், தக்க சூழ்நிலைகளில் வரிக் குறைப்புப் பெறவும் ஏற்பாடு செய்தார். இவர் அரசரின் உயர் நீதி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று, அரசாங்கச் செலவில் சிக்கன முறையைக் கொண்டு வந்து, அஞ்சல் துறையையும் போக்குவரத்துத் துறையையும் சீர்திருத்தி, உள்நாட்டில் உணவுப் பொருள்கள் தடையின்றி எடுத்துச் செல்லப்படுவதற்கு ஏற்பாடு செய்தார். இவர் பாரிசிலிருந்த வாணிபத் தடைகளை அகற்றி, குடியானவர்களுடைய கட்டாயப்பணி முறையை (Corvee) ஒழித்து, நிலங்களெல்லாவற்றுக்கும் சீரான வரிவிதிப்பைக் கொண்டுவந்து, கி.பி.1776-இல் 6 ஆணைகளை விடுத்தார். இவருடைய நல்ல சீர்த்திருத்தங்களைப் பல தன்னலக்காரர்கள் எதிர்க்கவே, அரசர் இவரை நீக்கி வீட்டு, நெக்கர் (Necker) என்பவரை அமர்த்தினார்.
தர்கேர மனித இனத்தின் வரலாறு அதனுடைய இடையறா வளர்ச்சியைக் காட்டும் ஒரு தத்துவமே என்ற கருத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இதனையே இவர் ஒரு மையக்கருத்தாக வைத்துப் பல விளக்கங்களை மனித வரலாற்றுக்கு எழுதினார். இவர் பிரஞ்சு மொழியில் எழுதிய முக்கியமான சிறிய நூல் ஒன்றில், மனித வளர்ச்சி (Human Progress) என்ற கருத்தை ஒரு வரலாற்றுத் தத்துவமாகக் காட்டி விளக்குகிறார். மனித சமூகம்<noinclude>
<b>வா.க. 9 - 62</b></noinclude>
ncnbpzoqzw7grbi4fc2ycx968hxpqh7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/1026
250
653192
1962168
2026-09-07T06:43:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |Feudalism || — || நிலமானிய முறை |- |Fossil || — || புதைபடிவம் |- |Functionalism || — || செயற்பாட்டுக் கொள்கை |- |Guild Socialism || — || குழுமுறைச் சமத்துவம் |- |Hierarchy || — || படிநிலை |- |Hypothesis || — || எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh||1000|}}</noinclude>{|
|Feudalism || — || நிலமானிய முறை
|-
|Fossil || — || புதைபடிவம்
|-
|Functionalism || — || செயற்பாட்டுக் கொள்கை
|-
|Guild Socialism || — || குழுமுறைச் சமத்துவம்
|-
|Hierarchy || — || படிநிலை
|-
|Hypothesis || — || எடுகோள்/கருதுகோள்
|-
|Inbreeding || — || உட்குழு மண உறவு
|-
|Incest || — || தகாப்புணர்ச்சி
|-
|Input || — || உள்ளீடு
|-
|Internalization || — || அகவயப்படுத்துதல்
|-
|Jajmani System || — || குடிஊழிய முறை
|-
|Laissez–faire || — || தடையிலா வாணிகம்
|-
|Law Commission || — || சட்ட ஆணையம்
|-
|Law of Torts || — || தீங்கியல் சட்டம்
|-
|Learning Theory || — || கற்றல் கொள்கை
|-
|Legal Practioner || — || சட்டத் தொழிலர்
|-
|Legislation || — || இயற்றுமுறைச் சட்டம்
|-
|Lex Loci Report || — || வட்டாரச் சட்ட அறிக்கை
|-
|Liability || — || பொறுப்பு
|-
|Liberalism || — || தாராளக் கொள்கை
|-
|Lineage || — || கால்வழி
|-
|Liquid Cash || — || இருப்புப் பணம்
|-
|Manorial System || — || பண்ணை முறை
|-
|Marginal Unit || — || இறுதிநிலை அலகு
|-
|Marginal Utility || — || இறுதிநிலைப் பயன்பாடு
|-
|Megalithic Period || — || பெருங்கற்காலம்
|-
|Metaphysics || — || புலன்கடந்த பொருளியல்
|-
|Miniature Paintings || — || நுண் ஓவியங்கள்
|-
|Mobility || — || நிலப் பெயர்வு
|-
|Monogamy || — || ஒருதுணை மணம்
|-
|Monopoly || — || முற்றுரிமை
|-
|Mores || — || வழக்காறுகள்
|-
|Municipal Law || — || உள்நாட்டுச் சட்டம்
|-
|Mythology || — || தொன்மவியல்
|-
|Nationalism || — || தேசியம்
|-
|Negotiable Instrument Act || — || மாற்றுரிமை ஆவணச் சட்டம்
|-
|Neighbourhood || — || அண்டையம்
|-
|Output || — || வெளியீடு
|-
|Over–draft || — || அதிகப் பற்று
|-
|Palaeontology || — || தொல்லுயிரியல்
|-
|Personality || — || ஆளுமை
|-
|Petroglyph || — || பாறைச் செதுக்குக் கலை
|-
|Petrogram || — || பாறைச் சித்திரக் கலை
|-
|Phenomenology || — || நிகழ்வியல்
|-
|Pleader || — || வாதுரைஞர்
|-
|Polyandry || — || பலகணவர் மணமுறை
|}<noinclude></noinclude>
1zdm4gtm567hwc5eq1mob8pne5tn4tr
1962180
1962168
2026-09-07T07:23:17Z
Desappan sathiyamoorthy
14764
1962180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh||1000|}}
{|</noinclude>|-
|Feudalism || — || நிலமானிய முறை
|-
|Fossil || — || புதைபடிவம்
|-
|Functionalism || — || செயற்பாட்டுக் கொள்கை
|-
|Guild Socialism || — || குழுமுறைச் சமத்துவம்
|-
|Hierarchy || — || படிநிலை
|-
|Hypothesis || — || எடுகோள்/கருதுகோள்
|-
|Inbreeding || — || உட்குழு மண உறவு
|-
|Incest || — || தகாப்புணர்ச்சி
|-
|Input || — || உள்ளீடு
|-
|Internalization || — || அகவயப்படுத்துதல்
|-
|Jajmani System || — || குடிஊழிய முறை
|-
|Laissez–faire || — || தடையிலா வாணிகம்
|-
|Law Commission || — || சட்ட ஆணையம்
|-
|Law of Torts || — || தீங்கியல் சட்டம்
|-
|Learning Theory || — || கற்றல் கொள்கை
|-
|Legal Practioner || — || சட்டத் தொழிலர்
|-
|Legislation || — || இயற்றுமுறைச் சட்டம்
|-
|Lex Loci Report || — || வட்டாரச் சட்ட அறிக்கை
|-
|Liability || — || பொறுப்பு
|-
|Liberalism || — || தாராளக் கொள்கை
|-
|Lineage || — || கால்வழி
|-
|Liquid Cash || — || இருப்புப் பணம்
|-
|Manorial System || — || பண்ணை முறை
|-
|Marginal Unit || — || இறுதிநிலை அலகு
|-
|Marginal Utility || — || இறுதிநிலைப் பயன்பாடு
|-
|Megalithic Period || — || பெருங்கற்காலம்
|-
|Metaphysics || — || புலன்கடந்த பொருளியல்
|-
|Miniature Paintings || — || நுண் ஓவியங்கள்
|-
|Mobility || — || நிலப் பெயர்வு
|-
|Monogamy || — || ஒருதுணை மணம்
|-
|Monopoly || — || முற்றுரிமை
|-
|Mores || — || வழக்காறுகள்
|-
|Municipal Law || — || உள்நாட்டுச் சட்டம்
|-
|Mythology || — || தொன்மவியல்
|-
|Nationalism || — || தேசியம்
|-
|Negotiable Instrument Act || — || மாற்றுரிமை ஆவணச் சட்டம்
|-
|Neighbourhood || — || அண்டையம்
|-
|Output || — || வெளியீடு
|-
|Over–draft || — || அதிகப் பற்று
|-
|Palaeontology || — || தொல்லுயிரியல்
|-
|Personality || — || ஆளுமை
|-
|Petroglyph || — || பாறைச் செதுக்குக் கலை
|-
|Petrogram || — || பாறைச் சித்திரக் கலை
|-
|Phenomenology || — || நிகழ்வியல்
|-
|Pleader || — || வாதுரைஞர்
|-
|Polyandry || — || பலகணவர் மணமுறை
|-<noinclude>|}</noinclude>
bl4pqev5et7k74cj8vlv6ol1glvrjdb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1006
250
653193
1962169
2026-09-07T06:47:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வளர்ச்சியின் பல்வேறு நிலைகளின் வழியாக (Stage) முன்னேறி வந்துள்ளது. இயற்பியல் போன்ற (Physics) அறிவியல்களிவே திரும்பத் திரும்ப நடைபெறும் ஒரே வகைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தர்சுடன் எட்கார்|978|தர்சுடன் எட்கார்}}</noinclude>வளர்ச்சியின் பல்வேறு நிலைகளின் வழியாக (Stage) முன்னேறி வந்துள்ளது. இயற்பியல் போன்ற (Physics) அறிவியல்களிவே திரும்பத் திரும்ப நடைபெறும் ஒரே வகையான நிகழ்ச்சிகளின் அடிப்படை விதிகள் ஆராயப்படுகின்றன. மனித வரலாறோ ஒரு நாகரிகத்தையே உருவாக்குகின்றதும், எப்போதும் வளர்ந்து வருவதுமான மனித அனுபவங்களின் திரட்சியைக் குறிப்பிடுகிறது. மனித நாகரிக வளர்ச்சியை உயிர் தோன்றிய நிலை (Animistic Stage), சிந்தனை நிலை (Speculative Stage), அறிவியல் நிலை (Scientific Stage) ஆகிய மூன்று நிலைகளாகப் பிரித்தல் இயலும் என்பது இவர் கருத்து, ‘பொருள் உற்பத்தி, பங்கீடு முதலியவை பற்றிய கருத்துகள்’ என்றொரு நூலையும் தர்கோ கி.பி.1766-இல் எழுதினார். பொருளுற்பத்தியிலும் பங்கீட்டிலும் அரசாங்கக்-கட்டுப்பாடுகளும், வரம்பு மீறிய வரி விதிப்பு முறையும் இருத்தலாகாதென்ற கொள்கையை இவர் வலியுறுத்திக் கூறுகிறார். இவர் இயற்கைப் பொருளியலாருடைய தடையிலா வாணிகக் கொள்கையை முற்றிலும் ஆதரித்தார்.
தர்கோ, ஐரோப்பாவின் அறிவு ஒளிக்காலத்தைச் சேர்ந்த தெளித்த, ஆக்க இயல்பான ஒரு சிந்தனையாளர் ஆவர். இங்கிலாந்தில் செயலறிவுக் கொள்கையினடிப்படையில் (Empiricism) சான் இலாக்கு ஒரு தாராள அரசியலமைப்புக் கொள்கையை வகுத்தது போல, பிரான்சில் எல்வெசியசும். கண்டார் சேயும், தர்கோவும் தாரானச் செயலறிவு இயல்புடைய நோக்கில் வரலாற்று நிகழ்ச்சிகளை ஆராய்ந்தனர். தர்கோ விளக்கிய மனித இன முழுவதின் முன்னேற்றம் அல்லது வளர்ச்சி என்ற கருத்தே (Idea of Universal Human Progress), எகல் என்னும் செருமானியத் தத்துவ ஆசிரியர் தம் வரலாறு பற்றிய தத்துவக் கொள்கையை வரைதற்கு உதவியாக இருந்தது. குடியாட்சி முறை அரசாங்கம், இயற்கை உரிமைகள் முதலிய கருத்துக்களெல்லாம் தர்கோ வரலாற்றுக்குக் கொடுத்த விளக்கத்தினால் முக்கியத்துவம் பெற்று, யாவராலும் வரவேற்கப்பட்டன. பிரஞ்சுப் புரட்சியை உருவாக்கிய சிந்தனைகளுள் தர்கோவின் வரலாற்றுக் கருத்துகளும் இடம் பெறுகின்றன.{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="தர்கோ, ஆன் இராபர்ட்டு,"/>
<section begin="தர்சுடன், எட்கார்,"/>
{{dhr}}
<b>தர்சுடன், எட்கார்,</b> தென்னிந்திய மானிடவியலில் பெரும் பங்காற்றியவர்; சிறந்த அருங்காட்சிய கவியலார். இவர் பிறந்து வளர்ந்தது இங்கிலாந்தில். தொடக்கக்காலத்தில் மருத்துவத் துறையில் ஈடுபட்ட தர்சுடன் (Edgar Thurston) பின்னர் அருங்காட்சியகக் கலையிலும் பயிற்சி பெற்றார்.
தச்சுடன், சென்னைக்கு வருவதற்கு முன்பு இலண்டனில் அரசர் கல்லூரியின் (King’s College) அருங்காட்சியகத்தைக் கண்காணித்து வந்தார். சென்னை வந்த இவர் அரசு அருங்காட்சியத்தின் கண்காணிப்பாளராக கி.பி. 1885-ஆம் ஆண்டு பொறுப்பேற்று-ஒரு கால் நூற்றாண்டுத் காலம் (1885-1908) அருங்காட்சியக வளர்ச்சியில் திறம் படப் பணியாற்றிலார். அருங்காட்சியகத்தின் அரும் பொருள் சேகரிப்பு அந்தந்த மாநில அளவில் விரிவானதாக இருத்தல் வேண்டும் என்ற நோக்கோடு தொல்லியல், மானிடவியல், கலை, கைத்தொழில் முதலான பிரிவுகளைச் சேர்ந்த பொருள்களைச் சேர்த்தார். இவர் காலத்தில் தான் இலாகூரிலிருந்து எழில்மிகு காந்தாரக் கற்சிற்பங்களும், ஆந்திரத்தின் பட்டிப்பொரோலு என்னும் ஊரிலிருந்து சிமிழ்களும் மாநிலத் தொல்லியல் துறையிடமிருந்து அமராவதி பௌத்த சிற்பங்களும் சென்னை அருங்காட்சியகத்திற்குப் பெறப்பட்டன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 1006
|bSize = 375
|cWidth = 145
|cHeight = 200
|oTop = 198
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|தர்சுடன்}}
விலங்கியல் பிரிவிற்காகச் சென்னைக் கடற்கரையில் கடல் விலங்குகள் பலவற்றையும் இவர் தீவிரமாகச் சேர்த்து அவற்றை வகைப்படுத்தி ஆய்வு செய்தார். இவ்வருங்காட்சியகத்தில் பார்வையாளர்<noinclude></noinclude>
3z9y14mkyk7pgt2138nodd7r9jyl1vt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/1027
250
653194
1962170
2026-09-07T06:49:24Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |Polygamy || — || பலதுணை மணம் |- |Polygyny || — || பலமனைவி மணமுறை |- |Positivism || — || நேர்காட்சிக் கொள்கை |- |Precedent || — || முன்தீர்ப்பு நெறி |- |Projective Test || — || புறத்தோற்றச் சோதனை |- |Prote..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh||1001|}}</noinclude>{|
|Polygamy || — || பலதுணை மணம்
|-
|Polygyny || — || பலமனைவி மணமுறை
|-
|Positivism || — || நேர்காட்சிக் கொள்கை
|-
|Precedent || — || முன்தீர்ப்பு நெறி
|-
|Projective Test || — || புறத்தோற்றச் சோதனை
|-
|Protestantism || — || சீர்திருத்தக் கிறித்தவக் கொள்கை
|-
|Psychoanalysis || — || உளப்பகுப்பாய்வு
|-
|Puritan || — || தூய்மையாளர்
|-
|Radicalism || — || தீவிரவாதம்
|-
|Rationalism || — || பகுத்தறிவுவாதம்
|-
|Republicanism || — || குடியரசுக் கொள்கை
|-
|Sarcophagus || — || ஈமப்பேழை
|-
|Secularism || — || சமயச்சார்பின்மை
|-
|Semantics || — || சொற்பொருளியல்
|-
|Share Warrant || — || பங்குரிமையாவணம்
|-
|Sociability || — || சமூக இயைபு
|-
|Social Control || — || சமூகக் கட்டுப்பாடு
|-
|Social Dynamics || — || சமூக இயக்க ஆற்றல்
|-
|Social Interaction || — || சமூக இடைவினை
|-
|Socialization || — || சமூகமயமாதல்
|-
|Social Order || — || சமூக ஒழுங்கு
|-
|Social Stratification || — || சமூக அடுக்கமைப்பு
|-
|Sociobiology || — || சமுதாய உயிரியல்
|-
|Sociometry || — || சமூக அளவை
|-
|Statutory Audit || — || சட்டமுறைத் தணிக்கை
|-
|Stock Warrant || — || பங்குக் கோவை
|-
|Stoicism || — || இன்பதுன்ப நடுநிலைக் கோட்பாடு
|-
|Symbolic Interactionism || — || குறியீட்டு இடைவினைக் கோட்பாடு
|-
|Syndicalism || — || தொழிற்சங்கக் கோட்பாடு
|-
|Teleology || — || இயல்திட்டவாதம்
|-
|Theology || — || இறையியல்
|-
|Tonne || — || கண்டி
|-
|Totem || — || குலக்குறி
|-
|Trachoma || — || கண்ணிமையரிப்பு நோய்
|-
|Tribalism || — || பழங்குடித்தன்மை
|-
|Typology || — || வகையியல்
|-
|Tyre || — || சக்கரக் கட்டு
|-
|Unit || — || அலகு
|-
|Utilitarianism || — || பயன்வழிக் கோட்பாடு
|-
|Utopia || — || கற்பனை நாடு
|-
|Utopian Socialism || — || கற்பனைவாதச் சமத்துவம்
|-
|Variable || — || மாறி
|-
|Warrant || — || பிடியாணை
|}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
c8jx9f65wixc4q0m7lgkc6dmtm0hts6
1962181
1962170
2026-09-07T07:23:42Z
Desappan sathiyamoorthy
14764
1962181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh||1001|}}
{|</noinclude>|-
|Polygamy || — || பலதுணை மணம்
|-
|Polygyny || — || பலமனைவி மணமுறை
|-
|Positivism || — || நேர்காட்சிக் கொள்கை
|-
|Precedent || — || முன்தீர்ப்பு நெறி
|-
|Projective Test || — || புறத்தோற்றச் சோதனை
|-
|Protestantism || — || சீர்திருத்தக் கிறித்தவக் கொள்கை
|-
|Psychoanalysis || — || உளப்பகுப்பாய்வு
|-
|Puritan || — || தூய்மையாளர்
|-
|Radicalism || — || தீவிரவாதம்
|-
|Rationalism || — || பகுத்தறிவுவாதம்
|-
|Republicanism || — || குடியரசுக் கொள்கை
|-
|Sarcophagus || — || ஈமப்பேழை
|-
|Secularism || — || சமயச்சார்பின்மை
|-
|Semantics || — || சொற்பொருளியல்
|-
|Share Warrant || — || பங்குரிமையாவணம்
|-
|Sociability || — || சமூக இயைபு
|-
|Social Control || — || சமூகக் கட்டுப்பாடு
|-
|Social Dynamics || — || சமூக இயக்க ஆற்றல்
|-
|Social Interaction || — || சமூக இடைவினை
|-
|Socialization || — || சமூகமயமாதல்
|-
|Social Order || — || சமூக ஒழுங்கு
|-
|Social Stratification || — || சமூக அடுக்கமைப்பு
|-
|Sociobiology || — || சமுதாய உயிரியல்
|-
|Sociometry || — || சமூக அளவை
|-
|Statutory Audit || — || சட்டமுறைத் தணிக்கை
|-
|Stock Warrant || — || பங்குக் கோவை
|-
|Stoicism || — || இன்பதுன்ப நடுநிலைக் கோட்பாடு
|-
|Symbolic Interactionism || — || குறியீட்டு இடைவினைக் கோட்பாடு
|-
|Syndicalism || — || தொழிற்சங்கக் கோட்பாடு
|-
|Teleology || — || இயல்திட்டவாதம்
|-
|Theology || — || இறையியல்
|-
|Tonne || — || கண்டி
|-
|Totem || — || குலக்குறி
|-
|Trachoma || — || கண்ணிமையரிப்பு நோய்
|-
|Tribalism || — || பழங்குடித்தன்மை
|-
|Typology || — || வகையியல்
|-
|Tyre || — || சக்கரக் கட்டு
|-
|Unit || — || அலகு
|-
|Utilitarianism || — || பயன்வழிக் கோட்பாடு
|-
|Utopia || — || கற்பனை நாடு
|-
|Utopian Socialism || — || கற்பனைவாதச் சமத்துவம்
|-
|Variable || — || மாறி
|-
|Warrant || — || பிடியாணை
|}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
b4ko6zvlu13jkfoe8a3uronzyajy2e4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1007
250
653195
1962171
2026-09-07T06:57:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களைக் கவரும் மிகப்பெரும் சுறா மீனைச் சென்னை கடற்கரையில் பெற்றுப் பதப்படுத்திக் காட்சிக்கு வைத்த பெருமை இவரையே சாரும். புவியியல் பிரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தர்சுடன் எட்கார்|979|தர்பங்கா}}</noinclude>களைக் கவரும் மிகப்பெரும் சுறா மீனைச் சென்னை கடற்கரையில் பெற்றுப் பதப்படுத்திக் காட்சிக்கு வைத்த பெருமை இவரையே சாரும். புவியியல் பிரிவிற்காக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான கற்படிமங்களைச் சேகரித்து அதன் பயன்களை மக்கள் அறியுமாறு காட்சிப்படுத்தினார்.
அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் பதவியுடன் சென்னை மாநில இனக்குழுவியல் ஆய்வு (Ethnographic Survey) அலுவலர் பதவியையும் 1901-ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டார். இப்பணியின் விளைவே 7 தொகுதிகளைக் கொண்ட ‘தென்னிந்திய சாதிகளும் பழங்குடிகளும்’ (Castes and Tribes of Southern India) ஆகும். இந்நூலில் மத்திய இந்தியாவைச் சார்ந்த கோண்டுப் பழங்குடிகள் தொடங்கித் தென் கோட்டை வேளாளர் தமிழ் நாட்டைச் சார்ந்த வரையிலான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாதியினரையும், பழங்குடியினரையும் அவர்களின் சமூக, பொருளாதார முறைகள், வாழ்க்கையமைப்புகள், பழக்க வழக்கங்கள் முதலான அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் தொகுத்துக் கூறியுள்ளார். இவர் காலத்தில்தான் சென்னை அருங்காட்சியகத்தில் பல்வேறு பிரிவுகளில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் குறித்துப் பல நூல்கள் வெளியிடப்பட்டன. இவரது முயற்சியினாலேயே சென்னை அருங்காட்சியக வெளியீடுகள் (Madras Museum Bulletins) கி.பி.1893-ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியிடப்பட்டது. தர்சுடன், சென்னை அருங்காட்சியகத்தில் இனவியல் ஆய்வுகளுக்காக மானிட உடலளவையியல் ஆய்வுக்கூடத்தை (Anthropometrie Laboratory) முதன்முதலில் ஏற்படுத்தினார். கலைப்பொருள்களைச் சிறப்புக் காட்சிக்கு வைக்க விக்டோரியா தொழில் கலை மண்டபம் கட்டுவதற்கான முயற்சியில் வெற்றிகண்டார்.
சென்னைப் பல்கலைக்கழத்தில் இவரது ஆலோசனைப்படி கி.பி. 1895-ஆம் ஆண்டு மானிடவியலில் முதுகலைப் படிப்பு தொடங்க ஒப்புதலாயிற்று. இவர் நூலக வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றினார். தர்சுடனின் முயற்சியால் கி.பி. 1896-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக வளாகத்தில் புதியதாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் கன்னிமாரா பொது நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இவர் சென்னைப் பல்கலைக்கழக நூலகக் குழுவின் தலைவராகவும் சிறிதுகாலம் பணியாற்றினார்.
சென்னைக் கடற்கரையில் முதன்முறையாகச் சிறந்த நீர்வாழ் காட்சியகம் (Madras Aquarium) ஒன்று 1909-ஆம் ஆண்டு தர்சுடன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்தியா போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் இவ்வகையான காட்சியகத்தினைச் சிறந்த தொழில் நுட்பத்துடன் ஏற்படுத்திய பெருமை இவரையே சேரும். இவர், இதன் இயக்குநராகவும் சிறிதுகாலம் பணியாத்தினார்.
தர்சுடன் பல நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டு மானிடவியல் துறைக்கு உழைத்துள்ளார். இவரது அயராத அடி உழைப்பினால் பல மானிடவியலார் இவரையொற்றித் தென்னிந்திய மானிடவியலில் சிறப்பிடம் பெற்றனர்.{{Right|<b>நே.தே.</b>}}
<section end="தர்சுடன், எட்கார்,"/>
<section begin="தர்பங்கா"/>
{{dhr}}
<b>தர்பங்கா</b>: இத்திய நாட்டில் பீகார் மாநிலத்திலுள்ள ஒரு நகரமாகத் தர்பங்கா விளங்குகிறது. தர்பங்கா என்ற நகர் சிறுபசுமதி என்ற ஆற்றின் கரையில், 10 கி.மீ. நீளத்திற்குப் பரந்து விரிந்துள்ளது. இந்த நகர் பாட்னா நகரிலிருந்து வடகிழக்கில் 95 கி.மீ. தொலைவில் இருந்தாலும், இடையே குறுக்கிடும் கங்கை நதியைப் படகுகளின் துணையுடன் கடந்துதான் இந்த நகரை அடையமுடியும். இந்த நகரத்தின் 1961-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின்படி மக்கள் தொகை 103,016 ஆக இருந்தது. இந்த நகரைச் சுற்றி மாந்தோப்புகளும், செயற்கையாக வெட்டப்பட்ட குளங்களும் நிரம்பியிருக்கின்றன. இந்நகரில் உள்ளூர் மகாராசாவின் அரண்மனை 55 ஏக்கர் நிலப்பரப்பில் எழும்பி நிற்கிறது. மேலும், பீகார்ப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்ட ஒரு வடமொழிப் பல்கலைக் கழகமும் பல கல்லூரிகளும் இந்நகரத்தில் செயற்படுகின்றன. மருத்துவக் கல்லூரி ஒன்றும் நடை பெற்று வருகின்றது.
தர்பங்கா (Darbhanga) என்ற இந்த நகரத்தின் பெயரைக் கொண்டு அம்மாநிலத்தில் ஒரு மாவட்டமும் இருந்து வருகிறது. தர்பங்கா மாவட்டம் நேபாளத்தின் எல்லை வரைபரவியுள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு ஏறத்தாழ 8690. ச.கி.மீ. ஆகும். இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 1961-ஆம் ஆண்டின் கணக்குப்படி 4,413,027 ஆகும். இந்த மாவட்டத்தில் கங்கை, புர்கி கண்டகி, புசுமதி, சிறுபுசுமதி, பாலன், சிறுபாலன், சில்சுகா ஆகிய நதிகள் பாய்ந்து வளமையைக் கூட்டுகின்றன. அதே நேரத்தில் இந்த மாவட்டம் வெள்ளப்பெருக்கின் சேதத்திற்கும் பல முறை ஆளாகியுள்ளது. கோதுமை, பார்லி, சோளம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கல், கரும்பு, புகையிலை மாம்பழம் ஆகியன இங்குள்ள விளை பொருள்களாக இருப்பினும், அனைத்திலும் முக்கிய விளைபொருளாக நெல் விளங்குகிறது. சாலைப்<noinclude>
<b>வா. க. 9 - 62அ</b></noinclude>
orrgkchl2autkoo1sz6koi1qbk6cre8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/1006
250
653196
1962174
2026-09-07T07:15:46Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|2em}} {{center|{{x-larger|<b>பொருளடைவு</b>}}}} {| |அகநிலைச்சான்று || || 863 |- |அகப்பொருள் கோவை || || 220 |- |அகமணம் || || 560 |- |அகவயச் சமூகக் கட்டுப்பாடு || || 517 |- |அகழி || || 130 |- |அட்ட நாகபந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|2em}}
{{center|{{x-larger|<b>பொருளடைவு</b>}}}}
{|
|அகநிலைச்சான்று || || 863
|-
|அகப்பொருள் கோவை || || 220
|-
|அகமணம் || || 560
|-
|அகவயச் சமூகக் கட்டுப்பாடு || || 517
|-
|அகழி || || 130
|-
|அட்ட நாகபந்தம் || || 916
|-
|அடுக்கமைப்பும் சமூக மனநிலையும் || || 484
|-
|அண்டையங்கள் || || 601
|-
|அனுபக்கம் || || 234
|-
|அத்துவைதம் || || 769
|-
|அப்பர் || || 444
|-
|அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சி மன்றங்கள் || || 283
|-
|அமைப்புச் சட்ட மேலவை || || 288
|-
|அர்த்தசாத்திரம் || || 230, 231
|-
|அரசியல் சமத்துவம் || || 426
|-
|அரசியலமைப்பின் நண்பர் கழகம் || || 715
|-
|அரசியலமைப்பு || || 279
|-
|அரசியலமைப்பு வட்டங்கள் || || 715
|-
|அரசினர் காப்பு இல்லம் || || 551
|-
|அரப்பா || || 946
|-
|அரிச்சந்திரன் || || 366
|-
|அரிசுடாட்டில் || || 485, 624
|-
|அருணந்தி சிவம் || || 356
|-
|அவை உரிமைக் குழு || || 291
|-
|அறச் சதகங்கள் || || 337, 338
|-
|அனைத்திந்தியக் கயிற்றுப் பொருள்கள் வாரியம் || || 38
|-
|அனைத்திந்தியக் கைத்தறி வாரியம் || || 32
|-
|அனைத்திந்தியச் சட்டப் பேராயம் || || 279
|-
|அனைத்திந்திய நூற்போர் கழகம் || || 32
|-
|ஆக்சுபர்கு உடன்பாடு || || 455
|-
|ஆக்லே தோர்ப்பு || || 787
|-
|ஆசனம் || || 247
|-
|ஆசிரியர் பயிற்சிப் படிப்பு || || 549
|-
|ஆசுத்திரேலிய ஆட்சி மன்றங்கள் || || 285
|-
|ஆணவமலம் || || 356
|-
|ஆதரவற்ற குழந்தைகள் நலத்திட்டம் || || 549
|-
|ஆப்சன் || || 429
|-
|ஆப்சியன் முறை || || 528
|-
|ஆபிரகாம் மாசுலோ || || 510
|-
|ஆலிங்கன சந்திரசேகர மூர்த்தி || || 366
|-
|அலைச் சரக்குகள் || || 656
|-
|ஆனைமலைக் குடைவறை || || 193
|-
|இசுடூவர்டு மில் || || 429
|-
|இசுபென்சர், எர்பர்ட்டு || || 575, 625
|-
|இசுபேல்பெர்கர் || || 755
|-
|இசுலாம் சமயக் கருத்து || || 461
|-
|இடை நிறுத்தம் || || 500
|-
|இடையினப் பாட்டு || || 916
|-
|இடையீட்டு அரங்குகள் || || 241
|-
|இணங்குவித்தல் || || 521
|-
|இத்தாலியப் போர் || || 802
|-
|இதிகாச புராணங்கள் || || 417
|-
|இந்திய அயல்நாட்டு வாணிகக் கழகம் || || 38
|-
|இந்திய ஊரகத் தொழில்களின் உற்பத்தி || || 45
|-
|இந்தியக் கோயிற் கட்டடக் கலை || || 178
|-
|இந்தியச் சட்டப் பேராயச் சட்டம் || || 278
|-
|இந்தியச் சமூக அமைப்பு || || 486
|-
|இந்திய நாடாளுமன்றம் || || 286
|-
|இந்தியாவில் கரும்புத் தொழில் || || 640
|-
|இந்தியாவில் சணல் உற்பத்தி || || 319
|-
|இந்தியாவில் சிமெண்டுத் தொழில் || || 962
|-
|இந்தோ–ஆரிய மொழிகள் || || 342
|-
|இந்தோ ஈரானிய மொழிகள் || || 342
|-
|இயமம் || || 247
|-
|இயற்றுமுறைச் சட்டம் || || 279
|-
|இர்விங்கு பிசர் || || 10
|-
|இரட்டை நாகபந்தம் || || 916
|-
|இரட்பீல்டு, இராபர்ட்டு || || 577
|-
|இரண்டாம் நிலைக் கூட்டுறவு || || 532
|-
|இரயில்வே சரக்கேற்றி || || 665
|-
|இரவுலட்டுச் சட்டம் || || 826
|-
|இராக்கி மலைத் தொடர் || || 99
|-
|இராசசுத்தான் கோயில்கள் || || 184
|-
|இராசராணி கோயில் || || 183
|-
|இராசி || || 709
|-
|இராட்டிரகூடர்கள் || || 232
|-
|இராபர்ட் கிளைவ் || || 731
|-
|இராமன் || || 306, 337, 707
|-
|இரால்பு கேபர் || || 755
|-
|இராவணன் || || 306
|-
|இரிகார்டோவின் சமத்துவம் || || 423
|-
|இரிச்சர்டு ஆல்பர்ட்டு || || 755
|-
|இருபா இருபது || || 357
|-
|இலக்கியப் பண்பாட்டுக் கழகங்கள் || || 722
|-
|இலக்குவன் || || 306
|-
|இலக்குவன் கோயில் || || 182
|-
|இலயோலா, இக்னேசியசு || || 458
|-
|இலெலின் || || 430
|-
|இறகுத் தையல் || || 920
|-
|ஈடிபசு சிக்கல் || || 869
|-
|ஈமச் சடங்குகள் || || 301
|}<noinclude></noinclude>
2zywoq6igwvqqiy6l9s6mq33wpcj8ek
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1009
250
653197
1962182
2026-09-07T07:27:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|2em}} {{center|{{x-larger|<b>பொருளடைவு</b>}}}} {| |- |அகிலன் || || 130 |- |அசிரியச் சிற்பங்கள் || || 96 |- |அசுத்த மாயா கருவிகள் || || 798 |- |அஞ்சல் சேமிப்பு வகைகள் || || 540 |- |அஞ்சல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|2em}}
{{center|{{x-larger|<b>பொருளடைவு</b>}}}}
{|
|-
|அகிலன் || || 130
|-
|அசிரியச் சிற்பங்கள் || || 96
|-
|அசுத்த மாயா கருவிகள் || || 798
|-
|அஞ்சல் சேமிப்பு வகைகள் || || 540
|-
|அஞ்சல் நிலையச் சேமிப்புக் கணக்குகள் || || 540
|-
|அட்டாதச ரகசியம் || || 13
|-
|அடக்கச் செலவு தணிக்கை || || 789
|-
|அடிப்படை இருப்பு முறை || || 602
|-
|அண்ணாதுரை, சி.என். || || 943
|-
|அண்ணாமலைச் செட்டியார் || || 968
|-
|அண்ணா மாவட்டம் || || 832
|-
|அதிராசேந்திரன் || || 932
|-
|அபராசித வர்மன் || || 926
|-
|அமராவதிக் கலை மரபு || || 89
|-
|அமெரிக்க இந்தியச் சிற்பங்கள் || || 102
|-
|அமெரிக்கச் சிற்பங்கள் || || 102
|-
|அரபியக் காலிபாக்கள் || || 7
|-
|அரிசுடாட்டில் || || 38
|-
|அலகு அடக்க விலை || || 602
|-
|அலெக்சாண்டர் || || 766
|-
|அவினாசிலிங்கம் செட்டியார் || || 957
|-
|அவுரங்கசீபு || || 74
|-
|அனுமன் || || 212
|-
|அனைத்திந்தியக் கூட்டாட்சி || || 579
|-
|ஆங்கிலேயர்கள் || || 256
|-
|ஆதிக்குடிகளிடையே தகாப்புணர்ச்சி || || 735
|-
|ஆதிகிரந்தம் || || 159, 160
|-
|ஆதித்த சோழன் || || 929
|-
|ஆப் அவுசுக்கோட்பாடு || || 795
|-
|ஆப்பிரிக்கச் சிற்பங்கள் || || 102
|-
|ஆபிராம்சன், மார்க்கு || || 416
|-
|ஆம்பர்க்கு || || 443
|-
|ஆர்தர் கிரிபித்து || || 147
|-
|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் || || 915
|-
|ஆறாம் சிலுவைப் போர் || || 46
|-
|ஆன் சீனர்கள் || || 199
|-
|ஆன் மரபு || || 97
|-
|இக்காலச் சமுதாயங்களில் தகாப்புணர்ச்சி || || 736
|-
|இசுபென்ச,எர்பர்ட்டு || || 415, 795
|-
|இட்டைட்டுகளின் சிற்பங்கள் || || 96
|-
|இந்தியச் சிற்பங்கள் || || 87
|-
|இந்தியச் சிறுகதைகள் || || 126
|-
|இந்தியச் சுவரோவியங்கள் || || 272
|-
|இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் || || 359
|-
|இந்தியாவில் செலவு வரி || || 479
|-
|இந்தியாவின் செல்வ வருமானப் பங்கீடு || || 466
|-
|இந்தியாவின் பெரும் மூதறிஞர் || || 582
|-
|இந்தியாவின் மொத்தச் சேமிப்பு || || 537
|-
|இமயவரம்பன் || || 911
|-
|இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் || || 910
|-
|இரட்டைப் பொருளாதாரம் || || 466
|-
|இரண்டாம் இராசராசன் || || 932
|-
|இரண்டாம் கிள்ளி வளவன் || || 914
|-
|இரண்டாம் கீர்த்திவர்வன் || || 927
|-
|இரண்டாம் சிலுவைப் போர் || || 45
|-
|இரண்டாம் சீக்கியப் போர் || || 161
|-
|இரண்டாம் நந்திவர்மன் || || 927
|-
|இரண்டாம் நரசிம்மவர்மன் || || 925
|-
|இரண்டாம் பரமேசுவரவர்மன் || || 926
|-
|இரண்டாம் புலிகேசி || || 927
|-
|இரண்டாம் மகேந்திரவர்மன் || || 925
|-
|இரண்டாம் விக்கிரமாதித்தன் || || 927
|-
|இராகவ பாண்டவீயம் || || 313
|-
|இராசசிம்மன் || || 927, 928
|-
|இராசாசி || || 941
|-
|இராட்கிளிப் பிரவுன் || || 415
|-
|இராமச்சந்திரன், எம். ஜி. || || 943, 962
|-
|இராமசாமி, ஈ. வே. || || 959
|-
|இராமநாதபுரம் || || 835
|-
|இராமநாதபுரம் சேதுபதிகள் || || 936
|-
|இராமநாதபுர மாவட்டம் || || 833
|-
|இராமன் || || 171, 211
|-
|இராமேசுவரத் தீவு || || 835
|-
|இராவணன் || || 172, 212
|-
|இருத்தல் கொள்கை || || 732
|-
|இருப்புச் செலாவணி || || 116
|-
|இலக்குமண சேனன் || || 565
|-
|இலக்குவன் || || 171, 212
|-
|இளங்கிள்ளி || || 913
|-
|இளங்கோவடிகள் || || 28
|-
|இளஞ்சேட்சென்னி || || 913
|-
|இளஞ்சேரல் இரும்பொறை || || 912
|-
|இறை சிற்ப வகைகள் || || 82
|-
|ஈதியர் சிற்பங்கள் || || 96
|-
|உடல் ஊனமுற்றோர் || || 117
|-
|உணவு தகவமைப்பு || || 727
|-
|உத்தமசோழன் || || 930
|-
|உதகமண்டலம் || || 877
|-
|உதியன் குடும்பம் || || 910
|-
|உதுமானியத் துருக்கியர் || || 7
|-
|உப்பூர் || || 836
|-
|உயரமிகுந்த இடங்களில் தகவமைப்பு || || 724
|-
|}<noinclude></noinclude>
4q4e81h173hn7ipgksru0ngvb1y949e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1010
250
653198
1962183
2026-09-07T07:52:02Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |உயிரியல்சார் தகவமைப்பு || || 723 |- |உயிரினப் படிமலர்ச்சி || || 723 |- |உரிமையியல் பொறுப்பு || || 730 |- |உருபன் || || 617 |- |உருபன் வகைகள் || || 618 |- |உருபு || || 617 |- |உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உயிரியல்சார் தகவமைப்பு|982|சமூக ஊனமுற்றோர்}}</noinclude>{|
|-
|உயிரியல்சார் தகவமைப்பு || || 723
|-
|உயிரினப் படிமலர்ச்சி || || 723
|-
|உரிமையியல் பொறுப்பு || || 730
|-
|உருபன் || || 617
|-
|உருபன் வகைகள் || || 618
|-
|உருபு || || 617
|-
|உரூசுவெல்ட்டு || || 529
|-
|உரோமானியச் சிற்பங்கள் || || 98
|-
|உமறுப்புலவர் || || 187
|-
|உலக அரங்கில் சிறுகதை || || 126
|-
|உலர் முனைச் சித்திரங்கள் || || 366
|-
|உளச்சிகைவு நோய்கள் || || 404
|-
|எகிப்தியச் சிற்பங்கள் || || 97
|-
|எட்டர்ம் சிலுவைப் போர் || || 46
|-
|எட்ருசுகர் சிற்பங்கள் || || 98
|-
|எண்பேராயம் || || 908
|-
|எய்டல்பர்கு || || 444
|-
|எரிக்கு எரிக்சன் || || 296
|-
|எல்லோரா எலிபெண்டா || || 91
|-
|எலனிய காலம் || || 97
|-
|ஏமந்த சேனன் || || 565
|-
|ஏழாம் சிலுவைப் போர் || || 46
|-
|ஐந்தாம் சிலுவைப் போர் || || 46
|-
|ஐந்து தன்மாத்திரைகள் || || 796
|-
|ஐந்து பூதங்கள் || || 796
|-
|ஒய்சாளர் கலை || || 91
|-
|ஒய்மானாடு || || 142
|-
|ஒருபொருள் உண்மை நெறி || || 803
|-
|ஒன்னதேவி || || 49
|-
|ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் || || 941
|-
|ஓரிடச் சிறப்பினமாதல் || || 114
|-
|ஓரியூர் || || 836
|-
|ஒளரங்கசீபு || || 421
|-
|கடற்போர் || || 560
|-
|கடைசி உள் முதல் வெளி முறை || || 602
|-
|கண்ணகி || || 30,33
|-
|கணைக்கால் இரும்பொறை || || 912
|-
|கபீர் || || 308
|-
|கரந்தைத் தமிழ்ச் சங்கம் || || 831
|-
|கரிகால் பெருவளத்தான் || || 913
|-
|கருணாநிதி, மு. || || 943,961
|-
|கருத்துப் பொருள் உண்மைநெறி || || 803
|-
|கருநாடக நவாபுகள் || || 937
|-
|கல்கி || || 129
|-
|கல்சாவின் தோற்றம் || || 159
|-
|கல்வராயன் மலை || || 872, 873
|-
|களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் || || 557, 911
|-
|களப்பிரர்கள் || || 922
|-
|களாபூரணோதயம் || || 313
|-
|கன்மேந்திரியங்கள் || || 797
|-
|கன்யாகுமரி மாவட்டம் || || 837
|-
|கனகமாலை || || 180
|-
|காஞ்சிபுரம் || || 852
|-
|காஞ்சிரங்குளம் || || 836
|-
|காட்சிப் பொருள் உண்மைநெறி || || 802
|-
|காட்பிரே || || 45
|-
|காந்தாரக் கலை || || 89
|-
|காமராசர் || || 941
|-
|காமராசர் மாவட்டம் || || 839
|-
|காரா சார்சு || || 431
|-
|கானப்பேர் எயில்கடந்த உக்கிரப் பெருவழுதி || || 916
|-
|கிரகடகள்ளிச் செப்பேடுகள் || || 47
|-
|கிரியை மார்க்கம் || || 589
|-
|கிரேக்கச் சிற்பங்கள் || || 97
|-
|கிழக்குச் சிலாவியமொழிகள் || || 41
|-
|கிழக்குச் செருமனி || || 436
|-
|கிழக்குப் பெர்லின் || || 439
|-
|கீழக்கரை || || 835
|-
|கீனயாயம் || || 493
|-
|குப்தர் காலக் கலை வளர்ச்சி || || 89
|-
|கு.ப.ரா. || || 129
|-
|குமாரசாமி இராசா || || 941
|-
|குருத்வாரா || || 160
|-
|குவியும் படிமலர்ச்சி || || 113
|-
|குளிர்ப் பகுதிகளில் தகவமைப்பு || || 725
|-
|குற்றவியல் பொறுப்பு || || 730
|-
|குறுநில மன்னர்கள் || || 916
|-
|குறையுடைச் சொல்லடுக்கு || || 606
|-
|கொடுகூர்ப் போர் || || 560
|-
|கோசிக முனிவன் || || 171
|-
|கோட்டைப் பிள்ளைமார்கள் || || 18
|-
|கோதியச் சிற்பக்கலை || || 100
|-
|கோப்பெருஞ் சோழன் || || 913
|-
|கோம்டு, ஆகசுட்டு || || 415
|-
|கோயம்புத்தூர் மாவட்டம் || || 841
|-
|கோவலன் || || 30,33
|-
|கோனார்க்குச் சிற்பங்கள் || || 91
|-
|சகோதரர்கள் இயக்கம் || || 188
|-
|சங்ககால அரசியல் வரலாறு || || 907
|-
|சங்ககாலக் கலைகள் || || 921
|-
|சங்ககாலச் சமயம் || || 920
|-
|சங்ககாலச் சமுதாயம் || || 917
|-
|சங்ககாலச் சோழ வேந்தர்கள் || || 912
|-
|சங்ககாலப் பாண்டிய நாடு || || 914
|-
|சங்காலப் பாண்டிய வேந்தர்கள் || || 914
|-
|சங்ககாலம் || || 830
|-
|சங்கீத மகால் || || 763
|-
|சப்பானியச் சிற்பங்கள் || || 97
|-
|சமணர் தமிழ்ச் சங்கம் || || 830
|-
|சமூக ஊனமுற்றோர் || || 118
|-
|}<noinclude></noinclude>
0npfacy9y1zyglbkun1bts01fj2q82z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1011
250
653199
1962184
2026-09-07T08:18:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |சரசுவதிமகால் || || 764 |- |சரிகட்டப்பட்ட விற்பனை விலை || || 602 |- |சரியை மார்க்கம் || || 589 |- |சலாவுத்தீன் || || 45 |- |சனகன் || || 171 |- |சாஞ்சிச் சிற்பங்கள் || || 89 |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சரசுவதிமகால்|983|சிற்பநூல்கள்}}</noinclude>{|
|-
|சரசுவதிமகால் || || 764
|-
|சரிகட்டப்பட்ட விற்பனை விலை || || 602
|-
|சரியை மார்க்கம் || || 589
|-
|சலாவுத்தீன் || || 45
|-
|சனகன் || || 171
|-
|சாஞ்சிச் சிற்பங்கள் || || 89
|-
|சாளுக்கிய ஒய்சாளர் கலை || || 91
|-
|சான் லாக்கு || || 804
|-
|சானகிராமன், தி. || || 130
|-
|சிதம்பரம் || || 874
|-
|சிதம்பரனார் மாவட்டம் || || 843
|-
|சிந்துவெளிச் சிற்பக் கலை || || 87
|-
|சிராண்டு || || 1
|-
|சிராமலை || || 1
|-
|சிராமலை அந்தாதி || || 1
|-
|சிராவசுத்தி || || 2
|-
|சிரிப்பு || || 3
|-
|சிரியா || || 4
|-
|சிரில் பர்ட்டு || || 8
|-
|சிரீகாகுளம் || || 9
|-
|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக்கழகம் || || 9
|-
|சிரீசக்கரம் || || 9
|-
|சிரீசைலம் || || 11
|-
|சிரீநகர் || || 12
|-
|சிரீபிரகாசா || || 13
|-
|சிரீவசன பூடணம் || || 13
|-
|சிரீவிசயம் || || 15
|-
|சிரீவில்லிபுத்தூர் || || 16
|-
|சிரீவேங்கடேசுவரா பல்கலைக்கழகம் || || 16
|-
|சிரீ வைகுண்டம் || || 17
|-
|சிருங்கேரி || || 18
|-
|சிருங்கேரி மடம் || || 18
|-
|சில்கோ ஏரி || || 18
|-
|சில்யாபின்சுக்கு || || 18
|-
|சில்லறை நன்மைகள் || || 18
|-
|சில்லுக்குப் பழங்குடி || || 21
|-
|சில்லோர் போட்டி || || 23
|-
|சிலந்திவலைக் கோட்பாடு || || 26
|-
|சிலப்பதிகாரம் || || 28
|-
|சிலம்புகழி நோன்பு || || 35
|-
|சிலர் நல ஆட்சி || || 37
|-
|சிலாவக்கு மொழி || || 39
|-
|சிலாவிய மொழிகள் || || 40
|-
|சிலி || || 41
|-
|சிலிமென், என்றிச்சு || || 43
|-
|சிலுவைப் போர்கள் || || 44
|-
|சிவக்கந்தவர்மனின் செப்பேடுகள் || || 47
|-
|வக்கொழுந்து தேசிகர் || || 47
|-
|சிவகங்கை || || 48
|-
|சிவகாசி || || 49
|-
|சிவகீதை || || 49
|-
|சிவகுருநாதப் பிள்ளை, ந || || 50
|-
|சிவ சம்புப் புலவர் || || 50
|-
|சிவ சமுத்திரம் || || 51
|-
|சிவ சுப்பிரமணியக் கவிராயர் || || 51
|-
|சிவஞான கிராமணியார், ம.பொ. || || 958
|-
|சிவஞான சித்தியார் || || 51
|-
|சிவஞான செட்டியார் || || 51
|-
|சிவஞான பாடியம் || || 52
|-
|சிவஞான பாலய சுவாமிகள் || || 53
|-
|சிவஞான போதம் || || 54
|-
|சிவஞானம் பிள்ளை || || 56
|-
|சிவஞான முனிவர் || || 56, 52
|-
|சிவஞான யோகிகள் விருதை || || 58
|-
|சிவஞான வள்ளல் || || 58
|-
|சிவநாமம் || || 68
|-
|சிவப்பிந்தியர் || || 59
|-
|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு || || 59
|-
|சிவப்பிரகாச சுவாமிகள் || || 54
|-
|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம் || || 59
|-
|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு || || 61
|-
|சிவப்பிரகாச பண்டிதர் || || 62
|-
|சிவப்பிரகாசம் || || 62
|-
|சிவப்பிரகாசம் பிள்ளை, மு. || || 63
|-
|சிவப்பிரகாசர் || || 63
|-
|சிவப்பிரகாசர், தில்லை || || 63
|-
|சிவப்பிரகாசர், மதுரை || || 64
|-
|சிவபாதசுந்தரம் || || 64
|-
|சிவராசபிள்ளை, கே.என். || || 65
|-
|சிவராத்திரி || || 66
|-
|சிவராமமூர்த்தி,க, || || 66
|-
|சிவலிங்க தத்துவம் || || 68
|-
|சிவவழிபாடு || || 68
|-
|சிவவாக்கியர் || || 67
|-
|சிவன் || || 68
|-
|சிவன், பாபநாசம் || || 70
|-
|சிவாக்கிரயோகிகள் || || 71
|-
|சிவாசி பல்கலைக்கழகம் || || 72
|-
|சிவாசி, முதலாம் || || 72
|-
|சிவாசி, இரண்டாம் || || 75
|-
|சிவாசி, மூன்றாம் || || 75
|-
|சிவாத்துவிதம் || || 76
|-
|சிவாலய முனிவர் || || 76
|-
|சிவாலிக்குக்குன்றுகள் || || 77
|-
|சிவானந்த யதீந்திரர் || || 77
|-
|சிவானந்தர் || || 78
|-
|சிவநேதன் || || 79
|-
|சிற்பக்கலை || || 79
|-
|சிற்பச் சாதனைகள் || || 85
|-
|சிற்ப நூல்கள் || || 103
|-
|}<noinclude></noinclude>
pp9a80s6ssfj3vniyt8qjvxmo3nk2wy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1012
250
653200
1962185
2026-09-07T08:48:11Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |சிற்ப மரபுகள் || || 85 |- |சிற்ப வகைகள் || || 80 |- |சிற்றின்பவியல் || || 104 |- |சிற்றுதவி || || 108 |- |சிற்றுருவச் சிற்பிகள் || || 85 |- |சிற்றோவியங்கள் || || 110 |- |சிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்ப மரபுகள்|984|சீனர்களின் சமயம்}}</noinclude>{|
|-
|சிற்ப மரபுகள் || || 85
|-
|சிற்ப வகைகள் || || 80
|-
|சிற்றின்பவியல் || || 104
|-
|சிற்றுதவி || || 108
|-
|சிற்றுருவச் சிற்பிகள் || || 85
|-
|சிற்றோவியங்கள் || || 110
|-
|சிறப்பினமாக்கம் || || 112
|-
|சிறப்பு உரிமை கணக்கு || || 116
|-
|சிறப்பு எடுப்பு உரிமைகள் || || 115
|-
|சிறப்புக் கல்வி || || 117
|-
|சிறப்புத் தணிக்கை || || 120
|-
|சிறப்புத் திருமணச் சட்டம் || || 210
|-
|சிறப்புத் தீர்மானம் || || 123
|-
|சிறப்புலி நாயனார் || || 124
|-
|சிறார் நீதிமன்றம் || || 124
|-
|சிறிய திருமடல் || || 125
|-
|சிறுகதைகள் || || 125
|-
|சிறுகதையின் பயன்கள் || || 131
|-
|சிறுகதையின் வகைகள் || || 132
|-
|சிறுகதையின் வளர்ச்சியும் எதிர்காலமும் || || 132
|-
|சிறுகுடி கிழான் பண்ணன் || || 133
|-
|சிறு குற்ற வழக்கு || || 133
|-
|சிறுத்தொண்ட நாயனார் || || 133
|-
|சிறுதேவபாணி || || 134
|-
|சிறுதொழில்கள் || || 135
|-
|சிறுதொழில்கள் வாரியம் || || 135
|-
|சிறு நிகழ்வுப் பதிவேடு || || 138
|-
|சிறுபஞ்சமூலம் || || 141
|-
|சிறுபாணாற்றுப் படை || || 142
|-
|சிறுபான்மையினர் || || 143
|-
|சிறு மோலிகனார் || || 146
|-
|சிறுவெண்தேரையர் || || 146
|-
|சிறைக்குடி ஆந்தையார் || || 146
|-
|சிறைத் தண்டனை || || 146
|-
|சின்பேன் || || 147
|-
|சின் மரபு || || 148
|-
|சின் மலைகள் || || 149
|-
|சின் முத்திரை || || 149
|-
|சின்னச் சவரியார் || || 150
|-
|சின்னக்குட்டிப் புலவர் || || 150
|-
|சின்னச்சாமி முதலியார் || || 151
|-
|சின்னத்தம்பி புலவர் || || 151
|-
|சின்னப்ப நாயக்கர் || || 152
|-
|சின்னப்பா, பி.யூ. || || 152
|-
|சின்னப்பா பிள்ளை, சி.வை. || || 152
|-
|சின்னமனூர் || || 153
|-
|சின்னமனூர்ச் செப்பேடுகள் || || 153
|-
|சின்னூல் || || 154
|-
|சின்னையச் செட்டியார், நா. || || 154
|-
|சின்னைய முதலியார், மணலி || || 154
|-
|சினம் || || 154
|-
|சினாய்மலை || || 156
|-
|சினிமா || || 157
|-
|சினேந்திரமாலை || || 157
|-
|சீ || || 159
|-
|சீக்கிய சமயம் || || 159
|-
|சீக்கியப் போர்கள் || || 161
|-
|சீக்கியர் || || 162
|-
|சீகன்பால்கு பார்த்தலோமியா || || 162
|-
|சீகாளத்தி || || 163
|-
|சீகாளத்திப் புராணம் || || 163
|-
|சீசர், சூலியசு || || 164
|-
|சீட்டாட்டம் || || 164
|-
|சீட்டுக்கவி || || 165
|-
|சீத்தலைச் சாத்தனார் || || 167
|-
|சீதக்காதி || || 169
|-
|சீதநாடு || || 169
|-
|சீதனம் || || 170
|-
|சீதை || || 170,211
|-
|சீபா || || 173
|-
|சீம்துய்புய் || || 173
|-
|சீயகங்கன் || || 174
|-
|சீயமங்கலம் || || 174
|-
|சீயாட்டல் || || 175
|-
|சீர் || || 175
|-
|சீர்காழி || || 176
|-
|சீரங்கப்பட்டணம் || || 177
|-
|சீரங்கம் || || 177
|-
|சீரசு || || 177
|-
|சீராநெவாடா || || 177
|-
|சீலம் ஆறு || || 178
|-
|சீலாந்து || || 178
|-
|சீவக சிந்தாமணி || || 179
|-
|சீவசம்போதனை || || 183
|-
|சிவனாம்சத் தகுதிகள் || || 184
|-
|சீவனாம்சம் || || 183
|-
|சீவானந்தம்,ப. || || 185
|-
|சீறாப்புராணம் || || 186
|-
|சீன அரசியலமைப்புச் சட்டம் || || 200
|-
|சீனக்கடல் || || 187
|-
|சீனக் கிளர்ச்சி || || 187
|-
|சீனச் சிற்பங்கள் || || 97
|-
|சீன-சப்பானியப் போர், முதலாம் || || 188
|-
|சீன-சப்பானியப் போர், இரண்டாம் || || 190
|-
|சீனத் தத்துவம் || || 191
|-
|சீனப்புரட்சி || || 193
|-
|சீனப்பெருஞ்சுவர் || || 194
|-
|சீனமொழி || || 195
|-
|சீனர் ஆண்டுக் கணக்கீடு || || 197
|-
|சீனர்களின் சமயம் || || 199
|-
|}<noinclude></noinclude>
l4ur1oj7hqja6ldjf1xjtqbvybx0j45
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1013
250
653201
1962186
2026-09-07T09:03:39Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |சீனா || || 197 |- |சீனாபு ஆறு || || 203 |- |சீனிச் சர்க்கரைப் புலவர் || || 23 |- |சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி || || 204 |- |சீனிவாச அய்யங்கார், பி.டி. || || 204 |- |சீன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனா|985|சுவான்சுகோம்பு மனிதன்}}</noinclude>{|
|-
|சீனா || || 197
|-
|சீனாபு ஆறு || || 203
|-
|சீனிச் சர்க்கரைப் புலவர் || || 23
|-
|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி || || 204
|-
|சீனிவாச அய்யங்கார், பி.டி. || || 204
|-
|சீனிவாச சாத்திரி, வி.எஸ். || || 205
|-
|சீனிவாசம் பிள்ளை, கே.எஸ். || || 206
|-
|சீனிவாசராகவன் || || 206
|-
|சீனிவாசன்,இரா. திவான்பகதூர் || || 207
|-
|சீனிவாச்சாரி, சி.எஸ். || || 207
|-
|சு || || 209
|-
|சுக்கிர நீதி || || 209
|-
|சுக்கிரன் || || 210
|-
|சுக்கிரீவன் || || 211
|-
|சுக்குமா || || 212
|-
|சுக்கூர் அணை || || 212
|-
|சுக்கோதைக் கலைப்பாணி || || 213
|-
|சுங்கக் குசானியர் சிற்பக்கலை || || 87
|-
|சுங்கக் குழுமங்கள் || || 213
|-
|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு || || 216
|-
|சுங்கச் சிற்பங்கள் || || 89
|-
|சுங்கத் தீர்வைகள் || || 217
|-
|சுங்கர்கள் || || 218
|-
|சுங்கியாங்கு || || 219
|-
|சுசீந்திரம் || || 219
|-
|சுட்கசென்தோர் || || 221
|-
|சுட்டு || || 221
|-
|சுட்டுப்பெயர் || || 222
|-
|சுடுமண் உருவங்கள் || || 224|
|-
|சுதந்திரக் கட்சி || || 224
|-
|சுதந்திரச்சிலை || || 226
|-
|சுதை ஓவியம் || || 228,273
|-
|சுந்தர சுவாமிகள் || || 228
|-
|சுந்தர சோழன் || || 228
|-
|சுந்தரதாச பாண்டியர் || || 229
|-
|சுந்தரம் அய்யங்கார், டி.வி. || || 229
|-
|சுந்தரம் பிள்ளை, பெ. || || 231
|-
|சுந்தரமுதலியார், முத்து. || || 231
|-
|சுந்தரமூர்த்தி சுவாமிகள் || || 232
|-
|சுந்தராம்பாள்,கே.பி, || || 233
|-
|சுப்பராய ஐயர், செந்நெற்கொடி || || 234
|-
|சுப்பராயச் செட்டியார், சோடசாவதானம் || || 234
|-
|சுப்பிராயன், பி. || || 235
|-
|சுப்பிரதீபக் கவிராயர் || || 235
|-
|சுப்பிர பாதம் || || 236
|-
|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம் || || 236
|-
|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை) || || 237
|-
|சுப்பிரமணிய ஐயர், வ.வே. || || 237
|-
|சுப்பிரமணிய ஐயர், வை. || || 238
|-
|சுப்பிரமணிய கவிராயர் || || 239
|-
|சுப்பிரமணிய சாத்திரி, பி. எஸ். || || 239
|-
|சுப்பிரமணிய சிவா || || 240
|-
|சுப்பிரமணிய தீட்சிதர் || || 241
|-
|சுப்பிரமணிய தேசிகர் || || 241
|-
|சுப்பிரமணிய பாரதியார்,சி. || || 242
|-
|சுப்பிரமணிய பாரதியார், மழவை || || 244
|-
|சுப்பிரமணிய பாரதியார், வரகவி || || 244
|-
|சுப்பிரமணிய பிள்ளை, கா. || || 244
|-
|சுப்பிரமணிய பிள்ளை, கோ. || || 246
|-
|சுப்பிரமணிய பிள்ளை, வ.த. || || 247
|-
|சுப்பிரமணியம், க.நா. || || 129
|-
|சுப்பிரமணிய முதலியார், சி.கே. || || 248
|-
|சுப்பிரமணிய முதலியார், வெ.ப. || || 249
|-
|சுப்பிரமணிய முனிவர் || || 250
|-
|சுப்புராமன், நா.ம.ரா. || || 250
|-
|சுப்பையா,ப. || || 251
|-
|சுபத்திரா குமாரி செளகான் || || 251
|-
|சுபத்திரை || || 251
|-
|சுபர்னிரிகா ஆறு || || 252
|-
|சுபாசு சந்திரபோசு || || 252
|-
|சும்மா மசூதி || || 253
|-
|சுமத்திரா || || 254
|-
|சுமந்த சேனன் || || 565
|-
|சுமர் || || 258
|-
|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள் || || 258
|-
|சுமித்திரை || || 260
|-
|சுமித்து, சர் தாமசு || || 260
|-
|சுமேரியா || || 260
|-
|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம் || || 261
|-
|சுய வேலைவாய்ப்பு || || 261
|-
|சுர்குசா || || 263
|-
|சுர்கோட்டாடா || || 264
|-
|சுரங்கத் தொழிலாளர் || || 264
|-
|சுரண்டல் || || 265
|-
|சுருள் வளையப் பாடத்திட்டம் || || 267
|-
|சுரேந்திரநகர் || || 267
|-
|சுரேந்திரநாத பானர்சி || || 268
|-
|சுல்தான்புரி || || 268
|-
|சுலைமான் || || 268
|-
|சுவரோவியங்கள் || || 269
|-
|சுவாகிலி || || 273
|-
|சுவாசிலாந்து || || 273
|-
|சுவாதி || || 274
|-
|சுவாதீன அடைமானம் || || 274
|-
|சுவாமிக்கண்ணு பிள்ளை, எல்.டி. || || 274
|-
|சுவாமிநாத சதானந்து || || 275
|-
|சுவாமிமலை || || 276
|-
|சுவாமி விபுலானந்தர் || || 278
|-
|சுவாரசு பிரான்சிசுகோ || || 279
|-
|சுவான்சுகோம்பு மனிதன் || || 281
|-
|}<noinclude></noinclude>
iy293i7fwxbzi7ts3cmmwigjx8tkc0v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1014
250
653202
1962187
2026-09-07T09:21:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |சுவிட்சர்லாந்து || || 283 |- |சுவீடன் || || 288 |- |சுவீடன்பர்கு || || 292 |- |சுவீடிசு மொழி || || 292 |- |சுவேதாசுவதர உபநிடதம் || || 294 |- |சுவேதாம்பரம் || || 295 |- |சுவேயூவான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுவிட்சர்லாந்து|986|செம்புலப் பெயனீரார்}}</noinclude>{|
|-
|சுவிட்சர்லாந்து || || 283
|-
|சுவீடன் || || 288
|-
|சுவீடன்பர்கு || || 292
|-
|சுவீடிசு மொழி || || 292
|-
|சுவேதாசுவதர உபநிடதம் || || 294
|-
|சுவேதாம்பரம் || || 295
|-
|சுவேயூவான் || || 295
|-
|சுவைத்தல் நிலை || || 296
|-
|சுனகாத்து || || 296
|-
|சூ || || 298
|-
|சூ-என்-லாய் || || 298
|-
|சூசா || || 300
|-
|சூட்டன்கோ || || 300
|-
|சூடாமணி உள்ளமுடையான் || || 301
|-
|சூடாமணி நிகண்டு || || 301
|-
|சூடான் || || 302
|-
|சூடிக் கொடுத்த நாச்சியார் || || 303
|-
|சூடேட்டி மலைகள் || || 303
|-
|சூத்திரம் || || 303
|-
|சூதசங்கிதை || || 304
|-
|சூத முனிவர் || || 305
|-
|சூதர் || || 305
|-
|சூதாட்டம் || || 306
|-
|சூபி தத்துவம் || || 307
|-
|சூபி யோகம் || || 309
|-
|சூயசு || || 309
|-
|சூயசுக் கால்வாய் || || 310
|-
|சூர்ப்பணகை || || 311, 171
|-
|சூர்மன் சான் || || 312
|-
|சூரண்ணா, பிங்களி || || 312
|-
|சூரத்து || || 313
|-
|சூரத்துப் பிரிவினை || || 313
|-
|சூரதாசர் || || 315
|-
|சூரபதுமன்|| || 315
|-
|சூரிச்சு || || 316,285
|-
|சூரிநாம் || || 317
|-
|சூரியக் கோயில்|| || 320
|-
|சூரியகாந்து திரிபாடி நிராலா || || 317
|-
|சூரிய நாராயண சாத்திரியார்,வி.கோ. || || 317
|-
|சூரிய வழிபாடு || || 320
|-
|சூரியன் || || 318
|-
|சூரியனார் கோயில் ஆதீனம் || || 321
|-
|சூலியன் ஆண்டுக் கணக்கீடு || || 321
|-
|சூலு பழங்குடி || || 321
|-
|சூலூ கடல் || || 323
|-
|சூலூத் தீவுகள் || || 323
|-
|சூவேர்டு முந்நீரகம் || || 324
|-
|சூவைடியே || || 324
|-
|சூழ்நிலை மருத்துவம் || || 324
|-
|சூழமைவுச் சோதனை || || 324
|-
|சூழற் கல்வி || || 325
|-
|சூளாமணி || || 325
|-
|சூன் சுனு || || 328
|-
|சூன்னார் || || 328
|-
|சூனி பழங்குடி || || 328
|-
|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம் || || 330
|-
|சூனிய நேரம் || || 332
|-
|சூனியப் பொருளாதார வளர்ச்சி || || 333
|-
|சூனியம் || || 334
|-
|சூனியவாதம் || || 340
|-
|செ || || 343
|-
|செக்காவ் ஆண்டன் || || 343
|-
|செக்கு மொழி || || 344
|-
|செக்கோசுலோவேகியா || || 343
|-
|செகராச சேகர மன்னர் || || 347
|-
|செக வீர பாண்டியன், கவிராச பண்டித || || 348
|-
|செகெடு || || 349
|-
|செகோவியா || || 249
|-
|செங்கடல் || || 349
|-
|செங்கண்ணனார் || || 350
|-
|செங்கல்வராய பிள்ளை, வ.சு. || || 350
|-
|செங்கற்பட்டு மாவட்டம் || || 351,850
|-
|செங்கிசுக்கான் || || 351
|-
|செங்கின்சு காதுப்போர் || || 353
|-
|செங்குட்டுவன் || || 911
|-
|செங்கோட்டை || || 354
|-
|செச்சலசு || || 355
|-
|செசப்பீக்கு விரிகுடா || || 355
|-
|செசுனோலா, உலூய்கி பால்மாதி || || 355
|-
|செஞ்சி || || 356,875
|-
|செஞ்சி நாயக்கர்கள் || || 936
|-
|செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழு || || 359
|-
|செஞ்சிலுவைச் சங்கம் || || 356
|-
|செஞ்சுக்கள் || || 359
|-
|செஞ்சேரி மலை || || 362
|-
|செஞ்சேனை || || 200
|-
|செட்டிநாடு || || 362
|-
|செண்பகராமன் || || 363
|-
|செத்தவரை || || 364
|-
|செதுக்குச் சித்திரம் || || 364
|-
|செந்தமிழ்நாடு || || 367
|-
|செந்தில் நாயக அடிகள் || || 367
|-
|செப்புக்காலம் || || 368
|-
|செபசுட்டப்போல் || || 371
|-
|செபர்சன், தாமசு || || 371
|-
|செபீல்டு || || 373
|-
|செம்பியன் || || 373
|-
|செம்பியன் மாதேவியார் || || 374
|-
|செம்பியனார் || || 376
|-
|செம்புலப் பெயனீரார் || || 377
|-
|}<noinclude></noinclude>
pzp5of92v5rz7asz8pdo3qgsn0jzzpm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1015
250
653203
1962189
2026-09-07T09:37:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |செம்மைப்படுத்தல் || || 377 |- |செம்மொழி || || 377 |- |செமராங்கு || || 378 |- |செமினோல் இந்தியர் || || 378 |- |செய்குத்தம்பிப் பாவலர்,கா.ப. || || 379 |- |செய்கைச் சோதனை |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1962189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செம்மைப்படுத்தல்|987|செனிகால்}}</noinclude>{|
|-
|செம்மைப்படுத்தல் || || 377
|-
|செம்மொழி || || 377
|-
|செமராங்கு || || 378
|-
|செமினோல் இந்தியர் || || 378
|-
|செய்குத்தம்பிப் பாவலர்,கா.ப. || || 379
|-
|செய்கைச் சோதனை || || 380
|-
|செய்கோன் || || 381
|-
|செய்சால்மிர் || || 381
|-
|செய்சிங்கு || || 74
|-
|செய்தன செய்யும் பிறழ்நிலை || || 381
|-
|செய்திச் சேகரிப்பு || || 382
|-
|செய்தித்தாள் || || 383
|-
|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் || || 387
|-
|செய்துகாட்டல் வழிக் கற்பித்தல் || || 387
|-
|செய்ப்பூர் || || 389
|-
|செய்முறைத் தாள்கள் || || 390
|-
|செய்முறைத் தேர்வு || || 392
|-
|செய்முறை பொருளியல் || || 393
|-
|செய்யக்கூடாததைச் செய்தால் செல்லும் || || 394
|-
|செய்யன் இந்தியர் || || 395
|-
|செய்யுள் || || 397
|-
|செயகாந்தன் || || 130
|-
|செயச்சந்திரன் || || 398
|-
|செயப்பிரகாசு நாராயணன் || || 398
|-
|செயர் || || 400
|-
|செயராம் ரெட்டியார்,ச. || || 400
|-
|செயல்-எதிர் செயல் மாதிரி || || 401
|-
|செயல் சார்புக் கோளாறுகள் || || 403
|-
|செயல்திட்ட முறை || || 405
|-
|செயல் நிறை மதிப்பீடு || || 407
|-
|செயல்முறைக் கோட்பாடு || || 407
|-
|செயல்முறைச் சமூகவியல் || || 407
|-
|செயல்முறை விதிகள் || || 408
|-
|செயல்முறை விளைவு || || 410
|-
|செயலாராய்ச்சி || || 411
|-
|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார் || || 413
|-
|செயலே செப்பும், பொருளே புகலும் || || 413
|-
|செயற்கோட்பாடு || || 414
|-
|செயற்பாட்டியல் || || 414
|-
|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம் || || 419
|-
|செயிசுடாகான் || || 421
|-
|செயிசுதகான் || || 74
|-
|செயிண்ட்டு ஆல்பன்சு || || 422
|-
|செயிண்ட்டு உலூயி || || 423
|-
|செயிண்ட்டு எலினா || || 424
|-
|செர்சாசூர் || || 425
|-
|செர்பர் || || 427
|-
|செர்பியா || || 426
|-
|செர்னாவிட்சி || || 432
|-
|செரிக்கோ || || 432
|-
|செருத்துணை நாயனார் || || 433
|-
|செருமனி || || 434
|-
|செரோக்கி இந்தியர் || || 449
|-
|செல் சூக்குகள் || || 449
|-
|செல்யூகசு நிகேட்டார் || || 450
|-
|செல்லத்தகா உடன்பாடுகள் || || 452
|-
|செல்லிக் கோமான் || || 453
|-
|செல்லிங்கற்கள் || || 453
|-
|செல்லியன் தெழிற்கூடம் || || 454
|-
|செல்லு புத்தகம் || || 454
|-
|செல்லூர்க் கொற்றனார் || || 457
|-
|செல்லூர்க் கோசிகன் கண்ணனார் || || 457
|-
|செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதங்கொற்றனார் || || 457
|-
|செல்வக் கடுங்கோ வாழியாதன் || || 457,912
|-
|செல்வக் கேசவராய முதலியார் || || 458
|-
|செல்வத்தின் வகைகள் || || 459
|-
|செல்வம் || || 459
|-
|செல்வமும் நலனும் || || 460
|-
|செல்வமும் வருமானமும் || || 460
|-
|செல்வ வரி || || 461
|-
|செல்வ வருமானப் பங்கீடு || || 464
|-
|செல்வாக்காளர் குற்றம் || || 468
|-
|செலடன் மட்கலன் || || 471
|-
|செலவிடத்தக்க தனியாள் வருமானம் || || 472
|-
|செலவு-நன்மைப் பகுத்தாய்வு || || 473
|-
|செலவு வரி || || 478
|-
|செலாவணி ஆவணங்கள் || || 480
|-
|செலிக்மேன், சார்லசு கேப்ரியல் || || 484
|-
|செலுத்து வங்கியர் || || 485
|-
|செலெபீசு || || 487
|-
|செவ்ரே உடன்படிக்கை || || 488
|-
|செவ்வப்ப நாயக்கர் || || 488
|-
|செவ்வைச் சுடுவார் || || 489
|-
|செறுசேரி நம்பூதிரி || || 490
|-
|செறுமர் || || 490
|-
|சென்சியாங்கு || || 492
|-
|சென்டார் || || 492
|-
|சென்டினலியர் || || 493
|-
|சென் பெளத்தம் || || 493
|-
|சென்னிமல்லையர் || || 494
|-
|சென்னிமலை || || 494
|-
|சென்னை || || 495
|-
|சென்னை அரசு அருங்காட்சியகம் || || 498
|-
|சென்னை சேவா சதனம் || || 501
|-
|சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி || || 502
|-
|சென்னைப் பல்கலைக்கழகம் || || 504
|-
|சென்னை மாவட்டம் || || 504, 853
|-
|செனபன் || || 504
|-
|செனிகா இந்தியர் || || 506
|-
|செனிகால் || || 507
|-
|}<noinclude></noinclude>
obgn2iud2sghn194whz7fbctnk8r7w5